ஓலைச் சுவடிகள் தேடியபடலம் பாகம் இரண்டு ---

301 views
Skip to first unread message

annamalai sugumaran

unread,
Feb 9, 2011, 7:44:38 AM2/9/11
to minT...@googlegroups.com, amirth...@gmail.com
இந்த மாதத்து யுகமாயினியில் ( பெப்ருவரி 2011  )  ஓலைச் சுவடி தேடுதல் பற்றிய எனது கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது .
சித்தன் யுகமாயினி இணையத்தில் போடுவார் ,அதன் தொடுப்பு தரலாம் எனக் காத்திருந்தேன் ..
இப்போது அவரின் அனுமதி கேட்டு இதை மின் தமிழ் நண்பர்கள் பார்வைக்காகஇங்கே  பதிப்பிக்கிறேன் 
இது ஓலைச் சுவடிகள் தேடியபடலத்தில் ஒரு அத்தியாயமாகவும் இடம் பெறும்.


ஓலைச் சுவடிகள் தேடியபடலம்     பாகம் இரண்டு -----  4

என்னப் பார்வை --   ஜக்கையாவின் பார்வை ? 
                                                        அண்ணாமலை சுகுமாரன் 


இந்த இடத்திற்கு வருவது எனக்கு இது மூன்றாவது முறை ..ஆனால் சொல்லிவைச்சது போல் நான் வரும் போதெல்லாம் 
எனக்கு ஒரேமாதிரி ஒரு அனுபவம் கிடைப்பட்துண்டு ..நான் பயணித்து வரும்  சிறிய ஸ்பிரிட் ஸ்கூட்டரை இந்த  இடத்தின்   வாசலில்  நிறுத்தும்  போதெல்லாம்  எங்கிருந்தோ ஓடிவரும் ஒரு கிழட்டு காவல் காரார் "சார் இங்கே நிறுத்தக்கூடாது  " வேறு இடத்தில் நிறுத்துங்கள் "என்று தவறாமல் கூறுவார் ஆனால் முன்பே அங்கே பல இருசக்கர வாகனங்கள் சுகமாகக் குந்திக்கொண்டிருக்கும்  
என்னிடம் பட்டும் ஏன் இப்படி சொல்கிறார் என்பதை சிந்தித்துக்கொண்டே  ஒவ்வரு முறையும் வண்டியை தள்ளிவிட எங்காவது இடம் கிடைக்கிறாதா என்று என்றும்  பிஸியானஅந்த  புஸி  தெருவில் அலைத்து வண்டியைவிட்டுவிட்டு வருவதும் ஒரு வாடிக்கை ஆகிவிட்டது .இதையே எனது பொறுமைக்கும் ,சகிப்புத்தன்மைக்கும் ஒரு சோதனையாக நான் எடுத்துக்கொள்வதுண்டு .

பாண்டிச்சேரியில் புஸி தெருஎன்பது  லால் பகதூர் சாஸ்த்திரி ரோடு என மாற்றப்பட்டு பல காலம் ஆகிவிட்டது .ஆனாலும் இன்னமும் மக்கள் புஸி எனும் பெயரை மறக்க விரும்பவில்லை ..
 லால்பகதூர் சாஸ்த்ரி பிறந்த ஊரில் கூட அவர்பெயரில் இப்படிப்பட்ட அழகான ஒரு தெரு அவர் பெர்யரில் இருக்குமா என்பது சந்தேகமே..

அங்கே   இருக்கும்டாக்டர் ,  ஒரு நல்ல தோல் சிகிச்சை தரும் டாக்டர் எனப்பெயர் எடுத்து விட்டவர் .புதுச்சேரியில்  இருக்கும் தோல் டாக்டர்களில் மிகப் பிரபலமானவர் .
மூன்று  .

முதல்முறை வந்தபோது எனக்கு கையிலும் காலிலும் நிறைய புண்கள் இருந்தது அவைகளைக் காட்டியதும் ,என்னைப் பார்த்து தாங்கள் இனிய மனிதர் என எனக்குத் தெரியும்  எனக்கூறிவிட்டு , இனிப்பு எந்த அளவு எனக்கு இருக்கிறது என அறிய  சக்கரை அளவை உணவுக்கு முன்னும் ,உணவுடபின்னும் சோதித்து வருமாறுக் கூறி ,வேறு சில சோதனையும் எழுதிக்கொடுத்து ,மேலேத் தடவ சில களிம்புகளும் எழுதிக்கொடுத்தார் .
ஒருவாரம் கழித்து இரண்டாவது தடவை சோதனை முடிவுகளுடன் போன போதும் ,"அத்தனை சர்க்கரை இப்போது இல்லையே ? ஒருவேளை முன்பு அதிகம் இருந்து அதன் பாதிப்பு இப்போது இருக்கிறதோ " என சிந்தித்துக் கொண்டே வேறு சில களிம்புகளும் ,மாத்திரைகளும் எழுதிக்கொடுத்தார் .
மூன்றாம்முறை வந்தபோதும் புண்கள் அத்தனை விரைவாக உடலைவிட்டுப் போகவில்லை ,ஒன்று போனால் வேறு ஒன்று வேறு இடத்தில் வருகிறது என்பதை கண்டு சற்று குழப்பம் அடைந்து டாக்டர் ஸ்ரீதர் மீண்டும் சில மாத்திரைகளை அதிகப்படுத்தியும் ,வேறு பல களிம்புகளை இன்னமும் கூட்டியும் எழுதிக்கொடுத்தார் .
பின்பு " சார் ! இன்னும் ஒரு வாரம் பார்ப்போம் ,மாற்றம் இல்லை எனிளில் வேறு சில சோதனைகள் எடுப்போம் " 

"சரி  டாக்டர்   நீங்கள் எனன சொல்கிறீர்களோ அப்படியே செய்வோம் ?
என்று பொறுமையுடன் கூறிவிட்டு வெளியே வந்தபோது இந்தப் புண்கள் வந்ததற்கான மூல காரணம் தேனீ மாவட்டத்தில் பொட்டிபுரம் என்ற இன்னுமும் மேலாடை அணியாத ஆண்களும் பெண்களும் வாழும் ஒரு ஆதிகுடிகள் கிராமத்து மக்களைப் பற்றி   ஆண்டாண்டுகளாக இருந்து வரும் சில நம்பிக்கையின் 
அடிப்படையில் கருக் கொண்டிருக்கிறது என்பதை நான் சொன்னால் இந்த மெத்தப் படித்த டாக்டர் ஒப்புக்கொள்வாரா ?என்ற சிந்தனை என்னுள் எழுந்தது .
வண்டியை எடுத்துக்கொண்டு கடற்கரையில் சென்று அமர்ந்த போதும் 
இரண்டு மாதங்களுக்கு முன் பொட்டிபுரம் சென்றிருந்தபோது தங்கள் கைகள் இரண்டிலும் இராஜரராஜன் காலத்துப பாணியில் "கேயுரம்"  அணிந்து ,மேலாடை அணியாமல் தலையில் தலைப்பாகையுடன் இன்னமும் ஆயிரம் ஆண்டு பழமையை தங்கள் மரபாகப் பேணிக் காத்துவரும் மக்களை சந்தித்ததை   ,பெண்களும் அவ்வாறே மேலாடை அணியாமல் தங்கள் மரபை இன்னமும் பெருமையுடன் காத்துவருவதை காண நேர்ந்த சம்பவத்தை மனம் அசைப் போடத்தொடங்கியது .
PICT3139.JPG


கையிலே வெள்ளி கேயுரம் !  திறந்த உடல் ! தலையில் முண்டாசு !

அவர்களைப் பொறுத்தவரை காலம் ஆணியடித்தது போல்  அப்படியே நின்று விட்டது .
சரித்திரம் அவர்களைப் பொருத்தமட்டில் இன்னமும் நிகழ்காலமாகவே இருந்து வருகிறது .இன்னமும் அது இறந்த காலம் ஆகவில்லை 

நாங்கள் அங்கே சென்றதோ சரித்திரத்தின் .சம்பவங்களை கோர்வையாக இணைக்கும் சக்திவாய்ந்த தொல்லிலக்கியங்கள் ஏதாவதோ அல்லது தொல்தமிழர்தம் அறிவாற்றல் குறித்து ஏதாகிலும் தரவுகள் ஓலைச் சுவடியில் கிடைக்காதா என்ற அவாவின் உந்துதலால் தான் .ஆனால் நாங்கள் அங்கேக் கண்டது வரலாற்றின் வாழும் சின்னம்தான்  .

 தேனிமாவட்டத்தில் தேவாரம் அருகில் இருக்கும் பொட்டிபுரம் கிராம மக்கள் ஆண்கள் பெண்கள் இருபாலரும்  .அங்கே இன்னமும் நாகரீக மக்கள் தங்கள் கிராமத்தை சுற்றி பரவலாக வாழ்ந்த போதிலும் ,ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் 'சுற்றி எரியும் சுடரின் நடுவே இருக்கும் கர்ப்பூர குவியல் போல்'   ,தங்கள் மரபு காணாமல் போய்விடும் அபாயங்களே  அதிகம் இருக்கும் அந்தச் சுழலில் கூட விடாப்பிடியாகத் தங்கள் மரபை பல நூற்றாங்குகலாகக் காத்துவரும் தொல்தமிழரைக் ஆனால்உண்மையில்  நாங்கள் அங்கேக் கண்டது வரலாற்றின் வாழும் சின்னங்களைத் தான் ....

.வரலாறு என்பதன் அவசியம்  கடந்து போன காலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக மட்டும்தானா இருக்கிறது . சொல்லப்போனால்  வரலாற்றின் தேவை  நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது .  வாழ்வின் வளர்ச்சியே நாம் புறப்பட்ட இடத்தையும் இதுவரை கடந்து வந்த 
பாதையை நினைவு படுத்திக் கொள்வதையும் அதிலிருந்து பாடங்கள் பெறுவதையும் பொறுத்துத்தான் அமைகிறது 

வரலாறு எத்தனை  ஆழமாகப் பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களைச் சரிவரப் புரிந்து 
கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை.
 
வரலாற்றுக்கு ஆதாரமான  காலத்தை ஆய்வதற்கு  அந்தக் காலத்தைய இலக்கியமும்,  நிகழ்காலத்தில் செய்யப்படும் 
தொல்பொருள் ஆய்வும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. 
அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகளை அந்தக் காலத்தைய  இலக்கியச் செய்திகளோடும், அந்தக் காலத்தைய இலக்கியச் 
செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் . அப்போதுதான் ஓர் உறுதியான 
முடிவுக்கு வரஇயலும்.

ஆனால்  உலகின் பெரும்பாலான இடங்களில்  இதுவரை அகழ்வாய்வில் பெறப்பட்ட சான்றுகள் இலக்கியத்தோடு 
ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெறப் படவில்லை .காரணம் அங்கே 
தொல்லிலக்கியங்கள் அகப்படவில்லை.
 எகிப்தில்  பிரமிடுகள் வரலாற்றைப் பறை  சாற்றிக் கொண்டு கண்ணுக்கேதிரே இன்னும்  நிற்கின்றன. காலத்தை வென்ற 
சான்றுகள்தாம் அவை.  ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்கத் தொல்லிலக்கியங்கள் மட்டும் அங்கே ஏதும் கிடைக்கவில்லை   .நம் 
நாட்டிலேயே   கூட  வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோதரோ  ,  ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த 
முடிவுகள்  சான்றுகள்  இருக்கின்றன . ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் வகையில் ஒப்புநோக்கத் தக்க 
தொல்லிலக்கியங்கள் தான்  கிடைக்கப் பெறவில்லை .
 
ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ நேர்மாறானது. இங்கே  தொல்லிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன 
ஒப்பிட்டுப்பார்க்க.  தொல்லிலக்கியங்கள் கூறும் சான்றுகளைத் தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தனை  
தீவிரமாக இல்லை. பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம் 
நம்மிடம் உண்டு; ஆனால் பூம்புகார் இன்னும் ஆழ்கடலில் பத்திரமாகத் தேடுவாரின்றி  உறங்கிகொண்டு   இருக்கறது .. 


ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்மிடம் மிக 
முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அதுவே வழி வழி வந்து இன்றும் நிலைத்திருக்கும்   பழந்தமிழர் மரபு ஆகும் . 
தொல்லிலக்கியங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும் 
வழி வழியாகப் பேசிவரும் பழங்குடிகளான தமிழர் மரபு இன்றும் நீடித்து வருகிறது .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு 
முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி இன்னும் அதே போல் பாடல் இயற்றும் வல்லமை கொண்ட தமிழர் 
மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது; சீரிளமை குறையாமல் தமிழ்க்குடி வாழ்ந்து வருகிறது. 

’வாழும் வரலாற்றுச் சின்னங்கள்தான்  தொல் தமிழர்கள் .அவர்களிடமே இன்னும் தொல்லிலக்கியங்கள் ஓலைச் 
சுவடிகளிலே  எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்பாக  உள்ளன;  வாழும் தொல்குடிகளும்  
இருக்கின்றனர்;  ஆனால் இதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் புறச் சான்றுகளான அகழ்வாய்வுகள் 
தான் தேவை .
 இத்தகைய ஆயிரம் ஆண்டுகள் முந்திய மரபினைப் போற்றும் ஒரு தொல்குடி ஒன்றைத தான் நாங்கள் பொட்டிபுரத்தில்  கண்டோம் .அவர்களிடம் தொல் இலக்கியங்கள் ,தமிழர் தொல் அறிவின் தரவுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் அவர்களை அணுகினோம் .

