பதஞ்சலி யோகம் குறித்த கட்டுரைகளை தொகுக்கலாம். ( கிகி... நானும் சில எழுதிருக்கேனாக்கும் )
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பதஞ்சலி யோகம் குறித்த கட்டுரைகளை தொகுக்கலாம். ( கிகி... நானும் சில எழுதிருக்கேனாக்கும் )
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற ஒரு புராதன நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது. யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது. யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.
நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன. ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை. நம்முடைய லௌகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது. ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம். நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும், ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம், தத்துவம், மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை .
அதைவிட அபாயகரமானது, அரைகுறையான புரிதல்கள் கொண்டவர்கள் அல்லது முற்றாக ஏதுமறியாதவர்கள் அவர்களுடைய கருத்தியல் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் பெரும்பாலான விஷயங்களை தவறாகச் சொல்லிப் பரப்பி வருவது. நம் சூழலில் நாம் மேலோட்டமாக அறிந்து , பரிசீலனை இல்லாமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் பல விஷயங்கள் அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பபட்ட பொய்கள் என்பதை சற்று முயற்சி செய்தால் நம்மால் அறியமுடியும் . தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நம் மரபு சார்ந்த பல விஷயங்கள் அவற்றை பற்றி எள்முனைகூட அறியாத அரசியல்வாதிகளால் திரிக்கப்பட்டு பரப்பப் பட்டுள்ளன. அவற்றை களைவது நாம் உண்மையான அறிவை அடைவதற்கு அவசியமாக ஆகியுள்ளது . இதற்கு முக்கியமான வழிமுறை மூலநூல்களை பயில்வதுதான். குறைந்தது ஐம்பது நூல்களையாவது இந்திய சிந்தனையின் மூலநூல்களாக கொள்ளமுடியும், பதஞ்சலி யோக சூத்திரம் அவற்றில் முக்கியமானது . மிதமிஞ்சி விளக்கி விரிவாக்கம் செய்து அவற்றை அணுகமுடியாமல் செய்வதை தவிர்த்து நவீனகாலத்துக்கு உரிய சிந்தனைகளுடன் பொருத்தி மூலநூல்களை புரிந்துகொள்வது அவசியம். இது அதற்கானமுயற்சி.
ஆன்மீகம் ,தத்துவம், மதம்
====================
முதலில் ஆன்மீகம் தத்துவம் மதம் ஆகிய மூன்றும் வேறு வேறானவை என நாம் திட்டவட்டமாக புரிந்துகொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படையான கேள்விகளுக்கு உள்ளுணர்வின் மூலம் விடைதேடும் முயற்சி ஆகும். ”நான் யார்? எனக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவென்ன? இங்குள்ள ஒவ்வொன்றும் எதனால் எப்படி ஏன் உருவம் கொண்டுள்ளன ? எப்படிச் செயல்படுகின்றன ?” என்றெல்லாம் தொடங்கும் முடிவற்ற அடிப்படைக் கேள்விகள் சிந்திக்க ஆரம்பித்த காலம் முதல் மனித மனத்தில் எழுந்து கொண்டிருப்பவை. மனிதனின் அறிவெல்லாமே இவ்வினாக்களுக்கு பதில் தேடி அவன் மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளே . அறிவியல் அக்கேள்விகளுக்கு புறவயமான தளத்தில் விடை தேடுகிறது . நேர் எதிர் திசையில் ஆன்மீகம் பயணம் செய்கிறது .அது அக்கேள்விகளுக்கு அகவயமான தளத்தில் விடைதேட முயல்கிறது .நுண்ணுணர்வுள்ள எவருமே இவ்விரு வழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஏற்று பிறிதை நிராகரிக்க மாட்டார்கள். ராமகிருஷ்ண பரம ஹம்சர் அறிவியலை நிராகரிக்கவில்லை ,ஐன்ஸ்டீன் ஆன்மீகத்தையும் நிராகரிக்கவில்லை .
இப்படிச் சொல்லலாம் . இந்திய மரபில் ‘இதம்’ என்ற சொல் ஆன்மீகத்தேடலின் முதல் கண்ணி ஆகும் . ‘இது ‘ என்று அதற்கு பொருள். ‘இது என்ன ?’ என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது ஆன்மீக தேடல் . இதற்கு அறிவியலாளன் அப்பொருளை எடுத்து புறவயமாக ஆராய்ந்து விடைகாண முயல்வான் .அப்பொருளை அவன் பல கூறுகளாக பகுத்து அறியலாம் . அப்பொருள் சிலிகன் இரும்பு போன்ற தாதுக்களினாலானது என்று அவன் சொல்லலாம். அத்தாதுக்கள் எந்தெந்த மூலக்கூறுகளினாலானது என அவன் விளக்கலாம் .அணுக்களாக அம்மூலக்கூறுகளை பிரிக்கலாம் . அணுவை துகள்களாகப் பிளக்கலாம். இது பகுத்தல்முறை . நேர்எதிர் திசையில் சென்று அப்பொருளை அவன் பிரபஞ்சத்தின் பிற பொருட்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை மலையுடனும் நிலத்துடனும் சம்பந்தப்படுத்தி அதன் இயல்புகளை அறியலாம். இது தொகுத்தல் முறை .இவ்விரு முறைகளையும் சேர்த்தேகூட அவன் செய்யலாம் .
ஆனால் ஆன்மீகவாதி அப்பொருளை நோக்கி தன் கவனத்தை குவிப்பதில்லை . அப்பொருள் ஏன் அப்படி தனக்கு தெரிகிறது என அவன் யோசிப்பான். தன் புலன்கள் அப்படி அதை காட்டுகின்றன. புலன்கள் மூலம் அப்பொருளை அறிவது எது ? அப்பொருளை அது ஏன் கடினமானது என்கிறது — காரணம் மேலும் மென்மையான ஒன்றை அது அறிந்திருக்கிறது . அப்பொருளை அது ஏன் வடிவமற்றது என்கிறது — காரணம் அது வடிவம் என்றால் என்ன என்று அறிந்திருக்கிறது . ஆகவே அறிதல் என்ற செயலே அறிபடும்பொருளை தீர்மானிக்கிறது .அந்த அறிதலின் இயல்புகள் என்ன? இவ்வாறெல்லாம் ஆன்மீகம் தனக்குள்ளே ஆழ்ந்து தன்னை ஆராய்ந்து உள்ளே செல்லும் . ஆன்மீக அம்சமில்லாத அடிப்படைச் சிந்தனை இருக்க முடியாது .
ஆன்மீகம் தன் உள்ளுணர்வால் அறிந்ததை தனக்குத்தானே சொல்லும்போதே அது தத்துவமாக ஆகிவிடுகிறது .காரணம் அறிதலானது அந்த அறிதல் நிகழக்கூடிய அக்கணத்தில் கட்டற்றதாக வடிவமற்றதாக இருக்கிறது .அறிவாக அது மாற்றப்படும்போது அதற்கு எல்லையும் வடிவமும் உருவாகிவிடுகிறது .பேசப்பட்ட ,கேட்கப்பட்ட விவாதிக்கப்பட்ட ஆன்மீகம் உடனேயே தத்துவமாகிவிடுகிறது .அனுபவ நிலையில் அகவயமாக நிற்கும் ஆன்மீகமே தூயது . ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆழ்ந்த மனநிலை ஆன்மீகம் . அதை பிறருக்கு விளக்க அவர் சொல்லும் கதைகள் தத்துவம் ஆகிவிடுகின்றன .
தத்துவம் மூலம் சொல்லப்பட்டதை வாழ்க்கைமுறையாக மாற்றும் பொருட்டு நெறிகளும் ஒழுக்கங்களும் மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிலைநிறுத்தவே கோவில் , மடம் , புனிதநூல் போன்ற பல அமைப்புகள் உருவாகின்றன. இந்த நெறிகளும் மரபுகளும் அமைப்புகளும் சேர்ந்ததே மதம் ஆகும் . மதம் எப்போதுமே சில விடைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம் .அவ்விடைகள் காலவதியாகும் போது மதமும் பழையதாகலாம். தேங்கிய மதம் பொருந்தாத பிடிவாதங்களும் மரபுகளும் நம்பிக்கைகளும் கொண்ட தீய சக்திகூட ஆகலாம்.
தத்துவம் மதத்தைப்போல சில விடைகளுடன் நின்று விடுவதல்ல . தத்துவவாதி கேள்விகளுடன் முன்னகர்கிறவன்தான். ஆனால் அவனுக்கும் ஓர் எல்லை உண்டு . தத்துவம் தன்னுடைய ‘உண்மையை நிர்ணயிக்கும் முறைக்கு’ கட்டுப்பட்டது . அம்முறை மறுக்கப்படுகையில் அதுவும் மறுக்கப்படுகிறது.ஆன்மீகம் எந்த கட்டுப்பாடும் இல்லாதது .காரணம் அது முழுமையாகவே அகவயமானது. அதற்கு எந்த நிரந்தரமான அமைப்பும் இல்லை .அதற்கு வடிவமும் இல்லை . ஆகவேதான் குப்பையில் கிடக்கும் சித்தனும் ஐந்துவேளை குளிக்கும் பக்தனும் ஒரே சமயம் ஆன்மீகவாதிகளாக இருக்க முடிகிறது .
யோகம் , தியானம் ,பிரார்த்தனை
=========================
நம்மில் பலர் இம்மூன்று விஷயங்களையும் ஒன்றாகவே இதுவரை எண்ணி வருகிறார்கள் . அதற்கேற்ப இன்று யோகம் மற்றும் தியானம் ஆகியவற்றை எளிமைப்படுத்தி கற்பிக்க முயலும் பல நிறுவனங்கள் இம்மூன்றும் ஒன்றே என்பது போன்ற ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கி வருகின்றன. இவை முற்றிலும் வேறு வேறானவை என்பதை வாசகர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
பிரார்த்தனை என்பது கடவுள் என்ற கருத்தை ஏதேனும் வடிவில் ஏற்றுக் கொண்டவர்கள் அச்சக்தியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாகும் . கடவுளை ஒரு ஆதி சிருஷ்டிகர்த்தர் என்றோ , பிதா என்றோ , ஆக்கி காத்து அழிக்கும் சக்தி என்றோ ,ஒவ்வொன்றிலும் உறையும் அறியமுடியாத மர்மமான வல்லமை என்றோ , பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் பெருநியதி என்றோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் . பிரார்த்தனை என்பது அச்சக்தியிடம் செய்யப்படும் உரையாடல். அதனிடம் செய்யப்படும் வேண்டுகோள்.
தியானம் என்பது பிராத்தனையின் ஒரு நிலையாக கைகூடுவதாயினும் அதற்கு கடவுள் என்ற ஒருவர் இருந்தாக வேண்டிய அவசியமில்லை . நாத்திகர்களும் தியானம் செய்யலாம் .அடிப்படையில் மனதை ஒருமை படுத்துதல்தான் தியானம் என்பது . முதலில் மனதை கூர்ந்து கவனித்தல் . அதன் இயங்கு முறையை அறிந்து மெல்ல அதை கட்டுக்குள் கொண்டுவந்து அதன் சிதறுண்ட இயக்கத்தை சீரான வழியில் ஆற்றுப்படுத்துதல். தியானம் மனவல்லமையை அதிகரிக்கி£றது .
ஆனால் யோகம் என்பது தியானத்தை விட மேலான ஒன்று . யோகத்தின் தொடக்கப்புள்ளி தியானமே. ஆனால் யோகம் மனம் என்ற செயல்பாட்டை அதற்கு நேர் எதிர் திசைக்கு போய் இல்லாமலாக்க முயல்கிறது . தியானம் மனநதிக்கு கரைகட்டி சீராக ஓட செய்கிறது . யோகம் அந்நதியை திரும்ப அதன் உற்பத்தியிடத்துக்கே கொண்டு செல்ல முயல்கிறது . ஆகவே தியானம் எல்லாருக்கும் உரியது ,அவசியமானது . ஆனால் யோகம் அதன் பொருட்டு பிற அனைத்தையுமே விட்டு விட்டவர்களுக்கு மட்டுமே உரியது . வேறு செயல்களில் ஈடுபட்டபடி யோகத்தை செய்ய முடியாது . அறிவுப்பயிற்சிகூட யோகத்துக்கு தடையே .
யோகம் மத வழிபாடா ?
==================
தியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே . யோகம் இந்தியமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று . அடிப்படையில் இது நாத்திக தரிசனமாகும் . வெகுகாலம் யோகம் லௌகீக தரிசனமாகவே கருதப்பட்டது .பிற்காலத்தில் , குறிப்பாக சொல்லப்போனால் பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன. அதை விரிவாக பிறகு காணலாம் .யோகத்தின் மூல நூல்கள் எதிலுமே கடவுளுக்கு இடமில்லை . பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூட யோகப் பயிற்சியாளன் தன்னை தயாரித்துக்கொள்ள மேற்கொள்ளும் மனப்பயிற்சிகளில் ஒன்றாக மட்டுமே இறைவணக்கம் சொல்லப்பட்டுள்ளது . மேலும் யோகம் தத்துவ அடிப்படையிலே கூட கடவுள் என்ற கருதுகோளுக்கு எதிரானதாகவே இருக்கிறது . அது ஆதி இயற்கை என்ற கருதுகோளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாக வைத்த சாங்கிய மெய்ஞான மரபின் ஒரு பகுதி.
பழமையில் என்ன இருக்கிறது ?
=========================
தமிழ் சூழலில் இத்தகைய பழைய நூல் ஒன்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்போது எழக்கூடிய முக்கியமான கேள்வி எதற்காக பழைய விஷயங்களை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்பதுதான். இது ஒருவகையில் சரிதான். ஒரு சாதாரண வாசகனுக்கு பழைய விஷயங்கள் தேவை இல்லைதான். எளிய முறையில் தியானம் செய்யவோ, யோகம் பயிலவோ முயலும் ஒருவருக்கு கூட அவர் சார்ந்துள்ள அமைப்பு அளிக்கும் அறிமுகமே போதுமானது .
ஆனால் சுயமாக சிந்திக்க முயலக்கூடிய எவரும் பழைமையில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏனெனில் எந்த சிந்தனையும் ஒரு தொடர்ச்சியின் விளைவாக உருவாவதேயாகும். ஏதாவது ஒரு துறையில் சுயமாக சிந்திக்கும் பயிற்சி கொண்டவர்கள் அத்துறையில் அதுவரை உள்ள மரபை உதாசீனம் செய்துவிட முடியாது என்பதை அறிவார்கள். . நமது மரபை கற்று விமரிசித்து மீறிவளர்ந்து முன்னெழவேண்டும். சாக்ரடீஸையும் ஸ்பினோசாவையும் ஹெகலையும் நீட்சேயையும் கற்று முன்னகர்ந்தவர்கள்தான் மேலை சிந்தனையை உருவாக்கியவர்கள் . நமது சுயமான சிந்தனையை நாம் அடையவேண்டும் , வெறும் மொழிபெயர்ப்புப்பணியே சிந்தனை என்று அமைந்துவிடக்கூடாது என்று இப்போதுபரவலாகசொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் நம் மரபுடன் ஆக்கபூர்வமான உறவைமேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயம் இங்கே பேசப்படுவதே இல்லை. சிந்தனைகளை எவரும் அந்தரத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியாது.
பழைமை என்றால் காலாவதியானது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் நாம் இந்திய பழைமையை ,தமிழ் பழைமையைமட்டுமே அப்படி சொல்வோம். மேலைபழமையை அப்படிச் சொல்லும் துணிச்சல் நமக்கு வராது, காரணம் மேலைப்பழமை மேலைநாட்டு புதுமையை தொடர்ந்து உருவாக்கியபடி இருப்பதை நாம் காண்கிறோம். இம்மானுவேல் காண்ட் பழையவர் என்று இன்று சொல்ல முடியாது, பின்நவீனத்துவக் கருதுகோள்கள் பல அவரிலிருந்து உருவாகி வருகின்றன. நீட்சே, ஹெகல் முதலியோரும் இன்றைய பின் நவீனசிந்தனைகளுக்கு உடனடி முன்னோடிகளாக இருக்கிறாகள். அந்தகோட்டை பின்னகர்த்தினால் ஸ்பினோஸாவின் வினாக்கள், சீனோவின் புதிர்கள், ஐயவாதிகளின் தர்க்க ஒழுங்குமுறை வரை செல்லும். நமது பழைமை ஏன் நமக்கு காலவதியானது என்று படுகிறது என்றால் ஒன்று நாம் அதனை கற்றதேயில்லை என்பதனால்தான். அவற்றை நவீனச்சூழலில் வளர்த்தெடுக்கவும் இல்லை .
