பூ நாரைகள், செங்கால் நாரைகள்

250 views
Skip to first unread message

Maravanpulavu K. Sachithananthan

unread,
Jun 1, 2016, 11:08:28 PM6/1/16
to mintamil, vallamai

வைகாசி 18, 2047 (31.05.2016) 

செவ்வாய் மாலை 1730 மணி. 

சாவகச்சேரியில் இருந்து தெற்காகத் 

தனங்களப்பு நோக்கும் சாலை. 

கிழக்கே சாலையைத் தழுவிக் 

கரைமோதும் உவர்க் கடல். 

யாழ்ப்பாணக் கடனீரேரியின் 

உள்நீட்டமான கச்சாய்க் கடல்.

நெடிய கால்கள். 
மென்சிவப்புக் கால்கள், 
செங்கால்கள். 
தவம் செயும் தவத்தோர் ஒரு காலில் நிற்பர். 
பூநாரைகள் ஒற்றைக் காலில் நின்றன. 
மற்றக் காலை மடித்து 
நிற்கும் காலில் ஊன்றினவோ?

தீயின் தழல் எடுத்து, 
சாயம் வரக் குழைத்து, 
தூரிகை மயிர் சிதற, 
சிறகை இறகுகளாக விரிக்க, 
இக்கால ஓவியர் போல 
இறகு நுனிகளைத் தழல் வண்ணமாக்கி
("செந்தழல் புரை திருமேனி...." என்பார் திருப்பள்ளியெழுச்சியில் மாணிக்கவாசகர்)
சிறகின் இடையைச் சாம்பல் நிறமாக்கி
கொள்ளை அழகைக் காட்சியாக்கும்
இயற்கையின் பெரும் பெற்றி.

பனங்கிழங்கைப் பிளக்குக
இரு பாதிகளையும் சொண்டுகளாக்குக.
கூர்முனையை ஒடித்து வளைக்க.
வெண் சாயத்தைக் கிழங்குக்கும்
கருஞ் சாயத்தைக் கூர்முனைக்கும் 
தடவுக.
நீருள் துழாவி உணவு கொள்ளும்
அழகைக் காட்சியாக்கும
இயற்கையின் பெரும் பெற்றி.

எட்டிக் கால் வைத்துத் 
தாவித் தாவி
நடக்கும் நடை அழகா?
உணவுக்குக் குனிந்து கொறிக்க
வளையும் கழுத்து அழகா?
இறகை உதறிச் சிறகை விரித்து
வண்ணக் கலவையாய்ப் ஒருசேரப்
பறக்கும் பூநாரைகள் அழகா?

கண்கள் இமைக்கவில்லை.
எண்ணம் கலையவில்லை
நினைவு மயங்கி நின்றேன்.
உள்ளம் ஒடுங்கி நின்றேன்.

கச்சாய்க் கடலின் கரையெங்கும் நாரைகள்.
சார்ந்த செந்நெல் வயலெங்கும் நாரைகள். 
தென்துருவக் கரையோர நாடுகளான
தென் ஆரிபிக்கா தென்அமெரிக்கா நாடுகளில் 
இக்காலம் உறைபனிக் குளிர்க் காலம்
பூமிப் பந்தின் நடுக்கோட்டை நோக்கித்
வெப்ப வலையத்தை நோக்கி,வலசையாகத்
தென்கண்ட நாரைகள் பெயரும் காலம்.

அவைதான் இவையோ?
Flamingo Common name
Phoenicopterus Generic name

சத்திமுற்றப் புலவரின் பாடல்
தனிப்பாடல் திரட்டில் வரும்
செங்கால் நாரைகளோ பூநாரைகள்?

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்..."