இந்த ஓலைச் சுவடி த தேடும் புனிதப் பணிக் கூட எனக்குக் கிடைத்தது ,ஒருத்தற்செயல் எனக் கூற இயலாத விணையின் தொடர்ச்சி என்றுதான் நான் நினைக்கிறேன் 
 ,
ஜெர்மனியை தலையிடமாக கொண்டு தமிழ் மரபு காக்கும் சீரிய பணியைச் செய்துவரும்" தமிழ் மரபு அறக்கட்டளை"என்ற அமைப்பு ஒரு விழா ஒன்றை 2009   ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்ப்பாடு செய்திருந்தது .அதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன்அவர்கள்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது இன்னமும் தமிழ்நாடு எங்கும் தேடுவாரின்றி விரவிக் கிடக்கும் ஓலைச் சுவடிகளின் அவல நிலை பற்றி குறிப்பிட்டார் .
சிறு வயதிலிருந்தே இத்தகைய சிந்தைனையில் ,ஓலைச் சுவடிகளின் பாதுகாப்போரோ ,படிஎடுப்போரோ இன்றி அழிந்து வரும் தமிழர் அறிவைத் தாங்கிய ஓலைச் சுவடிகள் ,குறிந்து கவலைக் கொண்டிருந்த எனக்கு ,துணை வேந்தர் பேச்சு காதில் தேனும் பாலும் சேர்ந்து பாய்ந்தது போல் இருந்தது .
தமிழ்மரபு அறக்கட்டளையின் திருமதி சுபாஷினி டிரமல்  எடுத்துக்கொண்ட தீவிர உழைப்பாலும் .,விடா முயற்சியாலும் தமிழ்மரபு அறக்கட்டளை ,தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்துடன் ஓலைச் சுவடி சேகரிப்புக் குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது  .

PICT0931.JPG
புரிந்துணர்வு ஒப்பந்தம் ----துணைவேந்தர்முனைவர்  ராஜேந்திரன் அவர்களும் தமிழ்மரபு அறக்கட்டளை சுபாஷிணியும் 


பிறகு இருபிரிவாக பிப் 2010- மார்ச்  2010- வரை பலமாவட்டங்களில் .குக்கிராமங்களில் தெருத்தெருவாக அலைந்து திரிந்து இன்னமும் ஓலைச் சுவடி வைத்திருப்பவர் முகவரி கண்டுபிடித்து ,பின்பு அவர்களிடம் நயந்து பேசி ,அவர்கள் செய்யும் நல்ல காரியத்தின் தன்மையைப் பற்றி விளக்கி அவர்களிடம் இருந்து ஓலைச் சுவடியை தானமாகப் பெறுவோம் .
இவ்வாறு அந்த இருமாதத்தில் பெற்றது தோராயமாக 26,000
ஏடுகள் பெற்றோம் .
அடுத்து அடுத்து செப்டம்பர் 2010மாதம் மட்டும் ஒரே மாதத்தில்  
46,000 ஏடுகள் பெற்றோம் .
இந்தச் செய்தியை " தி ஹிந்து " ஆங்கிலபத்திரிக்கை பெருமையுடன் வெளியிட்டது .

ஆனால் எழுதுவதைப்போல் அந்தப்பணி அத்தனை சுலபமாக இருந்ததில்லை .கிட்டத்தட்ட மொத்தம் 15000 km குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்திருப்போம் .
எத்தனை எத்தனை காத்திருப்புகள் ,எத்தனை ஏமாற்றங்கள் ,எத்தனை சோதனைகள் அத்தனையும் தாண்டித்தான் இந்த சேகரத்தை செய்ய முடிந்தது .
ஒரு இடத்தில் நிறையஅன்பொழுகப்  நேரம் பேசி அவர்களை மனம் இளகச் செய்து ஓலைச் சுவடியை வீட்டில் இருக்கும் பரணில் இருந்து எடுத்து வர சம்மதம் வாங்கி ,நாங்களே ஏறிமூட்டையை இறக்கி ,
தூசியைத்தட்டிவிட்டு மூட்டையைப் பிரித்தால் ,எங்கள் கண்களில் ரத்தக்கண்ணீர்  வந்தது .

PICT3105.JPG


இத்தனையும் ஓலைச் சுவடிகள்தான் ! ஒரு கிராமத்தில் மூட்டை ஒன்றில் கட்டிவைக்கபட்டிருந்த சுவடிகளின் கதியை பார்த்தீர்களா ?
என்னஎன்ன செய்திகள் அதில் இருந்ததோ ? எத்தனை அறிஞர்கள் கரம் தொட்டு எழுதியதோ ?
 நம் தலை முறையில் இவைகளைக் காக்கத்தவறிவிட்டோம் !  .
இனியாவது இந்நிலை வேறு எங்கும் ஏற்ப்படுவதர்க்கு முன் அவைகளை மீட்கவேண்டாமா ? 


தமிழர்களான நாம் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். 
ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் வாழ்ந்த ஒரு கவியின் உள்ளத்தை    அறியக்கொடுத்து 
வைத்திருக்கிறோம்; அந்த மொழி இன்னும் அதே வடிவில் இருக்கிறது . இன்னும் அதில் உள்ள சொற்கள்  நமக்குப் 
புரிகின்றன. அதே பொருளில் இன்னும்  அதே சொல்  
புழக்கத்தில் இருக்கிறது . ஆயிரம் வருடத்திற்கு முந்தைய இத்தாலிய, லத்தீன் 
நூல்களை அவற்றைத் தாய் மொழியாகக் கொண்டு வாசிப்பவர் தற்போது இல்லை; ஆயிரம் வருஷத்திற்கு முன் 
இருந்த ஆங்கில  நூல் எதையும் தற் காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது.
 
ஆனால் இது எப்படித் தமிழ் நாட்டில் மட்டும் நிகழ்ந்தது ?இதில்தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது . 
தன்னைச் சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி  மரங்கள் இவை களைத் தனது உணவு மற்றும் உடல் 
நலம் பேணும் மருத்துவ குணங் களைக் கண்டு அவற்றைத் தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம்  மன வழி 
, செவி வழி பெற்ற கருத்துக் கோவைகளை வரி வடிவில் மாற்றுவதற்கு ஏற்ற சாதனம் ஒன்றைத் தங்கள் ஆற்றல்மிகு 
அறிவால் கண்டனர் .
 கற்பக விருக்ஷமான பனை மரத்தின் ஓலைகளின் பெரும் பயன் பாட்டைக்  கண்டனர். பனை ஓலைகளில் 
எழுதப்பட்டவை எவ்விதப் பராமரிப்பு இல்லாத போதும் குறைந்தது  300 ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர் 
தொடர்ந்த பராமரிப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள் 
நீடிப்பதையும் கண்டனர் . இவ்வாறு பழந்தமிழர் தொல் இலக்கி யங்கள்  , அறிவுச் செல்வங்கள் காலம் காலமாக 
ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. வட இந்தியாவில் பனை  ஓலைகள் 
கிடைக்காத இடங்களில் பத்திரங்கள் எனப்படும்  இலைகளில் எழுதும் வழக்கம்  இருந்தது .
 
.இதுவே தமிழ் நாட்டின் தொல் இலக்கியங்கள் தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது. தமிழின் குன்றாத 
சீரிளைமைக்கு ஓலை களே ஒருவகையில் காரணம் ஆனது .
 
தொன்ம  இலக்கியங்களை ஓலைகளில் பாதுகாத்துப் படிஎடுத்துப்  பாதுகாத்து  வருங்கால சமுதாயத்திற்கு தங்கள் 
மரபின் செல்வங்களாக வழங்கியதே அன்றிருந்த மொழியும், 
இலக்கணமும் இன்னும்  ஜீவனுடன் விளங்குவதற்குக்   காரணமானது எனலாம் . இன்றும் தமிழின் தொன்மைக்குச் 
சான்றாக நமக்குக் கிடைத்துள்ள எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறிவுசார் நூல்களுக்கும் காரணம் 
ஓலைச் சுவடிகளில் எழுதும் பழக்கமே ஆகும் . பனையின் 
கொடையால்தான் நமக்கு ஜீவனுள்ள நமதுதமிழ்மொழியும்  
அதன் தொன்மை இலக்கியங்களும் கிடைத்துள்ளன .
.முன்னையோரின் புலமை, அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றை அறிந்து கொள்வதற்குத் துணை 
நிற்பது ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். சென்ற நூற்றாண்டுவரை 
அவற்றைச் செல்வமாக மதித்துப் பூசித்து வந்தனர். சுவடிகள் 
இல்லாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை என்று 
சொல்லும்படி,  அவை சிற்றூர்கள் அனைத்திலும் நீக்கமற 
நிறைந்திருந்தன . தமிழின் தொன்மையை அறிவதற்குத் 
துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில்தான்   
எழுதித் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை 
நன்கு பதப்ப டுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடிவடிவில் 
அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் 
பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகள்  தமிழ் நாட்டின் 
கிராமங்களில் பரவலாகக் காணப்படுவது நமது    
பண்டையோரின் அறிவின்  ஆழத்தை நமக்கு எடுத்துக் 
காட்டுகின்றன.
 
சீனர், கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், 
அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ் 
என்னும்  ஒருவகை   புல்லையே எழுதப்படும் பொருளாகப் 
பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் 
சொல்லிலிருந்து உருவானது  என்பர். ஆனால் இவை நமது 
தொல்தமிழர் பயன்பாட்டில் இருந்த ஓலைச் சுவடிகளுக்குத் 
தரத்தில்  ஈடாகாது .

நம் மூதாதையரும்காலம் காலமாக  தங்கள் வருங்கால சந்ததியினருக்கு பயன்படுமே என எத்தனை வாஞ்சையுடன் எத்தனையோ முறை இந்தச் சுவடிகளை படியெடுத்து ,மையிட்டு ,கணக்கற்ற முறை அயராமல் இதனைச் செய்து இத்தனைக் காலம் காத்து வைத்துவிட்டனர் .   

ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அச்சு இயந்திரமும் ,ஆங்கிலப்படிப்பும் நம்மிடையே பரவலானப்பிறகு ஓலைச் சுவடிகள்  படிப்பாரும் முறையாக எழுதுவாரும் இல்லாமல் போனதால்  படியெடுக்க ஆளிலாமலும் ,படிக்க இயலாமலும் பல இடங்களில் உபயோகமில்லா பொருள்கள் இடப்பெறும் பரணில் தானே நமது பாரம்பரிய அறிவு சின்னஞ்சிறு  கிராமங்களில் இன்னமும் உறங்குகிறது ..

டார்வின் சொன்ன நியதியின் படி "தகுதி படைத்தது மட்டுமே நிலைத்து நிற்கும் " என்பதை மெய்ப்பிபதைப் போல் இன்றும் தமிழகத்தின் மூலை முடுக்குக் கிராமங்களில் கூடஇன்னமும்  ஓலைச் சுவடிகள் எப்படியோ காணக்கிடக்கிறதே ? அதிலும் கிடைக்கும் சுவடிகளில் அறுபது விழுக்காட்டுக்கு மேல் சித்தர்களின் மருத்துவ முறைகளும் ,சித்தர்கள் கண்ட மந்திர யந்திர ஞானத்தை விளக்கும் நூல்கள் அதிகம் கிடைக்கின்றதுவே? .

மக்களின் ஆதரவு வாழையடி வாழைஎன  இல்லாமல் போனால் எப்படி இப்படி படி எடுத்து இத்தனைக் காலமிந்த சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ? .

மக்களுக்கு இந்த ஓலைச் சுவடிகளில் எழுதி இருக்கும் விஷயங்களின் நம்ம்பிக்கை இராமல் போயிருந்தால் ஏன் இதை இத்தனை சிரமம் ஏற்று  தொடர்ந்து  படி எடுக்கிறார்கள்?  .வீட்டிலேயும் மடங்களிலும் ஏன் பாதுகாத்து வைக்கிறார்கள் ? .

அதை முறையாக பயன்படுத்துவோர் அருகிப போனாலும் ,இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் உயர்ந்தவை ,இவை வரும் சந்ததியினருக்கு பயன்படும் என்ற எண்ணமும் நம்பிக்கையும்  நம் மக்களுக்கு குறையாமல் இருந்து வந்திருக்கிறது .

இப்போதெல்லாம் மக்கள் நிறைய இடங்களில் புதிய கான்கீரீட் வீடுகளுக்கு மாறும் போது பழைய ஒலைகுடிசைகளிலேயே தேவை இல்லாத பொருகளுடன் அரிய ஓலைச் சுவடிகளையும் விட்டு விட்டு  சென்று விடுகின்றனர் .
ஓலைச் சுவடிகள் கான்கீரீட் வீடுகளுக்கு பொருந்தாதவை என நினைக்கின்றனர் .
பல இடங்களில் இத்தகைய சோக அனுபவங்களைநாங்கள்  பெற்றிருக்கிறோம்

"இங்குதான் ஒரு ஆண்டுக்கு முன் பெட்டிநிறைய ஓலைச் சுவடிகள் கிடந்தன ,நாங்கள் தினமும் எடுத்து விளையாடுவோம் " என அந்த கிராமத்து சிறுவர்கள் சிதைந்துக் கிடக்கும் குடிசை வீடுகளை சுட்டிக் காட்டியபோதெல்லாம்   ,ஒரு கவித்துவமான மலையாளப்படம் பார்க்கும் உணர்வு எங்களை சூழும் .எங்கள் கண்களில் ரத்தக்கண்ணீர் தான்  வடியும்  மௌனம் களைய மணி கணக்காகும் .



