கொலு பொம்மை என்றவுடன் அலை, அலையாக நவராத்திரி நினைவுகள். இந்த இழையில்
நாம் எல்லோரும் நம் நவராத்திரி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டால் என்ன?
திருப்பூவணம் ‘பத்ம நிலையம்’ இல்லத்தில் கொலு விமர்சையாக இருக்கும். என்
அன்னைக்கு கொலு என்றால் ரொம்பப்பிடிக்கும். வித, விதமான பொம்மைகளை வருடா
வருடம் வாங்குவாள். அவள் கடைக்குப் போகிற ஆள் இல்லை. எல்லாம் அந்த பத்ம
நிலையம் வீட்டு எல்லைக்குள்தான். இதனாலேயோ என்னவோ இவளுக்கு வீட்டில்
வழங்கும் பெயர் ‘ஆத்தம்மாள்’ (அகம் + அம்மாள்).
இவளது ஆசையறிந்து பொம்மைகள் செய்து கொண்டு ஒர் பெண் மணி வருவாள். எந்தக்
கலைஞன் அதைச் செய்வானோ? அவ்வளவு தெய்வீகக் களை சொட்டும் பொம்மைகள். நல்ல
களிமண் கொண்டு செய்த வலுவான பொம்மைகள். நவராத்திரி ஆரம்பிக்கும் முன்னமே
சேந்தியிலிருந்து அம்மா பொம்மைகளை மெதுவாக கீழே இருக்குவாள். அதுவரை
அவையெல்லாம் பழைய புடவைகளைச் சுற்றிக்கொண்டு அடக்கமாகத் தூங்கும். அவைகளை
மெல்ல எழுப்பும் விதமாக கீழே இறக்கி தூசு தட்டி. கொஞ்சம் வார்னிஷ் இல்லை
ஒரு பெயிண்ட் டச் அப் கொடுத்து புதிய கொலுவிற்கு தயார் படுத்துவாள்
கோகிலம்.
இது எவ்வளவு தூரம் சிறுவர்களான எங்கள் உள்ளத்தில் பதிந்து இருக்கிறது
என்றால் ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்குப் பிறகு எனது மருமான்
அமெரிக்காவில் கொலு வைத்து திருப்பூவணம் நினைவுகளைப் பகிர்ந்து
கொள்கிறான் எனும் அளவிற்கு.
உங்களோடு சேர்ந்து இன்னும் வரும்.....
போனஸ்:
நடிகையர் திலகம் சாவித்திரியின் கொலுப்பாட்டு
http://youtu.be/hFozV-8o0Fo
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நான் கரெக்டாக ஆஜர்!! :))
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
" நவராத்திரி மகிமை "
மகாராஜா சுரதா, ராஜ குரு சுமதாஅவர்கள் கூறிய ஆலோசனையின்படி “பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்…’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, மகாராஜா சுரதா தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினார். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றார். எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பதுபொதுவான மரபு.
புரட்டாசி மாதம் 29ம் தேதி, அக்டோபர் 15ம் தேதி திங்கட்கிழமை சித்தயோகம், அமாவாசை அன்று நவராத்திரி விழா தொடங்குகிறது .இந்த நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாட அவரவர்கள் சக்திக்கும், இருக்கும் இடத்துக்கும் ஏற்ப மூன்று படிகள். ஐந்து படிகள், ஏழு படிகள், ,ஒன்பது படிகள் என்று அமைத்து அந்தப் படிகளில் பலவிதமான தெய்வங்களின் உருவ பொம்மைகளை, மற்றும் நமக்கு மனதுக்கு உகந்த நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் மக்களில் நம்மைக் கவர்ந்த 12 ஆழ்வார்களின் பொம்மைகள், 63 நாயன்மார்களின் பொம்மைகள். மஹாத்மாகாந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன், கப்பலோட்டிய தமிழன் வ.உ .சிதம்பரம்பிள்ளை, ஜவஹர்லால்நேரு, இந்திராகாந்தி, காமராசர், பாரதியார் ,பாரதிதாசன் ,வியாபாரச் செட்டியார் பொம்மை, குறவன் குறத்தி பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, போன்ற நம் தேசத்தில் நினைவு கூரவேண்டியவர்களின், தலைவர்களின் உருவ பொம்மைகள் போன்றவற்றை வைக்கிறோம், அதையும் தவிர நாம் அன்றாடம் பார்க்கும் விலங்குகள் பசு ,ஏரில் பூட்டிய காளைகள், நிலத்தை உழும் உழவன், போன்றவர்களின் பொம்மைகள் எல்லாவற்றையும் அவைகளை வைக்கவேண்டிய தகுந்த இடங்களில் வைத்து மகிழ்வது நம் வழக்கம்.
அதே போல் பக்கத்திலே மண் கொட்டி பூங்கா அமைத்து, அதன் பக்கத்திலே கோயில் அமைத்து, அந்தக் கோயிலுக்கு எதிரே நம் வீட்டில் உள்ள தாம்பாளத்தில் படிக்கட்டுகள் அமைத்து நடுவிலே நீர் ஊற்றி குளம்போல் தோற்றம் ஏற்படுத்தி அதில் நீர்வாழ் மீன்கள், தவளை கொக்கு போன்ற பொம்மைகளை வைத்து, அலங்கார விளக்குகள் அமைத்து அழகுக்கு அழகு சேர்த்து கலைநயத்துடன் நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.
