நவராத்திரி சிந்தனைகள்

319 views
Skip to first unread message

N. Kannan

unread,
Oct 10, 2012, 8:19:14 AM10/10/12
to மின்தமிழ்
கொலு பொம்மைகள் வாங்கவொரு வலைப்பதிவு இருப்பது பற்றி ஒரு மின்தமிழ் இடுகை கண்டேன்!

கொலு பொம்மை என்றவுடன் அலை, அலையாக நவராத்திரி நினைவுகள். இந்த இழையில்
நாம் எல்லோரும் நம் நவராத்திரி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டால் என்ன?

திருப்பூவணம் ‘பத்ம நிலையம்’ இல்லத்தில் கொலு விமர்சையாக இருக்கும். என்
அன்னைக்கு கொலு என்றால் ரொம்பப்பிடிக்கும். வித, விதமான பொம்மைகளை வருடா
வருடம் வாங்குவாள். அவள் கடைக்குப் போகிற ஆள் இல்லை. எல்லாம் அந்த பத்ம
நிலையம் வீட்டு எல்லைக்குள்தான். இதனாலேயோ என்னவோ இவளுக்கு வீட்டில்
வழங்கும் பெயர் ‘ஆத்தம்மாள்’ (அகம் + அம்மாள்).

இவளது ஆசையறிந்து பொம்மைகள் செய்து கொண்டு ஒர் பெண் மணி வருவாள். எந்தக்
கலைஞன் அதைச் செய்வானோ? அவ்வளவு தெய்வீகக் களை சொட்டும் பொம்மைகள். நல்ல
களிமண் கொண்டு செய்த வலுவான பொம்மைகள். நவராத்திரி ஆரம்பிக்கும் முன்னமே
சேந்தியிலிருந்து அம்மா பொம்மைகளை மெதுவாக கீழே இருக்குவாள். அதுவரை
அவையெல்லாம் பழைய புடவைகளைச் சுற்றிக்கொண்டு அடக்கமாகத் தூங்கும். அவைகளை
மெல்ல எழுப்பும் விதமாக கீழே இறக்கி தூசு தட்டி. கொஞ்சம் வார்னிஷ் இல்லை
ஒரு பெயிண்ட் டச் அப் கொடுத்து புதிய கொலுவிற்கு தயார் படுத்துவாள்
கோகிலம்.

இது எவ்வளவு தூரம் சிறுவர்களான எங்கள் உள்ளத்தில் பதிந்து இருக்கிறது
என்றால் ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்குப் பிறகு எனது மருமான்
அமெரிக்காவில் கொலு வைத்து திருப்பூவணம் நினைவுகளைப் பகிர்ந்து
கொள்கிறான் எனும் அளவிற்கு.

உங்களோடு சேர்ந்து இன்னும் வரும்.....

போனஸ்:

நடிகையர் திலகம் சாவித்திரியின் கொலுப்பாட்டு
http://youtu.be/hFozV-8o0Fo

நா.கண்ணன்

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Tthamizth Tthenee

unread,
Oct 10, 2012, 10:28:36 AM10/10/12
to mint...@googlegroups.com
நவராத்திரி: 
 
என் இல்லத்தரசியின் வேண்டுகோளுக்கு இணங்கி திருவல்லிகேணியில் பார்த்தசாரதி பெருமான் ஆலயத்தின் அருகே உள்ள பொம்மைச் சத்திரம் என்று சொல்லப்படும்  கடைக்குச் சென்று  கண்ணைக் கவருகின்ற வண்ணங்களில்  நவீன பேப்பர்மெஷ் என்னும் நவீன உத்தியால் செய்யப்பட்ட பல  பொம்மைகளைப்  பார்வையிட்டேன். அங்கே  விதம் விதமான பொம்மைகளைக் கண்டு மகிழ்ந்தேன். 12 ஆழ்வார்களின் பொம்மைகள்,  தசாவதாரம் , கிருஷ்ணன் கோபியருடன் நடனமாடும் காட்சி,  அரங்கநாதன் ஆண்டாளின் மடியிலே ஒய்யாரமாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பொம்மை எல்லாவற்றையும் கண்டேன்
 
 
நான் பொம்மைச் சத்திரத்தில்  அரங்கநாதர் ஆண்டாளின் மடியிலே தலைவைத்துக் கொண்டு ஒய்யாரமாய் படுத்துக் கொண்டிருக்கும் பொம்மையைப் பார்த்து மனதைப்  பறிகொடுத்தேன். மகிழ்ந்தேன்,  அந்தப் பொம்மையை விலை கேட்டேன், 3000 ரூபாய்கள் என்று அவர்கள் விலை கூறியதும்  திடுக்கிட்டேன்.
 
நானும் அந்த கொலு பொம்மைகள் வாங்க ஒரு வலைப்பதிவு கண்டேன்.அந்த வலைப்பதிவில் அதே பொம்மையின் படத்தை போட்டிருந்தார்கள் ,உடனே  அந்தப் படத்தை சேமித்து வைத்தேன் என்னுடைய கணிணியில்.
 
 
 
அப்படியே வள்ளுவர் கோட்டம் சென்று அங்கும் சில பொம்மைகளை வாங்கிக் கொண்டு வந்து அட்டைப் பெட்டியில் வைத்திருக்கும் பொம்மைகளையும் பிரித்து வைத்துக் கொண்டு ,  
பழைய பரணை இப்போது லாப்ட் என்று புது வடிவம் கொண்டுள்ளது
பழைய மண் பொம்மைகள் பேபர்மெஷ் என்னும் நவீன வடிவம் கொண்டுள்ளது
 
ஸ்டூல் எனப்படும் பழைய நாற்காலியில் ஏறி பரணை மேலிருந்து பொம்மைகள் வைத்திருக்கும் பொட்டியைக் கீழே இறக்கி தினசரிக் காகிதத்தால் பத்திரமாகச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் மண் பொம்மைகளை கவனமாகப் பிரித்து அவைகளை மீண்டும் நல்ல துணியால் துடைத்து மெருகேற்றி, வைத்துக்கொண்டு.    எப்படி கொலு வைக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் .
 
திரு கண்ணன் அவர்களின் நவராத்திரி சிந்தனைகள் இழையைக் கண்டு மகிழ்ந்தேன். இழையைத் தொடருவோம்
 
சிறு வயது முதல் இது வரை குறைந்தது 60 நவராத்திரி  கொண்டாடியிருக்கிறேன், 60 வருட நவராத்திரி நினைவுகள் சேமித்து வைக்கப் பட்ட பெட்டகம் என்னுள் இருக்கிறது.  பகிர்ந்து கொள்ள  நிறைய நினைவுகள் இருக்கின்றன
 
,
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/10/10 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

330.gif
DSC07499.jpg

Swarna Lakshmi

unread,
Oct 10, 2012, 11:49:36 PM10/10/12
to mint...@googlegroups.com
இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நான் கரெக்டாக ஆஜர்!! :))

என் சிறுவயதில் எங்கள் வீட்டில் ஏழெட்டு ட்ரெங்க் பெட்டிகள் இருந்தன. தூக்கவே முடியாத அவைகளில் தான் பொம்மைகள் சேமிக்கப்படும். வைக்கோல் (சில கீற்றுகள் நூற்றாண்டு கண்டவை), பழைய புடவைகளுக்கு (சில புடவைகள் மூன்று ஜெனரேஷனாக பொம்மைகளோடு வந்திருக்கும்) மத்தியில் பத்திரமாக பலவகை பொம்மைகள் எனக்கு அறிமுகமாயின. பொம்மைகள் பல காலங்களை சேர்ந்தவை - எப்படிதான் அவ்வளவு பத்திரமாக அவை வந்தனவோ!! மனிதர்களைவிட இந்த பொம்மைகளின் வாழ் நாள் நீளமானவை.கண்ணன் சொன்னது போல் அத்தனை அழகான பொம்மைகளை இப்போது பார்க்க முடிவதில்லை.

அந்த ட்ரெங்க் பெட்டிகள் தான் படிகளாக மாறும், வீட்டில் இருக்கும் புத்தகங்கள், ஸ்டூல்கள், இதற்காகவே சேமிக்கப்படும் டால்டா டின்கள் இன்னும் என்னவெல்லாம் முடியுமோ அவையெல்லாம் கொலுப்படிகளாக மாறும் - ஏழெட்டு வயதுக்குள் கொலுப்படிகள் அமைப்பதிலும் குறைகள் தெரியாமல் மேலே வெள்ளை வேஷ்டி போட்டு அலங்கரிப்பதிலும் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டேன். என் வீட்டில் மட்டுமில்லாது அருகில் இருந்த என் மாமா வீட்டிலும் என் கஸின்களோடு சேர்ந்து கொலுவைக்க்க ஓடிவிடுவேன். பொம்மை வைப்பதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கடவுள் உருவங்களோடு விளையாட்டு உருவங்கள் வைப்பது போன்றவை எல்லாம் கூடாது - இறை உருவங்களையும் ஒரு கான்செப்டோடு வைக்க வேண்டும் என்றெல்லாம் மல்லுக்கட்டுவேன். என் அம்மாவும் அத்தையும் மிக அழகாக கொலு வைத்து பூஜை செய்வார்கள். அம்மா அலுவலுக்காக பள்ளி சென்று விட்டாலும், என் அத்தை அழகாக பண்டிகையை செய்வார்.

இருபதுகளை தொடும் போது, மற்ற நாட்களில் tom boy யாக சுற்றிக்கொண்டிருந்தாலும், நவராத்திரி நாட்கள் ரொம்ப சமர்த்தாகி விடுவேன் - பத்து நாட்களும் விரதங்கள், தினசரி பூஜைகள், சஹஸ்ர நாம பாராயணங்கள், மாலை நேரங்களில் புடவை எல்லாம் கட்டிக்கொண்டு  (கோவை) ஆர் எஸ் புரத்தில் இருக்கும் காமாக்ஷி கோவிலில் பூஜை மற்றும் சங்கீதக் கச்சேரிகள், ஒரு நாள் ஒன்பது சுமங்கலிகளை கன்யா பெண்களையும் அழைத்து பூஜை என்று மடிசார் மாமியாகி இருப்பேன். என் அம்மா - நான் அடிக்கும் கூத்துக்களையெல்லாம் சிரித்துக்கொண்டே சகித்துக் கொள்வார். நான் டிமேண்ட் செய்யும் பிரசாதங்களை எல்லாம் செய்து தருவார் - அவருக்கும் ஆர்வம் கூடிவிடும் பாவம். தசமியன்று இருக்கும் கலைகளையெல்லாம் கற்றுக்கொள்வதைப்போல் ஆரம்பிப்பேன் - எத்தனை கற்றுக்கொண்டேன் என்று கேட்காதீர்கள். 

பைத்தியம் முற்றும் போது, திருமணமாகி விட்டது. அவ்வளவுதான் - அதற்க்குப் பிறகு இறங்கு முகம். அலுவல்களுக்கிடையில் அதிகம் செய்ய முடிவதில்லையென்றாலும், இப்போதும் பைத்தியம் தொடர்கிறது - இங்கே பெங்களூரில் நவராத்திரி நன்றாகத்தான் இருக்கிறது - அருகில் இருக்கும் பெண்களை அழைத்து வெற்றிலை பாக்கு கொடுப்பது, மற்றவர் இல்லங்களுக்கு செல்வது, தினமும் எளிமையான பூஜை, நைவேத்யங்கள், துர்கா பூஜாவின் போது பெங்காலிகள் அமைக்கும் மண்டபங்களுக்கு செல்வது என்று நன்றாத்தான் இருக்கிறது. முடிந்தவரை நான் சந்திக்கும் அத்தனை பெண்களையும் இந்தப் பத்து நாட்களும் சுடுசொல் சொல்லாமல், வருத்தப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று முயல்கிறேன் (முக்கியமாக என்னிடம் வேலை செய்பவர்களை). 

என் பெண்ணுக்கும் அழகான நவராத்திரி நினைவுகளைத் தர ஆசை. ஆனாலும்  நம் சிறு வயது நினைவு போல் வருமா.. 

ஸ்வர்ணா


From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, 10 October 2012 7:58 PM
Subject: Re: [MinTamil] நவராத்திரி சிந்தனைகள்

Subashini Tremmel

unread,
Oct 11, 2012, 5:10:23 AM10/11/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/10/11 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நான் கரெக்டாக ஆஜர்!! :))

மின் தமிழில் உங்களைப் பார்த்து சில வாரங்கள் ஆகிவிட்டதே என நினைத்துக் கொண்டிருந்தேன். நவராத்திரி கொண்டாட வந்து விட்டீர்கள். மீண்டும் உங்கள் மடல்களைக் காண்பதில்  மகிழ்ச்சி ஸ்வர்ணா. நலமாக இருக்கின்றீர்களா?

சுபா



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Oct 11, 2012, 5:13:55 AM10/11/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நவராத்திரி பண்டிகை இந்தியாவில் நீங்களெல்லாம் கொண்டாடுவது போன்றதொரு அனுபவத்தை எனக்குத் தந்ததில்லையென்றாலும் மலேசியாவில் இருந்த காலங்களிலும் பின்னர் ஜெர்மனிக்கு வந்து விட்ட காலங்களிலும் எனக்கு ஒரு மனதில் நிற்கும் நினைவுகளைத் தந்திருக்கின்றது. 

மலேசியாவில் ஹிந்துக்கள் கொண்டாடும் நவராத்திரி வைபவம் போல சீனர்களும் 9 நாள் பண்டிகைகை ஏறக்குறையே இதே நாட்களில் கொண்டாடுவர். எனது மலேசியப் பதிவு ஒன்றில் இதனைக் குறிப்பிட்டிருந்தேன். நேரம் கிடைக்கும் போது அதனைப்  பற்றிய தகவல்களையும் எழுதுகின்றேன்.

சுபா
2012/10/10 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

sharadha subramanian

unread,
Oct 11, 2012, 6:21:31 AM10/11/12
to mint...@googlegroups.com
நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடுவது எல்லாம் போய் இபோதுஆய்தபூஜை
அன்று மட்டும் போனால் போகிற்து என்றூ வெற்றிலைபாக்குக்கு அழைக்கிறார்கள்
ந்டுவாந்திரத்தில்  (20வது வருஷங்களுக்குமுன்)பத்திரிகை அடித்து மூன்றுநாட்கள்
தேதிக்குறித்து அழைத்துக்கொண்டு இருந்தார்கள்,இப்போதோகேட்கவே வேண்டாம்
அப்படி  கொலுவைத்தீர்களா என்று கேட்டால் யாருக்கு எங்கேர்ந்து எங்க்கேபோக
நேரம்என்று டக்கேன்று பதில் வரும்,இதற்கு மாடு அசைபோடுவதுபோல் பழயநினைவுகளை நினைது மகிழ்ந்திரு மனமே என்று தேமேனு இருக்கவேண்டியதுதான்,அந்தக்காலத்தில் SLOTTEDANGLESபடிகள் கிடையாது மரப்படிகள் அழ்காக அமைமத்து வண்ணான் வெளுத்தவேஷ்டியினால் அதனைCOVERபண்ணி பிள்ளையார் பொம்மையினை முதலில் வைத்து அழகாக் அடுக்குவார்கள்,சில் வீடுகளில் கலசம் உண்டு நல்லவேளையில் அதணை
வைப்பார்கள்,தோரண்ங்களுக்கு இப்போது போல் பிளாஸ்டிக் பேப்பர் கிடையாது
PARRYS,NUTINEசாக்லேட்சுற்றிய சின்ன்பேப்பர்களை 3மாதம் முன்னரேசேர்க்கத்தொடங்க்கி  அதனை அழ்காக் விசிறிபோல் இரண்டுநினியையும்
விரித்து ந்டுவில் திரித்துபூப்போல் தொடுத்து தோரணமாகக்ட்டி அழ்குபார்போம் க்ம்பு,கேழ்வரகு.பயறு முளைக்கட்டி பார்க்கில் செடிவைப்பது ஒரழ்குஅரிசிமாவில் வண்ணப்பொடி தூவிஜவ்வரிசி அளவில் உருட்டி சிறிய். தட்டில் பூப்போல் வடிவமைத்து கோலம் பேடுவாள் என் தாயார்
இது தவிர ஒவ்வொரு நாளும் ஒர் வேஷம் ராதை கிருஷ்ணர்குற்த்திமடிசார்மாமி. பட்டாணி,மொச்சை கொண்டக்கடலை,எனசுணட்ல்கள்வேறு,ஆஹா அந்த் நாளும்வந்திடாதோ,


Tthamizth Tthenee

unread,
Oct 11, 2012, 6:30:08 AM10/11/12
to mint...@googlegroups.com

 

                                       "  நவராத்திரி மகிமை  "


மகாராஜா சுரதா,  ராஜ குரு சுமதாஅவர்கள் கூறிய  ஆலோசனையின்படி  “பஞ்சபூதங்களில்  ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை  பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்…’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி,  மகாராஜா சுரதா தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினார். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து,  அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றார். எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பதுபொதுவான  மரபு.

புரட்டாசி மாதம் 29ம் தேதி, அக்டோபர் 15ம் தேதி திங்கட்கிழமை சித்தயோகம், அமாவாசை அன்று நவராத்திரி விழா தொடங்குகிறது .இந்த நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாட அவரவர்கள் சக்திக்கும், இருக்கும் இடத்துக்கும் ஏற்ப  மூன்று படிகள். ஐந்து படிகள், ஏழு படிகள், ,ஒன்பது படிகள் என்று அமைத்து அந்தப் படிகளில் பலவிதமான தெய்வங்களின் உருவ பொம்மைகளை, மற்றும் நமக்கு மனதுக்கு உகந்த நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் மக்களில் நம்மைக் கவர்ந்த 12 ஆழ்வார்களின் பொம்மைகள், 63 நாயன்மார்களின் பொம்மைகள். மஹாத்மாகாந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன், கப்பலோட்டிய தமிழன் வ.உ .சிதம்பரம்பிள்ளை, ஜவஹர்லால்நேரு, இந்திராகாந்தி, காமராசர், பாரதியார் ,பாரதிதாசன் ,வியாபாரச் செட்டியார் பொம்மை, குறவன் குறத்தி பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, போன்ற நம் தேசத்தில் நினைவு கூரவேண்டியவர்களின், தலைவர்களின் உருவ பொம்மைகள்  போன்றவற்றை வைக்கிறோம், அதையும் தவிர நாம் அன்றாடம் பார்க்கும் விலங்குகள் பசு ,ஏரில் பூட்டிய காளைகள், நிலத்தை உழும்  உழவன்,  போன்றவர்களின் பொம்மைகள் எல்லாவற்றையும் அவைகளை வைக்கவேண்டிய  தகுந்த இடங்களில் வைத்து மகிழ்வது நம் வழக்கம்.