இவ்வாறு ஓலைச் சுவடியை தேடிளையும் போதுதான் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு அடைமழையில் 
தேனீ மாவட்டத்தில் நுழைந்தோம் .
தேனியில்அந்த  இரவு தங்கிவிட்டு மறுநாள் விடியலிலேயே தேவாரம் என்னும் ஊர் புறப்பட்டோம் .
தேவாரம் என்பது மூவர் பாடிய  தெய்வீகப் பாடலை பொதுவாக குறித்தாலும் ,தேவாரம் என்ற சொல் வீடுகளிலேயும் ஆலயங்களிலேயும் இருக்கும் கர்ப்பகிரகங்களையும் குறிக்கும் கல்வெட்டு சொல் என அறிந்திருந்ததால் அந்தப்பகுதியில் ஏதாவது அறிய வகை ஓலைச் சுவடி கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் இருந்தது .

தேனியில் தேடும் போது நாங்கள் வழக்கமாக எங்கு ஓலைச் சுவடி தேடிப்போனாலும் முதலில் தேடிப்போவது அந்த கிராமத்து கிளை நூலகங்களுக்குத்தான் .ஏனெனில் அதுதானே உள்ளூரின் சரஸ்வதி பண்டாரம் .அங்கேப் போனால் சரஸ்வதியே எங்களுக்கு பலமுறை என்குப்வது என பலவழியில் உணர்த்துவதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் .
அன்றும் அவ்வாறே கிளை நூலகம் சென்று பேசிக்கொண்டு இருந்த போதுதான் ,அங்கே வந்த இரு கல்லூரி மாணவர்கள் ," ஆணும் பெண்ணும் 
இன்னமும் மேலாடை அணியாமல் வாழும் பொட்டிபுரம் " பற்றிக் கூறினார் .
" நாங்கள் அந்த கிராமம் மலை உயரத்தில் இருக்கிறதா"  எனக்கேட்டோம் .ஆனால் அந்த மாணவர்களோ பொட்டிபுரம் தேவரத்தில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தூரத்தில் சமவெளியில் இருப்பதாகக் கூறியதும் .,எங்கள் ஆவல் இன்னும் அதிகம் ஆனது .
எவ்வாறு இந்த்துனை நாகரீக கிராமங்களிடையே இந்த கிராமம் மட்டும் 
பேருக்குத்தக்கபடி கட்டுபொட்டியாக  இருக்கிறது என்பதை அறிய துடித்தோம் .

ஆனால் அங்கே போவது அத்தனை சுலபமில்லை என்றார் கிளை நூலகர் சாவதானமாக .நாங்கள் ஏன்சார் சாலை மோசமா ? அல்லது மக்கள்தான் மோசமா என பரபரத்தோம் .
அப்போதே ஓலைச் சுவடி ஈர்ப்பு எங்களுக்குள்  உணரஆரபித்துவிட்டது .

நூலகரோ "அதெல்லாம் இல்லை ,உங்களை பொட்டிபுரம் மக்கள் நேரடியாகப் பார்த்துவிட்டால் உங்கள் உடலெங்கும் புண்கள் வநது விடும் .அவர்கள் பார்வை அப்படிப் பட்டது ."
"இது உண்மையா சார்"  என மீண்டும் கேட்டோம் .
" உண்மையோ பொய்யோ ,இந்த நம்பிக்கையினால் தான் பொட்டிபுரம் யாரும் போவதில்லை .அவர்களும் இந்த நாகரீக மக்கள் தொந்தரவின்றி நிம்மதியாக வாழ்கிறார்கள் " என்றார் 

முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத நாங்கள் பொட்டிபுரம் சென்று பார்க்க தீர்மானித்தோம் .அந்த இரு மாணவர்களும் " உங்களுக்கு ஆவது எங்களுக்கும் ஆகட்டும் சார் ,நாங்கள் வழிகாட்ட வருகிறோம்"  என முன்வந்தனர் .

ஒருவாறு எங்கள் நால்வர் அணி புறப்பட்டது .செல்லும் வழியிலேயே நான் எங்கள் குழுவினரை எச்சரித்தேன் " .பெண்களை உற்றுப்பார்க்கக் கூடாது .யாரிடம் பேசுவதானாலும் நான் மட்டுமே பேசுவேன் வேறு யாரும் வாயைத் திறக்கக்கூடாது " என தீர்மானித்தோம் .

ஒருவாறு பொட்டிபுரமும் வந்துவிட்டது .

நாங்கள் எதிர்ப்பார்த்தபடி எங்களை யாரும் ஊர் எல்லையில் மறிக்கவில்லை.

ஆண்களும் பெண்களும் இயல்பாக அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர் .அநேகமாக பெறும் பாலோர் முதற் மரியாதை ராதா மாதிரி ஜக்ககட் போட்டிருக்கவில்லை .ஆண்களும் சட்டை அணிவதில்லை .
எங்களை யாரும் தடுக்காததால் நேரே ஊரின் உள்ளே சென்றோம் .

அங்கே இருந் ஒரு பெரிய வீட்டின் முன் ஊர்தியை நிறுத்தி 
"இங்கே யார்  கிராமத்தலைவர் எனக்கேட்டோம்"
நாங்கள் நின்ற வீட்டுக்காரர்தான் கிராம தலைவராம் 
அவர்பெயர் ஜாக்கையான் என்று கூறி சிலர் அவரை கூப்பிட்டுவர சென்றனர் .

எங்களுடன் வந்த ஒருவர் காரில் இருந்து இறங்கி அங்கே அருகில் இருந்த ஒரு கல்லில் உட்க்கார்ந்தார் .அவ்வளவுதான் சுமார் பத்து பெயர்கள் அவர்மேல் பாய்ந்தனர் அவ்வாறு அலாக்காக தூக்கி ஓட  ஆரமித்துவிட்டனர் .
எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை .

நான் விரைவாக அவர்களை அணுகி ,என்னங்க ! என்னாங்க பணறீங்க அவரை என ஓடி அவர்களில் இருவரை பிடித்தேன்  .
  அவர்கள் விறைப்பாக " இவர் எங்கள் சாமிக்கல்லில் உட்க்கார்ந்து விட்டார்" 
நான் நயமாக "ஐயா இவருக்கு இந்தக்கல் சுங்கள் சாமிக் கல் என்றுத்தேரியாது .அவரை இந்த முறை மன்னித்து விடுங்கள் நான் உங்கள் தலைவர் ஜக்கயனுக்கு நண்பர் .
தயவு செய்து விட்டுவிடுங்கள் " என வேண்டினேன் .
அவர்களும் ஒருவாறு எங்கள் ஓட்டுனரை விடுவித்தனர் .
அதற்குள் அவர்கள் தலைவர் ஜக்கையன் வந்துவிட்டார் .
நான் தான் அவர் எனக்கு நண்பர் என முன்பே எல்லோரிடமும் கூறிவிட்டேனே ,எனவே சற்று முன்னால்  சென்று அவரை கட்டிப்பிடித்துக்கொண்டேன் .அவர்மேல் வீசிய வேப்பெண்ணை வாசத்தையும் பொருட்படுத்தாமல் 

அவரை கட்டியனைத்த என்னை தலைவருக்கும் பிடித்துவிட்டது போலும் .அவர் முகத்தில் சிரிப்பு வநது விட்டது என்னை உற்று சில நிமிடம் பார்த்தார் 
.அது போதாதா எங்களுக்கு முதலில் ஓலைச் சுவடிகளைப் பற்றி பேச்சை ஆரமிக்காமல் ,அவரின் இரு முழங்கையிலும் அணிந்திருந்த வெள்ளி கேயுரத்தை பார்த்து வியந்து பாராட்டி பேச ஆரமித்தேன் .
தலைவர் இன்னம் மகிழ்ச்சி ஆகிவிட்டார் .கேயூரத்தைக் கழட்டிநான்  பார்க்க என கையில் தந்து விட்டார் .
எப்படியும் கால் கிலோவுக்கு குறையாது ,ஆனால் வெள்ளி மிகவும் பழசானதால் அத்தை பளபளபில்லை  பல நூற்றாண்டின் வாசம் அதில் அடித்தது .எனன இருந்தாலும் அது நல்ல வில்லை போகும் ஒரு கலை பொருள்தான் .
பிறகு மெதுவாக எங்கள் பயணத்தின் நோக்கம் ,ஓலைச் சுவடிகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் முதலியவற்றைபற்றிய எங்கள் பிரசங்கங்கள் ஆரம்பமானது .

பல நூறு நபர்களை மசியவைக்கும் வசியம் எங்களுக்கு தெரியும் ஆதலால் தலைவர் ஜக்கையாவும் விரைவில் அவரிடம் ஓலைச் சுவடி இருப்பதை ஒப்புக்கொண்டார் ,பின்பு அடுத்து அதைதரவும் ஒப்புக்கொண்டார் .இப்போது சிரிப்பு அவர்களிடம் இருந்து எங்கள் முகத்தில் மாறிவிட்டது .
சக்கையா நாளை காலை பத்து மணிக்கு மேல் பொட்டிபுரம் வந்தால் .அவர் ஓலைச் சுவடிகளை எடுத்து வைத்துக்கொண்டு தயாராக ஈர்ப்பதாகத் தெரிவித்தார் .
அடுத்தநாள் நாங்களும் பொட்டிபுரத்தில் பத்து மணிக்கு சரியாக ஆஜர் ஆனோம் .
அவர் வீட்டில் இருந்தவர்கள் அவர் வேறு இடத்தில் எங்களுக்காக காத்திருப்பதாக ,இடத்தை சொன்னனர் ,
அது ஒரு தனியான கூரை வீடு .அங்கே பரப்பப்பட்டிருந்த மணல்கூட  ஒரு தனி ரகமாகவும் ,வாசமாகவும் இருந்தது .
குறைந்தது ஐம்பது வருடமாவது அதை கொட்டி ஆகியிருக்கக்கூடும் .
அங்கே ஜக்கையனைப் பார்க்க இன்னும் இருவர் காத்திருந்தனர் .
அதுதான் அவரின் ரிஜெஸ்டேட்மற்றும் கோர்போரடே அலுவலகம் போலும் .வந்திருந்தவர்கள் ஜக்கையாவிடம் மந்திரிக மருத்துவம் பார்க்க வந்திருந்தனர் .
PICT3143.JPG

நானும் தலைவர் ஜக்கையாவும் ,மணலைப்பாருங்கள் நூறாண்டுபழசு !


ஜக்கையா ஓலைச் சுவடிகளை எடுத்து எனது கையில் தந்தார் .அப்போதும்என்னை  சில நிமிடம் உற்றுப்பார்த்தார் .
அப்போதெல்லாம் எனக்கு மற்றவர்கள் முன்பே அவர்களின் பார்வையைப் பற்றிக் கூறியது நினைவில் வரவில்லை .எனது கவனம் முழுவதும் அவர்தந்த 12   கட்டுகளைப் பார்ப்பதில் தான் இருந்தது .அத்தனையும் பெரும்பகுதி வைத்தியம் மாந்திரீகம் அடங்கியவை .அதில் கண்பார்த்தல் என்றுக்கூட ஒரு கட்டு இருந்தது .கண்ணினாலேயே நோய் தீர்ப்பது .அதில் நோய் வரவழிக்கும் முறையும் இருக்கும் என எனக்கு அப்போது தோன்றவில்லை .
ஓலைச் சுவடிகளைப் பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .
விரைவில் அனைத்தையும் படித்து அதில் எனன இருக்கிறது என தன்னிடம் கூறவேண்டும் என ஜெக்கியா கேட்டுக்கொண்டார் .
நானும் ஒப்புதல் கொடுத்தேன் .இன்னுமும் முழுதும் படிக்கவில்லை .
எனன எனன மர்மங்கள் இதில் இருந்து வரப்போகிறதோ ?

இதுவரை மனிதகுலம் கண்டிராத சுவடிகள் அவை !
அப்படித்தான் ஜக்கை யா.எங்களிடம் கூறினார் .
அவர்கைத்தேடி யாரும் வநது சுவடிகளைக் கேட்டதில்லையாம் .
இவர்களும் காட்டியதில்லையாம் .
.என்னமோ என்மேல் ஒரு நம்பிக்கை இறைவன் சித்தம் அனைத்தையும் தந்துவிட்டனர் .
இவைகளை விரைவில் படித்து இவைகளில் எனன இருக்கிறது எனக் கூறுகிறேன் ,என்று கூறி விடை பெற்றேன் .

ஆனால் அடுத்தவாரத்தில் இருந்து உடலில் அரிப்பு ஆரபித்தது புண்கள் ஏற்ப்படலாயின .நான் சுமார் 40,௦௦௦  000   ஓலைச் சுவடிகளை எனது அறையில் வைத்துக் கொண்டு ஒரு மாதம் தினமும் இரவில் உறங்கி இருக்கிறேன் .
அது காரணமா / அல்லது ஜெக்கியா இருமுறை என்னை உற்றுபார்த்தது காரணமா எனத் தெரியவில்லை .