இப்படி எல்லாப் பொம்மைகளையும் வைத்துவிட்டு, நம் சுற்றத்தார், அண்டை அயலார் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் இந்த விழாவிலே கலந்துகொள்ள அவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தாம்பாளத்தில் வெற்றிலைபாக்கு,மஞ்சள், குங்குமம், பலவிதமான பழங்கள் போன்றவைகளை வைத்து அழைத்துவிட்டு, தினமும் அன்றிலிருந்து தொடங்கி விசேஷமான பூஜைகள் செய்து பலவிதமான உகந்த தின்பண்டங்களை , சமைத்து நிவேதனம் செய்து அவைகளை வீட்டிற்கு வரும் அனைவருக்கும் பகிர்ந்தளித்து மகிழும் பண்டிகை நவராத்திரி ஆகும். இந்த ஒன்பது நாட்களிலும் வீட்டிற்கு வரும் குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் அனைவரும் மகிழும்படி வரவேற்று , நம் இதிகாச, புராணங்களில் இருந்து நம் மனதைக் கவர்ந்த ஶ்ரீராமன், ஶ்ரீ கிருஷ்ணன், ராதை, பக்த மீரா போன்ற பலவேடங்களை குழந்தைகளுக்கு அணிவித்து எல்லோரும் மகிழும்படியாக ஆடிப் பாடி மகிழ்ந்து ஒன்பதாம் நாள் நவமி அன்று சரஸ்வதிக்கு பூஜை செய்து பத்தாம் நாளாகிய தசமிஅன்று ஆயுத பூஜை என்றும் விஜய தசமி என்றும் கொண்டாடுகிறோம். அன்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் நம் வாகனங்கள், ஆயுதங்கள், எல்லாவற்றிர்க்கும் முறையே குங்குமம் இட்டு பூஜைகள் செய்து கொண்டாடி நிறைவு செய்வோம் நவராத்திரி விழாவை.
ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அக்ஞாத வாசம் முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் .இந்த விஜயதசமி நன்நாளில்தான் துர்க்கா வெற்றி பெற்றாள் ,ஆகவே இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தால் சகலவிதமான வித்தைகளிலும் வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகம்.
வீரத்தின் தெய்வமான சிவப்பிரியையான, இச்சா சக்தியான துர்க்கை அல்லது காளி என்னும் சக்தியானவள் துர்க்கை. இந்த துர்க்காதேவி மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டு அவனை வதம் செய்தாள் அதாவது தீமை என்னும் அரக்கனை அழித்து மக்களுக்கு நன்மையாகிய வெற்றியை அருளினாள். அதனால் மகிஷசுரமர்த்தனி என்று பெயர்கொண்டாள். " விஜய " என்றால் வெற்றி . தசம் என்றால் பத்து வெற்றியை பெற்ற நாள் பத்தாம் நாள். இப்படி மகிஷனை துர்க்கை வதம் செய்த பத்தாம் நாளே விஜயதசமி என்று அழைக்கப்பட்டது.
இந்த துர்க்கா தேவி மகிஷனுடன் போர் புரியத் தொடங்கிய நாளே நவராத்திரி விழாவின் தொடக்க நாள். நவராத்திரி விரதம் புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தக்ஷிணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்திராயண காலம் தேவர்களுக்கு பகல் காலம் ஆகும்.
நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் நோன்பு சாரதா நவராத்திரி நோன்பாகும்.
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தக்ஷினாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
பிரளயம் என்னும் அழிவுக் காலத்தின் முடிவில் இறைவன் மீண்டும் உலகத்தை உண்டாக்க விரும்புகின்றான் ஆகவே இறைவன் விரும்பத் தொடங்கும் அந்தக் கணமே இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. அந்த இச்சை சக்தியினால் எவ்வாறு உலகை உண்டாக்குவது என்று இறைவன் அறிகின்றான். எவ்வாறு என்று யோசிக்கும் போதே ஞான சக்தி தோன்றுகிறது . அதன்பின் தன்னுடைய கிரியை என்னும் சக்தியினால் கிரியா சக்தியைத் தோற்றுவித்து உலகைப் படைக்கின்றான்.
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்
சாந்தி துர்க்கை ,சபரிதுர்க்கை, ஶ்ரீ ஜ்வாலாதுர்க்கை, ஶ்ரீ ஜெயதுர்க்கை,ஶ்ரீ ஆசூரி துர்க்கை, ஶ்ரீ மூலதுர்க்கை, ஶ்ரீ வன துர்க்கை, ஶ்ரீ சூலினி துர்க்கை, ஶ்ரீஜாதவேதா துர்க்கை. ஆகியோர் நவதுர்க்கைகள்.
முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி அதாவது ஷைலபுத்ரி யாகவும்,
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி அதாவது பிரம்மசாரிணி யாகவும்,
மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி அதாவது சந்தரகாந்தா ஆகவும்,
நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோகிணி அதாவது கூஷ்மாண்டா ஆகவும்,
ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா அதாவது ஸ்கந்த மாதா ஆகவும்,
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா அதாவது காத்யாயனி ஆகவும்,
ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி அதாவது காலராத்ரி ஆகவும்,
எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்க்கா அதாவது மஹா கௌரி ஆகவும்,
ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - சுபத்ரா அதாவது சித்திதாத்ரி ஆகவும்
கொண்டாடுகிறோம்.
அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மகாலக்ஷ்மி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. 7. சரஸ்வதி
8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.
ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது. கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை 'தேவி பாகவதம்' விரிவாகப் பேசுகிறது. நவம் என்றால் ஒன்பது என்று ஒரு பொருள் உண்டு. நவம் என்றால் புதிய, புதுமை, என்றொரு பொருளும் உண்டு! சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் 9 நாள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
இதில் முதல் 3 நாள் துர்க்கை அன்னையையும், அடுத்த மூன்று நாள் திருமகளையும், அதற்கு அடுத்த மூன்று நாள் கலைமகளையும் வழிபடுவார்கள். துர்க்கை என்ற பெயருக்கு கோட்டை என்ற பொருளும், துன்பத்தை அழிப்பவள் என்ற பொருளும் உண்டு. இந்தப் பெயரைச் சொன்னாலே மனிதன் தன்னைத் துன்பங்களை அணுக விடாமல் காத்துக்கொள்ள முடியும். அத்துடன் தீய சக்திகள் மற்றும் தீய எண்ணங்களையும் அழித்தால்தான் உலகில் நல்லவை நிலைபெறும். அதனால்தான் மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பல தீயவற்றை அழித்து நல்லவற்றை நிலை நிறுத்தி வெற்றி பெற உதவும் அன்னையை முதல் மூன்று நாள் வழிபடுகிறோம்.
அடுத்த மூன்று நாள் செல்வ வளத்தை அளிக்கும் திருமகளை வழிபடுகிறோம். மனிதன் வாழ்வில் சிறப்பான நிலையை அடைய உதவுவது செல்வம். அடுத்த மூன்று நாள் கல்விச் செல்வத்தை அளிக்கும் கலைமகளுக்கு உரியவை. காலத்தால் அழியாத செல்வம் கல்வி. இந்தச் செல்வம் வேண்டி கலைமகளைத் துதிக்கிறோம். நவம் என்றால் புதிய என்று பார்த்தோம். துன்பங்கள் தீர்ந்து, பொருள் வளம், கல்வி வளம் இரண்டும் பெற்றால் மனிதனுக்கு வாழ்க்கை தினம் புதியதுதான்!
அதுமட்டுமல்ல; இந்த மூன்றும் சேர்ந்தால் வெற்றிதான் என்பதைக் குறிக்கும் விதமாக பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. துன்பத்தை அழித்து நன்மையை நிலைநாட்டி, பொருள் செல்வம் மற்றும் அறிவுச் செல்வம் பெற உதவும் மூவரையும் நவராத்திரியில் முறைப்படி துதிப்போம். வளம் பெறுவோம்! வெற்றி பெறுவோம்!
ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் நமக்கு செல்வம் ,வீரம் ,ஞானம் மூன்றும் இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும். இதற்காக மகாலட்சுமி தேவியை, துர்க்கா தேவியை வழிபடுகிறோம். சரசுவதிதேவியை வணங்குகிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவராத்திரி விழா காணும் ஆலயங்கள் :-
ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஐம்புகேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,நாகை நீலாயதாட்சி கோயில், கன்யாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோயில்,
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில்,திருவண்ணாமலை ஸ்ரீ உண்ணாமுலை உடனாய அண்ணாமலையார் கோயில், நெல்லை ஸ்ரீ காந்திமதி அம்மன் கோயில், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில்,மாங்காடு அம்மன் ஆலயம்,சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் கோயில்,காளிகாம்பாள் கோயில்,திருவையாறு அறம் வளர்த்த நாயகி கோயில்,திருமெய்யம் ஸ்ரீ வேணுவனேஸ்வரி அம்பாள் கோயில்,சமயபுரம், பண்ணாரி,பொள்ளாச்சி,திண்டுக்கல்,
தஞ்சை,திருச்சி மாரியம்மன் கோயில்கள்,படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில்,மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்,
மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில்,காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் கோயில், திருக்கடையூர் அபிராமி கோயில் ஆகிய ஆலயங்களில் நவராத்திரி விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள்
அம்பத்தூரை அடுத்த வட திருமுல்லை வாயிலில் வைஷ்ணவி ஆலயத்தில் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து வைஷ்ணவியை வழிபடுவார்கள். மிகவும் விசேஷமாக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
வாங்க ஸ்வர்ணா...
ரொம்ப அழகான நினைவுகள்.
இழை எப்படியோ (யாரோலோ) மாறி இருக்கிறது. இதிலேயே தொடரவும். மற்ற
இடுகைகளும் இதில் சேர்த்து விடுகிறேன்.
இன்னும் சொல்லுங்கள். அந்தக் கொலுப்படி அமைப்பது கோயில் காட்டுவது
போல....:-) நல்ல வருணனை!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஜோக்...
