மண்ணின் குரல்: மார்ச் 2015:​ஸ்ரீ பகவான் ஆதிநாதர் ஆலயம் - விழுப்புரம் மாவட்டம்

54 views
Skip to first unread message

Suba.T.

unread,
Mar 22, 2015, 3:56:41 AM3/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது. 

Inline image 1

மேல்சித்தாமூர் சமண மடம் இருக்கும் அதே ஊரில் அருகாமையில் இருப்பது ஆதிநாதர் ஆலயம். ஆலயத்தினுள் பிரகாரப் பகுதியில் முதலில் பார்சுவநாதர் முன்னே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  உள்ளே கருவரை பகுதியில் ஆதிநாதர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 
கருங்கல்லில் அமைக்கப்பட்ட ஆதிநாதர் சிற்பம் தவக்கோலத்தில் அமர்ந்திருக்க தலைப்பகுதியில் முக்குடையுடனும் இரு புறமும் சாமரதாரிகளுடனும் இருக்கும் இந்தச் சிற்பத்தைக்  காணலாம். 
இங்கு தற்போது இருக்கும் ஆலயம் ஏறக்குறைய 800 ஆண்டு பழமையானது என ஆலய நிர்வாகத்தார் குறிப்பிடுவதையும், ஆயினும் அப்பகுதியில் அதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஆதிநாதர் ஆலயம் இருந்தது என்பதனைக் காட்டும் பழமையான கருங்கற் சிலைகளும் இதே ஜினாலயத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்சமயம் இந்த ஆலயத்தில் யுகாதி பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது.

உழவுத் தொழில் என்று மட்டுமல்லாது பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு கைத்தொழில் கற்றுக் கொடுத்து வாழ்விற்கு ஆதாரம் உழைப்பு என சொல்லிக் கொடுத்தவர் ஆதிநாதர் என ஆலய நிர்வாகி குறிப்பிடுவதையும் இந்தப் பதிவில் காணலாம்.

இந்தப் பேட்டியில் மேலும்..
  • தீர்த்தங்கரர் உருவங்கள், அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன
  • யட்ஷன் யட்ஷி பற்றிய விளக்கம்
  • இந்தக் கோயிலில் பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயாரின் வழிபாடு 
  • தீர்த்தங்கரர்கள் அவர்களின் எண்ணிக்கை.தனித்தனியாக 
  • பாகுபலி.. 
  • ஆதிநாதர்..
  • நேமிநாதர்
  • பிரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற விளக்கம்
  • தீர்த்தங்கரர் உடலில் பதிக்கப்படும் முக்கோண வடிவின் விளக்கம்
  • படிப்படியான சடங்குகளின் விளக்கம்
  • சிலைக்கு உயிரோட்டம் கொடுக்கக்கூடிய பண்டிதர்கள் ..
  • யந்திரம்
  • இங்கே ஆலயத்தில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள்
  • கந்தவர்கள் தேரை இழுத்துக்கொண்டு செல்வது போல அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் தங்கத்தேர்
பதிவு 20 நிமிடங்கள் கொண்டது. முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பதிவில் விளக்கம் தொடரும்.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/03/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=7wdAzKug7ik&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 20 நிமிடங்கள் கொண்டது.

குறிப்பு: இந்தப் பதிவினை நான் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீட்டிற்காகச் செய்ய உதவிய மேல்சித்தாமூர் ஜைன மடத்திற்கும் மடத்தின் தலைவருக்கும், நண்பர்கள் பிரகாஷ் சுகுமாரன், இரா.பானுகுமார், ஹேமா ஆகியோருக்கும், என் உடன் வந்திருந்து பல தகவல்களை வழன்கி உதவிய டாக்டர்.பத்மாவதி அவர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


Malarvizhi Mangay

unread,
Mar 22, 2015, 4:13:24 AM3/22/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel

ஆதி நாதர் கோயில் பதிவு தனித்துவமானது.24 தீர்த்தங்கரர்களில் முதலில் இடம் பெறுபவர் இவரே.இவர்தம்
சித்திரகவி ஒன்று எனது
ஆய்வு நூலில் நான் பதிப்பித்தது,
அப்படம் விரைவில் அனுப்புகிறேன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Mar 22, 2015, 4:27:47 AM3/22/15
to mintamil, Subashini Tremmel
எங்கிருந்தோ வந்தாள். எங்களூர் புகழின் விழியம் அளித்தாள். ஞானப்பழமும் நழுவாமல் அருளிச்செய்தது. வாழ்க, சுபாஷிணி.
மங்கையும் மலர் விழியம் கண்டு மகிழ்ந்தாள். சித்திரகவி அனுப்புவாள்.
அன்புடன்,
இன்னம்பூரான்

Suba.T.

unread,
Mar 22, 2015, 4:35:08 AM3/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
இந்த ஜினாலயத்தில் எடுக்கப்பட்ட படங்களில் சிலவற்றை இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.


ஜினாலத்தின் முன் வாசல் 


ஆலயத்தின் உள்ளே

பிரம்ம தேவர்


ஆதிநாதர்



வாசபூச்யா



விமலநாதர்


வர்த்தமான மகாவீரர்


பத்மாவதி யட்ஷி



சமண சமயச் சின்னங்கள்


பஞ்ச பரமேஷ்டி


சுருத ஸ்கந்தம்


வீடியோ பதிவின் போது




--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Mar 22, 2015, 4:40:36 AM3/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-22 9:27 GMT+01:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
எங்கிருந்தோ வந்தாள். எங்களூர் புகழின் விழியம் அளித்தாள். ஞானப்பழமும் நழுவாமல் அருளிச்செய்தது. வாழ்க, சுபாஷிணி.
மங்கையும் மலர் விழியம் கண்டு மகிழ்ந்தாள். சித்திரகவி அனுப்புவாள்.
அன்புடன்,
இன்னம்பூரான்


​மிக்க மகிழ்ச்சி. 
படங்களில் சிலவற்றை பகிர்ந்திருக்கின்றேன். அடுத்தத்த நாட்களில் மேலும் சில படங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

Suba.T.

unread,
Mar 22, 2015, 4:41:30 AM3/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-22 9:13 GMT+01:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

ஆதி நாதர் கோயில் பதிவு தனித்துவமானது.24 தீர்த்தங்கரர்களில் முதலில் இடம் பெறுபவர் இவரே.இவர்தம்
சித்திரகவி ஒன்று எனது
ஆய்வு நூலில் நான் பதிப்பித்தது,
அப்படம் விரைவில் அனுப்புகிறேன்.


​உங்கள் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கின்றது மலர்விழி. இந்த இழையிலேயே தங்கள் செய்திகளையும் படங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

சுபா
 

Malarvizhi Mangay

unread,
Mar 22, 2015, 10:04:13 AM3/22/15
to mint...@googlegroups.com

நன்றி சுபா .கண்டிப்பாகஎழுதுகிறேன். சமணர்களின் முக்குடை சமய இதழில் எனது ஐஞ்சிறுகாப்பிய
நாடகங்களை ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வெளியிட்டு
பெருமைப் படுத்தினர்.இன்னம்புரான் ஐயா மற்ற விழுப்புரம் வந்தவாசி வாழ் அன்பர்கள் முக்குடையைப் பெறஇயலும் என நம்புகிறேன்.

--

Oru Arizonan

unread,
Mar 22, 2015, 4:16:12 PM3/22/15
to mintamil
சமணக் கோவில்களுக்கும், சைவ, வைணவக் கோவில்களுக்கும் உள்ள ஒற்றுமை (ராஜகோபுரம் முதலான) என்னை வியக்க வைக்கிறது.  நல்லதொரு பதிவினைக் கொடுத்திருக்கிறீர்கள்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Banukumar Rajendran

unread,
Mar 23, 2015, 1:48:10 AM3/23/15
to மின்தமிழ்
நன்றிகள் பல!!