ஆனால் ஓலைச் சுவடிகளைப் பார்த்து செய்தியாக போட தஞ்சை விருந்தினர் விடுதிக்கு வந்த தி ஹிந்து நிருபரிடம் இந்த கதையைக் கூறியபோது ,நான் எதோ பழைய சம்பவம் கூறுகிறேன் என நினைத்து நான் தனியே பிறகுவந்து உங்கள் கதைகளை அனுபவங்களைக் கேட்க்கிறேன் என்று கூறிப் போய்விட்டார் ,.
ஆனால் அருகில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த விருந்தினர் புலம் காப்பாளர் முனைவர் சுப்பிரமணியம் ,"சார் நான் தேனீ தேவாரம் தான் ,பொட்டிபுரம் ஆட்களைக் கண்டாவே நாங்கள் ஓடி பதுங்கி விடுவோம் .அத்தனை பயம் " என பீதி கிளப்பிவிட்டார் .
ஆனால் எங்கள் மெத்தப்படித்த டாக்க்டரிடம் தான் இதை எப்படி சொல்வது எனத் தெரியவில்லை .
நான் இந்த செய்திகை சொல்லாத வரை டாக்டரின் சோதனைகள் தொடரும் .
எப்படியோ உங்களிடம் சொல்லிவிட்டேன் .

நீங்கள் யாராவது டாக்க்ட்டரிடம் சொல்லிவிட்டால் உங்களுக்குஎனக்கு கிடைக்கும் விருதில் பாதி கொடுத்துவிடுகிறேன் என்று சொரிந்து கொண்டே உறுதிகூறுகிறேன்.
நன்றி     யுகமாயினி 

அண்ணாமலை சுகுமாரன் 

A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !
PICT3143.JPG
PICT3105.JPG
PICT0931.JPG
PICT3139.JPG
PICT0931.JPG
PICT3105.JPG
PICT3139.JPG
PICT3140.JPG
PICT3143.JPG
SUGUMARAN.jpg
இந்த இடத்திற்கு வருவது எனக்கு.doc

kalairajan krishnan

unread,
Feb 9, 2011, 8:02:58 AM2/9/11
to mint...@googlegroups.com
தமிழ் அன்னையில் அருளால் உங்களது உடல் விரைவில் பரி பூரண குணமாகிவிடும்,

ஐயா,சிங்கம்புணரிக்கு அருகில் கோவில்பட்டி என்ற சிறிய கிராமம் உள்ளது,
அங்கே உள்ள ஆண் பெண் அனைவரும் இன்றும் காதுவளர்த்து வருகின்றனர்,
தமிழ்மரபைக் காத்து வருகின்றனர்,


அன்பன்
கி.காளைராசன்


--
​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம், கண்தானம் ​செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் ​கொள்கிறார்,

shylaja

unread,
Feb 9, 2011, 9:00:16 AM2/9/11
to mint...@googlegroups.com
எத்தனை  சிரமங்களுடன் பெரு முயற்சி எடுத்து அங்கே சென்று வந்திருக்கிறீர்கள் ..இப்படியெல்லாமும் மக்கள் வாழ்கிறர்கள் அதுவும் தென் தமிழகத்தில் என்பதைக் கேட்கிற போது வியப்பாக இருக்கிறது. உங்களின் உடல் நலம் குணமாக நானும் வேண்டுகிறேன்.  இ சார் வீட்டில்வந்தபோது சாதாரணமாக இருந்தீர்களே  இப்போதும்  நலம்தானே?

2011/2/9 kalairajan krishnan <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
shylaja
 
 /பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
நிறமெழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்
/
 
பெரியாழ்வார்

Subashini Tremmel

unread,
Feb 9, 2011, 9:16:53 AM2/9/11
to mint...@googlegroups.com, amirth...@gmail.com
அன்புள்ள திரு.சுகுமாரன்,
 
த.ம.அறக்கட்டளையின் இந்த முயற்சி  ஓலைச் சுவடி தேடல் என்ற ஒன்று மட்டுமல்லாது பல பரிணாமங்களைக் கொண்டிருப்பதையும் தமிழக மக்களே கூட தெரிந்திராத பல பண்பாட்டு, வரலாற்று விஷயங்களை இங்கு உங்கள் கட்டுரை தொடர் மீள்பார்வை செய்ய உதவும் என்பதும் என் நம்பிக்கை.  நிறைய எழுதுங்கள்.
 
அன்புடன்
சுபா

2011/2/9 annamalai sugumaran <amirth...@gmail.com>

Raja sankar

unread,
Feb 9, 2011, 9:22:31 AM2/9/11
to mint...@googlegroups.com
அன்பின் சுகுமாரன்,

ஏதேனும் அலர்ஜியாக இருக்கும். திருநீறு அல்லது நாமக்கட்டி உரைத்து போட்டு பாருங்கள். குணமாகக்கூடும். 

விரைவில் குணமாக ஆண்டவனை வேண்டுகிறேன். 

ராஜசங்கர்

coral shree

unread,
Feb 9, 2011, 9:29:53 AM2/9/11
to mint...@googlegroups.com
எவ்வளவு சிரமம் மேற்கொண்டு இக்காரியம் செய்கிறீர்கள் என்பதை தங்கள் மடல் தெளிவாகக் காட்டுகிறது. அதற்கான பலன் அடைந்ததும் ஆண்டவன் அருளே. தங்கள் உடல் பூரண நலம் பெற் அந்த ஆண்டவனே அருள் புரிவான். வாழ்த்துக்கள் ஐயா.

2011/2/9 annamalai sugumaran <amirth...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

PICT3105.JPG
PICT3143.JPG
PICT3139.JPG
PICT0931.JPG

Tthamizth Tthenee

unread,
Feb 9, 2011, 9:34:21 AM2/9/11
to mint...@googlegroups.com
திரு அண்ணாமலை சுகுமாரன் அவர்களே மலை வாழைப்பழம் வாங்கி  

அதனுள் பெருங்காயம் வைத்து உண்ணுங்கள்

சரியாகிவிடும், அப்படியே வெங்காயச் சாற்றை பூசி ஊறிவிட்டுக் குளியுங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/9 Raja sankar <errajasa...@gmail.com>

--

Kamala Devi

unread,
Feb 9, 2011, 10:41:16 AM2/9/11
to mint...@googlegroups.com
சுகுமாரன்
நிங்ஙளின் உழைப்பு கண்ணீர் வரவழைக்கிறது.கைம்மாறு கருதாத  கர்மவீர்கள்
இன்னும் வாழ்கிறார்கள் என்பதே தமிழுக்குக்கிட்டிய பெருமைதான். ஆனால் நிங்ஙளினுடல்நிலை
பாதிப்புக்கு ஞான் ஒரு சஜஷன் சொல்லலாமா
[ பழம் நூல்கள் ஒருமுறை ஸ்ரீகோவில்  நிலவறை பூஜாமுரியிலிருந்து ,கிட்டியதை பொக்கிஷமாக கருதி சிங்கப்பூருக்கு
கொண்டு வந்தபோதும் அறியவில்லை.பழம்நூலை தொட்டவுடனே யே புகை மண்டலமாய் நெடி தான் பறந்த்து.
எந்த நூற்றாண்டு நூலோ?
ஆவலுடன் புரட்ட  முற்பட்டு, ---முற்பட்டு, -----மாலைக்குள் கடுமையான மூச்சுத்திணறல்,இரவுபோவதற்குள்,கடும் பனி, .
மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். விஷப்பனி என்று மருத்துவர் கூற , கணவ்ருக்குவந்த  கடும் கோபத்தில் அந்த பொக்கிஷ நூலை தூக்கி எறிந்துவிட்டார், எனக்கு கேட்க துணிவில்லை.ஏனென்றால் மருத்துவமனையிலிருந்து வந்தபோது அவ்வளவு பலவீனமாக இருந்தேன். ]
ஏனிவ்வளவு விஸ்தீகரணம் தெரியுமா? பழம் ஓலைச்சுவடியாகட்டும், பழம் ஏடுகளாகட்டும்,. விஷ அணுக்கள், க்ருமிகள்
இருக்கும். நாம் அறியோம்.முதலில் பழம் சுவடிகள் தொடும்போது, அணுக்கள் கொல்லும் கற்பூரமும், க்ரிஷ்ணாம்லி
இலையும் சேர்த்து அரைத்த விழுதை தீயிலிட்டு புகை காட்டவேண்டும், கொஞ்சமாவது  ரக்‌ஷைப்படலாம்.
நிங்ஙளின் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்
அன்ப் கமலம்

 
http://www.kamalagaanam.blogspot.com



From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: minT...@googlegroups.com
Cc: amirth...@gmail.com
Sent: Wednesday, 9 February 2011 20:44:38
எப்படியும் கால் கிலோவுக்கு குறையாது ,ஆனால் வெள்ளி மிகவும் பழசானதால் அத்தை பளபளபில்லை  பல நூற்றாண்டின்மருத்துவம் பார்க்க வந்திருந்தனர் .
PICT3143.JPG

PICT3139.JPG
PICT0931.JPG
PICT3105.JPG
PICT3143.JPG

annamalai sugumaran

unread,
Feb 9, 2011, 11:54:14 AM2/9/11
to mint...@googlegroups.com
//இ சார் வீட்டில்வந்தபோது சாதாரணமாக இருந்தீர்களே  //

ஹா ஹா ---அப்போ சொரிய மறந்துட்டேன் .

இவையெல்லாம் நடந்தது செப்டம்பர் மாதம் 
நான் அறுபது மூலிகைகளைப்பற்றி முன்பு எழுதி இருக்கிறேன் தெரியுமா ?
சும்மா இருப்பேனா ?
நோய் வருவதே என்னைக் கொஞ்சம் கவனி என்று சொல்லத்தானே ?

தோலை தொடர்ந்து கவனிக்க ஆரபித்தேன் .
குமரியின் சோற்றை அதாங்க சோற்றுக்கற்றாழை சோற்றை தொடர்ந்து 
உபயோகித்ததில் எலாம் குணமானது மட்டுமில்லாமல் 'சிவப்பழகே' உண்மையாக  வந்துடும் போலிருக்கு .
சுகுமாரன் 

2011/2/9 shylaja <shyl...@gmail.com>



--

Selva Murali

unread,
Feb 9, 2011, 11:57:27 AM2/9/11
to mint...@googlegroups.com
2011/2/9 annamalai sugumaran <amirth...@gmail.com>
//இ சார் வீட்டில்வந்தபோது சாதாரணமாக இருந்தீர்களே  //

ஹா ஹா ---அப்போ சொரிய மறந்துட்டேன் .

இவையெல்லாம் நடந்தது செப்டம்பர் மாதம் 
நான் அறுபது மூலிகைகளைப்பற்றி முன்பு எழுதி இருக்கிறேன் தெரியுமா ?
சும்மா இருப்பேனா ?
நோய் வருவதே என்னைக் கொஞ்சம் கவனி என்று சொல்லத்தானே ?

தோலை தொடர்ந்து கவனிக்க ஆரபித்தேன் .
குமரியின் சோற்றை அதாங்க சோற்றுக்கற்றாழை சோற்றை தொடர்ந்து 
உபயோகித்ததில் எலாம் குணமானது மட்டுமில்லாமல் 'சிவப்பழகே' உண்மையாக  வந்துடும் போலிருக்கு .
சுகுமாரன் சார்
இந்த ரகசியத்தை எனக்கு சொல்லலாமே....

சிஷ்யகே(கோ)டி 



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudlayer.in
----------------------------------------------------------

annamalai sugumaran

unread,
Feb 9, 2011, 11:59:05 AM2/9/11
to mint...@googlegroups.com
கமலம் ,
உங்கள் அன்பிற்கும் ,ஆலோசனைக்கும் நன்றி .
ஓலைச் சுவடிகளைக் கையாளும் போது மிக்க கவனம் தேவைதான் தோல்,நுரை ஈரல் 
பாதிப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் .
கவனமாக இருக்கிறேன் 
இந்த நிகழ்ச்சி நடந்தது செப்டம்பர் மாதம் 
புண்கள் வந்தது அக்டோபர் மாதம் 
நான் நவம்பர் மாதம் ,'குமரியின்' தயவால் குணமடைந்து விட்டேன் .

கட்டுரை எழுதியது ஜனவரியில் .
இப்போது உடல் நலம் தேறிவிட்டேன் .

அன்புடன் 
சுகுமாரன் 
2011/2/9 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
PICT3139.JPG
PICT0931.JPG
PICT3105.JPG
PICT3143.JPG

annamalai sugumaran

unread,
Feb 9, 2011, 12:20:10 PM2/9/11
to mint...@googlegroups.com
சிஷ்யகே(கோ)டிக்கு  குருவருள் நிச்சயம் உண்டு !

பொறுமை தேவை 
சுகுமாரன் 

2011/2/9 Selva Murali <mural...@gmail.com>

Selva Murali

unread,
Feb 9, 2011, 12:21:52 PM2/9/11
to mint...@googlegroups.com
எத்தனை நூற்றாண்டுகளானாலும் காத்திருக்கிறேன்......:)

2011/2/9 annamalai sugumaran <amirth...@gmail.com>

annamalai sugumaran

unread,
Feb 9, 2011, 12:30:41 PM2/9/11
to mint...@googlegroups.com
நன்றி இப்போது குணம் ஆகிவிட்டேன் 
அன்புடன் 
சுகுமாரன் 

2011/2/9 Raja sankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

annamalai sugumaran

unread,
Feb 9, 2011, 12:26:21 PM2/9/11
to mint...@googlegroups.com
நன்றி திரு காளை ராஜன் 
காதைச் சுற்றி நிறைய விஷயம் இருக்கு போலிருக்கிறது .