அதே போல் பக்கத்திலே  மண் கொட்டி பூங்கா அமைத்து, அதன் பக்கத்திலே கோயில் அமைத்து, அந்தக் கோயிலுக்கு எதிரே நம் வீட்டில் உள்ள தாம்பாளத்தில் படிக்கட்டுகள் அமைத்து நடுவிலே நீர் ஊற்றி குளம்போல் தோற்றம் ஏற்படுத்தி அதில் நீர்வாழ் மீன்கள், தவளை கொக்கு போன்ற பொம்மைகளை  வைத்து, அலங்கார விளக்குகள் அமைத்து அழகுக்கு அழகு சேர்த்து கலைநயத்துடன் நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.

இப்படி எல்லாப் பொம்மைகளையும் வைத்துவிட்டு, நம் சுற்றத்தார், அண்டை அயலார் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் இந்த விழாவிலே கலந்துகொள்ள அவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு  தாம்பாளத்தில் வெற்றிலைபாக்கு,மஞ்சள், குங்குமம், பலவிதமான பழங்கள் போன்றவைகளை வைத்து அழைத்துவிட்டு, தினமும் அன்றிலிருந்து தொடங்கி விசேஷமான பூஜைகள் செய்து  பலவிதமான  உகந்த தின்பண்டங்களை , சமைத்து  நிவேதனம் செய்து   அவைகளை வீட்டிற்கு வரும் அனைவருக்கும் பகிர்ந்தளித்து  மகிழும் பண்டிகை நவராத்திரி ஆகும். இந்த ஒன்பது நாட்களிலும் வீட்டிற்கு வரும் குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் அனைவரும் மகிழும்படி வரவேற்று , நம் இதிகாச, புராணங்களில் இருந்து நம் மனதைக் கவர்ந்த  ஶ்ரீராமன், ஶ்ரீ கிருஷ்ணன், ராதை, பக்த மீரா போன்ற பலவேடங்களை குழந்தைகளுக்கு  அணிவித்து எல்லோரும் மகிழும்படியாக ஆடிப் பாடி மகிழ்ந்து  ஒன்பதாம் நாள் நவமி அன்று  சரஸ்வதிக்கு பூஜை செய்து பத்தாம்   நாளாகிய தசமிஅன்று ஆயுத பூஜை என்றும்  விஜய தசமி என்றும் கொண்டாடுகிறோம்.  அன்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் நம் வாகனங்கள், ஆயுதங்கள், எல்லாவற்றிர்க்கும் முறையே குங்குமம் இட்டு பூஜைகள் செய்து கொண்டாடி  நிறைவு செய்வோம் நவராத்திரி விழாவை.

ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அக்ஞாத வாசம் முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் .இந்த விஜயதசமி நன்நாளில்தான் துர்க்கா வெற்றி பெற்றாள் ,ஆகவே இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தால் சகலவிதமான வித்தைகளிலும் வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகம்.

 

வீரத்தின் தெய்வமான சிவப்பிரியையான, இச்சா சக்தியான  துர்க்கை  அல்லது காளி என்னும் சக்தியானவள் துர்க்கை. இந்த துர்க்காதேவி  மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டு  அவனை வதம் செய்தாள் அதாவது தீமை என்னும் அரக்கனை அழித்து  மக்களுக்கு  நன்மையாகிய வெற்றியை அருளினாள். அதனால் மகிஷசுரமர்த்தனி என்று பெயர்கொண்டாள்.    " விஜய " என்றால்   வெற்றி   . தசம் என்றால் பத்து வெற்றியை பெற்ற நாள்  பத்தாம் நாள். இப்படி மகிஷனை துர்க்கை வதம் செய்த பத்தாம் நாளே விஜயதசமி என்று அழைக்கப்பட்டது.

இந்த துர்க்கா தேவி மகி‌ஷனுடன் போர் புரியத் தொடங்கிய நாளே நவராத்திரி விழாவின்  தொடக்க நாள்.  நவராத்திரி விரதம் புரட்டாசி  மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை  குறித்து நோற்கப்படும்  நோன்பாகும். இது தக்ஷிணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்திராயண காலம் தேவர்களுக்கு பகல் காலம் ஆகும்.  

நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் நோன்பு  சாரதா நவராத்திரி நோன்பாகும்.

உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தக்ஷினாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும்  சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.


பிரளயம் என்னும் அழிவுக்  காலத்தின் முடிவில் இறைவன் மீண்டும் உலகத்தை உண்டாக்க விரும்புகின்றான் ஆகவே இறைவன் விரும்பத் தொடங்கும் அந்தக் கணமே   இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. அந்த இச்சை சக்தியினால்  எவ்வாறு உலகை உண்டாக்குவது என்று இறைவன் அறிகின்றான். எவ்வாறு என்று யோசிக்கும் போதே ஞான சக்தி தோன்றுகிறது . அதன்பின் தன்னுடைய கிரியை என்னும் சக்தியினால் கிரியா சக்தியைத் தோற்றுவித்து  உலகைப் படைக்கின்றான்.
 
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
 
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
 
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்
 
சாந்தி துர்க்கை ,சபரிதுர்க்கை, ஶ்ரீ ஜ்வாலாதுர்க்கை, ஶ்ரீ ஜெயதுர்க்கை,ஶ்ரீ ஆசூரி துர்க்கை, ஶ்ரீ மூலதுர்க்கை, ஶ்ரீ வன துர்க்கை, ஶ்ரீ சூலினி துர்க்கை, ஶ்ரீஜாதவேதா துர்க்கை. ஆகியோர் நவதுர்க்கைகள்.

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி அதாவது ஷைலபுத்ரி யாகவும்,
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி அதாவது பிரம்மசாரிணி யாகவும்,
மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி  அதாவது சந்தரகாந்தா ஆகவும்,
நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோகிணி  அதாவது  கூஷ்மாண்டா ஆகவும்,
ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா  அதாவது  ஸ்கந்த மாதா ஆகவும்,
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா  அதாவது காத்யாயனி  ஆகவும்,
ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி  அதாவது  காலராத்ரி ஆகவும்,
எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்க்கா   அதாவது மஹா கௌரி ஆகவும்,
ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - சுபத்ரா  அதாவது  சித்திதாத்ரி ஆகவும்
கொண்டாடுகிறோம்.
 
அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
 
துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மகாலக்ஷ்மி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. 7. சரஸ்வதி
8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
 
நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.

 
ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
 1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
 2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
 3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
 4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
 5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
 6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
 7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
 8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
 9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
 இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும். 


நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.  கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
 
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை 'தேவி பாகவதம்' விரிவாகப் பேசுகிறது.  நவம் என்றால் ஒன்பது என்று ஒரு பொருள் உண்டு. நவம் என்றால் புதிய, புதுமை, என்றொரு பொருளும் உண்டு! சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் 9 நாள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

இதில் முதல் 3 நாள் துர்க்கை அன்னையையும், அடுத்த மூன்று நாள் திருமகளையும், அதற்கு அடுத்த மூன்று நாள் கலைமகளையும் வழிபடுவார்கள்.  துர்க்கை என்ற பெயருக்கு கோட்டை என்ற பொருளும், துன்பத்தை அழிப்பவள் என்ற பொருளும் உண்டு. இந்தப் பெயரைச் சொன்னாலே மனிதன் தன்னைத் துன்பங்களை அணுக விடாமல் காத்துக்கொள்ள முடியும். அத்துடன் தீய சக்திகள் மற்றும் தீய எண்ணங்களையும் அழித்தால்தான் உலகில் நல்லவை நிலைபெறும். அதனால்தான் மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பல தீயவற்றை அழித்து நல்லவற்றை நிலை நிறுத்தி வெற்றி பெற உதவும் அன்னையை முதல் மூன்று நாள் வழிபடுகிறோம்.

அடுத்த மூன்று நாள் செல்வ வளத்தை அளிக்கும் திருமகளை வழிபடுகிறோம். மனிதன் வாழ்வில் சிறப்பான நிலையை அடைய உதவுவது செல்வம்.  அடுத்த மூன்று நாள் கல்விச் செல்வத்தை அளிக்கும் கலைமகளுக்கு உரியவை. காலத்தால் அழியாத செல்வம் கல்வி. இந்தச் செல்வம் வேண்டி கலைமகளைத் துதிக்கிறோம். நவம் என்றால் புதிய என்று பார்த்தோம். துன்பங்கள் தீர்ந்து, பொருள் வளம், கல்வி வளம் இரண்டும் பெற்றால் மனிதனுக்கு வாழ்க்கை தினம் புதியதுதான்!

அதுமட்டுமல்ல; இந்த மூன்றும் சேர்ந்தால் வெற்றிதான் என்பதைக் குறிக்கும் விதமாக பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. துன்பத்தை அழித்து நன்மையை நிலைநாட்டி, பொருள் செல்வம் மற்றும் அறிவுச் செல்வம் பெற உதவும் மூவரையும் நவராத்திரியில் முறைப்படி துதிப்போம். வளம் பெறுவோம்! வெற்றி பெறுவோம்!
 
ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் நமக்கு செல்வம் ,வீரம் ,ஞானம் மூன்றும் இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்.  இதற்காக மகாலட்சுமி தேவியை,  துர்க்கா தேவியை வழிபடுகிறோம்.   சரசுவதிதேவியை வணங்குகிறோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நவராத்திரி விழா காணும் ஆலயங்கள் :-

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஐம்புகேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,நாகை நீலாயதாட்சி கோயில், கன்யாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோயில்,
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில்,திருவண்ணாமலை ஸ்ரீ உண்ணாமுலை உடனாய அண்ணாமலையார் கோயில், நெல்லை ஸ்ரீ காந்திமதி அம்மன் கோயில், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில்,மாங்காடு அம்மன் ஆலயம்,சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் கோயில்,காளிகாம்பாள் கோயில்,திருவையாறு அறம் வளர்த்த நாயகி கோயில்,திருமெய்யம் ஸ்ரீ வேணுவனேஸ்வரி அம்பாள் கோயில்,சமயபுரம், பண்ணாரி,பொள்ளாச்சி,திண்டுக்கல்,
தஞ்சை,திருச்சி மாரியம்மன் கோயில்கள்,படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில்,மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்,
மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில்,காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் கோயில், திருக்கடையூர் அபிராமி கோயில்  ஆகிய  ஆலயங்களில் நவராத்திரி விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள்

அம்பத்தூரை அடுத்த வட திருமுல்லை வாயிலில் வைஷ்ணவி ஆலயத்தில் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து  வைஷ்ணவியை வழிபடுவார்கள். மிகவும் விசேஷமாக  இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படும்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/10/11 sharadha subramanian <shara...@yahoo.co.in>

shylaja

unread,
Oct 11, 2012, 7:46:23 AM10/11/12
to mint...@googlegroups.com
   அப்பாடி நிறைய  விஷயங்கள்  சொல்லிட்டீங்க தேனி சார் நன்றி
2012/10/11 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
shylaja

 

 
 //மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே.’//

N. Kannan

unread,
Oct 11, 2012, 8:56:21 AM10/11/12
to mint...@googlegroups.com
2012/10/11 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

>
> இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நான் கரெக்டாக ஆஜர்!! :))


வாங்க ஸ்வர்ணா...

ரொம்ப அழகான நினைவுகள்.

இழை எப்படியோ (யாரோலோ) மாறி இருக்கிறது. இதிலேயே தொடரவும். மற்ற
இடுகைகளும் இதில் சேர்த்து விடுகிறேன்.

இன்னும் சொல்லுங்கள். அந்தக் கொலுப்படி அமைப்பது கோயில் காட்டுவது
போல....:-) நல்ல வருணனை!

நா.கண்ணன்

N. Kannan

unread,
Oct 11, 2012, 9:00:10 AM10/11/12
to mint...@googlegroups.com
தேனீ சார்:

அடேங்கப்பா 60 வருட நவராத்திரி அனுபவமா? அப்ப சொல்ல நிறைய இருக்கும்!

இந்த இழையில் தொடருங்கள். வேறொரு இழையில் கிடக்கும் சேதியை இங்கு போடுங்கள்.

நா.கண்ணன்

2012/10/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
நவராத்திரி: 

Tthamizth Tthenee

unread,
Oct 11, 2012, 9:18:56 AM10/11/12
to mint...@googlegroups.com

அன்புடன்


தமிழ்த்தேனீ

2012/10/11 N. Kannan <navan...@gmail.com>
--

Subashini Tremmel

unread,
Oct 11, 2012, 2:18:16 PM10/11/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
சிறிய அன்பான விண்ணப்பம். இதே தலைப்பில் நேற்று ஒரு இழை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலேயே நவராத்திரி சிந்தனைகளைத் தொடரலாமே.  தொகுப்பாக இருக்க அது நிச்சயம் உதவும். நன்றி.

சுபா

2012/10/11 sharadha subramanian <shara...@yahoo.co.in>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Oct 11, 2012, 3:26:14 PM10/11/12
to mint...@googlegroups.com
2012/10/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> சிறிய அன்பான விண்ணப்பம். இதே தலைப்பில் நேற்று ஒரு இழை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
> அதிலேயே நவராத்திரி சிந்தனைகளைத் தொடரலாமே. தொகுப்பாக இருக்க அது நிச்சயம்
> உதவும். நன்றி.
>

ஜோக்...

ஆங்கிலேயரைவிடத் திறமையா பிரிக்கத் தெரிஞ்சவங்க இருக்காங்கப்பா!...:-))

முன்பு இப்படி அடிக்கடி இழை பிரியும். தலைப்பில் ஒரு சின்னப்புள்ளி
வச்சாலும் இழை பிரிந்துவிடும்! எனவே Subject இடத்தில் தொடாமல் அப்படியே
reply தட்டி பதில் போட்டால் இழை பிரியாது.

சரி எல்லோரும் சமத்தா பிரியாத “அந்த” இழைக்குப் போங்க..பாப்போம் ;-)

க.>

N. Kannan

unread,
Oct 11, 2012, 3:29:47 PM10/11/12
to mint...@googlegroups.com
2012/10/11 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:

முன்று வருடங்கள் முன்பு இல்லம் குழுமத்திற்காக நான் எழுதிய இந்த பதிவை
குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

அந்த மறக்கமுடியாத நவராத்திரி நாட்கள்

என்னுடைய இனிய நினைவுகள் 50 வருடம் பின்னோக்கி சென்றது. அந்த நவராத்திரி
9 நாட்கள். நவராத்திரி ஆரம்பிக்கும் ஒரு வாரம் முன்பிலிருந்தே
வீட்டிலுள்ள ஆண் பிள்ளைகளின் கற்பனைகள், அக்கா/தங்கை களினால்
தூண்டிவிடபட்டன. நாங்கள் வசிக்கும் அக்ரஹாரத்தில் யார் வீட்டு கொலு நல்ல
அலங்காரத்துடன் இருக்கிறது என்பதற்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம்
பரிசுகள் நவராத்திரியின் முதல் நாளே அறிவிக்கபடும். யார் யார்போட்டியில்
பங்குபெறப்போகிறார்கள் என்பதை, அதற்காகக் நீயமிக்கபட்ட கமிட்டி
அங்கத்திர்களிடம் பெயர் கொடுக்கவேண்டும். 100 வீடுகள் இருக்கும்
அக்ரஹாரத்தில் 20 முதல் 25 வீடுகளின் கொலு போட்டியில் பங்கு
கொள்ளுவார்கள். பொம்மைகள் தவிர, அலங்கார வளைவுகள், குளம், பூங்கா, பஸ்
ஸ்டாண்ட், மற்றும் பலவிதமான நவீன யுக்திகளும் இடம்பெறும். கொலுப்படி, அதை
சுற்றியுள்ள பகுதிகளின் அலங்காரங்கள், நவீன யுக்திகள் இவைகளெல்லாம் ஆண்
பிள்ளைகளின் பொறுப்பு. இதெல்லாம் செய்வதற்கு வீட்டிலுள்ள் பெண்கள்
அம்மாவிடம் அண்ணன் / தம்பிமாருக்கு நைட் ஷொ சினிமாவுக்கு அனுமதியும்
பைசாவும் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டியது. கமிட்டீ அங்கத்தினர்கள் 7/8/9
தினங்களில் ஒவ்வொரு வீட்டிலும் சென்று கொலுவினை பார்வையிடுவார்கள். யார்
வீட்டிற்கு என்றைக்கு வருவார்கள் என்பது மிக ரகசியமாக இருக்கும். இந்த
கமிட்டியில் அக்ராஹாரத்து பெரிய மனிதர்களை தவிர, அடுத்த ஊர்
பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டரும் அங்கத்தினராய் இருப்பார். ஸ்ரஸ்வதி
பூஜையின் மறு நாள் போட்டியின் முடிவுகள் அறிவித்து பரிசுகள்
வழங்குவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சுண்டல் வாங்குவதற்கு கும்பாலாக
செல்வது வழக்கம். சில வீடுகளில் கொடுக்கின்ற சுண்டலிலும் இரண்டு வகை
இருக்கும். கொலுவிற்கு அழைத்து பாட்டு பாடும் பெண்களுக்கு கடலை
சுண்டலும், கும்பலாக வரும் ஆண் பிள்ளைகளுக்கு, தேங்காய்/சீனி போட்டு
வெறும் பொரியினை கொடுக்கும் வீடுகளும் உண்டு. வம்பு பண்ணுவதற்கு என்றே
சில கும்பல்கள் உண்டு. இந்த மாதிரி பாரபஷம் பார்க்கும் வீடுகளில்
பொரியினை வாங்கிவிட்டு, யாருக்கும் தெரியாமல் மெயின் ஸ்விச்சை
அணைத்துவிட்டு நழுவி விடுவார்கள். இதை எல்லாம் நினைக்கும் பொழுது
"நம்முடய அந்த காலம் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தது " மனத்தில் ஒரு
மகிழ்ச்சி. நேற்று என்னுடய நண்பரின் மனவியை கேட்டேன் " என்ன மன்னி
கொலுவெல்லாம் உண்டா, சுண்டலுக்கு என்னிக்கு வரணம்" எனு கேட்டதற்கு "
நானும் உங்க நண்பரும் வாசல்படியில் சாயங்காலம் ஒக்காந்து பேசிண்டு
இருப்போம் இது தான் எங்காத்து கொலு. வெள்ளிகிழமை வந்தால் சுண்டல்
கிடக்கும்" என்று வேடிக்கையுடன் பதிலளித்தார்.