சரியான நன்னாளில் சரியான பதிவை தேர்ந்தெடுத்து வழங்கியமைக்கு என் வாழ்த்துக்கள்.

விழியத்தில் சில தகவற்பிழைகள் உள்ளன.

முடிந்தால் தனி (துணை) இழையில் பகிர்கிறேன்.


யுகாதி நாயகன் தாழ்ப்போற்றி!



வணக்கத்துடன்,


இரா.பானுகுமார்

Banukumar Rajendran

unread,
Mar 23, 2015, 1:56:40 AM3/23/15
to மின்தமிழ்
2015-03-22 19:34 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

நன்றி சுபா .கண்டிப்பாகஎழுதுகிறேன். சமணர்களின் முக்குடை சமய இதழில் எனது ஐஞ்சிறுகாப்பிய
நாடகங்களை ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வெளியிட்டு
பெருமைப் படுத்தினர்.

ஆம்மையீர், எந்த பெயரில் எழுதியிருக்கிறீர்கள்? மலர்விழி மங்கை என்ற பெயர்ப் பார்த்ததாக நினைவில்லையே?


நன்றி.


இரா.பானுகுமார்




 

இன்னம்புரான் ஐயா மற்ற விழுப்புரம் வந்தவாசி வாழ் அன்பர்கள் முக்குடையைப் பெறஇயலும் என நம்புகிறேன்.

Suba.T.

unread,
Mar 23, 2015, 4:54:28 AM3/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-23 6:48 GMT+01:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
நன்றிகள் பல!!


சரியான நன்னாளில் சரியான பதிவை தேர்ந்தெடுத்து வழங்கியமைக்கு என் வாழ்த்துக்கள்.

விழியத்தில் சில தகவற்பிழைகள் உள்ளன.

முடிந்தால் தனி (துணை) இழையில் பகிர்கிறேன்.
​மகிழ்ச்சி. இதே இழையில் தொடருங்கள்​. எனக்கு மீள்பார்வைக்கும் உதவும்.

சுபா

Malarvizhi Mangay

unread,
Mar 23, 2015, 5:48:08 AM3/23/15
to mint...@googlegroups.com

திரு.பானுகுமார் அவர்களுக்கு
இராம.மலர்விழிமங்கையர்க்கரசி

என்ற எனது சொந்தப் பெயரில் தான் எழுதினேன்.2013...2014 கல்வி ஆண்டு என்பதாகத்தான் என்
ஓர்மையில் உள்ளது.

Malarvizhi Mangay

unread,
Mar 23, 2015, 6:32:08 AM3/23/15
to mint...@googlegroups.com

சமணமும் திருவருட்பாவும்.

ஐம்பொறிகளை வென்றவர்,ஊழினைக் கடந்தவர் , 
இவரே ஜீனர்.மேருமந்தரபுராணத்தில் ஸ்ரீவாமனமுனிவர்,சம்சாரம்அநித்யமாகையால் வீடே பெறற்பாலதென்றும் அதன்வழி
நற்காட்சி,நல்ஞானம்,நல்ஒழுக்கம் மூன்றும் ஒருதலைப்பட்டு நிற்பது எனபதும் உணர்த்தி ஸ்யாத்வாதம்
என்ற பெயர் பூண்டு விளக்குவதுமாகிய சமயமே ஜைன சமயம் என்கிறார்.
      சமணசமயக்கருத்துக்களோடு
இராமலிங்கவள்ளலார்தம் திருவருட்பாக் கருத்துகளை ஒப்புநோக்கி இனிக்காணலாம்.
உயிர் இரக்கம்....
சமணம்...கொல்லாவிரதமேமூலமந்திரம்.
திருவருட்பா....
கொல்லா நெறியே குருவருள்நெறியெனப்
பல் கால் எனக்குப்
கவர்ந்த மெய்ச்சிவமே.
/அருட்பெருஞ்சோதி அகவல்./

Banukumar Rajendran

unread,
Mar 23, 2015, 6:40:23 AM3/23/15
to மின்தமிழ்
நன்றி அம்மையீர். தேடிப்பார்த்து மீண்டும் படிக்கிறேன்!


இரா.பானுகுமார்

Banukumar Rajendran

unread,
Mar 23, 2015, 6:43:28 AM3/23/15
to மின்தமிழ்
2015-03-23 16:02 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

சமணமும் திருவருட்பாவும்.


தவத்திரு.ஊரன் அடிகளார் அவர்களும் இவ்வொப்புமைக் குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறாகள்.
அந்நூல் என்னிடம் இருக்கிறது.

தனி இழைத் துவக்கி எழுதுமாறு வேண்டுகிறேன்.



Malarvizhi Mangay

unread,
Mar 23, 2015, 6:54:28 AM3/23/15
to mint...@googlegroups.com

தனிஇழை எப்படித் தொடங்குவது?
கணினித் தொழில்நுட்பம்இன்னும்
கைவரப் பெறவில்லை.கைவிரலால் ஒவ்வொரு எழுத்தாக் தட்டித்
தான்.........தினமும் தமிழோடும் உங்களோடும் உலா வருகிறேன்.

Suba.T.

unread,
Mar 23, 2015, 7:55:14 AM3/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-23 11:54 GMT+01:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

தனிஇழை எப்படித் தொடங்குவது?
கணினித் தொழில்நுட்பம்இன்னும்
கைவரப் பெறவில்லை.கைவிரலால் ஒவ்வொரு எழுத்தாக் தட்டித்
தான்.........தினமும் தமிழோடும் உங்களோடும் உலா வருகிறேன்.


​தனி இழை என்பது சாதாரணமாக ஒரு புது நண்பருக்கு நீங்கள் மடல் எழுதும் போது செய்வீர்களே அதே போல ஆனால் முகவரி mint...@googlegroups.com போட்டு அனுப்ப வேண்டியது தான்.
மு
​யற்சித்துப் பாருங்கள்.​
சு
​பா​



--

Malarvizhi Mangay

unread,
Mar 23, 2015, 8:04:02 AM3/23/15
to mint...@googlegroups.com

ஆலோசனையும்,உங்களின் உடனடி அக்கறையும் சிறந்த
தலைமையின் கீழ்தான் இணைந்து
இருக்கிறேன் என்று பெருமை
கொள்ளச்செய்கிறது சுபா.

Suba.T.

unread,
Mar 26, 2015, 4:35:28 PM3/26/15
to மின்தமிழ், Subashini Tremmel
​படத்தொகுப்பு தொடர்கின்றது..

Inline image 1
பிரதிஷ்டை செய்யபப்ட்ட வடிவங்கள்.. உடலில் முக்கோணச் சின்னத்துடன்


Inline image 2

பிரதிஷ்டை செய்யபப்ட்ட வடிவங்கள்.. உடலில் முக்கோணச் சின்னத்துடன்


Inline image 3
அஷ்ட மங்கலப் பொருட்கள்



Inline image 4

அஷ்ட மங்கலப் பொருட்கள்



Inline image 5


Inline image 6
பாதங்கள்


Inline image 7

கோயிலின் கற்ப கிருகத்தில் நண்பர்களுடன்

சுபா

Malarvizhi Mangay

unread,
Mar 27, 2015, 12:31:10 PM3/27/15
to mint...@googlegroups.com

சுபா படங்கள் அருமை.
1008 போற்றி தெரியும்.
1008 பாதங்கள் இப்போதுதான்
பார்க்கிறேன்.ஒரு திருத்தம்
கற்ப கிரகம். கற்ப அல்ல.
கர்ப்ப கிரகம்.தாயின் கருவறை என்ற பொருள்.

Reply all
Reply to author
Forward
0 new messages