--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
mplu-nature7483.gif
mplu-nature7484.gif
mplu-nature7485.gif

N. Ganesan

unread,
Jun 1, 2016, 11:37:57 PM6/1/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, Theodore Baskaran
அன்பார்ந்த சச்சிதானந்தம் ஐயா,

இந்தப் பறவைகள் Painted Stork எனப்படுபவை. இவை வலசை போகாத பறவைகள்.
Mycteria leucocephala - பறவையியற்பெயர்.
இங்கே பாருங்கள்:

----------------------

செங்கால் நாராய் என சத்திமுற்றப் புலவர் பாடுபவை White Stork 
இவை குமரியில் இருந்து இமயத்திற்கு வலசை செல்பவை.
இப்பாடல் பற்றி நிறைய திரு. தியடோர் பாஸ்கரனிடம் பேசியுள்ளேன்.

அ. மாதவையா மகன், இயற்கையாளர் மா. கிருஷ்ணன் செங்கால் நாரை
இதுவென விரிவாக எழுதியுள்ளார். திரு. தி. பாஸ்கரன் மூலமாக, மா. கிருஷ்ணனின் 
https://en.wikipedia.org/wiki/Madhaviah_Krishnan மொழிபெயர்ப்பை ஒருமுறை தேடிப் பிடித்தேன். 
அச்சாகாத பாடல் அது. மின்தமிழ் குழுமத்தில் குறிப்பு எழுதினேன். 

செங்கால் நாரை வலசை போகும் நாடுகள்:
தென்னிந்தியாவில் செங்கால் நாரைகள் (வலசை செல்பவை) வருமிடங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன.

நா. கணேசன்

Singanenjam Sambandam

unread,
Jun 2, 2016, 3:39:31 AM6/2/16
to mint...@googlegroups.com
அருமையாக   உள்ளது .


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jun 2, 2016, 8:54:20 AM6/2/16
to வல்லமை, மின்தமிழ், housto...@googlegroups.com, panb...@googlegroups.com


On Wednesday, June 1, 2016 at 10:15:52 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
பூநாரைகள் கூட்டம் கூடு கட்டிக் குஞ்சு பொரித்து வாழ்தலை நேரில் கண்டு படம் பிடித்து அவை பற்றி எழுதிய எனது கட்டுரை இணைப்பிலே;


நனிநன்றி, கல்பட்டு நடராஜன் ஐயா. உங்கள் கட்டுரை படித்தேன். மா. கிருஷ்ணன் “White Stork" பற்றிய ‘நாராய் நாராய் செங்கால் நாராய்” பாடல் மொழியாக்கத்தை (ஆங்கிலம்) அனுப்புகிறேன்.
அரிய ஆவணம் அஃது.

காந்தளகம் சச்சிதானந்தம் பார்த்தது ஃப்லெமிங்கோ பறவை அன்று. அது Painted Stork தான்.


~NG

கல்பட்டார் கட்டுரை: பூ நாரை,  On Painted Storks.



இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (17) பூ நாரை
 

நாரை இனத்திலே பூ நாரை என ஒன்று.  இதை சங்குவலை நாரை, வர்ண நாரை என்றும் அழைப்பார்கள்.  விஞ்ஞான
ரீதியாக இதற்களிக்கப் பட்டு உள்ள பெயர் ‘Ibis leucocephalus’ என்பதாகும்ஆங்கிலத்தில் இதனை ‘Painted stork’ என்பர். 
பூ நாரையின் பெயர்கள் எல்லாமே காரணப் பெயர்கள் தான்.  மஞ்சள் நிற அலகுகள், மெழுகினால் செய்தது போன்ற ஆரஞ்சு நிறத் தலை, இறக்கை களில் மயில் கழுத்தென மின்னும் கருப்புக் கோடுகள், பாலெனத் தோன்றும் வெள்ளை உடல், மார்பிலே ஒரு கருப்புப் பட்டை, இறக்கைகளின் நுனி சிறகுகளிலும், வால் சிறகுகளின் மேல் புறத்திலும் மிக சன்னமாக ஒரு ரோஜாவின் வண்ணம், சாம்பல் பூத்த ரோஜா நிறக் கால்கள் என ஒரு ஓவியன் துரிகை கொண்டு வர்ணம் தீட்டி இருப்பது போல இருப்பதால் தான் இந்தக் காரணப் பெயர்கள்.
            