அந்த நாளில் எல்லாம் சரியாகப்படிக்காத மாணவர்களை ,காதைப்பிடித்திழுத்து தோப்புக்கரணம் தான் போட சொல்லுவார்கள் .
இப்போ அந்த தோப்புக்கரணம் போடுவதையே சிடியில் போட்டு மூளை வளர்ச்சிக்கு ஆசனம் என்று அமெரிக்காவில் விற்க்கிரார்கலாம்.
ஏன் காதுவளர்த்து வருகின்றனர், என்று ஒரு களப்பணி செய்வோமா ?
உங்களுடன் காரைக்குடிப் பகுதியில் சுற்றியது ஒரு இனிய அனுபவம் .
அதைப்பற்றி எல்லாம் விரைவில் எழுதுவேன் .
திருப்பூவணம் ,சிங்கம்புணரி பற்றி  எல்லாம் எழுதியாகவேண்டும் .
அன்புடன் 
சுகுமாரன் 

2011/2/9 kalairajan krishnan <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

annamalai sugumaran

unread,
Feb 9, 2011, 12:32:25 PM2/9/11
to mint...@googlegroups.com
நல்ல வைத்தியகுறிப்பு தருகிறீர்கள் நண்பரே !
இப்போ சரியாகிவிட்டது .
இது நடந்தது செப்டெம்பரில் 
நன்றி 
அன்புடன் 
சுகுமாரன்  

2011/2/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

annamalai sugumaran

unread,
Feb 9, 2011, 12:36:01 PM2/9/11
to mint...@googlegroups.com
நன்றி பவளம் அவர்களே ,
பவளம் கூட தோளுக்கு நல்லது .
எனது மூலிகைத தொகுப்பு படித்திருகிரீர்களா ?
'எனக்குப் புரிந்தது இதுவே ' என்றுக் கூட ஒரு தொடர் எழுதினேன் .
நேரம் இருக்கும் போது படித்துப்பாருங்கள் .
அன்புடன் 
சுகுமாரன் 

2011/2/9 coral shree <cor...@gmail.com>
PICT3143.JPG
PICT3105.JPG
PICT0931.JPG
PICT3139.JPG

annamalai sugumaran

unread,
Feb 9, 2011, 12:37:46 PM2/9/11
to mint...@googlegroups.com
ஹாய்யா  ,அப்போ எனக்கும் நூற்றாண்டுகள் வாழ சான்ஸ் இருக்கு !

2011/2/9 Selva Murali <mural...@gmail.com>

kalairajan krishnan

unread,
Feb 10, 2011, 2:45:50 AM2/10/11
to mint...@googlegroups.com
ஐயா சுகுமாரன் அவர்களுக்கு வணக்கம்,

On 2/9/11, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote:
> நன்றி திரு காளை ராஜன்

> ஏன் காதுவளர்த்து வருகின்றனர், என்று ஒரு களப்பணி செய்வோமா ?

நன்றாகச் செய்வோம்,
ஆவலுடன் காத்திருக்கிறேன்,

> உங்களுடன் காரைக்குடிப் பகுதியில் சுற்றியது ஒரு இனிய அனுபவம் .
> அதைப்பற்றி எல்லாம் விரைவில் எழுதுவேன் .
> திருப்பூவணம் ,சிங்கம்புணரி பற்றி எல்லாம் எழுதியாகவேண்டும் .

ஐயா,
சிங்கம்புணரி வாத்தியார் கோயிலில் EO அவர்கள், காரைக்கு
ஸ்ரீகொப்புடையம்மன் கோயிலில் உள்ளார். சிங்கம்புணரியில் உள்ள ஓலைச்
சுவடிகளைக் கேட்டு கடிதம் கொடுங்கள், அனுமதி வாங்கித் தருகிறேன் என்று
சொல்லியுள்ளார்,
நாளை (வெள்ளிக்கிழமை) தங்களை நேரில் சந்திக்கும் போது விபரமாகக் கூறுகிறேன்,
முடிந்தால் 3-3-11க்கு முன்பாகவே ஓலைச்சுவடிகளைப் பெற்று தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கலாம்,

சிங்கம்புணரி சித்தரின் திருவருளைச் சிந்தித்து,

அன்பன்
கி. காளைராசன்

துரை.ந.உ

unread,
Feb 10, 2011, 2:54:01 AM2/10/11
to mint...@googlegroups.com
வாழ்த்துகள் அய்யா ....
விரைவில் சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன் 

2011/2/9 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

kanniappan

unread,
Feb 10, 2011, 8:37:24 AM2/10/11
to mint...@googlegroups.com
இனிய மாலை வணக்கங்கள். உங்கள் அனைவரையும் வ்ரைவில் சந்திக்கும் வாய்ப்பிற்காக நானும் காத்திருக்கிறேன்.

10 பிப்ரவரி, 2011 1:24 pm அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:



--
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!

என்றென்றும் அன்புடன்,
 வடிவேல் கன்னியப்பன்.

annamalai sugumaran

unread,
Mar 1, 2011, 12:29:20 PM3/1/11
to mint...@googlegroups.com
ஓலைச் சுவடிகள் தேடியபடலம்     
                      பாகம் இரண்டு -----  5

அற்ப்புதங்கள் அகத்திலுண்டு ,  புறத்திலுமுண்டு !

"யானை வேட்டுவன் யானையும் பெறுமே 
குரும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோரக்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்மாறி பிறப்பின் இன்மையும் கூடும்
மாறிப் பிறவாராயினும் இமயத்து------------
            

இவ்வாறு புறநானூறு பாடல் ஒன்று விரிவாக தொடர்கிறது .
இது யானை வேட்டைக்கு சென்றவர்கள் யானையைக் கூட எளிதில் பெறும் வாய்ப்பு கிடைக்கும் ,
காடை வேட்டைக்கு செல்பவர்கள் அதுக்கூட கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு .
ஆனால் உயர்ந்த நோக்கம் கொண்டு நல்வினையை நாடுவோர்க்கு அதன் நுகர்தல் மட்டுமின்றி 
கூடுதலாக உயர்ந்த உலகின் இன்ப நுகர்வும் கிடைக்கும்என விரிகிறது 
, இந்தப்பாடல்; சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் 
மூத்தோருக்கு இருந்த வினைப்பயனின் வலிமையைக்குறித்துமமறுபிறவிக் குறித்தும்    இருந்த நம்பிக்கையை காட்டுவது மட்டுமின்றி  
,அந்தப்பாடலின் இயல்புத்தன்மையும் , இன்றளவும் பயன்பட்டுவரும் எழுத்து நடையை ஒப்பவும் , மிக எளிமையும் வாழ்வின் உண்மையான   பெரிய செயலில் ஈடுபட்டு பெரிய சாதனைகள் எளிதில் புரிதலும்  உண்டு ,சிறிய செயல் செய்யப்  போய் தோல்வியுடன் திரும்புவதும் உண்டு என்பதை எத்தனை  சகஜமாக , நிஜமான வாழ்வின் நிதர்சனத்தை சொல்லிபோகிறது என்று நான் எண்ணி வியப்பதுண்டு .

இவ்வாறுதான் எத்தனையோ குக்கிராமங்களிலும் , கூரைவீடுகளிலும்  மறைந்து கிடந்த  ஓலைச் சுவடிகலைத்  தேடிதமிழகம் எங்கும் சுற்றி அலைந்தபோதும் நிகழ்ந்தது . .
கடினம் என்று பலராலும் நினைக்கப்பட்ட இந்த செயல் என்னோ யாரும் அத்தனை முக்கியமாக எடுத்துக்கொள்ளபடாத இந்த ஓலைச் சுவடிகளை தேடிப்பாதுகாத்தல் எனும் செயல் , நானூற்றுப் பாடலில்  கூறுவது போல் யானை வேட்டைக்கு போய் யானையை எளிதில் வேட்டையாடியது போலவே அமைந்து விட்டது.

தமிழ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் பொறுப்பில் விடப்பட்ட இந்தப்பணியை  நான் என குழுவுடன் சேர்ந்து அலைந்து திரிந்து   பெற முடிந்த ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கை எங்களின் வேட்டையின் பரிமாணத்தைக் காட்டக்கூடியதாக இருந்தது . .

இதற்க்கு முழு முதல் காரணமாக அமைந்ததுஅடிப்படையில் அமைந்த நல்லெண்ணமா ?இல்லை பின்னணியில் இருந்த ஆன்றோர்களின் ஆசியா ? தெரியாது .

ஆனால் இந்தப்பணி தொடங்குவதற்கு துணை வேந்தரின் தமிழ்மேல் இருந்த ஆறாத் தாகமும் ,தமிழர்தம் அறிவின் எஞ்சிய தரவுகளான ஓலைச் சுவடிகளை எப்படியாவது இயன்றவரைக் காக்கவேண்டும் எனும்மாறாத  அவாவே முதல் காரணமாக அமைந்தது .

அவரே ஒருக்காலத்தில் ஒலைகளைத   தேடிச் சேர்த்தவர்தானே ? 
நானும் அவரின் மெக்கன்சி  ஆவணம் முதலியவற்றின் தொகுப்பான  பழவேற்க்காட்டின்வரலாறு போன்ற புத்தகங்களைப்படித்துஅந்த நாட்களிலேயே  வியப்புற்று ஏங்கியவன் தானே ? 
 
ஆனால் வாழ்க்கை என்பது பல அதிசிய சம்பவங்களின் தொகுப்பே என இந்த முறை மீண்டும் மீண்டும் பெற்ற அனுபவங்களின் மூலம் மீண்டும் உறுதி கொண்டேன்  .
எங்கெங்கு  காணினும் இன்பமடா  எனப்பாரதி பாடியபோல் எனக்கு இந்த பயணத்தின் முழுவதுமே பற்ப்பல எண்ணி எண்ணி வியக்கவைக்கும் சம்பவங்கள் அமைந்துவிட்டன .

சாதாரண நடை முறை வாழ்வில் நடைபெறும் தேடினிதம் சோறு தின்றல்போன்ற செயல்கள்  மட்டுமே நடைபெற்றிருந்தால்
அதைப்போய் எழுதுவதிலோ அல்லது அனைவரிடம் பகிர்ந்து கொள்ள எனன எனன இருக்கிறது .
எப்போது ஏதாவது எழுதுவது என முனைகிறோமோ அதை அனைவருக்க்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோமோ அப்போதே நடை பெற்ற செயலிலே ஒரு அசாதாரணம் இருக்கவே செய்கிறது .

ஆனால் ஆசை படுவது எல்லாம் எல்லோருக்கும் நடை பெற்று விடுகிறதா ?யானை வேட்டை செல்பவர்கள் எல்லாருக்கும் யானை கிடைத்து விடுகிறதா ?இல்லை மிக்க எளிதென்று காடை வேட்டைக்கு சென்றால் மட்டும் கையில் காடையுடன் வநது விடமுடிகிறதா ?
எல்லாம் நம் இஷ்டப்படி நடந்து விட்டால் அதில்  அதிசயப்படுவதர்க்கு   எனன இருக்கிறது .
தோல்வி என்று எதைக் கூறுகிறோம் ? முடிவு நாம் நினைத்தபடி இல்லாது எல்லாம் நம்மைப்பொருத்தவரைத் தோல்விதான் .. .
எண்ணியது எண்ணியபடி நடந்து விட்டால் அதை வெற்றி என்றுக் கொண்டாடுகிறோம் .
ஆனால் இந்த வெற்றியும் தோல்வியும் நினைத்தபடி நடப்பது ஒன்றும் வாழ்வின் நிதாசனம் இல்லை என்பதையே அந்த சங்கக்கால 

"யானை வேட்டுவன் யானையும் பெறுமே 
குரும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே"

எனும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றது .
ஆனால் பலருக்கு தமது வாழ்வில் தின்தொரும் நடைபெறும் அதிசியங்களை உணருவதர்க்குக் கூட மனமில்லை .

அவர்கள் மனம் எல்லாம் இதுவரை தாங்கள் இருந்த நிலையையும் ,இனி இருக்க விரும்பும் நிலையையும் எண்ணி எண்ணி ஏங்கியே ,
நிஜமாக நடக்கும்  நிகழ்காலத்தை உணர மறந்து விடுகிறார்கள் .
இன்னும் சிலர் எதையும் அற்புதம் ,அதிசியம் என்று சொன்னாலே தாங்களும் பிற்போக்கு வாதிகள் என மூட நம்பிக்கையில் வாழ்வும் 
எளிய மக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுவோமோ என்று என்றும் உஷாராக இருப்பார்கள் .
எதையும் உள்ளது உள்ளபடி உணர மறுக்கிறார்கள் .

மக்களின் மன நிலையைப் பற்றி வேடிக்கையாகக் கூறுவார்கள் 
 
Tell a man there are 300 billion stars in the universe and he'll believe you. 
Tell him a bench has wet paint on it and he'll have to touch to be sure

புத்திசாலிகள் என தங்களை கூறிக்கொள்ளும் பலரும் ஊடகங்களில் வரும் பல தகவல்களையும் எந்த ஒரு ஆராய்ச்சியும்  இன்றி அப்படியே ஒப்புக்கொண்டு வியந்து போவார்கள் .
ஆனால் வீட்டில் மனைவி ,தங்கள் வீட்டு பெஞ்சுக்குபெயின்ட்டு அடித்திருக்கிறது என்று சொன்னால் ,அதை தொட்டுப்பார்காமல் இருக்கமாட்டார்கள் .இது உலகின் இயல்பாகவே இருக்கிறது .

