சிறியேனின் அறிமுகம் - க்ருஷ்ணகுமார்

495 views
Skip to first unread message

krishnakumar sharma

unread,
Sep 24, 2014, 4:22:04 PM9/24/14
to minT...@googlegroups.com
இந்த மடலாடற்குழுவில் சிறியேன் ஓரிரு தினங்களாகப் பங்கு கொண்டு வருகிறேன். சிறியேன் மலைகளால் சூழப்பட்டுள்ள சேலம் ஜில்லாவில் பிறந்து கல்வி கற்று உத்யோக நிமித்தமாக முப்பது வருஷங்கள் முன்னதாக தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து ஹிந்துஸ்தானத்தின் எல்லைப்பகுதிகளில் பணி செய்து வருகிறேன்.  அதில் ஆறு வருஷ காலம் ஜம்மு காஷ்மீர மாகாணத்தில் பணி புரிந்ததும் அடக்கம்.  ஐந்தாறு வருஷங்கள் ராஜதானி தில்லியில் பணி புரிந்ததும் அடக்கம். லே, ஸ்ரீநகர்,ஜம்மு ப்ராந்தியம் என மூன்று ப்ராந்தியங்களிலும் பணி செய்திருக்கிறேன்.  பணி ராணுவத்தில் அல்ல.  சிவிலியனாக.

இது மாதிரி பணியில் லாப நஷ்டங்கள் உண்டு.  தமிழ் மற்றும் ஆங்க்லம் மட்டிலும் அறிந்த எனக்கு ஹிந்தி, உர்தூ, பஞ்சாபி, டோக்ரி போன்ற பாஷைகளில் சம்பாஷணம் செய்ய வேண்டிய மஜ்பூரி ( வேறு வழியின்மை) இருந்திருக்கிறது.  பல இடங்களில் குடும்பத்துடன் இருக்க வசதி வாய்ப்புகள் இருந்ததில்லை. 

தினசரி வாழ்க்கையில் புழங்கிய மொழிகளில் ஹிந்தி (ஹிந்துஸ்தானி / உர்தூ), ஆங்க்லம், பஞ்சாபி, தமிழ் என்ற படிக்கு நான் அதிகமாக குறைவாகப் புழங்கிய மொழிகள்.  வீட்டில் ஓரிரு நிமிஷங்கள் தொலைபேசியில் பேசுவது தான் தமிழ்.  பின்னர் எங்கள் குலதெய்வம் பழனி முருகனுடன் உரையாட எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய திருப்புகழமுதம் ஓதுதல். வைணவச் சுடராழி ஸ்ரீமான் டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களுடைய மற்றும் பல சான்றோர்களுடைய காலக்ஷேபங்கள் கேட்டல். இவ்வளவே தமிழுடனான தொடர்பு.  சஞ்சிகைகள் வாசித்தல், தொலைக்காட்சி அக்கப்போர் இவையெல்லாம் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்ற நிலை. பல இடங்களில் ஆங்க்ல தினசரி பேப்பர்கள் கூட நித்யம் வாசிக்க முடியாத நிலை இருந்திருக்கிறது.

இதில் ஒரு ப்ரச்சினை ஹிந்தி, ஆங்க்லம், பஞ்சாபி, தமிழ் என எந்த மொழி பேச விழைந்தாலும் அழையா விருந்தாளியாக மற்ற மொழிகள் போட்டி போட்டு நுழைந்து விடுதல்.  மற்ற மொழியினருக்கும் இந்த ப்ரச்சினை உண்டு. இந்த மொழிகள் எப்படி எங்கள் வாழ்வில் எந்த அளவு எப்போது இணைந்தது என்பது முருகனுக்குத் தான் வெளிச்சம். இப்படி மாற்று மொழிகள் எம் பேச்சு வழக்கில் கலந்துள்ளது என்ற ப்ரக்ஞை கூட இருந்ததில்லை சிறியேனுக்கு.  . இரண்டு மூன்று வருஷங்கள் முன்னர் இணையத்தில் புழங்கும் வரை. 

காஷ்மீரத்தில் மிகக் கொடூரமான தனிமையில் இருந்த போது தனிமையிலிருந்து ஆசுவாசம் பெற இணையத்தில் எழுத ஆரம்பித்த போது தான் என் மொழி கலப்பு மொழி என்ற ப்ரக்ஞையே வந்தது. சில அன்பர்கள் மணிப்ரவாளம் என்று ச்லாகித்தனர் (என் மொழிநடையில் உர்தூவும் கலந்திருந்த போதிலும் கூட). சில அன்பர்கள் மொழி நடையை எள்ளல் செய்துள்ளனர். சிலர் வசவிட்டுள்ளனர். சிலர் அறிவுரை சொல்லியிருக்கின்றனர். யார் என்ன சொன்னாலும் என் ஸ்வயம் ஸ்வயம் தானே.

நான் வலிந்து பரிச்ரமப்பட்டு எழுதினால் கலப்பில்லாத தூய தமிழில் நிச்சயம் எழுத முடியும். தூய தமிழில் எழுத ப்ரயாசித்தும் உள்ளேன். வலிந்து தூய தமிழில் எழுத கால அவகாசம் எடுக்கிறது என்பது ஒருபுறம் மற்றொரு புறம் கவனமெல்லாம் தூய தமிழில் எழுத வேண்டும் என்பதிலேயே குவிந்து விடுவதால் எழுத விழையும் விஷயகாம்பீர்யம் குறைந்து விடுகிறது என்பது மறுபுறம். ஒவ்வொரு முறையும் வலிந்து எழுத இயலவில்லை என்பதைப் புரிந்து கொண்டதும் விட்டு விட்டேன்.  எழுத விழையும் விஷயம் சார்ந்தும் மொழிநடையின் ப்ரபாவத்தில் வேறுபாடுகள் இருப்பது எழுத எழுத புரிந்தது. கிட்டத்தட்ட மூன்று வருஷங்கள் எழுதி எழுதிப் பழகிய பின்னரே மொழிநடை ஒரு நிலையையாவது எட்டியது என்று நான் சொன்னால் மிகையாகாது.

இப்போதும் எந்த மொழி பேசினாலும் சரி மற்ற மொழிக்கலப்பில்லாமல் இருக்காது என்பது காமடியா? ட்ராஜடியா? தெரியவில்லை.

ஒரு வருஷம் முன்னர் காஷ்மீரத்திலிருந்து புலம் பெயர்ந்து (முருகா!!!!) ராஜதானி தில்லியின் புறநகர்ப்பகுதி வந்த பின்னர் மனைவியுடன் திரும்ப குடும்பம் ஒன்றிணைந்து வாழ ஆரம்பித்த பின்னரும் தலை வலி போய் திருகு வலி வந்தது மாதிரி இந்த இணையத்தில் எழுதும் பழக்கம் ஒட்டிக்கொண்டு விட்டது. ஒரே மகன் மதறாஸில் பொறியியல் கல்லூரியில் வாசித்து வருகிறான்.  ஆரம்பத்தில் காலேஜில் ஆலு (உருளைக்கிழங்கு) பிண்டி (வெண்டைக்காய்) சப்ஜி ( காய்கறி) என்றெல்லாம் தமிழில் பேசி காலேஜில் பகடி செய்யப்பட்ட பின்........... புழங்கிப் புழங்கி..........இப்போதெல்லாம் லேடஸ்ட் காலேஜ் பரிபாஷைகளான *கலாய்த்தல்* என்பதைப் பற்றியெல்லாம் தொலைபேசியில் எங்களுக்கு க்ளாஸ் எடுக்கிறான். நாங்கள் கற்றதும் பெற்றதும் இழந்ததும் அனுபவித்ததும் நிறைய.

தமிழ் ஹிந்து தளம் மற்றும் திண்ணை தளத்தில் வ்யாசங்கள் பதிவு செய்திருக்கிறேன்.

மேற்சொன்னவை சிறியேனைப் பற்றி.

நமது குழுமம் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

இங்கு விவாதங்கள் ஒரு புறம் பெருமை மிக விஷய காம்பீர்யத்துடன் இருக்கிறது.
மறுபுறம் விஷயத்தை விட்டு விட்டு ஜாதிக்காழ்ப்பு சண்டையில்  சென்று விடுகிறது.
பின்னதைத் தவிர்த்து முன்னர் சொன்ன விதத்தில் வாதங்கள் கருத்தாழத்துடன் இருந்தால் பங்கு பெறுபவர்கள் வாசிப்பவர்கள் அனைவருக்கும் பலன் கிட்டுமே. நம் புரிதல்கள் மேம்படுமே.

மிகவும் கடுமையான சூழ்நிலைகளில் எல்லைப்புறத்தில் வெகுகாலமாக உத்யோகத்தில் இருந்த படிக்கு இங்கு நான் வாசித்த பிரிவினை வாதம் சார்ந்த சில பதிவுகள் மிகுந்த மன வருத்தம் அளித்தன. 

எத்தனை முறை விடுமுறைக்கு விண்ணப்பித்து கிட்டாமல் போனது.  எவ்வளவுமுறை விடுமுறை கிடைத்தும் காஷ்மீரத்து கல்லெறி சம்பவங்கள் ........... பனிப்பொழிவு இவற்றால் கிடைத்த விடுமுறைகள் கையை விட்டுப்போயின என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.  இவை என்னைப்போன்ற பல சிவிலியன்களும்  ராணுவ சிப்பாய்களும் அனுபவித்தவை.  அங்கு இருக்கும் பலரும் இன்னமும் அனுபவித்து வருபவை.  நாங்களெல்லோரும் வீடு வாசல் விட்டு தொலைதூரத்தில் உத்யோகத்தில் இருப்பது ஒரு புறம் எங்கள் வயிறு வளர்க்கத் தான் என்றாலும் மறுபுறம் தேசத்துக்குச் சேவையும் கூட.  வலுவான ஹிந்துஸ்தானம் உலகில் மிளிர எங்களது சிறு பங்கு என்று நிச்சயம் சொல்வேன். பிரிவினை வாதக் கருத்துக்களை விடுதல் நன்று.

உலக அரங்கில் நம்மை வெகுமானப்படுத்தி மங்கள்யான் கலத்தை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்ற பாரத விக்ஞானிகளுக்கு நம் அனைவரின் பணிவார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.

ஜெய் ஹிந்த்.






Geetha Sambasivam

unread,
Sep 24, 2014, 8:04:35 PM9/24/14
to மின்தமிழ்
ஜெய்ஹிந்த்!

2014-09-24 22:16 GMT+05:30 krishnakumar sharma <vraj...@gmail.com>:
இந்த மடலாடற்குழுவில் சிறியேன் ஓரிரு தினங்களாகப் பங்கு கொண்டு வருகிறேன். சிறியேன் மலைகளால் சூழப்பட்டுள்ள சேலம் ஜில்லாவில் பிறந்து கல்வி கற்று உத்யோக  .


உலக அரங்கில் நம்மை வெகுமானப்படுத்தி மங்கள்யான் கலத்தை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்ற பாரத விக்ஞானிகளுக்கு நம் அனைவரின் பணிவார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.

ஜெய் ஹிந்த்.






--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Sep 24, 2014, 10:31:57 PM9/24/14
to mintamil
உங்க தமிழ் மிக அழகாக உள்ளது...படிக்கையில் சிறுவயதில் படித்த இராஜாஜியின் வியாசர் விருந்து, சக்ரவர்த்தி திருமகன் நடை நினைவுக்கு வருது. உங்கள் திண்ணை கட்டுரைகளின் சுட்டி இருந்தால் கொடுங்க
--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

N. Ganesan

unread,
Sep 24, 2014, 10:35:23 PM9/24/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
On Wednesday, September 24, 2014 1:22:04 PM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
இந்த மடலாடற்குழுவில் சிறியேன் ஓரிரு தினங்களாகப் பங்கு கொண்டு வருகிறேன். சிறியேன் மலைகளால் சூழப்பட்டுள்ள சேலம் ஜில்லாவில் பிறந்து கல்வி கற்று உத்யோக நிமித்தமாக முப்பது வருஷங்கள் முன்னதாக தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து ஹிந்துஸ்தானத்தின் எல்லைப்பகுதிகளில் பணி செய்து வருகிறேன்.  அதில் ஆறு வருஷ காலம் ஜம்மு காஷ்மீர மாகாணத்தில் பணி புரிந்ததும் அடக்கம்.  ஐந்தாறு வருஷங்கள் ராஜதானி தில்லியில் பணி புரிந்ததும் அடக்கம். லே, ஸ்ரீநகர்,ஜம்மு ப்ராந்தியம் என மூன்று ப்ராந்தியங்களிலும் பணி செய்திருக்கிறேன்.  பணி ராணுவத்தில் அல்ல.  சிவிலியனாக.


கொங்குநாட்டுக்காரரா தாங்கள்! வாழ்க. பலர் இங்கிருக்கிறோம். உங்கள் நடையில் எழுதுங்கள்.

பழனியில் ஸ்ரீலஸ்ரீ சாது சாமிகள் திருமடம் சென்றிருக்கிறீர்களா? விஞ்ச் ஸ்டேசனுக்கு எதிரே 
இருக்கும். சாது சாமிகள் ஆணையிட்டு என்றன் தாத்தா-பாட்டி மலைக்கோயில் எடுத்த
சேரமான் கட்டிய 18-ஆம் படி சேரவினாயகர் கோவிலைக் கட்டினார்கள். சேரன் குதிரையில்
ஆரோகணிக்கும் சிற்பம் அங்கும், மலையாண்டியின் கருவறையிலும் இருக்கும். பார்க்கலாம்.
நாதவிந்து கலாதி நமோநம - திருப்புகழில் இந்தவரலாற்றைச் சொல்லியுள்ளார்.
சாதுசுவாமிகளால் செய்த திருப்பணிக்காக எனக்கு சேரன் வைத்த கணபதியின் பெயர்.
காந்தி வந்தபோதும், மலைக்கோவிலுக்கு படிவெட்டிய மங்கள கவுண்டர் அவர்கள்
தக்கார் காலத்திலுருந்து பலர் தற்காலம் வரை எங்கள் உறவினர்கள் பலர் பழனிக்கு 
தொண்டாற்றியுளர். அண்மையில் எஸ். வி. பாலசுப்ரமணியம். சங்கம்பாளையம் (ARC Parcel Service etc.,)

திருப்புகழ் படித்தபோது - அத் திருப்புகழ் தலங்களை வரிசையிடும் முறையாலும் -
மாணிக்கவாசகருக்கு அருள் புரிந்த கோகழிக் குருமூர்த்தியை அவர் தரிசித்து
ஞானம் பெற்ற ஊர் தெரிகிறது. பின்னர் அரசியல் காரளங்களால் - சோழர் எழுச்சியால் -
தங்கள் மந்திரிக்கு மெமோரியல் கோவில் பாண்டிநாட்டிலே புதிதாக பாண்ட்யராஜாமார்
கட்டியெழுப்பினர். அந்த மெமோரியல் டெம்ப்பிள் தான் ஆவுடையார்கோயில்.
சில கருத்துக்களை சொல்லியுள்ளேன். இந்த முடிவுக்கு முக்கிய ஆதாரமான
பேணுபெருந்துறை (மாணிக்கவாசகர் அவ்வாறே பாடினதும் உண்டு) திருப்புகழ்களை
குறிப்பிட்டுள்ளேன்:

மதுரை சோமு:

எம். எஸ். எப்பவும் பாதி பாட்டுத்தான் பாடுவார்:

விஜய் சிவா முழுப்பாட்டும் பாடி இருக்கிறார் என ஞாபகம்.
நீஙகளோ, மற்றும் நண்பர்களோ அளித்தால் நன்றி.

ஜெய் ஹிந்த்!
நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Sep 24, 2014, 11:49:42 PM9/24/14
to மின்தமிழ்

2014-09-25 8:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொங்குநாட்டுக்காரரா தாங்கள்! வாழ்க. பலர் இங்கிருக்கிறோம்.

கொங்கு
​ நாடு பல நிலப்பரப்புகளைத் தன்னகத்தே கொண்டு நால்வகை வர்ணங்களை அடிப்படையாகக் கொள்ளாமல் இடங்கை வலங்கைப் பிரிவுகளாக அவர்களின் குமுகத்தை அமைத்துக்கொண்டவர்கள்.  அவர்கள் வாழ்வியல் மரபில் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் வள்ளுவர்களுக்கு மிக முக்கியமான இடம் இருந்தது.  அந்தணர்கல் கல்வியில் சிறந்த மஹாஜனங்களாகக் கருதப்பட்டு அவர்களை ஆலோசகர்களாக நியமித்துக்கொண்டார்கள்

மங்களகவுண்டரின் தோற்றம் இன்றும் நினைவில் இருக்கிறது.  சேர மன்னர்களுக்குப்பின் பழனி விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த நாய்க்கர்களின் கட்டுப்பாடில் வந்தது.  பழனியின் பழம்பெரும் ஆலயம் பெரிய நாயகி அம்மன் கோவில்.  ஆயக்குடி ஜமீந்தார் மலைக்கோவிலை உருவாக்கி தரைத்தளத்தில் திருஆவினன்குடியில் இருந்த முருகனை மலையேற்றினர். இன்றும் முத்ச்ல் ப்ச்ச்ல்குடம் ஆயக்குடியில் இருந்தே வரும்

முருகனுக்கு வழிபடும் பக்தர்கள் பெரும்பாலும் தெற்கு கொங்குப் பாகுதியைச் சேர்ந்தவர்கள்.  அவர்களின் வசதிக்காகப் பல நாட்டுக்கவுண்டர்கள் மடங்களை ஏற்படுத்தி கோவிலுக்கு பல தானங்களையும் கொடைகளையும் நல்கினர்

கவுண்டர்களுக்கு அடுத்து பழனி முருகனுக்கு ஆதரவு கொடுத்த பிரிவினர் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள்.  தைப்பூசம் அன்று பழனியில் கூடியே அவர்கள் லாபக் கணக்கு பார்த்து லாபத்தில் ஒரு பகுதியை இறைவனுக்கு அளைப்பார்கள்

காங்லிரஸ் ஆட்சிக்கு வரும்வரை பழனிக்கோவிலில் அந்தணர்கள் பூஜை செய்ததில்லை.  பண்டாரங்கள் மட்டுமே பூஜை செய்தனர்.  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் பழனிக் கோவில் வந்ததும் கொங்கு நாட்டுக்காரர்களே பழனிக்கோவிலில் ஐயர்கள் பூஜை செய்யும் ஆகம முறையை அறிமுகப்படுத்தினர்.

அசடுமுசுடுகசடு​

N. Kannan

unread,
Sep 25, 2014, 12:56:08 AM9/25/14
to mint...@googlegroups.com

On Sep 25, 2014 10:31 AM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
> உங்க தமிழ் மிக அழகாக உள்ளது...

நானும் அவ்வாறே கருதுகிறேன். சுவாரசியமான நடை. கலப்பற்ற தனித்தமிழ் என்றும் கிடையாது. புழக்கத்திலிருக்கும் தமிழைக் குறைவில்லாமல் சொன்னால் போதும். மணிப்பவள நடை வாழும் இடத்தையொட்டி இயல்பாக வந்துவிடும். அதுவும் ஒரு அழகுதான். தமிழை அது வளப்படுத்தினால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். மின் தமிழில் ஜாதி வேண்டாமென்று மூச்சுக்கொரு முறை சொல்லியாகிவிட்டது. சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். இனம் கண்டு ஒதுங்கி வேண்டியதுதான். வேறு வழியில்லை. பள்ளிப் பிள்ளைகளா? தண்டனை வழங்க? உங்கள் எல்லை வாழ்வு பற்றி, ஜோசப் பற்றியெல்லாம் எழுதுங்கள்.

நா.கண்ணன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 25, 2014, 1:21:15 AM9/25/14
to மின்தமிழ்
தங்கள் வரவு நல்வரவாகுக!..தங்கள் தமிழ் நடையிலேயே எழுதுங்கள்!.. தங்கள் மூலம் பல செய்திகளை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்!...திரு.செல்வன் கூறியதைப் போல், தங்கள் கட்டுரைகளின் சுட்டிகளைத் தரக் கோருகிறேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-25 10:26 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:

krishnakumar sharma

unread,
Sep 25, 2014, 12:07:36 PM9/25/14
to minT...@googlegroups.com
அன்பார்ந்த சஹோதர சஹோதரிகள் அனைவருக்கும் எமது பணிவார்ந்த வணக்கங்கள்.

அன்பு சஹோதரி ஸ்ரீமதி சுபா அவர்கள் எமது பதிவுகளில் மாற்று பாஷைகள் வலிந்து வருவதாகக் கருத்துப்பகிர்ந்திருந்தார்கள்.  அந்த கருத்திலிருந்து மட்டும் மாறுபடுகிறேன்.  நான் எழுதுவது எனது இயல்பான நடை.  என் வாழ்வில் ஹிந்துஸ்தானத்தின் மற்ற பாஷைகள் பேசும் சஹோதர சஹோதரிகளுடன் புழங்கி நான் அவர்களுக்கு கொடுத்தும் அவர்களிடமிருந்து நான் எடுத்துக்கொண்டதுமாய்.

என்னில் லயமானது அவர்களது பாஷைகள். 

நான் அவர்களுடன் பகிர்ந்து கொண்டது பல தமிழ்ச் சொற்களும். அமுதினுமினிய திருப்புகழும்.  எந்த பாஷையைச் சார்ந்தவர்களாயினும் சரி திருப்புகழமுதத்துக்கு மயங்காதவரே இல்லை என்ற படிக்கு என் அனுபவம்.  சொக்க வைப்பது வள்ளிக்கு வாய்த்த......ஆண்மையும் அழகும் உடைய பெருமானா...... அல்லது சந்தச் சுவைமிகும் அமுதினுமினிய திருப்புகழா என்பது முருகனுக்கே வெளிச்சம்.

நான் நமது மடலாடற்குழுவில் பங்கு பெறும் சான்றோர்களிடம் பலவும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என்னாலியன்றதைப் பகிர்ந்து கொள்ளவும் விழைவேன்.

நான் எழுத்தாளன் அல்லன்.  ஆயினும் நான் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர். அவர் மறைந்த சமயத்தில் .......திண்ணை தளத்தில் ........ எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் சமர்ப்பித்திருந்த "மஹாத்மா காந்தியின் மரணம்" என்ற வ்யாசத்திற்கு எதிர்வினையாக இரண்டு பாகங்களாலான எதிர்வினையான எனது வ்யாசம்.............

 "ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது - மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை"

சமர்ப்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து அன்பர் அவர்கள் தனது மற்றொரு படைப்பான *சீதாயணம்* என்ற புனைவில் சொல்லப்பட்ட நிகழ்வுகளே மெய்யான ராமாயணம் என்றும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களால் பொய்க்கதையாகிப்போனது என்று பகிர்ந்த கருத்தை மறுக்குமுகமாக  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூலின் படைப்பாய்வுகளை ஆய்வுமுறையின் பாற்பட்டு ஆய்வு செய்த  ஸ்ரீ ஹெர்மன் ஜார்ஜ் ஜேக்கபி,  ஸ்ரீ ஆர்த்தர் மேக்டொனல், ஸ்ரீ ஜே.எல்.ப்ராக்கிங்க்டன் போன்ற இண்டாலஜி ஆய்வாளர்களின் கருத்தையும் பரோடா க்ரிடிகல் எடிஷன் குழுவினரின் கருத்தையும்  முன்வைத்திருந்தேன். (அன்பர் அவர்கள் வால்மீகி ராமாயணம் பற்றிப் பகர்ந்த அபுரிதல்கள் ....... வால்மீகி ராமாயணம் பற்றிய பொதுவிலான அபுரிதல்கள்....... இவற்றை இன்னொரு வ்யாசத்தில் எழுதியிருக்கிறேன்.  அந்த வ்யாசத் தொடரில் கசப்புணர்வுகள் ஆங்காங்கு தென்படுவதால் அவற்றைக் களைந்து அந்தத் தொடரை சமர்ப்பிக்க இருக்கிறேன்.)

இவையனைத்தும்

http://puthu.thinnai.com/?s=%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

என்ற உரலில் காணக்கிட்டும்.

முதல் வ்யாசம் திண்ணை தளத்தில் பெருமளவு விவாதிக்கப்பட்ட வ்யாசம்.  478 உத்தரங்கள் இந்த வ்யாசத்துக்குப் பதிவானது.

ஆனால் இந்த வ்யாசங்களை வாசிக்கு முன்னர்

காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை

என்ற எனது வ்யாசம் தமிழ் ஹிந்து தளத்தில் நான் பதிவு செய்திருந்தேன். அதை முதலில் வாசிக்குமாறு அன்பு சஹோதர சஹோதரிகளை விக்ஞாபித்துக்கொள்கிறேன்.  நமது மடலாடற்குழுவில் தற்போது நிகழும் விவாதங்களில் கருத்துப் பகிர்வுகள் மட்டுமீறிய கசப்புணர்வுடன் நிகழ்கிறது.  என்னுடைய மேற்கண்ட வ்யாசத்தில் நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் எத்தகையவை.  அறவே கசப்புணர்வில்லாமல் அதே சமயம் சொல்ல விழைந்த விஷயத்தை கருத்தாழத்துடன் சொல்லலாம் என்பதற்கு சிறியேன் எடுத்த ........ பெருமளவு வரவேற்கப்பட்ட முயற்சி. 

http://www.tamilhindu.com/2012/06/kanchi-mamunivar-rebuttal-to-critics/

தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான எனது மற்றைய வ்யாசங்கள் கீழ்க்கண்ட உரலில் :-

ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் அவர்கள் ஹிந்துஸ்தானத்து எல்லைக்கோட்டைத் தாண்டி நமது மற்றும் அவருக்குமான பொது மூதாதையர்கள் கல்வி வளர்த்த....... நீலம் பள்ளத்தாக்கில் இருக்கும் .......சாரதா பீடம் சென்ற வரலாறு.

சனாதன கோஸ்வாமிகள் மற்றும் ரூப கோஸ்வாமிகள் (சஹோதரர்கள்) -- இருவருக்குமிடையே நிகழ்ந்த சம்வாதம் - குழப்பம்--- குழப்பத்தெளிவு அளித்த கண்ணனின் கருணையைப் பேசும் ---- கருநாகமொத்த குழல்.

ஹிந்துஸ்தானத்து முஸல்மாணிய சஹோதரர்கள் மோதி சர்க்கார் பற்றி கருத்துக்கள் பகிர்ந்து....இண்டியா டி.வி. தொலைக்காட்சியில் பங்கு பெற்ற விவாதக்களமான ...... ஆப் கீ அதாலத்தில் ....... விவாதிக்கப்பட்ட விஷயங்களின் மொழியாக்கம்........ மோதி சர்க்கார்----முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள் அபிலாஷைகள்.

ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள் என்ற எனது கற்றுக்குட்டி வ்யாசம் (உத்தரமாகப் பகிர்ந்து வ்யாசமாகப் பதிவானது :-(   )

http://www.tamilhindu.com/author/krishnakumar/


Dev Raj

unread,
Sep 25, 2014, 12:54:18 PM9/25/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
ஒரே தொகுப்பாகத் தந்தமைக்கு நன்றி, ஐயா.
தமிழ் ஹிந்து தளத்தில் வெளியானவை
பரவலாகக் கவனம் பெற்றவை என நினைக்கிறேன்

தேவ்

krishnakumar sharma

unread,
Sep 25, 2014, 12:57:08 PM9/25/14
to minT...@googlegroups.com
அன்பின் ஸ்ரீ கணேசன், ஸ்ரீ அ.மு ஐயா,

தங்கள் உத்தரங்கள் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது என்றால் மிகையாகாது.

சேலம், பழனி என்று அங்கேயே அழைத்துச் சென்று விட்டது தங்கள் குறிப்புகள்.

பழனி பழனி என்று கூறு அதில் பரவசம் பெருகுது பாரு
என்றும் விழாக்கோலம் கொண்டது பழனி.............. கேபீஎஸ் அம்மாவின் பாட்டு நினைவுக்கு வருகிறது. என் பாட்டனாருடன் பால் காவடி பன்னீர்க்காவடி என்று காவடி எடுத்த காலத்தில் நாங்கள் தங்கியது கொழுமம் சத்திரம். இப்போதெல்லாம் காலையில் சென்று மாலையில் திரும்பும்படிக்கு ப்ரயாணங்கள். ஒரு முறை சேலத்திலிருந்து பழனிப்பாத யாத்ரையும் சென்றிருக்கிறேன்.  தாங்கள் சொல்லும் தங்கள் முன்னோர் கட்டிய விநாயகர் கோவில் கண்களில் நிற்கிறது.

பழனி சென்று விட்டு சேலம் திரும்பிய பின் வீட்டில் சமாராதனை செய்யும் போது கொல்லிமலைத் திணையை வாங்கி வீட்டில் உள்ள ஆட்டுக்கல்லில் இரும்புலக்கையால் இடித்துப் புடைத்து பின்னர் செய்யும் திணைப் பாயசம் இப்போது நினைவில் மட்டும் தங்கி இருக்கிறது. இடிக்கும் போது கைவலித்தாலும் சாப்பிடும் போது அந்த திணைப்பாயசத்தின் சுவைக்கு எதுவும் ஈடாகாது. வருத்தமான விஷயம் என் மகனுக்கு திணை என்றால் என்னவென்று கூடத் தெரியாது.

காணொளிகளை முதலில் சாவகாசமாகக் கேழ்க்கிறேன் ஐயா.

திருச்செங்கோட்டு படிவிழாவிற்கு நாங்கள் செல்லும் போது (ஃபெப்ரவரி மாதம்) அங்கு உள்ள கொங்கு வேளாளக் கவுண்டன்மார்கள் தங்களுடைய சத்திரத்தில் படிவிழாவிற்கு வரும் திருப்புகழ் அன்பர்கள் அனைவருக்கும் வயிறார காலையில் சிற்றுண்டி அளிப்பார்கள். சமஷ்டியாக அர்த்தநாரீச்வரர் மற்றும் செங்கோட்டு வேலனின் திவ்யதர்சனத்துக்குப் பிறகு, மதியம் எங்கள் திருப்புகழ் சபையைச் சார்ந்த அன்பர்கள் அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவு வகைகளைப் பகிர்ந்து உண்போம். அதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

ஸ்ரீ செல்வன், ஸ்ரீமதி பார்வதி அம்மை  .......... நீங்கள் கேட்டபடி சுட்டிகளைக் கொடுத்து வ்யாசச் சுருக்கமும் தந்திருக்கிறேன். இயன்றால் தங்களது மேலான கருத்துக்களைப் பகிரவும்.

அன்பின் ஸ்ரீ கண்ணன் ஐயா,

\\  கலப்பற்ற தனித்தமிழ் என்றும் கிடையாது. \\

மாற்றுமொழிக்கலப்பில்லாத தூய தமிழில் எழுதும் அன்பர்களும் இணையத்தில் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சமாவது ஆங்க்ல பாஷைக் கலப்பு இருக்கிறது என்று சொல்லலாம்.  விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் எண்ணிறந்த கணித மற்றும் விக்ஞானச் சொற்களுக்கு செழுமையான தமிழ்ச் சொற்களை தனது விக்ஞான வ்யாசங்களில் பகிர்கிறார். மெச்ச வேண்டிய செயற்பாடு. அன்பர் அவர்கள் கணிதமேதை ஸ்ரீ ராமானுஜம் பற்றி எழுதிய வ்யாசத்தை நான் எனது கணினியில் சேமித்து வைத்திருக்கிறேன். அருமையான வ்யாசம்.  பற்பல கணிதச் சொற்களை தமிழ்ப்படுத்தியிருக்கும் வ்யாசம்.

\\  இனம் கண்டு ஒதுங்கி வேண்டியதுதான். \\

ஒதுங்காமல்.......... அன்பை மட்டிலும்.......... ஒருமுகமாகவாவது பகிர முயல்வது........ ஒதுங்குவதை விட சரியான செயற்பாடு என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.

\\\ உங்கள் எல்லை வாழ்வு பற்றி, ஜோசப் பற்றியெல்லாம் எழுதுங்கள். \\

எல்லை வாழ்வின் பகுதியாக நான் எழுதிய ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் அவர்கள் சாரதா பீடம் சென்ற நிகழ்வு எனது வ்யாசத்தில் பகிரப்பட்டுள்ளது. ஸ்ரீமான் நடராஜன் அவர்கள் எழுதி என்னுடைய சொந்த அனுபவங்களை அதில் சேர்த்தி நான் பகிர்ந்த வ்யாசம். அயர்வு தரும் விஷயங்களும் உண்டு. தற்போது எழுத மிகவும் தயக்கம் உண்டு.  ஒருக்கால் அதையும் தகுந்த சமயத்தில் பகிர்வேன். வைணவச் சுடராழி ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் பற்றி அறிய அவரது இணைய தளமான http://www.dajoseph.com/ த்தை வாசிக்கவும். ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களது காலக்ஷேபங்களை அதே தளத்திலும் ஸ்வாமின் அவர்களது ஃபேஸ்புக் பக்கத்திலும் உள்ள யூட்யூப் உரல்கள் வழியே கேழ்க்கலாம். மேலும் விஜயபாரதம் சஞ்சிகையிலும் கீதாசார்யன் சஞ்சிகையிலும் ஸ்வாமின் அவர்களது வ்யாசங்கள் வாசிக்கலாம். முக்யமாக அக்னிஹோத்ரம் தாதாசாரியார் என்றொரு அன்பர் தாறுமாறாக ஹிந்துமதம் பற்றி எழுப்பிய அவதூறுகளை ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள் தகுந்த தரவுகளுடன் மறுதலித்தது.

அன்புடன்

Pandiyaraja

unread,
Sep 25, 2014, 2:19:26 PM9/25/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
அன்புள்ள திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
தங்கள் இழையை இப்போதுதான் படித்தேன். தங்களின் மொழி நடையைப் பார்க்கும்போது தங்களின் வயது 80-ஐ ஒட்டி இருக்கும் என நினைக்கிறேன். அல்லது 1950-க்குப் பின்னர் தமிழின் வாடையே அடிக்காத இடத்தில் இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஐயா, தாங்கள் வெகுதொலைவு பின்தங்கியிருக்கிறீர்கள் - தமிழ் நடையைப் பொருத்தவரையில். இங்கு வெகுவாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்னும் நீங்கள் வ்யாசத்திலும், ஸ்ரீமான் களிலும் இருக்கிறீர்கள். அவையெல்லாம் இடையில் வந்தவை - வருவிக்கப்படவை. சென்ற இடம் தெரியாமல் தேய்ந்து மறைந்துவிட்டவை. எனவே நீங்கள் வெகுவாக மாறவேண்டும். ஊசிப்போன வடையை முதலில் தூக்கியெறியப் பழகுங்கள். கைகளைத் துடைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். தமிழில் இப்போது வரும் மாத, வார இதழ்களைப் படித்தாலே பாதி மாறிவிடுவீர்கள். நான் மாறமாட்டேன் என்ற வீம்போ, பழமைகளில் வெட்டிப் பெருமையோ இல்லாமல் புதுமை உலகில் நுழைய முயலுங்கள். முதலில் சக்கர வண்டியில் பழகி, பின்னர் சுவரைப் பிடித்து நகர்ந்து, அப்பா மடியிலிருந்து அம்மா மடிக்கு எட்டு எடுத்து ஓடி இடறிவிழும் குழந்தையைத் தூக்கிக்கொஞ்சுவதுபோல் நாங்கள் உம்மைக் கொஞ்சுவோம்.
வாழத்துக்கள்,
ப.பாண்டியராஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 25, 2014, 2:59:05 PM9/25/14
to mintamil

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-09-25 23:49 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புள்ள திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
தங்கள் இழையை இப்போதுதான் படித்தேன். தங்களின் மொழி நடையைப் பார்க்கும்போது தங்களின் வயது 80-ஐ ஒட்டி இருக்கும் என நினைக்கிறேன். அல்லது 1950-க்குப் பின்னர் தமிழின் வாடையே அடிக்காத இடத்தில் இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஐயா, தாங்கள் வெகுதொலைவு பின்தங்கியிருக்கிறீர்கள் - தமிழ் நடையைப் பொருத்தவரையில். இங்கு வெகுவாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்னும் நீங்கள் வ்யாசத்திலும், ஸ்ரீமான் களிலும் இருக்கிறீர்கள். அவையெல்லாம் இடையில் வந்தவை - வருவிக்கப்படவை. சென்ற இடம் தெரியாமல் தேய்ந்து மறைந்துவிட்டவை. எனவே நீங்கள் வெகுவாக மாறவேண்டும். ஊசிப்போன வடையை முதலில் தூக்கியெறியப் பழகுங்கள். கைகளைத் துடைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். தமிழில் இப்போது வரும் மாத, வார இதழ்களைப் படித்தாலே பாதி மாறிவிடுவீர்கள். நான் மாறமாட்டேன் என்ற வீம்போ, பழமைகளில் வெட்டிப் பெருமையோ இல்லாமல் புதுமை உலகில் நுழைய முயலுங்கள். முதலில் சக்கர வண்டியில் பழகி, பின்னர் சுவரைப் பிடித்து நகர்ந்து, அப்பா மடியிலிருந்து அம்மா மடிக்கு எட்டு எடுத்து ஓடி இடறிவிழும் குழந்தையைத் தூக்கிக்கொஞ்சுவதுபோல் நாங்கள் உம்மைக் கொஞ்சுவோம்.

 வழிமொழிகிறேன்.
முயன்றால் எழுத முடியும் என்று திரு கிருஷ்ணகுமார் அவர்களே ஒரு பதிவில் கூறியிருந்தார். அவ்வாறு எழுதினால் பொன் மலர் நாற்றமுறும் என்பது என் எண்ணம்.


On Thursday, September 25, 2014 10:27:08 PM UTC+5:30, க்ருஷ்ணகுமார் wrote:

தங்கள் உத்தரங்கள் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது என்றால் மிகையாகாது.

சேலம், பழனி என்று அங்கேயே அழைத்துச் சென்று விட்டது தங்கள் குறிப்புகள்.

பழனி பழனி என்று கூறு அதில் பரவசம் பெருகுது பாரு
என்றும் விழாக்கோலம் கொண்டது பழனி.............. கேபீஎஸ் அம்மாவின் பாட்டு நினைவுக்கு வருகிறது. என் பாட்டனாருடன் பால் காவடி பன்னீர்க்காவடி என்று காவடி எடுத்த காலத்தில் நாங்கள் தங்கியது கொழுமம் சத்திரம். இப்போதெல்லாம் காலையில் சென்று மாலையில் திரும்பும்படிக்கு ப்ரயாணங்கள். ஒரு முறை சேலத்திலிருந்து பழனிப்பாத யாத்ரையும் சென்றிருக்கிறேன்.  தாங்கள் சொல்லும் தங்கள் முன்னோர் கட்டிய விநாயகர் கோவில் கண்களில் நிற்கிறது.

பழனி சென்று விட்டு சேலம் திரும்பிய பின் வீட்டில் சமாராதனை செய்யும் போது கொல்லிமலைத் திணையை வாங்கி வீட்டில் உள்ள ஆட்டுக்கல்லில் இரும்புலக்கையால் இடித்துப் புடைத்து பின்னர் செய்யும் திணைப் பாயசம் இப்போது நினைவில் மட்டும் தங்கி இருக்கிறது. இடிக்கும் போது கைவலித்தாலும் சாப்பிடும் போது அந்த திணைப்பாயசத்தின் சுவைக்கு எதுவும் ஈடாகாது. வருத்தமான விஷயம் என் மகனுக்கு திணை என்றால் என்னவென்று கூடத் தெரியாது.

காணொளிகளை முதலில் சாவகாசமாகக் கேழ்க்கிறேன் ஐயா.

திருச்செங்கோட்டு படிவிழாவிற்கு நாங்கள் செல்லும் போது (ஃபெப்ரவரி மாதம்) அங்கு உள்ள கொங்கு வேளாளக் கவுண்டன்மார்கள் தங்களுடைய சத்திரத்தில் படிவிழாவிற்கு வரும் திருப்புகழ் அன்பர்கள் அனைவருக்கும் வயிறார காலையில் சிற்றுண்டி அளிப்பார்கள். சமஷ்டியாக அர்த்தநாரீச்வரர் மற்றும் செங்கோட்டு வேலனின் திவ்யதர்சனத்துக்குப் பிறகு, மதியம் எங்கள் திருப்புகழ் சபையைச் சார்ந்த அன்பர்கள் அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவு வகைகளைப் பகிர்ந்து உண்போம். அதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

ஸ்ரீ செல்வன், ஸ்ரீமதி பார்வதி அம்மை  .......... நீங்கள் கேட்டபடி சுட்டிகளைக் கொடுத்து வ்யாசச் சுருக்கமும் தந்திருக்கிறேன். இயன்றால் தங்களது மேலான கருத்துக்களைப் பகிரவும்.

அன்பின் ஸ்ரீ கண்ணன் ஐயா,

\\  கலப்பற்ற தனித்தமிழ் என்றும் கிடையாது. \\

மாற்றுமொழிக்கலப்பில்லாத தூய தமிழில் எழுதும் அன்பர்களும் இணையத்தில் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சமாவது ஆங்க்ல பாஷைக் கலப்பு இருக்கிறது என்று சொல்லலாம்.  விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் எண்ணிறந்த கணித மற்றும் விக்ஞானச் சொற்களுக்கு செழுமையான தமிழ்ச் சொற்களை தனது விக்ஞான வ்யாசங்களில் பகிர்கிறார். மெச்ச வேண்டிய செயற்பாடு. அன்பர் அவர்கள் கணிதமேதை ஸ்ரீ ராமானுஜம் பற்றி எழுதிய வ்யாசத்தை நான் எனது கணினியில் சேமித்து வைத்திருக்கிறேன். அருமையான வ்யாசம்.  பற்பல கணிதச் சொற்களை தமிழ்ப்படுத்தியிருக்கும் வ்யாசம்.

சில சொற்களை விலக்கிப் பார்த்தால் மிக அருமையான தமிழ்நடையாகக் காண்கிறேன். ப்ரயாணம் என்ற சொல் போன்று சொல் முதல் எழுத்து ஒற்றில் ஆரம்பிப்பதைத் தற்போது எங்கும் காணவில்லை.
திரு கிருஷ்ணகுமார் யாரையும் விடவும் சிறப்பான தமிழ்நடையில் எழுத வல்லவராகவே உணர்கிறேன். அவ்வாறே வேண்டுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Suba.T.

unread,
Sep 25, 2014, 4:33:38 PM9/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-25 18:00 GMT+02:00 krishnakumar sharma <vraj...@gmail.com>:
அன்பார்ந்த சஹோதர சஹோதரிகள் அனைவருக்கும் எமது பணிவார்ந்த வணக்கங்கள்.

அன்பு சஹோதரி ஸ்ரீமதி சுபா அவர்கள் எமது பதிவுகளில் மாற்று பாஷைகள் வலிந்து வருவதாகக் கருத்துப்பகிர்ந்திருந்தார்கள்.  அந்த கருத்திலிருந்து மட்டும் மாறுபடுகிறேன்.  நான் எழுதுவது எனது இயல்பான நடை.  என் வாழ்வில் ஹிந்துஸ்தானத்தின் மற்ற பாஷைகள் பேசும் சஹோதர சஹோதரிகளுடன் புழங்கி நான் அவர்களுக்கு கொடுத்தும் அவர்களிடமிருந்து நான் எடுத்துக்கொண்டதுமாய்.

என்னில் லயமானது அவர்களது பாஷைகள். 

நான் அவர்களுடன் பகிர்ந்து கொண்டது பல தமிழ்ச் சொற்களும். அமுதினுமினிய திருப்புகழும்.  எந்த பாஷையைச் சார்ந்தவர்களாயினும் சரி திருப்புகழமுதத்துக்கு மயங்காதவரே இல்லை என்ற படிக்கு என் அனுபவம்.  சொக்க வைப்பது வள்ளிக்கு வாய்த்த......ஆண்மையும் அழகும் உடைய பெருமானா...... அல்லது சந்தச் சுவைமிகும் அமுதினுமினிய திருப்புகழா என்பது முருகனுக்கே வெளிச்சம்.

​அன்பின் திரு.க்ருஷ்ணகுமார்,

நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்து அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக ஜெர்மனியில் வசிக்கின்றேன். உலகின் ஒவ்வொரு மொழியையும் மதிக்க வேண்டும் என்ற கருத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருக்கின்றேன். இதனை நான் சொல்வதற்குக் காரணம் ஒவ்வொரு மொழிக்கும் இருக்கும் தனித்தன்மை என்பது மிக முக்கியமானது. தனி நபர் விருப்பத்திற்காகவும் வசதிக்காகவும் மொழிகளில் மாற்றம் செய்து அதற்கு நாம் காரணம் கொள்வது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று என்பது என் எண்ணம். மலேசிய தமிழ் என்பதும் கேட்க இனிமையாக இருக்கும். பல மலாய், சீன, போர்த்துக்கீஸிய சொற்கள் தமிழ் படுத்தப்பட்ட நிலையிலும் தமிழ் சொற்கள் அதன் இயல்பு மாறிய ஒலியிலும் மலேசியப் பேச்சுத் தமிழில் இடம் பெறுவது வழக்கம். அதே போல இங்கு ஜெர்மனியில் வாழும் தமிழ் மக்கள், அவர் தம் குழந்தைகள் டோய்ச் கலந்த தமிழையே பேசுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவர் வசதிக்காகவும் அவர்கள் வாழ்ந்த சூழல் என்ற நிலைக்காரணத்தினாலும் தமிழை மாற்றி அவரவருக்குத் தக்க வகையில் எழுத வேண்டும் என முடிவெடுத்தால் தமிழ் என்னாவது?

உங்கள் பதிவில் மேலே.. சஹோதரி எனக் குறிப்பிடுகின்றீர்கள். நான் இதுவரை இப்படி வாசித்ததில்லை. சகோதரன், சகோதரி எனத் தான் கேள்விப்பட்டுல்ளேன். இங்கு நீங்கள் பயன்படுத்துவது வலிந்து பயன்படுத்துவது என்பதற்கு ஒரு உதாரணம் எனச் சொல்வேன். ஹிந்துஸ்தானத்தில்.. இது பொதுவான சொல் பயன்பாடு. இதனை தமிழ்படுத்துங்கள் என சொல்வதற்கில்லை. 

திருப்புகழ் அமுதத்தை பற்றி நன்குணர்ந்தவராகத் தங்கள் எழுத்துக்களின் வழி அறிகின்றேன். எனக்கு அவ்வகை திறமையெல்லாம் இல்லை. ஆயினும் திருப்புகழ் அமுதினுள் ஊறிய உங்களுக்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் இலகுவாகத் தெரிய நல்ல வாய்ப்புண்டு என்றே நினைக்கின்றேன்.

விக்ஞானி என்ற சொல்லை நான் பயன்பாட்டில் பார்த்ததில்லை. விஞ்ஞானி என்பதை இப்படிக் குறிப்பிடுகின்றீர்கள். 

முக்கியக் கருத்தாக நாம் இங்கே கவனிக்க வேண்டியது.. 
இங்கு வெளியிடப்படும் பதிவுகளை மாணவர்களும் படித்து கற்றுக் கொள்ள வேண்டும்.. தமது தமிழறிவை மாணவர்கள் இங்கு வெளியிடப்படும் பதிவுகளின் வழியாகவும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இங்குள்ளோருக்கு உண்டு. சொற்கள் மயக்கம் தருவனவாக எழுதப்பட்டால் அது வாசிப்போர் புரிதலுக்கு உதவாது, மாறாக புரிதலில் சிரமத்தையே ஏற்படுத்தும்.

அன்புடன்
சுபா




 

நான் நமது மடலாடற்குழுவில் பங்கு பெறும் சான்றோர்களிடம் பலவும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என்னாலியன்றதைப் பகிர்ந்து கொள்ளவும் விழைவேன்.

