கனி இருப்பக் காய் உண்பது தவறா?

392 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 3, 2017, 11:02:56 AM11/3/17
to mintamil

https://thiruththam.blogspot.in/2017/11/blog-post.html

கனி இருப்பக் காய் உண்ணலாமா?

முன்னுரை:

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதி மிடுக்குடன் முழக்கிய பெருமைக்குரியவர் ஐயன் வள்ளுவன். பாரதியின் மொழிக்கேற்ப, வள்ளுவர் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்துமே ஆழ்ந்த பொருளுடையவை. இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள மீள் ஆய்வுப் பயிற்சி தேவை. ஏனென்றால், இப்போது நம் கைவசமுள்ள திருக்குறள் ஒலைச்சுவடியானது வள்ளுவரால் எழுதப்பட்டதல்ல. பலநூறு ஆண்டுகளாகப் பல பேர்களால் பலப்பல படிகளாக எடுக்கப்பட்டு அவற்றில் ஏதோ ஒன்று நம்மிடம் கிடைத்து அது நூலாக வெளிவந்து நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

படியெடுத்து எழுதும்போது எழுத்துப்பிழைகள் உண்டாவது வெகு இயல்பான ஒன்று என்று நாம் அனைவரும் அறிவோம். இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரு கட்டுரையினைப் படியெடுத்து எழுதும்போதே எழுத்துப்பிழைகள் உண்டாகும்போது 1330 குறள்களைப் படியெடுத்து எழுதியவர் எழுத்துப் பிழைகளைச் செய்திருக்க மாட்டார் என்று நம்புவது ' கண்ணை மூடிக்கொண்டுத் தீயைத் தொட்டால் சுடாது ' என்று நம்புவதற்குச் சமமாகும். இதே கருத்தினைத் 'திருக்குறள் மெய்ப்பொருள் உரை' யில் பெருஞ்சித்திரனார் கீழ்க்காண்டவாறு கூறுகிறார்:

"பேராசிரியர் சாரங்கபாணி அவர்களின் திருக்குறட் சிந்தனைகள்-பக் 124 (1979) புள்ளிக் கணக்கின்படி, அறத்துப்பாலின் 380 குறட்பாக்களில் 217க் கும், பொருட்பாலின் 700 பாக்களில், 487க்கும், காமத்துப்பாலின் 250 கு றட்பாக்களில் 196க்கும், ஆக மொத்தம் 1330 குறட்பாக்களில் 900 பாக்களுக்கு உரைவேறுபாடுகள் காணப்படுகின்றன. "முப்பால் மூலநூலில் இல்லாத கருத்து முரண்பாட்டிற்கு இன்னுமொரு காரணம், திருக்குறளில் அவ்வப்போது பல பாட பேதங்கள் புகுத்தப் பட்டமையே. ஒரு பழைய நூலில் பாட வேற்றுமைகள் தவிர்க்க இயலாதவைதாம். ஆனால், நூற்கருத்தையும் பொருளையும் மாற்றியமைக்கும் பாட பேதங்கள் மூல நூலின் முழுக்கருத்தில் சிதிலமுண்டாக்கி விடுகின் "திருக்குறளுக்குப் பல நூற்றாண்டுகளாகச் சரியான உரை எழுதப்படாமையும், பெரும்பாலானவர்களால் அந்நூல் அடிக்கடி பயிலப் படாமையும், ஏடு எழுதுவோரால் ஏற்பட்ட குறைபாடுகளும், படிகள் எடுக்கும் போது உருவான இயல்பான தவறுகளும், இலக்கண முறைமையை எண்ணிப் புகுத்தப்பட்ட திருத்தங்களும், திருக்குறள் இலக்கிய நூல், அறநூல் என்ற அணுகுமுறையால் உந்தப்பட்டு, இயைபு காண்பதற்காக எழுந்த வேற்றுமைகளும், பத்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த உரையாசி ரியர்கள் மேலே கூறிய பதின்மர் தத்தம் சமய, சமுதாய, தனிக் கொள் கைகளின் தாக்கங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்ட கருத்துத் திருத்தங் களும் குறள் நூலின் பாட வேறுபாடுகளுக்கும் அடிப்படைக் காரணங்களாயின.” "திருக்குறளில் கந்திலியார்என்ற போலிப் புலவர் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலில் தந்து இடைமடுத்த பிழையினை - அஃதாவது இடைச் செருகலாகச் சில பொருந்தாப் பாடங்களைப் புகுத்தியதைத் தொண்டெனப் புரிந்துவிட்டார். அது காரணமாகப் பொருள் மாறுபாடுகள் ஏற்பட்டு உரையாசிரியர்கள் திண்டாடியிருக்கின்றனர். வள்ளுவ வடிவமே புரியாத நிலைக்கு ஒரளவு அல்லற்பட்டிருக்கின்றனர். - எனப் பேராசிரியர் செ. வைத்தியலிங்கம் தெளிவாக்குகிறார்” - (மேற்கோள் குறிப்பு, 4"உரை வேறுபாடுகள்” (பக்.150) "பாட பேதங்கள் இல்லாத திருக்குறள் மூலநூல் கிடைக்காததால் இன்றிருக்கும் குறட்பாக்களைக் கொண்ட, திருக்குறள் இயம்பும் உட்பொருளைக் கண்டு தெளிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” "திருக்குறள் எழுதப்பட்ட காலத்துக்கும் உரைகள் தோன்றிய காலத்துக்கும் இடையிலான நீண்டகாலப் பகுதி (1000 ஆண்டுகள்) உரையாசி ரியர்களின் உரை வேற்றுமைகள், அவர்கள் செய்த மாறுபட்ட இயல்....

இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்து என்னவென்றால், ஒரு குறளுக்குப் பொருள் உரைக்கும் முன்னர், அப்பொருள் அக் குறளுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்றும், அக்குறளுக்குரிய அதிகாரத்தின் தன்மையுடன் ஒத்துப்போகிறதா என்றும் முதலில் சரிபார்க்க வேண்டும். குறளுடனோ அதிகாரத்துடனோ ஒத்துப்போகவில்லை என்றால் அதில் எழுத்துப்பிழை அல்லது பொருட்பிழை இருக்கிறது என்பது உறுதி. ஆனால், குறள்களுக்கு உரைவிளக்கம் எழுதும்போது அப்படி யாரும் சரிபார்க்காமல் எழுதிய பல குறள்களுக்கான விளக்கங்கள் அக் குறள்களுடன் பொருந்தாமல் நிற்கின்றன. இப்படிப்பட்ட ஒரு குறளைப் பற்றித்தான் இக் கட்டுரையில் விளக்கமாகக் காணப்போகிறோம்.

குறளும் பொருளும்:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. - 100

கலைஞர் மு.கருணாநிதி உரை: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

மு.வரதராசனார் உரை: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

பரிமேலழகர் உரை: இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அறம்பயக்கும் இனிமையான சொற்களும் தன்னிடத்தே இருக்க, அவற்றைக் கூறாமல் கடுஞ்சொற்களைச் சொல்லுதல், கனிகள் தன்னிடம் இருக்கும்போது காய்களைத் தின்பது போன்றதனை ஓக்கும்.

பழம் இருக்கக் காயைத் தின்பது தவறா?

இனியவை கூறல் என்னும் அதிகாரத்தின் இறுதிப் பாடலாக வரும் இக் குறளுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள உரைவிளக்கங்கள் அனைத்தும் ஒரே கருத்தை வலியுறுத்துவதனை அறியலாம். அதாவது: ' பழங்கள் இருக்கும்போது காய்களை உண்ணுதல் தவறான செயலும் முட்டாள்தனமான செயலும் ஆகும் ' என்பதே அக் கருத்தாகும். இக் கருத்து சரியா தவறா என்று கீழே பார்க்கலாம்.

ஆய்வு செய்ததில், பழங்கள் இருக்கும்போது காய்களை உண்ணும் செயல் ஒருபோதும் தவறாகாது என்பதே சரியாகப் படுகிறது. சான்றாக, மாம்பழங்கள் இருக்கும்போது அதனை விரும்பாமல் ஒருவர் மாங்காய்களை உண்டால் அது எப்படித் தவறான, முட்டாள்தனமான செயலாகும்?. மாங்கனியின் சுவை வேறு; மாங்காயின் சுவை வேறு. யாருக்கு எந்தச் சுவை பிடித்திருக்கிறதோ அதை அவர் உண்பார். இது எப்படித் தவறாக முடியும்?. அதேபோல, கொய்யாக்காய், தக்காளிக்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய், புளியங்காய்... இப்படிப் பலவகையான காய்கள் மக்களால் விரும்பிச் சமைக்கப்படாமல் பச்சையாகவே உண்ணப்படுகின்றன. வெள்ளரிக்காயினையும் வெள்ளரிப்பழத்தினையும் ஒரேசமயத்தில் முன்னால் வைத்தால் வெள்ளரிக்காயினையே நம்மில் அனைவரும் விரும்பித் தேர்ந்தெடுத்து உண்பார்கள். உண்மையைச் சொன்னால், வெள்ளரிப்பழம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே நம்மில் பலபேருக்குத் தெரியாது. பொதுவாக, காய்களுக்கு இருக்கும் சுவையும் தன்மையும் வேறு; அவை கனிந்தபின்னால் உண்டாகும் சுவையும் தன்மையும் வேறு. இவை இரண்டுமே இயற்கையின் கொடைதான். இவற்றில் ஒன்றை உண்பது சரி என்றும் இன்னொன்றை உண்பது தவறு, முட்டாள்தனம் என்றும் கூறுவது இயற்கைக்கு முரணானது. இப்படிப்பட்ட முரணான கருத்தினை நுண்மாண் நுழைபுலப் பெரியோராகிய திருவள்ளுவர் ஒருபோதும் கூறமாட்டார். இதிலிருந்து ' பழங்கள் இருக்கும்போது காய்களை உண்பது தவறு என்னும் கருத்தினை இக் குறள் கூறவில்லை ' என்பது தெளிவாகிறது.

குறளுக்கான திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் காய் என்னும் சொல்லுக்கு ' முதிர்ந்து பழுக்காத மரம் செடிகளின் பலன் ' என்ற அகராதிப் பொருளினை அதாவது 'காய்கறி' என்ற பொருளைக் கொண்டதே மேற்காணும் தவறான உரைவிளக்கங்களுக்கு வழிவகுத்து விட்டது. உண்மையில், இக் குறளில் வரும் காய் என்ற சொல் கொட்டை என்ற பொருளைக் குறிக்கும். காய் என்ற சொல்லுக்கு விதை என்ற பொருளைச் சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி கூறுவது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காய்³ kāy , n. < காய்²-. [T. kāya, K. M. kāy, Tu. kāyi.] 1. Unripe fruit; முதிர்ந்து பழக் காத மரஞ்செடிகளின் பலன். கனியொழிய . . . நற்கா யுதிர்தலு முண்டு (நாலடி, 19). 2. The last metrical division in a word of three syllables sounding like kāy; மூவசைச்சீரின் இறுதியிலுள்ள நேரசை. ஆம்கடை காயடையின் (காரிகை, உறுப். 7). 3. See காய்ச்சீர். 4. Unripe boil; பழுக்காத புண்கட்டி. கட்டி இன்னும் காயாகவிருக்கிறது. 5. Aborted foetus; முதிராது விழுங் கரு. Colloq. 6. Chessman, die; ஆடுதற்குரிய காய். 7. A preparation in the form of a cone made of pulse mixed with treacle, one of the many important eatables exhibited on marriage occasions; பருப்புத்தேங்காய்ப்பணிகாரம். Loc. 8. Burner in a lamp; விளக்கின் மரை. 9. Half; அரை. Loc. 10. Failure, defeat; பிரதிகூலம். அவனுள்ளங் காயோ பழமோ (பிரபுலிங். பிரபுதே. 51). 11. Deceit; வஞ்சனை. தெளிந்தேம்யாங்காய் (கலித். 89, 7). 12. Seed, as of a bull; விதை. காயெடுத்த எருது.

இப் புதிய பொருளின் அடிப்படையில், இக் குறளுக்கான திருந்திய பொருள் இதுதான்.

இனிய சொற்கள் இருக்க அதைவிடுத்துக் கடுஞ்சொற்களை ஒருவன் பேசுவது, பழங்கள் இருக்க அவற்றை உண்ணாமல் அவற்றுள் இருக்கும் கொட்டையினை உண்ணும் பேதைமைக்குச் சமமாகும்.

இப் புதிய பொருளானது இக் குறளின் கருத்துடன் எப்படிப் பொருந்தி வருகிறது என்பதனைக் கீழே விரிவாகக் காணலாம்.

பழம் இருக்கக் கொட்டையினை உண்ணலாமா?.