ஆங்கிலேயரைவிடத் திறமையா பிரிக்கத் தெரிஞ்சவங்க இருக்காங்கப்பா!...:-))
முன்பு இப்படி அடிக்கடி இழை பிரியும். தலைப்பில் ஒரு சின்னப்புள்ளி
வச்சாலும் இழை பிரிந்துவிடும்! எனவே Subject இடத்தில் தொடாமல் அப்படியே
reply தட்டி பதில் போட்டால் இழை பிரியாது.
சரி எல்லோரும் சமத்தா பிரியாத “அந்த” இழைக்குப் போங்க..பாப்போம் ;-)
க.>
முன்று வருடங்கள் முன்பு இல்லம் குழுமத்திற்காக நான் எழுதிய இந்த பதிவை
குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
அந்த மறக்கமுடியாத நவராத்திரி நாட்கள்
என்னுடைய இனிய நினைவுகள் 50 வருடம் பின்னோக்கி சென்றது. அந்த நவராத்திரி
9 நாட்கள். நவராத்திரி ஆரம்பிக்கும் ஒரு வாரம் முன்பிலிருந்தே
வீட்டிலுள்ள ஆண் பிள்ளைகளின் கற்பனைகள், அக்கா/தங்கை களினால்
தூண்டிவிடபட்டன. நாங்கள் வசிக்கும் அக்ரஹாரத்தில் யார் வீட்டு கொலு நல்ல
அலங்காரத்துடன் இருக்கிறது என்பதற்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம்
பரிசுகள் நவராத்திரியின் முதல் நாளே அறிவிக்கபடும். யார் யார்போட்டியில்
பங்குபெறப்போகிறார்கள் என்பதை, அதற்காகக் நீயமிக்கபட்ட கமிட்டி
அங்கத்திர்களிடம் பெயர் கொடுக்கவேண்டும். 100 வீடுகள் இருக்கும்
அக்ரஹாரத்தில் 20 முதல் 25 வீடுகளின் கொலு போட்டியில் பங்கு
கொள்ளுவார்கள். பொம்மைகள் தவிர, அலங்கார வளைவுகள், குளம், பூங்கா, பஸ்
ஸ்டாண்ட், மற்றும் பலவிதமான நவீன யுக்திகளும் இடம்பெறும். கொலுப்படி, அதை
சுற்றியுள்ள பகுதிகளின் அலங்காரங்கள், நவீன யுக்திகள் இவைகளெல்லாம் ஆண்
பிள்ளைகளின் பொறுப்பு. இதெல்லாம் செய்வதற்கு வீட்டிலுள்ள் பெண்கள்
அம்மாவிடம் அண்ணன் / தம்பிமாருக்கு நைட் ஷொ சினிமாவுக்கு அனுமதியும்
பைசாவும் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டியது. கமிட்டீ அங்கத்தினர்கள் 7/8/9
தினங்களில் ஒவ்வொரு வீட்டிலும் சென்று கொலுவினை பார்வையிடுவார்கள். யார்
வீட்டிற்கு என்றைக்கு வருவார்கள் என்பது மிக ரகசியமாக இருக்கும். இந்த
கமிட்டியில் அக்ராஹாரத்து பெரிய மனிதர்களை தவிர, அடுத்த ஊர்
பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டரும் அங்கத்தினராய் இருப்பார். ஸ்ரஸ்வதி
பூஜையின் மறு நாள் போட்டியின் முடிவுகள் அறிவித்து பரிசுகள்
வழங்குவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சுண்டல் வாங்குவதற்கு கும்பாலாக
செல்வது வழக்கம். சில வீடுகளில் கொடுக்கின்ற சுண்டலிலும் இரண்டு வகை
இருக்கும். கொலுவிற்கு அழைத்து பாட்டு பாடும் பெண்களுக்கு கடலை
சுண்டலும், கும்பலாக வரும் ஆண் பிள்ளைகளுக்கு, தேங்காய்/சீனி போட்டு
வெறும் பொரியினை கொடுக்கும் வீடுகளும் உண்டு. வம்பு பண்ணுவதற்கு என்றே
சில கும்பல்கள் உண்டு. இந்த மாதிரி பாரபஷம் பார்க்கும் வீடுகளில்
பொரியினை வாங்கிவிட்டு, யாருக்கும் தெரியாமல் மெயின் ஸ்விச்சை
அணைத்துவிட்டு நழுவி விடுவார்கள். இதை எல்லாம் நினைக்கும் பொழுது
"நம்முடய அந்த காலம் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தது " மனத்தில் ஒரு
மகிழ்ச்சி. நேற்று என்னுடய நண்பரின் மனவியை கேட்டேன் " என்ன மன்னி
கொலுவெல்லாம் உண்டா, சுண்டலுக்கு என்னிக்கு வரணம்" எனு கேட்டதற்கு "
நானும் உங்க நண்பரும் வாசல்படியில் சாயங்காலம் ஒக்காந்து பேசிண்டு
இருப்போம் இது தான் எங்காத்து கொலு. வெள்ளிகிழமை வந்தால் சுண்டல்
கிடக்கும்" என்று வேடிக்கையுடன் பதிலளித்தார்.