இனி என்னதான் அதிசயங்கள் ,வியப்புகள் இந்த தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்ட ஓலைச் சுவடி தேடும் பணியின் போது நடந்தது என பார்க்கலாமா ?

ஆகஸ்ட்2010 மாதம் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் தேடுதல் பணி ஆரம்பிக்குமாறு துணைவேந்தரிடம் இருந்து ஆணை கிடைத்தாலும் , ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஓலைச் சுவடி தேடுவதற்கான பயணத்தின் ஆயத்தங்கள் செய்வதிலேயே  கழிந்தது .
 என்னுடன் பல்கலைக் காழகத்தின் சார்பில் வருபவரை தயார் செய்வதிலும் ,அவரிடம் இந்த பயணத்தின் செலவினகளுக்காக முன்பணம் தருவது ,எனக்கும் குழுவினருக்கும் பணி நியமன ஆணைகள் தருவது எனஅந்த மாதம் காத்திருத்தலில்  கழிந்தது .

ஒருவாறு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி அன்று வேலைகள் அனைத்தும் முடிந்து எங்கள் பயணத்தைத் தொடங்கலாம் என பச்சைக்கொடி காட்டப்பட்டது .
பிறகு ஒரு நாள் கூட வீணாக்கவேண்டாம் என்ற முனைப்புடன் அடுத்தநாளான ஞாயிறு அன்று காலை ஐந்து மணிக்கே எங்கள் பயணத்தை துவங்க முடிவு செய்தோம் .
தேக்கிவைக்கப்பட்டிருக்கும் நீர் தடையை திறந்ததும் ,வேகமுடன் ஆர்பரித்துக் கிளம்புவது போல் எங்கள் குழுவும் வேகமுடன் 
ஆர்வமுடனும் கிளம்பியது .
முதலில் வ்ருதுநகர் மாவட்டம் போவதாகத் தீர்மானித்திருந்தோம்.
 தமிழ் நாட்டிலே மொத்தம் 32   மாவட்டங்கள் உள்ளன .ஆனால் நாங்கள் ஏன் முதலில் விருது நகரைத் தேர்ந்தெடுத்தோம் .அங்கே தான் இருக்கிறது அனுபவத்தின் சாதுரியம் ,யாரும் அதிகம் வேட்டையாடாதக் காட்டிலேத்தானே அதிக வேட்டை கிட்டும் .
வ்ருதுநகர் பொதுவாக அதிகம் அறியப்படாத மாவட்டம் ,அது ஒரு வியாபார முக்கிய இடம் என்றுதான் அதிகம் அறியப்பட்டுள்ளது .ஆனால் அதில் அடங்கி இருக்கும் சரித்திர முக்கியங்களை நான் முன்னரே அறிந்திருந்தேன் .
என்னுடன் வந்த தஞ்சை பல்கலை சார்ந்த வெங்கடேசனிடம் ,கிளம்பும் போதே மாமன்னன் ராஜா ராஜனைப்பற்றிய கல்வெட்டுகள் தான் நிறைய கிடைத்திருக்கிறதேத்தவிர அதை ஆதரிக்கும் காவியங்களோ ,பாடல்களோ இன்னும் அதிகம் கிடைக்கப்பெறாத நிலைப் பற்றி பேசி வந்தேன் .அப்போது இந்தப்பயணத்தில் இராஜ ராஜனைப்பற்றி ஓலைச் சுவடிகளை தேடி எடுக்க வேண்டும் என்ற எனது அவாவினையும்  
தெரிவித்தேன் .
அப்போது வெங்கடேசன் ,  மாமன்னனைப்பற்றி தஞ்சையில் அல்லவா தேடவேண்டும் நாம் விருது நகர் அல்லவா போகிறோம் என்று வினவினார் .
நான் அப்போது இராஜ ராஜன் குமரியையும் , உதயகிரி கோட்டை வெற்றி ,காந்தளூர் கலமறுத்த வரலாறு இவைகளைக் கூறி அவரின் பல வெற்றிப் பயணங்கள்   நாங்கள் அப்போது சென்று கொண்டிருக்கும் அதே வழியிலேயே நடைபெற்றதை விவரித்தேன் 

அவருக்கு விருது பல கிடைத்ததால் இது விருது நகர்  ஆகி இருக்கலாம் .என்று ஒரு யுகத்தையும்  கூறினேன் .
இவ்வாறு சுவாரசியமாக பேசிக்கொண்டே நாங்கள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் விருதுநகர் மாவட்ட எல்லையை வந்தடைந்து விட்டோம் .
 
 அதேவழியில் சென்று வழியெங்கும் ஓலைச் சுவடிகள் கிடைக்கும் சாத்தியங்களை ஆராய்ந்தபடியே ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று இரவு தங்குவதாகத்தான் எங்கள் பயணத்திட்டம் .
ஆனால் வழியில் பிரிந்த வத்தராய் இருப்பு பாதையை பார்த்தவுடன் ,அதில் திரும்பி அந்தக்கிளை பாதையை முதலில் முடிப்பதெனத் தீர்மானித்தோம் .
என்னுள் சதுரகிரி வாழ் சித்தர்களும் நினைவில் எழுந்தது .

எப்படியோ எங்களை ஓலைச் சுவடிகள் ஈர்க்க ஆரமித்தன .

வழியில் வந்த சுந்தரபாண்டிய புரம் என்னும் கிராமத்தைப்பார்த்ததும் ,அங்கே தேடலை ஆரமித்தோம் .
சோழவம்சத்தை முடிவுக்கு கொண்டுவந்து , பாண்டிய வம்சத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்த விடுதலை வீரனல்லவா மாறவர்மன் சுந்தரபாண்டியன் ?
அவனுடைய வரலாறை குழுவினரிடம் பேசியபடி ,எங்களது வழக்கமானஒலைதேடும்  விசாரித்தலை ஆரமித்தோம் .
பலரும் ஒரே  வீட்டையே சுட்டிக்காட்டினர் .
நாங்களும் அவரின் வீட்டை அடைந்தோம் .
சிறியஒட்டு  வீடுதான் ,ஆனால்அவரோ  குணத்திலே குன்று !
அவரின் பெயர் கடம்பன் !
கந்தா கடம்பா என்றபடியே அவரின் வீட்டுக்குளே நுழைந்தோம் .

மீதியை அடுத்த பகுதியில் பார்ப்போமா ?
அற்ப்புதங்களை பற்றி அறிய
சிறிய காத்திருத்தல் அவசியம் .

அன்புடன் 
சுகுமாரன்                



2011/2/10 kanniappan <vkte...@gmail.com>

karuannam annam

unread,
Mar 1, 2011, 1:06:12 PM3/1/11
to mint...@googlegroups.com
பாகம் இரண்டின் ஐந்தின் தொடக்கம், நடை அருமை.
புறநானூற்றுப் பாடல் எண்ணிப்பார்க்க வைத்தது.
ஊடகத்தை நம்புகிறோம். மனைவிசொல்லை நம்பாமல் வண்ணம் பூசியுள்ளதா என்பதை அறியத் தொட்டுப் பார்த்து எங்கே துடைப்பது என்பது தெரியாமல் அல்லாடுகிறோம் என்பதை இரசித்தேன்.
எங்கெல்லாம் மகான்கள் இருக்கிறார்களோ. அடையாளம் காட்டும் தங்கள் பணிக்கு என் வணக்கம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

2011/3/1 annamalai sugumaran <amirth...@gmail.com>

--

Innamburan Innamburan

unread,
Mar 1, 2011, 3:51:47 PM3/1/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
முதல் இடுகையிலிருந்து:
"...வரலாற்றுக்கு ஆதாரமான  காலத்தை ஆய்வதற்கு  அந்தக் காலத்தைய இலக்கியமும்,  நிகழ்காலத்தில் செய்யப்படும்
தொல்பொருள் ஆய்வும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகளை அந்தக் காலத்தைய  இலக்கியச் செய்திகளோடும், அந்தக் காலத்தைய இலக்கியச்
செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் . அப்போதுதான் ஓர் உறுதியான
முடிவுக்கு வரஇயலும்.

ஆனால்  உலகின் பெரும்பாலான இடங்களில்  இதுவரை அகழ்வாய்வில் பெறப்பட்ட சான்றுகள் இலக்கியத்தோடு
ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெறப் படவில்லை .காரணம் அங்கே
தொல்லிலக்கியங்கள் அகப்படவில்லை....'

திரு. சுகுமாரன், ஒரு முக்யமான ஆய்வுக்கோட்பாட்டை, லகுவாக இங்கு சொல்லிவிட்டார். திருமதி. ஸுபாஷிணி, இந்த கோட்பாட்டை, அடித்தளமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று முனைவர் ராஜேந்திரனிடம் வற்புறுத்த வேண்டும்.
இன்னம்பூரான்
01 02 2011

2011/3/1 karuannam annam <karu...@gmail.com>:

annamalai sugumaran

unread,
Mar 1, 2011, 4:25:06 PM3/1/11
to mint...@googlegroups.com
ஓலைச் சுவடிகள் தேடியபடலம்     
                      பாகம் இரண்டு -----  6

அற்ப்புதங்கள் அகத்திலுண்டு ,  புறத்திலுமுண்டு !


கந்தா கடம்பா என்று வேண்டியவாறே அந்த வீட்டின் உள்ளே நுழைந்தோம் .
அங்கே சுமார் என்பது அகவை நிரம்பியக் கடம்பன் ,ஒரு சரிவாசனத்தில் வீற்றிருந்தார் .
அவர் எதிரே பவ்வியமாக அமர்ந்து ,நாங்கள் அவரை நாடி வந்த காரியங்கள் பற்றி விளக்கினோம் .

ஒவ்வொருவரிடமும் அவரவர்களுக்கு ஏற்றபடி அவர்களுக்கு பிடித்த 
பொருள் பற்றி பேசுவது எங்கள் வாடிக்கை .
வைத்தியரிடம் போய் இலக்கணத்தைப்பற்றிப் பேசினால் ,அவர் இயன்ற உதவி  செய்யாவிட்டால் தவறு யார்பக்கம் .?
சரியானக்கதவை திறக்க தவறான சாவியைப் பயன்படுத்தலாமா ?

கடம்பனோ தமிழ் கடவுள் ,அது போல் சுந்தர பாண்டியபுரத்து கடம்பனும் ஒரு தமிழ் புலவர் .
அவரிடம் தமிழ்கடல் உவேசா அவர்களின் பணியைப்பற்றி சிலாகித்துப் பேசினோம் .அவரும் மீட்கப்பட்ட நூல்களின் பட்டியலை நினைவு கூர்ந்தார் .அப்படியே இப்பவும் அவரிடம் இருக்கும் ஓலைச் சுவடிகளைத் தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தோம் .
ஆனால் அவரோ ,முன்பே மதுரை தமிழ் சங்கத்திடம் பல ஆண்டுகளுக்கு முன் அவரிடம் இருந்த சுவடிகளைத் தந்து விட்டதாகக் கூறினார் .
எங்களுக்கும்  சற்று ஏமாற்றம் தான் ,அவருக்கும் எங்களுக்கு ஒன்றும் தர இயலவில்லையே என ஏமாற்றம் .

எங்கள் அயர்வை நீக்க கடம்பனும் எங்களுக்கு மோர் காப்பி என பல பானங்களை வரிசையாக வழங்க ஆரபித்தார் .
எங்களுக்கோ  சங்கப்பாடலில் சொன்னபடி  
"குரும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே"
என வெறுங்கையுடன் போக விருப்பமில்லை .
முதல் முயற்சி வெறும் பேச்சாக செல்ல விட விருப்பமில்லை .

அவரிடம் "பழைய நூல்கள் ஏதாவது இருக்கிறதா " என ஆரபித்தோம் .
எங்களுக்கு ஏதாவது தந்தே ஆக வேண்டும் என" மோர் மோர்"  என இது வரைக்கூறிய கடம்பன் தனது புத்தக ஆலமாரியைத் திறந்து விட்டு " எல்லாம் உங்களுக்கே " ,தேவையானது அனைத்தும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் .
நாங்களும்அங்கே இருந்த  மிகப்பழைய நூல்களை எல்லாம் எடுத்து அடுக்கிகொண்டே இருந்தோம் .
கடம்பனும்" போதுமா போதுமா " எனக் கேட்டவாறே இருந்தார் .

கட்டிய புத்தகக்கட்டுகளுடன் அவரிடம் பிரியா விடை பெற்றோம் .எத்தனை அன்புள்ளங்கள் ! எங்களுக்குத் துணையாக வழிக்காட்ட அவரின் உறவினர் ஒருவரை எங்களுடன் அன்று முழுவதும் செல்லுமாறு பணித்தார் .
எங்கள் தேடுதல் காப்பியத்தின் இறை வணக்கமாக அந்தப புத்தக சேகரிப்பை வைத்து கொண்டோம் . 
இவ்வாறு நாங்கள் சென்ற இடமெல்லாம் மிக இனிய நண்பர்களைப் பெற்றோம் .எங்களுக்கு ஓலைச் சுவடிகளோ ,புத்தகங்களோ தந்தவர்கள் மிகப் பெரும்பாலோர்  மீண்டும் அவர்களை சந்திக்க வரவேண்டும் என வாழ்த்தியே  அனுப்பினார்கள் .
ராமநாத புரம் மாவட்டத்தில் ஒரு நூறு வயது நெருங்கும் முதிய ,தம்பதியினர் ,விடுதலை போராட்ட வீரர் , எங்கள் தலையைத்தடவி .முகம் வருடி எங்களை ஆசி கூறி ,குரல் தழுதழுக்க ",இது உங்கள் வீடு ,நீங்கள் வரும் ஒரு முறையாவது வநது இங்கு தங்கவேண்டும் " என்று வேண்டி ஏதாவது எங்களுக்குத்தரவேண்டும் என தவித்த தவிப்பை நாங்கள் என்றும் மறக்க இயலாது
இவர்களை எல்லாம் மீண்டும் எப்போது பார்க்கப் போகிறோமோ என்ற தவிப்பு இன்னமும் உள்ளது . .
எவ்வாறு செல்லும் இடமெல்லாம் எங்களுக்கு அன்பும் ஆதரவும் கிடைத்ததை அற்ப்புதம் என்று கூறாமல் என்னவென்று கூறுவது ?

