வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
வள்ளுவரின் பொதுநோக்கும் சமயாதீதமும்
இனி திருகுறளின் முதல் அதிகாரத்திற்கு பொருள் கூறப்புகும் முன், உலக வரலாற்றில் சிறப்புமிக்க இப்பெருநூலின் சில தனிச் சிறப்புக்களை எடுத்துரைப்பது மிகவும் தேவைப்படும் ஒன்று. அதில் முதலாக நாம் இந்நூலை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்றவாறு முப்பால் நூலாக கருததப் படுவது ஏற்புடைத்தா? என்ர கேள்வி எழுகின்றது. இது பிற்காலத்தில் உரையாசியர் யாரோ ஒருவர் பிழையாகத் தந்த பாகுபாடு என்று தெரிகின்றது. இது திருகுறளிற்கும் சங்க இலக்கியப் பண்பாட்டிற்கும் உள்ள நெருங்கியத் தொடர்பை காட்டாது போகின்றது.
முப்பால் பாகுபாடு யாருடையது?
இந்தப் பாகுபாடு மிகப் பழமையானது என்றாலும் பிழையான ஒன்றாகவேப் படுகின்றது, முதலில் நாம் கவனிக்க வேண்டியது முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து அல்ல- இறைவனைப் போற்றித் துதித்து நூல் இனிதே முடிய இறைவனது அருளைவேண்டிப் பாடுவது அல்ல. மாறாக இங்கு இறைவனைப் பற்றி ஆய்ந்து பல மெய்ஞானக் கருத்துக்களை தெரிவிக்கும் ஓர் அதிகாரமாகும். ஆக இதனை ‘இறையுண்மை அதிகாரம்’ என்று கூறுதல் பொருந்தும்
மேலும் இந்நூலையே தொல்காப்பிய மரபு வழி வந்து இன்னும் பல புதுமைகளையும் செய்யும் நான்கு திணைகள் கொண்டுள்ள ஓர் பெருந்நூல் என்று கொள்வதே பொருந்தும்
எவ்வாறு எனின் கூறுவோம்
காமத்துப்பால் உள்ளபடியே காமத்தைப்பற்றி அல்லாது காதல் அன்பினைப் பற்றியது ஆகும். தொல்காப்பியத்தின் ‘ஐந்திணை அன்பினையே” காதல் என்று கணித்து அதன் ஆழத்தையெல்லாம் ஓர் அழகிய நாடகம் போல் விளக்குவதாகும். ஆகவே இந்த காமத்துப்பாலை நாம் வள்ளுவர் கருத்துப்படி ‘அகத்திணை’ என்று கூறுவதே ஒக்கும்.
இதேப்போன்றுதான் பொருட்பால் என்பதும் இது தொல்காப்பிய மரபில் வரும் புறத்தினை யாகும்.
இவ்வாறெனின் அறத்துப்பால் தான் யாது?
இது அகத்திணையும் அல்ல புறத்திணையும் அல்ல, மாறாக அவற்றால் எழக்கூடிய சங்காலப் புறத்திணையில் புதைந்து கிடந்த மேலான மெய்யறிவுச் சிந்தனையின் உகத்திணையாகும். உகத்திணையாவது மெய்யுணர்வுத் தேடலை அடிப்படையாக கொண்ட இல்லறம் என்றும் துறவறம் என்றும் இயங்கும் வாழ்க்கையாகும்
சங்க இலக்கியத்தில் கணியன் பூங்குன்றனார் கூறும் ‘யாது ஊரே யாவருங் கேளிர்’ முதுகண்ணன் சாத்தனார் கூறும் ‘உண்டி கொடுத்டோர் உயிர் கொடுத்தோரே” என்பன போன்ற மெய்யறிவு விசாரனை சார்ந்த ஒழுக்கமாகும், இத்தகையப் புலவர்கள் வாழ்ந்த வாழ்கையாகும்.
திருவள்ளுவர் இதனை தனியொருத் திணையாக வடித்து ஓர் புரட்சி செய்கின்றார்.
இனி இதனால் எழுவதே ‘சிவத்திணை’ எனக் கூறவரும் ‘செம்பொருள்’ எனும் இறைவனைப் பற்றிய ஞான விசாரனையின் ஒழுக்கமாகும். இது இறையுண்மையும் இறைவனது குணங்களும் கருதப்படும் ஓர் திணையாகும்
இந்தத் திணையே பிறகாலத்தில் இறை நம்பிக்கையை வற்புறுத்தி எழுந்த பத்தி எழுச்சியின் வித்தாக அமைந்துள்ளது. இதன் விருத்தியே பத்தி இயக்கத்தின் எழுச்சிக்கு வித்திட்டு பாரதம் எங்கும் பரவி இறைவனைப் போற்றிப் புகழும் வாழ்க்கையே வாழ்க்கையாக ஓர் புரட்சி செய்து இறையுண்மையை ஏற்காத உலகாயதம் சாங்கீயம் புத்தம் போன்ற சமயங்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
இனி திருவள்ளுவர் இறையுண்மை வாழ்க்கையை வாழ்ந்தவர் எனினும் சமயச் சார்பு அற்றே விளங்கியுள்ளர். சமயங்களில் சார்பு சமயங்கள் என்றும் சார்வற்ற சமயநிலை என்றும் இருவகை உண்டு. சார்புச் சம்யங்கள் ஓர் மறைநூலையோ புத்தன் தீர்த்தங்கரர் போன்ற மகான்களின் வாக்குகளையோ யாராலும் எழுதப்படாத வேதங்களே மெய்ய்மை பயக்கும் என்ற நம்பிக்கையில் எழுந்துள்ள பிரமாணியம் சைவாகமங்களை வைணவ ஆகமங்களை சுருதி ஆதாரமாக் கொண்ட சம்யங்கள் எல்லாம் சர்புச் சமயங்கள் ஆகும். (sectarian religions)
இவ்வாறான சார்புச் சமயங்களில் பட்டு சிறையுண்டு கிடக்காது மெய்யுணர்தலையே அடிப்படையாகக் கொண்டு அறிவியல் முறையில் மெய்ஞானத்தையே தேடி செல்லும் நூலிய அறிவியல் வாழ்க்கையே வாழ்க்கை என வாழ்ந்தவர் திருவள்ளுவர் என்பதின் அவர் அழகிய சமயதீதர் ஆகின்றார்.
இந்த சமயாதீதத்தை பிறகால சைவசித்தாந்த மரபும் போற்றி வளர்த்துள்ளது.
இவ்வகையிலேயே திருவள்ளுவரின் பொதுநோக்கைப் புரிந்துகொண்டு முதல் அதிகாரத்தை சிவத்திணையின் ‘இறையுண்மை’ அதிகாரமாகக் கொண்டு உரையை விரிப்போம்
திருவள்ளுவரின் ‘சிவத்திணை’ எனும் பகுதி ‘இறையுண்மை’ அதிகாரம் எனும் ஒரே அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்று கொண்டு நம் உரை விளக்கம் செல்லும்
உலகன்
தொடரும்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 2
இனி மீண்டும் பிறவாமையைத் தரும் மெய்யுணர்வினைத் தேடும் உகவாழ்க்கை வாழ்ந்து அந்த மெய்யுணர்வு வழி இறையுண்மையையும் இறைவனது இலக்கணங்களையும் அறிவதே சிவத்திணையென அதனையும் வாழ்ந்து உலகோர் உய்ய வள்ளுவப் பெருந்தகை ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதாக அதனையும் உலகோருக்கு தக்க முறையில் உணர்த்தப் புகுந்து முதற்கண் இறையுண்மையை எந்த மதத்தையும் சாராது உலகினை வைத்தே அனைவரும் உணரலாம் என்று நல்லவோர் முறையியல் வழி உணர்த்துகின்றார்.
இறையுண்மை அதிகாரம்
1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அகர முதல் எழுத்தெல்லாம்: எல்லா மொழிகட்கும் உறுப்பாக விளங்கும் பொருண்மைத் தாங்கி வரும் எழுத்துக்கள் எல்லாம், இந்த பொருண்மைகளைத் தேற்றும் ஆன்மாவால் மூல ஒலியாகிய நாதசொரூபம் அல்லது ஓங்காரத்திலிருந்து பலவாறு தேற்றப்படுவதுபோல, ஆதிபகவன் முதற்றே உலகு: உயர்திணை என்றும் அஃறிணை என்றும் ஒன்றென்றும் பலவென்றும் பலவாறு பகுத்து வகுத்ததாகக் காணப்படும் இவ்வுலகை இவ்வாறு பகுத்து வகுத்துத் தரும் பல பகவர்களாக பல தெய்வங்கள் இருந்தாலும் இவற்றிற்கெல்லாம் ஆதியாக முழுமுதலாக இருக்கும் ஆதிபகவனையே நிமித்தகாரண முதலாக உடைத்து இவ்வுலகம் என்கின்றார் தான் எவ்வாறு இறையுண்மையை உணர்ந்தேன் என்பதை விளக்கும் வகையில்
இனி ‘ஆன்மா’ எனும் சித்துப்பொருள் வெளிப்படையாய் ‘ஆதிபகவன்’ போல் ஓதப்படாது இருந்தாலும் சொல்லெச்சமாக அது குறிப்பாய் உணர்த்தப்படுதலின் விதந்தெடுத்து இங்கு ஓதப்படுகின்றது.
பலவகையான ஓசைகள் இருக்க அவையெல்லாம் எழுத்தாகாது, பொருண்மைத் தாங்கி வரும்பொழுதே அவை எழுத்தோசை ஆகின்றன. இது உலக மொழிகள் அனைத்திற்கும் பொருந்தும் ஒன்று. இனி ஓர் ஒலி தானே பொருண்மைத் தேற்றி அதனை ஓர் ஓசை வயப்படுத்தி அந்த ஓசையயை எழுத்தோசை ஆக்காது என்பதின் இதனைச் செய்வது ஓர் சித்துப்பொருளாகிய ஆன்மாவே என்று இங்கு ஆசிரியர் குறிப்பாய் உணர்த்துகின்றார்.
இனி இதனை ஆதிபகவனே செய்யலாம் ஆன்மா வேண்டாவெனின், மொழியால் விளங்குவது சுட்டுணர்வுகளாகும். இறைவனுக்கு சுட்டுணர்வு இல்லையாம்
எழுத்தோசைப் பற்றிய இவ்வறிவு தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் உண்டு.
இனி ஓர் கிளவியைக் கேட்க அந்தக் கிளவியின் உறுப்பாய் அமையும் எழுத்தோசைகளை ஓர் கிளவியாய் கேட்க, அதன் பொருண்மை உள்ளம் தட்ட, அக்கிளவியின் முதல் ஓர் ஆன்மாவே என்று உடன் உணரப்படுகின்றது. கிளவிகள் உணர்த்தும் பொருண்மை வழி ஆன்ம உணமை அறிவது நூலியப் பார்வையின் வழி அமைவதாகும்.
இதேப் பார்வையின் வழி இந்த உலகினையும் காண, எவ்வாறு கிளவிக்கு முதலாக ஆன்மா இருக்கின்றதோ அவ்வாறே பலவாறு பகுத்தும் வகுத்தும் வெவ்வேறாக நிற்கும் உலகிற்கும் முதலாக ஓர் நிமித்தகாரணமாக அறிவுடைய ஓர் சித்துப்பொருள் இருக்க வேண்டுமென, அதுவே இந்த ஆதிபகவன் என்று உனர்த்துகின்றார் ஆசிரியர்.
உவமத்தின் இயைபு நூலியப் பார்வையால் ஆகும் முகத்தைக் கண்டு ஆன்மாவின் நிலையாகிய அகத்தை உணரும்போது மெய்யாகும் பார்வை போன்று இந்த நூலியப் பார்வை யாகும் என்பதே.
உலகம் உயர்திணையாய் அஃறிணையாய் ஒன்றாய் பலவாய் பகுத்து வகுத்து நிற்பதும், ஓர் பொருண்மையைக் காட்டி நிற்கின்றது என்று உணரப்பட, எற்றுக்காக இதுவெல்லாம் எனுங் கேள்வி எழ ஆன்மாக்களுக்கு ஞானம் கொளுத்தி வீடுபேறு அளித்து மீண்டும் பிறவாமை அருளவே என்ற ஓர் மெய்ப்பொருள் அங்கு உண்டு என அறிவு உண்டாகின்றது.. அதுவே அது ஆதிபகவனாகிய இறையுண்மையைக் காட்டி நிற்கின்றது. இதனை வள்ளுவப் பெருந்தகை செவ்வே தனது மெய்யுணர்தல்’ அதிகாரத்திலும் பிற இடங்களிலும் விளக்கியுள்ளார்.
காண்க:
356
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார்: கற்க வேண்டியதை எல்லாம் நன்முறையில் பிழையறக் கற்று கண்கள் திறக்கப்பெற்று பொய்பொருளை கழித்து மெய்ப்பொருள் யாதென்று கண்டார்; தலைப்படுவர் மற்றுஈண்டு வாரா நெறி: அகத்தே செறிந்திருந்த அஞ்ஞான இருள் எல்லாம் நீங்கப் பெற்று பிறப்பீனும் பேதமைப் போக்கி மீண்டும் பிறவாமை ஈட்டித் தரும் முத்தி நெறி தலைப்படுவர் என்பதாம்
இங்கு மெய்ப்பொருள்’ உயிர்கட்காக உலகில் நின்று நிலவும் பொருண்மையாம்
இனி ஏன் ‘ஆதிபகவன்’ எனில், விளக்குவம். உலகியல் உண்மையாக பல தெய்வங்கள் உண்டு. அவை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இந்த உலக உயிர்கள் கற்று மேம்பட உதவும் ஆனால் இந்த தெய்வங்கள் அனைத்தும் விடுபேறு மகிழும் நிலையில் ஆன்மாவுடன் நில்லாது போம். இந்த இடைப்பட்ட தெய்வங்களை வள்ளுவர் ‘பகவன்’ அதாவது ‘அருளுவோன்’ என்று கூறி வீடுபேற்றின் முடிவில் அவை இல்லாதுபோய் இவற்றிற்கு முதலாக நிற்கும் பெருந்தெய்வத்துடன் அவை இரண்டறக் கலந்துவிட, அவை ஆதி அல்லாது இந்த மூல முதலே ஆதிபகவன் ஆகின்றார்.
இந்த ‘ஆதிபகவன்’ எல்லா தெய்வங்கட்கும் ஆதியாய் ஆகவே இந்த உலகிற்கெல்லாம் ஆதியாய் ஆனால் தனக்கோர் முதலை ஆதியைக் கொண்டில்லாது இருப்பதின் அதனையே ‘ஆதிபகவன்’ என்ற காரணப் பெயர் வழி அழைக்கின்றார் நம் வள்ளுவர்.
இந்த ‘ஆதிபகவனே’ பிறகாலத்தில் சைவ சித்தாந்தத்தில் ‘அந்தமாதி” ஆகின்றான். இதனை அடுத்து எவ்வாறெனக் காண்பம்
உலகன்
தொடரும்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 3
வள்ளுவரும் மெய்கண்டாரும்
இனி இவ்வுலகம் சித்துப்பொருட்களாக உயர்திணை என அஃறிணை என மேலும் அவை ஆணென பெண்ணென வகுத்தும் பகுத்தும் நிற்க அசித்துப்பொருட்களாகப் பல பல்வேறு வகையில் வேறுபட்டு நிற்க இவற்றையெல்லாம் இருதிணை ஐம்பால இயல்நெறி என்றவாறு உனர்ந்து மனிதர்கள் மொழிபடுத்தி வாழ்வது தொல்காப்பியர் காட்டிச் சென்ற உலகியல் உண்மையாகும். இவ்வாறு உலகு இருப்பது மீண்டும் பிறவாமை என்பதை உயிர்கள் அடைவதற்கே எனும் பொருண்மை விளங்க அதனை அருளவல்லவனாக இறைவன் இருக்கின்றான் அவனே இந்த உலகிற்கு ஆதிபகவன் இக்காரணத்தால் என்று திருவள்ளுவர் முடிக்கின்றார்.
இனி இதனை அகப்படுத்தியே ஆனால் இன்னொரு கூறும் ஆழமும் கண்டு இந்த ஆதிபகவனே அந்தமாதி எனப்படும் சங்கார காரணனாகிய முதல் என்றும் முடிகின்றார் சிவஞானபோதம் எழுதி சமய வாழ்க்கையையே ஓர் நூலியய் அறிவியல் ஆக்கிய அற்புத மெய்கண்டார்.
அதுவென்ன இன்னொரு கூறும் ஆழமும்?
இவ்வாறு பலவாறு பகுத்து வகுத்து நிற்கும் பொருட்கள் அனைத்தும் மூவினைபடும் என்பதே அது. உலகப் பொருட்கள் யாதும் நிரந்தரம் அல்ல. அது அது என சுட்டப்படும் அனைத்தும் தோன்றி நின்று மறையும் தனமைத்து,
இதுவே சிவஞான போதத்தின் முதல் சூத்திரத்தில் வெளிப்படும் ஆழுண்மையாகும்
காண்க:
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
(இவ்வுலகு) தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து, உளதாம் (அருளின்)
அந்தம் ஆதி(யே முதல்) என்மனார் புலவர்
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
இங்கு வள்ளுவரின் ஆதிபகவன், உலகில் அழிவு இருப்பதையும் அகப்படுத்தி அந்தமாதி ஆகின்றான்
இதுவென்ன அனைத்திற்கும் ஆதியாய் இருக்கின்ற இறைவன் அவற்றின் அந்தமாகிய அழிவிற்கும் காரணமாய் நிற்கின்றவன் ஆவது?
இது மெய்கண்டார் கருத்தல்ல. அனைத்தையும் ஆதியாக நின்று தோற்றுவிக்கும் இறைவன் அவற்றை அழிக்கவும் மாட்டான். ஆயினும் அவனே சாங்கார காரணன ஆகின்றான். எவ்வாறு?
அழிக்கின்ற சத்தியாக மலம் எனும் ஆணவ மலம் இருக்கின்றது. அனைத்தையும் விழுங்கி இருளில் வீழ்த்தும் மலம் எனும் ஆணவ மலம் இருக்கின்றது. அதுவே தோன்றி நிற்கின்ற அனைத்தையும் விடாது விழுங்கி அழிக்கின்றது. ஆயினும் முற்றிலும் அழியாது உலகென்றும் அதில் பல உயிர்கள் வாழ்வதென்றும் உண்டே! அது எப்படி? ஆணவ மலம் வலுக்குன்றாது இருந்தால் உலகம் என்றோர் பொருள் இருக்க முடியுமா?
இங்குதான் இறைவன் சங்கார காரணன் ஆகின்றான். தான் தனை இழுத்துக்கொள்ள அல்லது மறைத்துக்கொள்ள ஆணவ மலம் மேலோங்கி அழித்தலைச் செய்ய, தான் வெளிபட்டுச் சுடர் அந்த மலம் பின்வாங்கி வலுவிழந்து நிற்க உலகம் தோன்றுவதும் ஆகவே இறைவன் ஆதியாக நிற்பதும் மெய்யென, இறைவன் உலகிற்கு சாங்கார காரணனாகிய முதல் ஆகின்றான், அந்தமாதி ஆகின்றான்
இவ்வாறான ஓர் அழகிய வரலாற்றுத் தொடர்பை திருவள்ளுவரிடையேயும் மெய்கண்டார் இடையேயும் காண்கின்றோம். தொல்ககப்பியம் அழிகாட்ட திருவள்ளுவர் கல்லாடனார் கூறுவதுபோல, சமயக்கணக்கர் தன் வழிச் செல்லாது உலகியில் உண்மை கூறி இறைவனை ஆதிபகவனாக காண்கின்றார். இனி மெய்கண்டார் இதனை அகப்படுத்தி வேதங்களையோ ஆகமங்களையோ மாணமுதல்களாக ( பிரமாணங்கள்) கொள்ளாது இந்த உலகையே அதன் இயல்பினைக் கண்டு அங்கு சங்காரகாரணாக இறைவன் இருக்கின்றான் என்ற உணமையை நிறுத்துகின்றார்.
இவ்வகையில் திருவள்ளுவரும் மெய்கண்டாரும் சார்பு சமயங்கள் யாதையும் தழுவாது அனைவருக்கும் பொதுவாகிய உலகினை வைத்தே இறையுண்மை கூறுதலின் இருவருமே அழகிய சமயாதீதர்கள் ஆகின்றனர். இதனால் சைவ சமயமும் சமயாதீத சமயம் ஆகின்றது
இனி இது எவ்வாறு சமய வாழ்க்கையை நூலியல் அறிவியல் துறையாக வளர்த்துள்ளது என்பதை இவற்றிற்கும் அழிவிலுண்மை எனும் பெருநூலிற்கும் உள்ளத் தொடர்பினை விளக்கும் வகையில் அடுத்து விளக்கப்படும் என்பதாம்
உலகன்
I am happy to see the interpretation for the first time close or similar to my interpretation and different from generally understood. Loga's interpretation go well with religious tradition. Perhaps, he is seeing what asarari, in person saw when valluvar presented his work.
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (4) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
...................................![]()
__,_._,___
இடுகை 4
அழிவிலுண்மையும் ஆழ்வுளவியலும்
அறிவியல் இருவகைப்படும்- பொறிலிய அறிவியல் (positive sciences) என்றும் நூலிய அறிவியல் (Hermeneutic Sciences) என்றும் அவை அமையும் இரண்டுமே தமிழர்களிடையே வளர்ந்துள்ளது எனினும், இன்று ஐரோப்ப்பியர்களிடையே தான் பொறிலிய அறிவியல் மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளது. ஆயினும் தமிழகத்தில் நூலிய அறிவியல் தொல்காப்பியர் காலத்திலிருந்தே மிகச் சிறப்பாகவும் விரிவாகவும் வளர்ந்திருக்க, இது ஐரோப்பாவில் 19ஆம் நூற்றண்டில்தான் வளரத் தொடங்கியுள்ளது Philosophical Hermeneuticcs என்ற பெயரில்.
தமிழர்கள் திருக்குறள் காலத்திலேயே சமய வாழ்க்கையை நூலியல் அறிவியல் துறையாக அதிலும் குறிப்பாக ஆழ்வுளவியல் துறையாக வளர்த்துள்ளனர். இதனை கீழ்வரும் மெய்யுணர்தல் அதிகாரத்தில் வரும் ஓர் குறட்பாவால் அறிய முடிகின்றது.
