அறிமுகம்

106 views
Skip to first unread message

மல்லிகை

unread,
Mar 22, 2010, 7:36:40 PM3/22/10
to மின்தமிழ்
பெயர் : வடிவேல்
கன்னியப்பன்

பிறந்த நாள் : 03-10-1948

பொதுக்கல்வி : முதுகலை (தமிழ்)

தொழிற்கல்வி : முதுகலை(கல்வி இயல்)

தற்போதைய நிலை : முப்பத்து மூன்றாண்டுகள்
ஆசிரியராகப் பணியாற்றி, தற்போது பணிஓய்வு.

முகவரி : மல்லி இல்லம் / 1-
பதின்மூன்றாவது தெரு / ஆசிரியர் நகர் /

திருக்கழுக்குன்றம் / 603109

தொலைபேசி எண் : 044-27447705

E-Mail :
vkte...@gmail.com

நான் இணையத்திற்குப் புதியவன். மின்தமிழ்குழும உறுப்பினர்கள்
தக்கவழி காட்டுதல்கள் அளித்திட வேண்டுகிறேன்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

N. Kannan

unread,
Mar 22, 2010, 8:50:23 PM3/22/10
to mint...@googlegroups.com
வாருங்கள் வடிவேல் கன்னியப்பன்.

தமிழகத்தில் தமிழ்க் கல்வி பற்றிய அக்கறை இக்குழுமத்தில் நிறைய உண்டு.
செங்குட்டுவன், தாங்கள் அது பற்றியயெல்லாம் இங்கு அலச வேண்டும். நான்
கிராமத்து தமிழ்க்கல்வி கற்றவன். அதுவே இன்று என்னை உங்கள் முன்
வைத்திருக்கிறது.

கண்ணன்

2010/3/23 மல்லிகை <vkte...@gmail.com>:

vadivelu kaniappan

unread,
Mar 22, 2010, 9:14:37 PM3/22/10
to mint...@googlegroups.com
வாழ்க வளமுடன்! முதலில் உங்களின் தாழ்வு மணப்பான்மை நீங்குதல் வேண்டு. யானக்கு துப்பிக்கை. மனிதனுக்கு நம்பிக்கை. எதனையும் இழக்கலாம். நம்பிக்கையை ஒருபோதும், எக்காலத்தும் இழக்கக் கூடாது.கிராமத்து தமிழ்வழிக் கல்வி கற்றல் என்பது என்ன தரக்குறைவானக் கல்வியா? பதினைந்தாண்டுகளுக்கு முன் நான் கல்பாக்கம் அணுஆற்றல் நகரியத்தில் நடை பெற்ற ஒரு வினாடிவினா போட்டிக்கு என்பள்ளி மாணவரை அழைத்துப் போயிருந்தேன்.அப்போட்டிக்கு சென்னை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவ, மாணவியர் வந்திருந்தனர். அப்போட்டியில் வெல்பவருக்கு சென்னை கிண்டியிலுள்ள ஐ.ஐ.ட்டி. யில் ஒருமாதம் கோடை விடுமுறை வகுப்பிற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்பதுதான். அப்போட்டியி முதல் பரிசு பெற்றது யார் தெரியுமா? சூராடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வழி கிராமக் கல்விபெற்ற மாணவன் தான்.எனவே தரமான கல்விக்குத் தேவை தாய்மொழிவழிக் கல்விதான். எனவே தமிழ் மொழிவழிக் கல்வி என்பது தேவையான ஒன்று.  எனவே கிராமத்து தமிழ்க்கல்வி கற்றதனால் தாழ்வு ஒன்றுமில்லை. வாழ்க வளமுடன். 
23 மார்ச், 2010 6:20 am அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:
>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

meena muthu

unread,
Mar 22, 2010, 10:37:25 PM3/22/10
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம் வருக.

கிராமத்துக்கல்வி என்பது மிகவும் மதிப்பிற்குரியது என்பதனைத்தான்  பெருமையாக நினைத்து  தங்களிடம் சொல்லிக்கொள்கிறார் கண்ணன்.

தன் கிராமத்தை அதன் மக்களை அங்கு பேசும் தமிழ் மொழியை மிகவும் நேசிப்பவர் அவர்.

மீனாமுத்து

2010/3/23 vadivelu kaniappan <vkte...@gmail.com>

Ramesh

unread,
Mar 22, 2010, 10:37:42 PM3/22/10
to mint...@googlegroups.com
வருக!

ஐயா,

முனைவர் கண்ணன் தமிழ் வழிக் கல்வி பற்றிக் குறிப்பிட்டது அவரின் பின்புலத்தை பற்றிக் கூறவே அன்றி எந்த வித தாழ்வு மனப்பான்மையும் இல்லை என்பதில் எனக்கு ஐயமில்லை.

அவர் தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் மற்றும் மின் தமிழ் குழுமத்தின் மட்டுறுத்தர். நீங்கள் இணையத்திற்கே புதியவர் என்பதால் இதைப் பற்றிக் கூறினேன்.

நன்றி.

2010/3/22 vadivelu kaniappan <vkte...@gmail.com>



--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

N. Kannan

unread,
Mar 22, 2010, 10:52:14 PM3/22/10
to mint...@googlegroups.com
2010/3/23 vadivelu kaniappan <vkte...@gmail.com>:

> வாழ்க வளமுடன்! முதலில் உங்களின் தாழ்வு மணப்பான்மை நீங்குதல் வேண்டு.

எனக்கு தாழ்வு மனப்பான்மையா :-))

க.>

vadivelu kaniappan

unread,
Mar 23, 2010, 1:37:09 AM3/23/10
to mint...@googlegroups.com
ஐயா. வணக்கம்.தங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவ்வாறு எழுதியமைக்கு என் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இது என் அறியாமையால் ஏற்பட்ட பிழை. நான் எவரையும் குறைத்து மதிப்பிடவோ, மனம் வருந்துமாறு கூறவோ கனவிலும் எண்ணாதவன்.ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறேன். என்னைச் சுற்றிலும் நடைபெறும் செயல்கள் அவ்வாறு தங்களையும் சேர்த்து எண்ண வைத்துவிட்டது. ஒரு கசப்பான உண்மையைத் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அது என்னவெனில் கால ஓட்டத்தில் கிராமப் புறங்களில் அரசின் தமிழ்வழிக் கல்விக் கூடங்கள் இருக்காது. அரசு வரும் கல்வியாண்டு முதல் கிராமப்புற அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விஆரம்பக் கட்டத்தில்[ Pre-Primary- LKG/UKG]தொடங்க உள்ளதாகச் செய்தி வெளி வந்துள்ளது.எனவேதான் தாங்களும் கிராமதமிழ்வழிக் கல்விகற்றதைத் தாழ்வாக எண்ணுகிறீர்களோ என்றெண்ணி, கிராமப்புறத் தமிழ்வழிக் கற்றதனால் தாழ்வு ஏதுமில்லை. உயர்வுதான். தாழ்வு ஏதுமில்லைஎன்று கூறத்தன் அவ்வாறு எழுதினேன். மீண்டும் இது போன்று தவறுகளே ஏற்படாது என்று கூறிக் கொள்கிறேன்.இணயத்திற்கு புதியவன் ஆதலால் நேர்ந்த பிழைக்கு வருந்துகிறேன்.என்றென்றும் தங்கள் அனுள்ள வடிவேல் கன்னியப்பன்.
23 மார்ச், 2010 8:22 am அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

--

N. Kannan

unread,
Mar 23, 2010, 3:11:02 AM3/23/10
to mint...@googlegroups.com
அன்பின் கன்னியப்பன்:

அதனால் என்ன இப்ப? ;-)

தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது என்ற அக்கறையில் வந்த சொல்.
தாய்மொழிக் கல்வியே வளரும் சிறார்களுக்கு சிறந்தது என்பது மொழியியலார்
கருத்து. ஆன்மீக நோக்கிலும் அதுவே சிறந்தது என்பது ஆழ்வார்கள் கருத்தும்.
ஆனாலும், இந்திய துணைக்கண்டத்தில் எல்லாமே ஒரு மாதிரி எங்கோ போய்கொண்டு
இருக்கிறது. கவலைப்படுவதா? விட்டு விடுவதா? என்று தெரியவில்லை.
அதனால்தான் பள்ளி ஆசிரியர்களான உங்களது அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்ளுங்கள் என்றேன்.
நன்றி.

கண்ணன்

2010/3/23 vadivelu kaniappan <vkte...@gmail.com>:

vadivelu kaniappan

unread,
Mar 23, 2010, 3:19:11 AM3/23/10
to mint...@googlegroups.com
நன்றி! மனம் பூப்போல இலேசானது.

23 மார்ச், 2010 12:41 pm அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

V, Dhivakar

unread,
Mar 23, 2010, 3:27:30 AM3/23/10
to mint...@googlegroups.com
இலேசானது

ஆசிரியருக்கு,
இந்த இலேசானது தமிழ்ச் சொல்லா அல்லது தமிழ்-வட சொல்லா? தமிழ்ச் சொல்லென்றால்
(அல்லது வட-தமிழ் சொல்லென்றாலும்) அந்நாளையப் பழக்கத்தில் உள்ளதா, இலக்கியத்தில் எங்கும் உள்ளதா?

சிரமத்துக்கு மன்னிக்கவும்

வணக்கத்துடன்
திவாகர்

2010/3/23 vadivelu kaniappan <vkte...@gmail.com>
நன்றி! மனம் பூப்போல .



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Subashini Tremmel

unread,
Mar 23, 2010, 3:53:40 AM3/23/10
to mint...@googlegroups.com
உங்களுக்கு நல்வரவு திரு.வடிவேல் கண்ணியப்பன். கண்ணனும் பிற நண்பர்களும் சொல்லியிருப்பது போல உங்கள் அனுபவங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  பல வருடங்களுக்கு முன்னர் நானும் ஆசிரியராக ஓரிரு ஆண்டுகள் பணி செய்திருக்கிறேன். மன நிறைவை வழங்கிய பணி அது. உஙக்ள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
 
அன்புடன்
சுபா
2010/3/23 மல்லிகை <vkte...@gmail.com>
பெயர்                                               :  வடிவேல்

இமலாதித்தன்

unread,
Mar 23, 2010, 9:11:16 AM3/23/10
to mint...@googlegroups.com
2010/3/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>
மன நிறைவை வழங்கிய பணி அது. உஙக்ள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
 


வாழ்த்துகளுக்கு "க்" வருமா? வராதா?






தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com


srirangammohanarangan v

unread,
Mar 23, 2010, 10:06:19 AM3/23/10
to mint...@googlegroups.com
வடிவேல்  கன்னியப்பரே   வருக! 
 
நீண்ட  மௌனம்  காத்துப்  பின்   வந்திருக்கும்  
திவாகரரும் வருக!:--))))

 

shylaja

unread,
Mar 23, 2010, 10:22:22 AM3/23/10
to mint...@googlegroups.com


2010/3/23 இமலாதித்தன் <emalat...@gmail.com>
2010/3/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>
மன நிறைவை வழங்கிய பணி அது. உஙக்ள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
 


வாழ்த்துகளுக்கு "க்" வருமா? வராதா?<<<<<<>>>>.  வரக்கூடாது! 
 






தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
ஷைலஜா

//நல்லார் எனத்தாம் நனி விரும்பிக்கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்(கு) உமி உண்டு;நீர்க்கு நுரை உண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.///

---நாலடியார்---

shylaja

unread,
Mar 23, 2010, 10:23:04 AM3/23/10
to mint...@googlegroups.com
நல்வரவு திரு வடிவேல் கன்னியப்பர் அவர்களுக்கு!

2010/3/23 srirangammohanarangan v <ranga...@gmail.com>



--

Tthamizth Tthenee

unread,
Mar 23, 2010, 10:46:07 AM3/23/10
to mint...@googlegroups.com
வடிவேலு கன்னியப்பன் அவர்களுக்கு நல் வரவு

அன்புடன்
தமிழ்த்தேனீ


23-3-10 அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:


--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

kavi senguttuvan

unread,
Mar 23, 2010, 11:23:10 AM3/23/10
to mint...@googlegroups.com
வருக வருக
வடிவேல் கன்னியப்பன் வருக
மின்தமிழ் குழுமத்திற்கு வருக
முப்பதாண்டு உம்தமிழ் பணிஅனுபவத்தை
முத்தாய்ப்பாய் எம்மோடு பகிர்ந்துக்கொள்ள வருக !
அன்புடன்.........

கவி.செங்குட்டுவன் (எ) செ.இராஜேந்திரன், எம்.ஏ,எம்.பில்,பி.எட்,

119,கச்சேரி சாலை,
 
ஊத்தங்கரை - 635207., கிருஷ்ணகிரி மாவட்டம்,
 
அலைபேசி : 9842712109 / 9965634541, தொலைபேசி : 04341- 223011 / 223023.
மின்னஞ்சல் : rajend...@yahoo.co.in/ kavi.sen...@gmail.com

 வலைப்பூ : http//pumskottukarampatti.blogspot.com

 



2010/3/23 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

vadivelu kaniappan

unread,
Mar 23, 2010, 6:50:17 AM3/23/10
to mint...@googlegroups.com
வாழ்க வளமுடன்! தங்களின் வரவேற்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.உலகிலே உன்னதமான பணி எதுவென்று என்னைக் கேட்டால் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுவதுதான்.கள்ளங் கபடற்ற பிள்ளைகளைப் பார்த்தால் நம் கவலைகள் பறந்து போம். நான் ஆசிரியராக பணியாற்றிய காலம் இறைவன் எனக்கு கொடுத்த பரிசாகும். என்ன அற்புதமான காலம். இறைவனுக்கு நன்றிகள்.என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.