நீலகண்டன்
(செம்பூர் நீலு )
திருப்பூவணம் அப்போது கிராமம். நிறைய குடியான வீட்டுப் பசங்க
அக்கிரகாரத்து கொலுவின் மகிமை அறிந்து வருவர். சுண்டல் கேட்டால் சில
நேரம் கிடைக்கும் சில நேரம் கிடைக்காது. சில மாமிகள் வந்து பாடற
குழந்தைகளுக்கு ‘மட்டும் என்று சுண்டல் வைத்திருப்பர்.
சுண்டல் கிடைக்காத கோபத்தில் வயக்காட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும்
தவக்காளை (தவளை)யை வீட்டிற்குள் போட்டுவிட்டு ஓடி விடுவர். தவளை
கொலுவிற்குள் புகுந்தால் எப்படியிருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள்!!
ஒரே அமர்க்களம்! மாமிகளைக் கலாய்க்க இப்படியொரு டெக்னிக்கா? :-))
க.>
மிக..மிக அருமையான யோசனைகள்...
இங்கு IKEA என்றொரு மிகப்பிரபலமான ஸ்வீடிஷ் ‘do it yourself' furniture
mart! இங்கு நவராத்திரி பிரபலமாயிருந்தால் நீங்கள் எதிர்பார்த்தற்கும்
மேலான வகையில் கொலுப்படிக்கட்டு, ‘சிறுவரும் செய்யும்’ வகையில்
கிடைக்கும்!
அதுவரை டின், பெட்டிகளைக்கொண்டு படிக்கட்ட வேண்டியதுதான். 16 அடி
வேஷ்டியெல்லாம் இப்ப யார் கட்டறா? இந்த கொலுவின் உள்கூட்டை மறைக்க இது
பயன்படும்!!
நா.கண்ணன்
யப்பா...! எவ்வளவு விபரங்கள்! மிக மிக அருமை! நன்றி தமிழ்தேனிஜி!
நீங்கள் கொலு வைப்பதுண்டா மீனாம்மா.


கொலு பொம்மைகள் வாங்கவொரு வலைப்பதிவு இருப்பது பற்றி ஒரு மின்தமிழ் இடுகை கண்டேன்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இத்தகைய அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும்
என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்ல
வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்.பெண்களுக்கு அவர்களின்
உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்.இது எல்லா கோயில்களுக்கும்
பொருந்தும்.
எனினும் திருச்செந்தூர்,சிதம்பரம் உடுப்பி கொல்லூர் முதலிய இடங்களிலும்,கேரளத்தின் எல்லா
கோயில்களிலும் இம்முறை இன்றும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது.இது
நமக்கு நன்மை தருவதற்கே.கோயிலுக்குள் செல்லும்போது மேற் சட்டையை
கழற்றாவிட்டாலும்,குறைந்தபட்சம் உள் மண்டபத்தில் சென்று சுவாமியைத்
தரிசிக்கும்போதாவது கழற்றி விடுவது நமக்கு உடலுக்கு நலம் பயக்கும்!

நவராத்திரியின் முதல் நாளில் (அக்.16ல்) அம்பாளுக்கு "மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும்.
மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள். "அசரம் என்றால் "அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!
நன்றி: இன்று எனக்குத் தனிமடலில் வந்த கருத்து.
நா.கண்ணன்
ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.
அண்ணாவும், தம்பி பெரிய பையன் ஆனதும் அவனும் துணைக்கு வர என்னுடைய நவராத்திரிப் பட்டினப் பிரவேசம் நடக்கும். கையில் ஆளுக்கு ஒரு பை எடுத்துக் கொள்வோம். சில தெரிந்த வீடுகளில் அண்ணா, தம்பிக்கும் சுண்டல் அளிக்கப் படும். பொதுவாக அண்ணா உள்ளேயே வரமாட்டார். வெளியே நின்று விடுவார். ஆகையால் தம்பி சின்னவன், குழந்தை என்பதால் அவனுக்குக் கட்டாயம் கிடைக்கும். என்றாலும் அங்கேயே பிரிச்சுத் தின்பது எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் அன்றாடக் கொலு வரவு, செலவுகளை ஒப்பித்துவிட்டு ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்வோம்! இந்த, இந்தப் பாக்கெட்டில், இன்னார் வீட்டுச் சுண்டல் என்பது நினைவு வச்சுக்கறது எனக்குத் தானாகவே கைவரப் பெற்றிருந்தது.இது இன்றளவும் என்னோட மறுபாதி ஆச்சரியப் படும் விஷயம், எப்படி இவ்வளவு சரியா நினைப்பு வச்சுக்கறே என்பார். அவருக்குச் சில சமயம் என்னோட பேரே மறந்துவிடும். நீ யாருன்னு கேட்கலை. அந்தளவுக்கு மறதி.