357
ஓர்த்து உள்ளம உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்து உள்ள வேண்டாம் பிறப்பு
ஒருதலையா ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்: விட்டகலா விழைவின் ஆழ ஆழ சிந்தித்து வேறெங்கும் தேடாது உள்ளத்தின் உள்ளே உள்ள இறைவனை பிழையற உணரின்; பேர்த்து (வரும்) பிறப்பு உள்ள வேண்டாம் : மாறி மாறிப் பிறந்து வரும் இந்த மாணா உடம்பொடு கூடியப் பிறப்பு மீண்டும் வரும் என்று சிந்திக்க வேண்டியதில்லை யாம், அதாவது மீண்டும் பிறப்பது வாய்க்காது போம் என்பதாம்.
இப்படிப்பட்ட ஓர் ஆய்வுத் துறையே ஆழ்வுளவியல் ஆய்வுத் துறையாகும்.
இனி முதற்குறளில் உலகினை வைத்து அங்கே ஓர் பொருண்மையைக் கண்டு( existential meaning) அதற்கு ஆதியாக ஆதிபகவன் என்று இறைவன் இருக்கின்றான் என்று வள்ளுவர் முடிக்கின்றார். இதனையே அகப்படுத்தி ஆயினும் எல்லா உலகியல் பொருட்களும் மூவினைப் படும் எனபதையும் அகப்படுத்தி அங்கு அநாதிபொருளாக மலமும் இருக்கின்றது இதனால் இறைவன் அந்தமாதியாகி சங்கார காரணனும் ஆகின்றான் என்று முடிக்கின்றார்.
இனி இங்கு விளங்குவது பொறிலியப் பார்வைக்கு மேல் உலகில் பொருண்மையைக் காணும் நூலியப் பார்வை வழி அதற்கு மூலமாக இறைவன் இருப்பதையும் காணும் பார்வை விளங்குவதிக் காண்கின்றோம். காட்டில் புகை ஆகவே அங்கு நெருப்புண்டு, எங்கே புகையோ அங்கு நெருப்பு என்பதுபோன்ற ஓர் அனுமானம் அல்ல இங்கு.
இதுவே முகத்தைக் கண்டு அகத்தை காணும் திறத்டின் நூலியப் பார்வை யாகும்.
இந்த உலகினையே இரட்டுருவின் ஓர் நூலாகக் கொண்டு நூலியப் பார்வையில் காண அங்கு புறவுரு காட்டி நிற்பதாக புதையுருவின் இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையும் வெளிப்படுகின்றது.
இவ்வாறு எங்கே பார்வையே ஆய்வின் மையக் கூறாக மாறுகின்றதோ, எங்கே அப்பர் பெருமான் ஓதிய ‘காண்பார் யார் கண்ணுதல் காட்டாக்காலே” என்றவொர் ஆழமான உணமை வெளிப்பட, சமய வாழ்க்கை ஓர் ஆழ்வுளவியல் துறையாக விளக்கமுற ஆகவே அது ஓர் நூலியல் அறிவியல் துறையாக எழுகின்றது.
இந்தத் திருப்பத்தைதான் சிவஞானபோதத்தின் வழி நூல் எனக் கருதக் கூடிய அடியேனது ‘அழிவிலுண்மை’ எனும் பெருநூலாகும்.
அதன் முதல் சூத்திரம் கீழ்வருமாறு:
அறிவின் திறனும் அவாவின் போக்குந்நூன்
னெறியி னாய்வர் நுழைவுகட் பெற்று
பெயராப் பெயர்க்கும் பெரும்பொருள் காண்பர்
பெய்யருள் பெருக்கின் பேணின் பிழையாது
: இச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின் , தக்க உத்திகள் பெய்தும் பழகியும் நூன்னெறி பிழையாது
அதன்வழி அருளைப் பேணியும் பெருக்கியும் ஞானத்தை வளர்த்துச் செல்ல, தான் பெயராது அசலனாகி நின்று
பிறவனைத்தையும் சலித்துத் தொழிற்படுத்தும் பேரறிவும் பேராற்றலும் உடையவனாகிய பதியை அனைவரும்
சிந்தை வழி ஊகித்து உண்டென்று அறிவதோடு ஞானக்கண்ணின் சிந்தை களிகூர நேராகக் கண்டும்
தெளியலாம் என்று உணர்த்துதல் நுதலிற்று என்பதாம்.
இங்கு
அறிவின் திறன்:
என்பது சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் எனப்படும் பஞ்சாவத்தைகள் வழி பசுகரணம்
சிவகரணம் எனப்படும் காட்சி பயக்கும் இருவகைக் கரணங்கள் வழி அடைந்து பல்வேறு செயல்களைச்
செய்து இச்சித்ததைத் தூய்த்து மகிழ்வதாகும். இந்த அவத்தைகளை பிறப்பிப்பதாக இருப்பன ஒன்றில் ஒன்று
மறைந்து பின் வெளிப்படும் பண்பின் பலவேறு பார்வைகள் ஆகும். இவற்றை பொறிலியப் பார்வை
அதனுள் கிடக்கின்ற நூலியப் பார்வை அதனுள் கிடக்கின்ற நுதலியப் பார்வை அதனுள் கிடக்கின்ற
சிவப்பார்வை, பரப்பார்வை, அதீதப் பார்வை என்றவாறு முடிவில் பார்வையற்ற பார்வை என்பன இருக்கின்றன.
இவற்றையே பண்டையோர் வாயிற்காட்சி மானதக் காட்சி தன்வேதனைக் காட்சி விஞ்ஞானக் காட்சி
சிவஞானக் காட்சி என்றெல்லாம் கூறிச் சென்றுள்ளனர். ஒவ்வொரு பார்வையும் ஓர்வகையான இருந்தறிவைத்
தர (intuitive understanding) அவற்றைச் சிந்தித்து தெளிந்து எண்ணறிவுகளாக்கி (
reflective
understanding )உயிர்கள் மகிழும். இதனை பண்டையோர் நிருவிகற்ப ஞானம் என்றும் சவிகற்ப ஞானம் என்று
கூறிச் சென்றுள்ளனர். பார்வைகளின்றி அறிவுகள் இல்லை என, அறிவின் பல்வேறு திறன்கள் வெவ்வேறு
பார்வைகள் வழியேதான் அமைகின்றது என்பதாம். எந்த அளவிற்கு பார்வை ஆழமாகின்றதோ அந்த
அளவிற்கு அகத்துச் செறிந்திருக்கும் அறியாமை நீக்கமாகும். இத்தகைய பார்வை பெயர்ச்சியின் எல்லை
பார்வையற்ற பார்வையாகும். அதனைக் கடந்த ஓர் வகைப் பார்வை இல்லையென, அதுவே முடிந்த
பார்வையாவதோடு அதுதரும் ஞானமே முடிந்த ஞானமாகின்றது. இதுவே அனைவர் உள்ளத்தும் ஏற்கனவே
பிரகாசித்துக்கொண்டிருக்கின்ற மெய்ஞானமும் ஆகும்.
பொறிலியப் பார்வைக்கு மேற்ப்பட்ட பார்வைக்கள் ஆன்மாவிற்கு சித்திக்க, ஆன்மாவின் உண்மையும் இறைவனது உண்மையும் தெற்றென விளங்கவரும் என்றவாறு இந்நூல் செல்லும். மேலும் பார்வைப் பெயர்ச்சிகள் பல இருக்க அதற்க்கு மூலமாக பார்வயற்றப் பார்வையே தன் பார்வையாகக் கொண்டிருக்கும் இறைவனே என்றுமுணர்ந்து இறையுண்மை நிறுத்தப்படுகின்றது
இனி திருக்குறளிலும் சிவஞானபோதத்திலும் அந்தர்கதமாக இருக்கும் பார்வை ஆய்வே அழிவிலுன்மையில் முதன்மைப் படுத்தப்படுகின்றது. இதனால் அறிவு ஆராய்ச்சிக்கும் மூலமாகிய பார்வை ஆய்வே முதன்மை படுத்தப்படுகின்றது.
இது வேதாந்த மரபிலும் ஏனைய இந்திய தரிசங்களிலும் இல்லாத ஒன்றாகும்
இங்கு பொறிலியப் பார்வைக்கு மேலாகி நூலியப் பார்வை அனைவருக்கும் இருக்கும் ஒன்று என்பதின் ஏனையப் பார்வைகள் ஆன்மாக்கள் பெற்று காணாததைக் கண்டு மகிழ இதுவே தொடக்கம் என்பதின், இது தனியே மிக விரிவாக ஆராயப்படுகின்றது,
இதற்குரிய சூத்திரம்:
சூத்திரம் 25. இயலிய நூலியம்
அறிவிற் படுவதனைத்தும் ஆயவருந் நூல்
பொருளை இரட்டுருவிற் காட்டி யகத்தே
இலங்கிடு மறியாமை இருளைப் பாரிடும்
ஏதமில் லுத்திகள் எழுப்பிடு திறத்தன.
இச்சூத்திரம் என்
நுதலிற்றோவெனின் , அறிவுகளாக உணர்வுகளாக அனுபவிப்பதற்குக் காரணமாக நிற்கும் அனைத்தும், ஓர்
நூலினைப்
போல இருப்பதின், ஒற்றுமை நயத்தின் நூலெனவேப் படும் என்பதையும், அதனின் பொருளுணர்வினைப் பயப்பிக்கும் அது புறவுறு புதையுரு இருவகையுருவில் பயப்பிக்கும் என்பதையும் உணர்த்துதல் நுதலிற்று என்பதாம். மேலும் புறவுரு தெளிவாக இருக்க, புதையுருவாக நிற்பது , புதைநிலை போக்கிடுவகையில் அகத்து இருப்பதாகத் தெரியவரும் அறியாமை இருளைப் பாரிடும் வகையில் தகுந்த உத்திகள் பெய்யுமாறும் அது தூண்டியும் நிற்கும் என்பதையும் உணர்த்துதல் நுதலிற்று என்பதாம்.
இதனின்
மெய்யறிவாய்வின் மூலவூக்கத்தின் தோற்றுவாயும் விளக்கப்பட்டவாறு. நூலென வொன்று வெளிப்பட்டு ஆன்மாவைக் கவ்வி நிற்க அது
அறிவிலாகி
அகத்துச்
செறிந்திருக்கும் அறியாமைத் துன்னிருளை உணருமாறு படுத்த, அதனின் உண்மைதான் யாதென்று அறியப்புகும் ஞானவேட்கை எழும் என்பது.
இதுவே திருக்குறள் தொடங்கி சிவஞானபோதம் போன்ற நூற்கள் கூறும் நூலிய அறிவியல் நெறியாக ஓர் வகையான ஆழ்வுளவியலாகும். சமயவாழக்கை இதன் வழி ஆழ்வுளவியல் துறையாக வடிக்கப்படுவதொடு, அறிவுகள் அல்லாது பார்வைகலே ஆய்வுப்பொருளாகவும் ஆக்கப்படுகின்றது, இதனால் சமய வாழ்க்கையின் அடிப்படைப் போக்காக திருமூலர் தமது உபதேசம் 30 விளக்கும் ‘கண்விழிப்பித்தல்’ ஆகின்றது.
இந்த விளக்கங்களோடு முதற் குறளை முடித்து இனி அடுத்த குறளிற்கு வருவோம்
உலகன்
தொடரும்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 5
இனி வேறு எவ்வித மாணமுதலையும்(பிரமாணம்) சார்ந்து நில்லாது உலகினை வைத்தே ஆங்கு காணவரும் பொருணமையை வைத்தே இறையுண்மையை சாதித்த வள்ளுவப் பெருந்தகை, இனி அடுத்து அந்த இறைவனை அடைவதே வாழ்க்கையின் பொருண்மை(existential meaning) என்று கூறி அதனையும் அடையும் ஓர் வழியையும் விளக்கி அருளுகின்றார் எவ்வித சமயத்தையும் சார்ந்திராது சமயாதீதம் காட்டிய நம் வள்ளுவப் பெருந்தகை.
2
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கற்றதனால் ஆய பயன் என்கொல் : தக்க உடம்பொடும் கருவிகளோடும் பிறந்து பலவேறு வகையில் கற்று அகத்தே செறிந்திருக்கும் ஞான அந்தகாரத்தைக் கடிவதால் ஆக கூடிய பயன் தான் என்ன எனின்; வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்: யாண்டும் ஞான அந்தகாரம் யாதிமின்றிய வாலறிவோடு சுடரும் இறைவனது அருளை எண்ணி நன்றி பெருக்கோடு அவன் நற்றாள் தொழுதலே யாம் பிறவல்ல என்றவாறு. பிறந்து கற்று ஞான தேறுவதெல்லாம் இறைவனைத் தொழுவதற்கே இல்லையேல் கற்பதால் எவ்வித பயனும் இல்லை என்கின்றார் நம் வள்ளுவர்.
மேலே முதற்குறளில் அவன் அவள் அது என்றும் அவை என்று பலவாறு வகுக்கப்பட்டும் பகுக்கப்ப்டும் இருக்கும் உலகு ஓர் பொருண்மையை உணர்த்தி நிற்க அதுவே ஆதிபகவனாய் இறைவன் இருப்பதையும் உணர்த்தி நிற்கின்றது என்றார். இந்தப் பொருண்மையாவது எல்லா ஆன்மாக்களையும் வீடுபேறு அடைந்து உய்ய ஊக்குவிப்பது என்றும் விளக்கப்பட்டுள்ளது. இது இந்த சிவத்தினை தோன்றுதற்கு மூலமாக இருக்கும் உகத்திணையில் அதிலும் குறிப்பாக மெய்யுனர்தல் அதிகாரத்தில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
356
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி
இதனால் எல்லா ஆன்மாக்கள் அகத்தேயும் முத்தி அடையவேண்டும் என்ற உணர்வு இருக்க அதனல் முத்திமுன்னறிவும் உண்டாம். இந்த முத்தி முன்னறிவாவது முத்தி அடையவேண்டும் என்ற நோக்கு உண்டெனப்பட்டாலும் அது தெளிவற்ற மிகத் தூரத்தில் ஓர் சாத்தியமாக இருக்கின்றது என்று முறையிலேயே அறிந்திருத்தலாம். ஆயினும் இதுவே கற்று கற்று அகத்தே செறிந்திருக்கும் ஞான அந்தகராத்தைப் போக்க வேண்டும் எனும் வேட்கையை பிறப்பித்தவாறு இருக்கும் ஒன்றாம். வீடுபேறு என்றால் என்ன என்று தெற்றெனப் புலனாகாத நிலையில் வரும் மூல ஐயமே கற்றலிற்கு மூல ஊந்துதல் ஆகும்.
இனி இந்த முத்திமுன்னறிவு எல்லா ஆன்மாக்களுக்கும் பொது என்பதின் இதுவே சீவசமத்துவம் நிறுத்தவும் செய்கின்றது. மாந்தர்களிடையே மேற்போக்காக பல பேதங்கள் இருப்பினும் மூலத்தை அனைவரும் முத்தி நோக்கியே பயணம் செய்கின்றனர் என்பதின் அனைவரும் ஒன்றேயாம்
இதனால் வள்ளுவப் பெருந்தகை பிராமணீயத்தின் வர்ணதர்மத்தை போற்றவில்லை என்றும் தெரிகின்றது. அங்கு சீவசமத்துவத்திற்கு இடமில்லை.
இனி வாலறிவாவது எவ்வித ஞான அந்தகாரமும் ஆகவே இருளும் இல்லாத தெள்ளிய ஞானமாகும். இந்த ஞானம் அநாதியே நிமலனாகிய இறைவனுக்ககே உரிய ஒன்றாக இருக்க இதனையே இறைவனது தற்பண்பாகக் கொண்டு குறிக்கப்படுகின்றான்.
நற்றாள் என்பது இறைவனை இருதாளகள் உடைய ஓர் தெய்வம் என்றவாறு உருவகப்படுத்தி அதன்வழி பெயரிட்டு அழைத்தல் ஆகும். இறைவன் தன்னை இவ்வாறு காட்டியருளியதாகவும் இருக்கலாம். உலகை எல்லாம் சிவத் தத்துவங்களாகிய நாத விந்து எனும் இரு சிவ தத்துவங்களைக் கொண்டு ஆணென பெணென உயிர்களை தோற்றுவித்தும் மேலும் அகத்தே இடக்லை பிங்கலை சுழிமுனை நாட்டங்களோடு வீடுபேறு நாடும் மேரு நாடியையும் பதிவு செய்து பல திருவிளையாட்லகளை இயற்றி அவற்றை பொருட்கல்வி தற்கல்வி இறைக்கல்வி என்றவாறு கற்க வைக்கும் இறைவனது அருளாட்சியாக இருக்கலாம்.
எல்லா ஆன்மாக்கள் அகத்தேயும் முத்தி முன்னறிவு உண்டு. அதன் ஊந்துதல்கட்கு இடம் தந்து மயங்கி விழாது எல்லா வகையிலும் கற்றுக் கற்று மேம்பட்டு அகத்தே செறிந்திருக்கும் அஞ்ஞானம் போக்கி ஞான அந்தகாரம் போக்கி சுத்தமாகி தெள்ளிய ஞானம் பெற்று சுடர்தலும் அதற்கு காரணமாக இருக்கின்ற நாதம் விந்து எனும் சிவதத்துவங்களை அசைக்கும் இறைவனது திருத்தாள்களை தொழுது நன்றி பாராட்டுதலுமே கற்று கற்று மேம்படுதலின் நற்பயனாகும் என்கின்றார் கற்றலையே பெருங் சாதனமாகச் சாதித்துச் சென்றுள்ள நம் வள்ளுவர்.
தொடரும்
உலகன்
If this poem is applicable to other religious people, thaal and thozhu could be taken as literature and study respectively, still keeping other meanings! Hote present forms thaaL as paper and thuzhaavu to find which are close. in a way, valluvar has nrought out modern research methodologies of studying others view, unbiased inquest, looking for truth etc in those days itself.
__._,_.___
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 6
இறைவன் இருக்கின்றான், கற்று அகத்தேச் செறிந்திருக்கும் ஞான அந்தகாரம் போக்கி ஞானம் தேற்றி அவனை அடையவேண்டும் அதுவே வாழ்க்கையின் பொருள் என்று மிக அழகாக சார்புச் சமயம் யாதும் சாராது கற்றலையே ஓர் பெருஞ் சாதனமாகக் கொண்டு திகழும் ஓர் சமயாதீத வாழ்க்கையை விளக்கியருளிய வள்ளுவப் பெருந்தகை இனி, உடலோடு கூடிய இந்த உலகியல் வாழ்க்கையை புத்தர் சமணர் போன்றோர் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று கூறினும் இவர் அவ்வாறு கூறாது நலமே நெடுங்காலம் வாழவேண்டும் என்றுங் கூறி அதற்து ஓர் உத்தியையும் விளக்கி அருளுகின்றார், ஓர் நல்ல ஞான சித்தரைப் போன்று சிந்திக்கவும் செய்யும் நம் வள்ளுவர்
இங்கு வரும் ‘மலர்’ ஆதார சக்கரங்களில் வரும் நான்கிதழ் ஆறிதழ் தாமரைகள் போன்று கற்றளிகள் ஆகும். கற்றளியாவது உயிர்கள் வாழ்வதற்கு அமையும் இருந்நிலமாகும்( existential abode)
3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்: மலர்களாகிய உயிர்க்ள் வாழ்வதற்கு உதவும் கற்றளிகளை உருவாக்கி பல வடிவங்கள் எடுத்து உயர்ந்து உயர்ந்து செல்லுமா ஊக்கியவாறு மேலே ஏகுவானாகிய இறைவனது சிறப்புமிக்க திருவடிகளைச் சேரும் ஆன்மாகள், நிலமிசை நீடு வாழ்வார்: உடம்போடு கூடிய உலகியல் வாழ்க்கையை நோய்நொடியின்றி நீண்ட நாட்கள் வாழ்ந்து மகிழ்வர் என்பதாம்
கற்றளிகள் என்பன குறிஞ்சித் திணை முல்லைத் திணை போன்ற உயிர்கள் வாழ்தற்கு வேண்டிய முதற் பொருளும் கருப்பொருளுமாகிய ஓர் தொகுதியாகும். இதுவே ஆதார சக்கரங்களாக அவையும் நான்கிதழ் ஆறிதழ் பன்னிரண்டிதழ் தாமரை உடையவனவாக வளர்ந்து முடிவில் ஆயிரவிதழ் தாமரைத் தலமாக முடிதலின், வாழ்தற்கு இருந்நிலனாக அமையும் கற்றளிகள் மலர் எனப்பட்டன.
அன்பால் நினைவாரது உள்ளக் கமலமே மலர் என்பார் பரிமேலேழகர். அது பொருந்தாது. நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் இறைவன் எல்லா உயிர்கட்கும் ஏன்ற இருந்நிலங்களை அமைத்துத் தருவான் என்பதின். அன்புடையாருக்கு மாத்திரம் அல்ல என்பது. இல்லையேல் அடுத்தக் குறளில் வரும் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதோடு முரண்படும்
இனி ‘ஏகுதல்’ என்பது கற்றளிகள் பலவாக உயர்ந்து உயர்ந்து ஆதார சக்கரங்கள் போல உயர்ந்து செல்லும் பண்பிற்கு ஏற்ப இறைவன பல்வேறு வடிவங்கள் எடுத்து அவற்றை மேவி நின்று அருள்பாலித்துச் செல்வதால் ‘ஏகினான்’ என்கின்றார் ஆசிரியர்.
‘மாணடி’ யாவது சிறப்புமிக்க திருவடிகள் ஆகும். இங்கு பலவகைப் பட்ட கற்றளிகளை உருவாக்குதலும் அவற்றை வெவ்வேறு வடிவங்களில் மேவி நின்று அரூள்பாலிப்பதெல்லாம் திருநடம் போன்று இருப்பதின் ‘திருவடி’ என்று ஓதப்படுகின்றது. இறைவனது திருவுருவம் காண முடியா நிலையில் அவனது பரக்கிருத்தியங்களே செயல்பாடுகளே காண வருதளின் திருவடிகளே சிறப்பிக்கப்படுகின்றன.
இனி இவ்வாறான கற்றளிகளில் வாழ்வது விடுத்து கழன்று விடுதலையாகி இறைவனது திருவடிகளை அடைவோர். உடல் தூய்மையாக நோய்நொடியின்றி நீடு வாழ்வர் என்பதாம். இருந்நிலன்களின் கற்றளிகளில் ஓர் உடம்போடு வாழும் வரை அஞ்ஞான இருளையும் பல நோய்நொடிகளையும் தரும் மலத்தின் தாக்கம் உண்டாம். அதனின்று விடுபட்டு சுத்தமாகி இறைவனது திருவடிகளையே அடைய நோய்நொடிகள் யாதும் இல்லாது போக நீண்ட ஆயுளும் அமையும் என்பதாம்
இந்த சித்தரீயக் கருத்துக்கள் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து( Paradise Hymn) தமிழர்களிடையே இருப்பதாகும். அது இறவாது வள்ளுவரின் வாக்காகவும் இங்கு வெளிப்படுகின்றது..
