ஐயனாரும் விஷ்ணுவும்

949 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Nov 21, 2009, 10:11:52 AM11/21/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
 
நண்பர்களே,
 
இன்று காலையில் மலேசிய  நண்பர்  ஒருவருடன் தொலைபேசியில் உரையாடும் போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அதாவது சிறு தெய்வம் கிராம தெய்வம் என நாம் குறிப்பிடும் ஐயனார் சாமி விஷ்ணுவின் ஒரு வடிவம் தான் என்பது.
 
இதே விஷயத்தை கடந்த மாதம் கெல்ன் உத்தமம் மானாட்டிற்குச் சென்றிருந்த போது சந்தித்த பேராசிரியை உல்ரிக்காவின் கணவர் சரவணனும் குறிப்பிட்டார். அவர் பாண்டிச்சேரியில் ஐயனார் கோயில் பூசாரியாக இருந்தவர். அதோடு சிங்கையில் பேராசிரியை வேலை பார்த்த சமயத்தில் தேசிய பல்கலைக் கழகத்தில் பல சிறு தெய்வ வடிவங்களை, குதிரை, மண்பாண்டம் போன்றவற்றை களி மண்ணால் வடித்து காட்சிக்கும் வைத்திருப்பதாக குறிப்பிட்டார். அதேபோல தற்சமயம் கெல்ன் பல்கலைக் கழகத்திலும் சில சிலை வடிவங்களை வடித்து வைத்திருக்கிறாராம். அன்று உடனே பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அடுத்த முறை பிரத்தியேகமாக இதனைக் காண வருவதாகச் சொல்லியிருக்கிறேன்.  பேசிக் கொண்டிருக்கும் போதே உடனே ஒரு ஐயனார் படத்தை சில நிடங்களில் வரைந்து காட்டினார். படத்தை பார்க்கவும்.
 
அதோடு நமது வலைப்பக்கத்திலும் உள்ள ஐயனார் படத் தொகுப்பை இங்கே காணலாம். 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு இது.  http://www.tamilheritage.org/old/photoarc/ayyanar/ayyanar.html
 
கேள்வி என்னவென்றால் ஐயனார் சாமி விஷ்ணுவின் ஒரு வடிவம் தான் என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றது? விஷயம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் உதவும்.
 
அன்புடன்
சுபா
 
 
Karuppanna sami.jpg

N. Ganesan

unread,
Nov 21, 2009, 10:30:24 AM11/21/09
to மின்தமிழ்

On Nov 21, 9:11 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> அதோடு நமது வலைப்பக்கத்திலும் உள்ள ஐயனார் படத் தொகுப்பை இங்கே காணலாம்.
> 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு இது.
http://www.tamilheritage.org/old/photoarc/ayyanar/ayyanar.html
>
> கேள்வி என்னவென்றால் ஐயனார் சாமி விஷ்ணுவின் ஒரு வடிவம் தான் என்பதில் எந்த
> அளவு உண்மை இருக்கின்றது? விஷயம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் உதவும்.
>

தொன்றுதொட்டு ஐயனாரை சிவனொடு தொடர்புபடுத்துவது மரபு.
சாத்தனை மகனாக் கொண்டார் - அப்பர் தேவாரம்.
திருக்கயிலாய ஞானவுலாவை தமிழுக்குக் கொண்டுவந்தவர் ஐயனார்.
மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்துள்ள அய்யனார்,
தட்சிணாமூர்த்தி வடிவங்கள் தொடர்புடையவை.
(என் தட்சிணாமூர்த்தி- அவலோகிதேசுரன் கட்டுரை).

பிரெஞ்சு நிறுவனம் (புதுச்சேரி) முன்பு விரிவான
அய்யனார் வழிபாடு பற்றிப் புத்தகம் வெளியிட்டுள்ளது.

அய்யனார் வழிபாடு இரும்பூழிக் காலத்தில் ஏற்பட்ட
இணக்கம். ஆரியங்காவு பொதிகை மலையில்.
ஆரியங்காவுப்பிள்ளை பழைய பெயர்கள் உண்டு.

அய்யனார் வழிபாட்டின் தோற்றம் பற்றி
ஆஸ்கோ பார்ப்போலா கட்டுரையில் காணலாம்:
http://groups.google.com/group/mintamil/msg/8b700a0f756a40ab
(பிடிஎப் கோப்பு படிக்கவும்).

அன்புடன்
நா. கணேசன்

> அன்புடன்
> சுபா
>

>  Karuppanna sami.jpg
> 91KViewDownload

வினோத் ராஜன்

unread,
Nov 21, 2009, 10:39:12 AM11/21/09
to மின்தமிழ்
மயிலை சீனி. வேங்கடேசன் ஐயனார், ஐயப்பன் எல்லாம் புத்த மூர்த்திகள் என்று
கூறுவார்.
'
புத்த மதம் பெருவழக்கிழந்த நிலையில், புத்த மத தேவதைகள் கோவில் காவல்
தெய்வங்களாக சிறுதெய்வங்களாக கீழிறக்கப்பட்டன என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, ஐயப்பன் புத்த கருணாமூர்த்தியான அவலோகிதேஸ்வரராக இருக்கலாம்
என்றும் (பகவான் அவலோகிதேஸ்வரருக்கு ஹரி-ஹர லோகேஸ்வரர் என்ற வடிவம்
உண்டு. ஹரி-ஹர லோகேஸ்வரர் பின்னாளில் ஹரி-ஹர புத்திரனாக உருமாற்றம்
அடைந்திருக்க வேண்டும்), மாளிகாபுரத்தம்மான் பகவதி தாரா தேவியாக இருக்க
வாய்ப்புண்டு என்பதை பற்றியும் இங்கு எழுதியுள்ளேன்.

V

On Nov 21, 8:11 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> நண்பர்களே,
>
> இன்று காலையில் மலேசிய  நண்பர்  ஒருவருடன் தொலைபேசியில் உரையாடும் போது ஒரு
> விஷயத்தைக் குறிப்பிட்டார். அதாவது சிறு தெய்வம் கிராம தெய்வம் என நாம்
> குறிப்பிடும் ஐயனார் சாமி விஷ்ணுவின் ஒரு வடிவம் தான் என்பது.
>
> இதே விஷயத்தை கடந்த மாதம் கெல்ன் உத்தமம் மானாட்டிற்குச் சென்றிருந்த போது
> சந்தித்த பேராசிரியை உல்ரிக்காவின் கணவர் சரவணனும் குறிப்பிட்டார். அவர்
> பாண்டிச்சேரியில் ஐயனார் கோயில் பூசாரியாக இருந்தவர். அதோடு சிங்கையில்
> பேராசிரியை வேலை பார்த்த சமயத்தில் தேசிய பல்கலைக் கழகத்தில் பல சிறு தெய்வ
> வடிவங்களை, குதிரை, மண்பாண்டம் போன்றவற்றை களி மண்ணால் வடித்து காட்சிக்கும்
> வைத்திருப்பதாக குறிப்பிட்டார். அதேபோல தற்சமயம் கெல்ன் பல்கலைக் கழகத்திலும்
> சில சிலை வடிவங்களை வடித்து வைத்திருக்கிறாராம். அன்று உடனே பார்க்க நேரம்
> கிடைக்கவில்லை. அடுத்த முறை பிரத்தியேகமாக இதனைக் காண வருவதாகச்
> சொல்லியிருக்கிறேன்.  பேசிக் கொண்டிருக்கும் போதே உடனே ஒரு ஐயனார் படத்தை சில
> நிடங்களில் வரைந்து காட்டினார். படத்தை பார்க்கவும்.
>
> அதோடு நமது வலைப்பக்கத்திலும் உள்ள ஐயனார் படத் தொகுப்பை இங்கே காணலாம்.

> 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு இது.http://www.tamilheritage.org/old/photoarc/ayyanar/ayyanar.html


>
> கேள்வி என்னவென்றால் ஐயனார் சாமி விஷ்ணுவின் ஒரு வடிவம் தான் என்பதில் எந்த
> அளவு உண்மை இருக்கின்றது? விஷயம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் உதவும்.
>
> அன்புடன்
> சுபா
>

>  Karuppanna sami.jpg
> 91KViewDownload

N. Ganesan

unread,
Nov 21, 2009, 10:40:45 AM11/21/09
to மின்தமிழ்

வேங்கடேசன் என்பது அவ்வாசிரியர் பெயரல்ல.

> > 91KViewDownload- Hide quoted text -
>
> - Show quoted text -

வினோத் ராஜன்

unread,
Nov 21, 2009, 10:44:05 AM11/21/09
to மின்தமிழ்
ஆம்.. வேங்கடசாமி :-)

V

N. Kannan

unread,
Nov 21, 2009, 10:56:48 AM11/21/09
to mint...@googlegroups.com
கணேசன்:

மதுரைப் பக்கமெல்லாம் ஐயனார், திருமால்தான். நாமம் போட்டு இருப்பார்.

மதுரைக் கள்ளழகர் கோயில் கருப்பனசாமிக்கு பெயர் விஷ்ணுபூதம் என்பது.

தொ.பரமசிவம் அவர்களின் ஆய்வு இங்கு ஒப்புநோக்கத்தக்கது. அவர்
விளிம்புநிலை மாந்தர்களின் தெய்வம் நாரணன் என்பார். ஆ.மார்க்ஸ்ஸின் ஒரு
பட்டறையில் இது வலியுறுத்தப்படுகிறது.

கண்ணன்

2009/11/22 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Nov 21, 2009, 11:12:01 AM11/21/09
to மின்தமிழ், tamizh...@googlegroups.com, tamil_...@googlegroups.com
> On Nov 21, 8:40 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > வேங்கடேசன் என்பது அவ்வாசிரியர் பெயரல்ல.
>

On Nov 21, 9:44 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> ஆம்.. வேங்கடசாமி :-)
>
> V
>

மயிலை சீனி வேங்கடசாமி

தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்க்கெட லாற்றா அண்ணல்
வேங்கட சாமி என்பேன்
விரிபொரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்
வீங்கிட மாட்டான் கல்வி
விளம்பரம் விழைதல் இல்லான்

தமிழுக்குத் தொண்டு செய்வோர்
தலைச்சங்க முதலாய் இன்றும்
தமிழுக்குத் தொண்டர் யார்க்கும்
தலைத் தொண்டன்; அடிமை அல்லன்
குமிழ்பகுத் தறிவியக்கம்
கொள்கையில் அசைக் கொணாத
இமயமும் தோற்கும் அண்ணல்
ஈடிலாத் திறமை ஆற்றல்!

ஒன்றினும் திரியாதுள்ளம்
ஒண்டமிழ்க் குழைப்பதொன்றே
நன்றினும் நன்று என்று
துறவினை நயந்த மேலோன்.
நன்றிகெட் டதிகாரத்தை
நாடும் எவ்வரசும் அன்னார்
குன்றினும் மிகுந்த கீர்த்தி
கொண்டுயர் வளித்தார் இல்லை.

தமிழையே வணிகமாக்கித்
தன் வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ்முத லாக்கிக் கொண்டே
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச்சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்

அஞ்சுதல் அறியா நெஞ்சன்
அகல்வர லாறனைத்தும்
மிஞ்சுதல் இன்றிக் கற்றோன்,
மேம்படும் நூலாராய்ச்சி
கெஞ்சிடும் தனைத்துலக்க;
கேண்மையோ டுயர்வு செய்வான்.
எஞ்சுவ துமக்கொன்றுண்டோ
இவனை நீர் மறந்து விட்டால்?

- பாவேந்தர் பாரதிதாசன்

On Nov 21, 9:11 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:


> அதோடு நமது வலைப்பக்கத்திலும் உள்ள ஐயனார் படத் தொகுப்பை இங்கே காணலாம்.
> 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு இது.

http://www.tamilheritage.org/old/photoarc/ayyanar/ayyanar.html

> கேள்வி என்னவென்றால் ஐயனார் சாமி விஷ்ணுவின் ஒரு வடிவம் தான் என்பதில் எந்த
> அளவு உண்மை இருக்கின்றது? விஷயம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் உதவும்.