நான் எழுத்தாளன் அல்லன்.  ஆயினும் நான் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர். அவர் மறைந்த சமயத்தில் .......திண்ணை தளத்தில் ........ எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் சமர்ப்பித்திருந்த "மஹாத்மா காந்தியின் மரணம்" என்ற வ்யாசத்திற்கு எதிர்வினையாக இரண்டு பாகங்களாலான எதிர்வினையான எனது வ்யாசம்.............

 "ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது - மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை"

சமர்ப்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து அன்பர் அவர்கள் தனது மற்றொரு படைப்பான *சீதாயணம்* என்ற புனைவில் சொல்லப்பட்ட நிகழ்வுகளே மெய்யான ராமாயணம் என்றும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களால் பொய்க்கதையாகிப்போனது என்று பகிர்ந்த கருத்தை மறுக்குமுகமாக  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூலின் படைப்பாய்வுகளை ஆய்வுமுறையின் பாற்பட்டு ஆய்வு செய்த  ஸ்ரீ ஹெர்மன் ஜார்ஜ் ஜேக்கபி,  ஸ்ரீ ஆர்த்தர் மேக்டொனல், ஸ்ரீ ஜே.எல்.ப்ராக்கிங்க்டன் போன்ற இண்டாலஜி ஆய்வாளர்களின் கருத்தையும் பரோடா க்ரிடிகல் எடிஷன் குழுவினரின் கருத்தையும்  முன்வைத்திருந்தேன். (அன்பர் அவர்கள் வால்மீகி ராமாயணம் பற்றிப் பகர்ந்த அபுரிதல்கள் ....... வால்மீகி ராமாயணம் பற்றிய பொதுவிலான அபுரிதல்கள்....... இவற்றை இன்னொரு வ்யாசத்தில் எழுதியிருக்கிறேன்.  அந்த வ்யாசத் தொடரில் கசப்புணர்வுகள் ஆங்காங்கு தென்படுவதால் அவற்றைக் களைந்து அந்தத் தொடரை சமர்ப்பிக்க இருக்கிறேன்.)

இவையனைத்தும்

http://puthu.thinnai.com/?s=%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

என்ற உரலில் காணக்கிட்டும்.

முதல் வ்யாசம் திண்ணை தளத்தில் பெருமளவு விவாதிக்கப்பட்ட வ்யாசம்.  478 உத்தரங்கள் இந்த வ்யாசத்துக்குப் பதிவானது.

ஆனால் இந்த வ்யாசங்களை வாசிக்கு முன்னர்

காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை

என்ற எனது வ்யாசம் தமிழ் ஹிந்து தளத்தில் நான் பதிவு செய்திருந்தேன். அதை முதலில் வாசிக்குமாறு அன்பு சஹோதர சஹோதரிகளை விக்ஞாபித்துக்கொள்கிறேன்.  நமது மடலாடற்குழுவில் தற்போது நிகழும் விவாதங்களில் கருத்துப் பகிர்வுகள் மட்டுமீறிய கசப்புணர்வுடன் நிகழ்கிறது.  என்னுடைய மேற்கண்ட வ்யாசத்தில் நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் எத்தகையவை.  அறவே கசப்புணர்வில்லாமல் அதே சமயம் சொல்ல விழைந்த விஷயத்தை கருத்தாழத்துடன் சொல்லலாம் என்பதற்கு சிறியேன் எடுத்த ........ பெருமளவு வரவேற்கப்பட்ட முயற்சி. 

http://www.tamilhindu.com/2012/06/kanchi-mamunivar-rebuttal-to-critics/

தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான எனது மற்றைய வ்யாசங்கள் கீழ்க்கண்ட உரலில் :-

ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் அவர்கள் ஹிந்துஸ்தானத்து எல்லைக்கோட்டைத் தாண்டி நமது மற்றும் அவருக்குமான பொது மூதாதையர்கள் கல்வி வளர்த்த....... நீலம் பள்ளத்தாக்கில் இருக்கும் .......சாரதா பீடம் சென்ற வரலாறு.

சனாதன கோஸ்வாமிகள் மற்றும் ரூப கோஸ்வாமிகள் (சஹோதரர்கள்) -- இருவருக்குமிடையே நிகழ்ந்த சம்வாதம் - குழப்பம்--- குழப்பத்தெளிவு அளித்த கண்ணனின் கருணையைப் பேசும் ---- கருநாகமொத்த குழல்.

ஹிந்துஸ்தானத்து முஸல்மாணிய சஹோதரர்கள் மோதி சர்க்கார் பற்றி கருத்துக்கள் பகிர்ந்து....இண்டியா டி.வி. தொலைக்காட்சியில் பங்கு பெற்ற விவாதக்களமான ...... ஆப் கீ அதாலத்தில் ....... விவாதிக்கப்பட்ட விஷயங்களின் மொழியாக்கம்........ மோதி சர்க்கார்----முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள் அபிலாஷைகள்.

ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள் என்ற எனது கற்றுக்குட்டி வ்யாசம் (உத்தரமாகப் பகிர்ந்து வ்யாசமாகப் பதிவானது :-(   )

http://www.tamilhindu.com/author/krishnakumar/


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

செல்வன்

unread,
Sep 26, 2014, 12:33:25 AM9/26/14
to mintamil
வணக்கம் கிருஷ்ணகுமார் ஐயா,

தங்கள் தமிழ் இந்து கட்டுரைகளை படித்து வருகிறேன். காஞ்சி சங்கராசார்யார் விஷயத்தில் அரவிந்தன் நீலகண்டன் சரியாகவே கருத்து சொல்லியிருப்பதாக படுகிறது. தெய்வத்தின் குரல் ஏழு பாகமும் படித்தவன் என்ற முறையில் அது ஒரு வரலாற்று பெட்டகம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அதில் உள்ள வருணாசிரம ஆதரவு, விதவைகள் பற்றீய கருத்து எல்லாம் படிக்கையில் இப்படிப்பட்ட ஞான களஞ்சியமான நூல் விழலுக்கு இழைத்த நீராக போனதில் மிகுந்த மனவருத்தம் மேலிடுகிறது.

மற்ற கட்டுரைகளை படித்து கருத்து கூறுகிறேன். நன்றி


K R A Narasiah

unread,
Sep 26, 2014, 9:20:00 AM9/26/14
to mintamil
உங்கள் எழுத்து என் கண்களில் நீரை வரவழைக்கின்றது. குழந்தையின் மழலையும் பெரியோரின் அர்த்த புஷ்டியும் தெளிவாகின்றன. மிக்க மகிழ்வெய்தினேன்
ந்ரசயா

On Fri, Sep 26, 2014 at 12:33 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (hol...@gmail.com) Add cleanup rule | More info

வணக்கம் கிருஷ்ணகுமார் ஐயா,

தங்கள் தமிழ் இந்து கட்டுரைகளை படித்து வருகிறேன். காஞ்சி சங்கராசார்யார் விஷயத்தில் அரவிந்தன் நீலகண்டன் சரியாகவே கருத்து சொல்லியிருப்பதாக படுகிறது. தெய்வத்தின் குரல் ஏழு பாகமும் படித்தவன் என்ற முறையில் அது ஒரு வரலாற்று பெட்டகம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அதில் உள்ள வருணாசிரம ஆதரவு, விதவைகள் பற்றீய கருத்து எல்லாம் படிக்கையில் இப்படிப்பட்ட ஞான களஞ்சியமான நூல் விழலுக்கு இழைத்த நீராக போனதில் மிகுந்த மனவருத்தம் மேலிடுகிறது.

மற்ற கட்டுரைகளை படித்து கருத்து கூறுகிறேன். நன்றி


seshadri sridharan

unread,
Sep 26, 2014, 9:56:45 AM9/26/14
to mintamil
அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. மற்றும் இவருடையது போன்ற தமிழ் நடை தமிழ்த் தேசியர் ஒழிக்க நினைக்கும் திராவிடத்தை நிலை பெறச்செய்யவே உதவும் பார்ப்பன வெறுப்புடன். அன்புகூர்ந்து அவர் தம் நடையை திருத்திக்கொள்வது அவர் சார்ந்த குமுகத்திற்கு நலம் பயக்கும்.

சேச்சாத்திரி 

N. Kannan

unread,
Sep 26, 2014, 10:20:01 AM9/26/14
to மின்தமிழ்
அன்பின் சேசாத்திரி

ஏன் எல்லாவற்றையும் ஜாதிக்குட்டையில் போட்டு குழப்பணும்?

அவர் ஒரு foregone age style ல் எழுதுகிறார். பாரதி காலத்து எழுத்து. இலக்கிய ரசனை இருந்தால் இதை ரசிக்க முடியும். பாரதியின் கவிதையைக் கொண்டாடுகிறோம். அவர் உரை நடை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும். அது இலக்கியம் இல்லையா? அந்தக் காலத்தில் எல்லோரும் இப்படித்தான் எழுதினர்.

அவர் எழுத்து ஒரு கனவுலகிற்கு இட்டுச் செல்கிறது.

கொஞ்சம் ரசிங்க பாஸ் ;-)

க.>
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Ganesan

unread,
Sep 26, 2014, 10:54:39 AM9/26/14
to mint...@googlegroups.com


On Thursday, September 25, 2014 11:59:05 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-09-25 23:49 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புள்ள திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
தங்கள் இழையை இப்போதுதான் படித்தேன். தங்களின் மொழி நடையைப் பார்க்கும்போது தங்களின் வயது 80-ஐ ஒட்டி இருக்கும் என நினைக்கிறேன். அல்லது 1950-க்குப் பின்னர் தமிழின் வாடையே அடிக்காத இடத்தில் இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஐயா, தாங்கள் வெகுதொலைவு பின்தங்கியிருக்கிறீர்கள் - தமிழ் நடையைப் பொருத்தவரையில். இங்கு வெகுவாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்னும் நீங்கள் வ்யாசத்திலும், ஸ்ரீமான் களிலும் இருக்கிறீர்கள். அவையெல்லாம் இடையில் வந்தவை - வருவிக்கப்படவை. சென்ற இடம் தெரியாமல் தேய்ந்து மறைந்துவிட்டவை. எனவே நீங்கள் வெகுவாக மாறவேண்டும். ஊசிப்போன வடையை முதலில் தூக்கியெறியப் பழகுங்கள். கைகளைத் துடைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். தமிழில் இப்போது வரும் மாத, வார இதழ்களைப் படித்தாலே பாதி மாறிவிடுவீர்கள். நான் மாறமாட்டேன் என்ற வீம்போ, பழமைகளில் வெட்டிப் பெருமையோ இல்லாமல் புதுமை உலகில் நுழைய முயலுங்கள். முதலில் சக்கர வண்டியில் பழகி, பின்னர் சுவரைப் பிடித்து நகர்ந்து, அப்பா மடியிலிருந்து அம்மா மடிக்கு எட்டு எடுத்து ஓடி இடறிவிழும் குழந்தையைத் தூக்கிக்கொஞ்சுவதுபோல் நாங்கள் உம்மைக் கொஞ்சுவோம்.

 வழிமொழிகிறேன்.
முயன்றால் எழுத முடியும் என்று திரு கிருஷ்ணகுமார் அவர்களே ஒரு பதிவில் கூறியிருந்தார். அவ்வாறு எழுதினால் பொன் மலர் நாற்றமுறும் என்பது என் எண்ணம்.

ஸ்ரீமான் க்ருஷ்ணகுமார்சர்மா நிச்சயமாக நல்ல தமிழில் எழுதவியலும். அவர் ஒரு நடையில் எழுத முயல்கிறார்.
வடசொற்கள் பலவும் அறிய ஆர்வமிருப்போருக்கு உதவும். சென்சார்ஷிப் இல்லாமல் அவரை எழுதவிட்டால்
தானாக தமிழ்நடைக்கு வருவார் என நினைக்கிறேன். திருப்புகழில் முழுக்க வடமொழியுடன் மணிப்பிரவாளம்
கலந்த திருப்புகழ்கள் உண்டு. தனித்தமிழ்ப் பாடல்களும் உண்டு. அதேபோல், நா. கண்ணன் குறிப்பிடும் பாரதியார்
பாடல்களிலும் பார்க்கலாம்.

நா. கணேசன்

Suba.T.

unread,
Sep 26, 2014, 11:18:48 AM9/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-26 16:19 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
அன்பின் சேசாத்திரி

ஏன் எல்லாவற்றையும் ஜாதிக்குட்டையில் போட்டு குழப்பணும்?

அவர் ஒரு foregone age style ல் எழுதுகிறார். பாரதி காலத்து எழுத்து. இலக்கிய ரசனை இருந்தால் இதை ரசிக்க முடியும். பாரதியின் கவிதையைக் கொண்டாடுகிறோம். அவர் உரை நடை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும். அது இலக்கியம் இல்லையா? அந்தக் காலத்தில் எல்லோரும் இப்படித்தான் எழுதினர்.

அவர் எழுத்து ஒரு கனவுலகிற்கு இட்டுச் செல்கிறது.

கொஞ்சம் ரசிங்க பாஸ் ;-)

​ரசிக்கலாம் கண்ணன். சென்னை தமிழையும் தான் நாம் ரசிக்கின்றோம். ​ஆனால் இலக்கியமாக இதனைப் பார்க்க முடியாது. மானவர்கள் ஆய்வுக்கென்று  பயன்படுத்த முடியாது.

சரி.. தொலைக்காட்சிகளிலும் இப்படித்தானே ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகின்றனர். அதனை பலர் ரசித்து இது அல்லவோ  மாடர்ன் வாழ்க்கையின் குறியீடு என மகிழ்கின்றனர்.  அதனை நாம் எதிர்க்கின்றோமே.. ஆங்கிலம் கலக்க்காமல் தமிழ் பேச முடியாதா என வினவுகின்றோமே...  யோசிக்கிறேன்.. :-))))

சுபா





--

Dev Raj

unread,
Sep 26, 2014, 1:06:46 PM9/26/14
to mint...@googlegroups.com
On Friday, 26 September 2014 06:56:45 UTC-7, seshadri sridharan wrote:
அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. 

 ஓ, சேச்சாத்திரியார்தான் குழுவின் மட்டுறுத்துநர் போலும் !
யார் யார் என்னென்ன பெயரகளை  வைத்துக்கொள்ள வேண்டும்
என்பதுகூடக் குழுமத்தின் விதி முறைகளில் அடங்குமோ ?
கூகிளின் சட்டம் ஏதாவது உண்டா ?


தேவ்

Dev Raj

unread,
Sep 26, 2014, 1:13:11 PM9/26/14
to mint...@googlegroups.com
On Wednesday, 24 September 2014 13:22:04 UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
காஷ்மீரத்தில் மிகக் கொடூரமான தனிமையில் இருந்த போது ......

மாந்யவர ஶர்மா ஜீ,
உங்கள் காச்மீர அநுபவங்களையும்
பகிர்ந்து கொள்ளுங்கள்

தேவ்

 

செல்வன்

unread,
Sep 26, 2014, 1:16:36 PM9/26/14
to mintamil

2014-09-26 9:19 GMT-05:00 N. Kannan <navan...@gmail.com>:
அவர் ஒரு foregone age style ல் எழுதுகிறார். பாரதி காலத்து எழுத்து. இலக்கிய ரசனை இருந்தால் இதை ரசிக்க முடியும். பாரதியின் கவிதையைக் கொண்டாடுகிறோம். அவர் உரை நடை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும். அது இலக்கியம் இல்லையா? அந்தக் காலத்தில் எல்லோரும் இப்படித்தான் எழுதினர்.

அவர் எழுத்து ஒரு கனவுலகிற்கு இட்டுச் செல்கிறது.

கொஞ்சம் ரசிங்க பாஸ் ;-)


கரெக்ட்

இது முன்பு படித்த பழம் தமிழ் நூல்களின் நடையை நினைவூட்டுகிறது. நண்பரது எழுத்துக்களில் வடமொழி கலப்பு நாம் சாதாரணமாக எழுதுவதில் இருக்கும் வடமொழி கலப்பு போல் தான் உள்ளது. மேலும் வடமொழி கலப்பு இருந்தாலும் ஆங்கில கலப்பு அதிகமாக இல்லை.

நாம் "கல்யாணம்" என எழுதுவோம். நண்பர் "விவாஹம்" என எழுதுவார். விவாஹமும், கல்யாணமும் இரண்டும் வடமொழி சொற்களே. தனிதமிழில் யாருமே எழுதுவது இல்லை என்கையில் இவரை ஏன் குறைகூறவேண்டும் என தெரியவில்லை

N. Ganesan

unread,
Sep 26, 2014, 2:19:39 PM9/26/14
to mint...@googlegroups.com


On Friday, September 26, 2014 10:16:36 AM UTC-7, செல்வன் wrote:

2014-09-26 9:19 GMT-05:00 N. Kannan <navan...@gmail.com>:
அவர் ஒரு foregone age style ல் எழுதுகிறார். பாரதி காலத்து எழுத்து. இலக்கிய ரசனை இருந்தால் இதை ரசிக்க முடியும். பாரதியின் கவிதையைக் கொண்டாடுகிறோம். அவர் உரை நடை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும். அது இலக்கியம் இல்லையா? அந்தக் காலத்தில் எல்லோரும் இப்படித்தான் எழுதினர்.

அவர் எழுத்து ஒரு கனவுலகிற்கு இட்டுச் செல்கிறது.

கொஞ்சம் ரசிங்க பாஸ் ;-)


கரெக்ட்

இது முன்பு படித்த பழம் தமிழ் நூல்களின் நடையை நினைவூட்டுகிறது. நண்பரது எழுத்துக்களில் வடமொழி கலப்பு நாம் சாதாரணமாக எழுதுவதில் இருக்கும் வடமொழி கலப்பு போல் தான் உள்ளது. மேலும் வடமொழி கலப்பு இருந்தாலும் ஆங்கில கலப்பு அதிகமாக இல்லை.

நாம் "கல்யாணம்" என எழுதுவோம். நண்பர் "விவாஹம்" என எழுதுவார். விவாஹமும், கல்யாணமும் இரண்டும் வடமொழி சொற்களே.

கலியாணம் தமிழ்ச்சொல். அதன் முக்கியமான பொருளில் இன்னும் தமிழில் இருக்கிறது. கல்யாணம் என்று வடசொல் ஆகியது.

ஒப்பு: ஒட்டியாணம் - ஒட்யாணம் (வடமொழியில்).

NG


 

செல்வன்

unread,
Sep 26, 2014, 2:58:44 PM9/26/14
to mintamil
அப்படியே விவாகத்துக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அதையும் தமிழ் சொல் ஆக்கினால் இந்த வடமொழி கலப்பு பிரச்சனையும் தீர்ந்துடும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

krishnakumar sharma

unread,
Sep 26, 2014, 5:32:09 PM9/26/14
to minT...@googlegroups.com
அன்பின் சேசாத்திரி ஐயா,

முப்பது வருஷம் ஹிந்துஸ்தானத்தின் பல பகுதிகளில் பணியாற்றிய நான் அனுபவ பூர்வமாக அறிந்த விஷயம் எந்த மொழியும் மொழிநடையும் எந்த ஒரு ஜாதியையுமோ அல்லது மதத்தையுமோ சார்ந்தது அல்ல.  தமிழ், சம்ஸ்க்ருதம், உர்தூ, மணிப்ரவாளம் -  இவையெல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள விவிலியம் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத கலப்பிலானாதே.

க்றைஸ்தவ இறையியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் க்றைஸ்தவ இசைப்பாடல்களுக்கு மயங்காதார் யார்?

மறைந்த ரெவரெண்டு வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களது பல பாடல்கள் எனக்கு மனனமானவை.

சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரிஏக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு

சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம்

பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
காரோன் அனுகூலனுக்கு கன்னிமரி சேயனுக்கு
கோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு

சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம்

ஸர்வ லோகாதிப நமஸ்காரம்
ஸர்வ ச்ருஷ்டிகனே நமஸ்காரம்
தரை கடலுயிர் வாழ் சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம்.

இந்தப் பாடல்களில் எந்த அளவு சம்ஸ்க்ருதக் கலப்பு.  இந்தப் பாடல்களை நான் பாடுவதாலோ எமது க்றைஸ்தவ சஹோதரர்கள் பாடுவதாலோ பார்ப்பன வெறுப்பு வந்து விடுமா?

ராஜதானி தில்லியில் சர்தார் இஷ்மிந்தர் ஜித் சிங்க் அவர்கள் உத்தர ஸ்வாமிமலை மந்திரில் எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய வேல் மாறல் மஹா மந்த்ரத்தை ஓதுகிறார்? அதனால் அவர் அவருடைய சீக்கிய சமயத்தை விட்டு விட்டதாக ஆகி விடுமா?

ஸ்ரீ பானுகுமார் ஐயா ஜைன சமயத்து ஸ்ரீ புராணம் பற்றி சொன்னாரானால் அதில் எந்த அளவு சம்ஸ்க்ருதம் உள்ளது என்று துலங்கும்.

குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்களது பராபரக்கண்ணியில் சம்ஸ்க்ருத சொற்கள் உள்ளனவா நினைவில் இல்லை. அரபி, ஃபார்ஸி, உர்தூ சொற்கள் கேட்டதாக நினைவு. நஜரேந்தியே என்று ஒரு கண்ணியில் வரும். நினைவில் வந்தால் பகிருகிறேன்.   எஸ்.ஜி. கிட்டப்பா போன்ற சங்கீத பிதாமஹர்களுக்கு சிக்ஷை எடுத்த நாகூர் ஸ்ரீ எஸ்.எம்.ஏ. காதர் பாகவதர் அவர்களுடைய விருத்தங்களை கேட்டுப்பாருங்கள்.  அதில் விரவி அரபி, ஃபார்ஸி, சம்ஸ்க்ருதம் காணப்படும்.  அதற்கும் ஒரு அழகுண்டு. 

எல்லாவற்றுக்கும் மேல்..........இவையனைத்தும் ஜாதி, மதம் என்ற கூண்டுகளில் அடைக்கப்படாத தமிழகத்தின் சொத்து........... ஏன் ஹிந்துஸ்தானத்தின் கலாசாரத்தை ப்ரதிபலிக்கும் சொத்து என்பதுஎன் தாழ்மையான அபிப்ராயம் ஐயா.

மொழிகளோ மொழி நடைகளோ எந்த ஜாதிக்குழுவையோ எந்த மதத்ததையோ மட்டிலும் சார்ந்தவை அல்ல. அவற்றுக்கு உலக நாடுகளின் எல்லைகள் கூட ஒரு தடை இல்லை.

யாரும் எதையும் வெறுப்பதற்கு உரிமைகள் உண்டு. 

மதிப்பு மிக உகப்பதற்கும், ரசிப்பதற்கு யாருக்கும் எதற்கும் எந்த தடையும் இல்லை. மொழி, மதம், ஜாதி......... எதுவும்..........

வங்கள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதென்றிடுவோம்
கன்னடம் தெலுங்கு கவின் மலயாளம் ஹிந்தியும் எங்களதே

என்று சிறு பிள்ளை முதலாக பசுமரத்தாணியாக போதிக்கப்பட்டவன் சிறியேன்.

\\\  அவர் ஒரு நடையில் எழுத முயல்கிறார்.  \\\

அன்பின் ஸ்ரீ கணேசன் ஐயா, முயற்சி இல்லை. இயல்பு. எனது வ்யாசங்களின் உரல்கள் கொடுத்திருக்கிறேன்.  வாசித்துப் பார்க்கலாம். குயில் கூவுவதும் காக்கை கரைவதும் கழுதை கத்துவதும் எப்படி இயல்போ அப்படியே இயல்பு என் மொழிநடை. வெகு அபூர்வமாக என் மொழிநடையை விமர்சிப்பவர்களுடைய எழுத்துக்களில் எந்த அளவு கலப்பு உள்ளது என்று சுட்டியிருக்கிறேன். தினமும் ஹிந்தி, ஆங்க்லம், பஞ்சாபி மற்றும் தமிழ் மொழி என மாறி மாறி பேச அதில் தமிழ்ப் பேச்சு வெகுவாகக் குறைவு என்ற நிலையை எப்படி விளக்குவது தெரியவில்லை.  அப்படி ஒரு நிலையில் முப்பது வருஷம் புழங்கினால் அதன் ப்ரபாவம் எப்படி என்பதையும் என்னால் விளக்க முடியவில்லை.