அப்போ எல்லாம் குழந்தைகளுக்குத் தேங்காய், பழம் கிடைக்காது. வெற்றிலை, பாக்கு, சுண்டல் மட்டும்தான். பழம் கொடுக்கும் வீட்டில் சுண்டல் கிடைக்காது. மனசுக்குள் திட்டிப்போம். போன முறை இவங்க வீட்டுச்சுண்டல் உப்பு ஜாஸ்தி, என்றோ, உப்போ போடலை என்றோ பேசிப்போம். அவங்க வீட்டுப் பெண்ணுக்கு என்ன அலங்காரம் என்பது உன்னிப்பாய்க் கவனிக்கப் படும். மறுநாள் வீட்டில் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், அன்றைய என்னோட அலங்காரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலோ, அலங்காரமே மாறுதலோ செய்யப் படும். மறுநாள் பிரிக்க நேரமில்லாமல் கொலு அலங்காரத்துடனேயே பள்ளிக்குச் சென்ற அனுபவமும் உண்டு. மேல ஆவணி மூலவீதியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குத் தினமும் விசிட் உண்டு. லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குத் தள்ளி இருப்பதால் பெரியம்மா வந்து அழைத்துச்சென்று கொண்டு விடுவார். அங்கே போவது என்றால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். பெரியம்மா மத்தியானம் மாட்னி ஷோவுக்குக் கல்பனா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறதோ அதுக்கு அனுப்பி வைப்பார். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் நிச்சயமாய் அப்பாவுக்குத் தெரியாமல் தான். திடீர்னு அப்பா அங்கே வந்துவிட்டால், பெரியம்மாவின் அப்பா நைஸாக இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் போயிருக்காங்க, இதோ போய் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மெதுவாய்த் தியேட்டருக்கு வந்து, நான் உட்கார்ந்திருக்கும் இடம் முன்பே பெரியம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பார், வெளியே இருக்கும் வாட்ச்மேன் அவங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அவரிடம் சொல்லிக் கூட்டிப் போய் எச்சரிக்கை செய்து வைப்பார்.
அப்பா வந்திருப்பது தெரியாமல் படம் முடிந்து வந்து படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு மாட்டிக் கொண்டதும் உண்டு. தாத்தா வீட்டுக்குப் (அம்மாவின் அப்பா) போவது இன்னும் ஒரு தனி அனுபவம். அங்கே கொலு எல்லாம் வச்சுக் கட்டுபடி ஆகாது. சும்மாப் போயிட்டு வருவோம். அப்பாவின் அப்பா பத்திச் சொல்லலைனு நினைக்காதீங்க. அவர் என் தம்பி பிறக்கும் முன்னேயே காலம் ஆகிவிட்டார் என்பதால் அவ்வளவாய் நினைவு இல்லை. என்றாலும் அவரைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறும். எல்லா வீட்டு உலாவும் முடிந்து வீட்டுக்கு வந்து எல்லார் வீட்டுச் சுண்டலும் விமரிசங்களுடன் அரைபட்டு முடிச்சதும், சாவகாசமாய்க் கோவில் உலாக் கிளம்புவோம். அப்பா, அண்ணா, தம்பி தனியாப் போவாங்க. நான், அம்மா அக்கம்பக்கம் பெண்களுடனோ அல்லது இரண்டு பேரும் தனியாவோ போவோம். அது வரை எல்லாக் கோவிலிலும் அலங்காரமும் இருக்கும். வீதிகளில் கூட்டமும் இருக்கும். நிதானமாய் மீனாட்சி கோவில், மதனகோபாலசாமி கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில்,கூடலழகர் கோவில் என்று ஒரு நாள் வைத்துக் கொண்டால் மறுநாள் மீனாட்சி கோவில் போயிட்டு வடக்குப் பக்கம் கோவில்களுக்கும், ராமாயணச்சாவடியில் தினமும் செய்யும் அலங்காரமும் போய்ப் பார்ப்போம். இப்போ ராமாயணச் சாவடி அப்படியே இருக்கா தெரியலையே?
இதிலே சிறு வயது நவராத்திரி நினைவுகளைப் பகிர்ந்துள்ளேன். மற்றும் சென்னையில், ராஜஸ்தான், குஜராத்தில் நவராத்திரி கொண்டாடிய நினைவுகளும் நிறைய உள்ளன. கொலு பற்றியும் நவராத்திரி பற்றியும் வேறு சில தகவல்களைத் தனி இழையில் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.
நவராத்திரி அனுபவங்கள் மனதுக்கு மிகவும் இதமான அனுபவங்கள். எனக்கு சுமார் பத்து வயதிருக்கும். அதாவது 1957 ம் வருட நவராத்திரி. நன்றாக மொழு மொழுவென்றிருப்பேன். அப்போது ஒரு முறை நவராத்திரி நேரத்தில் நடந்த ஒரு இனிமையான அனுபவம்.
என் அம்மா எனக்கு கிருஷ்ண வேடம் போட்டு கூடவே என் மாமா மகள்களுக்கு ருக்மணி, சத்யபாமா வேடம்போட்டு எங்கள் மூவரையும் அழைத்து கையிலே வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தொடுத்த மலர்கள், சகிதமாக என் கையில் புல்லாங்குழல் வேறுகொடுத்து ,அப்படியே சென்று நவராத்திரி கொலுவுக்கு எல்லோரையும் அழைத்துவிட்டு வா என்று அனுப்பினார்கள்.