நீலகண்டன்
(செம்பூர் நீலு )

N. Kannan

unread,
Oct 11, 2012, 3:35:28 PM10/11/12
to mint...@googlegroups.com
> 2012/10/11 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:

>
>வம்பு பண்ணுவதற்கு என்றே
> சில கும்பல்கள் உண்டு. இந்த மாதிரி பாரபஷம் பார்க்கும் வீடுகளில்
> பொரியினை வாங்கிவிட்டு, யாருக்கும் தெரியாமல் மெயின் ஸ்விச்சை
> அணைத்துவிட்டு நழுவி விடுவார்கள்.

திருப்பூவணம் அப்போது கிராமம். நிறைய குடியான வீட்டுப் பசங்க
அக்கிரகாரத்து கொலுவின் மகிமை அறிந்து வருவர். சுண்டல் கேட்டால் சில
நேரம் கிடைக்கும் சில நேரம் கிடைக்காது. சில மாமிகள் வந்து பாடற
குழந்தைகளுக்கு ‘மட்டும் என்று சுண்டல் வைத்திருப்பர்.

சுண்டல் கிடைக்காத கோபத்தில் வயக்காட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும்
தவக்காளை (தவளை)யை வீட்டிற்குள் போட்டுவிட்டு ஓடி விடுவர். தவளை
கொலுவிற்குள் புகுந்தால் எப்படியிருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள்!!

ஒரே அமர்க்களம்! மாமிகளைக் கலாய்க்க இப்படியொரு டெக்னிக்கா? :-))

க.>

N. Kannan

unread,
Oct 11, 2012, 4:11:55 PM10/11/12
to mint...@googlegroups.com
//1. ஒவ்வொரு வருடமும் கொலுபொம்மைகள் எடுக்கும் போது படிகளையும் எடுத்து
assemble செய்ய முடிய வேண்டும்.
2. அடுக்கு மாடி கட்டடங்களில் வாழ்பவருக்கு கொலுப்படிகளை அப்படியே வருடம்
முழுவதும் வைத்திருப்பது சிரமம், மிகக்குறைந்த இடத்தை
எடுத்துக்கொள்ளும்படியாக collapsible படிகளாக இருக்க வேண்டும்.
3. மரத்தாலான படி என்றால் உடைவது போன்ற பிரச்சனைகள் இருக்காது - ஆனால்,
பெண்களும் தனியாக assemble/dismantle செய்யும்படியாக லேசாகவும் இருக்க

வேண்டும்.
4. துருப்பிடிக்காத bolts and nuts மற்றும் பூச்சிகள் அரிக்காத நல்ல
தரமான மரத்தை வைத்து செய்யலாம் - processed wood products நன்றாக

இருக்கும்.
5. 9 இன்ச் ஆழமும் நான்கடி நீளமும் படிகளுக்கு போதும், அதே 9 இன்ச் உயரம்
படிகளுக்கு இடையிலான உயரமாக இருக்கலாம். இன்னொரு option ஆக 12 இன்ச் ஆழ,
உயரங்களையும் முயன்று பார்க்கலாம்.
6. அதிக விலையில்லாமலும் இருக்க வேண்டும் - இது அத்யாவசத்தேவையில்லையே.
7. பண்டிகை முடிந்த பின் பிரித்து எடுத்து வைத்து விட ஏதுவாக இருக்க வேண்டும்
8. 5 படி/ 7 படி/ 9 படி செட் என்று அமைத்து விற்பனை செய்யலாம். இந்த
செட்கள் தேவைப்பட்டால் மேலும் படிகளை add செய்து கொள்ளும்படியாக
இருக்கவேண்டும். இதனால், வேண்டியபோது படிகளை வாங்கிக்கொள்ளவும் முடியும்
- உங்களுக்கும் தொடர்ந்த விற்பனை இருக்கும்.//


மிக..மிக அருமையான யோசனைகள்...

இங்கு IKEA என்றொரு மிகப்பிரபலமான ஸ்வீடிஷ் ‘do it yourself' furniture
mart! இங்கு நவராத்திரி பிரபலமாயிருந்தால் நீங்கள் எதிர்பார்த்தற்கும்
மேலான வகையில் கொலுப்படிக்கட்டு, ‘சிறுவரும் செய்யும்’ வகையில்
கிடைக்கும்!

அதுவரை டின், பெட்டிகளைக்கொண்டு படிக்கட்ட வேண்டியதுதான். 16 அடி
வேஷ்டியெல்லாம் இப்ப யார் கட்டறா? இந்த கொலுவின் உள்கூட்டை மறைக்க இது
பயன்படும்!!

நா.கண்ணன்

Swarna Lakshmi

unread,
Oct 13, 2012, 12:35:54 AM10/13/12
to mint...@googlegroups.com
நலம் சுபா!!  நிற்க நேரமில்லை செய்ய வேலையில்லை என்பார்கள் தெரியுமா!! அந்த மாதிரி தான் இருக்கிறது இப்போதைய என் schedule :)) அவ்வப்போது எட்டிப்பார்த்து வருகிறேன். திங்கட்கிழமையில் இருந்து நவராத்திரியோடு எங்கள் நாட்டிய ப்ராக்டீஸும் ஆரம்பமாகி விடும் - டாண்டியா போன்ற நடனங்கள் கடைசி மூன்று நாட்களில் ஆடிப்பாடி கொண்டாடுவது வழக்கம். முடிந்தால் படங்கள் வீடியோ அனுப்புகிறேன்... உங்கள் அலுவல் எப்படி இருக்கிறது!!

அன்புடன்
ஸ்வர்ணா


From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Sent: Thursday, 11 October 2012 2:40 PM

Swarna Lakshmi

unread,
Oct 13, 2012, 12:43:47 AM10/13/12
to mint...@googlegroups.com
ஆஹா எத்தனை விஷயங்கள் தேனி சார்!! மிக்க நன்றி!! 


From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 11 October 2012 4:00 PM

Subject: Re: [MinTamil] நவராத்திரி சிந்தனைகள்

Karuannam Annam

unread,
Oct 13, 2012, 1:03:58 AM10/13/12
to mint...@googlegroups.com
2012/10/11 meena muthu <ranga...@gmail.com>
 யப்பா...! எவ்வளவு விபரங்கள்! மிக மிக அருமை! நன்றி தமிழ்தேனிஜி!


 நீங்கள் கொலு வைப்பதுண்டா மீனாம்மா. 
    கண்டரமாணிக்கத்தில் எங்கள் வீடு அக்கிரஹாரத்தில் கோடிஅகம். எல்லாவீடுகளிலும் கொலு வைத்திருப்பார்கள். சிறுவனாக மற்ற சிறுவர்களுடன் பல வகைச் சுண்டல், வடை பெற்று சாப்பிட்ட சுவை இன்னும் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் இது. இப்போது யாரும் இல்லை. மகர்நோன்புக்கு  கண்டரமாணிக்கம் செல்வதும் இல்லை.

காரைக்குடியில் மிகவும் நன்றாக இருக்கும். மகர்நோன்பு பொட்டலில் நான்கு சுவாமிகள் ஒரே நேரத்தில் அழகிய மர, வெள்ளிக்குதிரை வாகனங்களில் அம்பு போட வரும். கொப்புடையம்மன், நாகநாதபுரம் பெருமாள், நகரச்சிவன், கோவிலூர் திருநெலை  அம்மன் ஒவ்வொரு இடமாக அர்ச்சனைக்குத் தங்கி நகர்வலம் கண்கொள்ளாக்காட்சி.
எல்லா நாட்களும் கொப்புடையம்மன், சிவன், கிருஷ்ணன் கோவில் சுவாமி அலங்காரம் மிகஅழகாக இருக்கும்.

மலேசிய அனுபங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்த ஆண்டு கல்கத்தாவில் இருக்கிறோம். இங்கு துர்க்காபூஜை வெகு சிறப்பு என்று சொல்கிறார்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 


Swarna Lakshmi

unread,
Oct 13, 2012, 1:04:45 AM10/13/12
to mint...@googlegroups.com
எல்லா உயிர்களிடத்திலும் இறைவனைக்காண வேண்டும் என்பதை நினைவுறுத்தவும் எல்லா விதமான உயிருள்ள உயிரில்லா பொருட்களின் மாடல்களும் நவராத்திரியில் இடம் பெறுகின்றன. தேனி சார் சொன்னது போல இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகள் நமக்கு ஒவ்வொரு நாளும் தேவையாக இருக்கின்றன. முக்கியமாக பல இல்லங்களில் பெண்கள் தான் இந்த சக்திகளாகவும், ஊக்க சக்திகளாகவும் திகழ்கிறார்கள். பெண்கள் இல்லாவிட்டால், ஆண்களுக்கு வாழ்க்கை இவ்வளவு கிரியேட்டிவாக இருக்குமா என்பது சந்தேகமே!! (சண்டைக்கு வராதீர்கள் சகோதரர்களே!! - உண்மை கசக்கத்தான் செய்யும் :)))

மனதில் பதிந்த கொலு/ பூஜைகளையும் பகிர்ந்து கொள்கிறேன்...
1. பல வருடங்களுக்கு முன் திருப்பூரில் ஒருவர் வீட்டில் பார்த்த பதினோரு படிக்கொலு. பொம்மைகளில் பல (மணியால் செய்தவை போன்ற) வீட்டுபெண்மணிகளால் ஓய்வு நேரத்தில் செய்யப்பட்டவை. அவர்கள் வீட்டு ஹாலில் வீடு கட்டும் போது கணக்கிட்டு படிகள் முடியும் இடத்தில் ஒரு இரண்டடிக்கு இரண்டடி ஓரடி ஆழத்தில் இடம் விட்டிருந்தார்கள். உள்ளே ஒரு மினிகுளம் வடிவமைக்கப்பட்டிருந்தது. சாதாரண நாட்களில் ஒரு slab கொண்டு மூடி மேலே கார்ப்பெட் விரித்து விடுவார்கள். கொலு வைக்கும் போது slab ஐ விலக்கி விட்டு தண்ணீர் நிரப்பினால் அழகான நீலக்குளம். படித்துறையில் குளிக்கும் மனிதர்கள், துள்ளும் சிறு ( நிஜ) மீன்கள், நடுவில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அம்பாள், சுற்றி மிதக்கும் சிறு விளக்குகள், குளத்தை சுற்றிலும் சாலையும் விளக்குகள், அதில் வாகனங்கள், அருகிலேயே கோயில் கோபுரம் என மறக்க முடியாத அற்புதம். சுற்றிலும் candle கள், குத்து விளக்குகள், கை விளக்குகள், அகல் விளக்குகள், மின் விளக்குகள் என ஒளி வெள்ளம். அந்த மாதிரி செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை - பார்ப்போம்.
2. என் தோழி அனுவின் அப்பா திரு. வெங்கட்ராமன், சென்னையில்  நங்க நல்லூரில் வசிக்கிறார். தன் கையாலேயே பல பொருட்களால் பொம்மைகள் செய்வதும்,  நீண்ட நெடும் ரங்கோலிகள் என அற்புதமாக அம்மையைக் கொண்டாடும் மனிதர். இப்போது சற்று வயதாகிவிட்டாலும் ஆர்வம் குறையவில்லை.
3. என் நண்பர் விஸ்வ நாதனின் தந்தையார் திரு. ஸ்ரீனிவாசன். இன்னொரு நங்க நல்லூர்க்காரர். மனைவி பல வருடங்களுக்கு முன் இறந்து விட்டாலும் குழந்தைகளுக்குக் குறை தெரியக்கூடாது என்று வருடம் தோரும் ஒரு பண்டிகையையும் விடாமல் கொண்டாடுவார். வீடு மெழுகிக் கோலம் போடுவதில் இருந்து, தோட்டம் திருத்துவதில் இருந்து, பல பலகாரங்களை அற்புதமாகச் செய்வது - சாங்கோபாங்கமாக பூஜை என்று - அற்புத மனிதர் - பல நேரங்களில் என் கண்கள் பனித்து விடும் அவர் முயற்சிகளைக் கண்டு.
4. பிம்பா - தி ஆர்ட் ஹட் - என்னும் கலை நிறுவனம். தலைமுறைகளாகக் கையால் செய்த (பேப்பர் மேஷ், களிமண், wax) அற்புத பொம்மைகளைக் காப்பாற்றி மேலும் மெருகேற்றி குறிப்பிட்ட theme கொண்டு ஒவ்வொரு வருடமும் அற்புதமாக நவராத்திரி கொண்டாடுகிறார்கள். தினமும் demonstration உண்டு - ஒரு நாட்டிய அனுபவம்.
5. கோவையைச் சேர்ந்த ஒரு பிஸினஸ் குடும்பம். ஆலமரம் போல தழைத்திருக்கும் குடும்பம். பல வருடங்களாக காமாக்‌ஷி கோயிலில் நவராத்திரி உற்சவம் நடத்தி கோவையில் சங்கீதம் வளர உயர்ந்த பணி செய்து கொண்டிருப்பவர்கள். அங்கே கோயிலில் வைக்கப்படும் நவராத்திரியும் பழைய பொம்மைகளைக்கொண்டு அழகாக இருக்கும்.
6. கபாலீஸ்வரர் நவராத்திரி உற்சவம் - அலங்காரமும், கலை நிகழ்ச்சிகளும். அற்புதம்

இன்னும் பல சொல்லலாம்.

அன்புடன்
ஸ்வ்ர்ணா



From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 11 October 2012 6:26 PM

Subject: Re: [MinTamil] நவராத்திரி சிந்தனைகள்

Swarna Lakshmi

unread,
Oct 13, 2012, 1:10:27 AM10/13/12
to mint...@googlegroups.com
நன்றி கண்ணன், walmart ல் தேவையான உபகரணங்களைப் பார்த்திருக்கிறேன். விலையும் ரொம்ப குறைவு தான் - ஆனால் யார் யூஎஸ்ஸிலிருந்து கொண்டு வர முடியும். இங்கே வால்மார்ட் வந்தால் இந்த மாதிரியான விஷயங்களுக்கு உபயோகப்படும்.  நானும் சில வருடங்களாக முயன்று கொண்டிருக்கிறேன் - டிசைன் எல்லாம் கையில் வைத்துக்கொண்டு - நடக்க மாட்டேன் என்கிறது..

Sent: Friday, 12 October 2012 1:41 AM
Subject: Re: [MinTamil] நவராத்திரி சிந்தனைகள்

Subashini Tremmel

unread,
Oct 13, 2012, 4:29:34 AM10/13/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் சித்தி விநாயகர் ஆலயத்தில் வருடா வருடம் நவராத்திரி வைபவம் நடைபெறும். இந்த ஆண்டும் வரும் செவ்வாய் தொடங்கி இந்த விழா தினம் தோறும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. நவராத்திரி தொடங்குவதற்கு முதல் நாளே இங்கே ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்து விடும். விரும்பும் யாவரும் இந்த அலங்கார வேலையில் பங்கு கொள்ளலாம். 

எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இங்கே சென்று முதல் நாள் ஏற்பாட்டில் நான் பங்கெடுத்துக் கொள்வதுண்டு. இந்த வருடம் அதற்குச் சாத்தியப்படவில்லை. நான் திங்கள் காலையே மீண்டும் மட்ரிட் பயணித்து வெள்ளிக்கிழமை மட்டுமே மீண்டும் இல்லம் திரும்புவதால் ஆரம்பம் தொடங்கி சனிக்கிழமை வரை ஆலயம் செல்ல வாய்ப்பமையவில்லை. இருந்தாலும் நேற்று மாலை கோயில் சென்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தது மனம் நிறைவளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த ஆலயம் ஒரு கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்திருக்கின்றது. அதற்கு மேலே ஒரு யூத பள்ளி அமைந்திருக்கின்றது. ஆலயத்தின் கீழ் தளத்தில் இஸ்லாமிய போதனாமடம் அமைந்துள்ளது. எவ்வளவு சமய ஒற்றுமை பாருங்கள்!

இங்கே நவராத்திரிக்கு முதல் நாளே ஆலயத்தை முழுதும் கழுவி சுத்தம் செய்வோம். பின்னர் கொலு பொம்மை வைப்பதற்காக உள்ள மேடையை ஒழுங்கு படுத்தி அதில் ஒவ்வொன்றாக பொம்மைகளை அடுக்குவோம். எல்லோரும் சேர்ந்து எந்த பாகுபாடுமின்றி இந்தப் பணிகளைச் செய்வோம். கோலம் போடுவதில் ஆர்வம் உள்ளவர்க்ள் சிறிய கோலங்களைப் போடுவோம். நான் வர்ண தோய்த்த அரிசியில் சிறிய ரங்கோலிகளைபோடுவதுண்டு. மூன்று ஆண்டுகளுக்கு முன் மலேசியாவிலிருந்து என் அண்டி வஸந்தாவும் வந்திருந்ததால் அவர்களுடன் சேர்ந்து இந்த பணிகளைச் செய்தது மனதில் அப்படியே பதிந்து இனிய நினைவை ஏற்படுத்துகின்றது.

படங்கள் சில.

Inline image 1
குருக்கள் பூஜை கும்பம் வைத்து தயார் செய்கின்றார். பெண்கள் சிலர் கொலு மேடையை தயார் செய்கின்றனர். 