தொடரும்
உலகன்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 7
எல்லா உயிர்கட்கும் அவை இறைவனை அறிகின்றனவோ அறியாதிருக்கின்றனவோ விரும்புகின்றனவோ வெறுக்கின்றனவோ இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாது அருளே வடிவாக இருந்து ஒவ்வொரு உய்ருக்கும் ஏன்ற கற்றளிகளைப் படைத்து அவை வாழ்ந்து கற்று உய்ய வழிகாட்டும் இறைவனைப் பற்றி தொடர்புடைய இன்னொரு கூற்றையும் விளக்கப்புகுகின்றார் நம் பெருந்தகை அடுத்து வரும் குறளில். இறைவன் அற்ப மலங்களால் பந்திப்பட்டு உயர்வு தாழ்வு கற்பித்தும் விருப்பு வெறுப்புத் தேற்றும் அற்ப மானிடனைப் போன்ற ஓர் சித்துப் பொருள் அல்ல அருளே வடிவானவன் என்று விளக்கப் புகுகின்றார் நம் ஆசிரியர்
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு: விரும்பி அணைப்பதும் வெறுத்து ஒதுக்குவதுமாகிய வேண்டுதல் வேண்டாமை இல்லாது அருளே வடிவாக நிற்கும் இறைவனது திருவடி சேர்ந்தார்க்கு, யாண்டும் இடும்பை இல: பிறரால் வெறுத்து ஒதுக்கபடுவது அடித்து துன்புறுத்தப் படுவது ஏளனப் படுத்தப்படுவது கொலைவெறி தாக்குதல்கட்கு ஆளாகுவதுமாகிய இடும்பைகள் யாண்டும் இல்லையாம்
இறைவன் நிமலன், அருளே வடிவானவன் யாண்டும் எல்லா உயிர்கட்கு அன்பே காட்டுகின்றவன் என்பதால் சில உயிர்களை விரும்பி அணைப்பதும் வேறு உயிர்களை வெறுத்து ஒதுக்குவதும் இல்லாதவன் ஆகும். மலத்தால் பந்திக்க்ப்பட்ட மானிடர்களே மக்கள்டையே உயர்வு தாழ்வு கற்பித்து வர்ண பேதனக்கங்களையும் சாதி பேதங்களையும் உருவாக்கி விருப்பதும் வெறுப்பதுமாக குமுகாய உறவுகளை உருவாக்குவர். மேலும் இன்னும் அதிகமாக மலத்தால் பந்திக்க்பட்டு அழுக்கேறிய உள்ளத்தினராக திகழக்கூடியவர்கள் தாம் மக்களில் சிலரை தீண்டத் தகாதவர் என்று கூறி அவர்களை வெறுத்து ஒதுக்கி அடிமைப் படுத்தியும் மகிழ்வர்.
இத்தகைய செயல்கள் அனைத்தும் இடும்பைகள் பலவற்றைத் தோற்றுவிக்கும் என்கின்றார் மாந்தர் உள்ளத்தியும் இறைவனையும் நங்கே அறிந்துள்ள நம் வள்ளுவர்.
வெறுப்பு உமிழும் சாதீய வர்ணீய மக்கட்கு இருவகையில் இடும்பைகள் வரும்
ஒன்று இவ்வாறான கொடுமைகள் காரணமாக, புண்ணியவினைகட்கு மாறாகிய பாவவினைகள் காரணமாக அகத்தே ஆணவ மலம் எனும் அழுக்கு கூடிவர, பொல்லாத மனநோய் உடல்நோய் போன்றவை வந்து தாக்க அதனால் பல துன்பங்கள் துயரங்கள் வந்து சேர்வதாகும். இவற்றை தவிர்க்கவும் இல்லாது போக்கவும் இறையருளை ஈட்டுவது தவிர வேறு வழிகள் இல்லை,
இன்னொரு வகையான இடும்பைகள் மக்கள் எதிர்ப்பு என்ற வகையில் வருவதாகும். யார் தாழ்ந்தவர்கள் என்று வெறுக்கபடுகின்றார்களோ. தீண்டத் தகாதவர்கள் என்று தாழ்த்தப்படுகின்றார்களோ அவர்கள் தம்மை தாழ்த்துவோரை தள்ளிவைப்போரைக் கண்டு வெகுண்டு எழுந்து அவர்கள் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவார்கள், கொலைவெறி தாக்குதல்களையும் நடத்டுவார்கள்
உலக வரலாற்றில் பெரும்பெரும் புரட்சிகள் இவ்வாறே வெடித்து பலர் கொடூரமாக கொல்லபப்டுவதற்குக் காரணமாக இப்படிப்பட்ட வெறுப்புகளா காரண்மாக இருந்திருக்கின்றது
இனி இப்படி விருப்பதும் வெறுப்பதும் இல்லாது அருளே வடிவாக அனபேத் தானாக நின்று மக்களோடு மக்களாக நலமே வாழ்ந்து அகத்தூய்மையின் காரணமாக உயர்ந்து இறைவனை நெருங்கி முடிவில் அவன் திருவடி சேர்வாருக்கு இத்தகைய இடும்பைகள் இல்லையாம். அன்பு அன்பையே விளைவிக்கும். அது இடும்பைகள் எதனையும் கொண்டுவராது நன்மைகளையே ஈட்டித் தரும் என்பது
தொடரும்
உலகன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
The understanding of this Gods Particle that emanated from Super symmetry by breaking symmetry by the sharp knowledge like edge of an knife is the ultimate learning and one must thank the super symmetry that existed may be called 'the Siva' or the "Kadavul with eight properties"
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
The knowledge is considered as a flower that has blossomed. And those who got true wisdom can guide those who follow towards longer living.
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 8
மேலே வேண்டுதல் வேண்டாமை இலான் என்று கூறி இறைவனை அருளேத் தானாக அன்பேத் தானாக இருக்கும் ஓர் சித்துப்பொருளாக உணர்த்தியருளிய வள்ளுவப் பெருந்தகை இனி அவன் தூயோனாக ஞானோமயனாக இருப்பதையும் உணர்த்தி அவனை அண்டுவார் அகத்தே மலமாசுக்கள் யாதும் சேரா என்றும் உணர்த்தி யருளுகின்றார் அடுத்து வரும் திருக்குறளில். இக்குறள் தமிழர்களின் மெய்ஞான விசாரணையை கடைசங்கத்திற்கும் அதற்கு முன்பு சுமேருத் தமிழ் விளங்கிய முதற் சங்க காலத்திற்கே கொண்டு செல்கின்றது என்பதோடு பிற்கால சைவ சித்tதாந்த மறுமலர்ச்சிக்கும் வித்திட்டுள்ளதாகத் தெரிகின்றது
5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு: இறைவனை உண்மையாக உணர்ந்து உளநெகிழ்ச்சியின் மெய்யான அன்பின் அவனை போற்றிப் புகழ்ந்து தன் நன்றிப் பெருக்கினைக் காட்டி அவனை அணுகி நிற்போர் அகத்தே; இருள்சேர் இருவினையும் சேரா; அஞ்ஞான அந்தகாரமாகிய இருளைச் சேர்க்கும் ஆணவ மலமும், மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகிய இருவினை என்னும் கன்மத் தளையும் ஆகவே மாயாமலமும் ஆன்மாவைச் சேராது என்பதொடு சேர்ந்திருந்தால் விட்டு விலகவும் செய்யும் என்பதாம்
இங்கு இருள் என்பது பார்க்கமுடியாமையின் விழி வேண்டிய அளவிற்கு திறவாமையின் வரும் ஞான அந்தகாரமாகும். ஞான இருளின் பொறிலியப் பார்வைக்கு மேல் செல்லாத உலகாயதரின் ஞான அந்தகாரம் போல் ‘இருள்’ என்பது. இங்கு இருள் என்பது ஆகுபெயராய் அதற்கு மூல காரணமாக இருக்கும் ஆணவ மலத்தை உணர்த்தி நிற்கின்றது.
இருவினை என்பது புண்ணிய பாவச் சிந்தனையின் மூலமாகிய கன்மத்தளை யாகும். இதுவே மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணமாக இருக்கும் கட்டும் ஆகும். இனி கன்மத் தளையால் மீண்டும் பிறப்பு உண்டென தநு கரண புவன போகம் போன்றவற்றிற்கு ஏதுவாகிய மூலமாயையும் வரவழைக்கப்ப்ட்டது
திருவள்ளுவர் காலத்திலேயே ‘பற்று’ என்பது ‘பாசத் தளைகள்’ எனப்பட்டு பிற்காலத்தில் சைவ சித்தாந்த்தில் ஓர் முக்கிய இடத்தை இது பெற்றுள்ளது. இங்கு ஆணவ மலமும் கன்மத் தளையும் தெற்றென குறிக்கப்பட, மாயாமலம் குறிப்பாயே உணர்த்தப்படுகின்றது
திரிகடுகம் எனும் கீழ்கணக்கு நூலில் இப்பாடல் வருகின்றது:
22
பற்று எனும் பாசத்தளையும் பல வழியும்
பற்று அறாது ஓடும் அவாத் தேரும் தெற்றெனப்
பொய்த்துரை எனும் புகை இருளும் --- இம்மூன்றும்
வித்து; அற வீடும் பிறப்பு
என்று வருகின்றது.
ஆன்மாக்கள் இத்தகைய மலமாசுக்களால் மும்மலங்களால் பந்திக்கப்பட்டிருக்க அவற்றினின்று விடுபட்டு சுத்தமாகி மீண்டும் பிறவாமை மகிழ, உண்மையான அன்பின் இறைவனது திருக்குணங்களை போற்றி துதித்துப்பாடவேண்டும் என்பதாம். இவ்வாறு செய்தால் தூரமாக இருப்பதுபோய் அணுக்கமாகிட பிறகு சாரூப்பியம் சாயுச்சியம் போன்ற நெருக்கங்கள் உண்டாக அகத்தேச் செறிந்திருக்கும் மலமாசுக்கள் தாமே விட்டு நீங்கு என்பதாம்
வரலாற்றுத் தொடர்புகள் : கடைச் சங்கமும் முதற் சங்கமும்
திருகுறள் கடைச் சங்கத் தமிழின் பிழிவு மாத்திரம் அல்ல, முதற் சங்கக் கூறுகள் சிலவற்றையும் தன் அகத்தே கொண்டிருக்கும் ஒன்றாகும். இங்கு சில சான்றுகளையேத் தருகின்றோம். விரிவஞ்சி சுருக்கமாகவே இவை இங்கு கருதப்படுகின்றன.
பரிபாடல் எனும் கடைச் சங்க நூலில் இவ்வாறெல்லாம் காணப்படுகின்றது
பாரிபாடல் 5 செவ்வேள்
நின்னிழல் அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆகலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமௌம் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே
என்று வருகின்றது. இவ்வாறு இன்னும் திருமாலைப் பற்றியும் ஆழமான மெய்ஞான கருத்துக்கள் நிறைந்திருக்கும் பத்திப் பாடல்களும் உண்டு.
இனி இது சுமேருத் தமிழ் எனும் முதற்சங்கத் தமிழிலும் காணகிடக்கின்றது. ஏண் உடு அண்ணா எனும் அம்மையார் ஈனன்னை சீர்பியம் எனும் அற்புதமான நூலில் இவ்வாறு பாடுகின்றார்( கி.மு 2300)
முதல் சில வரிகளே போற்றிகள் தான்:
இவ்வாறு இன்னும் எத்தனையோ சான்றுகளைத் தரமுடியும். ஆயினும் இங்கு திருவள்ளுவர் மிகப் பழமையான ஓர் மரபினைச் சார்ந்தே இந்த குறளை எழுதியுள்ளார் என்பது தெளிவு.
இனி இக்குறள் பிறகால வரலாற்றிலும் சிறந்தவொரு இடத்தைப் பெற்றுள்ளது. சைவ சித்தாந்த சிவஞானபோதத்திலும் இருபா இருபதிலும் இதனின் தாக்கத்தைக் காணலாம். அடுத்து இதனையும் சிறிது கான்போம்
தொடரும்
உலகன்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 9
சைவ சமயம் மிகத் தொன்மையானது. சிவலிங்க வழிபாடு சிவசக்தித் தாண்டவம் அக்நி வழிபாடு கொற்றவை வழிபாடு என்பதை எல்லாம் சுமேரு இலக்கியத்திலும் அரப்பா பண்பாட்டிலும் மற்றும் உலகின் பல பண்டைய நாகரீகங்களிலும் நாம் காண வரும் ஒன்று. ஆயினும் சைவ சித்தாந்தம் எனும் ஓர் மெய்யறிவுக் கோட்பாடு தொன்மையான வேர்களைக் கொண்டிருந்தாலும் தொல்காப்பிய காலத்திலிருந்து பல தெளிவுகளை அகபடுத்தி வளர்ந்து வந்துள்ள ஓர் தரிசனமாகும். ‘அழிவிலுண்மை’ போன்ற நூற்கள் வழியாக அது இன்றும் வளர்ந்துகொண்டு வரும் ஓர் மெய்ஞானத் துறையாகும்.
இதில் திருக்குறளிற்கு மிகச் சிறப்பான ஓர் இடம் உண்டு. திருக்குறளின் சமயாதீதத்தை இன்று வரை சைவமே மிகத் தெளிவாக போற்றி வருகின்றது என்பதொடு உலகினை வைத்தே இறைவனது உண்மையை நிறுத்தும் நூலிய அறிவியல் போக்கினை சைவ சித்தாந்தமே தொடர்ந்து நிலை நிறுத்தியும் வருகின்றது. மேலே திருவள்ளுவரின் முதற் குறளே சிவஞானபோதத்தின் முதற் சூத்திரத்திற்கு மூலமாக இருப்பதைக் கண்டோம்
இனி ‘இருள்சேர்’ எனத்தொடங்கும் இக்குறளும் சைவசித்தாந்தத் சிந்தனை வளர்ச்சிக்கு மூலமாக இருந்த வரலாற்று உண்மையையும் காண்போம்.
முதலில் நாம் காணவிருப்பது திருவள்ளுவர் குறிப்பிடும் ‘இருவினை’ என்னும் கன்மக் கோட்பாடு மிக விரிவாக ‘இருபா இருபது’ எனும் அருணந்தி சிவாச்சாரியாரின் அற்புதமான ஞானப்பனுவலில் விசாரிக்கப்படுவதைக் காண்கின்றோம். இந்த ஆய்வு அரிய ஒன்றாகும் என்பதொடு மிக ஆழ்மான ஒன்றும் ஆகும். மெய்கண்டாரையே வினாவும் ஓர் சிறப்பும் உடையது.
காண்க
இருவினை என்பது என்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை யாயில்
கணத்திடை அழியும் தினைத் துணையாக
iruvinai enpathu ennaikol aruLiya
manamE kaayam vaakku enum mUnRin
ithamE akitham enum ivai yaayil
kaNaththitai aziyum thinaith thuNaiyaakaa
Now I have some questions pertaining to iruvinai or mUlakarma. If
it is said they are none other than the pleasant and unpleasant experiences
that are produced by effecting actions bodily, mentally or verbally, then it
would mean that karma is something ephemeral, that which gets destroyed
immediately after the onset and hence not something that accompanies one firmly
as a help in self development throughout the whole of existence.
யான் அறிந்த வரையில் ‘இருவினை’ எனுங் கன்மக் கோட்பாட்டை அருணந்தியார் தமது இருபா இருபதில் விசாரிக்கும் அளவிற்கு வேறு யாரும் விசாரிக்கவில்லை என்றே நினைக்கின்றேன், வேதாந்த மரபிலும் யான் இதனைக் கண்டதில்லை
இது திருக்குறள் விரிக்கும் அறத்துறை விளக்கத்தோடும் தொடர்புடையதாகத் தெரிகின்றது.
இனி மெய்கண்டாரின் அற்புதமான் சிவஞான போதத்திலும் இந்தக் குறளின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காண்கின்றோம். பயனியல் பத்தாம் சூத்திரம் இவ்வாறு வருகின்றது:
பத்தாஞ் சூத்திரம்: திருவடிப்பேறு
அவனே தானே யாகிய வந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே
கருத்துரை: என் நுதலிற்றோவெனின், பாசக்ஷயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று
இதன் பொழிப்பு:
"யான்" "எனது" எனும் தற்போதம் முன்நிற்க (foregrounded) ,சிவபோதம் பின்நிற்க(backgrounded) , பல்வேறு வேட்கை வாய்ப்பட்ட ஆன்மா, அது இதுவென சுட்டிசுட்டி அந்நியப் பார்வை வழியாகவே அனைத்தையும் கண்டு, அதனால் நிலைபேறில்லாத அசத்தே கண்டு நிறைவற்ற குறையாகவே உழலும் நிலை போக்கி, இறையருளைப் பெருக்கி பஞ்சவதிகாரங்களை திறம்பட ஆய்ந்து இலாடதானத்தே ஐந்தவத்தை எய்தி சிவபோதமே முன்நிற்க தான் ஒடுங்கிட அவனே தானே யாகியப் பெருநிலை மெய்யாகும். காட்டப்படும் அனைத்தும் தற்போதமற்ற சிவபோதமேயாக, பொய்யில்லையாம். அந்நிலையில் அறியப்படும் அனைத்தும் காலவுணர்வு ஊர்ந்து வராத சத்தறிவாகிய சிவஞானமாம். இவ்வாறாகிய நந்நிலை தற்போதமொடுங்கிடவே மெய்யாகும் என்பதால், இறைவனோடு முற்றிலும் ஒன்றித்து பிரிப்பின்றி விட்டகலாது, எவ்வாறு இறைவன் ஊக்குகின்றானோ, ஆட்டுகின்றானோ அவ்வாறே சற்றும் பிழையாது ஆடி இறைபணியே நிற்க, தற்போதம் எழாவகை ஒடுங்குதலும் அதன்வழி அணுத்துவத்தைத் தரும் ஆணவமலத்தையும், திரிபறிவை தரும் மாயையையும் சம்சாரத் தளையில் தொடர்ந்து வீழ்த்தும் கன்மத் தளையும் ஒட்டாது விழும் என்றவாறு.
பாசக்ஷயம் என்பது மூல மலமாகிய ஆணவமலத்தையும், அதனால் எழும் மாயையோடிசைந்த வாழ்க்கையைப் பற்றச் செய்யும் மாயாமலத்தையும், புண்ணிய பாவ இருவினைச் சிந்தையில் வீழ்ந்து அல்லற்படும் வாழ்க்கையைதரும் கன்மத்தளையையும் துமித்து, ஆன்மாக்கள் சகலர் பிரளயாகலர் என இருப்பதொழித்து விஞ்ஞானகலர்களாக உயர்வதற்குக் காரணமாக இருப்பதாம். இதனால் கற்றளிபெயர்ச்சிக்கு அதனால் வரும் பக்குவ முதிர்ச்சிக்கு முலமாக இருப்பது தத்துவக் கழற்சிகளோடு இத்தகைய மாலங்களின், தளைகளின் வல்லியப் பிடியிலிருந்து விடுபடுவதுமாகும். பாசக்ஷயமே, தளையறுப்பே மெய்யான விடுதிபேறு என்பதாக இங்கு.
இங்கு ‘மலம்’ என்பது திருவள்ளுவரின் இருள் என்பதுதான், அந்த இருளைத் தரும் ஆணவ மலந்தான். ‘வல்வினை’ என்பதும் ‘இருவினை’ என்பதும் பொதுவாக ‘வினை’ என்பதும் கன்மத் தளைதான்
இந்தக் குறளைப்போல இறைவுனுட ஏகனாகி துதித்துப்பாடி நெருங்கி அவனோடு ஒன்றித்து நிற்க ஆணவம் கன்மம் மாயை எனும் மலங்கள் சேராது என்பதொடு இருப்பதும் விட்டு விலகும் என்றே இச்சூத்திரம் விளக்குகின்றது.
ஆக இச்சூத்திரமும் இக்குறட்பாவின் தாக்கத்தால் எழுந்த ஒன்றே என்று தெரிகின்றது
தொடரும்
உலகன்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 9
சைவ சமயம் மிகத் தொன்மையானது. சிவலிங்க வழிபாடு சிவசக்தித் தாண்டவம் அக்நி வழிபாடு கொற்றவை வழிபாடு என்பதை எல்லாம் சுமேரு இலக்கியத்திலும் அரப்பா பண்பாட்டிலும் மற்றும் உலகின் பல பண்டைய நாகரீகங்களிலும் நாம் காண வரும் ஒன்று. ஆயினும் சைவ சித்தாந்தம் எனும் ஓர் மெய்யறிவுக் கோட்பாடு தொன்மையான வேர்களைக் கொண்டிருந்தாலும் தொல்காப்பிய காலத்திலிருந்து பல தெளிவுகளை அகபடுத்தி வளர்ந்து வந்துள்ள ஓர் தரிசனமாகும். ‘அழிவிலுண்மை’ போன்ற நூற்கள் வழியாக அது இன்றும் வளர்ந்துகொண்டு வரும் ஓர் மெய்ஞானத் துறையாகும்.
இதில் திருக்குறளிற்கு மிகச் சிறப்பான ஓர் இடம் உண்டு. திருக்குறளின் சமயாதீதத்தை இன்று வரை சைவமே மிகத் தெளிவாக போற்றி வருகின்றது என்பதொடு உலகினை வைத்தே இறைவனது உண்மையை நிறுத்தும் நூலிய அறிவியல் போக்கினை சைவ சித்தாந்தமே தொடர்ந்து நிலை நிறுத்தியும் வருகின்றது. மேலே திருவள்ளுவரின் முதற் குறளே சிவஞானபோதத்தின் முதற் சூத்திரத்திற்கு மூலமாக இருப்பதைக் கண்டோம்
இனி ‘இருள்சேர்’ எனத்தொடங்கும் இக்குறளும் சைவசித்தாந்தத் சிந்தனை வளர்ச்சிக்கு மூலமாக இருந்த வரலாற்று உண்மையையும் காண்போம்.
முதலில் நாம் காணவிருப்பது திருவள்ளுவர் குறிப்பிடும் ‘இருவினை’ என்னும் கன்மக் கோட்பாடு மிக விரிவாக ‘இருபா இருபது’ எனும் அருணந்தி சிவாச்சாரியாரின் அற்புதமான ஞானப்பனுவலில் விசாரிக்கப்படுவதைக் காண்கின்றோம். இந்த ஆய்வு அரிய ஒன்றாகும் என்பதொடு மிக ஆழ்மான ஒன்றும் ஆகும். மெய்கண்டாரையே வினாவும் ஓர் சிறப்பும் உடையது.
காண்க
இருவினை என்பது என்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை யாயில்
கணத்திடை அழியும் தினைத் துணையாக
iruvinai enpathu ennaikol aruLiya
manamE kaayam vaakku enum mUnRin
ithamE akitham enum ivai yaayil
kaNaththitai aziyum thinaith thuNaiyaakaa
Now I have some questions pertaining to iruvinai or mUlakarma. If it is said they are none other than the pleasant and unpleasant experiences that are produced by effecting actions bodily, mentally or verbally, then it would mean that karma is something ephemeral, that which gets destroyed immediately after the onset and hence not something that accompanies one firmly as a help in self development throughout the whole of existence.
யான் அறிந்த வரையில் ‘இருவினை’ எனுங் கன்மக் கோட்பாட்டை அருணந்தியார் தமது இருபா இருபதில் விசாரிக்கும் அளவிற்கு வேறு யாரும் விசாரிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்,
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
Those who got true knowledge would be impartial and one who surrenders to such a guru is certain to be free from all miseries
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
One who has surrendered to the right guru who acclaimed true knowledge will be out of ignorance and associated miseries
யான் அறிந்த வரையில் ‘இருவினை’ எனுங் கன்மக் கோட்பாட்டை அருணந்தியார் தமது இருபா இருபதில் விசாரிக்கும் அளவிற்கு வேறு யாரும் விசாரிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்,
இருவினை கோட்பாடு என்பது சமணத்தின் உயிர்நாடி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 10
சைவத்தின் அநாதிப் பொருளியல்
ஏற்கனவே கூறியுள்ளதுபோல, சைவ சமயம் மிகத் தொன்மையானது சுமேருத் தமிழின் முதற்சங்க காலத்திலேயே அடையாளம் காணும் வகை இருந்தது என்ற போதிலும் சைவ சித்தாந்தம் எனும் மெய்யறிவு கோட்பாடு திருக்குறளிலிருந்தே வளர்ந்துள்ளதாகத் தெரிகின்றது. அதனை இத்தொடரில் ஒருவாறு விளக்கி வருகின்றேன்.
ஆய்வில் உள்ள இக்குறட்பா இவ்வகையில் தனிச் சிறப்புடையதாகத் தெரிகின்றது.. இங்குதான் சித்தாந்தத்தின் தனிச் சிறப்பாக விளங்கும் மும்மல கோட்பாடு நலமே வெளிப்படுகின்றது.
ஆயினும் சித்தாந்தத்தின் தனிச் சிறப்பாக அடையாளமாக விளங்குவது பதியினைப் போல் பசுபாசம் அநாதி எனும் அதன் அநாதிப்பொருளியலே யாகும். இது முதன் முதலில் திருமூலரின் உபதேசம் 30 எனும் நூலில் வெளிப்பட்டாலும் அதன் தோற்றம் திருக்குறளே என்று தெரிய வர அதனை சிறிது இங்கு விளக்க விருக்கின்றேன். திருக்குறள் சிவத்திணையாகிய முதல் அதிகாரத்தில் உள்ள 10 குறள்களே இந்த அநாதிப் பொருளியலையும் தன் அகத்தே கொண்டிருப்பதாகத் தெரிகின்றது
இறைவன் அநாதி
முதற்குறள் இறைவனை ஆதிபகவன் என்கின்றது. இதனை மிக விரிவாக ஆய்ந்து எவ்வாறு உலகில் காணவரும் பொருட்களின் வகுப்பு தொகுப்பு போன்றவை ஓர் பொருண்மையைக் காட்ட, ஆன்மாக்களை வீடுபேறு நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் பொருண்மையைக் காட்ட, நூலியப் பார்வையின் வழி இறைவன் ஆதிபகவனாக அனைத்திற்கும் நிமித்த காரண முதலாக இருக்கின்றான் என்று அனைவரும் உலகினை வைத்தே இறைவனது உண்மையை திருவள்ளுவர் நிறுத்தியுள்ளார் என்று காட்டினோம்
இனி இந்த ஆதிபகவன் எனும் இறைவனை இன்னும் ஆழச் சிந்திக்க ஓர் அநாதி முத்தசித்துப்பொருள் என்றும் நாம் தெளியலாம்
அனைத்திற்கும் ஆதியாய் நின்று தனக்கு யாரையும் ஆதியாய் கொண்டில்லாத பொருளே அநாதிப் பொருள், யாராலும் தோற்றுவிக்கப்படாது தானே தனக்குத் தற்பரனாகிய ஓர் சித்துப் பொருள் ஆகின்றது. இப்பொருளே பதியும் ஆகி அது அநாதியும் ஆகின்றது. ‘பதி’ என்றால் ‘தலைவன்’ என்று படும். இது ஓர் சுமேருத் தமிழ் சொல்லாகும். மேலும் எல்லா உயிர்கட்கும் வீடுபேறு அருளவல்லது என்பதால் அநாதி முத்த சித்துரு ஆகின்றது
சைவ சித்தாந்தத்தில் இறைவனை இவ்வாறுதான் கூறுவர்
ஆன்மா அநாதி
இனி திருவள்ளுவர் நாம் சுட்டியுள்ளதுபோல, பல இடங்களில் ‘மீண்டும் மீண்டும் பிறத்தல்’ ‘மாணாப் பிறப்பு உறுதல்’ என்றவாறு யாதோ ஒன்று இறைவனுக்கு வேறாக மாறாக மீண்டும் மீண்டும் பிறந்து அல்லற்பட அது பிறப்பறுத்து வீடுபேறு அடைய உதவவே இறைவன் இந்த உலகையே தோற்றுவித்து அதிட்டித்து நிற்கின்றான் என்று கூறுகின்றார். இவ்வாறு பிறந்துழல்வது இறைவனாக இருக்க முடியாது போக அவனுக்கு வேறதாகிய ஆன்மாவே யாகும் என்று தெளிவாகின்றது.
இனி இவ்வான்மா பரப்பிரம்மமாகிய இறைவனின் உபாதிகள் தொந்தனையால் ஓர் மயக்கத்தால் தனித்த ஓர் பொருளாகத் தோன்றுகின்றது, உன்மையில் அது பிரம்மமே என்பர் வேதாந்திகள். ஆயினும் இந்த மாணாப்பிறப்பெடுத்து பல இடும்பைகளையும் அதிலும் குறிப்பாக மரணம் உற்று அவதிப்படலும் பிரமத்திற்கு தேவையில்லை என்பதால், ஆன்மா தனியொரு பொருள் என்பதொடு அது தோற்றுவிக்கப்பட்ட ஒன்றும் அல்ல. இறைவன் மிகக் கொடூரமான ஓர் பொருளாக இருந்தால்தான் உயிர்களை தோற்றுவித்து சிறிது வாழவைத்து பிறகு கொன்று அழிப்பான். இறைவன் அருளே வடிவினனாக இருக்க, ஏற்கனவே இருக்கின்ற உயிர்கட்கு வாழ்வளித்து கற்க வைத்து சுத்தமாகி வீடுபேறு அடைந்து இவ்வாறு பிறந்து இறப்பதிலிருந்து தப்பிக்க உதவுவான்
பாசங்கள் அநாதி
இனி இருளை சேர்க்கும் மலமும் மீண்டும் மீண்டும் பிறக்கத் தரும் இருவினையாகிய கன்மமும் தநுபுவனபோகம் மகிழத்தரும் அதேபொழுது உலகியல் பற்றுக்களையும் தரும் மூலமாயையும் பாசங்கள் ஆகும். வாழ்க்கையில் பற்று எனப்படுவது இவைதான். இதனாலேயே எல்லா வகை இடும்பைகளும் என்கின்றார் நம் வள்ளுவர்.
இவ்வாறு எல்லாவகை பற்றுகட்கும் அதனால் வரும் துன்பங்கள் துயரங்கள் மரணாவத்தைகள் போன்றவற்றிற்கெல்லாம் காரணமாக இருக்கும் இந்த பாசங்களையும் இறைவன் தோற்றுவித்திருக்க மாட்டான். அருளே வடிவாகிய இறைவன் உயிர்கள் இவ்வாறான பாசத்தளைகளில் மாட்ட வைத்து துன்புறுத்த மாட்டான். அவன் ஓர் அரக்கன் அல்ல,
அதனால் இந்தப் பாசங்களும் அநாதி ஆகின்றன்
பாசநீக்கம்
எல்லா இடும்பைகட்கும் இன்னல்கட்கும் துன்பங்கட்கும் துயரங்கட்கும் காரணமாகிய இந்த பாசங்களிலிருந்து நீங்கி சுத்தமாகுவதே வாழ்க்கையின் பொருளாக அமைய அது இறைவனது பொருள்சேர் புகழைப் பாடி அவனுக்கு அணுக்கமாகி நின்றால் சமலனாகிய ஆன்மா சுத்தமாகி நிமலம் ஆகும் வீடுபேறு மகிழும் என்பதே இக்குறளில் பரிந்துரைக்கப்படும் வாழ்வியலாகும்.
இவ்வாறு நாம் இக்குறளை புரிந்துகொண்டால், உடன் நம் நினைவிற்கு வருவது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்கும் கீழ்வரும் திருமூலரின்( கி.பி 600?) அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க பாடல்தான்
3.
115
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசுபாசம் அனாதி
பதியினைச் சென்றணுகாப் பசு பாசம்
பதியணுகிடில் பசுபாசம் நில்லாவே
patipacu paacam enappakar muunRil
patiyainaip pool pacupaacam anaati
patiyinaic cenRaNuKaap pacu paacam
patiyaNukidil pacupaacam nillaavee
யாராலும் தோற்றுவிக்கப்படாதனவும் யாண்டும் அழியாது நிற்பதுமாகிய அநாதிப்பொருள் என்று பகரப்படும் பதி பசு பாசம் என்னப்படும் மூன்றில், பதியினை போல் பற்பல மாற்றங்கட்கு ஆளாகும் பசுவும் பாசமும் அநாதியே ஆகும். இவற்றில் பாசத்தோடு அநாதியே பந்திக்கப்பட்டிருக்கும் பசு, பதியினைச் சென்று அணுகிட அதன்கண் பாசம் கழன்று நில்லாதுபோம். ஆயினும் இவ்வாறு அணுகாவிடில், பந்தித்திருக்கும் பாசமும் அகலாது பந்தித்துக் கொண்டே இருக்கும்
Among the metaphysical entities that constitute Fundamental Ontology and
That consists of BEING, the innumerable anmas and the enchaining fetters,
The innumerable anmas and the fetters are unoriginary just as BEING and in this
If the anma does not move unto BEING, it will continue to be engulfed by the
fetters but
If it does, then and only then, the fetters will not stand with the anmas
patipacu paacam enappakar muunRil: Among the metaphysical entities that
constitute Fundamental Ontology and that consists of BEING, the innumerable
souls and the enchaining fetters
patiyainaip pool pacupaacam anaati : the enchaining fetters and the enchained
souls are just as unoriginary as BEING
patiyinaic enRaNuKaap pacu paacam: In this if the anma does not move unto
BEING, it will remain engulfed by the fetters;
patiyaNukidil pacupaacam nillaavee: But if it does then the fetters will not
stand with it.
திருவள்ளுவர் இக்குறளில் இறைவனோடு இசைந்த வாழ்க்கைப் பொருளே, மலங்களால பந்திக்கப்பட்டிருக்கின்ற ஆன்மா, நின்மலனாகிய இறைவனை அணுகி அவனைப் போற்றிப் புகழ்ந்து அணுக்கமாகிடத்தான் சுத்தமாகிட முடியும், வீடுபேறு அடைந்து பிறப்பறுக்க முடியும் என்று விளக்குகின்றார். இதுவோர் சமயப்பொது வாகும். எல்லா சமயங்கட்கும் பொருந்தும் ஒன்றுமாகும்
இதைத்தான் திருமூலரும் கூறுகின்றார். மெய்கண்டாரும் சிவஞானபோதம் 10வது சூத்திரத்திலும் இதைத்தான் வற்புறுத்துகின்றார். சமலனாகிய ஆன்மா நிமலனாகிய இறைவனைத் தொழுது அணுகி ஏகனாகி இறைபணி நிற்க இந்த மும்மலங்கள் விட்டு விலகும் என்கின்றார்.
இதுவே சைவ சித்தாந்தம் கூறும் வாழ்க்கை விளக்கமாகும் இது மிகத் தெளிவாக திருவள்ளுவரின் தமிழ் இனத்திற்கே உலகிற்கே அருளிய மிகப் பெரிய ஞான நன்கொடையாகும்
வேதாந்தத்தில் இது இல்லை
நான் பன்முறை கூறியுள்ளதை மீண்டும் இங்கே கூற கடமைப்பட்டுள்ளேன். ஆதிசங்கரரின் மாயாவாத வேதாந்தத்தில்( இது தமிழ் நாட்டில் தொன்றியும் இருக்கலாம்) மற்றும் ஏனைய வேதாந்தங்களில் பதியினைப் போல பசு பாசம் அநாதி என்ற அநாதிபொருளியல் இல்லை. இதனால் இறைவனை நெருங்கி ஏகனாகி மும்மலங்கள் நீங்கி சுத்தமாகி பிறப்பு அறுப்பதே வாழ்க்கையின் நோக்கு என்று அவர்களால் கூற முடியாது. வேதங்கள் விதிப்பதை செய்வது என்றும் மற்றும் வீணான சோதிடக்கலை போன்றவை கூறும்படி நல்ல நாள் நல்ல முகூர்த்தம் என்றெல்லாம் பார்த்து ஒழுகினால் துன்பங்கள் வராது என்றும் ஓர் ஞான குருவை அடைந்து அவனுக்கு அடிமையாகி தொண்டு செய்தால் முத்தி என்றும் இன்னும் பலவாறு மக்களை இறைவனையே தொழுவதிலிருந்து வேறு பொல்லாத வழிகளில் கொண்டு செல்வர்.
இன்றைய தமிழ் உலகில் இந்த வேதாந்த மயக்கில்தான் மக்கள் கிடந்தவாறு இறைவனைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தொழுது அவதிப் படுகின்றனர். திராவிட இயக்கம் தோன்றி இருந்த சிறிது இறை நம்பிகையையும் போக்கிவிட்டது. உண்மையான தெய்வீக வாழ்க்கை மழுங்கிக் கிடக்க எங்கு பார்த்தாலும் ஊழலே மலிந்து கிடக்கின்றது
திருக்குறளின் மீட்சியே நல் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக அமையும் என்று நினைக்கின்றேன். சமயாதீத முறையில் இறைவனைத் தவிற வேறு யாரையும் தொழாத மனவுறுதியோடு மக்கள் வாழ்ந்தால் பண்பாடு உயரும் நாடும் உயரும்
தொடரும்
உலகன்
நின்னா கண்ணன் மற்றும் தேமொழிசமணமும் சைவமும் ஒன்றை ஒன்று தழுவியே வளர்ந்திருக்கலாம். ஆனால் திருக்குறளிற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் ஓர் நெருங்கியத் தொடர்பு இருக்கின்றது. அது சமணத்தில் இல்லை என்றே நினைக்கின்றேன். அது திருமூலரின் பதியினைப் போல பசு பாசம் அநாதி எனும் கோட்பாடுதான். அது திருவளளுவரின் நன்கொடை என்று இன்று அனுப்ப விருக்கும் கட்டுரையில் விளக்கி இருக்கின்றேன்,கண்டு படித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மகிழ்வேன்
--
வரும்வரை பௌத்த விகாரங்கள் தமிழ் மண்ணில் இருந்திருக்கின்றன. அவை ஏனோ நிர்மூல்யமாகிவிட்டன. ஈழத்தின் இரணம் இந்த ‘இந்து’ என்ற அடையாளத்தால் வந்தது. இலங்கைக்குப் பௌத்தம் தந்தது தமிழகம். ஆனால் பின்னால் வந்த வீரசைவம் நமது பௌத்த அடையாளத்தைச் சுத்தமாய் ஒழித்துவிட்டது. பலன்? இனப்படுகொலை. இந்திய-ஈழ உறவில் ஆழமான விரிசல்,
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Both Buddhism and Jainism. have many similarities and dissimilarities. As remarked be Monier Williams.
"Buddhism and Jainism were not related to each other as parent or child but rather children of common parent, born at different intervals, though at about the same period of time and marked by distinct characteristics, though possession a strong family of resemblances". W.W. Hunter writes "Jainism is as much independent from other sects, specially from Buddhism as can be expected, from any other sect.
Not withstanding certain similarities, it differ from Buddhism in its ritual and objects of workship."
Similarities :
(1) The source of both the religion is vedic religion and both and indebted to Upanishads
(2) Both Gautam Buddha and Mahavir belonged to princely families and not to priestly families.
(3) Both deny the existence of God.
(4) Both denied the authority of the Vedas and the necessity of performing sacrifices and rituals.
(5) Both have accepted the theories of Karma rebirth and Moksha.
(6) Both taught in the language of the common people i.e. Prakrit and not in Sanskrit which was the language of the priests.
(7) Both of them were opposed to animal sacrifices.
(8) Both of them admitted disciples from all the castes and from both sexes.
(9) Ahimsa is the prominent principle of both the religions.
(10) Both Buddhism and Jainism put stress on right conduct and right knowledge and not on religious ceremonial and ritual as the way to obtain salvation.
(11) Both, the religions came as a sort of reform of Hindu religion.
(12) Both the Religions were later on divided into two sects. Buddhism was divided into Mahayana and Hinayana. Jainism was divided into Svetambara and Digambara.
(13) Both had their own three gems or 'Tri Ratna'. Tri Ratna of Jainism were right philosophy right knowledge and right character. The Tri-Ratna of Buddhism were Budhha, Dhamma and Sangha.
(14) Both had three main religious texts. Tripitaka, i.e. Vinaypitak, Suttapitaka and Abidhamma pitak were the three religious texts of Buddhism, where as Anga i.e, Anga, Upanga and Mulgrajitha were those of the Jainism.
Dis-similarities :
(1) Difference regarding conception Moksha :
According to Buddhism, a man attains Moksha when he ends all the desires and can attain it while living in the world. But according, to Jainism Moksha is freedom from miseries and can be attained only after death.
(2) Means of attainment of Moksha:
According to Buddhist Sangha is proper for attainment of Moksha and they hate self-mortifications and severe penances. Jainism believes in fasts and severest penances.
(3) Ahimsa :
Though both emphasise the principle of Ahimsa, yet Jainism is more strict in this connection.
(4) Soul:
Buddhists do not believe in the existence of soul whereas Jainism believes the existence of soul in every living being.
(5) Regarding Conduct:
Buddhism emphasises the eight noble piths whereas Jainism emphasises Tri Ratna.
(6) Language of Religious texts :
Most of the Jain texts are in Sanskrit and Prakrit whereas Buddhist text are in Pali.
(7)Their connection with Hinduism : Jain religion is nearer to Hinduism whereas Buddhism followed the policy of keeping away from Hinduism.
(8) Caste system :
Jains opposed it but Buddhism opposed and attacked vehemently.
(9) Royal support and patronage :
Buddhism received the royal support and patronage of kings like Ashoka and Kanishka. But Jainism could never receive strong royal support and Patronage.
(10) Propagation :
Buddhism spread to foreign countries whereas Jainism did not travel outside the boundaries of India.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நான் கடவுளில்லை என்று சொல்லிவிட்டு சென்றாலும் மக்கள் கேட்பதில்லை.
அது நிர்பந்தமில்லை.... மக்களின் விருப்பம்.. பின் வருபவர்கள் தெய்வம் போல அவர்களையே வணங்கத் தொடக்கி விடுகிறார்கள்.
நம் நாட்டில் பிறந்த புத்தரை வெளிநாட்டினருக்கு வணங்க விருப்பம்
மேரி மாதாவை நம் மக்களுக்கு வணங்க விருப்பம்.
/// மனிதர்களை தெய்வமாக்கும் புத்தமும் சமணமும் வீழ்வது உறுதியாயிற்று என்றே நினைக்கின்றேன்/// என்று கூறியுள்ளீர்கள் ஐயா.
அதன் படி என்றால் உலகமெங்கும் மற்றும், நம் நாட்டிலும் பரவிய கிறிஸ்தவம் அடிபட்டுப் போயிருக்குமே.
worship the creator not the creation என்று அவர்களும் சொல்லிச் சென்றவர்கள்தாம்.
...
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
திரு பானுகுமார் அவர்களேமிக்க நன்றி, இருவினை ஆய்வு சமணத்திலும் விரிவாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி. பிற்கால சமணச் சிந்தையும் திருக்குறள் தாக்கம் கொண்டுளளதாக இருக்கலாம்.ஆனால் இவை தொன்மையான சமன ஆகமங்களில் உண்டா?
|
85 90 95 |
இடையே
யிப்போ தியன்றுள வளவைகள் என்றவன் றன்னைவிட்டிறைவ னீசனென நின்ற சைவ வாதிநேர் படுதலும் பரசுநின் றெய்வ மெப்படித் தென்ன இருசுட ரோடிய மானனைம் பூதமென் றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க் கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும் படைத்துவிளை யாடும் பண்பி னோனுந் துடைத்துத் துயிர்தீர் தோற்றத் தோனுந் தன்னில் வேறு தானொன் றிலோனும் அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன் | |
|
|||||
|
[
நிகண்டவாதி
]
|
|||||
| இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் - இந்திரர்கள் பலராலும் வணங்கப்படும் அருக பரமேட்டி எங்கட்கு இறைவனாவான், தந்த நூற் பொருள் - அவனுரைத்த ஆகமத்தின் பொருள்கள், தன்மாத்திகாயமும், அதன்மாத்திகாயமும்-, காலாகாயம் - காலமும் ஆகாயமும், தீதில் சீவனும் - குற்றமில்லாத சீவனும், பரமாணு - பரமாணுக்களும்: நல்வினையும் தீவினையும், அவ்வினையாற் செய்வுறு பந்தமும் - அவ்விருவினைகளையும் செய்ய வுண்டாகும் கட்டும், வீடும் - வீடு பேறுமாக, இத்திறத்த - இப்பத்து வகையினவாம் எ - று. | |||||
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நின்னா தேமொழிஏன் புத்தம் சமணம் போன்ற சமயங்கள் வீழ்ந்ததற்கு அவை வரணதர்மத்தை எதிர்த்தது ஓர் காரணம் என்றால் பிராமணீயம் பக்தி இயக்த்தோடு ஒன்றாகி அவற்றை அழித்தது என்றும் கூற வரும்
இதில் உண்மை இருப்பதாக்த் தெரியவில்லை, பத்தி இயக்கம் சைவ வைணவ வெளிப்பாடுகளில் சாதியாதீதம் வளர்த்தவைபிரபத்thi பேசும் வைணவ கிரந்தங்கள் பிரபன்னனுக்கு சாதி எல்லாம் இல்லை என்கின்றது
மேலும் நான் பல சான்றுகளோடு கூறுவது போல அவை சம்யாதீதமும் வளர்த்தவை,வீரச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகே அதாவது 16ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பிராமணியத்தின் வேதாந்தத்தின் தாக்கத்தையும் அதனால் சாதிய பிராமணீயத்தையும் காண்கின்றோம்
சமயாதீதம் சாதியாதம் போற்றிய சைவ சித்தாந்தம் வைஷ்ண்வம் எல்லாம் வளர்ப்பதில் பிராமணர்கட்கும் நல்ல பங்குண்டு.அகோரசிவாச்சாரியர் போன்றோர் தம்மை அதிவர்ணாச்சிரம தர்மி என்றே கூறிக்கொண்டனர்திருஞான சம்பந்தரை யார் மறக்க முடியும்?மெய்கண்டார் சந்தானத்தின் மூன்றாம் குரு ஓர் சாமவேதங்கற்ற ஓர் பிராமணர்,இவற்றை எல்லாம் பார்க்கும்போது மெய்யறிவு விசாரணையில் இருந்த குறைபாடுகளே அவற்றின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தெரிகின்றது.