பழம் இருக்கக் கொட்டையை உண்ணலாமா என்று கேட்டால் தவறு என்றே அனைவரும் கூறுவர். சான்றாக, மாங்கனியைக் கையில் கொடுத்து உண்ணச் சொன்னால், கனியின் இனிப்பான சதையினை உண்ணாமல் அதனைப் பிய்த்து எறிந்துவிட்டு அதனுள் இருக்கும் கொட்டையை ஒருவன் உண்டால் அதனைச் சரியான செயலென்று யாரும் கூறமாட்டார்கள். இதைப்போலவே, பலாப்பழத்தின் இனிப்பான சுளையினை உண்ணாமல் அதனுள் இருக்கும் கொட்டையினை ஒருவன் உண்டால் அதனை அறிவார்ந்த செயலென்று யாரும் கூறுவார்களா?. மாட்டார்கள்.

ஏன், மாதுளம்பழம் போன்றவற்றில் விதைகளை விரும்பி உண்ணுகிறோமே, அது தவறாகுமா?. என்று சிலர் கேட்கலாம். ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மாதுளம்பழத்தில் இருப்பவை விதைகள்; கொட்டைகள் அல்ல. கொய்யாப் பழங்களில் இருப்பவையும் விதைகள் தான். கொட்டை என்பது பெரிய அளவில் இருக்கும். மேலே காட்டியபடி, தமிழ் இணையப் பேரகராதியானது காய் என்னும் சொல்லுக்குப் பொருளாகக் கொட்டை என்று எழுதாமல் விதை என்று தவறாக எழுதி இருக்கிறது. ஆனால், 'காயெடுத்த எருது' என்று சரியாக எடுத்துக்காட்டி இருக்கிறது. உண்மையில் விதை, கொட்டை ஆகிய சொற்களைப் பல நேரங்களில் நாம் தவறாகவே பயன்படுத்தி வருகிறோம். அளவில் சிறியதாகவும் எண்ணிக்கையில் பலவாகவும் இருந்தால் அவற்றை விதைகள் என்றும் அளவில் பெரியதாய் என்ணிக்கையில் ஒன்றாக இருப்பதனைக் கொட்டை என்றும் பயன்படுத்துவதே சரியான முறையாகும். எனவே, மாதுளம்பழத்தினை விதைகளுடன் உண்ணுவதனை இக் குறளுடன் உரசிப் பார்ப்பது பொருத்தமற்றதாகும்.

பழமும் சொல்லும் ஒப்பீடு:

இக் குறளில் இருவகையான ஒப்பீடுகள் உள்ளன. பழத்தினை இனிய சொல்லுக்கும் பழத்துக்குள் இருக்கும் கொட்டையினை கடுஞ்சொல்லுக்கும் உவமையாக்கிக் கூறி இருக்கிறார் வள்ளுவர். ஏன் அவ்வாறு கூறுகிறார் என்பதனைப் பார்க்கலாம்.

பொதுவாகப் பழம் என்பது உண்பதற்கு எளிமையாகவும் இனிப்பாகவும் எளிதில் செரியக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அதனுள் இருக்கும் கொட்டையோ உண்பதற்குக் கடினமாகவும் கசப்பாகவும் எளிதில் செரியாததாயும் இருக்கும். இனிய சொற்கள் பழத்தைப் போலப் பேசுவதற்கு எளிமையாகவும் கேட்போருக்கு இனிமையைத் தருவதாயும் கேட்போரின் உள்ளத்தால் விரைந்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் கடுஞ்சொற்களோ பேசுவதற்குக் கடினமாய் இருப்பதுடன் கேட்போருக்கு மனக்கசப்பைத் தருவதாயும் ஏற்றுக்கொள்ள இயலாததாயும் இருக்கும். இப்படிப் பல பண்புகளால் ஒத்திருப்பதால் தான் வள்ளுவர் பழத்தையும் சொல்லையும் இக் குறளில் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த உவமைகளின் மூலம் வேறொரு கருத்தினையும் உணர்த்துகிறார் வள்ளுவர். இனிய சதைப்பற்றும் கசப்பான கொட்டையும் ஒரு பழத்துக்குள் இருப்பதைப் போலவே இன்சொற்களும் கடுஞ்சொற்களும் நமது மனம் என்னும் எண்ணக் கிடங்கில் இருப்பவையே. எண்ணங்களின் கிட்டங்கியாக விளங்கும் நம் மனதின் மேலடுக்கில் இனிய சொற்களும் உள்ளடுக்கில் கடுஞ்சொற்களும் இருக்கும். ஒருவரை வாழ்த்தும்போதோ கொஞ்சும்போதோ யோசிக்காமலேயே இனிய சொற்கள் அழுத்தமின்றி மிக எளிதாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இனிய சொற்களை ஒலிப்பதும் மிக எளிமையாக இருக்கும். ஆனால், கடுஞ்சொற்களைப் பயன்படுத்தும்போது பேசுவோரும் மனதளவில் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவதுடன் ஒலிப்பதும் கடினமாக இருப்பதைக் காண்கிறோம்.

தமிழ் மொழியில் இயல்பாகவே பெரும்பாலான இனிய சொற்களில் மெல்லின எழுத்துக்களே இனிமையைத் தருவதை அறியலாம். சான்றாக, வாங்க, போங்க போன்ற சொற்களைச் சொல்லலாம். மூக்கொலிகளான இந்த மெல்லின எழுத்துக்களை எவ்விதச் சிரமமும் இல்லாமல் மிக எளிதாகப் பேசலாம். பொதுவாக, எந்த ஒரு வினைச்சொல்லுடனும் 'ங்கள்' / 'ங்க' என்ற மெல்லினம் சார்ந்த விகுதியைச் சேர்த்துப் பேசினால் கேட்பவர் மனம் மகிழ்வார்.  அதே சமயம், நாக்கை வளைத்துச் சிரமப்பட்டு ஒலிக்கின்ற வல்லின எழுத்தான 'டா' சேர்த்து 'வாடா, போடா ' என்பதைப் போலப் பேசினால் கேட்பவர் எப்படி உணர்வார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இவ்வாறு, ஒலிப்பதற்கு எளிமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் உள்ள சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்து ஒலிப்பதற்குக் கடினமாகவும் கேட்பதற்குக் கசப்பாகவும் உள்ள சொற்களை ஒருவர் பயன்படுத்தினால், அவரை முட்டாள் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறமுடியும்?. இதைத்தான் பழத்தை விட்டுவிட்டுக் கொட்டையைச் சாப்பிடும் முட்டாளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் வள்ளுவர்.

முடிவுரை:

இக் குறளில் வரும் காய் என்ற சொல்லுக்குக் கொட்டை என்ற அகராதிப் பொருள் இருப்பதனை அறியாமல் காய் என்ற சொல்லைக் காழ் என்று திருத்தி 2009 ல் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. உண்மையில் இந்த எழுத்துத் திருத்தம் தேவையில்லை. காரணம், யகர ழகர எழுத்துக்களுக்கு இடையில் பரிமாற்றம் நடப்பது பேச்சு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் இருந்து வருவதே ஆகும். கடின வேலை செய்ததால் உள்ளங்கைகளில் காழ்ப்பு உண்டாகியிருப்பதனை கை காய்த்திருக்கிறது என்று சொல்லுவது வழக்கம். இதன் அடிப்படையிலேயே வள்ளுவரும் காழ் = கொட்டை என்ற பொருளில் காய் என்ற சொல்லை இக் குறளில் பயன்படுத்தி இருக்கிறார். வாழ்க தமிழ்! வளர்க வள்ளுவம் !!

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Malarvizhi Mangay

unread,
Nov 3, 2017, 11:56:51 AM11/3/17
to mint...@googlegroups.com
சபாஷ் சரவணன்.இவர் மட்டும் திண்டுமுண்டா சிந்திக்கிறாரே? உறுப்பு நலன் பற்றி விசாரணைக்கமிஷன் வைக்கிறாரே? எப்புடி என நினைப்பேன்.இன்று விடை கிடைத்து
விட்டது.திருக்குறள் உரையாசிரியர்
வரிசையில் சங்க இலக்கியம் தொல்காப்பியம் பக்தியிலக்கியம் என
அத்தனை இலக்கியங்களும் கற்றறிந்த இலக்கியவாதி மூதறிஞர் உரையை முதல் சான்றாதாரமாக காட்டிய பாங்கு
என்னே! என்னே! என்னே! 

On 03-Nov-2017 8:35 pm, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (vaen...@gmail.com) Add cleanup rule | More info
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
Nov 3, 2017, 1:12:26 PM11/3/17
to mintamil
நன்று .பொருத்தமாகத் திருந்திய பொருள் கொடுத்துள்ளீர்கள் .
கண்மணி 

செல்வன்

unread,
Nov 3, 2017, 1:58:51 PM11/3/17
to mintamil
தவறான பொருள் விளக்கம்

அகராதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பொருளை எடுத்து நம் வசதிக்கு ஏற்ப பொருள் கொள்வதில் பலனில்லை

கனி என்றால் பலாக்காய், மாங்காய் போன்ற பழங்களின் காய் வடிவங்கலையே குறிக்கும்

nkantan r

unread,
Nov 3, 2017, 3:07:54 PM11/3/17
to மின்தமிழ்
கவர்ந்தல் என்றால்? (கவர்தல்..?)

இந்த குறளில் உண்ணுதல் என்ற பொருள் எங்கிருந்து வந்தது?

தோட்ட்த்தில் பழம் பறிக்கச் சொன்னால், மூடன் காய் பறித்தானே!

rnk

தேமொழி

unread,
Nov 3, 2017, 5:37:38 PM11/3/17
to mint...@googlegroups.com


"இன்சொல்"  என்பதன்  எதிர்ப்பதம்  "வன்சொல்" என வள்ளுவர் கூறுகிறார். 

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது. (குறள் 99)

[திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பத்தினைத் தரும் என்பதைக் கண்ட ஒருவன், பிறரிடம் கடுஞ்சொற்களைச் சொல்லுவது என்ன பயன் கருதி?]

இன்சொல் X வன்சொல் குறித்து விளக்கம் கொடுத்த பிறகுதானே  இந்தக்  குறள் வருகிறது?

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள் 100) 

[திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அறம்பயக்கும் இனிமையான சொற்களும் தன்னிடத்தே இருக்க, அவற்றைக் கூறாமல் கடுஞ்சொற்களைச் சொல்லுதல், கனிகள் தன்னிடம் இருக்கும்போது காய்களைத் தின்பது போன்றதனை ஓக்கும்.]

தொடர்ச்சியாகப் பொருள் கொள்ளுவது விளக்கமளிக்கும்.

காய் X பழம்  இவற்றில் இனிமை இருப்பது எதில்? பழத்தில்  மட்டும்தான்  பொதுவாக இனிமை இருக்கும் 

இன்சொல்லின் இனிமைக்குக் கனி உவமையாகும்பொழுது,
வன்சொல்லின் "இனிமையற்ற" தன்மைக்குக் காயை வேறுபடுத்திக் காட்டுகிறார்.  

வன்சொல்லுக்கு இனிமையற்ற, முதிர்ச்சி பெறாத, பண்படாத காயை ஒப்பிடுவது பொருத்தமே.
இனிமை வேண்டுவோர் பழத்தையே தேர்வு செய்வர்.

இதற்கு மேல் காய், கனி, கிழங்கு போன்றவற்றை சாப்பிடுவது குறித்த பரிந்துரை செய்யும் நோக்கம் வள்ளுவருக்கு இல்லை. 
அவர் கூறும் உணவு குறித்த பரிந்துரை கூட மருந்து அதிகாரத்தில்தான் இருக்கிறது. 

மேலும்,  எப்பொழுதும் அடுத்தவர் மனம் நோகாமல்  இனிமையாகவே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறியதில்லை.

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே 
கெடுக்குந் தகைமை யவர்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பார் இலானும் கெடும்.

கடிந்துரைத்து நல்வழிப் படுத்தும் தேவையையும் (பெரியாரைத் துணைக்கோடல்) அவரே கூறியும் உள்ளார். 

---

இன்சொல் X வன்சொல் என்பதை அறநெறிச்சாரமும் கூறும். 

'இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக 
வன்சொற் களைகட்கு வாய்மை எருவட்டி 
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனுமோர் 
பைங்கூழ் சிறுகாலைச் செய்.' 
 --  அறநெறிச் சாரம்

அப்பாடலில் 
இன்சொல் = விளைநிலம்
வன்சொல் = களைகள் (தேவையற்றது, நீக்கப்பட வேண்டியது)

சுருக்கமாக:  தேவையின்றி கடுமையாகப் பேசிக் கொண்டிருப்பதை தவிர்த்தல் தேவை என்பது வள்ளுவர் கூறுவது.

..... தேமொழி

தேமொழி

unread,
Nov 3, 2017, 5:49:57 PM11/3/17
to மின்தமிழ்


On Friday, November 3, 2017 at 8:02:56 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:

https://thiruththam.blogspot.in/2017/11/blog-post.html

கனி இருப்பக் காய் உண்ணலாமா?