23 மார்ச், 2010 1:23 pm அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதியது:

devoo

unread,
Mar 23, 2010, 2:09:01 PM3/23/10
to மின்தமிழ்

திரு வடிவேல் அவர்களுக்கு,

செங்குட்டுவன் அவர்கள் பங்கேற்ற இந்த இழைகளையும் நீங்கள் பார்க்க
வேண்டும்;
கல்வித்துறை பற்றிய பேச்சு -

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/c10d91662d2407a/
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/9426de2090768b2d/

தேவ்


On Mar 23, 5:50 am, vadivelu kaniappan <vktej...@gmail.com> wrote:
> வாழ்க வளமுடன்! தங்களின் வரவேற்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.உலகிலே
> உன்னதமான பணி எதுவென்று என்னைக் கேட்டால் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப்
> பணியாற்றுவதுதான்.கள்ளங் கபடற்ற பிள்ளைகளைப் பார்த்தால் நம் கவலைகள் பறந்து
> போம். நான் ஆசிரியராக பணியாற்றிய காலம் இறைவன் எனக்கு கொடுத்த பரிசாகும். என்ன
> அற்புதமான காலம். இறைவனுக்கு நன்றிகள்.என்றென்றும் அன்புடன் வடிவேல்
> கன்னியப்பன்.
>

> 23 மார்ச், 2010 1:23 pm அன்று, Subashini Tremmel <ksubash...@gmail.com>எழுதியது:


>
> > உங்களுக்கு நல்வரவு திரு.வடிவேல் கண்ணியப்பன். கண்ணனும் பிற நண்பர்களும்
> > சொல்லியிருப்பது போல உங்கள் அனுபவங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
> > பல வருடங்களுக்கு முன்னர் நானும் ஆசிரியராக ஓரிரு ஆண்டுகள் பணி
> > செய்திருக்கிறேன். மன நிறைவை வழங்கிய பணி அது. உஙக்ள் முயற்சிகளுக்கு
> > வாழ்த்துக்கள்.
>
> > அன்புடன்
> > சுபா

> > 2010/3/23 மல்லிகை <vktej...@gmail.com>


>
> >> பெயர்                                               :  வடிவேல்
> >> கன்னியப்பன்
>
> >> பிறந்த நாள்                                     :  03-10-1948
>
> >> பொதுக்கல்வி                                   : முதுகலை (தமிழ்)
>
> >> தொழிற்கல்வி                                   : முதுகலை(கல்வி இயல்)
>
> >> தற்போதைய நிலை                         : முப்பத்து மூன்றாண்டுகள்
> >> ஆசிரியராகப் பணியாற்றி, தற்போது பணிஓய்வு.
>
> >> முகவரி                                             : மல்லி இல்லம் / 1-
> >> பதின்மூன்றாவது தெரு / ஆசிரியர் நகர் /
>
> >> திருக்கழுக்குன்றம் / 603109
>
> >> தொலைபேசி  எண்                         : 044-27447705
>
> >> E-Mail                                                 :

> >> vktej...@gmail.com


>
> >>       நான் இணையத்திற்குப் புதியவன். மின்தமிழ்குழும உறுப்பினர்கள்
> >> தக்கவழி காட்டுதல்கள் அளித்திட வேண்டுகிறேன்.
>
> >>                                     வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
> >>                                      வாழிய பாரத மணித்திரு நாடு!
> >>                                     வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

ananda rasa thiruma

unread,
Mar 23, 2010, 9:12:30 PM3/23/10
to mint...@googlegroups.com
பண்டைய உரையாசிரியர்கள் எல்லோரும் வாழ்த்துக்கள் என ”க்” இடையிட்டே எழுதுவர். மே.வீ. வேணுகோபால்பிள்ளை அவர்கள் வாழ்த்துகள், எழுத்துகள் என எழுத வேண்டும் என வற்புறுத்திவந்தார். தமிழ் நாட்டில் இதற்காக எழுத்துக்களா? எழுத்துகளா? என்னும் பட்டிமன்றமே நடந்தது. இவ்விரண்டில் நான் உரையாசிரியர்கள் கட்சியைச் சேர்ந்தவன். இன்று பலர் எழுத்துகள் என்றே எழுதுகின்றனர். இரண்டுக்கும் இலக்கணச் சான்றுகள் உள்ளன.

அன்புடன்
ஆராதி

2010/3/23 இமலாதித்தன் <emalat...@gmail.com>
2010/3/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
Mar 24, 2010, 2:07:37 AM3/24/10
to mint...@googlegroups.com
ஓம்.
இதே போன்று சுவரில்-. சுவற்றில்,
இடத்திற்குப் போகவேண்டியுள்ளது- இடத்துக்குப் போக வேண்டியுள்ளது.
கல்லாமையை இல்லாமையாக்குவோம்.
கல்லாமையை இல்லாது ஆக்குவோம்
.






 




   .     
  ஓம்.அன்புடன் தமிழறிஞர்களே வணக்கம்.
'அருகாமை' என்ற சொல்லை அண்மை, மிக அருகில் என்ற பொருள்களில் பல
இடங்களிலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஒரு வேர்ச் சொல்லுடன் 'ஆமை'
என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்.

காட்டு:

பணிவு + ஆமை = பணியாமை
கனிவு + ஆமை = கனியாமை
செய் + ஆமை = செய்யாமை

அதே நெறியில் பார்த்தால்

அருகு + ஆமை = அருகாமை

என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால்  ஒன்லினெ
டாமில் ளெxஇசொன்கூட 'ச் லொசெ ப்ரொxஇமிட்ய்' என்றே அருகாமைக்குப் பொருள்
சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது
இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா
-=-=-=-
தமிழண்ணலின் ஒரு கட்டுரை:
========
அருகில் புகுந்த ஆமை
=======
எங்கள் வீட்டிற்கு அருகில், சிவன் கோயிலுக்கு அருகில் என்று கூற வேண்டிய
இடங்களில் அருகாமையில் என்று எழுதுகிறார்கள். செந்தமிழாக எழுதுகிற
நினைப்பு; எங்கிருந்து இந்த ஆமை 'அருகில்' வந்ததென்று தெரியவில்லை.
கல்லாமை, அழுக்காறாமை, வெ·காமை, விளங்காமை போன்ற எதிர்மறைத்
தொழிற் பெயர்கள் பலவுள. அருகாமையில் எதிர்மறை எதுவுமில்லை. அருகுதல்-
சுருங்குதல்; அருகாமை - சுருங்காமை என்றால் அத் தொழிற்பெயர் வேறு.
இனிமேல் நம் அருகில் இந்த 'ஆமை' வராமல் காக்க வேண்டும்.

'அண்மையிலுள்ளது; அண்மையில் நிகழும்' என இட அணிமையும் கால அணிமையும்
குறிக்கப்படுகின்றன. 'பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம், அணித்தோ,
சேய்த்தோ' என்பது புறப்பாட்டு (புறம்: 173). அருகே என்பதை இடச்
சுருக்கத்தை மட்டும் சுட்டவும், 'அண்மை', 'அணிமையை' இடம், காலம்
இரண்டிற்கும் பயன்படுத்தவும் பழகியுள்ளோம். எங்கள் வீடு அருகில்தான்
இருக்கிறது; குடியரசு நாள் அணிமையில் வருகிறது, இல்லையா?*

மிகைத் திருத்தம்

சரியாக இருப்பதைத் தவறுபடத் திருத்துவது மிகைப்பட்ட செயலாகும். மிகைத்
திருத்தம் என்பது செந்தமிழாக எழுதுகிறோம் என நினைத்துக் கொண்டு தவறு
செய்வது. அவற்றுள் முக்கியமான சிலவற்றை நினைவுகூர்வோம்.

நூல்கள்

நூல்களே முறையாகும். செந்தமிழில் எழுதுவதாக எண்ணிக்கொண்டு நூற்கள் எனப்
பலர் எழுதி விடுகின்றனர். நமது கால்களைக் காற்கள் ஆக்கலாமா? உழுகின்ற
சால்களை சாற்களாக்குவதா? வால்கள், வேல்கள் இருக்கவும் நூல்கள் நூற்களாவது
'மிக நன்றாக' எழுதுவதாக எண்ணிக் கொண்டு செய்யும் தவறு! அதைத் தவிர்க்க
வேண்டும்.

பொருள்கள்

பொருள்கள்தான் சரி. ஆனால் பொருட்களை, பொருட்களுக்கு என்றே எழுதக்
காரணம் பொருட்சிறப்பு, பொருட்பேறு, பொருட்குறை எனப் பிற இடங்களில்
விகாரப்படுவதால், இதிலும் அவ்வாறே ஒலித்துவிடும் பழக்கமாகும்.
பொருள்களை எடுத்து வை, அங்கு எத்தனை பொருள்கள் உள்ளன என்பதே
முறையாகும்.

இவையெல்லாம் சரியாக உள்ளவற்றை நாமே ஒரு நினைப்பில் தவறென்று
எண்ணிக்கொண்டு பிழைபட எழுதி விடுவன ஆகும். பொருத்தமாகயிருப்பதைத்
திருத்தம் எனலாம். இப்படி மிகையாக - வேண்டாமல் செய்வதை (மிகைத்
திருத்தம்) என்றுதானே சொல்ல வேண்டும்.


*கோவை தமிழாசிரியர் நா.கு. பொன்னுசாமி, 'அருகண்மை என்ற சொல்லே
அருகாமை ஆயிற்று என்கிறார். 'நெடுஞ்சேண் ஆரிடை' போல, ஒரு பொருட்
பன்மொழியாக வருதல் கூடும் ஆயினும், 'அருகண்மை' பேச்சிலோ, எழுத்திலோ
ஆட்சி உண்டா என்று தேட வேண்டும். மற்றபடி மிகப் பொருத்தமாக உளது.
****
பசுபதி

--- -=-


ஓம். அன்புடையீர்! . இதே பாங்கில்
பின்வரும் மரபுச் சொறொடர் பிழையாகப் பயன்பட்டுவருகின்றது.



(1 )"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"

ஆனால் பயன்படுத்துவோர் இப்படி எழுதுகின்றார்கள்.
"யாதும் ஊரே! யாவரும் கேளீர்!"

யாவரும் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள் என்று பொருள்பட எழுதுதல் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

பட்டுச் சேலை , பட்டுப்பூச்சி (சரி)
பட்டு சிறந்தது (ஏன் 'ச்' வரக் கூடாது?) விளக்கம்?

சென்னை தொலைக்காட்சி; ( ஏன் 'த்' வரக் கூடாது?)

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (ஏன் மதுரை'க்' வரக் கூடாது? )

வள்ளுவர் கோட்டம் (பிழை) வள்ளுவர்க்கோட்டம் (சரி) எவ்வாறு?

எழுத்துகள் (சரி) எழுத்துக்கள்(பிழை) எவ்வாறு?

(2) தெரிந்து கொள்ளுமுகத்தான் பின்வரும் விளக்கம் தர வேண்டுகின்றேன்.

தோன்றியது இறந்தகால வினை - இதனில் காலங்காட்டும் இடை நிலை உருபு என்ன?

இருக்கும்,பறக்கும், அமையும், தோன்றும், கூடும். அற்றுப்போகும், ஆகும், கழியும், வாழும்,முடியும்,அடையும்
பதியும்,நிறையும், தரும், காணும்-
இச்சொற்கள் எதிர்காலம் என்று தெரிகின்றன.
காலங்காட்டும் இடைநிலை உருபு என்ன?

(3)ஆறாவது அறிவு எப்போது ஏற்பட்டது?

ஓரறிவு உயிர்:- புல், மரம். தொட்டால் உணரும்.
ஈரறிவு உயிர்:- சங்கு, நத்தை- நாவறிவும்,தொட்டறிவும்.
மூவறிவு உயிர்:- கரையான், எறும்பு- மெய்யுணர்வும், நாவறிவும், மூக்கறிவும்
நான்கறிவு உயிர்:- தும்பி, வண்டு கண்ணறிவு மெய்யறிவு,நாவறிவு,மூக்கறிவு
ஐந்தறிவு உயிர்:- மக்கள், தேவர், நரகர், விலங்கு, பறவை --
காதறிவோடு பிற நான்கும்.

எனில் ஆறாவது அறிவு என்று நாம் பேசும் பகுத்தறிவு 'பட்டறிவா? '.
எப்போது முதல் புழக்கத்தில் வந்திருக்கக் கூடும்?
மறை நூல்களில் இவை எவ்வாறு பேசப்பட்டிருக்கின்றன?
இதர மொழிகளில் எவ்வாறு வரையரை செய்திருக்கின்றார்கள்?
அறிஞர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்?

ஞான குருவானவர் பிழைகளைப் பட்டியலிட்டு வகைக் கொன்றாகத் தெளிவுபடுத்தும் முகத்தான் சுட்டிக் காட்டி
நீக்குவதால் பிறப்பியல்பான ஞானம் ஒளிவீசுகின்றது என்கிறார்களே !

குருவின் உபதேசங்களை சிஷ்யன் பிராணனில் கலக்கின்றான் என்பதும் அறிஞர் வாக்கு.
விளக்கம் கோருகின்றேன் -
அன்புடன்,
வெ.சுப்பிரமணியன்.
ஓம்

 

 













--------------------------------------------------------------------------------









 




   .     
  ஓம்.அன்புடன் தமிழறிஞர்களே வணக்கம்.
'அருகாமை' என்ற சொல்லை அண்மை, மிக அருகில் என்ற பொருள்களில் பல
இடங்களிலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஒரு வேர்ச் சொல்லுடன் 'ஆமை'
என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்.