எனக்கு வெற்றிலை பாக்கு தட்டை சமமாகப் பிடிப்பதா, அல்லது புல்லாங்குழலை ஊதுவது போல் தோற்றமளிக்க வாயின் உதடுகளில் புல்லாங்குழலை வைத்துக்கொண்டு அதைக் கைகளால் பிடித்துக்கொண்டு வெற்றிலைபாக்கு தட்டையும் எப்படிப் பிடித்துக் கொள்வது என்னும் யோசனையால் தடுமாறி, எப்படியோ அந்த பஞ்சகச்சம் வேட்டி தடுக்கியும் ,தடுக்காமலும் அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, நடந்து எங்கள் தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் இருக்கும் நண்பர்களை, உறவினரை அழைக்க போய் வந்தேன்.
இதன் நடுவே இரு புறமும் தேவியர் ருக்மணி, சத்யபாமா வர அவர்கள் நடுவே ஒரு கிருஷ்ணனைப் போல் கம்பீரமாக வரவேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும் கூடவே ஒரு வெட்கம், சாலையில் எல்லோரும் பார்க்கிறார்களே என்னும் ஒரு விதமான உணர்வு, அதையும் தாண்டி ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி , இத்தனை உணர்வுகளுக்கு நடுவே நானும் கிருஷ்ணன் போல் நடப்பதாக எண்ணிக் கொண்டு சென்று வந்தேன்.
திடீரென்று ஒரு குரல், டேய் கிருஷ்ணமாச்சாரி கிருஷ்ண வேஷம் போட்டுண்டாப் போறாது, கிருஷ்ணன் மாதிரி நடக்கணும் என்று போகிற போக்கில் எதிர் வீட்டு நரசிம்மன் மாமா சொல்லிவிட்டுச் சென்றார்.
எனக்குள் ஒரு சந்தேகம் கிருஷ்ணன் போல நடப்பதா ? அது எப்படி , இப்போது சாலையில் நடப்பதைப் பற்றி சொல்கிறாரா, அல்லது கிருஷ்ணனின் நடத்தையைப் பற்றி சொல்கிறாரா? என்று ஒரு சந்தேகம் வந்தது.
ஓரக் கண்ணால் பாமா ருக்மணியைப் பார்த்தேன், இருவரும் ஒரு கையால் வெற்றிலை பாக்கு தட்டை லாவகமாக இடுப்பிலே அணைத்து வைத்துக்கொண்டு ஒரு வீட்டில் கொடுத்த சுண்டலை வாயில் போட்டு ருசித்துக் கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.
இந்தப் பெண்களுக்கு மட்டும் இடுப்பிலே வைத்துக் கொண்டே எல்லா வேலைகளையும் செய்யும் பாரம்பரியம் எங்கேயிருந்து வந்திருக்கும் என்று எண்ணமிட்ட படியே நடந்தேன். திடீரென்று தலையில் வைத்திருந்த மயிற்பீலி முன்னால் மடிந்து முகத்தில் விழுந்து மிகச் சரியாக கண்களை மறைக்கவும் நான் யார் மேலேயோ மோதிக்கொள்ளவும் சரியாக இருந்தது.
என்னா கிருஷ்ணன் வேஷம் போட்டா எதிரே வரவங்க கண்ணுக்குத் தெரியாதா ,என் மேலே வந்து முட்டிக்கறான் பாரு என்று ஒரு பெண்மணி விளையாட்டாகக் கூறிக்கொண்டே என் மயிற்பீலியை சரி செய்துவிட்டு எனக்கு ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு சென்றாள். வாய் பிளந்தேன் , வாயில் உலகம் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்துவிட்டு பக்கத்திலிருந்த ருக்மணி வாயை மூடு ஓட்டைப் பல்லு தெரியறது என்றாள் .
கபக்கென்று வாயை மூடிக்கொண்டு திரும்பினேன், தட்டிலிருந்த ஒரு வெற்றிலை காற்றில் பறக்கத் தொடங்கியது. அதை எப்படிப் பிடிப்பது என்று யோசித்து தலையை உயர்த்தினேன்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To post to this group, send an email to maza...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to mazalais+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/mazalais?hl=en-GB.
கீதாவின் வட இந்திய அனுபவங்கள் அறிய அவா!
தேனீயின் கிருஷ்ணலீலை தொடரட்டும் ...
நா.கண்ணன்
2012/10/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.
--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To post to this group, send an email to maza...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to mazalais+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/mazalais?hl=en-GB.
இன்று கோயிலுக்குச் செல்ல அவகாசம் கிடைக்காமல் மட்ரிட்டில் இருக்கின்றேன். இங்கே அருகில் எகிப்திலிருந்து பெயர்த்து தூக்கி கொண்டுவரப்பட்ட ஒரு 2200 ஆண்டு வயதுள்ள எகிப்திய கோயில் ஒன்று இருக்கின்றது. அது ஆமூன் ஈஸிஸ் தெய்வக்களுக்காக உருவாக்கப்பட்ட கோயில். சற்று நேரத்தில் நடக்கச் செல்லும் போது மன திருப்திக்கு அந்தக் கோயிலைச் சுற்றி வர திட்டமிட்டிருக்கின்றேன். இன்றைய என் நவராத்திரி ஆரம்பம் இவ்வளவே. :-)

> பொம்மைகள் ஒன்றைக்கூட காணோம். பிள்ளையார் மட்டும் கடைசிப்படிக்குக் கீழ
> உருண்டு கிடந்தார். மற்றவை???