தொன்றுதொட்டு ஐயனாரை சிவனொடு தொடர்புபடுத்துவது மரபு.


சாத்தனை மகனாக் கொண்டார் - அப்பர் தேவாரம்.
திருக்கயிலாய ஞானவுலாவை தமிழுக்குக் கொண்டுவந்தவர் ஐயனார்.
மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்துள்ள அய்யனார்,
தட்சிணாமூர்த்தி வடிவங்கள் தொடர்புடையவை.
(என் தட்சிணாமூர்த்தி- அவலோகிதேசுரன் கட்டுரை).

பிரெஞ்சு நிறுவனம் (புதுச்சேரி) முன்பு விரிவான


அய்யனார் வழிபாடு பற்றிப் புத்தகம் வெளியிட்டுள்ளது.

அய்யனார் வழிபாடு இரும்பூழிக் காலத்தில் ஏற்பட்ட
இணக்கம். ஆரியங்காவு பொதிகை மலையில்.
ஆரியங்காவுப்பிள்ளை பழைய பெயர்கள் உண்டு.

அய்யனார் வழிபாட்டின் தோற்றம் பற்றி
ஆஸ்கோ பார்ப்போலா கட்டுரையில் காணலாம்:
http://groups.google.com/group/mintamil/msg/8b700a0f756a40ab
(பிடிஎப் கோப்பு படிக்கவும்).

அன்புடன்
நா. கணேசன்

Banukumar Rajendran

unread,
Nov 21, 2009, 11:46:41 AM11/21/09
to mint...@googlegroups.com
இரண்டு ஐயனார்கள் உண்டு. குதிரை வாகனம் உடையவர் பெளத்த ஐயனார். யானை வாகனம் உடையவர் சமண ஐயனார்.
 
சமண சமய ஐயனாரின் வேறு பெயர்கள். ஐயன், பிரமதேவன், பிரம்ம சாத்தன், சாத்தன், சாஸ்தா, சாத்தையா. இவரின் சின்னம் மற்றும் வாகனம் யானை. இவருக்கு இரண்டு தேவியர் உண்டு. இடப்புறம் புஷ்கலாதேவி, வலப்புறம் பூரணாதேவி. இவரைப் போற்றி எழுந்த தமிழ்ச் சமண இலக்கியங்கள் நான்கு. ஒன்றே ஒன்று முழுதும் கிடைத்துள்ளது. “அடிமதிக்குடி ஐயனார் பிள்ளைத் தமிழ்”. மற்ற நூட்கள் கிடைத்தில. ஞாபகத்தில் இருந்ததை எழுதுகிறேன். மற்ற நூட்களின் பெயர்கள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
 
சமண ஐயனார் புகைப்படத்தை இம்மடலுடன் இணைத்துள்ளேன்!
 
இரா.பா
 


 
2009/11/21 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
image181.jpg
image136.jpg
image129.jpg
image183.jpg

வினோத் ராஜன்

unread,
Nov 21, 2009, 12:10:09 PM11/21/09
to மின்தமிழ்
//சாத்தன், > சாஸ்தா, //

இவை அனைத்தும் புத்தருக்கான பெயர்கள் :-)

V

On Nov 21, 9:46 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> இரண்டு ஐயனார்கள் உண்டு. குதிரை வாகனம் உடையவர் பெளத்த ஐயனார். யானை வாகனம்
> உடையவர் சமண ஐயனார்.
>
> சமண சமய ஐயனாரின் வேறு பெயர்கள். ஐயன், பிரமதேவன், பிரம்ம சாத்தன், சாத்தன்,
> சாஸ்தா, சாத்தையா. இவரின் சின்னம் மற்றும் வாகனம் யானை. இவருக்கு இரண்டு
> தேவியர் உண்டு. இடப்புறம் புஷ்கலாதேவி, வலப்புறம் பூரணாதேவி. இவரைப் போற்றி
> எழுந்த தமிழ்ச் சமண இலக்கியங்கள் நான்கு. ஒன்றே ஒன்று முழுதும் கிடைத்துள்ளது.
> “அடிமதிக்குடி ஐயனார் பிள்ளைத் தமிழ்”. மற்ற நூட்கள் கிடைத்தில. ஞாபகத்தில்
> இருந்ததை எழுதுகிறேன். மற்ற நூட்களின் பெயர்கள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
>
> சமண ஐயனார் புகைப்படத்தை இம்மடலுடன் இணைத்துள்ளேன்!
>
> இரா.பா
>

> 2009/11/21 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

>  image181.jpg
> 71KViewDownload
>
>  image136.jpg
> 66KViewDownload
>
>  image129.jpg
> 68KViewDownload
>
>  image183.jpg
> 65KViewDownload

Banukumar Rajendran

unread,
Nov 21, 2009, 12:14:18 PM11/21/09
to mint...@googlegroups.com
சாத்தன்=ஐயனார் என்று கொண்டால், பெளத்தத் தொடர்பு முதலிலும், சமணத் தொடர்பு பின்னரும் வரும். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் சாத்தன் பற்றியக் குறிப்புண்டு. பேரா.க.நெடுஞ்செழியன் சாத்தனை “மற்கலி கோசருடன் தொடர்புப் படுத்துவார்.
 
இரா.பா

2009/11/21 N. Ganesan <naa.g...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 21, 2009, 12:16:54 PM11/21/09
to மின்தமிழ்
இப்போது தான் நினைவுக்கு வந்தது.

ஐயனார் ஆஜீவக மதம் சார்ந்தவர் என்றும் ஒரு சாரார் கூறுவதுண்டு. அது எந்த
அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. (ஆஜீவக மதம் மற்கலி கோசரால்
நிறுவப்பட்டது. தமிழகத்திலும் வழக்கில் இருந்த ஒரு மதம் )

V

Banukumar Rajendran

unread,
Nov 21, 2009, 12:21:30 PM11/21/09
to mint...@googlegroups.com
அன்பின் வினோத் ஐயா,
 
:-)
 
இரண்டும் சிரமண மதங்கள். சமணத்தை ஒற்றி எழுந்ததே பெளத்தம். மகாவீரருடைய சீடர்களாக புத்தரும், மற்கலி கோசரும் சில காலம் இருந்திருக்கின்றனர். சமய அகம் நோக்கினால், முன்றுக்கும் நூலிழைத்தான் வேறுபாடு!
 
பெளத்தம் = யாரோ கொன்னதை சாப்பிடலாம்
சமணம்     = யாரு கொன்னாலும் சாப்பிடக்கூடாது. :-)
 
வித்தியாசம் இவ்வளவே! குறள் 256 இங்கு எண்ணுக!
 
இரா.பா

2009/11/21 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 21, 2009, 12:21:50 PM11/21/09
to mint...@googlegroups.com
சீக்கிரம் ஒரு முடிவுக்கு.. ..
வேண்டுமானால் சாத்தன் புத்தர்
சாஸ்தா சமணர்
இப்படி பங்கு போட்டுக் கொள்ளமுடியுமா என்று பாருங்கள்
 
உண்மையில் சாத்தன், சாஸ்தா, ஐயப்பன் இந்த தெய்வத்துக்கு மதமோ, ஜாதியோ இல்லை. மதம் பிடித்த மதங்களும் ஜாதிவெறிபிடித்த ஜாதிகளும் ஒழிய அவதாரம் எடுத்த தெய்வம்தான் ஐயப்பன். கார்த்திகை மாதத்தில் மக்கள் ஜனத்தொகையில் ஒரு குறிப்பிட்ட பெரிய அளவில் ஐயப்பனின் பக்தர்கள் தங்களுக்குள் உள்ள வித்தியாஸங்களையெல்லாம் ஒதுக்கிவைத்து ஒன்றாக இருக்கிறார்கள். கண்கண்ட தெய்வமாக ஐயப்பனை எல்லோரும் பார்க்கிறோம்.. அவர் புத்தராக இருந்தால் என்ன, சமணராக இருந்தால் என்ன, ஹரிஹரபுத்திரனாக இருந்தால் என்ன..
 
மனிதனை மனிதன் மதிக்கும் ஒரு பெரிய கூட்டத்தை ஐயப்பனால் இழுக்கமுடிகிறது. அவர்கள் கேட்ட வரத்தைக் கொடுத்ததாகவே மனிதர்கள் நினைக்கும் அளவுக்கு ஐயப்பன் தரிசனம் தருகிறார். 'சாமியே சரணம் ஐயப்பா'.. தர்மசாஸ்தாவே சரணம்.. (இதில் இரண்டு வரிகள் தர்மம், சரணம்.. - தம்மம் சரணம் கச்சாமி) என வருகிறது பார்த்தீர்களா)
 
தி

 

வினோத் ராஜன்

unread,
Nov 21, 2009, 12:27:31 PM11/21/09
to மின்தமிழ்
பானுகுமார்,

அருமையான படங்கள்.

ஜைன ஐயனாரின் சிரசில் ஜின பிம்பம் இருப்பதை காண முடிகிறது (இந்த வழக்கம்
புத்த மதத்திலும் உண்டு). இதே வழக்கத்தை சாசனா தேவதைகளின் உருவத்திலும்
கண்டேன்.

ஜைன தேவதைகளின் சிரசுகளில் அனைத்திலும் ஜின பிம்பத்தை வைப்பது, ஜைன சிற்ப
சாஸ்திர வழக்கமா ?

V

On Nov 21, 9:46 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:

> இரண்டு ஐயனார்கள் உண்டு. குதிரை வாகனம் உடையவர் பெளத்த ஐயனார். யானை வாகனம்
> உடையவர் சமண ஐயனார்.
>
> சமண சமய ஐயனாரின் வேறு பெயர்கள். ஐயன், பிரமதேவன், பிரம்ம சாத்தன், சாத்தன்,
> சாஸ்தா, சாத்தையா. இவரின் சின்னம் மற்றும் வாகனம் யானை. இவருக்கு இரண்டு
> தேவியர் உண்டு. இடப்புறம் புஷ்கலாதேவி, வலப்புறம் பூரணாதேவி. இவரைப் போற்றி
> எழுந்த தமிழ்ச் சமண இலக்கியங்கள் நான்கு. ஒன்றே ஒன்று முழுதும் கிடைத்துள்ளது.
> “அடிமதிக்குடி ஐயனார் பிள்ளைத் தமிழ்”. மற்ற நூட்கள் கிடைத்தில. ஞாபகத்தில்
> இருந்ததை எழுதுகிறேன். மற்ற நூட்களின் பெயர்கள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
>
> சமண ஐயனார் புகைப்படத்தை இம்மடலுடன் இணைத்துள்ளேன்!
>
> இரா.பா
>

> 2009/11/21 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Nov 21, 2009, 12:28:06 PM11/21/09
to mint...@googlegroups.com
//
வேண்டுமானால் சாத்தன் புத்தர்
சாஸ்தா சமணர்
இப்படி பங்கு போட்டுக் கொள்ளமுடியுமா என்று பாருங்கள்//
 
:-) பங்கு போட்டுக்கொள்ள வரவில்லை. சமணத்தில் ஐயனார் வழிப்பாடு உண்டு என்பது நிறைய பேருக்கு தெரியாது இல்லையா. அதற்காக எழுதியது. தமிழ்/கன்னட நாட்டில் உள்ள ஜினாலயங்களில் அவருக்கு தனி சன்னதி உண்டு.
 
 
//(இதில் இரண்டு வரிகள் தர்மம், சரணம்.. - தம்மம் சரணம் கச்சாமி) என வருகிறது பார்த்தீர்களா)//
 
தம்மம் சரணம் பவ்வஜ்ஜாமி!
 