தமிழில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் நமக்கு முன்னோடியான சிந்தனையாளர்கள் நம் மரபில் யார்யார்? வைணவ சைவ உரையாசிரியர்கள், திருமூலர், ராமானுஜர், நம்மாழ்வார், திருவள்ளுவர் என அது பின்னோக்கி செல்லும். இவர்களில் பிற்கால சிந்தனையாளர்களான சைவ வைணவ ஆசாரியார்களை புரிந்துகொள்ள சில மூலநூல்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானது பதஞ்சலி யோக சூத்திரம். நியாய சூத்திரங்கள், பிரம்மசூத்திரம் , சாங்கிய காரிகை மற்றும் முக்கியமான ஐந்து உபநிடதங்கள் ஆகியவை மற்ற நூல்கள். குறள், மணிமேகலை போன்ற சமண பௌத்த நூல்களை பயில அம்மதங்களுக்கு உரிய மூலநூல்களுடன் இம்மூல நூல்களும் அவசியமாக கற்கப்படவேண்டும். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் வேதாந்தம் மீமாம்சை ஆகிய ஆறு தரிசனங்களும் இந்தியமரபில் உள்ள எல்லா சிந்தனை ஓட்டங்களிலும் அவற்றை தீர்மானிக்கக் கூடிய அடிப்படைக் கூறுகளாக உள்ளன.
உதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரங்கள் மீது பயிற்சி இல்லாத ஒருவர் திருமந்திரம், சிவஞானபோதம் இரண்டையும் எளியமுறையில்கூட புரிந்துகொள்ள முடியாது . நியாய தர்க்கமுறையில் சில அடிப்படைகளையேனும் அறியாமல் ஒருவர் வைணவ உரைகளுக்குள் நுழையவே இயலாது. அதாவது நாம் நம் மரபில் நமக்கு முன்புவரை இருந்த சிந்தனைகளை புரிந்துகொள்ள அச்சிந்தனைகளின் அடிப்படைத்தர்க்கங்களை அமைத்த சிலமூலநூல்களை முதலில்பயிலவேண்டியுள்ளது.
பழமை வழிபாடு மிக ஆபத்தானது .பலகாலம் நாம் அந்தச்சேற்றில் புதையுண்டு கிடந்தோம். பிறகு அதிலிருந்து மீண்டு பழமையை உதாசீனம் செய்யும் புதிய சேற்றில் சிக்கிக் கிடக்கிறோம். உலக சிந்தனையில் தங்கள் பங்களிப்பினை ஆற்றிய எந்த கலாச்சாரமும் தன்னுடைய பழைமையை போற்றியதும் அல்ல, உதாசீனம் செய்ததுமல்ல, சமகாலத்தேவைக்கு ஏற்ப ஆழ்மாக பயின்று விமரிசன ரீதியாக எதிர்கொண்டதே என்பதை நாம் காணலாம்.
எல்லாமே நம் மரபில் உள்ளது என்ற மூடநம்பிக்கை கொண்ட பலர் இன்று உண்டு. எல்லா சிந்தனைகளும், அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட
நம் முன்னோருக்கு தெரிந்திருந்தன என்ற பேச்சு அடிக்கடி நம் காதில் விழும். அதுவும் மரபை அறியாமல் வெறுமே வழிபட்டபடி இருப்பதன் விளைவே. இன்றைய தத்துவமும் அறிவியலும் பலமடங்கு வளர்ந்தவை என்பது உண்மையே. அதற்குக் காரணம் இந்நூற்றாண்டு அடைந்துள்ள மாபெரும் தகவல் தொடர்புவசதி. உலகம் முழுக்க உள்ள சிந்தனைகளை நாம் வீட்டில் இருந்தே கற்கமுடியும். கல்வி பரவலாக்கப்பட்டு விட்டிருக்கிறது. உயர்கல்விக்கான அமைப்புகள் பெருகியுள்ளன. ஆகவே நாம் இன்றைய சிந்தனைகளையே முதன்மையாகவும் முக்கியமாகவும் கற்று தெளியவேண்டும். அவற்றில்தான் நம் கால்கள் ஊன்றிருக்கவேண்டும்.அப்படியானால் எதற்காக பழைய சிந்தனைகளை கற்கவேண்டும்?
அறிவியலுக்கு சமகாலத்தன்மை முக்கியமானது. காரணம் அதன் அறிதல்முறைகளில் , அறிவமைப்பில் சீரான வளர்ச்சி உள்ளது. நியூட்டனுக்கு பிறகு ஐன்ஸ்டீன் கண்டிப்பாக ஒரு வளர்ச்சிநிலையே. இன்றைய இளம் அறிவியலாளன் கண்டிப்பாக நியூட்டனை விட பலமடங்கு விஷயம் தெரிந்தவனே. ஆனால் இலக்கியம் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் இது பொருந்தாது.இலக்கியத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சிப்போக்கு என்று ஒன்று இல்லை என்பதே நாம் காண்பது. மாறுபட்ட கோணங்கள் வரலாம், மேலும் நுட்பமான தர்க்கங்கள் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான மூலதத்துவநூலின் பார்வை ஏறக்குறைய நிலையாகவே இருக்கும். அதன்பின்வந்த எல்லா விவாதங்களிலும் அதன் தரப்பு ஒலித்தபடியே இருக்கும். சாக்ரடீசின் ‘குடியரசு’ அதற்குப்பின் வந்த சிந்தனைகளால் வலிமைபெறுமேயல்லாது காலாவதியாகாது. இலக்கியமும் அதைப்போலத்தான்.கம்பனை பாரதி காலவதியாக்குவது இல்லை. இன்றைய புதுக்கவிதைகள் சங்க இலக்கியத்தை தாண்டிச்சென்றிருப்பதாக சொல்ல எவருமே துணியமாட்டார். ஆகவே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பழைமை என்பது எப்போதும் செல்லுபடியாக கூடிய ஒரு அடிப்படைக் கட்டமைப்புதான்.
மேலும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இலக்கியத்திலும்சரி தத்துவத்திலும் சரி முற்றிலும் புத்தம்புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனிதமனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்பநாட்களிலேயெ சிந்தனையின் அடிப்படைக்கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றில் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.உதாரணமாக இன்றைய பின்நவீனசிந்தனைகளில் எந்தச் சரடையும் நாம் பின்னோக்கி நீட்டி கிரேக்க மரபுக்கு கொண்டு சென்று ஒரு துவக்கப்புள்ளியைக் காணமுடியும். மனிதன் சில அடிப்படைக் கோணங்களில்தான் பிரபஞ்சத்தை பார்க்கமுடியும் என்பது அவனது சிந்தனையின் எல்லையாக இருக்கலாம், அல்லது பிரபஞ்சத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.
ஆகவே நாம் பழைய மூலநூல்களைப் பயிலும்போது விதைகள் அடங்கிய ஒரு களஞ்சியம் நமக்கு கிடைக்கிறது. நமக்கு கற்பனை, தர்க்கத்திறன் ஆகியவற்றின் ஈரம் இருந்தால் அவைமுளைத்து நமது சிந்தனைகளை உருவாக்க கூடும்.
யோகத்தின் வரலாற்றுப் பின்னணி
யோகத்தின் வரலாற்றுப்பின்னணி என்ன என்று புரிந்துகொள்வது யோகத்தை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல யோகத்தை புரிவதற்கும் அவசியமானது. தற்காலத்தில் யோக சாதனைகளில் பலவகைகளிலும் ஈடுபடுபவர்களிடம் அப்படிப்பட்ட புரிதல் ஏதும் இல்லை என்பது நாமறிந்ததே. யோகத்தை ஒருவிதமான பக்தியாக ‘ காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலையாக இவர்களில் சில விளக்கும் அபத்தமும் நமது சூழலில் நடந்துகொண்டுதான் உள்ளது. யோகம் எவ்விதமான மன எழுச்சிக்கும் எதிரான ஒன்று என்பதை அவர்கள் உணராமைக்கு காரணம் அதன் வரலாற்று இடத்தைப்பற்றிய அறிதல் இல்லாமையே.
பாரத தத்துவ மரபின் தொடக்கப்புள்ளி என்று வேதங்களை சொல்வது வழக்கம். குறிப்பாக ரிக் வேதம் .அதிலும் குறிப்பாக ரிக்வேதத்தில் உள்ள பத்தாம் மண்டிலம். அதில்தான் ஆன்மீக சிந்தனைக்கு அடிப்படையாக அமையக்கூடிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன . ஆதி தரிசனங்கள் பேசப்பட்டுள்ளன. வேதங்களில் பெரும்பகுதி தோத்திரப்பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் அடங்கியதே. அவற்றில் தத்துவத்துக்கு மிக குறைவாகவே பங்கு உள்ளது .அனுஷ்டானங்கள் , அதாவது வேள்வி மற்றும் வழிபாட்டுச் சடங்குகளுக்கு பாடப்படவேண்டிய மந்திரங்களாகவே அவை உள்ளன. அச்சடங்குகளின் நோக்கம் திட்டவட்டமான சில நன்மைகளே. அதிகாரம் ,செல்வம், வெற்றி, புகழ் முதலியவையே வேதங்களில் வேண்டப்படுகின்றன ஆகவேதான் கீதை முதலிய பிற்கால தத்துவ நூல்கள் வேதங்கள் உலகியல் நோக்கங்களை [சம்சாரத்தை] முன்வைப்பவை என்று சொல்லி நிராகரிப்பின் தொனியில் பேசுகின்றன. வேதங்கள் தத்துவ விவாதங்களுக்கு அடிப்படைகளாக அமைவதைப்பார்க்கிலும் வேள்வி மந்திரங்களாகவே பெரிதும் கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.
வேதங்கள் ஒற்றைப்படையான கருத்துத் தரப்பினை முன்வைப்பவை அல்ல. அப்படி ஒரு மாயத்தோற்றம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது . வேதகால ஞானிகளில் ஒருமைத்தரிசனம் அடைந்தவர்கள் உள்ளனர் .இருமை தரிசனத்தின் பால் நின்று தன்னை வழிபாட்டாளனாக வைத்துக் கொண்டவர்கள் உள்ளனர். நாத்திகர்களும் உள்ளனர் .குறிப்பாக வேதரிஷியாகிய பிரகஸ்பதியே பாரத லௌகீகவாத மதங்களின் முதல்குரு ஆவார் .வேதங்களின் அடிப்படைக் கருத்துக்கள் ஒன்றோடொன்று மோதி விவாதித்து உருவானதே உபநிடத காலகட்டம் . உபநிடதங்கள் ஏராளமாக உருவாகியிருந்துள்ளன. ஏறத்தாழ ஒத்த கருத்துள்ள உபநிடதங்களே தற்போது தொகுக்கப்பட்டு கிடைத்துள்ளன. அவற்றிலும் பலவகையான அடிப்படை கருத்துமாறுபாடுகள் உள்ளன. உபநிடத காலம் மாபெரும் தத்துவ விவாதங்களின் காலம் என்பதை அவை வலியுறுத்துகின்றன.
அந்த தத்துவ விவாதங்களின் விளைவாக பலவகைப்பட்ட பிரபஞ்சப் பார்வைகள் தத்துவத் தரப்புகளாக வலுப்பெற்று வளர்ந்தன .அவற்றையே தரிசனங்கள் என்கிறோம் . ஆறுதரிசனங்கள் முக்கியமானவை. அவற்றில் ஒன்றுதான் யோகம். அதன் வரலாற்று நிலை அதுவே .
ஏன் மாறுபட்ட தரப்புகள்?
ஏன் அத்தனை மாறுபட்ட தரப்புகள் காணப்படுகின்றன ? அப்படியென்றால் பாரத மெய்ஞானிகள் முழுமுற்றான உண்மையை அடையவில்லையா? பிற்காலத்தில் தனிமனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களுடன் ஒப்பிட்டால் நம் மரபின் கருத்து முரண்பாடுகள் நம்மை குழப்பக் கூடும். உபநிடதகாலத்தில் பல ஏசுக்கள் பல முகம்மதுக்கள் பல புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஏனெனில் உபநிடத காலம் என நாம் சொல்வது ஏறத்தாழ ஐநூறு வருட காலகட்டத்தையாகும். அக்கால முக்கிய நூல்கள் பிறகுதான் தொகுக்கப்பட்டன. அவர்களுக்குள் தரிசன வேறுபாடுகளும் காணப்பட்டுள்ளது சாதாரணமே. பிற்கால மெய்ஞானிகளுக்குள்தான் எத்தனை வேறுபாடுகள் உள்ளன அல்லவா?. அப்பட்டமான மதவெறியர்களன்றி வேறு எவருமே அவர்களில் ஒருவர் மட்டுமே ஞானி அவர் சொன்னது மட்டுமே உண்மை என்று சொல்லமாட்டார்கள்.
உண்மை ஒன்றே. அதை விளக்கும் விதமே மாறுபடுகிறது .விளக்கப்படும் போது பேருண்மை ஓர் அனுபவமாக அல்லாமல் ஓர் கருத்தாகவே நம்மை அடைகிறது .பிறவிக் குருடனுக்கு நிறத்தை விளக்கமுயல்வதுபோலத்தான் அதுவும்.அனுபவத்தை பற்றிய எந்த விளக்கமும் அனுபவத்துக்கு பதிலாகாது.அனுபவித்தறிந்த மெய்ஞானிகளின் அனுபவத்தை அவர்களுடைய சொற்கள் வழியாக சென்று துளியேனும் அடைய முயல்வதே அவசியமானது.அவர்கள் விளக்கங்களை ஒப்பிட்டு குழப்பம் அடையும்போது நாம் நம்முடைய அறியாமையையே வெளிப்படுத்துகிறோம். ‘பிரக்ஞையே பிரம்மம்’, ‘இங்குள்ள எல்லாவற்றிலும் இறை உறைகிறது’, ‘ அளவில்லா கருணையும் நிகரில்லா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்’, ‘ ஆதியில் வார்த்தை இருந்தது’ போன்ற வரிகளுக்கிடையே ஆழமான அனுபவத்தின் அடிப்படையில் பெரிய வேறுபாடுகளில்லை. வேறுபாடுகள் புரிதலில் , தர்க்கத்தில், சூழலில்தான் உள்ளன
தரிசனங்களின் அடிப்படைகள்
உபநிடத காலத்த்திலேயே உருவாகி பிறகு வலுப்பெற்ற காலத்தை தரிசனங்களின் காலகட்டம் என்கிறார்கள் . தரிசனங்கள் ஆறு. சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் பூர்வ மீமாம்சம் உத்தர மீமாம்சம் [அல்லது வேதாந்தம்] . தரிசனங்கள் என்பவை அடிப்படையில் வேதங்களை விடவும் காலத்தால் முந்தியவை .அதிபுராதன காலத்தில் பழங்குடிகளாக வாழ்ந்த மனித மனத்தில் எப்படியோ உருக்கொண்டவை. பிறகு அவை மெல்ல மெல்ல தத்துவங்களாக வளர்ந்தன. உபநிடதங்களுடன் விவாதித்தே அவை வளர்ச்சி அடைந்தன என்று சொல்லலாம். அதேபோல உபநிடதங்களும் தரிசனங்களின் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டன என்று படுகிறது. பிறகு சில முதல் குருநாதர்கள் தரிசனங்களை தொகுத்து சூத்திர நூல்களை ஆக்கி தத்துவத் தரப்புகளாக , மதங்களைப்போல ஆக்கினார்கள் . அவ்வாறு தரிசனங்கள் நமது சிந்தனையின் முக்கிய அடித்தளங்கள் ஆயின.
சாங்கியத்தின் முதல்குரு ‘சாங்கிய காரிகை’ என்ற வகுத்துரை நூலை ஆக்கிய கபில மகரிஷி. யோகத்துக்கு ‘யோக சூத்திரங்களை’ ஆக்கிய பதஞ்சலி மகரிஷி முதல்குரு. ‘வைசேஷிக சூத்திர’ங்களின் ஆசிரியரான கணாத ரிஷி வைசேஷிகத்தின் முதல்குரு. ‘நியாய சூத்திரங்க’ளை ஆக்கிய கோதம ரிஷி நியாயத்தின் முதல்குரு எனப்படுகிறார்.பூர்வ மீமாம்சைக்கு ஜைமினியும் உத்தர மீமாம்சைக்கு பாதராயணரும் குருநாதர்கள் .
சாங்கிய தரிசனம் இப்பிரபஞ்சமானது செயலூக்கம் , செயலின்மை ,சமநிலை [ ரஜஸ், தமஸ், சத்வம்] என்ற முக்குணங்களினால் ஆன ஆதிப்பிரகிருதியால் [அல்லது மூலயியற்கை] ஆனதாக இருந்தது என்கிறது . அக்குணக்கள் அதில் முழுமையான சமநிலையிலிருந்தன. அந்த சமநிலை குலைய நேரிட்டமையால் ஆதியியற்கை செயல்பட ஆரம்பித்து நாம் காணுமிந்த சலனவடிவ பிரபஞ்சம் உருவாயிற்று. மீண்டும் அந்த செயல்வடிவை அடைவதே அவ்வியற்கையின் நோக்கம் என்கிறது சாங்கியம் . ஆகவே சாங்கியத்தின் அடிப்படைக் கருத்து பொருளிலிருந்தே பொருள் உருவாக முடியும் என்பதாகும். கருத்திலிருந்து பொருள் உருவாக முடியாது என அது வாதிட்டது . இதை அவர்கள் சத் காரிய வாதம் என்றார்கள் .