அன்பின் ஸ்ரீ செல்வன் ஐயா,

ஸ்ரீ அ.நீ, சிறியேன், தாங்கள் ......... அனைவரும் சில விஷயத்தில் குவிகிறோம். நீங்கள் வருத்தப்படும் விஷயங்களான ஜாதியம் இத்யாதிகள்  எனது வ்யாசத்தில் ஒரு வரி கூட விவாதிக்கப்படவில்லை என்று பார்த்திருப்பீர்கள்.  மேலும் அவ்விஷயங்கள் பற்றி ஸ்ரீ அ.நீ பகிர்ந்த கருத்துக்களை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் பயிற்சி பெற்றவன் என்ற படிக்கு புரிந்தும் ஏற்றுமே மேற்கொண்டு என் மறுதலிப்பைப் பகிர்ந்து இருந்தேன். நான் மறுதலித்தது  ஒட்டு மொத்த நூலையும் கிட்டத்தட்ட நிராகரணம் செய்வதான தொனியில் ஸ்ரீ அ.நீஅவர்கள் முன்வைத்த கருத்துக்களே என்னால் மறுதலிக்கப்பட்டது.  நீங்கள் பகிர்ந்த கருத்தின் சாரமான ..........அறிவுக்கருவூலம் அந்த நூல் என்பதே எனது கருத்தும்.  நான் சுட்ட விழைந்த விஷயம் மறுதலிப்பை சீண்டல், எள்ளல், கசப்புணர்வு இவையன்றி செய்ய முடியும் என்ற முயற்சியை. அந்த முயற்சி சபலமானது என்பதனை மறுமொழிகள் மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

அன்பின் பாண்டியராஜா ஐயா,

தமிழில் பொழுது போக்குக்கான சஞ்சிகைகள் எமக்கு எட்டிக்காய்.  திருப்புகழ், திருமுறைகள், நாலாயிரம்........... இவையே தமிழில் நான் வாசிக்க விழையும் நூற்கள்.  நான் முன் பின் சொன்ன  படிக்கான முக்யத்வம் சார்ந்து.  இறைவனை அடைய வழிகோலும் எந்த மொழி நூலும் ..........இசை சார்ந்த மாற்று மத பனுவல்களும் கூட எமக்கு உகப்பு மிகுந்தவையே.

வேறு விஷயங்களையும் பகிர முனைகிறேன்.

அன்புடன்

krishnakumar sharma

unread,
Sep 26, 2014, 5:32:09 PM9/26/14
to minT...@googlegroups.com
குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்களின் விருத்தப்பாடல்

உஸ்தாத் ஆபிதீன் சாஹேப் அவர்களது இணையப்பக்கத்திலிருந்து.

நான் வெகுவாக ரசித்து வாசிக்கும் இணையப்பக்கம். 

ஒத்த கருத்துள்ள அன்பர்களும் வாசித்து மகிழலாம். இந்த குறிப்பிட்ட பக்கத்தில் உச்ச ஸ்தாயியில் நாகூர். இ.எம்.ஹனீஃபா சாஹேப் அவர்கள் இந்த விருத்தத்தை பாடுவதையும் கேட்டு மகிழலாம். எஸ்.எம்.ஏ காதர் சாஹேப் அவர்களது பாடல்களும் விருத்தங்களும் கேட்டு மகிழலாம். மியா தான்சேன் மற்றும் பைஜு பாவ்ரா  போன்றவர்களது குருவான மியான் மஹம்மது கவுஸ் அவர்களே காதர் சாஹேப் அவரது குருவான தாவுத் மியான் போன்றவர்களது குரு பரம்பரையினருக்கும் சிக்ஷை அளித்தவர் என்று பதிவிட்டிருக்கிறார் ஆபிதீன் சாஹேப்.

எஸ்.ஜி கிட்டப்பா அவர்களுக்கு சிக்ஷை அளித்தவர் தாவுத் மியான் சாஹேப் அவர்கள்.
தவறுதலாக காதர் சாஹேப் என்று பதிவிட்டு விட்டேன். க்ஷமிக்கவும்.

http://abedheen.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி!

சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி!

ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அனைந்தருகில் நிற்பர் கோடி!

மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி!

வசனித்து நிற்கவே கொழுவீற்றிருக்குமும்
மகிமை சொல வாயுமுண்டோ

தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!

தயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே!

Oru Arizonan

unread,
Sep 26, 2014, 5:35:49 PM9/26/14
to mint...@googlegroups.com
இதுவரை நான் அமைதி காக்கத்தான் நினைத்தேன்.  நெஞ்சு பொறுக்குதில்லையே!

போகிற போக்கைப் பார்த்தால், தமிழ் மறைந்து  "மணிப்பிரவாளம்" கொலோச்சிவிடும் போல எனக்குப் படுகிறது.  அதற்கு மின்தமிழே ஒரு கருவி ஆகி விடும்போல உள்ளது.

பரிதிமால் கலைஞரையும், மறைமலை அடிகளையும் தூக்கி எறிந்துவிடுவோமே!.  

பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து வருவது காலத்தின் கட்டாயம்.  அது ஒருபுறமிருக்க, பாதிக்குமேல் வடசொற்களைக் கலந்து எழுதவதையும் போற்றுவோம், அதுவும் ஒரு அழகுதான் என்று போற்றத துவங்கினால், சேர நாட்டுத் தமிழ் "மலையாள"மாக ஆனதுபோல ஒரு "தங்க்ஸ்கிருத"மோ, அல்லது ஒரு "சம்ஸ்மிழோ" உருவாகி விடும்.  

தாங்கள் அனைவரும் தமிழத் தவிர மற்ற மொழிகளையும் அறிந்தவர்களே!  யாரவது ஆங்கிலத்திலோ, பிரஞ்சிலோ, ஜெர்மன் மொழியிலோ, ஏன்  வடமொழியிலோ பாதிக்குமேல் தமிழைக் கலந்து எழுதிகிறீர்களா?  அப்படி எழுதுவதுதான் எனது பாணி என்றால் யாராவது உங்களைப் போற்றுவார்களா!

மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமாரின் படிப்புகளை நான் நன்கு படித்து இரசித்தவன்.  அவர் தனது கருத்துக்களைத் தயக்கமின்றியும், அனைவருக்கும் விளங்கும் வகையிலும், அனைவரின் மனத்தைக் கவரும் வகையிலும் எழுதும் திறன் படைத்தவர்.  அவரது தமிழை, அதன் ஓட்டத்தை, அவர் தமிழ்ச் சொற்களைக் கையாளும் திறனை  நன்கு கவனித்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன்.  தூய தமிழ்ச் சொற்கள் பல அவரது படைப்புகளில் துள்ளி விளையாடுகின்றன.  அவரால் நல்ல தமிழில் எழுத இயலும்.  

அவர் தனது அடையாளம் "மணிப்பிரவாள" நடை என்று ஒரு முறை சுட்டி இருக்கிறார்.

எனவே, அவரால் எழுத இயலக் கூடிய தூய தமிழ் நடையை, அவரை வேண்டி, வேண்டி, நான் கொணர முழுவதை விட்டுவிட்டு, அவரது மணிப்பிரவாளத்தைப் புகழ்ந்தால், அவர், அவரது "அடையாளத்"தை ஒருபோதும் விடமாட்டார். ஒரு நல்ல தமிழ் எழுத்தாளரை, தூய தமிழில் எழுதவிடாமல் தடுத்த குற்றத்தைச செய்தவர்கள் ஆகிவிடுவோம், நாம்!

//அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. மற்றும் இவருடையது போன்ற தமிழ் நடைஅன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. அன்புகூர்ந்து அவர் தம் நடையை திருத்திக்கொள்வது அவர் சார்ந்த குமுகத்திற்கு நலம் பயக்கும்.//

இக்கருத்துக்களுடன் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை....  

"சர்மா" என்பது குடும்பப் பெயர்.  அப்படி இல்லாமல், வேறு ஒரு சாதிப் பெயரைக் குறிக்கும் விகுதியை அவர் தனது பெயருடன் வைத்துக்கொண்டிருந்தாலும், அது அவருடைய பெயர்.  ஒருவருக்கு அவரது பெயரே அவரது அடையாளம்.  அதை விட்டுவிடச் சொல்லும் உரிமை நமக்கு இல்லவே இல்லை.

//இவருடையது போன்ற தமிழ் நடை தமிழ்த் தேசியர் ஒழிக்க நினைக்கும் திராவிடத்தை நிலை பெறச்செய்யவே உதவும் பார்ப்பன வெறுப்புடன். //

மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களின் நடை நமது மின்தமிழ் குழுவினரால் போற்றப் படவில்லை என்பது வேறு.   இக்கருத்து போற்றத்தக்கது.   அதில் அரசியலையும், சாதியையும் கலப்பது வேறு.  இது நமது குழுவுக்கு வேண்டாதது.  நாம் தமிழினால்தான் இணைந்திருக்கிறோம்.  அரசியாலோ, சாதி வெறுப்பாலோ அல்ல.

//அன்புகூர்ந்து அவர் தம் நடையை திருத்திக்கொள்வது அவர் சார்ந்த குமுகத்திற்கு நலம் பயக்கும். //   

இப்படி ஒரு அறிவுரை/கருத்து தேவையே இல்லாதது.  நான் தமிழின் பேசப்பட்டு வரும் பலவிதமான அசைவுகளை (acceents) இரசிக்கிறேன்.  கொங்கு தமிழ், நாஞ்சில் தமிழ், மதுரைத் தமிழ், நகரத்தார் தமிழ், பிராமணர் தமிழ், திருநெல்வேலித் தமிழ், சென்னைத் தமிழ், தஞ்சைத் தமிழ், செந்தமிழ், கொடுந்தமிழ், என்று பலப்பல அசைபுகளும் தமிழன்னைக்கு அழகு சேர்க்கின்றன.  ஆயினும், எழுதும்பொது இயன்ற அளவு  செந்தமிழைக் கையாளுவது நம் மரபாக இருந்து வருகிறது. 

கவிஞருக்கு இருக்கும் சுதந்திரம் நம்போன்ற உரைநடை எழுத்தாளருக்கு இல்லை என்று வலியுறுத்துவதே முறைமை ஆகும் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது.  

அதைவிடுத்து, //குமுகத்திற்கு நலம் பயக்கும்// என்று எழுதி இருப்பதை நான் ஒரு மறைமுகமான அச்சுறுத்தல் என்றே கருதுகிறேன்.  எக்குமுகமும் பேச்சு வழக்கில் அவர்களுக்கே உரித்தான அசைபைக் கையாளுதல் தவறென்பது எவ்விதத்திலும் முறையற்றது என்றே எனக்குப் படுகிறது.  ஒரு அசைபுடன் பேசுவது நலக்குறைவு என்ற மனப்பான்மையையே நம் மனதிலிருந்து நாம் நீக்கவேண்டும்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 



பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Sep 26, 2014, 8:36:33 PM9/26/14
to mint...@googlegroups.com
On Friday, 26 September 2014 06:56:45 UTC-7, seshadri sridharan wrote:
அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. 

அல்ஹம்துலில்லாஹ்,அஹ்ல ஹதீஸ், முஜாஹித்,ஜாக்,மர்கஸுஸ் ஸலஃபி,அந்நஜாத்
அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்,ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல்
ஹதீஸ்,ரஹ்மதுல்லாஹ் பிரதவ்ஸி,அஷ்ஷேய்க் ரஹ்மத்துல்லாஹ் ,அஷ்ஷேய்க் நூஹ்
ஜம்மியத்துல் அஹ்லுல்,குர்ஆன் வ அல் ஹதீஸ், ஜுமர், நஹ்ல், ஸஃப்:, ஹதீஸ் குத்ஸீ,இப்னு அப்துல் அஜீஸ்,

இப்னு இஸ்ஹாக், இப்னு ஜூரைஜ், ஸூஃப்யானுத் தவ்ரீ, அப்துல்லாஹ் இப்னு
முபாரக், இப்னு ஜரீர் அத்தபரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, பஹீரா,
ஜிஃரானா,ஹஜ்ஜுன் மப்ரூர், ஷபே,அரீஜ், கப்ஜி, அஹமத்,ஜத், அல்லிஃப்
பைனஹுமா, அபூஹுரைரா, அஃபான், ஷுஃஆ ,அல்ஃபாத்திஹா, அலம்ரோஜி இத்ரஸ்,அல்ஹ‌ஸ‌ன்
அல்ப‌ஸ்ஸ‌ரி, ஸஅத் இப் வக்காஸ், ஃபிக்ஹு, அல்ஷின்ப்ஜி அல்ஷ‌ட்டாய்,பிஹாருந்நிஸா ஹஜ்ஜுன் மப்ரூர், 

முல்தகா அஹ்லில் ஹதீஸ் அஸ்ஸெம், நஃபி, அபோ நஹிக், அபோ ஹை,அல்பஹர் அல்மொஹித்,ஹஃப், பஸ்லுல் இலாஹி, ஷிர்க், சகதுல்லாஹ். 


இப்படி எழுதுவோர்க்கெல்லாம் சேச்சாவின் அறிவுரை என்ன ?  


தேவ்

தேமொழி

unread,
Sep 26, 2014, 9:25:52 PM9/26/14
to mint...@googlegroups.com
தமிழில் எழுத விரும்புபவர்கள், பள்ளியில் தமிழ்த்தேர்வு எழுதும் பொழுது எந்த வகையில் எழுதினால் தேர்வு உறுதி என்று தெரியுமோ அந்த வகையில் எழுதுங்கள்.

இல்லை நீங்கள் தமிழாசிரியராக இருந்தால் உங்கள் மாணவர் இவ்வாறு எழுதினால் தேர்ச்சி தருவீர்களா எனவும் சிந்தித்துப் பார்க்கலாம். 

திரு. அரிசோனன் சொல்வதையும் கவனிக்கலாம்.  இங்கு பெரும்பாலும் தமிழ் எழுதுபவர் உலகில் பல மூலைகளிலும் வாழ்ந்து, தினசரி வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தாலும் கூட தொலைக்காட்சியைக் கேட்டாலே பிறமொழி வந்து விழும் ...புழங்கும் இடத்தில் இருந்து கொண்டுதான் எழுதுகிறார்கள்.  

சுபா சொன்னதையும் கவனிக்கத் தேவை, நாம் பிற்காலத் தலைமுறைக்கு நம் சிந்தனைகளை விட்டுச் செல்கிறோம் என்பதிலும் நமக்கு அக்கறை இருக்க வேண்டும்.

தவிர்க்க இயலாத பிறமொழிச் சொற்கள், பெயர் சொற்கள் போன்றவற்றை  குறிப்பிடும் பொழுது யாரும் இடையிடுவதில்லை என்பதையும் நான் கவனித்துள்ளேன்.

நான் 27 ஆண்டுகள் அயல் நாட்டில்தான் வசிக்கிறேன்.

இணையம் கிடைக்கும்வரை தமிழகத் தொடர்பும் கிடையாது.  

கிடைத்த பின்னரும் கூகுள் வந்து உதவும் வரை தமிழில் எழுத வாய்ப்பு இருந்ததில்லை.  ஆனால் ....

எனது தாய்மொழி எனக்கு மறக்கவில்லை


..... தேமொழி






Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 9:36:43 PM9/26/14
to மின்தமிழ்
கருத்தில் கவனம் செலுத்தாமல் எழுத்தில் குறைகூறுவதால் என்ன பயன்.  மணிப்பிரவாளம் வழங்கியதற்குக் காரணன் அச்சில் தமிழ் எழுத்துக்கள் மறை சார்ந்த கருத்துக்களை வெளியிட உதவவில்லை என்பதால்தானே.

தமிழால் முடியாதபோதும் எழுதுபவருக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாதபோதும் மணிப்பிரவாளமாக எழுதாமல் என்னதான் சாமியோவ் செய்ய முடியும்? 

தமிழால் எல்லாம் முடியும் நல்ல எழுத்துக்களில் கெட்ட கருத்துக்களையும் கலப்புத் தமிழில் நல்ல கருத்தையும் சொல்வது கட்டற்ற இணயத்தில் கட்டுப்படுமா?

அசடு முசுடு

தேமொழி

unread,
Sep 26, 2014, 10:25:32 PM9/26/14
to mint...@googlegroups.com
என்னிடம் பேசும் பொழுது மட்டும் அசடு முசுடு என்று மிரட்டுவதும்...

ராஜம் அம்மாவிடம் பேசும் பொழுது நாகராசன் என்று சொல்லுவதும் ஏன்?


கருத்திலும் எழுத்திலும் கவனம் செலுத்துவதால் கவனித்தது.


..... தேமொழி




On Friday, September 26, 2014 6:36:43 PM UTC-7, அசடுமுசுடு wrote:
கருத்தில் கவனம் செலுத்தாமல் எழுத்தில் குறைகூறுவதால் என்ன பயன்.  மணிப்பிரவாளம் வழங்கியதற்குக் காரணன் அச்சில் தமிழ் எழுத்துக்கள் மறை சார்ந்த கருத்துக்களை வெளியிட உதவவில்லை என்பதால்தானே.

தமிழால் முடியாதபோதும் எழுதுபவருக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாதபோதும் மணிப்பிரவாளமாக எழுதாமல் என்னதான் சாமியோவ் செய்ய முடியும்? 

தமிழால் எல்லாம் முடியும் நல்ல எழுத்துக்களில் கெட்ட கருத்துக்களையும் கலப்புத் தமிழில் நல்ல கருத்தையும் சொல்வது கட்டற்ற இணயத்தில் கட்டுப்படுமா?

அசடு முசுடு
2014-09-27 6:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தமிழில் எழுத விரும்புபவர்கள், பள்ளியில் தமிழ்த்தேர்வு எழுதும் பொழுது எந்த வகையில் எழுதினால் தேர்வு உறுதி என்று தெரியுமோ அந்த வகையில் எழுதுங்கள்.

இல்லை நீங்கள் தமிழாசிரியராக இருந்தால் உங்கள் மாணவர் இவ்வாறு எழுதினால் தேர்ச்சி தருவீர்களா எனவும் சிந்தித்துப் பார்க்கலாம். 

திரு. அரிசோனன் சொல்வதையும் கவனிக்கலாம்.  இங்கு பெரும்பாலும் தமிழ் எழுதுபவர் உலகில் பல மூலைகளிலும் வாழ்ந்து, தினசரி வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தாலும் கூட தொலைக்காட்சியைக் கேட்டாலே பிறமொழி வந்து விழும் ...புழங்கும் இடத்தில் இருந்து கொண்டுதான் எழுதுகிறார்கள்.  

சுபா சொன்னதையும் கவனிக்கத் தேவை, நாம் பிற்காலத் தலைமுறைக்கு நம் சிந்தனைகளை விட்டுச் செல்கிறோம் என்பதிலும் நமக்கு அக்கறை இருக்க வேண்டும்.

தவிர்க்க இயலாத பிறமொழிச் சொற்கள், பெயர் சொற்கள் போன்றவற்றை  குறிப்பிடும் பொழுது யாரும் இடையிடுவதில்லை என்பதையும் நான் கவனித்துள்ளேன்.

நான் 27 ஆண்டுகள் அயல் நாட்டில்தான் வசிக்கிறேன்.

இணையம் கிடைக்கும்வரை தமிழகத் தொடர்பும் கிடையாது.  

கிடைத்த பின்னரும் கூகுள் வந்து உதவும் வரை தமிழில் எழுத வாய்ப்பு இருந்ததில்லை.  ஆனால் ....

எனது தாய்மொழி எனக்கு மறக்கவில்லை


..... தேமொழி






--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 11:08:53 PM9/26/14
to மின்தமிழ்

2014-09-27 7:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கருத்திலும் எழுத்திலும் கவனம் செலுத்துவதால் கவனித்தது.


அவர்
​ என்னைக் கடுமையாகக் கடிந்து எழுதியபோதும் நாகராஜன் ஐயா என்றும் பேராசிரியரே என்றும் சொன்னவர் என்பதால் நாகராஜன்

நீங்கள் ஷைலஜா சொல்லாத ஒன்றைச் சொன்னதாகச் சொல்லி என்னை அசடு என்றழைத்ததால் நான் அசடு ஆகி முசுடு ஆகி கசடாக எழுதுகிறேன்

இங்கே எல்லாரும் உங்களையும் கவனிக்கிறார்கள் என்பதை கவனக்குறைவால் பலநேரம் கவனிப்பதில்லையே.   எழுத்து எப்பவேண்டுமானலும் கூப்பிட்டவுடன் வரும் கருத்து அப்படியல்லவே.

கருத்தே இல்லாமல் எழுத்தைமட்டும் வைத்து எவ்வளவோபேர் பிழைக்கிறார்கள்.  கருத்தைமட்டும் கவனித்து எழுத்தில் பிழைப்பது  (பிழையுடன் எழுதுவது) சிலருக்கு இருக்கும் பலவீனம்

சிலரை நல்லாவே கவனித்து ஒரு கை பார்ப்பது உங்களுக்குக் கைவந்த கலை.

அசடுமுசுடு

டிஸ்கி: அருமையான பெயர் எனக்குக் கிடைத்தது உங்கள் கைங்கர்யத்தாலன்றோ

Pandiyaraja

unread,
Sep 27, 2014, 12:54:52 AM9/27/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
>>
அன்பின் பாண்டியராஜா ஐயா,

தமிழில் பொழுது போக்குக்கான சஞ்சிகைகள் எமக்கு எட்டிக்காய்.  திருப்புகழ், திருமுறைகள், நாலாயிரம்........... இவையே தமிழில் நான் வாசிக்க விழையும் நூற்கள்.  நான் முன் பின் சொன்ன  படிக்கான முக்யத்வம் சார்ந்து.  இறைவனை அடைய வழிகோலும் எந்த மொழி நூலும் ..........இசை சார்ந்த மாற்று மத பனுவல்களும் கூட எமக்கு உகப்பு மிகுந்தவையே.
>>
மிக்க நன்றி, ஐயா. இப்பொழுது நான் மிகவும் முக்கியமான ஒரு பணியின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன். தங்களுக்கு விளக்கமான பதில் பின்னர் எழுதுகிறேன். விடமாட்டேன்.
ப.பாண்டியராஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 27, 2014, 12:57:10 AM9/27/14
to mintamil, Oru Arizonan
2014-09-27 3:05 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இதுவரை நான் அமைதி காக்கத்தான் நினைத்தேன்.  நெஞ்சு பொறுக்குதில்லையே!

போகிற போக்கைப் பார்த்தால், தமிழ் மறைந்து  "மணிப்பிரவாளம்" கொலோச்சிவிடும் போல எனக்குப் படுகிறது.
:) 
 அதற்கு மின்தமிழே ஒரு கருவி ஆகி விடும்போல உள்ளது.
 
திருமிகு சுபா, திருமிகு கீதா, திருமிகு தேமொழி, பெரும்பாலான நண்பர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள். வெறென்ன செய்யமுடியும். 

  
பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து வருவது காலத்தின் கட்டாயம்.  அது ஒருபுறமிருக்க, பாதிக்குமேல் வடசொற்களைக் கலந்து எழுதவதையும் போற்றுவோம், அதுவும் ஒரு அழகுதான் என்று போற்றத துவங்கினால், சேர நாட்டுத் தமிழ் "மலையாள"மாக ஆனதுபோல ஒரு "தங்க்ஸ்கிருத"மோ, அல்லது ஒரு "சம்ஸ்மிழோ" உருவாகி விடும்.  

தாங்கள் அனைவரும் தமிழத் தவிர மற்ற மொழிகளையும் அறிந்தவர்களே!  யாரவது ஆங்கிலத்திலோ, பிரஞ்சிலோ, ஜெர்மன் மொழியிலோ, ஏன்  வடமொழியிலோ பாதிக்குமேல் தமிழைக் கலந்து எழுதிகிறீர்களா?  அப்படி எழுதுவதுதான் எனது பாணி என்றால் யாராவது உங்களைப் போற்றுவார்களா!
 
அருமை. 

மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமாரின் படிப்புகளை நான் நன்கு படித்து இரசித்தவன்.  அவர் தனது கருத்துக்களைத் தயக்கமின்றியும், அனைவருக்கும் விளங்கும் வகையிலும், அனைவரின் மனத்தைக் கவரும் வகையிலும் எழுதும் திறன் படைத்தவர்.  அவரது தமிழை, அதன் ஓட்டத்தை, அவர் தமிழ்ச் சொற்களைக் கையாளும் திறனை  நன்கு கவனித்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன்.  தூய தமிழ்ச் சொற்கள் பல அவரது படைப்புகளில் துள்ளி விளையாடுகின்றன.  அவரால் நல்ல தமிழில் எழுத இயலும்.
ஆம். முற்றிலும் சரி. 
 

அவர் தனது அடையாளம் "மணிப்பிரவாள" நடை என்று ஒரு முறை சுட்டி இருக்கிறார்.
 
அப்படியா. 

எனவே, அவரால் எழுத இயலக் கூடிய தூய தமிழ் நடையை, அவரை வேண்டி, வேண்டி, நான் கொணர முழுவதை விட்டுவிட்டு, அவரது மணிப்பிரவாளத்தைப் புகழ்ந்தால், அவர், அவரது "அடையாளத்"தை ஒருபோதும் விடமாட்டார். ஒரு நல்ல தமிழ் எழுத்தாளரை, தூய தமிழில் எழுதவிடாமல் தடுத்த குற்றத்தைச செய்தவர்கள் ஆகிவிடுவோம், நாம்!
:) 

//அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. மற்றும் இவருடையது போன்ற தமிழ் நடைஅன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. அன்புகூர்ந்து அவர் தம் நடையை திருத்திக்கொள்வது அவர் சார்ந்த குமுகத்திற்கு நலம் பயக்கும்.//

இக்கருத்துக்களுடன் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை..
என் நண்பர் திரு வெங்கடராமன் என்பார் கோவிலில் வழிபாட்டிற்குப் பெயர் சொல்லும்போது வெங்கட்டராம சர்மா என்று பெயர் கூறுவார். நண்பர்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது வெங்கட் என்று கூறுவார். பெயரை எந்த இடத்தில் எவ்வாறு சொல்லிக்கொள்வது அவரவர் விருப்பமே. 
..  
கருத்துக்களைக் கோர்வையாகச் சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு நன்றி ஐயா.

செல்வன்

unread,
Sep 27, 2014, 3:13:09 AM9/27/14
to mintamil

2014-09-26 16:35 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
இதுவரை நான் அமைதி காக்கத்தான் நினைத்தேன்.  நெஞ்சு பொறுக்குதில்லையே!

போகிற போக்கைப் பார்த்தால், தமிழ் மறைந்து  "மணிப்பிரவாளம்" கொலோச்சிவிடும் போல எனக்குப் படுகிறது.  அதற்கு மின்தமிழே ஒரு கருவி ஆகி விடும்போல உள்ளது.


இன்றைய தமிழகத்தில் சைக்கிளுக்கு பஞ்சர் ஓட்டும் ஒரு எளிய அடிமட்ட தொழிலாளி பேசும் தமிழிலேயே இதை விட அதிக கலப்பு இருக்கும். இங்கே வடமொழி. அங்கே ஆங்கிலம்.

இங்கே வாதாடும் எல்லாரும் வீட்டில், வெளியே தூயதமிழ் தான் பேசுகிறோமா? நோயாளர் ஊர்தி, தாதி, மகிழ்வுந்து, கணிணி, கைபேசி என தான் வீட்டில், வெளியே பேசுகிறோமா?

சினிமா பாடல் ஒன்று. ஒப்பிடலுக்கு

காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று

காதல் வைரஸ் வந்து
கம்பியூட்டர் போலே நானும்
கன்பியூஸ் ஆனேன் இன்று

ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன
சாப்ட்வேர் இன்றி அது ஆனதென்ன
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக

செண்டிமீட்டர் தூதரும் இல்லை
நீ கேசட் தருவதற்கில்லை
நான் தோற்றேன் உன் இடம் என்னை
ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி
நான் என்றும் உன் இடம் கைதி
நியூஸ் சேன்னல் சொல்லுமே செய்தி

அக்குபஞ்சர் நீ இல்லா
துர்கி சிக்கன் நூடலா
அன்பே ஆடை கொஞ்சம்
உந்தன் இடையிலா
டோனல்ட் டக்கின் ஜாதியா
டிஸ்னி டால்பின் ஜோடியா
அன்பே ஆடை செல்லும்
உந்தன் நாடியில்லா
(காதல் வெப்சைட்..)

ஹாட் பாக்ஸில் வைத்த ஒம்பதில்லை
இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ நின்றெடுக்க
உன்னை உச்சம் பார்க்க கூடும்
கேளடா காதலா
தனிமைதான் ட்ராக்குலா

மிஸ்ஸிப்பி மேலே அலைகளை தாண்டி
பஸிஃபிக்கில் வந்து விழிந்தது பார்
மேஜிக்கில் இதழ் சிரிப்பினை மாற்றும்
சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும்
நீ ஒரு சன் ஃப்ளவர்
கவிதையில் உந்தன் அழகினை பாட
நான் ஒரு ஷேக்ஸ்பியர்

என் அன்பே காதல் காதல்தான்
இவ்வுலகம் எழுந்து எடுத்தாலும்
லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா

இந்த சாக்ஸபோன் இரு கையில் ஏந்தி
பில் கிளிண்டன் போல வாசி
இவள் கண்ணி அல்ல ஒரு கணினி என்று
பில் கேட்ஸை போல நேசி
சொல்லடா ஓ மன்மதா
பில்லு நீ என்பதா

ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசர் போல
குளிர் தர ஒரு துணையுண்டா வா
விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே
விரைவினில் வந்து ஊதாடிடுவேனே
சம்மதம் விண்டரா
இவள் அது விரல் பிடிக்கிறபோது 
குவாட்டரும் லிக்கரா ஓ

என் உயிரே இந்த நூற்றாண்டில்
ஓர் காவியம் எவனும் எழுதாத
லவ் போயம் நீயும் நானும்தான் ஓ
இவ்வுலகம் எங்கு போனாலும்
ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும்
லவ் லோகோ நீயும் நானும்தான் ஓ
(காதல் வெப்ஸைட்..)

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 27, 2014, 3:49:41 AM9/27/14
to mintamil
2014-09-27 12:42 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2014-09-26 16:35 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
இதுவரை நான் அமைதி காக்கத்தான் நினைத்தேன்.  நெஞ்சு பொறுக்குதில்லையே!

போகிற போக்கைப் பார்த்தால், தமிழ் மறைந்து  "மணிப்பிரவாளம்" கொலோச்சிவிடும் போல எனக்குப் படுகிறது.  அதற்கு மின்தமிழே ஒரு கருவி ஆகி விடும்போல உள்ளது.


இன்றைய தமிழகத்தில் சைக்கிளுக்கு பஞ்சர் ஓட்டும் ஒரு எளிய அடிமட்ட தொழிலாளி பேசும் தமிழிலேயே இதை விட அதிக கலப்பு இருக்கும். இங்கே வடமொழி. அங்கே ஆங்கிலம்.

இங்கே வாதாடும் எல்லாரும் வீட்டில், வெளியே தூயதமிழ் தான் பேசுகிறோமா? நோயாளர் ஊர்தி, தாதி, மகிழ்வுந்து, கணிணி, கைபேசி என தான் வீட்டில், வெளியே பேசுகிறோமா?

சினிமா பாடல் ஒன்று. ஒப்பிடலுக்கு

திரு செல்வன்.
பாடலாசிரியன் நமக்கு அறிமுகம் இல்லாதவர். நாம் சொல்வதை நேரடியாகக் கேட்கவோ எழுதியதைப் பார்க்கவோ வாய்ப்பில்லாதவர்.
1.இங்கு திரு கிருஷ்ணகுமார் நம்மிடையே எழுதுவதற்கு முன்வந்துள்ளவர். அவரிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.
2.அவர் எழுத்துமுறை, அவர் அடையாளம், இரசிக்கிறேன், நூறு வருடங்களுக்கு முன் பாரதி எழுதியது போன்று எழுதுகிறார் எனப் பலவாறு உசுப்பேத்தி உசுப்பித்தி ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளரை மணிப்பிரவாளத்தில் தொடரவிட வேண்டாம் என்று பிற நண்பர்களிடம் வேண்டுகிறொம். அவ்வளவே.

seshadri sridharan

unread,
Sep 27, 2014, 4:04:11 AM9/27/14
to mintamil
திரு கிருஷண குமார் ஐயாவிற்கு,

தமிழிற்குக என்று ஒரு மரபு உண்டு மொழி முதலில் மெய் எழுத்து வரலாகாது என்பது. நீங்கள் க்றைஸ்தவம் என்று எ.ழுதுகிறீர்கள் அதை கிறித்தவம் என்று எழுதலாமே. உருது என்பது தமிழ் மரபு அதை உர்து என்று ஏன் எழுதவேண்டும்?  கிறித்தவ விவிலியம் 150 ஆண்டுகள் முன் மொழிபெயர்க்கப்பட்டது. இன்று புதிய மொழிபெயர்ப்புகள் வந்துவிட்டன.  அதனால் 150 ஆண்டுகள் முந்தயமொ?இ வழக்கு இன்று கைவிடப்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.

சேசாத்திரி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Sep 27, 2014, 4:45:53 AM9/27/14
to mint...@googlegroups.com
On Saturday, 27 September 2014 01:04:11 UTC-7, seshadri sridharan wrote:
தமிழிற்குக என்று ஒரு மரபு உண்டு மொழி முதலில் மெய் எழுத்து வரலாகாது என்பது. 

கனம் சேச்சா அவர்களே,

ஞ, ந, ம, ண, ன, ய, ர, ல, வ, ழ, ள பதினோரு எழுத்துத் தவிரப்
பிற எழுத்துகள் மொழியிறுதி ஆகா என்றும் இலக்கண நூற்பா
உள்ளது.
      
ரஜனிகாந்த், விஜய்காந்த், விஜய், திக்விஜய் சிங்க், ராஹுல், அஹமத்,
முகமத், நிக்காஹ், டேவிட் , விக்ரம், அக்ரம் - எழுத இடமில்லை


தேவ் 

N. Kannan

unread,
Sep 27, 2014, 8:23:50 AM9/27/14
to மின்தமிழ்
2014-09-27 15:49 GMT+08:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:

2.அவர் எழுத்துமுறை, அவர் அடையாளம், இரசிக்கிறேன், நூறு வருடங்களுக்கு முன் பாரதி எழுதியது போன்று எழுதுகிறார் எனப் பலவாறு உசுப்பேத்தி உசுப்பித்தி ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளரை மணிப்பிரவாளத்தில் தொடரவிட வேண்டாம் என்று பிற நண்பர்களிடம் வேண்டுகிறொம். அவ்வளவே.


என்னை உசுப்பேத்துகிறாரோ? என்றொரு சம்சயம் ;-)

அவரால் நடைமுறைத் தமிழில் எழுத முடியும். கூடிய அளவு எழுதுகிறார். அவர் மணிப்பிரவாளமாக எழுதுவது அவர் வீட்டில் பேசும் பேச்சை எழுத்தில் கொண்டு வருகிறாரோ? என்ற சந்தேகம் வருகிறது. நான் இயல்பாக எழுதுகிறேன் என்று சொல்கிறார். இயல்பான ஒன்றை இரசிக்கத்தான் முடியும். அவரைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அவர் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. உம். காஷ்மீரத்து வாழ்க்கை, எல்லை வாழ் மனோநிலை, தமிழ் மொழியை எப்படித் தக்க வைத்துக் கொண்டார் இதுவரை (தேமொழி சொல்வதைக் கவனித்தால் இவர் முன்னமும் இப்படியான தமிழைத்தான் பேசியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அதைத் தக்க வைத்துள்ளார் என்று புரிகிறது). 

இங்கு எழுத முன் வருவோர் குறைவு. வருகின்றவர்களிடமும் நாம் வம்பு பண்னினால் விஷயப்பரிமாற்றம் இல்லாமல் போகும். அவர் நடையில் அவர் எழுதட்டுமே? என்ன குறை. தோப்பில் முகமது மீரானின் நாவலில் பின் சேர்க்கை என்று போட்டு பொருள் சொல்லுவார். அவ்வளவு அரபுக் கலப்பு இருக்கும்.

ஆங்கிலமும், சமிஸ்கிருதமும் ஒன்றாகாது. சமிஸ்கிருதம் இந்தியப் பாரம்பரிய மொழி, இந்திய மொழிகள் அனைத்திலும் ஆளுமை கொண்டிருக்கும் மொழி. அது நம் மொழி. எனவே இவர் பேச்சை வட்டார வழக்கு போல்தான் கருத வேண்டும் என்று தோன்றுகிறது.

அவர் வலிந்து எழுகிறார் எனத்தெரிய வந்தால் நான் சொன்னது அவ்வளவும் வாபஸ்.

நா.கண்ணன் 

seshadri sridharan

unread,
Sep 27, 2014, 10:29:06 AM9/27/14
to mintamil
2014-09-27 14:15 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Saturday, 27 September 2014 01:04:11 UTC-7, seshadri sridharan wrote:
தமிழிற்குக என்று ஒரு மரபு உண்டு மொழி முதலில் மெய் எழுத்து வரலாகாது என்பது. 

கனம் சேச்சா அவர்களே,

ஞ, ந, ம, ண, ன, ய, ர, ல, வ, ழ, ள பதினோரு எழுத்துத் தவிரப்
பிற எழுத்துகள் மொழியிறுதி ஆகா என்றும் இலக்கண நூற்பா
உள்ளது.
      
ரஜனிகாந்த் - து, விஜய்காந்த்- து, விஜய்- யி, , ராஹுல் - லு, அஹமத் - து,
முகமத் - து, நிக்காஹ், டேவிட் - டு , விக்ரம் - விக்கிரமு, அக்ரம் - அக்குரமு  -தேவ்

N. Ganesan

unread,
Sep 27, 2014, 10:52:28 AM9/27/14
to mint...@googlegroups.com
நிக்காஹ் - நிக்காகு நிக்கா. (மலேசியாவின் உயரமான கட்டடப் பெயர்
தனித்தமிழில் நிக்குமோ நிக்காதோ என ஞாபகம். தமிழ்.நெட் நாட்களில்.)

தேவ் - தேவு ஐயா, தேவையா

நா. கணேசன்

 

krishnakumar sharma

unread,
Sep 27, 2014, 12:51:13 PM9/27/14
to minT...@googlegroups.com
அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

தமிழ் மொழிப்பற்றால் அன்பர்கள் சிறியேனுடைய எழுத்தில் குண தோஷங்களை சுட்டுதலுக்கு சிறியேனுடைய நன்றிகள். 

தமிழ் மொழிப்பற்றின் பெயரால் யாராயினும் அவர்களுடைய பாத ரக்ஷையால் சிறியேனை சவட்டினாலும் கூட சிறியேனுக்கு உகப்பு தான்.  பாத ரக்ஷைக்கு தமிழ் சம்பந்தமாயிற்றே.

எங்கள் குலதெய்வம் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் வாய் நிறைய முத்தமிழோனே. தமிழ்த்ரய விநோதப்பெருமானே என்று பாடித் துதித்தாரே.

என்ன?  மாற்று மொழி கலவா தூய தமிழ்ச்செயல்பாட்டாளரின் பாதுகையா அல்லது மொழிக்கலப்பாளரின் பாதுகையா என்று பேதம் பார்ப்பேன்.  முன்னதாக இருந்தால் அஞ்சலி செய்வேன். பின்னதாக இருந்தால் புறந்தள்ளிப்போவேன்.

தமிழ்ப்பற்றாளர்களின் செயல்பாடு எப்படி இருப்பினும் தமிழ்ப்பற்று என்ற மோதிரக்கையால் குட்டுப்படுவது உகப்பிற்குறியது தான்.

Suba.T.

unread,
Sep 27, 2014, 12:52:45 PM9/27/14
to மின்தமிழ்
​திரு.கிருஷ்ணகுமார்,

அறிமுகம் என்ற தலைப்பில் உங்களிடமிருந்து மூன்று மடல்களைக் காண்கின்றேன். ​ஒரே இழையில் உங்கள் பதிவுகளை தந்தால் நன்று. 

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dhivakar

unread,
Sep 27, 2014, 1:04:41 PM9/27/14
to மின்தமிழ்
வர வர இந்த விக்கிரமாதித்ய சுபா, டீச்சர் சுபாவாக மாறுகிறாரோ என்னவோ.. கையிலே கம்பை வைத்துக் கொண்டே விடைத்தாளில் மார்க் போடும் அந்த டீச்சரை சற்றுக் கற்பனை செய்து பார்க்கிறேன். 

எங்கே இந்த துரையைக் காணோம்..கொஞ்சம் படம் போட்டுக் காண்பியுங்களேன்..

anbudan
D

krishnakumar sharma

unread,
Sep 27, 2014, 1:04:53 PM9/27/14
to minT...@googlegroups.com
அன்பின் ஸ்ரீ கண்ணன் ஐயா,

எனது மொழிநடை எனது பின் தொடரும் நிழல்.

மதிப்பிற்குரிய ஸ்ரீமான் அரிசோனன் ஐயா அவர்களின் அரிசோனாவில் இருக்கும் க்ருஹம் ராஜதானி தில்லியில் இருக்கும் சிறியேனது க்ருஹத்திலிருந்து கூப்பிடு தூரம் தான். ஐயா அவர்கள் சிறியேனது தினசர்யைகள் முதற்கொண்டு நன்றாக அறிவார்.

ஐயா அவர்கள் ப்ரகாண்ட பண்டிதர்.  வால்மீகியையும் கம்பனையும் ஒப்பிட்டு ஆதிகவி வால்மீகி யாத்த ஆதிகாவ்யத்தின் குண தோஷங்களை அலசி ஆராய்ந்து உலகத்துக்குப் பகிர்ந்தவர்.

ஐயா அவர்களிடமிருந்து சிறியேன் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமோதிகம்.

தமிழ் மொழிப்பற்றுள்ள அன்புள்ளங்கள் அனைவருக்கும் சிறியேனது ஒரு பணிவார்ந்த விக்ஞாபனம். 

நெடிலெழுத்தற்ற பாக்கள் என்று ஒரு சிறு பதிவை இட்டிருக்கிறேன்.

திருமுறைகள், நாலாயிரம், தமிழிலக்கியங்கள் என அன்புள்ளங்கள் தாங்கள் வாசித்த நெடிலெழுத்தற்ற பாக்களைப் பகிர்ந்து சிறியேனுக்கு தமிழுணவு பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

N. Ganesan

unread,
Sep 27, 2014, 1:28:30 PM9/27/14
to mint...@googlegroups.com, vallamai


On Friday, September 26, 2014 11:58:44 AM UTC-7, செல்வன் wrote:
அப்படியே விவாகத்துக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அதையும் தமிழ் சொல் ஆக்கினால் இந்த வடமொழி கலப்பு பிரச்சனையும் தீர்ந்துடும்.


கலியாணம் > கல்யாணம், ஒட்டியாணம் > ஒட்யாணம்.
இன்னொரு சொல் தருகிறேன்: கருநாடகம் (கருநடர் - இளங்கோ அடிகள்) > கர்நாடகம் என வடமொழியில்
தமிழ்ச்சொல் திரிந்தது.
கருநாடு > கர்நாடு > கன்னடம் (பாஷையின் பேர் derived from Consonant Assimilation).

இன்னும் இருக்கும். கிருட்டிணகுமாரசருமர் அறிவார் என நினைக்கிறேன்.

நா. கணேசன்

Dev Raj

unread,
Sep 27, 2014, 1:32:57 PM9/27/14
to mint...@googlegroups.com
On Saturday, 27 September 2014 09:51:13 UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
........... மோதிரக்கையால் குட்டுப்படுவது உகப்பிற்குறியது தான்.

உகப்புக்குரியது  - சரியாக இருக்கும்.

ஏதோ உரிமை எடுத்துக்கொண்டு எழுதுகிறேன்,
தவறாயின் மன்னிக்க வேண்டும்


தேவ்

amachu

unread,
Sep 27, 2014, 1:43:16 PM9/27/14
to mint...@googlegroups.com


On Friday, September 26, 2014 7:26:45 PM UTC+5:30, seshadri sridharan wrote:
அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. மற்றும் இவருடையது போன்ற தமிழ் நடை தமிழ்த் தேசியர் ஒழிக்க நினைக்கும் திராவிடத்தை நிலை பெறச்செய்யவே உதவும் பார்ப்பன வெறுப்புடன். அன்புகூர்ந்து அவர் தம் நடையை திருத்திக்கொள்வது அவர் சார்ந்த குமுகத்திற்கு நலம் பயக்கும்.


குமுக நடப்பு சாதியை போட்டுக் கொண்டிருந்த போது சிலர் போடாதது போல், குமுகம் போடாத போது சிலர் போட்டு, அது பலராக அதே உரிமையிருக்க வேண்டும்.

--

ஆமாச்சு

amachu

unread,
Sep 27, 2014, 1:45:02 PM9/27/14
to mint...@googlegroups.com


On Saturday, September 27, 2014 3:05:49 AM UTC+5:30, oruarizonan wrote:
இதுவரை நான் அமைதி காக்கத்தான் நினைத்தேன்.  நெஞ்சு பொறுக்குதில்லையே!

போகிற போக்கைப் பார்த்தால், தமிழ் மறைந்து  "மணிப்பிரவாளம்" கொலோச்சிவிடும் போல எனக்குப் படுகிறது.  அதற்கு மின்தமிழே ஒரு கருவி ஆகி விடும்போல உள்ளது.

பரிதிமால் கலைஞரையும், மறைமலை அடிகளையும் தூக்கி எறிந்துவிடுவோமே!.  

பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து வருவது காலத்தின் கட்டாயம்.  அது ஒருபுறமிருக்க, பாதிக்குமேல் வடசொற்களைக் கலந்து எழுதவதையும் போற்றுவோம், அதுவும் ஒரு அழகுதான் என்று போற்றத துவங்கினால், சேர நாட்டுத் தமிழ் "மலையாள"மாக ஆனதுபோல ஒரு "தங்க்ஸ்கிருத"மோ, அல்லது ஒரு "சம்ஸ்மிழோ" உருவாகி விடும்.  


மூஷிக நாட்டில் தமிழ் பேசப்பட்டதற்கு சான்றென்ன?

--

ஆமாச்சு

amachu

unread,
Sep 27, 2014, 1:48:26 PM9/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, September 27, 2014 10:58:30 PM UTC+5:30, N. Ganesan wrote:


On Friday, September 26, 2014 11:58:44 AM UTC-7, செல்வன் wrote:
அப்படியே விவாகத்துக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அதையும் தமிழ் சொல் ஆக்கினால் இந்த வடமொழி கலப்பு பிரச்சனையும் தீர்ந்துடும்.


கலியாணம் > கல்யாணம், ஒட்டியாணம் > ஒட்யாணம்.
இன்னொரு சொல் தருகிறேன்: கருநாடகம் (கருநடர் - இளங்கோ அடிகள்) > கர்நாடகம் என வடமொழியில்
தமிழ்ச்சொல் திரிந்தது.
கருநாடு > கர்நாடு > கன்னடம் (பாஷையின் பேர் derived from Consonant Assimilation).

வருசம் - வர்சம்ணு திரிந்தது.
வருணம் - வர்ணம்னு திரிந்தது.
புருசன் - புர்சன்னு திரியலையே!

பேருல கூட மொழி மாறினாலும் என் புருசன்தான் எனக்கு மட்டுந்தான்னு வாழ்ந்த தமிழச்சிகள் வாழ்க!

--

ஆமாச்சு

ஜி.ஸன்தானம்

unread,
Sep 27, 2014, 2:04:38 PM9/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கலியாணம் தமிழ்ச்சொல். அதன் முக்கியமான பொருளில் இன்னும் தமிழில் இருக்கிறது. கல்யாணம் என்று வடசொல் ஆகியது.

ஒப்பு: ஒட்டியாணம் - ஒட்யாணம் (வடமொழியில்).

NG


’கல்யாண்’ என்பது வடபகுதிகளில்  'Welfare' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்று கருதுகிறேன்.

 -ஜி.ஸன்தானம்

N. Ganesan

unread,
Sep 27, 2014, 2:07:07 PM9/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
Auspicousness
 


 -ஜி.ஸன்தானம்

Oru Arizonan

unread,
Sep 27, 2014, 2:45:42 PM9/27/14
to mint...@googlegroups.com
அய்யா அசடு முசுடு அவர்களே,

//மணிப்பிரவாளம் வழங்கியதற்குக் காரணம்  அச்சில் தமிழ் எழுத்துக்கள் மறை சார்ந்த கருத்துக்களை வெளியிட உதவவில்லை என்பதால்தானே.//

தமிழ்நாட்டில் வடமொழியை எழுதுவதற்கு "கிரந்த எழுத்தக்கள்" உண்டு.  தமிழ்நாட்டார் வடமொழியை அக் கிரந்த எழுத்துக்களை எழுதிவந்தார்கள், ஐம்பது ஆண்டுகள் முன்னர்வரை.  சைவ, வைணவ ஆகமங்கள் தமிழ் கிரந்த எழுத்துக்களிதான் எழுதப்பட்டு இருக்கின்றன.  

என்று தேவநாகரி எழுத்து தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார் சபாவால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதோ, பல நூறு ஆண்டுகளாகத தமிழர்களால் கையாளப்பட்டு வந்த தமிழ் கிரந்த எழுத்துக்கள் கையாளப்படுவது நின்று போய் விட்டது.  

ஐம்பது ஆண்டுகளை இதைச் செய்து முடியும் என்றால், தமிழிலிருந்து வேறு மொழியைத் தோற்றுவிக்க "மணிப் பிரவாளத்"திற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படும், அதை நாம் உற்சாகப்படுத்தினால் என்பதை நீங்களே முடிவு செய்து  கொள்ளுங்கள். 

தமிழின் ஒலிகளை வடமொழியில் ஒலிப்பதற்கு இதுவரை என்னென மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன, அசடுமுசுடு அய்யா, கூறுங்கள்!

அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Sep 27, 2014, 2:59:56 PM9/27/14
to mint...@googlegroups.com
உயர்திரு செல்வன் அவர்களே,

//இங்கே வாதாடும் எல்லாரும் வீட்டில், வெளியே தூயதமிழ் தான் பேசுகிறோமா? நோயாளர் ஊர்தி, தாதி, மகிழ்வுந்து, கணிணி, கைபேசி என தான் வீட்டில், வெளியே பேசுகிறோமா?//

இப்படி கேள்வி தொடுக்கப்படும் என்றுதான்...

 //அசைவுகளை (acceents) இரசிக்கிறேன்.  கொங்கு தமிழ், நாஞ்சில் தமிழ், மதுரைத் தமிழ், நகரத்தார் தமிழ், பிராமணர் தமிழ், திருநெல்வேலித் தமிழ், சென்னைத் தமிழ், தஞ்சைத் தமிழ், செந்தமிழ், கொடுந்தமிழ், என்று பலப்பல அசைபுகளும் தமிழன்னைக்கு அழகு சேர்க்கின்றன.  ஆயினும், எழுதும்பொது இயன்ற அளவு  செந்தமிழைக் கையாளுவது நம் மரபாக இருந்து வருகிறது. //

... பகர்ந்திருந்தேனே, தாங்கள் அதைப்படித்தும் இப்படி எழுதி இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.  கதை எழுதும்போது, எந்த அசைபையும் கையாளலாம், ஏனெனில், கதாபாத்திரங்களின் தன்மையைப படிப்போருக்கு உணர்த்த அம்முறை கையாளப்படுகிறது.  ஆயினும், கட்டுரைகளிலோ, ஆராய்ச்சியிலோ அவ்வசைபுகளை தேவையின்றிக் கையாளுவது மரபல்ல, இது தமிழுக்குமட்டுமல்ல. மற்ற மொழிகளுக்கும் பொருந்தும்.

ஆங்கிலத்தில் எத்தனையோ அசைபுகள்  அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ளன.  எழுதும்போது அந்த அசைபுகளில் எழுதவைதில்லை  என்பது தாங்கள் உள்பட அனைவரும் அறிந்ததுதானே!

உயர்திரு தேமொழி அவர்கள் இங்கு பகர்ந்ததையே நானும் பகருகிறேன்.  //நான் 27 ஆண்டுகள் அயல் நாட்டில்தான் வசிக்கிறேன்.

இணையம் கிடைக்கும்வரை தமிழகத் தொடர்பும் கிடையாது.  

கிடைத்த பின்னரும் கூகுள் வந்து உதவும் வரை தமிழில் எழுத வாய்ப்பு இருந்ததில்லை.  ஆனால் ....

எனது தாய்மொழி எனக்கு மறக்கவில்லை//

நான் உயர்திரு தேமொழி அயல்நாட்டில் இருந்ததைவிட அதிக நாள்கள் அயல்நாட்டில் வசித்து வருகிறேன்.  எனக்கும் தாய்மொழி மறந்துபோகவில்லை, அய்யா!  மாறாக, இன்னும் அன்புடன், பிடிப்புடன், பாசத்துடன், என் நாவிலும், இதயத்திலும், என் மூச்சிலும் கலந்து பெருகி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கடைசியாக் ஒன்று,..

"உறங்குபவரை எழுப்பலாம், உறங்குவதுபோல கண்ணைமூடி இருப்பவரை எழுப்ப இயலாது."

ஒரு அரிசோனன் 
==================

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Sep 27, 2014, 3:02:06 PM9/27/14
to mint...@googlegroups.com
நன்றி, உயர்திரு தேவ ராஜ் அவர்களே !

தமிழ் இலக்கணத்தை இவ்வாறு அனைவருக்கும் தக்க நேரத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 
===============

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Sep 27, 2014, 3:06:59 PM9/27/14
to mint...@googlegroups.com
அய்யா ஆமாச்சு அவர்களே,

எனக்கு மூஷிக நாடு என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைவுக்கு வரவில்லை.  அருள்கூர்ந்து அதை அறிவித்தால், அடியேன் ஆனந்தமடைவேன்.

ஒரு அரிசோனன்
=============== 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Sep 27, 2014, 4:01:55 PM9/27/14
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய கிருஷ்ணகுமார் அவர்களே,

வீடு, அகம், இல்  என்று பல அருமையான தமிழ்ச் சொற்கள் இருந்தும் கிருகம் என்ற வடமொழிச் சொல்லை வலிந்து கையாள த்தான் வேண்டுமா?

பிரகாண்ட பண்டிதர் என்பதற்கு என்ன பொருள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

தங்கள் உள்ளக்கிடக்கையைத் தமிழில் வடித்தெடுப்பது அதைக் கண்ணுறும் பெரும்பாலான தமிழர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற அன்பிற்காகவே!  

"நெடிலெழுத்தற்ற  பாக்கள்" என்று தூய தமிழில் எழுதி, என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டர்கள்.  அதற்கடுத்த சொற்றொடரும் அப்படியே!  இவ்வளவு நல்ல தமிழில் கருத்தை வெளியிடக்கூடிய தாங்கள் இப்படிப்  பிடிவாதம் பிடிப்பதன் காரணம் என்ன ஐயா?  நானறியேன்.  

தங்களி ன் மணிப்பிரவாள அடையாளம் அதற்கு அணையிட்டுத் தடுத்தால், தமிழ்ப்பாட்டி ஔவையுடன்  "சுட்ட பழம், சுடாத பழமெ"ன்று தமிழில் சொல்லாட்டம் ஆடிய  அய்யன் முத்துக்குமரன் அதை உடைத்தெறி என்று எங்கள் பலர் மூலமாகத் தங்களுக்கு இடும் ஆணையாகத் தாங்கள் எடுத்துக்கொண்டு, தமிழ்ப் பணி  புரியலாமே!  அச்செயல் பொன்மலர் நாற்றமுடைத்ததாகும் சிறப்பினைப் பெறுமல்லவா!

தாங்களும் நானும், இன்னும் பலகோடித் தமிழ் மக்களும் வணங்கும் தமிழ்க் கடவுளான முருகையன்தான் தங்கள் மனதில் புகுந்து தனித்தமிழில் எழுதும் ஆர்வமெனும் விளக்கை ஏற்றவேண்டும் என்று விராலிமலையில் குடிகொண்டு, அருணகிரிநாதருக்கு அருள் செய்த ஐயனை வேண்டுகிறேன்.

தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணற்ற தமிழறிஞர்கள் இந்த மின்தமிழ் குழுமத்தில் உள்ளார்கள்.  இருப்பினும், அவர்களின் முன் ஆதவன்முன் அகல்விளக்கான சிரியோனும் முயலுகிறேன்.

தங்கள் இனிய கட்டளைக்குத் தலை சாய்க்கிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Sep 27, 2014, 10:18:18 PM9/27/14
to mintamil

2014-09-27 13:59 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
பகர்ந்திருந்தேனே, தாங்கள் அதைப்படித்தும் இப்படி எழுதி இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.  கதை எழுதும்போது, எந்த அசைபையும் கையாளலாம், ஏனெனில், கதாபாத்திரங்களின் தன்மையைப படிப்போருக்கு உணர்த்த அம்முறை கையாளப்படுகிறது.  ஆயினும், கட்டுரைகளிலோ, ஆராய்ச்சியிலோ அவ்வசைபுகளை தேவையின்றிக் கையாளுவது மரபல்ல, இது தமிழுக்குமட்டுமல்ல. மற்ற மொழிகளுக்கும் பொருந்தும்.

ஆங்கிலத்தில் எத்தனையோ அசைபுகள்  அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ளன.  எழுதும்போது அந்த அசைபுகளில் எழுதவைதில்லை  என்பது தாங்கள் உள்பட அனைவரும் அறிந்ததுதானே!


ஐயா

இந்த மரபு மறைந்து ஈழதமிழ், இஸ்லாமிய தமிழ், கொங்குதமிழ் என பல நடைகளில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வருகிறார்கள். மடலுக்கு கீழே அவற்றில் சிலவற்றின் பகுதிகளை இட்டுள்ளேன். பார்க்கவும்.

மற்றபடி மரபு கவிதை என்பதன் இலக்கண மரபுகளை மீறி புதுகவிதை படைக்கிறார்கள். அதை முன்பு எதிர்த்தாலும் இப்போது ஏற்றுகொண்டு விட்டார்கள். கவிதை எனும் பெயரில் இங்கேயே பல வகை நடைகள் எழுதப்படுகின்றன. இன்னமும் இலக்கணத்தை பின்பற்றி எழுதுபவர்கள் இருக்கிறார்கள்.

http://maniyinpakkam.blogspot.com/search?updated-min=2008-01-01T00:00:00-05:00&updated-max=2009-01-01T00:00:00-05:00&max-results=50

நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத் திருநாள்ன்னா நொம்பப் புடிக்கும். மூனு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். அதுவும் அந்த வீதம்பட்டி வேலூர் வினாயகங் கோவில் மைதானம் இருக்கே? அட அட, சொல்லி மாளாது போங்க. கோயலைச் சுத்தியும் அரசமர வேப்பமர இணைகள், ஒவ்வொரு இணைக்கும் தனி மேடை கட்டி, அந்த மேடையில மரங்களுக்குக் கீழ சாமி சிலைகள வெச்சி, அவ்வளவு நேர்த்தியா இருக்கும். இதெல்லாம் மைதானத்துலன்னா, கோவில் வளாகத்துக்குள்ள அழகான வில்வமரம் எப்பவும் நல்ல வாசத்தோட தென்றல் காத்தை சிலு சிலுன்னு வீசிட்டே இருக்கும்.

கோயிலோட கொடி மரத்துக்கு, அழகான சிற்பக் கூடத்தை வடிவமைச்சு, அதுக்கு மேலதான் தீபம் ஏத்துறது. ஊரே கூடும், அந்த பதினாலு நாளும் வெகு விமரிசையா இருக்கும். கடைசி நாள் அன்னைக்கு தாங்க, வெடிகளும், சூந்தும், சொக்குப்பனையும் களை கட்டும். வெடிய வெடிய சிறப்பா இருக்கும். நாம பாட்டெல்லாம் பதிஞ்சிட்டு வர்றம் இல்லீங்களா, அப்ப சூந்து ஞாவகம் வர, சூர்யா அவிங்ககிட்ட அதுக்கான பாட்டைக் கேக்க, அவரு தெரியாதுன்னு சொல்லிப் புட்டாருங்க. சரிங்க, எனக்குத் தெரிஞ்ச மேலதிக விபரங்களைப் பாக்கலாம் இப்ப.

http://believersthirst.blogspot.com/2012/01/blog-post.html


தேவனுடைய பரிசுத்த தன்மையை தூஷிக்கின்றவர்களாக காணப்படுகிறார்கள். இவர்கள் சாத்தானுடைய கூட்டத்தார்கள். தேவனுடைய விரோதிகளான இந்த சாத்தானுடைய கூட்டத்தார் இன்றைக்கு 'திரித்துவம்' என்ற சொல் வேதத்தில் இல்லை என்று சொல்லி விசுவாசிகளை வஞ்சித்துக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

பரிசுத்த ஆவியானவரைக்குறித்து வேதம் சொல்லுகிறது அவர் கர்த்தர். (2கொரி-3:17 கர்த்தரே ஆவியானவர் ...) என்று.

பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனையும் அவருடைய திரித்துவ தெய்வத்தன்மைகளையும் விசுவாசித்து, திருச்சபைக்குறிய விசுவாச பிமாணங்களாகிய

அப்போஸ்தல விசுவாச பிரமாணம்,

நிசாயா விசுவாச பிரமாணம் மற்றும்

அதநாசியஸ் விசுவாச பிரமாணம்

ஆகிய விசுவாச பிரமாணங்களை ஏற்றுக்கொண்ட தேவனுடைய பிள்ளைகள் இந்த குழப்பங்களில் சிக்கிக்கொள்ளாமல் இந்த துர் உபதேசகாரர்களை தெளிவாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.

பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனையும் தேவனுடைய திரித்துவ தெய்வத்தன்மைகளையும் பிரித்து, கூறுபோட்டு, துண்டுதுண்டாக ஆராட்சி செய்து, கடைசியில் ஒன்றும் புரியாமல் குழம்பி பைத்தியக்காரர்களாகி பிறரையும் குழப்பிக்கொண்டு  திரிகின்றார்கள் இன்னொரு கூட்டத்தார். அவர்களையும் நாம் அடையாளம் கண்டு அவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 27, 2014, 11:47:39 PM9/27/14
to mint...@googlegroups.com
On 9/28/14, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:

பலப்பல அசைபுகளும்
> தமிழன்னைக்கு அழகு சேர்க்கின்றன. ஆயினும், எழுதும்பொது இயன்ற
> அளவு செந்தமிழைக் கையாளுவது நம் மரபாக இருந்து வருகிறது. /

ஆம்.

> ஆங்கிலத்தில் எத்தனையோ அசைபுகள் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ளன. எழுதும்போது அந்த அசைபுகளில் எழுதவைதில்லை என்பது தாங்கள் உள்பட அனைவரும்
> அறிந்ததுதானே!
>
> உயர்திரு தேமொழி அவர்கள் இங்கு பகர்ந்ததையே நானும் பகருகிறேன்.

எனக்கும் தாய்மொழி மறந்துபோகவில்லை, அய்யா! மாறாக,
> இன்னும் அன்புடன், பிடிப்புடன், பாசத்துடன், என் நாவிலும், இதயத்திலும், என்
> மூச்சிலும் கலந்து பெருகி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.*

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
>
> கடைசியாக் ஒன்று,."உறங்குபவரை எழுப்பலாம், உறங்குவதுபோல கண்ணைமூடி இருப்பவரை எழுப்ப இயலாது."

:)

N. Ganesan

unread,
Sep 28, 2014, 12:01:39 AM9/28/14
to mint...@googlegroups.com


On Saturday, September 27, 2014 1:01:55 PM UTC-7, oruarizonan wrote:

தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணற்ற தமிழறிஞர்கள் இந்த மின்தமிழ் குழுமத்தில் உள்ளார்கள்.  இருப்பினும், அவர்களின் முன் ஆதவன்முன் அகல்விளக்கான சிரியோனும் முயலுகிறேன்.

ஸ்ரீ என்னும் கிரந்தச்சொல்லைச் சிரீ என்று தமிழ்ப்படுத்தினர் ஆழ்வார்கள். உ-ம்: சிரீதரா = ஸ்ரீதரா.
பிராகிருதத்தில் சிரி என்றும், பின்னர் திரி என்றும் ஆனது: உ-ம்: நம்பிஸ்ரீ -> நம்பூதிரி, எம்பிரான்ஸ்ரீ = எம்பிராந்திரி
கணக்கில் பல புதிய தேற்றங்களை நியூட்டனுக்கு முன்னமே தந்த மாதவன் எம்பிராந்திரி

சிரியோன் என்பதில் உள்ள சிரி ஸ்ரீயின் தமிழாக்கம் என எடுத்தால் சரிதானா?

அன்புடன்
நா. கணேசன்

Dev Raj

unread,
Sep 28, 2014, 12:20:01 AM9/28/14
to mint...@googlegroups.com
On Saturday, 27 September 2014 11:07:07 UTC-7, N. Ganesan wrote:
Auspicousness

தமிழ் ‘யாணர்’ - பொருள் என்ன ?
கலியாணம் - ஒரே சொல்லாகச் சங்க இலக்கியத்தில்
ஐயா சொல்லும் பொருளில் உள்ளதா ?


தேவ் 
 

Oru Arizonan

unread,
Sep 28, 2014, 2:08:02 AM9/28/14
to mint...@googlegroups.com
//சிரியோன் என்பதில் உள்ள சிரி ஸ்ரீயின் தமிழாக்கம் என எடுத்தால் சரிதானா?//

உயர்திரு கணேசன் ஐயா ,

தமிழில் நாம் எழுதுவது "சிறியோன்," "சிறியேன்".  "சிரியோன்" என்ற குறியீட்டை நான் இதுவரை கண்டதில்லை.  ஏதாவது மேற்கோள் காட்டினால், நன்றியுள்ளவனாக இருப்பேன்.

ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Sep 28, 2014, 2:10:46 AM9/28/14
to mint...@googlegroups.com
உயர்திரு கணேசன் ஐயா ,
என் பிழையைப் புரிந்து கொண்டேன்.  //ஆதவன்முன் அகல்விளக்கான சிரியோனும் முயலுகிறேன்.//
"சிறியேனும்" என்று பதிந்திருக்கவேண்டும்.  யுனிகோடு முறை சிலசமயம் என் காலை [கைவிரல்களை] வாரிவிட்டு விடுகிறது.  குறிப்பிட்டமைக்கு நன்றி.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

amachu

unread,
Sep 28, 2014, 3:14:20 AM9/28/14
to mint...@googlegroups.com


On Sunday, September 28, 2014 12:36:59 AM UTC+5:30, oruarizonan wrote:
அய்யா ஆமாச்சு அவர்களே,

எனக்கு மூஷிக நாடு என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைவுக்கு வரவில்லை.  அருள்கூர்ந்து அதை அறிவித்தால், அடியேன் ஆனந்தமடைவேன்.


சேரர்களோடு போரிட்ட வட கேரள நாடு: https://sites.google.com/site/cbrgem/cherished-memories-of-the-chirakkal-i-love/historical-perspective

அதோடு இன்றை கொங்கு நாடே பெரும்பாலான சேர பரப்பு.

திருவிதாங்கூர் கூட மெல்ல மெல்ல மாறின ஒன்னுதான்.

--

ஆமாச்சு

amachu

unread,
Sep 28, 2014, 5:23:43 AM9/28/14
to mint...@googlegroups.com
ஆய் வம்சம் பற்றியும் பெருங்குழப்பம் இருக்கு.

அவர்களுக்கு பாண்டியரோடும் போர் நடந்திருக்கு சேரரோடும் நடந்திருக்கு.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் திதியனை வென்ற பிறகு தமிழ் அங்கே புகுத்தப்பட்டிருக்கலாம்.

இப்போ மலையானம் தமிழ்லேர்ந்து வந்ததுன்னு சொல்வதை மறுக்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன :)

--

ஆமாச்சு


Dev Raj

unread,
Sep 28, 2014, 7:19:47 AM9/28/14
to mint...@googlegroups.com
On Saturday, 27 September 2014 07:29:06 UTC-7, seshadri sridharan wrote:
ரஜனிகாந்த் - து, விஜய்காந்த்- து, அஹமத் - து, முகமத் - து, 
 
 
ஊருக்கு உபதேசிக்கும் ஊழ்க ஓகியாரே ! 
ஒரே ஒரு காட்டு -

On Friday, 9 November 2012 19:18:25 UTC-8, seshadri sridharan wrote:
பிரபாத் ரஞ்சன் சர்க்கார் பிராமி ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தம் சொற்பொழிவில் கூறியுள்ளார்.


நீவிர் பிரபாத்து என்றா எழுதியுள்ளீர் ?
மேலும் ஸர்கார் ஜீயை நீவிர் பிரபாத்து என்று என எழுதாத இடங்கள்
உள்ளன;நாம் கடைப்பிடிப்பதையே பிறருக்கு உபதேசிக்க
வேண்டும்


தேவ் 

N. Ganesan

unread,
Sep 28, 2014, 10:28:24 AM9/28/14
to mint...@googlegroups.com, vallamai
On Sunday, September 28, 2014 12:36:59 AM UTC+5:30, oruarizonan wrote:

எனக்கு மூஷிக நாடு என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைவுக்கு வரவில்லை.  அருள்கூர்ந்து அதை அறிவித்தால், அடியேன் ஆனந்தமடைவேன்.

வடகேரளம் - காசரகோடு (காஞ்சிரங்கோடு), செறுகுன்னு (சிறுகுன்று) பகுதிகள் தமிழகத்தின் முக்கியமான பிரதேயங்களாக
சங்க காலத்தில் விளங்கின. சிறந்த பெண்புலவராக அங்கே பொன்முடியார் இருந்திருக்கிறார். பல பாடல்கள்
அவர் பாடினவை சங்க இலக்கியத்தில் உள்ளன. ’ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே’ ... பெண் சம்பந்தமான
பாடல்கள் செய்தவர் அவர். சிறுவனை வளர்த்தும் பாட்டு - பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின் எனத் தொடங்கும்.
எல்லாப் பாடலிலும் முக்கியமானது மாதவிடாய் பற்றி மிக அழகாகச் சொல்லும் பாடல். குதிரைமறம் - கோயிலில்
விலக்காகும் ancient taboo - common to all old societies பற்றிக் கூறியுள்ள பாடல். 

இப்பொழுதுதான் women's liberation movement வளர்ந்துகொண்டுள்ளது. ஆனால் அன்றைய நிலையைப்
படம் பிடித்துள்ளார் மூஷிக நாட்டுப் பெண்கவிஞர்.

பகுத்தறிவு இயக்கம் அனுப்பிய ஆவணப் படம் பார்க்க ஆவல். மாதவிலக்கு என்பது எல்லா சமூகங்களிலும் ஒரு ancient taboo.
இப்போதைய வட கேரளாவில் வாழ்ந்த பெண்புலவர் தான் புறம் 299-ல் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்த taboo பற்றி நுணுக்கமாக
முதலில் பேசியவர். மற்றப் பொருள்கள் எது எடுத்தாலும் ஏன் பொருந்துவதில்லை என்றும் விளக்குகிறார்கள் இங்கே,

I mentioned the custom of thiiTTu prevalent among Malasars in the Western Ghats,
(Malasar tribe's language is slightly different from Tamil dialects).

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Sep 28, 2014, 12:08:56 PM9/28/14
to mint...@googlegroups.com
உயர்திரு ஆமாச்சு அவர்களே,

//தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் திதியனை வென்ற பிறகு தமிழ் அங்கே புகுத்தப்பட்டிருக்கலாம். 

இப்போ மலையானம் தமிழ்லேர்ந்து வந்ததுன்னு சொல்வதை மறுக்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன //

உங்களது நகைச் சுவையை நான் மின்தமிழில் இரசிப்பதுண்டு.  உங்களது நகைச் சுவையிலேயே சிறந்தது எது என்றால், இதுவே என்று நான் அறுதியிட்டுக் கூறுவேன் ஐயா!

இதற்கு மறுமொழி இட்டு என்னை  நகைப்புக்கு இடமாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.  

நீங்கள் உங்கள் நகைச் சுவையைத் தந்துகொண்டு இருங்கள்!  மிகவும் கடுமையான வாதங்களுக்கிடையில் தங்களின் நகைச்சுவை வெப்பத்திற்கிடையே வீசும் குளிர்த் தென்றலாக உள்ளது.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

amachu

unread,
Sep 28, 2014, 12:12:50 PM9/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, September 28, 2014 7:58:24 PM UTC+5:30, N. Ganesan wrote:
On Sunday, September 28, 2014 12:36:59 AM UTC+5:30, oruarizonan wrote:

எனக்கு மூஷிக நாடு என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைவுக்கு வரவில்லை.  அருள்கூர்ந்து அதை அறிவித்தால், அடியேன் ஆனந்தமடைவேன்.

வடகேரளம் - காசரகோடு (காஞ்சிரங்கோடு), செறுகுன்னு (சிறுகுன்று) பகுதிகள் தமிழகத்தின் முக்கியமான பிரதேயங்களாக
சங்க காலத்தில் விளங்கின.


ஆக அது சேர நாடு கிடையாதுன்னு முதலில் சொல்லவும். அப்பறம் தமிழ் பேசின விவரத்திற்கு வரலாம்.

 
சிறந்த பெண்புலவராக அங்கே பொன்முடியார் இருந்திருக்கிறார்.


பொன்முடியாரின் வரலாற்றை கூறும் நூல் எந்த நூலகத்தில் கிடைக்கிறது?

--

ஆமாச்சு

amachu

unread,
Sep 28, 2014, 12:14:04 PM9/28/14
to mint...@googlegroups.com


On Sunday, September 28, 2014 9:38:56 PM UTC+5:30, oruarizonan wrote:
உயர்திரு ஆமாச்சு அவர்களே,

//தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் திதியனை வென்ற பிறகு தமிழ் அங்கே புகுத்தப்பட்டிருக்கலாம். 

இப்போ மலையானம் தமிழ்லேர்ந்து வந்ததுன்னு சொல்வதை மறுக்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன //

உங்களது நகைச் சுவையை நான் மின்தமிழில் இரசிப்பதுண்டு.  உங்களது நகைச் சுவையிலேயே சிறந்தது எது என்றால், இதுவே என்று நான் அறுதியிட்டுக் கூறுவேன் ஐயா!


ஐயா!

மொத்த கேரளமும் சேர நாடுன்னு உங்க காமெடிக்கு நான் தேவலாம்.

--

ஆமாச்சு

amachu

unread,
Sep 28, 2014, 12:21:13 PM9/28/14
to mint...@googlegroups.com


On Sunday, September 28, 2014 9:38:56 PM UTC+5:30, oruarizonan wrote:
உயர்திரு ஆமாச்சு அவர்களே,

//தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் திதியனை வென்ற பிறகு தமிழ் அங்கே புகுத்தப்பட்டிருக்கலாம். 

இப்போ மலையானம் தமிழ்லேர்ந்து வந்ததுன்னு சொல்வதை மறுக்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன //

உங்களது நகைச் சுவையை நான் மின்தமிழில் இரசிப்பதுண்டு.  உங்களது நகைச் சுவையிலேயே சிறந்தது எது என்றால், இதுவே என்று நான் அறுதியிட்டுக் கூறுவேன் ஐயா!


அதோடு ஆய் அண்டிரன் முதலானோர் துவாரகை வழி வந்தோர் என்பது நச்சினார்க்கினியர்தம் கருத்து.

அதற்கு முன்னர் அங்கு யார்னு அடுத்த கேள்வி. :)

இனியும் மொத்த கேரளமும் சேர நாடுன்னு வதந்திகளை பரப்ப வேண்டாம்.

--

ஆமாச்சு

Oru Arizonan

unread,
Sep 28, 2014, 12:27:38 PM9/28/14
to mint...@googlegroups.com
//மொத்த கேரளமும் சேர நாடுன்னு உங்க காமெடிக்கு நான் தேவலாம்.//

அய்யா ஆமாச்சு அவர்களே,

நான் உங்களிடம் "மூஷிக நாடு எது என்றுதான் கேட்டேன்.  நீங்களாகவே witness, jury and judgeஆக மாறி மீண்டும் நகைச்சுவை நல்குகிறீர்களே!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

amachu

unread,
Sep 28, 2014, 12:29:27 PM9/28/14
to mint...@googlegroups.com


On Sunday, September 28, 2014 9:51:13 PM UTC+5:30, amachu wrote:


On Sunday, September 28, 2014 9:38:56 PM UTC+5:30, oruarizonan wrote:
உயர்திரு ஆமாச்சு அவர்களே,

//தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் திதியனை வென்ற பிறகு தமிழ் அங்கே புகுத்தப்பட்டிருக்கலாம். 

இப்போ மலையானம் தமிழ்லேர்ந்து வந்ததுன்னு சொல்வதை மறுக்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன //

உங்களது நகைச் சுவையை நான் மின்தமிழில் இரசிப்பதுண்டு.  உங்களது நகைச் சுவையிலேயே சிறந்தது எது என்றால், இதுவே என்று நான் அறுதியிட்டுக் கூறுவேன் ஐயா!


அதோடு ஆய் அண்டிரன் முதலானோர் துவாரகை வழி வந்தோர் என்பது நச்சினார்க்கினியர்தம் கருத்து.


பாரி வேந்தன் மூவேந்தரால் கொல்லப்படுகிறான். கபிலர் இருங்கோவேள் என்று மகிஷ நாட்டு வேளிரிடம் சொல்வது இது,
=========
நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே
========

காமெடியனுக்கு பொருள் புரிகிறது. ரசித்தவருக்கு எப்பூடி?

--

ஆமாச்சு

amachu

unread,
Sep 28, 2014, 12:30:23 PM9/28/14
to mint...@googlegroups.com


On Sunday, September 28, 2014 9:57:38 PM UTC+5:30, oruarizonan wrote:
//மொத்த கேரளமும் சேர நாடுன்னு உங்க காமெடிக்கு நான் தேவலாம்.//

அய்யா ஆமாச்சு அவர்களே,

நான் உங்களிடம் "மூஷிக நாடு எது என்றுதான் கேட்டேன்.  நீங்களாகவே witness, jury and judgeஆக மாறி மீண்டும் நகைச்சுவை நல்குகிறீர்களே!


அதுக்கு சொன்ன பதிலை வாசிக்கலையா!

--

ஆமாச்சு

Pandiyaraja

unread,
Sep 28, 2014, 1:56:31 PM9/28/14
to mint...@googlegroups.com
அன்பின் கிருஷ்ணகுமர் ஐயா அவர்களுக்கு,
தாங்கள் ஒரு மடலில் கூறியிருந்தீர்கள் :>>தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள விவிலியம் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத கலப்பிலானாதே. >>
அதற்கு மட்டும் எனது பதில்:

விவிலியம் மொழிபெயர்க்கப்பட்ட நாள்களில் இருந்த கலப்புத்தமிழ் நடையிலேயே விவிலியமும் தமிழில் பெயர்க்கப்பட்டது. அதன் பெரும்பகுதியை மொழிபெயர்த்தவர் யாழ்ப்பாணப்புலவர் ஆறுமுகநாவலர் ஆவார். எனவே அந்த நடைக்கு அவரேதான் காரணம். எனினும் அண்மைக்காலங்களில் கிறித்தவச் சமூகத்தில் பல தூய தமிழ்ச்சொற்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

போதகர் (Priest) – ஆயர்

அத்தியட்சர் (Bishop) – பேராயர்

அத்தியட்சாதீனம் – திருமண்டிலம்

கடவுள் ராஜ்யம் – இறை அரசு

தேவ குமாரன் – இறை மகன்

ஞானஸ்நானம் - திருமுழுக்கு

இப்படி எத்தனையோ பல. மதுரையில் இருக்கும் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பயிற்சிபெறும் இறை ஊழியர்கள் தூய தமிழில் ஆலய வழிபாட்டை நடத்தும்படி பயிற்சிவிக்கப்படுகிறார்கள்.

“எங்கள் நடை தொடக்கத்திலிருந்தே இப்படித்தான் – நாங்கள் மாறமாட்டோம்” எனக் கிறித்தவர்கள் கூறுவதில்லை.

தமிழ் விவிலியமும் இப்போது தூய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டு :

பழைய விவிலியம் – ஆவியில் எளிமையுள்ளோர் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

புதிய விவிலியம் – ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத்தேயு:5-3)

தாங்கள் குறிப்பிட்டிருக்கும் கிறித்தவப்பாடலும் அன்றைக்கு பெருவழக்கிலிருந்த இந்து சமயக் கீர்த்தனைகளை அடியொற்றி எழுதப்பட்டது. அப்படிப்பட்ட பாடல்களில் வடமொழிச் சொற்கள் மிகுந்திருப்பது இயற்கையே.

தேவனே நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்

சேர்வதே என் ஆவல் பூமியில்-

மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான் –

கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் –

என்பது போன்ற எளிய தமிழ்நடைப் பாடல்களே மிகுதி.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒருசில வடமொழிச் சொற்களைத் தவிர வலிந்து புகுத்தப்படும் வேற்றுமொழிச் சொற்கள் தவிர்க்கப்படுகின்றன.

பாரதியார் வடமொழி கலக்கவில்லையா என்பதெல்லாம் எடுபடாத வாதம். அவர் அக் காலத்திய நடையில் எழுதினார். இன்றைக்குப் பாரதியார் அந்த நடையில் எழுதியிருப்பாரா என்பது ஐயமே.

முடிந்தவரை, வடமொழிக் கலப்பின்றி, அப்படியே கலந்தாலும் வடவெழுத்துக் கலப்பின்றி தமிழில் எழுதுவதே இன்றைக்குப் பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் முறை. பல வடசொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. முடிந்தவரை அவற்றைப் பயன்படுத்துவோம்.

முற்றிலும் தூய தமிழ் என்பது ஒரு தொலைமுனைப் புள்ளி (Extreme point). முடிந்த அளவு அதனை அடையும் முனைப்புடன் எழுதவேண்டும். அதனை விடுத்து, நான் இப்படித்தான் எழுதுவேன் என்று அடம்பிடிப்போர் தங்களைத் தாங்களே ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவைத்துக்கொள்பவரே. நாளாவட்டத்தில் அந்த வட்டம் குறுகிக்கொண்டே வந்து மறைந்துபோகும்.

இன்னும் நிறைப் பேச ஆவல். நேரமில்லை. மன்னிக்க.

ப.பாண்டியராஜா

Oru Arizonan

unread,
Sep 28, 2014, 4:09:22 PM9/28/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி வினைதீர்த்தான் அய்யா,

1992ல் இங்கு எட்டு தமிழ்க் குடும்பங்களும், ஒரு மாணவரும் சேர்ந்து தமிழ்ச சங்கம் நிறுவினோம்.  அது பல்கிப் பெருகிற் நிற்கிறது.  இரண்டு இடங்களில் தமிழ்ப் பள்ளி நடத்தப்படுகிறது.  

ஒரு அரிசோனன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

க்ருஷ்ணகுமார்

unread,
Sep 29, 2014, 1:45:07 PM9/29/14
to mint...@googlegroups.com

பேரன்பிற்குரிய பாண்டியராஜா ஐயா

தங்கள் தமிழ்த்தொண்டுப்பணிகளுக்கிடையே சிறியேனை ஒரு பொருட்டாகக் கருதி தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

தமிழகத்தில் எமது க்றைஸ்தவ சஹோதரர்கள் விவிலியத்தை தூய தமிழாக்கி தூய தமிழிலான விவிலயம் ஓதிவருவதைத் தாங்கள் பகிர்ந்த விஷயத்தை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஆனால் வெகுஜன க்றைஸ்தவ அன்பர்களூடே மணிப்ரவாளமான விவிலியமே இன்றும் புழக்கத்திலுள்ளது என்பதை ஐயா அவர்கள் ஏற்பீர்கள் என எண்ணுகிறேன். எழுத்தாளர் ஸ்ரீ ஜெயமோஹன் அவர்களும் இது சம்பந்தமான ஒரு பதிவை இட்டதாக நினைவு.

க்றைஸ்தவ இறையியலில் சிறியேனுக்கு நம்பிக்கை இல்லையெனினும் க்றைஸ்தவ பாடல்களில் மிக்க ஆர்வம் உண்டு.  குறிப்பாக ரெவரெண்டு வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களது பாடல்கள். 

இன்றைக்கெல்லாமும் தாங்கள் பொதிகை தொலைக்காட்சியில் இரவு 10.30 மணிக்கூறுக்கு நடக்கும் பாஸ்டர் சாம் செல்லதுரை ஐயா அவர்களது நிகழ்ச்சியை கண்டீர்களானால் (அவரது பாட்டு பல முறை நான் கேட்டிருக்கிறேன்) மேற்கத்திய இசையிலான அவரது தமிழ்ப்பாடல்கள் பெரும்பாலும் மணிப்ரவாளமானவை. 

சஹோதரர் பால் தினகரன் அவர்கள் நடாத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் சுவிசேஷ ப்ரார்த்தனைக் கூடங்களில் ஓதப்படும் விவிலிய வசனங்கள் மணிப்ரவாள நடையிலானவை.

பரிபூர்ண சுத்த சுவிசேஷ வேதாகமக் கல்லூரி  ------- இதில் எத்தனை சதமானம் தமிழ்........ எத்தனை சதமானம் சம்ஸ்க்ருதம்?

தூய தமிழில் விவிலியம் ஓதும் அன்பர்களின் செயற்பாடு போற்றத்தக்கது.  ஆயின் மணிப்ரவாள நடையில் விவிலியம் ஓதும் எமது க்றைஸ்தவ சஹோதரர்களது தமிழ்ப்பற்றையும் சிறியேன் சம்சயிக்க முகாந்திரம் இல்லை.  அடைதற்கானது இறைவன் திருவடி நீழல்.  தூய தமிழ், மணிப்ரவாளம், ஹிந்தி, ஜூலு ............ எந்த மொழியினர் ஆனாலும் ........... தட்டப்படும் அவன் கதவுகள் திறக்கப்படுவதிலும் கேழ்க்கும் வரங்கள் கொடுக்கப்படுவதிலும் சம்சயமேதும் இருக்கலாகாது என்பது சிறியேனின் தாழ்மையான அபிப்ராயம்.

\\ பாரதியார் வடமொழி கலக்கவில்லையா என்பதெல்லாம் எடுபடாத வாதம். \\

கல்விக்கடலான தங்கள் முன் ஒரு சிறு நீர்த்துளியான சிறியேன் வாதமென்ன ஐயா செய்ய முடியும். சிறியேன் பகிர்வது தன்னிலை விளக்கம் மட்டிலுமே.

சிறியேன் பகிரவிழையும் சிற்சில விஷயங்கள் அடுத்த மடலில்.   அழகான தமிழ்ச்சொல்லான தொலைமுனைப் புள்ளி என்பதை தங்களிடமிருந்து பெற்றதற்கு சிறியேனின் உளமார்ந்த நன்றிகள்.

Pandiyaraja

unread,
Sep 29, 2014, 11:00:21 PM9/29/14
to mint...@googlegroups.com
அன்பு நிறை கிருஷ்ணகுமார் ஐயா அவர்களுக்கு,
கிறித்துவ இறைவழிபாட்டில் நடந்துவரும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கோடிட்டுக் காண்பித்தேன். நல்லவற்றைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு எங்கோ சில பழம்பெருச்சாளிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் தங்களின் வாதம் (பிடிவாதம்) தங்களின் உண்மை உருவத்தைக் காட்டிநிற்கிறது. முருக்கு அவிழ்ந்து மணம்வீசும் முல்லை மலர்களைக் காட்டினால், தாங்கள் காய்ந்த சருகுகளையும், காணாமற்போய்க்கொண்டிடிருக்கும் செம்மல்களயும் காட்டுகிறீர்கள்.
குடிக்கின்ற நீரில் சாக்கடையைக் கலக்காதீர் என்று வேண்டினால், "நீர் இப்போது குடிக்கும் நீரில் எத்தனை தூசும் துரும்பும்?" என்று உருப்பெருக்கிக்கண்ணாடியைக் கொண்டுவந்து உள்ளவற்றைப் பெரிதாக்கிக் காண்பிக்கிறீர்.

இனி இதைப்பற்றித் தங்களிடம் பேசுவதில் பயனில்லை. எனவே இதை இத்துடன் விட்டுவிடலாம்.

இருப்பினும் இறுதியாக ஒரு கேள்வி - ஐயம் என்றுகூடச் சொல்லலாம்.

வடமொழிச் சொற்களையும், வடமொழிப் பெயர்களையும், அவற்றின் மூல உச்சரிப்புமுறை மாறாமல் தமிழில் அப்படியே எழுதவேண்டும் என்ற முனைப்புடன், தமிழ் எழுத்துமுறையைச் சிதைத்துவருவதில் இத்தனை மகிழ்ச்சியடையும் உங்களிடம் என் ஐயத்துக்கான சரியான விடை கிடைக்கும் என எண்ணுகிறேன்.

ஐயா, எனது ஒரு மகளின் பெயர் பொன் எழில். அந்த மகள் வயிற்றுப் பேத்தியின் பெயர் யாழினி. யாழினி பள்ளியில் இந்தியும் வடமொழியும் பயின்றிருக்கிறாள். ஒருநாள் அவளிடம் அவளது பெயரையும், அவள் தாயின் பெயரையும் அந்த மொழிகளில் எழுதிக்காண்பிக்குமாறு வேண்டினேன். நான் 50-களில் பள்ளியில் படித்ததால் எனக்குக் கொஞ்சம் இந்தி எழுத்துக்கள் (தேவநாகரி) தெரியும். யாழினி என்ற அழகுப்பெயரை யாலிநி என்றும் பொன் எழில் என்ற கொஞ்சுதமிழ்ப் பெயரை போந ஏலில என்றும் எழுதிக்காண்பித்தாள். மேலும் சில சொற்களைச் சொன்னேன்.
தொல்காப்பியன் --> தோலகாப்பியந
திருவள்ளுவன் --> திருவல்லுவந
பழனி - பலநி
நெடுஞ்செழியன் - நேடுஞ்சேலியந

ஐயா, இந்த தமிழ்ச் சொற்களை தமிழ் உச்சரிப்புமுறையிலேயே இந்தி, வடமொழி ஆகியவற்றில் எழுதுவது எப்படி? அப்படி எழுதுவதற்கு அந்த மொழிகளில் எந்தெந்த எழுத்துக்களை எந்தெந்த வடிவங்களில் உருவாக்கலாம் என்று சொல்வீர்களேயானால், UNICODE CONSORTIUM அமைப்புக்குப் பரிந்துரை செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா ( எனது அப்பா வைத்த பெயர் - இதில் கைவைக்க எனக்கு மனதில்லை)

Dev Raj

unread,
Sep 29, 2014, 11:27:33 PM9/29/14
to mint...@googlegroups.com
On Monday, 29 September 2014 20:00:21 UTC-7, Pandiyaraja wrote:

தொல்காப்பியன் --> தோலகாப்பியந
திருவள்ளுவன் --> திருவல்லுவந
பழனி - பலநி
நெடுஞ்செழியன் - நேடுஞ்சேலியந

ஐயா, இந்த தமிழ்ச் சொற்களை தமிழ் உச்சரிப்புமுறையிலேயே இந்தி, வடமொழி ஆகியவற்றில் எழுதுவது எப்படி? 


நாகரி லிபியில் தமிழின் உச்சரிப்புகளை
ஒலிக்க வழியுள்ளது, ஐயா

தொல்காப்பியன்  - तॊल्काप्पियऩ् 
திருவள்ளுவன்  - तिरुवळ्ळुवऩ् 
பழனி  - पऴऩि 
நெடுஞ்செழியன் - नॆटुञ्चॆऴियऩ् 
யாழினி - याऴिऩि
தமிழினி - तमिऴिऩि
எழிலன் - ऎऴिलऩ्

வியாழக்கிழமை - वियाऴक्किऴमै
வெள்ளுள்ளி - वॆळ्ळुळ्ळि


தேவ்








 

Oru Arizonan

unread,
Sep 30, 2014, 1:39:27 AM9/30/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேவ ராஜ் அவர்களே,

தங்களுக்கு எதிர்மொழி அளிக்கும் கட்டாயத்துக்கு உட்படுத்தி இருக்கிறீர்கள்.  

 ஒலிப்பு மராட்டியில் மட்டுமே உள்ளது.  வடமொழியிலோ, இந்தியிலோ கிடையாது.  நண்பர் எழுதியிருப்பதை மராட்டியில் மட்டுமே எழுத இயலும்.  அந்த மொழியிலும் கூட எ, ஒ ஒலி கிடையாது.

தாங்கள் வடமொழியையும்,  மராட்டி எழுத்துக்களையும் கலந்து எழுதி உள்ளீர்கள்.  

தோல்காப்பியன் - - तॊल्काप्पियऩ्  (வடமொழியில் "தோல்காப்பியன்னு" என்றே ஒலிக்கப்படும்.) ऩ् என்ற எழுத்தை  "ன்னு" என்றே ஒலிக்கவேண்டும் என்று எனது வடமொழி ஆசிரியர் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
பளனி  - पऴऩि 
நேடுஞ்சேளியன் - नॆटुञ्चॆऴियऩ् (இதுவும் நேட்டுஞ்சேளியன் என்றே ஒலிக்கப்படும்)
யாளினி - याऴिऩि
தமிளினி - तमिऴिऩि
ஏளிலன் - ऎऴिलऩ्

வியாளக்கிளமை - वियाऴक्किऴमै
வெள்ளுள்ளி - वॆळ्ळुळ्ळि

ஆக, தொல்காப்பியன், பழனி, நெடுஞ்செழியன், யாழினி, தமிழினி, எழிலன் என்னும் சொற்களை அப்படியே தேவநாகரி எழுத்துகளில் எழுத இயலாது. 

உயர்திரு கிருஷ்ணகுமார் ஒருபோதும் அவர் "அடையாளத்தை"க் கைவிடமாட்டார்.

இந்த இழையை நிறைவு செய்வதே நமது நேரத்தை மிச்சமாக்கும்.  

உயர்திரு சுபா அவர்களே, தாங்கள் அருள் கூர்கின்றீர்களா?

ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Sep 30, 2014, 2:53:32 AM9/30/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-30 5:00 GMT+02:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்பு நிறை கிருஷ்ணகுமார் ஐயா அவர்களுக்கு,
கிறித்துவ இறைவழிபாட்டில் நடந்துவரும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கோடிட்டுக் காண்பித்தேன். நல்லவற்றைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு எங்கோ சில பழம்பெருச்சாளிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் தங்களின் வாதம் (பிடிவாதம்) தங்களின் உண்மை உருவத்தைக் காட்டிநிற்கிறது. முருக்கு அவிழ்ந்து மணம்வீசும் முல்லை மலர்களைக் காட்டினால், தாங்கள் காய்ந்த சருகுகளையும், காணாமற்போய்க்கொண்டிடிருக்கும் செம்மல்களயும் காட்டுகிறீர்கள்.
குடிக்கின்ற நீரில் சாக்கடையைக் கலக்காதீர் என்று வேண்டினால், "நீர் இப்போது குடிக்கும் நீரில் எத்தனை தூசும் துரும்பும்?" என்று உருப்பெருக்கிக்கண்ணாடியைக் கொண்டுவந்து உள்ளவற்றைப் பெரிதாக்கிக் காண்பிக்கிறீர்.

​டாக்டர்.பாண்டியராஜா,

எனக்கு திரு.கிருஷ்ணகுமார் செய்வது வேண்டுமென்றே வலிந்து​
 
​புகுத்தும் முயற்சி என்றும் மின்தமிழின் நற்பெயரை கெடுக்கும் ஒரு முயற்சி என்றும் தின்ணமாகப் படுகின்றது.