சிவஞான சித்தியார் பரபக்கத்தில் இதனைக் காணலாம் அப்பர் திருஞான சமபந்தர் பாடல்களிலும் இதனைக் காணலாம்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
திரு பானுகுமார் அவர்களே
மிக்க நன்றி மிக முய்னறு பல சான்றுகளைத் தந்துள்ளீர்.
மணிமேகலையில் வரும் சைவ வாதி பற்றியும் வைணவத்தைப் பற்றியும் சிறப்பாக யாதும் கூறப்படவில்லை, பரிபாடளில் திருமுகாற்றுப்படையில் எவ்வளவு ஆழமாக இவை விளக்கப்ப்ட்டுள்ளன?
மேலும் சமணம் புத்தம் போன்ற சமயங்கள் தோன்றும் முன்பே சுமேருத் தமிழில் சிவ வழிபாடும் தத்துவச் சிந்தனையும் நலமே வளர்ந்திருந்தது என்று நான் ஈனன்னை சீர்பியம் என்று சுமேருத் தமிழ் நூலை ஆய்ந்து வெளியிட்டுள்ளேன்
மின்தமிழில் கிடைக்கும்நிற்க இந்த இருவினைக்கு வருவோம்தங்க்ள் கூற்ற்//குறளில் வரும் இருவினைப் பற்றியக் குறிப்பு சமணம் சார்ந்தது. குறள் எழுந்த காலத்தில் சிவ வழிபாட்டைத் தவிர,அது முழு சமயமாக பரிணமிக்கவில்லை. அவ்வாறு இருக்கும்போது இருவினைப் பற்றியக் குறிப்பு சைவம் சார்ந்தது
என்று கூறுவது சற்றும் ஆராயச்சி நோக்கில் சாராதது.
மேலும் ஒருபொழுது, குறள் சமயாதீதம் என்று சொல்லிக் கொண்டே,சைவ சமயக் கோட்பாடுடன் இயைபுப்
பார்ப்பது சாலவும் பொருந்தாது./மீண்டும் நான் கூறுகின்றேன்.சைவ சமயம் மிகத் தொன்மையானது என்றபோதிலும் தத்துவச் சிந்தனையும் தொன்மையானது என்ற போதிலும் சைவ சித்தாந்தம் என்ற தரிசனம் திருகுறளிலிருந்தே வளர்ந்துள்ளது என்று காட்டியுள்ளேன்
பதியினைப்போல் பசு பாசம் அநாதி என்னும் கருத்து 'இருள்சேர் இருவினையும்' என்ற குறளில் எவ்வாறு இருக்கின்றது என்று விளக்கியுள்ளேன்ஓர் வரலாற்றுப் போக்கில்,இதை கூற விரும்புகின்றேன்திருக்குறளில் இருப்பது 'இளஞ் சைவ சித்தாந்தம்' அது வளர்ந்த நிலையில் திருமூலரின் உபதேசம் 30இல் பிறகு சிவஞானபோதத்தில் காண்கின்றோம்வரலாற்று வளர்ச்சி ( Historical Development) என்ற அடிப்படையில் இதனைக் கண்டால் புரிந்துகொள்ள முடியும்
மேலும் இருவினை ஆய்வு பழமையான ஒன்றாக இருக்கலாம்ஆனால் திருகுறள் கூறும் விளக்கம் நிகண்டவாதி தரும் விளக்கமாக இருக்க முடியுமா?//புற்கலம் ஓர் அணு-புற்கலமாவது பரமாணுவும், புறவுருவாகும்-பொருட்குப் புறவடிவமாகும், சீர் சால் நல்வினை தீவினையவை செயும் - சிறப்புப் பொருந்திய நல்வினையும் அஃதில்லாத தீவினையுமாகிய அவ்விரண்டும் பயக்கும், வருவழி இரண்டையு மாற்றி-இன்பமும் துன்பமும் வரும் வழியை யடைத்துப் போக்கி, முன்னே செய் அருவினைப்பயன்-முன்பே செய்துகொண்ட அரிய பழவினைப் பயன்களை, அனுபவித்தறுத்திடுதல்-ஒருங்கே நுகர்ந்து கழிப்பதாகிய, அது வீடாகும்-அதுவே வீடுபேறாகும், என்றனன்-என்று நிகண்டவாதி கூறினான் எ - று.இந்த அணுவாதமா திருக்குறள் கூறும் இருவினை விளக்கம்?இருவினை என்பது கன்மத் தளை, மீண்டும் மீண்டும் பிறக்கத்தருவது. அதுவோர் மலம், பாசத் தளை, எங்கு ஆன்மா இறைவனை உளமார மெய்யாக புகழ்ந்து போற்றி நெருங்குகின்றதோ அதுபொழுது அது ஆன்மா மாட்டு இருக்காது விட்டு அகலும் என்பதுதானே திருக்குறள் கூறுவது?
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
நிகண்டவாதியின் அணுவாதம் இங்கு இல்லையே
ஆயினும் இதுவே திருமூலர் கூறும் பதி அணுகிடில் பசுவின் கண் பாசம் நில்லா என்பதுவும் மெய்கண்டார் கூறும் 'ஏகன் ஆகி இறைபணி நிற்க மலம் மாயை தன்னொடு வல்வினை இன்றே' என்பதுவும்?இறைவனை நெருங்கி அவனோடு ஒன்றித்து நிற்க இருவினையாகிய கன்மத் தளை ஆன்மாவை விட்டு அகலும் என்பதுதான் திருக்குறளில் விளங்கும் இருவினை விளக்கம் என்று நினைக்கின்றேன்
இந்த வரிகளில் 21-23 வரை உள்ளதை இன்றையத் தமிழில் இவ்வாறு காணலாம்.
உலக மாந்தர் ( உளூளுநம்) கொற்றைவைத் தாயின் சுடரும் செந்தழல் உருவை( நின் மேளம்) உள்ளியபடி (உள்ளுத்தே)
நோய் உடம்பில் தோன்றி நிற்க, ( நோய் மெய் கார்) அம்மை முன் ஏகும் போது( உள் ஏகின் மோரே) மெய்க்கு மெய்யான பலன்களை ( மெய்த்து மெய் உஷ்பி) அருளப் படுகின்றார்கள் ( சூர் பாயிரே தில்)
இவ்வரிகளின் பொருளை நோக்க, கன்மக் கோட்பாடு விளங்குவது தெளிவு, ‘பாபம்’ (பாப்) என்ற சொல்லும் சுமேருத் தமிழில் உண்டு, பல பாவங்களை செய்வதால் ஒருவனுக்கு பல நோய்கள் வருகின்றன என்று சுமேரிய சித்தர்கல் கருதி அதற்கு மருந்தாக திருமுருகன் உடம்பில் வரவழைப்பதும் அதன்வழியாக தீய கன்மங்களை உச்சாடிப்பதுமே வழி என்று மருத்துவமும் பேசியுள்ளனர்.
>>>>
சுட்டி இடுகை 7:
https://sites.google.com/site/sumerutamiltex/cumeru--meyyarivu/a1-itukai-1-5\
இப்படிப்பட்ட கனம ஆய்வு அதாவது பாவம் புண்ணியம் எனும் இருவினை ஆய்வு தமிழர்களிடையே மிகப்பழமையானது என்றே தெரிகின்றது. இங்கும் நிச்சயமாக ச்மண நிகண்டவாதி கூறும் அணுவாதம் அல்ல, அது மிகவும் பிறகால கருத்டாக இருக்க வேண்டும்
உலகன்
நாம் ஓர் மீட்சிக்கு பாடுபட வேண்டும் சாதியாதீத சமயாதீத தமிழகம தோன்ற பாடுபட வேண்டும்திருக்குறளை திருமந்திரத்தை சிவஞானபோதத்தை சரியாக் புரிந்துகொண்டால் இது மெய்யாகலாம்
On the non religious approach, I am tending to consider iru-vinai as than-vinai and piRa-vinai..that is one on his or her own account, second on others account likewise, iRaivan can be taken as inner voice or super-ego
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (13) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
...................................![]()
__,_._,___
திருவள்ளுவரின் திருக்குறள் தமிழ் இலக்கியப் படைப்புகளின் புதுமையைப் புகுத்திக்கொண்டு இன்றுவரை வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளதுதமிழ்மறை என்று அழைத்தாலும் அதில் மறைப்பதற்கு மந்திரப்பொருள் யாதுமில்லைவடபுல வேத சமய நால்வகை வர்ணாசிரமத்தின் அடிப்படையில் உருவானது என்றும் திராவிட இறை நம்பிக்கைகளை வலியுறுத்தும் சமணம் நீதிநெறித் தொகுப்பென்றும் பெளத்த நூல் என்றும் சைவ நூல் என்றும் பலசமயங்களுக்கும் பொதுவாக உள்ள இலக்கியத்தைச் சைவ சமயத்துக்கு மட்டும் சொந்தம் என்று கூறுவது சரியா?சவடால்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நின்னா சுபாதங்கள் கருத்து//ஏன் புதிய சமயம் ஒன்றை படைப்போமே!அறிவை மட்டுமே ஆதாரமாகக் கொண்டும் அன்பை மட்டுமே வலியுறுத்தும் ஒரு சமயம் காலத்தின் கட்டாயம் என எனக்கு தோன்றுகின்றது. அது எல்லா தத்துவங்களும் கொடுத்த நற்சிந்தனைகளின் தொகுப்பாக, அறிவியல் பார்வை கொண்டதாக, அன்பை அளவையாக நிறுத்தும் ஒன்றாக இருத்தல் வேண்டும். இதற்கு முயற்சிப்போமே!//
உரூவாக்கலாம், முயற்சிக்கலாம், தவறில்லை வேண்டப்படுவது. ஆனால் யான் அறிந்த வரையில் ( அழிவிலுண்மை எழுதிய பேற்றால், ஆகமவளவியலைக் கண்ட பேற்றறால்) அடிப்படையில் திருக்குறள் சிவஞானபோதம் போன்ற நூற்கள் கூறும் அடிப்படை உண்மைகளை மீண்டும் வற்புறுத்துவதாகவே அமையும்
.
மெய்யறிவு விசார்னையில் ஓர் அற்புதமான முடிவாக சித்தாந்தமாக இருப்பது முப்பொருள் உண்மையின் அநாதிப்பொருளியலே யாகும்
.
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 11
இனி மேலே “இருள்சேர்” என்று ஞான அந்தகாரத்தைத் தரும் ஆணவ மலத்தையும், மீண்டும் மீண்டும் பிறந்து உழலத் தரும் கன்மத் தளையாகிய இருவினையையும் வெளிப்படையாகக் கூறி, எஞ்சி நிற்கின்ற மாயாமலத்தை குறிப்பாக உணர்த்தியருளிய நம் வள்ளுவப் பெருந்தகை, அடுத்து வரும் குறளில் எஞ்சி நிற்கின்ற மாயாமலத்தையும் வெளிப்படையாகக் கூறி அதனை நீக்குவதற்கும் ஓர் வழியையும் அதனால் வரக்கூடிய நன்மையையும் விளக்குகின்றார்,
6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
பொறிவாயில் ஐந்தவித்தான்: ஐம்புலன்களாகிய மெய் வாய் கண் மூக்கு செவி வழி வரக்கூடிய மாயாகாரியப் பொருட்களின் நுகர்வில் மயங்கிக் கிடப்பதிலிருந்து உயிரை நிறைவித்து விடுவிக்கும் இறைவனே ; பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்: காட்டும் பொய்மைகளைத் தவிர்த்து மெய்யுணர்வுகளையே நுகரத் தரும் திருநெறி வழியே உறுதியாக வாழ்வார், நீடுவாழ்வார்: அகத்துச் செறி மலமெல்லாம் போக்கி சுத்தமாகி உடல் நலத்தோடும் மன நலத்தோடும் நீடு வாழ்வர் என்கின்றார் நம் வள்ளுவர்.
இங்கு ‘பொறிவாயில் ஐந்து அவித்தல்’ என்பது ஐம்புல நுகர்ச்சியின் அனுபவிக்க வரும் மாயாகாரியப் பொருட்களாகிய மரம் மலை ஆறு போன்ற உலகியல் கரு உரி பொருட்களே பொருள் என்று அவற்றை நுகர்வதிலும் சேர்த்து செல்வம் எனப் பெருக்குவதிலுமே ஆர்வங் காட்டி ஓர் உலகாயதானாக வாழ்வதிலிருந்தும் ஓர் ஆன்மாவை விடுவிப்பதாகும். இந்த மாயகாரியப் பொருட்களே பொருள் என்று நினைத்து அவற்றையே அவாவித் திரியும் வாழ்க்கையே மாயா மலத்தால் பந்திக்கப்பட்டு கிடக்கும் மயக்க வாழ்கையாகும்.
அதனின்று அவித்தலாது இந்த மயக்கினை ஓர் மயக்கெனக் காட்டி பொறிலியப் பார்வைக்கு மேலாகிய நூலியப் பார்வை போன்ற பார்வைகளும் இருப்ப்தைக் காட்டி ஐம்புல நுகர்ச்சிக்கு எட்டாத சித்துப் பொருள் உலகும் உண்டென உனர்வித்து ஆன்மாக்களை இந்த மாயாகாரியப் பொருட்களின் மயக்கிலிருந்து விடுவிப்பதாகும்.
இவ்வாறு நூலியப் பார்வையை அருளி அது உண்டென ஒருவாறு உணர்த்டி அருள்வது இறைவனே என, அவனே ஐந்தவித்தன் எனப்படுகின்ற்றான்,
இனி ‘பொய்தீர் ஒழுக்க நெறி’ என்பது இறைவனே அகத்திருந்து ஞாசிரியனாக ஆன்மாக்களுக்கு உணர்த்தி அருளும் திருநெறி ஆகும். இதனை சன்மார்க்கம் எனினும் ஒக்கும்.
யார் இறைவன் காட்டும் வழியே ஒழுகி செல்கின்றார்களோ அவர்கட்கு பொய்மைகள் தோன்றாது மெய்யுணர்வுகளேத் தோன்றும் என்பதாம். ‘பொய்’ உணர்வுகள் ஆன்மாவின்கண் அநாதியே செறிந்திருக்கும் மலமாசுக்களால் அமைவதாகும். ஆன்மா இந்த மலங்களால் தாக்குற்று மயங்கி காணும் போது பொய் பொய்யாத் தோன்றாது மெய்யெனவேத் தோன்றும். ஆயினும் அகத்தே இறைவன் வெளிப்படுமாறு இறைவனைத் தொழுது நிற்க, அவன் அகத்தேத் தோன்றிச் சுடர, பொய் உணர்வு பொய்யெனப் பட, அது பற்றப்படாது விட்டு விடப்படும்.
இவ்வாறு திருநெறி வழி வாழ்வதே பொய்தீர் ஒழுக்க நெறியாகும். இந்நெறியில் வாழும் போது பொய் பொயாகக் கண்டு வேண்டாவென விடுத்து மெய்யையே மெய்யெனக் கண்டு போற்றி அகத்திருத்தி வாழும் போக்கு கூடிவரும் என்பதாம்.
இனி இவ்வாறான மெய்யுணர்வுகளே அகத்துச் செறிந்திருக்கும் மாயா மலம் கன்ம மலம் என்பவற்ரொடு இயல்பாகவே அநாதியே செறிந்திருக்கும் ஞான அந்தகாரத்தைத் தரும் அதாவது இருளைச் சேர்க்கும் ஆணவ மலமும் நீங்கும் என்பதாம். இனி இந்த ஆணவ மலமே ஆயுளைக் குறுக்கி பொல்லாத நோய்களையும் அகால மரணத்தையும் தரவல்லது என்பதின், திருநெறி வழி செல்லும் போது அது அகத்திருந்து நீக்கப்படுவதின், இவ்வாறு சுத்தமாகும் ஆன்மா, நோய்நொடிகள் அகால மரணம் போன்றவை தவிர்த்து நீண்ட ஆயுளோடு நெடுங்காலம் நலமே வாழும் என்கின்றார் நம் வள்ளுவர்
குறிப்பு: இந்தப் பொய்தீர் ஒழுக்க நெறியை வேத நெறி என்பார் சிலர். அதுபொருந்தாது. வேதநெறி வர்ணதர்மத்தைப் போற்றுவதின் அது பொய்தீர் ஒழுக்க நெறியாகாது, பொய்நெறியே யாகும். இது பிறகாலத்தில் திருஞான சம்பந்தரால் போற்றப்பட்ட திருநெறி என்றும் திருமூலரால் போற்றப்பட்ட சன்மார்க்கம் என்றும் கொளத்தகும். மேலும் இது புத்த சமண நெறிகளும் ஆகாது. இவை அரச பெருமக்களையே கடவுளாக்கி உண்மையான் இறைவனை மறக்கும்படி செய்யும் சமயங்கள் ஆகும். முப்பொருள் உண்மையின் அநாதிப்பொருளியல் இங்கு இல்லை.
உலகன்
தொடரும்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 10
சைவத்தின் அநாதிப் பொருளியல்
ஏற்கனவே கூறியுள்ளதுபோல, சைவ சமயம் மிகத் தொன்மையானது சுமேருத் தமிழின் முதற்சங்க காலத்திலேயே அடையாளம் காணும் வகை இருந்தது என்ற போதிலும் சைவ சித்தாந்தம் எனும் மெய்யறிவு கோட்பாடு திருக்குறளிலிருந்தே வளர்ந்துள்ளதாகத் தெரிகின்றது. அதனை இத்தொடரில் ஒருவாறு விளக்கி வருகின்றேன்.
ஆய்வில் உள்ள இக்குறட்பா இவ்வகையில் தனிச் சிறப்புடையதாகத் தெரிகின்றது.. இங்குதான் சித்தாந்தத்தின் தனிச் சிறப்பாக விளங்கும் மும்மல கோட்பாடு நலமே வெளிப்படுகின்றது.
ஆயினும் சித்தாந்தத்தின் தனிச் சிறப்பாக அடையாளமாக விளங்குவது பதியினைப் போல் பசுபாசம் அநாதி எனும் அதன் அநாதிப்பொருளியலே யாகும். இது முதன் முதலில் திருமூலரின் உபதேசம் 30 எனும் நூலில் வெளிப்பட்டாலும் அதன் தோற்றம் திருக்குறளே என்று தெரிய வர அதனை சிறிது இங்கு விளக்க விருக்கின்றேன். திருக்குறள் சிவத்திணையாகிய முதல் அதிகாரத்தில் உள்ள 10 குறள்களே இந்த அநாதிப் பொருளியலையும் தன் அகத்தே கொண்டிருப்பதாகத் தெரிகின்றது
இறைவன் அநாதி
முதற்குறள் இறைவனை ஆதிபகவன் என்கின்றது. இதனை மிக விரிவாக ஆய்ந்து எவ்வாறு உலகில் காணவரும் பொருட்களின் வகுப்பு தொகுப்பு போன்றவை ஓர் பொருண்மையைக் காட்ட, ஆன்மாக்களை வீடுபேறு நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் பொருண்மையைக் காட்ட, நூலியப் பார்வையின் வழி இறைவன் ஆதிபகவனாக அனைத்திற்கும் நிமித்த காரண முதலாக இருக்கின்றான் என்று அனைவரும் உலகினை வைத்தே இறைவனது உண்மையை திருவள்ளுவர் நிறுத்தியுள்ளார் என்று காட்டினோம்
இனி இந்த ஆதிபகவன் எனும் இறைவனை இன்னும் ஆழச் சிந்திக்க ஓர் அநாதி முத்தசித்துப்பொருள் என்றும் நாம் தெளியலாம்
அனைத்திற்கும் ஆதியாய் நின்று தனக்கு யாரையும் ஆதியாய் கொண்டில்லாத பொருளே அநாதிப் பொருள், யாராலும் தோற்றுவிக்கப்படாது தானே தனக்குத் தற்பரனாகிய ஓர் சித்துப் பொருள் ஆகின்றது. இப்பொருளே பதியும் ஆகி அது அநாதியும் ஆகின்றது. ‘பதி’ என்றால் ‘தலைவன்’ என்று படும். இது ஓர் சுமேருத் தமிழ் சொல்லாகும். மேலும் எல்லா உயிர்கட்கும் வீடுபேறு அருளவல்லது என்பதால் அநாதி முத்த சித்துரு ஆகின்றது
சைவ சித்தாந்தத்தில் இறைவனை இவ்வாறுதான் கூறுவர்
ஆன்மா அநாதி
இனி திருவள்ளுவர் நாம் சுட்டியுள்ளதுபோல, பல இடங்களில் ‘மீண்டும் மீண்டும் பிறத்தல்’ ‘மாணாப் பிறப்பு உறுதல்’ என்றவாறு யாதோ ஒன்று இறைவனுக்கு வேறாக மாறாக மீண்டும் மீண்டும் பிறந்து அல்லற்பட அது பிறப்பறுத்து வீடுபேறு அடைய உதவவே இறைவன் இந்த உலகையே தோற்றுவித்து அதிட்டித்து நிற்கின்றான் என்று கூறுகின்றார். இவ்வாறு பிறந்துழல்வது இறைவனாக இருக்க முடியாது போக அவனுக்கு வேறதாகிய ஆன்மாவே யாகும் என்று தெளிவாகின்றது.
இனி இவ்வான்மா பரப்பிரம்மமாகிய இறைவனின் உபாதிகள் தொந்தனையால் ஓர் மயக்கத்தால் தனித்த ஓர் பொருளாகத் தோன்றுகின்றது, உன்மையில் அது பிரம்மமே என்பர் வேதாந்திகள். ஆயினும் இந்த மாணாப்பிறப்பெடுத்து பல இடும்பைகளையும் அதிலும் குறிப்பாக மரணம் உற்று அவதிப்படலும் பிரமத்திற்கு தேவையில்லை என்பதால், ஆன்மா தனியொரு பொருள் என்பதொடு அது தோற்றுவிக்கப்பட்ட ஒன்றும் அல்ல. இறைவன் மிகக் கொடூரமான ஓர் பொருளாக இருந்தால்தான் உயிர்களை தோற்றுவித்து சிறிது வாழவைத்து பிறகு கொன்று அழிப்பான். இறைவன் அருளே வடிவினனாக இருக்க, ஏற்கனவே இருக்கின்ற உயிர்கட்கு வாழ்வளித்து கற்க வைத்து சுத்தமாகி வீடுபேறு அடைந்து இவ்வாறு பிறந்து இறப்பதிலிருந்து தப்பிக்க உதவுவான்
பாசங்கள் அநாதி
இனி இருளை சேர்க்கும் மலமும் மீண்டும் மீண்டும் பிறக்கத் தரும் இருவினையாகிய கன்மமும் தநுபுவனபோகம் மகிழத்தரும் அதேபொழுது உலகியல் பற்றுக்களையும் தரும் மூலமாயையும் பாசங்கள் ஆகும். வாழ்க்கையில் பற்று எனப்படுவது இவைதான். இதனாலேயே எல்லா வகை இடும்பைகளும் என்கின்றார் நம் வள்ளுவர்.
இவ்வாறு எல்லாவகை பற்றுகட்கும் அதனால் வரும் துன்பங்கள் துயரங்கள் மரணாவத்தைகள் போன்றவற்றிற்கெல்லாம் காரணமாக இருக்கும் இந்த பாசங்களையும் இறைவன் தோற்றுவித்திருக்க மாட்டான். அருளே வடிவாகிய இறைவன் உயிர்கள் இவ்வாறான பாசத்தளைகளில் மாட்ட வைத்து துன்புறுத்த மாட்டான். அவன் ஓர் அரக்கன் அல்ல,
அதனால் இந்தப் பாசங்களும் அநாதி ஆகின்றன்
பாசநீக்கம்
எல்லா இடும்பைகட்கும் இன்னல்கட்கும் துன்பங்கட்கும் துயரங்கட்கும் காரணமாகிய இந்த பாசங்களிலிருந்து நீங்கி சுத்தமாகுவதே வாழ்க்கையின் பொருளாக அமைய அது இறைவனது பொருள்சேர் புகழைப் பாடி அவனுக்கு அணுக்கமாகி நின்றால் சமலனாகிய ஆன்மா சுத்தமாகி நிமலம் ஆகும் வீடுபேறு மகிழும் என்பதே இக்குறளில் பரிந்துரைக்கப்படும் வாழ்வியலாகும்.
இவ்வாறு நாம் இக்குறளை புரிந்துகொண்டால், உடன் நம் நினைவிற்கு வருவது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்கும் கீழ்வரும் திருமூலரின்( கி.பி 600?) அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க பாடல்தான்
3.
115
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசுபாசம் அனாதி
பதியினைச் சென்றணுகாப் பசு பாசம்
பதியணுகிடில் பசுபாசம் நில்லாவே
patipacu paacam enappakar muunRil
patiyainaip pool pacupaacam anaati
patiyinaic cenRaNuKaap pacu paacam
patiyaNukidil pacupaacam nillaavee
யாராலும் தோற்றுவிக்கப்படாதனவும் யாண்டும் அழியாது நிற்பதுமாகிய அநாதிப்பொருள் என்று பகரப்படும் பதி பசு பாசம் என்னப்படும் மூன்றில், பதியினை போல் பற்பல மாற்றங்கட்கு ஆளாகும் பசுவும் பாசமும் அநாதியே ஆகும். இவற்றில் பாசத்தோடு அநாதியே பந்திக்கப்பட்டிருக்கும் பசு, பதியினைச் சென்று அணுகிட அதன்கண் பாசம் கழன்று நில்லாதுபோம். ஆயினும் இவ்வாறு அணுகாவிடில், பந்தித்திருக்கும் பாசமும் அகலாது பந்தித்துக் கொண்டே இருக்கும்
Among the metaphysical entities that constitute Fundamental Ontology and
That consists of BEING, the innumerable anmas and the enchaining fetters,
The innumerable anmas and the fetters are unoriginary just as BEING and in this
If the anma does not move unto BEING, it will continue to be engulfed by the fetters but
If it does, then and only then, the fetters will not stand with the anmas
patipacu paacam enappakar muunRil: Among the metaphysical entities that constitute Fundamental Ontology and that consists of BEING, the innumerable souls and the enchaining fetters
patiyainaip pool pacupaacam anaati : the enchaining fetters and the enchained souls are just as unoriginary as BEING
patiyinaic enRaNuKaap pacu paacam: In this if the anma does not move unto BEING, it will remain engulfed by the fetters;
patiyaNukidil pacupaacam nillaavee: But if it does then the fetters will not stand with it.
திருவள்ளுவர் இக்குறளில் இறைவனோடு இசைந்த வாழ்க்கைப் பொருளே, மலங்களால பந்திக்கப்பட்டிருக்கின்ற ஆன்மா, நின்மலனாகிய இறைவனை அணுகி அவனைப் போற்றிப் புகழ்ந்து அணுக்கமாகிடத்தான் சுத்தமாகிட முடியும், வீடுபேறு அடைந்து பிறப்பறுக்க முடியும் என்று விளக்குகின்றார். இதுவோர் சமயப்பொது வாகும். எல்லா சமயங்கட்கும் பொருந்தும் ஒன்றுமாகும்
இதைத்தான் திருமூலரும் கூறுகின்றார். மெய்கண்டாரும் சிவஞானபோதம் 10வது சூத்திரத்திலும் இதைத்தான் வற்புறுத்துகின்றார். சமலனாகிய ஆன்மா நிமலனாகிய இறைவனைத் தொழுது அணுகி ஏகனாகி இறைபணி நிற்க இந்த மும்மலங்கள் விட்டு விலகும் என்கின்றார்.
இதுவே சைவ சித்தாந்தம் கூறும் வாழ்க்கை விளக்கமாகும் இது மிகத் தெளிவாக திருவள்ளுவரின் தமிழ் இனத்திற்கே உலகிற்கே அருளிய மிகப் பெரிய ஞான நன்கொடையாகும்
வேதாந்தத்தில் இது இல்லை
நான் பன்முறை கூறியுள்ளதை மீண்டும் இங்கே கூற கடமைப்பட்டுள்ளேன். ஆதிசங்கரரின் மாயாவாத வேதாந்தத்தில்( இது தமிழ் நாட்டில் தொன்றியும் இருக்கலாம்) மற்றும் ஏனைய வேதாந்தங்களில் பதியினைப் போல பசு பாசம் அநாதி என்ற அநாதிபொருளியல் இல்லை. இதனால் இறைவனை நெருங்கி ஏகனாகி மும்மலங்கள் நீங்கி சுத்தமாகி பிறப்பு அறுப்பதே வாழ்க்கையின் நோக்கு என்று அவர்களால் கூற முடியாது. வேதங்கள் விதிப்பதை செய்வது என்றும் மற்றும் வீணான சோதிடக்கலை போன்றவை கூறும்படி நல்ல நாள் நல்ல முகூர்த்தம் என்றெல்லாம் பார்த்து ஒழுகினால் துன்பங்கள் வராது என்றும் ஓர் ஞான குருவை அடைந்து அவனுக்கு அடிமையாகி தொண்டு செய்தால் முத்தி என்றும் இன்னும் பலவாறு மக்களை இறைவனையே தொழுவதிலிருந்து வேறு பொல்லாத வழிகளில் கொண்டு செல்வர்.
இன்றைய தமிழ் உலகில் இந்த வேதாந்த மயக்கில்தான் மக்கள் கிடந்தவாறு இறைவனைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தொழுது அவதிப் படுகின்றனர். திராவிட இயக்கம் தோன்றி இருந்த சிறிது இறை நம்பிகையையும் போக்கிவிட்டது. உண்மையான தெய்வீக வாழ்க்கை மழுங்கிக் கிடக்க எங்கு பார்த்தாலும் ஊழலே மலிந்து கிடக்கின்றது
திருக்குறளின் மீட்சியே நல் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக அமையும் என்று நினைக்கின்றேன். சமயாதீத முறையில் இறைவனைத் தவிற வேறு யாரையும் தொழாத மனவுறுதியோடு மக்கள் வாழ்ந்தால் பண்பாடு உயரும் நாடும் உயரும்
தொடரும்
உலகன்
2014-04-20 10:25 GMT+08:00 K. Loganathan <k.ula...@gmail.com>:
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 9
சைவ சமயம் மிகத் தொன்மையானது. சிவலிங்க வழிபாடு சிவசக்தித் தாண்டவம் அக்நி வழிபாடு கொற்றவை வழிபாடு என்பதை எல்லாம் சுமேரு இலக்கியத்திலும் அரப்பா பண்பாட்டிலும் மற்றும் உலகின் பல பண்டைய நாகரீகங்களிலும் நாம் காண வரும் ஒன்று. ஆயினும் சைவ சித்தாந்தம் எனும் ஓர் மெய்யறிவுக் கோட்பாடு தொன்மையான வேர்களைக் கொண்டிருந்தாலும் தொல்காப்பிய காலத்திலிருந்து பல தெளிவுகளை அகபடுத்தி வளர்ந்து வந்துள்ள ஓர் தரிசனமாகும். ‘அழிவிலுண்மை’ போன்ற நூற்கள் வழியாக அது இன்றும் வளர்ந்துகொண்டு வரும் ஓர் மெய்ஞானத் துறையாகும்.
இதில் திருக்குறளிற்கு மிகச் சிறப்பான ஓர் இடம் உண்டு. திருக்குறளின் சமயாதீதத்தை இன்று வரை சைவமே மிகத் தெளிவாக போற்றி வருகின்றது என்பதொடு உலகினை வைத்தே இறைவனது உண்மையை நிறுத்தும் நூலிய அறிவியல் போக்கினை சைவ சித்தாந்தமே தொடர்ந்து நிலை நிறுத்தியும் வருகின்றது. மேலே திருவள்ளுவரின் முதற் குறளே சிவஞானபோதத்தின் முதற் சூத்திரத்திற்கு மூலமாக இருப்பதைக் கண்டோம்
இனி ‘இருள்சேர்’ எனத்தொடங்கும் இக்குறளும் சைவசித்தாந்தத் சிந்தனை வளர்ச்சிக்கு மூலமாக இருந்த வரலாற்று உண்மையையும் காண்போம்.
முதலில் நாம் காணவிருப்பது திருவள்ளுவர் குறிப்பிடும் ‘இருவினை’ என்னும் கன்மக் கோட்பாடு மிக விரிவாக ‘இருபா இருபது’ எனும் அருணந்தி சிவாச்சாரியாரின் அற்புதமான ஞானப்பனுவலில் விசாரிக்கப்படுவதைக் காண்கின்றோம். இந்த ஆய்வு அரிய ஒன்றாகும் என்பதொடு மிக ஆழ்மான ஒன்றும் ஆகும். மெய்கண்டாரையே வினாவும் ஓர் சிறப்பும் உடையது.
காண்க
இருவினை என்பது என்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை யாயில்
கணத்திடை அழியும் தினைத் துணையாக
iruvinai enpathu ennaikol aruLiya
manamE kaayam vaakku enum mUnRin
ithamE akitham enum ivai yaayil
kaNaththitai aziyum thinaith thuNaiyaakaa
Now I have some questions pertaining to iruvinai or mUlakarma. If it is said they are none other than the pleasant and unpleasant experiences that are produced by effecting actions bodily, mentally or verbally, then it would mean that karma is something ephemeral, that which gets destroyed immediately after the onset and hence not something that accompanies one firmly as a help in self development throughout the whole of existence.
யான் அறிந்த வரையில் ‘இருவினை’ எனுங் கன்மக் கோட்பாட்டை அருணந்தியார் தமது இருபா இருபதில் விசாரிக்கும் அளவிற்கு வேறு யாரும் விசாரிக்கவில்லை என்றே நினைக்கின்றேன், வேதாந்த மரபிலும் யான் இதனைக் கண்டதில்லை
இது திருக்குறள் விரிக்கும் அறத்துறை விளக்கத்தோடும் தொடர்புடையதாகத் தெரிகின்றது.
இனி மெய்கண்டாரின் அற்புதமான் சிவஞான போதத்திலும் இந்தக் குறளின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காண்கின்றோம். பயனியல் பத்தாம் சூத்திரம் இவ்வாறு வருகின்றது:
பத்தாஞ் சூத்திரம்: திருவடிப்பேறு
அவனே தானே யாகிய வந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே
கருத்துரை: என் நுதலிற்றோவெனின், பாசக்ஷயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று
இதன் பொழிப்பு:
"யான்" "எனது" எனும் தற்போதம் முன்நிற்க (foregrounded) ,சிவபோதம் பின்நிற்க(backgrounded) , பல்வேறு வேட்கை வாய்ப்பட்ட ஆன்மா, அது இதுவென சுட்டிசுட்டி அந்நியப் பார்வை வழியாகவே அனைத்தையும் கண்டு, அதனால் நிலைபேறில்லாத அசத்தே கண்டு நிறைவற்ற குறையாகவே உழலும் நிலை போக்கி, இறையருளைப் பெருக்கி பஞ்சவதிகாரங்களை திறம்பட ஆய்ந்து இலாடதானத்தே ஐந்தவத்தை எய்தி சிவபோதமே முன்நிற்க தான் ஒடுங்கிட அவனே தானே யாகியப் பெருநிலை மெய்யாகும். காட்டப்படும் அனைத்தும் தற்போதமற்ற சிவபோதமேயாக, பொய்யில்லையாம். அந்நிலையில் அறியப்படும் அனைத்தும் காலவுணர்வு ஊர்ந்து வராத சத்தறிவாகிய சிவஞானமாம். இவ்வாறாகிய நந்நிலை தற்போதமொடுங்கிடவே மெய்யாகும் என்பதால், இறைவனோடு முற்றிலும் ஒன்றித்து பிரிப்பின்றி விட்டகலாது, எவ்வாறு இறைவன் ஊக்குகின்றானோ, ஆட்டுகின்றானோ அவ்வாறே சற்றும் பிழையாது ஆடி இறைபணியே நிற்க, தற்போதம் எழாவகை ஒடுங்குதலும் அதன்வழி அணுத்துவத்தைத் தரும் ஆணவமலத்தையும், திரிபறிவை தரும் மாயையையும் சம்சாரத் தளையில் தொடர்ந்து வீழ்த்தும் கன்மத் தளையும் ஒட்டாது விழும் என்றவாறு.
பாசக்ஷயம் என்பது மூல மலமாகிய ஆணவமலத்தையும், அதனால் எழும் மாயையோடிசைந்த வாழ்க்கையைப் பற்றச் செய்யும் மாயாமலத்தையும், புண்ணிய பாவ இருவினைச் சிந்தையில் வீழ்ந்து அல்லற்படும் வாழ்க்கையைதரும் கன்மத்தளையையும் துமித்து, ஆன்மாக்கள் சகலர் பிரளயாகலர் என இருப்பதொழித்து விஞ்ஞானகலர்களாக உயர்வதற்குக் காரணமாக இருப்பதாம். இதனால் கற்றளிபெயர்ச்சிக்கு அதனால் வரும் பக்குவ முதிர்ச்சிக்கு முலமாக இருப்பது தத்துவக் கழற்சிகளோடு இத்தகைய மாலங்களின், தளைகளின் வல்லியப் பிடியிலிருந்து விடுபடுவதுமாகும். பாசக்ஷயமே, தளையறுப்பே மெய்யான விடுதிபேறு என்பதாக இங்கு.
இங்கு ‘மலம்’ என்பது திருவள்ளுவரின் இருள் என்பதுதான், அந்த இருளைத் தரும் ஆணவ மலந்தான். ‘வல்வினை’ என்பதும் ‘இருவினை’ என்பதும் பொதுவாக ‘வினை’ என்பதும் கன்மத் தளைதான்
இந்தக் குறளைப்போல இறைவுனுட ஏகனாகி துதித்துப்பாடி நெருங்கி அவனோடு ஒன்றித்து நிற்க ஆணவம் கன்மம் மாயை எனும் மலங்கள் சேராது என்பதொடு இருப்பதும் விட்டு விலகும் என்றே இச்சூத்திரம் விளக்குகின்றது.
ஆக இச்சூத்திரமும் இக்குறட்பாவின் தாக்கத்தால் எழுந்த ஒன்றே என்று தெரிகின்றது
தொடரும்
உலகன்
2014-04-20 8:23 GMT+08:00 K. Loganathan <k.ula...@gmail.com>:
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 8
2014-04-19 11:24 GMT+08:00 K. Loganathan <k.ula...@gmail.com>:
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 7
எல்லா உயிர்கட்கும் அவை இறைவனை அறிகின்றனவோ அறியாதிருக்கின்றனவோ விரும்புகின்றனவோ வெறுக்கின்றனவோ இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாது அருளே வடிவாக இருந்து ஒவ்வொரு உய்ருக்கும் ஏன்ற கற்றளிகளைப் படைத்து அவை வாழ்ந்து கற்று உய்ய வழிகாட்டும் இறைவனைப் பற்றி தொடர்புடைய இன்னொரு கூற்றையும் விளக்கப்புகுகின்றார் நம் பெருந்தகை அடுத்து வரும் குறளில். இறைவன் அற்ப மலங்களால் பந்திப்பட்டு உயர்வு தாழ்வு கற்பித்தும் விருப்பு வெறுப்புத் தேற்றும் அற்ப மானிடனைப் போன்ற ஓர் சித்துப் பொருள் அல்ல அருளே வடிவானவன் என்று விளக்கப் புகுகின்றார் நம் ஆசிரியர்
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு: விரும்பி அணைப்பதும் வெறுத்து ஒதுக்குவதுமாகிய வேண்டுதல் வேண்டாமை இல்லாது அருளே வடிவாக நிற்கும் இறைவனது திருவடி சேர்ந்தார்க்கு, யாண்டும் இடும்பை இல: பிறரால் வெறுத்து ஒதுக்கபடுவது அடித்து துன்புறுத்தப் படுவது ஏளனப் படுத்தப்படுவது கொலைவெறி தாக்குதல்கட்கு ஆளாகுவதுமாகிய இடும்பைகள் யாண்டும் இல்லையாம்
இறைவன் நிமலன், அருளே வடிவானவன் யாண்டும் எல்லா உயிர்கட்கு அன்பே காட்டுகின்றவன் என்பதால் சில உயிர்களை விரும்பி அணைப்பதும் வேறு உயிர்களை வெறுத்து ஒதுக்குவதும் இல்லாதவன் ஆகும். மலத்தால் பந்திக்க்ப்பட்ட மானிடர்களே மக்கள்டையே உயர்வு தாழ்வு கற்பித்து வர்ண பேதனக்கங்களையும் சாதி பேதங்களையும் உருவாக்கி விருப்பதும் வெறுப்பதுமாக குமுகாய உறவுகளை உருவாக்குவர். மேலும் இன்னும் அதிகமாக மலத்தால் பந்திக்க்பட்டு அழுக்கேறிய உள்ளத்தினராக திகழக்கூடியவர்கள் தாம் மக்களில் சிலரை தீண்டத் தகாதவர் என்று கூறி அவர்களை வெறுத்து ஒதுக்கி அடிமைப் படுத்தியும் மகிழ்வர்.
இத்தகைய செயல்கள் அனைத்தும் இடும்பைகள் பலவற்றைத் தோற்றுவிக்கும் என்கின்றார் மாந்தர் உள்ளத்தியும் இறைவனையும் நங்கே அறிந்துள்ள நம் வள்ளுவர்.