Inline image 2
வஸந்தா கொலு பொம்மைகளை மேடையில் வைக்கின்றார். (ஊதா நிற சேலை)

அன்புடன்
சுபா



2012/10/10 N. Kannan <navan...@gmail.com>
கொலு பொம்மைகள் வாங்கவொரு வலைப்பதிவு இருப்பது பற்றி ஒரு மின்தமிழ் இடுகை கண்டேன்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
stuttgartt2.jpg
stuttgartt1.jpg

Nagarajan Vadivel

unread,
Oct 13, 2012, 4:35:20 AM10/13/12
to mint...@googlegroups.com
குளிர் நாட்டிலும் குருக்கள் bare body தானா?

இது என்ன மரபு அடிப்படையில் அமைந்தது என அறியலாமா?

நாகராசன்

2012/10/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>
stuttgartt2.jpg
stuttgartt1.jpg

shylaja

unread,
Oct 13, 2012, 4:41:11 AM10/13/12
to mint...@googlegroups.com

புரபசரே
முன்னம்  எப்போதோ  நான்   ஆன்மீக சொற்பொழிவில்  கேட்டதை  ஒரு ஆன்மீகப்பத்திரிகைக்கு அனுப்பி அது பிரசுரமும் ஆனது அதை அப்படியே  இப்போ அனுப்புகிறேன்.
****************************************************************************************************************
 
 
இந்துக்கோயில்கள் சிலவற்றில் கண்டிப்பாக ஒரு சட்டம் உண்டு அதாவது ஆண்கள் மேல்சட்டை அணிந்துவரக்கூடாது என்பது நாம் ஆலயங்களுக்கு சென்றால் உள்ளே செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன்
சென்று தெய்வ திருமேனியை வழிபடவேண்டும். இது எதற்காக என்று பார்க்கலாம்.

நமது பாரத தேசத்தில் ஆலய மூல விக்ரஹம் கருங்கல்லாலேயே
வடிவமைக்கப்படுகிறது.கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால்
ஈர்த்து,தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு.எனவே தான்
மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி
ஸ்தபதியார்களால் வடிவமைக்கப்படுகின்றன.
"ஓம்"என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி,பலவகை அபிஷேகங்களை
செய்யும்போது,மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன.அந்த மின்னூட்டக்
கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும்,மனதுக்கு
அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.

அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து
வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும்.நாள்தோறும் 4,6
காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள்
தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு
உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து
தருகின்றன.இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன.

இத்தகைய அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும்
என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்ல
வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்.பெண்களுக்கு அவர்களின்
உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்.இது எல்லா கோயில்களுக்கும்
பொருந்தும்.

எனினும் திருச்செந்தூர்,சிதம்பரம் உடுப்பி கொல்லூர் முதலிய இடங்களிலும்,கேரளத்தின் எல்லா
கோயில்களிலும் இம்முறை இன்றும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது.இது
நமக்கு நன்மை தருவதற்கே.கோயிலுக்குள் செல்லும்போது மேற் சட்டையை
கழற்றாவிட்டாலும்,குறைந்தபட்சம் உள் மண்டபத்தில் சென்று சுவாமியைத்
தரிசிக்கும்போதாவது கழற்றி விடுவது நமக்கு உடலுக்கு நலம் பயக்கும்!



2012/10/13 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
stuttgartt2.jpg
stuttgartt1.jpg

Nagarajan Vadivel

unread,
Oct 13, 2012, 5:45:51 AM10/13/12
to mint...@googlegroups.com
ஆன்மிகத்தை வைத்து ஆனித்தரமாக அறைந்து செப்பினீர்கள்
இதுக்குமே இந்த இழையில் பேச முடியாது
எல்லாம் ஜெர்மனியைச் சேர்ந்த அறிஞர்கள்
அவர்களுக்குள்ளே என்னமோ பேசிக்கொள்வதாக ஜன்னல் வழியாகப் பார்த்த எழுத்தாளர் ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளார்
மீண்டும் நன்றி

2012/10/13 shylaja <shyl...@gmail.com>
stuttgartt2.jpg
stuttgartt1.jpg

N. Kannan

unread,
Oct 16, 2012, 4:28:48 AM10/16/12
to mint...@googlegroups.com
நவராத்திரி முதல் நாள் : வழிபடும் முறை ...

Temple images

நவராத்திரியின் முதல் நாளில் (அக்.16ல்) அம்பாளுக்கு "மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். 

மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள். "அசரம் என்றால் "அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்

தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!


நன்றி: இன்று எனக்குத் தனிமடலில் வந்த கருத்து.

N. Kannan

unread,
Oct 16, 2012, 4:36:34 AM10/16/12
to mint...@googlegroups.com
நவராத்திரியின் அழகே இந்தச் சின்னக்குட்டிகள் பட்டுப்பாவடை சகிதம்
மாலையில், இங்குமங்கும் ஓடித்திரிதல்தான். என் இரண்டு அக்காவும் (ஐந்தில்
இரண்டு) அப்போது என்னைப்போல் பள்ளியில். இருவருக்கும் நன்றாகப் பாடவரும்.
‘வாடி பொண்ணே! அம்பாள் மேலே ஒரு பாட்டுப்பாடு!” என்று சொல்ல
வேண்டியதுதான். ஒன்றென்ன ஒன்பது பாடுவார்கள். அந்த டைப் ;-) இவர்களோடு
ஒட்டிக்கொண்டு போவதால் இம்மாதிரிக்குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக
வைத்திருக்கும் ஸ்பெஷல் சுண்டல், பழம் கிடைக்கும். அவர்களுக்குக்
கூடுதலாக குங்குமச்சிமிள் போன்ற வேறு ஐட்டங்கள் கிடைக்கும்! அந்த இரட்டை
அக்கிரகாரம் என் பிருந்தாவனம். அங்கு பிள்ளைப்பருவத்தில் நான் கண்ட அன்பு
வேறெங்கும் கண்டதில்லை. 25 வருடங்களுக்குப்பின் போன போது, மாது மாமாவின்
மனைவி அதே பழைய வாஞ்சையில் அணைத்துக் கொண்டாள். அதுவொரு கனவு. எனக்காக
உருவாக்கப்பட்ட கனவு.

நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Oct 16, 2012, 8:03:53 AM10/16/12
to mint...@googlegroups.com

ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.


அண்ணாவும், தம்பி பெரிய பையன் ஆனதும் அவனும் துணைக்கு வர என்னுடைய நவராத்திரிப் பட்டினப் பிரவேசம் நடக்கும். கையில் ஆளுக்கு ஒரு பை எடுத்துக் கொள்வோம். சில தெரிந்த வீடுகளில் அண்ணா, தம்பிக்கும் சுண்டல் அளிக்கப் படும். பொதுவாக அண்ணா உள்ளேயே வரமாட்டார். வெளியே நின்று விடுவார். ஆகையால் தம்பி சின்னவன், குழந்தை என்பதால் அவனுக்குக் கட்டாயம் கிடைக்கும். என்றாலும் அங்கேயே பிரிச்சுத் தின்பது எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் அன்றாடக் கொலு வரவு, செலவுகளை ஒப்பித்துவிட்டு ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்வோம்! இந்த, இந்தப் பாக்கெட்டில், இன்னார் வீட்டுச் சுண்டல் என்பது நினைவு வச்சுக்கறது எனக்குத் தானாகவே கைவரப் பெற்றிருந்தது.இது இன்றளவும் என்னோட மறுபாதி ஆச்சரியப் படும் விஷயம், எப்படி இவ்வளவு சரியா நினைப்பு வச்சுக்கறே என்பார். அவருக்குச் சில சமயம் என்னோட பேரே மறந்துவிடும். நீ யாருன்னு கேட்கலை. அந்தளவுக்கு மறதி.


அப்போ எல்லாம் குழந்தைகளுக்குத் தேங்காய், பழம் கிடைக்காது. வெற்றிலை, பாக்கு, சுண்டல் மட்டும்தான். பழம் கொடுக்கும் வீட்டில் சுண்டல் கிடைக்காது. மனசுக்குள் திட்டிப்போம். போன முறை இவங்க வீட்டுச்சுண்டல் உப்பு ஜாஸ்தி, என்றோ, உப்போ போடலை என்றோ பேசிப்போம். அவங்க வீட்டுப் பெண்ணுக்கு என்ன அலங்காரம் என்பது உன்னிப்பாய்க் கவனிக்கப் படும். மறுநாள் வீட்டில் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், அன்றைய என்னோட அலங்காரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலோ, அலங்காரமே மாறுதலோ செய்யப் படும். மறுநாள் பிரிக்க நேரமில்லாமல் கொலு அலங்காரத்துடனேயே பள்ளிக்குச் சென்ற அனுபவமும் உண்டு. மேல ஆவணி மூலவீதியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குத் தினமும் விசிட் உண்டு. லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குத் தள்ளி இருப்பதால் பெரியம்மா வந்து அழைத்துச்சென்று கொண்டு விடுவார். அங்கே போவது என்றால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். பெரியம்மா மத்தியானம் மாட்னி ஷோவுக்குக் கல்பனா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறதோ அதுக்கு அனுப்பி வைப்பார். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் நிச்சயமாய் அப்பாவுக்குத் தெரியாமல் தான். திடீர்னு அப்பா அங்கே வந்துவிட்டால், பெரியம்மாவின் அப்பா நைஸாக இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் போயிருக்காங்க, இதோ போய் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மெதுவாய்த் தியேட்டருக்கு வந்து, நான் உட்கார்ந்திருக்கும் இடம் முன்பே பெரியம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பார், வெளியே இருக்கும் வாட்ச்மேன் அவங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அவரிடம் சொல்லிக் கூட்டிப் போய் எச்சரிக்கை செய்து வைப்பார்.


அப்பா வந்திருப்பது தெரியாமல் படம் முடிந்து வந்து படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு மாட்டிக் கொண்டதும் உண்டு. தாத்தா வீட்டுக்குப் (அம்மாவின் அப்பா) போவது இன்னும் ஒரு தனி அனுபவம். அங்கே கொலு எல்லாம் வச்சுக் கட்டுபடி ஆகாது. சும்மாப் போயிட்டு வருவோம். அப்பாவின் அப்பா பத்திச் சொல்லலைனு நினைக்காதீங்க. அவர் என் தம்பி பிறக்கும் முன்னேயே காலம் ஆகிவிட்டார் என்பதால் அவ்வளவாய் நினைவு இல்லை. என்றாலும் அவரைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறும். எல்லா வீட்டு உலாவும் முடிந்து வீட்டுக்கு வந்து எல்லார் வீட்டுச் சுண்டலும் விமரிசங்களுடன் அரைபட்டு முடிச்சதும், சாவகாசமாய்க் கோவில் உலாக் கிளம்புவோம். அப்பா, அண்ணா, தம்பி தனியாப் போவாங்க. நான், அம்மா அக்கம்பக்கம் பெண்களுடனோ அல்லது இரண்டு பேரும் தனியாவோ போவோம். அது வரை எல்லாக் கோவிலிலும் அலங்காரமும் இருக்கும். வீதிகளில் கூட்டமும் இருக்கும். நிதானமாய் மீனாட்சி கோவில், மதனகோபாலசாமி கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில்,கூடலழகர் கோவில் என்று ஒரு நாள் வைத்துக் கொண்டால் மறுநாள் மீனாட்சி கோவில் போயிட்டு வடக்குப் பக்கம் கோவில்களுக்கும், ராமாயணச்சாவடியில் தினமும் செய்யும் அலங்காரமும் போய்ப் பார்ப்போம். இப்போ ராமாயணச் சாவடி அப்படியே இருக்கா தெரியலையே?



இதிலே சிறு வயது நவராத்திரி நினைவுகளைப் பகிர்ந்துள்ளேன்.  மற்றும் சென்னையில், ராஜஸ்தான், குஜராத்தில் நவராத்திரி கொண்டாடிய நினைவுகளும்  நிறைய உள்ளன.  கொலு பற்றியும் நவராத்திரி பற்றியும் வேறு சில தகவல்களைத் தனி இழையில் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.  நன்றி.

Tthamizth Tthenee

unread,
Oct 16, 2012, 8:23:46 AM10/16/12
to maza...@googlegroups.com, mint...@googlegroups.com


நவராத்திரி அனுபவங்கள் மனதுக்கு மிகவும்  இதமான அனுபவங்கள். எனக்கு  சுமார்  பத்து வயதிருக்கும். அதாவது  1957  ம் வருட நவராத்திரி.  நன்றாக மொழு மொழுவென்றிருப்பேன்.  அப்போது ஒரு முறை நவராத்திரி நேரத்தில் நடந்த ஒரு இனிமையான அனுபவம்.


 என் அம்மா எனக்கு கிருஷ்ண வேடம் போட்டு கூடவே என் மாமா மகள்களுக்கு ருக்மணி, சத்யபாமா வேடம்போட்டு  எங்கள் மூவரையும்  அழைத்து கையிலே வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தொடுத்த மலர்கள், சகிதமாக என் கையில் புல்லாங்குழல் வேறுகொடுத்து  ,அப்படியே சென்று  நவராத்திரி கொலுவுக்கு எல்லோரையும் அழைத்துவிட்டு வா என்று அனுப்பினார்கள்.
 எனக்கு வெற்றிலை பாக்கு தட்டை சமமாகப் பிடிப்பதா, அல்லது புல்லாங்குழலை  ஊதுவது  போல் தோற்றமளிக்க வாயின் உதடுகளில் புல்லாங்குழலை வைத்துக்கொண்டு அதைக் கைகளால் பிடித்துக்கொண்டு வெற்றிலைபாக்கு தட்டையும் எப்படிப் பிடித்துக் கொள்வது என்னும் யோசனையால் தடுமாறி, எப்படியோ அந்த பஞ்சகச்சம் வேட்டி தடுக்கியும் ,தடுக்காமலும் அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, நடந்து எங்கள் தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் இருக்கும் நண்பர்களை, உறவினரை  அழைக்க போய் வந்தேன்.

இதன் நடுவே இரு புறமும் தேவியர் ருக்மணி, சத்யபாமா  வர அவர்கள் நடுவே ஒரு கிருஷ்ணனைப் போல் கம்பீரமாக வரவேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும்  கூடவே ஒரு வெட்கம், சாலையில் எல்லோரும் பார்க்கிறார்களே  என்னும் ஒரு விதமான உணர்வு, அதையும் தாண்டி  ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி , இத்தனை உணர்வுகளுக்கு நடுவே நானும் கிருஷ்ணன் போல் நடப்பதாக  எண்ணிக் கொண்டு சென்று வந்தேன்.

திடீரென்று ஒரு குரல்,  டேய் கிருஷ்ணமாச்சாரி  கிருஷ்ண வேஷம் போட்டுண்டாப் போறாது, கிருஷ்ணன் மாதிரி நடக்கணும் என்று    போகிற போக்கில் எதிர் வீட்டு  நரசிம்மன் மாமா  சொல்லிவிட்டுச் சென்றார்.
எனக்குள் ஒரு சந்தேகம்  கிருஷ்ணன் போல நடப்பதா ? அது எப்படி ,  இப்போது சாலையில் நடப்பதைப் பற்றி சொல்கிறாரா, அல்லது கிருஷ்ணனின் நடத்தையைப் பற்றி சொல்கிறாரா?  என்று ஒரு சந்தேகம் வந்தது.
ஓரக் கண்ணால் பாமா ருக்மணியைப் பார்த்தேன், இருவரும்  ஒரு கையால் வெற்றிலை பாக்கு  தட்டை  லாவகமாக  இடுப்பிலே  அணைத்து வைத்துக்கொண்டு  ஒரு வீட்டில் கொடுத்த சுண்டலை வாயில் போட்டு ருசித்துக் கொண்டே  நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.

இந்தப் பெண்களுக்கு மட்டும்  இடுப்பிலே வைத்துக் கொண்டே எல்லா வேலைகளையும் செய்யும் பாரம்பரியம் எங்கேயிருந்து வந்திருக்கும் என்று எண்ணமிட்ட படியே  நடந்தேன்.    திடீரென்று தலையில்  வைத்திருந்த  மயிற்பீலி  முன்னால் மடிந்து முகத்தில் விழுந்து மிகச் சரியாக  கண்களை மறைக்கவும்  நான் யார் மேலேயோ   மோதிக்கொள்ளவும்  சரியாக இருந்தது.

என்னா  கிருஷ்ணன் வேஷம் போட்டா  எதிரே வரவங்க கண்ணுக்குத் தெரியாதா  ,என் மேலே வந்து  முட்டிக்கறான் பாரு  என்று ஒரு பெண்மணி விளையாட்டாகக் கூறிக்கொண்டே என் மயிற்பீலியை  சரி செய்துவிட்டு  எனக்கு ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு சென்றாள்.  வாய் பிளந்தேன் , வாயில்  உலகம் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்துவிட்டு  பக்கத்திலிருந்த ருக்மணி  வாயை மூடு    ஓட்டைப் பல்லு தெரியறது என்றாள் .

கபக்கென்று வாயை  மூடிக்கொண்டு  திரும்பினேன்,  தட்டிலிருந்த ஒரு   வெற்றிலை காற்றில் பறக்கத் தொடங்கியது. அதை எப்படிப் பிடிப்பது என்று யோசித்து தலையை உயர்த்தினேன்.

அன்புடன்

தமிழ்த்தேனீ

2012/10/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To post to this group, send an email to maza...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to mazalais+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/mazalais?hl=en-GB.

N. Kannan

unread,
Oct 16, 2012, 9:09:33 AM10/16/12
to mint...@googlegroups.com
அடடா! என்னென்ன அழகான நினைவுகள். கீதா, தேனீ சார்! தூள்!!!

கீதாவின் வட இந்திய அனுபவங்கள் அறிய அவா!

தேனீயின் கிருஷ்ணலீலை தொடரட்டும் ...

நா.கண்ணன்

2012/10/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Oct 16, 2012, 9:48:37 AM10/16/12
to maza...@googlegroups.com, mint...@googlegroups.com
கீதாம்மா  மிகவும் அருமையான நிகழ்வுகளின் நினைவுகள்

 

அருமை தொடருங்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/10/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.

--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To post to this group, send an email to maza...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to mazalais+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/mazalais?hl=en-GB.

Subashini Tremmel

unread,
Oct 16, 2012, 12:04:11 PM10/16/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
கீதா,

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற அனுபவங்களெல்லாம் எனக்கு மலேசிய நாட்களிலும் அமைந்ததில்லை.  வாசிக்க மிகச் சுவாரசியமாக இருக்கின்றது.

மலேசியாவில் இருந்த சமயத்தில் நவராத்திரிக்கு வீட்டில் கொலு அம்மா செய்திருப்பார். வீட்டில் தினம் பூஜை இருக்கும். சில நேரங்களில் அனுக்கமான சில நண்பர்கள் வீட்டில் மாற்றி மாற்றி கொலு பூஜை சில நாட்களில் நடக்கும். தினம் தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம். முக்கியமாக ஆரம்ப தினம், சரஸ்வதி பூஜை விஜயதசமி போன்றவை பினாங்கு வீரமாகாளியம்மன் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெறும். அங்கு கச்சேரி செய்யும் குழுவில் சேர்ந்து பாடல் நானும் என் அக்காவும் பாடுவோம். கோலம் போடுவோம்.

இன்று கோயிலுக்குச் செல்ல அவகாசம் கிடைக்காமல் மட்ரிட்டில் இருக்கின்றேன். இங்கே அருகில் எகிப்திலிருந்து பெயர்த்து தூக்கி கொண்டுவரப்பட்ட ஒரு 2200 ஆண்டு வயதுள்ள எகிப்திய கோயில் ஒன்று இருக்கின்றது. அது ஆமூன் ஈஸிஸ் தெய்வக்களுக்காக உருவாக்கப்பட்ட கோயில். சற்று நேரத்தில் நடக்கச் செல்லும் போது மன திருப்திக்கு அந்தக் கோயிலைச் சுற்றி வர திட்டமிட்டிருக்கின்றேன். இன்றைய என் நவராத்திரி ஆரம்பம் இவ்வளவே. :-)

 சுபா

2012/10/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

rajam

unread,
Oct 16, 2012, 2:34:25 PM10/16/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்பின் சுபா,
இன்று கோயிலுக்குச் செல்ல அவகாசம் கிடைக்காமல் மட்ரிட்டில் இருக்கின்றேன். இங்கே அருகில் எகிப்திலிருந்து பெயர்த்து தூக்கி கொண்டுவரப்பட்ட ஒரு 2200 ஆண்டு வயதுள்ள எகிப்திய கோயில் ஒன்று இருக்கின்றது. அது ஆமூன் ஈஸிஸ் தெய்வக்களுக்காக உருவாக்கப்பட்ட கோயில். சற்று நேரத்தில் நடக்கச் செல்லும் போது மன திருப்திக்கு அந்தக் கோயிலைச் சுற்றி வர திட்டமிட்டிருக்கின்றேன். இன்றைய என் நவராத்திரி ஆரம்பம் இவ்வளவே. :-)
ஐசிஸ் (Isis) என் பிரிய தேவதை (http://en.wikipedia.org/wiki/Isis). நான் UNIX படித்த இடத்தில் ஒரு செர்வெரின் பெயர் ஐஸிஸ்.

இன்று அவள் கோயிலை வலம் வரும்போது என் வணக்கத்தையும் தெரிவிக்கவும். அவளுக்காக அவள் நாட்டுப் பச்சை ஆலிவ் (பதப்படுத்தாதது; raw, uncured) பயன்படுத்தி இரண்டு உணவுப்பொருள் தயார் செய்தேன்; அது உங்கள் பிறந்த நாளை முன்னிட்டும்.

இங்கே படங்கள்:

பதப்படுத்தப்படாத, பச்சை ஆலிவ் (raw green olive) சட்டினி (மேற்புறத்தில் உள்ள படம்), பச்சை ஆலிவ் மசாலாக் கறி (கீழ்ப்புறம் உள்ள படம்). சுவை பிரமாதம்! 
(இ சார் முனகுவது கேட்கிறது -- நான் போயிருந்தபோது என் கண்ணில் இதையெல்லாம் இவள் காட்டவேயில்லையே! :-) )

என் நவராத்திரிச் சிந்தனைகளையும் முடிந்தபோது பகிர்ந்துகொள்கிறேன். கீதா, வெ. சார், நான் எல்லாரும் ஒரு காலத்தில் மதுரையில் வாழ்ந்திருக்கிறோம். 

Aravinda Lochanan

unread,
Oct 16, 2012, 5:04:24 PM10/16/12
to minT...@googlegroups.com
====================================================
Ten Mahavidyas : Manifestations Of Cosmic Female Energy
====================================================

Ten Mahavidyas, the charismatic goddesses of Hindu pantheon
looked at with great curiosity world over, more than any other
group of divinities, are rather the late entrants into
ritual-religio-cultural stream of Indian thought and theology.
Identically conceived in many things, as a group of divinities
having bizarre forms and exotic character, and pregnant with
strange magical powers, these goddesses, invariably numbering
ten, make a debut at their earliest in around eleventh-twelfth
centuries, though it is rather in fourteenth century Shakta texts
that their emergence is more decisive and it is here that they
are identified as Mahavidyas in unambiguous terms.

These Shakta texts, ‘upa’ or subordinate ‘puranas’ as they are
called in the scriptural tradition, are largely the collections
of hymns – ‘nama-strotas’, dedicated to each of these goddesses
and recited to invoke them for accomplishing a desired
objective. These early ‘nama-strota’ texts reveal iconographic
form and basic nature of each of the ten Mahavidyas, and
sometimes each one’s power to fulfill a prayer. However, in these
texts or rather in the entire body of the Mahavidyas-related
literature, barring a few narratives in regard to their origin or
allusions to their exploits in various fields appearing here and
there, an effort at exploring their conceptual aspect,
metaphysical meaning, symbolic dimensions or even theological
status, hardly ever reveals.


Some Early Goddesses In Their Role As Mahavidyas

Not that all goddesses of the group had late emergence, the black
goddess Kali, lotus goddess Kamala, or even Tara, had very early
presence in religious streams of India and were widely
worshipped. Kamala is rather a Rig-Vedic deity and as Shri a full
Rig-Vedic Sukta has been devoted to her. However, in their role
as Mahavidyas, individually and as a group, they make their
presence felt from around fourteenth century, or a little early.
With a different role and form, something like a post-puranic
proliferation of the cult, even Kali, Kamala or Tara emerge as
their own anti-models. As a matter of fact, at least in their
visual representations the post-Mahavidya iconographic forms of
Kali and Tara – horror-striking naked figures standing on Shiva’s
supine body, so overwhelmed the scenario that their pre-Mahavidya
forms were only rarely seen.

In their Puranic models maintaining cosmic order was the primary
role of Kali, Kamala, or even Tara; in their forms as Mahavidyas
such role in regard to them becomes subsidiary or rather
insignificant. In her Mahavidya form Kamala, Vishnu’s consort in
Puranic tradition, is rarely invoked or visually represented with
Vishnu, her spouse. In her Mahavidya-transform this Vaishnavite
goddess of the Vedas, and Puranas in the Vedic line, seems to
tilt, at least in her bearing, to Shaivite side. In their related
hymns other Mahavidyas are also lauded as spouses of male gods;
however, this spousal aspect in case of them all is weak and
insignificant. Too independent to be in a wife’s frame, besides
gender they have in them little which is consort-like; they all
are rather stubborn and over-dominating possessed of, or rather
obsessed by, a desire to bend their male partners to their will
and to have a final say in everything.


Mahavidyas : Appearance, Nature And Metaphysical Meaning

The goddesses of unusual type, all of them are conceived with
fearful demeanor and agitating mind, and as destruction-loving,
though at times they are also amorous and benevolent, and
peacefully poised. In some of them, as in Tripura-Sundari who has
been conceived triply, as Tripura-bala – the virgin, as
Tripura-Sundari – the beauteous, and as Tripura-Bhairavi – the
terrible, such diversity better manifests

Collectively they seem to represent stages in a woman’s life
cycle except her motherhood. They are hardly ever lauded or
visually represented as mothers or with motherly attributes – a
child in arms as have Matrikas, or with breasts filled with milk
as has Ambika, Annapurna or Mother-goddess.

Metaphysically interpreted, Mahavidyas represent cosmic reality,
both its dynamic and static forms prevailing over all seen and
unseen spaces, all directions, as also all elemental regions,
summed up as ten. Mahavidyas, ten manifestations of the Divine
Female, preside over ten elemental regions of this cosmic
reality, as also its absolute nature – dynamic as well as static.
In metaphysical terms, Kali, Tara, Bagala, Bhairavi,
Tripura-Sundari, and sometimes Chinnamasta represent its dynamics
while Dhumavati, Matangi, Kamala and Bhuwaneshvari, its statics.

Shaivite And Tantrika Links Of Mahavidyas

Mahavidyas, the product of Shaktism, more especially of Tantrika
Shaktism, with their strong links with Sati, Parvati and Kali –
all Shiva’s spouses, are Shaivite in nature, though contrarily,
in myths, as well as conceptually, tradition subordinates Shiva
to them, not them to Shiva. As a rule they are represented as
Shiva’s superior. The cult of Shiva’s subordination to them has
its roots in various myths related to Mahavidyas’ origin. In
Sati-related myth Sati’s will prevails over Shiva, while in
Kali-related myth Shiva, fed up with Kali’s untidy habits, tries
to flee from her but with all exits blocked by her he helplessly
submits to her will. Mahavidyas have fierce forms, untidy habits,
destructive nature, mystic dimensions and strange magical,
meditative and Yogik powers. In most Tantras they are the
presiding deities of the Tantrika rituals. Though Mahavidyas are
endowed with masculine build too rough and tough for a woman,
they often manifest a feminine mind agitating against every type
of masculine arrogance, particularly when a male, whether a
father or husband, abuses, ignores, slights, or even tries to
dominate them. This agitation often transforms into dreadful
wrath, which truly defines all Mahavidyas.

Mahavidyas : Their Own Contradictions

Mahavidyas have strange contradictions. They are individualistic
in nature, yet their identity better reveals as a group. Many
forms with diverse nature as the Mahavidyas are, they are
essentially the manifestations of one Divine Being. They are
truly the concrete expression of the idea of many forms of the
One. Some of the Mahavidyas with their association with cremation
ground, corpses and destruction represent death on one hand, and
with their naked figures sometimes engaged in copulation with an
inert body lying under them represent sex and fertility on the
other, and thus a strange synthesis of opposites, the death and
the sex – cessation and creation. In an ambience where death and
destruction reigns, Mahavidyas represent what defines the life,
the timeless youth, the body’s kinetic energy and the desire to
produce, of which sex is the incessant source, and the creation.
The benevolent ones, Mahavidyas bless an adept but often by
destroying or harming someone, one of their adept’s enemies or
opponents, thus destruction being often Mahavidyas’ mode of blessing.

Mahavidyas : The Meaning Of The Term

The broad meaning of the term ‘Mahavidya’ is ‘great knowledge’.
In its wider sense the term might be taken to mean complete,
supreme, absolute, or ultimate knowledge. Tantrikas claim that
ten Mahavidyas stand for ‘ten great mantras’, for a ‘mantra’ and
‘vidya’ are the same. They assert that a mantra is the deity
manifest as the deity, at least in Tantrika way, does not emerge
unless invoked through a mantra. They claim that the deity
emerges from the mantra if it is correctly pronounced. Not merely
the deity’s vehicle, mantra is her body, being and essence. Thus,
even if the deity exists beyond it, it is in the mantra dedicated
to her, defining her form, attributes and powers, that she
becomes manifest and is realized.

Hence, ten mantras are ten manifestations of the deity – the
Divine Female. Such Tantrika thesis is just the extension of the
ancient Indian cult of the ‘shabda-brahma’ which claims ‘shabda –
sound, to be the essence of the total reality – the Ultimate that
the term ‘Brahma’ defines. The mantra – the sound condensed into
sacred syllabic utterance, manifests thus an aspect of the
Ultimate, and ten mantras, Ultimate’s all ten dimensions. Under
another sound-based Indian theory of Sphota – explosion of sound,
which claims sound to be the manifestation of cosmic power, this
Tantrika assumption is interpreted in a slightly different way.
If a Mahavidya is a mantra, the most intense condensation of
sound, and as mantra she manifests one aspect of cosmic power,
ten Mahavidyas – the ten mantras, manifest cosmic power in
aggregate. Under yet another theory, Mahavidyas are sometimes
seen as the source of ultimate knowledge – all that is to be
known. It views Mahavidyas as representing transcendental
knowledge, summed up into ten stages or objects, each of which
one Mahavidya represents.


Origin Of Mahavidyas

As regards the origin of Mahavidyas, the tradition has five myths
in prevalence; however, among them the one that relates to Sati,
Shiva’s consort and the daughter of Daksha Prajapati, one of the
Brahma’s sons, is the main and more widely known. Other four
relate to Parvati, Kali, Durga and Sharakshi, identified also as
Shakambhari. The Sati-related myth emerges with pre-eminence in
Brahaddharma Purana and Mahabhagavata Purana. Myth’s versions
appearing in later texts are almost identical to them.

Sati, the daughter of Daksha Prajapati, had married Shiva against
the will of her father who had great dislike for Shiva. For such
act of Sati Daksha was as much annoyed with his daughter and had
split all ties with her. Once, Daksha Prajapati organized a great
yajna – sacrifice. He invited people from far and wide but to
slight Shiva and Sati did not invite them. Shiva felt insulted
but was indifferent to it. However, Sati, not in a mood to
forgive her father for the insult, decided to go to her father’s
house and disrupt the yajna. Her anguish was so deep that when
Shiva forbade her from doing it, her wrath turned from her father
to him. Besides accusing him of neglecting her and thrusting his
decisions upon her, in fury her limbs began trembling and eyes –
turned red and bright as if emitting fire.

Frightened Shiva closed his eyes but when he opened them, he was
dismayed to see standing before him a woman with a fierce form.
The moment he looked at her, she began growing old. Her feminine
charms began disappearing, and her arms, branching into four. She
had disheveled hair, fiery complexion and a lolling tongue moving
from one side to other over sweat-smeared lips. She wore a
crescent as her crown. Except what a garland of severed hands
covered her figure was naked. Her form blazed and from it emitted
brilliance of a million rising suns. With her laughter she
shattered the earth and filled with awe the world from one end to
other. Frightened Shiva tried to flee from one direction to other
but a burst of laughter obstructed him on every side, and
dismayed and frightened he submitted. To further ensure that he
did not slip the woman, obviously Sati’s transform, filled all
directions around him with ten different forms. These ten forms
of Sati were ten Mahavidyas. On his query Shiva was revealed
their names and also their identity by Sati herself in some
versions of the myth as Sati’s friends, and in other, as her own
forms. A frightened Shiva allowed her to join her father’s yajna
and do as she chose. The rest of the myth is the same as in other
contexts. In annoyance an insulted and disgraced Sati jumped into
Daksha’s yajna and destroyed herself as well as the yajna.

Parvati-related myth is largely the creation of oral tradition
prevalent in Tantrika world. Parvati was Sati in her re-birth
after she had killed herself in the course of the yajna that her
father Daksha Prajapati had organized. Broken by Sati’s death
Shiva had decided not to marry again. However, Parvati, by her
great penance, subdued him to marry her. She was thus his second
wife. One day Shiva decided to leave Parvati. Parvati prayed him
not to go away from her but he did not concede. Finally, Parvati
transformed herself into ten forms and with them blocked all the
ten doors of the house and foiled his attempt to leave.
Interpreted in Tantrika way the allegory suggests that the body
is the house, Shiva, the self, ten doors, body’s ten openings –
two eyes, two ears, two nostrils, mouth, anus, penis or vagina,
and ‘brahmarandhra’ – an aperture at the top of the head, and
Parvati’s ten forms with which these ten doors were blocked, the
ten Mahavidyas. Allegorically, with the help of Mahavidyas the
adept can lock self into the body ensuring long life.

Kali-related myth is a more recent tradition appearing in a
section of contemporary vernacular Tantrika literature. As the
myth goes, in Sata or Satya-yuga, Shiva lived with Kali. One day
Shiva declared that he was tired of Kali’s untidy habits and
would not live with her anymore. Kali did not react nor stopped
him from doing so. Shiva went away and roamed from one place to
other; however, wherever he went he found a form of Kali facing
him. Not Kali alone, nine other forms, many of them identical to
Kali, encountered him. The Shakta tradition acclaims that from
his encounter with these forms Shiva attained ultimate
knowledge – ‘maha vidya’ in its ten forms. He realized that in
one form or the other the Great Goddess was present everywhere
and at all times. These forms thus became known as Mahavidyas.

Some iconographic representations, in many of which the centrally
located Devi, usually Mahishasuramardini Durga, has Mahavidyas
surrounding her, link the origin of Mahavidyas with Mahadevi’s
battle against demons. In one set of illustrations such demon is
Mahisha, and in other, these are Shumbha and Nishumbha. As
various myths contained in the Devi-Mahatmya and other early
Puranas have it, once the mighty demon Mahisha, or identically
the demons Shumbha and Nishumbha, defeated gods and ousted them
from their land. Unable to confront them gods approached Brahma
who disclosed that no male shall ever be able to kill these
demons. Thereupon gods approached Mahadevi and prayed her for
rescuing them and their land from the notorious demons. Mahadevi
promised them to help and waged a war against demons. As the
third Canto of the Devi-Mahatmya has it, too formidable to
defeat, Mahadevi created her own different forms, mainly
Sapta-Matrikas and Nava Durgas for confronting them. Shumbha
challenged Mahadevi to combat him singly which she accepted
adding that her battle companions were just her different forms.
The third Canto also mentions creation of a group of goddesses
having resemblance with Mahavidyas, though the text does not name
them as such. However, the tradition developed from various
iconographic representations of Mahavidyas contends that it is
either from Nava (nine) Durgas, that is, nine plus one, or from
the group of goddesses mentioned in the third Canto that the
concept of Mahavidyas evolved.