பூ நாரை வெளி நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வலசை வரும் பறவை அல்ல.  உள் நாட்டிலேயே வாழும் பறவை தான்.  இவை செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான நாட்களில் இனப் பெருக்கம் செய்யும்.  இனப் பெருக்கம் செய்யும் இடங்களில் மற்ற நாட்களில் காணப் படுவதில்லை என்பதால் பலர் இதனையும் வலசை வரும் பறவைகளின் பட்டியலில் சேர்த்து விடுகின்றனர்.

பூ நாரைகள் சாலையோர மரங்களிலோ, கிராம வீடுகள் நடுவே உள்ள புளிய மரம் போன்ற மரங்களிலோ கூட்டமாக பல ஜோடி பறவைகள் கூடுகள் கட்டி, முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து வாழும்.  ஆனால் சாதாரணமாக மக்கள் இவற்றைத் துன்புறுத்துவது இல்லை.  காரணம் தெரிய வேண்டுமா?

முன்னாள் முதல்வர் ப்ரகாசம் அவர்கள் ஊரான ஆந்திர மாநிலம் டங்குடூரு அருகில் உள்ள ஜருகுமல்லி என்ற கிராமத்தின் தலைவருடன் 1976ல் தெலுங்கில் நடந்த ஒரு சம்பாஷணையின் தமிழாக்கத்தைப் படியுங்கள்.

ஏன் சார், நாம பேசறது கூடக் காதுலே விழாதபடி இப்படி கா...கா... ன்னு கூச்சல் போட்டுகிட்டு இருக்குதுங்களே இந்தப் பறவைங்க. ஒங்களுக்கெல்லாம் தொந்திரவா இல்லயா?  ஊர் ஜனங்க இதுங்களெ வெரட்டறது இல்லயா?”

தொந்திரவு என்ன சார் தொந்திரவு?  இந்தப் பறவைங்க எங்க ஊருக்கு வந்திச்சுன்னா இந்த வருஷம் மழை நல்ல பேஞ்சு ஏரி குளமெல்லாம் நெறெஞ்சு வெளெச்சல் அமோகமா வரும்னு தெரிஞ்சுடும்.  அதுங்களெ நாங்க ஏன் சார் வெரட்டணும்?”

சரி சத்தத்தெ உடுங்க.  தரையெல்லாம் வெள்ளை அடிச்சாப்ளெ பறவை எச்சமும் மீன் துண்டுங்களுமா கெடக்குது.  நாத்தம் வயத்தெக் கொமட்டி வாந்தியெடுக்க வருது.  இது கஷ்டமா இல்லியா ஒங்களுக்கு?”  (இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே என்மேல் ஒரு பறவையின் எச்சம் விழுகிறது)

சார் இந்தப் பறவைங்க வயல்கள்லெ மேஞ்சுகிட்டு இருக்கும் போது போடுற எச்சமும், இங்கெ தரெலெ கெடெக்கற எச்சமும் அறெகொறெயாக் கடிச்ச மீன் துண்டுங்களும் நல்ல ஒரமாகுது.  இது மட்டுமா.  அப்பொப்போ ஊர் சனங்களுக்கு கருவாடும் கெடைக்குது.  எப்படிங்கிறீங்களா?  பறவைங்க குஞ்சுங்களுக்கு மீனெக் கொண்டு வந்து கொட்டும்போது கொஞ்சம் கீளேயும் விளும்.  ஊர் செனம் ஏன் சார் இதுங்களெ வெரெட்டுவாங்க?”

இப்போது புரிகிறதா பூ நாரைகள் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் எப்படி கூடுகள் கட்டி குடும்பம் நடத்த முடிகிறது என்று?


(ஜருகுமல்லியில் பூநாரையும் அதன் பூப்பந்து போன்ற குஞ்சுகளும்)

பூ நாரைகளின் கூடு குச்சிகளால் ஆன சுமார் 2  3 அடி விட்டமுள்ள ஒரு வட்ட வடிவமான மேடை போன்றது.  நடுப் பாகம் சற்றே பள்ளமாக இருக்கும்.  பள்ளத்தில் இலைகள் மற்றும் காய்ந்த புல், வைக்கோல் இவை இருக்கும். 