வெறுப்பு உமிழும் சாதீய வர்ணீய மக்கட்கு இருவகையில் இடும்பைகள் வரும்
ஒன்று இவ்வாறான கொடுமைகள் காரணமாக, புண்ணியவினைகட்கு மாறாகிய பாவவினைகள் காரணமாக அகத்தே ஆணவ மலம் எனும் அழுக்கு கூடிவர, பொல்லாத மனநோய் உடல்நோய் போன்றவை வந்து தாக்க அதனால் பல துன்பங்கள் துயரங்கள் வந்து சேர்வதாகும். இவற்றை தவிர்க்கவும் இல்லாது போக்கவும் இறையருளை ஈட்டுவது தவிர வேறு வழிகள் இல்லை,
இன்னொரு வகையான இடும்பைகள் மக்கள் எதிர்ப்பு என்ற வகையில் வருவதாகும். யார் தாழ்ந்தவர்கள் என்று வெறுக்கபடுகின்றார்களோ. தீண்டத் தகாதவர்கள் என்று தாழ்த்தப்படுகின்றார்களோ அவர்கள் தம்மை தாழ்த்துவோரை தள்ளிவைப்போரைக் கண்டு வெகுண்டு எழுந்து அவர்கள் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவார்கள், கொலைவெறி தாக்குதல்களையும் நடத்டுவார்கள்
உலக வரலாற்றில் பெரும்பெரும் புரட்சிகள் இவ்வாறே வெடித்து பலர் கொடூரமாக கொல்லபப்டுவதற்குக் காரணமாக இப்படிப்பட்ட வெறுப்புகளா காரண்மாக இருந்திருக்கின்றது
இனி இப்படி விருப்பதும் வெறுப்பதும் இல்லாது அருளே வடிவாக அனபேத் தானாக நின்று மக்களோடு மக்களாக நலமே வாழ்ந்து அகத்தூய்மையின் காரணமாக உயர்ந்து இறைவனை நெருங்கி முடிவில் அவன் திருவடி சேர்வாருக்கு இத்தகைய இடும்பைகள் இல்லையாம். அன்பு அன்பையே விளைவிக்கும். அது இடும்பைகள் எதனையும் கொண்டுவராது நன்மைகளையே ஈட்டித் தரும் என்பது
தொடரும்
உலகன்
2014-04-17 19:30 GMT+08:00 K. Loganathan <k.ula...@gmail.com>:
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 6
இறைவன் இருக்கின்றான், கற்று அகத்தேச் செறிந்திருக்கும் ஞான அந்தகாரம் போக்கி ஞானம் தேற்றி அவனை அடையவேண்டும் அதுவே வாழ்க்கையின் பொருள் என்று மிக அழகாக சார்புச் சமயம் யாதும் சாராது கற்றலையே ஓர் பெருஞ் சாதனமாகக் கொண்டு திகழும் ஓர் சமயாதீத வாழ்க்கையை விளக்கியருளிய வள்ளுவப் பெருந்தகை இனி, உடலோடு கூடிய இந்த உலகியல் வாழ்க்கையை புத்தர் சமணர் போன்றோர் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று கூறினும் இவர் அவ்வாறு கூறாது நலமே நெடுங்காலம் வாழவேண்டும் என்றுங் கூறி அதற்து ஓர் உத்தியையும் விளக்கி அருளுகின்றார், ஓர் நல்ல ஞான சித்தரைப் போன்று சிந்திக்கவும் செய்யும் நம் வள்ளுவர்
இங்கு வரும் ‘மலர்’ ஆதார சக்கரங்களில் வரும் நான்கிதழ் ஆறிதழ் தாமரைகள் போன்று கற்றளிகள் ஆகும். கற்றளியாவது உயிர்கள் வாழ்வதற்கு அமையும் இருந்நிலமாகும்( existential abode)
3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்: மலர்களாகிய உயிர்க்ள் வாழ்வதற்கு உதவும் கற்றளிகளை உருவாக்கி பல வடிவங்கள் எடுத்து உயர்ந்து உயர்ந்து செல்லுமா ஊக்கியவாறு மேலே ஏகுவானாகிய இறைவனது சிறப்புமிக்க திருவடிகளைச் சேரும் ஆன்மாகள், நிலமிசை நீடு வாழ்வார்: உடம்போடு கூடிய உலகியல் வாழ்க்கையை நோய்நொடியின்றி நீண்ட நாட்கள் வாழ்ந்து மகிழ்வர் என்பதாம்
கற்றளிகள் என்பன குறிஞ்சித் திணை முல்லைத் திணை போன்ற உயிர்கள் வாழ்தற்கு வேண்டிய முதற் பொருளும் கருப்பொருளுமாகிய ஓர் தொகுதியாகும். இதுவே ஆதார சக்கரங்களாக அவையும் நான்கிதழ் ஆறிதழ் பன்னிரண்டிதழ் தாமரை உடையவனவாக வளர்ந்து முடிவில் ஆயிரவிதழ் தாமரைத் தலமாக முடிதலின், வாழ்தற்கு இருந்நிலனாக அமையும் கற்றளிகள் மலர் எனப்பட்டன.
அன்பால் நினைவாரது உள்ளக் கமலமே மலர் என்பார் பரிமேலேழகர். அது பொருந்தாது. நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் இறைவன் எல்லா உயிர்கட்கும் ஏன்ற இருந்நிலங்களை அமைத்துத் தருவான் என்பதின். அன்புடையாருக்கு மாத்திரம் அல்ல என்பது. இல்லையேல் அடுத்தக் குறளில் வரும் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதோடு முரண்படும்
இனி ‘ஏகுதல்’ என்பது கற்றளிகள் பலவாக உயர்ந்து உயர்ந்து ஆதார சக்கரங்கள் போல உயர்ந்து செல்லும் பண்பிற்கு ஏற்ப இறைவன பல்வேறு வடிவங்கள் எடுத்து அவற்றை மேவி நின்று அருள்பாலித்துச் செல்வதால் ‘ஏகினான்’ என்கின்றார் ஆசிரியர்.
‘மாணடி’ யாவது சிறப்புமிக்க திருவடிகள் ஆகும். இங்கு பலவகைப் பட்ட கற்றளிகளை உருவாக்குதலும் அவற்றை வெவ்வேறு வடிவங்களில் மேவி நின்று அரூள்பாலிப்பதெல்லாம் திருநடம் போன்று இருப்பதின் ‘திருவடி’ என்று ஓதப்படுகின்றது. இறைவனது திருவுருவம் காண முடியா நிலையில் அவனது பரக்கிருத்தியங்களே செயல்பாடுகளே காண வருதளின் திருவடிகளே சிறப்பிக்கப்படுகின்றன.
இனி இவ்வாறான கற்றளிகளில் வாழ்வது விடுத்து கழன்று விடுதலையாகி இறைவனது திருவடிகளை அடைவோர். உடல் தூய்மையாக நோய்நொடியின்றி நீடு வாழ்வர் என்பதாம். இருந்நிலன்களின் கற்றளிகளில் ஓர் உடம்போடு வாழும் வரை அஞ்ஞான இருளையும் பல நோய்நொடிகளையும் தரும் மலத்தின் தாக்கம் உண்டாம். அதனின்று விடுபட்டு சுத்தமாகி இறைவனது திருவடிகளையே அடைய நோய்நொடிகள் யாதும் இல்லாது போக நீண்ட ஆயுளும் அமையும் என்பதாம்
இந்த சித்தரீயக் கருத்துக்கள் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து( Paradise Hymn) தமிழர்களிடையே இருப்பதாகும். அது இறவாது வள்ளுவரின் வாக்காகவும் இங்கு வெளிப்படுகின்றது..
தொடரும்
உலகன்
2014-04-16 15:53 GMT+08:00 K. Loganathan <k.ula...@gmail.com>:
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 5
இனி வேறு எவ்வித மாணமுதலையும்(பிரமாணம்) சார்ந்து நில்லாது உலகினை வைத்தே ஆங்கு காணவரும் பொருணமையை வைத்தே இறையுண்மையை சாதித்த வள்ளுவப் பெருந்தகை, இனி அடுத்து அந்த இறைவனை அடைவதே வாழ்க்கையின் பொருண்மை(existential meaning) என்று கூறி அதனையும் அடையும் ஓர் வழியையும் விளக்கி அருளுகின்றார் எவ்வித சமயத்தையும் சார்ந்திராது சமயாதீதம் காட்டிய நம் வள்ளுவப் பெருந்தகை.
2
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கற்றதனால் ஆய பயன் என்கொல் : தக்க உடம்பொடும் கருவிகளோடும் பிறந்து பலவேறு வகையில் கற்று அகத்தே செறிந்திருக்கும் ஞான அந்தகாரத்தைக் கடிவதால் ஆக கூடிய பயன் தான் என்ன எனின்; வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்: யாண்டும் ஞான அந்தகாரம் யாதிமின்றிய வாலறிவோடு சுடரும் இறைவனது அருளை எண்ணி நன்றி பெருக்கோடு அவன் நற்றாள் தொழுதலே யாம் பிறவல்ல என்றவாறு. பிறந்து கற்று ஞான தேறுவதெல்லாம் இறைவனைத் தொழுவதற்கே இல்லையேல் கற்பதால் எவ்வித பயனும் இல்லை என்கின்றார் நம் வள்ளுவர்.
மேலே முதற்குறளில் அவன் அவள் அது என்றும் அவை என்று பலவாறு வகுக்கப்பட்டும் பகுக்கப்ப்டும் இருக்கும் உலகு ஓர் பொருண்மையை உணர்த்தி நிற்க அதுவே ஆதிபகவனாய் இறைவன் இருப்பதையும் உணர்த்தி நிற்கின்றது என்றார். இந்தப் பொருண்மையாவது எல்லா ஆன்மாக்களையும் வீடுபேறு அடைந்து உய்ய ஊக்குவிப்பது என்றும் விளக்கப்பட்டுள்ளது. இது இந்த சிவத்தினை தோன்றுதற்கு மூலமாக இருக்கும் உகத்திணையில் அதிலும் குறிப்பாக மெய்யுனர்தல் அதிகாரத்தில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
356
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி
இதனால் எல்லா ஆன்மாக்கள் அகத்தேயும் முத்தி அடையவேண்டும் என்ற உணர்வு இருக்க அதனல் முத்திமுன்னறிவும் உண்டாம். இந்த முத்தி முன்னறிவாவது முத்தி அடையவேண்டும் என்ற நோக்கு உண்டெனப்பட்டாலும் அது தெளிவற்ற மிகத் தூரத்தில் ஓர் சாத்தியமாக இருக்கின்றது என்று முறையிலேயே அறிந்திருத்தலாம். ஆயினும் இதுவே கற்று கற்று அகத்தே செறிந்திருக்கும் ஞான அந்தகராத்தைப் போக்க வேண்டும் எனும் வேட்கையை பிறப்பித்தவாறு இருக்கும் ஒன்றாம். வீடுபேறு என்றால் என்ன என்று தெற்றெனப் புலனாகாத நிலையில் வரும் மூல ஐயமே கற்றலிற்கு மூல ஊந்துதல் ஆகும்.
இனி இந்த முத்திமுன்னறிவு எல்லா ஆன்மாக்களுக்கும் பொது என்பதின் இதுவே சீவசமத்துவம் நிறுத்தவும் செய்கின்றது. மாந்தர்களிடையே மேற்போக்காக பல பேதங்கள் இருப்பினும் மூலத்தை அனைவரும் முத்தி நோக்கியே பயணம் செய்கின்றனர் என்பதின் அனைவரும் ஒன்றேயாம்
இதனால் வள்ளுவப் பெருந்தகை பிராமணீயத்தின் வர்ணதர்மத்தை போற்றவில்லை என்றும் தெரிகின்றது. அங்கு சீவசமத்துவத்திற்கு இடமில்லை.
இனி வாலறிவாவது எவ்வித ஞான அந்தகாரமும் ஆகவே இருளும் இல்லாத தெள்ளிய ஞானமாகும். இந்த ஞானம் அநாதியே நிமலனாகிய இறைவனுக்ககே உரிய ஒன்றாக இருக்க இதனையே இறைவனது தற்பண்பாகக் கொண்டு குறிக்கப்படுகின்றான்.
நற்றாள் என்பது இறைவனை இருதாளகள் உடைய ஓர் தெய்வம் என்றவாறு உருவகப்படுத்தி அதன்வழி பெயரிட்டு அழைத்தல் ஆகும். இறைவன் தன்னை இவ்வாறு காட்டியருளியதாகவும் இருக்கலாம். உலகை எல்லாம் சிவத் தத்துவங்களாகிய நாத விந்து எனும் இரு சிவ தத்துவங்களைக் கொண்டு ஆணென பெணென உயிர்களை தோற்றுவித்தும் மேலும் அகத்தே இடக்லை பிங்கலை சுழிமுனை நாட்டங்களோடு வீடுபேறு நாடும் மேரு நாடியையும் பதிவு செய்து பல திருவிளையாட்லகளை இயற்றி அவற்றை பொருட்கல்வி தற்கல்வி இறைக்கல்வி என்றவாறு கற்க வைக்கும் இறைவனது அருளாட்சியாக இருக்கலாம்.
எல்லா ஆன்மாக்கள் அகத்தேயும் முத்தி முன்னறிவு உண்டு. அதன் ஊந்துதல்கட்கு இடம் தந்து மயங்கி விழாது எல்லா வகையிலும் கற்றுக் கற்று மேம்பட்டு அகத்தே செறிந்திருக்கும் அஞ்ஞானம் போக்கி ஞான அந்தகாரம் போக்கி சுத்தமாகி தெள்ளிய ஞானம் பெற்று சுடர்தலும் அதற்கு காரணமாக இருக்கின்ற நாதம் விந்து எனும் சிவதத்துவங்களை அசைக்கும் இறைவனது திருத்தாள்களை தொழுது நன்றி பாராட்டுதலுமே கற்று கற்று மேம்படுதலின் நற்பயனாகும் என்கின்றார் கற்றலையே பெருங் சாதனமாகச் சாதித்துச் சென்றுள்ள நம் வள்ளுவர்.
தொடரும்
உலகன்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 12
மேலே எந்நெறி வழி வாழ்ந்தால் நீண்ட ஆயுளோடு நோய்நொடியின்றி அகால மரணம் தவிர்த்து நலமே வாழலாம் என்று மருத்துவம் சார்ந்த ஓர் விளக்கம் தந்த பிறகு இப்பொழுது உளவியல் சார்ந்த ஓர் விளக்கமாக மனக் கவலை மாற்றல் அல்லது போக்கி யாண்டும் உவகையோடும் உறசாகத்தோடும் வாழ்வத்தற்கு ஓர் உபாயம் தருகின்றார் நம் வள்ளுவர்.
7.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
தனக்கு உவமை இலாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்: தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது தானே தனக்குத் தலைவனாக இருக்கும் இறைவனது திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லால், மனக் கவலை மாற்றல் அரிது: உள்லத்தில் எழக்கூடிய கவலைகள் கலக்கங்கள் மற்றும் வேதனை விரக்தி போன்ற உளநிலைகளை மாற்றி இல்லாது போக்குவது அருமை என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.
தனக்கு உவமை இல்லாத இறைவன் உருவப்பொலிவோடு வரும் எத்தெய்வமும் அல்ல, இன்ன உரு என்று சொல்ல முடியாத தெய்வங்களின் தெய்வமாகும். இதனால் தானே தனக்குத் தலைவனாகிய தற்பரன் எனின் ஒக்கும். இதனால் இறைவன் அநாதியுமாகின்றான்.
இனி தாள் சேர்தலாவது இறைவனை ஞான கண்ணின் கண்டு அவனது திருவடிகளை தரிசித்து அதன் வழி இறைவனையேக் கண்டு அவனோடு ஒன்றித்து வேறற நிற்பதாகும்.
இறைவன் தனக்கு உவமை இல்லாதவன் என்ற போதிலும் திருத்தாள்களைக் குறிப்பது இறைவனது திருவுருவம் யாதென்று காணமுடியாத போதிலும் அவனது திருகூத்துக்களை கிருத்தியங்களைக் காண்பது உண்மை என தாள் சேர்தல் கூடிவரும் ஒன்றே யாம்.
இனி இந்த அரிய தரிசனமே மனக் கவலைகளை எல்லாம் போக்கும் மருந்தும் ஆகும் என்கின்றார் நம் வள்ளுவர். இந்தத் திருவடிகளைக் கானக் காண உலகத்தில் நடப்பதெல்லாம் இறைவனது திருவிளையாடலே, அவனது கிருத்தியங்களே என்றெல்லாம் உணர வர, தனக்கு நேரும் நல்லதும் கெட்டதும் இறைவனது திருவிளையாடல்களே என்று அறிய வர, அவையும் யாதாவதோர் வகையில் நன்மைக்கே என்ற தெளிவு உண்டாக எழக்கூடிய மனக் கவலைகள் எல்லாம் எழாதுபோம் என்றவாறு.
மேலும் மனக் கவலை என்பது யான் எனது எனும் அகந்தையால் வருவது என்பதின், இறைவனோடு இவ்வாறு ஒன்றித்து நிற்க, இவ்வாறான அகந்தையைத் தோற்றுவிக்கும் ஆணவமலத்தின் தொந்தனை இல்லாது போம் என்பதின், மனக் கவலையும் எழாதாம். மேலும் உருவ தெய்வங்களையோ அல்லது கடவுள் ஆக்கப்பட்ட மன்னர்கள் இருடிகள் போன்றாரைத் தொழுதால் ஆணவ மலம் நீங்காதென்பதின் மனக் கவலையும் நீங்காதாம்
தொடரும்
உலகன்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 13
மேலே மனக் கவலைகளைப் போக்கும் நல்லவோர் உபாயம் அருளிய வள்ளுவப் பெருந்தகை தொடர்புடைய ஏனைய மனக் குழப்பங்கள் ஏமாற்றங்கள் குற்றவுணர்வுகள் அதனால் வரக்கூடிய அச்சங்கள் பீதிகள் போன்றவற்றை நீக்கும் உபாயத்தையும் ஒருவாறு விளக்கி அருளுகின்றார் அடுத்து வரும் குறட்பாவில்.
8.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்: பெருங்கடலென விரிந்தும் பரந்தும் ஆழ்ந்தும் கிடக்கும் அறவுணர்களை அருளும் அந்தணனாகிய இறைவனது தாள் சேர்ந்தார்க்கு அல்லால், பிறவாழி நீந்தல் அரிது : பிற வேட்கைகளால் எழக்கூடிய கடல் போன்ற உணர்வின் உலகை நீந்தி கரைசேருதல் அரிதாம் என்கின்றார் நம் வள்ளுவர்
அறவாழியாவது பல்வேறு அறவுணர்கள் ஆகும் இவை பரந்து விரிந்து சில மிக ஆழமானதாகவும் இருக்க அவற்றை எல்லாம் தொகுத்து ஓர் கடல் என உருவகிக்கின்றார் ஆசிரியர். அறவுணர்வு என்பது ஒன்றல்ல. உயிருக்கு உயிர் வேறுபடும் பண்பது. உயிர்களின் பக்கவம் வேறுபட அவர்கள் தம் பக்குவத்திற்கு ஏற்ப தக்க அறவுணர்வினை அருளி அவர்களை நல்வழியில் ஊய்விப்பதே இறைவனது திருநோக்காகும்.
இனி இங்கு ஏன் இறைவனை அந்தணன் என்று கூறுகின்றார் எனின், இறைவன் அன்பே வடிவாக இருப்பதின் காரண்மாகவேயாம். ‘அம்’ என்றால் அழகு. ‘தண்-அன்’ என்றால் குளிர்விக்கும் எல்லா உயிர்களின் வேட்கைகளை தணிவிக்கும் பண்பினன் என்று பொருள் படும். அறவுணர்கள் அனைத்தும் முடிவில் அன்புணர்வில் முடிவதின் இறைவனை ‘அந்தணன்” என்கின்றார் போலும்
இனி ‘பிறவாழி’ யாவது பிற வேட்கைகளின் எழும் கடல்போன்ற பரந்து விரிந்த உணர்வுகள் ஆகும். இவற்றை இன்ப நாட்டம் செல்வ நாட்டம் அதிகார நாட்டம் அறிவு நாட்டம் என்றெல்லாம் அடையாளம் காணலாம்.
இந்த நாட்டங்கள் அனைத்தும் அறவுணர்வுகளைத் தோற்றுவிப்பதின் அறவுணர்வுகட்கெல்லாம் மூலமாக இருக்கும் இறைவனை அடையாதவர்கள் இத்தகைய வேட்கைகளின் வழி எழக்கூடிய கடல்போன்ற உணர்வுகளின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது என்பதாம்.
அறவுணர்வினை புண்னிய பாவ உணர்வுகளை எழுப்பவல்ல எல்லா ஆழமான வேட்கைகளை எல்லாம் இறைவனையே அடையும் நோக்கினவாகும். இன்ப நாட்டம் இறைவனை அடைந்து அவனோடு ஒன்றித்து என்றும் மாறா பேரின்பம் தூய்க்க வேண்டுமெனும் மூல வேட்கையின் திர்பாகும். இதேப் போல ஏனை நாட்டங்களும் அவற்றால் எழக்கூடிய கடல்போன்ற உணர்வுகளும் ஆகும்.
இறைவனை அடைந்தால் வீடுபேறு உறுதியாவதின், இந்த அறவாழியையும் பிறவாழிகளையும் நீந்தி இறைவனது திருத்தாள்கள் அடைதல் எனும் கரைசேருதல் மெய்யாகும் என்பதாம்
உலகன்
தொடரும்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 14
ஆன்மாக்கள் பல ஆழிழுப்புகட்கு ஆளாகி அவதி உழக்கின்றனர். இந்த ஆழிழுப்புகளால் உண்டாகும் உணர்வுகளை எண்ணங்களை எல்லாம் ஓர் பெருங் கடல் என உருவகப்படுத்தி அதில் தலையான அறவுணர்களின் பெருங்கடல் தலைவனாக அன்பேத் தானாக நிற்கும் இறைவனை அந்தணனாகக் கண்டு அவன் திருவடிகளைச் சேர்தலே எல்லா உணர்வாழிகளைக் கடந்து கரைசேர்தல் கூடும் என்று உணர்த்திய பின் இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குதலும் வேண்டற்பாலதே என்பதாக அடுத்துவருங் குறட்பாவில் கூறுகின்றார் தெள்ளிய அறிவின் திருவள்ளுவர்.
9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
கோளில் பொறியின்: ஆன்மாவின் காணுதற் கருவிகளாகிய ஐம்புலன்களும் பொருள்நுகர்ச்சியின் போது ஓர் நாட்டமின்றி நுகர்ந்தால், குணமிலவே: அவற்றால் எந்த நன்மையும் இலவாம். அதேப்போல எண்குணத்தான் தாளை வணக்காத் தலை: எண்குணத்தான் எனத் தன்னை ஆன்மாக்களுக்கு காட்டி அருளும் இறைவனை அவனது அருளை நினைத்து சிரம் தாழ்த்தி வணங்காத் தலையுமாம் அதாவது அச்சிரசால் எவ்வித நன்மையும் இல்லையாம்.
ஓர் நாட்டமின்றி அல்லது ஓர்குறிக்கோளின்றி ஐம்புலன்கள் செயல்பட்டால் எவ்வித பொருளுணர்வும் தோன்றாது. புலன்களை ஊடுறுவி மூளையில் விழும் தன்மாத்திரைகள்( sense data) வீணே பதிவாகி ஆனால் இது இன்னது எனும் சுட்டுணர்வு யாதுமின்றி சில கணங்களின் அழிந்துவிடும். இதுவே குணமிலவே அதாவது எவ்வித நன்மையும் இல்லை எனப்படுகின்றது. ஐம்புலன்களின் வழியாக ஓர் நிருவிகற்ப உணர்வு சவிகற்ப உனர்வு போன்ற ஓர் பொருளுணர்வைத் தேற்ற ஆன்மாவின் அகத்தே ஓர் நாட்டம் ( intention) இருக்கவேண்டும்
பொறிகள் சிதிலம் அடையாது நன்றாக இருந்தும் நாட்டம் உயிரோடு ஊர்ந்து வராத நிலையில் பொருளுணர்வைத் தேற்றாத போது அவற்றால் பயன் இல்லாதது போல் இறைவனைத் தொழாத இந்த சிரசாலும் பயன் யாதும் இல்லை, குணம் யாதும் இல்லை என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.