திரு,கிருஷ்ணகுமாரின் மின்னஞ்சல் முகவரி மட்டுறுத்தலில் வைக்கப்பட்டுள்ளது.

மிக அரும்பாடு பட்டு தமிழ் மரபு அறக்கட்டளை, மின்தமிழ் என  முயற்சிகளைச் செய்கின்றோம். திரு.கிருஷ்ணகுமார் போன்றோராலும், அவரது எழுத்து நடையை பாராட்டி வரவேற்று நமது முயற்சிகளை சிதைக்க நினைப்போராலும்   நமது முயற்சிகள் பாதிப்படையும் என்பது திண்ணம்.
இந்தப் போக்கு இனி தொடர்க் கூடாது. இது நமது முயற்சிகளுக்கு பாதிப்பையே வழங்கும்.

ஏனைய நமது வெளியீடுகளைப் படித்தாலும் ஒரு சிலர் மின் தமிழ் தமிழுக்கு கெடுதல் செய்கின்றது என்று சொல்லி வாய்ப்பிற்குக் காத்திருந்தது போல நம் பெயரை கெடுக்க முயற்சிப்பர். 

இனி திரு.கிருஷ்ணகுமார் இதனை உணர்ந்து பங்கெடுப்பது என்றால் தமது பதிவுகளை முயற்சி செய்து வலிந்து சமஸ்கிருதம் கலக்காது எழுதட்டும். இல்லையென்றால் அவரது பதிவுகள் மின் தமிழில் மட்டுறுத்தப்படும்.

நம்மில் சிலர் சிரமப்பட்டு நமது ஏனைய வேலைகளை விட்டு விட்டு விளக்கமளித்துக் கொண்டிருக்கவும் அவசியம் இருக்காது..

சுபா
மட்டுறுத்துனர்​



PRASATH

unread,
Sep 30, 2014, 3:25:06 AM9/30/14
to மின்தமிழ்
விக்ரம், அகரம் மகர ஈறு கொண்ட சொற்கள் தானே ஐயா... ஏன் எழுத இடமில்லை என்று சொல்கிறீர்கள்...



2014-09-27 14:15 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:


ஞ, ந, ம, ண, ன, ய, ர, ல, வ, ழ, ள பதினோரு எழுத்துத் தவிரப்
பிற எழுத்துகள் மொழியிறுதி ஆகா என்றும் இலக்கண நூற்பா
உள்ளது.
      
ரஜனிகாந்த், விஜய்காந்த், விஜய், திக்விஜய் சிங்க், ராஹுல், அஹமத்,
முகமத், நிக்காஹ், டேவிட் , விக்ரம், அக்ரம் - எழுத இடமில்லை


Pandiyaraja

unread,
Sep 30, 2014, 5:09:25 AM9/30/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
மிக்க நன்றி சுபா அம்மையீர். உண்மையை உணர்த்துவதற்குத்தான் அரும்பாடுபட்டேன். உணர்ந்து, உணர்த்தியும் விட்டீர்கள். மீண்டும் நன்றி.
ப.பாண்டியராஜா

Dev Raj

unread,
Sep 30, 2014, 5:11:17 AM9/30/14
to mint...@googlegroups.com
On Monday, 29 September 2014 22:39:27 UTC-7, oruarizonan wrote:
 ஒலிப்பு மராட்டியில் மட்டுமே உள்ளது.  வடமொழியிலோ, இந்தியிலோ கிடையாது.  நண்பர் எழுதியிருப்பதை மராட்டியில் மட்டுமே எழுத இயலும்.  அந்த மொழியிலும் கூட எ, ஒ ஒலி கிடையாது. தாங்கள் வடமொழியையும்,  மராட்டி எழுத்துக்களையும் கலந்து எழுதி உள்ளீர்கள்.  


தேவநாகரியில் ல, ள, ழ மூன்றையும் எழுதலாம் -
0932 ल DEVANAGARI LETTER LA
0933 ळ DEVANAGARI LETTER LLA
0934 ऴ DEVANAGARI LETTER LLLA

எ எழுதலாம் -
090E ऎ DEVANAGARI LETTER SHORT E

वॆडि  - வெடி
वॆट्कम् - வெட்கம்
 
ஒ எழுதலாம் -
0912 ऒ DEVANAGARI LETTER SHORT O

ऒरु विरल् - ஒரு விரல்

ற எழுதலாம் -
0931 ऱ DEVANAGARI LETTER RRA


நேரம் கிடைக்கும்போது கீழக்கண்டவற்றை
நன்கு படித்துப்பார்க்கவும் -



தேவ்

Dev Raj

unread,
Sep 30, 2014, 7:41:38 AM9/30/14
to mint...@googlegroups.com
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


ऐन्दु करत्तऩै याऩै मुहत्तऩै

इन्दि ऩिळम्बिऱै पोलुम् ऎयिट्रऩै
नन्दि महण्ड्रऩै ञाऩक् कॊऴुन्दिऩैप्
पुन्दियिल् वैत्तडि पोट्रुहिण्ड्रेऩे. 

amachu

unread,
Sep 30, 2014, 1:06:53 PM9/30/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
On Tuesday, September 30, 2014 12:23:32 PM UTC+5:30, Suba.T. wrote:
இனி திரு.கிருஷ்ணகுமார் இதனை உணர்ந்து பங்கெடுப்பது என்றால் தமது பதிவுகளை முயற்சி செய்து வலிந்து சமஸ்கிருதம் கலக்காது எழுதட்டும். இல்லையென்றால் அவரது பதிவுகள் மின் தமிழில் மட்டுறுத்தப்படும்.


ம்ம்ம்...

கடுமையான கண்டனங்கள். :)

தலைமுறை சமாச்சாரம். இங்கே ஏற்கப்படும் சொற்கள், வாக்கிய அமைப்பு நியதிகளை ஆவணமாக கொடுத்தால் சேர்வோர் வாசித்துவிட்டு விலகிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

அவரவர் நடை அவரவர்க்கு. வேண்டாதோர் பில்டர் போட்டுக் கொள்ளும் எளிய வழி கூகுள் வழங்குகிறது.

--

ஆமாச்சு

Oru Arizonan

unread,
Sep 30, 2014, 1:29:08 PM9/30/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய தேவ் ராஜ் அவர்களே,

என் மனக்கிடக்கையைத்  தாங்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு எழுதாதது எனது தவறுதான்.

யுனிகோடு  வேண்டுமானாலும் உருவாக்கலாம்.  எப்பொழுது ஒரு மொழியில் ஒலி இல்லையோ, அந்த ஒலியை வலிந்து திணிப்பது என்பது காளையிடம் பால் கறக்க முற்படுவது போலத்தான்.  தாங்அழ எழுதியிருப்பது தமிழ் எழுத்துக்களைக் கற்காத தமிழர்களுக்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம், 

தமிழ் ஒலி  அறியாத மற்றமொழியோருக்கு அது ஓவியங்களே!  தமிழறியாமல் அவற்றை ஒலித்துவிட இயலாது

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Sep 30, 2014, 1:30:34 PM9/30/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, உயர்திரு சுபா அவர்களே!
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 30, 2014, 1:36:22 PM9/30/14
to mintamil
2014-09-30 22:59 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:

எப்பொழுது ஒரு மொழியில் ஒலி இல்லையோ, அந்த ஒலியை வலிந்து திணிப்பது என்பது காளையிடம் பால் கறக்க முற்படுவது போலத்தான்.  

தமிழ் ஒலி  அறியாத மற்றமொழியோருக்கு அது ஓவியங்களே!  தமிழறியாமல் அவற்றை ஒலித்துவிட இயலாது

:)
சொ.வி.
 

Dev Raj

unread,
Sep 30, 2014, 1:36:57 PM9/30/14
to mint...@googlegroups.com
On Tuesday, 30 September 2014 10:29:08 UTC-7, oruarizonan wrote:
யுனிகோடு  வேண்டுமானாலும் உருவாக்கலாம்.  எப்பொழுது ஒரு மொழியில் ஒலி இல்லையோ, அந்த ஒலியை வலிந்து திணிப்பது என்பது காளையிடம் பால் கறக்க முற்படுவது போலத்தான்.  தாங்அழ எழுதியிருப்பது தமிழ் எழுத்துக்களைக் கற்காத தமிழர்களுக்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம், 

தமிழ் எழுத்து அறியாதார் பிற லிபிகளில் தேவாரம் ஓதுவதில் என்ன சிக்கல் ?
தெலுகர்கள் தெலுகு லிபியில் உள்ள திருப்பாவையை
வாசிக்கின்றனர். காலப்போக்கில் தமிழின்பால் திரும்பலாம்


தேப்

Oru Arizonan

unread,
Sep 30, 2014, 1:49:16 PM9/30/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய தேவ் அவர்களே,

தமிழைச் சரியாக ஒலிக்க அதைக் கேட்டே பயிற்சி  பெறவேண்டும்.  

மற்ற மொழிகளும் அப்படியே!  

வேதத்தில் இருக்கும் அனுகாதம், உத்காதம் போன்ற ஒலிகளைக் கேட்டு, ஆசிரியர் பிழைதிருத்தியே கற்றுக்கொள்ள இயலும்.  எனவேதான் வேதத்தை ஏட்டில் எழுதாமல் இருந்தார்கள்.  ஒரு சொல்கூட விட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக கணம் என்று மடக்கித் திருப்பிச் சொல்லும் முறையையும் ஏற்படுத்தினார்கள். 

எனவே, வேதம் "எழுதாக் கிளவி" என்ற பெயர் பெற்றது என்பது தங்களைப்போன்ற சான்றோர் அறியாததல்ல.

வேதத்தை ஏட்டில் படித்து எப்படி ஒலிக்க இயலாதோ, அதேபோல், தமிழையும் ஒலிக்க இயலாது.

தமிழ் எழுத்தைக் கற்க நேரம் இல்லாத --  விருப்பம் இல்லாத பேர்களே தங்கள் மொழி எழுத்தில் கற்பார்கள்.  அவர்களின் ஒலிப்பு, அவர்களின் மொழி சார்ந்ததாகவே இருக்கும்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 30, 2014, 8:48:17 PM9/30/14
to mint...@googlegroups.com
எந்த சிக்கலும் இல்லை. 

மொழிக்கும், லிபிக்கும் வேற்றுமை உள்ளது. ஓர் இலிபியில் பல மொழிகளை
எழுதலாம். கிரந்த எழுத்தை எடுத்துக்கொண்டால் ஏராளமான மொழிகளை எழுத 1000, 1500 ஆண்டுகளாய்
உதவியிருக்கிறது. தமிழை இன்று இந்தி எழுத்தில் எழுதுவதும், பின் அங்கிருந்து தமிழ் ஆக்குவதும்
ஆன இருவழிமாற்றம் இருக்கிறது. அதேபோல, கிரந்தமும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி
மொழிகளுக்கு இருவழி மாற்றம் செய்ய வழிவகை ஏற்படவேண்டும்.

ஒவ்வொரு மாநில எழுத்து-லிபிகளும் இந்திக்கு நிகராக ஏற்படுதல் இந்தியாவின் ஒற்றுமைக்கு
பலம் கூட்டும்.

நா. கணேசன்
 

தேப்

Nagarajan Vadivel

unread,
Sep 30, 2014, 9:01:48 PM9/30/14
to மின்தமிழ்

2014-10-01 6:18 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஒவ்வொரு மாநில எழுத்து-லிபிகளும் இந்திக்கு நிகராக ஏற்படுதல் இந்தியாவின் ஒற்றுமைக்கு
பலம் கூட்டும்.
தமிழ்
​ வழியாக தேவநகரியைப் படிக்க கிரந்தம் தமிழ் இணைந்த ஒரு புதிய குறியீட்டை நீங்கள் யூனிகோடுக்கு பரிந்துரை செய்யலாமே.  எப்படி வேதிக் சான்ஸ்கிரிட் தேவநகரியில் ஒரு கிளையாக இருக்கிறதோ அதுபோல் தமிழ் லிபியைக் கொண்டு படிக்க எழுத தமிழில் ஒரு முயற்சியைச் செய்யுங்களேன்

அசடுமுசுடு​


Oru Arizonan

unread,
Sep 30, 2014, 9:47:41 PM9/30/14
to mint...@googlegroups.com
உயர்திரு அசடுமுசுடு அவர்களே,

அப்படி ஒரு லிபி இருக்கிறது.  அதற்குத தமிழ் கிரந்தம் என்று பெயர்.  வடமொழியை அதில்தான் தமிழர்கள் எழுதிப் படித்தார்கள் என்று முன்னமேயே எழுதி இருந்தேன்.  ஐம்பது ஆண்டுகளில் தேவநாகரி லிபி தமிழ் கிரந்த லிபியைக் காணாது அடித்து விட்டது -- இளம்தலைமுறை, தமிழத் தமிழ் லிபியில் எழுதாமல் ரோமன் லிபியில் எழுத முற்படுவது போல.



பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 30, 2014, 9:53:21 PM9/30/14
to மின்தமிழ்
நன்றி ஐயா
நானும் தமிழ்நாட்டில் இந்த யூனிகோட் விற்லன்னர்கலிடம் 15 ஆண்டுகளாகப் பேசியே அவர்கள் என்னை ஒரு விதூஷகனாக ஆக்கிவிட்டார்கள்.  அவர்கள் கிரந்தம் தமிழே இல்லை என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.  அப்புறம் என்ன செய்வது

அசடுமுசுடு

N. Ganesan

unread,
Sep 30, 2014, 10:36:14 PM9/30/14
to mint...@googlegroups.com
On Tuesday, September 30, 2014 6:47:41 PM UTC-7, oruarizonan wrote:
உயர்திரு அசடுமுசுடு அவர்களே,

அப்படி ஒரு லிபி இருக்கிறது.  அதற்குத தமிழ் கிரந்தம் என்று பெயர்.  வடமொழியை அதில்தான் தமிழர்கள் எழுதிப் படித்தார்கள் என்று முன்னமேயே எழுதி இருந்தேன்.  ஐம்பது ஆண்டுகளில் தேவநாகரி லிபி தமிழ் கிரந்த லிபியைக் காணாது அடித்து விட்டது -- இளம்தலைமுறை, தமிழத் தமிழ் லிபியில் எழுதாமல் ரோமன் லிபியில் எழுத முற்படுவது போல.



This was what was made by Cholas into today's Tamil script. A 1000 year old evolution with explicit, visible viraamap puLLi diacritic.

தமிழ் கிரந்தத்தில் இருந்து தமிழ் எழுத்துமுறை 5 மெய்யெழுத்துக்களை எடுத்துக்கொண்டுள்ளது:
ஜ, ஹ, ஸ, ஶ, ஷ - இவ்வைந்தும் தமிழக அரசு, இந்திய அரசு தமிழ் எழுத்தாக ஏற்றுள்ள கிரந்த எழுத்துக்கள்.
ஐஎஸ்ஓ ஸ்டாண்டர்ட் 10646 - இதில் ஒவ்வொன்றும் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமில்லை.
யாரும் பயன்படுத்தா எழுத்துக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

தொழில்நுட்பு கடினமாக இருந்த காலம். வடக்கே இந்தி - உர்து லிபி மாற்றங்கள். காந்திஜி போன்றோரால்
இந்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், இப்போதைய தொழில்நுட்பத்தில் தமிழ் அல்லா பிற
இந்திய மொழிகளின் சமய நூல்களை (உ-ம்: வடமொழிகள், இந்தி, மலையாளம், கன்னடம், ...)
எழுதும் புனிதமான புராதன லிபியாக விரும்புவோர் பயன்படுத்த இந்திக்கு சமானமாக கிரந்தமும்
இருக்கவேண்டும். தமிழ் அல்லாத பிற இந்திய மொழிகளின் சமய இலக்கியங்கள் போன்றன படிக்கவும்,
இந்தி கற்கும்போதும் உதவும். கிரந்தம் லீனியர் வெர்சனிலும் படிக்கலாம். அது தமிழர்க்கு இயல்பாய்
எளிதாய் கற்க உதவும்.

இன்னொன்று: சிலோன் அரசு இதை தமிழ் கிரந்தம் என்று பெயர் வைப்பதா? கிரந்தம் என்று பெயர் வைப்பதா?
என்ற கேள்வி கேட்டது. நான் கிரந்தம் என்ற பெயரே போதும் என்றேன். தமிழ் கிரந்தம் என்றால்
அரசியல் சத்தம்.

நா. கணேசன்
 

Nagarajan Vadivel

unread,
Sep 30, 2014, 10:44:08 PM9/30/14
to மின்தமிழ்
அதெல்லாம் விடுங்க
வானம் ஏறி வைகுண்டம் போறதுக்கு முன்னால் கூரை ஏறி கோழி புடீங்க

தேவநகரியில் உள்ள வளங்களைத் தமிழ் படுத்தவும் தமிழ் வளங்களைத் தேவநகரியில் கொண்டு செல்லவும் தமிழ் ஒருங்குறியீறு உதவுமா?

திருப்பணந்தாள் ஆதீனம் தமிழில் இருந்து மறைந்த வளங்கள் எல்லாம் தேவந்கரியில் உள்ளதாகக் குறிப்பிடுகிறாரே.  அந்த வளங்களை மீண்டும் தமிழுக்குக் கொண்டுவர யூனிகோடு உதவுமா?

அசடுமுசுடு

Dev Raj

unread,
Sep 30, 2014, 11:31:41 PM9/30/14
to mint...@googlegroups.com
On Tuesday, 30 September 2014 10:49:16 UTC-7, oruarizonan wrote:
தமிழைச் சரியாக ஒலிக்க அதைக் கேட்டே பயிற்சி  பெறவேண்டும்.  
மற்ற மொழிகளும் அப்படியே!  

கட்டாயமாக ! தாங்கள் கூறுவதில் மாற்றுக்கருத்தில்லை, ஐயா.
கொரிய மொழி உச்சரிப்பை இங்கு காண முடிகிறது -

ஒரு வலைத்தளம் ஹங்குல் நெடுங்கணக்கை
உச்சரிப்புடன் கற்றுத்தருகிறது.இதேபோல் தமிழிலும் 
அமைக்கலாம். எழுத்துரு மாற்று ஏற்பாடு காலம்
காலமாக இருந்து வருவதுதான். அதில் புதுமை
இல்லை.

மேற்கத்திய எழுத்துரு ஒன்று  கீழ்த்திசை
மொழிகளில் கூடு பாய்ந்திருப்பதை எடுத்துக்
காட்டினேன் -

மேலும் பல காட்டுகள் உள்ளன


தேவ்

Dev Raj

unread,
Oct 1, 2014, 12:02:53 AM10/1/14
to mint...@googlegroups.com
பாலேய் தமிழரான ஆழ்வார்களின் அழகொழுகும் பனுவல்கள்,
அவற்றுக்கு மணிப்பவள நடையில் விளக்கவுரைகள், அச்சேறியது
சுந்தரத் தெலுங்கு லிபியில். நாலாயிரம் நாசமாகப் போய்விடவில்லை.
இன்றும் உலகோர் அறிய திருவேங்கட மலை முகடுகளில் ஈரத்தமிழ்ப் 
பாசுரங்கள் வடிவம் மாறாமல் எதிரொலித்த வண்ணம் உள்ளன,
காரேய் கருணை எம் இராமாநுசர் செய்த அரும்பணியால் !

தமிழறியா வடுகரும் தம் மொழியில் எழுதி வைத்துக்கொண்டு
பேரார்வத்துடன் அவற்றை ஓதுகின்றனர்.
 

அன்புடன்
தேவ்

N. Ganesan

unread,
Oct 1, 2014, 10:40:13 AM10/1/14
to mint...@googlegroups.com, vallamai, Maravanpulavu K. Sachithananthan
On Friday, September 26, 2014 5:36:33 PM UTC-7, Dev Raj wrote:
On Friday, 26 September 2014 06:56:45 UTC-7, seshadri sridharan wrote:
அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. 

அல்ஹம்துலில்லாஹ்,அஹ்ல ஹதீஸ், முஜாஹித்,ஜாக்,மர்கஸுஸ் ஸலஃபி,அந்நஜாத்
அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்,ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல்
ஹதீஸ்,ரஹ்மதுல்லாஹ் பிரதவ்ஸி,அஷ்ஷேய்க் ரஹ்மத்துல்லாஹ் ,அஷ்ஷேய்க் நூஹ்
ஜம்மியத்துல் அஹ்லுல்,குர்ஆன் வ அல் ஹதீஸ், ஜுமர், நஹ்ல், ஸஃப்:, ஹதீஸ் குத்ஸீ,இப்னு அப்துல் அஜீஸ்,

இப்னு இஸ்ஹாக், இப்னு ஜூரைஜ், ஸூஃப்யானுத் தவ்ரீ, அப்துல்லாஹ் இப்னு
முபாரக், இப்னு ஜரீர் அத்தபரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, பஹீரா,
ஜிஃரானா,ஹஜ்ஜுன் மப்ரூர், ஷபே,அரீஜ், கப்ஜி, அஹமத்,ஜத், அல்லிஃப்
பைனஹுமா, அபூஹுரைரா, அஃபான், ஷுஃஆ ,அல்ஃபாத்திஹா, அலம்ரோஜி இத்ரஸ்,அல்ஹ‌ஸ‌ன்
அல்ப‌ஸ்ஸ‌ரி, ஸஅத் இப் வக்காஸ், ஃபிக்ஹு, அல்ஷின்ப்ஜி அல்ஷ‌ட்டாய்,பிஹாருந்நிஸா ஹஜ்ஜுன் மப்ரூர், 

முல்தகா அஹ்லில் ஹதீஸ் அஸ்ஸெம், நஃபி, அபோ நஹிக், அபோ ஹை,அல்பஹர் அல்மொஹித்,ஹஃப், பஸ்லுல் இலாஹி, ஷிர்க், சகதுல்லாஹ். 


இப்படி எழுதுவோர்க்கெல்லாம் சேச்சாவின் அறிவுரை என்ன ?  



பாரதத் திருநாட்டிலும், தமிழ்நாட்டிலும், ஈழ நாட்டிலும் திருக்குரானை அக்ஷரஶுத்தமாக எழுதுதலும், ஓதுதலும் நடப்பதன் அவசியத்தை எல்லாரும், அரசியல் கட்சிகளும் உணர்ந்து செயல்பாட்டில் உள்ளன. அதேபோல, வேத மறைகளை ஓதுதற்கும், எழுதுதற்கும் வழிவகை செய்யுமுகத்தான் இண்பிட் ஶகர எழுத்தை தமிழ்கூறு நல்லுலகிற்கு தமிழக அரசு ஆவணங்கள் வழியாக ஈந்துள்ளது. இருக்கும் 5 கிரந்த மெய்யெழுத்துக்களால் தமிழல்லாத உ-ம்: மலையாளம், இந்தி, வடமொழிகள், ...சொற்களை எழுத இதனால் முடிகிறது. வளர்ந்துவரும் மக்கள் இடமாற்றம், பொருளாதாரம், இந்திய மொழிகளைப் பயிலுதல், அர்ச்சகராக ஆகம, வேத கல்வி, ... போன்றவற்றுக்கு தமிழர்க்கு கிரந்த லிபி உதவும்.

மலையாளம் கிரந்தத்தில் என்றும் எழுதியுள்ளனர். அந்த மலையாளத்தை கிரந்தத்தில் எழுத முனைவர்கள் நூதலோசு, இராம்கி போன்றோரிடம் உத்தரவு பெறவேண்டும்.  தமிழர்கள் போற்றிய புனித லிபி கிரந்தத்தில் இந்தியாவின் சமயங்களின் புனித நூல்களை எழுத கணினியில் இற்றைப்படுத்த வளர்ந்துவரும் ஹிந்து சமய உணர்வுகள், ஆராய்ச்சிகள் (உ-ம்: டெல்லி பல்கலையில் ஆரியர்கள் சொந்தபூமி இந்தியா என்பதற்கு நிதிநல்கைகள்) உதவுமா? கேட்டுப் பார்ப்போம்.

நா. கணேசன்

 
தேவ்
It is loading more messages.
0 new messages