வேதங்கள் உபநிடதங்கள் போன்றவை பெரும்பாலும் முன்வைக்கும் கருத்து பிரக்ஞையே பொருளை நமக்கு கற்பித்துக் காட்டுகிறது என்பதாகும் . நமது பிரபஞ்சக்காட்சி நம் பிரக்ஞையின் விளைவு . ஒட்டுமொத்த பிரபஞ்சம் அதேபோன்ற ஓர் ஒட்டுமொத்த பிரக்ஞையின் விளைவு. பைபிள் கூட கடவுளின் சொல்லிலிருந்து பிரபஞ்சம் உருவானதாக சொல்கிறது . கடவுள் சக்தியால் பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக சொல்லும் குர் ஆன் கூட அதற்கு உரிய மூலப்பொருள் பற்றி சொல்லவில்லை. அறியமுடியாத மூலக்கருத்தையே அது உருவகம்செய்கிறது. அவை எல்லாமே கருத்துமுதல்வாத தரப்புகள் ஆகும். அந்த ஆதிமூலமான ‘கருத்தே’ கடவுள் அல்லது பிரம்மம் அல்லது அல்லா அல்லது யகோவா. ஆனால் சாங்கியம் பொருள்முதல்வாதத் தரப்பு. இந்த வேறுபாட்டை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
வைசேஷிகமும் பொருள்முதல்வாத தரப்புதான். அது ஆதிப் பொருள் அணுக்களே என்கிறது .அடிப்படைப்பொருட்களான நிலம், நீர்,காற்று, நெருப்பு ஆகியவை அவற்றின் ஆகச்சிறிய துகள்களினாலான அணுக்களினாலானவையாகும். அவற்றின் கூட்டு மூலமே பிற பொருட்கள் உருவாகின்றன. வைசேஷிகத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட துணைத்தரிசனமே நியாயம் ஆகும். நியாயம் இவ்வடிப்படைகளை தர்க்கபூர்வமாக எப்படி நிர்ணயிப்பது என்று பேசுகிறது. அதேபோல சாங்கியத்தின் துணைத்தரிசனமே யோகம் . நான்குமே அடிப்படையில் பொருள்முதல்வாதச் சிந்தனைகள். அதாவது அவை உருவகித்துக் காட்டும் பிரபஞ்சத்தில் கடவுளுக்கு ஸ்தானமே இல்லை .
வேதங்களை முழுமுதல் ஞானமாகவும் வேத அடிப்படையிலான விதிகளையும் சடங்குகளையும் மனிதனை மீறியவையாகவும் குறிப்பிடும் பூர்வ மீமாம்சை புரோகிதர்களின் தரிசனமாகும்.காது இன்று தனியான தரிசனமாக இயங்கவில்லை . ஆனால் இந்துமத்தின் பெரும்பாலும் எல்லா உட்கூறுகளிலும் அது ஊடுருவி உள்ளது.
முழுமுதல் கருத்துவடிவமான பிரம்மமே உண்மை மீதி எல்லாமே அதன் மாயத்தோற்றங்கள் என்று வாதிடுகிறது உத்தரமீமாம்சம். அது பிற்பாடு அத்வைதவேதாந்தமாக வளர்ந்தது .
யோகம் என்ற தரிசனம்
சாங்கியத்தின் பிரபஞ்சக் கொள்கையே யோகத்துக்கும் ஏற்புடையது.ஆகவே யோகம் சாங்கியத்துடன் பிணைக்கப்பட்டு ‘சாங்கியயோகம்’ என்றே முன்பு குறிப்பிடப்பட்டு வந்தது .
யோகம் எப்படி உருவாயிற்று என்றறிய நாம் ‘புருஷன்’ என்ற கருதுகோளை புரிந்துகொள்ளவேண்டும் . உபநிடதங்களுடன் சாங்கியம் விவாதித்தபோது ஒரு முக்கியமான வினா எழுந்தது . மூன்று குணங்கள் எப்படி ,எவரால் அறியப்படுகின்றன? அறியப்படாதபோது அவை இல்லை என்றல்லவா பொருள் ?
அதற்குப் பதிலாக சாங்கியர் உருவாக்கிய கொள்கைதான் ‘புருஷன்’ என்பது. பிரகிருதி என்பதை எப்படி உருவகிக்கிறோம் ? பூமியில் உள்ள அத்தனை பொருட்களையும் ஒட்டு மொத்தமாக தொகுத்து ஒற்றைப் பொருளாக கணித்து பிரகிருதி என்கிறோம் .அதேபோல எல்லா மனிதமனங்களையும் ஒன்றாக சேர்த்து உருவகிக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பே புருஷன் .
ஆதியியற்கை போலவே புருஷனும் ஆதிவடிவம் . முதலிறுதி அற்றவன். அவனே பிரகிருதியை பார்ப்பவன், அதன் குணங்களை அவனே அறிகிறான். அவனது அறிதல் மூலமே அக்குணங்கள் உருவாகின்றன.ஒவ்வொரு மனிதனிலும் உறைவது அந்த புருஷனின் ஒரு துளியே .ஆனால் அவனும் முக்குணங்களின் சமநி£லை சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் காணப்படுகிறான். அவன் தன்னை ஒரு துளியாகவே அறியமுடிகிறது.ஆகவே அவன் காணும் பிரகிருதியும் துளிகளாக உள்ளது . புல்நுனியில் தத்தளிக்கும் பனித்துளிமீது உருமாறியபடியே மிதந்துசெல்லும் மேகத்தை பார்க்க முயல்வதுபோன்ற செயல் இது.
ஆகவே முழுமுதல் அறிதலை சாத்தியப்படுத்தும் பொருட்டு யோகம் பிறந்தது. நவீன மொழியில் அதைஇப்படி சொல்லலாம். நாம் பிரபஞ்சத்தை நமது தேவைகள் ,ஆசைகள், நோக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அறிய முடிகிறது. அதாவது நாம் அறிவது நம்மால் திரிக்கப்பட்ட உண்மையையையே .[Distorted truth] மிகப் புறவயமானதாகக் கருதப்படும் அறிவியல் கருத்துக்களில்கூட அதுவே நிகழ்கிறது என கூறும் நவீன சிந்தனையாளர் உண்டு. அதேபோல நாம் நமது உடலின் அமைப்பு , நமது பிறப்பு வளர்ப்புச் சூழல் ,நமது பொதுவான அறிவுச்சூழல், நமது அறிவுத்துறைசார்ந்த தர்க்கங்கள் ,நமது ஆய்வு உபகரணங்கள் மற்றும் ஆய்வு முறை ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டே நாம் உண்மையை அறிய முடிகிறது .நாம் அறியும் உண்மையானது அவ்வாறு எல்லை வகுக்கப்பட்டதாக உள்ளது. அதைவிட முக்கியமாக நம் அறிதல்களை கட்டுப்படுத்துவது மொழி உருவாக்கும் எல்லையாகும். வழக்கமான மொழி மட்டுமல்ல , அறிவியலிலும் கணிதத்திலும் பயன்படுத்தப்படும் அடையாளமொழி கூட உண்மையைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது நாம் அம்மொழிகள் வழியாக அறிந்து விவாதித்து நிறுவும் எந்த உண்மையும் அம்மொழிகளின் அடிப்படைத் தர்க்கத்துக்கு கட்டுப்பட்டது தான்.
அதாவது நாம் தற்பொழுது பல்வேறு அறிதல்முறைகள் வழியாக அடையும் உண்மையானது துண்டாடப்பட்ட உண்மையாகும் [Fragmented truth ] நவீன அறிவியலில் முக்கியமான குறைபாடாக பலகோணங்களில் பலரால் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம் .ஒரு துறையின் உண்மை பிற துறைகளால் நிராகரிக்கப்படுகிறது .மாசானபு ·புகுவேகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ‘ என்ற மகத்தான நூலில் அவர் அத்தகைய ‘துண்டு உண்மை’கள் வேளாண்மையில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் எப்படி உலகம் பேரழிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது என நிறுவுவதை காணலாம். ஒரு சிறு துண்டு தான் உண்மை என்றால் மீதியெல்லாமே பொய் என்றுதானே பொருள்? ·புகுவேகா அவ்வடிப்படையில் ஐன்ஸ்டீனை முற்றாக நிராகரிக்கிறார் .அவர் அது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை விளக்கும் அரை உண்மைதான் ,அதனால் எந்த பயனும் இல்லை என்கிறார் . ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’யில் ஒரு மகத்தான முழு உண்மையின் தரிசனத்தை ·புகுவேகா கண்டடைந்ததை அறியலாம்.
ஆகவேதான் மெய்ஞனிகள் ‘எல்லா கருத்துநிலை உண்மைகளும் அரை உண்மைகளே என்றார்கள்’ [All phenomenal truths are half truths - நடராஜ குரு Wisdom - The absolute is adorable என்ற நூலில்]பார்க்கும் தரப்பை முழுமைப்படுத்திக் கொள்ளுவதன் வழியாக பார்க்கப்படும் உண்மையை முழுமைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அறிதலே யோகத்தின் ஆதாரம். அது மனதின் சலனங்களை முழுமையாக அழித்து குணங்களில்லாத ,சலனமற்ற ஒரு மனதை அடைய முயல்கிறது . அம்மனம் அறியும் பிரபஞ்சமும் குணங்களில்லாத ,சலனமற்ற ஒன்றாக விளங்கும் .அதுவே முழுமனம் Absolute mind] அது அறியும் உண்மையே முழு உண்மை [Absolute truth ]
மேற்கத்திய அறிவியங்கியல் [Epistemology] மீது மிதமிஞ்சிய நம்பிக்கையையும் மோகத்தையும் நமது கல்விமுறையிலிருந்து பெற்றுக் கொண்ட சிலர் உடனடியாக இந்தக் கருத்தை தூக்கி வீச முயலலாம். அவர்கள் மேற்கத்திய மொழியியல் [Linguistics] உளவியல் [psychology] போன்ற பல அறிவுத்துறைகளில் அதற்கான தேடல் உள்ளதைக் கவனிக்கவேண்டும். யோகம் ஒரு மாயத்தையோ மந்திரத்தையோ அல்லது அற்புதத்தையோ முன்வைக்கவில்லை . அது நம்பிக்கையையும் வலியுறுத்தவில்லை . அது வகுத்துரைப்பது பயிற்சிகளையே.
முழுமையான அறிதல் என்பது சாத்தியமா என்ற வினாவை , அறிவுத்துறைகளில் ஈடுபடும் நவீனமனதுக்கே உரிய [ஓர் எல்லைவரை அவசியமான ] ஐயநிலையுடன் [Skepticism ] அணுகலாம். ஆனால் யோகத்தின் பயன்கள் அதன் பல்வேறு திரிபு நிலைகளிலும் ,எளிமைப்படுத்தப்பட்ட நிலைகளிலும்கூட உலகங்கும் நிரூபிக்கப்பட்டவை என்பது நம் முன் உள்ள உண்மை. மிக ஆரம்பநிலையிலேயே கூட நம் மனதின் முழு சக்தியை பயன்படுத்த அவை உதவுகின்றன , நமது அறிதல்களில் மிக ஆழமான மாற்றங்களை உருவாக்குகின்றன .
... to be continued ..
3. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]
யோகத்தின் இன்றைய முகம்
பதஞ்சலி யோக சூத்திரம் முன்வைக்கும் யோக தரிசனத்தை நாம் சாங்கியதரிசனத்தின் துணைத்தரிசனமாகவே கற்கவேண்டும். இந்து ஞானமரபின் அனைத்து குருகுல அமைப்புகளிலும் கபில முனிவரின் சாங்கிய காரிகையும் பதஞ்சலி யோக சூத்திரங்களும் சேர்த்தே கற்பிக்கப்பட்டன. சொல்லப்போனால் ஆறுதரிசனங்களையும் ஒன்றாகவே கற்பது சிறந்தது. நாராயண குருவின் உவமையை இங்கே நினைவுகூரலாம். ஐந்து தரிசனங்களும் ஐந்து விரல்களைப் போன்றவை. அவை ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும். அந்த ஐந்துவிரல்களில் வேதாந்தம் சுட்டு விரல் என்றும் யோகம் கட்டைவிரல் என்றும் சொல்லப்படுவதுண்டு.அதாவது பிற அனைத்துத் தரிசனங்களுடனும் இணைந்து செயல்படும் தன்மை யோகத்துக்கு உண்டு. யோகம் ஒரு தரிசனத்துடன் இணையும்போது அது செயல்வடிவம்கொள்கிறது.
ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக யோகம் உலகளாவ பெற்ற கவனம் காரணமாக யோகசூத்திரம் மைய இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறது. பல குருகுலங்களில் பதஞ்சலி யோகசூத்திரம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பதஞ்சலி யோகசூத்திரம் பிற தரிசனங்களின் துணை இல்லாமலேயே நிற்கக் கூடிய ஒரு சுதந்திரமான பிரதி என்ற கௌரவம் அதற்கு கைவந்திருக்கிறது. ஆகவே இன்று அதை சாங்கியதரிசனத்தின் ஒரு பகுதியாக கருதவேண்டியதில்லை. எங்காவது சூத்திரங்கள் புரியாமல் ஆகுமென்றால் மட்டும் சாங்கிய தரிசனக் கருத்துக்களை தொட்டுக்கொண்டால்போதும்.
இத்தகைய மாறுதல் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழலாம். இதன் மூலம் நாம் எதையாவது இழக்கிறோமா என்பது இன்னும் பொருத்தமான கேள்வி. காலமாறுதல்கள் பல விஷயங்களை தவிர்க்க முடியாதவையாக ஆக்குகின்றன என்பதே அதற்குப் பதில். நாம் இன்று கல்வி கற்கும் முறையும்சரி, சிந்திக்கும் முறையும் சரி, விவாதிக்கும் முறையும் சரி, நம் மரபு சார்ந்தவை அல்ல. நம்முடைய மரபான அறிவியங்கியல் இப்போது ஒரு பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது.
பண்டைக்காலத்தில் கருத்துக்களை நியாய சாஸ்திர அடிப்படையில் விவாதித்தார்கள். உண்மையை புறவயமாக வகுத்துக்கொள்வதற்கும் விவாதிப்பதற்குமான தர்க்க அடிபப்டைகளை வகுத்துச் சொல்லும் சிந்தனைமுறையே நியாயம். ஆறுதரிசனங்களில் ஒன்றாகவும், வைசேஷிக தரிசனத்தின் கிளையாகவும் விளங்கிய நியாயம் பின்னர் தனித்த வளர்ச்சியை அடைந்தது. அது வைசேஷிகத்தில் இருந்து முழுமையாகவே பிரிக்கப்பட்டது. நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்ற நிலையில் இருந்து எல்லா பிரபஞ்சதரிசனங்களையும் வகுத்துக்கொண்டு விவாதிப்பதற்கான அடிப்படைத் தர்க்கக் கட்டுமானமாக ஆகியது.
இந்த வளர்ச்சிக்கு பௌத்தம் ஆற்றிய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். பௌத்த ஆசிரியர்களில் அஸங்கர், வசுபந்து, நாகார்ஜ்ஜுனர், திக்நாகர், தர்மகீர்த்தி போன்று பெரும்பாலானவர்கள் நியாயத்துக்கு தங்கள் உரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இந்த உரைகள் வழியாக நியாயம் மீண்டும் மீண்டும் பிறவி கொண்டு வளர்ந்தது. சென்ற நூற்றாண்டுவரைக்கும் நியாயமே நம்முடைய விவாத அரங்குகளை தீர்மானித்தது. நியாயம் கற்பதென்பது அறிவுச்செயல்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டது.
இன்றும்கூட நாம் பழைமையான குருகுலங்களில் மரபான தத்துவக் கல்வி கற்றவர்களிடம் நம்முடைய அறிதல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் கல்வி நியாய அடிப்படையில் அமைந்ததாக இருக்கிறது 1988 ல் விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பாலக்காட்டில் ஒரு மீமாம்சை அறிஞரைப் பார்க்கச்சென்றேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. மீமாம்சை குறித்து மேலைநாட்டு அறிஞர்களின் எந்தக் கருத்தும் புரியவில்லை. காரணம் முற்றிலும் வேறான ஒரு அறிவியங்கியல் சார்ந்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவியபோது மேலைநாட்டு அறிவியங்கியல் நம்மிடையே செல்வாக்கு பெற்றது. ஐரோப்பிய சிந்தனைகள் அனைத்துமே கிரேக்க தர்க்கவியலை அடிபடையாகக் கொண்டவை. ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவிய ஆரம்ப நாட்களில் தர்க்கவியல் [லாஜிக்] மிக முக்கியமான ஒரு கல்வியாக இருந்தது. தர்க்கவியலின் ஒரு பகுதியாகவே மேலைத்தத்துவம் கற்பிக்கப்பட்டது. தர்க்கவியலில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் படிப்பதும் ஆதாரமான கல்வியாகக் கருதப்பட்டன.
காரணம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் முன்னிறுத்தப்பட்ட சட்டம், அறிவியல் என்ற இரு துறைகளும் கிரேக்க தர்க்கவியலில் வேரூன்றியவை. அவையே நம் இன்றைய நவீன வாழ்க்கையை உருவாக்கின. ஆகவே மெல்லமெல்ல நியாயத்தின் அறிவியங்கியல் காலாவதியானது.
அக்காலத்தில் இந்தியவியல் [இண்டாலஜி] உருவாகியது. இந்திய மூலநூல்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டன. ‘இந்திய ஞானத்தை கிரேக்க தர்க்கவியல் சார்ந்து புரிந்துகொள்ளும் பெருமுயற்சி ‘ என்று நாம் இந்தியவியலை வகுத்துக் கொள்ளலாம்.
இந்தியவியல் வழியாகவே நாம் அனைவரும் இந்திய ஞானமரபை புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஒருவரலாற்று விபத்து. பலநூற்றாண்டுக்கால இடைவெளியால் நம் மரபான கல்வியமைப்புகள் அழிந்தன. நம்முடைய பொதுக்கல்வியும் மரபான முறையை அறவே மறந்து மேலைக்கல்விமுறையை சார்ந்ததாக ஆகியது. எனவே வேறு வழியில்லை
விவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணபரமஹம்ஸருக்கும் இடையேயான உரையாடலில் இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் மேலெழுந்து வந்ததை விவேகானந்தர் பலவாறாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக உருவ வழிபாடு சார்ந்து அவருக்கும் ராமகிருஷ்ணருக்கும் நிகழ்ந்த உரையாடலையும், பின்னர் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்புரிந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லலாம்.
ராமகிருஷ்ணர் வேதாந்தி. ‘பிரம்மமே நான்’ என உணர்ந்து சமாதியோகத்தில் அமர்பவர். ஆனால் கிருஷ்ணபக்தியிலும் காளிபக்தியிலும் ஆடிப்பாடி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு திளைக்கவும் செய்தார். அதை ஏற்க விவேகானந்தரால் முடியவில்லை. ஒன்று இன்னொன்றை மறுப்பது என்று அவர் புரிந்துகொண்டார். நீண்ட ஒரு ஆன்மீகப் பரிணாமத்திற்குப் பின்னரே அதிதூய ஆன்மீக அனுபவமும் உருவவழிபாடு சார்ந்த பக்தியும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்று உணர்ந்தார்.
இதே முரண்பாட்டை நாராயணகுருவுக்கு நடராஜகுருவுக்கும் இடையேயான உரையாடல்களிலும் நாம் காணமுடியும். விவேகானந்தர் பிற்பாடு ஆற்றிய பெரும்பணி என்பது இந்தியவியல் உருவாக்கி அளித்த மேலைத்தர்க்கரீதியான இந்தியசிந்தனைக் கட்டுமானத்த்தில் உள்ள இடைவெளிகளை கீழைத்தர்க்கத்தின் அறிதல்கள் மூலம் நிரப்புவதைத்தான். அதையே நடராஜ குருவும் செய்தார் என்று சொல்லலாம்.
நியாயத்தைப்போலவே யோகமும் அதன் மூலத்தரிசனமாகிய சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனியான வளர்ச்சியை அடைந்தது. அதை நிகழ்த்தியவர்களும் பௌத்தர்களே. பௌத்த யோகாசார மரபுக்குப் பின்னர் யோகம் என்பதே முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டது. பின்னர் அந்த யோகமரபையே அத்வைதம் போன்ற பிற்காலத்தைய வேதாந்த மரபுகள் எடுத்தாண்டன.
இன்று நாம் காணும் யோகம் என்பது உண்மையில் இவ்வாறு பல படிகளிலாக பரிணாமம் கொண்டு வளர்ந்துவந்த ஒன்று. அந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மூலநூலாக நின்றுகொண்டிருக்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். இந்திய மரபில் ஒரு சிறப்பியல்பு உண்டு என்பதை நாம் காணலாம். பெரும்பாலும் மூலநூல்களை மறுவாசிப்பும் மறுவிளக்கமும் கொடுப்பதன் மூலமே சிந்தனை பரிணாமம் கொள்கிறது. பதஞ்சலி யோக சூத்திரமும் அவ்வாறு வளர்ந்ததுதான். இந்த உரை வரை.
ஆக, இந்த நூற்றாண்டில் நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தை அணுகும்போது அணுகும் அறிவுச்சூழலும் மாறிவிட்டிருக்கிறது. அந்நூலைப் பொருள்கொள்ளும் முறையும் மாறியிருக்கிறது. மேலைத்தருக்கப்பின்னணியில் பௌத்தம் வழியாக வளர்ந்து வந்த யோகத்தை நாம் இன்று வாசிக்கிறோம். ஆகவே அதை ஆறுதரிசனங்களில் ஒன்றாக வாசிக்க ஆரம்பிப்போம் என்றால் அது அதைச் சுருக்குவதாகவே அமையும்.
யோகத்தின் நவீனவாசிப்பு
இன்றைய உலகளாவிய சிந்தனைச் சூழலில் யோகத்தை நாம் எப்படி வாசிப்பது? வழக்கமாக செய்யப்படும் இரு வகை வாசிப்புகள் உண்டு. ஒன்று மத ரீதியான வாசிப்பு. பண்டைய ரிஷிகள் கண்டடைந்த மெய்ஞானத்தின் இறுதி வடிவம் அது என்று எடுத்துக்கொண்டு அதை வழிகாட்டிக் கட்டளைகளாக மட்டும் காண்பது. இரண்டு, பண்டைய சிந்தனைகளை தெரிந்துகொள்ளும் வரலாற்று ரீதியான ஆர்வம். இரண்டுக்கும் அவற்றுக்கான பங்களிப்பு உண்டு.
அவற்றுக்கும் அப்பால் ஒரு வாசிப்புச் சாத்தியமும் உண்டு என்பதைச் சுட்ட விரும்புகிறேன். கிரேக்க தத்துவ நூல்கள் கிரேக்க மதம் மற்றும் கிரேக்கப் பண்பாட்டின் விளைவுகள். ஆனால் மேலைத்தத்துவம் அவற்றை தத்துவமூலநூல்களாகக் கண்டு காலந்தோறும் வளர்ந்து வரும் தத்துவசிந்தனைகளுடன் தொடர்பு படுத்தி விவாதித்துக்கொண்டே இருக்கிறது. அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற நூல்களின் அடிப்படை மெய்யறிதல்களை மானுடப்பொதுவாக ஆக்கவும், மானுடசிந்தனையின் அனைத்து தளங்களுடனும் இணைத்து விரிவாகப்புரிந்துகொள்ளவும் உதவக்கூடியதாகும். அதுவே இன்றைய அடிப்படைத்தேவை என்பது என் எண்ணம்.
இவ்வாறான நவீன வாசிப்பில் நாம் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய நவீனச் சிந்தனைகள் மூன்று தளங்களைச் சார்ந்தவை. ஒன்று தத்துவம். மேலைத்தத்துவ சிந்தனை என்பது தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்கு கொண்ட ஒன்று. அத்தகைய ஒரு சீரான வளர்ச்சி இந்திய சிந்தனையில் இல்லை என்பது உண்மை. அதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் முக்கியமான காரணம் இந்தியாவில் இன்று இந்திய சிந்தனை கற்பிக்கப்படுவதில்லை என்பதே. நாம் எட்டாம் வகுப்பு படிப்பதற்குள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வரை அறிமுகம் செய்துகொண்டு விடுகிறோம். இந்திய தத்துவத்தை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டமேற்படிப்பு படித்தாலொழிய கபிலரை நாம் அறிமுகம்செய்துகொள்ள முடியாது.
அத்துடன் நம் கல்விமுறையின் அடித்தளமாக இருப்பது மேலைநாட்டு அறிவியலும் தத்துவமும்தான். ஆகவே நம்முடைய சிந்தனைமுறையின் அடியில் இந்திய தத்துவமரபின் அம்சமே இல்லை. இதனால் நம்மால் இந்திய தத்துவ மரபை ஒரு தொல்பொருள் என்ற அளவில் தகவல்களாக மட்டுமே அணுக முடிகிறது. அதை நம் சிந்தனைகளுக்கான கருவியாகக்கொள்ள முடிவதில்லை. ஆகவே நம் தத்துவ மரபு நவீனகாலகட்டத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக வளர்க்கப்படவில்லை. சிற்சில விதிவிலக்கான தனிச்சிந்தனையாளர்கள் மட்டுமே கண்ணுக்குப் படுகிறார்கள்.
அது போதாது. ஒரு தத்துவமரபு ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தின் பொதுச்சிந்தனையின் உள்ளே செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது மட்டுமே அதில் உண்மையான வளர்ச்சி நிகழமுடியும். கிரேக்க தத்துவ மரபு ஐரோப்பிய சிந்தனையின் அடித்தளமாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. இன்றைய நவீன சிந்தனையாளன்கூட கிரேக்க மரபில் இருந்துதான் தன் கருதுகோள் உருவாக்கத்தை தொடங்குகிறான், ஏற்றோ மறுத்தோ. ஆகவே மேலைத்தத்துவத்தில் உண்மையான வளர்ச்சி உள்ளது.
மேலும் இந்தியசிந்தனை சார்ந்த எதுவுமே உதவாத பழங்குப்பை என்று சொல்ல நாம் ஒரு நூற்றாண்டாக பழக்கப்பட்டிருக்கிறோம். மெக்காலேயின் புகழ்பெற்ற மேற்கோளில் அவர் ஒட்டுமொத்த இந்திய சிந்தனை அனைத்த்தையும் சேர்த்தால்கூட பத்தாண்டுகால பிரிட்டிஷ் இலக்கியம் மற்றும் தத்துவசிந்தனையின் அளவுக்கு நிகராகாது என்று சொல்கிறார். மெக்காலேயில் தொடங்கும் நம் கல்வித்துறை தலைமுறை தலைமுறையாக நம்மிடம் அந்த எண்ணத்தை உருவாக்குகிறது.
அதை ஒரு மானசீகமான அடிமைத்தனம் எனலாம். ஆனால் நம்முடைய பேரறிஞர்கள் இலக்கியவாதிகள் என பலர் அந்த எண்ணத்தை மீற முடியாதவர்கள். உதாரணமாக, நான் நன்கு அறிந்த இலக்கியவாதியான சுந்தர ராமசாமி இந்திய சிந்தனை என்பது அர்த்தமில்லாத பழங்கால தர்க்கங்களும் மூடநம்பிக்கைகளும் கலந்தது என்று எண்ணினார்.அவை காலாவதியாகிவிட்டன என்று குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு இந்திய சிந்தனை பற்றி எளிய அறிமுகம் கூட இருக்கவில்லை. அதேசமயம் மூவாயிரமாண்டு பழமையுள்ள சாக்ரடீஸ்,பிளேட்டோ, அரிஸ்டாடில் சிந்தனைகள் மானுட சிந்தனையின் அடித்தளங்கள் என்று அவர் சொல்வார், அவை அவருக்கு பழங்குப்பைகள் அல்ல.
இந்திய சிந்தனைகளை மத சிந்தனைகள் என அவர் சொன்னபோது சாக்ரடீஸ¤ம் கிரேக்க மதத்துக்குள் நின்றவரல்லவா, அவரும் ஆத்மா போன்ற உருவகங்கள் வழியாக சிந்தித்தவர் அல்லவா என்று நான் கேட்டேன். அப்போதுதான் அச்சிந்தனைகளிலும் அவருக்கு பெரிதாக அறிமுகம் இல்லை என்று உணர்ந்தேன். ஆனால் இந்த மனப்பிம்பம் அவரில் ஆழ வேரூன்றியிருந்தது. இது சராசரியான ஒரு இந்தியமனத்தின் அமைப்பு. நம்மைச்சூழ்ந்துள்ள பெரும்பாலானவர்கள் இந்தத் தளத்திலேயே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.
ஆகவே மேலைத்தத்துவத்தின் அடிப்படைகளுடனும் இன்றைய பரிணாமத்துடனும் பதஞ்சலி யோகசூத்திரத்தை நாம் ஒப்பிட்டு வாசிக்கும்போது ஏராளமான புதிய சாத்தியங்களைக் கண்டடைய முடியும். அதற்கு பதஞ்சலி யோகசூத்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தத்துவப்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலைத்தத்துவம் உருவாக்கியிருக்கும் கோட்பாடுகளுடன் அவற்றை இணைத்து யோசிக்க அது நமக்கு உதவும்
இரண்டாவதாக, மேலை உளவியல். பதஞ்சலி யோக சூத்திரத்துடன் ஒப்புநோக்கையில் மேலை உளவியல் குழந்தைப்பருவத்திலேயே இருக்கிறது என்பதே என் எண்ணம். அதை முக்கியமான சில உளவியலாளர்களுடனான உரையாடலிலும் நான் கேட்டதுண்டு. மேலும், மேலை உளவியலின் பல ஆதாரக் கோட்பாடுகள் பதஞ்சலி யோகம் போன்ற கீழை யோகவியலில் இருந்து கடன்பெற்றவை.
ஆனால் மேலை உளவியல் நவீன அறிவியலுக்குரிய தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது கிரேக்க தர்க்கவியலில் இருந்து பிறந்து இன்று எல்லா சிந்தனைகளுக்கும் அடிபப்டையாக இருக்கும் மேலை அறிவியங்கியலில் அது அமைந்திருக்கிறது. நாம் கல்விக்கூடங்களில் கற்பதும் சிந்திப்பதும் அதில்தான். ஆகவே பதஞ்சலி யோகம் போன்ற பண்டையச் சிந்தனைகளை நாம் மேலை உளவியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது அவற்றை புரிந்துகொள்வதும் விவாதிப்பதும் எளிதாகிறது.
பதஞ்சலி யோகத்தை உளவியலும் உளம் கடந்த இருப்பு குறித்த ஆய்வும் என்று பொதுவாக வகுத்துக்கூறலாம். அதன் அடிப்படைகள் பல மேலை உளவியலை வைத்துப்பார்த்தால் புரிந்துகொள்ள எளிதானவை. அதே சமயம் பதஞ்சலி சொல்வதை ‘நிரூபிக்க’ மேலை உளவியலை துணைகொள்வது போன்ற அபத்தமும் வேறில்லை. பட்டப்படிப்புப் பாடத்தை பத்தாம் வகுப்புப் பாடத்தை வைத்து நிரூபிக்க முயல்வது போன்றது அது
மூன்றாவதாக, மொழியியல். பதஞ்சலி அடிப்படையில் மனித இருப்பு அல்லது தன்னிலை குறித்த தரிசனத்தை முன்வைக்கிறார் எனலாம். சமகாலச் சிந்தனையில் இந்த கருதுகோள்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மொழியியலில்தான் நிகழ்ந்துள்ளன. ஆகவே மொழியியலின் கோட்பாடுகளை பதஞ்சலியை புரிந்துகொள்ள பயன்படுத்தலாம்.
அத்தகைய ஒரு நவீன வாசிப்புக்கு இன்றியமையாத தேவை பதஞ்சலி யோகசூத்திரத்தை நவீன மனநிலையுடன் அணுகுவதாகும். நவீன மனநிலை என்றால் நான் இப்படி வகுத்துக் கொள்கிறேன். 1. ஒரு ஞானத்தை ஒரு இனம், மொழி, மதம், பண்பாட்டுக்குள் நிறுத்திவிடாமல் மானுடப்பொதுவான ஞானமாக அதை எடுத்துக்கொண்டு ஆராய்வது. 2. ஒரு ஞானத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடாகக் கருதாமல் எப்போதைக்குமான ஞானமாக எடுத்துக்கொண்டு ஆராய்வது 3. அதன் மீது பக்தியோ வெறுப்போ இல்லாத தர்க்கபூர்வ அணுகுமுறை
அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலியை நமக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரக்கூடும்
தந்திரமும் யோகமும்
இத்தகைய ஓர் ஆய்வுக்கு முன் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தாந்திரீக மரபு உருவாக்கியிருக்கும் தியான, உபாசனை முறைகளுக்கும் பதஞ்சலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அவை வேறு வேறு. பல ஆசிரியர்களின் யோக முறைகளில் இந்த மயக்கம் நிகழ்ந்து பலவகையான புரிதல் இடர்களை உருவாக்கியிருக்கிறது. பலர் பதஞ்சலி யோகசூத்திரத்தையே தாந்திரீக பாணியில் விளக்குவதையும் நான் வாசித்திருக்கிறேன்.
நெடுங்காலமாகவே யோகமரபும் தாந்த்ரீக மரபும் இரு தனிப்போக்குகளாக செயல்பட்டு வந்துள்ளன. இரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பதனால் அவற்றுக்கு இடையே பல பொதுக்கூறுகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இந்து தாந்த்ரீக மதங்களும் சரி, பௌத்தத்துக்குள் உள்ள வஜ்ராயனம் போன்ற தாந்த்ரீக பிரிவுகளும்சரி, யோகத்தை தங்களுக்காக மறு ஆக்கம் செய்து கையாண்டன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனாலும் அவை இரண்டும் வேறு வேறுதான்.