காட்டு:

பணிவு + ஆமை = பணியாமை
கனிவு + ஆமை = கனியாமை
செய் + ஆமை = செய்யாமை

அதே நெறியில் பார்த்தால்

அருகு + ஆமை = அருகாமை

என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால்  ஒன்லினெ
டாமில் ளெxஇசொன்கூட 'ச் லொசெ ப்ரொxஇமிட்ய்' என்றே அருகாமைக்குப் பொருள்
சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது
இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா
-=-=-=-
தமிழண்ணலின் ஒரு கட்டுரை:
========
அருகில் புகுந்த ஆமை
=======
எங்கள் வீட்டிற்கு அருகில், சிவன் கோயிலுக்கு அருகில் என்று கூற வேண்டிய
இடங்களில் அருகாமையில் என்று எழுதுகிறார்கள். செந்தமிழாக எழுதுகிற
நினைப்பு; எங்கிருந்து இந்த ஆமை 'அருகில்' வந்ததென்று தெரியவில்லை.
கல்லாமை, அழுக்காறாமை, வெ·காமை, விளங்காமை போன்ற எதிர்மறைத்
தொழிற் பெயர்கள் பலவுள. அருகாமையில் எதிர்மறை எதுவுமில்லை. அருகுதல்-
சுருங்குதல்; அருகாமை - சுருங்காமை என்றால் அத் தொழிற்பெயர் வேறு.
இனிமேல் நம் அருகில் இந்த 'ஆமை' வராமல் காக்க வேண்டும்.

'அண்மையிலுள்ளது; அண்மையில் நிகழும்' என இட அணிமையும் கால அணிமையும்
குறிக்கப்படுகின்றன. 'பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம், அணித்தோ,
சேய்த்தோ' என்பது புறப்பாட்டு (புறம்: 173). அருகே என்பதை இடச்
சுருக்கத்தை மட்டும் சுட்டவும், 'அண்மை', 'அணிமையை' இடம், காலம்
இரண்டிற்கும் பயன்படுத்தவும் பழகியுள்ளோம். எங்கள் வீடு அருகில்தான்
இருக்கிறது; குடியரசு நாள் அணிமையில் வருகிறது, இல்லையா?*

மிகைத் திருத்தம்

சரியாக இருப்பதைத் தவறுபடத் திருத்துவது மிகைப்பட்ட செயலாகும். மிகைத்
திருத்தம் என்பது செந்தமிழாக எழுதுகிறோம் என நினைத்துக் கொண்டு தவறு
செய்வது. அவற்றுள் முக்கியமான சிலவற்றை நினைவுகூர்வோம்.

நூல்கள்

நூல்களே முறையாகும். செந்தமிழில் எழுதுவதாக எண்ணிக்கொண்டு நூற்கள் எனப்
பலர் எழுதி விடுகின்றனர். நமது கால்களைக் காற்கள் ஆக்கலாமா? உழுகின்ற
சால்களை சாற்களாக்குவதா? வால்கள், வேல்கள் இருக்கவும் நூல்கள் நூற்களாவது
'மிக நன்றாக' எழுதுவதாக எண்ணிக் கொண்டு செய்யும் தவறு! அதைத் தவிர்க்க
வேண்டும்.

பொருள்கள்

பொருள்கள்தான் சரி. ஆனால் பொருட்களை, பொருட்களுக்கு என்றே எழுதக்
காரணம் பொருட்சிறப்பு, பொருட்பேறு, பொருட்குறை எனப் பிற இடங்களில்
விகாரப்படுவதால், இதிலும் அவ்வாறே ஒலித்துவிடும் பழக்கமாகும்.
பொருள்களை எடுத்து வை, அங்கு எத்தனை பொருள்கள் உள்ளன என்பதே
முறையாகும்.

இவையெல்லாம் சரியாக உள்ளவற்றை நாமே ஒரு நினைப்பில் தவறென்று
எண்ணிக்கொண்டு பிழைபட எழுதி விடுவன ஆகும். பொருத்தமாகயிருப்பதைத்
திருத்தம் எனலாம். இப்படி மிகையாக - வேண்டாமல் செய்வதை (மிகைத்
திருத்தம்) என்றுதானே சொல்ல வேண்டும்.


*கோவை தமிழாசிரியர் நா.கு. பொன்னுசாமி, 'அருகண்மை என்ற சொல்லே
அருகாமை ஆயிற்று என்கிறார். 'நெடுஞ்சேண் ஆரிடை' போல, ஒரு பொருட்
பன்மொழியாக வருதல் கூடும் ஆயினும், 'அருகண்மை' பேச்சிலோ, எழுத்திலோ
ஆட்சி உண்டா என்று தேட வேண்டும். மற்றபடி மிகப் பொருத்தமாக உளது.
****
பசுபதி

--- -=-


ஓம். அன்புடையீர்! . இதே பாங்கில்
பின்வரும் மரபுச் சொறொடர் பிழையாகப் பயன்பட்டுவருகின்றது.



(1 )"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"

ஆனால் பயன்படுத்துவோர் இப்படி எழுதுகின்றார்கள்.
"யாதும் ஊரே! யாவரும் கேளீர்!"

யாவரும் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள் என்று பொருள்பட எழுதுதல் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

பட்டுச் சேலை , பட்டுப்பூச்சி (சரி)
பட்டு சிறந்தது (ஏன் 'ச்' வரக் கூடாது?) விளக்கம்?

சென்னை தொலைக்காட்சி; ( ஏன் 'த்' வரக் கூடாது?)

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (ஏன் மதுரை'க்' வரக் கூடாது? )

வள்ளுவர் கோட்டம் (பிழை) வள்ளுவர்க்கோட்டம் (சரி) எவ்வாறு?

எழுத்துகள் (சரி) எழுத்துக்கள்(பிழை) எவ்வாறு?

(2) தெரிந்து கொள்ளுமுகத்தான் பின்வரும் விளக்கம் தர வேண்டுகின்றேன்.

தோன்றியது இறந்தகால வினை - இதனில் காலங்காட்டும் இடை நிலை உருபு என்ன?

இருக்கும்,பறக்கும், அமையும், தோன்றும், கூடும். அற்றுப்போகும், ஆகும், கழியும், வாழும்,முடியும்,அடையும்
பதியும்,நிறையும், தரும், காணும்-
இச்சொற்கள் எதிர்காலம் என்று தெரிகின்றன.
காலங்காட்டும் இடைநிலை உருபு என்ன?

(3)ஆறாவது அறிவு எப்போது ஏற்பட்டது?

ஓரறிவு உயிர்:- புல், மரம். தொட்டால் உணரும்.
ஈரறிவு உயிர்:- சங்கு, நத்தை- நாவறிவும்,தொட்டறிவும்.
மூவறிவு உயிர்:- கரையான், எறும்பு- மெய்யுணர்வும், நாவறிவும், மூக்கறிவும்
நான்கறிவு உயிர்:- தும்பி, வண்டு கண்ணறிவு மெய்யறிவு,நாவறிவு,மூக்கறிவு
ஐந்தறிவு உயிர்:- மக்கள், தேவர், நரகர், விலங்கு, பறவை --
காதறிவோடு பிற நான்கும்.

எனில் ஆறாவது அறிவு என்று நாம் பேசும் பகுத்தறிவு 'பட்டறிவா? '.
எப்போது முதல் புழக்கத்தில் வந்திருக்கக் கூடும்?
மறை நூல்களில் இவை எவ்வாறு பேசப்பட்டிருக்கின்றன?
இதர மொழிகளில் எவ்வாறு வரையரை செய்திருக்கின்றார்கள்?
அறிஞர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்?

ஞான குருவானவர் பிழைகளைப் பட்டியலிட்டு வகைக் கொன்றாகத் தெளிவுபடுத்தும் முகத்தான் சுட்டிக் காட்டி
நீக்குவதால் பிறப்பியல்பான ஞானம் ஒளிவீசுகின்றது என்கிறார்களே !


அன்புடன்,
வெ.சுப்பிரமணியன்.
ஓம்

 

 


































2010/3/24 ananda rasa thiruma <aara...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Mar 26, 2010, 9:10:26 AM3/26/10
to mint...@googlegroups.com
2010/3/23 இமலாதித்தன் <emalat...@gmail.com>
2010/3/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>
மன நிறைவை வழங்கிய பணி அது. உஙக்ள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
 


வாழ்த்துகளுக்கு "க்" வருமா? வராதா?


 
 
வரும், ஆனா வராது!
 
வராது என்பது சரியென்றாலும் வருவதும் சரியென்று ஆகிவிட்டது!
 
பலரும் பலவாறு விளக்கிய பிறகு இரண்டும் சரி என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எந்த இடத்தில் எது வருகிறதோ அந்த இடத்தில் அதை அப்படியே பயன்படுத்தலாம். வழுவமைதி என்றும் கொள்ளலாம்.
 
ஓகை நடராஜன்.

OAGAI NATARAJAN

unread,
Mar 26, 2010, 9:18:45 AM3/26/10
to mint...@googlegroups.com


2010/3/24 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

ஓம்.
இதே போன்று சுவரில்-. சுவற்றில்,
இடத்திற்குப் போகவேண்டியுள்ளது- இடத்துக்குப் போக வேண்டியுள்ளது.
கல்லாமையை இல்லாமையாக்குவோம்.
கல்லாமையை இல்லாது ஆக்குவோம்
.  .     
  ஓம்.அன்புடன் தமிழறிஞர்களே வணக்கம்.
'அருகாமை' என்ற சொல்லை அண்மை, மிக அருகில் என்ற பொருள்களில் பல
இடங்களிலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஒரு வேர்ச் சொல்லுடன் 'ஆமை'
என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்.
 

காட்டு:

பணிவு + ஆமை = பணியாமை
கனிவு + ஆமை = கனியாமை
செய் + ஆமை = செய்யாமை

அதே நெறியில் பார்த்தால்

அருகு + ஆமை = அருகாமை

என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால்  ஒன்லினெ
டாமில் ளெxஇசொன்கூட 'ச் லொசெ ப்ரொxஇமிட்ய்' என்றே அருகாமைக்குப் பொருள்
சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது
இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா
 
பணி + ஆமை = பணியாமை
கனி + ஆமை = கனியாமை

செய் + ஆமை = செய்யாமை
 
இந்த காட்டுகளில் பணி கனி செய் ஆகியவை வினைச் சொற்கள். ஆனால் அருகு என்பதை நெருங்கு என்ற பொருளில் வினைச்சொல்லாகப் பயன்படுத்தமுடியுமா? முடியுமென்றால் அருகாமையை நெருங்காமை என்று பொருள் கொள்ளலாம்.
 
ஓகை நடராஜன்.

kavi senguttuvan

unread,
Mar 26, 2010, 9:42:10 AM3/26/10
to mint...@googlegroups.com
அய்யா, வணக்கம், 
                தாங்கள் நலமா? நான் பங்கேற்ற இழையை தற்போது திரு வடிவேல் அவர்களுக்கு அறிமுகப் படுத்தியமைக்கு எனதினிய நன்றிகள்.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

2010/3/23 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

ananda rasa thiruma

unread,
Mar 27, 2010, 8:27:55 AM3/27/10
to mint...@googlegroups.com

சுவரில்/சுவற்றில்

            சுவர் + இல் = சுவரில்

சுவர் என்ற சொல்லுடன் இல் என்னும் இடப்பொருளில் வரும் ஏழாம் வேற்றுமை உருபு சேர்ந்து சுவரில் என்றாகிறது. சுவர் என்பதற்கு மாறாகச் 'சுவற்' என எவரும் பேசுவதோ எழுதுவதோ இல்லை. சுவர் என்னும் சொல்லை இல் உருபுடன் சேர்த்து வழங்கும்போது மட்டுமே சுவற்றில் என மக்கள் தவறாக வழங்குகின்றனர்.

 

இடத்திற்கு/ இடத்துக்கு

பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும் போது, சாரியைகளில் ஒன்றையோ இரண்டையுமோ ஏற்கும். சில சமயங்களில் சாரியை இல்லாமல் வேற்றுமை உருபு சேர்வதும் உண்டு.

            மரம்+ ஐ = மர + அத்து + ஐ = மர + த்து + ஐ = மரத்தை

(அத்துச் சாரியை. இரண்டு அகரங்கள் அடுத்தடுத்து வந்ததால் அத்தின் அகரம் கெட்டது- 'அத்தின் அகரம் அகர முனை இல்லை' - தொல்காப்பியம்)

            மரம் + அத்து + இன் + ஐ = மரத்தினை (இன் சாரியை)

            கரும்பு ஐ = கரும்பு + இன் + ஐ = கரும்பினை

          கரும்பு ஐ = கரும்பை (சாரியை இன்றி வேற்றுமை உருபு சேர்ந்துள்ளது)

எடுத்துக்கொண்ட இடம் என்பதனுடன் 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு சேர்ந்துள்ளது.

            இடம் + கு = இடம் + அத்து + கு = இட + த்து + கு = இடத்துக்கு

            இடம் + கு = இடம் + அத்து + இன் + கு = இடத்திற்கு (பொன் குடம் = பொற்குடம் என்பதைக் காண்க) 

           

இல்லாமை/இல்லாது

'மை' - பண்புப் பெயர் விகுதிகளுள் ஒன்று. '' இச்சொல்லில் சாரியையாக வந்துள்ளது.

            இல்லாமை = இல் + ஆ + மை = இல்லாமை

            இல்லாது = இல் + ஆ + து (து - குறிப்பு வினையெச்ச விகுதி; ஆக்குவோம் என்னும் வினை கொண்டு முடிந்தது)

 

அருகாமை

நெருங்கியுள்ள தன்மை என்னும் பொருளில் இச்சொல் பயன்பட்டுள்ளது.

