இந்த மடலாடற்குழுவில் சிறியேன் ஓரிரு தினங்களாகப் பங்கு கொண்டு வருகிறேன். சிறியேன் மலைகளால் சூழப்பட்டுள்ள சேலம் ஜில்லாவில் பிறந்து கல்வி கற்று உத்யோக .
உலக அரங்கில் நம்மை வெகுமானப்படுத்தி மங்கள்யான் கலத்தை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்ற பாரத விக்ஞானிகளுக்கு நம் அனைவரின் பணிவார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.
ஜெய் ஹிந்த்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்த மடலாடற்குழுவில் சிறியேன் ஓரிரு தினங்களாகப் பங்கு கொண்டு வருகிறேன். சிறியேன் மலைகளால் சூழப்பட்டுள்ள சேலம் ஜில்லாவில் பிறந்து கல்வி கற்று உத்யோக நிமித்தமாக முப்பது வருஷங்கள் முன்னதாக தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து ஹிந்துஸ்தானத்தின் எல்லைப்பகுதிகளில் பணி செய்து வருகிறேன். அதில் ஆறு வருஷ காலம் ஜம்மு காஷ்மீர மாகாணத்தில் பணி புரிந்ததும் அடக்கம். ஐந்தாறு வருஷங்கள் ராஜதானி தில்லியில் பணி புரிந்ததும் அடக்கம். லே, ஸ்ரீநகர்,ஜம்மு ப்ராந்தியம் என மூன்று ப்ராந்தியங்களிலும் பணி செய்திருக்கிறேன். பணி ராணுவத்தில் அல்ல. சிவிலியனாக.
கொங்குநாட்டுக்காரரா தாங்கள்! வாழ்க. பலர் இங்கிருக்கிறோம்.
On Sep 25, 2014 10:31 AM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
> உங்க தமிழ் மிக அழகாக உள்ளது...
நானும் அவ்வாறே கருதுகிறேன். சுவாரசியமான நடை. கலப்பற்ற தனித்தமிழ் என்றும் கிடையாது. புழக்கத்திலிருக்கும் தமிழைக் குறைவில்லாமல் சொன்னால் போதும். மணிப்பவள நடை வாழும் இடத்தையொட்டி இயல்பாக வந்துவிடும். அதுவும் ஒரு அழகுதான். தமிழை அது வளப்படுத்தினால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். மின் தமிழில் ஜாதி வேண்டாமென்று மூச்சுக்கொரு முறை சொல்லியாகிவிட்டது. சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். இனம் கண்டு ஒதுங்கி வேண்டியதுதான். வேறு வழியில்லை. பள்ளிப் பிள்ளைகளா? தண்டனை வழங்க? உங்கள் எல்லை வாழ்வு பற்றி, ஜோசப் பற்றியெல்லாம் எழுதுங்கள்.
நா.கண்ணன்
அன்புள்ள திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,தங்கள் இழையை இப்போதுதான் படித்தேன். தங்களின் மொழி நடையைப் பார்க்கும்போது தங்களின் வயது 80-ஐ ஒட்டி இருக்கும் என நினைக்கிறேன். அல்லது 1950-க்குப் பின்னர் தமிழின் வாடையே அடிக்காத இடத்தில் இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஐயா, தாங்கள் வெகுதொலைவு பின்தங்கியிருக்கிறீர்கள் - தமிழ் நடையைப் பொருத்தவரையில். இங்கு வெகுவாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்னும் நீங்கள் வ்யாசத்திலும், ஸ்ரீமான் களிலும் இருக்கிறீர்கள். அவையெல்லாம் இடையில் வந்தவை - வருவிக்கப்படவை. சென்ற இடம் தெரியாமல் தேய்ந்து மறைந்துவிட்டவை. எனவே நீங்கள் வெகுவாக மாறவேண்டும். ஊசிப்போன வடையை முதலில் தூக்கியெறியப் பழகுங்கள். கைகளைத் துடைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். தமிழில் இப்போது வரும் மாத, வார இதழ்களைப் படித்தாலே பாதி மாறிவிடுவீர்கள். நான் மாறமாட்டேன் என்ற வீம்போ, பழமைகளில் வெட்டிப் பெருமையோ இல்லாமல் புதுமை உலகில் நுழைய முயலுங்கள். முதலில் சக்கர வண்டியில் பழகி, பின்னர் சுவரைப் பிடித்து நகர்ந்து, அப்பா மடியிலிருந்து அம்மா மடிக்கு எட்டு எடுத்து ஓடி இடறிவிழும் குழந்தையைத் தூக்கிக்கொஞ்சுவதுபோல் நாங்கள் உம்மைக் கொஞ்சுவோம்.
On Thursday, September 25, 2014 10:27:08 PM UTC+5:30, க்ருஷ்ணகுமார் wrote:
தங்கள் உத்தரங்கள் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது என்றால் மிகையாகாது.
சேலம், பழனி என்று அங்கேயே அழைத்துச் சென்று விட்டது தங்கள் குறிப்புகள்.
பழனி பழனி என்று கூறு அதில் பரவசம் பெருகுது பாரு
என்றும் விழாக்கோலம் கொண்டது பழனி.............. கேபீஎஸ் அம்மாவின் பாட்டு நினைவுக்கு வருகிறது. என் பாட்டனாருடன் பால் காவடி பன்னீர்க்காவடி என்று காவடி எடுத்த காலத்தில் நாங்கள் தங்கியது கொழுமம் சத்திரம். இப்போதெல்லாம் காலையில் சென்று மாலையில் திரும்பும்படிக்கு ப்ரயாணங்கள். ஒரு முறை சேலத்திலிருந்து பழனிப்பாத யாத்ரையும் சென்றிருக்கிறேன். தாங்கள் சொல்லும் தங்கள் முன்னோர் கட்டிய விநாயகர் கோவில் கண்களில் நிற்கிறது.
பழனி சென்று விட்டு சேலம் திரும்பிய பின் வீட்டில் சமாராதனை செய்யும் போது கொல்லிமலைத் திணையை வாங்கி வீட்டில் உள்ள ஆட்டுக்கல்லில் இரும்புலக்கையால் இடித்துப் புடைத்து பின்னர் செய்யும் திணைப் பாயசம் இப்போது நினைவில் மட்டும் தங்கி இருக்கிறது. இடிக்கும் போது கைவலித்தாலும் சாப்பிடும் போது அந்த திணைப்பாயசத்தின் சுவைக்கு எதுவும் ஈடாகாது. வருத்தமான விஷயம் என் மகனுக்கு திணை என்றால் என்னவென்று கூடத் தெரியாது.