ஒவ்வொரு முறை பெரிய பறவைகள் வந்திறங்கும் போதும், குஞ்சுகள் நகரும் போதும் சில குச்சிகள் கீழே விழுந்து விடும்.  ஆகவே அவற்றுக்குப் பதிலாக வேறு குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டினை சரி செய்ய வேண்டி வரும்.  இந்த ரிபேர் வேலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காட்சி.  எப்படி என்கிறீர்களா?

கூட்டில்குஞ்சுகள் இருக்கும் போது எப்போதும் ஒரு பறவை காவல் காத்துக் கொண்டு இருக்கும் தனது இறக்கைகளை சற்றே விரித்து குடைபோல நிழல் கொடுத்துக் கொண்டு.

(நிழற்கொடை)

வெளியே சென்று இரையுடன் திரும்பும் பறவை தன் அலகிலே ஒரு குச்சியையும் கொண்டு வரும்.

(கூடு ரிபேருக்குக் குச்சி வருது) 

குச்சி கொண்டு வந்த ப்றவை தானே ரிபேர் வேலையைத் தொடங்காது.  பதிலாக உட்கார்ந்திருக்கும் பறவையிடம் கொடுக்கும் ஏதோ அரச சபையிலோ அல்லது ஜனாதிபதி வீட்டிலோ ட்யூடீ மாறும் காவலர்கள் போல.  அதுவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த பறவை கூட்டினை சரி செய்யும்.  பின்னர் இருவருமாக பாசத்துடன் அலகுளால் ஒன்றை ஒன்று மாறி மாறி தட்டிக்கொள்ளும் முத்தமிடுவது மாதிரி.  குஞ்சுகள் பசியில் வாயைப் பிளந்து கவான் கவான் என்று கத்திக் கொண்டு இருக்கும்.  ஆனால் சடங்குகள் பூர்த்தியாக முடியாமல் அவை கவனிக்கப் படமாட்டா.

குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதும் ஒரு காணவேண்டிய காட்சி.  இரை கொண்டு வரும் பறவை ஒரே ஒரு மீனைக் கொண்டு வராது.  தொண்டை, கழுத்து மற்றும் வாய் பூராவும் மீன்கள் தான்.  அவற்றினை ஒவ்வொன்றாகக் கக்கி குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.  அப்போது சில மீன்கள் கூட்டிற்குள்ளேயும் சில கீழேயும் விழும்.  அப்படி நடக்கும்போது குஞ்சுகள் இரைக்காகக் கெஞ்சினாலும் மேலும் மீனை வயிற்றிலிருந்து வெளியே கொண்டு வராமல்அதோ பார் அங்கே ஒன்று”, என்பது போல கூட்டில் கிடக்கும் மீனைக் காட்டும்.  குஞ்சுகள் தானாக அதைப் பொறுக்கித் தின்ன வில்லை என்றால் பெரிய பறவை அந்த மீனைத் தானே எடுத்துக் குஞ்சுக்குக் கொடுக்கும்.  

(இங்கெ கெடெக்குது பாருங்க ரெண்டு மீனு)

ஐந்தறிவே படைத்தது என்று நாம் எண்ணும் பறவைகளுக்கும்தான் எத்தனை அறிவு!

தமிழ் நாட்டில் பூ நாரையை திருநெல்வேலி ஜில்லாவின் மூன்றடைப்பு என்ற இடத்திலும்,தஞ்சை ஜில்லாவின் கோடியக்கரையிலும் காணலாம்.

இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனைக் காண்பீர்கள்.

                                            நடராஜன் கல்பட்டு

                                           (கருப்பு   வெள்ளை படங்கள் எடுத்தது நடராஜன் கல்பட்டு)    
 

2016-06-02 9:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


N. Ganesan

unread,
Jun 2, 2016, 9:34:37 AM6/2/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com

On Wednesday, June 1, 2016 at 10:15:52 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
பூநாரைகள் கூட்டம் கூடு கட்டிக் குஞ்சு பொரித்து வாழ்தலை நேரில் கண்டு படம் பிடித்து அவை பற்றி எழுதிய எனது கட்டுரை இணைப்பிலே;


நனிநன்றி, கல்பட்டு நடராஜன் ஐயா. உங்கள் கட்டுரை படித்தேன். http://kalpattaarpakkangkal.blogspot.com/2013/02/17.html
 
மா. கிருஷ்ணன் “White Stork" பற்றிய ‘நாராய் நாராய் செங்கால் நாராய்” பாடல் மொழியாக்கத்தை (ஆங்கிலம்) அனுப்புகிறேன்.
அரிய ஆவணம் அஃது.

காந்தளகம் சச்சிதானந்தம் பார்த்தது ஃப்லெமிங்கோ பறவை அன்று. அது Painted Stork தான்.


Painted Stork பூநாரை எனக் கொண்டால், Flamingo பறவைகளை வேறுபடுத்டி அழைக்கலாம்.
Flamingo பறவைகளை செந்நாரை, நெருப்புநாரை, தீநாரை என்றும் அழைக்கலாம். 

மராளம் - சிவப்பு நிறம் கொண்ட தாரா, அன்னம் (goose), செந்நாரை (flamingo) என
சம்ஸ்கிருதம், தமிழில் ஒரு பெயர் உண்டு. நிகண்டுகளில் தரப்படும் சொல் மராளம்.

இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது Lesser Flamingo:



 II. Greater Flamingo

The Journey: From Flamingo City to Rann Of Kutch’s Anda Bet Island.

While the Flamingos of Sewri might be renowned all over Bombay, they’re actually Lesser Flamingos, found in India and migrate within the country itself. Flocks of Greater Flamingos, however, start descending into Flamingo City to an island called Anda Bet, in the Greater Rann of Kutch which is the largest nesting site of the species in the country. In 2011, around 10 lakh flamingos were recorded in the island. They settle down in the month of October only .

Flamingos are fussy, and breed in ideal conditions only. The level of water and availability of food are all take into account before the swarm of pink decides to settle down. However, since their last migration in 2011, the flamingos have disappeared and have not made any more arrivals. Although they are known to breed once every three years, their sudden disappearance is a cause of concern, experts believe. Another cause of worry in the Rann of Kutch salt marsh is that greater flamingos are occasionally electrocuted when they sit on 1000-watt electric cables near their breeding areas – only recently, 139 such deaths were recorded. Fingers are crossed as we hope that the majestic swarm of pink makes an appearance this year.

Greater Flamingo, Image source - clementfrancis.com

Greater Flamingo, Image source – clementfrancis.com



கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் பெரிய செந்நாரை:
Greater Flamingo (Phoenicopterus ruber)
 
~NG

N. Ganesan

unread,
Jun 2, 2016, 9:36:53 AM6/2/16
to வல்லமை, mint...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
 கல்பட்டு நடராஜன் ஐயா. உங்கள் கட்டுரை படித்தேன். http://kalpattaarpakkangkal.blogspot.com/2013/02/17.html
 

The Hindu ந்யூஸ்பேப்பரில் Painted Stork-ஐ Greater Flamingo என்று பிழைபடக் காட்டும் பக்கம்:

நா. கணேசன்

Maravanpulavu K. Sachithananthan

unread,
Jun 2, 2016, 7:05:42 PM6/2/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
திருத்திய என் பதிவு

வைகாசி 18, 2047 (31.05.2016) 
செவ்வாய் மாலை 1730 மணி. 
சாவகச்சேரியில் இருந்து தெற்காகத் 
தனங்களப்பு நோக்கும் சாலை. 
கிழக்கே சாலையைத் தழுவிக் 
கரைமோதும் உவர்க் கடல். 
யாழ்ப்பாணக் கடனீரேரியின் 
உள்நீட்டமான கச்சாய்க் கடல்.

நெடிய கால்கள். 
மென்சிவப்புக் கால்கள், 
செங்கால்கள். 
தவம் செயும் தவத்தோர் ஒரு காலில் நிற்பர். 

மஞ்சள் மூக்கு நாரைகள் 

பறக்கும் மஞ்சள் மூக்கு நாரைகள் அழகா?

கண்கள் இமைக்கவில்லை.
எண்ணம் கலையவில்லை
நினைவு மயங்கி நின்றேன்.
உள்ளம் ஒடுங்கி நின்றேன்.

கச்சாய்க் கடலின் கரையெங்கும் 

மஞ்சள் மூக்கு நாரைகள்


சார்ந்த செந்நெல் வயலெங்கும் 

மஞ்சள் மூக்கு நாரைகள்
Painted Stork
Mycteria leucocephala

நேற்றைய பதிவில் பூநாரைகள் / செங்கால் நாரைகள் எனத் தவறாக எழுதினேன். உடனே அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஆய்வாளர், என் அருமை நண்பர் பொள்ளாச்சி பேரா. முனைவர் நா. கணேசன் அவர்கள் மின்தமிழ்க் குழுமத்தில் பின்வரும் குறிப்பை எழுதினார்.

அன்பார்ந்த சச்சிதானந்தம் ஐயா,
இந்தப் பறவைகள் Painted Stork எனப்படுபவை. இவை வலசை போகாத பறவைகள். https://en.wikipedia.org/wiki/Painted_stork
Mycteria leucocephala - பறவையியற்பெயர்.

இங்கே பாருங்கள்: https://www.google.com/search…
செங்கால் நாராய் என சத்திமுற்றப் புலவர் பாடுபவை White Stork இவை குமரியில் இருந்து இமயத்திற்கு வலசை செல்பவை.


இப்பாடல் பற்றி நிறைய திரு. தியடோர் பாஸ்கரனிடம் பேசியுள்ளேன். https://en.wikipedia.org/wiki/White_stork

அ. மாதவையா மகன், இயற்கையாளர் மா. கிருஷ்ணன் செங்கால் நாரை இதுவென விரிவாக எழுதியுள்ளார். திரு. தி. பாஸ்கரன் மூலமாக, மா. கிருஷ்ணனின் 


https://en.wikipedia.org/wiki/Madhaviah_Krishnan மொழிபெயர்ப்பை ஒருமுறை தேடிப் பிடித்தேன். 

அச்சாகாத பாடல் அது. மின்தமிழ் குழுமத்தில் குறிப்பு எழுதினேன். செங்கால் நாரை வலசை போகும் நாடுகள்:
https://en.wikipedia.org/wiki/White_stork… தென்னிந்தியாவில் செங்கால் நாரைகள் (வலசை செல்பவை) வருமிடங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன.
நா. கணேசன்

வடமாகாணச் சுற்றுச் சூழல் அமைச்சர் என் கெழுதகை நண்பர், திரு. ஐங்கரநேசன் முகநூலில் என்னைத் திருத்தினார். 
Ayngaranesan Ponnudurai 
Dear Sir, This is not a Flamingo [poonaarai]- This is known as Painted stork = manchal mookku naarai. Flamingo = Poonaarai

அன்னாருக்கும் கணேசனாருக்கும் நன்றி.

தொலைவில் இருந்து பார்த்தேன். கைப்பேசியில் படமாக்கினேன். சாயம், ஓவியம், தூரிகை என Painted Stork ஆக என் குறிப்பிலும் எழுதினாலும் நினைவு மயக்கத்தில் பூநாரை எனத் தவறாக எழுதினேன். பொறுத்தருள்க.

mplu-nature7483.gif

N. Ganesan

unread,
Jun 2, 2016, 9:16:31 PM6/2/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, Maravanpulavu K. Sachithananthan
>தொலைவில் இருந்து பார்த்தேன். கைப்பேசியில் படமாக்கினேன். சாயம், ஓவியம், தூரிகை என Painted Stork ஆக என் குறிப்பிலும் எழுதினாலும் நினைவு மயக்கத்தில் பூநாரை 
>எனத் தவறாக எழுதினேன். பொறுத்தருள்க.

கோவை (கீரனத்தம் = கீரன் நத்தம்) தமிழ்ப் பேரா. க. ரத்தினம் அவர்களின் தமிழில் பறவைப்பெயர்கள் நூல் பார்த்தேன்.
Painted Stork = சங்க நாரை, சங்குவளை நாரை, மஞ்சள் மூக்கு நாரை
White Stork = செங்கால் நாரை (மா. கிருஷ்ணன், ....)
Graylag goose = செங்கால் அன்னம் (பல இலக்கியங்களில். உ-ம்: தேவாரம்)
Bar-headed goose = அன்னம் (சங்க இலக்கியத்தில் இருந்து ...)
ஸ்வான் = விலங்குக் காட்சியகங்கள் பிரீட்டீஷார் ஆரம்பித்த காலத்தில் கொண்டுவந்தனர். அதற்குமுன் நாம் அறியாத பறவை/

Flamingo = பூநாரை, கோணமூக்குநாரை, கிளிமூக்குநாரை.

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 2, 2016, 10:00:49 PM6/2/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, tami...@gmail.com, Dr. Krishnaswamy Nachimuthu, Francis Muthu
நீங்கள் பார்த்த ’பெய்ண்ட்டட் ஸ்டார்க்’ பறவை சங்க இலக்கியத்தில் “செவ்வரி நாரை” என அழைக்கப்படுகிறது. 
நன்றி: கீரனத்தம் க. இரத்தினம், தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு).

புறநானூறு:

1. மருங்கின பணைத்தாள் யானையும்
கொடுநுடங்கு மிசைய தேரு மாவும்
படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
கடல்கண் டன்ன கண்ணகன் றானை
5. வென்றெறி முரசின் வேந்த ரென்றும்
வண்கை யெயினன் வாகை யன்ன
இவணலந் தாரா தமைகுவ ரல்லர்
என்னா வதுகொறானே தெண்ணீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
10.தேங்கொண் மருதிண் பூஞ்சினை முனையிற்
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே.

     திணையும் துறையு மவை: மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

பழனியும் பறவைகளும்..

"புள்ளி மூக்கு வாத்து வாழும் தேசங்களில் காணப்படும் மற்றுமொரு பறவை செவ்வரி நாரை. இதன் எண்ணிக்கையும் தற்போது குறைந்து வருகிறது. நீர் நிலைகளின் மாசுபாட்டால் இதனுடைய சூழல் சிதைக்கப்படுகிறது. கொங்கூர் குளத்தில்  ஆங்காங்கே இருக்கும் பட்டுப் போன நீர் கருவை  மரங்களில் நின்று கொண்டிருக்கும் செவ்வரி நாரைகள் (Painted Stork). முன்பிருந்த அளவை காட்டிலும் தற்போது இந்த நீர் கருவை மரங்கள் இங்கே குறைந்துள்ள போதிலும், குளத்தின் நடுவில் இருக்கும் இந்த மரங்கள் பறவைகள் வந்தமர வசதியாக இருக்கின்றன. நம் மக்களிடேயே தற்போது கருவேல் மரங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்ப்பட்டு வருகிறது. ஆனால்  கருவேல மரத்துக்கும் நீர் கருவை மரதுக்குமான வேறுபாடு தெரிவதில்லை. சீமை கருவேலம் என்பது அயல் தாவரம். நம் நிலத்தடி நீரை உறிஞ்சி நம் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. ஆனால் நீர் கருவை மரங்கள் இந்திய மரங்கள். சீமை கருவேல மரங்களை போல எல்லா இடங்களிலும் பரவுவதில்லை."

Krishnan S

unread,
Jun 2, 2016, 11:36:59 PM6/2/16
to Singanenjam Sambandam
ல்லதோர் சுவையான பதிவு.
வாழ்த்துக்கள்
நலம் சிறக்க
அன்பொடு
கிருஷ்ணன்
சிங்கை


🍀அன்பொடு,

கிருஷ்ணன்,

சிங்கை

Inline images 2 தமிழ் எமது மொழி
      இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

Reply all
Reply to author
Forward
0 new messages