>
என்னப்பா! நவராத்திரி படத்தைவிட த்ரில்லிங்கா இருக்கு!
க.<
Bonus: http://youtu.be/DqWKRny75nc
அம்பிகையை இன்று (17.10.2012 புதன்கிழமை) மயில் வாகனம், சேவல் கொடியுடன்
அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி' என்றும், "குமார கண நாதம்பா'
என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள்
இவள்.
மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள்.
சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின்
உதவியை நாடினர். அவருடைய நெற்றிக் கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை
சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது.
கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி
"கந்தன்' என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும்
ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல்' என்றால் "வெற்றி' . அந்த
சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத்
திகழும் வெற்றிவேலை, அன்னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி
வந்து சேரும்.
நைவேத்யம் : தயிர்சாதம்
தூவவேண்டிய மலர் : முல்லை
பாட வேண்டிய பாடல்
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
நன்றி: தனிமடல் மணி
நவராத்திரி வழிபாடுகளற்ற நாடுகளில் வாழ்வோருக்கு இதமளிக்கும் வண்ணம் மிக
நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட நவராத்திரி பூஜை விழியம் இதோ! நான்
இலண்டனில் இருந்தவரை தமிழகத்தை மறந்தே போனேன். தமிழ் மட்டும் பேசி
லண்டனில் வாழ்ந்துவிட முடியும். விவேகாநந்தர் கண்ட கனவு எப்படியெல்லாம்
உருக்கொள்கிறது பாருங்கள்:
நா.கண்ணன்
இன்று அவள் கோயிலை வலம் வரும்போது என் வணக்கத்தையும் தெரிவிக்கவும். அவளுக்காக அவள் நாட்டுப் பச்சை ஆலிவ் (பதப்படுத்தாதது; raw, uncured) பயன்படுத்தி இரண்டு உணவுப்பொருள் தயார் செய்தேன்; அது உங்கள் பிறந்த நாளை முன்னிட்டும்.
இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை.
இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.
நைவேத்யம் : எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள் : மல்லிகை, செவ்வந்தி.
பாட வேண்டிய பாடல்:
என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.
நவராத்திரி மூன்றாம் நாள்
என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.நன்றி: தனிமடல் மணி
ஓ! அப்படியா? மணி என்பவர் எனக்கு அனுப்புகிறார்.
நல்ல விஷயம்தானே! இருக்கட்டும் என்று போட்டேன்.
க.>
| இப்படியும் ஒரு பரவசம் உண்டு என்பதனை அறிவித்தமைக்கு நன்றி க. http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 17/10/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
| தேனீ சார், எனக்கு நவராத்ரி நினைவுகள் எழுத இயலாது.ஆனால், பண்டிகை அனுபவங்கள் மனதி வருடும் சில சேதிகள் உண்டு. க. http://www.kamalagaanam.blogspot.com --- On Tue, 16/10/12, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote: |
|






நேற்று ஸ்டுட்கார் சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் கலந்து கொள்ள முடிந்தது. பூஜை திருப்திகரமாக அமைந்திருந்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் குடும்பங்களே அருகாமையில் இருந்தாலும் தொடர்ந்து ஹிந்து சமய திருவிழாக்களைக் கோயிலில் நடத்தி வரும் கோயில் நிரிவாகத்தினரின் பணி போற்றுதலுக்குறியது.சில படங்கள்..
கொலு படத்தை இணைக்க மறந்து விட்டேன். இதோ.
சுபா
--



அட்டகாசம்On Sun, Oct 21, 2012 at 4:32 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
கலசம் எல்லாம் வைச்சு சம்பிரதாயமாகக் கொலு வைச்சிருக்காங்க. அருமையா இருக்கு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கர்நாடாக சங்கீதம் என்பது தமிழ் மண்ணில் பிறந்து தென்னகம் முழுவதும்
ஏற்றுக்கொண்ட ஒரு சங்கீத முறைமை.
ரவிசங்கர் பொன்ற இசைக்கலைஞர்கள் மேலை நாட்டிற்கு இந்திய சாஸ்திரீய
சங்கீதத்தை எடுத்துச் சென்ற பின் கர்நாடக இசையும் அங்க கால்பதித்து
வளரத்தொடங்கியது. இது பற்றி யாராவது ஆய்வுக்கட்டுரை ழுதினால் இதன்
சரித்திரம் முழுமையாய் புரியும்.
இந்த விழியம் மிக அழகாக கர்நாட இசையை மேலை நாட்டினர் பாடமுடியும் என்று
காட்டுகிறது (ஜான் ஹிக்கின்ஸ்!). முதன் முறையாக நான் பார்த்தவரை ஒரு
கருப்பு இனப்பெண், ஒரு ஜப்பானிய/கொரியப்பெண், ஒரு பாரசீக மாணவர், ஒரு
சினப்பெண் என்று தமிழிசையைப்பாடுவது பார்க்க அருமையாக உள்ளது! லோகா
சமஸ்தா சுகினோ பவந்து! என்பது இந்தளவில் உண்மை. தீக்ஷதரின் கிருதி உலகை
ரக்ஷிக்கிறது.
நா.கண்ணன்