காணொளிகளை முதலில் சாவகாசமாகக் கேழ்க்கிறேன் ஐயா.
திருச்செங்கோட்டு படிவிழாவிற்கு நாங்கள் செல்லும் போது (ஃபெப்ரவரி மாதம்) அங்கு உள்ள கொங்கு வேளாளக் கவுண்டன்மார்கள் தங்களுடைய சத்திரத்தில் படிவிழாவிற்கு வரும் திருப்புகழ் அன்பர்கள் அனைவருக்கும் வயிறார காலையில் சிற்றுண்டி அளிப்பார்கள். சமஷ்டியாக அர்த்தநாரீச்வரர் மற்றும் செங்கோட்டு வேலனின் திவ்யதர்சனத்துக்குப் பிறகு, மதியம் எங்கள் திருப்புகழ் சபையைச் சார்ந்த அன்பர்கள் அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவு வகைகளைப் பகிர்ந்து உண்போம். அதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
ஸ்ரீ செல்வன், ஸ்ரீமதி பார்வதி அம்மை .......... நீங்கள் கேட்டபடி சுட்டிகளைக் கொடுத்து வ்யாசச் சுருக்கமும் தந்திருக்கிறேன். இயன்றால் தங்களது மேலான கருத்துக்களைப் பகிரவும்.
அன்பின் ஸ்ரீ கண்ணன் ஐயா,
\\ கலப்பற்ற தனித்தமிழ் என்றும் கிடையாது. \\
மாற்றுமொழிக்கலப்பில்லாத தூய தமிழில் எழுதும் அன்பர்களும் இணையத்தில் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சமாவது ஆங்க்ல பாஷைக் கலப்பு இருக்கிறது என்று சொல்லலாம். விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் எண்ணிறந்த கணித மற்றும் விக்ஞானச் சொற்களுக்கு செழுமையான தமிழ்ச் சொற்களை தனது விக்ஞான வ்யாசங்களில் பகிர்கிறார். மெச்ச வேண்டிய செயற்பாடு. அன்பர் அவர்கள் கணிதமேதை ஸ்ரீ ராமானுஜம் பற்றி எழுதிய வ்யாசத்தை நான் எனது கணினியில் சேமித்து வைத்திருக்கிறேன். அருமையான வ்யாசம். பற்பல கணிதச் சொற்களை தமிழ்ப்படுத்தியிருக்கும் வ்யாசம்.
அன்பார்ந்த சஹோதர சஹோதரிகள் அனைவருக்கும் எமது பணிவார்ந்த வணக்கங்கள்.
அன்பு சஹோதரி ஸ்ரீமதி சுபா அவர்கள் எமது பதிவுகளில் மாற்று பாஷைகள் வலிந்து வருவதாகக் கருத்துப்பகிர்ந்திருந்தார்கள். அந்த கருத்திலிருந்து மட்டும் மாறுபடுகிறேன். நான் எழுதுவது எனது இயல்பான நடை. என் வாழ்வில் ஹிந்துஸ்தானத்தின் மற்ற பாஷைகள் பேசும் சஹோதர சஹோதரிகளுடன் புழங்கி நான் அவர்களுக்கு கொடுத்தும் அவர்களிடமிருந்து நான் எடுத்துக்கொண்டதுமாய்.
என்னில் லயமானது அவர்களது பாஷைகள்.
நான் அவர்களுடன் பகிர்ந்து கொண்டது பல தமிழ்ச் சொற்களும். அமுதினுமினிய திருப்புகழும். எந்த பாஷையைச் சார்ந்தவர்களாயினும் சரி திருப்புகழமுதத்துக்கு மயங்காதவரே இல்லை என்ற படிக்கு என் அனுபவம். சொக்க வைப்பது வள்ளிக்கு வாய்த்த......ஆண்மையும் அழகும் உடைய பெருமானா...... அல்லது சந்தச் சுவைமிகும் அமுதினுமினிய திருப்புகழா என்பது முருகனுக்கே வெளிச்சம்.
நான் நமது மடலாடற்குழுவில் பங்கு பெறும் சான்றோர்களிடம் பலவும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என்னாலியன்றதைப் பகிர்ந்து கொள்ளவும் விழைவேன்.
நான் எழுத்தாளன் அல்லன். ஆயினும் நான் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர். அவர் மறைந்த சமயத்தில் .......திண்ணை தளத்தில் ........ எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் சமர்ப்பித்திருந்த "மஹாத்மா காந்தியின் மரணம்" என்ற வ்யாசத்திற்கு எதிர்வினையாக இரண்டு பாகங்களாலான எதிர்வினையான எனது வ்யாசம்.............
"ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது - மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை"
சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அன்பர் அவர்கள் தனது மற்றொரு படைப்பான *சீதாயணம்* என்ற புனைவில் சொல்லப்பட்ட நிகழ்வுகளே மெய்யான ராமாயணம் என்றும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களால் பொய்க்கதையாகிப்போனது என்று பகிர்ந்த கருத்தை மறுக்குமுகமாக ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூலின் படைப்பாய்வுகளை ஆய்வுமுறையின் பாற்பட்டு ஆய்வு செய்த ஸ்ரீ ஹெர்மன் ஜார்ஜ் ஜேக்கபி, ஸ்ரீ ஆர்த்தர் மேக்டொனல், ஸ்ரீ ஜே.எல்.ப்ராக்கிங்க்டன் போன்ற இண்டாலஜி ஆய்வாளர்களின் கருத்தையும் பரோடா க்ரிடிகல் எடிஷன் குழுவினரின் கருத்தையும் முன்வைத்திருந்தேன். (அன்பர் அவர்கள் வால்மீகி ராமாயணம் பற்றிப் பகர்ந்த அபுரிதல்கள் ....... வால்மீகி ராமாயணம் பற்றிய பொதுவிலான அபுரிதல்கள்....... இவற்றை இன்னொரு வ்யாசத்தில் எழுதியிருக்கிறேன். அந்த வ்யாசத் தொடரில் கசப்புணர்வுகள் ஆங்காங்கு தென்படுவதால் அவற்றைக் களைந்து அந்தத் தொடரை சமர்ப்பிக்க இருக்கிறேன்.)
இவையனைத்தும்
http://puthu.thinnai.com/?s=%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
என்ற உரலில் காணக்கிட்டும்.