 
இரா.பா


 
2009/11/21 V, Dhivakar <venkdh...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 21, 2009, 12:32:33 PM11/21/09
to மின்தமிழ்
//யானை வாகனம்
உடையவர் சமண ஐயனார். //

புத்த மதத்தில் யானையை வாகனமாக உடையவர், சமந்தபத்திரர்.

-

சமணம், வைதீகம், பௌத்தம் என்ற எல்லா மதங்களிலும் அம்மன் வழிபாடு இருப்பது
போல, இதுவும் அனைத்துக்கும் பொதுவான ஒரு அம்சமாக இருந்திருக்கலாம்.

V

On Nov 21, 10:28 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:


> //
> வேண்டுமானால் சாத்தன் புத்தர்
> சாஸ்தா சமணர்
> இப்படி பங்கு போட்டுக் கொள்ளமுடியுமா என்று பாருங்கள்//
>
> :-) பங்கு போட்டுக்கொள்ள வரவில்லை. சமணத்தில் ஐயனார் வழிப்பாடு உண்டு என்பது
> நிறைய பேருக்கு தெரியாது இல்லையா. அதற்காக எழுதியது. தமிழ்/கன்னட நாட்டில் உள்ள
> ஜினாலயங்களில் அவருக்கு தனி சன்னதி உண்டு.
>
> //(இதில் இரண்டு வரிகள் தர்மம், சரணம்.. - தம்மம் சரணம் கச்சாமி) என வருகிறது
> பார்த்தீர்களா)//
>
> தம்மம் சரணம் பவ்வஜ்ஜாமி!
>
> இரா.பா
>

> 2009/11/21 V, Dhivakar <venkdhiva...@gmail.com>


>
>
>
> > சீக்கிரம் ஒரு முடிவுக்கு.. ..
> > வேண்டுமானால் சாத்தன் புத்தர்
> > சாஸ்தா சமணர்
> > இப்படி பங்கு போட்டுக் கொள்ளமுடியுமா என்று பாருங்கள்
>
> > உண்மையில் சாத்தன், சாஸ்தா, ஐயப்பன் இந்த தெய்வத்துக்கு மதமோ, ஜாதியோ இல்லை.
> > மதம் பிடித்த மதங்களும் ஜாதிவெறிபிடித்த ஜாதிகளும் ஒழிய அவதாரம் எடுத்த
> > தெய்வம்தான் ஐயப்பன். கார்த்திகை மாதத்தில் மக்கள் ஜனத்தொகையில் ஒரு
> > குறிப்பிட்ட பெரிய அளவில் ஐயப்பனின் பக்தர்கள் தங்களுக்குள் உள்ள
> > வித்தியாஸங்களையெல்லாம் ஒதுக்கிவைத்து ஒன்றாக இருக்கிறார்கள். கண்கண்ட தெய்வமாக
> > ஐயப்பனை எல்லோரும் பார்க்கிறோம்.. அவர் புத்தராக இருந்தால் என்ன, சமணராக
> > இருந்தால் என்ன, ஹரிஹரபுத்திரனாக இருந்தால் என்ன..
>
> > மனிதனை மனிதன் மதிக்கும் ஒரு பெரிய கூட்டத்தை ஐயப்பனால் இழுக்கமுடிகிறது.
> > அவர்கள் கேட்ட வரத்தைக் கொடுத்ததாகவே மனிதர்கள் நினைக்கும் அளவுக்கு ஐயப்பன்
> > தரிசனம் தருகிறார். 'சாமியே சரணம் ஐயப்பா'.. தர்மசாஸ்தாவே சரணம்.. (இதில்
> > இரண்டு வரிகள் தர்மம், சரணம்.. - தம்மம் சரணம் கச்சாமி) என வருகிறது
> > பார்த்தீர்களா)
>
> > தி
>

> ...
>
> read more »

Banukumar Rajendran

unread,
Nov 21, 2009, 12:33:20 PM11/21/09
to mint...@googlegroups.com
ஆசிவகம் பற்றிய செய்திகள் மிக குறைவு. நூட்களும் இல்லை. இதில் தற்போது தங்கள்  கற்பனையே வரலாறாக எழுத
ஆரம்பித்திருக்கிறார்கள். காட்டு: (2006ல் எழுதியது)
 
 
 
இரா.பா
 
 


 
2009/11/21 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

N. Ganesan

unread,
Nov 21, 2009, 12:35:08 PM11/21/09
to மின்தமிழ்


padmapANi aiyanaar
(Chennai Museum) - see the relatioship with Dakshinamurti
images (Cf. my essay in PoetryinStone website)

http://www.chennaimuseum.org/draft/gallery/01/01/hindu7.htm

---

On the Isuramuniya Aiyanar with a Horse image in Sri Lanka
(direct impact of Pallavan art):
http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2007/10/03_isurumuniya.jpg&width=400&height=400&caption=The%20sculpture%20of%20a%20man%20with%20a%20head%20of%20a%20horse%20in%20the%20background,%20overlooking%20a%20tank%20at%20Isurumuniya%20in%20Anuradhapura.%20Probably%20one%20of%20the%20earliest%20depictions%20of%20Aiyanaar/Ayyanaayaka.%20[Image%20courtesy:%20www.buddhanet.net]

http://www.tamilnet.com/art.html?catid=98&artid=23537

I rmeember a paper on the important
Isuramuniya Aiyanar image with a horse by the late
J. E. van Lohuizen-de Leeuw.
will locate & revert.

N. Ganesan

N. Ganesan

unread,
Nov 21, 2009, 12:39:42 PM11/21/09
to மின்தமிழ்

பானுகுமார்,

நூட்கள் என்பது பிழை. நூள் + கள் = நூட்கள் என்றாகும்.

நூல்கள் என்று எழுதுதல் தமிழுக்குச் சிறப்பு.

நூற்கள் என்றும் எழுதலாம். நாட்கள், ஆட்கள், என்பதுபோல்.
ஆனால், நாள்+மலர் = நாண்மலர் (புதுமலர்) என்ற பொருள்
தருவதுபோல், நாட்கள் என்றால் புதுக் கள் என்ற பொருள்
தரும் என்பார் பேரா. மு. சண்முகம்பிள்ளையவர்கள்.

நூல்கள் என்று எழுதவே என் பரிந்துரை.

அன்புடன்,
நா. கணேசன்

On Nov 21, 11:33 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:


> ஆசிவகம் பற்றிய செய்திகள் மிக குறைவு. நூட்களும் இல்லை. இதில் தற்போது தங்கள்
> கற்பனையே வரலாறாக எழுத
> ஆரம்பித்திருக்கிறார்கள். காட்டு: (2006ல் எழுதியது)
>

> http://banukumar_r.blogspot.com/2006/11/1.htmlhttp://banukumar_r.blogspot.com/2006/11/2.html
>
> இரா.பா
>
> 2009/11/21 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

> > > > 65KViewDownload- Hide quoted text -

Banukumar Rajendran

unread,
Nov 21, 2009, 12:44:57 PM11/21/09
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா,
 
நலமா?
 
சுட்டியமைக்கு நன்றி! திருத்திக் கொள்கிறேன்!
 
இரா.பா

2009/11/21 N. Ganesan <naa.g...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 21, 2009, 12:46:13 PM11/21/09
to மின்தமிழ்
//இரண்டும் சிரமண மதங்கள். சமணத்தை ஒற்றி எழுந்ததே பெளத்தம்.

மகாவீரருடைய
சீடர்களாக புத்தரும், மற்கலி கோசரும் சில காலம் இருந்திருக்கின்றனர். சமய

அகம்
நோக்கினால், முன்றுக்கும் நூலிழைத்தான் வேறுபாடு!
வித்தியாசம் இவ்வளவே! குறள் 256 இங்கு எண்ணுக! //

//பெளத்தம் = யாரோ கொன்னதை சாப்பிடலாம்
சமணம் = யாரு கொன்னாலும் சாப்பிடக்கூடாது. :-) //

பௌத்த - ஜைன சண்டையை , குண்டலகேசி - நீலகேசியோடு நிறுத்திக்கொள்வோம் :-))

V

On Nov 21, 10:35 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> padmapANi aiyanaar
> (Chennai Museum) - see the relatioship with Dakshinamurti
> images (Cf. my essay in PoetryinStone website)
>
> http://www.chennaimuseum.org/draft/gallery/01/01/hindu7.htm
>
> ---
>
> On the Isuramuniya Aiyanar with a Horse image in Sri Lanka

> (direct impact of Pallavan art):http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2007/10/03_isurumu...[Image%20courtesy:%20www.buddhanet.net]

Banukumar Rajendran

unread,
Nov 21, 2009, 12:52:17 PM11/21/09
to mint...@googlegroups.com
இதனால் எத்தனை இலக்கியங்கள் தோன்றியது தெரியுமா? குண்டலகேசி, நீலகேசி, அஞ்சனகேசி, பிங்கலகேசி, காளகேசி.... இவைகள் கேசி இலக்கியங்கள் என்று தனிப் பெயர் பெற்றன!
 
இரா.பா

2009/11/21 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Nov 21, 2009, 12:56:55 PM11/21/09
to mint...@googlegroups.com
//புத்த மதத்தில் யானையை வாகனமாக உடையவர், சமந்தபத்திரர்.//
 
இவர் வேறு! சமணத்தில் பிரமயட்சன் என்ற யட்சன் உண்டு. அவருக்கும் யானைத்தான் வாகனம். எங்கள் சமயத்தவரே பிரமதேவருக்கும், பிரமயட்சனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்பிக் கொள்வதுண்டு! ;-)
 
இரா.பா

2009/11/21 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 21, 2009, 1:02:52 PM11/21/09
to மின்தமிழ்
> //புத்த மதத்தில் யானையை வாகனமாக உடையவர், சமந்தபத்திரர்.//
>
> இவர் வேறு!

இல்லை. போதிசத்துவ சமந்தபத்திரருக்கும் இவருக்கும் ஏதேனும் தொடர்பு
இருக்குமா என்று யோசித்து பார்த்தேன். அவ்வளவே..

V

On Nov 21, 10:56 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:


சமணத்தில் பிரமயட்சன் என்ற யட்சன் உண்டு. அவருக்கும் யானைத்தான்
> வாகனம். எங்கள் சமயத்தவரே பிரமதேவருக்கும், பிரமயட்சனுக்கும் வித்தியாசம்
> தெரியாமல் குழப்பிக் கொள்வதுண்டு! ;-)
>
> இரா.பா
>

> 2009/11/21 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

> ...
>
> read more »

வினோத் ராஜன்

unread,
Nov 21, 2009, 1:07:40 PM11/21/09
to மின்தமிழ்
> இதனால் எத்தனை இலக்கியங்கள் தோன்றியது தெரியுமா? குண்டலகேசி, நீலகேசி,
> அஞ்சனகேசி, பிங்கலகேசி, காளகேசி.... இவைகள் கேசி இலக்கியங்கள் என்று தனிப்
> பெயர் பெற்றன!

இப்படி மாறி மாறி எழுதியே.. இருவருமே கடைசியில் தோற்றனர் :-/

V

On Nov 21, 10:52 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:

>
> இரா.பா
>
> 2009/11/21 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

N. Ganesan

unread,
Nov 21, 2009, 3:36:41 PM11/21/09
to மின்தமிழ்

On Nov 21, 9:11 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> நண்பர்களே,
>

> அதோடு நமது வலைப்பக்கத்திலும் உள்ள ஐயனார் படத் தொகுப்பை இங்கே காணலாம்.


> 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு இது.
http://www.tamilheritage.org/old/photoarc/ayyanar/ayyanar.html
>
> கேள்வி என்னவென்றால் ஐயனார் சாமி விஷ்ணுவின் ஒரு வடிவம் தான் என்பதில் எந்த
> அளவு உண்மை இருக்கின்றது? விஷயம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் உதவும்.
>


Can you please add a link to Prof. S. K. Nayar's paper,
http://www.saranamayyappa.org/Ayyappa_Cult.htm

From the `Annals of Oriental Research', University of Madras,
Vol XXIV - Part I
Ayyappa Cult
By
Dr SK Nayar
http://www.saranamayyappa.org/Ayyappa_Cult.htm

NG

> அன்புடன்
> சுபா
>

>  Karuppanna sami.jpg
> 91KViewDownload

N. Ganesan

unread,
Nov 21, 2009, 3:55:27 PM11/21/09
to மின்தமிழ்

On Nov 21, 10:12 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

>
> On Nov 21, 9:11 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>
> > அதோடு நமது வலைப்பக்கத்திலும் உள்ள ஐயனார் படத் தொகுப்பை இங்கே காணலாம்.
> > 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு இது.
>
> http://www.tamilheritage.org/old/photoarc/ayyanar/ayyanar.html
>
> > கேள்வி என்னவென்றால் ஐயனார் சாமி விஷ்ணுவின் ஒரு வடிவம் தான் என்பதில் எந்த
> > அளவு உண்மை இருக்கின்றது? விஷயம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் உதவும்.
>
>  தொன்றுதொட்டு ஐயனாரை சிவனொடு தொடர்புபடுத்துவது மரபு.
> சாத்தனை மகனாக் கொண்டார் - அப்பர் தேவாரம்.
> திருக்கயிலாய ஞானவுலாவை தமிழுக்குக் கொண்டுவந்தவர் ஐயனார்.
> மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்துள்ள அய்யனார்,
> தட்சிணாமூர்த்தி வடிவங்கள் தொடர்புடையவை.
> (என் தட்சிணாமூர்த்தி- அவலோகிதேசுரன் கட்டுரை).
>
> பிரெஞ்சு நிறுவனம் (புதுச்சேரி) முன்பு விரிவான
> அய்யனார் வழிபாடு பற்றிப் புத்தகம் வெளியிட்டுள்ளது.
>
> அய்யனார் வழிபாடு இரும்பூழிக் காலத்தில் ஏற்பட்ட
> இணக்கம். ஆரியங்காவு பொதிகை மலையில்.
> ஆரியங்காவுப்பிள்ளை பழைய பெயர்கள் உண்டு.
>
> அய்யனார் வழிபாட்டின் தோற்றம் பற்றி
> ஆஸ்கோ பார்ப்போலா கட்டுரையில் காணலாம்:
http://groups.google.com/group/mintamil/msg/8b700a0f756a40ab
> (பிடிஎப் கோப்பு படிக்கவும்).

பாண்டவர்கள் பற்றிய குறிப்பு பழைய வேதத்தில் இல்லை.
இதிகாச காலத்திலேதான் கிடைக்கிறது. ஈரனில் இருந்து
வந்த பாண்டவர்கள் அதற்கு முன் வந்த கௌரவரோடு
போர்.

பழைய ஈரானிய (பல்லவ - பஹ்லவ) தொடர்பு
ஐயனார் வழிபாட்டில் எச்சமாக நிற்கிறது.
ஆண்கள் மாத்திரமே ஐயனாரை சபரிமலையில் வழிபடல்.

In India, Iranian Mithras seems to have parallels, (a) the southern
Aiyanar originating in megalithic paaNDukal complexes. Iron
tridents, and Saivaite deity accompanied by dogs. (Pandaie and
Sita, On the historical background of the Sanskrit epics, JAOS,
122.2, 2002). The hunter warrior Aiyanar has a very popular
shrine, Ayyappan temple in Sabarimala hills, Kerala. Like Mithras'
cult, only males are allowed to enter the temple, and there are
initiation rituals to visit the god Aiyappan who rides a tiger (in
India, tigers replace lions. cf. some portrayals of the goddess).
While Aiyappan's jewel chest is carried to the temple, garuda
eagles are supposed to encircle and protect. Aiyanar is also
called as Aryan. (b) In the North, with the introduction of solar
cult temples from Iran, Revanta was introduced. Revanta
sculptures, a son of Surya, is found first in the western India
and moves east. Revanta parallels Aiyanar in many aspects - on
a hunting expedition, mounted on horses, accompanied by dogs.


The world's largest clay terracota horses are made for Aiyanar.
(Chinese clay army of soldiers has horses - but smaller than
Tami Aiyanar horses in Clay):
Larger than Life: The Terracotta Sculptures of India
Article by Ron du Bois
http://www.ceramicstoday.com/articles/clay_horses.htm

(a) Marguerite E. Adiceam, Contribution le l'etude d'Aiyanar-
Sasta, Pondichery : Inst. Francais d'Indologie, 1967.

(b) Guardians of Tamilnadu: Folk Deities, Folk Religion, Hindu Themes.
By Eveline
Masilamani-Meyer. Halle, Germany 2004

Innamburan Innamburan

unread,
Nov 21, 2009, 8:09:58 PM11/21/09
to mint...@googlegroups.com
ஆய்வுகளம் ஆகி வருகிறது மின் தமிழ். வரவேற்கவேண்டிய துறை.

இன்னம்பூரான்

2009/11/22 N. Ganesan <naa.g...@gmail.com>



--
இன்னம்பூரான்

N. Kannan

unread,
Nov 21, 2009, 9:17:07 PM11/21/09
to mint...@googlegroups.com
2009/11/22 N. Ganesan <naa.g...@gmail.com>:

> தருவதுபோல், நாட்கள் என்றால் புதுக் கள் என்ற பொருள்
> தரும் என்பார் பேரா. மு. சண்முகம்பிள்ளையவர்கள்.
>

நாட்கள் என்றால் நாட்பட்ட கள், பழைய கள் என்றாகாதோ? ;-)

புதுக்கள் ஆரோக்கியமானது, நாட்பட்ட கள் போதை தருவது ;-)

க.>

N. Kannan

unread,
Nov 21, 2009, 9:23:19 PM11/21/09
to mint...@googlegroups.com
2009/11/22 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

> இதனால் எத்தனை இலக்கியங்கள் தோன்றியது தெரியுமா? குண்டலகேசி, நீலகேசி,
> அஞ்சனகேசி, பிங்கலகேசி, காளகேசி.... இவைகள் கேசி இலக்கியங்கள் என்று தனிப்
> பெயர் பெற்றன!
>
> இரா.பா

அறிய, அறிய ஆச்சர்யம் மிகுகிறது!

கன்னட தேசத்தில் அவையெல்லாம் ஜைனக்கோயில்கள் என்று அறியாமலே நான்
வழிப்பட்டு இருக்கிறேன். தஞ்சையில்தான் முதன்முறையாக ஜைனமென்று அறிந்து
கோயிலில் வழிபட்டுள்ளேன்.

குறியீடு என்ற அளவோடு நின்றுவிட்டால் பிரச்சனையே இல்லை பாருங்கள்.
தாங்கள் அனுப்பிய படங்களில் ஐயனார் எனக்கு தக்ஷிணாமூர்த்தியாகவே
புலப்படுகிறார். சடைமுடி வேறு.

குறியீடுகளின் அழகே அதுதான். பேசாமல் சில்பம் வைத்துவிட்டு வாயைப்
பொத்திக்கொண்டு எல்லோரும் போய்விட வேண்டும். தொழுமை அதுபாட்டிற்கு
நடக்கும்? ;-)

மிக, மிக நல்ல இடுகைகள். நன்றி, இ.பா.

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Nov 21, 2009, 9:27:41 PM11/21/09
to mint...@googlegroups.com
அம்பத்தூர்  அருகே உள்ள திருமுல்லை வாயிலில்

மன்னாதீஸ்வரர் பச்சையம்மன் ஆலையம்   இருக்கிறது

அங்கே பிரும்மாண்டமான  ஐய்யனார் சிலைகள், மதுரை வீரன் சிலைகள்

மற்றும்   ஒரு பிரும்மாண்டமான   அகத்தியர் சிலை இருக்கிறது

அந்த அகத்தியர் சிலையின் பீட பாகத்தில்

சங்கு சக்கரம்  பொறித்திருக்கிறது

அகத்தியருக்கும் சங்கு சக்கரத்துக்கும் என்ன தொடர்பு


அந்த  அகத்தியர்   சிலையை  நாம் அனைவருமே  கண்டிருக்கிறோம்

தில்லானா மோகனாம்பாள்  என்னும் திரைப்படத்தில் 

மோகனாம்பாளைக் கடத்த திட்டம் போட்டு நாகலிங்கம் என்பவர் கடத்த முயல்வார்
அந்தக் காட்சியில் பின்புலமாக  தெரிவது அந்த  அகத்தியர் சிலைதான் ,அந்தக் கோயில்தான்



22-11-09 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:

N. Ganesan

unread,
Nov 21, 2009, 9:29:43 PM11/21/09
to மின்தமிழ்

On Nov 21, 8:23 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/11/22 Banukumar Rajendran <banukuma...@gmail.com>:

யுத்த காண்டம்
கடவுள் வாழ்த்து (கம்பன்)

"ஒன்றே என்னின் ஒன்றேயாம்
. . . பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்
. . . ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்
. . . உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
. . . நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!"

இதை அப்படியே மாற்றி எம்பெருமான் கவிராயர்
தக்கை ராமாயணம் பாடுகிறார்:

இல்லதும்நீ; உள்ளதும்நீ;
. . . ஏகமும்நீ; அநேகமும்நீ;
அல்லதும்நீ; ஆவதும்நீ;
. . . அறிந்தடையும் வகைஅரிதால்;
நல்லதுநின் குடில்வாழ்க்கை;
. . . நாங்களுய்யு மாறுஅருளாய்;
கல்லதுபெண் உருக்கும்
. . . கழல்துகளாய்! காரணனே!

கம்பனின் வாழையடிவாழையாய் வாழ்ந்த
எம்பெருமான் கவிராயரின் தக்கை இசை ராமாயணம்:
http://www.tamilheritage.org/kidangku/kongku/thakkai.pdf

இதனை உலகுக்கு மீட்டளிக்கும் பேறு
இறையருளால் எனக்கு.

நா. கணேசன்

N. Kannan

unread,
Nov 21, 2009, 9:35:35 PM11/21/09
to mint...@googlegroups.com
அற்புதம் கணேசனாரே!
இதை நம் ஒவ்வொருவரும் நமது Signature-ஆக பொருத்திக்கொள்ள வேண்டும்.
வள்ளலின் கருணைக்குப் பாத்திரமான தாங்கள் வாழ்க!

க.>

2009/11/22 N. Ganesan <naa.g...@gmail.com>:

Hari Krishnan

unread,
Nov 21, 2009, 10:15:31 PM11/21/09
to mint...@googlegroups.com


2009/11/21 N. Ganesan <naa.g...@gmail.com>




 தொன்றுதொட்டு ஐயனாரை சிவனொடு தொடர்புபடுத்துவது மரபு.
சாத்தனை மகனாக் கொண்டார் - அப்பர் தேவாரம்.

சாத்தனை மகனாக் கொண்டார் என்று அரனைத்தான் சொல்ல முடியுமா?  அரனைச் சொல்ல முடியாதா?

அரிஅர புத்ரா!  மலைமேல வௌக்கப்பா...

(கணேசனார் அய்யா விளக்கியிருப்பதைப்போல அய்யனாரை சிவனோடு தொடர்புபடுத்துவதே தொல்பழம்மரபு என்பதை உடன்பட்டு ஒப்புக்கொள்ள இசையாநின்றனனாம் என்க.)
--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Nov 21, 2009, 10:16:11 PM11/21/09
to mint...@googlegroups.com


2009/11/22 Hari Krishnan <hari.har...@gmail.com>



2009/11/21 N. Ganesan <naa.g...@gmail.com>




 தொன்றுதொட்டு ஐயனாரை சிவனொடு தொடர்புபடுத்துவது மரபு.
சாத்தனை மகனாக் கொண்டார் - அப்பர் தேவாரம்.

சாத்தனை மகனாக் கொண்டார் என்று அரனைத்தான் சொல்ல முடியுமா?  அரனைச் சொல்ல முடியாதா?


அரனைத்தான் சொல்ல முடியுமா, அரியைச் சொல்ல முடியாதா என்று வாசிக்கஉம். 

N. Ganesan

unread,
Nov 21, 2009, 10:26:04 PM11/21/09
to மின்தமிழ்

On Nov 21, 9:16 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/22 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
> > 2009/11/21 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> >>  தொன்றுதொட்டு ஐயனாரை சிவனொடு தொடர்புபடுத்துவது மரபு.
> >> சாத்தனை மகனாக் கொண்டார் - அப்பர் தேவாரம்.
>
> > சாத்தனை மகனாக் கொண்டார் என்று அரனைத்தான் சொல்ல முடியுமா?  அரனைச் சொல்ல
> > முடியாதா?
>
> அரனைத்தான் சொல்ல முடியுமா, அரியைச் சொல்ல முடியாதா என்று வாசிக்கஉம்.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

இது ஸ்ரீவைஷ்ணவர்கள் சபை அல்லவா :) இன்னம்பர்க்காரர் ஹிந்து ஃபேமிலி
பற்றிச் சொல்கிறார்.

-----

விஷ்ணுமோஹினி தேவி அல்லவா?

எரியலால் உருவமில்லை ஏறுஅலால் ஏறலில்லை
கரியலால் போர்வையில்லை காண்டகு சோதியார்க்குப்
பிரிவிலா அமரர்கூடிப் பெருந்தகைப் பிரானென்றேத்தும்
அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே.
~ அப்பர்

தேசனைத் *தேச மாகுந் திருமாலோர் பங்கன் றன்னைப்*
பூசனைப் புனிதன் றன்னைப் புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை யறிய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

திருமாலோர் பங்கன் :- ` இடமால் தழுவிய பாகம் ` ( தி.4 ப.2 பா.14) மையரிக்
கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகி ` ( தி.4 ப.22 பா.4) மாலுங் கொப்பளித்த
பாகர் : ( தி.4 ப.24 பா.7) காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் ( தி.4 ப.32 பா.7) ` அரியலால் தேவியில்லை ` ( தி.
4 ப.40 பா.5)

Hari Krishnan

unread,
Nov 21, 2009, 11:33:27 PM11/21/09
to mint...@googlegroups.com


2009/11/22 N. Ganesan <naa.g...@gmail.com>



இது ஸ்ரீவைஷ்ணவர்கள் சபை அல்லவா :) இன்னம்பர்க்காரர் ஹிந்து ஃபேமிலி
பற்றிச் சொல்கிறார்.


கொங்குநாட்டுத் தங்கமே,

இது என்னாது புதுப்பேரு எனக்கு!  திட்றத கொஞ்சம் விளங்கறமாதிரி திட்டுங்கோவ்...... இன் அம்பர்,  இன்னம் பர் என்று விதவிதமாகப் பிரித்துப் பார்த்தும் புரியவில்லை.  இன்னம்பூரார்தான் இங்கே இருக்கிறார்.  ஆனால் அந்த மடலில் அவ்வாறு

சொன்னது நான்தானே
சொல்சொல்சொல் என்தயிரே...... :-)) 
Message has been deleted

N. Ganesan

unread,
Nov 22, 2009, 12:24:32 AM11/22/09
to மின்தமிழ்

On Nov 21, 10:33 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:

>இன் அம்பர்,  இன்னம் பர் என்று விதவிதமாகப் பிரித்துப்


> பார்த்தும் புரியவில்லை.  

உங்களுக்கு கம்பன் பாடிய கணிகை அம்பர்ச் சிலம்பி கதை தெரியாதா?

----------

ஊர் இன்னம்பர் - உருத்திராக்கப் பந்தலின் கீழ் சுவாமி.
எழுத்தறிந்த ஈசுவரர்.

எழுத்தறிந்த ஈசருக்கு ஒரு தலக்கதை சொல்வர்:
கோவில் ஸ்தானிகக் கணக்கன் கணக்குக் காட்ட நேரம் ஆக,
ஈசனே சோழ மஹாராஜாவுக்குக் கணக்கராய்ச் சென்றதாக ஐதிஹ்யம்.

ஆனால், அப்பர் தேவாரம் பார்த்தால்
நாத்திகரையும், ஆத்திகரையும் கணக்குப் பன்ணி
அருள்பாலிப்பதாகத் தான் இருக்கிறது.

>தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
>அழுது காமுற்று அலற்று கின்றாரையும்
>பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
>எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

5 பதிகங்கள் உள்ளன. அவற்றுள் 2:
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru04_072.htm

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_095.htm

நா. கணேசன்

srirangammohanarangan v

unread,
Nov 22, 2009, 1:43:30 AM11/22/09
to mint...@googlegroups.com
On 11/22/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


இது ஸ்ரீவைஷ்ணவர்கள் சபை அல்லவா :)  
 
 
என்ன    நா  கணேசனாரே    இப்படி    slotting  செய்யலாமா?    மற்ற  சம்ப்ரதாயங்களைப்  பற்றி   ஊக்கமுள்ளவர்கள்    எழுதுவதை    யார்  வேண்டாம்  என்றார்கள்?     அல்லது    ரசிப்பதில்தான்  குறைவா?    இல்லையே.    பின்னர்    ஸ்ரீவைஷ்ணவத்தைப்பற்றி     ஊக்கத்துடன்  எழுதுகின்றார்கள்    என்பதனால்    ‘இது  ஸ்ரீவைஷ்ணவர்கள்  சபை’    என்று    சாப்பா   குத்திவிடலாமா?    உடனேயே     மனித  மனம்    எத்தனை    கல்மஷங்களை    ஏற்படுத்திவிடும்?    இது   ‘அவா   விஷயம்’   ‘நம்ம  இடம்  இல்லை’    என்பது  போன்ற    பொருந்தாத   பேத  உணர்ச்சிகள்    தலை  தூக்கிவிடாதா?     எங்களை    வழிநடத்த  வேண்டிய     ‘மரபுச்   செல்வரே’   இப்படிச்  செய்யலாமா?
 
ஏதோ  கோபித்துக்கொள்ள   மாட்டீர்கள்  என்று  துணிந்து  எழுதுகிறேன்.

 

N. Kannan

unread,
Nov 22, 2009, 5:02:46 AM11/22/09
to mint...@googlegroups.com
2009/11/22 N. Ganesan <naa.g...@gmail.com>:

> இது ஸ்ரீவைஷ்ணவர்கள் சபை அல்லவா :) இன்னம்பர்க்காரர் ஹிந்து ஃபேமிலி
> பற்றிச் சொல்கிறார்.
>
>

எனக்கும் தூக்கிவாரிப் போட்டது!

திருவாய்மொழியை நான் ஒரு Universal Gospel என்றுதான் காண்கிறேன். அவர்
ஓரிடத்தில் கூட யாரையும் பழிப்பதில்லை. ஆழ்வார்களின் கண்டனம் எப்போது
வருகிறது என்றால், சமய நெறி தவறி எவரொருவர் திருமண் காப்பிட்டவரை
வம்பிற்கு இழுக்கிறாரோ அப்போதுதான் வருகிறது (that is when you exceed
the limit of gentlemanship or etiquette) . விஷ்ணுவின் வழியாக உலகைக்
காண்கிறது வைஷ்ணவம், ஈசன் வழியில் அதே உலகைக் காண்கிறது சைவம். அவ்வளவே.

மேலும் பாகவத சம்பிரதாயம் என்பது சைவம், வைஷ்ணவம், அத்வைதம், பௌத்தம்
(சங்கம் சரணம் கச்சாமி) எல்லாவற்றிற்கும் பொது (ஜைனம் தெரியாததால்
பேசவில்லை).

அப்படியான ஒரு integrated approach ல்தான் இங்கு கலந்துரையாடல் நடக்கிறது.

இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் தெரிந்ததை வைத்துதான் கலந்துரையாடல்
செய்ய முடியும். எனக்குத்தெரிந்ததை நான் சொல்கிறேன், ரங்கன்
அவருக்குத்தெரிந்ததைச் சொல்கிறார், இ.பா அவரது நோக்கில், வினோத் அவரது
நோக்கில்...இப்படி மிக ஆரோக்கிய நோக்கில் இங்கு கலப்பு நடக்கிறது.

ஹரிகி, ரெ.கா போன்றோர் இலக்கிய நோக்கில் இவைகளைக் கண்ணுற்று அவ்வப்போது
கருத்துக்கள் தருகின்றனர்.

உண்மையில் சிராஜ் தீவிர Puritanical approach இல்லாமல் ஒரு
புரிந்துணர்வுடன் உரையாடி இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இந்திய மரபு
உலகின் நல் விழுமியங்கள் அனைத்தையும் உள்வாங்கும் மரபு. நாம் ஆரிய
புத்திரர்கள் கணேசனாரே!

எந்தையர் நாடெனும் போதினிலே, ஒரு சக்தி பிறக்க வேண்டாமா மூச்சினிலே!

மீண்டும் ஒருமுறை யாரையும் அப்படி ஓரங்கட்டி விடாதீர்கள் ;-)

க.>

பிகு: உங்களுக்குள் ஒரு வைணவ மரபு இருப்பதை முன்பு சுட்டிக்காட்டியதால்
தாங்கள் அந்த உரிமையில் சொன்னதாகவே இதைக் கொள்கிறேன்!

V, Dhivakar

unread,
Nov 22, 2009, 5:10:21 AM11/22/09
to mint...@googlegroups.com
ஸ்ரீவைஷ்ணவம் என்றால் ஏன் இப்படி தயக்கம் காட்டவேண்டும் என்று புரியவில்லை. வைணவம் என்பது சகமனிதரின் மனதை புண்படுத்தாதது..அதுவே  உடையவர் சொன்னது..  வைஷ்ணவஜனதோ பாடலின் 
பொருள் சொல்வது. அந்த அர்த்தத்தில் கணேசனார் எழுதியிருக்கிறார். (அப்படித்தான் நான் நினைக்கிறேன்)

 

Banukumar Rajendran

unread,
Nov 23, 2009, 4:47:12 AM11/23/09
to mint...@googlegroups.com
ஐயனார் கோயிலில் கிடைத்த மகாவீரர் சிலை!
 
 
இரா.பா

2009/11/22 V, Dhivakar <venkdh...@gmail.com>

vj kumar

unread,
Nov 23, 2009, 5:12:04 AM11/23/09
to mint...@googlegroups.com
dear sir

I dont understand this line, can someone explain to me

http://saranamayyappa.com/Ayyappa_Cult.htm


Father and son in Christian Trinity are same; and in this context it is no wonder that Kirata Murti or Hunter God is sometimes identified with Siva and at other times as Ayyanar, the son of Siva.

rgds
vj

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/11/22 N. Ganesan <naa.g...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 23, 2009, 5:29:01 AM11/23/09
to mint...@googlegroups.com
ஐயனார் கோயில் என்றில்லை பானுகுமார்ஜி, ஒரு காலத்தில் தமிழகமெங்கும் தீர்த்தங்கரர் சிலைகள்தான. ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டிலிருந்து 6 ஆம் நூற்றாண்டு வரை சமணர்களின், சமண ஆச்சாரியர்களின், சமண அரசர்களின் பொற்காலம். அந்தச் சமயத்தில் ஜீனர்களின் சிலைகளை தென்னகமெங்கும் நிறுவியதற்கும், சமண ஆச்சாரியர்களுக்கு நிவேதனங்களும் அளிக்கப்பட்டதற்கு ஆதாரங்களும் உள்ளன. இன்னமும் கேட்டால் தமிழ்நாட்டின் முதல் அதிகாரபூர்வ முழுமையான கல்வெட்டு என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்லப்படும் சிம்மவிஷ்ணு காலத்திய கல்வெட்டு கூட சமணர்களுக்கு நிவேதனம் அளித்ததுதான் (கி.பி.560-600) அப்போது மிகப் பெரிய சைவக் கோயில் திருவாரூரான் கோயில். இந்தக் கோயில் குளம் வெட்டப் போன சைவர்களை சமணர்கள் துன்புறுத்தியதற்கு கூட ஆதாரங்கள் உண்டு. கோயில்கள் கூடாது என்றனர் சமணர்கள்.
 
சரி.. ஜீனர்களின் சிலையைத்தவிர வேறு எந்த சிலை வழிபாடும் சமணத்தில் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்பதும், நிசடிகள் (சமண சமாதிகள்) வழிபாட்டு முறை தவிர வேறு எந்த வழிபாடும் சமணத்தில் கிடையாது என்பதும் தாங்கள் அறிந்ததே.. அப்படியிருக்க ஐயனார் சிலைக்கும், சாஸ்தா சிலைக்கும், கடைசியில் ஐயப்பனுக்கும் ஏன் சொந்தம் கொண்டாடுகிறீர்கள் என்பதை தயை கூர்ந்து விளக்கவும். ஒருவேளை இவையெல்லாம் சமணர்களின் நிசடிகள் என்று கூறி மனத் திருப்தி கொள்ளவேண்டாம்.
 
இந்த விளக்கத்துக்குப் பொதுவாக ஏதாவது ஆதாரம் காட்டவும்.. (சமணநூல்கள் தவிர)
 
பெரியபுராணம் (நான் சொல்வது சேக்கிழார் எழுதியது) ஜைனர் சிலைகள் ஏராளமாக அகற்றப்பட்டு கோயில்கள் கட்டப்பட்டன என்பதை ஆங்காங்கே சொல்கிறது.
 
திருநாவுக்கரசர் புராணம் படித்தால் சில விஷயங்கள் விளங்கும்.

 
2009/11/22 V, Dhivakar <venkdh...@gmail.com>

தாங்கள் அந்த உரிமையில் சொன்னதாகவே இதைக் கொள்கிறேன்! http://aduththaveedu.blogspot.com

N. Ganesan

unread,
Nov 23, 2009, 7:04:15 AM11/23/09
to மின்தமிழ்

ஜினர் என்றல்லவா இருக்கவேண்டும்?

கணேசன்


On Nov 23, 4:29 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> ஐயனார் கோயில் என்றில்லை பானுகுமார்ஜி, ஒரு காலத்தில் தமிழகமெங்கும்
> தீர்த்தங்கரர் சிலைகள்தான. ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டிலிருந்து 6 ஆம் நூற்றாண்டு
> வரை சமணர்களின், சமண ஆச்சாரியர்களின், சமண அரசர்களின் பொற்காலம். அந்தச்
> சமயத்தில் ஜீனர்களின் சிலைகளை தென்னகமெங்கும் நிறுவியதற்கும், சமண
> ஆச்சாரியர்களுக்கு நிவேதனங்களும் அளிக்கப்பட்டதற்கு ஆதாரங்களும் உள்ளன.
> இன்னமும் கேட்டால் தமிழ்நாட்டின் முதல் அதிகாரபூர்வ முழுமையான கல்வெட்டு என்று
> சரித்திர ஆசிரியர்கள் சொல்லப்படும்
> சிம்மவிஷ்ணு காலத்திய கல்வெட்டு கூட சமணர்களுக்கு நிவேதனம் அளித்ததுதான்
> (கி.பி.560-600) அப்போது மிகப் பெரிய சைவக் கோயில் திருவாரூரான் கோயில். இந்தக்
> கோயில் குளம் வெட்டப் போன சைவர்களை சமணர்கள் துன்புறுத்தியதற்கு கூட ஆதாரங்கள்
> உண்டு. கோயில்கள் கூடாது என்றனர் சமணர்கள்.
>
> சரி.. ஜீனர்களின் சிலையைத்தவிர வேறு எந்த சிலை வழிபாடும் சமணத்தில் ஒப்புக்
> கொள்ளப்படவில்லை என்பதும், நிசடிகள் (சமண சமாதிகள்) வழிபாட்டு முறை தவிர வேறு
> எந்த வழிபாடும் சமணத்தில் கிடையாது என்பதும் தாங்கள் அறிந்ததே.. அப்படியிருக்க
> ஐயனார் சிலைக்கும், சாஸ்தா சிலைக்கும், கடைசியில் ஐயப்பனுக்கும் ஏன் சொந்தம்
> கொண்டாடுகிறீர்கள் என்பதை தயை கூர்ந்து விளக்கவும். ஒருவேளை
> இவையெல்லாம் சமணர்களின் நிசடிகள் என்று கூறி மனத் திருப்தி கொள்ளவேண்டாம்.
>
> இந்த விளக்கத்துக்குப் பொதுவாக ஏதாவது ஆதாரம் காட்டவும்.. (சமணநூல்கள் தவிர)
>
> பெரியபுராணம் (நான் சொல்வது சேக்கிழார் எழுதியது) ஜைனர் சிலைகள் ஏராளமாக
> அகற்றப்பட்டு கோயில்கள் கட்டப்பட்டன என்பதை ஆங்காங்கே சொல்கிறது.
>
> திருநாவுக்கரசர் புராணம் படித்தால் சில விஷயங்கள் விளங்கும்.
>

> On 11/23/09, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > ஐயனார் கோயிலில் கிடைத்த மகாவீரர் சிலை!
>
> >http://www.treasurehouseofagathiyar.net/37100/37126.htm
>
> > இரா.பா
>

> > 2009/11/22 V, Dhivakar <venkdhiva...@gmail.com>


>
> >  ஸ்ரீவைஷ்ணவம் என்றால் ஏன் இப்படி தயக்கம் காட்டவேண்டும் என்று புரியவில்லை.
> >> வைணவம் என்பது சகமனிதரின் மனதை புண்படுத்தாதது..அதுவே  உடையவர் சொன்னது..
> >> வைஷ்ணவஜனதோ பாடலின்
> >> பொருள் சொல்வது. அந்த அர்த்தத்தில் கணேசனார் எழுதியிருக்கிறார்.
> >> (அப்படித்தான் நான் நினைக்கிறேன்)
>

> >>   On 11/22/09, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
> >>> 2009/11/22 N. Ganesan <naa.gane...@gmail.com>:

> --
> Dhivakarhttp://www.vamsadhara.blogspot.comhttp://aduththaveedu.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -

Banukumar Rajendran

unread,
Nov 23, 2009, 9:59:15 AM11/23/09
to mint...@googlegroups.com
//அப்போது மிகப் பெரிய சைவக் கோயில் திருவாரூரான் கோயில். இந்தக் கோயில் குளம் வெட்டப் போன சைவர்களை சமணர்கள் துன்புறுத்தியதற்கு கூட ஆதாரங்கள் உண்டு. கோயில்கள் கூடாது என்றனர் சமணர்கள். //
 
இங்கே இது எதற்கு ஐயா! புரியவில்லை!!  ஐயனாருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.
 
//சரி.. ஜீனர்களின் சிலையைத்தவிர வேறு எந்த சிலை வழிபாடும் சமணத்தில் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்பதும், நிசடிகள் (சமண சமாதிகள்) வழிபாட்டு முறை தவிர வேறு எந்த வழிபாடும் சமணத்தில் கிடையாது என்பதும் தாங்கள் அறிந்ததே.. //
 
:-)  அப்படியா? இந்தியாவில் கிடைத்த, காலத்தால் முந்திய லஷ்மி, சரஸ்வதி சிலைகள் (மதுரா - வடமதுரை), சமணத்துடன் சம்பந்தப்பட்டது. (பார்க்க: Buhler. G.  அவர்களின் Epigraphia Indica மற்றும்  jaina -rupa mandana - By Umakant Premanand Shah)

//அப்படியிருக்க ஐயனார் சிலைக்கும், சாஸ்தா சிலைக்கும், கடைசியில் ஐயப்பனுக்கும் ஏன் சொந்தம் கொண்டாடுகிறீர்கள் என்பதை தயை கூர்ந்து விளக்கவும்.//

:-))

எங்கே சொந்தம் கொண்டாடினேன்? ஐயனாரின் சமணத் தொடர்பைத்தான் கொடுத்திருந்தேன். ஐயப்பன் என்ற வார்த்தையை  யான் எழுதவேயில்லையே! 

//ஒருவேளை இவையெல்லாம் சமணர்களின் நிசடிகள் என்று கூறி மனத் திருப்தி கொள்ளவேண்டாம்.//

ஏன் என் எழுத்து சலனப்படுத்துகிறதா?

இரா.பானுகுமார்,


 

2009/11/23 V, Dhivakar <venkdh...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 23, 2009, 10:49:18 AM11/23/09
to mint...@googlegroups.com
On 11/23/09, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:
//அப்போது மிகப் பெரிய சைவக் கோயில் திருவாரூரான் கோயில். இந்தக் கோயில் குளம் வெட்டப் போன சைவர்களை சமணர்கள் துன்புறுத்தியதற்கு கூட ஆதாரங்கள் உண்டு. கோயில்கள் கூடாது என்றனர் சமணர்கள். //
 
இங்கே இது எதற்கு ஐயா! புரியவில்லை!!  ஐயனாருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.
 
 
 

THIS IS TO MEAN THAT JAINS WERE AGAINST TEMPLES //
 
 

//சரி.. ஜீனர்களின் சிலையைத்தவிர வேறு எந்த சிலை வழிபாடும் சமணத்தில் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்பதும், நிசடிகள் (சமண சமாதிகள்) வழிபாட்டு முறை தவிர வேறு எந்த வழிபாடும் சமணத்தில் கிடையாது என்பதும் தாங்கள் அறிந்ததே.. //
 
:-)  அப்படியா? இந்தியாவில் கிடைத்த, காலத்தால் முந்திய லஷ்மி, சரஸ்வதி சிலைகள் (மதுரா - வடமதுரை), சமணத்துடன் சம்பந்தப்பட்டது. (பார்க்க: Buhler. G.  அவர்களின் Epigraphia Indica மற்றும்  jaina -rupa mandana - By Umakant Premanand Shah)
 
 
:-))))

//அப்படியிருக்க ஐயனார் சிலைக்கும், சாஸ்தா சிலைக்கும், கடைசியில் ஐயப்பனுக்கும் ஏன் சொந்தம் கொண்டாடுகிறீர்கள் என்பதை தயை கூர்ந்து விளக்கவும்.//

:-))

எங்கே சொந்தம் கொண்டாடினேன்? ஐயனாரின் சமணத் தொடர்பைத்தான் கொடுத்திருந்தேன். ஐயப்பன் என்ற வார்த்தையை  யான் எழுதவேயில்லையே! 

//ஒருவேளை இவையெல்லாம் சமணர்களின் நிசடிகள் என்று கூறி மனத் திருப்தி கொள்ளவேண்டாம்.//

WHAT DOES IT MEAN?
 
 

ஏன் என் எழுத்து சலனப்படுத்துகிறதா?

 
:-)))))
 
d

2009/11/23 V, Dhivakar <venkdh...@gmail.com>
2009/11/22 V, Dhivakar <venkdh...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 23, 2009, 11:11:37 AM11/23/09
to மின்தமிழ்
திவாகர்,

நீங்கள் இட்ட இடுகைக்கும் இந்த இழைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அதை இங்கு நீங்கள் இட்ட காரணமும் விளங்கவில்லை. இழையை திசை
திருப்புவதாகத்தான் உள்ளது.