இறைவன் அருளே வடிவாகி நிற்க உயிர்கட்கு ஓர் உலகத்தையும் உடம்பையும் அதனால் பல அறிதற்கருவிகள் போன்றவற்றையும் படைத்து பலவாறு கற்று அஞ்ஞான இருள்போக்கி ஞானத் தெளிவு பெற்று மீண்டும் பிறவாமை எய்யத் தரும் இறைவனது அருளை மறவாது, நன்றி பெருக்கோடு நினைத்து அவனை சிரம் தாழ்த்தி வணக்குவது செய்ய வேண்டிய ஒன்றாகும். நல்லது செய்வாரை நன்றி பெருக்கோடு வணங்குவது தக்கவொரு அறச் செயலாகும்
இனி ஏன் இறைவனை இங்கு எண்குணத்தான் என்கின்றார்?
இறைவனுக்கு தற்சொரூப நிலையில் குணங்குறி யாதுமில்லை. இதனையே ‘தனக்கு உவமையிலாதான்” என்று மேலே உணர்த்தியருளினார். ஆனால் இறைவன் தன்னை ஆன்மாக்களுக்கு குணங்கள் உடையவனாக பல திருவிளையாடல்கள் வழி உணர்த்தி அருளும்போது, அந்தத் திருவிளையாடல்களை எல்லாம் தொகுத்து உணரும் போது இறைவன் எண்குணத்தானாக தன்னைக் காட்டி அருளுகின்றான் என்பது தெளிவாகும்
இதனை இனி இன்னும் சற்று ஆழமாகவும் விரிவாகவும் அலசி இறைவனைப் பற்றி வள்ளுவப் பெருந்தகை என்னதான் கூற வருகின்றார் என்பதையும் ஏன் அவனை சிரந் தாழ்த்தித் தொழவேண்டும் என்பதையும் தெளிவோம்
தொடரும்
உலகன்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 15
எல்லா ஆன்மாக்களும் மீண்டும் பிறவாமை பெற்றுய்ய எண்குணத்தானாகிய இறைவனை சிரம் தாழ்த்தித் தொழவேண்டும் இதுதான் வள்ளுவரின் உபதேச மொழி. ஏன் இவ்வாறு கூறுகினார்? என்பதே நம் கேள்வி,
இறைவனை சைவர்கள் சத்தன் சத்யுத்தன் பிரவிருத்தன் என்பர். இறைவன தானே தானாக தற்பரனாக இருப்பது சத்தன் ஆகும். சத்தியாகிய அம்மையோடு இணைந்து சத்திமானாக இருப்பது சத்யுத்தன் நிலை ஆகும். இனி உலகினை தோற்றுவித்தும் அதனை பலவாறு இயக்கி ஆன்மாக்கள் கற்று மும்மலம் போக்கி சுத்தமாகி வீடுபேறு அடைய உதவும் நிலையே பிரவித்தன் ஆகும்.
இந்த பிரவிருத்தனே இங்கு எண்குணத்தான் என்று திருவள்ளுவரால் கூறப்படுகின்றான் என்று தெரிகின்றது.
எண்குணங்கள் யாவை?
பரமேலழகர் சைவ ஆகமங்களைத் தழுவி இவ்வாறு விளக்குவார்.
தன் வயத்தன் ஆதல், தூய உடம்பினைன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல். இயல்பாகவே பாசங்கள் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகியவை ஆகும்.
இறைவனுக்கு சாற்றப்படும் இக்குணங்கள் அநேகமாக ஆன்மாக்களின் அடிப்படை குணங்களை அறிந்து அவற்றின் வழியாக இறைகுணங்களை அறிய வந்ததாக இருக்கலாம். இறைவனது திருவிளையாடல்கள் இவை இரண்டிற்கும் மூலமாக இருக்கலாம்
இவ்வகையில் மேலே விரிக்கப்படும் இறைகுணங்களை மறித்து நோக்கினால் ஆன்மாக்களின் அடிப்படை குணங்களை அறிய வருவேம்
அவை இவ்வாறு வரும்: பிற வயத்தனாக இருத்தல், மலங்களின் தாக்கத்தால் அழுக்கு உடம்பினனாக இருத்தல், உணர்த்தவே உணரும் சித்தாகத் திகழ்தல், அறிவும் அறியாமையும் கலந்த பொருளாக இருத்தல், அநாதியே பாசங்களின் கட்டுண்டு கிடத்தல், தனக்கென அருட்குணம் இல்லாதிருப்பது, தனக்கென எவ்வித ஆற்றலும் இல்லாதிருத்தல், சிற்றின்பமே இயல்பாக இருத்தல் என்றவாறு ஆன்மாக்களின் அடிப்படை குணங்களை நாம் அறிய வருகின்றோம்
இவற்றை இன்னும் ஆய்ந்தால் ஆன்மாக்கள் எண் சித்திகள் புத்திகள் என்றவாறு சித்தர்கள் கணித்த ஆன்ம இயல்புகள் எவ்வாறு வந்துள்ளன என்றும் தெரிய வரும் போலும். மேலும் இவ்வகையில் இறைவனது செயலகள் வழி அவனது எண்குணங்களை அறியத்தரும் இறைக் கலவியும் இன்னும் மேம்பட்டு சைவத்தின் பஞ்சகலைகள் பஞ்சகிருத்தியங்கள் போன்ற கோட்பாடுகட்கு இட்டுச் செல்லும் போலும்
ஆயினும் இங்கு நாம் கருதவேண்டியது ஆன்மாவின் குணங்களில் அறிவோடு அறியாமையும் செறிந்திருப்பதும் அதற்குக் காரணமாக மலங்களால் பந்திக்க்பட்டு அழுக்கு உடம்பினனாக இருத்தல் போன்றவையாகும். ஆன்மாக்களுக்கு தானே தனக்கு ஞானாசிரியனாக இருந்து தமது அறியாமையை போக்கி மீண்டும் பிறவாமை அடைய முடியாது. மானிட ஞான குரவர்கள் சுருதிகள் போன்றவையும் முடிவில் இறைவனிடமே இட்டுச் செல்லும். ஆக இயல்பாகவே சரவக்ஞனாக இருக்கும் பரம்பொருளே இந்த எண்குனத்து இறைவனே ஞானாசிரியனாக அமர்ந்தாலே ஒழிய ஆன்மாக்களும் கிஞ்சிக்கனாக இருப்பதுபோக்கி சர்வகஞனாக உயர்ந்து வீடுபேறு அடைய முடியாது என்பதால் ஆன்மாக்கள் அனைத்தும் மீண்டும் பிறவாமை மகழ இறைவனை சிரம் தாழ்த்தி வணங்கவேண்டியது அவசியம் ஆகின்றது.
இறைவனது அருளாலன்றி ஆன்மாக்களும் சர்வக்ஞன் ஆதல் முடியாது என்பதின் இவ்வாறு.
உலகன்
தொடரும்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 16
மேலே அறவுணர்கள அடுதடுத்து கடல் அலைகள் என வந்துகொண்டே இருக்க அதனை ‘அறவாழி” என்று உவமித்துக் கூறினார். அதேபோல பிற ஆழிகளாக பொருள் நாட்டம் இன்ப நாட்டம் அதிகார நாட்டம் போன்றவையும் அடுத்தடுத்து ஆன்மாவை அலை அலையெனத் தாக்க அவறையும் ஆழி அதாவது பெருங்க்டல் என்றே உவமைப்படுத்தினார். இனி இத்தகைய நாட்டங்கள் எழுவதற்கு இடம் உடம்போடு கூடிய வாழ்க்கையே யாக அங்கு பிறப்பு என்பது விடாது அடுத்தடுத்து வந்துகொண்டே இருப்பதின் அதனையும் ‘பிறவிப் பெருங்கடல்’ என்கின்றார். இதன்வழீ மெய்யுணர்தலின் மெய்யுணர்வுத் தேற்றலின் நோக்காகிய மீண்டும் பிறவாமை அடைவது பற்றி இந்த அதிகாரத்தின் கடைசி குறட்பாவில் விளக்கி அருளுகின்றார் ஓர் அற்புதமான மெய்ஞான புரட்சியின் வித்தகர் நம் திருவள்ளுவர்.
10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தவர்
(இறைவன் அடி சேர்ந்தார்) பிறவிப்பெருங்கடல் நீந்துவர்: மாயாகாரிய உடம்போடு பிறந்து இறந்து மீண்டும் பிறப்பதாகிய இந்த பிறவிப் பெருக்கடலை நீந்தி கரைசேர்ந்து மீண்டும் பிறவாமை எய்துவர் இறைவனது திருவடிகள் சேர்ந்தவர்கள், நீந்தார் இறைவன அடி சேராதவர்: யார் இவ்வாறு இறைவனடி சேராதிருக்கின்றார்களோ அவர்கள் இப்பெருங்கடலை நீந்த முடியாது மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வர் என்பதாம்
‘பிறவிப் பெருங்கடல் நீந்தல்” என்பது அடுத்தடுத்து விடாது வரும் உடம்போடு கூடிய பலவேறு பிறப்புகளை எடுத்துக்கொண்டே இருப்பதிலிருந்து விடுபட்டு கரை சேர்ந்து மீண்டும் இவ்வாறு உடம்போடு பிறந்து பூவுலகில் உழலாது இறைவனது திருவடிகளிலேயே கிடப்பதாகும்
பிறப்பு என்பது மும்மலத் தாக்கத்தால் வருவது. இருளாகிய ஆணவ மலம் இருவினையாகிய கனமத் தளை ஐம்புல நுகர்ச்சியின் மாயாகாரியப் பொருட்களுக்கு மயங்குவதாகிய மாயா மலம் ஆகியவை விட்டு நீங்கா வரை பிறப்பு இருந்துகொண்டே இருக்க அதனால் மரணமும் இருந்துகொண்டே இரூக்கும். இந்தக மரணம் ஆணமலத்தால் விஷமெனத் தாக்கும் அத்னால் வருவதின் பல நோய்கட்கும் மனவேதனைகட்கும் காரணமாக இருப்பதாகும்.
இவற்றினின்று ஆன்மாக்களை விடுவித்து அவற்றை சுத்தமாக்கி நிமலம் ஆக்கும் பொருட்டே இறைவன் ஆன்மாக்களுக்கு ஓர் உடம்போடு கூடிய பிறப்பையும் அதற்குத் தக ஓர் உலகையும் அருளுகின்றான். இந்தப் பிறப்பும் கற்று கற்று மேம்பட்டு ஞான அந்தகாரத்தைத் தரும் ஆணவ மலத் தொடக்கு அறுத்து அதன்வழியாக கன்ம மலம் மாயா மலம் ஆகியவற்றையும் அகத்தே இல்லாது போக்குவதற்காகும்.
அகத்தே மும்மலங்களும் நீக்கப்பட பிறந்து உழல்வதற்குக் காரணம் இல்லாது போக, இறைவன் இத்தகைய ஆன்மாகளுக்கு வீடு பேறு அருளி தன் அடிகீழ் அமர்த்துவன் என்பதாம்
இங்கு ‘இறைவன் அடி சேர்தல்” என்றால் என்ன?
‘தனக்கு உவமை இல்லாதானாகிய’ இறைவனுக்கு உருவம் யாதும் இருக்க முடியாது. உருவம் இருந்தால் இறைவன் சர்வ வியாபகன் என்பதுபோய் அவன் இல்லாத இடமும் உண்டு என்றறகி விழும், இறைவன் மெய்கண்டார் பிற்காலத்தில் கூறுவது போல ‘வாக்கு மனாதீத கோசரம்” ஆகும். இங்கு ‘கோசர்ம்’ என்றால் மூலமான தெய்வீகமான ஓர் இயக்கம் ஆகும்.
இறைவனுக்கு உருவம் இல்லை எனினும் அவன் இயங்கத்தான் இந்த உலகமே இயங்குகின்றது. அவன இயங்குவதை. பலவகையான கிருத்தியங்கள் புரிவதையே இங்கு ‘அடி’ என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார். இது இறைவனுக்கு ஓர் உருவம் கற்பிப்பதல்ல,
ஆக ‘அடி சேர்தல்’ என்பது இறைவனது பரகிருத்தியங்களை உணர்ந்து அவற்றாலேயேத் தான் கற்று மேம்பட்டு அகத்துச் செறிந்திருக்கும் மலமாசுக்களைப் போக்கி சுத்தமாகி அதனால் இறைவனோடு ஏகனாகி ஒன்றித்து நிற்கும் பேறு பெற்று மீண்டும் பிறவாமையும் மகிழ்வதாகும். இந்த முத்தி நிலையில் ஆன்மா உண்டு அங்கும் இறைவனது அருளை வேட்டு நிற்கும் ஒன்றென அது பிரமம் ஆகி இல்லாது போகாது. இறைவனது திருவடிகள் அடைந்து மிண்டும் பிறவாது ஆனால் இறைவனோடு வேறற ஒன்றித்து நின்று ஆனந்த சிவத் தாண்டவமாகவே இறைவனோடு ஒன்றித்து ஆடியும் ஆனந்தித்தும் இருப்பதாகும்
உலகன்
தொடரும்
வள்ளுவரின் சமயாதீதம்- ஆதிபகவன்
இடுகை 17
முடிவுரை: இந்துத்துவாவும் வள்ளுவமும்
இன்று பாரதத்தின் அரசியல் செல்வாக்கு மிகுந்தகாக இருக்கின்ற கோட்பாடுகள் இந்துத்துவாவும் அதனை எதிர்க்கும் secularism எனப்படும் மதச் சார்பற்ற ஆனால் சமயாதீதம் அல்லாத ஓர் குழப்பமான கோட்பாடும் தான். இவை இரண்டுமே வடபுலத்து அரசியல் செல்வாக்கு மிக்க கோட்பாடுகள், தமிழர்களின் மீது திணிக்கப்படுள்ளவை. அவர்களின் பண்பாட்டையே அழித்துக்கொண்டிருப்பவை
தமிழர்களின் பண்பாட்டு உயிர்நாடி சுமேரியக் காலத்திலிருந்து வந்துள்ள ஏரணவியல் சான்ற மெய் நெறியாகும். இது நூலிய அறிவியல் நெறி என்பதால் அது சார்புச் சமயங்களில் ஒன்றல்லாது சம்யாதீத நெறியாகத் தான் இருக்கவல்லது. வள்ளுவம் இவ்வகையில் சுத்த சமயாதீதம் ஆகும். சார்பு சமயங்களாகிய சைவம் வைணவம் சாக்தம் போன்றவற்றை வாழ்ந்தாலும் அவற்றையும் கடந்து சுத்தமாக வேண்டும் என்று பிறகாலத்தில் எழுந்த சமயாதீதத்தோடு ஒப்பிட வள்ளுவம் என்பது ‘சுத்த சமயாதீதம்’ ஆகும். எல்லா சமயங்களின் உட்சமயமே இந்த சுத்த சமயாதீதம் விளக்கும் சமய வாழ்க்கையாகும். இதனாலேயே நன்றாக அறிந்திருந்த போதிலும் சிவன் திருமால் அம்மை திருருகன் என்றெல்லாம் பிற புலவர்கள் போல் அல்லாது அந்தப் பெயர்களை குறிப்பிடுவதையே தவிர்த்துள்ளார் நம் வள்ளுவர்.
இந்த சுத்த சமயாதீதமே மேலே முதல் அதிகாரத்து பத்து குறட்பாக்களிலும் விளக்கப்பட்டது. இந்த 10 குறட்பாக்களும் உள்ளபடியே மிக ஆழமான அற்புதமான சூத்திரங்கள் ஆகும். உரை எழுதி விளக்கினாலே ஒழிய அவற்றின் மெய்ப்பொருள் தெற்றெனத் தெரிய வாரா.
இந்து சமயம் இருக்கின்றது ஆனால் இந்துத்துவம் இல்லை
இந்து சமயம் என்பது சைவம் சாக்தம் வைணவம் வேதியம் என்றும் சிலர் கருத்துப்படி புத்தம் சமணம் சீக்கியம் போன்றவற்றை உள்ளடக்கி ஆனால் புறச் சமயங்களாகிய இசுலாம் கிறித்துவம் போன்றவற்றை அடக்கா ஓர் அடையாளக் குறியாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு இந்து சமயத்தை அடையாளங் கண்டு இந்துதுத்வம் என்பது இவற்றின் ஊடே ஓடும் ஓர் பொதுவியல்பு( essence, Hinduness) என்பார் சார்வாக்கார் போன்ற சிந்தனையாளர்கள்
இப்படிப்பட்ட பொதுவியல்பு இருக்கின்றதா என்றால் அது இல்லை வெறுங் கற்பனையே என்றுதான் தெரிகின்றது.
ஆனால் இந்த இந்து சமயங்களை மாத்திரம் அல்லாது எல்லா சமயங்களின் ஊடே ஓடும் ஓர் பொதுமைக் கூறு இருக்கின்றதே, அதைத்தானே திருவள்ளுவர் தமது திருக்குறளில் விரிக்கின்றார்?
உலகின் எல்லா சமயங்களையும் பிணைக்கின்ற ஓர் பொதுவியற்கூறு இந்த சமயங்களின் ஊடே ஓடும் உட்சமயம் என்று கூறத் தக்க ஒன்றே யாகும். இந்த உடசமயமே வள்ளுவம் பகரும் சுத்த சமயாதீதமும் ஆகும்
The inner dimesnsions of all religions is the Udsamayam, that which is arrived at by the Pure Transcendance of all sectarian religions
இந்து சமயத்தின் பொதுவியற் கூறாக இந்துத்துவம் என்று யாதும் இல்லை, உடசமயமாகிய அது இசுலாம் கிறித்துவம் போன்ற எல்லா சமயங்களிலும் காண வரக்கூடிய ஒன்றே என்பதால், அது இந்து சமயத்திற்கு மாத்திரம் உரிய ஒன்றல்ல.
ஆயினும் இந்து சமயங்களாகிய சைவ வைணவம் சாக்தம் போன்றவை இதனை ஓரளவு உணர்ந்திருக்க அதனால மத மாற்றங்கள் செய்யாதிருக்க கிறித்துவம் இசுலாம் போன்றவை இதனை வேண்டிய அளவிற்கு அறியாதே இருக்கின்றன. சூஃபி இசுலாமியர்களும் மற்றும் கிறித்துவ ஞானிகளும் இதனை ஒருவாறு உணர்ந்திருக்க, இதனால் மதவெறி இல்லாதிருக்க சாதாரண கிறித்டுவர்களும் இசுலாமியர்களும் அப்படி இலை என்றே நினைக்கின்றேன்.
ஆயினும் திருவள்ளுவம் பரவ காலப்போக்கில் இந்த பொறைநிலை மெய்யாகும் என்றே நினைக்கின்றேன்
ஏறக்குறைய எல்லா சமயத்தவர்களும் திருக்குறளை தமது ஓத்து என்று கூறுவதின் காரணமே இதுதான். ஓர் கிறித்துவன் கூட இயேசுவின் போதனைகளை திருகுறளில் காண்கின்றானென்றால், வள்ளுவர் பகர்ந்துள்ள உட்சமயக் கூறுகள் அவன் சமயத்திலும் காண வருகின்றது என்றே பொருள் கொள்ள வேண்டும்
எதிர்காலத்தில் பாரதம் எங்கும் வள்ளுவமே ஆட்சி செய்தால் மதவெறிகளும் சமயச் சண்டை சச்சரவுகளும் குறைந்து அல்லது இல்லாது போய் ஓர் சமயப் பொறை மிகுந்த நாடாக பார்தம் எழும் என்றே நினைகின்றேன்
வள்ளுவரின் சமயாதீதம் முற்றும்
உலகன்
...
[Message clipped]
நின்னா தேமொழிமிக்க நன்றி. ஆய்விற்குரிய பல விசயங்கள். ஆயினும் தாங்கள் சுட்டும் கட்டுரைகள் சுமேருத் தமிழை உடன்படுத்தியதாகத் தெரியவில்லை,சமண புத்த சமயக் கூறுகள் அங்கும் உண்டு, இந்தியாவில் வளர்ந்த எல்லா மதங்களும் ஒருவகையில் சுமெரு பண்பாட்டிலிருந்து முகிழ்த்தவையே யாகும்.புத்தர்களின் தம்மபாதம் சுமேரிய் சூருபாக்கின் 'நெறி" ( nari) போன்ற ஓர் நன்னெறி நூல்தான்வர்ண்தர்மம் இந்திய மண்னில் அதிலும் குறிப்பாக வடபுலத்தில் தோன்றியதாக இருக்கலாம். சுமேரிய இலக்கியத்தில் காண முடியவில்லை,ஆயினும் இந்த சமண புத்த ஒற்றுமைகளில் ஒன்று மிகத் தெளிவாகத் தெரிகின்றது, அதுவே அவற்றின் வீழ்ச்சிக்கும் காரண்மாக இருக்கலாம்.புத்தத்திலும் சமணத்திலும் தெய்வ வழிபாடு இல்லை. மாறாக மாமன்னர்களாகிய மகாவீரர் கௌதமர் போன்றேரே தெய்வத்தி இடத்தில் அமர்த்தப் பட்டு மக்கள தெய்வமே என தொழுமாறும் வற்புறுத்தப்பட்டுள்ளர்நிற்கும் புததர் தூங்கும் புத்தர் சிரிக்கும் புத்தர் என்று ஆயிரக்கணக்கான புத்தர் வடிவங்களே புத்த சமயமாக இருக்கின்றது. ஓர் மனிதனையே தெய்வமாக்கியப் பிழையை இங்கே காண்கின்றோம்சமணத்தில் தெய்வ வழிபாடு சிறிது இருந்தாலும் பெரிதும் தொழப்படுவது மகவீரர் போன்ற மன்னர்கள் அதாவது மனிதர்கள்தானே?மனிதர்களை தெய்வமாக்கி அவர்க்ளையே தொழவைத்து தெய்வங்களை பின் தள்ளி புறக்கணித்தப் பிழையே அவர்களது வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று என்று கொளத் தகும்
தவறான கருத்து. இறைவனை நெருங்கி அவனோடு ஒன்றித்து நின்றிருந்தால், தற்போது உலகத்தில் மக்கள் தொகைபாதியாக குறைந்திருக்கும்.
Hindutva = Hindu + thathuvam Hindukkilin thathuvam or thanmai. Our Indian secularism is special and instead if negating any religion, it gives equal respect to all or any religion, again this concept evolved from Hindu pluralistic religion and for a Hindu islam, christanity are all acceptable, which we can see in peaceful traditional villages. There could be some passages in other religious faiths avoiding other religions. So, in essence hindutva shall mean what Dr loha means of samayaathiyam.. Robbing of hindutva word to mean anything else is very similar to robbing of mano-neethi by manu-neethi. Now, the religious hardliners are those easily upset and go angry, they have to train themselves.... We should widely publish the results of Dr Loga for everyone in the world to reflect and act.
__._,_.___
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___