முன்னுரை:

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதி மிடுக்குடன் முழக்கிய பெருமைக்குரியவர் ஐயன் வள்ளுவன். பாரதியின் மொழிக்கேற்ப, வள்ளுவர் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்துமே ஆழ்ந்த பொருளுடையவை. இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள மீள் ஆய்வுப் பயிற்சி தேவை. ஏனென்றால், இப்போது நம் கைவசமுள்ள திருக்குறள் ஒலைச்சுவடியானது வள்ளுவரால் எழுதப்பட்டதல்ல. பலநூறு ஆண்டுகளாகப் பல பேர்களால் பலப்பல படிகளாக எடுக்கப்பட்டு அவற்றில் ஏதோ ஒன்று நம்மிடம் கிடைத்து அது நூலாக வெளிவந்து நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

படியெடுத்து எழுதும்போது எழுத்துப்பிழைகள் உண்டாவது வெகு இயல்பான ஒன்று என்று நாம் அனைவரும் அறிவோம். இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரு கட்டுரையினைப் படியெடுத்து எழுதும்போதே எழுத்துப்பிழைகள் உண்டாகும்போது 1330 குறள்களைப் படியெடுத்து எழுதியவர் எழுத்துப் பிழைகளைச் செய்திருக்க மாட்டார் என்று நம்புவது ' கண்ணை மூடிக்கொண்டுத் தீயைத் தொட்டால் சுடாது ' என்று நம்புவதற்குச் சமமாகும். இதே கருத்தினைத் 'திருக்குறள் மெய்ப்பொருள் உரை' யில் பெருஞ்சித்திரனார் கீழ்க்காண்டவாறு கூறுகிறார்:

"பேராசிரியர் சாரங்கபாணி அவர்களின் திருக்குறட் சிந்தனைகள்-பக் 124 (1979) புள்ளிக் கணக்கின்படி, அறத்துப்பாலின் 380 குறட்பாக்களில் 217க் கும், பொருட்பாலின் 700 பாக்களில், 487க்கும், காமத்துப்பாலின் 250 கு றட்பாக்களில் 196க்கும், ஆக மொத்தம் 1330 குறட்பாக்களில் 900 பாக்களுக்கு உரைவேறுபாடுகள் காணப்படுகின்றன. "முப்பால் மூலநூலில் இல்லாத கருத்து முரண்பாட்டிற்கு இன்னுமொரு காரணம், திருக்குறளில் அவ்வப்போது பல பாட பேதங்கள் புகுத்தப் பட்டமையே. ஒரு பழைய நூலில் பாட வேற்றுமைகள் தவிர்க்க இயலாதவைதாம். ஆனால், நூற்கருத்தையும் பொருளையும் மாற்றியமைக்கும் பாட பேதங்கள் மூல நூலின் முழுக்கருத்தில் சிதிலமுண்டாக்கி விடுகின் "திருக்குறளுக்குப் பல நூற்றாண்டுகளாகச் சரியான உரை எழுதப்படாமையும், பெரும்பாலானவர்களால் அந்நூல் அடிக்கடி பயிலப் படாமையும், ஏடு எழுதுவோரால் ஏற்பட்ட குறைபாடுகளும், படிகள் எடுக்கும் போது உருவான இயல்பான தவறுகளும், இலக்கண முறைமையை எண்ணிப் புகுத்தப்பட்ட திருத்தங்களும், திருக்குறள் இலக்கிய நூல், அறநூல் என்ற அணுகுமுறையால் உந்தப்பட்டு, இயைபு காண்பதற்காக எழுந்த வேற்றுமைகளும், பத்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த உரையாசி ரியர்கள் மேலே கூறிய பதின்மர் தத்தம் சமய, சமுதாய, தனிக் கொள் கைகளின் தாக்கங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்ட கருத்துத் திருத்தங் களும் குறள் நூலின் பாட வேறுபாடுகளுக்கும் அடிப்படைக் காரணங்களாயின.” "திருக்குறளில் கந்திலியார்என்ற போலிப் புலவர் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலில் தந்து இடைமடுத்த பிழையினை - அஃதாவது இடைச் செருகலாகச் சில பொருந்தாப் பாடங்களைப் புகுத்தியதைத் தொண்டெனப் புரிந்துவிட்டார். அது காரணமாகப் பொருள் மாறுபாடுகள் ஏற்பட்டு உரையாசிரியர்கள் திண்டாடியிருக்கின்றனர். வள்ளுவ வடிவமே புரியாத நிலைக்கு ஒரளவு அல்லற்பட்டிருக்கின்றனர். - எனப் பேராசிரியர் செ. வைத்தியலிங்கம் தெளிவாக்குகிறார்” - (மேற்கோள் குறிப்பு, 4"உரை வேறுபாடுகள்” (பக்.150) "பாட பேதங்கள் இல்லாத திருக்குறள் மூலநூல் கிடைக்காததால் இன்றிருக்கும் குறட்பாக்களைக் கொண்ட, திருக்குறள் இயம்பும் உட்பொருளைக் கண்டு தெளிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” "திருக்குறள் எழுதப்பட்ட காலத்துக்கும் உரைகள் தோன்றிய காலத்துக்கும் இடையிலான நீண்டகாலப் பகுதி (1000 ஆண்டுகள்) உரையாசி ரியர்களின் உரை வேற்றுமைகள், அவர்கள் செய்த மாறுபட்ட இயல்....

இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்து என்னவென்றால், ஒரு குறளுக்குப் பொருள் உரைக்கும் முன்னர், அப்பொருள் அக் குறளுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்றும், அக்குறளுக்குரிய அதிகாரத்தின் தன்மையுடன் ஒத்துப்போகிறதா என்றும் முதலில் சரிபார்க்க வேண்டும். குறளுடனோ அதிகாரத்துடனோ ஒத்துப்போகவில்லை என்றால் அதில் எழுத்துப்பிழை அல்லது பொருட்பிழை இருக்கிறது என்பது உறுதி. ஆனால், குறள்களுக்கு உரைவிளக்கம் எழுதும்போது அப்படி யாரும் சரிபார்க்காமல் எழுதிய பல குறள்களுக்கான விளக்கங்கள் அக் குறள்களுடன் பொருந்தாமல் நிற்கின்றன. இப்படிப்பட்ட ஒரு குறளைப் பற்றித்தான் இக் கட்டுரையில் விளக்கமாகக் காணப்போகிறோம்.

குறளும் பொருளும்:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. - 100

கலைஞர் மு.கருணாநிதி உரை: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

மு.வரதராசனார் உரை: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

பரிமேலழகர் உரை: இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அறம்பயக்கும் இனிமையான சொற்களும் தன்னிடத்தே இருக்க, அவற்றைக் கூறாமல் கடுஞ்சொற்களைச் சொல்லுதல், கனிகள் தன்னிடம் இருக்கும்போது காய்களைத் தின்பது போன்றதனை ஓக்கும்.

பழம் இருக்கக் காயைத் தின்பது தவறா?

இனியவை கூறல் என்னும் அதிகாரத்தின் இறுதிப் பாடலாக வரும் இக் குறளுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள உரைவிளக்கங்கள் அனைத்தும் ஒரே கருத்தை வலியுறுத்துவதனை அறியலாம். அதாவது: ' பழங்கள் இருக்கும்போது காய்களை உண்ணுதல் தவறான செயலும் முட்டாள்தனமான செயலும் ஆகும் ' என்பதே அக் கருத்தாகும். இக் கருத்து சரியா தவறா என்று கீழே பார்க்கலாம்.

ஆய்வு செய்ததில், பழங்கள் இருக்கும்போது காய்களை உண்ணும் செயல் ஒருபோதும் தவறாகாது என்பதே சரியாகப் படுகிறது. சான்றாக, மாம்பழங்கள் இருக்கும்போது அதனை விரும்பாமல் ஒருவர் மாங்காய்களை உண்டால் அது எப்படித் தவறான, முட்டாள்தனமான செயலாகும்?. மாங்கனியின் சுவை வேறு; மாங்காயின் சுவை வேறு. யாருக்கு எந்தச் சுவை பிடித்திருக்கிறதோ அதை அவர் உண்பார். இது எப்படித் தவறாக முடியும்?. அதேபோல, கொய்யாக்காய், தக்காளிக்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய், புளியங்காய்... இப்படிப் பலவகையான காய்கள் மக்களால் விரும்பிச் சமைக்கப்படாமல் பச்சையாகவே உண்ணப்படுகின்றன. வெள்ளரிக்காயினையும் வெள்ளரிப்பழத்தினையும் ஒரேசமயத்தில் முன்னால் வைத்தால் வெள்ளரிக்காயினையே நம்மில் அனைவரும் விரும்பித் தேர்ந்தெடுத்து உண்பார்கள். உண்மையைச் சொன்னால், வெள்ளரிப்பழம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே நம்மில் பலபேருக்குத் தெரியாது. பொதுவாக, 
காய்களுக்கு இருக்கும் சுவையும் தன்மையும் வேறு; அவை கனிந்தபின்னால் உண்டாகும் சுவையும் தன்மையும் வேறு.

இதை மட்டுமே இந்தக் கட்டுரையில் என்னால் ஏற்க முடிகிறது. 


 
இவை இரண்டுமே இயற்கையின் கொடைதான். இவற்றில் ஒன்றை உண்பது சரி என்றும் இன்னொன்றை உண்பது தவறு, முட்டாள்தனம் என்றும் கூறுவது இயற்கைக்கு முரணானது. இப்படிப்பட்ட முரணான கருத்தினை நுண்மாண் நுழைபுலப் பெரியோராகிய திருவள்ளுவர் ஒருபோதும் கூறமாட்டார். இதிலிருந்து ' பழங்கள் இருக்கும்போது காய்களை உண்பது தவறு என்னும் கருத்தினை இக் குறள் கூறவில்லை ' என்பது தெளிவாகிறது.

ஆமாம்,  திருவள்ளுவர் ஒப்பிடும் நோக்கம் வேறு, அவர் உணவு பரிந்துரை செய்யும் டையட்டீசியன் பொறுப்பை இந்தக் குறளில் மேற்கொள்ளவில்லை. 

..... தேமொழி
 

தேமொழி

unread,
Nov 3, 2017, 6:21:44 PM11/3/17
to மின்தமிழ்
http://www.thirukkural.com/search/label/இனியவைகூறல்


இனியவைகூறல்

இன்சொல்லின் பண்பும்:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின். 92

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம். 93

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 100

இன்சொல்லின் பயனும்:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 94 

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
அணியல்ல மற்றுப் பிற. 95 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின். 96

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல். 97

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும். 98

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது. 99 


வாய்ச் சொல் (91) இருவகைப்படும்: 1. இன்சொல் 2. வன்சொல்  (குறள் 99)

பண்பு:
இன்சொல் = அன்பு கலந்தது,  வஞ்சனையற்றது,  வாய்மையுடையது (குறள் 91), 
இன்முகத்தோடு கூறப்படுவது (குறள் 92, 93), பண்புடையது (குறள் 97), சிறுமையற்றது  (குறள் 98)
இன்சொல் இனிமையான பழம் போல் விரும்பப்படுவது (100).

பயன்:
சிறந்த அணிகலன் அணிந்தது போன்ற பண்பு (குறள் 95)
இன்சொல் கூறுவதால் வறுமை வராது (குறள் 94), 
தீமைகள் குறைந்து நன்மைகள் வளரும் (குறள் 96)
இன்சொல் கூறுபவருக்கும் மனநிறைவு கிடைக்கும்  (குறள் 97)
இன்சொல் கேட்பவருக்கும்  மனநிறைவு கிடைக்கும்  (குறள் 99)
இம்மை, மறுமை (?) இன்பம் தருவது  (குறள் 98)


____________

..... தேமொழி 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 3, 2017, 11:42:56 PM11/3/17
to mintamil
மிக்க நன்றி மலர்விழி மங்கை அக்கா. :)))

2017-11-03 21:26 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 3, 2017, 11:43:52 PM11/3/17
to mintamil
மிக்க நன்றி கண்மணி அவர்களே. :)))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 3, 2017, 11:45:30 PM11/3/17
to mintamil
இந்தக் கடைசி வரிக்குப் பொருள் விளங்கவில்லை செல்வன் ஜி. :)))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 3, 2017, 11:47:07 PM11/3/17
to mintamil
அப்ப நீங்க இந்தக் குறளையும் குறளுக்கான விளக்கங்களையும் இதுவரை கண்டதே இல்லையா?  :))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 3, 2017, 11:52:21 PM11/3/17
to mintamil
@ தேமொழி அக்கா

வள்ளுவர் இக் குறளில் இன்சொல், வன்சொல் பற்றித்தான் குறிப்பிடுகிறார். நான் இல்லை என்று சொல்லவே இல்லை.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

பழம் இருக்கக் காயை உண்பதும்

இன்சொல் இருக்க வன்சொல் பயில்வதும்

சரி என்கிறாரா தவறு என்கிறாரா வள்ளுவர்.?.

சரி என்று சொல்லமாட்டீர்கள் தெரியும். தவறு என்றால்,

பழம் இருக்கக் காயை உண்பது தவறு என்று பொருள்படும் இல்லையா?.

இது எப்படித் தவறு என்று இப்போது நீங்கள் அனைவருக்கும் விளக்குங்கள். :))


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 4, 2017, 12:30:33 AM11/4/17
to mintamil

வணக்கம்.

மிகவும் சரியான கருத்து.
வழிமொழிகிறேன்.

கவர்ந்தல் = உண்ணுதல் என்று பொருள் கொண்டால் மட்டுமே நண்பர் சரவணன் சொல்லவது சரியாக வரும்.

அன்பன்
கி. காளைராசன்

>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 4, 2017, 12:59:58 AM11/4/17
to மின்தமிழ்
சரி தவறு என்ற வகைப்படுத்தலில் வர வாய்ப்பில்லை சரவணன் !!!

அறிவுடைமையா அல்லவா என்ற கோணத்தில் அணுகவேண்டும் 

அது தேவையை உணராது,  சரியான முடிவெடுக்கத் தெரியாத பேதைமையில் அல்லவா அடங்கும். 

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு 
ஊதியம் போக விடல்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

மு.வரதராசனார் உரை: 
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை: 
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

இக்குறளில் அவ்வாறு உணவைப்  பரிந்துரைக்கும் வேலையைச் செய்யவில்லை வள்ளுவர் என்று நான் முன்னரே கூறிவிட்டேனே !!!
அவர் ஒப்புமை காட்டுகிறார்.
அந்த அதிகாரத்தின் நோக்கத்திற்குத் தக்கவாறு பொருள் கொள்ளவேண்டும் என்பது எனது கருத்து.


..... தேமொழி 

தேனீ

unread,
Nov 4, 2017, 1:04:36 AM11/4/17
to மின்தமிழ்
பழம் இருக்க காயைத் தின்பதா என்று கேள்வி கேட்டு அதற்கு அப்படியே நேரிடைப் பொருள் காண முற்பட்டால் ஆகாது.

அந்த உவமைக்கு உண்மையான பொருள் காண்பதே சிறப்பு.

உணவை நாம் பச்சையாக உண்பதில்லை. அதனை முதலில் சமைக்கிறோம். அவ்வாறு அனலியிலிட்டு அதனை வேகவைத்து ஒரு பக்குவபட்ட நிலைக்கு வந்த பிறகுதான் உண்பதற்கு ஏதுவாக இருக்கும். சமைந்து வந்துதான் சமையல்.

காயை உண்ணாமல் அது உண்பதற்கு கனிந்து வந்தபொழுது உண்பது போல பக்குவப்பட்டோர் புண்சொல்லை உபயோகிக்காது இன்சொல்லையே உபயோகிப்பார் என்பது அக்குறளின் பொருள்.  பக்குவப்பட்டோர் அறத்தின் வழி நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகும். 

பழத்தையும் கொட்டையயும் ஒப்பிட்டு திருவள்ளுவர் சொல்லவில்லை. அத்தகைய கற்பனை சமைந்து வந்த சமையலாகாது. 

அன்புடன் மு. கமலநாதன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 1:44:04 AM11/4/17
to mintamil
2017-11-04 10:29 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
சரி தவறு என்ற வகைப்படுத்தலில் வர வாய்ப்பில்லை சரவணன் !!!

அறிவுடைமையா அல்லவா என்ற கோணத்தில் அணுகவேண்டும் 

அது தேவையை உணராது,  சரியான முடிவெடுக்கத் தெரியாத பேதைமையில் அல்லவா அடங்கும். 

அதாவது பழம் இருக்கக் காயை ( பழத்தின் முந்தைய நிலை ) உண்பது பேதைமை என்றுதானே கூறுகிறீர்கள்.?

எப்படிப் பேதைமை ஆகும் என்பதை விளக்குங்கள் என்றுதான் உங்களைக் கேட்கிறேன். :)))
 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 1:48:56 AM11/4/17
to mintamil
2017-11-04 10:34 GMT+05:30 தேனீ <ipohs...@gmail.com>:
பழம் இருக்க காயைத் தின்பதா என்று கேள்வி கேட்டு அதற்கு அப்படியே நேரிடைப் பொருள் காண முற்பட்டால் ஆகாது.

அந்த உவமைக்கு உண்மையான பொருள் காண்பதே சிறப்பு.

உணவை நாம் பச்சையாக உண்பதில்லை.

தவறான கருத்து ஐயா. எத்தனையோ காய்களைப் பச்சையாக நாம் உண்கிறோம்.
 
அதனை முதலில் சமைக்கிறோம். அவ்வாறு அனலியிலிட்டு அதனை வேகவைத்து ஒரு பக்குவபட்ட நிலைக்கு வந்த பிறகுதான் உண்பதற்கு ஏதுவாக இருக்கும். சமைந்து வந்துதான் சமையல்.

காயை உண்ணாமல் அது உண்பதற்கு கனிந்து வந்தபொழுது உண்பது போல பக்குவப்பட்டோர் புண்சொல்லை உபயோகிக்காது இன்சொல்லையே உபயோகிப்பார் என்பது அக்குறளின் பொருள். 

மறுபடியும் தவறான கருத்து. காயை உண்கிறோம். காய் கனியும் வரை காத்திருப்பது அவரவர் விருப்பம்.

 
பக்குவப்பட்டோர் அறத்தின் வழி நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகும். 

பழத்தையும் கொட்டையயும் ஒப்பிட்டு திருவள்ளுவர் சொல்லவில்லை. அத்தகைய கற்பனை சமைந்து வந்த சமையலாகாது. 

அன்புடன் மு. கமலநாதன்

இக்குறளில் சமையல் குறிப்பே இல்லை. :)))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thenee MK

unread,
Nov 4, 2017, 1:53:05 AM11/4/17
to mintamil
கனியாத காய்க்கு புண்சொல் உவமை.

கனிந்த பழத்திற்கு இன்சொல் உவமை.

பக்குவப்பட்டோர் பழம்.

பக்குவப்படாதோர் காய்.

இது போதுமே. இதற்கு மேலும் எதற்கு திருத்தம்? திரு. பொன். சரவணன்.






You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/wx3kzTEiGeQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 1:56:07 AM11/4/17
to mintamil
2017-11-04 11:23 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
கனியாத காய்க்கு புண்சொல் உவமை.

கனிந்த பழத்திற்கு இன்சொல் உவமை.

இந்த உவமைகள் எப்படிப் பொருந்தும் என்பதையும் விளக்குங்கள் ஐயா.

தேமொழி

unread,
Nov 4, 2017, 1:56:34 AM11/4/17
to மின்தமிழ்

செயலின் குறிக்கோள் எதுவோ அதற்கேற்ற கருவியைத் தேர்வு செய்ய வேண்டும்.  

இனியவை கூறுவதால் கிடைக்கும் நன்மை என்ன? இதை அந்த அதிகாரம் முழுவதும் சொல்கிறார்.
இனிமை  அற்றவற்றைக் கூறுவதனால் கிடைக்கும் பயன் என்ன?
உங்கள் நோக்கம் ஆணி அடிப்பதாக இருந்தால் தேவை சுத்தியல். 

you must choose but choose wisely

காரியம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்றால் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு கோபத்தில் வார்த்தைகளை கொட்டிவிடும் ஆட்களை அனுப்பி வைப்பதில்லை என்பதுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

..... தேமொழி 

Thenee MK

unread,
Nov 4, 2017, 2:01:47 AM11/4/17
to mintamil
இன்சொல் கேட்பார் செவிக்கு இனிக்கும். 

கனிந்த பழம் உண்போர் நாவிற்கு இனிக்கும். 




திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 2:04:02 AM11/4/17
to mintamil
2017-11-04 11:31 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
இன்சொல் கேட்பார் செவிக்கு இனிக்கும். 

கனிந்த பழம் உண்போர் நாவிற்கு இனிக்கும். 

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். அப்படியே அடுத்த உவமையையும்  விளக்கி விடுங்களேன்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 2:16:12 AM11/4/17
to mintamil
நீங்க எங்கேயோ போய்ட்டிங்க தேமொழி அக்கா.

உங்க லெவலுக்கு என்னால வரமுடியல அக்கா. :)))

சும்மா உங்களுக்காக ..... ஆணியை அடிக்க சுத்தியல் தான் தேவை என்பதில்லை.

கல், பூட்டு, கட்டை... கையில் கிடைப்பவற்றைப் பயன்படுத்தலாம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். :))



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 4, 2017, 2:40:59 AM11/4/17
to mint...@googlegroups.com

உங்களுக்கு  இன்றைக்கு ஒரு  ட்ரீட் தருகிறேன். மாம்பழ அல்வா வேண்டுமா அல்லது ஆவக்காய் ஊறுகாய் வேண்டுமா?


உடலுக்கு நலன் பயக்கும்/கெடுதி தரும் போன்ற யோசனை  வேண்டாம். இரண்டும் மாமரத்தில் கிடைத்ததை வைத்துச் செய்ததே.


உங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யவும். பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள். 


ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவையும் பயனும் உண்டு. இரண்டையுமே சாப்பிடலாம். 


உண்ண விரும்பும் விருப்பம் மட்டுமே தேர்வு செய்வதை நிர்ணயிக்கும்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 2:59:12 AM11/4/17
to mintamil
2017-11-04 12:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

உங்களுக்கு  இன்றைக்கு ஒரு  ட்ரீட் தருகிறேன். மாம்பழ அல்வா வேண்டுமா அல்லது ஆவக்காய் ஊறுகாய் வேண்டுமா?


உடலுக்கு நலன் பயக்கும்/கெடுதி தரும் போன்ற யோசனை  யோசனை வேண்டாம். இரண்டும் மாமரத்தில் கிடைத்ததை வைத்துச் செய்ததே.


உங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யவும். பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள். 


விருந்துக்கு மிக்க நன்றி அக்கா.  எனக்கு ரெண்டுமே வேணும். :)))

Thenee MK

unread,
Nov 4, 2017, 3:33:31 AM11/4/17
to mintamil
காய் துவர்க்கும்

அதுபோல புண்சொல் கேட்பார் செவிக்கு துன்பத்தை விளைவிக்கும்.
  

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 3:38:38 AM11/4/17
to mintamil
2017-11-04 13:03 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
காய் துவர்க்கும்

ஐயா, எல்லா காய்களும் துவர்ப்பதில்லை. இனிப்பான, புளிப்பான, கார்ப்புடைய காய்கள் பல உண்டு.

காய்கள் துவர்த்தாலும் அவை உடலுக்கு நன்மைதான் செய்யும் ஐயா.

ஆனால் புண்சொற்கள் ஒருபோதும் யாருக்கும் நன்மை தராது.

எனவே காய் = பழத்தின் முந்தைய நிலை என்ற பொருளில் உவமை பொருந்தாது.

Thenee MK

unread,
Nov 4, 2017, 4:00:44 AM11/4/17
to mintamil
காய் துவர்க்குமென்றது உபச்சாரமாக கூறியது.

புளிப்பான, கார்ப்புடையை காய்கள் என்பனவெல்லாம் துன்பத்தின் வெவ்வேறு தன்மையை உணர்த்துவதாகும்.

இனிப்பு என்பதும் காய் சற்றே கனியும் தன்மையில் இனிப்பு உண்டாகும். இது குறைந்த இன்பமும் மிகுந்த துன்பத்தையும் குறிக்கும். இரண்டுங் கெட்டான் நிலை.

அறவோர் என்பார் இந்த இரண்டுங் கெட்டான் நிலையையும் கடந்தவர். 




 

Thenee MK

unread,
Nov 4, 2017, 4:04:24 AM11/4/17
to mintamil
காய் நன்மையையும் செய்யும் என்பதற்கு தேமொழி அவர்கள் முன் வைத்த சில குறள்களையும் காண்க.

மறத்தின் வகையாலும் நன்மை செய்ய இயலுமென்பதும் அருட்செயலே.


nkantan r

unread,
Nov 4, 2017, 6:13:07 AM11/4/17
to மின்தமிழ்
எல்லோரும் சொன்ன விளக்கம் தவறானது என்பதே தங்கள் திருத்தம்.

எல்லோரும் உண்பது, நுகர்வது என்றே எழுதியுள்ளனர். ஆனால் அது எப்படி?

கவர்ந்தற்று என்றல்லவோ உள்ளது..?
உண்ணுதல், சுவைத்தல், நுகர்தல் எங்கிருந்து வந்தது?

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 6:31:35 AM11/4/17
to mintamil
கவர்தல் = உண்ணுதல். இது அகராதியிலும் உள்ளது. இதனைத் தவறென்று நான் சொல்லவில்லை.

கவ் > கவ்வுதல் > கவர்தல் = உண்ணுதல்.

கவ் > கவ்வுதல் > கவளம் = உணவு உருண்டை.

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thenee MK

unread,
Nov 4, 2017, 8:06:13 AM11/4/17
to mintamil
கனி இருக்க காய் எதற்கு?

இன்சொல் இருக்க புண்சொல் எதற்கு?



திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 8:10:56 AM11/4/17
to mintamil
2017-11-04 17:36 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
கனி இருக்க காய் எதற்கு?

இது தவறான கேள்வி. காயும் கனியும் இயற்கையின் கொடையே.


இன்சொல் இருக்க புண்சொல் எதற்கு?

இது சரியான கேள்வி. ஏனென்றால் இன்சொல்லும் புண்சொல்லும் இயற்கையின் கொடையல்ல; நாம் படைத்தவை.

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 4, 2017, 8:28:35 AM11/4/17
to mintamil, Kalai Email

வணக்கம்.

மாம் பழத்திற்குள் கொட்டை இருக்கிறது.
"கனி (மாம்பழம் )இருக்கக் காய் (மாங்கொட்டையை) கவர்தல்" > கவ்வுதல் > கவ் செய்ய முடியாதே !

முந்திரிப் பழத்திற்கு வெளியே கொட்டை இருக்கிறது. இருந்தாலும்,
முந்திரிப் பழத்தைக் கவ்வாமலேயே அதன் வெளியே இருக்கும்  கொட்டையைக் கவ்வ முடியாதே !

கவ் > அவ்

அன்பன்
கி. காளைராசன்

Thenee MK

unread,
Nov 4, 2017, 8:36:22 AM11/4/17
to mintamil
கனி இருக்க காய் எதற்கு?

Choice is yours!

 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 8:45:59 AM11/4/17
to mintamil
2017-11-04 17:58 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.

மாம் பழத்திற்குள் கொட்டை இருக்கிறது.
"கனி (மாம்பழம் )இருக்கக் காய் (மாங்கொட்டையை) கவர்தல்" > கவ்வுதல் > கவ் செய்ய முடியாதே !

முந்திரிப் பழத்திற்கு வெளியே கொட்டை இருக்கிறது. இருந்தாலும்,
முந்திரிப் பழத்தைக் கவ்வாமலேயே அதன் வெளியே இருக்கும்  கொட்டையைக் கவ்வ முடியாதே !

கவ் > அவ்


அவ்வ்வ்வ்வ்....:))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 8:49:38 AM11/4/17
to mintamil
2017-11-04 18:06 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
கனி இருக்க காய் எதற்கு?

Choice is yours!

இதைத்தானே என் கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.

மக்கள் வெள்ளரிப்பழத்தை விட அதன் காயையே விரும்பி உண்பார்கள்.

கருத்தரித்த பெண்டிர் மாம்பழத்தைக் காட்டிலும் மாங்காயைத் தான் விரும்பி உண்பர்.

ஆகவே தான் காயினை (பழத்தின் முந்தைய நிலை) உண்பது தவறோ மடமையோ ஆகாது என்கிறேன்.

செல்வன்

unread,
Nov 4, 2017, 10:58:39 AM11/4/17
to mint...@googlegroups.com
காயை உண்பது உடல்நலத்துக்கு நல்லது அல்ல. பழுத்தபின் கனியாக உண்பதுதான் நல்லது. 

இப்போதைய தலைமுறைக்கு இது தெரியவில்லை எனினும் நம் பெரியவர்கள் அனுபவ பாடத்தில் இதை நன்கு அறிந்திருந்தார்கள்.

கொட்டையை தின்னாதே என கூறுவது அர்த்தமற்ற கூற்று. பைத்தியகாரன் கூட மாங்கொட்டையையும், பலாகொட்டையையும் தின்ன மாட்டான். கல்லை தின்னாதே, மண்ணை தின்னாதே என்பது எப்படி அவசியமற்ற கூற்றோ, அதேபோல் கொட்டையை தின்னாதெர் என்பதும் அவசியமற்ற கூற்றே.

காய் என்பது unripen fruit என்பதே சரி



Have you ever had a stomach pain after eating fruit? Let me reveal a secret. I am almost certain that the fruit was not ripe (or you combined it with wrong foods). Unfortunately, they don’t teach us in schools about the proper fruit ripeness and how to ripen it, so we might even not be aware of this problem. The other thing that can cause problems is overripe fruit, but that is rarely the case.

--

செல்வன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 4, 2017, 11:07:34 AM11/4/17
to mintamil
2017-11-04 20:28 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
காயை உண்பது உடல்நலத்துக்கு நல்லது அல்ல. பழுத்தபின் கனியாக உண்பதுதான் நல்லது. 

 வாங்க மருத்துவர் ஐயா. வழக்கம்போல இது நல்லது அது கெட்டது என்று கூறத் துவங்கி விட்டீர்கள். :))


இப்போதைய தலைமுறைக்கு இது தெரியவில்லை எனினும் நம் பெரியவர்கள் அனுபவ பாடத்தில் இதை நன்கு அறிந்திருந்தார்கள்.

கொட்டையை தின்னாதே என கூறுவது அர்த்தமற்ற கூற்று. பைத்தியகாரன் கூட மாங்கொட்டையையும், பலாகொட்டையையும் தின்ன மாட்டான். கல்லை தின்னாதே, மண்ணை தின்னாதே என்பது எப்படி அவசியமற்ற கூற்றோ, அதேபோல் கொட்டையை தின்னாதெர் என்பதும் அவசியமற்ற கூற்றே.

அதைத்தானே வள்ளுவரும் சொல்கிறார். கொட்டையை ஒருவன் தின்பது எப்படி மடத்தனமோ அதைப்போன்றதே கடுஞ்சொல் பேசுவது என்கிறார். கொட்டையைத் தின்னாதே என்று அவர் கூறவில்லை. நீங்களாக எடுத்து விடாதீர்கள். :))
 

காய் என்பது unripen fruit என்பதே சரி



Have you ever had a stomach pain after eating fruit? Let me reveal a secret. I am almost certain that the fruit was not ripe (or you combined it with wrong foods). Unfortunately, they don’t teach us in schools about the proper fruit ripeness and how to ripen it, so we might even not be aware of this problem. The other thing that can cause problems is overripe fruit, but that is rarely the case.

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Nov 4, 2017, 11:15:08 AM11/4/17
to mint...@googlegroups.com
கொட்டையை தினன வேண்டாம் என சொல்லும் அவசியமே இல்லை

பைத்தியகாரன் கூட கொட்டையைதின்ன மாட்டான். 

ஆனால் கனியாத பழத்தை எல்லாரும் உண்பார்கள். அது அப்போது அவர்களுக்கு சுவையாக இருந்தாலும் பின்னர் வயிற்றுவலி வந்து துன்பம் கொடுக்கும்.

அதேபோல கடுமசொல் பேசுவது பேசும்போது அப்படி பேசுபவருக்கு பலன் அளித்தாலும் அதன் பின்விளைவு அவருக்கு துன்பம் விளைவிக்கும்.


--

செல்வன்

nkantan r

unread,
Nov 4, 2017, 2:04:03 PM11/4/17
to மின்தமிழ்
பொறுப்புத்துறப்பு:
எனக்கு பழந் (பழைய என்ற பொருளில்) தமிழ் இலக்கியங்களில் ஆழமான அறிவும் அனுபவமும் கிடையாது. பின் ஏன் எழுதுகிறாய் என வினா எழும்.. முன்னர் ஒருவர் எழுதியதுபோல், இங்குள்ள தமிழறிஞர்கள் நேரத்தையும், அறிவையும், க்வர்ந்து ( உண்டு எனும் பொருளில் அல்ல, களவு எனும் பொருளில்!) என் அறியாமையைத் தீர்த்துக்கொள்ளவே!

---------
1. முதல் முதலாக உரை செய்த மணக்குடவர் உரை: பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

அவர் உண்பதைப்பற்றியோ, நுகர்வது பற்றியோ ஏதும் சொல்லவில்லை.

2.என்னுடைய PC முடங்கியுள்ள காரணத்தால், பழைய தமிழ் அகராதிகளில் கவர்தல் எனும் சொல்லுக்கு எப்பொழுது உண்ணுதல் எனும் பொருள் வந்தது என அறுதியிடமுடியவில்லை.

பரிமேலழகர் காலத்திற்கு பின்னால்? அவர் நுகர்தல் எனக்கொண்டு உரை செய்தலாற்றான்?

3. முப்பாலில் (திருக்குறளில்) மிக மிக குறைவாகவே வெவ்வேறு குறட்பாக்களில் ஒரே சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. 'கவர்ந்து' வேறு குறளில், எனக்குத் தெரிந்து, இல்லை. அதனால், அந்த சொல் என்னப்பொருளில் பயன்பட்டது என cross-reference இல்லை.

4. இணையத்தின் உதவியோடு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை யில் தேடியதில் ' கவர்' பல இடங்களில் வருகிறது. ஆனால் எடுத்துச்செல்லுதல், பறித்தல், பிடுங்குதல் எனும் பொருளே வருகிறது.

5. தாங்கள் பழந்தமிழ் இலக்கியத்தில், ஐயம்திரிபுற, கவர்தல் /கவர்ந்து, எந்தப்பாடலில் ஊண்ணுதல் எனும் பொருளில் கையாளப்படுகிறது எனக்காட்டினால், என் அறியாமை குறையும் நிலை ஏற்படும்

நன்றி

rnk

மணிவண்ணன்

unread,
Nov 4, 2017, 10:50:46 PM11/4/17
to மின்தமிழ்
இற்றைக் காலத்துப் பொருட்களை வைத்து வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியாது. அக்காலத்தில் தமிழருக்குத் தெரிந்தது முக்னிகளும் சில கிழங்கு வகைகளும் மட்டுமே. மா பலா வாழை - கனிகள் (ripe fruits) இனியவை; இவற்றின் காய்கள் (unripe fruits, not vegetables) இனியவை அல்ல. மாங்காய் சாம்பாரும் வாழைக்காய் பஜ்ஜியும் இல்லாத காலம். இப்பொழுது பொருள் காணுங்கள் - இனிய சொற்கள் இருக்க இனிமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் இனிய கனி இருக்க இனிமை இல்லாத காயை எடுத்துக்கொள்வது போல. இங்கே கவர்தல் ஏறத்தாழ to grab என்னும் பொருளில் தான் கொள்ள வேண்டும். 

When there are sweeter/pleasant words you can say, going for not so sweet/unpleasant words is like grabbing an unripe fruit when ripe ones are available. 

Neduchezhian T. Chezhian

unread,
Nov 5, 2017, 12:00:27 AM11/5/17
to mint...@googlegroups.com
திருத்தம் சரவணன் கடுமையாக உழைத்து கட்டுரையாக்கம் செய்திருக்கிறார். காலத்திற்கேற்ற நல்ல கருத்துப் பகிர்வு.நல்வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்

5 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:20 அன்று, மணிவண்ணன் <manyv...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

ponmudivadivel Ponmudi

unread,
Nov 5, 2017, 1:30:01 AM11/5/17
to mint...@googlegroups.com
காயை கவர்தலென்பதை உண்ணலெனக்கொண்டதால் எத்துணைக்குழப்பத்திற்கிடமாயிற்று!

திருத்தம் பொன் சரவணன் ’தமிழ்மொழி’ என்பதை ‘தமிழ் மொழி’ என்றெழுதுகிறார். இது குற்றமில்லையாவென்பதை அவரேசொல்லவேண்டும்.

‘இக் குறளில்’ என இதில் பலவிடங்களில்வருகிறது. இதென்ன சேர்த்தெழுதக்கூடாததா? சேர்த்துவிட்டால் அதை படிப்பது கடினமானவொன்றா? இதை இப்படி பிரிக்காமல் ‘இக்குறளில்’ என்றெழுதினாலென்ன? ‘இக்’ என்பதென்ன ஒரு தனிச்சொல்லா? இல்லையென்றால் அது ஏன் தனித்துநிற்கிறது?

இதேபோல் ‘இப் புதிய’ என்பதும் இதில் ஈரிடங்களிற்காணப்படுகிறது. இதை சேர்த்தெழுதுவதென்ன குற்றமா? ‘இப்புதிய’ என்றுதானேயெழுதவேண்டும்? பெருந்தொடர்களை பிரித்தெழுதுவது அவற்றின் நீளங்கருதியென அறிஞர்கள் சொல்வார்கள் ஆனால் இதுபோன்ற சிறியதொடர்களை என்னகாரணத்துக்காக இப்படி பிரித்தெழுதவேண்டும்?

இதைப்பாருங்கள்:

இவ்வாறு, ஒலிப்பதற்கு எளிமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் உள்ள சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்து ஒலிப்பதற்குக் கடினமாகவும் கேட்பதற்குக் கசப்பாகவும் உள்ள சொற்களை ஒருவர் பயன்படுத்தினால், அவரை முட்டாள் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறமுடியும்?. இதைத்தான் பழத்தை விட்டுவிட்டுக் கொட்டையைச் சாப்பிடும் முட்டாளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் வள்ளுவர்.

இதில் ‘ஒலிப்பதற்கு எளிமையாகவும்’ என்பதிலும் ‘கேட்பதற்கு இனிமையாகவும்’ என்பதிலும் புணர்ச்சி இல்லைபாருங்கள். இவற்றில் வருமொழிகள் உயிர்முதன்மொழிகள்.  ஆனால், வல்லினவருமொழிவரும்போது, ‘ஒலிப்பதற்குக் கடினமாகவும்’ ‘கேட்பதற்குக் கசப்பாகவும்’ என வலிமிகுந்துள்ளது. வலிமிகுவதென்பது புணர்ச்சியால்வருவதேயன்றோ?

உயிர்முத்ன்மொழி புணராததேன், வல்லினமுதல்மொழி புணர்ந்ததேன்? புணர்ச்சி தேவையாயில்லையாவென்பதை உறுதிப்படுத்துவது நான்காம்வேற்றுமையா, வருமொழியா? நான்காம்வேற்றுமையில் வருமொழி வல்லினமாயிருந்தால்மட்டுந்தான் புணர்ச்சி அமையுமா? வல்லினமல்லாத பிறமுதன்மொழிகள் புணராவா? பிறமுதன்மொழிகள் புணராவென இலக்கணத்தில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?

‘ஒலிப்பதற்கெளிமையாகவும்’ என்றும் ‘கேட்பதற்கினிமையாகவும்’ என்றும் அந்த சொற்கள் புணராவா? உயிர்வரின் குற்றியலுகரத்தின் உக்குறள் மெய்விட்டோடுமென்றது இந்தச்சொற்களுக்கும் பொருந்துந்தானே? ஆனாலும் இவை தரும் பொருளையெண்ணிப்பார்த்தால் இப்படி புணர்த்திச்சொல்வதைக்காட்டிலும் புணர்த்தாமற்சொல்வதே சொல்லவரும் பொருளுக்கு பொருந்தக்கூடியதாயிருக்கிறது.

அப்படி இந்தசொற்களை புணர்த்தாமற்சொல்வதே சரியானபொருளைத்தருமென்றால் வல்லினவருமொழிவருமிடத்திலும் புணர்த்தாமற்சொல்வதுதானே சரியானபொருளைத்தரும்? பொருளைப்பொருத்தவரை புணர்த்தாமற்சொல்வது சரியாயிருந்தும் இங்கே புணர்த்தியிருப்பதேன்/

நான்காம்வேற்றுமையில் வல்லினவருமொழிவந்தால் வலிமிகுமென்பது விதி. வலிமிகுமென்றால் புணர்ச்சி அமையும்போதுதான் வலி மிகுமேயன்றி வல்லினம்வரும் அனைத்திடங்களிலும் வலி மிகுந்துதானாகவேண்டுமென்பதில்லை.

எல்லாவேற்றுமையிலும் வருமொழிமுதலானது எவ்வினமாயிருந்தாலும் புணர்ந்தும்வரும், புணராமலும்வரும். புணர்ந்துவருவதும் புணராமல்வருவதும் சொல்லவரும் பொருளைப்பொருத்தது. புணர்த்திச்சொல்லவேண்டியவிடத்தில் புணர்த்தாமற்சொல்வதும் புணர்த்திச்சொல்லவேண்டாதவிடத்தில் புணர்த்திச்சொல்வதும் சொல்லவந்த பொருளில் குற்றத்தையுண்டாக்கும்.

புணர்ச்சியிலக்கணத்தில் இரண்டிலும் நான்கிலும் வினையெச்சத்திலும் சுட்டிலும் வல்லினம்வந்தால் வலிமிகுமென்றதை பொதுவிதியாய்க்கொண்டு அவை வரும் அனைத்திடங்களிலும் வலிமிகுத்துவிடுவதை இன்று காண்கிறோம். அவை புணராமல்வருவதும் உண்டென்பதையும் புணர்ந்தும் புணராமலும் வெவ்வேறுபொருளைத்தருமென்பதையும் நாம் அறியாமலிருக்கிறோம்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 5, 2017, 10:59:17 PM11/5/17
to mintamil
2017-11-04 20:44 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
கொட்டையை தினன வேண்டாம் என சொல்லும் அவசியமே இல்லை

பைத்தியகாரன் கூட கொட்டையைதின்ன மாட்டான். 

ஆனால் கனியாத பழத்தை எல்லாரும் உண்பார்கள். அது அப்போது அவர்களுக்கு சுவையாக இருந்தாலும் பின்னர் வயிற்றுவலி வந்து துன்பம் கொடுக்கும்.

அப்படியா?. மாங்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய் தின்று வயிற்றுவலி வந்தது என்று யாராச்சும் ஒருத்தரைச் சொல்லுங்களேன். முதலில் இது

டயட்டீசியன் இழை அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். :))



அதேபோல கடுமசொல் பேசுவது பேசும்போது அப்படி பேசுபவருக்கு பலன் அளித்தாலும் அதன் பின்விளைவு அவருக்கு துன்பம் விளைவிக்கும்.

உங்கள் விளக்கத்தில் பொருத்தமே இல்லை. கவனமாக நிதானமாக எழுதுங்கள் செல்வன் ஜி. :))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 5, 2017, 11:00:04 PM11/5/17
to mintamil

மிக்க நன்றி நெடுஞ்செழியன் ஐயா. :)))


2017-11-05 9:30 GMT+05:30 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>:



--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 5, 2017, 11:05:22 PM11/5/17
to mintamil
2017-11-05 8:20 GMT+05:30 மணிவண்ணன் <manyv...@gmail.com>:
இற்றைக் காலத்துப் பொருட்களை வைத்து வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியாது. அக்காலத்தில் தமிழருக்குத் தெரிந்தது முக்னிகளும் சில கிழங்கு வகைகளும் மட்டுமே.

அடடா, பழந்தமிழர்களை இப்படியா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். :(((

உங்களுக்கு மிஞ்சிப் போனால் 10 பூக்களைத் தெரியும். ஆனால் 100 க்கும் மேலான பூக்களைப் பதிவு செய்தவன் சங்கத்தமிழன்.

பழங்கள், காய்களிலும் எத்துணை வகைகளை சங்கத் தமிழன் பதிவு செய்திருக்கிறான் தெரியுமா?.
 
மா பலா வாழை - கனிகள் (ripe fruits) இனியவை; இவற்றின் காய்கள் (unripe fruits, not vegetables) இனியவை அல்ல. மாங்காய் சாம்பாரும் வாழைக்காய் பஜ்ஜியும் இல்லாத காலம்.

அதெப்படி அக்காலத்தில் இவை இல்லை என்று அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறீர்கள். :)))
 
இப்பொழுது பொருள் காணுங்கள் - இனிய சொற்கள் இருக்க இனிமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் இனிய கனி இருக்க இனிமை இல்லாத காயை எடுத்துக்கொள்வது போல. இங்கே கவர்தல் ஏறத்தாழ to grab என்னும் பொருளில் தான் கொள்ள வேண்டும். 

சரி, உங்கள் கருத்தின்படி, பழம் இருக்கக் காயை ஒருவன் எடுத்துச் சென்றால் தவறா மடத்தனமா?. எப்படி என்று கூறுங்களேன். 

When there are sweeter/pleasant words you can say, going for not so sweet/unpleasant words is like grabbing an unripe fruit when ripe ones are available. 


On Saturday, November 4, 2017 at 2:04:03 PM UTC-4, nkantan r wrote:
பொறுப்புத்துறப்பு:
எனக்கு பழந் (பழைய என்ற பொருளில்) தமிழ் இலக்கியங்களில் ஆழமான அறிவும் அனுபவமும் கிடையாது. பின் ஏன் எழுதுகிறாய் என வினா எழும்.. முன்னர் ஒருவர் எழுதியதுபோல், இங்குள்ள தமிழறிஞர்கள் நேரத்தையும், அறிவையும், க்வர்ந்து ( உண்டு எனும் பொருளில் அல்ல, களவு எனும் பொருளில்!) என் அறியாமையைத் தீர்த்துக்கொள்ளவே!

---------
1. முதல் முதலாக உரை செய்த மணக்குடவர் உரை: பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

அவர் உண்பதைப்பற்றியோ, நுகர்வது பற்றியோ ஏதும் சொல்லவில்லை.

2.என்னுடைய PC முடங்கியுள்ள காரணத்தால், பழைய தமிழ் அகராதிகளில் கவர்தல் எனும் சொல்லுக்கு எப்பொழுது உண்ணுதல் எனும் பொருள் வந்தது என அறுதியிடமுடியவில்லை.

பரிமேலழகர் காலத்திற்கு பின்னால்? அவர் நுகர்தல் எனக்கொண்டு உரை செய்தலாற்றான்?

3. முப்பாலில் (திருக்குறளில்) மிக மிக குறைவாகவே வெவ்வேறு குறட்பாக்களில் ஒரே சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. 'கவர்ந்து' வேறு குறளில், எனக்குத் தெரிந்து, இல்லை. அதனால், அந்த சொல் என்னப்பொருளில் பயன்பட்டது என cross-reference இல்லை.

4. இணையத்தின் உதவியோடு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை யில் தேடியதில் ' கவர்' பல இடங்களில் வருகிறது. ஆனால் எடுத்துச்செல்லுதல், பறித்தல், பிடுங்குதல் எனும் பொருளே வருகிறது.

5. தாங்கள் பழந்தமிழ் இலக்கியத்தில், ஐயம்திரிபுற, கவர்தல் /கவர்ந்து, எந்தப்பாடலில் ஊண்ணுதல் எனும் பொருளில் கையாளப்படுகிறது எனக்காட்டினால், என் அறியாமை குறையும் நிலை ஏற்படும்

நன்றி

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 5, 2017, 11:07:58 PM11/5/17
to mintamil
பொன்முடி ஐயாவுக்கு

வணக்கம். அவசரத்தில் சில சொற்களைப் புணர்த்தாமல் எழுதிவிடுகிறேன்.

மன்னித்துக் கொள்ளுங்கள். தங்கள் தமிழ்ப் பற்று எப்போதும் என்னை வியக்கச்செய்கிறது. :)))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 5, 2017, 11:16:54 PM11/5/17
to mintamil
கண்டன் ஐயா,

நீங்கள் கேட்டபடி, கவர்தல் என்னும் சொல் உண்ணுதல் / நுகர்தல் பொருளில் வரும் சங்கப் பாடல்கள்.

கொங்கு கவர் நீல செம் கண் சேவல் - சிறு 184
நலம் கவர் பசலையை நகுகம் நாமே - ஐங் 200/4
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து - பதி 15/7

இன்னும் இருக்கிறது. நேரமில்லை. :))

 

நன்றி

rnk


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 6, 2017, 12:00:23 AM11/6/17
to mint...@googlegroups.com
கொண்டது விடாக்கொள்கையாளர்! வாழ்க.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 6, 2017, 12:15:14 AM11/6/17
to mintamil
2017-11-06 10:30 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
கொண்டது விடாக்கொள்கையாளர்! வாழ்க.

மிக்க நன்றி ஐயா. :))

செல்வன்

unread,
Nov 6, 2017, 12:22:10 AM11/6/17
to mintamil
2017-11-05 21:59 GMT-06:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:



அப்படியா?. மாங்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய் தின்று வயிற்றுவலி வந்தது என்று யாராச்சும் ஒருத்தரைச் சொல்லுங்களேன். முதலில் இது

டயட்டீசியன் இழை அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். :))





அட ஆண்டவா...

மாங்காய் தின்றால் வயிற்றுவலி வரும் என்பது கிராமத்தில் உள்ள பாட்டிக்கும் தெரியும் கைவைத்தியம்..காண்க :-)

வெள்ளரியில் காய் தான் உள்ளது. வெள்ளரிப்பழம் என எதுவும் இல்லை.

நெல்லியை பொறுத்தவரை காயாக உண்பதை விட கனியாக உண்பதை குறிக்கும் தமிழ் மூதுரையே உள்ளது..

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும்
முன்னே இனிக்கும் பின்னே கசக்கும் என

முது நெல்லிக்கனியை தான் உண்ணவேண்டும் என தமிழன் அன்றே தெரிந்து வைத்திருந்தான்..நீங்கள் காயை தின்ன சொல்கிறீர்கள் :-) 

kanmani tamil

unread,
Nov 6, 2017, 12:23:06 AM11/6/17
to mintamil
'கவர்ந்தற்று'என்ற பதத்தை கவர்ந்த +அற்று என்று பிரித்து  'கவர்ந்தமையை  ஒத்தது 'எனப் பொருள் கொள்கிறோம் .
இதே 'கவர் 'என்னும் வினையடியை 'உள்ளம் கவர் கள்வன் 'என்னும் தொடரில் காண்கிறோம்.
விருப்பத்தோடும் ,வேகத்தோடும்  தேர்ந்தெடுத்தல் என்ற பொருளே பொருத்தமானதாக அமைகிறது.
இப்பொழுது மாம்பழத்தைச் சான்றாக எடுத்துக்கொள்வோம்.
என்னுடைய மூன்று பேரன்&பேத்திகளுக்கு முன்னால் மாம்பழம்,மாங்காய்,மாங்கொட்டைப்பொடி மூன்றையும் வைத்து,"அவரவர்க்கு வேணுங்கிறத எடுத்துச் சாப்பிடுங்கடா செல்லங்களா"என்று சொன்னால் மூவரும் முதலில்போட்டி போட்டுக் கொண்டு  மாம்பழத்தைத் தானே எடுப்பார்கள்.அப்படிப் 
போட்டி போடும் போது மாங்கொட்டைப் பொடியை தேர்ந்தெடுப்பதையே இன்னாத கூறலுக்கு உவமையாக்குகிறார் திருவள்ளுவர்.(மாங்கொட்டைப் பொடி அம்சூர் பொடி என்ற பெயரில் வடஇந்திய சமையலில் பேரிடம் வகிக்கிறது.என் குழந்தைப் பருவத்தில் எங்கள் பாட்டி செய்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.மாங்கொட்டையை கதவு இடுக்கில் வைத்து உடைப்பார் .உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அதன்மேல் சுண்ணாம்பை மெலிதாகத் தடவுவார்.நிழலில் காயவைப்பார்.நன்கு காய்ந்து விட்டால் அதை 3நாட்கள் பத்திரப்படுத்தவும் முடியும்.சிறு துண்டுகளாக்கி தானும் உண்பார்.எங்களையும் உண்ணச் சொல்வார்.மிகுந்த மருத்துவ குணம் உடையதாம்.துவர்க்கும்.)
கண்மணி        
 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 6, 2017, 12:27:06 AM11/6/17
to mintamil
2017-11-06 10:51 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:


2017-11-05 21:59 GMT-06:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:



அப்படியா?. மாங்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய் தின்று வயிற்றுவலி வந்தது என்று யாராச்சும் ஒருத்தரைச் சொல்லுங்களேன். முதலில் இது

டயட்டீசியன் இழை அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். :))





அட ஆண்டவா...

மாங்காய் தின்றால் வயிற்றுவலி வரும் என்பது கிராமத்தில் உள்ள பாட்டிக்கும் தெரியும் கைவைத்தியம்..காண்க :-)

வெள்ளரியில் காய் தான் உள்ளது. வெள்ளரிப்பழம் என எதுவும் இல்லை.

அடக் கடவுளே !. நீங்கள் இவ்வளவு வெள்ளந்தியா? எனது கட்டுரையில் வெள்ளரிப் பழத்தின் படத்தினைப் பார்க்கவில்லையா?. :)))
 

நெல்லியை பொறுத்தவரை காயாக உண்பதை விட கனியாக உண்பதை குறிக்கும் தமிழ் மூதுரையே உள்ளது..

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும்
முன்னே இனிக்கும் பின்னே கசக்கும் என

முது நெல்லிக்கனியை தான் உண்ணவேண்டும் என தமிழன் அன்றே தெரிந்து வைத்திருந்தான்..நீங்கள் காயை தின்ன சொல்கிறீர்கள் :-) 

நீங்க காய் சாப்பிடுவீர்களோ கனியைச் சாப்பிடுவீர்களோ எதையாவது சாப்பிட்டு நல்லா இருங்க போதும். )))

இதே நீங்க தான் நான்வெஜ் கூட காய்கறி சாலட் சாப்பிடுவது நல்லது என்று சொன்னீர்கள். இப்போது அப்படியே அந்தர்பல்டி. :))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

செல்வன்

unread,
Nov 6, 2017, 12:32:51 AM11/6/17
to mintamil
2017-11-05 23:27 GMT-06:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:



அடக் கடவுளே !. நீங்கள் இவ்வளவு வெள்ளந்தியா? எனது கட்டுரையில் வெள்ளரிப் பழத்தின் படத்தினைப் பார்க்கவில்லையா?. :)))


ஆண்டவா...முருகப்பெருமானே, சரவணா (நீங்க இல்லை. என் அப்பனை சொன்னேன் :-)


வெள்லரியை பொறுத்தவரை பழுத்து மஞ்சளாக ஆக அதன் கசப்புத்தனமை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதனால் தான் அதை காயாக உண்ணவேண்டும். பழம் இருக்கு. ஆனால் அது கசக்கும் :-) வெள்ளரி பச்சையாக, கெட்டியாக இருக்கையில் உண்பதே சிறந்தது. மஞ்சளாக, பழமாக ஆன்பின் உண்பது நல்லது அல்ல


 
 


நீங்க காய் சாப்பிடுவீர்களோ கனியைச் சாப்பிடுவீர்களோ எதையாவது சாப்பிட்டு நல்லா இருங்க போதும். )))

இதே நீங்க தான் நான்வெஜ் கூட காய்கறி சாலட் சாப்பிடுவது நல்லது என்று சொன்னீர்கள். இப்போது அப்படியே அந்தர்பல்டி. :))



காய்கறி = vegetables

காய்கறிகளும் (vegetables) காய்கனிகளும் (fruits) வேறு, வேறு :-)


--

செல்வன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 6, 2017, 12:37:53 AM11/6/17
to mintamil
2017-11-06 11:02 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:


2017-11-05 23:27 GMT-06:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:



அடக் கடவுளே !. நீங்கள் இவ்வளவு வெள்ளந்தியா? எனது கட்டுரையில் வெள்ளரிப் பழத்தின் படத்தினைப் பார்க்கவில்லையா?. :)))


ஆண்டவா...முருகப்பெருமானே, சரவணா (நீங்க இல்லை. என் அப்பனை சொன்னேன் :-)


வெள்லரியை பொறுத்தவரை பழுத்து மஞ்சளாக ஆக அதன் கசப்புத்தனமை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதனால் தான் அதை காயாக உண்ணவேண்டும். பழம் இருக்கு. ஆனால் அது கசக்கும் :-) வெள்ளரி பச்சையாக, கெட்டியாக இருக்கையில் உண்பதே சிறந்தது. மஞ்சளாக, பழமாக ஆன்பின் உண்பது நல்லது அல்ல

செல்வன் ஜி, உங்க BED TIME ஸ்டார்ட் ஆயிடுச்சினு நெனக்கிறேன். ஊருக்கு வந்தா நல்லதா ஒரு வெள்ளரிப் பழத்தைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு பாருங்க. இல்லாட்டி எங்கூருக்கு வாங்க. அருமையான சுவையுடன் வெள்ளரிப் பழம் கிடைக்கும். :)). எனக்கு வெள்ளரிக் காயைவிட பழம்னா உசுரு.


 
 


நீங்க காய் சாப்பிடுவீர்களோ கனியைச் சாப்பிடுவீர்களோ எதையாவது சாப்பிட்டு நல்லா இருங்க போதும். )))

இதே நீங்க தான் நான்வெஜ் கூட காய்கறி சாலட் சாப்பிடுவது நல்லது என்று சொன்னீர்கள். இப்போது அப்படியே அந்தர்பல்டி. :))



காய்கறி = vegetables

காய்கறிகளும் (vegetables) காய்கனிகளும் (fruits) வேறு, வேறு :-)

உங்க பெட் டைம் கன்பர்ம் ஆயிடுச்சி. :)))


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

செல்வன்

unread,
Nov 6, 2017, 12:42:22 AM11/6/17
to mintamil
2017-11-05 23:37 GMT-06:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:


செல்வன் ஜி, உங்க BED TIME ஸ்டார்ட் ஆயிடுச்சினு நெனக்கிறேன். ஊருக்கு வந்தா நல்லதா ஒரு வெள்ளரிப் பழத்தைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு பாருங்க. இல்லாட்டி எங்கூருக்கு வாங்க. அருமையான சுவையுடன் வெள்ளரிப் பழம் கிடைக்கும். :)). எனக்கு வெள்ளரிக் காயைவிட பழம்னா உசுரு.




ரைட்டு..அப்ப விவாதம் முடிஞ்சது. சரவணரே காய் வேண்டாம், கனிதான் பெஸ்டுன்னு சொல்லிட்டாரு :-)

அல்லாரும் ஊட்டுக்கு கிளம்புங்க :-)
 

--

செல்வன்

kanmani tamil

unread,
Nov 6, 2017, 12:43:37 AM11/6/17
to mintamil
செல்வன் அவர்களே ;வெள்ளரிப்பழம் பார்த்ததில்லையா?
நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
கடல் கடந்து இருக்கிறீர்கள் என்று மட்டும் தான் தெரியும்.அக்டோபர் மாதம் இந்தியா வந்தால் இங்கு வாருங்கள் .எங்கள் மாவட்டத்தில் சாத்தூரிலிருந்து வரும் வெள்ளரியின் சுவை புகழ் பெற்றது.வெள்ளரிப்பழத்தின் தோலை உரித்து வெண்மையான சதைப் பகுதியை மட்டும் துண்டு போட்டு நாட்டுச் சர்க்கரை தூவி உண்ணலாம்.சர்க்கரை தூவாமலும் உண்ணலாம்.அதில் மாச்சத்து (carbohydrates) மிகுதி.இப்பழத்தின் விதைகள் மிகவும்விலை உயர்ந்தவை.பதப்படுத்தப்பட்டு பாக்குடன் சேர்த்து பொட்டலம் போடுவர் .ஸ்டார் ஓட்டல்களில் உண்டு முடித்தவுடன் பில் கொண்டு வருபவன் வெள்ளரி விதை கலந்த பாக்கும் கொண்டு வருவான்.
கண்மணி     

nkantan r

unread,
Nov 6, 2017, 12:46:40 AM11/6/17
to மின்தமிழ்
ஓ! அப்படியா! இப்பாடல்களின்  பொருளுரைகளிலும் உங்கள் திருத்தமா?

உங்கள் மூன்று கால் முயலுடன் இவ்வாமையால் ஓட முடியாது!

ஆளை விடுங்க!

rnk

Ps: thanks for your explanation dr ponmudi
-------------------------


On Monday, 6 November 2017 09:46:54 UTC+5:30, திருத்தம் பொன். சரவணன் wrote:
2017-11-04 23:34 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
பொறுப்புத்துறப்பு:
எனக்கு பழந் (பழைய என்ற பொருளில்) தமிழ் இலக்கியங்களில் ஆழமான அறிவும் அனுபவமும் கிடையாது. பின் ஏன் எழுதுகிறாய் என வினா எழும்.. முன்னர் ஒருவர் எழுதியதுபோல், இங்குள்ள தமிழறிஞர்கள் நேரத்தையும், அறிவையும், க்வர்ந்து ( உண்டு எனும் பொருளில் அல்ல, களவு எனும் பொருளில்!) என் அறியாமையைத் தீர்த்துக்கொள்ளவே!

---------
1. முதல் முதலாக உரை செய்த மணக்குடவர் உரை: பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

அவர் உண்பதைப்பற்றியோ, நுகர்வது பற்றியோ ஏதும் சொல்லவில்லை.

2.என்னுடைய PC முடங்கியுள்ள காரணத்தால், பழைய தமிழ் அகராதிகளில் கவர்தல் எனும் சொல்லுக்கு எப்பொழுது உண்ணுதல் எனும் பொருள் வந்தது என அறுதியிடமுடியவில்லை.

பரிமேலழகர் காலத்திற்கு பின்னால்? அவர் நுகர்தல் எனக்கொண்டு உரை செய்தலாற்றான்?

3. முப்பாலில் (திருக்குறளில்) மிக மிக குறைவாகவே வெவ்வேறு குறட்பாக்களில் ஒரே சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. 'கவர்ந்து' வேறு குறளில், எனக்குத் தெரிந்து, இல்லை. அதனால், அந்த சொல் என்னப்பொருளில் பயன்பட்டது என cross-reference இல்லை.

4. இணையத்தின் உதவியோடு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை யில் தேடியதில் ' கவர்' பல இடங்களில் வருகிறது. ஆனால் எடுத்துச்செல்லுதல், பறித்தல், பிடுங்குதல் எனும் பொருளே வருகிறது.

5. தாங்கள் பழந்தமிழ் இலக்கியத்தில், ஐயம்திரிபுற, கவர்தல் /கவர்ந்து, எந்தப்பாடலில் ஊண்ணுதல் எனும் பொருளில் கையாளப்படுகிறது எனக்காட்டினால், என் அறியாமை குறையும் நிலை ஏற்படும்


கண்டன் ஐயா,

நீங்கள் கேட்டபடி, கவர்தல் என்னும் சொல் உண்ணுதல் / நுகர்தல் பொருளில் வரும் சங்கப் பாடல்கள்.

கொங்கு கவர் நீல செம் கண் சேவல் - சிறு 184
நலம் கவர் பசலையை நகுகம் நாமே - ஐங் 200/4
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து - பதி 15/7

இன்னும் இருக்கிறது. நேரமில்லை. :))

 

நன்றி

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 6, 2017, 1:00:38 AM11/6/17
to mintamil
2017-11-06 11:16 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
ஓ! அப்படியா! இப்பாடல்களின்  பொருளுரைகளிலும் உங்கள் திருத்தமா?