சுந்தரப் பாண்டியபுரத்தில் இருக்கும் ஒரு  புராதன  அந்தபகுதி  கிராம தேவதையின்  கோயில்  நாங்கள் சென்ற வழியில் கண்டோம் .அங்கு ஏதாவது சரித்திர ஆதாரங்கள் கிட்டுமா என தேடி ,கன்னத்தில் போட்டுக்கொண்டு வத்தரயிருப்பு போய் சேர்ந்தோம் .
அங்கே இருக்கும் நூலகரையும் கண்டோம் .
அவரும் நிறைய ஓலைச் சுவடிகள் சேர்த்து முன்பே ஆட்சி தலைவரிடம் கொடுத்ததாகக் கூறினார் .அவருக்கு அது பெருமை ,எங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஒரு புறம் ஆதங்கம  இருந்தாலும் ,சரியான வாய்ப்புள்ள  இடத்தில் தான் தேடுகிறோம் என்ற நம்பிக்கையும் துளிர்த்தது .
வெய்யலில் வீதி வீதியாக அலைந்து திரிந்தோம் .

எங்களுடன் வந்த  ஊர்தி ஓட்டுனர்களை நாங்கள் ஒட்டு ,ஒட்டு என நாள் முழுவதும் ஓடச்செய்வதை பொறுத்து ,அவர்கள் எங்களை நட நட என இயன்ற வரை நடக்க விடுவார்கள் . 

நாங்கள் இந்த பயணத்தில் ஊர்தியில் சுமார் 10,000      கி லோ மீட்டர் சென்றிருப்போம் என்றால் .நாங்கள் நடந்ததோ எப்படியும் இருநூறு கி லோ மீட்டர் இருக்கும் .
நடை நடை என நடக்க சலிப்பதேயில்லை ! 
இதனை ஆர்வமிகுதியால் எங்களுடன் சில நேரங்கள் பயணித்த சுசீந்திரத்தில் வசிக்கும் முதல்வர் திரு பிள்ளை , காரைக்குடி ராமசாமி கல்லூரி முதல்வர் திருமதி வள்ளி அவர்கள் ,காரைக்குடி துணை பத்வாளர் காளைராஜன் போன்ற சில பெரியோர் எங்களுடன் நடந்து ,இன்னமும் அதைப் பற்றி வியப்பாகப் பெசிக்கொண்டிருப்பவர்கள் .

நடைக்கு பயந்தால் நமது தமிழ் மரபு அறக்கட்டளை பொறுப்பில் விடப்பட்ட இந்த தேடலில் சுமார்     60,000      ஏடுகளை பெற்றிருக்க முடியுமா ?

பசி வயிற்றை மிரட்டும் வரை அலைந்து திரிந்தோம் .
செல்லுமிடமெல்லாம் உணவு விடுதி இருக்குமா எனன ?
வேளைக்கு  ஒரு இடத்தில் உணவு கண்ட இடமெல்லாம் சாப்பிடுவதுதானே எங்கள் வாடிக்கை .
ஆனால் வேளைக்கு பத்து மாத்திரைகள் போட்டுக்கொள்ளும் என உடம்பு இத்தனை உணவையும் எப்படி ஏற்றுக்கொண்டது .
பயணம் முழுவதும் எங்களுக்கு ஒரு சிறிய ஜலதோஷமோ ,வண்டிக்கு ஒரு பஞ்சரோக்கூட ஆகாமல் ஓடியது ஒரு அற்ப்புதம் இல்லையா ?
தமிழ் என்னும் அமுதம் எங்களை காத்ததோ ?

பசியும் களைப்பும் வாட்டியபோது யானை கிடைக்க வில்லை ஆனாலும் குரும்பூழ் வேட்டுவன் போல் ஆகி பெருமாள் கோயில் வீதியில் நுழைந்தோம் .
அங்கே ஒரு வீட்டில் பல ஹார்லிக்ஸ் பாட்டில்களில் பலவகை நிறத்தில் ,பல வடிவத்தில் சிறார்கள் விரும்பும் மிட்டாய்களை ,அடுக்கி வைத்து ,
ஒரு சிறிய தின்னைக்கடையைக் கண்டோம் .
அங்கேஇரு மூதாட்டிகள் காலை நீட்டி அமர்ந்து ,யாராவது வியாபாரம் செய்ய வரமாட்டார்களா என ஏங்கியவாறே அமர்ந்திருந்தனர் .

எங்கள் பசிக்கு இதுவரை செவிக்குணவு மட்டுமே கிடைத்து வந்த நிலையில் அங்கே வயற்றிர்க்கு ஏதாவது கிட்டாதா என பார்வையை ஓட்ட அந்தக் கடைக்கு சென்றோம் .
ஆனால் வாடிக்கை எப்படி மறக்கும் ? முதலில் ஓலைச் சுவடி ஏதாவது அவர்களிடம் இருக்கிறதா என்றுதான் பேச்சை ஆரமித்தோம் .

அவர்கள் சொன்ன பதில் எங்கள் சோர்வை எல்லாம் ஒரு கணத்தில் 
ஓட்டிவிட்டது  .
அவர்கள் வீட்டு பரணிலே "நிறைய ஓலைச் சுவடிகள் சுமார் ஐம்பது ஆண்டுகளாக கட்டிதொங்குகிறது ஆனால் அதை எப்படி எடுப்பது என்றுதான் எங்களுக்குத் தெரியவில்லை " என்றார்கள் 
அது போதாதா எங்களுக்கு ," காட்டுங்கள் அதை ! கட்டித்தூக்கி வருவது எங்கள் பொறுப்பு"  என்றோம் .

அவர்கள் காட்டிய பரணியிலே பல்லியைப்போல் எங்களுடன் வந்த முத்துக் கிருஷ்ணன் என்னும் சிறுவன் ஏறினான் ,
அந்தரத்தில் தொங்கியது ஒரு சுவடி மூட்டை !
 அர்ஜுனன் மறைந்திருந்து வாழும்போது அவனின் ஆயுதங்களை  
 மரத்தில் கட்டித் தொங்க விட்டு சென்றதாக படித்தது ஏனோ நினைவில் வந்தது .
மெதுவாக கட்டை கயிற்றை   அறுத்து இறக்கினோம் .

ஐம்பது வருட தூசி என்றால் சுமாவா ?
எப்போதும் வெள்ளுடை அணியும் எனது உடை முழுக்க புழுதியுடை ஆனது.இன்னும்  அறை போடாததால் மாற்றுத்துணி இருந்தது .
தப்பித்தோம் .    .
என்னுடன் வந்த அனைவர் முகங்களும்  ,வியர்வையும் புழுதியும் கலந்து விசித்திர கோலத்தில் காட்சி தந்தது .

சுவடிகளை அந்த இரு அம்மையாரிடமும் காட்டி அதை பற்றிய ஒரு விரிவுரை ஆற்றினோம் .அவர்களுக்கு எனன புரிந்ததோ ?
நாங்கள் அதை தூசித்தட்டி கட்டுவதிலேயே மும்முரமாக இருந்தோம் .
ஒருவாறு கட்டி முடிந்ததும் ,அம்மா மிக்க நன்றி ,நாங்கள் வருகிறோம் என்றதும் , 
" எனன சும்மா எடுத்துக்கொண்டு போகிறீர்கள் ? பணம்  எங்கே ?" "என்றனர் .
அனைவரும் திடுக்கிட்டு போயினர் .

நான் சற்று சுதாரித்து சிரித்தவாறே மீண்டும் அவர்களிடம் சென்று அமர்ந்தேன் .அங்கே இருக்கும்கடையின்  சரக்கின் மொத்த மதிப்பை கேட்டேன் .அவர்கள் ஒரு ஐநூறு ருபாய் இருக்கும் என்றார்கள் .
நான் இன்னும் அதிகம் ஆக்குங்கள் என்று ஒரு ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினேன் .
"இது சுவடிக்கு விலை இல்லை ,எங்களின் அன்பளிப்பு ,
கடையை இருமடகாக்குங்கள்".
என அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து பேசியவுடன் அவர்களால்சுவடிகளுக்கு  விலை பேச இயலவில்லை .
ஒருவாறு அவர்களின் ஒப்புதலுடன் சுமார் 2500  ஏடுகளை 
முதல் முயற்ச்சியில் பெற்றோம் .

இப்போது  சிலர் கூறுகிறார்களாம்" ஓலைச் சுவடிகளை வாரிக்கொண்டு வநது ஓர் இடத்தில் கொண்டு கொட்டிவிட்டோம் ".
இதில் எனன பலன் இருக்கிறது என்று ?

நான் பல முறை பல தடவை எனது கட்டுரைகளில் கூறி இருக்கிறேன்  ஒவ்வொரு குக்கிராமத்தில் ,ஒவ்வொரு நாளும் நொறுங்கி குப்பையாகியும் ,ஆடிபெருக்கில் தவறாமல் நீரில் இட்டும் ,வெந்நீர் காய்ச்ச விறகில்லாதபோது, எரித்தும் , புதிய வீடுகளுக்கு மாறும்போது உபயோகமில்லாத சாமான்களை விட்டுச் செல்லும் போது ஓலை சுவடிகளை விட்டு விட்டும் ,
அதுவரை உபயோகித்துவந்த வைத்தியரோ ,ஜோதிடரோ இறங்ககும் போது அவரின் உடலை அடக்கம் செய்யும் போதே அவர் உபயோகித்த 
சுவடிகளையும் சேர்த்து புதைப்பதையும்  போல பல நிலைகளில் பாழாகி வரும் ஓலைச் சுவடிகளின் நிலைப்பற்றி . .
 
இத்தனை வேகமாக ஆதரிப்பார் இன்றி தமிழர் தம் அறிவை தாங்கி இருக்கும் ,வரலாற்று ஆவணங்கள் அழிந்து கொண்டிருக்கும் அவலங்களை கூறி இருக்கிறேன் .

பல இடங்களிலும் நாங்கள் தேடிச்சென்றவர் இறந்து சில நாட்களே ஆகி இருக்கும் ,ஆனால் சுவடிகள் எங்கே போனது எனத் தெரியாது ,யார் யாரோ அள்ளிச் சென்றுவிட்டனர் .என்று கூறுவதை துயரத்துடன் கேட்டிருக்கிறோம் .
சில இடங்களில் நாங்கள் தேடிச் சென்றவர் அன்றுதான் இறந்தார் என்ற செய்தியையும் கேட்டதுண்டு .
இவ்வாறு சிறுக சிறுக ஓலைச் சுவடிகள் நம்மிடையே இருந்து மறைவதை மௌன சாட்சியாக இருந்துவிசனத்துடன்  பார்த்திருக்கிறோம் .

இன்னும் ஆராயப்படாத பல விஷயங்களுடன் நமது பாரம்பரிய கலை அறிவு மறைந்து வருகிறது .
இதை காப்பது தான் முதலில் முக்கியம் .
கோமாவில் இருப்பப்னை முதலில் உயிரூடுவதுதான் முதல் பணி .
முதலில் பாதுகாப்பான இடங்களில் கொண்டு சேர்ப்போம் பின் .அதை பாதுகாப்போம் 
பின்பு அதை ஆராய்வோம் .
நமக்காக நமது முனோர்கள் இத்தனை காலம் காத்துவைத்திருந்த 
பொக்கிஷங்களை ,நாம் காத்து ,நமது வருங்கால தலை முறைக்கு 
அளிக்க வேண்டாமா ?
இப்போது சற்று அயர்ந்து விட்டால் ,
மீண்டும் இதை பாதுகாக்கும் வாய்ப்பே நமக்கு கிட்டாது .
அவைகள் முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது .
சுமார் ஐன்பது வருடங்களாக நாம்அவைகளைப்  படி எடுக்க வில்லை .
இப்பவும் மின்படி எடுக்கவில்லை என்றால் நமக்கு மீண்டும் கிட்டவே கிட்டாது .
இன்னம்  ஐந்து ஆண்டுகளில் எந்த கிராமத்திலும் ஓலைச் சுவடிகளை காண முடியாது .
எனவே தயை கூறி இந்த முயற்ச்ச்யை குறை கூறாதீர் .