என்ன வேறுபாடு? அடிப்படையே வேறு வேறு என்பதுதான். யோகம் தன் மனத்தை அவதானிப்பதில் தொடங்குகிறது. அதை கட்டுப்படுத்தி அதன் ஆழங்களை அறியும் ஒரு தொடர்செயல்பாடு அது. மனத்தின் வெளிப்பாடுகளில் அதற்கு ஆர்வம் இல்லை. அதன் மூலத்தை நோக்கிச் செல்வதையே அது இலக்காகக் கொள்கிறது. அதற்காக பலவகையான பயிற்சிகளை அது உருவாக்கிக் கொள்கிறது. அத்தனை பயிற்சிகளுக்கும் நோக்கம் அகத்தை அறிந்து கடந்து சென்று அதன் சாரத்தில் அமர்தல் மட்டுமே.
நேர் மாறாக தாந்த்ரீக மரபு என்பது மனவெளிப்பாடுகளையே முதலில் கருத்தில் கொள்கிறது. மனத்தின் வெளிப்பாடுகளை ஒவ்வொன்றாக பயின்று அறிந்து வென்று கடந்துசெல்லுதல் அதன் வழிமுறை. அச்சம் காமம் வன்முறை போன்று மனத்தின் ஆதார வெளிப்பாடுகள் ஏராளமானவை. ஒவ்வொன்றையும் அறிவதே தாந்த்ரீகம் முன்வைக்கும் விடுதலை மார்க்கமாகும்.கடந்துசெல்லுதலே விடுதலை அல்லது முக்தி என்பது அதன் அறிதல்.
மனம் வெளிப்படுவது குறியீடுகள் வழியாகவே. ஆகவே தாந்த்ரீகம் குறியீடுகளை ஏராளமாக உருவாக்கிக் கொள்கிறது. நம்முடைய புராணங்கள் சிற்பங்கள் போன்ற ஏராளமான குறியீடுகள் தாந்த்ரீகத்தால் உருவகிக்கப்பட்டவையே. அதேபோல நம் உடல், மனம் பற்றியும் தாந்த்ரீகம் ஏராளமான குறியீடுகளை உருவாக்கியிருக்கிறது. அக்குறியீடுகளை பருண்மையான உண்மைகளாக எடுத்துக்கொள்வர்கள் பலர்.
தாந்த்ரீகம் இரு வழிகளை கடைப்பிடிக்கிறது. அவை இடது வலது என பிரிக்கப்பட்டு வாமாசாரம் தட்சிணாச்சாரம் என்று சொல்லப்படுகின்றன. மனவெளிப்பாடுகளை அறிய அவ்வெளிபபடுகளையே மனதால் நிகழ்த்தி அதன் எல்லையை அறிவது ஒரு வழி. அதாவது காமத்தை வெல்ல காமத்தையே பழகுவது. அச்சத்தை வெல்ல அச்சமூட்டுவதற்குள்ளேயே நுழைவது. மரணத்தை அச்சமென்றால் சுடுகாட்டு பிணம் மீது அமர்ந்து தியானம்செய்வது போன்ற ஒரு உக்கிரமான வழி அது. இதுவே இடதுமுறை. அல்லது வாமாச்சாரம்.
மன வெளிப்பாடுகளை வெல்ல அவ்வெளிப்பாடுகளை உன்னதமாக்கிக் கொள்ளலாமென்பது இன்னொரு வழி. காமத்தை வெல்ல அதை குறியீடாக ஆக்கி அக்குறியீட்டை கலைகளாக ஆக்கி அக்கலையின் உன்னதங்கள் வழியாக காமத்தை அறிந்து கடந்துசெல்லலாம். அச்சம் வன்முறை அருவருப்பு என அனைத்தையுமே அவ்வாறு கடந்துசெல்லலாம். உன்னதமாக்கல் என்பது இம்முறையின் முக்கியமான வழிமுறை. சடங்குகள் பூஜைமுறைகள் கலைகள் என அதற்கு பல வழிகளை அது கண்டடைந்துள்ளது. இது வலதுமுறை–தட்சிணாச்சாரம்.
நாம் தமிழ் சித்தர் மரபு என்று சொல்லும் மரபில் இருவகை தாந்த்ரீகர்களும் உள்ளனர். இரு மரபுகளுமே யோகத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கின்றன. இவ்விரு மரபுகளும் பலவகையான உருவகங்களையும் குறியீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.அக்குறியீடுகள் எளிமையான சித்தர் பாடல்கள் வழியாக சாதாரண மக்களிடம் வரும்போது அவை அப்படியே நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு யோகம் குறித்து ஏராளமான நம்பிக்கைகள் நம்மிடையே புழங்குகின்றன. உடலில் உள்ள மூலாதாரம் முதலிய ஒன்பது சக்திமுனைகள் பற்றிய பேச்சு ஓர் உதாரணம். அவை முறையே காமம்,பசி,மூச்சு,பேச்சு,இதயம், சிந்தனை, உள்ளுணர்வு, உயிருணர்வு, பேருணர்வு என்ற நிலைகளைச் சுட்டுபவை. ஆனால் உடம்பிலேயே அவை உள்ளன, தொட்டுக்கூட பார்க்க முடியும் என்ற அளவில் அவை புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. தியானத்தில் நெற்றிப்பொட்டில் ஒளி தெரிவது போன்ற பல நம்பிக்கைகள் இவ்வாறு தாந்த்ரீக உருவகங்களை நேரடியாக எடுத்துக்கொள்வதன் விளைவுகளே.
இன்னும் அடுத்தபடிக்குச் சென்று அணிமா மகிமா போன்ற அட்டமாசித்திகளும் யோகத்தால் வசமாகும் என்றும் முக்காலமும் தெரியும் என்றும் சொல்லக்கூடியவர்கள் உள்ளனர். சிலர் கல்லைக் கடித்து தின்னுதல் போன்ற ஹடயோக வித்தைகளையும் யோகத்துடன் தொடர்புறுத்துகிறார்கள். அவையெல்லாமே தாந்த்ரீக மரபின் குறியீடுகள். பதஞ்சலி யோகத்துக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்பதை உணரலாம். அத்தகைய எளிய உருவகங்களை உதறிவிட்டுத்தான் நாம் பதஞ்சலி யோகத்தை அணுக வேண்டும்.
பதஞ்சலி யோகம் மாயவித்தையோ, ரகசிய வித்தையோ ஒன்றும் அல்ல. அது மிக திட்டவட்டமாக எழுதப்பட்டு புறவயமாக முன்வைக்கப்பட்ட ஒரு ஞானம். அதை குருமரபுகளில் தெளிவாகவே கற்றறிந்திருக்கிறார்கள். அதில் சில பகுதிகள் நமக்கு விளங்காதவையாக இருக்கலாம்– ஏனென்றால் அது பயிலப்பட்ட மரபுகளில் பதினேழாம் நூற்றாண்டு முதல் ஓர் அறுபடல் உள்ளது. அதில் இடைச்செருகல்களும் இருக்கலாம். ஆனாலும் அது திட்டவட்டமான ஒரு தத்துவ -நடைமுறை நூலேயாகும்.
ஆகவேதான் கீதை முதலிய பிற்கால தத்துவ நூல்கள் வேதங்கள் உலகியல் நோக்கங்களை [சம்சாரத்தை] முன்வைப்பவை என்று சொல்லி நிராகரிப்பின் தொனியில் பேசுகின்றன.சாராம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
சாராம்சத்தையா அல்லது சம்சாரத்தையா? ஆன்மீகம் பற்றி எழுத முனைந்த போதும் சம்சார பந்தம் விடாது போலும்!
ஜெயமோகன் கொஞ்சம் ஆரம்பித்து நிறுத்தி விட்டார். முழுவதும் புத்தகமாய் வந்ததா தெரியவில்லை.இதுவரைக்கும் கிடைத்தவை - இங்கே தொகுக்கிறேன்.
****Over to Jeyamohan.
..
ஆனால் சுயமாக சிந்திக்க முயலக்கூடிய எவரும் பழைமையில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏனெனில் எந்த சிந்தனையும் ஒரு தொடர்ச்சியின் விளைவாக உருவாவதேயாகும். ஏதாவது ஒரு துறையில் சுயமாக சிந்திக்கும் பயிற்சி கொண்டவர்கள் அத்துறையில் அதுவரை உள்ள மரபை உதாசீனம் செய்துவிட முடியாது என்பதை அறிவார்கள். . நமது மரபை கற்று விமரிசித்து மீறிவளர்ந்து முன்னெழவேண்டும். சாக்ரடீஸையும் ஸ்பினோசாவையும் ஹெகலையும் நீட்சேயையும் கற்று முன்னகர்ந்தவர்கள்தான் மேலை சிந்தனையை உருவாக்கியவர்கள் . நமது சுயமான சிந்தனையை நாம் அடையவேண்டும் , வெறும் மொழிபெயர்ப்புப்பணியே சிந்தனை என்று அமைந்துவிடக்கூடாது என்று இப்போதுபரவலாகசொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் நம் மரபுடன் ஆக்கபூர்வமான உறவைமேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயம் இங்கே பேசப்படுவதே இல்லை. சிந்தனைகளை எவரும் அந்தரத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியாது.
பழைமை என்றால் காலாவதியானது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் நாம் இந்திய பழைமையை ,தமிழ் பழைமையைமட்டுமே அப்படி சொல்வோம். மேலைபழமையை அப்படிச் சொல்லும் துணிச்சல் நமக்கு வராது, காரணம் மேலைப்பழமை மேலைநாட்டு புதுமையை தொடர்ந்து உருவாக்கியபடி இருப்பதை நாம் காண்கிறோம். இம்மானுவேல் காண்ட் பழையவர் என்று இன்று சொல்ல முடியாது, பின்நவீனத்துவக் கருதுகோள்கள் பல அவரிலிருந்து உருவாகி வருகின்றன. நீட்சே, ஹெகல் முதலியோரும் இன்றைய பின் நவீனசிந்தனைகளுக்கு உடனடி முன்னோடிகளாக இருக்கிறாகள். அந்தகோட்டை பின்னகர்த்தினால் ஸ்பினோஸாவின் வினாக்கள், சீனோவின் புதிர்கள், ஐயவாதிகளின் தர்க்க ஒழுங்குமுறை வரை செல்லும். நமது பழைமை ஏன் நமக்கு காலவதியானது என்று படுகிறது என்றால் ஒன்று நாம் அதனை கற்றதேயில்லை என்பதனால்தான். அவற்றை நவீனச்சூழலில் வளர்த்தெடுக்கவும் இல்லை .
தமிழில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் நமக்கு முன்னோடியான சிந்தனையாளர்கள் நம் மரபில் யார்யார்? வைணவ சைவ உரையாசிரியர்கள், திருமூலர், ராமானுஜர், நம்மாழ்வார், திருவள்ளுவர் என அது பின்னோக்கி செல்லும். இவர்களில் பிற்கால சிந்தனையாளர்களான சைவ வைணவ ஆசாரியார்களை புரிந்துகொள்ள சில மூலநூல்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானது பதஞ்சலி யோக சூத்திரம். நியாய சூத்திரங்கள், பிரம்மசூத்திரம் , சாங்கிய காரிகை மற்றும் முக்கியமான ஐந்து உபநிடதங்கள் ஆகியவை மற்ற நூல்கள். குறள், மணிமேகலை போன்ற சமண பௌத்த நூல்களை பயில அம்மதங்களுக்கு உரிய மூலநூல்களுடன் இம்மூல நூல்களும் அவசியமாக கற்கப்படவேண்டும். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் வேதாந்தம் மீமாம்சை ஆகிய ஆறு தரிசனங்களும் இந்தியமரபில் உள்ள எல்லா சிந்தனை ஓட்டங்களிலும் அவற்றை தீர்மானிக்கக் கூடிய அடிப்படைக் கூறுகளாக உள்ளன.
உதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரங்கள் மீது பயிற்சி இல்லாத ஒருவர் திருமந்திரம், சிவஞானபோதம் இரண்டையும் எளியமுறையில்கூட புரிந்துகொள்ள முடியாது . நியாய தர்க்கமுறையில் சில அடிப்படைகளையேனும் அறியாமல் ஒருவர் வைணவ உரைகளுக்குள் நுழையவே இயலாது. அதாவது நாம் நம் மரபில் நமக்கு முன்புவரை இருந்த சிந்தனைகளை புரிந்துகொள்ள அச்சிந்தனைகளின் அடிப்படைத்தர்க்கங்களை அமைத்த சிலமூலநூல்களை முதலில்பயிலவேண்டியுள்ளது.
பழமை வழிபாடு மிக ஆபத்தானது .பலகாலம் நாம் அந்தச்சேற்றில் புதையுண்டு கிடந்தோம். பிறகு அதிலிருந்து மீண்டு பழமையை உதாசீனம் செய்யும் புதிய சேற்றில் சிக்கிக் கிடக்கிறோம். உலக சிந்தனையில் தங்கள் பங்களிப்பினை ஆற்றிய எந்த கலாச்சாரமும் தன்னுடைய பழைமையை போற்றியதும் அல்ல, உதாசீனம் செய்ததுமல்ல, சமகாலத்தேவைக்கு ஏற்ப ஆழ்மாக பயின்று விமரிசன ரீதியாக எதிர்கொண்டதே என்பதை நாம் காணலாம்.
எல்லாமே நம் மரபில் உள்ளது என்ற மூடநம்பிக்கை கொண்ட பலர் இன்று உண்டு. எல்லா சிந்தனைகளும், அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட
நம் முன்னோருக்கு தெரிந்திருந்தன என்ற பேச்சு அடிக்கடி நம் காதில் விழும். அதுவும் மரபை அறியாமல் வெறுமே வழிபட்டபடி இருப்பதன் விளைவே. இன்றைய தத்துவமும் அறிவியலும் பலமடங்கு வளர்ந்தவை என்பது உண்மையே. அதற்குக் காரணம் இந்நூற்றாண்டு அடைந்துள்ள மாபெரும் தகவல் தொடர்புவசதி. உலகம் முழுக்க உள்ள சிந்தனைகளை நாம் வீட்டில் இருந்தே கற்கமுடியும். கல்வி பரவலாக்கப்பட்டு விட்டிருக்கிறது. உயர்கல்விக்கான அமைப்புகள் பெருகியுள்ளன. ஆகவே நாம் இன்றைய சிந்தனைகளையே முதன்மையாகவும் முக்கியமாகவும் கற்று தெளியவேண்டும். அவற்றில்தான் நம் கால்கள் ஊன்றிருக்கவேண்டும்.அப்படியானால் எதற்காக பழைய சிந்தனைகளை கற்கவேண்டும்?அறிவியலுக்கு சமகாலத்தன்மை முக்கியமானது. காரணம் அதன் அறிதல்முறைகளில் , அறிவமைப்பில் சீரான வளர்ச்சி உள்ளது. நியூட்டனுக்கு பிறகு ஐன்ஸ்டீன் கண்டிப்பாக ஒரு வளர்ச்சிநிலையே. இன்றைய இளம் அறிவியலாளன் கண்டிப்பாக நியூட்டனை விட பலமடங்கு விஷயம் தெரிந்தவனே. ஆனால் இலக்கியம் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் இது பொருந்தாது.இலக்கியத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சிப்போக்கு என்று ஒன்று இல்லை என்பதே நாம் காண்பது. மாறுபட்ட கோணங்கள் வரலாம், மேலும் நுட்பமான தர்க்கங்கள் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான மூலதத்துவநூலின் பார்வை ஏறக்குறைய நிலையாகவே இருக்கும். அதன்பின்வந்த எல்லா விவாதங்களிலும் அதன் தரப்பு ஒலித்தபடியே இருக்கும். சாக்ரடீசின் ‘குடியரசு’ அதற்குப்பின் வந்த சிந்தனைகளால் வலிமைபெறுமேயல்லாது காலாவதியாகாது. இலக்கியமும் அதைப்போலத்தான்.கம்பனை பாரதி காலவதியாக்குவது இல்லை. இன்றைய புதுக்கவிதைகள் சங்க இலக்கியத்தை தாண்டிச்சென்றிருப்பதாக சொல்ல எவருமே துணியமாட்டார். ஆகவே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பழைமை என்பது எப்போதும் செல்லுபடியாக கூடிய ஒரு அடிப்படைக் கட்டமைப்புதான்.
மேலும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இலக்கியத்திலும்சரி தத்துவத்திலும் சரி முற்றிலும் புத்தம்புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனிதமனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்பநாட்களிலேயெ சிந்தனையின் அடிப்படைக்கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றில் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.உதாரணமாக இன்றைய பின்நவீனசிந்தனைகளில் எந்தச் சரடையும் நாம் பின்னோக்கி நீட்டி கிரேக்க மரபுக்கு கொண்டு சென்று ஒரு துவக்கப்புள்ளியைக் காணமுடியும். மனிதன் சில அடிப்படைக் கோணங்களில்தான் பிரபஞ்சத்தை பார்க்கமுடியும் என்பது அவனது சிந்தனையின் எல்லையாக இருக்கலாம், அல்லது பிரபஞ்சத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.