சும்மா ஏதோ சைவர்கள் அதிமகாநல்லவர்கள் போலவும் சாந்தசொருபீகள் போலவும்,
ஜைனர்கள் கொடுங்கோலர்கள் போலவும் கதை கூற வேண்டாம்.

ஏற்கனவே குறிப்பிட்டது தான்..இரு தரப்பிலும் அத்துமீறல்கள் ஆங்காங்கே
எப்போதாவது நிகழ்ந்திருக்கலாம். அவ்வளவே..

சுவாமி புறப்பாட்டை தவிர்க்க, ஸ்ரீரங்கம் கோவில் முன்பு தினம் ஒரு ஜைனர்
தற்கொலை செய்து கொண்டனர் என்று கதை சொல்லியவர் தானே தாங்கள் !

V

On Nov 23, 8:49 pm, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:


> On 11/23/09, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
>
>
>
> > //அப்போது மிகப் பெரிய சைவக் கோயில் திருவாரூரான் கோயில். இந்தக் கோயில் குளம்
> > வெட்டப் போன சைவர்களை சமணர்கள் துன்புறுத்தியதற்கு கூட ஆதாரங்கள் உண்டு.
> > கோயில்கள் கூடாது என்றனர் சமணர்கள். //
>
> > இங்கே இது எதற்கு ஐயா! புரியவில்லை!!  ஐயனாருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.
>
>  THIS IS TO MEAN THAT JAINS WERE AGAINST TEMPLES //
>
>
>
>  //சரி.. ஜீனர்களின் சிலையைத்தவிர வேறு எந்த சிலை வழிபாடும் சமணத்தில் ஒப்புக்
>
> > கொள்ளப்படவில்லை என்பதும், நிசடிகள் (சமண சமாதிகள்) வழிபாட்டு முறை தவிர வேறு
> > எந்த வழிபாடும் சமணத்தில் கிடையாது என்பதும் தாங்கள் அறிந்ததே.. //
>
> > :-)  அப்படியா? இந்தியாவில் கிடைத்த, காலத்தால் முந்திய லஷ்மி, சரஸ்வதி

> > சிலைகள் (மதுரா - வடமதுரை), சமணத்துடன் சம்பந்தப்பட்டது. (பார்க்க: *Buhler.*
> > * *G.  அவர்களின் *Epigraphia Indica *மற்றும்*  jaina -rupa mandana - By *Umakant


> > Premanand Shah)
>
> :-))))
>
>  //அப்படியிருக்க ஐயனார் சிலைக்கும், சாஸ்தா சிலைக்கும், கடைசியில்> ஐயப்பனுக்கும் ஏன் சொந்தம் கொண்டாடுகிறீர்கள் என்பதை தயை கூர்ந்து
> > விளக்கவும்.// :-)) எங்கே சொந்தம் கொண்டாடினேன்? ஐயனாரின் சமணத்
> > தொடர்பைத்தான் கொடுத்திருந்தேன். ஐயப்பன் என்ற வார்த்தையை  யான்
> > எழுதவேயில்லையே!  //ஒருவேளை இவையெல்லாம் சமணர்களின் நிசடிகள் என்று கூறி மனத்
> > திருப்தி கொள்ளவேண்டாம்.//
>
> WHAT DOES IT MEAN?
>
>  ஏன் என் எழுத்து சலனப்படுத்துகிறதா?
>
>
>
> :-)))))
>
> d
>
>  இரா.பானுகுமார்,
>
>
>
>
>

> > 2009/11/23 V, Dhivakar <venkdhiva...@gmail.com>


>
> >>  ஐயனார் கோயில் என்றில்லை பானுகுமார்ஜி, ஒரு காலத்தில் தமிழகமெங்கும்
> >> தீர்த்தங்கரர் சிலைகள்தான. ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டிலிருந்து 6 ஆம் நூற்றாண்டு
> >> வரை சமணர்களின், சமண ஆச்சாரியர்களின், சமண அரசர்களின் பொற்காலம். அந்தச்
> >> சமயத்தில் ஜீனர்களின் சிலைகளை தென்னகமெங்கும் நிறுவியதற்கும், சமண
> >> ஆச்சாரியர்களுக்கு நிவேதனங்களும் அளிக்கப்பட்டதற்கு ஆதாரங்களும் உள்ளன.
> >> இன்னமும் கேட்டால் தமிழ்நாட்டின் முதல் அதிகாரபூர்வ முழுமையான கல்வெட்டு என்று
> >> சரித்திர ஆசிரியர்கள் சொல்லப்படும்
> >> சிம்மவிஷ்ணு காலத்திய கல்வெட்டு கூட சமணர்களுக்கு நிவேதனம் அளித்ததுதான்
> >> (கி.பி.560-600) அப்போது மிகப் பெரிய சைவக் கோயில் திருவாரூரான் கோயில். இந்தக்
> >> கோயில் குளம் வெட்டப் போன சைவர்களை சமணர்கள் துன்புறுத்தியதற்கு கூட ஆதாரங்கள்
> >> உண்டு. கோயில்கள் கூடாது என்றனர் சமணர்கள்.
>
> >> சரி.. ஜீனர்களின் சிலையைத்தவிர வேறு எந்த சிலை வழிபாடும் சமணத்தில் ஒப்புக்
> >> கொள்ளப்படவில்லை என்பதும், நிசடிகள் (சமண சமாதிகள்) வழிபாட்டு முறை தவிர வேறு
> >> எந்த வழிபாடும் சமணத்தில் கிடையாது என்பதும் தாங்கள் அறிந்ததே.. அப்படியிருக்க
> >> ஐயனார் சிலைக்கும், சாஸ்தா சிலைக்கும், கடைசியில் ஐயப்பனுக்கும் ஏன் சொந்தம்
> >> கொண்டாடுகிறீர்கள் என்பதை தயை கூர்ந்து விளக்கவும். ஒருவேளை
> >> இவையெல்லாம் சமணர்களின் நிசடிகள் என்று கூறி மனத் திருப்தி கொள்ளவேண்டாம்.
>
> >> இந்த விளக்கத்துக்குப் பொதுவாக ஏதாவது ஆதாரம் காட்டவும்.. (சமணநூல்கள் தவிர)
>
> >> பெரியபுராணம் (நான் சொல்வது சேக்கிழார் எழுதியது) ஜைனர் சிலைகள் ஏராளமாக
> >> அகற்றப்பட்டு கோயில்கள் கட்டப்பட்டன என்பதை ஆங்காங்கே சொல்கிறது.
>
> >> திருநாவுக்கரசர் புராணம் படித்தால் சில விஷயங்கள் விளங்கும்.
>

> >>   On 11/23/09, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
>
> >>>   ஐயனார் கோயிலில் கிடைத்த மகாவீரர் சிலை!
>
> >>>http://www.treasurehouseofagathiyar.net/37100/37126.htm
>
> >>> இரா.பா
>

> >>>   2009/11/22 V, Dhivakar <venkdhiva...@gmail.com>


>
> >>>    ஸ்ரீவைஷ்ணவம் என்றால் ஏன் இப்படி தயக்கம் காட்டவேண்டும் என்று
> >>>> புரியவில்லை. வைணவம் என்பது சகமனிதரின் மனதை புண்படுத்தாதது..அதுவே
> >>>> உடையவர் சொன்னது..  வைஷ்ணவஜனதோ பாடலின்
> >>>> பொருள் சொல்வது. அந்த அர்த்தத்தில் கணேசனார் எழுதியிருக்கிறார்.
> >>>> (அப்படித்தான் நான் நினைக்கிறேன்)
>

> >>>>     On 11/22/09, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
> >>>>>   2009/11/22 N. Ganesan <naa.gane...@gmail.com>:

> >>>>> > இது ஸ்ரீவைஷ்ணவர்கள் சபை அல்லவா :) இன்னம்பர்க்காரர் ஹிந்து ஃபேமிலி
> >>>>> > பற்றிச் சொல்கிறார்.
>
> >>>>> எனக்கும் தூக்கிவாரிப் போட்டது!
>
> >>>>> திருவாய்மொழியை நான் ஒரு Universal Gospel என்றுதான் காண்கிறேன். அவர்
> >>>>> ஓரிடத்தில் கூட யாரையும் பழிப்பதில்லை. ஆழ்வார்களின் கண்டனம் எப்போது
> >>>>> வருகிறது என்றால், சமய நெறி தவறி எவரொருவர் திருமண் காப்பிட்டவரை
> >>>>> வம்பிற்கு இழுக்கிறாரோ அப்போதுதான் வருகிறது (that is when you exceed
> >>>>> the limit of gentlemanship or etiquette) . விஷ்ணுவின் வழியாக உலகைக்
> >>>>> காண்கிறது வைஷ்ணவம், ஈசன் வழியில் அதே உலகைக் காண்கிறது சைவம். அவ்வளவே.
>
> >>>>> மேலும் பாகவத சம்பிரதாயம் என்பது சைவம், வைஷ்ணவம், அத்வைதம், பௌத்தம்
> >>>>> (சங்கம் சரணம் கச்சாமி) எல்லாவற்றிற்கும் பொது (ஜைனம் தெரியாததால்
> >>>>> பேசவில்லை).
>

> ...
>
> read more »

V, Dhivakar

unread,
Nov 23, 2009, 11:17:18 PM11/23/09
to mint...@googlegroups.com
ஹா,, விநோத்.. நீங்களா!!
 
:-((

V, Dhivakar

unread,
Nov 24, 2009, 12:09:43 AM11/24/09
to mint...@googlegroups.com
ஜீனர் என்றல்லவா தமிழில் குறிப்பிடுகிறார்கள். (ரா.நா. புத்தகத்தில் பார்த்ததாக நினனவு)
சைனா என்பதை எவ்வாறு தமிழில் குறிப்பிடவேண்டும்?
 
தி

 

Banukumar Rajendran

unread,
Nov 24, 2009, 12:59:10 AM11/24/09
to mint...@googlegroups.com
ஜினர் என்பது சரி. ஜைனர் என்பது தமிழில் சைனர் என்றாகும்.
 
இரா.பா

 

V, Dhivakar

unread,
Nov 24, 2009, 1:13:27 AM11/24/09
to mint...@googlegroups.com
ஜீனர் அல்லது ஜினர் என்றால் தீர்த்தங்கரரைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாமா?
 
சமணம் ஸ்ரமணம் இவை என்ன.. (செவி கொடுத்து கேட்பது தெரியும்) ஆனால் ஜைனர் - சமணர் எவ்வாறு மாறியது?
 
தெளிவிக்கவும்

 

devoo

unread,
Nov 24, 2009, 1:28:28 AM11/24/09
to மின்தமிழ்
*ஜிந:*

'ஜி' என்னும் வெற்றியைக் குறிக்கும் தாதுவிலிருந்து ஜிந: -
புலன்களை வென்றவர் ஜினர்; ஜினத்தின் தொடர்புச் சொற்கள்
ஜைனம், ஜைனர் என்றாகும்.
வைணவத் துறவியரைக் குறிக்கும் ஜீயர் என்பதும், மணிப்ரவாளப் பயன்பாடும்
சமண வழி ஒற்றுமைகள்.

தேவ்

வினோத் ராஜன்

unread,
Nov 24, 2009, 1:55:40 AM11/24/09
to மின்தமிழ்
Among the Shramanas , the Jainas were probably the first one to arrive
to Tamil Nadu. Hence, the Generic name Shramanas came to be associated
with the Jainas.