முதல் வ்யாசம் திண்ணை தளத்தில் பெருமளவு விவாதிக்கப்பட்ட வ்யாசம். 478 உத்தரங்கள் இந்த வ்யாசத்துக்குப் பதிவானது.
ஆனால் இந்த வ்யாசங்களை வாசிக்கு முன்னர்
காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை
என்ற எனது வ்யாசம் தமிழ் ஹிந்து தளத்தில் நான் பதிவு செய்திருந்தேன். அதை முதலில் வாசிக்குமாறு அன்பு சஹோதர சஹோதரிகளை விக்ஞாபித்துக்கொள்கிறேன். நமது மடலாடற்குழுவில் தற்போது நிகழும் விவாதங்களில் கருத்துப் பகிர்வுகள் மட்டுமீறிய கசப்புணர்வுடன் நிகழ்கிறது. என்னுடைய மேற்கண்ட வ்யாசத்தில் நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் எத்தகையவை. அறவே கசப்புணர்வில்லாமல் அதே சமயம் சொல்ல விழைந்த விஷயத்தை கருத்தாழத்துடன் சொல்லலாம் என்பதற்கு சிறியேன் எடுத்த ........ பெருமளவு வரவேற்கப்பட்ட முயற்சி.
http://www.tamilhindu.com/2012/06/kanchi-mamunivar-rebuttal-to-critics/
தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான எனது மற்றைய வ்யாசங்கள் கீழ்க்கண்ட உரலில் :-
ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் அவர்கள் ஹிந்துஸ்தானத்து எல்லைக்கோட்டைத் தாண்டி நமது மற்றும் அவருக்குமான பொது மூதாதையர்கள் கல்வி வளர்த்த....... நீலம் பள்ளத்தாக்கில் இருக்கும் .......சாரதா பீடம் சென்ற வரலாறு.
சனாதன கோஸ்வாமிகள் மற்றும் ரூப கோஸ்வாமிகள் (சஹோதரர்கள்) -- இருவருக்குமிடையே நிகழ்ந்த சம்வாதம் - குழப்பம்--- குழப்பத்தெளிவு அளித்த கண்ணனின் கருணையைப் பேசும் ---- கருநாகமொத்த குழல்.
ஹிந்துஸ்தானத்து முஸல்மாணிய சஹோதரர்கள் மோதி சர்க்கார் பற்றி கருத்துக்கள் பகிர்ந்து....இண்டியா டி.வி. தொலைக்காட்சியில் பங்கு பெற்ற விவாதக்களமான ...... ஆப் கீ அதாலத்தில் ....... விவாதிக்கப்பட்ட விஷயங்களின் மொழியாக்கம்........ மோதி சர்க்கார்----முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள் அபிலாஷைகள்.
ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள் என்ற எனது கற்றுக்குட்டி வ்யாசம் (உத்தரமாகப் பகிர்ந்து வ்யாசமாகப் பதிவானது :-( )
http://www.tamilhindu.com/author/krishnakumar/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம் கிருஷ்ணகுமார் ஐயா,தங்கள் தமிழ் இந்து கட்டுரைகளை படித்து வருகிறேன். காஞ்சி சங்கராசார்யார் விஷயத்தில் அரவிந்தன் நீலகண்டன் சரியாகவே கருத்து சொல்லியிருப்பதாக படுகிறது. தெய்வத்தின் குரல் ஏழு பாகமும் படித்தவன் என்ற முறையில் அது ஒரு வரலாற்று பெட்டகம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அதில் உள்ள வருணாசிரம ஆதரவு, விதவைகள் பற்றீய கருத்து எல்லாம் படிக்கையில் இப்படிப்பட்ட ஞான களஞ்சியமான நூல் விழலுக்கு இழைத்த நீராக போனதில் மிகுந்த மனவருத்தம் மேலிடுகிறது.மற்ற கட்டுரைகளை படித்து கருத்து கூறுகிறேன். நன்றி
அன்புடன்சொ.வினைதீர்த்தான்2014-09-25 23:49 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:அன்புள்ள திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,தங்கள் இழையை இப்போதுதான் படித்தேன். தங்களின் மொழி நடையைப் பார்க்கும்போது தங்களின் வயது 80-ஐ ஒட்டி இருக்கும் என நினைக்கிறேன். அல்லது 1950-க்குப் பின்னர் தமிழின் வாடையே அடிக்காத இடத்தில் இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஐயா, தாங்கள் வெகுதொலைவு பின்தங்கியிருக்கிறீர்கள் - தமிழ் நடையைப் பொருத்தவரையில். இங்கு வெகுவாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்னும் நீங்கள் வ்யாசத்திலும், ஸ்ரீமான் களிலும் இருக்கிறீர்கள். அவையெல்லாம் இடையில் வந்தவை - வருவிக்கப்படவை. சென்ற இடம் தெரியாமல் தேய்ந்து மறைந்துவிட்டவை. எனவே நீங்கள் வெகுவாக மாறவேண்டும். ஊசிப்போன வடையை முதலில் தூக்கியெறியப் பழகுங்கள். கைகளைத் துடைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். தமிழில் இப்போது வரும் மாத, வார இதழ்களைப் படித்தாலே பாதி மாறிவிடுவீர்கள். நான் மாறமாட்டேன் என்ற வீம்போ, பழமைகளில் வெட்டிப் பெருமையோ இல்லாமல் புதுமை உலகில் நுழைய முயலுங்கள். முதலில் சக்கர வண்டியில் பழகி, பின்னர் சுவரைப் பிடித்து நகர்ந்து, அப்பா மடியிலிருந்து அம்மா மடிக்கு எட்டு எடுத்து ஓடி இடறிவிழும் குழந்தையைத் தூக்கிக்கொஞ்சுவதுபோல் நாங்கள் உம்மைக் கொஞ்சுவோம்.வழிமொழிகிறேன்.முயன்றால் எழுத முடியும் என்று திரு கிருஷ்ணகுமார் அவர்களே ஒரு பதிவில் கூறியிருந்தார். அவ்வாறு எழுதினால் பொன் மலர் நாற்றமுறும் என்பது என் எண்ணம்.
அன்பின் சேசாத்திரிஏன் எல்லாவற்றையும் ஜாதிக்குட்டையில் போட்டு குழப்பணும்?அவர் ஒரு foregone age style ல் எழுதுகிறார். பாரதி காலத்து எழுத்து. இலக்கிய ரசனை இருந்தால் இதை ரசிக்க முடியும். பாரதியின் கவிதையைக் கொண்டாடுகிறோம். அவர் உரை நடை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும். அது இலக்கியம் இல்லையா? அந்தக் காலத்தில் எல்லோரும் இப்படித்தான் எழுதினர்.அவர் எழுத்து ஒரு கனவுலகிற்கு இட்டுச் செல்கிறது.கொஞ்சம் ரசிங்க பாஸ் ;-)
அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை.
காஷ்மீரத்தில் மிகக் கொடூரமான தனிமையில் இருந்த போது ......
அவர் ஒரு foregone age style ல் எழுதுகிறார். பாரதி காலத்து எழுத்து. இலக்கிய ரசனை இருந்தால் இதை ரசிக்க முடியும். பாரதியின் கவிதையைக் கொண்டாடுகிறோம். அவர் உரை நடை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும். அது இலக்கியம் இல்லையா? அந்தக் காலத்தில் எல்லோரும் இப்படித்தான் எழுதினர்.அவர் எழுத்து ஒரு கனவுலகிற்கு இட்டுச் செல்கிறது.கொஞ்சம் ரசிங்க பாஸ் ;-)
2014-09-26 9:19 GMT-05:00 N. Kannan <navan...@gmail.com>:அவர் ஒரு foregone age style ல் எழுதுகிறார். பாரதி காலத்து எழுத்து. இலக்கிய ரசனை இருந்தால் இதை ரசிக்க முடியும். பாரதியின் கவிதையைக் கொண்டாடுகிறோம். அவர் உரை நடை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும். அது இலக்கியம் இல்லையா? அந்தக் காலத்தில் எல்லோரும் இப்படித்தான் எழுதினர்.அவர் எழுத்து ஒரு கனவுலகிற்கு இட்டுச் செல்கிறது.கொஞ்சம் ரசிங்க பாஸ் ;-)கரெக்ட்இது முன்பு படித்த பழம் தமிழ் நூல்களின் நடையை நினைவூட்டுகிறது. நண்பரது எழுத்துக்களில் வடமொழி கலப்பு நாம் சாதாரணமாக எழுதுவதில் இருக்கும் வடமொழி கலப்பு போல் தான் உள்ளது. மேலும் வடமொழி கலப்பு இருந்தாலும் ஆங்கில கலப்பு அதிகமாக இல்லை.நாம் "கல்யாணம்" என எழுதுவோம். நண்பர் "விவாஹம்" என எழுதுவார். விவாஹமும், கல்யாணமும் இரண்டும் வடமொழி சொற்களே.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை.
அல்ஹம்துலில்லாஹ்,அஹ்ல ஹதீஸ், முஜாஹித்,ஜாக்,மர்கஸுஸ் ஸலஃபி,அந்நஜாத்
அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்,ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல்
ஹதீஸ்,ரஹ்மதுல்லாஹ் பிரதவ்ஸி,அஷ்ஷேய்க் ரஹ்மத்துல்லாஹ் ,அஷ்ஷேய்க் நூஹ்
ஜம்மியத்துல் அஹ்லுல்,குர்ஆன் வ அல் ஹதீஸ், ஜுமர், நஹ்ல், ஸஃப்:, ஹதீஸ் குத்ஸீ,இப்னு அப்துல் அஜீஸ்,
இப்னு இஸ்ஹாக், இப்னு ஜூரைஜ், ஸூஃப்யானுத் தவ்ரீ, அப்துல்லாஹ் இப்னு
முபாரக், இப்னு ஜரீர் அத்தபரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, பஹீரா,
ஜிஃரானா,ஹஜ்ஜுன் மப்ரூர், ஷபே,அரீஜ், கப்ஜி, அஹமத்,ஜத், அல்லிஃப்
பைனஹுமா, அபூஹுரைரா, அஃபான், ஷுஃஆ ,அல்ஃபாத்திஹா, அலம்ரோஜி இத்ரஸ்,அல்ஹஸன்
அல்பஸ்ஸரி, ஸஅத் இப் வக்காஸ், ஃபிக்ஹு, அல்ஷின்ப்ஜி அல்ஷட்டாய்,பிஹாருந்நிஸா ஹஜ்ஜுன் மப்ரூர்,
முல்தகா அஹ்லில் ஹதீஸ் அஸ்ஸெம், நஃபி, அபோ நஹிக், அபோ ஹை,அல்பஹர் அல்மொஹித்,ஹஃப், பஸ்லுல் இலாஹி, ஷிர்க், சகதுல்லாஹ்.
கருத்தில் கவனம் செலுத்தாமல் எழுத்தில் குறைகூறுவதால் என்ன பயன். மணிப்பிரவாளம் வழங்கியதற்குக் காரணன் அச்சில் தமிழ் எழுத்துக்கள் மறை சார்ந்த கருத்துக்களை வெளியிட உதவவில்லை என்பதால்தானே.தமிழால் முடியாதபோதும் எழுதுபவருக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாதபோதும் மணிப்பிரவாளமாக எழுதாமல் என்னதான் சாமியோவ் செய்ய முடியும்?
தமிழால் எல்லாம் முடியும் நல்ல எழுத்துக்களில் கெட்ட கருத்துக்களையும் கலப்புத் தமிழில் நல்ல கருத்தையும் சொல்வது கட்டற்ற இணயத்தில் கட்டுப்படுமா?அசடு முசுடு
2014-09-27 6:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தமிழில் எழுத விரும்புபவர்கள், பள்ளியில் தமிழ்த்தேர்வு எழுதும் பொழுது எந்த வகையில் எழுதினால் தேர்வு உறுதி என்று தெரியுமோ அந்த வகையில் எழுதுங்கள்.இல்லை நீங்கள் தமிழாசிரியராக இருந்தால் உங்கள் மாணவர் இவ்வாறு எழுதினால் தேர்ச்சி தருவீர்களா எனவும் சிந்தித்துப் பார்க்கலாம்.திரு. அரிசோனன் சொல்வதையும் கவனிக்கலாம். இங்கு பெரும்பாலும் தமிழ் எழுதுபவர் உலகில் பல மூலைகளிலும் வாழ்ந்து, தினசரி வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தாலும் கூட தொலைக்காட்சியைக் கேட்டாலே பிறமொழி வந்து விழும் ...புழங்கும் இடத்தில் இருந்து கொண்டுதான் எழுதுகிறார்கள்.சுபா சொன்னதையும் கவனிக்கத் தேவை, நாம் பிற்காலத் தலைமுறைக்கு நம் சிந்தனைகளை விட்டுச் செல்கிறோம் என்பதிலும் நமக்கு அக்கறை இருக்க வேண்டும்.தவிர்க்க இயலாத பிறமொழிச் சொற்கள், பெயர் சொற்கள் போன்றவற்றை குறிப்பிடும் பொழுது யாரும் இடையிடுவதில்லை என்பதையும் நான் கவனித்துள்ளேன்.நான் 27 ஆண்டுகள் அயல் நாட்டில்தான் வசிக்கிறேன்.இணையம் கிடைக்கும்வரை தமிழகத் தொடர்பும் கிடையாது.கிடைத்த பின்னரும் கூகுள் வந்து உதவும் வரை தமிழில் எழுத வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் ....எனது தாய்மொழி எனக்கு மறக்கவில்லை..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கருத்திலும் எழுத்திலும் கவனம் செலுத்துவதால் கவனித்தது.
இதுவரை நான் அமைதி காக்கத்தான் நினைத்தேன். நெஞ்சு பொறுக்குதில்லையே!போகிற போக்கைப் பார்த்தால், தமிழ் மறைந்து "மணிப்பிரவாளம்" கொலோச்சிவிடும் போல எனக்குப் படுகிறது.
அதற்கு மின்தமிழே ஒரு கருவி ஆகி விடும்போல உள்ளது.
பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து வருவது காலத்தின் கட்டாயம். அது ஒருபுறமிருக்க, பாதிக்குமேல் வடசொற்களைக் கலந்து எழுதவதையும் போற்றுவோம், அதுவும் ஒரு அழகுதான் என்று போற்றத துவங்கினால், சேர நாட்டுத் தமிழ் "மலையாள"மாக ஆனதுபோல ஒரு "தங்க்ஸ்கிருத"மோ, அல்லது ஒரு "சம்ஸ்மிழோ" உருவாகி விடும்.தாங்கள் அனைவரும் தமிழத் தவிர மற்ற மொழிகளையும் அறிந்தவர்களே! யாரவது ஆங்கிலத்திலோ, பிரஞ்சிலோ, ஜெர்மன் மொழியிலோ, ஏன் வடமொழியிலோ பாதிக்குமேல் தமிழைக் கலந்து எழுதிகிறீர்களா? அப்படி எழுதுவதுதான் எனது பாணி என்றால் யாராவது உங்களைப் போற்றுவார்களா!
மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமாரின் படிப்புகளை நான் நன்கு படித்து இரசித்தவன். அவர் தனது கருத்துக்களைத் தயக்கமின்றியும், அனைவருக்கும் விளங்கும் வகையிலும், அனைவரின் மனத்தைக் கவரும் வகையிலும் எழுதும் திறன் படைத்தவர். அவரது தமிழை, அதன் ஓட்டத்தை, அவர் தமிழ்ச் சொற்களைக் கையாளும் திறனை நன்கு கவனித்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன். தூய தமிழ்ச் சொற்கள் பல அவரது படைப்புகளில் துள்ளி விளையாடுகின்றன. அவரால் நல்ல தமிழில் எழுத இயலும்.
அவர் தனது அடையாளம் "மணிப்பிரவாள" நடை என்று ஒரு முறை சுட்டி இருக்கிறார்.
எனவே, அவரால் எழுத இயலக் கூடிய தூய தமிழ் நடையை, அவரை வேண்டி, வேண்டி, நான் கொணர முழுவதை விட்டுவிட்டு, அவரது மணிப்பிரவாளத்தைப் புகழ்ந்தால், அவர், அவரது "அடையாளத்"தை ஒருபோதும் விடமாட்டார். ஒரு நல்ல தமிழ் எழுத்தாளரை, தூய தமிழில் எழுதவிடாமல் தடுத்த குற்றத்தைச செய்தவர்கள் ஆகிவிடுவோம், நாம்!
//அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. மற்றும் இவருடையது போன்ற தமிழ் நடைஅன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. அன்புகூர்ந்து அவர் தம் நடையை திருத்திக்கொள்வது அவர் சார்ந்த குமுகத்திற்கு நலம் பயக்கும்.//இக்கருத்துக்களுடன் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை..
..கருத்துக்களைக் கோர்வையாகச் சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு நன்றி ஐயா.
இதுவரை நான் அமைதி காக்கத்தான் நினைத்தேன். நெஞ்சு பொறுக்குதில்லையே!போகிற போக்கைப் பார்த்தால், தமிழ் மறைந்து "மணிப்பிரவாளம்" கொலோச்சிவிடும் போல எனக்குப் படுகிறது. அதற்கு மின்தமிழே ஒரு கருவி ஆகி விடும்போல உள்ளது.
2014-09-26 16:35 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:இதுவரை நான் அமைதி காக்கத்தான் நினைத்தேன். நெஞ்சு பொறுக்குதில்லையே!போகிற போக்கைப் பார்த்தால், தமிழ் மறைந்து "மணிப்பிரவாளம்" கொலோச்சிவிடும் போல எனக்குப் படுகிறது. அதற்கு மின்தமிழே ஒரு கருவி ஆகி விடும்போல உள்ளது.இன்றைய தமிழகத்தில் சைக்கிளுக்கு பஞ்சர் ஓட்டும் ஒரு எளிய அடிமட்ட தொழிலாளி பேசும் தமிழிலேயே இதை விட அதிக கலப்பு இருக்கும். இங்கே வடமொழி. அங்கே ஆங்கிலம்.இங்கே வாதாடும் எல்லாரும் வீட்டில், வெளியே தூயதமிழ் தான் பேசுகிறோமா? நோயாளர் ஊர்தி, தாதி, மகிழ்வுந்து, கணிணி, கைபேசி என தான் வீட்டில், வெளியே பேசுகிறோமா?சினிமா பாடல் ஒன்று. ஒப்பிடலுக்கு
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தமிழிற்குக என்று ஒரு மரபு உண்டு மொழி முதலில் மெய் எழுத்து வரலாகாது என்பது.
2.அவர் எழுத்துமுறை, அவர் அடையாளம், இரசிக்கிறேன், நூறு வருடங்களுக்கு முன் பாரதி எழுதியது போன்று எழுதுகிறார் எனப் பலவாறு உசுப்பேத்தி உசுப்பித்தி ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளரை மணிப்பிரவாளத்தில் தொடரவிட வேண்டாம் என்று பிற நண்பர்களிடம் வேண்டுகிறொம். அவ்வளவே.
On Saturday, 27 September 2014 01:04:11 UTC-7, seshadri sridharan wrote:தமிழிற்குக என்று ஒரு மரபு உண்டு மொழி முதலில் மெய் எழுத்து வரலாகாது என்பது.கனம் சேச்சா அவர்களே,ஞ, ந, ம, ண, ன, ய, ர, ல, வ, ழ, ள பதினோரு எழுத்துத் தவிரப்பிற எழுத்துகள் மொழியிறுதி ஆகா என்றும் இலக்கண நூற்பாஉள்ளது.
ரஜனிகாந்த் - து, விஜய்காந்த்- து, விஜய்- யி, , ராஹுல் - லு, அஹமத் - து,முகமத் - து, நிக்காஹ், டேவிட் - டு , விக்ரம் - விக்கிரமு, அக்ரம் - அக்குரமு -தேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அப்படியே விவாகத்துக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அதையும் தமிழ் சொல் ஆக்கினால் இந்த வடமொழி கலப்பு பிரச்சனையும் தீர்ந்துடும்.
........... மோதிரக்கையால் குட்டுப்படுவது உகப்பிற்குறியது தான்.
அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை. மற்றும் இவருடையது போன்ற தமிழ் நடை தமிழ்த் தேசியர் ஒழிக்க நினைக்கும் திராவிடத்தை நிலை பெறச்செய்யவே உதவும் பார்ப்பன வெறுப்புடன். அன்புகூர்ந்து அவர் தம் நடையை திருத்திக்கொள்வது அவர் சார்ந்த குமுகத்திற்கு நலம் பயக்கும்.
இதுவரை நான் அமைதி காக்கத்தான் நினைத்தேன். நெஞ்சு பொறுக்குதில்லையே!போகிற போக்கைப் பார்த்தால், தமிழ் மறைந்து "மணிப்பிரவாளம்" கொலோச்சிவிடும் போல எனக்குப் படுகிறது. அதற்கு மின்தமிழே ஒரு கருவி ஆகி விடும்போல உள்ளது.பரிதிமால் கலைஞரையும், மறைமலை அடிகளையும் தூக்கி எறிந்துவிடுவோமே!.பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து வருவது காலத்தின் கட்டாயம். அது ஒருபுறமிருக்க, பாதிக்குமேல் வடசொற்களைக் கலந்து எழுதவதையும் போற்றுவோம், அதுவும் ஒரு அழகுதான் என்று போற்றத துவங்கினால், சேர நாட்டுத் தமிழ் "மலையாள"மாக ஆனதுபோல ஒரு "தங்க்ஸ்கிருத"மோ, அல்லது ஒரு "சம்ஸ்மிழோ" உருவாகி விடும்.
On Friday, September 26, 2014 11:58:44 AM UTC-7, செல்வன் wrote:அப்படியே விவாகத்துக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அதையும் தமிழ் சொல் ஆக்கினால் இந்த வடமொழி கலப்பு பிரச்சனையும் தீர்ந்துடும்.கலியாணம் > கல்யாணம், ஒட்டியாணம் > ஒட்யாணம்.இன்னொரு சொல் தருகிறேன்: கருநாடகம் (கருநடர் - இளங்கோ அடிகள்) > கர்நாடகம் என வடமொழியில்தமிழ்ச்சொல் திரிந்தது.கருநாடு > கர்நாடு > கன்னடம் (பாஷையின் பேர் derived from Consonant Assimilation).
-ஜி.ஸன்தானம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பகர்ந்திருந்தேனே, தாங்கள் அதைப்படித்தும் இப்படி எழுதி இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. கதை எழுதும்போது, எந்த அசைபையும் கையாளலாம், ஏனெனில், கதாபாத்திரங்களின் தன்மையைப படிப்போருக்கு உணர்த்த அம்முறை கையாளப்படுகிறது. ஆயினும், கட்டுரைகளிலோ, ஆராய்ச்சியிலோ அவ்வசைபுகளை தேவையின்றிக் கையாளுவது மரபல்ல, இது தமிழுக்குமட்டுமல்ல. மற்ற மொழிகளுக்கும் பொருந்தும்.ஆங்கிலத்தில் எத்தனையோ அசைபுகள் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ளன. எழுதும்போது அந்த அசைபுகளில் எழுதவைதில்லை என்பது தாங்கள் உள்பட அனைவரும் அறிந்ததுதானே!
தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணற்ற தமிழறிஞர்கள் இந்த மின்தமிழ் குழுமத்தில் உள்ளார்கள். இருப்பினும், அவர்களின் முன் ஆதவன்முன் அகல்விளக்கான சிரியோனும் முயலுகிறேன்.
Auspicousness
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அய்யா ஆமாச்சு அவர்களே,எனக்கு மூஷிக நாடு என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைவுக்கு வரவில்லை. அருள்கூர்ந்து அதை அறிவித்தால், அடியேன் ஆனந்தமடைவேன்.
ரஜனிகாந்த் - து, விஜய்காந்த்- து, அஹமத் - து, முகமத் - து,
பிரபாத் ரஞ்சன் சர்க்கார் பிராமி ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தம் சொற்பொழிவில் கூறியுள்ளார்.
On Sunday, September 28, 2014 12:36:59 AM UTC+5:30, oruarizonan wrote:எனக்கு மூஷிக நாடு என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைவுக்கு வரவில்லை. அருள்கூர்ந்து அதை அறிவித்தால், அடியேன் ஆனந்தமடைவேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Sunday, September 28, 2014 12:36:59 AM UTC+5:30, oruarizonan wrote:எனக்கு மூஷிக நாடு என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைவுக்கு வரவில்லை. அருள்கூர்ந்து அதை அறிவித்தால், அடியேன் ஆனந்தமடைவேன்.வடகேரளம் - காசரகோடு (காஞ்சிரங்கோடு), செறுகுன்னு (சிறுகுன்று) பகுதிகள் தமிழகத்தின் முக்கியமான பிரதேயங்களாகசங்க காலத்தில் விளங்கின.
சிறந்த பெண்புலவராக அங்கே பொன்முடியார் இருந்திருக்கிறார்.
உயர்திரு ஆமாச்சு அவர்களே,//தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் திதியனை வென்ற பிறகு தமிழ் அங்கே புகுத்தப்பட்டிருக்கலாம்.
இப்போ மலையானம் தமிழ்லேர்ந்து வந்ததுன்னு சொல்வதை மறுக்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன //உங்களது நகைச் சுவையை நான் மின்தமிழில் இரசிப்பதுண்டு. உங்களது நகைச் சுவையிலேயே சிறந்தது எது என்றால், இதுவே என்று நான் அறுதியிட்டுக் கூறுவேன் ஐயா!
உயர்திரு ஆமாச்சு அவர்களே,//தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் திதியனை வென்ற பிறகு தமிழ் அங்கே புகுத்தப்பட்டிருக்கலாம்.
இப்போ மலையானம் தமிழ்லேர்ந்து வந்ததுன்னு சொல்வதை மறுக்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன //உங்களது நகைச் சுவையை நான் மின்தமிழில் இரசிப்பதுண்டு. உங்களது நகைச் சுவையிலேயே சிறந்தது எது என்றால், இதுவே என்று நான் அறுதியிட்டுக் கூறுவேன் ஐயா!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Sunday, September 28, 2014 9:38:56 PM UTC+5:30, oruarizonan wrote:உயர்திரு ஆமாச்சு அவர்களே,//தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் திதியனை வென்ற பிறகு தமிழ் அங்கே புகுத்தப்பட்டிருக்கலாம்.
இப்போ மலையானம் தமிழ்லேர்ந்து வந்ததுன்னு சொல்வதை மறுக்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன //உங்களது நகைச் சுவையை நான் மின்தமிழில் இரசிப்பதுண்டு. உங்களது நகைச் சுவையிலேயே சிறந்தது எது என்றால், இதுவே என்று நான் அறுதியிட்டுக் கூறுவேன் ஐயா!
அதோடு ஆய் அண்டிரன் முதலானோர் துவாரகை வழி வந்தோர் என்பது நச்சினார்க்கினியர்தம் கருத்து.
| ========= நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே ======== காமெடியனுக்கு பொருள் புரிகிறது. ரசித்தவருக்கு எப்பூடி? -- ஆமாச்சு |
//மொத்த கேரளமும் சேர நாடுன்னு உங்க காமெடிக்கு நான் தேவலாம்.//அய்யா ஆமாச்சு அவர்களே,நான் உங்களிடம் "மூஷிக நாடு எது என்றுதான் கேட்டேன். நீங்களாகவே witness, jury and judgeஆக மாறி மீண்டும் நகைச்சுவை நல்குகிறீர்களே!
போதகர் (Priest) – ஆயர்
அத்தியட்சர் (Bishop) – பேராயர்
அத்தியட்சாதீனம் – திருமண்டிலம்
கடவுள் ராஜ்யம் – இறை அரசு
தேவ குமாரன் – இறை மகன்
ஞானஸ்நானம் - திருமுழுக்கு
இப்படி எத்தனையோ பல. மதுரையில் இருக்கும் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பயிற்சிபெறும் இறை ஊழியர்கள் தூய தமிழில் ஆலய வழிபாட்டை நடத்தும்படி பயிற்சிவிக்கப்படுகிறார்கள்.
“எங்கள் நடை தொடக்கத்திலிருந்தே இப்படித்தான் – நாங்கள் மாறமாட்டோம்” எனக் கிறித்தவர்கள் கூறுவதில்லை.
தமிழ் விவிலியமும் இப்போது தூய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு :
பழைய விவிலியம் – ஆவியில் எளிமையுள்ளோர் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
புதிய விவிலியம் – ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத்தேயு:5-3)
தாங்கள் குறிப்பிட்டிருக்கும் கிறித்தவப்பாடலும் அன்றைக்கு பெருவழக்கிலிருந்த இந்து சமயக் கீர்த்தனைகளை அடியொற்றி எழுதப்பட்டது. அப்படிப்பட்ட பாடல்களில் வடமொழிச் சொற்கள் மிகுந்திருப்பது இயற்கையே.
தேவனே நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்-
மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான் –
கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் –
என்பது போன்ற எளிய தமிழ்நடைப் பாடல்களே மிகுதி.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒருசில வடமொழிச் சொற்களைத் தவிர வலிந்து புகுத்தப்படும் வேற்றுமொழிச் சொற்கள் தவிர்க்கப்படுகின்றன.
பாரதியார் வடமொழி கலக்கவில்லையா என்பதெல்லாம் எடுபடாத வாதம். அவர் அக் காலத்திய நடையில் எழுதினார். இன்றைக்குப் பாரதியார் அந்த நடையில் எழுதியிருப்பாரா என்பது ஐயமே.
முடிந்தவரை, வடமொழிக் கலப்பின்றி, அப்படியே கலந்தாலும் வடவெழுத்துக் கலப்பின்றி தமிழில் எழுதுவதே இன்றைக்குப் பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் முறை. பல வடசொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. முடிந்தவரை அவற்றைப் பயன்படுத்துவோம்.
முற்றிலும் தூய தமிழ் என்பது ஒரு தொலைமுனைப் புள்ளி (Extreme point). முடிந்த அளவு அதனை அடையும் முனைப்புடன் எழுதவேண்டும். அதனை விடுத்து, நான் இப்படித்தான் எழுதுவேன் என்று அடம்பிடிப்போர் தங்களைத் தாங்களே ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவைத்துக்கொள்பவரே. நாளாவட்டத்தில் அந்த வட்டம் குறுகிக்கொண்டே வந்து மறைந்துபோகும்.
இன்னும் நிறைப் பேச ஆவல். நேரமில்லை. மன்னிக்க.
ப.பாண்டியராஜா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தொல்காப்பியன் --> தோலகாப்பியநதிருவள்ளுவன் --> திருவல்லுவநபழனி - பலநிநெடுஞ்செழியன் - நேடுஞ்சேலியநஐயா, இந்த தமிழ்ச் சொற்களை தமிழ் உச்சரிப்புமுறையிலேயே இந்தி, வடமொழி ஆகியவற்றில் எழுதுவது எப்படி?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்பு நிறை கிருஷ்ணகுமார் ஐயா அவர்களுக்கு,கிறித்துவ இறைவழிபாட்டில் நடந்துவரும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கோடிட்டுக் காண்பித்தேன். நல்லவற்றைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு எங்கோ சில பழம்பெருச்சாளிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் தங்களின் வாதம் (பிடிவாதம்) தங்களின் உண்மை உருவத்தைக் காட்டிநிற்கிறது. முருக்கு அவிழ்ந்து மணம்வீசும் முல்லை மலர்களைக் காட்டினால், தாங்கள் காய்ந்த சருகுகளையும், காணாமற்போய்க்கொண்டிடிருக்கும் செம்மல்களயும் காட்டுகிறீர்கள்.குடிக்கின்ற நீரில் சாக்கடையைக் கலக்காதீர் என்று வேண்டினால், "நீர் இப்போது குடிக்கும் நீரில் எத்தனை தூசும் துரும்பும்?" என்று உருப்பெருக்கிக்கண்ணாடியைக் கொண்டுவந்து உள்ளவற்றைப் பெரிதாக்கிக் காண்பிக்கிறீர்.
ஞ, ந, ம, ண, ன, ய, ர, ல, வ, ழ, ள பதினோரு எழுத்துத் தவிரப்பிற எழுத்துகள் மொழியிறுதி ஆகா என்றும் இலக்கண நூற்பாஉள்ளது.ரஜனிகாந்த், விஜய்காந்த், விஜய், திக்விஜய் சிங்க், ராஹுல், அஹமத்,முகமத், நிக்காஹ், டேவிட் , விக்ரம், அக்ரம் - எழுத இடமில்லை
ள ஒலிப்பு மராட்டியில் மட்டுமே உள்ளது. வடமொழியிலோ, இந்தியிலோ கிடையாது. நண்பர் எழுதியிருப்பதை மராட்டியில் மட்டுமே எழுத இயலும். அந்த மொழியிலும் கூட எ, ஒ ஒலி கிடையாது. தாங்கள் வடமொழியையும், மராட்டி எழுத்துக்களையும் கலந்து எழுதி உள்ளீர்கள்.
இனி திரு.கிருஷ்ணகுமார் இதனை உணர்ந்து பங்கெடுப்பது என்றால் தமது பதிவுகளை முயற்சி செய்து வலிந்து சமஸ்கிருதம் கலக்காது எழுதட்டும். இல்லையென்றால் அவரது பதிவுகள் மின் தமிழில் மட்டுறுத்தப்படும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எப்பொழுது ஒரு மொழியில் ஒலி இல்லையோ, அந்த ஒலியை வலிந்து திணிப்பது என்பது காளையிடம் பால் கறக்க முற்படுவது போலத்தான்.
தமிழ் ஒலி அறியாத மற்றமொழியோருக்கு அது ஓவியங்களே! தமிழறியாமல் அவற்றை ஒலித்துவிட இயலாது
:)
யுனிகோடு வேண்டுமானாலும் உருவாக்கலாம். எப்பொழுது ஒரு மொழியில் ஒலி இல்லையோ, அந்த ஒலியை வலிந்து திணிப்பது என்பது காளையிடம் பால் கறக்க முற்படுவது போலத்தான். தாங்அழ எழுதியிருப்பது தமிழ் எழுத்துக்களைக் கற்காத தமிழர்களுக்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தேப்
ஒவ்வொரு மாநில எழுத்து-லிபிகளும் இந்திக்கு நிகராக ஏற்படுதல் இந்தியாவின் ஒற்றுமைக்குபலம் கூட்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உயர்திரு அசடுமுசுடு அவர்களே,அப்படி ஒரு லிபி இருக்கிறது. அதற்குத தமிழ் கிரந்தம் என்று பெயர். வடமொழியை அதில்தான் தமிழர்கள் எழுதிப் படித்தார்கள் என்று முன்னமேயே எழுதி இருந்தேன். ஐம்பது ஆண்டுகளில் தேவநாகரி லிபி தமிழ் கிரந்த லிபியைக் காணாது அடித்து விட்டது -- இளம்தலைமுறை, தமிழத் தமிழ் லிபியில் எழுதாமல் ரோமன் லிபியில் எழுத முற்படுவது போல.
தமிழைச் சரியாக ஒலிக்க அதைக் கேட்டே பயிற்சி பெறவேண்டும்.மற்ற மொழிகளும் அப்படியே!
On Friday, 26 September 2014 06:56:45 UTC-7, seshadri sridharan wrote:அன்பர் கிருஷ்ணகுமார் தமிழக குமுக நடப்பிற்கு தக்கபடி சர்மாவை களைந்துவிடலாம் என்பது என் அறிவுரை.அல்ஹம்துலில்லாஹ்,அஹ்ல ஹதீஸ், முஜாஹித்,ஜாக்,மர்கஸுஸ் ஸலஃபி,அந்நஜாத்
அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்,ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல்
ஹதீஸ்,ரஹ்மதுல்லாஹ் பிரதவ்ஸி,அஷ்ஷேய்க் ரஹ்மத்துல்லாஹ் ,அஷ்ஷேய்க் நூஹ்
ஜம்மியத்துல் அஹ்லுல்,குர்ஆன் வ அல் ஹதீஸ், ஜுமர், நஹ்ல், ஸஃப்:, ஹதீஸ் குத்ஸீ,இப்னு அப்துல் அஜீஸ்,இப்னு இஸ்ஹாக், இப்னு ஜூரைஜ், ஸூஃப்யானுத் தவ்ரீ, அப்துல்லாஹ் இப்னு
முபாரக், இப்னு ஜரீர் அத்தபரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, பஹீரா,
ஜிஃரானா,ஹஜ்ஜுன் மப்ரூர், ஷபே,அரீஜ், கப்ஜி, அஹமத்,ஜத், அல்லிஃப்
பைனஹுமா, அபூஹுரைரா, அஃபான், ஷுஃஆ ,அல்ஃபாத்திஹா, அலம்ரோஜி இத்ரஸ்,அல்ஹஸன்
அல்பஸ்ஸரி, ஸஅத் இப் வக்காஸ், ஃபிக்ஹு, அல்ஷின்ப்ஜி அல்ஷட்டாய்,பிஹாருந்நிஸா ஹஜ்ஜுன் மப்ரூர்,முல்தகா அஹ்லில் ஹதீஸ் அஸ்ஸெம், நஃபி, அபோ நஹிக், அபோ ஹை,அல்பஹர் அல்மொஹித்,ஹஃப், பஸ்லுல் இலாஹி, ஷிர்க், சகதுல்லாஹ்.
இப்படி எழுதுவோர்க்கெல்லாம் சேச்சாவின் அறிவுரை என்ன ?
தேவ்