ஆகவே நாம் பழைய மூலநூல்களைப் பயிலும்போது விதைகள் அடங்கிய ஒரு களஞ்சியம் நமக்கு கிடைக்கிறது. நமக்கு கற்பனை, தர்க்கத்திறன் ஆகியவற்றின் ஈரம் இருந்தால் அவைமுளைத்து நமது சிந்தனைகளை உருவாக்க கூடும்.
...to be continued ...
சூத்திரம் ஒன்று
”அத யோக அனு சாசனம்”
[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]
அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .
பெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ” அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ” என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே...] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த தளத்தின் ஞானியால் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால்’ என துவங்குகிறது என்கிறார்கள்.
அதனுடன் சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. ஞானத்தில் பக்குவபப்ட்ட பிறகே யோகம் பயில வேண்டும். ஞானமில்லா யோகப்பயிற்சி வெறும் பழக்கமாகவே ஆகும். ஆகவே தத்துவ ஞானம் கனிந்தபின் பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர்.
ராமானுஜர் சற்று மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறார் . அவரை பொறுத்தவரை வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை அதாவது உலகியல்செயல்பாடுகளை முடித்த பின்னரே ஒருவன் யோகத்துக்குள் நுழைதல் வேண்டும். ராமானுஜர் ஜைமினியின் மீமாம்சா சூத்திரங்களில் உள்ள நெறிகளை தர்ம அனுசாசனமாக அதாவது தர்மநெறிகளாகக் காண்கிறார் . அவற்றைச் செய்து அதன் வழியாக தர்மத்துக்கான தேடல் அடங்கிய பிறகே பற்றற்ற ஞானத்துக்கான தேடல்– அதாவது யோகம்– துவங்குகிறது என்கிறார் ராமானுஜர். ராமானுஜ மரபில் இல்லறம் முழுமை பெறாமல் துறவறம் அனுமதிக்கப்படவில்லை.
பதஞ்சலிக்கு முன்னரே பல யோக நூல்கள் பல வடிவில் இருந்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை .அவற்றை பரிசோதித்து ‘சூத்திரங்கள்’ ஆக வகுத்தார் பதஞ்சலி. இப்படி வகுப்பதையே அவர் ‘அனுசாசனம்’ என்கிறார் . இதுவே பதஞ்சலியின் கொடை ஆகும்.
சம்ஸ்கிருதத்தில் அனுசாசனம் என்ற சொல்லுக்கு கட்டளை நெறிகாட்டல் வகுத்துக்கூறல் என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே ஒரு விவாதத்தின் மூலம் உருவான இறுதிக் கணிப்புகள் இவை என கொள்ளலாம்.
சூத்திரம் என்பதை தமிழில் தேற்றம் என்ற சொல்லால் குறிப்ப்பிடலாம். இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூத்திரங்கள் தர்க்கங்கள் அல்ல. அவை முடிவுகள். அவை நம்மிடம் விவாதிக்க முற்படவில்லை. ஆகவே காரண காரிய விளக்கத்தை அளித்து விளக்கும் குரலோ, வாதிடும் போக்கோ இவற்றில் இல்லை. சூத்திரங்களின் இயல்பும் நோக்கமும் அது அல்ல. நாம் இவற்றை மனப்பாடம் செய்யவேண்டும். அதன் பிறகு அச்சொற்களை மனதுள் போட்டு உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது அவை மேன்மேலும் பொருள்களை அளித்தபடி நம் மனதில் விரிந்தபடியே போகும்.
அதாவது இவை மனன மந்திரங்கள். தியானத்தில் நாம் வழிகாட்டியாக கொள்ள வேண்டியவை. தியானத்தில் நமக்கு உருவாகும் அனுபவம் மூலமே இவற்றை நாம் உண்மையில் புரிந்துகொள்ள முடியும். ஓவியத்தைப்பற்றிய ஒரு பயிற்சித் தகவல் ஓவியம் வரையும்போது மேலும் பொருள் பொதிந்ததாக ஆவைதைப்போல . ஒவியம் வரையாமல் அதை வெறும் சொற்பொருளாக மட்டுமே பெற்றுக் கொண்டோமென்றால் அவற்றை நாம் சில சமயம் தவறாகவும் பல சமயம் அரைகுறையாகவும் புரிந்து கொள்ளலாம். அது அபாயகரமானதாகும்
ஆகவே இந்த வரிகளை நமது தர்க்கத்தை நோக்கி திருப்பிக் கொள்ளக் கூடாது . அப்படித் திருப்புவோமெனில் நாம் மிக அர்த்தமற்ற ஒரு மன இயக்கத்தை சென்றடைவோம். ஆனால் அகங்காரம் காரணமாக அதை மிக அறிவார்ந்த ஒரு செயல்பாடாக எண்ணி சுய திருப்தியும் கொண்டிருப்போம். இது மிக அகவயமான ஒரு கருத்துரு பற்றிய விவாதம் . அந்த அகவய அனுபவத்தின் தளத்துக்கு செல்லாமல் இதை புறவய தளத்தில் வைத்து விவாதிப்பதையே அபத்தம் என்றேன். உதாரணமாக ஒரு முறை கூட இசை கேட்காத ஒருவர் இசையைப்பற்றிய இலக்கணங்களை மட்டும் கற்று அவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?
உண்மையில் நமது தேசத்தில் இம்மாதிரி ‘திண்ணை வேதாந்தம் ‘ ஆலமரக்காடு போல விழுதும் வேரும் பரப்பி வளர்ந்துள்ளது. நமது பெரிய சாபமே இதுதான். நமது மரபில் உள்ள அகவயமான கருத்துக்களை அரையும் குறையுமாக கற்றுக் கொண்டு அவற்றை புறவயமான கருத்துருக்களுடன் ஒப்பிட்டுக்கொண்டும், பலவகையான உருவகங்களை கற்பனையால் உருவாக்கியபடியும் நாட்களை கழிப்பது. அனுபவத்தால் அர்த்தப்படுத்தப்படாதவரை இவ்வகை மூளையோட்டல்களினால் எந்த பயனும் இல்லை. மட்டுமல்ல, இவை அகங்காரத்தை வளர்த்து சிந்தனையை தவறான திசையில் கொண்டு சென்று விட்டிருப்பதனால் சம்பந்தப்பட்டவர் எதையுமே ஒழுங்காக யோசிக்க முடியாத குதர்க்கவாதியாக மாறிவிடும் அபாயமும் உண்டு. வேதாந்தம் உட்பட எல்லா ஞானமரபும் இவ்வகை ஆட்களை உருவாக்குகின்றன. இம்மாதிரி மனிதர்கள் அதிகமாக படிக்கப் படிக்க மேலும் மேலும் அபத்தமான குதர்க்கவாதிகளாக ஆகி பொருளிழந்து போகிறார்கள்.
இவை இந்த நூலை அணுகுவதற்கு அவசியமான மனத்தயாரிப்புகள். இந்த சூத்திரம் ஒரு நூல் வரையறைசெய்து சொல்லும் செயலை தொடங்குவதற்கான முகாந்திரமாக அமைகிறது எனலாம்
சூத்திரம் இரண்டு
” யோக: சித்த விருத்தி நிரோத: “
[யோகமென்பது உளச்செயல் தடுத்தல் ]
பதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம்.
ஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸி’ல் அளிக்கும் உவமை.
இவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள்.
இதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா? நாம் மனம் என்று சொல்வது எதை? மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்.
ஆனால் மனம் என்பது அதுதானா? எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது? எது அவற்றை ஒளிபரப்புகிறது ? எதன் மீது அவை ஓடுகின்றன? அதை பார்ப்பது எந்த விழி?
மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம்.
ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது ”இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் ” என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
இங்கே உள்ள சித்தவிருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ‘உளச்செயல்’ என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம்.
அந்த அறியும் மனம் எது? அதுவும் நிகழ்வா? அந்நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா? நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும்? யோசித்திருக்கிறோமா? காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன? ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன?
யோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி . கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என ‘ நிரோத ‘ த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார்.
இது நம் மூலநூல்களில் பலவற்றின் முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறது– இவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . [ ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் ] .
யோகம் என்றால் என்ன? மனம் என்பது ஒரு நதி, அதி ஊற்றுக்கு கொண்டு செல்லல். மனம் ஒரு மரம் , அதை விதைக்குக் கொண்டு செல்லல். மனம் ஒரு பறவை, அதை முட்டைக்குக் கொண்டு செல்லல். அதை முதலிலேயே சொல்லிவிட்டு எப்படி என்ற வினாவை எதிர்கொள்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.சூத்திரம் மூன்று
ததா த்ருஷ்ட்டு: ஸ்வரூபே அவஸ்தானம்
[அப்போதே பார்ப்பவன் தன்னிலையில் உறைகிறான்]
இந்தச் சூத்திரத்தில் மூன்று சொற்கள் உள்ளன. மூன்று தன்னிலைகள் என இதை வகுக்கலாம். திருஷ்டு என்றால் பார்ப்பவன், அவதானிப்பவன், உணர்பவன். மனதை உணரும் தன்னிலை என்று இதைச் சொல்லலாம். இரண்டாவது சொல் ஸ்வரூபம். தன்னுடைய உண்மையான அகநிலை. அல்லது தூய தன்னிலை. இங்கே இன்னும் அது ஒரு உருவகம்தான். மூன்றாவது அவஸ்தை. அந்த தூய நிலையில் உறைதல் என்ற நிலை. தான் என தன்னை உணர்பவன் அந்த உணர்தல் மூலம் உருவாகும் அலைகள் அனைத்தையும் அடக்கி இல்லாமலாக்கிக் கொண்டால் மட்டுமே தூய தன்னிலையாக தன்னை உணர்ந்து அந்நிலையில் அமைய முடியும் என்று இச்சூத்திரத்தை விளக்கலாம்
இச்சூத்திரத்தில் அவஸ்தானாம் என்ற சொல்லை சுட்டிக்காட்டுவது மரபு. அதாவது தூய தன்னிலை என்பது ஒரு அறிதல் அல்ல. அது நிலை. ஒரு அமைதல்தான்.
ஓர் உவமை மூலம் விளக்கலாம். நான்குபக்கமும் நிலைக்கண்ணாடிகள். நடுவே ஒரு சுடர் விளக்கு. நாம் காண்பது விளக்குகளினாலான ஒரு மாபெரும் வெளி. இதுவே நம் மனம். சுடரைக் காண நாம் முதலில் செய்ய வேண்டியது ஆடிகளை களைதல். அப்போது சுடர் மட்டும் எஞ்சுகிறது.
அதாவது மனதை அறியும் செயலாலேயே மனம் அலைகளாக ஆகிறது. அலைகள் அடங்காமல் மனதை அறிவதும் சாத்தியமல்ல. இச்சிக்கலையே யோகம் முதலில் எதிர்கொள்கிறது.
தடாகத்தின் ஆழத்தைக் காண்பதற்கு முதலில் அதன் அலைகள் அடங்கவேண்டும். மனச்செயல்பாட்டை நிறுத்தாமல் மனதை உருவாகும் அடிப்படை அமைப்பை , மனதின் ஆழத்தை நாம் காணமுடியாது.
சூத்திரம் நான்கு
வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ர
[உளச்செயல் தோற்றம் பிறவற்றிலேயே]
யா பெரல்மான் எழுதிய குழந்தைகளுக்கான அறிவியல் அறிமுக நூலான
‘பொழுதுபோக்குப் பௌதிகம்’ நூலில் ஒரு வினா. “உங்களால் முகம் பார்க்கும்
கண்ணாடியைப் பார்க்க முடியுமா?” . சின்னவயதில் ஏன் பார்க்க முடியாது என்ற
எண்ணமே நம் மனதில் எழும். பெரல்மான் சொல்வார், நாம் கண்ணாடியை பார்க்க
முடியாது , அதன்மீது பிரதிபலிப்பவற்றையே காண்கிறோம் என. எதையுமே
பிரதிபலிக்காத கண்னாடி கண்ணுக்கு தென்படாது .
சாதாரணமாக மனம் என நாம் சொல்வது எதை ? மனதில் ஓடுவதைத்தான். மனதில் ஓடுவது மனம் எதையெல்லாம் எதிர்கொள்கிறதோ அதெல்லாம்தான். மனம் என்பது ஒரு மாபெரும் எர்திர்வினை மட்டுமே. நாம் மனமென அறிவதெல்லாம் மனதில் பிறவிஷயங்கள் பிரதிபலிப்பதைத்தான். ஒரு நிபுணர் நம்மை மனவசியம் செய்து நம் மனதை ‘அப்படியே’ பதிவுசெய்தால் அதில் என்ன இருக்கும்? நம்மைச்சுற்றி உள்ள விஷயங்கள்தான் சிக்கலான முறையில் பின்னிப்பிணைந்து காணப்படும். அபப்டியானால் நம்மைச்சுற்றி உள்ளவற்றின் ஒரு சிக்கலான வடிவம்தான் நமது மனமா?
மிக இயல்பாக தன்னிச்சையாக நாம் நம் சூழலை பிரதிபலித்தபடியே இருக்கிறோம். ஓர் ஆதிவாசியின் மனம் காட்டுக்குள் வைக்கப்பட்ட கண்ணாடி . நகரச்சாலையோரம் வைக்கப்பட்ட கண்ணாடிதான் நாகரீக மனிதனின் மனம்.
அதே போலநம்மை சூழலும் பிரதிபலிக்கிறது. மனச்சுமையுடன் கடற்கரைக்கு சென்றால் நம்மை அறியாமலேயே மனம் ஓர் விடுதலையை அடைகிறது. கடல் என்ற விரிவு நம் மனத்தை விரிய வைக்கிறது . மறு கணம் நம் மனம் கடலை நம் துயரங்களின் அலைகளாக அறிய ஆரம்பிக்கிறது. திரும்பிவிடுகிறோம். நமக்குள் இருப்பனவற்றையே நாம் வெளியிலும் காண்கிறோம். நிகழ்மனம் மற்றும் அறியும் மனம்போல இங்கே இன்னொரு இரட்டை ஓட்டத்தை நாம் காண்கிறோம்.
நாம் பிறவற்றில் , அதாவது நம்மைச்சுற்றி உள்ள இயற்கையில் காண்பது நம் மனதின் செயல்பாடுகளையே. நமது கோபம் , உற்சாகம் அனைத்தும் நம்மைச்சுற்றியுள்ளவற்றில் நமக்கு தெரிகிறது. இயற்கையில் நாம் காணும் ‘உணர்ச்சிகள்’ ‘அழகுகள்’ எல்லாமே நம் மனதிலிருந்து வெளிவருபவைதான்.
திரைப்படத்தின் படத்தொகுப்பில் இதற்கு நல்ல உதாரணம் உண்டு. பாறைமீது அலையடிக்கும் கடலின் அலையை அவன் அவளிடம் தன் காதலை சொன்னதும் காட்டினால் அதன் அர்த்தம் மனஎழுச்சி. அக்காதலி இறந்துபோனபிறகு தாடியுடன் அவன் வந்து கடற்கரையில் அமர்ந்திருக்கும்போது அதே கடலைலையைக் காட்டினால் அது துயரக் கொந்தளிப்பாக தெரிகிறது.
இலக்கியத்தில் சூழல் விவரிப்புகள் எப்போதுமே மனத்தின் வெளிவிளக்கங்கள்தான். கதையில் மழை பெய்கிறது என்றால் அது கதாபாத்திரங்களின் மனதில் பெய்யும் வேறு ஒரு மழையின் வெளிக்குறியீடுதான் . சங்க இலக்கியங்கள் மனதை நேரடியாக சொல்வதேயில்லை, இயற்கையைப் பற்றி மட்டுமே சொல்கின்றன. அதில் மனதை ஏற்றி சொல்கின்றன. நிலமாக அக்கவிதைகளில் தெரிவது மனமே. பிற்பாடு இலக்கண ஆசிரியர்கள் இதை தற்குறிப்பேற்ற அணி என்றார்கள்.
நம்மைச்சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் இவையெல்லாமே நம் மனதின் காட்சிவடிவம்தான். நம்மையே நாம் எங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்விரு தளத்தையும் வகுக்கிறது இந்தச் சூத்திரம். விருத்தி என்றால் உளச்செயல். ஸாரூப்யம் என்றான் தோற்றம் . இதரத்ர என்றால் பிறவற்றில்.
பிறவற்றிலேயே நாம் உளச்செயலை காணமுடியும் என வகுக்கிறது இந்தச்
சூத்திரம். நாம் மனதை நோக்கி அதைக் காணமுயன்றால் காண்பது வெளியே உள்ளவற்றை.
வெளியே நோக்கினால் காண்பது உளச்செயலின் படிமங்களை. ஆக மனம் என எப்போதும்
நாம் பிறவற்றையே கண்டுகொண்டிருக்கிறோம்.
ஏன் நிலைக்கண்ணாடியை நாம் காணமுடிவது இல்லை. ஏனெனில் அது முழுமையாக
பிரதிபலிக்கும் தன்மையை கொண்டுள்ளது என்பதனாலேயே. ஆனாலும் பிரதிபலிக்கும்
பிம்பங்கள்தான் கண்ணாடி என்று சொல்லிவிடமுடியாது. பிரதிபலிக்கும் செயலைச்
செய்தபடி ஒரு கண்ணாடி காணப்படாமல் இருந்துகொண்டிருக்கிறது.
இங்கே ஸாரூப்யம் என்ற சொல்லை சற்று கவனிக்கச் சொல்வார்கள். ஸ+ரூப்யம் என்றால் தோற்றம் என்று சொல்வதுடன் குறிப்பாக சமானமான தோற்றம் என்றும் சொல்லல்லாம். அது இச்சூத்திரத்துக்கு மேலதிகப் பொருளை அளிக்கிறது.
சூத்திரம் ஐந்து
வ்ருத்தய: பஞ்சதய்ய: கிளிஷ்டா அக்ளிஷ்டா
[உளச்செயல்கள் ஐந்து. தெரிந்தவை ,அருவமானவை]
மனம் செயல்படும் முறை ஐந்துவகையானது என்று வகுக்கும் பதஞ்சலி யோக
சூத்திரம் அவை யாவை என இதற்கு அடுத்த சூத்திரத்தில் சொல்கிறது. இங்கே அந்த
ஐந்தும் இரு வகையானவை என்று சொல்லப்படுகிறது. க்ளிஷ்ட என்ற சம்ஸ்கிருத
சொல்லுக்கு தெளிந்த, திட்டவட்டமான என்ற பொருள்கள் உண்டு. அதற்கு எதிர்பதம்
அக்ளிஷ்ட .
நம் மன இயக்கம் எதுவாக இருப்பினும் அதில் ஒரு சிறு பகுதியே நமக்கு தெரிகிறது இன்னொரு பகுதி தெரியாததாக உள்ளே மறைந்துள்ளது. மரத்தை நாம் பார்க்கும்போது வேர் கண்ணுக்குத்தெரிவது இல்லை .சிந்தனை கற்பனை உள்ளுணர்வு ஆகிய அனைத்துக்குமே இது பொருந்தும்.
ஒரு பறவையைப் பார்க்கிறோம். அடையாளங்களைவைத்து இது மைனா என்ற முடிவுக்கு வருகிறோம். அப்படி அடையாளம் காண்பதும் புரிந்துகொள்வதும் நாம் அறிந்த தளம் . ஆனால் அதேசெயல்பாட்டின் அறியாத தளம் ஒன்று நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்பறவையை நாம் வேறு பலவிதமான வகைகளில் உள்வாங்கிக் கொண்டுமிருக்கிறோம். அது நமக்குள் ஒரு படிமமாக ஆகி விட்டிருக்கலாம். நம் கனவில் அது முற்றிலும் வேறு வகையில் வெளிப்பாடு கொள்ளலாம்.
நம் மனஓட்டத்தில் நம் செயல்களுடன் [ கர்மம் ] சம்பந்தப்பட்டவையே நமக்கு தெரிகின்றன. நம் உள்ளுணர்வுகள் மற்றும் பிறவிக்குணங்கள் [வாசனா ] ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை நமக்கு தெரிவதேயில்லை. செயல்களுடன் தொடர்புடையனவற்றை மேல்மனம் அல்லது பிரக்ஞை சார்ந்தவை என்றும் உள்ளுணர்வுகளுடன் தொடர்புடையனவற்றை ஆழ்மனம் அல்லது நனவிலி சார்ந்தவை என்றும் ஒரு புரிதலுக்காக ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
எல்லா மனச்செயல்களிளும் ஒரு முக்கியமான பகுதி தெரியாததாக ,
தெரிந்துகொள்ள முடியாததாக உள்ளது என்பதே இதற்கு பொருள். நவீன உளவியலில்
இதற்கு ஏராளமான விளக்கங்கள் உள்ளன. தெரிந்துகொள்ள முடியாத அந்த பகுதியே
மனிதர்களின் இயல்புகளை தீர்மானிக்கிறது என்று ·ப்ராய்டியம் சொல்கிறது. அதை
அறிவதற்காக உருவாக்கப்பட்டதே உளப்பகுப்பாய்வு என்ற ·ப்ராய்டிய வழிமுறை.
[தொடரும் ]
சூத்திரம் ஆறு
ப்ரமாண விபர்யாய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய:
[ அவையாவன, யதார்த்தம், பொய்யறிவு, திரிபு , துயில்நிலை , நினைவுகூர்தல் ]
மனச்செயல்பாடுகளை ஆறுவகையாக பிரித்துப் பார்க்கின்றது யோகம். இங்கே பிரமாணம் என்ற சொல் வகுத்து அறியப்பட்டது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. புலன்களாலும் தர்க்கத்தாலும் நாம் அறியக்கூடிய அனைத்துமே பிரமாணம் என்பதில் அடங்கும். யதார்த்த அறிவு என்று இதை சொல்லலாம்.
இது சிறகுகள்கொண்டிருக்கிறது வானில் பறக்கிறது ஆகவே இது பறவை . இது சிறியதாக உள்ளது, சிறகுகள் நீலச்சாம்பல் நிறம். நீலச்சாம்பல் நிறமுள்ள சிறகுகள் கொண்ட சிறிய பறவை மைனா எனப்படும். ஆகவே இது மைனா. இவ்வாறு நாம் கண்டு கேட்டு யோசித்து அறிகிற செயல்பாடுதான் பிரமாணம். இது நம்மில் இடையறாது நடந்து கொண்டிருக்கிற மனச்செயல்பாடு .
அறிதல் நிகழும்போதே கூடவே அறிதல்பிழைகளும் நிகழ்கின்றன. அப்பறவை இரைதேடுவதாக நாம் நினைப்போம், அது கூடுகட்ட சுள்ளிதேடிக் கொண்டிருக்கலாம். இதை பொய்யறிவு என்று யோகம் வகுக்கிறது. யோகத்தின் நிர்ணயப்படி அறிதலுடன் சேர்ந்தே பொய்யறிதலும் நிகழ்கிறது. அறிவின் அடியிலேயே பொய்யறிவும் குடிகொள்கிறது. விளக்குடன் நிழலும் வருவதுபோல எந்த அறிவும் அதனுடன் தொடர்புள்ள ஓர் அறியமையையும் நமக்கு அளிக்கிறது.
சட்டென்று கேட்டால் இது வியப்பு தரலாம், யோசித்துப் பார்த்தால் எத்தனை பெரிய உண்மை இது என நமக்கு தெரியும் . ஓர் அறிதல் இன்னொரு முக்கியமான அறிதலை மறைத்துவிடலாம். அறிவியல் ஞானம் கவித்துவ நுண்ணுணர்வை அழுத்திவிடக்கூடும் அல்லவா? ஓர் உண்மை அதன் தீவிரம் மற்றும் நுட்பம் காரணமாகவே அதன் மறுபக்கத்தை நமக்குத்தெரியாமல் செய்துவிடக்கூடும் . ஒருமகத்தான விஷயத்தை நாம் அறிந்ததுமே நம் மனம் அடையும்பரவசம் இன்னொரு விஷயத்தைக் காணமுடியாதவர்களாக ஆக்கிவிடலாம்.ஆகவேதான் அறிதல்கள் அனைத்தையும் ஐயப்படவேண்டும் , அவை முழுமையானவை என்று நம்பிவிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
அறிதல் அறியாமை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஓர் அறிதல் நமக்கு அறியாமையை அளிக்கக் கூடும். அது நம் அறியாமையை நமக்கு காட்டலாம். அதேபோல அறியாமை என்பது ஒருஅறிதலே . எனக்கு மேற்கத்திய இசை தெரியாது என நான் தெரிந்துகொள்ளுவதையே நான் அறியாமை என்கிறேன் இல்லையா? பூமிக்கு அப்பால் இப்பிரபஞ்ச வெளியில் நாம் அறியாத , அதாவது நாம் அறியவில்லை என்று கூட அறியாத , பலகோடி விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் நம் அறியாமையில் சேர்ப்பதில்லையே. நாராயணகுருவின் ‘அறிவு’ என்ற சிறு தத்துவ நூல் இதை விளக்குகிறது. யோகமரபின்படி அறிவு அறியாமை இரண்டுமே இருவகை அறிதல்கள்தான். அவை பிரிக்கமுடியாதவை
அறிந்தவை நம் மனதில் கொள்ளும் மாறுதல்கள், அதாவது திரிபுகள் அடுத்த மனசெயல்பாடு. நாம் அறிபவை எல்லாமே நமக்குள் வந்த உடனேயே ஒரு மாறுதலை அடைந்துவிடுபதை நாம் அவதானித்திருப்போம். ஒரே விஷயத்தை ஒன்பது பேர் பார்த்து தங்கள் மனப்பதிவை எழுதினால் ஒன்பதுவகை சித்திரம் நமக்கு கிடைப்பது இதனால்தான். நாம் அறிந்த அறிவு உடனடியாக ‘நம்முடைய’ அறிவாக ஆகிவிடுகிறது. பாத்திரத்துக்கு ஏற்ப மாறும் நீர்போல.
மைனாவைப் பார்த்ததுமே ஒருவர் ‘மைனாவை சாப்பிட முடியாது, காடையை சாப்பிடலாம்’ என்று அந்த புரிதலை உருமாற்றிக் கொள்ளலாம். இன்னொருவருக்கு எப்படியோ அது ‘பேனா ‘வுடன் தொடர்பு கொண்டு விடலாம் . இன்னொருவர் ‘மை’ [My] என்ற சொல்லுடன் அப்பறவையை தொடர்புபடுத்தி வைத்திருக்கலாம் . இன்னொருவருக்கு ஒரு சிறுவயது நினைவு வரலாம். நாம் அறிபவை எல்லாமே நமக்குமட்டுமே உரிய சொந்த அறிதல்களாக உடனடியாக மாறிவிடுகின்றன. மூவர் சேர்ந்து பார்த்த ஒரு மைனாவை பற்றி பேசினால் அவர்கள் ஒருவரோடொருவர் விவாதிக்கவே முடியும் ! நம் மன இயக்கத்தில் மிக முக்கியமான ஒன்று இந்த திரிபுநிலை.
மேற்குறிப்பிட்ட மூன்றுவகையான மன இயக்கங்களும் அடங்கி நாம் அடையும் ஆழ்ந்த நிலைதான் துயில்நிலை. இங்கே நித்ர என்ற வடமொழிச்சொல்லை தோராயமாகவே துயில் என்று மொழியாக்கம் செய்திருக்கிறேன். அது யோக மரபில் மிக ஆழமான பொருள் கொண்ட கலைச்சொல் . புத்தரின் யோக நித்திரை பற்றி நாம் கேட்டிருப்போம். விஷ்ணுவின் நித்திரைநிலை மகாயோகம் எனப்படுகிறது. யோக மரபுகளில் துயில் என்றால் ஓர் உடல் சார்ந்த நிலை அல்ல.
இப்படி விளக்குகிறேன். மரம் விதை நிலையில் உள்ளது. உலர்ந்த விதைமீது நீர் படாமலிருந்தால் அதற்குள் உள்ள மாபெரும் மரம் பலநூறு ஆண்டுகள் தூங்கக்கூடும். விதைக்குள் மரம் ஒரு நுண்வடிவில் , கரு வடிவில் உள்ளது. அதேபோல மனம் என்று நாம் சொல்லும் அத்தனை பேரியக்கங்களும் நமக்குள் கரு வடிவில் இருந்து பிறகு முளைத்து வளர்ந்து காடாக மாறி நிறைந்தவைதாம். துயில்நிலையின்போது அவை திரும்ப கருவடிவுக்கு சென்றுவிடுகின்றன . இதுதான் யோக மரபின் துயில் என்னும் உருவகம்.
ஆகவேதான் தூங்கும் புத்தர், தூங்கும் விஷ்ணு போன்ற சிலைகளுக்கு
முக்கியமான குறியீட்டுப் பொருள் உள்ளது. விஷ்ணு பிரபஞ்சமே தன் உடலாக
கொண்டவர். விஷ்ணுவின் மகாயோக நிலையில் காலம் கருவடிவில் உள்ளது .
பிரபஞ்சங்களும் கருவடிவில்தான் உள்ளன. அதாவது சிருஷ்டிக்கு முந்தைய நிலை
அது. புத்தரின் உடலை பிரபஞ்ச நியதியின் , மகாதர்மத்தின் வடிவமாக கொள்வது
பௌத்த மெய்யியல் மரபு. அதை அவர்கள் தர்மகாயம் என்கிறார்கள் .யோகாசார பௌத்த
மரபின்படி யோகநித்திரையில் உள்ள புத்தர் மகாதர்மம் தன் முடிவற்ற இயக்கத்தை
கருவடிவில் மட்டுமே நிகழ்த்தும் நிலையை குறிக்கிறார்.
ஆகவே நம் மன இயக்கமானது அதன் அலைகளை. கிளைபரப்பலை நிறுத்தி உள்ளே சென்று
கருவடிவில் இயங்கும் நிலையே துயில்நிலை. துயில்நிலையிலும் மனம்
செயல்பட்டபடியேதான் உள்ளது. நம் மன இயக்கத்தின் முக்கியமான ஒரு சரடுதான்
அது. விழிப்பின் நாம் பார்த்த மைனா அதன் பல்வேறு சாத்தியங்களுடன் நம்
மனதில் உள்ளது. இடைவிடாது வளர்ந்து மாறியபடியே இருக்கும் ஒன்றாகவே நாம் நம்
விழிப்பில் மைனாவை உணர்ந்திருப்போம். மைனா ஒரு தகவலாக, ஒரு படமாக, ஒரு
குறியீடாக, ஒரு ஒலியாக நம் மனதில் மாறி மாறி தெரியும். மைனா நம்
ஆழ்மனதில் அதன் கருவடிவில் இறங்குவது துயிலில் தான். மைனா ஒரு கருத்தாக
சுருக்கப்பட்டுவிடுகிறது. அதாவது சாராம்சப்படுத்தப்பட்டுவிடுகிறது. நம்
விழிப்புநிலையில் எந்த மையப்புள்ளியில் இருந்து மைனாவைப்பற்றிய பலவகையான
மனச்சித்திரங்களும் எண்ணங்களும் பிறந்து விரிகின்றனவோ அந்த மையப்புள்ளி
மட்டுமே எஞ்சும் நிலை அது.
அதற்கடுத்த நிலை என்று நினைவுகூர்தல் நிலை சொல்லப்படுகிறது . நாம் அறிந்தவற்றை நினைவுகூர்வது இல்லை. மாறாக நம் மனதில் சாராம்சப்படுத்தி வைத்துள்ளவற்றையே நினைவுகூர்கிறோம் என்று நமக்குத்தெரியும். மைனாவை நினைவுகூரும்போது உடனே நாம் அப்போது அருகே இருந்த குளத்தில் விழுந்த தன் நிழலையும் சேர்த்தே நினைவுகூரலாம். மைனாவும் நம் பள்ளிப்பருவமும் சேர்ந்தே நினைவுக்கு வரலாம். அல்லது நம்மால் தர்க்கபூர்வமாக வகுத்துக் கொள்ள முடியாதபடி சம்பந்தமில்லாத பற்பல படங்களை, உணர்வெழுச்சிகளை மைனாவின் நினைவு நம்மில் கிளர்த்தலாம்.உள்ளே போகும்போது புறவுலகு சார்ந்த ஓர் அறிதலாக இருந்த மைனா வெளியேவரும்போது அகம்சார்ந்த ஒரு அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. பறவையாக உள்ளே போய் படிமமாக மீண்டுவருகிறது
ஆக பதஞ்சலி மன இயக்கம் என்று சொல்லும்போது புறவுலகம் நம் மனதுக்குள் சென்று உருமாறி நம்முடைய அகத்தின் ஒரு துளியாக மாறி மீண்டு வருவது வரையிலான ஒரு சுழற்சியையே ஐந்துபடிகளாக சொல்லிவிடுகிறார். இதன் விரிவாக்கத்தை மீண்டும் காணலாம்.
சூத்திரம் ஏழு
ப்ரத்யக்ஷ,அனுமான, ஆகமா ப்ரமாணானி
[நேர்க்காட்சி , ஊகம், முன்னறிவு என பிரமாணங்கள் மூன்று]
பிரமாணம் என பதஞ்சலி சொல்லும் புறவய அறிதல் மூன்றுவகை.
பிரத் + அக்ஷ [ அக்ஷம்-கண்] என்ற சொற்சேர்க்கையின் சரியான பொருள் கண்முன் என்பதே. புலனறிவு என்று இதை வகுக்கலாம். கண்டுகேட்டு உண்டு உயிர்த்து தொட்டு அறியும் அறிவுதான் பிரத்யட்சம் . இது என்ன என்றவினாவுக்கு நம் புலன்கள் அளிக்கும் விடை அது.
ஆனால் நம் புலனறிதல்கள் துண்டுபட்டவை. மைனாவை மென்மை, இனிய ஒலி , அழகிய நிறம் என்ற மூன்று தனி அறிதல்களாக நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். அம்மூன்றையும் ஓர் அறிதலாக மாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது . அதை அனுமானம் அல்லது ஊகம் என்று சொல்கிறார். இடைவெளியில்லாது நம் அகம் நம் புலனறிதல்களைத் தொகுத்து ஊகங்களாக மாற்றியபடியே இருக்கிறது .
இவ்வாறு நாம் ஊகங்களை நிகழ்த்துகையில் அதற்கு அடித்தளமாக இருப்பது நமது முன்னறிவு ஆகும். ஒரு புதிய அறிதலை அதற்கு முன்பே நாம் அறிந்த அனைத்து அறிதல்களையும் பயன்படுத்தித்தான் நாம் அடைகிறோம். அறிதல் என்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. பறவையைப்பற்றி நாம் அறிந்த அனைத்துமே ஒரு மைனாவை நாம் அறிவதற்கு உதவுகின்றன .
முன்னறிவே இல்லாமல் அறிதல் நிகழ முடியுமா என்ற வினா பொதுவாக எல்லா அமர்வுகளிலும் எழுப்பப் படுகிறது. சிறிய குழந்தை முதன்முதலில் அறியக்கூடிய ஒரே ஒரு அறிதலை வேண்டுமானால் அப்படி சொல்லலாம் என்பது நமக்கு உடனே தோன்றுகிறது. முதன் முதலில் மைனாவைப் பார்க்கும் குழந்தை உடனே கையை நீட்டி அதை ‘ க்கா ‘ என்று தானறிந்த முன்னறிவுடன் சம்பந்தப்படுத்திவிடும். முதன்முதலில் காக்காவைப்பார்த்ததும் அதை தன் துணியாக எண்ணி ‘த்து’ என்று சொல்லக் கூடும். முதலில் துணியைப்பார்த்ததும் அம்மாவின் உடையாக எண்ணி ‘ம்மா’ என்று சொல்லலாம். முதலில் அம்மாவைப் பார்த்ததும் அது முலைக்கண்ணை சுவைப்பது பற்றிய முன்னறிவுடன் தொடர்பு படுத்தி சுவைக்கும் ஒலியை ‘ ம்ம்ம் ‘ என எழுப்புகிறது. துள்ளுகிறது. ஆனால் முலைக்கண் ?
யோசியுங்கள். முலைக்கண்ணைபற்றிய அறிதலுடன்தானே அது பிறக்கிறது? பிறந்த மறுகணமே அதனால் முலையை சப்ப முடியும். முன்னறிவு என்பது இங்கே அடையப்பெற்றது அல்ல. அது கொண்டுவரப்படுவது. உயிரியல்பின் ஒரு பகுதி. ஆகவேதான் ஆகமா என்றார் பதஞ்சலி. [கமனம் என்றால் வருதல். ஆகமம் என்றால் வந்தது ] முன்னறிவு ஒருவனில் இயல்பாக உள்ளது.
முக்கியமான ஓர் அறிதல் இது. நமது அறிதல்களின் சாத்தியங்கள் அவற்றின் எல்லைகள் இரண்டையுமே இது காட்டுகிறது. நாம் நமது அடிப்படை உள்ளுணர்வுகள் பலவற்றுடன்தான் பிறந்திருக்கிறோம். அவற்றை அடித்தளமாகக் கொண்டுதான் நமது எல்லா அறிதல்களும் நிகழ்ந்துகொண்டுள்ளன. அவற்றின் எல்லைகளை நாம் மீறிப்போகவே முடியாது.
எப்படியெல்லாம் மேகங்களில் மிதந்தும் காற்றுகளில் அலைந்தும் சிந்தித்தாலும் நமது சிந்தனை என்ற பட்டத்தின் நூல் கீழே முன்னறிவு என்ற நூல்பிடியில்தான் உள்ளது. அந்நூல்கண்டு நமது அடிப்படையான மிருக நினைவுகளாக இருக்கலாம். அல்லது நமது இன ,கலாச்சார நினைவுகளாக இருக்கலாம்.
இங்கே தத்துவ மாணவர்களுக்குச் சொல்ல ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. பதஞ்சலி ஆகம என்று சொல்லும் சொல் நம் மரபிலே பலவாக விளக்கப்பட்டுள்ளது. அதை ‘முன்னோரிடமிருந்து வந்த அறிவு’ என்று கொள்வது வழக்கமான மத உரைகளில் காணப்படுகிறது. வழிபாட்டுமுறைகளை வழிவழியாகப் பெற்று செய்துகொண்டிருக்கும் முறையை பதிவுசெய்த நூல்கள் அகமங்கள் எனப்பட்டன. ஆகவே ஆகமங்கள் என்னும்போது வழிவழியாக வந்த நூல்கள் என்ற பொருளில் நம் மரபில் பயன்படுத்தப்படுகிறது.
வேறுசில நூல்களில் மூன்று பிரமாணங்களில் மூன்றாவது வருவது ‘சுருதி’ [ பிரத்யட்சம், அனுமானம், சுருதி] என்று சொல்லப்படுகிறது. வேதங்களை ஞானத்தின் அடிப்படைகளாக கருதும் மீமாம்சகர்கள் சுருதி என்றால் வேதமே என்று வகுத்து எல்லா அறிதல்களுக்கும் வேதங்களே அடிப்படை என்று விளக்க முற்படுகிறார்கள். சாதாரணமாக இன்றைய இந்துமதச் சொற்பொழிவுகளை கேட்பவர்கள் இவ்விளக்கத்தையே கேட்டிருப்பார்கள்.
அதேபோல வைதிகர்கள் வேதங்களை சொல்லும்போது மற்றவர்கள் தங்கள் மூலநூல்களை அவ்விடத்தில் வைப்பார்கள். அறிதல் எப்போதுமே முன்னோர்வகுத்த சாத்திரங்களை மீறக் கூடாது, மீற முடியாது என இவர்கள் சொல்வார்கள். பதஞ்சலி யோகசூத்திரம் என்ற மூலநூலில் இத்தகைய வரையறை இல்லை என்பதை வாசகர் காணலாம்.
நாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்ய யதி என மூன்று ஆசிரியர்களுமே மாஅகம என்பதை முன்னோர் அறிவு என்ற விளக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. மதம்சார்ந்து அளிக்கப்பட்ட வாசிப்புகளாக மட்டுமே அவற்றை அவர்கள் காண்கிறார்கள். அவற்றை ‘முன்னறிவு’ என்றே அவர்கள் கொள்கிறார்கள். அதாவது கருவிலேயே மனிதனுக்குள் உருவாகிவிடும் அறிவு. எல்லா உயிரினங்களிடமும் பிறப்பிலேயே வந்துவிடும் அடிப்ப்டை அறிவ்ய்.
மூலநூல்[Canon] என்று எதுவும் பொதுவாக இந்துமெய்ஞான மரபில் இல்லை. மீமாம்சகர்கள் வேதங்களை மாற்றமில்லா மூலநூல்களாக கொள்வார்கள். அது மட்டுமே இந்து ஞானமரபில் உள்ள மூலநூல்வாதம். மற்ற தரிசனங்களைப் பொறுத்தவரை மூலநூல்கள் என்பவை தத்துவ நூல்களே. அதாவது ஏற்று ஒழுகவேண்டியவை அல்ல, கற்று ,பயின்றுவிவாதித்து தெளியவேண்டியவை .ஆகவே முன்னறிவை மூலநூல் என்றோ மூத்தோர் சொல் என்றோ விளக்க இந்துமெய்ஞான மரபில் இடமில்லை என்பதே உண்மையாகும். பிற்கால பக்திமரபுதான் அப்படிப்பட்ட் விளக்கத்தை அடைந்திருக்கிறது. யோகமாணவன் அதை தவிர்த்து முன்னகர்வதே முறை.
[தொடரும்]
கொஞ்சம் விஷய கனமுள்ள கட்டுரைகளை ஒவ்வொன்றாக வெளியிட்டிருக்கலாமோ? இது என் தனிப்பட்ட கருத்து. என் போன்றவர்கள் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. :)))
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வனவியல் புகைப்படத் துறையிலும் இது காணலாம். பறவைகளை புகைப்படம் எடுப்பவர் அந்தச் சூழலுடன் ஒன்றி, பறவைகளை முழு மனதுடன் நேசிப்பவராயின் நீங்கள் மூன்றடி, இரண்டடி தூரத்தில் நின்று கூட பறவைகளை படம் எடுக்க இயலும். ஆனால் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தால்.. பறவை நீங்கள் இருபதடி தூரத்தில் இருக்கும் போதே பறந்து சென்றுவிடும்.

ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள்.
ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும். ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, “கிரக்...கிரக்...” என சன்னக் குரலில் அபாய ஒலி எழுப்பும். உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறிது தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும். அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே “Did you do it? Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும் ஆதலால் இப்பறவைகளை ‘Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள். இப்போது புரிகிறதா இந்தக் குருவியை ஏன் ஆள்கட்டிக் குருவி என்று பலரும் அழைக்கிறார்கள் என்பது?
இவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் குருவியை நான் சில நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து வந்தேன். முதலில் கேமராவை மட்டும் கூட்டின் அருகில் வைத்து விட்டு தூரத்தில் இருந்து “ரிமோட் ரிலீஸ்” மூலம் படம் பிடித்து வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சென்று இறுதியில் அதனைத் தடவிக் கொடுத்தேன். பின் அடை காத்துக் கொண்டிருந்த பறவையை கையில் எடுத்து சுமார் இரண்டடி தூரத்தில் விட்டு அது தன் கூட்டினை அடையும் போது படம் எடுத்தேன்.
ஒரு முறை எனது நண்பர் ஒருவரை அப்பறவையைதடவிக் கொடுக்கச் செய்து எடுத்த படம்
இதோ.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்றுஎழுதியது திருமூர்த்தி வாசுதேவன்
..
ஏனைய (யோகமில்லா) காலத்தில் [புருஷனுக்கு சாத்விகம், ராஜசம், தாமஸம் முதலிய] வ்ருத்திகளோடு ஒன்றாய் இருக்கும் தன்மை ஏற்படுகிறது.சரி அப்ப ஜீவன் யோகத்திலே இல்லாத போது எப்படி இருக்கும்? ஏதோ எண்ணங்கள் ஓடிகிட்டே இருக்கு. அந்த எண்ணங்கள் சாத்விகமா இருக்கலாம்; ராஜசமா இருக்கலாம்; தாமசமா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறாப்போல இருக்கு. இந்த அழுக்கை நீக்குவது ரொம்ப கடினமான வேலையே. நல்லாவே ஒட்டிகிட்டு இருக்கும்.
இந்த ராஜசம் தாமசம் சாத்விகம் எல்லாம் என்ன?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்றுஎழுதியது திருமூர்த்தி வாசுதேவன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மிக எளிமையாக பேசுவது போலவே விளக்கம் தருவது டெக்ஸ்டை படித்து புரிந்து கொள்ள மிக உதவுகின்றது. அருமையாக வழங்கியிருக்கின்றீர்கள் திவாஜி.
பிரமாணம் என்பதென்ன? பிரத்யக்ஷம் (நேரடி அனுபவம்), அனுமானம் (ஊகம்), ஆகமம் ஆகியன பிரமாணங்கள் ஆகும்.(அனுபவத்தால் உண்டானதை மற்றதற்கு பொருத்தி பார்ப்பது ஆகமம்.)நம் கண் காது முதலான புலன்களாலே சிலதை அறிஞ்சு கொள்கிறோம். இது நேரடி அனுபவம். இது ஒரு பிரமாணம்.முன் அனுபவத்தாலே சிலது தெரிஞ்சுக்கிறோம். நெருப்பை நேரடியா பார்த்து இது நெருப்புன்னு தெரிஞ்சு கொள்கிறோம். இது ப்ரத்யக்ஷம். முன் ஒரு முறை நெருப்பு இருக்கிற இடத்தில் புகை இருக்குன்னு பார்த்தோம். இப்ப புகையை மட்டும் எங்காவது பார்க்கும் போது "ஓஹோ! இங்கே நெருப்பு இருக்கு" ன்னு ஊகம் செய்கிறோம். இது ஒரு வகை. நெருப்பு என்கிற வார்த்தையை கேட்கும்போது நேரடியா பாக்கலைன்னாலும் இந்த நெருப்பையும் புகையையும் சம்பத்தப்படுத்தி நினைக்கிறது ஆகமம்.இவை அத்தனையும் பிரமாணம்.विपर्ययो मिथ्याज्ञानमेतद्रूपप्रतिष्ठम् ।।8।।விபர்யயோ மித்²யாஜ்ஞாநமேதத்³ ரூப ப்ரதிஷ்ட²ம் || 8||ஒரு வஸ்துவின் உண்மை சொருபத்தை வெளிப்படுத்தாத பொய்யான ஞானம் விபர்யயம்.இது பின்னால் மாறிவிடக்கூடியது. (சிப்பியில் வெள்ளி காண்பது) ஒரு பொருளோட "உண்மை" நிலையை தெரிவிப்பது யதார்த்த ஞானம். இல்லாத ஒரு நிலையை இருப்பதா காட்டுவது மித்யா ஞானம். கடற்கரையிலே ஒரு சிப்பி கிடக்குது. அது வெய்யிலில் பளபளக்கிறது ன்னு பார்த்து ஓ! இது ஏதோ வெள்ளியிலே பண்ண பொருள் ன்னு நினைக்கிறோம். இது மித்யா ஞானம் அல்லது விபர்யயம். கிட்டே போய் பார்க்க அது சிப்பின்னு தெரியுது. அப்ப நம் கருத்தை மாத்திக்கிறோம். இப்படி மாறுவதே விபர்யயத்தோட முக்கிய லக்ஷணம்.

..
அவித்தையின் சொரூபம்:अनित्याशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखात्मख्यातिरविद्या ।।5।।அநித்யாஶுசி து³:கா²நாத்மஸு நித்ய ஶுசி ஸுகா²த்மக்²யாதிரவித்³யா || 5||அநித்தியமாகவும் அசுத்தமாகவும் துக்கமாகவும் அனாத்மாவாகவும் உள்ளவற்றில் நித்தியம், சுத்தம், சுகம், ஆத்மா ஆகியவற்றை காண்பதே அவித்யா.இந்த உலகம் அநித்தியம். என்றோ ஒரு நாள் அழியும். தேவர்களாயினும் ஒரு நாள் புண்யங்களை அனுபவித்து தீர்த்தபின் மீண்டும் மனித ஜன்மம் எடுக்க வேண்டும். இப்படி எண்ணாமல் உலகம் என்றும் இருக்கும், நித்தியம் என்றும்; அல்லது யாகங்கள் செய்து தேவனானால் நித்தியமாக சுகமாக இருக்கலாம் என்று எண்ணியும் வருவது அவித்தை. நம் உடம்பையும் புலன்களையும்தான் ஆத்மா என்று எண்ணுகிறோம். இதுவும் அவித்தை காரணமாகவே.இதே போல யாருக்கோ ஏற்படும் சுக துக்கங்களை நமதாக எண்னுகிறோம். கிரிக்கெட் மாட்ச் பார்க்கும்போது ஒரு அணி ஜெயித்தால் சந்தோஷப்படுகிறோம். வேறு அணி ஜெயித்தால் துக்கப்படுகிறோம். சினிமாவில் கதாநாயகி படும் கஷ்டங்களை நமதாக நினைத்து அழுகிறோம். வில்லனைப்பார்த்து கோபப்படுகிறோம். ஏன் வாழ்க்கையிலேயே நம் குடும்பத்தினர் சுக துக்கங்களை நமதாக எண்ணுகிறோம். இதுவும் அவித்தையே.
யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்றுஎழுதியது திருமூர்த்தி வாசுதேவன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
+1


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கீதா அம்மா அவர்களே,தாங்கள் "ஶாந்த" என்ற சொல்லுக்கு "ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த" என்ற பொருளைப் பதிந்திருக்கிறீர்கள். ஆனால், அப்படிப்பட்ட பொருளை நான் இதுவரை படித்ததில்லை.
யோக மார்க்கம் --பதஞ்சலி யோகம் -- பகுதி ஒன்று
எழுதியது திருமூர்த்தி வாசுதேவன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திவாஜி அவர்கள் அருமையாக விளக்கம் எழுதியுள்ளார்.
//மேகலா ஜி//இப்படி 'ஜி'போட்டு எழுதுவதைக்கண்டால் எனக்குச் 'சீ'யென்று ஆகிவிடுகிறது. உடலெல்லாம் பற்றி எரிகிறது. வலிந்து வேறொரு மொழியைப் புகுத்தித்தானாகவேண்டுமா செல்வன்?
வாதம் பித்தம் சிலேட்டுமம் _இது சிலேஷ்மமா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.