In yet another myth the origin of Mahavidyas is linked with
Shatakshi, the goddess having one hundred eyes. Shatakshi and
demon Durgama related myth occurs in the Devi-Bhagavata Purana.
Once upon a time, demon Durgama gained control over the universe
and forced gods into subservience. They appealed to Mahadevi to
redeem them from Durgama’s clutches. On their prayer Mahadevi
appeared in a female form having one hundred eyes. The pitiable
plight of gods, human beings and the earth moved her to tears.
She produced from her body fruits and vegetables and distributed
them among the starving beings suffering from drought. This gave
her Shakambhari name. After so relieving the mankind, gods and
all beings she resorted to arms against demons and a fierce
battle ensued. In its course the goddess created several groups
of subsidiary goddesses, Mahavidyas being among them. Around its
concluding part the text alludes to Mahadevi as Durga, obviously
for defeating demon Durgama.

Number, Names And Nature Of Mahavidyas

The number and names of Mahavidyas appearing in the Brahaddharma
Purana and Maha Bhagavata Purana are almost unanimously accepted.
Accordingly, Mahavidyas are ten in number and their names, as
appear in these texts, are Kali, Tara, Chinnamasta,
Bhuwaneshvari, Bagala, Dhumavati, Kamala, Matangi, Sodashi and
Bhairavi. The tradition also has some variants. Niruttara Tantra
talks of eighteen Mahavidyas, and Narada Pancharatna speaks of
their innumerable forms, at least seventy lacs. Devi Bhagavata
also deviates from Maha Bhagavata Purana and Brahaddharma Purana.
Devi Bhagavata contends their number to be thirteen and their
names as Kalika, Tarini, Tripura, Bhairavi, Kamala, Bagala,
Matangi, Tripura-Sundari, Kamaksha, Tuleja-devi, Jambhini,
Mohini, and Chinnamasta.

Kali

Kali, the foremost of Mahavidyas, is not merely the first of them
but also the prototype of the group. Other Mahavidyas are
sometimes considered as only Kali’s forms. In general, Kali is
perceived as having awful appearance with a figure jet black in
complexion, gaunt, wrinkled and ugly-looking. She has repulsive
fangs, shakes the world with her laughter, dances madly, wears
garlands of corpses, sits or stands on a dead body, usually Shiva’s
supine figure, feeds herself on fresh human blood and lives in
cremation ground. She takes delight in imparting destruction and
working for instability.

However, despite her ugly appearance Kali has not been for
centuries the favorite deity merely of violence-edict warriors,
thieves, plunderers, insensitive tribes and charmers but also of
poets, dramatists, sculptors and others all over the land. By one
name or other she features in Kadambari, a play by the seventh
century dramatist Banabhatta, in another seventh century work
Gaudavaho by Vakpati, and in Malati-Madhava, a Sanskrit classic
by the eighth century poet Bhavabhuti.

The eleventh century temple at Padaoli in Morena district of
Madhya Pradesh has a large size sculptural panel devoted to her,
and the Sikhs' tenth guru Guru Gobind Singh dedicated to her a
long narrative poem. The Kali-cult emerged so powerfully in
Bengal that it completely transformed its art, textile designing
and the character of rituals.

The tradition perceives black goddess Kali as the power of time
for it is her who releases and withdraws it. She signifies
abyssal darkness which contains all unknown, all known and all
that can be known, and thus she is the ultimate knowledge; it is
from this abyssal darkness that all forms rise and into which
they disappear and thus she is the ultimate reality. She
manifests the truth of contrasts, the death and the sex, the ugly
and the beauteous, the timed and the timeless. Kali is
personified wrath, whether Sati’s or that of Durga, Parvati or of
other goddesses. Wrath is not merely her instrument for undoing a
wrong. She herself is the wrath, the cosmic rage against a wrong,
and this is truly Kali’s essence. She does not attempt at winning
over the male, his ego, arrogance or wrong, by any bewitching
female charms or grace but by obstructing, terrifying and undoing him.

The unpredictable Kali stands on a point ahead of which on one
side is the accepted, and on the other, ‘not acceptable’,
loathsome, polluting, feared or forbidden. While she challenges
and shatters the accepted, she embodies into her being the
polluted, loathed and feared and thus, when meditated on,
releases the adept from clutches of conventionality, all that is
worn out, has rotted or is rotting, and prepares his mind to
accept the reality as a whole, ugly and fierce in special. When
invoked and pleased, she endows the Tantrika with such powers as
undo every kind of wrong, whether affected by man or by nature in
any form whatever.


Tara

Tara, who as a rule is listed as number two among Mahavidyas, is
second to none among them except Kali. Not so much in Hindu or
Brahmanical pantheon as in the Buddhist, Tara has a much wider
presence outside the Mahavidya-periphery. Alike she has an early
presence datable to around the fourth-fifth centuries of the
Common Era and emerges thus much before the Mahavidya-cult
evolved. With an appearance identical to Kali she has always
enjoyed considerable popularity and importance in Hindu pantheon,
especially among Tantrika deities. In iconographic
manifestations, like Kali, the naked bodied Tara is also
associated with Shiva and is often represented as standing on his
supine body, and sometimes as copulating. Of the Tantra Tara is
as potential a deity as Kali. Besides her place in Hindu
tradition she is the central deity of the Buddhism, especially
the Tibetan, where she is worshipped almost like a national
deity. Tara also occupies a significant position and wields
considerable influence in Jainism. She has strong Vaishnava links
and is claimed to have been created to defeat the thousand headed Ravana.

Not merely in the Buddhist myths that portray Tara as the goddess
of tempestuous seas helping the masses wade their path to safety
and redemption, even in Hindu and Jain traditions she is revered
as the goddess who guides out of troubles and all kinds of
turmoil. Almost all theologies equate sea with life, miseries,
misfortunes and trials with sea’s uncertainties and upheavals,
and a being, with the sailor paddling a boat across it. Thus,
allegorically Tara, the goddess of tempestuous oceans, is also
the goddess who helps the being wade across all difficulties and
misfortunes occurring in life and attain salvation. In some
texts, Tara is also seen as the potential of re-creation, which
equates her with Saraswati possessing such potential in Hindu
tradition. In Jain tradition Tara and Saraswati merge into each
other. Here Tara has highly diversified role and form.
Brahaddharma purana perceives Tara as representing time, the same
as does Kali.

Apart such similarities, the Buddhist Tara is somewhat different
from the Tara in Hindu tradition, particularly the Tantrika.
Except rarely, in Buddhism, Tara has been conceived as a
benevolent, compassionate, gentle and spirited young woman eager
to help her devotees and to protect them from every harm. On the
contrary, as one of the Mahavidyas, which is essentially a Hindu
context, Tara is always fierce, often having a form which strikes
with horror, and as exceptionally moody and harmful. Wrath is not
unknown to Buddhist Tara. She sometimes gets angry and plunders
harm. In the like way, though rarely, Hindu Tara is benevolent
and compassionate.


Chinnamasta

Chinnamasta, one of the three most popular deities of Tantrism,
other two being Kali and Tara, seems to have developed out of
Vajrayogini cult of Tibetan Buddhism. Vajrayogini, an early
Tantrika deity of the Tibetan Buddhism, has a form exactly
identical to Chinnamasta. Chinnamasta is a creation of shocking
imagery – gruesome decapitation of her own being representing
life’s cessation for feeding further life, copulating couple
under her feet perceived as feeding the goddess with life’s
energy, blood-consuming nude females and cremation ground all
around. In her form she combines life, sex and death, and all in
a dramatic and stunning manner manifesting the ages-old idea that
they – life, sex and death, are inseparably entwined and are
parts of a unified system. Chinnamasta manifests the truth that
it is in destruction of life that the life is nourished, that
life necessitates death, and that sex is the ultimate instrument
of perpetuating more life; and further, that this life would
decay and pave the way for death, and then again from death to
life. Chinnamasta is thus the symbol of the process of recycle
from life to death and back and all in unceasing continuity.

Various Tantrika hymns invoke Chinnamasta as Digambari – nude,
symbolically the one with no coverings of illusion, and as
full-breasted, suggestive of the motherhood being ceaseless in
her and of her role as the eternal preserver. She wears a garland
of severed human heads symbolizing wisdom and power and sometimes
a pair of shears or a sword. Texts have prescribed for her blood
red complexion with which she symbolizes life in its incessant
flow. In her usual iconography she holds her severed head in her
left hand. One of the three jets of blood that spurt from her
neck streams back into the mouth of her own severed head, and
other two, into those of the yoginis – Dakini and Varnini, all
suggesting that death nourishes life and thus the process of
recycle continues. The copulating couple under the feet of the
goddess is usually Kamadeva, the personified sexual desire, and
his wife Rati. Chinnamasta, standing on their backs draws from
the couple, as also from the lotus on which the couple lies, life’s
energy and channels it for perpetuating more life.

Amongst all Devi forms, even Durga and Kali who sustain and
promote life from the sacrifice offered to them by their
devotees, Chinnamasta destroys her own life to sustain and
promote it beyond her in forms other than her. More than
Annapurna or Shatakshi who only gives, Chinnamasta is one who
receives life from the copulating couple and with far greater
vigor passes it on to others and is thus a greater giver and more
accomplished model of cosmic unity – the life that the lovemaking
couple represents, the death which reveals in decapitating
herself and the nourishment which manifests in feeding the
flanking yoginis.


Other Mahavidyas

Other seven Mahavidyas, namely, Sodashi or Tripura-Sundari,
Bhuwaneshvari, Bhairavi, Dhumavati, Bagala, Matangi and Kamala,
have relatively limited role and significance both in Tantrika
practices as well as worship traditions.

Sodashi, also alluded to in some texts as Tripura Sundari, the
most beauteous in three worlds, and as such having three forms
defining three stages – Tripura-bala, the virgin,
Tripura-Sundari, the beauteous, and Tripura Bhairavi, the
terrible, is perceived as one with timeless youth and beauty,
though not without frowns or angry looks. She is sometimes seen
as the embodiment of sixteen modifications of desire and at other
time as one created to arouse Shiva to sexual activity so that
his creative powers could stimulate the world. In Hindu pantheon
she seems to have emerged in around eleventh-twelfth centuries
and had perhaps a few temples too, with one at Tehara near
Bheraghat, Jabalpur, in Madhya Pradesh, devoted to her. Like Kali
and Tara, Tripura-Sundari is also perceived as swaying all gods,
though perhaps with her paramount beauty, not by Kali-like
superior power. This superior position of Sodashi reflects in her
iconography in which Brahma, Vishnu, Rudra and Indra or Yama are
represented as supporting on them the throne on which she sits as
its four legs.

The lotus goddess Kamala as Shri makes a debut in the Shri Sukta
in the Rig-Veda; as Lakshmi she has considerable presence in
Buddhist sculptures datable to third-second century B. C. to
second century A. D. and in Hindu pantheon and Puranas all
through from fifth-sixth century onwards. The Devi-Mahatmya part
of the Markandeya Purana has devoted to her a full Canto by the
name Mahalakshmi. As Mahavidya she does not enjoy the same
prestige as she enjoys as Lakshmi in worship tradition. As in
Vaishnava tradition, Kamala is invoked in Tantrika rituals for
riches, especially the hidden treasures of bygone days.

Like Chinnamasta Bagalamukhi, Dhumavati and Matangi are rarely
mentioned except as Mahavidyas. They are broadly Tantrika deities
and are seen mostly in Tantrika contexts. Except that in some of
the Tantrika pithas – seats, such as at the Pitambara Pitha,
Datia, in Madhya Pradesh, where Dhumavati has her independent
shrine, an individual structure devoted to any of them, or even a
smaller one of the status of a sub-shrine, is a rarity. At some
Tantrika pithas these goddesses along with other Mahavidyas are
carved or painted, inside or outside, on the sanctum walls of the
main deity shrine. In Himalayan regions such representations are
more common. Bagala, the goddess with a crane-like face,
gold-complexioned and elegantly attired and bejeweled, is a
powerful Tantrika deity who paralyses and thus destroys all
negative forces that obstructs adept’s progress or well being.
Toothless Dhumavati with long pendulous breasts, having pale
complexion, wearing white but mudded attire, and riding a
crow-driven cart, manifests unsatisfied desires and hence has
been conceived as a widow. She has a large crooked nose and
quarrelsome nature and uses diseases as her weapon to punish the wicked.

Matangi, usually a beautiful young woman with dark or black
complexion, spreads music and education enabling human beings to
acquire liberating wisdom. She manifested the power of domination.

The tradition considers her as an outcaste goddess.

Bhairavi, capable of multiplying herself into infinity of beings
and forms and broadly a fierce goddess, the consort of Bhairava,
has been conceived identically to Bhairava, both in form as well
as mental frame. She has complexion as bright as a thousand
rising suns. She wears garland of skulls and garments made from
skins of demons she killed and she has her feet and breasts
covered with blood.

Though better known as the goddess of the Mahavidya group,
Bhuwaneshvari is also known in context to Vishnu’s boar
incarnation and a few other myths. Broadly, the large breasted
and pleasantly smiling Bhuwaneshvari represents substantial
forces of the material world and is revered as one the world is
whose extension.


Worship Of Mahavidyas

Except Kali, Tara and Tripura-Sundari, as also Kamakhya, a
Mahavidya in some texts, who are in worship from early times the
tradition of Mahavidyas’ temple worship has never been not in
prevalence. The Mahavidyas are usually the objects of Tantrika
worship of which there are many methods, the more popular among
them being Vamachara path characterized primarily by the Pancha
tattva, or pancha makara – the ritual performed by five forbidden
or highly polluting things, namely, meat, fish, wine, ‘mudra’, a
type of grain that has hallucinogenic properties, and intercourse
with a woman.

===========================================
This article by Prof P. C. Jain and Dr. Daljeet
===========================================

----------------------------------------
For Further Study
----------------------------------------

Tantrasara

Shaktapramoda

Shaktisangama-tantra

Guhyatiguhya-Tantra

Chamunda-tantra

Shrimad Devi Bhagavata, Chaukhambha Sanskrit Pratishthan, Delhi

Devimahatmyam, tr. By Devadatta Kali, Delhi

Dahejia, Vidya : Devi, The Great Goddess, Washington D.C.

Menzies, Jackie : Goddess, Divine Energy, Art Gallery, NSW

Kinsley, David : Hindu Goddesses, Delhi

Hawley, J. S. & Wulff, Monna Marie (ed) : Devi, Goddesses of
India, Delhi

Rosen, Steven J. (ed) : Vaishnavi, Delhi

Mookarjee, Ajit & Khanna, Madhu : The Tantrika Way, Boston

Kanwar Lal : Kanya and the Yogi, Delhi

Daljeet Dr., and Jain, P. C. : Indian Miniature Painting, New
Delhi

Jain, P. C. : The Magic Makers, New Delhi

Upadhyaya, Padma : Female Images in Museums of Uttar Pradesh and
Their Social Background, Delhi.

------------------------------------------------------------

Geetha Sambasivam

unread,
Oct 17, 2012, 3:18:04 AM10/17/12
to mint...@googlegroups.com

uesday, October 16, 2012

நவராத்திரி நினைவுகள். nostalgia

கல்யாணம் ஆகி வந்ததும் முதல் முறையாக் கொலு மூணு வருஷங்களுக்குப் பின்னர் எங்க பொண்ணு பிறந்து அவளுக்கு ஒரு வயசு ஆனதும் தான் வைச்சோம்.  அப்பா மதுரையிலிருந்து பொம்மைகளை, அனுப்பி இருந்தார்.  எல்லாம் எங்க வீட்டுக் கொலுவுக்கு என் தம்பி பிறந்தப்போ வாங்கினது.  புதுசா பொம்மையே வாங்கித் தரலைனு என் தம்பி அப்போத் தான் புதுச்ச்ச்சா வேலையிலே சேர்ந்திருந்தான்.  ஒரு கோபுரம் பொம்மை, இரண்டடி உயரத்துக்கு வாங்கிக் கொடுத்தான். அந்த பொம்மையை வாங்கறச்சே பேரம் பேசத் தெரியாம நானும், தம்பியும் (ஹிஹிஹி, நாங்க சின்னப் பசங்க தானே) நூறு ரூபாய் சொன்ன பொம்மையை சாமர்த்தியமாக ஐம்பது ரூபாய்னு பேசி வாங்கினோம்.  

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மறுநாளே தி.நகர் ரங்கநாதன் தெருவின் கொலுப் படிகளில் அந்த பொம்மை பதினைந்து ரூபாய்க்குக் கிடைத்தது தெரிய வந்தது.  அப்போத் தெருவிலே எல்லாரும் கூப்பிட்ட உடனே வருவாங்க. அதோட இந்த ஆண் குழந்தைகள் எல்லாம் வாசல்லே வந்து நின்னுட்டு, மாமி, சுண்டல், அக்கா, சுண்டல்னு கூப்பாடு போடுவாங்க.  அவங்களுக்குக் கட்டாயமா ஏதேனும் தந்தே ஆகணும்.  இல்லைனா மெயின் ஸ்விட்சை அணைச்சுட்டுப் போயிடுவாங்க. ஆகவே பயந்துட்டுக் கொடுத்துடுவேன். அப்போல்லாம் கீழே பார்க், தெப்பக்குளம், மலை, மிருகக் காட்சி சாலைனு அலங்காரங்கள் செய்வோம்.  நிறைய பொம்மைகள் அதற்கேற்றாற்போல் இருந்தன.  போதாதுக்குச் சங்குகள், சிப்பிகள், சோழிகள்னு இருந்தன.  இப்போ எல்லாம் எங்கே போச்சு? தெரியலை! அப்புறமா ராஜஸ்தானுக்குப் போகும்படி ஆச்சு.  அங்கே எல்லா பொம்மைகளையும் தூக்கிட்டுப் போக முடியாதுனு நம்ம சர்வாதிகாரி சொல்லிட்டு எல்லாத்தையும் சென்னையிலேயே எங்க அண்ணா வீட்டிலே போட்டுட்டுப் போயிட்டோம்.  ஆனாலும் கொலு வைத்தே ஆகணும்னு எனக்கு. என்ன செய்யலாம்?

Geetha Sambasivam

unread,
Oct 17, 2012, 3:19:20 AM10/17/12
to mint...@googlegroups.com

Wednesday, October 17, 2012

பொம்மைகளைக் காணோமே!

எனக்கு ஆரம்பிச்ச கொலுவை நிறுத்த மனமில்லை.  அம்மா வீடு, மாமியார் வீடு இரண்டிலும் கொலு உண்டு.  வைச்சே ஆகணும்னு இருந்தேன்.  அங்கே, இங்கே விசாரிச்சு பொம்மைகள் கிடைக்கும் ஒரு கடையைப் பத்தி அலுவலக ஊழியரிடம் விசாரித்து வந்தார் நம்ம மறுபாதி.  சாயந்திரமா இரண்டு பேருமாக் கடைத்தெருவுக்குப் போனோம்.  ஒரே வீதி தான் கடைத்தெரு.  ஆனால் அங்கே கிடைக்காத சாமானே இருக்காது.  நண்பர் சொன்ன கடைக்குப் போய் பொம்மைகளைப் பார்த்தால் எல்லாம் குழந்தைங்க விளையாடற மாதிரியான பொம்மைங்க.  சப்ப்னு போய்த் திரும்பலாம்னு இருக்கிறச்சே என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம், எதிரே நடைபாதையில் ஒரு நடைபாதைக்கடையில் பலவிதமான பொம்மைகள்.  தெருவின் குறுக்கே பாய்ந்து ஓடினேன்.  அந்த பொம்மைக்கடையில் முதலில் என் கண்ணில் பட்டது யார்னு நினைச்சீங்க?

நம்ம நண்பர் தான்.  அவரைப் பார்த்ததுமே குதூகலம் பொங்கி வழிய எடுத்துத் தனியா வைச்சுட்டேன்.  பின்னர் ஒரு ராதா, கிருஷ்ணன் விக்ரஹம், அம்பாஜி(நம்ம ஊர் அம்மன் தான் அங்கேயெல்லாம் மரியாதையோட அம்பாஜி ஆயிட்டாங்க) விக்ரஹம் ஒண்ணு, பள்ளி கொண்டவர் இவை கிடைத்தன. எனக்குப் புதையலே கிடைச்சாப்போல இருந்தது.  எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு வந்தோம்.  எங்க பொண்ணு விளையாடத் துணியால் பஞ்சு அடைக்கப்பட்ட பொம்மைகள் பல உருவங்களில் பெரிதும், சிறிதுமாக இருந்தன.  எல்லாமே ஆண் பொம்மைகள்.  அதோடு ஒன்றிரண்டு மரப்பாச்சிகளும் கிடைத்தன.  இந்த ஆண் பொம்மைகளில் எல்லாம் டிரஸ் தைத்து அலங்கரிக்கப் பட்டு இருக்கும்.  அதிலே ஒரு பொம்மைக்குப் புடைவை கட்டிப் பெண்ணாக மாற்றினேன்.  மற்ற பொம்மைகளில் சின்னது ஒண்ணு எங்க பொண்ணு தூங்கறச்சே கூடப் பக்கத்திலே இருக்கும்.  அதை வைத்துக்கொண்டு வாயில் விரல் போட்டுப்பாள்.  அதை அவளிடமிருந்து பிரிக்க முடியாது.  அதை விட்டுட்டு, நல்லதனமாச் சொல்லி மற்ற பொம்மைகள், இன்னும் அவள் வைத்திருந்த, கார், ஏரோப்ளேன் போன்ற விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டன.

ஊரிலிருந்து சாமான்கள் கொண்டு வந்திருந்த கள்ளிப்பட்டி, ஜாதிக்காய்ப் பெட்டிகள் படியாக மாறின.  கடைசிப் படிக்கு ஒரு சின்ன பெஞ்ச் உதவியது.  நம்ம மறுபாதியோட ஜரிகை வேஷ்டியைப் போட்டுப் படிகளை மூடியாச்சு.  பொம்மைகளை வைச்சாச்சு.  கலசம் வைக்கவில்லை.  கலசம் வைத்தால் கொலுப்படியைத் தொட முடியாது.  அதோடு பூஜையும் செய்து தினம் இருவேளை நிவேதனமும் பண்ணணும். சின்னக் குழந்தையை வைச்சுக்கொண்டு எதுவும் முடியாது.  மேலும் நான் பொம்மையைப் படியில் வைக்க, எங்க பொண்ணு அதைக் கீழே வைக்கனு மாறி மாறிச் செய்து கொண்டிருந்தோம்.  அவள் கிட்டே (இரண்டு வயசு முடிஞ்சிருந்தது) எப்படிப் புரிய வைப்பது.  எல்லாம் உம்மாச்சி, உம்மாச்சினு சொல்லி நான் படியில் வைக்க, அவளும் உம்மாச்சி, உம்மாச்சினு சொல்லிக் கொண்டே கீழே இறக்கிடுவாள்.  எப்படியோ சமாளித்துக்கொண்டு வைத்துவிட்டு அந்த ஸ்டோர் ரூம் கதவைச் சமையலறைப்பக்கமாய்ச் சார்த்தித் தாழ்ப்பாளிட்டேன்.  குழந்தை திறந்து கொண்டு போகாமல் இருக்கணுமே;  அதுக்குத் தான்.  ஆனால் குழந்தையைத் தான் என்னால் தடுக்க முடிந்தது.  இன்னொரு விருந்தினர் அழையா விருந்தாளி அவரைத் தடுக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் ஸ்டோர் ரூமிலிருந்து காப்பிக் கொட்டை வறுத்து அரைத்து எடுக்கணுமேனு கதவைத் திறந்து உள்ளே போனேன்.  குழந்தையும், அவ அப்பாவும் நல்ல குறட்டை.  உள்ளே போன நான் கத்தின கத்தலில் இரண்டு பேரும் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தனர்.  நானோ அதன் பின்னர் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனேன்.  பொம்மைகள் ஒன்றைக்கூட காணோம்.  பிள்ளையார் மட்டும் கடைசிப்படிக்குக் கீழே உருண்டு கிடந்தார்.  மற்றவை???

N. Kannan

unread,
Oct 17, 2012, 3:27:52 AM10/17/12
to mint...@googlegroups.com
2012/10/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> பொம்மைகள் ஒன்றைக்கூட காணோம். பிள்ளையார் மட்டும் கடைசிப்படிக்குக் கீழ
> உருண்டு கிடந்தார். மற்றவை???
>

என்னப்பா! நவராத்திரி படத்தைவிட த்ரில்லிங்கா இருக்கு!

க.<

Bonus: http://youtu.be/DqWKRny75nc

N. Kannan

unread,
Oct 17, 2012, 3:28:42 AM10/17/12
to mint...@googlegroups.com
நவராத்திரி இரண்டாம் நாள் - சில குறிப்புகள்

அம்பிகையை இன்று (17.10.2012 புதன்கிழமை) மயில் வாகனம், சேவல் கொடியுடன்
அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி' என்றும், "குமார கண நாதம்பா'
என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள்
இவள்.

மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள்.
சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின்
உதவியை நாடினர். அவருடைய நெற்றிக் கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை
சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது.
கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி
"கந்தன்' என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும்
ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல்' என்றால் "வெற்றி' . அந்த
சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத்
திகழும் வெற்றிவேலை, அன்னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி
வந்து சேரும்.

நைவேத்யம் : தயிர்சாதம்

தூவவேண்டிய மலர் : முல்லை

பாட வேண்டிய பாடல்

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

நன்றி: தனிமடல் மணி

N. Kannan

unread,
Oct 17, 2012, 11:26:22 AM10/17/12
to mint...@googlegroups.com
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.


நவராத்திரி வழிபாடுகளற்ற நாடுகளில் வாழ்வோருக்கு இதமளிக்கும் வண்ணம் மிக
நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட நவராத்திரி பூஜை விழியம் இதோ! நான்
இலண்டனில் இருந்தவரை தமிழகத்தை மறந்தே போனேன். தமிழ் மட்டும் பேசி
லண்டனில் வாழ்ந்துவிட முடியும். விவேகாநந்தர் கண்ட கனவு எப்படியெல்லாம்
உருக்கொள்கிறது பாருங்கள்:

http://youtu.be/0v7PgEJxcIM

நா.கண்ணன்

Subashini Tremmel

unread,
Oct 17, 2012, 5:28:44 PM10/17/12
to rajam, மின்தமிழ், Subashini Tremmel


2012/10/16 rajam <ra...@earthlink.net>
..

இன்று அவள் கோயிலை வலம் வரும்போது என் வணக்கத்தையும் தெரிவிக்கவும். அவளுக்காக அவள் நாட்டுப் பச்சை ஆலிவ் (பதப்படுத்தாதது; raw, uncured) பயன்படுத்தி இரண்டு உணவுப்பொருள் தயார் செய்தேன்; அது உங்கள் பிறந்த நாளை முன்னிட்டும்.

இந்த ஆலயம் மிக நேர்த்தியான வடிவம் கொண்டது. நல்ல சூரிய வெளிச்சம் இருந்த ஒரு நாளில் நடக்கச் சென்ற போது மிக அழகான  படங்கள் எடுத்துள்ளேன். அதனை பினன்ர் ஒருநாள் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தச் சமையலைப் பார்த்தால் வெண்டிக்காய் வருவல் போலத் தெரிந்தது. அழகாக இருக்கின்றது. நன்றி ராஜம் அம்மா. என் பெயரைச் சொல்லி சாப்பிட்டு ரசித்தீர்கள் இல்லையா? :-)

சுபா
oliveCurryEtc_1.jpg

N. Kannan

unread,
Oct 18, 2012, 4:06:17 AM10/18/12
to mint...@googlegroups.com
நவராத்திரி மூன்றாம் நாள்



அம்பிகையை வராஹியாக அலங்கரிக்கவேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். 

மதுரை மீனாட்சியம்மன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி. 

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை.

இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.

நைவேத்யம் : எலுமிச்சை சாதம்

தூவவேண்டிய மலர்கள் : மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

Geetha Sambasivam

unread,
Oct 18, 2012, 5:04:26 AM10/18/12
to mint...@googlegroups.com

Thursday, October 18, 2012

பாஷை புரியாததால் வந்த எதிர்பாரா விருந்து!

ராஜஸ்தானிலே நாங்க இருந்தாலும் சுற்றிலும் ஒரே காடு மயம்.  அதுவும் ராணுவக் குடியிருப்புகள் இருக்கும் கன்டோன்மென்ட் வேறே.  ராணுவப் பராமரிப்புகளிலே இருக்கும் செடி, கொடிகள், மரங்கள்னு ஒரே பசுமைமயம் தான்.  எங்களுக்குக் கொடுத்திருந்தது தனி வீடு.  சுற்றிலும் குறைந்த பக்ஷமாக ஒரு ஏக்கர் நிலம்.  அதிலே வேப்பமரங்கள், கருவேலமரங்கள், அரச மரங்கள்னு இருந்தது போக வீட்டுக்கு முன்னாடியும், பின்னாடியும், வீட்டின் ஒரு பக்கத்திலேயும் நாங்க காய்கறித் தோட்டம் வேறே போட்டிருந்தோம்.  ஏற்கெனவே காட்டு வாழ் ஜந்துக்கள் இருந்ததுன்னா, போறாக்குறைக்கு எலிகளும் நிறைய.  ஒவ்வொரு எலியும் குறைந்த பக்ஷமாக ஒரு பெருச்சாளி அளவுக்கு இருக்கும்.  முதல்லே பயந்தே போனேன்.  இது எலிதான்னு அந்த ஊர்க்காரங்க சத்தியமே செய்தாங்க.  அப்புறமா தினம் தினம் எலிகள நான் சமைக்கும்போதும் கிட்டே உட்கார்ந்து கொண்டு உப்புச் சரியாப் போட்டேனா? காரம் சரியா இருக்குமா?  புளி கரைத்தேனானு கவனித்துக்கொண்டே இருக்கும்.  மாமியார் கெட்டாங்க!

ஆகவே ஒரு நாள் எலி வரலைனாக்கூட என்னடா இது, இன்னிக்கு என்ன ஆச்சு? உடம்பு, கிடம்பு சரியில்லையானு யோசிப்பேன்.  பொழுதே போகாது.  எங்க பொண்ணோ விளையாடத் துணை இல்லையேனு தேடுவா.  ஆனால் நாங்க பகலிலே சமையலறையிலேயே இருந்ததாலேயே என்னமோ ஸ்டோர் ரூம் பக்கம் எலிகள் போய்ப் பார்க்கவில்லை.  அது தெரிஞ்சிருந்தா கொலுவை அங்கே வைச்சே இருக்க மாட்டேன்.  வாசல் பக்கமும் திறக்கலாம் அந்த அறைக்கதவை.  சமையலறையில் இருந்தும் திறக்கலாம். எந்தப் பக்கம் இருந்து போச்சுனு தெரியலை.  எல்லாம் தலைகீழ்.  பொம்மைகள் எல்லாம் உருட்டித் தள்ளப்பட்டு படிகளுக்கு அடியில் கொண்டு போய்ப் போட்டிருந்தது.  அத்தனை அழகாய்க் கோலம் போட்டுப் படிகளை வைச்சதை நகர்த்தும்படி ஆச்சு.  இப்போ என்ன பண்ணறது?  எலி விட்டு வைக்காது போலிருக்கேனு யோசிச்சேன்.  அப்புறமா சரி, பகல்வேளையில் மட்டுமே கொலுவை வைச்சுப்போம், ராத்திரி வேளையில் பொம்மைகளை எடுத்து வைத்துவிடுவோம்னு முடிவு பண்ணி அப்படியே செய்தேன்.  தினம் தினம் காலம்பர வைக்கிறதும், ராத்திரி படுக்கிறச்சே எடுத்துப் பத்திரமா வைக்கிறதுமா பொழுதைக் கழிக்கவும் முடிஞ்சது.

அடுத்து நிவேதனம், வெற்றிலை, பாக்கு கொடுப்பது போன்றவை.  ராஜஸ்தான் காரங்களுக்கு நான் வைச்ச கொலுவே புதுசா இருந்ததுனால், கூப்பிட்டது அதை விடவும் புதுசா இருந்தது.  எங்க குடியிருப்பிலேயே இருந்த ஒரு சில தென்னிந்தியக் குடும்பங்களுக்குச் சொல்லி அனுப்பினேன்.  எங்க வீடு தனி வீடுனு சொன்னேன் இல்லையா?  தனி என்றால் தனிஈஈஈஈஈஈஈஈஈஈ.  வீட்டைப் பூட்டிக் கொண்டு தான் பக்கத்து வீட்டுக்குப் போக வேண்டும்.  எங்க வீட்டிலே இருந்து குறைந்தது ஒரு பர்லாங்காவது நடந்து வெளியே வந்து  பின்னர் பக்கத்து வீட்டுக்குப் போக இரண்டு பர்லாங்காவது நடந்து ;அங்கேயும் உள்ளே செல்ல ஒன்று முதல் இரண்டு பர்லாங்காவது நடந்து போய்ப் பார்த்துச் சொல்லணும்.  அப்படிப் பக்கத்து வீட்டிலே இருந்த மலையாளிக் குடும்பத்துப் பெண்மணியிடம் சாயந்திரம் வரச் சொல்லிட்டு வந்தேன்.  நான் தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும், ஹிந்தியிலேயும் சொல்ல, அந்தப் பெண்மணிக்கு மலையாளம் மட்டுமே தெரியும்.  புரியும்.  என்ன புரிஞ்சிண்டாங்களோ தெரியலை.

அவங்க சாயந்திரம் வரச்சே கணவனையும் அழைச்சுண்டு வந்தாங்க.  இரண்டு பேரும் இங்கே சாப்பாடுனு ஏதோ தப்பாப் புரிஞ்சுட்டு வந்திருக்காங்க.  அவங்க கணவர் கிட்டே பேசினதிலே நம்ம ரங்க்ஸ் புரிஞ்சுட்டு என்னைத் தனியாக் கூப்பிட்டு என்ன சொன்னேனு கேட்க, நான் மஞ்சள் குங்குமத்துக்குத் தானே கூப்பிட்டேன்னு சொல்ல, அவங்க இங்கே சாப்பாடுனு நினைச்சுட்டு வந்திருக்காங்கனு சொல்ல, நான் திரு திரு திரு திரு.  அவங்க கிட்டே விளக்கலாம்னு சொன்னேன்.  அப்புறமா ஒரு மாதிரியாப் புரிய வைச்சோம்.  என்றாலும் அந்தப் பெண்மணிக்கு ஏமாற்றம் போலிருக்கு.  பேப்பரோ, தொன்னையோ கிடைக்காமல் வாழை இலையில் கட்டிக் கொடுத்த சுண்டலைப் பிரித்து அங்கேயே வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.  அவர் இருக்கும் இருப்பைப் பார்த்தால் சாப்பாடு போடாமல் கிளம்ப மாட்டார் போலிருந்தது.  முழித்துக்கொண்டிருந்த என்னைக் காப்பாற்ற அப்போது வந்தது ஒரு கர்நாடகப் பெண்மணி.  அவங்களுக்குக் குறைச்சு மலையாளமும் அறியும்.  ஆகவே வந்தவுடனே நிலைமையைப் புரிந்து கொண்டு அந்தப் பெண்மணியோடு மலையாளத்தில் சம்சாரிச்சு விளக்கப் பக்கத்துவீட்டுப் பெண்மணிக்கு ஒரு வழியாப் புரிஞ்சது.  பிழைச்சோம்.

இல்லாட்டி தோசை மாவு தயாரா இருந்தது.  சாம்பார் இருந்தது;  தோசை வார்த்துக் கொடுக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.  ஆனால் விருந்தை இல்லையோ அவங்க எதிர்பார்த்துட்டு வந்திருக்காங்க.  பாவம்,  இப்படியாக ராஜஸ்தானின் முதல் கொலுவில் ஒரு பெண்ணை ஏமாற்றிய பாவத்துக்கு உள்ளானேன்.  அது முதல் யாரையானும் கூப்பிடறதா இருந்தா நான் நேரிடையாச் சொல்லாமல் ரங்க்ஸை விட்டு அலுவலகத்திலேயே சொல்லச் சொல்லிடுவேன்.  நம்ம பாடு நிம்மதி.  அப்புறமா ரொம்ப நாட்கள் அதையே சொல்லிச் சொல்லிச் சிரிச்சுட்டு இருந்தோம்.   இப்படியாக ராஜஸ்தானில் சுமார் நாலு வருடங்கள் கொலு வைத்துக் குப்பை கொட்டினேன்.  அப்புறமா அங்கே இருக்கிறவங்களுக்கு இது பழக்கமாவும் ஆச்சு.

Geetha Sambasivam

unread,
Oct 18, 2012, 5:06:24 AM10/18/12
to mint...@googlegroups.com
இந்த சப்த மாதர் வழிபாடும், நவதுர்கை வழிபாடும் கூட எழுதினேன்.  பின்னால் சமயம் வாய்த்தால் போடுகிறேன்.  இது தினமலர்ப் பத்திரிகையில் தினம் தினம் வருகிறது கண்ணன். இதே போல் மார்கழி மாதத்துக்கும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி விளக்கவுரை போடுவார்கள்.

2012/10/18 N. Kannan <navan...@gmail.com>
நவராத்திரி மூன்றாம் நாள்




என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

நன்றி: தனிமடல் மணி


N. Kannan

unread,
Oct 18, 2012, 6:35:22 AM10/18/12
to mint...@googlegroups.com
2012/10/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

>
> இந்த சப்த மாதர் வழிபாடும், நவதுர்கை வழிபாடும் கூட எழுதினேன். பின்னால்
> சமயம் வாய்த்தால் போடுகிறேன். இது தினமலர்ப் பத்திரிகையில் தினம் தினம்
> வருகிறது கண்ணன்.

ஓ! அப்படியா? மணி என்பவர் எனக்கு அனுப்புகிறார்.
நல்ல விஷயம்தானே! இருக்கட்டும் என்று போட்டேன்.

க.>

Kamala Devi

unread,
Oct 20, 2012, 5:17:32 AM10/20/12
to mint...@googlegroups.com
இப்படியும் ஒரு பரவசம் உண்டு என்பதனை அறிவித்தமைக்கு நன்றி
க.

http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 17/10/12, N. Kannan <navan...@gmail.com> wrote:

Kamala Devi

unread,
Oct 20, 2012, 5:18:58 AM10/20/12
to mint...@googlegroups.com
தேனீ சார்,
எனக்கு நவராத்ரி நினைவுகள் எழுத இயலாது.ஆனால், பண்டிகை அனுபவங்கள் மனதி வருடும் சில சேதிகள் உண்டு.
க.

http://www.kamalagaanam.blogspot.com

--- On Tue, 16/10/12, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:

From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
Subject: Re: [MinTamil] நவராத்திரி சிந்தனைகள்

Geetha Sambasivam

unread,
Oct 20, 2012, 8:38:30 PM10/20/12
to mint...@googlegroups.com

ஜாம் நகருக்கு வந்து வெற்றிலை, பாக்கு வாங்கிக்கோங்க!

இந்த வருஷம் முதல் நாளில் இருந்தே சுண்டல் நல்ல போணியாகிட்டு இருக்கு.  நேத்திக்கு மொச்சைக்கொட்டைச் சுண்டல், ருசி பார்க்கக் கூட எங்களுக்குக் கிடைக்கலை.  அதிலும் சின்னப் பெண்குழந்தைகள் ஐந்தாறு பேர் தினமும் வந்து அமர்க்களப் படுத்திவிட்டுப் போகிறார்கள்.  மனதிலே கொலு வைத்ததன் ஜன்ம சாபல்யம் இந்த வருஷம் ஏற்பட்டுள்ளது. இதுவே சென்னையில் என்றால் நிஜம்ம்மாவே வெற்றிலை, பாக்கு, பூரண கும்பத்தோடு எடுத்துட்டுப் போய்க் கூப்பிட்டாலும் எதிர் வீட்டுக்கார மாமியைத் தவிர வேறே யாரும் வர மாட்டாங்க. :( அவங்க வீட்டுக்கு நானும், எங்க வீட்டுக்கு அவங்களும் தான் சுண்டல் பரிமாற்றமும், வெற்றிலை, பாக்குப் பரிமாற்றமும் செய்துப்போம்.

ஆனால் நாங்க வடக்கே இருந்தப்போ கூடப் பரவாயில்லை. ராஜஸ்தானில் இருந்தப்போ நிறைய நண்பர்கள் இருந்ததால் அவங்க மனைவிகளை எல்லாம் கூப்பிட்டு நவராத்திரி வெற்றிலை, பாக்குக் கொடுத்துப் பழக்கம் செய்துட்டு வந்தாச்சு.  அடுத்து குஜராத் போனப்போ எங்க யாருக்குமே (நம்ம ரங்க்ஸைத் தவிர) ராஜஸ்தானை விட்டுப் போக மனசே இல்லை.  ஆனால் ஊர் மாற்றல் கொடுத்தால் போய்த் தானே ஆகணும்.  குஜராத் வரச்சேயே வேப்பமரம் இருக்கா, காக்காய் இருக்குமா, கிளி, குயில் இருக்குமானு ஒரே கவலை.  அங்கே வேப்பந்தோப்புக்குள்ளே தான் வீடுனு தெரிஞ்சதும் கொஞ்சம் நிம்மதி.  வந்த சில நாட்களிலேயே நம்ம சுப்புக்குட்டிகளும் வந்து ஆஜர் கொடுத்துத் துணைக்கு நாங்களும் இருக்கோம்னு சொல்லிட்டுப் போச்சுங்க.  ஒவ்வொண்ணும் எத்தனை நீளம்ங்கறீங்க?  சும்மா ஐந்தடி சுப்புக்குட்டிங்கல்லாம் சர்வ சாதாரணமா நிலைப்படியில் நீள நெடுகப் படுத்துக்கும்.  கையிலே கம்பை வைத்துக்கொண்டு தான் ராத்திரி படுத்துப்போம்.  அது பாட்டுக்கு தானும் மெத்தையிலே படுத்துப்பேன்னு வந்துட்டால் என்ன செய்யறது!

கொலுவைப் பத்திச் சொல்ல வந்துட்டு சுப்புக்குட்டியைப் பத்திச் சொல்லப் போயிட்டேன்.  அந்த வருஷம் நவராத்திரியும் வந்தது.  நாங்க இருந்த பி.ஜி. லைன்ஸ், சொலேரியம் சாலையில் எங்களோடு சேர்த்து ஒரே ஒரு தமிழ்க்காரங்க.  ஆனாலும் குஜராத்தில் நவராத்திரி பிரபலம் என்பதாலும், எல்லாருக்கும் இந்தத் தென்னிந்திய கொலு பற்றிய அறிவு கொஞ்சம் இருந்ததாலும் பழகிய நண்பர்கள் வீட்டுப் பெண்கள் வந்தாங்க தான்.  ஆனால் அங்கே இருந்த தமிழ்க்காரப் பெண்மணி கண்டோன்மெண்டைத் தவிர நகருக்குள்ளும் சிலர் இருக்காங்கனு சொல்லி இருந்தாங்க.  அவங்களிலே ஒருத்தர் எங்க அலுவலகத்தைச் சேர்ந்தவங்க என்பதால் கூப்பிட்டாங்கனு நாங்க குடும்பத்தோட போயிருந்தோம்.  அப்போ அந்தப் பெண் நவராத்திரி வெற்றிலை, பாக்கு வாங்கச் சிலர் கூப்பிட்டிருப்பதாயும் தானும் போகப் போறேனு சொல்லி என்னையும் கூப்பிட்டாங்க.  நான் தயாராக வரலை.  போனால் எத்தனை நேரம் ஆகுமோனு யோசனை.  ஆனால் நம்ம ரங்க்ஸ் குழந்தைங்களை அழைச்சுட்டுத் தான் வீட்டுக்குப் போவதாயும் என்னைப் போயிட்டு அவங்களையும் நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வரும்படியும் சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.  சரினு நானும் ஒரு வீடுதானேனு நினைச்சுட்டுப் போனேன்.

போனேனா!

Subashini Tremmel

unread,
Oct 21, 2012, 2:37:46 AM10/21/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நேற்று ஸ்டுட்கார் சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் கலந்து கொள்ள முடிந்தது. பூஜை திருப்திகரமாக அமைந்திருந்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் குடும்பங்களே அருகாமையில் இருந்தாலும் தொடர்ந்து ஹிந்து சமய திருவிழாக்களைக் கோயிலில் நடத்தி வரும் கோயில் நிரிவாகத்தினரின் பணி போற்றுதலுக்குறியது.

சில படங்கள்..


Inline image 2


Inline image 3

Inline image 4


அன்புடன்
சுபா

nava2.jpg
nava3.jpg
nava3.jpg

Subashini Tremmel

unread,
Oct 21, 2012, 3:18:22 AM10/21/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

கொலு படத்தை இணைக்க மறந்து விட்டேன். இதோ.

Inline image 2

சுபா

2012/10/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
nava3.jpg
nava3.jpg
nava1.jpg
nava2.jpg

Geetha Sambasivam

unread,
Oct 21, 2012, 7:02:11 AM10/21/12
to mint...@googlegroups.com
ஆஹா, அந்த வடைமாலையை மட்டும் எடுத்துக்கறேன்.  மத்தது வேண்டாம். 

2012/10/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நேற்று ஸ்டுட்கார் சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் கலந்து கொள்ள முடிந்தது. பூஜை திருப்திகரமாக அமைந்திருந்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் குடும்பங்களே அருகாமையில் இருந்தாலும் தொடர்ந்து ஹிந்து சமய திருவிழாக்களைக் கோயிலில் நடத்தி வரும் கோயில் நிரிவாகத்தினரின் பணி போற்றுதலுக்குறியது.

சில படங்கள்..

360.gif

Geetha Sambasivam

unread,
Oct 21, 2012, 7:02:58 AM10/21/12
to mint...@googlegroups.com
கலசம் எல்லாம் வைச்சு சம்பிரதாயமாகக் கொலு வைச்சிருக்காங்க.  அருமையா இருக்கு.

2012/10/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கொலு படத்தை இணைக்க மறந்து விட்டேன். இதோ.

Inline image 2

சுபா



--
nava1.jpg

LK

unread,
Oct 21, 2012, 7:03:58 AM10/21/12
to mint...@googlegroups.com
அட்டகாசம் 
--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
www.bhageerathi.in



 

nava1.jpg

Geetha Sambasivam

unread,
Oct 21, 2012, 7:04:42 AM10/21/12
to mint...@googlegroups.com
எது வடையா? போட்டிக்கு வராதீங்க.  அதெல்லாம் கிடையாது.

On Sun, Oct 21, 2012 at 4:33 PM, LK <karth...@gmail.com> wrote:
அட்டகாசம் 


On Sun, Oct 21, 2012 at 4:32 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
கலசம் எல்லாம் வைச்சு சம்பிரதாயமாகக் கொலு வைச்சிருக்காங்க.  அருமையா இருக்கு.


329.gif

LK

unread,
Oct 21, 2012, 7:06:11 AM10/21/12
to mint...@googlegroups.com
எனக்கு வடை வேண்டாம் கொலுதான்  அட்டகாசம் என்றேன் 

2012/10/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
329.gif

Geetha Sambasivam

unread,
Oct 21, 2012, 7:07:02 AM10/21/12
to mint...@googlegroups.com
அப்போ சரி. 

2012/10/21 LK <karth...@gmail.com>
329.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Oct 22, 2012, 1:21:43 AM10/22/12
to mint...@googlegroups.com

கொலுவுக்குப் போனியா, ஷாப்பிங் போனியா!

நான் என்னமோ ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும் போகப் போறதாத் தான் நினைச்சேன். ஆகவே கையில் ஒரே ஒரு கைத்துண்டு மட்டும் வைச்சிருந்தேன். என்னை அழைச்சுட்டுப் போனவங்கஒரு ஆட்டோவைக்கூப்பிடவும் எனக்குத் திக்குனு இருந்தது.  பைசா கூடக் கிடையாதே கையில்.  சரி அப்புறமாக் கணக்குப் பார்த்துக் கொடுத்திடலாம்னு மனசைத் தேத்திட்டு ஆட்டோவில் ஏறினோம்.  ஏறும்போது நாங்க மூணு பேர் இருந்தோம்.  எங்க காலனியிலேயே இருந்த பெண்மணி, நாங்க போன வீட்டுப் பெண்மணி, நான் ஆகிய மூணே பேர்தான். அவங்க போன வீட்டிலே இருந்தவங்க ஜாம்நகரிலேயே டிக்ஜாமில் வேலை செய்யறவங்க. பல வருடங்களாக ஜாம்நகரிலே இருக்காங்க. அவங்க வீட்டிலே மாமியார், மாமனார், பையர், மாட்டுப்பொண்ணு இருந்தாங்க. மாமனார் ஜாம்நகர் அருகே உள்ள ஹாப்பா என்னும் ஊரில் ரயில்வேயில் இருந்து ரிடையர் ஆனவர்.  எல்லாருமே அவரை ஹாப்பா மாமானு கூப்பிட்டாங்க.  அங்கே வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு கிளம்பும்போது மாமியாரும், மருமகளும் கூடவே வந்தாங்க.  சரி, வழியனுப்பறாங்கனு நினைச்சால், அவங்களும் நாங்க வந்த ஆட்டோவில் ஏறினாங்க.  நம்ம வீட்டுக்குத் தான் வராங்களோனு நினைச்சால் இல்லையாம்.

அந்த மாமியாரின் தங்கையும் அதே ஊரிலே இருக்கிறதாலே அங்கே போறோமாம்.  அங்கிருந்து இன்னொரு மாமி டிக்ஜாமில் வேலை செய்யறவங்க வீட்டுக்குப் போறோமாம்.  அங்கிருந்து இன்னொருத்தர், இன்னொருத்தர்னு கிட்டத்தட்டப் பத்து வீடு ஆயிடுச்சு.  ஆட்டோவிலே முதல்லே நாங்க மூணு பேர் இருந்தது அப்புறமா எட்டுப் பேர் ஆகவே எனக்கு முழி பிதுங்கியது.  ஆனாலும் அதுவும் ஒரு ஜாலியாத் தான் இருந்தது.  டிரைவர் பக்கத்திலே இரண்டு பேர் உட்கார, பின்னாடி மூணு பேருக்கு நடுவே இரண்டு பேர் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு உட்கார, கம்பியிலேஇரண்டு பேர் தொங்க, சாமியோவ்!!!!!!!!!!!!!! நல்லவேளையா எனக்கு நான் புதுசுங்கறதாலேயோ என்னமோ ஓர சீட் கொடுத்துட்டாங்க.

அதான் அப்படின்னா போற ஒவ்வொரு இடத்திலேயும் தேங்காய், வெற்றிலை,பாக்கு, பழம், பரிசுப் பொருள்னு சேர்ந்து போய் நான் பையும் கொண்டு போகாம அங்கேயே ஒருத்தர் வீட்டிலே பையை வாங்கிக் கொண்டு அதுவும் பத்தாம கையிலேயும்  எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரச்சே இரவு ஒன்பதரை மணி. வீட்டிலே எல்லாரும் நான் எங்கே போனேன்னு தெரியாமல் காலனியில் இருக்கும் வீட்டில் போய்ப் பார்த்துத் தேடி இருக்காங்க.  அவங்களும் வரலைனு தெரிஞ்சதும் கொஞ்சம் ஆறுதல்.  அப்புறமா ஆட்டோவிலே நான் வந்து இறங்கினதும், கையிலேயும், பையிலேயும் சாமான்களைப் பார்த்ததும், நான் ஏதோ அவங்களோட ஷாப்பிங் போயிட்டு வந்திருக்கேன்னு நினைச்சுட்டு, இப்போ எதுக்கு இத்தனை சாமான்கள் வாங்கிட்டு வந்திருக்கேனு கேட்டாங்களே பார்க்கலாம்!

ஹிஹிஹிஹி, என்னை மாதிரி ஒரு மோசமான ஷாப்பர் கிடையவே கிடையாது.  கடைகளுக்குப் போனால் பேசாமல் ஒரு மூலையில் போய் உட்கார்ந்துடுவேன்.  அவங்க அவங்க பார்த்துட்டு எடுத்து வர பொருட்களைப் பார்த்து எல்லாத்துக்கும் ஓகேயும் சொல்லிடுவேன்.  என்னைக் கூட்டிட்டுப் போறவங்க பாடு தான் திண்டாட்டம். 
360.gif

கி.காளைராசன்

unread,
Oct 22, 2012, 5:42:50 AM10/22/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

காரைக்குடிக்கு அருகில் அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கொலுவின் படங்கள் சில.

https://plus.google.com/u/0/photos/107969044627021352784/albums/5802064899869754337

அன்பன்
கி.காளைராசன்

Subashini Tremmel

unread,
Oct 23, 2012, 3:20:53 AM10/23/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
மின் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை + விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

சுபா

2012/10/22 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Oct 23, 2012, 1:17:09 PM10/23/12
to mint...@googlegroups.com

N. Kannan

unread,
Oct 26, 2012, 9:39:44 AM10/26/12
to mint...@googlegroups.com
Wesleyan Navaratri Festival 09

http://youtu.be/zKMJx8g27Ig

கர்நாடாக சங்கீதம் என்பது தமிழ் மண்ணில் பிறந்து தென்னகம் முழுவதும்
ஏற்றுக்கொண்ட ஒரு சங்கீத முறைமை.

ரவிசங்கர் பொன்ற இசைக்கலைஞர்கள் மேலை நாட்டிற்கு இந்திய சாஸ்திரீய
சங்கீதத்தை எடுத்துச் சென்ற பின் கர்நாடக இசையும் அங்க கால்பதித்து
வளரத்தொடங்கியது. இது பற்றி யாராவது ஆய்வுக்கட்டுரை ழுதினால் இதன்
சரித்திரம் முழுமையாய் புரியும்.

இந்த விழியம் மிக அழகாக கர்நாட இசையை மேலை நாட்டினர் பாடமுடியும் என்று
காட்டுகிறது (ஜான் ஹிக்கின்ஸ்!). முதன் முறையாக நான் பார்த்தவரை ஒரு
கருப்பு இனப்பெண், ஒரு ஜப்பானிய/கொரியப்பெண், ஒரு பாரசீக மாணவர், ஒரு
சினப்பெண் என்று தமிழிசையைப்பாடுவது பார்க்க அருமையாக உள்ளது! லோகா
சமஸ்தா சுகினோ பவந்து! என்பது இந்தளவில் உண்மை. தீக்ஷதரின் கிருதி உலகை
ரக்ஷிக்கிறது.

நா.கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages