You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Min Thamizh
தமிழர் தம் வாழ்க்கையில் முக்கிய அங்கமான நாட்டுப்புறக் கலைகள் யாவும்
நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன.
நாட்டுப்புறப் பாடல்கள்
வில்லிசை
பொம்மலாட்டம்
தெருக்கூத்து
கரகாட்டம்
ஒயிலாட்டம்
கும்மியாட்டம்
போன்ற பல்வேறு கலைகள் இன்று
அரிதாகிவிட்டன.
வயல்வெளிகளில் நாற்று நடும்போதும், களையெடுக்கும்போதும் பாடப்பட்ட குளவைப்
பாடல்கள், பயிருக்கு கமலையில் தண்ணீர் இறைக்கும்போது ஆண்கள் பாடும் பாடல்கள்
இனிமையான ஏற்ற இறக்கங்களுடன் பல அர்த்தங்களைக் கொண்டதாக அமைந்திருந்தன.
இன்றைக்கு
கொல்லங்குடி கருப்பாயி, பறவை முனியம்மா போன்றவர்கள்தான் இந்தப் பாடல்களைப்
பாதுகாக்கும் எச்சங்களாக உள்ளனர்.
அதுபோல, "ரேக்ளா ரேஸ்" என்று சொல்லக்கூடிய மாட்டு வண்டிகளின் பந்தயம்
சிறப்பாக இருக்கும்.
இன்றைக்கும்
- விளாத்திகுளம் - ஒட்டப்பிடாரம்
பகுதிகளில்
இப்பந்தயங்கள் நடக்கின்றன.
கொங்குச் சீமையில் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள
பகுதிகளிலும் இதுபோன்ற "ரேக்ளா ரேஸ்"கள் நடைபெறுகின்றன.
ஆகியவற்றை வெந்நீரில் பிசைந்து கவளம் கவளமாக
ஊட்டுவார்கள்.
அலங்காநல்லூர் ஜல்லிகட்டைப் போன்று விளாத்திகுளம் அருகில் உள்ள
தரைக்குடியில் "எருதுகட்டு" நடைபெறும்.
கிராமங்களில் இளவட்டக்கல் என்று ஒன்று உண்டு.
அது பூமிப் பந்து போன்று பெரிய
கல்லாக இருக்கும்.
ஒரு கிராமத்துக்கு மருமகனாக வந்தவருக்கு விருந்து வைத்து
வழியனுப்பும்போது, அவர் இந்த இளவட்டக் கல்லைத் தூக்கி, தனக்குப் பின்னால் போட்டால்
அவருக்கு முறையான விருந்து படைக்கப்பட்டது என்று கருதப்பட்டது.
மேலும், இது
மருமகனின் கெளரவமாகவும் பேணப்பட்டது.
இவ்வாறான நாட்டுப்புறத் தரவுகள் கலைகளில் மட்டுமல்லாமல் சமூக அமைப்பிலும்,
மரபு ரீதியாகவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நாட்டுப்புறத் தரவுகளில்
முக்கியமான அங்கம் நாட்டுப்புறக் கலைகளாகும்.
கிராமியக் கலைகளின் கொண்டாட்டங்கள் தை, சித்திரை மாதங்களில் நடைபெறும் கோயில்
திருவிழாக்களில் கொண்டாடப்படுவது உண்டு. தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்துக்கென
தனித்தனிக் கலைகள் வளர்ந்தன. அதில் நாட்டுப்புறப் பாடல்களும் முக்கிய இடம்பிடித்தன.
- தாலாட்டுப் பாடல்கள் - அம்மானைப் பாடல்கள் - மணமக்களை வாழ்த்தும் பாடல்கள் - பொங்கல் வைக்கும்பொழுது பாடும் பாடல்கள் - ஒப்பாரிப் பாடல்கள்
என வகைவகையாகப்
பொருத்தமான பாடல்களை ஒவ்வொரு செயலுக்கும் நாட்டுப்புற மூதாட்டிகளும், பெண்களும்
எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல் தொடர்ந்து தங்கள் முன்னோர்களிடமிருந்து பாடும் முறை
இப்போது இல்லாமல் போய்விட்டது.
சங்க காலத்திலேயே தோன்றியது தெருக் கூத்தாகும்.
கூத்தில் ஆட்டத்துக்கேற்பப்
பாட்டு பாடினர். பாட்டு தொடர் பாட்டானது. அதன்பின் கதைப் பாட்டானது. கதைப் பாட்டு
காட்சிப் பொருளாகி நாட்டியம், நாடகம் எனப் பிறந்தது.
கூத்தும், கானமும் இணைந்ததுதான் தெருக்கூத்து.
நாட்டுப்புறப் பாடல்களும்,
தெருக்கூத்தும் தமிழ்நாட்டுக் கலைகளின் ஆதியும் அந்தமும் ஆகும். இதை தொகுசொல்
கோடியர் (அகம் 111) என்று அகநானூறு கூறுகிறது.
உள்நாடு என்ற ஒன்றுபட்ட வட, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்
தெருக்கூத்து கதைகள் பாரதக் கதைகளாக இருந்தன.
சில இடங்களில் இராமாயணக் கதைகளும்
நடத்தப்பட்டன. பல்லவர் காலத்திலேயே இந்தத் தெருக்கூத்துகள் காஞ்சி நகரில் சிறப்பாக
நடந்தேறின. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி கிராமத்தில் எட்டு ஏக்கர் நிலத்தை
ஒதுக்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை இம்மாதிரியான தெருக்கூத்துகளுக்கு மானியமாக
வழங்கி வருகின்றனர்.
- தெற்கத்திக் கூத்து என்பது தென் ஆற்காடு, புதுவை போன்ற பகுதிகளில்
ஆடப்படுவதாகும். - வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆடப்படுவது வடக்கத்திக்
கூத்தாகும்.
இந்தக் கூத்துகளில்
- மெட்டு வகை - உடையலங்காரம் - முடியலங்காரம் - கூத்து
கதை
ஆகியவைகளைக் கொண்டு தெற்கத்தி கூத்து, வடக்கத்தி கூத்து என வகைப்படுத்தப்பட்டது.
- விராட பருவம் - பாஞ்சாலி சபதம் - கர்ணன் - பவளக்கொடி - ஆரவள்ளி - கண்ணன் பிறப்பு - இரணியன் பிரகலாதன் - கட்டபொம்மன் கதை
போன்ற கதைகள் இந்தப் பாவைக் கூத்தில் இடம்பெற்றன.
ஒயிலாட்டம் தமிழர் கலைகளில் சிறப்பான இடம்பெற்ற ஒன்றாகும். ஒயிலாட்டத்துக்கு
எட்டுப் பேர் இருந்தால் விறுவிறுப்பாக இருக்கும். முதல் ஆட்டத்தைத் தொடங்கி வைப்பவரே
பாடுவார். பின் பாட்டை ஒருவர் பாடுவார். கச்சை கட்டிக்கொண்டு கைகளை பாவ்லா போட்டு
ஆட்டம் தொடங்கும். இவ்வாட்டத்தை ஆண்களே அதிகமாக ஆடியுள்ளனர். அண்ணாமலை செட்டியாரின்
காவடிச்சிந்து கவிதைக்கு ஏற்றவாறு இந்த ஆட்டம் இருக்கும்.
போன்ற கொங்கு
நாட்டு வட்டாரத்தில் மதுரையை ஒட்டிய கிராமப்புறங்களில் சிறப்புற நடைபெற்று வந்தன.
ஒயிலாட்டத்துக்குப் பயிற்சி கொடுப்பதற்காகவே இப் பகுதிகளில் வாத்தியார்கள் இருந்தனர்.
"கணியான் கூத்து" எனும் கலையில் ஆட்டத்துக்கு ஏழு பேர் இடம்பெறுவர். இதில்
தலைமையேற்பவர் ஒரு பாடகர். அவர் புலவர் அல்லது அன்னாவி என்று அழைக்கப்படுவார். பின்
பாட்டுக்கு ஒருவர் ஜால்ரா, ஒருவர் ஆட்டக்காரர்கள் இருவரும் பெண் வேடமிட்டு ஆடுவர்.
கணியான் கூத்து தெய்வத்தின் எதிரிலும் ஆடுவது உண்டு. சுடலைமாடன் கோயில் கொடையில்
இந்தக் கணியான் கூத்து இடம்பெறும்.
இதேபோன்று, "உடுக்கைக் கூத்து" என்பது ஒருவரே உடுக்கை அடித்துக்கொண்டு
பாடுவதாகும், அல்லது ஓர் ஆணும் பெண்ணும் உடுக்கை அடித்துக்கொண்டு பாடுவது. திருச்சி,
கரூர் மாவட்டங்களில் காத்தவராயன் கதையை உடுக்கை அடித்துப் பாடுவது உண்டு.
கணியான்
கூத்து குறிப்பாக
- கன்னியாகுமரி - திருநெல்வேலி - தூத்துக்குடி - விருதுநகர்
மாவட்டத்தின் சில பகுதிகளில் நடைபெறுகின்றன.
இரவு மூன்று மணிவரை கூட இந்தக் கூத்து
நடைபெறும்.
- வில்லிசை - தாரை ஊதுதல் - கோலாட்டம் - பின்னல் கோலாட்டம் - தப்பட்டை அடித்தல் - நையாண்டி மேளம் - கும்மி - ஒயில் கும்மி - பொய்க்கால் குதிரை என்ற புரவி ஆட்டம் - மார்கழி மாதத்தில் நடத்தப்படும் அரையர் நடனம்
- புதுவையில் நடக்கும் பொடிக்கலி ஆட்டம் - தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பாகவத மேளா, குரவைக் கூத்து - மதுரை உருமி மேளம் - திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடக்கும் காலைக் கூத்து - மயிலாட்டம் - நொண்டிச்
சிந்து - மோடியாட்டம் - சிலம்பம்
போன்றவை பழந்தமிழர்களின் கலைகளாகும்.
- குமரி மாவட்டத்தில் வேம்படி மாடன் கதை - அகஸ்தீஸ்வரம் பகுதியில் நடக்கும் கூளம்
கொண்டான் கதை - மணக்குடியில் நடக்கும் வெங்கல்ராசன் கதை - சேர்வைக்காரன் கதை - வெள்ளைக்காரன் கதை - வீராச்சியம்மாள் கதை
போன்றவை கொண்டாடப்பட்டன.
தென் தமிழகத்தில்
கூத்துகள்
- முத்துப்பட்டன் கதை - கட்டபொம்மன் கதை - பேச்சியம்மன் கதை - பூச்சியம்மன் கதை - கான் சாகிப் - பகவதியம்மன்
- மாதா, அந்தோணியார்,
குட்டியாண்டவர், ஏழு கன்னியர் கதைகள் - ஐலசா இராகத்தில் படகு ஓட்டத்தில் பாடும் மீனவப்
பாடல்கள் - கரவலா பாட்டு - கப்பல் பாட்டு - கோலப் பாட்டு - வேளம்
போன்றவை தமிழ்க்
கலைகளாகச் சிறப்புற்றிருந்தன.
நமது நாட்டுப்புறக் கலைகள் பற்றிய தரவுகளை இவ்வாறு பலவகைப்படுத்தலாம்.
தணிகை
மலையிலிருந்து தென் கடல் குமரி வரை பரந்த தமிழகத்தில் வட்டாரத்துக்கேற்ப இந்தக்
கலைகள் இருந்தன. இந்தக் கலைகளை வளர்த்த பல கலைவாணர்கள் இப்போது நம் நினைவில் இல்லை.
அவர்கள் எல்லாம் இந்தக் கலையை நம்பி ஏழ்மையில் வாடினார்கள்.
தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் அந்தந்த ஊர் மண் மணத்தைச்
சொல்கிற இயற்கையின் அருட்கொடைகளாக அமைந்தன. அந்தக் கலைகள் மறையக் கூடாது. சாகக்
கூடாது. இவை நம்முடைய கலாசாரத்தின் ஆணி வேர்களாகும்.
சில ஆர்வலர்கள் கலை இலக்கிய இரவு மேடைகள் அமைத்து, நாட்டுப்புறக் கலைகளை
நடத்தி வருவது ஒரு முனையில் வரவேற்பைப் பெற்று வருகிறது. எளிய, எந்த ஆர்ப்பாட்டமும்
இல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய கிராமியக் கலைஞர்கள் இன்றைக்கும் நம்மிடையே
இருக்கின்றனர். அவர்களின் கலைத் திறமைகள், நாட்டுப்புறப் பாடல்களின் இசை வண்ணம்
இன்றும் குடத்திலிட்ட விளக்காக உள்ளது.
இக்கலைகளுக்குரிய ஊக்குவிப்புகள் இருக்க வேண்டும். இவற்றை எப்படிப்
பாதுகாக்கப் போகிறோம் என்பதற்கான காரண, காரியங்களை அறிய வேண்டிய நிலை இருக்கிறது.
"நம் வீட்டுச் சாளரத்தை திறந்துவைத்து வெளிக்காற்று வர அனுமதிக்கலாம். ஆனால், அந்தக்
காற்றே வீட்டில் உள்ள பொருள்களைப் புயல்போல் அடித்து கீழே தள்ளுகிற நிகழ்வாக
இருந்துவிடக் கூடாது".