அருகு + இல் = அருகில்; அருகு + ஆகுதல் + மை = அருகு + ஆதல் + மை = அருகு + ஆ + மை = அருகாமை

ஆகுதல் என்னும் தொழிற்பெயர் ஆதல் என இடைக்குறையகாவும் வழங்கப்படுகிறது. இதில் இடம் பெறும் தல் என்பது தொழிற்பெயர் விகுதி. தொழிற்பெயர் விகுதி கெட்டு பண்புப் பெயர் விகுதியான 'மை'  இடம்பெற்று அருகாகும் தன்மையை உணர்த்தியது. ஆகவே இங்கு ஆ என்பது எதிர்மறை இடைநிலை அன்று.( சொல் + மை = சொன்மை எனத் தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளமை காண்க. 'சொன்மை தெரிதலும்...'. தமிழண்ணல் கூறியுள்ள கருத்தும் சிந்திக்கத் தக்கது)

 

பட்டுச் சேலை/பட்டு சிறந்தது

'பட்டு' என்பது வன்றொடர் குற்றியலுகரச் சொல். வினைத்தொகை தவிர்த்த ஏனைய வன்றொடர் சொற்களை அடுத்து வல்லெழுத்துக்களில் தொடங்கும் சொல் வருமானால் வந்த ஒற்று மிகும். பட்டுச் சேலை என்பதற்குப் பட்டால் நெய்த சேலை என்பது பொருள். இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை என்னும் தொடர் இலக்கணத்திற்கு உரியது. அனைத்து உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகளிலும் வல்லெழுத்து வரின் ஒற்று மிகும்.

எழுவாய்த் தொடரில் வல்லெழுத்து வரின் ஒற்று மிகாது என்பது பொது விதி. அதன் அடிப்படையில் பட்டு சிறந்தது என வந்துள்ளது. ஆனால் பண்டைய உரையாசிரியர்க்கும் புலவர்க்கும் இது உடன்பாடன்று.

            'கொக்குப் பறக்கும் புறாப் பறக்கும்

            நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்'

என்னும் பாடல் அடியில் கொக்குப் பறக்கும்  என்பதில் கொக்கு என்னும் எழுவாய் வன்றொடர்குற்றியலுகரம் பறக்கும் என்னும் வினை கொண்டு முடிந்தது. இதில் பண்டையோர் வழக்கே எனக்கு உடன்பாடு. பட்டுச் சிறந்தது என ஒற்று மிகுத்து எழுதலாம்.

 

சென்னை தொலைக்காட்சி/ சென்னைத் தொலைக்காட்சி (நிலையம்)

சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிலையம் என்னும் பொருளில் இத்தொடர் அமைந்துள்ளது. ஏழாம் வேற்றுமையை அடுத்து வரும் ஒற்று மிகும்.

            (எ-டு) புதுவைப் பல்கலைக் கழகம்

மதுரையின்கண் உள்ள காமராசர் பெயரில் அமைந்த பல்கலைக் கழகம் என்னும் பொருளில் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் என இருப்பதே இலக்கணப்படி ஏற்புடையது. அங்கே பணியாற்றிய தமிழண்ணல் முதலியோர் இதனை வற்புறுத்தாமல் விட்ட காரணம் புலப்படவில்லை.

 

வள்ளுவர் கோட்டம்/ வள்ளுவர்க் கோட்டம்

வள்ளுவர் என்பது உயர்திணைப் பெயர். உயர்திணைப் பெயர்களை அடுத்து வரும் வல்லெழுத்து மிகாது என்பது பொது விதி. அதனால் வள்ளுவர் கோட்டம் என்பதே சரியானது.

 

எழுத்துக்கள்/ எழுத்துகள்

எழுத்துக்கள்/ எழுத்துகள் என்பன பற்றி முன்னரே வேறோர் இழையில் குறிப்பிட்டுள்ளேன்.

தமிழ்ப் புணர்ச்சி விதிகள் எல்லாம் முதலில் தமிழ்ச் சொற்களுக்கு மட்டுமே உரியன.

            பால் + அபிஷேகம் = பாலபிஷேகம் என்பது தமிழ்மொழிப் புணர்ச்சி;                       பால் + அபிஷேகம் = பாலாபிஷேகம் என்பது வடமொழிப் புணர்ச்சி.

வடமொழிப் புணர்ச்சியில் அகரம் ஆகாரமாகிப் புணர்ந்துள்ளது.

அடுத்ததாகப்  பெயருக்கும் வினைக்குமே தமிழில் விதிகள் கூறப்பட்டுள்ளன. தமிழிற்கே உரிய இயற்சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர், வினை, இடை, உரி என்பன. இவற்றில் இடை, உரி என்னும் சொற்களில் ஒருசிலவற்றிற்குத் தவிர அனைத்திற்கும் தனித் தனியே விதிகள் இலக்கண நூல்களில் கூறப்படவில்லை. உரையாசிரியர்கள் பயன்படுத்தியுள்ள வழக்காற்றைப் பார்த்தே நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

            எழுத்துக்கள்/ எழுத்துகள் = எழுத்து + கள் எனப் பிரிக்க வேண்டும்.

இவற்றில் எழுத்து என்பது பெயர்ச் சொல். கள் என்பது பன்மைப் பொருள் உணர்த்தும் இடைச்சொல். பெயர்ச் சொல்லோடு இடைச் சொல் சேரும் போது எப்படிப் புணரும் என்பதற்கு இனிமேல்தான் விரிவாக விதி காண வேண்டும். எழுத்து என்பது வன்றொடர் குற்றியலுகரச் சொல். வன்றொடர் குற்றியலுகரச் சொல்லாயின் ஒற்று மிக வேண்டும் என்னும் பொது விதிப்படி, அதனை அடுத்து வல்லெழுத்தில் தொடங்கும் கள் என்னும் இடைச் சொல் வருவதால் ஒற்று மிக வேண்டும் என்பது உரையாசிரியர்கள் வழக்காற்றை ஒட்டியது. பிற்காலத்தில் இடைச் சொல் என்பதால் ஒற்று மிகாமல் எழுதலாம் என மே.வீ. வேணுகோபால் பிள்ளை போன்றோர் கருதினர். நாள்கள், நாட்கள் என்பன பொருள் வேறுபாடு உடையன என எடுத்துக்காட்டுக்களையும் தந்தனர். அதனால் எழுத்துகள் என எழுதும் வழக்கம் பெருகியது. இரண்டு வகையாக எழுதுவதும்  சரியானதே.

 

தோன்றியது

தோன்று+இன்+அ+து = தோன்று+இ(ன்)+ய்+அ+து = தோன்றியது

(இன் என்னும் இறந்தகால இடைநிலையின் னகர மெய் கெட்டு இகரம் நின்றது. இகரத்தை அடுத்து அகரச் சாரியை வந்ததால் யகர உடம்படுமெய் தோன்றியது).

 

இருக்கும்/பறக்கும்...

இருக்கும் பறக்கும் முதலியன செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்கள்; இவற்றின் விகுதியான 'உம்' என்பதே எதிர்காலம் காட்டும். அதனால் இப்பெயரெச்சங்களில் தனியே காலம் காட்டும் இடைநிலைகள் இடம் பெறுவதில்லை.

 

ஆறாவது அறிவு

மக்கள் ஆறறிவு படைத்தவர் என்பது தமிழர்க்கே உரிய தனிக் கருத்து. ஆறாவது அறிவை மன அறிவு என்பார் தொல்காப்பியர். இது அவருடைய கருத்து அன்று; தமிழர்களிடம் நெடுநாட்களாகக் காணப்படும் கருத்து என்பதையும் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

 

'ஆறா வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் கண்ட வாறே'

 

'மக்கள் தாமே ஆறறி வுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே'

என்பன தொல்காப்பிய நூற்பா அடிகள். பின்னர் வழிநூல் செய்த பவணந்தியார் தம் நன்னூலில் சமணக் கருத்தான ஐந்தறிவுக் கோட்பாட்டைப் புகுத்தினார். அதனால் மக்களையும் ஐந்தறிவு உயிர்களில் சேர்த்தார்.

மன அறிவு என்பது சிந்தனை அறிவு. சிந்தனை என்பது இது நல்லது இது கெட்டது எனப் பகுத்துக் காண்பது. எனவே மன அறிவைப் பகுத்தறிவு என்றனர்.   

(இது தொடர்பான உங்கள் வினாக்களுக்கு விடைகளை விளக்கமாக அறியப் 'பழந்தமிழர் அறிவாய்வியல் சிந்தனைகள்' என்னும் நூலைக் காண்க. ஆசிரியர் முனைவர் இராச.திருமாவளவன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005).

 

அன்புடன்

ஆராதி



2010/3/24 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

devoo

unread,
Mar 27, 2010, 9:12:17 AM3/27/10
to மின்தமிழ்
நல்ல இடுகை; மேலும் எழுதுங்கள்.
அருகாமை குறித்த அறியாமை அகன்றது.

மென்தொடர்க் குற்றியலுகரம் மிகாது; ஆயினும் ‘அங்குச் சென்றான்’ என
எழுதுவர்.

///தமிழ்ப் புணர்ச்சி விதிகள் எல்லாம் முதலில் தமிழ்ச் சொற்களுக்கு


மட்டுமே உரியன.
பால் + அபிஷேகம் = பாலபிஷேகம் என்பது தமிழ்மொழிப் புணர்ச்சி;

பால் + அபிஷேகம் = பாலாபிஷேகம் என்பது வடமொழிப் புணர்ச்சி.///

பாலாபிஷேகம் தவறு; அது வடசொல்லன்று;
மணிப்ரவாளச் சொல்லாகவே கருதத்தக்கது.

சங்க + அபிஷேகம் -> சங்காபிஷேகம்
கலச + அபிஷேகம் -> கலசாபிஷேகம்
என்பதற்கு நேராகப் பாலாபிஷேகம் என்று கூறி வருகின்றனர்


தேவ்


On Mar 27, 7:27 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> *சுவரில்/சுவற்றில்***


>
>             சுவர் + இல் = சுவரில்
>
> சுவர் என்ற சொல்லுடன் இல் என்னும் இடப்பொருளில் வரும் ஏழாம் வேற்றுமை உருபு
> சேர்ந்து சுவரில் என்றாகிறது. சுவர் என்பதற்கு மாறாகச் 'சுவற்' என எவரும்
> பேசுவதோ எழுதுவதோ இல்லை. சுவர் என்னும் சொல்லை இல் உருபுடன் சேர்த்து
> வழங்கும்போது மட்டுமே சுவற்றில் என மக்கள் தவறாக வழங்குகின்றனர்.
>

> *இடத்திற்கு/ இடத்துக்கு***


>
> பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும் போது, சாரியைகளில் ஒன்றையோ இரண்டையுமோ
> ஏற்கும். சில சமயங்களில் சாரியை இல்லாமல் வேற்றுமை உருபு சேர்வதும் உண்டு.
>
>             மரம்+ ஐ = மர + அத்து + ஐ = மர + த்து + ஐ = மரத்தை
>
> (அத்துச் சாரியை. இரண்டு அகரங்கள் அடுத்தடுத்து வந்ததால் அத்தின் அகரம்
> கெட்டது- 'அத்தின் அகரம் அகர முனை இல்லை' - தொல்காப்பியம்)
>
>             மரம் + அத்து + இன் + ஐ = மரத்தினை (இன் சாரியை)
>
>             கரும்பு ஐ = கரும்பு + இன் + ஐ = கரும்பினை
>
>           கரும்பு ஐ = கரும்பை (சாரியை இன்றி வேற்றுமை உருபு சேர்ந்துள்ளது)
>
> எடுத்துக்கொண்ட இடம் என்பதனுடன் 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு
> சேர்ந்துள்ளது.
>
>             இடம் + கு = இடம் + அத்து + கு = இட + த்து + கு = இடத்துக்கு
>
>             இடம் + கு = இடம் + அத்து + இன் + கு = இடத்திற்கு (பொன் குடம் =
> பொற்குடம் என்பதைக் காண்க)
>

> *இல்லாமை/இல்லாது***


>
> 'மை' - பண்புப் பெயர் விகுதிகளுள் ஒன்று. 'ஆ' இச்சொல்லில் சாரியையாக
> வந்துள்ளது.
>
>             இல்லாமை = இல் + ஆ + மை = இல்லாமை
>
>             இல்லாது = இல் + ஆ + து (து - குறிப்பு வினையெச்ச விகுதி; ஆக்குவோம்
> என்னும் வினை கொண்டு முடிந்தது)
>

> *அருகாமை***


>
> நெருங்கியுள்ள தன்மை என்னும் பொருளில் இச்சொல் பயன்பட்டுள்ளது.
>
> அருகு + இல் = அருகில்; அருகு + ஆகுதல் + மை = அருகு + ஆதல் + மை = அருகு + ஆ +
> மை = அருகாமை
>
> ஆகுதல் என்னும் தொழிற்பெயர் ஆதல் என இடைக்குறையகாவும் வழங்கப்படுகிறது. இதில்
> இடம் பெறும் தல் என்பது தொழிற்பெயர் விகுதி. தொழிற்பெயர் விகுதி கெட்டு பண்புப்
> பெயர் விகுதியான 'மை'  இடம்பெற்று அருகாகும் தன்மையை உணர்த்தியது. ஆகவே இங்கு ஆ
> என்பது எதிர்மறை இடைநிலை அன்று.( சொல் + மை = சொன்மை எனத் தொல்காப்பியர்
> பயன்படுத்தியுள்ளமை காண்க. 'சொன்மை தெரிதலும்...'. தமிழண்ணல் கூறியுள்ள
> கருத்தும் சிந்திக்கத் தக்கது)
>