ஒரு ஆமையை சில சிறுவர்கள் சேர்ந்து குச்சியால் அடித்துக்கொண்டிருந்தனாறாம் .அந்த வழியே சென்ற ஒரு சந்நியாசி ," " "பாவம் பல சிறுவர்கள் சேர்ந்து ஒரு பாவப்பட்ட ஆமையை அடித்து துன்புறுத்துகிறார்கள் .
நல்ல வேலை அந்த ஆமையை திருப்பிப் போட்டு அடித்தால் அந்த ஆமை செத்துவிடும் என அவர்களுக்குத் தெரியாது"  என்றாராம் .
சிறுவர்களும் ஆமையை திருப்பிப் போட்டு அதன் உயிரை பறித்தனராம் .
தற்போது ஓலைச் சுவடிகளை வாரிக்கொண்டு சென்று கொட்டுவதால் எனன பயன் ?  எனக் கேட்க்கும் சான்றோரும்  அந்த சன்யாசியை போன்றவரே !  .

அவர்கள் யாரையோ சிறுமைபடுத்த எண்ணி   அருமைத் தமிழுக்கு ஊறு செய்கின்றனர் .

 அப்படி ஒன்றும் ஓலைச் சுவடிகள்  ஒவ்வொரு வீட்டின் புழக்கடையில் ,வாரிக்கொண்டு போ எனக் கொட்டிகிடக்க வில்லை >
நாங்கள் அவைகளை சேகரிக்க பட்ட பாடு  ,துயரம் ,சோர்வு ,மன வலி உடல்வலி இவைகளை இறைவனே அறிவார் .
இவைகளை வெறும் சம்பளத்திற்காக செய்யவில்லை .
சீருடை  அணிந்து ஒரு செக்குரிட்டி கார்டு ஆகப்போனாலே இதைவிட அதிக சம்பளம் கிடைத்திருக்கும் .
செய்வதற்கு வேலையும் இருந்திருக்காது .

எப்படியோ ,இவ்வாறு வத்தராய் இருப்பில் முதலில் 2500  சுவடிகள் பெற்ற நாங்கள் அன்று மாலைக்குள் சேகரித்த ஏடுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?
காலை ஐந்து மணிக்கு தஞ்சையில் புறப்பட்ட நாங்கள் அன்று மாலையே 
ஐந்து மணிக்குள் பெற்றது மொத்தம் 9000  ஏடுகள் .

இதுவரை ஒரே நாளில் இத்தனை ஏடுகள் சேகரிக்கப்பட்டதுண்டா?
இதுவே  கிரிக்கெட் ஆடியிருந்தால் ஓட்டங்களுக்கு உலக சாதனை ஆக்கிருப்பார்கள் .
ஆனால் மறைக்கப்பட்ட 9000 ஏடுகள் வெளி வந்ததை குறித்து அன்று அறிந்தவர்கள் எத்தனை பேர் ?
ஏழைகள் சொல் அம்பலம் ஏறாதே ?
தமிழுக்கு என்று கிடைக்கும் தக்க ஒரு அங்கீகாரம் ?
ஆட்டத்திலும்  ஓட்டத்திலும் மகிழும் நம்மக்கள் தமிழர் அறிவின் திறன் குறித்து என்று பெருமை கொள்வர் ?

இது ஒரு அற்ப்புதம் இல்லையா ?

அது மட்டுமா ?அடுத்த 
33 நாட்களில் நாங்கள் மொத்தம் சேர்ந்தது 48,000  ஏடுகள் .
இவைகளை நாங்கள் 1/10/ 2010   அன்று தஞ்சை கொண்டு வநது சேர்த்தோம் .
இந்த 48,000  ஏடுகள் ஒரு மாதத்தில் சேர்த்தது அற்புதம் இல்லையா ?

முதல் நாள் மட்டும் சேர்த்தது 9000
ஒரு  மாதத்தில் சேர்த்தது   48,000

அதுமட்டுமா நாங்கள்  முதலில்  வத்தராய் இருப்பில் ஓலைச் சுவடி 
பெற்ற அம்மையார் பெயர் கிருஷ்ணவேணி .
கடைசியாக 30/9/2010 அன்று திண்டுக்கல்லில் ஓலைச் சுவடி பெற்றவரின் பெயர் சுகுமார் 

எனது பெயரும் சுகுமார் என்பது தெரியும் என நினைக்கிறேன் .
அந்த கிருஷ்ணவேணி என்பது என மனைவியின் பெயர் !
இது அற்ப்புதம் இல்லையா ?
இது  தற்சசெயல்மட்டும் தானா ? 
இது பொய்யும் இல்லை !
அத்தனையும் பதிவேட்டில் பதிவாகி இருக்கிறது .

அன்புடன் 
சுகுமாரன் 


முடிந்தவரை இந்தத் தொடரை விரைவில் முடிக்கப்பார்க்கிறேன் .
அமைதியான ஓய்வுதான் கிடைப்பதில்லை .
அடுத்தப்பகுதியில் அனைத்து புகைப்படங்களுடன் .

கடம்பனிடம் பெற்ற புத்தகங்கள் அனைத்தும் தஞ்சை பல்கலைகழகத்தில் தரப்பட்டுவிட்டது 
--சுகு -


2011/3/1 karuannam annam <karu...@gmail.com>
பாகம் இரண்டின் ஐந்தின் தொடக்கம், நடை அருமை.
புறநானூற்றுப் பாடல் எண்ணிப்பார்க்க வைத்தது.

2011/3/1 annamalai sugumaran <amirth...@gmail.com>
ஓலைச் சுவடிகள் தேடியபடலம்     
                      பாகம் இரண்டு -----  5

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,

annamalai sugumaran

unread,
Mar 1, 2011, 4:27:50 PM3/1/11
to mint...@googlegroups.com
நண்பர் சொ.வினைதீர்த்தான். அவர்களுக்கு ,

பாராட்டுக்கு நன்றி !
ஆமாம் அது எப்படி என நடை அருமை என்று தெரியும் .
நாங்கள் நடந்த நடையைப்பற்றி அடுத்த பகுதியில் பாருங்கள் .

அன்புடன் 
சுகுமாரன் 
2011/3/1 karuannam annam <karu...@gmail.com>



--
A.Sugumaran ,

annamalai sugumaran

unread,
Mar 1, 2011, 4:31:38 PM3/1/11
to mint...@googlegroups.com
நன்றி இ   சார் ,
எப்படியோ எனக்கு எதையும் லகுவாகத்தான் சொல்லத்தெரியும் ,
எனவே நானும் எளியவன் தான் .
வெய்ட்டான ஆள் இல்லை .

அங்கு எப்படி இருக்கிறது ?
எல்லாம் நலம் தானே 
அன்புடன் 
சுகுமாரன் .
 

2011/3/2 Innamburan Innamburan <innam...@gmail.com>



--
A.Sugumaran ,

annamalai sugumaran

unread,
Mar 1, 2011, 4:54:07 PM3/1/11
to mint...@googlegroups.com

எனது சமீபத்திய இரண்டு பதிவுகளையும் நானே இப்போது படித்துப்பார்த்தேன் .
அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது   
நான் அற்ப்புதம் என்று கூறியதையும் கடவுளையும் .ஆன்மீகத்தையும் சேர்த்து யாரும் தயவு செய்து குழப்பிகொள்ளவேண்டாம் .
நான் கூறவந்தது நடந்த நிகழ்வுகளில் பல விந்தைகள் நடந்தன என்பதைத்தான் .
இதில் கடவுளையோ ,ஆன்மீகத்தையோசம்பந்தப்படுத்தி  நான் கூறவில்லை .
இவ்வாறு எனக்கு மட்டும் தான்,இந்த ஓலைச் சுவடி தேடுதலில் மட்டும் தான்  நடந்தது எனவும்  நான் கூறவில்லை .

இத்தகைய கோ இன்சிடான்ஸ் பல நேரங்களில் உலகின் பல பாகங்களில் நடக்கின்றன .
எனவே இவைகளைக் குறித்த விவாதம் வேண்டாம் .
நடந்தவற்றை கூறவேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது .
பயணத்தில் கூட வந்தவர்களும் இருக்கிறார்கள் .
ஆனால்நான்  ஓலைச் சுவடிகளைகாப்பதைக்  பற்றிய கூறிய எனது கவலை நியாயமானது .
கிராமங்கள் கூரை வீடுகளில் இருந்து கான்கீரெட் வீடுகளாக மாறும் போது அங்கே ஓலைச் சுவடிகள் நிச்சயம் இராது .
ஒவ்வருவரும் இயன்றதை செய்ய வேண்டிய தருணம் இது .
அன்புடன் 
சுகுமாரன் 
2011/3/2 annamalai sugumaran <amirth...@gmail.com>

Thiruvengada Mani T.K

unread,
Mar 1, 2011, 10:11:09 PM3/1/11
to mint...@googlegroups.com

அப்பப்பா இது வெறும் கட்டுரையா ! காலத்தால் அழியாத கல்வெட்டா? தமிழ்த் தாய்க்காய் உழைத்த தனயனின் உள்ளத்து ஊறிவரும் உணர்ச்சிப் பிரவாகமா? இறையருளில்லமால் இது சாத்தியமா? தன் அருமை பெருமைகள் முழுவதுமாய் அறியப்படவில்லையே என்று தவித்துக் கிடந்த தமிழ்த்தாயின் தயையில்லாமல் இது நிறைவேறியிருக்குமா ?

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

என்ற வள்ளுவன் வாக்கறிந்து அண்ணாமலையாரை அடையாளம் கண்டு தெரிவு செய்து பொறுப்பளித்த தமிழ் மரபு அறக்கட்டளையோர் பாராட்டிற்குரியோர்.

     இந்தக் கருத்துக் குவியலை, உள்ளக்குமுறலை, எண்ணப் பிரவாகத்தை, தடையின்றி ஓடும் நடையழகை - அது சொல்லி வரும் தமிழ் மரபு சார் செல்வங்களைச் சேகரித்த சரித்திரத்தை – ரசித்துப்படித்துப் பாராட்டி மகிழ்கிறேன்.

     சொல்லுங்கள் சுகுமாறன் உங்கள் சுவைமிகு? அனுபவங்களை ! தமிழும் - தமிழரும்  தரணி உள்ளளவும் தங்கள் உழைப்பையும் அது கொணர்ந்து சேர்த்த தமிழின் மரபு சார்ந்த தகவல் தரவுகளையும் என்றென்றும் போற்றிக் காக்கும்.

     தமிழர் என்றுமே நன்றி கெட்டவர்கள் அல்ல. உங்கள் உழைப்பும் அதன் பயனும் நிச்சயம் நினைந்து பாராட்டப்படும் – உங்களைத் தெரிவு செய்து ஊக்குவித்த தமிழ் மரபு அறக்கட்டளைக் காவலர்களும் – தஞ்சைப் பல்கலைக்கழகத்தாரும் - குறிப்பாகத் துணைவேந்தரும் – பதிவாளரும், உடனுழைத்த மற்ற அலுவலரும் நிச்சயம் பாராட்டப்படுவர்.

     தொடருங்கள் தங்கள் சுவைமிகு அனுபவங்களை !

முனைவர் தி.க.திருவேங்கட மணி



2011/3/2 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani

N. Kannan

unread,
Mar 2, 2011, 8:21:45 AM3/2/11
to mint...@googlegroups.com
நன்றி முனைவரே!

சரியாகச் சொல்லிவிட்டீர்கள்!

சுகுமாரன் இதன் தேவை குறித்து எழுதிய வரிகளை பலமுறை தமிழ் இணைய
மாநாடுகளில் அப்படியே சொல்லியிருக்கிறேன். ஆம்! நம் வாய்மொழியாக நமக்கு
சுகுமாரன் கிடைத்ததும் அற்புதமே! அதே பாவம், அதே குணம், அதே செயல்வீரம்,
அதே பற்று (committment).

அதனால்தான் சொன்னேன் சுகுமாரனைப் பாராட்ட நாம் தஞ்சை செல்ல வேண்டுமென்று.
நாம் செய்திருப்பது சாதாரணச் செயல் அல்ல! சிலர் வேறு சில குழுக்களில்
நக்கல் அடிப்பதாக சேதி வந்துள்ளது. அவர்கள் செய்நன்றி மறந்தோர். நாம்
எப்போதும் மரபிற்கு ஆதரவாகவே இருந்திருக்கிறோம். ஆனால் நாம் அதை என்றும்
`குத்தகை` எடுத்துக்கொள்வதில்லை. சிலர் அப்படி எடுத்துக்கொண்டு நம்மைப்
பற்றி புறம் பேசுகிறார்கள்.அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

தெய்வம் நமக்குத்துணை. ஒரு தீங்கும் வாராது!

நா.கண்ணன்

2011/3/2 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>:

kalairajan krishnan

unread,
Mar 2, 2011, 9:02:06 AM3/2/11
to mint...@googlegroups.com
சுகுமாரன் சுற்றிச்சுற்றி வந்ததெல்லாம் சும்மாவா?
சுற்றி வைக்கப்பட்ட தமிழ்ச் செல்வத்தைச் சீர்மைப்படுத்தவே அல்லவா?

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒன்றாய்த்திரட்டி
உலகு பயன்பெறச் செய்தது மின்தமிழ்


அன்பன்
கி. காளைராசன்

kalairajan krishnan

unread,
Mar 2, 2011, 9:05:15 AM3/2/11
to mint...@googlegroups.com
சுகுமாரன் சுற்றிச்சுற்றி வந்ததெல்லாம் சும்மாவா?
சுற்றி வைக்கப்பட்ட தமிழ்ச் செல்வத்தைச் சீர்மைப்படுத்தவே அல்லவா?

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்டது செந்தமிழ்

ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒன்றாய்த்திரட்டி
உலகு பயன்பெறச் செய்தது மின்தமிழ்

அன்பன்
கி.காளைராசன்

Reply all
Reply to author
Forward
0 new messages