V

On Nov 24, 11:13 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> ஜீனர் அல்லது ஜினர் என்றால் தீர்த்தங்கரரைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாமா?
>
> சமணம் ஸ்ரமணம் இவை என்ன.. (செவி கொடுத்து கேட்பது தெரியும்) ஆனால் ஜைனர்
> - சமணர் எவ்வாறு மாறியது?
>
> தெளிவிக்கவும்
>

> On 11/24/09, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > ஜினர் என்பது சரி. ஜைனர் என்பது தமிழில் சைனர் என்றாகும்.
>
> > இரா.பா
>

> >  On 11/24/09, V, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
> >> ஜீனர் என்றல்லவா தமிழில் குறிப்பிடுகிறார்கள். (ரா.நா. புத்தகத்தில்
> >> பார்த்ததாக நினனவு)
> >> சைனா என்பதை எவ்வாறு தமிழில் குறிப்பிடவேண்டும்?
>
> >> தி
>

> ...
>
> read more »- Hide quoted text -

வினோத் ராஜன்

unread,
Nov 24, 2009, 2:04:07 AM11/24/09
to மின்தமிழ்
Dhivakar,

Religious atrocities were made by all the religions at all times. No
religion is an exception.

But to potray as one religion as bunch of goons, and the other as
innocent angels doesn't make any sense.

Your post seems to convey the point that the shaivas were just passive
observers, while the Jainas were committing all the atrocities.

Religious atrocities of the shaivas against the vaishnavas are well
recorded. So they were not bunch of angels as well.

I just wanted to point out this. No bad feelings intended :-)

Also, in India religious clashings were a rare event. Some events here
and there doesn't mean these religons were clashign all the times :-))

V

On Nov 24, 9:17 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> ஹா,, விநோத்.. நீங்களா!!
>
> :-((
>

devoo

unread,
Nov 24, 2009, 2:14:18 AM11/24/09
to மின்தமிழ்
Nov 24, 11:13 am, "V, Dhivakar"

//சமணம் ஸ்ரமணம் இவை என்ன//

’ச்ரம்’ श्रम् - ச்ரம் தாதுவிலிருந்து மெய்வருத்தத்தைக் குறிக்கும்
‘ச்ரம:’
தமிழில் சிரமம் என்கிறோம்.மெய்வருந்தத் தவம் செய்வோர் ச்ரமணர்.
அது சமணர், சமணர், அமணர்,அமண் என்றாகிறது.

//(செவி கொடுத்து கேட்பது தெரியும்)//

செவிமடுப்பதற்குப் பெயர் ‘ச்ரவணம்’;அதற்கான தாது ‘ச்ரு’ श्रु ;
தமிழில் சிரவணம்

தேவ்

vj kumar

unread,
Nov 24, 2009, 2:17:27 AM11/24/09
to mint...@googlegroups.com
hi sir

with due respects, not with a point to argue but to enlarge our collective intellect - the argument of Dhivakar sir was more to say that - the early references were to maybe worship only the Theertangaras and the place was worship was not a temple but a final resting place of the saints. How and when the other deities came into jain faith and the concept of Jaina temple arose when the very core tenants was for worshipping enlightening aka soul and not an all pervasive concept of God - was what was the question put up. Pardon my ignorance, and looking forward to a healthy discussion.


rgds
vj
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/11/24 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 24, 2009, 2:29:44 AM11/24/09
to mint...@googlegroups.com
><>>But to potray as one religion as bunch of goons, and the other as
innocent angels doesn't make any sense<<<
 
Dear Vinodh
Never intended so. When mentioned about temples comes, I said a small clip on Temple atrocities.
 
I love the original Jainism. And I understand the truth on that. And I personally heard Lord Bhuddas teachings from Sri Sivananda Murthi of Bhimilipatnam who recently took 'Bhuddha' Cinema in English.
 
மஹாவீரரை விட மகான் ஒருவர் உண்டோ? உடுத்தி இருந்த அரை வேட்டியையும் தனக்கு ஏதும் சொந்தம் இல்லை என்று தூர எறிந்தவர். அகிம்சைக்கு ஆதியே அவர்தான். மஹாவீரரும் புத்தரும் இறைத் தூதர்கள் என்றளவில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. இறைத் தூதர்கள் வழி நடந்தால் இந்த நாடுகளுக்கிடையே எல்லை எதற்காக? சண்டையில்லை, சச்சரவில்லை.. பயமில்லை.. எல்லாம் அன்பு மயம்.
 
ஆனால் அப்படி நடக்கவிடவில்லை 
 
நாகார்ஜுனர் என்றொரு அரிய ஆத்மா ஆந்திராவில் புத்தரின் எளிய கொள்கைக்காக தன் பிராம்மண வழியைக் கைவிட்டு புத்தரின் வழி சென்று மக்களுக்கு வழி காட்டியது.
அதே போல கோமதிமுனியார் எனும் சமணமுனி மயிலிறகு கொண்டு பயணம் செய்து வழியில் வரும் எறும்புகளை தடவி அப்பால் செலுத்தி நடப்பார். அத்தனை அஹிம்சாவாதி.
 
ஆனால் இவர்கள் விதி விலக்குகள்.வெளிமதங்கள் இந்தியாவில் வருவதற்கு  ஆதிகாரணம் பௌத்தமும்,  சமணமும்தான் இதைப் பற்றி விவாதிப்பதில் பல சிக்கல்கள் வரும் நண்பரே.. எனக்கு நடந்தவைகளை சொல்லி முதலில் உங்கள் மனங்களை புண்படுத்தும் தைரியம் கிடையாது.
 
ஆகையினால் இத்துடன் நிறுத்த முயல்வோம்!!
 
தி

Raja sankar

unread,
Nov 24, 2009, 2:49:18 AM11/24/09
to mint...@googlegroups.com
//ஆனால் இவர்கள் விதி விலக்குகள்.வெளி
மதங்கள் இந்தியாவில் வருவதற்கு  ஆதிகாரணம் பௌத்தமும்,  சமணமும்தான் இதைப் பற்றி விவாதிப்பதில் பல சிக்கல்கள் வரும் நண்பரே.. எனக்கு நடந்தவைகளை சொல்லி முதலில் உங்கள் மனங்களை புண்படுத்தும் தைரியம் கிடையாது.//

We learn from history that we learn nothing from history. - George Bernard Shaw

வரலாற்றை சொல்வதில் என்ன சிக்கல் வரப்போகிறது? தவறு நடந்திருந்தால் அது நடந்தே இருக்கிறது. அது சைவர்கள் செய்திருந்தாலும் சரி சமணர்கள் செய்திருந்தாலும் சரி.  யாருமே இப்போதிருப்பவர்களுக்கு மனம் புண்படும் என்றால் அப்புறம் எப்படித்தான் வரலாற்றை அறிவது?

ராஜசங்கர்

2009/11/24 V, Dhivakar <venkdh...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 24, 2009, 2:58:15 AM11/24/09
to mint...@googlegroups.com
அதனால் தான் 'கா விரி' என்றார்கள்; 'கொள் இடம்' என்றார்கள்; மையத்தில் .துயில் கொள்கிறான்' என்ற நிதர்சனம்.


2009/11/24 Raja sankar <errajasa...@gmail.com>



--
இன்னம்பூரான்

devoo

unread,
Nov 24, 2009, 5:14:14 AM11/24/09
to மின்தமிழ்
Nov 24, 12:04 pm, வினோத் ராஜன்
//Religious atrocities were made by all the religions at all times. No

religion is an exception.
But to potray as one religion as bunch of goons, and the other as
innocent angels doesn't make any sense.//

Nov 24, 12:29 pm, "V, Dhivakar"
//உங்கள் மனங்களை புண்படுத்தும் தைரியம் கிடையாது//


ஒன்றில் ஒன்று ஊடாடும் மரபுகள்;கௌடபாத காரிகையில்
பௌத்தச் சிந்தனைகளைப் பார்க்கிறோம்.
நாகார்ஜுனரின் கருத்துக்களால் தாம் ஈர்க்கப்பட்டதாகக்
காஞ்சிப் பெரியவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
ஜைனரான அமரஸிம்ஹர் செய்த அமரகோசத்தை
வெகுவாகப் பயன்படுத்தி வந்தது வேதியர்களே.
பிஷ்டபசு யாகம் செய்த மறையவர்கள் செய்த பூஜையை
புத்தபிரான் ஏற்றதாக வரலாறு.சிவாலயத்தில் ஜைனர் சிரசைப்
பார்க்கிறோம்.ஸநாதநத்தின் பத்ததிகளை பௌத்த,ஜைன மதங்கள்
முற்றிலும் புறக்கணிக்கவில்லை.

ஒரு சில முறைகேடுகள் வரலாற்றில் நிகழ்ந்திருக்கலாம்.

பொதுமையை மட்டும் பேசுவோம் நண்பர்களே,
பானுகுமார்ஜீ நல்ல தகவல்களைத் தந்து வருகிறார்;
திவாகர் சார் சிறந்த வரலாற்று ஆய்வாளர்;
வினோத்ஜீ பௌத்தம் தெரிந்தவர்.
இணைந்து பேசினால் எத்தனையோ நன்மை.

தேவ்

N. Kannan

unread,
Nov 24, 2009, 5:28:05 AM11/24/09
to mint...@googlegroups.com
2009/11/24 devoo <rde...@gmail.com>


பொதுமையை மட்டும் பேசுவோம் நண்பர்களே,
பானுகுமார்ஜீ நல்ல தகவல்களைத் தந்து வருகிறார்;
திவாகர் சார் சிறந்த வரலாற்று ஆய்வாளர்;
வினோத்ஜீ பௌத்தம் தெரிந்தவர்.
இணைந்து பேசினால் எத்தனையோ நன்மை.

 
இலட்சித்திலே ஒரு வார்த்தை. அப்படியே வழிமொழிகிறேன்.
21ம் நூற்றாண்டில் யாரை ஜைனனென்றும், பௌத்தவென்றும், வைஷ்ணவன், சைவனென்றும் கண்டு பிடிப்பது? எல்லாம் `சாம்பாரில் கரைந்த `தான்` போல ஆகிவிட்டது ;-)
எப்படி பௌத்தர்களின் `சங்கம்` எனும் கருத்தாக்கம் ஆழ்வார்களால் விரிவு படுத்தப்படுகிறது என்று ஏ.கே.இராமானுஜன் விவரிப்பார். விவேகாநந்தரின் தியானத்தில் புத்தர் வருவதுண்டு.
எல்லாம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்தானே!
 
பாரத பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!    
 
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!  - பாரதி
 
க.>
 

Innamburan Innamburan

unread,
Nov 26, 2009, 10:03:42 AM11/26/09
to mint...@googlegroups.com
'எல்லாம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்தானே'

அவ்வளவு தான் விஷயம். சேகரம் செய்வோம், தெளிவுடன், சமரசத்துடன்.


2009/11/24 N. Kannan <navan...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 26, 2009, 10:54:24 AM11/26/09
to mint...@googlegroups.com


2009/11/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

'எல்லாம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்தானே'

அவ்வளவு தான் விஷயம். சேகரம் செய்வோம், தெளிவுடன், சமரசத்துடன்.



ரசம்னா தெளிவா இருந்தாதான் ருசி.  அதவும் சம(ண)ரசம் வேற.... இது சமண மஹாசபை வேற....  அதுவும் தும்பிக்கை ஆழ்வார் துணையிருக்கும் சமண மஹாசபை! சமணரசம்...சமணரசம்....

கண்ணன் க-ன்னு போடறார். நீங்க இ-ன்னு போடறீங்க.  நான் ஹ மட்டும் போட்டு, விட்டுட்டா அர்த்தமே வேற ஆயிடுமேன்னு பாக்கறேன் :-)))

srirangammohanarangan v

unread,
Nov 26, 2009, 12:43:10 PM11/26/09
to mint...@googlegroups.com
எங்ஙனயோ   இடிக்குதே!    ஹரிகி  அவுக   கிள்ளித்    தாண்டு  ஆடுறா...க...இ...ஹஹ்...ஹ

Banukumar Rajendran

unread,
Nov 27, 2009, 2:34:11 AM11/27/09
to mint...@googlegroups.com
 
இங்கே எல்லா சமயங்களிலும் சமணரசம் தான்.
;-)
2009/11/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages