
"If I may I would like to point out we are not entertaining you. We are not indulging in some kind of intellectual game, or trying to point out what kind of belief you should have; or to seek a leader to solve our problems. We are not doing any kind of propaganda to persuade you to think in a particular direction, or to convince you of a particular point of view. But we are thinking together, observing together the problems, the crisis, that we are facing, the war, destruction, corruption, and the superstitions in the name of religion; all that nonsense that goes on in the name of religion, god and so on ..."
Jiddu Krishnamurti, Madras 1st public talk 26th December 1981
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
A great many scientists in the West have gone into the question of the brain. They say that we are using only a very small part of the whole brain. We can observe whether this is so in ourselves, for it is part of meditation to find out—for ourselves—whether the whole brain or only a very small part is operating. Now, thought is the response of memory which has been stored through knowledge; knowledge is gathered through experience. That is, experience, knowledge, memory stored in the brain, then thought, then action. This is our pattern of living, and the whole process is based on this movement. Man has done this for the last million years. He has been caught in the cycle, which is the movement of thought. And within this area he has choice. He can go from one corner to the other and say, “This is my choice, this is my movement of freedom”—but it is always within the limited field of the known. And knowledge is always accompanied by ignorance because there is no complete knowledge about anything. So we are always in this contradictory state: knowledge and ignorance.
--
'பூவணத்தெம் புனிதனார்’ பழைய இழையின் ஹீரோ இந்த வாண்டுதான்; அவனது
முதிர்வடையாத பார்வையில் அந்த ஒப்பற்ற சிவத்தலம் மனத்தில் இனிய
தோற்றங்களைப் பதிவு செய்தது. அது போன்றதான ஒரு சிவத்தலத்தில்
வாழ்ந்ததால் கிட்டத்தட்ட அதே அனுபவம்தான் அடியே னுக்கும். ஒருவேளை அந்த
ஒற்றுமை காரணமாக இருக்க வேண்டும்.
ஆழ்வார்க்கடியார் அருளியவற்றுள் இந்த இழையும், ‘அண்டம் மோழை எழ’
பதிவும் ஒரு நாளும் மறக்க முடியாதவை
தேவ்
On Aug 31, 12:29 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> என்ன நேரேஷன் ஐயா!
>
> நந்து என்று பெயர் கட்டிப் புறம் ஆக்கினீர் பாரும்,
> அது பிரில்லியண்ட் ஐடியா!
>
> எல்லாருக்கும் ‘நான்’ நான்’ என்று சொல்லி நிகழ்ந்தவை-கூறலைச் சரியாக நகர்த்த
> முடியாது.
> அன்றைய நானோடு இன்றைய நான் போய் சல்லாபம் செய்ய ஆரம்பிக்கும். பிறகு முரண்டு
> பிடிக்கும்.
>
> இப்படிப் புறவயமாக்கிப் பெயரிட்டுவிட்டால் மிகவும் சௌகரியம்.
>
> நந்துவுக்கு எப்படி ஜே கே அப்பீல் ஆகிறது என்பதை நாத்து நடுகின்ற இடம் அருமை!
>
> >>>>ஆனாலும், அங்கு அறிவு ஜொலித்த ஒரே இடம் பார்பர் ஷாப்தான். அங்கு போனால்
> வரிசையாக படம் தொங்கிக்கொண்டிருக்கும். ஸ்டாலின், மார்க்ஸ், இங்கர்சால்,
> அம்பேத்கார் என்று. இவர்களெல்லாம் யார் என்று யாரும் இவனுக்கு விளக்கிச்
> சொன்னதில்லை. சவரக்கடையில் கிடக்கும் நாளிதழ்களைக் கூட தைர்யமாக எடுத்துப்
> படித்துவிட முடியாது. எவனாது முரடன், மிலிட்டரிக்காரன் வந்து விட்டான் எனில்.
> படிக்கும் பேப்பரை அறைந்து வாங்கிப் படிப்பான். அங்கு என்றும் வாய்
> பேசியதில்லை. எடுத்தவுடன் கைதான் பேசும்.
>
> இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் உள்ள ஊரில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை எப்படி
> அறிந்திருக்க முடியும்?<<<<<<
>
> அது எப்படி பார்பர் ஷாப்பைப் பிடித்தீர்?
>
> என்ன அங்கதம்:--))
>
> நிராத் ஸி சௌத்ரியின் இந்திய அனுபவங்கள் மாதிரி இருக்கிறது.
>
> அடித்தளமே ஆர்வமிக அமைந்திருக்கிறது.
>
> இனி வருவன ஒரு நல்ல இலக்கியம்தான்!
>
> மரபு விக்கியில யாராவது துண்டு போட்டு வைங்க:--)))
>
> ...
>
> read more »
> 'பூவணத்தெம் புனிதனார்’ பழைய இழையின் ஹீரோ இந்த வாண்டுதான்; அவனது
> முதிர்வடையாத பார்வையில் அந்த ஒப்பற்ற சிவத்தலம் மனத்தில் இனிய
> தோற்றங்களைப் பதிவு செய்தது.
அது என்ன வெறும் கோயிலா?
லா.ச.ரா சொல்வது போன்ற ஒரு அனுபவ ஸ்தலம்.
20/30 வருடங்களுக்குப் பின் முதல் முறை கோயிலுக்குப் போகிறேன் (எல்லோரும்
மேலே போய்விட்ட பின் எனக்கு அங்கு இருக்கும் ஒரே உறவு அக்கோயில்தான்).
அதே கோயில். அதே நடராஜபட்டர். அதே விபூதித்தட்டு.
‘மாமா! நமஸ்காரம்!’
‘யாரு கண்ணனா? எப்படி இருக்கே! சரி, உள்ளே போய் தரிசனம் பண்ணு, என்று
சொல்லிக் கொண்டே விபூதிப் பிரசாதம் தருகிறார்.
வேடிக்கை என்னவெனில் இவர் என்னை இத்தனை நாள் பார்க்கவில்லை. எப்படி
அடையாளம் கண்டு கொண்டார் என்பது வேறு விஷயம். ஆச்சர்யம் என்னவெனில், ஒரு
கேள்வி. வாயா வார்த்தைக்காவது? ‘என்னடா? எங்கே இருக்கே? இத்தனை
வருஷமாச்சே?’ ஊகூம். ஏதோ நேத்துப்பாத்தவனை இன்னிக்குப் பார்ப்பது போல்!!
அங்கு எதுவுமே மாறுவதில்லை என்று உணர்ந்து கொண்டேன்.
அவன் சாட்சியாக அங்கு அமர்ந்திருக்கிறான்.
அவன் அறியாத பொருளில்லை.
அவனுக்கு உறவாகாத பொருளும் இல்லை.
நேற்று, இன்று நாளை என்பதெல்லாம் அவனுக்கு இல்லை.
அவன் அம்பலத்தில் இன்று மட்டுமே உண்டு.
இவ்வளவும் நடராஜ பட்டர் என்னை வரவேற்றதில் இருந்தது. இப்போது யோசித்துப்
பார்த்தால் நடராஜ பட்டர் எப்படி இத்தனை நாள் உயிருடன் இருந்தார் என்பது
ஆச்சர்யம். நான் பார்த்த சிறுவயதிலேயே அவர் 50/60 வயதுக்காரராகவே
இருந்தார். அவரையும் என்னையும் விட்டால் கோயிலில் ஆள் இல்லை. அடுத்தமுறை
சென்ற போது அவரில்லை.
அவன் புனிதன். அவன் தாள் பணிதல் நம் கடன்.
க.>
“When the mind is acute, then it begins to question the environment,
the conditions, and in that questioning, intelligence is functioning;
and it is only intelligence that will lead man to the fullness of life
and to the discovery of the significance of sorrow" J.Krishnamurti
அந்த ஊரில் யாரும் கேள்வி கேட்பதில்லை. வீட்டில் கேள்வி கேட்டால் அறை
விழும். நந்துவின் சகோதரி இப்படி அம்மாவிடம் கேள்வி கேட்டு அடி
வாங்குவாள். அது பெரும்பாலும் நந்துவிற்கு மட்டும் வீட்டில் ஏன் சலுகைகள்
அதிகம் என்பது போன்ற கேள்விகள். அம்மா பதில் சொல்ல மாட்டாள் அறைதான்
விடுவாள். சித்திதான் பதில் சொல்லுவாள். ‘டீ! ஏண்டி அக்காவைத் தொந்தரவு
செய்யறே! ஏழுக்குப் பிறகு கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணுன்னு ஒரு ஆம்பிளைப்
பையன் பிறந்திருக்கான். அதுதான்’ என்பாள். சித்திக்கும் திட்டுவிழும்.
‘ஆமாம்! இவ பெருசாக் கண்டா!’. ‘அப்படிச் சொல்லாதே அக்கா! நந்து மாதிரி
ஒரு குழந்தை கிடைக்கணுமே’ என்று! சௌந்திரம் கேட்ட கேள்விக்கு விடை
கிடைக்காமல் கூடுதலாக நந்து மேல் எல்லோரும் பாசம் பொழிவதால் சௌந்திரம்
இன்னும் கூடுதல் எரிச்சலடைந்து அந்த இடத்தை விட்டு அழுது கொண்டே
போய்விடுவாள். நந்துவிற்கு சித்தியென்றால் உயிர். சித்திக்கும் அப்படியே.
ஆனால் நந்துவின் அம்மாவிற்கு எல்லோரையும் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பதில் குறி. நந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது சேட்டை
செய்து கொண்டிருக்கும்போது அடுப்படியில் இருக்கும் அம்மாவிற்கு அது
எப்படித் தெரியும் என்பது ஒரு மர்மம். ஆனால் அடுப்படியிலிருந்து அவள்
குறி பார்த்து வீசும் சின்ன டம்பளர் நந்துவைப் பதம் பார்ப்பதுண்டு. நந்து
அழுதால் சித்திதான் பதறி அடித்துக் கொண்டு ஓடிவருவாள்.
பள்ளியில் கேள்வி கேட்டால் பிரம்படி கிடைக்கும். அதுவும்
வாத்தியாருக்குத் தெரியாத கேள்விகளைக் கேட்டுவிடக் கூடாது! ஐரோப்பிய
வரலாறு என்று பாடம் இருக்கும். நெல்சன் எப்படி பிரெஞ்சுக் கடற்படையைத்
தோற்கடித்தான் என்று இந்திய மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பாடம்
இருக்கும். டென்மார்க் பற்றி பூகோளம் பேசும். தமிழகத்தின் ஏதோவொரு
கிராமத்திலிருந்து வரும் வாத்தியாருக்கு மாணவனுக்குப் புரியும்
அளவிற்குத்தான் இந்த வெளிநாட்டுச் சமாச்சாரமெல்லாம் புரியும். அவரைப்போய்
ஏடாகூடமாக ஐரோப்பிய சரித்திர நுணுக்கங்களைக் கேட்டால் பிரம்படி விழும்.
தமிழ்ப் பாடமென்றாலும் அடிவிழும். அங்கொரு நொண்டிக்கை வாத்தியார்
இருந்தார். சோத்துக்கை முடம். எனவே "எல்லாம்" இடது கையில்தான். இதை
மாணவர்களும், மற்றவர்களும் அவருக்கு எப்படியோ உணர்த்திய வண்ணம் இருப்பதாக
ஆசிரியர் உணர்வார். அதனால் எப்போதும் ஓர் கொதி நிலை.
சட்டியிலே பாதி அந்தச்
சட்டுவத்தில் பாதி இட்டிருக்க
இட்டமுடன் நாடி வந்த சோனேசர்
இங்கு வா! என்றழைத்தவுடன்
பிள்ளை ஓடி வந்தது எவ்வாறு உரை!?
என்று இருக்கும் கேள்வி. முதலில் கேள்வி புரியும் படியாக இருக்க
வேண்டும். கேள்விக்கே பொருளுரை தேவைப்படும் போது பதில் எப்படி
எதிர்பார்க்கமுடியும்? பதில் சொல்லவில்லை எனில் பின்னி எடுத்துவிடுவார்.
அவருக்கு மாற்றுத்திறனாளர்களை தமிழ் சமூகம் நடத்தும் அவநிலைக்கு தான்
கொடுக்கும் பரிசு என்பது போல் அவர் தரும் அடிகள் ஒன்றுமறியா மாணவர்களின்
மீது மழையாய் பொழியும்!
சமூகத்தில் கேள்வி கேட்டால் கொலைதான் விழும்! அந்த ஊரில் சேர்வார்களுக்கு
செல்வாக்கு. அந்த ஊரின் பெரிய ரௌடி சேர்வார் வீட்டு ஆளு! தலித்துக்கள்,
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஊரின் மையப்பகுதிவிட்டு விளிம்புப்
பரப்புகளில் வாழ்வர். அங்கு கொலை விழுந்தால் கூட இரண்டு நாள் கழித்துதான்
தெரியும். பல்வேறு வகையில் கொலை விழும். ஒரு நாள் எல்லோரும் கிசு, கிசு
என்று பேசிக்கொண்டிருந்தார்கள். முனீஸ்வரர் ஆல மரத்தில் ஒருவன்
தூக்கிட்டுத் தொங்குகிறான் என்று. நந்து தன் கோஷ்டியுடன் உடனே ஆற்றை
நோக்கி ஓடினான். இவனுக்கு ஆச்சர்யம் என்னவெனில் அந்த ஆலமரம் மிகவும்
சிக்கலான அமைப்புக் கொண்டது. மதிலைத்தாண்டி விழுதுகளை மண்மீது பாய விட்டு
சாய்ந்து நிற்கும் மரமிது. மதிலுக்கு உள்ளே, மரத்தடியில் முனீஸ்வரர்
சந்நிதி. மிகவும் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் என்று பெயர். அவரை மிதித்து
மரத்தில் ஏறி, இவன் தொங்கும் இடத்திற்கு வருவதற்குள் குளவி, தேள், தேனீ
இவை கொட்டி கீழே விழ வேண்டியிருக்கும் அல்லது கரடு முரடான வழுக்கு
மரத்தில் ஏறமுடியாமல் கீழே விழ வேண்டியிருக்கும். இவ்வளவு சிக்கலையும்
தாண்டி அவன் நடு மரத்திற்கு வந்து தூக்குப்போட்டுத் தொங்குகிறான் எனில்
அதுவொரு சாதனை என்று பாராட்டுப்பெற வேண்டியிருக்க ஏன் சாக வேண்டும்?
நந்து செத்தவனைப் பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்க ஊர்ப்பெரிசுகள்
சிறுவர்களை விரட்டினர். பிறகுதான் தெரிந்தது அது தூக்கு அல்ல, கொலை
என்று. போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது தெரிந்தது இறந்தவனின் கொட்டைகள்
நசுக்கப்பட்டு இறந்திருக்கிறான் என்று. இப்படி விநோதமாகக் கொலை விழும்
கிராமம் அது.
ஆனால் அச்சமூகத்தைக் கேள்விக்குறியாக்கி நின்றன கழகச் சுவரொட்டிகள்.
‘கடவுளை நம்புகிறவன் முட்டாள்! கடவுள் இல்லை. இல்லவே இல்லை!’ என்று.
இதைப் பெரிய கரிகொண்டு சண்முகபட்டர் வீட்டுச் சுவரில் வேண்டுமென்றே
எழுதிவிட்டான். அவரும் வெள்ளையடிக்க, இவன்களும் மீண்டும் எழுத என்று ஒரு
யுத்தமே அங்கு நடந்து கொண்டு இருந்தது. எனவே சொல்லாமலே
இரண்டுபட்டிருக்கும் ஊரில் இதுவொரு பெரிய பிரிவினையை, ஒரு நிழல்
யுத்தத்தை கிளப்பி விட்டிருந்தது.
இப்படி அடிவிழாமல் கேள்வி கேட்கப்படும் ஒரே இடம் பார்பர் ஷாப்பாக
இருந்தது. அதுவே அந்த ஊரின் அறிவாலயமாக இருந்தது. கழகத்தின் பாசறை என்று
பார்பர்ஷாப்பைச் சொல்லலாம். அங்குதான் புரட்சியின் கனல்கள் பொத்தி பொத்தி
காக்கப்பட்டன. அங்கும் அடிதடி நிகழும் வண்ணம் சூடு பரக்கும் விவாதங்கள்
நிகழ்தாலும் பார்பர் கையில் கத்தி இருப்பதால் எல்லோரும் கொஞ்சம் அடக்கியே
வாசிப்பதுண்டு.
ஆனால் இப்படிக் கேட்கப்பட்ட கேள்விகள் அச்சமூகத்தை முற்றும் முழுவதுமாக
மாற்றிவிடவில்லை. எல்லாம் அரைகுறை சாமாதானமாக, அச்சமூக அமைப்பில்
நிகழ்ந்த வரப்பு மாற்று உத்திகளாக மட்டுமே நிகழ்ந்தன. அம்மக்களை
அச்சமூகம் போட்டிருந்த தளைகளிலிருந்து முற்றும் முழுதுமாக விடுதலை
செய்யும் கேள்விகளை கேட்கும் திறனுள்ள அறிவாளி அந்த ஊரில் யாரும் இல்லை.
நந்துவைப் பொறுத்த மட்டில் அந்த ஊரின் ஒரே அறிவாளி அவன் அக்காள்
செல்லம்மாள்தான். அவள்தான் எல்லாப் பரீட்சையிலும் முதல் மார்க்
வாங்கினாள். இருக்கும் பரீட்சைகள் போதாதென்று தமிழ் மன்றப் பரீட்சையென்று
மானாமதுரை போயும், ஹிந்தி பிராத்மிக் பரீட்சையென்று மதுரை போயும் எழுதிக்
குவித்தாள். பாட்டுப் போட்டிகளில் வேறு கலந்து கொள்வாள். அந்த ஊருக்கு
யாராவது முக்கியப் பிரமுகர்கள் வந்து நடத்தும் விழாக்களில் இவளும், இவள்
தங்கையும்தான் இறை வணக்கம் பாடுவர். கயிற்றில் நடப்பது போன்ற
அருணகிரியாரின் பாடல்களையெல்லாம் அவர்கள் சரளமாகப்பாடுவர். மார்கழி
மாதத்தில் காலை நேரங்களில் பெரியகோயில் போய் திருப்பாவை பாடுவர்.
செல்லம்மாள்தான் அந்த ஊரில் நடந்த எஸ்.எஸ்/எல்.சி பரீட்சையில் முதல்
மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தாள். அவளே முதன்முறையாக கல்லூரி வாசலையும்
எட்டினாள். பாத்திமா கல்லூரி தந்த மேலைநாட்டு கிறிஸ்தவ மேனர்ஸ் மெல்ல,
மெல்ல நந்து வீட்டிற்கும் வந்தது. ஒரு கோடை விடுமுறையில் எப்படி ஒருவர்
உதவி செய்தால் ‘நன்றி’ சொல்வது என்று சொல்லிக்கொடுத்தாள். வீட்டிற்குள்
ஒருவருக்கொருவர் நன்றி சொல்வதா? அது யாரும் கேள்விப்படாத வழக்கமாக
இருந்தது. அது நல்ல பழக்கம் என்றாள்.
அவளுக்குப் பரிசாகக் கிடைக்கும் வியாசர் விருந்து, சக்கிரவர்த்தித்
திருமகன், பாரதியார் பாடல்கள், தாகூரின் கீதாஞ்சலி போன்ற
புத்தகங்களெல்லாம் நந்துவிற்கும் விருந்தாக அமைந்தன. அந்த ஊரில் பஸ்
ஸ்டாண்டிற்கு அருகில் ஒரு நூலகமுண்டு. அதுவே நந்துவின் அறிவாலயமாக
செயல்பட்டது. அங்குதான் வெளி உலகம் இவனுள் புகுந்தது. கலைக்கதிர் எனும்
நூல் அவனை மிகவும் ஈர்த்தது. ஆழிப்பேரலை பற்றியெல்லாம் அறியும் போது
வியப்பு மேலிட்டது.
ஆயினும் அந்த ஊர் நூலகத்திலும் ஜே.கே பற்றிய நூல்கள் இல்லை!
http://www.dailymotion.com/video/x9klzo_j-krishnamurti-6-biographie_webcam
--
தமிழ் அன்னையாகி அரியாசனத்தில் வந்தவுடன். இந்தி அரக்கியாகி, காலில் சங்கிலி போட்டு இழுத்துவரப்பட்டாள்.//
இந்தி ஆசிரியர்களையும் அப்படி நடத்தினாங்க சில மாணவர்கள். மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியின் ஹிந்தி ஆசிரியர் ஆன என் அப்பாவைக் கொல்ல வேண்டி ஒரு பெரும்படையே எங்க வீட்டுக்கு வந்தது. பள்ளியின் சக ஆசிரியர்கள் கிட்டத் தட்ட ஆறுமாதம் எங்களுக்கு மட்டுமில்லாமல் அப்பா பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் காவல் இருந்தனர். மறக்கமுடியாத காலம்!
3.
சமூகத்தில் கேள்வி கேட்டால் கொலைதான் விழும்! அந்த ஊரில் சேர்வார்களுக்கு
செல்வாக்கு. அந்த ஊரின் பெரிய ரௌடி சேர்வார் வீட்டு ஆளு!
>> சேர்வார்? <<
முக்குலத்தோரில் மூன்று பெரும்பிரிவுகள் உள்ளன.
கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் அகமுடையார்.
மறவர்கள் தங்களுக்குரிய பட்டமாக 'தேவர்' என்ற பட்டத்தைப்
பயன்படுத்திக்கொள்வர்.
கள்ளர்களில் பதினெட்டு உட்பிரிவுகளும் அவற்றுக்குள் இன்னும் உட்பிரிவு
களும் இருக்கும். பொதுவாக அவர்கள் 'அம்பலம்', அம்பலக்காரர்', 'சேர்வை',
'சேர்வார்' ஆகிய பட்டங்களை மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை
ஆகிய பகுதிகளில் போட்டுக்கொள்கிறார்கள். மன்றாயர், பல்லவராயர்,
காடுவெட்டி, காடவராயர், சோழகர், சோழர், இரட்டைக்குடையார்,
நாட்டார், தொண்டைமானார், தொண்டைமான் போன்ற சில பட்டங்களையும்
அவர்களில் சில குடியினர் போட்டுக்கொள்வார்கள்.
அகமுடையார், 'சேர்வை', 'சேர்வார்', 'பிள்ளை' என்னும்
பட்டங்களைப் போட்டுக்கொள்வார்கள். பிள்ளைமார்களில் சிலருக்கும்
'சேர்வார்' பட்டம் உண்டு
( அகத்தியர் குழுமம் )
தேவ்
எனக்கு தெரிந்த வரையில், ஆன்மிகத்தில் நான்கு வகை:
1. மூலம்: அற்புதம்: விளக்கம் தேவை ஓரளவு புரிந்து கொள்ள. போகப் போக
தெளிவு பிறக்கலாம், பணிவு இருந்தால்: உதவி: கிருஷ்ணப்ரேமி, வேளுக்குடி,
கல்யாணபுரம், விசாகா ஹரி, மங்கையர்க்கரசி போன்றோர்.
2. ஆன்மிக அரைத்த மா அரைத்தல்: இது கொடி கட்டி பறக்கிறது,
வாக்சாலகத்தினால்; ஒற்றைக்கண்ணன் குருடர்களை வழி நடாத்துவது.
அரைப்பவர்களுக்கு செல்வம் பெருகும்; அறிவு குறையும்.
3. ஆன்மிகப்போலி: ஒரிஜினல் மாதிரி அமைத்து துட்டு பார்ப்பார்கள். ஏமாந்த
சோணகிரிகள் திருந்துவது கடினம்.
4. ஜே.கே., ஏக்னாத் ஈஸ்வரன் போன்றோர்: இவர்கள் இலச்சினைகளை களைந்து,
மூலத்தை, சமயம் தவிர்த்து, சிந்தித்து, புரிந்து பகிர்ந்து கொள்வார்கள்.
படிக்கணும்;அசை போடணும், மறுபடியும், மறுபடியும்.
ஜோஸஃப் காம்ப்பெல் தனிப்பிறவி.
சிலருக்கு இந்த அணுகுமுறை பிடிக்காது. அதனால் என்ன? ஒன்றும் குடி
முழுகிப்போய் விடவில்லை.
இன்னம்பூரான்
2010/9/11 N. Kannan <navan...@gmail.com>:
> 5.
தேவ்
On Sep 11, 2:07 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> இவன் பாண்டி நாட்டுக்காரன். ‘வையை எனும் பொய்யாக்குலக்கொடி’ தவழும்
> தீராநதிக்காரன்//
>
> அட?? ஆமாம் எனக்கும் இந்த உணர்வுகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் மதுரையையும்,
> பாண்டிய சாம்ராஜ்யத்தையும் பற்றி இன்னும் எந்தக் கதாசிரியர்களும் சரித்திர
> நாவல்கள் எழுதலை என்றும் அந்த அளவுக்கு அவங்க ஆராய்ச்சிகள் செய்யலையேனும்
> வருத்தப் பட்டுப்பேன். நா.பார்த்தசாரதி ( பாண்டிமாதேவி) கொஞ்சம் எழுதினார்.
> (ஆலவாய் அழகன்)ஜெகசிற்பியனும், அகிலனும் (கயல்விழி) ஓரிரண்டு எழுதினாங்க.
> அகிலனின் கயல்விழி தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அப்படினு சினிமாவா
> வந்ததாய்ச் சொல்லுவாங்க. சரியாத் தெரியலை!
>
> 2010/9/11 N. Kannan <navannak...@gmail.com>
இல்லை! ஜேகேயைப் புரிந்து கொள்ள அவருடன் தனித்து நின்று பழக வேண்டும்.
அவருடன் பல நடை போன பின் கிருஷ்ணப்பிரேமி, வேளுக்குடி என்ன சொல்கிறார்கள்
என்பது பிடிபடும். தளையை அறுப்பவர் கிருஷ்ணமூர்த்தி. பேருதான்
கிருஷ்ணமூர்த்தி இவர் சம்ஹாரமூர்த்தி. தீவிரமாக இறங்கும் போது
பயித்தியமாகாமல் பார்த்துக்கொள்வது இறையருள் ஒன்றே. இன்னும் பேசுவோம்.
> 4. ஜே.கே., ஏக்னாத் ஈஸ்வரன் போன்றோர்: இவர்கள் இலச்சினைகளை களைந்து,
> மூலத்தை, சமயம் தவிர்த்து, சிந்தித்து, புரிந்து பகிர்ந்து கொள்வார்கள்.
> படிக்கணும்;அசை போடணும், மறுபடியும், மறுபடியும்.
>
ஜேகே வழி ஞானவழி. தர்க்கத்தின் வழியே, இது இல்லை, இது இல்லை என்று போய்,
அறுக்கும் அறிவின் வாளும் அற்றுப்போய் நிராதரவாய் நிற்க வைத்துவிடும்.
சும்மாவா சொன்னார் சங்கரனார், ‘பஜ கோவிந்தம்! பஜ கோவிந்தம், கோவிந்தம் பஜ
மூடமதே! என்று :-)
ஆனால் அது மிக முக்கியமான பயிற்சி. இல்லையெனில் தமிழக ஆன்மீகப்
பதப்படுத்தலில் மெய்மை காண்பதரிது!!
> ஜோஸஃப் காம்ப்பெல் தனிப்பிறவி.
கேம்பல் நம்ம ரஜனீஷ் (ஓஷோ) போல. அருமையான ஆசிரியர். மெத்தப்படித்த
மெல்லிய இதயத்தான்!! எப்போதும் கேம்பலைக் கேட்கலாம். அவரொரு நல்ல கதை
சொல்லி.
> சிலருக்கு இந்த அணுகுமுறை பிடிக்காது. அதனால் என்ன? ஒன்றும் குடி
> முழுகிப்போய் விடவில்லை.
உண்மை. மிகவும் மேட்டுக்குடிகள் மட்டும் ஏதோ புரிந்தது போல்
உளறிக்கொட்டிக் கொண்டிருக்கும்! பாவம்!!
க.>


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
சங்கப்பாடல்களில் 50% மேல் இந்தக் குலக்கொடி பற்றித்தான். பாருங்கள்
வள்ளுவர் கூட நம்மவூரு என்கிறார்கள். ஒருகாலத்தில் தமிழகத்தின்
அறிவுஜீவிகளின் விளையாட்டுத்திடலாக இருந்த இடம் மதுரை. அது பொஇவுறு
வண்ணம் இன்னும் யாரும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது.
க.>
2010/9/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஜே கேயின் உயர்வைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படிப் பொதுமையாகப்
பேசுவது தவறு; ச்ருங்ககிரி சங்கராசார்யர் சந்திரசேகர பாரதி அவர்கள் தம்
உடலை துங்காநதியில் இடச் சொன்னார். சீடர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவரே
ஜலஸமாதியானார்; ஆனால் உடலை உடனே மீட்டுவிட்டனர்.
ஸ்வாமி ராம ஸுகதாஸ் அவர்களும் தாம் பயன்படுத்திவந்த சில பொருட் களையும்
தம் உடலோடு சேர்த்து எரியூட்டும்படி விராஸத் எழுதினார்; அடியார்கள்
அதன்படியே செய்தனர். 80 ஆண்டுகளுக்கு மேல் கீதையை விவரித்துவந்த
அவருக்கு ஒரு நினைவிடம் கூடக் கிடையாது. பதிப்புரிமை கோரப்படாத அவர்
எழுதிய புத்தகங்கள் மட்டுமே அவர்தம் வாழ்க்கையின் சின்னங்கள்
தேவ்
> மிரட்ட ஆரம்பிக்கின்றன!!’ என்று சொல்லிச் ...
>
> read more »
நன்று தேவ்!அவரை உயர்த்துவதற்காக அப்படிச் சொல்லவில்லை. யதார்த்ததைச் சொன்னேன். நான் ஜேகேயை என்றும் ஹீரோ ஒர்ஷிப் செய்ததில்லை. அவரைக் குருவாகக் கொள்ளக்கூடாது என்பது அவரின் போதனைகளுள் ஒன்று. அவர் ஒரு நல்ல தோழர். ஆத்ம நண்பன். அவ்வளவுதான்.நீங்கள் தரும் சேதி மகிழ்வளிக்கிறது.ஒரு ஜீவன்முக்தனை எப்படி நாம் அடையாளம் காண்பது? இது பற்றியெல்லாம் சிந்திப்போம்.
என்னைப் பொறுத்தமட்டில் இந்திய மண் தந்த பல பண்பாளர்களில் ஜேகே ஒருவர். அவரின் தேவை இக்காலத்திற்கு அவசியம். காரணங்கள் போகப்போக விளங்கும்.க.>2010/9/13 devoo rde...@gmail.com
ஜே கேயின் உயர்வைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படிப் பொதுமையாகப்
பேசுவது தவறு; ச்ருங்ககிரி சங்கராசார்யர் சந்திரசேகர பாரதி அவர்கள் தம்
உடலை துங்காநதியில் இடச் சொன்னார். சீடர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவரே
ஜலஸமாதியானார்; ஆனால் உடலை உடனே மீட்டுவிட்டனர்.
--
ஜே கேயின் உயர்வைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படிப் பொதுமையாகப்
பேசுவது தவறு;
ஜேகே மட்டிக்கொண்டது இப்படித்தான். இக்காலத்தில் மெட்டல் டிடெக்டர்
வைத்து கடற்கரையில் தங்க மோதிரம், காசுகள் கிடக்கிறதா? என்று தேடுவது
போல், லெட்பீடர் ‘தன்’ உணர்வற்ற ஒரு ஜீவன் கடற்கரையில் உலாவுவதைக்
கண்டாராம். இவரே இறைத்தூதர் என்றாராம். ஜேகே மேடையில் போதும் போது
மூன்றாம் உயர்திணையில் வைத்துதான் தன்னைக் குறிப்பிடுவார். ஓ! அப்பாலகன்
என்பார்! யாரடா அது? என்றால் சிறுபிராயத்து ஜே.கே!! நந்து ஏன் இங்கு
வந்தான் என்று இப்போது புரிகிறதா?
அடியில் கையெழுத்துக் கிடையாது. பாசுரமடல்கள் செய்தபோதும் கையெழுத்துப்
போடவில்லை. அதுவொரு மரபு.
நம்மை நாம் அடையாளம் காண்பதொன்று, மற்றவர் எப்படிக் காண்கின்றனர் என்பது
மற்றொன்று.
‘நீ என்னைச் சேர்ந்தவன், நீயும் நானும் ஒன்று!’ என்றானாம் இறைவன்.
இவன் சொல்லியிருக்கிறான். ‘என் புத்தி என்ன சொல்கிறது என்றால். நான்
யாரையும் சேர்ந்தவன் அல்லன். நான் என்னைச் சேர்ந்தவன்’ என்றானாம். கற்றது
கைமண் அளவு :-)))
க.>
'நிர்யோகக்ஷேம ஆத்மவாந்’ - சுருக்கமாகவும் கூறுகிறான், தொடர்ந்து
விரிவாகவும் கூறுகிறான் கீதாசார்யன்.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமாநந்த பாரதி
அவர்கள்; நெல்லையில் புகழ்பெற்ற வக்கீலாக இருந்து துறவு மேற்கொண்டவர்.
கொல்லிமலையில் வாழ்ந்தார். அவரது இறுதி நெருங்கும் சமயத்தில் உடலை
எங்கு, எப்படி அடக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டனர் .’இயற்கை
பார்த்துக்கொள்ளும், கவலைப்பட வேண்டாம்’ என விடை கூறினார் அத்துறவி.
வெளியுலம் அறியாமல் வாழ்ந்து மறைந்த ஜீவந்முக்தர்கள் பலர்.
உங்கள் பதிவை விமர்சிக்கும் நோக்கம் இல்லை; வாய்ப்பு நேர்ந்ததால்
தெரிவித்தேன்
தேவ்
நீ என்னைச் சேர்ந்தவன் - த்வம் மே
நான் என்னைச் சேர்ந்தவன் - அஹம் மே
உடலோடும் உலகோடும் தன்னை அடையாளப்படுத்தும்வரை ஒவ்வொரு தளத்திலும்
உலகைச் சேர்ந்தவர்களைத் தன்பால் கவன ஈர்ப்புச் செய்த வண்ணம் இருப்பான்;
பரத்தோடு அடையாளப் படுத்திக்கொண்டால் பரமஹம்ஸர் சொன்னதுபோல்
வெல்லப்பாகில் விழுந்த வெல்லப்பொம்மை
தேவ்
அதை நான் விமர்சனமாக எடுத்துக்கொள்ளவில்லை. தாங்கள் தரும் சமதளத்தகவல்
நம் தமிழ் அடியார்களை அறிந்து கொள்ள உதவுகிறது. பரமஹம்ச யோகாநந்தர்
அடக்கமாக வீட்டில் வளைய வளைய வரும் பெண் யோகிகள் பற்றிப் பேசுவார்.
எந்தரோ மகாநுபாவ!!
க.>
ஜேகேயின் திறவுகோலே மொழிதான். நான் தமிழ் மொழியின் தாக்கத்திலிருந்து
விடுபடும் போது வார்த்தைகள் நம் முழு கவனத்தையும் ஆக்கிரமிக்கின்றன.
அப்போது புரிதல் நடக்கிறது.
உதாரணமாக, ‘சித்தர்’ எனும் தமிழ் வார்த்தையைக் கேட்டவுடன் ஆயிரம்
எண்ணங்கள் நெஞ்சில் பாயும். அந்தக் கெடுபிடியில் சித்தர் எங்கோ
போய்விடுவார் :-)
மொழி பதத்துப் போய்விடுகிறது. தீ போல இருக்க வேண்டும் மொழி. மந்திரம்
போன்ற சொல் என்று பாரதியும் பிறரும் சொல்வது ‘தீக்குள் விரலை விடும்’
சமாச்சாரம்.
நான் அறிந்த ஜேகே முழுவதும் ஆங்கிலத்தில்தான். சில தமிழாக்கம் உள்ளதாக
அறிகிறேன். நான் வாசித்ததில்லை. இனி அவசியமும் இல்லை. ஒருமுறை
புரிந்துவிட்டால் மீண்டும் வாசிக்க வேண்டிய அவசியமில்லை. புரிந்தததை
வாழ்வின் நடைமுறை ஆக்குவதில்தான் இனி கவனம்.
திருப்பூவணத்தில் ஜேகே வாசிக்கும் ஒரே தமிழர் நீங்களாகவே இருக்கும் :-))
நாம் சந்தித்தால் நிரம்பப் பேசலாம். என்னுடைய உற்ற ஜெர்மன் தோழன் ஜேகே
புரியாமல் என்னிடம் வந்தவன்தான். எனக்கு தம்பி இல்லாத குறையைத் தீர்த்து
வைப்பவன்.
கண்ணன்.
2010/9/14 kalairajan krishnan <kalair...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
That is an impossible task!!
ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசிக்கேட்பது எளிது.
ஆனால் புத்தக வடிவிற்கு அது போகும் போது editorial assistance உண்டு.
ராஜகோபாலன் என்பவர் தன் வாழ்நாளையே ஜேகே புத்தகங்களைச் செப்பனிட
உதவியவர். அவ்வளவு எளிதாக மொழி பெயர்த்துவிட முடியாது. ஆங்கிலத்தில்
படிப்பதன் ஆதாயம் சொன்னேனே!! :-))
எனது தொடரில் ஜேகே பற்றி வரும் போது அவரது மூலச்சொற்களை அப்படியே
தந்துவிடுவேன். இது ஜேகேயின் கட்டளை.
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆன்மீகப் பெரியவர்கள் எல்லோரும் சொல்லும் சேதி ஒன்றுதான். உங்களது அனுபவம், புரிதல் என்பவை என்னவென்று பிற யாரும் அறிய வாய்ப்பில்லை.
ஒருக்கால் ஜேகே சொல்லும் பாடங்கள் (இதை Teaching என்கிறார்) உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.இத்தொடர் எழுந்ததன் காரணம் ஜேகேயை அறிமுகப்படுத்துவது அல்ல. நந்து எனும் கிராமத்துச் சிறுவன் எப்படி படிப்படியாக வளர்ந்து ஜேகே என்று உலகலாம் போற்றப்படும் ஒரு சிந்தனையாளரிடம் போய்ச்சேர்ந்தான் என்று சொல்வதுதான்.
> 05-09-2010 அன்று திருப்பூவணத்தில் ஒரு விழா நிகழ்ச்சியில் தமிழையா விநாயகம்
> அவர்களின் மகன் சீர்மிகு குமார் அவர்களைச் சந்தித்தேன்,
>
போச்சுடா! :-))
> ஐயாவிடம் அதிகமாக அடிவாங்கியவர் அவராகத்தான் இருக்கும்,
>
பாவம்.
நல்லவேளை விநாயம் எனக்குப் பாடமெடுக்கவில்லை. என் வாத்தியார்
ஸ்ரீநிவாசன். விநாயம் சார் மாணவர்களைப் பின்னிப் பெடலெடுப்பதைப் பார்த்தே
எனக்கு கழிசல். அடிபட்டவனுக்கு எப்படி இருக்கும்!!
ரொம்ப நாளைக்கப்புறம் எங்க டிராயிங் மாஸ்டரை மதுரையில் ஓரிடத்தில்
பார்த்தேன். ஆட்டோவில் போய்கொண்டிருந்த என்னை எப்படியோ கழுகுக் கண்ணால்
பார்த்து பிடித்துவிட்டார். நான் என் அக்காவைப் பார்க்கப் போய்
கொண்டிருந்தேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தன் மாணவர்களை எப்படி
நினைவில் வைத்திருக்கிறார்கள் இவ்வாசிரியர்கள்? இல்லை அதுவொரு ஷ்பெஷல்
நிகழ்வா? திருப்புவனம் என்றாலே இப்போது எல்லாம் mystical ஆகத் தெரிகிறது.
!!
க.>
ஓ! நந்துவா! அது அவன்தான். நான் அவனில்லை :-))
க.>
பரவாயில்லை. இவுரு நந்துங்கறாரு. இன்னம்பூராரு ராஜுங்கறாரு.நான் தான் நானாகவே இருக்கேன்.
விட்டு விடுதலையாகி நிற்பாய்
அந்தச் சிட்டுக்குருவியைப் போல :-))
க.>
From there I started my journey to explore what Spirituality is.....
J K youmight know rebeled against Annebesant's mission which groomed
him to be their chief and became what he is today. I used to think
that he is the begining and end of Spirituality.
When you dig deeper, read other material say Living with
HimalayanMasters by Swamy Rama and the works of CarlosCasteneda you
undersand J K is a Socio philosopher and not a spiritualist.
i will send my manuscript for your considered opinion.
Hopefully this would be published and available during the forthcoming
chennai book-exhibition.
Good wishes
NATARAJAN
(I am wondering how you mail in Tamil...
Do you prepare text elsewhere and cut and past..... ??)
I am new to this forum and yet to understand it fully..
http://shake-hands-with-bramma.blogspot.com/
http://science-of-good-living.blogspot.com/
I have completed two of my works and ready forprint....
If you would llike to take another view you may visit my blog first
and if u likeit you mail me I will send the PDF files.
Thanks
NATARAJAN
On Sep 15, 4:50 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அன்பின் காளைராஜன்:
>
> ஆன்மீகப் பெரியவர்கள் எல்லோரும் சொல்லும் சேதி ஒன்றுதான். உங்களது அனுபவம்,
> புரிதல் என்பவை என்னவென்று பிற யாரும் அறிய வாய்ப்பில்லை. ஒருக்கால் ஜேகே
> சொல்லும் பாடங்கள் (இதை Teaching என்கிறார்) உங்களுக்கு முன்பே
> தெரிந்திருக்கலாம்.
>
> இத்தொடர் எழுந்ததன் காரணம் ஜேகேயை அறிமுகப்படுத்துவது அல்ல. நந்து எனும்
> கிராமத்துச் சிறுவன் எப்படி படிப்படியாக வளர்ந்து ஜேகே என்று உலகலாம்
> போற்றப்படும் ஒரு சிந்தனையாளரிடம் போய்ச்சேர்ந்தான் என்று சொல்வதுதான். இது
> முழுக்க, முழுக்க ஒரு முமூக்ஷுவின் பயணம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில்
> போகிறோம். அதற்கு ஏதாவதொரு காரணமிருக்கும். யோசித்துப் பார்த்தால் ஒரு மறை
> திட்டம் புலப்படும். அரங்கனார் இந்த ஆன்மீகத்தேடலைப் பதியச் சொன்னார். அதனால்
> இந்த முயற்சி.
>
> JK may not appeal to everybody. It does not matter.
>
> *வணங்கும் துறைகள் பல பலவாக்கி, மதி விகற்பால்
> பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தொறும்
> அணங்கும் பலபல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
> இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண், வேட்கை எழுவிப்பனே*
> நம்மாழ்வார்
>
> எதுவாகிலும், ஜேகேயைப் படித்தால், கேட்டால் நம் ஆங்கிலம் தெளிவுறுதல் திண்ணம்
> ;-)
>
> க.>
>
> 2010/9/15 kalairajan krishnan <kalairaja...@gmail.com>> Dear Sir,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
I was introduced to JK by a genius called Mohanamurthy, a fellow
scientist in ISRO some 30 years ago...
From there I started my journey to explore what Spirituality is.....
Question: why is your teaching so purely psychological? There is no cosmology, no theology, no ethics, no aesthetics, no sociology, no political science, not even hygiene. Why do you concentrate only on the mind and its workings?
Krishnamurti: For a very simple reason, Sir. If the thinker can understand himself, then the whole problem is solved. Then he is creation, he is reality; and then what he does will not be antisocial. Virtue is not an end in itself; virtue brings freedom, and there can be freedom only when the thinker, which is the mind, ceases. That is why one has to understand the process of the mind, the ‘I’, the bundle of desires that create the ‘I’, my property, my wife, my ideas, my God. Surely it is because the thinker is so confused that his actions are confused; it is because the thinker is confused that he seeks reality, order, peace. Because the thinker is confused, ignorant, he wants knowledge; and because the thinker is in contradiction, in conflict, he pursues ethics to control, to guide, to support him. So, if I can understand myself, the thinker, then the whole problem is solved, is it not?
Collected Works of J. Krishnamurti, Vol IV. 1948 6th Public Talk, Bombay
8.
You see to go into this one must have great humility; not humbleness, not sycophantism, not touching somebody's robes and saying 'I am very humble'. That quality of humility that has had no vanity, that has never known vanity. You understand? Otherwise it is not humility. Go into this carefully. Those who are vain, arrogant, full of their own importance and their own knowledge, their own realisation, and all that business, in that there is a sense of self-importance. And that state of mind then cultivates humility. Haven't you known all this? So a mind that has known vanity in any direction - scientifically, religiously, politically, the sense of achievement which gives one a great self-importance and arrogance - such a mind can never comprehend a quality which is totally free of vanity. We are meeting all this?
Intelligence, Love and Compassion http://www.jkrishnamurti.com/krishnamurti-teachings/view-text.php?tid=1336&chid=1035
J. Krishnamurti
Sixth Public Talk in Saanen
July 1979
பென்குயின் வெளியிட்டிருந்த ‘வாசகர் கிருஷ்ணமூர்த்தி’ என்ற நூலை முதன்முறையாக நூலகத்தில் பார்த்த போது நந்துவினால் உடனே ஈர்க்கப்பட்டு உள்ளே நுழைய முடியவில்லை. அப்புத்தகம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்தது. நந்து அதிகமாக நான்பிக்ஷன் என்று சொல்லக்கூடிய புதினமல்லாத எழுத்துக்களை ஆங்கிலத்தில் வாசித்ததில்லை. சிந்தனையைத் தொடர்ச்சியாக ஆங்கில மொழி மூலம் நிறுத்துவது கடினமாக இருந்தது. ஆங்கிலம் அவன் வாழ்வில் மெல்லப் புகுந்து ஆளுமை செலுத்தத் தொடங்கியிருந்தும் அறிவியல் அல்லாத பிற துறைகளில் ஆங்கிலம் கொண்டு காலூன்றப்பழகவில்லை இன்னும். மேலும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஆங்கில நடை, நாவல்களில் படிக்கும் எளிய நடையல்ல. அது வேறொரு அறிவியல் நடையாக இருந்தது. புதிய உளவியல் கலைச் சொற்கள், குழூமக்குறியீடுகள். ஆங்கில அறிவியல் ஜார்கனே (கலைச்சொல்) இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருந்த போது வேறொரு துறைக்குள் புகுந்து புதிய கலைச் சொற்களையும், அதன் ஆழ்பொருளையும் நோக்கும் காலவசதி நந்துவிடம் அப்போது இல்லை.
இரண்டாவதாக, அவன் வளர்ந்த சூழலில் வேதாந்த விசாரமோ, தத்துவ விசாரங்களோ சுத்தமாக இல்லை. கிராமத்தின் வாழ்வு சில கட்டங்களுக்குள் மீறாமல் சுற்றிக்கொண்டு இருந்தது. பக்மினிஸ்டர் ஃபூலர் எனும் அமெரிக்க விஞ்ஞானி, தத்துவப் பேராசிரியர், கவிஞர், பொறிஞர் சொல்லுவார், ‘எப்போது நான் ஒரு சுழற்சியின் நடுவில் இருக்கிறேன் என்று உணர்கிறேனோ அப்போதே அதிலிருந்து வெளியே குதித்துவிடுவேன்’ என்று. கிராமத்தில் அப்படி எந்த முயற்சியும் இருந்த மாதிரித் தெரியவில்லை. இருக்கின்ற வட்டத்தைவிட்டு வெளியே குதி என்று உரத்துச் சொல்லிக் கொண்டிருந்தவர் ஈ.வே.ரா பெரியார் ஒருவர்தான்.
மூன்றாவதாக, தத்துவ விசாரத்திற்குள் மூழ்க மனப்பக்குவம் வேண்டும். சங்கரர், ஞான சம்பந்தர் போன்றோருக்கெல்லாம் இளமையிலேயே இறையருளால் பிரம்மஞானம் வந்துவிட்டது. ஆங்கிலப்பாட டிக்டேஷன் செய்து கொண்டிருந்த இரமணருக்கு ‘தான்’ செத்துவிட்ட உணர்வு திடீரெனத் தோன்றியது. அதன் பின் அவன் எளிமையான பள்ளி மாணவனாக வாழ முடியவில்லை. முப்புரி நூலை எறிந்துவிட்டு, கோவணாண்டியாகிப் போனான். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும் இளமையிலேயே சுடர்விடும் அறிவு கிட்டியிருந்தது. பிரம்மஞானத்தைவிட வாழ்வதற்கு வேறேதும் துணை இல்லை என்று ஆகிப்போனவர்கள் இவர்கள். ஆனால், ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த நந்துவிற்கு சுவைத்து வாழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தன. இளமையின் உச்சத்திலிருந்த நந்துவிற்கு தான் வசீகரமாக இருப்பதை உணரும் போக்குடன் உலகம் வசீகரமானது என்பதும் புரிந்தது. பல்கலைக் கழக வாழ்வு அவனுக்குப் புதியதோர் சுதந்திரத்தை அளித்திருந்தது. வீட்டின் நான்கு சுவரிலிருந்தும், கண்காணிக்கும் கண்களிலிருந்தும் விடுதலை கிடைத்திருந்தது. அதுவரை அவன் முதல் வகுப்பில் தேறிப்பெற்ற கல்வியின் இறுமாப்பு நெஞ்சு பூரா இருந்தது. தமிழும், கவிதையும் அவனுக்குப் புதியதோர் அவதாரத்தை அளித்தன. தோளில் ஒரு ஜோல்னாப்பை, மூக்குக் கண்ணாடி, முகத்தில் குறுந்தாடி, தலையில் தொப்பி, கண்களில், ‘உலகம் தூசு’ எனும் பார்வை. கையில் புதுக்கவிதை, இவையே அப்புதிய அவதார லட்சணங்கள். நான் எல்லோரிலும் மாறுபட்டவன் எனும் எண்ணம் வலுவாக இருந்தது. உன்னிலிருந்து உலகம் என்பது மாறுபட்டதல்ல. நீயே உலகம் என்று சொல்லும் ஜே.கே எப்படி ‘இந்த’ நந்துவிடம் நெருங்க முடியும்?
ஆதிசங்கர பகவத்பாதாள் ‘பஜகோவிந்தம்’ பாடும் போது ‘யௌவன கர்வம்’ என்றொரு பயன்பாடு செய்வார். அகப்பாடு (ஈகோ) என்பதற்கும் உடல் வலுவிற்கும் நிறையத் தொடர்புண்டு. இளமையில் கர்வம் நிறைய இருக்கும். இது மனிதர்களுக்கு என்று மட்டுமில்லை, விலங்கிற்கும் பொருந்தும். இளமை தரும் பூரிப்பு ஒருவகையான கனவுலக மிதப்பைக் கொண்டுவர கால் தரையில் பாவினால் ஆச்சர்யம். அப்போது பெரியோர் பேச்சு காதில் படாது. கோயில் என்பது இளம் பெண்களைக் காணும் இடமாகத்தோன்றும். கல்லூரி என்பது பொழுது போக்கும் இடமாகப் பரிமளிக்கும். உலகமே உண்டு களிக்கத் தோன்றிய பீடமாகத் தோன்றும்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ‘நெஞ்சுக்கு நீதி’ வேண்டும் என்று ஆரம்பிப்பார். அது என்ன நெஞ்சுக்கு நீதி? சமூக விலங்காக மனிதன் தாக்குப்பிடிக்க வேண்டுமெனில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று பழகிக்கொள்ள வேண்டும். எல்லோருடைய ஈகோவும் இறுகிக்கட்டிப் போயிருப்பதால் அதனுடன் மோதாமல், அதற்கு இதமாகத் தடவிக் கொடுக்கப் பழக வேண்டும். அப்போதுதான் தனது ஈகோ குத்துப்படாமல் இருக்கும். இப்படி சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு போக்கை சமூகம் நம்மிடம் வளர்த்துவிடுகிறது. அங்கு நெஞ்சுக்கு நீதி இல்லை. சமூகத்தில் பாசாங்குத்தனத்திற்கு ஒரு மதிப்புண்டு. அதுவொரு பிழைக்கும் உத்தி கூட. பாசாங்குத்தனம் இல்லாத மனிதர் என்று எவரேனும் உண்டோ? ஆனால், ஆன்மீகப் பயணத்தில் இதற்கு இடமில்லை. மற்றோருக்குப் போக்குக்காட்டலாம். தனக்கே போக்குக்காட்ட முடியுமோ? ஆனால், அதுதான் நடக்கிறது. பாசாங்கு செய்து பழகிய மனது தனக்கும் பாசாங்கு செய்துவிடுகிறது. அப்போது நெஞ்சுக்கு நீதி கிடைப்பதில்லை. ஜே.கேயின் பாதையில் காலடி வைப்பதற்கு முன் நெஞ்சுக்கு நீதியும், நாணயமும் வேண்டும். போக்கற்ற, புகலற்ற, வெளிப்படையான நேர்காணல் நிகழ வேண்டும். அப்போதுதான் சுயதரிசனம் கிட்டும். ஜேகே நெறியில் உட்புகும் போது கிடைக்கும் முதல் பரிசு, ஒரு பேயறை!! ஆம், அவர் ஒரு தூய, தெளிவான கண்ணாடி போல் நம்மிடம் உள்ளதை உள்ளபடி காட்டிவிடுவார். நமது பொய்மையும், பாசாங்குப்போக்கும், வஞ்சகமும், நேர்மையற்ற நெஞ்சும், குறுக்கு புத்தியும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். நாணிக்குறுகிச் சாக வேண்டிவரும். தன்னுள் சாதல் என்பது ஆன்றோர்களால் பாராட்டப்படும் ஒரு செயல். ஒன்று செத்தால்தான் புதியதொன்று பிறக்கும்!
ஆனால் நந்து இதற்கெல்லாம் தயாராக அப்போது இல்லை. தானொரு அறிவுஜீவி எனும் இறுமாப்பு மண்டிக்கிடந்தது. இது பெரும்பாலும் அவனது போட்டிகள் நிரம்பிய கல்வி வாழ்வு கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜே.கேயைத் தொட்ட அந்த நந்துவிற்குள் ஒரு தாமரை மலர் மணம் வீசக்காத்திருந்தாலும், வாழ்வு அவனுக்கு இளமையிலே மிகக்கஷ்டமான பாடங்களைக் கற்றுக் கொடுத்திருந்தாலும், அதையும் மீறி சாட்டையடி வாங்கி மரத்துப் போகும் தோல் போல் போட்டிகள் நிரம்பிய வாழ்வு அவனை முரடனாக்கியிருந்தது. முரடன் என்றால் உடல் வலுவில் அல்ல. நாவினால் சுடும் வல்லமை அவனிடம் இருந்தது. கனியிருக்க காயையே உண்ணச்சொல்லி சமூகம் அவனைப் பதப்படுத்தி வைத்திருந்தது. எனவே, அவன் பக்குவப்படவில்லை. ஜேகே கிட்ட வந்தும் அவனிலிருந்து எட்ட நின்றார்.
http://www.youtube.com/watch?v=JKvz3BdB2EE
[கேள்வி என்பது பற்றி தமிழ் அறிவுடை உலகம் நிரம்பப் பேசுகிறது. ஆனால் நம்மில் பலருக்கு ஒருவர் சொன்னால் எப்படிக் கேட்பது என்றே தெரியவில்லை. கேட்பது ஒரு கலை. ஜே.கிருஷ்ணமூர்த்தியை முழுமையாகக் கேட்டாலே அவர் சொல்லும் ஞான மாற்றம் நம்முள் நிகழும். ஆனால் அதற்கு முன் கேட்பது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். மிக அருமையான விழியம்!]
முற்றிலும் உண்மை.
வெகு இயல்பான மனம் கவரும் நடை. அதனால்தான் பருந்து வட்டமிடாதா என்று
தினமும் பார்க்க வைக்கிறது போலும் !! நந்து எந்த கட்டத்தில்
கண்ணனாகப் போகிறான் என்று அறிந்துகொள்ளும் குறுகுறுப்பும் ஒருபக்கம்
இருந்து வருகிறது
தேவ்
On Sep 25, 10:09 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 8.
>
> You see to go into this one must have great humility; not humbleness, not
> sycophantism, not touching somebody's robes and saying 'I am very humble'.
> That quality of humility that has had no vanity, that has never known
> vanity. You understand? Otherwise it is not humility. Go into this
> carefully. Those who are vain, arrogant, full of their own importance and
> their own knowledge, their own realisation, and all that business, in that
> there is a sense of self-importance. And that state of mind then cultivates
> humility. Haven't you known all this? So a mind that has known vanity in any
> direction - scientifically, religiously, politically, the sense of
> achievement which gives one a great self-importance and arrogance - such a
> mind can never comprehend a quality which is totally free of vanity. We are
> meeting all this?
>
> Intelligence, Love and Compassionhttp://www.jkrishnamurti.com/krishnamurti-teachings/view-text.php?tid...
>
> *J. Krishnamurti*
> என்பது பொழுது போக்கும் இடமாகப் ...
>
> read more »
பென்குயின் வெளியிட்டிருந்த ‘வாசகர் கிருஷ்ணமூர்த்தி’ என்ற நூலை
அங்கு கொலை விழுந்தால் கூட இரண்டு நாள் கழித்துதான்
தெரியும். பல்வேறு வகையில் கொலை விழும். ஒரு நாள் எல்லோரும் கிசு, கிசு
என்று பேசிக்கொண்டிருந்தார்கள். முனீஸ்வரர் ஆல மரத்தில் ஒருவன்
தூக்கிட்டுத் தொங்குகிறான் என்று. நந்து தன் கோஷ்டியுடன் உடனே ஆற்றை
நோக்கி ஓடினான். இவனுக்கு ஆச்சர்யம் என்னவெனில் அந்த ஆலமரம் மிகவும்
சிக்கலான அமைப்புக் கொண்டது. மதிலைத்தாண்டி விழுதுகளை மண்மீது பாய விட்டு
சாய்ந்து நிற்கும் மரமிது. மதிலுக்கு உள்ளே, மரத்தடியில் முனீஸ்வரர்
சந்நிதி. மிகவும் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் என்று பெயர். அவரை மிதித்து
மரத்தில் ஏறி, இவன் தொங்கும் இடத்திற்கு வருவதற்குள் குளவி, தேள், தேனீ
இவை கொட்டி கீழே விழ வேண்டியிருக்கும் அல்லது கரடு முரடான வழுக்கு
மரத்தில் ஏறமுடியாமல் கீழே விழ வேண்டியிருக்கும். இவ்வளவு சிக்கலையும்
தாண்டி அவன் நடு மரத்திற்கு வந்து தூக்குப்போட்டுத் தொங்குகிறான்
> அன்று திகில் ஆலமரம்,
> இன்று அகத்திக்கீரை விற்கும் இடமாக மாறிவிட்டது,
ஹ..ஹா..இது வெளியே இருந்து எடுத்த படம்தானே? ஏனெனில் முன்பு அந்தக்
குட்டி சந்நிதி கிடையாது. அதன் மேல்தான் தொங்கினான்!!
இப்படி ஊர் மாறிக்கொண்டே இருந்தால் பழைய பேய் பிசாசு எல்லாம் எங்கு போகும்? :-)))
க.>
Most of us are frightened of dying because we don't know what it means to live. We don't know how to live, therefore we don't know how to die. As long as we are frightened of life we shall be frightened of death. The man who is not frightened of life is not frightened of being completely insecure for he understands that inwardly, psychologically, there is no security. When there is no security there is an endless movement and then life and death are the same. The man who lives without conflict, who lives with beauty and love, is not frightened of death because to love is to die.
From: p. 75-77, Jiddu Krishnamurti, Freedom from the known, 1969
நந்து போன்ற ஆய்வாளர்களின் கனவு அக்காலத்தில் அமெரிக்காவாக இருந்தது. நந்து படித்த கல்லூரி அமெரிக்கப் பாதிரிகள் ஆரம்பித்து வைத்த கல்லூரி. இவனது ஆங்கில விரிவுரையாளர் ஒரு அமெரிக்கர். இளைஞர். தனது மனைவியுடன் இவன் வாழ்ந்த கோசாகுளம் புதூரில் குடியிருந்தார். இருந்த காலங்களில் அவர் தமிழ் கற்று தினத்தந்தி வாசிக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தார். அறிவியல் புலத்தின் மேலாண்மையும் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரிடமே இருந்தது. எனவே அமெரிக்கக்கனவு என்பது நந்துவிற்குப் புதிதல்ல. இந்திய சமுதாயம் மிகவும் கட்டுபெட்டித்தனமாக இருந்ததாக இவனும், இவனது சகாக்களும் கருதினர். அமெரிக்கா இவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை வழங்குமென்று நம்பினர். சுவாமிநாதன் அவ்வாழ்வின் இன்னோரு கோணத்தை இப்படிக் காண்பான். ‘நந்து, சும்மா அமெரிக்காவில் போஸ்ட்டாக்காக இரண்டு வருடம் இருந்து ஒரு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டு, இந்தியா திரும்பிவிட வேண்டும்’ என்பான். ஆனால், அமெரிக்கா போன இவன் சகாக்கள் யாரும் அப்படித் திரும்பவில்லை. காரணம் அமெரிக்காவின் வளமும், சௌகர்யமும் நம்மை இந்தியாவிற்கு மீட்டுவிடாது. சுஜாதா சொன்னது போன்று அமெரிக்கா எளிதாக ஒருவனைக் கடனாளியாக்கிவிடும். அங்கு கடன் வாங்குவது எளிது. வாங்கிய கடனைக் கட்ட ஒரு வாழ்நாள் போதாது. இப்படி அங்கு போய் கடன் வலையில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள்தான் அதிகம். ஆயினும் மோகம் என்பது குருடு. நந்துவின் கனவும் அமெரிக்கா செல்வதிலேயே இருந்தது.
ஆயினும் அமெரிக்கா செல்வதற்கு குறைந்த பட்ச தகுதியாக முனைவர் பட்டம் அக்காலத்தில் இருந்தது. இங்குள்ள முதுகலைப் பட்டம் அங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அங்கு போய் மீண்டும் முதுகலை வகுப்பில் உட்கார நந்துவின் செட்டில் யாருக்கும் விருப்பமில்லை. எனவே கஷ்டமோ, நஷ்டமோ இந்தியாவில் எப்படியாவது ஒரு டிகிரியை வாங்கிவிட்டுப் பறந்துவிட வேண்டும் என்பதே எல்லோரின் கனவாக இருந்தது. இது முதல் பெரும் தடை. ஏனெனில் முனைவர் பட்டம் வாங்குவது சில துறைகளில் எளிதாக இருந்தது. பேராசிரியரின் பல்துறை செல்வாக்கு அதற்கு வெகுவாக உதவியது. செல்வாக்கில்லாத பேராசிரியர்களிடம் மாட்டிக்கொண்டவர்கள் படித்துப் படித்து தலை வழுக்கையாகி முதுமையுற்றதுதான் மிச்சம். எனவே, அநேக குடும்பங்கள் இப்படி முனைவர் பட்டம் வாங்கப் போகும் பிள்ளைகளுக்கு மணமுடிக்க முடியாத பெரிய சிக்கலில் இருந்தன. நந்துவின் குடும்பத்திலும் இப்பேச்சு தலை தூக்கினாலும், அதற்கு முன் நந்து தாண்ட வேண்டிய பெரிய தடங்களாக அவனது சகோதரிகள் திருமணம் இருந்தது. பெற்றோர் அற்ற, பிராமண குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு வரன் பார்த்து மணம் முடிப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நந்துவோ வீட்டின் இளைய பிள்ளை. படிப்பு தவிர வேறு அறிவு அற்றவன். ஆனால் அதற்காகப் பொறுப்பைத் தட்டவும் முடியாது. எனவே நந்து அமெரிக்கக் கனவை ஒத்தி போட வேண்டியிருந்தது. நூறு பேருக்கு எழுதினால் இரண்டு பேரிடமிருந்து பதில் வரும். அதில் பெரும் நம்பிக்கை வைத்து அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடிதங்கள் பேராசிரியர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு உழைக்கும் ஒரு கை குறைந்துவிடும் என்ற அச்சமுண்டு. எனவே போர்க்கால ரகசிய நடவடிக்கை போல் எல்லாம் கச்சிதமாக முடிய வேண்டும். ஆனாலும் காட்டிக் கொடுத்துவிடும் ஒரு அபாயம் அமெரிக்க கான்சுலேட்டிடம் இருந்து வரும். நேர்காணலுக்குச் சென்னை செல்ல வேண்டும். சில நேரங்களில் பட்டமேற்படிப்பு செய்யும் பேராசிரியரின் சான்றிதழ் கேட்கும் வழக்கமும் உண்டு! அமெரிக்கன் கான்சுலேட்டில் அங்கு போய் மனுப்படிவம் வாங்குவதே பெரிய வேலை. காலை 5 மணிக்கெல்லாம் வாசலில் வரிசையிருக்கும். அலுவலகம் திறப்பதோ 10 மணி. இவ்வளவு கஷ்டப்பட்டு மனுவெல்லாம் கொடுத்தாலும் விசாக் கிடைக்குமென்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது. இந்தியர்களை அமெரிக்காவின் சுமை என்றே அவ்வரசாங்கம் கருதியது. இங்கிருந்து வருபவன் எவனும் திரும்ப இந்தியா போகமாட்டான் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே விசா தட்டிக் கழிக்கப்படுவதே அக்காலக்கட்ட வழக்கம்.
நாட்சி வதை முகாமில் கஷ்டங்களுடன் வாழ்ந்த எல்லோருக்குள்ளும் ஒரு பரஸ்பர நட்புறவு இருந்தது. அது எல்லோரும் சாகப்போகிறோம் எனும் உணர்வால் வந்ததல்ல. விடிவு நிச்சயம் ஒரு நாள் வரும் எனும் நம்பிக்கையால் வந்தது. வதை முகாம்களில் திருமணங்கள் கூட நடந்து முடிந்தன. நந்துவின் சகாக்களுக்குள் இப்படியான ஒரு பரஸ்பர நட்பு இருந்ததற்கு அடிப்படைக் காரணம், இத்தனை கஷ்டங்களுக்கும் விடிவாக அமெரிக்க விசா ஒரு நாள் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கைதான்.
ஆனால் கொத்தடிமை வாழ்வு இவர்களைச் சுண்டக் காய்ச்சியது. நந்து எவ்வளவு ரகசியமாக நடந்து கொண்டாலும், பேராசிரியர்களுக்குத் தெரியாமல் அங்கு ஒரு காரியமும் நடப்பதில்லை. எனவே, பட்டம் இன்னும் பெறாத நிலையில், கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில் நந்து தொடர்பு கொண்ட அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றின் முகவரியை இவன் பேராசிரியர் பெற்றுவிட்டார். அந்த வெளிநாட்டுப் பேராசிரியர் இவரிடம் நந்து பற்றி நற்சான்றிதழ் கேட்டிருந்தார். இவர் சான்றிதழ் வழங்காமல், அவனுக்கு பட்டம் கிடைக்க நாளாகும், ஆனால் தன்னால் அங்கு ஒரு வருடம் வரமுடியும் என்று எழுதிப் போட்டு, இவன் வாயில் மண்ணைப் போட்டுவிட்டு அவர் அமெரிக்கா பறந்துவிட்டார். நந்து மிகப்பின்னால்தான் காரியரதரிசி ராதா மூலம் அறிந்து கொண்டான். அவன் பட்ட மனக்கஷ்டத்தை சொல்லி மாளாது. ஆனால், பல்கலைக்கழகம் என்பது ஆப்பிரிக்க சிரங்கட்டி வனவிலங்கு சரணாலயம் போல் இருந்தது. வல்லமை உடையதும், ரகசியமாக தாக்காக்கூடியதும், நயவஞ்சகம் நிரம்பியதும் எப்போதும் வென்று கொண்டே இருந்தன. நந்து போன்ற வெள்ளந்திகள் மாடு போல் உழைத்துக் கொண்டு இருந்தனர்.
இந்தக் காலக்கட்டத்தை நந்து வேறொரு வகையில் பயனுள்ளதாக மாற்றினான். தனது சகோதரிகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தான். கிராமப்புறத்தில், ‘முன்னப்பின்ன செத்து இருந்தாத்தானே சுடுகாடு தெரியும்!’ என்பார்கள். அது போல் முன்னப் பின்ன கல்யாணம் செய்வித்திருந்தால் அல்லவோ இவனுக்கு முன் அனுபவம் இருக்கும். இவனோ வாயில் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவன். பெற்றோராலும், சகோதரிகளாலும் சீராட்டப் பெற்றவன். இவன் அறிந்த கல்யாணம் இவனது இரண்டாவது பெரிய சகோதரியின் கல்யாணம். அப்போது தாய், தந்தையர் இருந்தனர். கவலையற்ற வயது. செட்டியார் விடுதியில்தான் நடந்தது. மூன்று நாள் கல்யாணம். வெளியூரிலிருந்து உறவுகளெல்லாம் வந்திருந்தனர். ஊரார் வீட்டுக் கல்யாணம் போல் தயங்கித் தயங்கி கேட்க வேண்டியதில்லை. நேரடியாக அடுப்பறைக்குள் போய் வேண்டிய பக்ஷணங்கள் தயாராகும் போதே சாம்பிள் பார்க்க முடிந்தது. கூம்பு, கூம்பாக வைத்து அதன் சுவை எப்படியிருக்கும் என்றறியாத பக்ஷணவகையின் சுவையெல்லாம் அறிய முடிந்த கல்யாணம். அதிலும் கொஞ்சம் டென்ஷன் இருந்தது. லஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு யாரோ வேண்டாத தகவல்கள் தந்துவிட கல்யாணச் செலவுகள் பற்றிய தகவல்களை தந்தையார் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம். அக்காலத்தில் நேர்மை இன்னும் கொஞ்சம் இருந்தது. அரசு லஞ்ச ஊழல் பற்றி கவலைப்பட்டது. ஆயினும் அவையெல்லாம் பெரியோர் விஷயங்கள். அவை நந்துவை பாதிக்கவில்லை. நந்து முதன் முறையாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் வேடிக்கை பார்த்து, மாப்பிள்ளை ஊர்வலக் காரின் பின்னால் ஓடும் சிறுவனாக இல்லாமல், அந்தக் காரில் மாப்பிள்ளைக்கு அருகில் பயணிக்கும் ஒருவனாக அமர்ந்திருந்து அனுபவித்த காலம்.
அவையெல்லாம் வெறும் கனவாய் பழம் கதையாய் போனது இப்போது! யார் கண்கள் பட்டதோ! சீரும், சிறப்புமாக இருந்த குடும்பம் குலைந்து போனது! மகளைக்கண்டுவரச் சென்ற தந்தை மீண்டும் உயிருடன் திரும்பவில்லை! ஆஸ்பத்திரியிலிருந்து அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து சேர்ந்த இரவை நந்துவால் எப்படி மறக்க முடியும்? இரவெல்லாம் தூங்காமல், அண்ணா முழித்துவிடுவார் என்று அவர் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த மணித்துளிகள் மறக்குமா? அடிக்கொருதரம் கக்கத்துள் கை வைத்து ‘இன்னும் சூடு இருக்கு! தூங்கறது போலத்தானே இருக்கார், முழித்துவிடுவார்!’ என்று சகோதரிகள் சொல்லச் சொல்லச் குடும்பமே காத்திருந்தது, அண்ணா முழித்துக் கொள்வார் என்று. அவரது பயணம் மீண்டும் விழித்துக் கொள்ளாத பயணமென்று அவர்கள் அறியவில்லை. அந்த வீட்டில் விழுந்த முதல் சாவு அது. யாருக்கும் அனுபவமே இல்லை. இதை எப்படி எதிர் கொள்வது என்று! வனவிலங்குகளிலிருந்து மனிதன் வரை, சாவு என்பதை எப்படி எதிர்கொள்வது என்று எவையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இறந்து போன குரங்குக்குட்டி தோல் அழிந்து எலும்பாகிப் போகும்வரை தூக்கி அலைந்த குரங்கின் கதையை பின்னால் நந்து அறியப்போகிறான். ஆனால் அன்று அறியவில்லை. அன்று இரவுதான் அழுதான் என்றில்லை. நாட்கணக்காக அழுதான். வருடக்கணக்காக அழுதான். கண்ணீர் வற்றும்வரை அழுதான். ஒரே ஆறுதல் இவன் மட்டும் அழவில்லை. இவன் குடும்பமே கூட அழுதது. ஒரு சில நாட்கள் ஊர் கூட அழுதது! அவ்வளவு நல்ல மனிதர். இப்படி திடீரென்று போய்விட்டாரே! என்று. ‘இன்னும் நிலைத்து மூன்று இலை விடவில்லை. அதற்குள் இந்தக் குடும்பத்திற்கு இப்படி ஆகிவிட்டதே!’ என்று.
அதன் பின் மரணம் என்பது நந்துவிற்குப் பழகிப்போனது. இவனது தாத்தாவை எல்லோரும் கரிச்சுக்கொட்டியே அனுப்பி வைத்தனர். பின் சகோர பக்ஷி போல், சகாவின் பிரிவு தாங்காமல் தாய், பின் சிறிய தந்தை என்று ஒவ்வொருவராக போய்ச்சேர, மங்களம் நிரம்பி வழிந்த வீடு, அமங்கலமாகிப்போனது! அந்த வீட்டில் வாழ யாருக்கும் பிடிக்கவில்லை. மெல்ல, மெல்ல பெரிய அக்காவுடன் மதுரைக்கு குடி பெயர்ந்தனர். கிராமத்து நந்துவின் நகர நந்துவாக மாறிய காலக்கட்டம். அதுவரை ஆங்கிலம் பேசாத நந்து, முதன்முறை ஆங்கிலம் பேசப்பழகிய காலம். நான்கு தெருவிற்கு மேல் அறிந்திராத நந்து பெரிய நகரத்திற்குள் உலா வந்து, பெரிய கனவுகள் காணத் தொடங்கினான். ஒரு தந்தையின் பொறுப்பில் இரு சகோதரிகளுக்கு திருமணம் செய்வித்தான். அப்போதுதான் தெரிந்தது, ‘வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் நடத்திப்பார்!’ எனும் பழமொழியின் பொருள். கல்யாணம் என்பது எளிதான செயல் அல்ல. அது மனித ஊடகத்தின் புரியாத பல பரிமாணங்களுள் புகுந்து புறப்படும் சிக்கலான பயணம். நந்து முதன் முறையாக ஊர், ஊராக அலைந்தான். விசித்திர மனிதர்களைக் கண்டான். விசித்திரமான பேரங்களைப் பேசினான். கல்யாணம் என்பது சற்றேறக்குறைய ஒரு வியாபாரம் போல் நடைபெறும் தமிழக முறைமை கண்டு விசித்து நின்றான். இப்படிக் கூட மனிதர்கள் இருப்பார்களா? என்று முதன்முறையாக அறிந்து கொண்ட அனுபவங்கள். இரண்டு கல்யாணமும் முடிந்த போது நந்துவுள் வாழ்ந்து வந்த சிறுவன் காணாமல் போயிருந்தான். கண்ணாடி முன் பார்த்த போது தலையெல்லாம் நரைத்து அறுபது வயது கிழவன் போல் தோன்றினான்.
அவையெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அவனுடன் இல்லாத காலங்கள்.
<
embed id=VideoPlayback src=http://video.google.com/googleplayer.swf?docid=6765607872406834873&hl=en&fs=true style=width:400px;height:326px allowFullScreen=true allowScriptAccess=always type=application/x-shockwave-flash> </embed>நந்துவுள் வாழ்ந்து வந்த சிறுவன் காணாமல் போயிருந்தான். கண்ணாடி முன் பார்த்த போது தலையெல்லாம் நரைத்து அறுபது வயது கிழவன் போல் தோன்றினான்.
அவையெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அவனுடன் இல்லாத காலங்கள்.
completely insecure for he understands that inwardly, psychologically, there is no security. When there is no security there is an endless movement and then life and death are the same. The man who lives without conflict, who lives with beauty and love, is not frightened of death because to love is to die.
From: p. 75-77, Jiddu Krishnamurti, Freedom from the known, 1969
நாட்சி வதை முகாமில் கஷ்டங்களுடன் வாழ்ந்த எல்லோருக்குள்ளும் ஒரு பரஸ்பர நட்புறவு இருந்தது. அது எல்லோரும் சாகப்போகிறோம் எனும் உணர்வால் வந்ததல்ல. விடிவு நிச்சயம் ஒரு நாள் வரும் எனும் நம்பிக்கையால் வந்தது. வதை முகாம்களில் திருமணங்கள் கூட நடந்து முடிந்தன. நந்துவின் சகாக்களுக்குள் இப்படியான ஒரு பரஸ்பர நட்பு இருந்ததற்கு அடிப்படைக் காரணம், இத்தனை கஷ்டங்களுக்கும் விடிவாக அமெரிக்க விசா ஒரு நாள் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கைதான்.
முழித்துவிடுவார்!’ என்று சகோதரிகள் சொல்லச் சொல்லச் குடும்பமே காத்திருந்தது, அண்ணா முழித்துக் கொள்வார் என்று. அவரது பயணம் மீண்டும் விழித்துக் கொள்ளாத பயணமென்று அவர்கள் அறியவில்லை. அந்த வீட்டில் விழுந்த முதல் சாவு அது. யாருக்கும் அனுபவமே இல்லை. இதை எப்படி எதிர் கொள்வது என்று! வனவிலங்குகளிலிருந்து மனிதன் வரை, சாவு என்பதை எப்படி எதிர்கொள்வது என்று எவையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இறந்து போன குரங்குக்குட்டி தோல் அழிந்து எலும்பாகிப் போகும்வரை தூக்கி அலைந்த குரங்கின் கதையை பின்னால் நந்து அறியப்போகிறான். ஆனால் அன்று அறியவில்லை. அன்று இரவுதான் அழுதான் என்றில்லை. நாட்கணக்காக அழுதான். வருடக்கணக்காக அழுதான். கண்ணீர் வற்றும்வரை அழுதான். ஒரே ஆறுதல் இவன் மட்டும் அழவில்லை. இவன் குடும்பமே கூட அழுதது. ஒரு சில நாட்கள் ஊர் கூட அழுதது! அவ்வளவு நல்ல மனிதர். இப்படி திடீரென்று போய்விட்டாரே! என்று. ‘இன்னும் நிலைத்து மூன்று இலை விடவில்லை. அதற்குள் இந்தக் குடும்பத்திற்கு இப்படி ஆகிவிட்டதே!’ என்று.
...
முதன்முறையாக அறிந்து கொண்ட அனுபவங்கள். இரண்டு கல்யாணமும் முடிந்த போது நந்துவுள் வாழ்ந்து வந்த சிறுவன் காணாமல் போயிருந்தான். கண்ணாடி முன் பார்த்த போது தலையெல்லாம் நரைத்து அறுபது வயது கிழவன் போல் தோன்றினான்.
அவையெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அவனுடன் இல்லாத காலங்கள்.
<
embed id=VideoPlayback src=http://video.google.com/googleplayer.swf?docid=6765607872406834873&hl=en&fs=true style=width:400px;height:326px allowFullScreen=true allowScriptAccess=always type=application/x-shockwave-flash> </embed>
--
நன்றி சுபா. அது இன்னும் விரிவாக எழுத வேண்டிய பகுதி. ஆயின் இக்கதையின்
கருவிற்கு இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். மரணத்தைப் புரிந்து
கொள்பவன் வாழ்கிறான்.
க.>
தேவ்
On Oct 2, 11:01 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> *முன்கதைச் சுருக்கம்*:
>
> நந்து ஒரு கிராமத்துச் சிறுவன். அவனது வாழ்வு மெல்ல, மெல்ல, கிராமம் தாண்டி
> நகரம் வந்து, பின் நாடு தாண்டி, கண்டங்கள் தாண்டி பயணப்பட்டபோது ஜிட்டு
> கிருஷ்ணமூர்த்தி எனும் சிந்தனையாளரை அறிந்து கொள்கிறான். அந்த அறிதல் அவன்
> வாழ்விற்கு பொருள் சொல்லியது. அவனது தேடலை உச்சப்படுத்தியது. இத்தொடர்பு
> தற்செயலாக நடந்ததா? இல்லை பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின் ஒரு மறை தொடர்பு
> உள்ளதா? எனக்காண விழையும் தொடர் இது. 60 களில் ஆரம்பித்து 2010 வரை நீளும் கதை.
> அக்காலக்கட்டத்தின் பதிவாக மலர்கிறது. அக, புறப் போராட்டங்கள் பதிவாகின்றன.
> துணை போகும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விழியங்கள், நேர்காணல்கள், புத்தக
> மேற்கோள்கள் இம்முயற்சியில், இத்தேடுதலில் ஈடுபடும் வாசகனை நந்து அடைந்த
> புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. நமக்குத்துணை நாமே. ஏனெனில் இங்கு ஆராயப்படும்
> பொருளும், ஆராய்பவனும் ஒன்றே. இத்தொகுப்பு
> ‘கவினுலகம்<http://emadal.blogspot.com/>’
> வைத்து அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடிதங்கள் பேராசிரியர்கள் ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அரிய தகவல் என்று யார் மனத்தில் பட்டாலும் அதைப்பதிவிட வேண்டும் தனி நபர்
சார்ந்ததாயினும், பொதுத் தகவல் ஆயினும். நாம் எழுதுவது எல்லாமே
ஜனரஞ்ஜகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மின்னரங்கை ஒரு
பொழுதுபோக்குக் களமாக என்னால் பார்க்க இயலவில்லை; இதை ஆவணங்களின்
தொகுப்பாகவே காண்கிறேன். சீதாலட்சுமி அம்மா அவர்களின் அனுபவங்கள்,
இன்னம்பூர் ஐயாவின் குறிப்புகள், சுபா அவர்களின் எட்டயபுரப் பயணம்,
திரு.செல்வன் வெளியிட்டுவரும் பொருளாதாரம் சார்ந்த கருத்துகள்,
அரங்கனாரின் பதிவுகள், பானு குமார் அவர்களின் சமண சமயக் குறிப்புகள்
எல்லாமே பொருள் பொதிந்தவை.
‘எது பக்தி?’ இழையில் பிள்ளை திருநரையூர் நம்பியின் வைபவம்
கூறப்பட்டது; உடல் நெருப்பில் வேகும்போது அவர்தம் உள்ளம் விரஜையில்
மூழ்கித் தண்மை பெறுகிறது. கண்ணெதிரில் அருமை மகனும் தீயில் கருகுகிறான்;
‘பொறுத்துக்கொள் , குழந்தே ! அணித்தே தெரிகிறது கலங்காப் பெருநகர்;
கொஞ்ச நேரம்தான், இதோ நெருங்கி விட்டோம்’ தந்தையார் ஆறுதல் கூறுகிறார்.
மூவேடணைகளையும் அர்ச்சா பக்தி முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதே ! ஒரு
ஜீவந்முக்தனைப் போல உடல் சார்ந்த உணர்ச்சிகளை அவர் வெகு எளிதாக வென்று
விட்டாரே ! அரங்கனாரால் ஒரு சில வரிகளில் பக்தியை இத்தனை
விளக்கமாக எப்படிக் கூற முடிகிறது ?
இப்படி ஒரு பரிபக்வத்தை ஏற்படுத்துவதற்காகவே விக்ரஹ ஆராதனை
விதிக்கப்பட்டதோ ?
‘தஸ்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய .....’ ம்ம்ம்
கண்ணன் சார், உங்கள் அனுபவப் பகிர்வில் தொய்வு வேண்டாம் என்று
கோருவதற்கே இத்தனையும் சொன்னேன். பகுதி பகுதியாக வெளியிடுங்கள்.
அப்பதிவுகள் உங்களைப் பின்பற்றி மற்ற நண்பர்களும் எழுதுவதற்குத்
தூண்டுகோலாக அமையட்டும்
தேவ்
> ...
>
> read more »
என் சம்பந்தப்பட்ட வரையில், இரண்டாவதாக என்னை பாதித்த தத்துவபோதகர்,
ஜே.கே. 'போதகர்' என்ற சொல் அவருக்கு சம்மதமில்லை தான். மற்றவர் சொல்வதை,
பொறுமையுடன் கேட்டு, சிறியவர்களையும் அதீத மரியாதையுடன் விளிக்கும்
அவரிடம் ஒரு நாள், என் முதல் போதகரை பற்றி சொன்னேன்.
அந்த முதல் போதகர், ஒரு ரோமன் கத்தோலிக்கர். ஸுப்ரீம் கோர்ட்டு
வழக்கறிஞர். அறிமுகம் ஆன கட்டம், துயரத்தின் உச்சகட்டம். ஆஸ்பத்திரியில்,
ஒரு மகனை இழந்து, இருவரின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்க, செயலிழந்த என்
தந்தைக்கு ஆறுதல் கூறி வந்த அவரின் மகனை, மருத்துவர்கள் கை விட, அவரே
ஹோமியோபதி வைத்தியம் செய்தார். நம்பிக்கை லவலேசமும் இல்லை. இந்த
சூழ்நிலையில் எனக்கு போதனை, சீரிய முறையில், வாழும் நெறிகளை பற்றி. அந்த
பையனும் மறைந்து விட்டான். (பிற்காலம் ஒன்று நிகழ்ந்தது; அதற்கு இது
இடமில்லை.) 'என் தோட்டத்தின் மலர் மீது அவனுக்கு விருப்பம்.' என்று
மட்டுமே சொன்னார். அவரை அணுகி ஆறுதல் கூற யாருக்கும் துணிவு வரவில்லை.
அந்த அளவுக்கு ஸ்திதப்பிரதஞ்ஞன் - அசையா நிலை.
வஸந்த விஹாரில் ஒரு நாள், மனபக்குவம் கிஞ்சித்தும் அடையாத சிறுவனான நான்,
இதை பிரஸ்தாபித்த போது, சற்று மெளனம் காத்த ஜே.கே. சொன்னார், 'I
understand your predicament, Sir. You shall get over it'. தொடரும்
துணிவு எனக்கு இல்லை. பிற்காலம், திருமதி நந்திதா மேத்தாவுக்கு அவர்
அளித்த ஆறுதலை பற்றி திருமதி. புபுல் ஜயகர் சொல்ல கேட்டேன். பொருத்தமோ,
இல்லையோ, '...அவரது சகோதரர் நித்யாவின் மரணம் அவரை முற்றும் முழுவதும்
மாற்றிவிடுகிறது. அதன் பின் தான் அவரது தேடுதல் தீவிரமடைகிறது...'என்று
கண்ணன் எழுதியது, இந்த நிகழ்வை மறுபடியும் நினைவூட்டியது. பிறிது
கூறவேண்டியதை, உரிய தருணத்தில் நான் சொல்லக்கூடும்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
2010/10/3 devoo <rde...@gmail.com>
உங்கள் மடல் கொஞ்சம் புரியவில்லை.
யாருடைய சோகத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? மதபோதகரின் சோகம் பற்றியா?
இல்லை உங்கள் வாழ்வில் நிகழ்ந்த சோகம் பற்றியா? ஜே.கே ஏன் உங்களிடம்” 'I
understand your predicament, Sir. You shall get over it'. என்று சொல்ல
வேண்டும்?
மற்றபடி புபுல் ஜெகரின் அறிமுகமே அவரது கணவரின் இழப்பிற்கு ஆறுதல் தேடும்
முகமாக அமைகிறது. அவர் எழுதியிருக்கும் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை
சரிதமே என் உணர்விற்கு அருகில் வந்து நிற்கிறது.
க.>
2010/10/4 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,