> *பட்டுச் சேலை/பட்டு சிறந்தது***


>
> 'பட்டு' என்பது வன்றொடர் குற்றியலுகரச் சொல். வினைத்தொகை தவிர்த்த ஏனைய
> வன்றொடர் சொற்களை அடுத்து வல்லெழுத்துக்களில் தொடங்கும் சொல் வருமானால் வந்த
> ஒற்று மிகும். பட்டுச் சேலை என்பதற்குப் பட்டால் நெய்த சேலை என்பது பொருள். இது
> மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை என்னும் தொடர்
> இலக்கணத்திற்கு உரியது. அனைத்து உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகளிலும்
> வல்லெழுத்து வரின் ஒற்று மிகும்.
>
> எழுவாய்த் தொடரில் வல்லெழுத்து வரின் ஒற்று மிகாது என்பது பொது விதி. அதன்
> அடிப்படையில் பட்டு சிறந்தது என வந்துள்ளது. ஆனால் பண்டைய உரையாசிரியர்க்கும்
> புலவர்க்கும் இது உடன்பாடன்று.
>
>             'கொக்குப் பறக்கும் புறாப் பறக்கும்
>
>             நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்'
>
> என்னும் பாடல் அடியில் கொக்குப் பறக்கும்  என்பதில் கொக்கு என்னும் எழுவாய்
> வன்றொடர்குற்றியலுகரம் பறக்கும் என்னும் வினை கொண்டு முடிந்தது. இதில்
> பண்டையோர் வழக்கே எனக்கு உடன்பாடு. பட்டுச் சிறந்தது என ஒற்று மிகுத்து
> எழுதலாம்.
>

> *சென்னை தொலைக்காட்சி/ சென்னைத் தொலைக்காட்சி (நிலையம்)***


>
> சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிலையம் என்னும் பொருளில் இத்தொடர் அமைந்துள்ளது.
> ஏழாம் வேற்றுமையை அடுத்து வரும் ஒற்று மிகும்.
>
>             (எ-டு) புதுவைப் பல்கலைக் கழகம்
>
> மதுரையின்கண் உள்ள காமராசர் பெயரில் அமைந்த பல்கலைக் கழகம் என்னும் பொருளில்
> மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் என இருப்பதே இலக்கணப்படி ஏற்புடையது. அங்கே
> பணியாற்றிய தமிழண்ணல் முதலியோர் இதனை வற்புறுத்தாமல் விட்ட காரணம்
> புலப்படவில்லை.
>

> *வள்ளுவர் கோட்டம்/ வள்ளுவர்க் கோட்டம்***


>
> வள்ளுவர் என்பது உயர்திணைப் பெயர். உயர்திணைப் பெயர்களை அடுத்து வரும்
> வல்லெழுத்து மிகாது என்பது பொது விதி. அதனால் வள்ளுவர் கோட்டம் என்பதே
> சரியானது.
>

> *எழுத்துக்கள்/ எழுத்துகள்***


>
> எழுத்துக்கள்/ எழுத்துகள் என்பன பற்றி முன்னரே வேறோர் இழையில்
> குறிப்பிட்டுள்ளேன்.
>
> தமிழ்ப் புணர்ச்சி விதிகள் எல்லாம் முதலில் தமிழ்ச் சொற்களுக்கு மட்டுமே உரியன.
>
>             பால் + அபிஷேகம் = பாலபிஷேகம் என்பது தமிழ்மொழிப் புணர்ச்சி;
> பால் + அபிஷேகம் = பாலாபிஷேகம் என்பது வடமொழிப் புணர்ச்சி.
>
> வடமொழிப் புணர்ச்சியில் அகரம் ஆகாரமாகிப் புணர்ந்துள்ளது.
>

> அடுத்ததாகப்...
>
> read more »

Tthamizth Tthenee

unread,
Mar 27, 2010, 9:28:37 AM3/27/10
to mint...@googlegroups.com
அபிஷேகம் என்பதே  வடமொழிதானே
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
27-3-10 அன்று, devoo <rde...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--

devoo

unread,
Mar 27, 2010, 9:54:14 AM3/27/10
to மின்தமிழ்
’பாலாபிஷேகம்’ பற்றி இப்பொழுது பேசுகிறோம்.
அபிஷேகம் வடமொழி , பால் வடமொழியில்லையே;
இரண்டும் சேர்ந்ததால் மணிப்ரவாளம்.

தூய தமிழாக்க வேண்டுமாயின் ‘ பால் நீராட்டம்’;
தூய வடமொழியாக்க வேண்டுமாயின் ‘க்ஷீராபிஷேகம்’

தேவ்

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Mar 27, 2010, 10:03:56 AM3/27/10
to மின்தமிழ்

On Mar 27, 8:54 am, devoo <rde...@gmail.com> wrote:
> ’பாலாபிஷேகம்’ பற்றி இப்பொழுது பேசுகிறோம்.
> அபிஷேகம் வடமொழி , பால் வடமொழியில்லையே;
> இரண்டும் சேர்ந்ததால் மணிப்ரவாளம்.
>
> தூய தமிழாக்க வேண்டுமாயின் ‘ பால் நீராட்டம்’;

திருமஞ்சனம். பாலாட்டு. பால்முழுக்கு (Cf. குடமுழுக்கு)

http://www.devakimuthiah.com/GD_012.htm

ஆடினாய் நறு நெய்யொடு பால்தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்கொன்றை
நயந்தவனே
பாடினாய் மறையோடு பல்கீதமும்
பல்சடைப்பனி கால் கதிர் வெண்திங்கள்
சூடினாய் அருளாய்
சுருங்க எமதொல்வினையே

(தருமபுரம் சுவாமிநாதன் இதனை 30 நிமிடம்
பாடிக் கேட்டதுண்டு.)

NG

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

விஜயராகவன்

unread,
Mar 27, 2010, 10:14:24 AM3/27/10
to மின்தமிழ்
On 27 Mar, 13:54, devoo <rde...@gmail.com> wrote:
> தூய தமிழாக்க வேண்டுமாயின் ‘ பால் நீராட்டம்’;
> தூய வடமொழியாக்க வேண்டுமாயின் ‘க்ஷீராபிஷேகம்’
>
> தேவ்
க்ஷீராபிஷேகம்’ "தூய வடமொழி" இல்லை. கடைசி அம் அதனை தமிழ்
ஆக்கிவிடுகிரது.


தமிழில் எழுதி ”தூய வடமொழி” வரமுடியாது; ஏனெனில் சில உச்சரிப்புகள்
தமிழில் கிடையா எ.கா. பி, க.

பலர் தமிழில் சொல்லும் போது abishegam என்றுதான் உச்சரிப்பு வருகிரது.


க்ஷீராபிஷேகம் தமிழ் வார்த்தைதான் - பஸ் எப்படியோ அப்படி


விஜயராகவன்

devoo

unread,
Mar 27, 2010, 10:25:04 AM3/27/10
to மின்தமிழ்
Mar 27, 9:03 am, "N. Ganesan"

> > தூய தமிழாக்க வேண்டுமாயின் ‘ பால் நீராட்டம்’;
>
> திருமஞ்சனம். பாலாட்டு. பால்முழுக்கு (Cf. குடமுழுக்கு)


பாலாட்டு சரியான சொல்லாகலாம்.

திருமஞ்சனம் -> திரு மெய் அஞ்சனம் என விரித்துப் பொருள் கூறுவர்; அது
எவ்வளவு தூரம் இலக்கண ரீதியாகப் பொருத்தமுடையது என்று தெரியவில்லை.

முழுக்கு தூய தமிழ்ச்சொல்லே, ஆயினும் அதை எம் வட்டாரத்தில் அமங்கலச்
சொல்லாகக் கருதுவர்.
’திருக்குட நன்னீராட்டு’ அல்லது ‘கும்பாபிஷேகம்’ என்றே அழைப்பிதழ்கள்
அச்சாகும்


தேவ்

விஜயராகவன்

unread,
Mar 27, 2010, 11:28:03 AM3/27/10
to மின்தமிழ்
`தூய தமிழ்`, `தூய சமஸ்கிருதம்` விவாதம் வேடிக்கையாக உள்ளது. தமிழர்களை
தவிர மற்றவர்கள் `தூயத்தின்` மீது இவ்வளவு ஆர்வம் காட்டு்வதில்லை என
நினைக்கறேன்

ஆங்கிலத்தில் ask, query, question மூன்றும் ஒரே அர்த்தத்தை
காண்பிக்கிறன. Ask பழைய ஆங்கில சொல் Query லத்தீன் question
ஃபிரெஞ்ச்.

ஆனால் யாராவது அதன் `மூலத்தை` பற்றி கவலைப்படுகின்றனரா?
தேவைக்கேத்தார்ப்போல் மூன்றையும் பிரயோகிக்கிறனர்

விஜயராகவன்

பழமைபேசி

unread,
Mar 27, 2010, 11:36:51 AM3/27/10
to மின்தமிழ்
அய்யாவை இங்கே சந்திப்பதிலும் மிக்க மகிழ்ச்சி!

devoo

unread,
Mar 27, 2010, 4:06:34 PM3/27/10
to மின்தமிழ்
Mar 27, 10:28 am, விஜயராகவன்
///தமிழர்களை தவிர மற்றவர்கள் `தூயத்தின்` மீது இவ்வளவு ஆர்வம்

காட்டு்வதில்லை என நினைக்கறேன்
ஆங்கிலத்தில் ask, query, question மூன்றும் ஒரே அர்த்தத்தை
காண்பிக்கிறன. Ask
பழைய ஆங்கில சொல் Query லத்தீன் question ஃபிரெஞ்ச். ///


Cool down Vijay !

இங்கும் அப்படித்தான்; ஆராய்ச்சி என்று வரும்போது நீங்கள் ஆங்கிலம்,
ஃப்ரெஞ்ச்,
லத்தீன் என்று பிரித்துக்காட்டுவதுபோல் பிரித்துக் காட்டுகிறோம்.

பைபிள் மட்டுமே சுமார் 450 மறுபதிப்புகளாக நாளதுவரை மாற்றம்
பெற்றுள்ளது. இது எதற்காக ? ஏன் மாற்ற வேண்டும் ?

Anglo-French rivalry அங்கும் இருந்தது ; நம்மிடம் போட்டி சற்று அதிகம்,
அவ்வளவுதான்;

உணவில் அறுசுவையும், சூழலில் ஆறு பருவங்களும், இலக்கியத்தில் ஒன்பான்
சுவைகளும் உள்ளன இங்கே; மேற்கில் அப்படியா ? நீங்கள் மேற்கத்தியர் போல
உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொண்டு விட்டீர்கள் என்று தெரிகிறது; கொஞ்சம்
அவகாசம் கொடுங்கள், நாங்களும் மாறி விடுகிறோம். ஊறுகாய் இல்லாமல்
சாப்பிடத் தெரியவில்லை

தேவ்

விஜயராகவன்

unread,
Mar 27, 2010, 4:54:09 PM3/27/10
to மின்தமிழ்
On 27 Mar, 20:06, devoo <rde...@gmail.com> wrote:
>
> உணவில் அறுசுவையும், சூழலில் ஆறு பருவங்களும், இலக்கியத்தில் ஒன்பான்
> சுவைகளும் உள்ளன இங்கே; மேற்கில் அப்படியா ? நீங்கள் மேற்கத்தியர் போல
> உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொண்டு விட்டீர்கள் என்று தெரிகிறது; கொஞ்சம்
> அவகாசம் கொடுங்கள், நாங்களும் மாறி விடுகிறோம். ஊறுகாய் இல்லாமல்
> சாப்பிடத் தெரியவில்லைே


மேற்கில் (கிழக்கிலும் கூட) ஆறுக்கு மேலேயே சுவைகள் உள்ளன.

இந்த அடிப்படை சுவைகளும், அதை அநந்த விதத்திலும் கலந்து லக்ஷக்கணக்காண
சுவைகளை உண்டுபண்ணலாம்.

இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு, கால்சியம், காய்ச்சல், உஷ்ணம்

லக்ஷக்கணக்கான நிரங்கள் போல் , சுவைகளும் உள்ளன

அறுசுவை
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88

மேற்கத்திய சுவைகள்

http://en.wikipedia.org/wiki/Taste

மேற்கிலே 4 பருவங்கள் தான்

வசந்தகாலம், வெய்யல்காலம், சரத்காலம், குளிர்காலம்,

பருவங்களை `கேட்க` (உபயம் - விவால்டி)

வசந்தகாலம் http://www.youtube.com/watch?v=iSw7CcAXPWk&feature=related
சரத்காலம் http://www.youtube.com/watch?v=_tHgtzAJePo&feature=related
குளிர்காலம் http://www.youtube.com/watch?v=uzCXjDuYQTA&feature=related
வெய்யல்காலம் http://www.youtube.com/watch?v=i-7GXPDVSWY


ஓரளவு உணவுப்பழக்கமும் மாற்றம் - சாலட்டுகள், இத்தாலிய, பிரெஞ்சு,
மெக்ஸிகன், ஜப்பானியன், சீன் உணவு எந்த சாப்பாட்டையும் சாப்பிடுவேன் -
ஆனால் உறுகாய் தயிர்சாதத்தோடு இருந்தால் உத்தமம்.

விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Mar 27, 2010, 5:00:09 PM3/27/10
to மின்தமிழ்
இலேசானது - தமிழ் வேர்தான்.

லெக்சிகான் படி

இலேசு ilēcu : (page 347)

and vice versa; குணத்தைக் குற்றமாகவும் குற்றத் தைக் குணமாகவும்
சொல்லும் அணி. (அணியி. 72.)

*இலேசு ilēcu
, n. < id. 1. Lightness in weight, buoyancy; நொய்ம்மை. (திவா.) 2. That
which is easy to obtain or attain; எளிது. Colloq. 3. That which is
very small in quantity; அற்பம். (சீவக. 770.) 4.


விஜயராகவன்

On 23 Mar, 07:27, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> இலேசானது
>
> ஆசிரியருக்கு,

> இந்த இலேசானது தமிழ்ச் சொல்லா அல்லது தமிழ்-வட சொல்லா? தமிழ்ச் சொல்லென்றால்


> (அல்லது வட-தமிழ் சொல்லென்றாலும்) அந்நாளையப் பழக்கத்தில் உள்ளதா,
> இலக்கியத்தில் எங்கும் உள்ளதா?
>
> சிரமத்துக்கு மன்னிக்கவும்
>
> வணக்கத்துடன்
> திவாகர்
>

> 2010/3/23 vadivelu kaniappan <vktej...@gmail.com>


>
>
>
>
>
> > நன்றி! மனம் பூப்போல .
>

> > 23 மார்ச், 2010 12:41 pm அன்று, N. Kannan <navannak...@gmail.com>எழுதியது:


>
> >> அன்பின் கன்னியப்பன்:
>
> >> அதனால் என்ன இப்ப? ;-)
>
> >> தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது என்ற அக்கறையில் வந்த சொல்.
> >> தாய்மொழிக் கல்வியே வளரும் சிறார்களுக்கு சிறந்தது என்பது மொழியியலார்

> >> கருத்து. ஆன்மீக நோக்கிலும் அதுவே சிறந்தது என்பது ஆழ்வார்கள் கருத்தும்.


> >> ஆனாலும், இந்திய துணைக்கண்டத்தில் எல்லாமே ஒரு மாதிரி எங்கோ போய்கொண்டு
> >> இருக்கிறது. கவலைப்படுவதா? விட்டு விடுவதா? என்று தெரியவில்லை.
> >> அதனால்தான் பள்ளி ஆசிரியர்களான உங்களது அனுபவங்களைப் பகிர்ந்து
> >> கொள்ளுங்கள் என்றேன்.
> >> நன்றி.
>
> >> கண்ணன்
>

> >> 2010/3/23 vadivelu kaniappan <vktej...@gmail.com>:


> >> > ஐயா. வணக்கம்.தங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவ்வாறு
> >> எழுதியமைக்கு

> >> > என் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இது என் அறியாமையால்


> >> > ஏற்பட்ட பிழை. நான் எவரையும் குறைத்து மதிப்பிடவோ, மனம் வருந்துமாறு கூறவோ
> >> > கனவிலும் எண்ணாதவன்.ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறேன். என்னைச் சுற்றிலும்
> >> > நடைபெறும் செயல்கள் அவ்வாறு தங்களையும் சேர்த்து எண்ண வைத்துவிட்டது. ஒரு
> >> > கசப்பான உண்மையைத் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அது என்னவெனில் கால
> >> ஓட்டத்தில்
> >> > கிராமப் புறங்களில் அரசின் தமிழ்வழிக் கல்விக் கூடங்கள் இருக்காது. அரசு
> >> வரும்
> >> > கல்வியாண்டு முதல் கிராமப்புற அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விஆரம்பக்
> >> > கட்டத்தில்[ Pre-Primary- LKG/UKG]தொடங்க உள்ளதாகச் செய்தி வெளி
> >> > வந்துள்ளது.எனவேதான் தாங்களும் கிராமதமிழ்வழிக் கல்விகற்றதைத் தாழ்வாக
> >> > எண்ணுகிறீர்களோ என்றெண்ணி, கிராமப்புறத் தமிழ்வழிக் கற்றதனால் தாழ்வு
> >> > ஏதுமில்லை. உயர்வுதான். தாழ்வு ஏதுமில்லைஎன்று கூறத்தன் அவ்வாறு எழுதினேன்.
> >> > மீண்டும் இது போன்று தவறுகளே ஏற்படாது என்று கூறிக் கொள்கிறேன்.இணயத்திற்கு

> >> > புதியவன் ஆதலால் நேர்ந்த பிழைக்கு வருந்துகிறேன்.என்றென்றும் தங்கள் அனுள்ள


> >> > வடிவேல் கன்னியப்பன்.

> >> > 23 மார்ச், 2010 8:22 am அன்று, N. Kannan <navannak...@gmail.com>
> >> எழுதியது:
>
> >> >> 2010/3/23 vadivelu kaniappan <vktej...@gmail.com>:


> >> >> > வாழ்க வளமுடன்! முதலில் உங்களின் தாழ்வு மணப்பான்மை நீங்குதல் வேண்டு.
>
> >> >> எனக்கு தாழ்வு மனப்பான்மையா :-))
>
> >> >> க.>
>

> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >> To unsubscribe from this group, send email to mintamil+
> >> unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE
> >> ME" as the subject.
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> > To unsubscribe from this group, send email to mintamil+
> > unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE
> > ME" as the subject.
>
> --

> Dhivakarhttp://www.vamsadhara.blogspot.comhttp://aduththaveedu.blogspot.com- Hide quoted text -

ananda rasa thiruma

unread,
Mar 27, 2010, 7:48:36 PM3/27/10
to mint...@googlegroups.com
1.///தமிழ்ப் புணர்ச்சி விதிகள் எல்லாம் முதலில் தமிழ்ச் சொற்களுக்கு

மட்டுமே உரியன.
பால் + அபிஷேகம் = பாலபிஷேகம் என்பது தமிழ்மொழிப் புணர்ச்சி;
பால் + அபிஷேகம் = பாலாபிஷேகம் என்பது வடமொழிப் புணர்ச்சி///
என்னும் என் எடுத்துக்காட்டிற்கு விடையாகப்

///பாலாபிஷேகம் தவறு; அது வடசொல்லன்று;
மணிப்ரவாளச் சொல்லாகவே கருதத்தக்கது.///
என்று தேவ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மொழிப் புணர்ச்சி என்பது, இரண்டு சொற்கள் சேரும் போது தமிழ் இலக்கண விதிப்படி சேர்ந்துள்ளது என்னும் பொருள் தருவது. அதேபோல் வடமொழி இலக்கண விதிப்படி இரண்டு சொற்கள் சேர்ந்தால் அதனை வடமொழிப் புணர்ச்சி எனக் குறிப்பிடுவது உரைமரபு. இங்குக் கூறப்பட்ட செய்தி் சொற்கள் எம்மொழிக்கு உரியது என்பதைப் பற்றியது அன்று. அவை எம்மொழி இலக்கண விதிகளின்படி சேர்ந்துள்ளன  என்பதே குறிப்பிடப்பட்டது.
தேவ் வேறுவிதமாகப் புரிந்து கொண்டதால் ஒரு வகையில் நன்மையே விளைந்துள்ளது. இதனால் பாலாபிஷேகத்திற்கான வெவ்வேறு வழக்காறுகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

2. சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணம் அறிய விரும்பும் போது சில அடிப்படைகளைப் பார்க்க வேண்டும். அ)எழுத்து இலக்கணம், ஆ)சொல் இலக்கணம், இ)தொடர் இலக்கணம் எனப் பிரித்துப் பார்த்து விளக்கம் அளிக்க வேண்டும்.
எ-டு          குரங்குக் குட்டி
அ) இத்தொடரில் •கு• மூன்று முறை இடம் பெற்றுள்ளது. இம்மூன்றில் சொற்களின் முதலில் உள்ள இரண்டும் முற்றியலுகரம், நிலைமொழியின் (முதல் சொல்லின்) இறுதியில் உள்ள ஒன்று குற்றியலுகரம் என்பது எழுத்திலக்கணம்.
ஆ) குரங்கு என்பது மென்றொடர்குற்றியலுகரம் என்பதும் குட்டி என்பது பொருட் பெயர்  என்பதும் சொல்லிலக்கணம்.
இ) குரங்குக் குட்டி என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை நிலைத் தொடர் என்பது தொடர்இலக்கணம். இது ஒரு புறம்.
புணர்ச்சி என வரும்போது அ) எழுத்துப் புணர்ச்சி ஆ) பொருட்புணர்ச்சி என இரண்டு உள்ளன. சில இடங்களில் எழுத்துப் புணர்ச்சி சிறப்பிடம் பெறும். சில இடங்களில் பொருட் புணர்ச்சி சிறப்பிடம் பெறும். இவை எல்லாம் மொழி வழக்கு. ஒரு கட்டத்திற்கு மேல் ஏன் எப்படி எனக் கேட்க இயலாது. •இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்• என்பதுதான் விடை.
மென்றொடர் குற்றியலுகரத்தின் முன் ஒற்று மிகாது என்பது எழுத்துப் புணர்ச்சியை முன்னிறுத்தி அமைந்த பொது விதி.
அங்கு இங்கு என்னும் சுட்டுப்பெயர்கள் முன்னால் வரும் வல்லெழுத்து மிகும் என்பது சிறப்பு விதி. அதனால்தான் •குரங்கு• என்பதை எடுத்துக்காட்டினேன். ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் வல்லெழுத்து மிகும் என்பது சிறப்பு விதிப்படி அமைந்த பொருட்புணர்ச்சி.

3. மொழித் தூய்மையைப் பற்றி சில சொற்கள்.
ஆங்கிலம், இங்கிலாந்து, அமெரிக்கா, கன்னடா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளில் தாய்மொழியாக உள்ளது. ஆனால் பிரிட்டிஷ் ஆங்கிலம்தான் (BBC English) சிறந்தது, சரியானது என இங்கிலாந்துக்காரர்கள் உரிமை கொண்டாடுவது இல்லையா? அதுபோலத் தமிழ் மொழியில் பல மொழிச் சொற்கள் கலந்து வழங்கினாலும் இவை தமிழ்ச் சொற்கள், வேறு சிலவற்றை பிறமொழிச் சொற்கள் எனப் பிரித்தறிவதும் ஒரு வகை மொழிக் கல்வி முறை அவ்வளவுதான். ஒரு வகையில் தமிழர்கள் அவ்வாறு அறிந்திருக்க வேண்டும் என்றும் சொல்வேன். நாம் பயன்படுத்தும் சொல் தமிழ்தாமா என அறிந்திருக்க விரும்புவதில் தவறில்லையே.
இங்கிலாந்தின் மிக அருகில் உள்ள நாடு பிரான்சு. இவ்விரண்டு நாடுகளும் ஐரோப்பாவில்தான் உள்ளன. மொழி அடிப்படையிலும் பிரஞ்சுக்கும் ஆங்கிலத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் பிரஞ்சு மொழியில் ஆங்கிலத்தைக் கலப்பதைப் பிரஞ்சு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. விளம்பரப் பலகைகளில் ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதினால் தண்டம் (Fine) என்று 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சட்டம் செய்துள்ளனர். எல்லா மொழியினர்க்கும் தம் மொழி உயர்ந்தது என்றும் அதைக் கலப்பின்றிப் பாதுகாக்க வேண்டும் உணர்வு இருப்பது இயற்கை.

4. இலேசானது என்பது தமிழ் அன்று. தமிழ் அல்லாத சொற்கள் எல்லாம் வடமொழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை.

5. தமிழ் இலக்கணத்தை அறிந்து கொள்ள ஸ்வர்ணா ஆர்வம் காட்டினார். அதற்காக ஓர் இழையும் தொடங்கப்பட்டது. ஆனால் அது தொடராமல் நின்று போனது. ஸ்வர்ணா இந்த இழையைப் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை. அவருக்கும் இந்த இழை பயன்படுமானால் மகிழ்வேன்.


அன்புடன்
ஆராதி

2010/3/27 devoo <rde...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
Mar 28, 2010, 12:07:50 PM3/28/10
to mint...@googlegroups.com
ஓம்.
அன்புடையீர் வணக்கம். தெளிவான விளக்கங்கள் தந்திருக்கிறீர்கள். நன்றி
கல்லாமையை இல்லாமையாக்குவோம். இந்த முழக்கம் முதன் முதலில் அறிவொளி இயக்கம்  அரசு கொண்டுவந்தபோது முன் வைத்து  திரைச் சீலைகளிலும் சுவர்களில் எழுதியும் சுவரொட்டிகளில் அச்சிட்டும் துவக்கினார்கள்.

கல்லாமையால் நொந்து போயிருக்கும் குடும்பங்களை மேலும் நலிவடையச் செய்யும் வகையில் வறுமையாக்கி விடுவோம் என்ற பொருள் அதில் வந்தது. எனவே இல்லாமை என்ற சொல்லை நீக்கி  ’கல்லாமை இல்லாது ஆக்குவோம்’ என்று மாற்றம் கொள்ளச் செய்தோம்.

ஷீரடி சாயிபாபா ஒரு மகான். இஸ்லாமியர் போன்று வேடமணிந்தவர். துவாரகா மாயி என்னும் பெயருட்டைய மசூதியில் தங்கியிருந்தார். இந்து மற்றும் இதர மதத்தினரும் அவரைத் தரிசித்து ஆசிபெற்று வந்தனர்.
ஒரு நாள்  ஒரு சீடர் அவருக்குத் தொண்டு செய்துகொண்டிருந்தார். அவருடைய அன்புக்கும் பக்திக்கும் ஆட்பட்டு ஷீரடி சாய்பாபா வின் கால்கைகளை பிடித்துவிட அவர் அனுமதிக்கப்பட்டார். அவ்வாறு செய்கையில் அவர் தன் வாயினுள் பகவத் கீதையில் ஒரு சுலோகத்தை முணுமுணுத்துக் கொண்டே தொண்டு செய்து கொண்டிருந்தார்.

“”அன்பனே! நீ என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாய்! அதையே சற்று உரக்கச் சொல்லலாமே.” என்றார்.

அன்பர் பாபாவிடம்.”அது பகவத் கீதை. ஏன்று சொல்லிவிட்டு அந்த வரிகள் முழுவதையும் ஒரு பத்தி உறக்கக் கூறினார்.

பாபா,”அதன் பொருள் என்ன?” என்று கேடடார்.

அன்பர்,”குருவானவர்  ஞானத்தைப் போதிக்கிறார்”என்று சொன்னார்.

பாபா, “குருவானவர் அஞ்ஞானத்தைப் போதிக்கிறார்”  என்பது பொருள் என்றார்.

சீடர், உடன்” தன்னுடைய ஆசிரியர் இவ்வாறு’ ஞானத்தைத் தான் போதிக்கிறார், என்று உரைசொல்லியிருக்கிறார். அஞ்ஞனத்தைப் போதிப்பதாகச் சொல்ல்வில்லையே!’  என்றார்.

பாபா,” ஒரு வேஷ்டியை அல்லது ஆடையயை வெளுக்கப்  போடுகிறாய்.   சலவை என்பது என்ன?  ஆடையில் உள்ள அழுக்கை நீக்குவதுதானே அன்றி அதில் வெண்மையை ஏற்றுவதல்ல. வெண்மை அந்த ஆடைக்கு இயல்பான தன்மை. அதன் மீது படர்ந்த அழுக்கு மட்டுமே நீக்கபடுவது தானே சலவை.
அதே போன்று மனிதன் பிறக்கும் போதே சர்வ ஞானமும் இயல்பாகப் பெற்றிருக்கிறான் அந்த ஞானத்தில் சில புரியாத தன்மைகளை, அழுக்கு போன்ற அஞ்ஞானத்தைச் சுட்டி அதனை நீக்குபவர்தான் குரு.” என்று விளக்கம் அளித்தார் பாபா.


.
tamil_wiktionary" <tamil_wi...@googlegroups.com>,


2010/3/27 ananda rasa thiruma <aara...@gmail.com>

விஜயராகவன்

unread,
Mar 29, 2010, 2:53:21 PM3/29/10
to மின்தமிழ்
On 28 Mar, 00:48, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> 3. மொழித் தூய்மையைப் பற்றி சில சொற்கள்.
> ஆங்கிலம், இங்கிலாந்து, அமெரிக்கா, கன்னடா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளில்
> தாய்மொழியாக உள்ளது. ஆனால் பிரிட்டிஷ் ஆங்கிலம்தான் (BBC English) சிறந்தது,
> சரியானது என இங்கிலாந்துக்காரர்கள் உரிமை கொண்டாடுவது இல்லையா?


பிபிசி மனப்பான்மையே இப்போது மாறிவிட்டது. இப்போது பிபிசியில் பல வித
பிரிடிஷ் தேசத்து வட்டார குரல்களை கேட்கலாம்.BBC English என்று
உச்சரிப்பில் இப்போது ஒன்றே இல்லை. மேலும் ஆஸ்திரேலிய, அமெரிக்க
நாடுகளில் அவர்கள் உச்சரிப்பைத்தான் முதலிடம் தருகின்றனர்.

அதுபோலத் தமிழ்
> மொழியில் பல மொழிச் சொற்கள் கலந்து வழங்கினாலும் இவை தமிழ்ச் சொற்கள், வேறு
> சிலவற்றை பிறமொழிச் சொற்கள் எனப் பிரித்தறிவதும் ஒரு வகை மொழிக் கல்வி முறை
> அவ்வளவுதான்.


ஆனால் மற்ற மொழியாளர் போல் இல்லாமல், தமிழில் “தூய” அப்செஷன் தலை தூக்கி
விடுகின்றது. பொதுவாக தமிழில் `வேர்` பற்றிய ஊக்கம் எந்த எந்த தமிழ்
வார்த்தைகளை தவிர்க்கலாம் என்ற குறிக்கோளுக்கு தீனி போடுகிரது.


ஒரு வகையில் தமிழர்கள் அவ்வாறு அறிந்திருக்க வேண்டும் என்றும்
> சொல்வேன். நாம் பயன்படுத்தும் சொல் தமிழ்தாமா என அறிந்திருக்க விரும்புவதில்
> தவறில்லையே.


ஆனால் “தமிழ்சொல்” என்பதன் வரையறுப்பே பலருக்கு புரிவதில்லை. பலர் தமிழ்
வேர் இருந்தாதன் அது தமிழ் எழுத்து என நினைக்க ஆரம்பிக்கின்றனர். அது
பெரும் தவறு.


> இங்கிலாந்தின் மிக அருகில் உள்ள நாடு பிரான்சு. இவ்விரண்டு நாடுகளும்
> ஐரோப்பாவில்தான் உள்ளன. மொழி அடிப்படையிலும் பிரஞ்சுக்கும் ஆங்கிலத்திற்கும்
> நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் பிரஞ்சு மொழியில் ஆங்கிலத்தைக் கலப்பதைப்
> பிரஞ்சு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.


அக்கொள்கையின் வெற்றி சிறிதளவே. பிரெஞ்சு நாட்டின் லூயி பாஸ்சர்
இன்ஸ்டிட்யூட் விஞ்ஞானத்தில் பிரசித்தம். அவர்கள் பத்திரிகையே
ஆங்கிலத்தில் போட வேண்டியிருந்தது, ஏனெனில் பெரும்பான்மை எழுத்தாளர்கள்
ஆங்கிலத்தில் சமர்பிக்கின்றனர்.

விளம்பரப் பலகைகளில் ஆங்கிலம் முதலிய
> பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதினால் தண்டம் (Fine) என்று 20ஆம் நூற்றாண்டின்
> பிற்பகுதியில் சட்டம் செய்துள்ளனர். எல்லா மொழியினர்க்கும் தம் மொழி உயர்ந்தது
> என்றும் அதைக் கலப்பின்றிப் பாதுகாக்க வேண்டும் உணர்வு இருப்பது இயற்கை.


மலேசியாவிலும், இந்தோநேசியாவிலும் உள்ளூர்காரர்கள் தத்தம் மொழியை ரோமன்
லிபியில் எழுதுகின்ரனர். பல வார்டத்தைகள் அப்படியே ஆங்கிலத்தில் இருந்து
காபி. சுபா, ரேகா போன்ற மலேசியாகாரர்கள் அதைப் பற்றி இன்னும் சொல்ல
முடியும். உ-ம் விஞ்ஞானப் புத்தகம் - sains buku. சில வாரங்கள் முன்
ஜெர்மன் நாட்டில் ஆங்கில தாக்கம் பற்றி ஒரு கடிதம் போட்டேன்.

>
> 4. இலேசானது என்பது தமிழ் அன்று. தமிழ் அல்லாத சொற்கள் எல்லாம் வடமொழியாகத்தான்
> இருக்க வேண்டும் என்பதும் இல்லை.


இலேசு தமிழ் வேர் என லெக்சிகான் சொல்கிரது. அது தமிழில்லையானால் வேறென்ன?


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Mar 29, 2010, 3:02:45 PM3/29/10
to மின்தமிழ்
On 28 Mar, 00:48, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> இங்கிலாந்தின் மிக அருகில் உள்ள நாடு பிரான்சு. இவ்விரண்டு நாடுகளும்
> ஐரோப்பாவில்தான் உள்ளன. மொழி அடிப்படையிலும் பிரஞ்சுக்கும் ஆங்கிலத்திற்கும்
> நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் பிரஞ்சு மொழியில் ஆங்கிலத்தைக் கலப்பதைப்
> பிரஞ்சு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. விளம்பரப் பலகைகளில் ஆங்கிலம் முதலிய
> பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதினால் தண்டம் (Fine) என்று 20ஆம் நூற்றாண்டின்
> பிற்பகுதியில் சட்டம் செய்துள்ளனர். எல்லா மொழியினர்க்கும் தம் மொழி உயர்ந்தது
> என்றும் அதைக் கலப்பின்றிப் பாதுகாக்க வேண்டும் உணர்வு இருப்பது இயற்கை.


இன்னொன்று. ”இயற்கை” என ஒன்றுமில்லை. பிராஞ்சு, ஜெர்மனி போன்ற நாடுகள்
நவீன அறிவுத் துறைகளில் ஆரம்பத்திலேயே தங்கள் மொழிகளின் செய்துள்ளனர்.
ஜப்பானும் அதே குரூப்தான். தென் கொரியா போன்ற கைவிட்டு எண்ணக் கூடிய
நாடுகள் 70 ஆண்டுகளில் மாபெரும் முயற்சியினால் தங்கள் மொழியிலேயே நவீன
அறிவு, தொழில்களை வளர்த்துள்லனர். ஆனால் உலக அளவு அறிவுக்கும், தமிழில்
இப்போது இருக்கும் வளங்களுக்கும் இந்து மகாசமுத்திரம் அளவு தூரம் உள்ளது.
அதற்கு ஒரு காரணம் , நீங்கள் சொல்லும் “கலப்பின்றிப் பாதுகாக்க வேண்டும்
உணர்வு ” . அந்த உணர்வு . நவீன உலகத்திலிருந்து தமிழர்களை இன்னும்
பிரிக்கும்.

அந்த உணர்வு ஒரு ஓடுபவர் காலில்100 கிலோ கனம் கட்டப்பட்டு ,
ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவதாகும்.


விஜயராகவன்

Subashini Tremmel

unread,
Mar 29, 2010, 4:32:13 PM3/29/10
to mint...@googlegroups.com


2010/3/29 விஜயராகவன் vij...@gmail.com

 
மலேசியாவிலும், இந்தோநேசியாவிலும் உள்ளூர்காரர்கள் தத்தம் மொழியை ரோமன்
லிபியில் எழுதுகின்ரனர். பல வார்டத்தைகள் அப்படியே ஆங்கிலத்தில் இருந்து
காபி. சுபா, ரேகா  போன்ற மலேசியாகாரர்கள் அதைப் பற்றி இன்னும் சொல்ல
முடியும். உ-ம் விஞ்ஞானப் புத்தகம் - sains buku. சில வாரங்கள் முன்
ஜெர்மன் நாட்டில் ஆங்கில தாக்கம் பற்றி ஒரு கடிதம் போட்டேன்.

 
 
காபி என்பதை விட புதுச் சொல் உருவாக்க முயற்சிகள் என்று சொன்னால் சரியாக இருக்கும். 1957க்கு முன்னர் ஜாவி எழுத்து முறை மலேசியா முழுமைக்கும் ப்ரதானமான எழுத்து முறையாக இருந்து வந்துள்ளது. 1957க்குப் பின்னர் மிகத் துரிதமாக மலாய் சொற்களைப் பெறுக்குவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் Dewan Bahasa dan Pustaka மொழி ஆய்வு மையத்தின் பங்கு மிகப் பெரியது.   மலாய் மொழியிலேயே முழுதுமான உயர்நிலைக்கல்வி என்ற நிலை உருவாக்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக கல்வி மலாய் மொழியில் என்ற நிலை வளந்த்தது. அதற்கு தேவைப்படும்   கணிதம், அறிவியல், பூகோளம் என பல துறைகளுக்கான சொற்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டது. மலாய் மொழி ஆரம்ப நிலையில் சொல் வளம் குறைந்த ஒரு மொழி.  மலாய் மொழியில் அராபிய, இந்திய மொழிச் சொற்களின் தாக்கம் மிகப் பெரிது. பல சொற்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆக பாட நூல்களுக்கான அலுவலகங்களுக்கான சொற்கள் தேவைப்பட நேர்ந்த போது பல நூறு புதிய சொற்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் மாணவர் சஞ்சிகைகளில் இம்மாதம் உருவாக்கபப்ட்ட புதிய சொற்கள் என்ற பகுதியை தொடர்ந்து வாசித்து வந்த ஞாபகம் இன்னமும் உள்ளது.
 
ஆங்கிலத்திலிருந்து உருவாக்கபப்ட்ட மலாய் சொற்கள் சில், உதாரணமாக.
institusi - institution
bank - bank
admirasi - admiration
imaginasi - imagination
 
இந்த சொற்கள் எந்த ஆங்கிலச் சொற்களிலிருந்து உருவாக்கபப்ட்டிருக்கும் என ஊகித்துப் பாருங்கள்.
konsisten -
presiden -
kabinet -
enjin -
sistem -
fokus -
diskaun -
persepsi -
 
 
>முடியும். உ-ம் விஞ்ஞானப் புத்தகம் - sains buku.
இது Buku sains  என்றிருக்க வேண்டும்.
 
மலேசியா, மலேசிய தமிழர்கள் பற்றி அதன் சரித்திரம் பற்றி எழுத ஆவல். நேரம் கிடைப்பது தான் அரிதாக இருக்கின்றது. நிச்சயம் விரைவில் செய்ய வேண்டும்.
 
>ஜெர்மன் நாட்டில் ஆங்கில தாக்கம் பற்றி ஒரு கடிதம் போட்டேன்.
அப்படியா.. பார்க்கத் தவறி விட்டேனே.  இருந்தாலும் குறிப்பாக சொல்வதானால் நான் ஜெர்மனிக்கு வந்த காலத்தை ஒப்பிடும் போது தற்சமயம் ஆங்கிலப் பிரயோகம் சற்று உயர்ந்திருக்கின்றது என்றே சொல்லலாம். குறிப்பாக தெற்கு பகுதிகளில் பெரிய நகரங்களில் இந்த நிலை தெரிய ஆரம்பித்துள்ளது.
 
-சுபா

Innamburan Innamburan

unread,
Mar 29, 2010, 4:57:49 PM3/29/10
to mint...@googlegroups.com
மொழிப்பற்று, மொழிகள் பற்றாக மாறிவிட்டால், தமிழுலகம் வாகை சூடி தழைக்கும். இங்கிலாந்து தபால் நிலையத்தில் தமிழ் என்னை வரவேற்கிறது. பிரிட்டீஷ் ஏர்வேஸ் சென்னைப்பயணத்தில் கொஞ்சும் தமிழில் வரவேற்கிறது. மற்ற மொழிகளை இகழ்வது தாய்மொழிப்பற்று அல்ல.
இன்னம்பூரான்



2010/3/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
இன்னம்பூரான்

Sri Sritharan

unread,
Mar 29, 2010, 6:05:39 PM3/29/10
to mint...@googlegroups.com


On 30/03/2010 7:32 AM, Subashini Tremmel wrote:


2010/3/29 விஜயராகவன் vij...@gmail.com
 
மலேசியாவிலும், இந்தோநேசியாவிலும் உள்ளூர்காரர்கள் தத்தம் மொழியை ரோமன்
லிபியில் எழுதுகின்ரனர். பல வார்டத்தைகள் அப்படியே ஆங்கிலத்தில் இருந்து
காபி.

காபி என்பதை விட புதுச் சொல் உருவாக்க முயற்சிகள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள் சுபா?. கூகுளில் 180,000 முறை வருகிறது. விசயராகவன் இப்படிச் சொல்லிக்கொண்டு வருவார் என்று சொல்கிறேன். :-)

சிறீதரன்

விஜயராகவன்

unread,
Mar 29, 2010, 6:26:34 PM3/29/10
to மின்தமிழ்
On 29 Mar, 21:32, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>
> காபி என்பதை விட புதுச் சொல் உருவாக்க முயற்சிகள் என்று சொன்னால் சரியாக
> இருக்கும்.

நகல் இருக்கே! ஆனால் பேச்சில் காபிதான் அடிப்போம்.


விஜயராகவன்

karthi

unread,
Mar 29, 2010, 8:36:04 PM3/29/10
to mint...@googlegroups.com
சுபா சொன்னதையே வழி மொழிகிறேன்.
 
இந்தப் புதிய சொற்கள் உருவாக்கத்தில் ஆங்கிலத்தில் உள்ளதை
"மலாய்மயப் படுத்துதல்" என்ற கொள்கை இருப்பதால், ஒரு சில
எழுத்துக்களை மட்டும் மாற்றி ஆங்கிலச் சொல்லை மலாய்
மொழிக்குள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகவே (விக்சனரியில்
உள்ளது போன்று) பெரும் நீண்ட விவாதங்கள் தேவைப்படுவதில்லை.
குவாண்டம் மெக்கனிக்சிலிருந்து நேனோ தொழில்நுட்பம் வரை
எல்லாம் மறுநாளே சொல்லிவிடலாம்.
 
ரெ.கா.
--

Innamburan Innamburan

unread,
Mar 29, 2010, 9:47:19 PM3/29/10
to mint...@googlegroups.com
எனக்கு மொழிகளின் வளர்ச்சியையும்/தேய்வையும் பற்றி அறிய ஆர்வமுண்டு. சமீபத்தில் படித்த ஆங்கில மொழியை பற்றிய நூல் ஒன்றில் ஜப்பானியர் ஆங்கிலத்தை தங்கள் மொழியில் கையாண்டதைப்பற்றி படித்து வியந்தேன். தமிழ் நாட்டுப்பாடல் ஒன்றை மின்னாக்கம் செய்து அனுப்பியபோது, 50  வருடங்களுக்கு பிறகு படித்தேன். சோல்ஜர், டீ பார்ட்டி, கர்னல் போன்ற சொற்களை இணைத்த அழகும், பொருத்த்மும் சொல்லி மாளாது.
இன்னம்பூரான்



2010/3/29 karthi <karth...@gmail.com>

N. Kannan

unread,
Mar 30, 2010, 12:48:12 AM3/30/10
to mint...@googlegroups.com
ரெ.கா!

உங்கள் இருவர் கருத்தும் சுவாரசியமாக உள்ளது.

மலேசியாவும் இந்தியா போன்ற ஒரு முன்னாள் ஆங்கிலக்காலனிதான். ஆனால்,
தமிழகத்தில், தமிழில் ஏன் பிரயத்தனப்பட வேண்டும், ஆங்கிலம்தான்
இருக்கிறதே என்ற மனோபாவம் இருக்கும் போது அதே போக்கு மலேசியாவில்
ஏனில்லை? புதிய மலேசியத் தேசிய உருவாக்கலின் ஒரு அங்கமாக மலேசிய மொழி
வளர்ச்சி தென்படுகிறது. தமிழகம் இந்திய பொது நீரோட்டத்தில் சேர்ந்த பின்
தனித்தேசிய உணர்வு தேவையில்லாமல் போய்விட்டது. [அதற்காகத் தனித் தமிழகம்
கிடைத்தால் உடனே தமிழ் வளர்ச்சியுறும் என்று சொல்வதற்கில்லை. Old habits
die hard) ஆயினும் இந்தியத் தேசிய மொழி என்று வரும் போது தமிழகம்
முரண்படுகிறது. தமிழ் வளர்ச்சியின் தற்போதைய நிலைக்கு இந்தியாவின்
பின்காலனித்துவ வரலாற்றுச் சூழலே காரணமென்று தோன்றுகிறது. அமெரிக்கா போய்
வந்தவுடன் முதல்வர் அண்ணாவின் பேச்சு தமிழகத்தில் ஆங்கிலக்கல்வியின்
மேம்பாடு பற்றி இருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.

க.>

2010/3/30 karthi <karth...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

விஜயராகவன்

unread,
Mar 30, 2010, 2:27:40 AM3/30/10
to மின்தமிழ்
On 30 Mar, 01:36, "karthi" <karthige...@gmail.com> wrote:
> சுபா சொன்னதையே வழி மொழிகிறேன்.
>
> இந்தப் புதிய சொற்கள் உருவாக்கத்தில் ஆங்கிலத்தில் உள்ளதை
> "மலாய்மயப் படுத்துதல்" என்ற கொள்கை இருப்பதால், ஒரு சில
> எழுத்துக்களை மட்டும் மாற்றி ஆங்கிலச் சொல்லை மலாய்
> மொழிக்குள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகவே (விக்சனரியில்
> உள்ளது போன்று) பெரும் நீண்ட விவாதங்கள் தேவைப்படுவதில்லை.
> குவாண்டம் மெக்கனிக்சிலிருந்து நேனோ தொழில்நுட்பம் வரை
> எல்லாம் மறுநாளே சொல்லிவிடலாம்.
>
> ரெ.கா.

விக்கிபீடியாவில் `மொழிபெயர்ப்பு` ஆங்கிலத்திலிருந்து மட்டும் அல்ல;
1960, 1970 தமிழை எப்படி வேறு விதமாக எழுதலாம், கிரந்தம் எப்படி
அகற்றுவது இதைப்போலத் தான். மற்றவர்கள் எழுதுவதை எப்படி
விக்கியாக்கப்படுத்தலாம் - அதாவது கிரந்தம் தவிர்ப்பது - அந்த லெவெல்
தான் அங்குள்ள விவாதங்கள்.


விஜயராகவன்


Jean-Luc Chevillard

unread,
Mar 30, 2010, 9:52:02 AM3/30/10
to mint...@googlegroups.com
Dear Sir,

I apologize in advance to the thread participants
for not having read all the messages in the thread before posting this
message,
but since you comment on the relationship between English and French,
I have thought you might be interested in the following
(which describes an earlier stage).

In an article ("Loanwords as an 'Epilinguistic' Tool: comparison between
English and Japanese")
found on pp.205-214 inside a recent volume (/Epilanguages. Beyon
Idioms and Languages/, edited by P. Hummel, ISBN: 978-2-917741-15-3),
Dr. Hiroyuki Eto (Tohoku University, Sedai [Japan]) gives a quotation
from /As You Like It/, a play by William Shakespeare:

"Therefore, you clown, abandon, which is in the vulgar leave, the society,
which in the boorish is company, of this female, which in the
common is women; which together is, abandon the society of this female, or
clown, thou perishest; or, to thy better understanding, diest; or to
wit, I kill
thee, make thee away, translate thy life into death…:"

I attach to this message the two pages from this article
in which Hiroyuki Eto gives this quotation, as well as quotations from
other authors
and comments on them.

It might interest you

Best wishes

-- ழான்-லூய்க் செவ்வியார் (Paris)

Le 3/28/2010 12:48 AM, ananda rasa thiruma a écrit :
> 3. மொழித் தூய்மையைப் பற்றி சில சொற்கள்.
> ஆங்கிலம், இங்கிலாந்து, அமெரிக்கா, கன்னடா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளில்
> தாய்மொழியாக உள்ளது. ஆனால் பிரிட்டிஷ் ஆங்கிலம்தான் (BBC English) சிறந்தது,
> சரியானது என இங்கிலாந்துக்காரர்கள் உரிமை கொண்டாடுவது இல்லையா? அதுபோலத் தமிழ்
> மொழியில் பல மொழிச் சொற்கள் கலந்து வழங்கினாலும் இவை தமிழ்ச் சொற்கள், வேறு
> சிலவற்றை பிறமொழிச் சொற்கள் எனப் பிரித்தறிவதும் ஒரு வகை மொழிக் கல்வி முறை
> அவ்வளவுதான். ஒரு வகையில் தமிழர்கள் அவ்வாறு அறிந்திருக்க வேண்டும் என்றும்
> சொல்வேன். நாம் பயன்படுத்தும் சொல் தமிழ்தாமா என அறிந்திருக்க விரும்புவதில்
> தவறில்லையே.
> இங்கிலாந்தின் மிக அருகில் உள்ள நாடு பிரான்சு. இவ்விரண்டு நாடுகளும்
> ஐரோப்பாவில்தான் உள்ளன. மொழி அடிப்படையிலும் பிரஞ்சுக்கும் ஆங்கிலத்திற்கும்
> நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் பிரஞ்சு மொழியில் ஆங்கிலத்தைக் கலப்பதைப்
> பிரஞ்சு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. விளம்பரப் பலகைகளில் ஆங்கிலம் முதலிய
> பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதினால் தண்டம் (Fine) என்று 20ஆம் நூற்றாண்டின்
> பிற்பகுதியில் சட்டம் செய்துள்ளனர். எல்லா மொழியினர்க்கும் தம் மொழி உயர்ந்தது
> என்றும் அதைக் கலப்பின்றிப் பாதுகாக்க வேண்டும் உணர்வு இருப்பது இயற்கை.
>

> [....]


>
> அன்புடன்
> ஆராதி
>
>

[....]

English_and_French_and_Latin.pdf

Jean-Luc Chevillard

unread,
Mar 30, 2010, 10:08:54 AM3/30/10
to mint...@googlegroups.com
Dear all,

I have realized it would probably be a frustration
for those who have had a look at these 2 pages
not to see the following page,
which presents the case of triplets of words
"English-French-Latin".

Very notable is the following quotation from Baugh & Cable [1978],
which starts with the remarkable statement:

"MANY OF THE MOST VIVID AND FORCEFUL WORDS IN ENGLISH ARE FRENCH"
(isn't it funny?)


"… many of the most vivid and forceful words in English are French, and
even where the French and Latin words are more literary or learned, as
indeed they often are, they are no less valuable and important. Language has
need for the simple, the polished, and even the recondite word. The richness
of English in synonyms is largely due to the happy mingling of Latin,
French, and native elements. It has been said that we have a synonym at
each level—popular, literary, and learned."

Best wishes to all

-- Jean-Luc Chevillard

English_and_French_and_Latin_2.pdf

Innamburan Innamburan

unread,
Mar 30, 2010, 11:10:40 AM3/30/10
to mint...@googlegroups.com
Revelatory, Indeed!
Innamburan

2010/3/30 Jean-Luc Chevillard <jean-luc....@univ-paris-diderot.fr>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Jean-Luc Chevillard

unread,
Mar 30, 2010, 11:17:02 AM3/30/10
to mint...@googlegroups.com
I think one can say that English would deeply maim itself,
and probably even destroy itself as a language,
if the speakers of English suddenly tried to get rid of all the French words
:-)
:-(

-- jlc

Le 3/30/2010 5:10 PM, Innamburan Innamburan a écrit :
> Revelatory, Indeed!
> Innamburan
>
> 2010/3/30 Jean-Luc Chevillard<jean-luc....@univ-paris-diderot.fr>
>
>
>> Dear all,
>>
>> I have realized it would probably be a frustration
>> for those who have had a look at these 2 pages
>> not to see the following page,
>> which presents the case of triplets of words
>> "English-French-Latin".
>>

>> Very notable is the following quotation from Baugh& Cable [1978],

Innamburan Innamburan

unread,
Mar 30, 2010, 11:19:15 AM3/30/10
to mint...@googlegroups.com
Undoubtedly 

2010/3/30 Jean-Luc Chevillard <jean-luc....@univ-paris-diderot.fr>
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
B05.gif

Hari Krishnan

unread,
Mar 30, 2010, 11:20:00 AM3/30/10
to mint...@googlegroups.com


2010/3/30 Jean-Luc Chevillard <jean-luc....@univ-paris-diderot.fr>

I think one can say that English would deeply maim itself,
and probably even destroy itself as a language,
if the speakers of English suddenly tried to get rid of all the French words
:-)
:-(

-- jlc 

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம்வந்தால் பின் நமக்கெது வேண்டும்......
--
அன்புடன்,
ஹரிகி.

விஜயராகவன்

unread,
Mar 30, 2010, 6:13:22 PM3/30/10
to மின்தமிழ்
Dear Jean-Luc

In the same volume , you have a chapter "Elementary Grammatical
Devices in Classical Tamil Grammar". Is it about Tholkappiyam? or can
you say in a few sentences what is it about?


Regards
Vijayaraghavan


On 30 Mar, 14:52, Jean-Luc Chevillard <jean-luc.chevill...@univ-paris-

>  English_and_French_and_Latin.pdf
> 137KViewDownload- Hide quoted text -

Jean-Luc Chevillard

unread,
Mar 30, 2010, 6:38:17 PM3/30/10
to mint...@googlegroups.com
Dear Vijayaraghavan,

here is the abstract:

<QUOTE>
Abstract: Providing a language with a grammar in a monolingual context
is to equip it with tools that will allow one to talk about what might
otherwise be difficult to talk about (or even unspeakable). The result
is the advent of a grammarians’ language which, even though it has its
roots in it, is distinct from the object-language described, because of
the much more systematic or more extensive use made by grammarians of
linguistic devices already existing in the language of “ordinary”
speakers. The present article will explore the extended usage, among
Indian grammarians in general and Tamil grammarians in particular, of
some of those language operations called “transposition hypostatique” by
Charles Bally [1932] and “Hypostasis” by Bloomfield [1933].
</QUOTE>

Best wishes

-- Jean-Luc

Reply all
Reply to author
Forward
0 new messages