உங்கள் மூன்று கால் முயலுடன் இவ்வாமையால் ஓட முடியாது!

ஆளை விடுங்க!

தெரியுமே, நீங்க எப்பவுமே ஒரு முன்முடிவோட தான் கேள்வி கேப்பீங்க.

ஆனா எதுவுமே தெரியாத மாதிரி எழுதுவீங்க. :))


 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 6, 2017, 1:14:35 AM11/6/17
to mintamil
செல்வரு தூக்கக் கலக்கத்துல எழுத ஆரம்பிச்சுட்டாரு. :)))

 
 

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 6, 2017, 1:17:45 AM11/6/17
to mintamil
கண்டன் ஐயா

உங்களுக்காக சில பாடல்களைத் தேடப் போக

எனது அடுத்த கட்டுரைக்கான தலைப்பு கிடைத்துவிட்டது.

உங்களுக்கு நனி நன்றி. :))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 6, 2017, 1:31:41 AM11/6/17
to mintamil
2017-11-06 11:16 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
ஓ! அப்படியா! இப்பாடல்களின்  பொருளுரைகளிலும் உங்கள் திருத்தமா?

உங்கள் மூன்று கால் முயலுடன் இவ்வாமையால் ஓட முடியாது!

ஆளை விடுங்க!

rnk


பாண்டியராஜா ஐயாவின் சங்கச்சோலையில் உள்ள விளக்கங்கள்.

கொங்கு கவர் நீல செம் கண் சேவல் - சிறு 184

தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு

நலம் கவர் பசலையை நகுகம் நாமே - ஐங் 200/4

உன் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்ட பசலையைப் பார்த்து நகைப்போம்

அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து - பதி 15/7
நெருப்பு எரித்தழித்த இடங்களைப் போல, அனைத்தையும் உருக்குலைய


மூன்றிலுமே கவர்தல் = உண்ணல் / நுகர்தல் பொருள் வரவில்லையா?
 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Nov 6, 2017, 2:18:29 AM11/6/17
to மின்தமிழ்
அப்படியா?? தாங்கள் அனைவரும் தமிழறிந்தோர். தாங்கள் சொன்னால் சரியாகத்தானிருக்கும்.

======quote

கொங்கு கவர் நீல செம் கண் சேவல் - சிறு 184

தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு

நலம் கவர் பசலையை நகுகம் நாமே - ஐங் 200/4

உன் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்ட பசலையைப் பார்த்து நகைப்போம்

அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து - பதி 15/7
நெருப்பு எரித்தழித்த இடங்களைப் போல, அனைத்தையும் உருக்குலைய


மூன்றிலுமே கவர்தல் = உண்ணல் / நுகர்தல் பொருள் வரவில்லையா?

======
rnk

nkantan r

unread,
Nov 6, 2017, 4:40:52 AM11/6/17
to மின்தமிழ்
பொதுவாக பாக்குடன் கலக்கப்படும் வெள்ளை விதைகள் கீர்ணி பழத்திலிருந்து பெறப்படும்.

அணிச்சல் (cake)மேலும் தூவப்படும்.

வெள்ள்ரிப்பழ விதைகள் இப்படி பயன்படும் என்பது எனக்கு புதிய தகவல்.

rnk

மணிவண்ணன்

unread,
Nov 7, 2017, 10:13:56 AM11/7/17
to மின்தமிழ்
சரவணரே அது உங்களுக்கான பதிலல்லவே; மற்றவருக்கு மட்டுமே. உங்களுடன் வாதிக்க யாரால் இயலும்? உங்கள் தமிழறிவும் ஞானமும் இங்கே யாருக்குண்டு? நீங்கள் தனிச்சிறப்புடையவரன்றோ? You are very special indeed ;)

காய் கனி கொட்டை என்று தொடங்கி பூவிற்கு தவ்விவிட்டீர்கள். சங்கத்தமிழன் அறிந்திருந்த காய்களைப் பட்டியலிடுங்களேன்; அனைவருக்கும் பயன்படுமல்லவா? 

எப்படியோ! கேட்டுவிட்டீர்கள், சொல்கிறேன். இங்கே வள்ளுவன் சொல்வது - unripe என்ற பொருளில்; பழுக்காத கனி - தின்றால் ஒரு வெறுக்கத்தக்க கசப்பு சுவையை நாவில் நிறுத்துகிற பொருள்! எப்படி இன்னாத சொல்லல் ஒரு வெறுக்கத்தக்க உணர்வை நெஞ்சில் நிறுத்துகிறதோ அப்படி. மடத்தனமா இல்லையா என்று வள்ளுவன் சொல்லவில்லை. ஒரு கசப்புணர்வு எஞ்சி நிற்குமென மட்டுமே சொல்கிறான். காய்களையும் பச்சையாக தின்பர் என்பதை அறிந்து தான் சொல்கிறான் வள்ளுவன். 

- மணிவண்ணன்
பென்சில்வேனியா.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 7, 2017, 11:12:48 PM11/7/17
to mintamil
2017-11-07 20:43 GMT+05:30 மணிவண்ணன் <manyv...@gmail.com>:
சரவணரே அது உங்களுக்கான பதிலல்லவே; மற்றவருக்கு மட்டுமே. உங்களுடன் வாதிக்க யாரால் இயலும்? உங்கள் தமிழறிவும் ஞானமும் இங்கே யாருக்குண்டு? நீங்கள் தனிச்சிறப்புடையவரன்றோ? You are very special indeed ;)

காய் கனி கொட்டை என்று தொடங்கி பூவிற்கு தவ்விவிட்டீர்கள். சங்கத்தமிழன் அறிந்திருந்த காய்களைப் பட்டியலிடுங்களேன்; அனைவருக்கும் பயன்படுமல்லவா? 

எப்படியோ! கேட்டுவிட்டீர்கள், சொல்கிறேன். இங்கே வள்ளுவன் சொல்வது - unripe என்ற பொருளில்; பழுக்காத கனி - தின்றால் ஒரு வெறுக்கத்தக்க கசப்பு சுவையை நாவில் நிறுத்துகிற பொருள்! எப்படி இன்னாத சொல்லல் ஒரு வெறுக்கத்தக்க உணர்வை நெஞ்சில் நிறுத்துகிறதோ அப்படி. மடத்தனமா இல்லையா என்று வள்ளுவன் சொல்லவில்லை. ஒரு கசப்புணர்வு எஞ்சி நிற்குமென மட்டுமே சொல்கிறான். காய்களையும் பச்சையாக தின்பர் என்பதை அறிந்து தான் சொல்கிறான் வள்ளுவன். 

நீங்கள் எந்தக் காயைத் தின்றுபார்த்துவிட்டுச் சொல்கிறீர்கள்?.

நீங்கள் கூறிய முக்கனிகளின் காயையும் நான் தின்று பார்த்திருக்கிறேன்.

மாங்காய் = கசக்காது புளிக்கும்

பலாக்காய் = கசக்காது.

வாழைக்காய் = கசக்காது .

இந்த மூன்றையும் தின்றுபார்த்துவிட்டுக் கூறுங்கள். நான் ஒப்புக்கொள்கிறேன். :)))


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 8, 2017, 12:04:33 AM11/8/17
to மின்தமிழ்

///நீங்கள் எந்தக் காயைத் தின்றுபார்த்துவிட்டுச் சொல்கிறீர்கள்?.///


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

[[சாலமன் பாப்பையா உரை: உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.]]

என்ற  குறளுக்கு நீங்கள் விளக்கம் எழுதினால், அதில் ஐயம் கொண்டு  எவரேனும் கேள்வி கேட்டால்,  நஞ்சையும் கள்ளையும் குடித்துப் பார்த்தோ / குடிக்க வைத்துப் பார்த்தோ வேறுபாடு காணச் சொல்வீர்களோ என்று நடுக்கமாக இருக்கிறது சரவணன்.

..... தேமொழி  

nkantan r

unread,
Nov 8, 2017, 12:32:33 AM11/8/17
to மின்தமிழ்
அகராதியில் 'கவர்' என்றால் 'நுகர்' என்றும் பொருள் உண்டு என்பதால், இவ்விழை 'பறித்தல்', 'கொள்ளல்' எனும் நேரடி உரை கொள்ளாமல், "உண்ணுதல்', 'சுவைத்தல்' என்றே ஓடிக்கொண்டிருக்கிறது.

துஞ்சுதல் என்றால் 'இறத்தல்' என்று அகராதி காட்டும். அப்படிப்பொருள் கொண்டால்? இங்கு அபத்தம் தெளிவாகத் தெரிவதால், 'தூங்குதல்' என்பது சரி என்று அனைவரும் ஏற்பர்.
ஆனால், அங்கு ('கவர்ந்து') நுட்பமாய் இருப்பதாலும், மணக்குடவர் தவிர்த்து அனைத்து உரையும் உண்ணுதல் என்றே உரைத்ததாலும், இக்குழப்பம்.

பறித்தல், கொள்ளுதல் எனும் பொருளே சரி.

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 8, 2017, 1:07:32 AM11/8/17
to mintamil
2017-11-08 10:34 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

///நீங்கள் எந்தக் காயைத் தின்றுபார்த்துவிட்டுச் சொல்கிறீர்கள்?.///


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

[[சாலமன் பாப்பையா உரை: உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.]]

என்ற  குறளுக்கு நீங்கள் விளக்கம் எழுதினால், அதில் ஐயம் கொண்டு  எவரேனும் கேள்வி கேட்டால்,  நஞ்சையும் கள்ளையும் குடித்துப் பார்த்தோ / குடிக்க வைத்துப் பார்த்தோ வேறுபாடு காணச் சொல்வீர்களோ என்று நடுக்கமாக இருக்கிறது சரவணன்.

இங்கே நஞ்சும் கள்ளும் சுவைகருதி ஒப்பிடப்படவில்லை. அவ்வாறு வள்ளுவர் கூறியிருந்தால் கட்டாயம் குடித்துப் பார்த்திருப்பேன். சிறிதளவு நஞ்சு ஒன்று செய்யாது என்று மருத்துவம் கூறுகிறதே. :))

மற்றபடி, எஞ்ஞான்றும் கள்ளினைக் குடித்துக் கொண்டேயிருந்தால் அது நஞ்சினைப் போல அவர் உயிர்க்கு வேட்டுவைக்காமல் வேறென்ன செய்யும்?.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்போது கள் மட்டும் விதிவிலக்கா?

Thenee MK

unread,
Nov 8, 2017, 1:28:31 AM11/8/17
to mintamil
ஒரு சிறிய பொருளை வைத்துக் கொண்டு வம்பை எவ்வளவு தூரம் வளர்க்க முடியும் என்பதற்குச் சிறந்த புலவர்கள் கொண்டது மின் தமிழ் குழுமம்.



You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/wx3kzTEiGeQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 8, 2017, 2:03:38 AM11/8/17
to mintamil
2017-11-08 11:58 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
ஒரு சிறிய பொருளை வைத்துக் கொண்டு வம்பை எவ்வளவு தூரம் வளர்க்க முடியும் என்பதற்குச் சிறந்த புலவர்கள் கொண்டது மின் தமிழ் குழுமம்.

ஐயா, தமிழில் வம்பு என்பதற்குப் புதுமை என்றும் பொருள்.  புதிய கருத்துக்கள் மீதான விவாதமே இவ் இழையில் தொடர்கிறது. :))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 8, 2017, 2:20:47 AM11/8/17
to mintamil
எப்படிச் சரியாகும்?.

இக் குறளில் வரும் கூறலென்னும் வினையானது வாயால் செய்யப்படுவது.

பறித்தல் / கொள்ளுதலென்பது கைகளால் செய்யப்படுவது. ஆனால்

உண்ணுதல் என்பதோ கூறலைப் போலவே வாயினால் செய்யப்படுவது.

எது பொருத்தம் ?.
 

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Nov 8, 2017, 3:45:11 AM11/8/17
to மின்தமிழ்
ஓ! அப்படிப் போரிங்களா? கூறல் வாயிலிருந்து வெளி வருவது - விழுங்குதல் அல்ல.

அப்புறம்:
உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்

(உள்ளல் - கள்வேம்...?)

rnk

மணிவண்ணன்

unread,
Nov 8, 2017, 10:55:40 AM11/8/17
to மின்தமிழ்
சரியாகச்சொல்வதானால் இக்காய்களின் சுவை கசட்டை - கசக்கும் துவர்ப்பு. இவ்விடத்தில் துவர்ப்பை விட கசப்புத்தன்மையை மேம்படுத்திச்சொல்லியிருக்கிறான் வள்ளுவன். கடுஞ்சொல் மனதில் இருத்துகிற உணர்வை மனக்கசப்பு / கசப்புணர்வு என்று சொல்லுவது வழக்கு என்பதால் இதற்கிணையாக காய்களின் கசட்டைச்சுவையை ஒப்பிடுகிறான் வள்ளுவன். 

- மணிவண்ணன்
பென்சில்வேனியா.

Reply all
Reply to author
Forward
0 new messages