மருவுதல் (மருமம்/வருமன், மம்மம்:அம்மம்)

711 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 8, 2016, 1:54:51 PM1/8/16
to சந்தவசந்தம், vallamai, mintamil, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
திருவாசகத்தின் சிறப்புப் பாயிரமாக ஒரு வெண்பா போற்றப்படுகிறது.

                 தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி

                 அல்லலறுத்(துஆனந்தம் ஆக்கியதே எல்லை

                 மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன்

                 திருவா சகமென்னும் தேன்.


இவ்வெண்பாவில் வரும் மருவா, தேன் என்னும் சொற்களை

மாணிக்கவாசகரே ஒரு வெண்பாவில் பயன்படுத்தியுள்ளார்:


வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.


மருவுதல் என்னும் தமிழ்/த்ராவிட வினைச்சொல் ஏராளமான சொற்களைத் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் தந்திருக்கிறது. மருவு- = தழுவுதல், புணர்தல், பிணைத்தல், பொருந்துதல், கிட்டுதல், பதித்துவைத்தல் என்று ஒன்றுக்கொன்று நெருங்கிய பொருள்களில் இலக்கியங்களில் பரக்கக் காண்கிறோம்.

மாணிக்கவாசகர் ஆமாத்திய அந்தணர் [1]. அவர்களது முக்கியமான தொழில் மருத்துவம் என்னும் பண்டுவம் பார்த்தல். மருந்தைத் தேனில் குழைத்து அளிப்பவர்கள் மருத்துவர்கள். அதுபோல, பிறவிப்பிணிக்கு மருத்துவராக திருவாசகம் என்னும் தேனில் குழைத்து சைவசித்தாந்த மருந்தை ஊட்டியவர் மாணிக்கவாசகர் என்றாலும் திருவாசக பாயிரத்துக்குப் பொருந்தும். துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் மாணிக்கவாசகர் தேனில் குழைத்துத் தரும் பிறவிமருந்து எப்படிப்பட்டது எனப் புகழ்கிறார்:

நேரிசையாசிரியப்பா
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரண னுரையெனு மாரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூ ரண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின்
வேத மோதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங் கொருகா லோதிற்
கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுந ரன்றி
மன்பதை யுலகின் மற்றைய ரிலரே.


தேனில் குழைத்துத் தருதலாலும், உடலுடன் மருவி (பொருந்தி) நோய் நீக்குதலாலும் மருந்து என மருத்துவன் தரும் பண்டுவ (ட்ரீட்மெண்ட்) பொருளை அழைக்கலாயினர் தமிழர்கள். வழிவழியாக மருவி இருப்பது மரபு என்றும், அகக்காழொடு மண்ணை மருவி இருப்பது மரம் என்றும் மருவு- என்னும் வினைச்சொல்லில் பிறக்கும் பெயர்கள். சிறிய அளவில், புன்மை, மண்ணை புல்லும்/மருவும் ஸ்தாவரங்கள் புல் என்று பெயர்பெற்றன. புறக்காழொடு இருப்பன புல், அகக்காழொடு இருப்பன மரம். புல், மரம் இரண்டுக்கும் புல்லுதல்/மருவுதல் என்பது தாது. புல், மரம் இரண்டும் வளர வானில் இருந்து நிலத்தை மருவும் மாரி வேண்டும்.


மருவுதல் வினையில் இருந்து மருமம் = மார்பு (மார்வம், மார்). இதுவே, மர்மம் என்று நெஞ்சுக்கும், மர்மஸ்தானங்களுக்கும் பெயரானது.

மர்மன் - சமுதாயத்திற்கு மார்புக் கேடயம் போன்றவன் என்ற பொருளில் வர்மன் என்று க்ஷத்ரியர்களுக்குப் பெயர் வடமொழியில் உண்டானது.

தேசியகவி பாரதியார் மறைந்தபோது சரமகவி பாடிய ஒரே கவிஞர் சேலம் அர்த்தநாரீச வருமரே. மர்மக்கலை நாகர்கோவிலில் வருமக்கலை ஆகிறதும் நோக்கலாம். நெருநல் நென்னல் என்றாதற்போல, மருமம் = முலை, தாய்ப்பால். மாரில் சுரக்கும் பால் மருமம் மம்மம் என்றாகிறது.

பேச்சு வழக்கில் மம்மம் ஊட்டுதல் என்கிறோம். தயிர்ச் சோறு ஊட்டல் தை மம்மம் (அ) தச்சு மம்மம் எனவும், பருப்பஞ்சோறு

பப்பு மம்மம் என்றும் தாய்மார்கள் ஊட்டுகின்றனர். -மார் என்னும் விகுதி, - உ-ம்: கொங்குநாட்டின் காவியம் அண்ணன்மார்கதை -பொருந்துதல் கருத்துடையதுதான். நங்கைமார், தம்பிமார், ஆசிரியன்மார், அண்ணன்மார், ... இதில் எல்லாம் கூட்டாகப் பொருந்தியுள்ள தொகுதியினர் என்ற பொருள் மருவு என்பதில் இருந்து வருகிறது.


அன்றாடல் லக்ஷக்கணக்கான குழைந்தையருக்கு சொல்லி ஊட்டும் பப்பு மம்மம், தச்சு மம்மம் என்பது மருமம்/மம்மம் என்னும் தாய்ப்பால் உணவில் இருந்து குழந்தையுணவாக வளர்ச்சிபெற்ற சொல். ஏராளமான சொற்களில் சொன்முதல் ம் இழப்பதைக் காண்கிறோம்: உ-ம்: மலர்:அலர். அதேபோல, 

மருமம்/மம்மம் - மாரில் சுரக்கும் தாய்ப்பால் அம்மம் என்றாகிறது.


http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=85&Itemid=61

பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால்

வன்பா ரச்சக டம்இறச் சாடி வடக்கி லகம்புக் கிருந்து

மின்போல் நுண்ணிடை யால்ஒரு கன்னியை வேற்றுரு வம்செய்து வைத்த

அன்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.


அம்மம் தருதல் = முலை கொடுத்தல் (பழைய வியாக்கியான உரைகளில்).


அம்மம் < மம்மம்/மருமம் (chest, milk from chest. Cf. alar < malar etc.,)

சட்னி அரைக்கும் குழைவிக்கல் தட்டையான கல்லை மருவுகிறது.

எனவே, குழவிக் கல் மருவும் கல் = மர்மி/மம்மி. இதனை அம்மிக்கல் என்கிறோம்.

அம்மி < மம்மி/மர்மி (மருவுதல் என்னும் வினைச்சொல்லால்). அலர் < மலர் போலென்க,


இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் 
நம்மை உடையவன் நாராயணன் நம்பி 
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி 
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்   - ஆண்டாள்


வலம்கொடு தீயை வணங்கினர். வந்து.
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி.
இலங்கு ஒளி அம்மி மிதித்து. எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். - கம்பர்


    அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
    கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
    மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
    வெறுமைக்கு வித்தாய் விடும். - ஔவை


     கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
     சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய
     யானைக்கு நீத்தும் முயற்கு நிலையென்ப
     கானக நாடன் சுனை’

                              - ஓரடிக்குள் சொல்மாறு பழம்பாட்டு


நா. கணேசன்


[1] திருவாசகம் அளித்த மாணிக்கவாசக சுவாமிகள் ஆமாத்திய அந்தணர் மரபினர். ஆமாத்தியர் என்னும் வடசொல் அமைச்சர் என்று தமிழாக்கம் செய்கிறார்கள் திருவள்ளுவர் போன்றோர். படைப்பயிற்சி, போரில் நிகழும் காயங்களுக்கு வைத்தியம் - இப்போது ஸ்போர்ட்ஸ் மெடிசின் (கன்கஷன் படம் பார்த்தால் அமெரிக்கன் ஃபுட்பால் பின்விளைவு புலனாகும்), war zone medicine - செய்தவர்கள் மங்கலர்கள். மங்களாதிராசன் என்று மங்கலர்கள் பல கல்வெட்டுக்களில் அழைக்கப்படுகின்றனர். மருத்துவர் சமூகம் என்று அழைக்கப்படும் இவ் அந்தணர்களின் சமயப் பணிகளை இன்றும் கிராமப்புறங்களில் காணலாம்.


பாண்டிநாட்டுப் பொதிகைமலையின் தட்சிணாமூர்த்தி, சோழநாட்டுச் சிதம்பரத்து நடராஜர் வழிபாடுகளை ஒருங்கிணைத்து ஆகமவழி நிற்கும் சைவசித்தாந்தம் உருவாக்கியதில் மாணிக்கவாசகர் பங்கு பெரிது. வடக்கே இருந்து வந்த கோகழிச் சைவ ஆகமங்கள் மரபையும், தமிழ்ப் பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைத்தவர் மாணிக்கவாசகரே. எல்லாக் கோவில்களிலும் நடராஜர் அருகே மாணிக்கவாசகர் இருப்பார். மார்கழி உற்சவத்தில் திருவெம்பாவை நடராஜருக்குப் பாடப்பெறும். மாணிக்கவாசகர் குலம் ஆமாத்திய அந்தணர் குலம். அமாத்திய அந்தணர் என்னும் மங்கல அந்தணர்கள் வரலாற்றை விரிவாக ’மாணிக்கவாசகர் மகாசபை’ மாநிலத் தலைவர் நந்தன் என்கிற நாமக்கல் தங்கம் விசுவநாதன் “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாற்று” நூலில் எழுதியுள்ளார். நாமக்கல் நந்தன் கேட்டுக்கொண்டதன் பேரில் எஸ். இராமச்சந்திரன் தலைமையில் கல்வெட்டாய்வாளர்கள் சென்று கல்வெட்டுக்களை ஆராய்ந்து ஆவுடையார்கோயிலின் 13-ஆம் ஆண்டுத் தோற்றத்தை விளக்கியுள்ளனர். ”மாணிக்கவாசகர் கட்டியதல்ல அக்கோவில்” என்றும் தெளிவுபடுத்தியுளர் (தினமலர், மார்ச் 1, 2014).  இசுலாமியரும் வந்து தொழும் குதிரை ராவுத்தர் மண்டபத்தில் தூண்களுக்கு மேலே பாவுகற்கள் பாவி உள்ளனர். இதன் காலம் கி.பி. 1581. பத்திரிகைகளில் வெளிவராத ஆவுடையார்கோவில் பிற்காலக் கல்வெட்டுக்கள் படிப்போமா? கல்வெட்டறிஞர் வை. சுந்தரேசவாண்டையார் 50+ ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கல்வெட்டுப் பாடல் இதுதான்:

     கட்டளைக் கலித்துறை

திதிக்கும் சகாத்தமிங் கொன்றரை ஆயிரம் செல்லுறுநான்கு
உதிக்கும் பிலவத்தில் பங்குனி மாதத்தில் ஒன்பதிற்குப்
பதிக்கும் கனக சபைமண்ட பந்தனிற் பாக்கலெலாம்
மதிக்கும் படிமுகித் தானெங்கள் மாணிக்க வாசகனே!

மாணிக்கவாசகர் அருளால் 16-ஆம் நூற்றாண்டில் இம்மண்டபம் எழுந்தது என்பது பொருள். ’கண்காண வேமுகித் தாள்யோக நாயகக் காரிகையே’ என அம்பிகையும்,

பலஞ்சேரும் நாளில் கனக சபைதனில் பாக்கலெலாம்
நலஞ்சேர வேமுகித் தானெங்கள் ஆளுடை நாயகனே’
என ஆளுடையார் ஆத்மநாதரும்,
                                                                                   பாக்கலெலாம்
வேடிக்கை யாகச்செய் தானெங்கள் கோபுர வேலவனே’

ஆக, மணிமொழியார், வேலன் போன்றோர் செய்த தெய்வ அருளால் பாக்கல் பாவிய செய்தி கவித்துவமான செய்யுள்களாகச் சொல்லப்பட்டுள்ளது. கி. வா ஜகந்நாதன் அவர்களும் ‘வாருங்கள் பார்க்கலாம்’ என்னும் நூலில் இந்தப் 16, 17-ஆம் நூற்றாண்டுப் பாடல்கள் ’மாணிக்கவாசகர் கட்டியது ஆவுடையார்கோவில்’ என்பதன் சான்றாகா என விளக்கி எழுதியுள்ளார். 9-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் மறைந்தபின் 13, 14-ஆம் நூற்றாண்டில் திருவிளையாடல் புராணக்கதைகள் கட்டப்பெற்றுச் சிதம்பரத்தையும், பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைக்கும் வகையில் இந்த இரு கோவில்கள் இவ்வூரிலே ஏற்பட்டுள்ளன. பழைய திருவிளையாடற் புராணம் (கி.பி. 1200) பின்னர் கல்லாக உருப்பெற்றது ஆவுடையார்கோவிலிலே! இப்போது 200 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை முழுதும் தனிநூலாக வெளிவர வேண்டும். எங்குமே இல்லாத வகையில் தென்னன் (தக்ஷிணாமூர்த்தி) கோவிலாக தெற்குப் பார்த்தவகையில் ஆவுடையார்கோவில் மூலஸ்தானம் டிஸைன் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சம். தென் (பொதியில் தென்னன்), வட (காளாமுக சைவம், ஆனந்தநடராஜர் தோற்றத்தில் அவர்கள் பங்கு) நாடுகளின் சைவங்களை எல்லாம் தொகுத்து, synthesize செய்த திருவாதவூர் அடிகள் பேரில்  அவர் மறைந்து ஓரிரு நூற்றாண்டுகள் சென்றபின்னர் புராணக்கதைகள் திருவிளையாடல் புராணமாகக் கட்டப்பட்டு, அவருக்காகப் பாண்டிநாட்டில் ஏற்பட்ட நினைவுச்சின்னக் கோவில் ஆவுடையார்கோவில். ஆனால், அவர் குருந்த மரநிழலில் குருமூர்த்தியைத் தரிசித்ததாய் வரலாறும், இலக்கியங்களும், மரபும் காட்டும் திருப்பெருந்துறை சோழநாட்டில் இருக்கிறது. சோழநாட்டின் ஒரு பகுதியான மிழலைநாடு அது என்று சங்க இலக்கியங்கள் விவரிக்கும் பிரதேசம். 

http://nganesan.blogspot.com/2014/02/manickavasakar-and-chola-seashore-town.html



வேந்தன் அரசு

unread,
Jan 8, 2016, 11:29:15 PM1/8/16
to vallamai, சந்தவசந்தம், mintamil, housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம்
மகர ஒலி என்றும் மருவாது.
அம்மம் மம்மம் ஆகலாமே ஒழிய மறுதலை இல்லை. அதுதான் ஓங்கார தத்துவமும். ஓ, ம் இரண்டும் மருவாது

8 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:10 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Jan 8, 2016, 11:58:51 PM1/8/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
mammary glands ...  mammals  ஆகியவடிற்கும் " மம்மம் " ஏதேனும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா?  

Origin
Old English, from Latin, ‘breast.’


..... தேமொழி 
Auto Generated Inline Image 1

N. Ganesan

unread,
Jan 9, 2016, 5:55:24 AM1/9/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
மகர ஒலி என்றும் மருவாது.

பொருள் என்ன?  

-----------

Word-inital m is lost in many words in Dravidian: malar > alar, mammam > ammam, muLi > uLi (carpentry tool), mAmaram > Amra (Hindi) muLLal > uLLal (tasty and thorny Hilsa fish), maNDai > aNDa 'egg', ...


முள்ளம்:உள்ளம் மீன் (Indian Salmon fish, Hilsa)

கல்பட்டு நடராசன் அவர்கள் அமெரிக்க சாமன் (Salmon) மீன்
பற்றி விரிவாக எழுதி தமிழில் அறிமுகப்படுத்தி உள்ளார்.
இது நன்னீரில் பிறந்து, கடலின் உப்புநீரில் வாழ்ந்து, நன்னீருக்கு
மீண்டும்வந்து முட்டையிடும் மீன்வகை. இந்தியாவிலும்,
கங்கை நதியில் இந்திய சால்மன் மீன்கள் உண்டு. வங்காளியர்
அதன் சுவைக்காக மிக விரும்பி உண்ணும் மீன் இது.
இந்தியா முழுதும் உள்ள த்ராவிட/தமிழ்ப் பெயர் இந்த ஸால்மன்
மீனுக்கு இருப்பதை இங்கே ஆராய்வோம்.

தமிழ்ச் சொற்களில் முதலாக உள்ள ம்-
தமிழில் பல சொற்களிலே ம்- முதலில் வரும், பின்னர்
அந்த ம் அழிபட்டுச் சொற்கள் உருவாவது வழமை.
சில உதாரணங்கள்:
(1) மலர் > அலர்
(2) மாமரம் > ஆமர > ஆம்ர (வடமொழிகளில் தமிழ்ச்சொல்)
(3)  முழ்-/முட்டை/முண்ட > மண்டை > அண்ட ‘egg'; 
(இன்னும் வேதத்தில் அண்டம் என்ற சொல்வேர் தேடிக்கொண்டுளர்!)
(4) முன்னு-தல்  > உன்னு-தல்
(5) மோய்தல்:ஓய்தல்
(6) மோடு(முகடு) > ஓடு,  
(7) மிழ்-/மிண்டு/மிடுக்கு > மேழம் (மிழ்- மிஷ்- என வடசொல் ஆகிறது
மிஷதி - ஆட்டுக் கிடாக்கள் மிண்டுதல், சண்டையிடல்)
மேழகம் > ஏழகம் (சிலப்பதிகாரத்தில்).
(8) மூழ்கம் > ஊழ்கம் (= தியானம்)
(9) மடுத்தல் =  தீ மூட்டுதல் To kindle; 
கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு  > அடுப்பு
(10) முத்தி > உத்தி
...
இன்னும் பல. உங்களுக்கு தெரிந்த காட்டுகள் தரலாம்.

முள் என்ற சொல்லே ”உள்” என சொன்முதல் ம் இழந்து, பின்னர்
“உல்” என்றாகியது. முள்- “sharp edge". இது தச்சரின்
இழைப்புளி போன்றவற்றில் வரும் உளி (< முளி).
எனவே, முள் > உள்/உல் 
உல் ul , n. (J.) 1. Sharp stick or iron to peel coconuts; தேங்காயுரிக்குங் கருவி. 2. Impaling stake; கழு.
உல்லியம் [ ulliyam ] கிணறு.  முள் (> உள்/உல்) போன்ற கூர்நுனி கொண்ட ஆயுதங்களால் தோண்டும் கூவல். (கூ(ர்) ஆயுதங்களால் தோண்டுவது கூ+அம் = கூவல்/ம்).
உல்லியர் [ ulliyar ] கூவநூலோர். (water diviners)
உல்லுகம் [ ullukam ] கொள்ளி.
(நா. கதிரைவேற்பிள்ளை அகராதி)

முள்ளல்:உள்ளல் மீன் (Hilsa):

வங்காளிகள் முள்ளம்/உள்ளம் மீனை மச்சராஜா
என மீன்களின்மன்னன் எனக் கொண்டாடுகின்றனர்.
அதன் ஊன் மிகச் சுவையாக இருப்பதால், வசந்த 
நவராத்திரி என்று ஏப்ரல் மாதம் வரும் திருவிழாவில்
உள்ளம் என்னும் மீன்கள் இரண்டைப் படையலாக
சரசுவதிக்கு வைத்து வழிபட்டு எல்லா ஜாதியினரும்
 உண்கின்றனர். முட்கள் நிறைந்த மீன் உள்ளம்/உல்லம் ஆகும்.
முள்களில் இருந்து ஊனைப் பிரித்துண்ண நல்ல பயிற்சி வேண்டும்.
உள்ளம் என்ற பெயர் முள்ளம் என்ற ஆதிப்பெயரில் இருந்து பெற்றது 
என்பது வெள்ளிடைமலை. முள்கள் நிறைந்த முள்ளம் > உள்ளம்/உல்லம்
என்ற மீனைப் பற்றி மேலும் அறிய:



MTL:
உள்ளம் = 1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha; உல்லம். 2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli; உல்ல மீன்வகை.

உல்லம் ullam, n. cf. உள்ளல். [T. ullāku.] 1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha; மீன்வகை. உள்ளத்தை விற்று உல்லத்தைக் கொள். 2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli; கடல்மீன்வகை.

Obviously, this "uLLam" (hilsa fish) has nothing to do with "heart, mind". Sometimes, this fish is called uLLal as MTL records. 

“Deboning a hilsa is one of the most challenging tasks because in all other fish, there is only one central bone and other side bones. There is really nothing between the flesh. In a hilsa, there are bones in the flesh itself. It takes a lot of time to master the removal,” explains Rupam Banik, executive chef, The Peerless Inn.

"They are also caught in the sea, but some consider the marine stage of the fish as not so tasty. The fish has very sharp and tough bones, making it problematic to eat for some."

"The Hilsa is full of tiny bones which require trained eaters/hands to handle."

James Hornell, Fishing in many waters:
See how a fisherman in Kaveri floats and spreads a net to catch uLLal fish.
Hilsa is fund in Godavari, Kavaeri, Indus, Ganges, ... in Indian subcontinent.

Given all these, I suggest that, like many examples with m-, muLLam/uLLam (or) muLLal/uLLal is the name of hilsa fish in Tamil where m- is lost over time.

M. Winslow:
உல்லம், [ ullam, ] s. The sable fish, shad, ஓர்மீன். (c.) உள்ளத்தை விற்று உல்லத்தைக் கொள். Sell what you have and buy sable fish. [prov.]
உல்லங்கருவாடு, s. The salted sable fish.
கடலுல்லம், s. A kind of sable fish.
ஆற்றுல்லம், s. Another kind of the same.

Hobson-Jobson dictionary:
HILSA , s. Hind. hilsā, Skt. ilīśa, illiśa; a rich and savoury fish of the shad kind (Clupea ilisha, Day), called in books the 'sable-fish' (a name, from the Port. savel, quite obsolete in India) and on the Indus pulla (palla). The large shad which of late has been commonly sold by London fishmongers in the beginning of summer, is very near the hilsa, but not so rich. The hilsa is a sea-fish, ascending the river to spawn, and is taken as high as Delhi on the Jumna, as high as Mandalay on the Irawadi (Day). It is also taken in the Guzerat rivers, though not in the short and shallow streams of the Concan, nor in the Deccan rivers, from which it seems to be excluded by the rocky obstructions. It is the special fish of Sind under the name pulla or palla, and monopolizes the name of fish, just as salmon does on the Scotch rivers (Dr. Macdonald's Acct. of Bombay Fisheries, 1883).
[...]
1810. -- "The hilsah (or sable-fish) seems to be midway between a mackerel and a salmon." -- Williamson, V. M. ii. 154-5.

1813. -- Forbes calls it the sable or salmon-fish, and says "it a little resembles the European fish (salmon) from which it is named." -- Or. Mem. i. 53; [2nd ed. i. 36].

----------------

It is interesting that "pulai/pulavu" a word used for meat, stench, blood etc., in Dravidian languages is the name of the fish in Indus and also in Andhra.
Telugus call the muLLam/uLLam 'hilsa' as pulasa/polasa fish. In Sind, it is pulla or palla fish, while in Gujarat it is palva or pulva which is obviously from Dravidian pulavu/pulai (DEDR 4552; see also DEDR 4547)
4552 Ta. pulai animal food, stench; pulaicu raw meat; pulavu, pulāl flesh, raw meat, fish, smell of flesh or fish; pulavu (pulavi-) to smell raw flesh; pulaval smell of flesh or fish. Tu. poralů, poraḷů fishy smell; (B-K.) purāḷů bad smell as of a boil. Te. pola, polasu flesh, smell of flesh. / Cf. Skt. pala-, palala- flesh, meat. DED 3718.

Often, -u in first syllable changes to -i in spoken languages. For example,
pul "grass" becomes "pil" in spoken Tamil (புல்லு > பில்லு ‘grass' in ST). Similarly, muLisai/uLisai "the fish with many sharp bones = hilsa" has changed to iLisa in Bengali language. 

In many instances, a word-initial h- is added in North India.
For example, Tamil ERu 'male of buffalo' is Heruka in Buddhism (Bihar).
uuLi festival of Sangam is huuLi/hOli in North. aalatti > haarati.
appaLam > happaLam, erumai/emme > heramba 'buffalo' etc.,
Words of negation, like Tamil's alla and illai has also a h- added in
the from in North Dravidian. See:
iLisa, with an addition of h- word-initially, becomes hilisa or hilsa in Hindi.

In sum, "hilsa" one of the tastiest fishes of Indian rivers has Dravidian names all over Indian subcontinent.

N. Ganesan



அம்மம் மம்மம் ஆகலாமே ஒழிய மறுதலை இல்லை. அதுதான் ஓங்கார தத்துவமும். ஓ, ம் இரண்டும் மருவாது

ஆ-ம் என்பது ஓ-ம் என மருவுகிறது பிரணவத்தில். 

N. Ganesan

unread,
Jan 9, 2016, 6:09:42 AM1/9/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Friday, January 8, 2016 at 8:58:53 PM UTC-8, தேமொழி wrote:
mammary glands ...  mammals  ஆகியவடிற்கும் " மம்மம் " ஏதேனும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா?  


குழந்தை பெற்றோர், உடன்பிறந்தோர் உதட்டு அசைவுகளில் முதலில் கற்கும் சொல் மா, பா எழுத்துக்கள்.
மா - அம்மா, பா - அப்பா. மாமா, மாமி என்று ஆங்கிலத்தில் அம்மாவைச் சொல்கின்றனர். mama, mommy,
இந்தச் சொற்களுடன் இந்தோ-ஐரோப்பிய mamma தொடர்புடையது.

தமிழ் (தமிழில் இருந்து வடமொழி ஆகும்) மருமம் ஐரோப்பிய மொழிகளில் காணோம்.

மருமம்/மம்மம் > அம்மம் (தாய்ப்பால்).

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jan 9, 2016, 1:03:24 PM1/9/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம்


9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
மகர ஒலி என்றும் மருவாது.

பொருள் என்ன?  


அம்மா. மா, மம்மிம் உம்மா என பல மொழிகளிலும் மகரம் மருவாமல் இருக்கு. காரணம் ஒட்டிய இரண்டு உதடுகளும்  திறந்தலா ஒலிப்பது.
பகரத்தல் நான்குவகை ஒலிப்புகள் இருப்பதுபோல் மகரத்தில் இல்லை

அதுபோல் ஓகாரமும்

மகள் - மோளே(மலையாளம்)
கோழி- கோடி(தெலுகு) ஓகாரம் மாறலை.
ஆம் = ஓம் ( ஈழம்)
ஐயா = யோவ் (கொச்சைத்தமிழ்)
போ = ஓகு (கன்னடம்) ஓகாரம் மாறலை

நீங்க சொன்னவைஎல்லாம் மறுதலையாக சொல்லணும்

ஆ- கோ (வடசொல்)

அலர்முலை ஆகம்.தான்
மலர்முலை ஆகம் இல்லை

N. Ganesan

unread,
Jan 9, 2016, 4:42:54 PM1/9/16
to வல்லமை, மின்தமிழ், housto...@googlegroups.com


On Friday, January 8, 2016 at 11:20:08 PM UTC-8, சக்கரவன் wrote:

அன்றாடல் லக்ஷக்கணக்கான குழைந்தையருக்கு சொல்லி ஊட்டும் பப்பு மம்மம், தச்சு மம்மம் என்பது மருமம்/மம்மம் என்னும் தாய்ப்பால் உணவில் இருந்து குழந்தையுணவாக வளர்ச்சிபெற்ற சொல்.

mammary glands ...  mammals  ஆகியவடிற்கும் " மம்மம் " ஏதேனும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா?  

ஆம். அம்மம் > மம்மம். இதற்கு சொல்லாவறிஞர் ப. அருளி பெரியாழ்வாரின் பாக்களில் இருந்து எடுத்துக் காட்டுகள் தருகிறார் என்பதோடு நில்லாமல் பண்டு ஆண்  பெண் விலங்குகள் இரண்டுமே தம் குட்டிகளுக்கு பால் கொடுத்ததாக அறிவியலார் கருத்தரிவித்துள்ளனர் என்றும் அதன் அடையாளத தொடர்ச்சியாகவே இன்றும் ஆடவருக்கு முலைக்கண் இருப்பதாகச சொல்கிறார்.    

சக்கரவன் 

மருமம்/மம்மம் > அம்மம் என்றாகும். பாவாணர் பல இடங்களில் சொல்முதல் ம் மம்மத்தில் இழந்து அம்மம் என்றாதலை விளக்கியுள்ளார்.

தமிழ்ச் சொற்களில் முதலாக உள்ள ம்-
தமிழில் பல சொற்களிலே ம்- முதலில் வரும், பின்னர்
அந்த ம் அழிபட்டுச் சொற்கள் உருவாவது வழமை.
சில உதாரணங்கள்:
(1) மலர் > அலர்
(2) மாமரம் > ஆமர > ஆம்ர (வடமொழிகளில் தமிழ்ச்சொல்)
(3)  முழ்-/முட்டை/முண்ட > மண்டை > அண்ட ‘egg'; 
(இன்னும் வேதத்தில் அண்டம் என்ற சொல்வேர் தேடிக்கொண்டுளர்!)
(4) முன்னு-தல்  > உன்னு-தல் 
(5) மோய்தல்:ஓய்தல் (திருவாசகம் - சிவபுராணம் உரை)
(6) மோடு(முகடு) > ஓடு,  
(7) மிழ்-/மிண்டு/மிடுக்கு > மேழம் (மிழ்- மிஷ்- என வடசொல் ஆகிறது
மிஷதி - ஆட்டுக் கிடாக்கள் மிண்டுதல், சண்டையிடல்)
மேழகம் > ஏழகம் (சிலப்பதிகாரத்தில்).
(8) மூழ்கம் > ஊழ்கம் (= தியானம்)
(9) மடுத்தல் =  தீ மூட்டுதல் To kindle; 
கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு  > அடுப்பு
(10) முத்தி > உத்தி

முள் என்ற சொல்லே ”உள்” என சொன்முதல் ம் இழந்து, பின்னர்
“உல்” என்றாகியது. முள்- “sharp edge". இது தச்சரின்
இழைப்புளி போன்றவற்றில் வரும் உளி (< முளி).

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 9, 2016, 4:45:43 PM1/9/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:


9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
மகர ஒலி என்றும் மருவாது.

பொருள் என்ன?  


அம்மா. மா, மம்மிம் உம்மா என பல மொழிகளிலும் மகரம் மருவாமல் இருக்கு. காரணம் ஒட்டிய இரண்டு உதடுகளும்  திறந்தலா ஒலிப்பது.
பகரத்தல் நான்குவகை ஒலிப்புகள் இருப்பதுபோல் மகரத்தில் இல்லை

அதுபோல் ஓகாரமும்

மகள் - மோளே(மலையாளம்)
கோழி- கோடி(தெலுகு) ஓகாரம் மாறலை.
ஆம் = ஓம் ( ஈழம்)
ஐயா = யோவ் (கொச்சைத்தமிழ்)
போ = ஓகு (கன்னடம்) ஓகாரம் மாறலை

பகரம் ஹகரம் ஆகும் அண்மைக்கால கன்னடத்தில்.
போகு - ஹோகு. பக்கி - ஹக்கி, பால் - ஹாலு போல

நீங்க சொன்னவைஎல்லாம் மறுதலையாக சொல்லணும்

ஆ- கோ (வடசொல்)

ஆ என்பதற்கும் Go என்னும் இந்தோ-ஐரோப்பியச் சொல்லும் வெவ்வேறு.
ஆ-வில் இருந்து  Go இல்லை.

அலர்முலை ஆகம்.தான்
மலர்முலை ஆகம் இல்லை


மலர் (மாலை) தான் முதல். ம் இழந்து அலர்.
மலர்தல் > அலர்தல்
மருமம்/மம்மம் (மார்பு) > அம்மம்
முள்ளல் > உள்ளல் (மீன்வகை).
etc. etc.,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 9, 2016, 9:07:29 PM1/9/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:


அலர்முலை ஆகம்.தான்
மலர்முலை ஆகம் இல்லை


மலர்முலை > அலர்முலை.
மலர்முலை:
 
”யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்” 
          ------------ (இலக்கணவிளக்கம், தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று).

”மலர்முலை மடவார் கலவிகா முறுநரு
மிரண்டறு கலப்பி னின்பநச் சுநரு
மினையபல் வேறு நினைவின ரெவரும்” (திருத்தணியாற்றுப்படை)

 மலர்தல் தான் ஆதி. மாலை என்ற சொல் நிறுவுகிறது.
அலர்தல் தான் முதல் என்றால் ஆலை என்று மாலைக்குப் பெயர் இருக்கும்.
அலர்தல் ஆதி என்றால் ஏன் ம் புணர்கிறது? எத்தனையோ மெய்யெழுத்து இருக்க.

சொல்தொடங்கும் ம் அழிதலை மெட்ராஸ் லெக்சிகனில் முழுக்கப் பார்க்கணும்.
என் பட்டியலில் இன்னுமொன்று சேர்த்தலாம் (முளி:உளி, முள்ளம்:உள்ளம், ... போல)
மிளை > இளை = காவல் காடு.

மிளை miḷai n. prob. மிடை-. [K. miḷe.] 1. Wood, forest, serving as a defence; காவற்காடு. செல்லா வருமிளை புகுமின் (சீவக. 1142). 2. Thicket, copse; குறுங்காடு. அருமிளைக் குண்டகழி (பு. வெ. 6, 5). 3. Bush; சிறுதூறு. முயறுளர் மிளை முயறுள (திவ். பெரியதி. 8, 7, 3). 4. Fenced enclosure; கட்டுவேலி. (சிலப். 13, 183, உரை.) 5. Guard, watch; காவல். மிளைசூழ் கோவலர் (மலை படு. 409).


இளை¹ iḷai , n. cf. மிளை¹. 1. Main guard; strong watch in a fortress; தலைக்காவல். (திவா.)

2. Jungle growth maintained as a defence round a fortified city; காவற்காடு. இளையுங் கிடங் குஞ் சிதைய (பு. வெ. 5, 3). 3. Hedge, fence, protected enclosure; கட்டுவேலி. இளைசூழ் மிளை (சிலப். 14, 62).


முள்ளம் என்பதிலிருந்து வரும் உள்ளத்திற்கும், இதயம் என்ற பொருள்கொண்ட உள்ளத்திற்கும் ஒரு தொடர்புமில்லை.

அதுபோல, இளை = காவற்காடு என்ற பொருள் கொண்ட சொல்லுக்கும் இளைத்தல் = மெலிதல் என்பதற்கும் தொடர்பில்லை.

இங்கே, மிளை > இளை.


நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 10, 2016, 1:37:45 AM1/10/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
இன்னுஞ் சில காட்டுகள்:

(1) முச்சி > உச்சி
(2) மாசு > ஆசு
(3) மணி > அணி
(4) மிளை > இளை

முக்கியமான வினைச்சொல் ஒன்று அடுத்துப் பார்ப்போம்.

வேந்தன் அரசு

unread,
Jan 10, 2016, 10:02:34 AM1/10/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம்


9 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:03 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:


அலர்முலை ஆகம்.தான்
மலர்முலை ஆகம் இல்லை


மலர்முலை > அலர்முலை.
மலர்முலை:
 
”யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்” 
          ------------ (இலக்கணவிளக்கம், தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று).

”மலர்முலை மடவார் கலவிகா முறுநரு
மிரண்டறு கலப்பி னின்பநச் சுநரு
மினையபல் வேறு நினைவின ரெவரும்” (திருத்தணியாற்றுப்படை)

 

கணேசரு

நான் சொல்லவ்னதை நீங்களே வ்லையுறுத்திவிட்டீர்கள்

ஆரம் தாங்கிய அலர்முலைஆகத்துப். பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து”

இது நெடுநல்வாடை. நீங்க சுட்டும் நூல்களுக்கு முந்தியது

அலர்முலை என்பதே பின்னாளில் மலர் முலை ஆக்கி இருக்கு

அவற்றிலும்,

மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
என்பதை
மருவரை மார்புதம் அலர்முலை குளிப்பத் 

எனவும் வாசிக்கலாம்.

நீங்க வினவுது ஏன் ஆரம் மாரம் ஆகலை என்பது போல் இருக்கு

மூன்று எனும் சொல் மூனு,  மூடு, மூரு என கொச்சைத்தமிழ்,தெலுகு கன்னட மொழிகளில் திரியும். ஆனால் மகரம் திரியவில்ல்லை.
,


வேந்தன் அரசு

unread,
Jan 10, 2016, 2:47:40 PM1/10/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம், Santhavasantham
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு  > அடுப்பு

”போர் அடுதானை சேரலாத!”

”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”

அடுப்புக்கு மடுப்பு எனும் சொல் எங்கு புழங்குது


இதுக்கு இணையான மகரச்சொற்கள் காட்டுங்க



10 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:29 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

> மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
> என்பதை
>மருவரை மார்புதம் அலர்முலை குளிப்பத் 
> எனவும் வாசிக்கலாம்.

No. இந்த அடியின் மோனையைப் பாருங்கள். மருவரை எனவே, மலர்முலை என்பது பாடல்.

திருவாசகம் சிவபுராணத்தில் 
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”

மோய்தல் > ஓய்தல் என வரும். 
(1) மலர் > அலர், (2) மர்மம்/மம்மம் > அம்மம், (3) மாசு > ஆசு, (4) மணி > அணி, (5) மிளை > இளை, (6) முள்ளல் > உள்ளல் (மீன்), 
(7) மாற்று/மாட்டு> ஆற்று/ஆட்டு (to do,cf. மாட்டோம் in the negative) .... போல.
"மோய உரைப்பனியான்” என்பதன் மோய்தல் பொருளை உரைகாரர்கள் எழுதிஉள்ளனர். 
மகர வர்க்கத்தில் தொடங்கும் அடிகளில் மோய்- என்னும் சொல் உள்ள பாடல்கள்
கம்பனிலும் உண்டு. பிற இலக்கியங்களிலும் இருப்பவை. மோனையை வைத்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.
அவற்றை மோய்தல் என்ற வினைச்சொல்லை அறியாததால் ஓய்தல் என்று அச்சிட்டிருப்பர்.

மூய்தல்/மோய்தல் = முடிதல், பூர்த்தி ஆதல்.
’கலியாணம் மூய்ச்சாச்சு’ என்பது கொங்குவழக்கு. மணமுடிந்தது எனப் பொருள்.
மோய்தல் என்றுள்ள பாடல்களை திருவாசகம் போல மற்றவற்றில் உள்ளவற்றைத்
தேடித் தொகுத்தல் நன்று.

நா. கணேசன்

 
On Sunday, January 10, 2016 at 7:02:31 AM UTC-8, வேந்தன் அரசு wrote:


9 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:03 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:


அலர்முலை ஆகம்.தான்
மலர்முலை ஆகம் இல்லை


மலர்முலை > அலர்முலை.
மலர்முலை:
 
”யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்” 
          ------------ (இலக்கணவிளக்கம், தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று).

”மலர்முலை மடவார் கலவிகா முறுநரு
மிரண்டறு கலப்பி னின்பநச் சுநரு
மினையபல் வேறு நினைவின ரெவரும்” (திருத்தணியாற்றுப்படை)

 

கணேசரு

நான் சொல்லவ்னதை நீங்களே வ்லையுறுத்திவிட்டீர்கள்

ஆரம் தாங்கிய அலர்முலைஆகத்துப். பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து”

இது நெடுநல்வாடை. நீங்க சுட்டும் நூல்களுக்கு முந்தியது

அலர்முலை என்பதே பின்னாளில் மலர் முலை ஆக்கி இருக்கு

இல்லை. மலர், மாலை என்பது ஆதி. அலர்ந்தது < மலர்ந்தது.
ஒரு சொல் சங்க இலக்கியத்தில் வந்துவிட்டால் உடனே அதுதான் பழசு என்பதெல்லாம் இல்லை.

வேத இலக்கியங்களில் இதனைப் பார்க்கலாம். ரிக்வேதத்தில் இல்லாமல், பின்னால் வரும்
இலக்கியங்களில் உள்ள சொற்களே பழமை எனக் காட்டியுள்ளனர்.

அதுபோல், மலர்முலை ஆகம் > அலர்முலை ஆகம்.
மருமம்/மம்மம் > அம்மம் ஆதற்போல.

நா. கணேசன் 

அவற்றிலும்,

மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
என்பதை
மருவரை மார்புதம் அலர்முலை குளிப்பத் 

எனவும் வாசிக்கலாம்.

நீங்க வினவுது ஏன் ஆரம் மாரம் ஆகலை என்பது போல் இருக்கு

மூன்று எனும் சொல் மூனு,  மூடு, மூரு என கொச்சைத்தமிழ்,தெலுகு கன்னட மொழிகளில் திரியும். ஆனால் மகரம் திரியவில்ல்லை.
,


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 10, 2016, 3:25:00 PM1/10/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Sunday, January 10, 2016 at 7:02:31 AM UTC-8, வேந்தன் அரசு wrote:


9 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:03 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:


அலர்முலை ஆகம்.தான்
மலர்முலை ஆகம் இல்லை


மலர்முலை > அலர்முலை.
மலர்முலை:
 
”யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்” 
          ------------ (இலக்கணவிளக்கம், தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று).

”மலர்முலை மடவார் கலவிகா முறுநரு
மிரண்டறு கலப்பி னின்பநச் சுநரு
மினையபல் வேறு நினைவின ரெவரும்” (திருத்தணியாற்றுப்படை)

 

கணேசரு

நான் சொல்லவ்னதை நீங்களே வ்லையுறுத்திவிட்டீர்கள்

ஆரம் தாங்கிய அலர்முலைஆகத்துப். பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து”

இது நெடுநல்வாடை. நீங்க சுட்டும் நூல்களுக்கு முந்தியது

அலர்முலை என்பதே பின்னாளில் மலர் முலை ஆக்கி இருக்கு

இல்லை. மலர், மாலை என்பது ஆதி. அலர்ந்தது < மலர்ந்தது.
ஒரு சொல் சங்க இலக்கியத்தில் வந்துவிட்டால் உடனே அதுதான் பழசு என்பதெல்லாம் இல்லை.

வேத இலக்கியங்களில் இதனைப் பார்க்கலாம். ரிக்வேதத்தில் இல்லாமல், பின்னால் வரும்
இலக்கியங்களில் உள்ள சொற்களே பழமை எனக் காட்டியுள்ளனர்.

அதுபோல், மலர்முலை ஆகம் > அலர்முலை ஆகம்.
மருமம்/மம்மம் > அம்மம் ஆதற்போல.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 10, 2016, 3:38:26 PM1/10/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham

> மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
> என்பதை
>மருவரை மார்புதம் அலர்முலை குளிப்பத் 
> எனவும் வாசிக்கலாம்.

No. இந்த அடியின் மோனையைப் பாருங்கள். மருவரை எனவே, மலர்முலை என்பது பாடல்.

திருவாசகம் சிவபுராணத்தில் 
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”

மோய்தல் > ஓய்தல் என வரும். 
(1) மலர் > அலர், (2) மர்மம்/மம்மம் > அம்மம், (3) மாசு > ஆசு, (4) மணி > அணி, (5) மிளை > இளை, (6) முள்ளல் > உள்ளல் (மீன்), 
(7) மாற்று/மாட்டு> ஆற்று/ஆட்டு (to do,cf. மாட்டோம் in the negative) .... போல.
"மோய உரைப்பனியான்” என்பதன் மோய்தல் பொருளை உரைகாரர்கள் எழுதிஉள்ளனர். 
மகர வர்க்கத்தில் தொடங்கும் அடிகளில் மோய்- என்னும் சொல் உள்ள பாடல்கள்
கம்பனிலும் உண்டு. பிற இலக்கியங்களிலும் இருப்பவை. மோனையை வைத்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.
அவற்றை மோய்தல் என்ற வினைச்சொல்லை அறியாததால் ஓய்தல் என்று அச்சிட்டிருப்பர்.

மூய்தல்/மோய்தல் = முடிதல், பூர்த்தி ஆதல்.
’கலியாணம் மூய்ச்சாச்சு’ என்பது கொங்குவழக்கு. மணமுடிந்தது எனப் பொருள்.
மோய்தல் என்றுள்ள பாடல்களை திருவாசகம் போல மற்றவற்றில் உள்ளவற்றைத்
தேடித் தொகுத்தல் நன்று.

நா. கணேசன்

 
On Sunday, January 10, 2016 at 7:02:31 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

N. Ganesan

unread,
Jan 10, 2016, 8:06:13 PM1/10/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு  > அடுப்பு

”போர் அடுதானை சேரலாத!”

”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”

இவற்றுக்கும் மடுப்பு/அடுப்பு தொடர்பில்லை. 

 


அடுப்புக்கு மடுப்பு எனும் சொல் எங்கு புழங்குது


இதுக்கு இணையான மகரச்சொற்கள் காட்டுங்க

 
மடுத்தல், மடையன்/மடைச்சி (வண்ணான் புலையன்/புலைத்தி என்பது போல),
மடைப்பள்ளி, மடம், மடுப்பு, ....

மடுப்பு = மூட்டுதல், அடைவு ; நிறைப்பு ; உண்கை, சேர்த்தல், ....
நீரை நிரப்பிச்/மூட்டிச் செல்லும் மடை. மடுத்துச் செல்தலால் மடை.

சமையல்காரனுக்குப் பழைய பெயர் மடையன்/மடைச்சி.
அடுப்பில் தீ மடுக்கும் இடம் மடைப்பள்ளி. அங்கே 
பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். எனவே, மடம் (< மடுத்தல் = சமைத்தல்).

மடுத்தல் = அடுப்பில் ஏற்றித் தீ மூட்டிச் சமைத்தல்.
எனவே, மடுப்பு > அடுப்பு

வளைத்து நின்று ஐவர் கள்வர்
            வந்துஎனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றத்
            தழல் எரி மடுத்து நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற
            ஆமைபோல் தெளிவு இலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன்
            என்செய்வான் தோன்றினேனே.

சமணமுனிவர் தோலாமொழித் தேவர்
சூளாமணியில் மடுப்பு > அடுப்பு என்ற
சொல்முளை காட்டும் பாடல் தந்துள்ளார்:

மலையெடுத் திடுகோ மாநிலம் பிளக்கோ
     மறிகட லறவிறைத் திடுகோ
வுலைமடுத் துலகம் பதலையா வூழித்
     தீமடுத் துயிர்களட் டுண்கோ

சிலையிடத் துடையார் கணைவலத் துடையார்
     சிலர்நின்று செய்வதீங் கென்னோ
நிலையிடத் தவரு ணிகரெனக் குளரே
     னேடுமின் சென்றென நின்றான்.
 
     (இ - ள்.) மலை எடுத்திடுகோ - உலகின்கண்ணுள்ள இமய முதலிய மலைகளைத்
தூக்குவேனோ! அல்லது, மாநிலம் பிளக்கோ - பெரிய பூமியை இரண்டாகப் பிளப்பேனோ!
அன்றி, மறிகடல் அற இறைத்திடுகோ - அலைகள் மறிகின்ற கடல்கள் நீர் அற்றுப் 
போம்படி காலால் எற்றுவேனோ! அன்றி,
உலகம் பதலையா - இவ்வுலகமே ஒரு
பானையாகக்கொண்டு, உலைமடுத்து - அப்பானையை அடுப்பில் ஏற்றி வைத்து, ஊழித்தீ
மடுத்து -அவ்வடுப்பில் ஊழித்தீயைக் கொளுவி, உயிர்கள் அட்டு உண்கோ - உயிர்களைச்
சமைத்து உண்பேனோ,
(என் பெருமைக்கேற்ப இன்னோரன்ன செய்வதல்லாமல்,)
சிலையிடத்துடையார் - வில்லை இடக்கையிலுடையராய், கணைவலத்துடையார் - 
அம்புகளை வலக்கையிலுடையராய், சிலர் - ஒருசில பேதையர் ஈண்டு உளர், நின்று 
செய்வது ஈங்கு என்னோ - இவ்விடத்தே நின்று யாம் செய்தற்குரிய செயல் யாதுளது?,
நிலையிடத்தவருள் - இப்போர்க்களத்தே நிற்குமவருள், எனக்கு நிகர் உளரே - எனக்கு
நிகராய் நின்று போர் செய்வாரும் உளர்கொல்லோ!, சென்று நேடுமின் - உளராயில் நீயிர்
சென்று தேடுங்கோள் என்று கூறி, நின்றான் - ஓரிடத்தே நிற்பான் ஆயினன், (எ - று.)
அவ்விடத்தே தோன்றிய தூமகேதனன், மலை எடுத்திடுதல் முதலிய அருஞ்செயலைச் 
செய்வதன்றி, ஈண்டு வில்லுங் கணையும் கொண்டு நிற்கும் புல்லியரோடு யான் போர்புரிதல்
தகுமோ! இக்களத்தே என்னோடு எதிர்க்கும் ஆற்றலுடையார் யாரேனும் உளராயின்
அவரைத் தேடுங்கோள் எனக் கூறி நின்றான் என்க.
 

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jan 10, 2016, 10:44:53 PM1/10/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம்
செவிமடுத்தான்
மடுத்தவாயெல்லாம் பகடு அன்னான்

இங்கு வரும் மடுப்புக்கு பொருள்யாதோ?

10 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:45 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Jan 11, 2016, 11:24:59 AM1/11/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham, Sethupathi Sethukapilan, dorai sundaram, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, George Hart, L Srinivas, Lakshmi Srinivas, K Rajan, Theodore Baskaran, Dr. Y. Manikandan, dinamalarrk, Ramachandran Nagaswamy, Iravatham Mahadevan, Subbarayalu Yellava

NG> மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு  > அடுப்பு
On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote: 
அடுப்புக்கு மடுப்பு எனும் சொல் எங்கு புழங்குது

இதுக்கு இணையான மகரச்சொற்கள் காட்டுங்க

 
மடுத்தல், மடையன்/மடைச்சி (வண்ணான் புலையன்/புலைத்தி என்பது போல),
மடைப்பள்ளி, மடம், மடுப்பு, ....

சங்க இலக்கியம் படித்தால் மடுத்தல் = சமைத்தல் என்பது தமிழின் அடிப்படையான 
வினைச்சொற்களில் ஒன்று என அறியலாகும். வகுத்தல் என்னும் வினை தருவது வகுப்பு.
அதுபோல், மடுத்தல் (=சமைத்தல்) என்னும் வினைதருவது மடுப்பு. சொன்முதல் ம் கெட்டு
அடுப்பு எனவரும். மடுத்தல் சொன்முதல் ம் கெட்டு அடுத்தல் (= சமைத்தல்) எனப் புழங்குகிறோம்.

மடுதல்/அடுதல் சமைக்கும் தீயிற்கும், சுடுதல் அழிக்கும் தீயிற்கும் பயன்படும்.
இதனைப் புறப்பாட்டு குறிப்பிடுகிறது:

|| “அடுதீ யல்லது சுடுதீ யறியாது
இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்” (புறம். 70)

என்பதனால் தங்கள் உணவு அடுதற்குரிய தீயைச் சுடுதீயென்னாது வேறோர் நன்பெயர்
கொடுத்து அடுதீயெனப் பாகுபடுத்திப் பாராட்டுதலும் அறிவின் பயனேயாம். சிலப்பதிகாரம்
வஞ்சின மலையில் “எரியங்கி வானன்வன்” (49) எனவும் வருதல் காண்க.  “ ||
பாஷா கவிசேகரர் மகாவித்துவான் ரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
(1930களில் மகாவித்துவான் ஐயங்கார் ஸ்வாமி நடத்திய தமிழ் வகுப்புகளில் போதித்த செய்திகள்
அடங்கிய நூல். அண்ணாமலைப் பல்கலையின் வெளியீடுகளில் இரண்டாவது.
அப்போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலையில் தனி பிரெஸ் இல்லை. எனவே,
சுவாமி சித்பவானந்தர் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன அச்சகத்தில் அச்சிட்ட நூல்.
சிறுவனாக இருந்தபோது பராய்த்துறை சி. அடிகள் ஆசீர்வதித்து அளித்த நூலிலிருந்து தட்டச்சுகிறேன். பக். 90)

அடுதீ = மடுக்கும் தீ, அதாவது சமைக்கும் தீ. இதனைக் கலித்தொகை கொண்டு விளக்கலாம்.
அடுத்தல் < மடுத்தல், அடுப்பு < மடுப்பு என அறியலாகும்.
மடுத்தல் = சமைத்தல் (சங்க இலக்கியச் சான்று)
எனவே தான், மடுப்பு > அடுப்பு; மடுத்தல் > அடுத்தல் (சமையல்)

கலித்தொகை 59

ஆய்தொடி யைதுயிர்த் திவனுண்ணோ யாதென்னு
நோயிலை யிவட்கென நொதுமலர் பழிக்குங்காற்
சிறுமுத்த னைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ
நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ;
எனவாங்கு;

நச்சினார்க்கினியர் மடுத்தல் = சமைத்தல் என விளக்குகிறார்:
எ - து: ஆராய்ந்திட்ட தொடியினையுடையாய்! நீதான் ஐதாக உயிர்த்து இவன் மனத்திலுண்டாகிய நோய் யாதென்று கேட்கும் நோய் இவட்கு இல்லை யென்று யான் கூற அதுகேட்டு அயலார் நினைப்பழிக்குமளவிற் சிறிய குழமகனைப் பேணி வளர்த்து அவனுக்கு வேறொருத்தியுடைய பெண் மகனைக் கோடற்குச் சிறுசோற்றைச் சமைத்து ஆயத்திற்கு இட்டு நீ நறிய நுதலையுடைய மகளிரோடே மகிழ்ந்த நோன்பின் பயன் நினக்கு வந்து பொருந்துமோ? பொருந்தாது காண்; எ - று.

எனவாங்கு
எ-து; என்று; எ - று. ஆங்கு - அசை. ||

இங்கே பெண்மகன் என்பது வரலாற்றில் பல்லாயிரம் காலமாக ஆழ்ந்த சொல். கன்னித்தமிழ் என்று கொற்றவை காக்கும் என்றுமுள தென்றமிழ் என்பது பழையவழக்கு. அக் கன்னியை (தமிழர் தெய்வத்தை) அம்மன் என்பதும், நகர் என்னும் விடங்கர் (முதலை) இலிங்க வடிவில் தொழும் தேவரடியாள்கள் நக்கன் என்று பெயர் பெறுதலும் பொது அம்பலங்களில் வாழும் பெண்டிருக்கு ஆண்கள் போல -ன் விகுதி பெறுவது பற்றி விரிவாகப் பேசலாம். வாடாள் என தமிழல்லாப் பிற இந்திய இலிபிகளில் எழுதினால், தமிழில் வாட்டாள் என்றும், வெங்காலூரில் (கொங்கில் வெங்கால நாடு, கேரளத்தில் வெங்கால்நாடு) உள்ள காட்டுமல்லேசுரம் காடுமல்லேசுரம் என கன்னடலிபி ஆதலும் (காட்டுமல்லிகை = அதிரல் என்னும் காட்டுமுல்லைக் கொடி), கார்த்திகை கார்திகை என வடமொழியில் தமிழின் அரத்தனம் > ரதனம் என ஆதலும். அரத்தம் = சிவப்பு, எனவே ரத்தம். தமிழில் அரதனம் இன்றும் ரத்தனம்/ரத்தினம், அதுபோல, நக- > நக்கன் என தேவரடியார்கள் பட்டம் - சோழர் கல்வெட்டுக்களில். விரிவாக, இன்னொரு சமயத்தில் நக்கன் என்ற தேவரடியாள் குறிக்கும் சொல்பற்றி எழுதுகிறேன். ஐராவதம் ஐயாவின் நக்கன் என்ற கட்டுரை படிக்கலாம். அதற்குப் பின்னூட்டமாக அமையும்.

உலை மடுத்தல் = உலையேற்றிச் சமைத்தல்,
தீமடுத்தல் = தீயினால் சமைத்தல்
சோறுமடுத்தல் (சங்க இலக்கியத்தில்) = சோற்றைச் சமைத்தல்.

 இம்மாலை
ஐய ரவிரழ லெடுப்ப வரோவென்
கையறு நெஞ்சங் கனன்று தீமடுக்கும் (கலித்தொகை)

எ - து: இம்மாலைக்கண்ணே, இருடிகள் விளங்குகின்ற அழலை ஆவுதி பண்ணிஎழுப்ப, என்செயலறுநெஞ்சம் தானுங்கொதித்து எனக்குங் காமத்தீயைக் கொளுத்தும். எ - று. (நச்சினார்க்கினியர்).

மடை அடும் பால் = மடைப்பள்ளியில் மடுக்கும் பால்

இடைதெரியா வேஎ ரிருவருந் தத்த
முடைவனப் பெல்லா மிவட்கீத்தார் கொல்லோ
படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும்
பாலொடு கோட்டம் புகின்  (கலித்தொகை)

எ - து: தம்மில்வேறு பெயர்விளங்கி அழகையுடையராகிய உருப்பசியும் திலோத்தமையும் தம்முடைய தம்முடைய அழகையெல்லாம் இவட்குக் கொடுத்தார் கொல்லோ? அது தெரிந்ததில்லை; இவள் தெய்வத் திற்குப் பலியாகச்சமைக்கும் பாலோடே காமன்கோயிலிலே செல்லில் அக்காமனும் நெஞ்சழிந்து தன்கையிற் படையை மிகவும் போகடுவன். எ-று.  (நச்சினார்க்கினியர்)

வேந்தன் அரசு

unread,
Jan 12, 2016, 9:27:53 AM1/12/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம், சந்தவசந்தம், sethuk...@gmail.com, dorai sundaram, Erode Tamilanban Erode Tamilanban, Sirpi Balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu, Shanmugam SeVai, George Hart, lsri...@gmail.com, lsri...@yahoo.com, K Rajan, Theodore Baskaran, v.y.man...@gmail.com, dinam...@hotmail.com, Ramachandran Nagaswamy, Iravatham Mahadevan, Subbarayalu Yellava, Asko Parpola


12 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

திருவாசகம் சிவபுராணத்தில் 
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”


நிலைமொழியின் இறுதி ம் இல்லாமல் இப்படி வரும் இடங்களை தேடவும்,
 
-- 

N. Ganesan

unread,
Jan 12, 2016, 12:21:39 PM1/12/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham
On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
மகர ஒலி என்றும் மருவாது.

பொருள் என்ன?  


அம்மா. மா, மம்மிம் உம்மா என பல மொழிகளிலும் மகரம் மருவாமல் இருக்கு. காரணம் ஒட்டிய இரண்டு உதடுகளும்  திறந்தலா ஒலிப்பது.
பகரத்தல் நான்குவகை ஒலிப்புகள் இருப்பதுபோல் மகரத்தில் இல்லை

அதுபோல் ஓகாரமும்

மகள் - மோளே(மலையாளம்)
கோழி- கோடி(தெலுகு) ஓகாரம் மாறலை.
ஆம் = ஓம் ( ஈழம்)
ஐயா = யோவ் (கொச்சைத்தமிழ்)
போ = ஓகு (கன்னடம்) ஓகாரம் மாறலை


பிரணவத்தில் ஆ- என்னும் ஒலி ஓ- என்றாகிறது. இது தமிழ்ச் சொல்.
ஆ(ம்) > ஓ(ம்): 1917 என்சைக்ளோபீடியாவில்
 Om by Keith, A, B., pages 490 to 492 in Encyclopaedia of Religion and Ethics, editor James Hastings, Vol. IX, Edinburgh 1917
(இந்த கட்டுரையை வெள்ளுரையாத் தரணும்).

முத்துஸ்வாமி தீக்ஷிதர் தன்னூரில் உள்ளவரைப் பாடும் ‘வாதாபி கணபதிம் பஜேஹம்’ பாடலில் “பிரணவ ஸ்வரூபம்”
என வலஞ்சுழி கணபதியைப் பாடுகிறார். இப்படி உருவம் அமைப்பது 4500 ஆண்டுகளாய்
தமிழர்களுக்கு மரபு. உ-ம்: 4500 ஆண்டு முன்னர் நட்சத்திரங்களை மீனாக வரைந்துள்ளனர்.

18 ஆண்டுகளுக்கு முன் ஒரு மடலில் எடுத்தாண்ட கட்டுரை:
*Also in early Upanisads "Om" means just "yes," equivalent to
*"tathaa." Is it possible that it could have first just been an
*affirmative  particle that later gained its cosmic signifcance
*and was not fabricated from the vowel tables of the Sanskrit
*alphabet?

  Please see the important publication establishing
  'Om' to be of Dravidian origin:

Parpola, Asko, 1981. On the primary meaning and etymology of the
sacred syllable ôm. Pp. 195-213 in: Asko Parpola (ed.), Proceedings
of the Nordic South Asia Conference held in Helsinki, June 10-12,
1980. (Studia Orientalia, 50). Helsinki: The Finnish Oriental Society.

Summary of the main theses:
Original meaning: Om in the Vedic ritual = 'yes', om = tathâ = 'yes'
also in ordinary conversation, and in the Chandogya Upanishad ôm is
expressly said to be a word expressing agreement.
Etymology: < Dravidian âm < âkum 'yes' < 'it is (fitting, suitable)',
â labialized by the following m as Jaffna Tamil ôm < âm.

--------------------------------------------------------

ஆ > ஓ (காட்டு: ஆம் > ஓம்) என்றாதல் சொன்முதலில் மட்டுமில்லை,
சொற்களுக்கிடையிலும் உண்டு என்பதைக் கொங்குநாட்டின்
சமணமுனிவர் பவணந்தி நன்னூல் சூத்திரத்தாலும், முத்துவீரியத்தாலும்
அறியலாம்.

|| செய்யுட்கண் ஆகாரம் ஓகாரமாதல்

505. யாப்பினுள் ஆ, ஓ வாகலு முளவே.

(இ-ள்.) செய்யுளுள் ஆகாரம் ஓகாரமாய்த் திரிதலுமுளவா மென்க.

(வ-று.) வில்லான், வில்லோன், தொடியான், தொடியோன், நல்லார், நல்லோர்.

(வி-ரை.)

‘பெயர்வினை யிடத்து னளரய ஈற்றயல்
ஆஓ ஆகலும் செய்யுளுள் உரித்தே’ (பொது - 2)

என்ற நன்னூல் நூற்பாவைக் கொண்டு இதன் கருத்தை நன்கறியலாம்.
எடுத்துக்காட்டில் னளர ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆதற்கு மட்டுமே உள்ளன. 
‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ (அகம் - 80) என்பதால் யகர ஈற்றயலும் ஆ
ஓவாகும் என அறியலாம். (48) ||


நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jan 12, 2016, 12:24:50 PM1/12/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, santhav...@googlegroups.com, sethuk...@gmail.com, doraisu...@gmail.com, erodetam...@gmail.com, sirpip...@gmail.com, tamiz...@gmail.com, svs....@gmail.com, glh...@berkeley.edu, lsri...@gmail.com, lsri...@yahoo.com, rajan...@gmail.com, theodore...@gmail.com, v.y.man...@gmail.com, dinam...@hotmail.com, urnag...@gmail.com, iravath...@gmail.com, ysra...@gmail.com, Asko Parpola
திருவாசகம் சிவபுராணத்தில் 
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”

மோய்தல் > ஓய்தல் என வரும். 
(1) மலர் > அலர், (2) மர்மம்/மம்மம் > அம்மம், (3) மாசு > ஆசு, (4) மணி > அணி, (5) மிளை > இளை, (6) முள்ளல் > உள்ளல் (மீன்), 
(7) மாற்று/மாட்டு> ஆற்று/ஆட்டு (to do,cf. மாட்டோம் in the negative)  (8) மடுப்பு > அடுப்பு  (9) மோய்தல் > ஓய்தல்.... போல.
"மோய உரைப்பனியான்” என்பதன் மோய்தல் பொருளை உரைகாரர்கள் எழுதிஉள்ளனர். 
மகர வர்க்கத்தில் தொடங்கும் அடிகளில் மோய்- என்னும் சொல் உள்ள பாடல்கள்
கம்பனிலும் உண்டு. பிற இலக்கியங்களிலும் இருப்பவை. மோனையை வைத்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.
அவற்றை மோய்தல் என்ற வினைச்சொல்லை அறியாததால் ஓய்தல் என்று அச்சிட்டிருப்பர்.

மூய்தல்/மோய்தல் = முடிதல், பூர்த்தி ஆதல்.
’கலியாணம் மூய்ச்சாச்சு’ என்பது கொங்குவழக்கு. மணமுடிந்தது எனப் பொருள்.
மோய்தல் என்றுள்ள பாடல்களை திருவாசகம் போல மற்றவற்றில் உள்ளவற்றைத்
தேடித் தொகுத்தல் நன்று.


மாமரம் > ஆமர > ஆம்ர என ஹிந்தி போன்ற மொழிகளில் தமிழின் திரிபாக விளங்குகிறது. அதுபோல், Burma தேசப் பெயர் சொன்முதல் மகரம் இழப்பதால் அரமணம் என்றாகியுளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு எழுதுங்கல்வி கிரந்தலிபியால் உருவானது. அளித்தவர்கள் தமிழரும், ஆந்திரரும் ஆவர். இந்தியாவின் லத்தீன் லிபி என்றால் அது கிரந்தமே. வட்டெழுத்தை தூக்கிவிட்டு தமிழை கிரந்தத்தால் எழுதச் செய்தவன் ராஜராஜசோழன் ஆவான். சங்க நடை போன்ற மரபுச் செய்யுள் எழுதுவாருக்கும் பத்திரிகைகளுக்கும் தமிழ் இலிபி. மற்ற இந்திய மொழிகளைப் படித்தறிய - மலையாளம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, .... போன்ற பிற இந்தியபாஷைகள் - கிரந்தத்தை கணினி போன்றவற்றில் கைக்கொள்ளலாம். நாகரம் மட்டுமன்றி எல்லா இந்திய லிபிகளும் இந்திய யூனியனில் வாழ கிரந்தமும் உதவும். பல மொழிக்குடும்பங்களை கிரந்தங் கொண்டு எழுதியிருப்பதை வரலாறு காட்டுகிறது. தேவாரம், ஆழ்வார் அருளிச்செயல் எல்லாமும் கிரந்த எழுத்தில் தாய்லாந்தில் கூடக் கிடைக்கின்றன. கிரந்தலிபியை தமிழர்கள் தென்கிழக்கு ஆசியாவில் பரப்பி அவர்கள் பாஷைகள் எல்லாவற்றையும் கல்விக்குட் செலுத்த உதவினர். எனவே, அந்நாடுகளின் பெயர்கள் பல தமிழர் தந்ததாக இன்னும் விளங்குகின்றன.

மலையகம்/மலாயா என்னும் மலேசியா மலை என்னும் தமிழ்ச்சொல். மலைகள் நிறைந்த நாடு. பொலிகிற தீவு பொலிதீவு/பலிதீவு (Bali). வருண தீவு - Borneo. கம்போதியா தென்கிழக்கு ஆசியாவின் தலைமையரசு ஆவதன் முன்னர் யாவகம் என்னும் சாவகம்/ஜாவகம் தான் தலைநகர்.இதன் பெயர் யா மரத்தால் ஏற்பட்டது. யா மரங்கள் பற்றி ஏராளமான செய்திகளைச் சங்க இலக்கியத்தில் படிக்கலாம். யா மரங்களில் 300க்கும் மேற்பட்ட இனங்கள் யாவக தீவிலும் இந்தோனேசியாவிலும் வாழ்கின்றன. இன்று பேரழிவுக்கு பெருங்காடுகள் உள்ளாகிவருகின்றன. யாவகம் - மணிமேகலையின் சாவகத் தீவு.
யாவக தீவுக்கு பெயர் தரும் யா மரங்கள்:

இலங்கை யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி இருக்கிறது. இலங்கை தீவின் பாலி இலக்கியங்களிலே ரமணதேசம் எனப்படுகிறது மியான்மார் நாடு. இதன் சரியான பெயர் அரமண தேசம் என்பதாகும் என இரா. இராகவையங்கார் (தமிழ் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு) விளக்கியுள்ளார்கள். https://en.wikipedia.org/wiki/Ramannadesa
கறி என்பதை curry என ஆங்கிலத்தில் எழுதுதல்போல ரமணதேசம் ஆங்கிலத்தில் ramannadesa ஆகிறது. பழைய தமிழ்ப் பெயரான அரமணநாடு என்பதன் தாதுவை  தென்கிழக்காசியாவின் வரலாற்றறிஞர்கள் மேலைப் பல்கலைகளிலோ, அந்நாடுகளிலோ இன்னும் எழுதவில்லை. அரமணம் என்னும் ம்யான்மார் தேசம் அருமணம் எனவும் கல்வெட்டுகளில் வழங்கிற்று. யானைகளுக்கும், தந்தத்துக்கும், அகில் என்னும் நறுமணப் பொருளுக்கும், குங்கிலியம், சாம்பிராணி போன்ற மரங்கள் தரும் நறுமணப் பொருள்களும் தமிழர்கள் அரமண நாட்டினின்றும் இறக்குமதி செய்தனர் என்பது சரிதம். அடம்பு/அடும்பு, அணங்கு/அணுங்கு, போல அரமணம்/அருமணம் என்றும் பதியப்பட்டுள்ளது. கொங்குநாட்டின் சமணக் குரவடிகள் அடியார்க்குநல்லார் இல்லாவிடில் தமிழிசையின் வரலாறே விளங்காது. அவர் அருமணவன் = அகில்வகை என்பதையும் விளக்கியுள்ளார்கள்:
அருமணவன் - A kind of eagle-wood, used as incense; அகில்வகை. (சிலப். 14, 108, உரை.)
அரமணம் தருவது அருமணவன். நன்னூலின் முதல் உரை மயிலைநாதர் என்னும் கொங்குநாட்டு முனிவர் செய்தது. அதிலும், அருமணவன் வருகிறது: MTL gives:
"அருமணம் arumaṇam , n. See அருமணவன். (நன். 272, மயிலை.)
அருமணவன் arumaṇavaṉ , n. 1. Name of an island noted for elephants and aromatics; ஒரு தீவு. அருமணவ னானை (திவ். திருநெடுந். 14, வ்யாக்.). 2. Elephant from the above island; அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)"

அகிலும், தேக்கும், வேங்கையும், யா (/ஆ = ஆச்சா, நச்சர்)இன்னபிற மரங்களும் நிறைந்த நாடு  மரமண நாடு. மரமண > அரமண-/அருமண-. 
ஒப்பீடு: மர்மக்கலை > வர்மக்கலை. தமிழின் மருமன் > வர்மா (வடமொழி) ரமணதேசம் என பாலி இலக்கியமும், அரமண/அருமண நாடு என தமிழரும் அழைத்த மரமண நாடு வரமண நாடு ஆகி, வர்மா (Burma) எனப்படுகிறது. மரமணம் மிகுந்த நாடு அரமணநாடு. மலர் > அலர் போல்,  மரமண > அரமண தேசம் (=ரமண தேசம்). https://en.wikipedia.org/wiki/Ramannadesa அரமணத்தின் தலைநகர் கடாரம் என இராகவையங்கார் எழுதியுள்ளார்.


நா. கணேசன்

தேமொழி

unread,
Jan 12, 2016, 12:36:57 PM1/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Tuesday, January 12, 2016 at 9:21:39 AM UTC-8, N. Ganesan wrote:
On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
மகர ஒலி என்றும் மருவாது.

பொருள் என்ன?  


அம்மா. மா, மம்மிம் உம்மா என பல மொழிகளிலும் மகரம் மருவாமல் இருக்கு. காரணம் ஒட்டிய இரண்டு உதடுகளும்  திறந்தலா ஒலிப்பது.
பகரத்தல் நான்குவகை ஒலிப்புகள் இருப்பதுபோல் மகரத்தில் இல்லை

அதுபோல் ஓகாரமும்

மகள் - மோளே(மலையாளம்)
கோழி- கோடி(தெலுகு) ஓகாரம் மாறலை.
ஆம் = ஓம் ( ஈழம்)
ஐயா = யோவ் (கொச்சைத்தமிழ்)
போ = ஓகு (கன்னடம்) ஓகாரம் மாறலை


பிரணவத்தில் ஆ- என்னும் ஒலி ஓ- என்றாகிறது. இது தமிழ்ச் சொல்.
ஆ(ம்) > ஓ(ம்): 1917 என்சைக்ளோபீடியாவில்
 Om by Keith, A, B., pages 490 to 492 in Encyclopaedia of Religion and Ethics, editor James Hastings, Vol. IX, Edinburgh 1917
(இந்த கட்டுரையை வெள்ளுரையாத் தரணும்).

இங்கிருக்கிறது திரு. கணேசன்  >>> https://archive.org/stream/bub_gb_HT0TAAAAYAAJ/bub_gb_HT0TAAAAYAAJ_djvu.txt

நூலின் 490-491-492 பக்கங்களில் காணப்படும் கட்டுரை ஓம் பற்றிய பகுதி மட்டும் கீழே .....

OM.— Tbe origin of the wofd em Is wholly na- 
eertein, It haa been traced to a pronominal baae 
99- aad ite formation haa been oompared with that 
of ay-om, ' thia,' on the theory that the whole WOld 
aoam waa resolved by the proceaof ■iiidiiiiinilnnpii 
into au-m, whence came by ordinary enpnonic com- 
Unation om. For the development oi sense may 
be cited the fact that hoe illvd became the French 
oui, om liaving oft«n definitely this meaning. Bat 
the evidence in support of thin view is quitt; inade- 

aaatf, iind the most probalde explaiifitiiiti is that 
lie word is jiundy an exclfirna! ion, lH>int; the nana]- 
ImmI form nt (/, wiiii'U a^MUi i- cotiiieutod with d. 
Thin vii'w is stron;^ly sujiiMirtcd ijy the fact that 
the comiiion phra-ne om inlvnt/n alternates with 
both o iracnva and a .(rdmifn, and the na.inlizing 
of sounds when prolo!i).'e<l in pronunciation is a 
regular part of Vedic usage. A farther ati^estion 



of its origin i«( contHiiu-d Ln the eailii'st name j^iven 
to tlie sound, the \vord prtiimni. It is [rroUil'lr 
that this t*!nu properly denotea the protract iiij; oi 
tbe la»t xyllable of tbe offering verse (ydjya), 
which waa namliied, the vowel being altei«d to o, 
and that oe» ae an iDdemadent ex 
derived from tide we. Vith thb 
the rule «l Ike 0MUUtf (Ptviai, vL 1. «^ I 
ing to wkManortor Mog a baiara 4 
aa uoal NBoh b otHR, balle aaritted. 

That em ie not a primHlfe eadamation ie ■■p' 
ported by the fact oT ita comparatively late 
pearance in the literature. It doee not appear at 
aU in the Rigveda, which showi that it does not 
belong to tbe earlieat sacerdotal literature, and it 
ia equally wanting in the Atharvavedn, which 
shows that it waa not an exproaaion in popular use. 
In the Taittirixfa SaMkitA it does not oocor in any 
mantra pansa;^, bat it is aihuksi to OOOe as the 
pr-innrii, iti which passn^e [ill. 2.9.6) it clearly 
dei;otc^ till' Miiiud at the end of the offeiinj: ^L•r^<-• 
uttered by the liutf. In the Vaja-ffinryi S'lrnJuUl, 
on tbe other hand, we Hi iiniUy timi ■mi in the 
phrawe om pratiftfut (ii. 13), and it m Btati-d (xis. 
251 thrit hy nn-.-iiiH of the praxam^ the form of the 
ia.ilr is is ninde conipli't<-'. The Maitnli/uni S'tm- 
hU>i also usos om in the jihra-^f om jfriimyn (iv. 
I. 11) and in a set of esclatualiouit in iv. 9. 21. It 
is, however, ia the BrAhmaneu that we first find 
the definite use in the aaiteverative sense; the 
AUanva BiHknutna (viL IS), in deeeribing tbe 
mode of the leeitatMNi of tbe l^iend of SwMt^ena. 
which was retlted w the day «f Mwl i itim ia the 
ceremony of il»«aHMralln «( ft IdDg^ I 
therMpomatoeMhYe — ^ 



in the rite the Aofr' nrta* b tobeaa «%Mli 
hf the ad kmn fti, while the reeponee to eeeh OMM 
vHie li to be a tatha, oo the graaad thife tb» 
former response is divine, the eMOIld haMM^ aad 

this distinction is preaerved ia tiM eWnu vUtih 
deal with the rite. The ordinary nee as a solemn 

* Yea' is found more freely in the Satapatha Brdk' 
matui (i. 4. 1. 30, x. 6. 1. 4, si. 6. 3. 4) and eUe- 
where. But ite use is confined to verr formal 
responses, and normally to rettponaea in the ritual. 

Much more important than ita use as a pai tn Ie 
of a**everRtion is the development of its use as a 
my-tiral symUil embody ing in itself the easeiR-i- of 
tiie Vedas and of tlie universe. The finit evidenee 
of tbia lm|K)rtnnt p<i>ilioii of ilie word is to be 
found Ln the Aidm-ifa lUnfantma [v. in witu h 
it is (liH lareil th.'it inn is the \M)rld of he.'iseii and 
the Buu, and where it is resolved into the tiiree 
letters a, «, and m. Tbeae in turn are derivctl 




tbeae from earth, atmoephere* «M afar. loe pea- 
be later than the i«* el tbe text, batik 



laeatof 



Kb 



■age may 

b of H Moial vatoa ae it oaaae I 
wUalieMM to a hndlatbe Up 
noteworthy that it bee DO pataUel T 
BHOtmmta at in ea j other B t M rn a ^a text prior 
totbeOopa^Ao. 

Ia tbe Upanifodt tbe doctrine of the sacrod 
character m the syllable is steadily dereloped. 
The raiMiriya (L 8) dedarea that it is tbe Bkabana^ 
the holy power which constitutes the univme, and 
derives tnia conclusion from the fact that in the 
ritual om takes an important place in each part : 
thus it is employed by the hotr, the sdm<tn sin^-er, 
tlie (uihi-iiryu , and the hrnhiruin, and fornix an 
integral ['art of the ritual of tlie cjj/n i7o.^i-'r, tlie 
most regular of all Vedic oltcrinj,'*. The eMtnce 
of this treatment of the syllable is to make it a 
syuibol of the Brahman and to substitute medita- 
tion upon it in place of study of the Veiiits -an 
idea helped by the doctrine that the word rej^e- 



Digitized by Gopgle 



I 



401 



Kent* the e*!i«nce of all thrue Ve<las a.nd of exi«t- 
enoe which the Aitnrtyn Brdhmanit first 8et« out. 
The Kathikri Vp'tnUnd (n. 15)declareH that all the 
Veda« prtiolaiin the wyllable om, aad that it is for 
it« sake that men practiae hoUneas. But the full 
derelopment of the doctrine is fint found in the 
GopoMa Brahmtma, which contftin» two elaborate 
Moooattef «m: (aavimfQUemd Weonem^fo- 
MBtaiy and ttmbm mm tmmun on, it, aad 
constitute the Fttt^nm Vpanifod. AeoordiDg to 
the first «f Hmm afleooBtt, the Brahman enatod 
Brahmft m Butaenline on a lotus leaf. He in turn 
eraated urn with two Iett«rH and fonr mora. The 
totbtterof cMproduL-«Ml the waten, the eeoond 
tihe laaiiMrice ; then the first three iiMftr, wUah 
no doubt repraaent the three svUables in o, pro- 
noonced witn prolongation, proanoed earth, atnio- 
apbere, and heaven ; fire, wind, and nun ; the three 
Vedas ; the three vydhj-tis ; the three nietri-s, 
gaijatri, triffuhh, and jaij'tii, anil mi on. So far 
thea<-count isinfuir ucidni with thiit uf thcfailier 
text*, but the special Alharvan c hiinu ter of ii i.s 
nede clear by the derivation from the r »<ciuiid 
(taken from the o) of wat«r, moon, the Athnrvn- 
rfd^i, om lUiAi, janat, which is the vyQhrti of the 
ahgimt, or drenUfnl formnla*, of the Athnrvaivfia, 
tbv anufluhh metre. L-t<-., wIjLIl' from the letter in 
are derive»l the Ililulsa Puninn and other cute- 
'/.irieH id literature, musical instrttmente, singinK 
and dancing, the Orhati metre, etc. It is aJded 
that with om the brahman priest is aUe to make 
food all dafaote in the aacrifioeb aad that the 
lenetitkin el em n tiwuead tUMe eiouw eU 
dMina. la thewoaadaeaomit wabamthat la 
«M of Ouir tetainlulile eoafllete die «Mnw de- 
taled the iDdawita the latter fallowed the lead*- 
ddpttfeei, vheaoe om reoeiTed the leward that no 
heill^ text mii^t be recited without it, whether 
fcA, fojnt, timmiit er Uokn . In the supi>lementar^ 
remarks other dehiHi of the word are siven ; it u 
■tated to be Dnnoaiioed differently in the different 
Vedaa, and Ite foor mens, which are here differ- 
ently exptained from the account given before — 
which indeed eeema to assume five — are connected 
with the deitieK Br»hm&, Vi^nn, I^na, and Sarva, 
the two last bein;^' forniH of Aiva. 

The Upanii'idi eoiinected with the Athnrxfavfdn 
naturally develop twrtlier the views of the Go}>'ithn. 
They devote their uttention in lar;;e rneji-^urf to 
the means of nieditation by which the .'•eeker tUr 
thf ISriihuian can attain union with the llrulimiin, 
AvA lor tliis purpise i*et little ini{>urtAnce upon 
knowli-dge of the scrijitures. In the place of huc Ii 
knowledge is set the stud)- of the sylhiLln- 
which i» described in a serieK of meiai.iioi>. Tlius 
it la, in one view, the bow from « hieh tiie «oul as 
an arrow flies to the Brahman, in another the 
mmm wUoh it ehot from the body as a bow in 
eeda' to piecee the darkness. It is also the ship 
en wUali nmntwiebover the etheref the heeit, 
•ni tke ikaiiot vUeh heeie him to thewwld ef 
llwliMl _Tlie eld aaaljrii into thiee mene 
In tta JTatfr^foyi Upeaufad f tL 8). which des c ribee 
them ee fire, eon, and wind, and calls them the 
eaaence of all thinge. The Praina Vpani^d (v. 5), 
acting on the same basis, states that he who medi- 
tates by one eiera attains the world of men, by 
two the way of the fathers {pitryana), and 
tiijee the way of the gods (tkva^tna). This con- 
eeption, however, changes, and, « hile four or five 
•MfW era tecognixed in the Gopatha, we now hear 
of a fbnrth mom-lem part which forms the crown 
of the Bvllable {Maitrdyani, vi. 23). In the latest 
►•tn^'e of the .Atharvan U/Minifadt this i.n definitely 
(-.-tiled the third and a half mora, and is Miid to 
lead to the snfireme poal, and to he represented by 
the point \hinthi) of the anuxvarn. It» cwund is 
varioaaly disscribed, but normally as some sort of 



echo, and Rome versions turn the half mora into a 
fourth or add to a half mora an echo. It is, how- 
ever, made clear that the meditation on om is not 
the highest stage, which can be performed only in 
absolute silence ; and the syllable is compared with 
a chariot which is ahaudone<l when tlie liigh road 
ceases and the foot-path bqpns. Om is onlv, altar 
all, a word, end. ■eeewdhigfconiH^ BMHiattMiieto 
Dothinsness in tnai erhldi Is not a word. 

Side Dv aide with the philoeophic development ef 
the eymoolism of om in the Vpani^adi its riteal 
USB is elaborated aad closely defined by the Srauta 
SHrat. The varie^ of its employment does not 
flffltwal the essential nature of its uses, which are 
eitiMrtiM eolemn affirmation or agreement, as in 
the reeponee (pratigara) of the ttAmnpt, or the 
intimation eT the commeneeraant andTend of a 
I reeitation or an oflSsring Terse— a usage which 
e.\plnins the statement that om separates divine 
and human utteranee. The spcri.il nature of the 
word i- iiiiukL'il uut hy tliL- ciiil- tuk-jii t<j define its 
mmle of proniinciation and the treJitriu nt of final 
letters" ht-fore it, wlieii it ends a Keiitein 1 he 
Prritisilkkyii of tlie Iligniln records it« U(*e in 
aiiprovid, while tlie I'nttiiitkhijiml the Vaja.vintx/i 
Snmiiiia heems to reli r to it-- \tse an ronimencinj; a 
litjiny by it-s aysertiun lh;it in the X't iias the word 

om, here deiioribed by its less usual name omkOra, 
has the same eanee aa oMn in the ennent apaeeh 

In the ttUnu which deal with the domestic 
(itBalendenatonmiylawa difflnent^opeetof the 
naeofee>fcentthntt w nl e d In the Sfwta aatnu 
preeantaitaalt In the latter ee» ie merely need ee 
an important port id the redtation ti urn tanta, 
hut as early ae the BamdkHyama DkurmmSQtm we 
are told that a man should daily redte the Tedn 
privately, be it only the syllable om or the vydAfAtt^ 
and that this oonstitntes the offering to BrahmA. 
Similarly, while an aseeUo is not allowed to give 
up the study of the Veda altogether, he is per> 
mitted to cuntine himself to the meditation on om, 
which is the root of the tree of the Veda and its 
essence, and by this means he beeomee united with 
ttie Hrahman 10. 23 f.). Still more im^tortant 
is tli.^ jdaee taken hy in connexion with rites of 
ex)iiation and puriiitatioii. Itaudliriyana, in set- 
ting' forth (iv. 1) the advantages of tlie -u[ii're,«sioa 
of the breath, adds tiiat </»i begins and ends the 
Vi'da.<, Mill th.it "HI and the pi/a/ifiw are the 
eternal and everhusting Hraliman. For him who 
engages in reciting om, the n/iihftit, and the 
gdyiitri no danger exist-n anywhere. Sixteen sup- 
prejy^ions of the breath, acoom^muied by recitation 
of the vydiiTtit and of om re|K.'ttte<l daily, after a 
month purify even the slayer of a learned hrahman. 
The same rales reappear in Vasi^{ha (xw. and 
XX vL ), and by being repeated in the oode of M ann ( s i. 
249 f.) complete tlm holineesof the word om as iwrt 
of the flenmonlee ol jmrification. On the other 
hand, the nae ef eat m equally necessary to the 
magle worlwr t the KimKka SiUra, that storehouse 



of Indian masio, in deeoribing (ix. 8 f . ) the prepara- 
tion of the holy water, insists that the prepaiatian 
shall be accompanied by the use of the ajf liable^ 

In the philoHophic literature om holds its place ae 
the oliject uf m<Mlitation in tlie effort to realize the 
Brahman. Thus in the Bhagavad-OitdHLitUm^' 
fiod with Krana aa the universe and tfie BielHnan, 

and the triaa om tat tat is declared as comprehend- 
ing the nature of the Brahman. In the system of 

the Vedftnta as intcrnreted by Brtdarflyana (Siilra, 
; iv. 3. 14 f.) it M l ills that the use of om for pur[H)»e9 
I of meditation falls under the same disadvantage a» 
I all meditation on the Hrahman by means of sym- 
I 1m>Is : the result is not tlie clear vision <if the 

lirnliman, but only the reward appropriate for the 
i meditation on the particular symbol in each ease ; 



Digitized by Gopgle 



9 



I dow not hmnDOBiae with that «l 
the AhiIm Vpanifadf which, a« w« ham waa, 
\ Uut mwUtatian on the tfaraa morm of am 
• iutMnm aad thoR, of ooanw, to tho 

nor 9am H oppe&r that this «ia» of 

OW WM oTvr itaiMnJIy aooepted, medit*UoB on ««» 
Wag ngiirded as a normal tX».<i% in the dsvelop- 
men I of the knowledge of the hiKheBt Brahraan. 

Thii punition of om is intensified in the Yo);a 
•lyKtem aw it app««n in the tutm of Pat-anjali (i. 
'_*7 'JH) ; it in there hn iii;,!it into ruinifxii lU w ith 
Isvara, (i(kI, nnd, under 'In- nann* of pr'ihnr^i, dc- 
clared to cvpn'^H liim. Th«? rrjM'lition of tliu weird 
and rpflrxiiin mi tnoaniiiy are enjoineii a« desir- 
jihle, Hiid it 1^ •'tilt, d tlisttlie renttltof this practice 
it thf rciiii.v;il nf ■ d^taclpB and the ri;,'ht knowl<'d;;e 
<d him wlio tliKil^x in an inven-i' »i<y, i.''. of oiif 
who dixen not i-ewk truth in ordinary i niiM ioiisnesH. 
Hence the word has ft driinitf an.i miimrtant place 
in all subsequent doctrint* of Vo^a piractices. 

On the t>ui)ular nide the srllable om persists 
thnmghoat tue whole of Indian raligioo as tlie 
pfvper aocompaniment of ntantrtu, w h oth w Y«dk 
ornoC Thus, on the oao bud. it is «ndlBf«ii> 
•Uyto oeeonipanT the mmni ffAinCK wbkhtlli 
fwk «f tha duly dn^ol «Im fitkodoB IDadn to 

_^.._m. — -"ays ft gTBOt 



H plft] 

pwt 1m Ifco l—ilMoMo TWioHw of Tantrio man 
hmtiAUk fam on taapartant foataro of the real 



. ^ jof Indift. Its popalarity depends no doubt 
in ^rt on the normal eq oat ion of its elemeota with 
the Hindu trinity of Vi«nn, sira, and Brahmft whieh 
in ftlnody fbandf in the later Vpani^ad* and is f ore- 
iowM Murlier. On the other liand, de«pit« its 



popular oliancter, it remaiim very oacroxanct : at 
the festival of SlTaon "-Ttli February, wlicn evt n 

the lowest castes take jrirt in (lie rite*, while 
women are permitted tt> make of thf yiuTntm.t, 
an exc«!ptioti i»« made of the syllable om, douhtlesa 
lifi-ausf ot its >]n-rial liuiiiii-'". ' As an anH])icionM 
symbol, from thu 6th otit. a.u. onwaraB, the 
initial letter is found in diiforont forms to dRno(« 
the commencement of a text in MS.S and inscrip- 
tions. 

To Jainism and to Buddhism the nyllable om 
and its U'-u \m lo primarily characteristic of the 
Brfthman, bin the fori-* of the p<}pularity of the 
nyllahb' i.s shown by the fact that it became an 
intecral l>»rt of the mantra of Avalokiteivara in 
Uie Buddhiat pantheon, the famous oik manipadme'^ 
AOm. So in the crypto-Buddhism of the iOth oent. 
to (Mho we find that firam Iko i fl o y a. or Toid, ia 
datifod the profkim, thaa Magiiic too wm t mn 
«hM8 to the niaaiplo of aooeot% ol tho aOuliat 
■ehool of BuddlriaiB. 

In tho Fmrtbfot heeides assertions aa to tti 
general aaaetity we find the syllable tomod to 
Boatarian nse. Thns in the Lihga Purtifm tho 
Ukga, which reduces both Vi^nn and Brahnltotlie 
recognition of their inferiori^ to Siva, bears npon 
it the sacred syllable. On tba other liand, it is 
Mud that.the three letters represent Vimn himself, 
his wife Sri, and the worshipper; that the syMable 
i« the three Veds-H, the three worlds, the tlireo 
sacred tires, and the three foot.-iteps of Viijnu ; 
and that by meditation it devotees attjiin 

Mipremo bliss. 

LmaiTras.— Tfa« d«1v*t4on ot om troia anim i« def«nd«d 
by P. Max MiUl«r, SU SgtUmi IwUaa PhOotepkp, otvr 
•d., London, 1009. p. Stit., hut li daSnltcly rr/ectcd by 
O. Bbhtlbigk und R. Roth. Santtrit-Wirtfrbueh. VrlmgnA, 
ISTA 76. i. ui^i, for the pratMra 4*e J. Ergeliiiv:. Sl:K xxri, 
(liaS; tils, «. a. <»n in the Up<ini*adi la Jim u»»ed by P. 
bensMn, The Phitotoph^ i./ thf r),\nuhadt Kuk. tr., Edln- 
buirgu^906. pp. 101, 3aa-S3'l ; wm: »1»o a. Web«r. InditeKt 



ilhiamotOrimudekIt with by NaceodnllalkViBHi Jlfad«m 
AaddAwn. CalculU. X»U, pp. 44. flik fli, 71, n. Vmimmtm 
aM«fsis sss G. Mkw. nliilmi»P»l»ttrmfkU, WUmtm, 
III0e.p.H. PorMMliiliMfanBiilsMATsloUcaiTuaMsL. ii 
la Vall«« Poas^, F>ixii. 1909. p. S81 . Om lajki 

VrUinU U AiwcamtA In SbH xxxiv. |l*i»0| HWf-. xxitiU. f 
IDS, l«0-UW, 282 L, xlvW. (10(MJ Ul (., SOS. OU. <«3S-«86. 

A. B. !(■ 

N. Ganesan

unread,
Jan 12, 2016, 1:14:15 PM1/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Tuesday, January 12, 2016 at 9:36:57 AM UTC-8, தேமொழி wrote:

பிரணவத்தில் ஆ- என்னும் ஒலி ஓ- என்றாகிறது. இது தமிழ்ச் சொல்.
ஆ(ம்) > ஓ(ம்): 1917 என்சைக்ளோபீடியாவில்
 Om by Keith, A, B., pages 490 to 492 in Encyclopaedia of Religion and Ethics, editor James Hastings, Vol. IX, Edinburgh 1917
(இந்த கட்டுரையை வெள்ளுரையாத் தரணும்).

இங்கிருக்கிறது திரு. கணேசன்  >>> https://archive.org/stream/bub_gb_HT0TAAAAYAAJ/bub_gb_HT0TAAAAYAAJ_djvu.txt

நூலின் 490-491-492 பக்கங்களில் காணப்படும் கட்டுரை ஓம் பற்றிய பகுதி மட்டும் கீழே .....

Thanks. there is a .txt file also that archive.org provides. What I meant is this 1917 essay should be given
with proper Indic diacritics (ISO 15919).

Same thing for Parpola's classic 1981 OM paper. We must give it in Unicode plain-text format.
He told me that, back then, Indologists were very resistant to show Tamil/Dravidian in OM.
Things are changing in Indological world :)

N. Ganesan

N. Ganesan

unread,
Jan 13, 2016, 6:22:36 AM1/13/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு  > அடுப்பு

”போர் அடுதானை சேரலாத!”

”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”


உவமையாகு பெயர்கள் பல அறிவோம். உவமையாகு வினைசொற்கள் பற்றி காட்டுகள். வரையறைகள் உண்டா?
உ-ம்: சமைத்தலுக்கும், போருக்கும் ஒப்புமைகள் தென், வட மொழிப் பழமையான இலக்கியங்களில் உண்டு.
எனவே, அடுதல் என்பது உவமையாகு வினைச்சொல் எனலாம்.

அடுத்தல்/அண்டுதல்/அட்டை/அள்ளை - நெருங்குதல் என்னும் வினைச்சொல்லும்,
களவேள்வியில் அழித்தல்/சமைத்தல் என்று பொருள்படும் அடுத்தல் (< மடுத்தல்)
வெவ்வேறான தாதுக்கள் கொண்டன. அடு- < மடு-: In the Heroic Age classics
(Greek, Latin, Sanskrit and Tamil), the King roasted the enemies, he parched the enemies in battle, etc.,
are common.

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Jan 13, 2016, 8:59:19 AM1/13/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம், சந்தவசந்தம்


13 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:13 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
அது சரியே. ஆனால் நான் கேட்பது,

அடு= அட்ட ஆவதுபோல் மடு = மட்ட ஆகி அதே பொருளைக்கொடுக்கிறதா?

 

N. Ganesan

unread,
Jan 13, 2016, 5:33:36 PM1/13/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Wednesday, January 13, 2016 at 5:59:16 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
13 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:13 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு  > அடுப்பு

”போர் அடுதானை சேரலாத!”

”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”


உவமையாகு பெயர்கள் பல அறிவோம். உவமையாகு வினைச்சொற்கள் பற்றி காட்டுகள். வரையறைகள் உண்டா?
உ-ம்: சமைத்தலுக்கும், போருக்கும் ஒப்புமைகள் தென், வட மொழிப் பழமையான இலக்கியங்களில் உண்டு.
எனவே, அடுதல் என்பது உவமையாகு வினைச்சொல் எனலாம்.

அடுத்தல்/அண்டுதல்/அட்டை/அள்ளை - நெருங்குதல் என்னும் வினைச்சொல்லும்,
களவேள்வியில் அழித்தல்/சமைத்தல் என்று பொருள்படும் அடுத்தல் (< மடுத்தல்)
வெவ்வேறான தாதுக்கள் கொண்டன. அடு- < மடு-: In the Heroic Age classics
(Greek, Latin, Sanskrit and Tamil), the King roasted the enemies, he parched the enemies in battle, etc.,
are common.



அது சரியே. ஆனால் நான் கேட்பது,

அடு= அட்ட ஆவதுபோல் மடு = மட்ட ஆகி அதே பொருளைக்கொடுக்கிறதா?


ஆமாம். மட்டம் = லெவெல் என்ற சொல் இருப்பதால், மட்டித்தல் என வருகிறது.
மட்டித்தல் - இதன் முதன்மைப் பொருள் "அழித்தல்"..

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jan 14, 2016, 9:07:05 AM1/14/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம், சந்தவசந்தம், DEV RAJ
மடு என்றால் தீவைத்து என்ற பொருத்தமா என தெரியலே

”தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக்,”
உச்சிப் போதில் முலை யுண்ண அழைத்தது அத திருமொழி ...வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து”

தீ என்று வருவதால் மடுத்து எனும் சொல்லுக்கு வேறுபொருள். மூட்டி (கோள் மூட்டு) என நீங்க சொல்லுவதுபோல்.

அதனால் அதற்கு இனிசியேட், அப்ளை என்பவற்றில் ஒன்றாக இருக்கலாம்

செய்யுள்களை விடுத்து தற்காலச்சொற்களில் மகரம் அகரமாக திரிந்தவை உண்டா

மூடு, மூய்: (தெலுகு) மூசு( தெலுகு) நான் சொல்லுவதற்கு காட்டுகள். மகரம் திரியலே, மற்றவைதான் திரிந்தன.

14 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:21 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Tuesday, January 12, 2016 at 6:27:53 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:

12 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
திருவாசகம் சிவபுராணத்தில் 
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”


நிலைமொழியின் இறுதி ம் இல்லாமல் இப்படி வரும் இடங்களை தேடவும்,

ஆம். தேடினால் கிட்டும். உ-ம்: கம்பனில் மு-/மோ- எனத் தொடங்கும் அடிகளில்
மோனைக்கு மோய்- என வருகிறதா எனப் பார்க்கலாம். ஓய்- என அச்சிட்டிருக்க வாய்ப்புகள் பல.
சிந்தாமணி, சூளாமணி, சிலம்பு, பெரியபுராணம், தேவாரம், நாலாயிரம், ..... பார்க்கலாம்.

விள்-/வெள்- என்பது போல தமிழின் அடிப்படையான வினைச்சொல் ஜோடி மூய்-/மோய்-
கலியாணம் மூச்சாச்சு, மூஞ்சுபோச்சு போன்ற கொங்குவழக்குகளிலும்,
முய்-/மொய்- என உற்றார், உறவினர் கலியாணம் முய்க்க (=முடிக்க) தரும் பணம் இச்சொல்லால் வருவது.
மூய் என்றால் மூடி (உ-ம்: சட்டியை மூடி வைக்கச் சொல்லும் சொல்). இதைத்தான்
மாணிக்கவாசகர் ’முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்’. எனப் பயன்படுத்துகிறார்.
உரைகாரர்கள் விரிவாக எழுதியுள்ளனர், பார்க்கவும்.

சந்தவசந்தத்தில் வித்தக இளங்கவி விவேக்பாரதி (பெயரைப் பாருங்கள் பாரதமாதாவின் எழுச்சிக்கு
கால்கோள் இட்டவர் சுவாமி விவேகானந்தர், பாரதாமாதாவை தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்தவர்கள்
வஉசி, பாரதியார். பாரதமாதா பள்ளியெழுச்சி தந்தவர் பாரதியும் பெயரில் இருக்கிறார்: விவேக்பாரதி! வாழ்க)
காளமேகம் வெண்பாக் காட்டினார்:

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் - சிகந்த
நுசுமகரங் கும்பமீ னம்பன் னிரண்டும் 
வசையறுமி ராசி வளம் .

கும்பமீனம் என்பதைக் கும்பம் மீனம் எனப் பிரிக்கவேண்டும் அல்லவா?
அதுபோலத்தான், ”முழுதுமோய” என்பதைப் ”முழுதும் மோய” எனப் பிரித்து உரை
தருகின்றனர் தமிழ்ப் பெரும்புலவர்கள். கம்பன் உதாஹரணம் உவமையாகுவினை
பற்றிய வினா விடையில் பார்ப்போம்.

உவமையாகு வினைச்சொல்லாக மடுத்தல்/அடுத்தல் ‘சமைத்தல்’ என்னும்
வினையானது அரசனின் போர்க் களவேள்விக்கும் வருகிறது எனக் குறிப்பிட்டேன்.
களவேள்விக்கும், சமையலுக்கும் உள்ள தொடர்புகளை வேதம், சங்க
இலக்கியங்களிலிருந்து அருமையாகக் காட்டியுள்ளார் மஹாவித்வான், கவிபாஷாசேகரர்
ரா. ராகவையங்கார் அவர்கள். அதனை அனுப்புகிறேன் பின்னர்.

On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு  > அடுப்பு

”போர் அடுதானை சேரலாத!”
”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”



மடுத்தல்/அடுத்தல் - உவமையாகுவினை இங்கே. 
அது சரியே. ஆனால் நான் கேட்பது,

அடு= அட்ட ஆவதுபோல் மடு = மட்ட ஆகி அதே பொருளைக்கொடுக்கிறதா?


ஆமாம். மட்டம் = லெவெல் என்ற சொல் இருப்பதால், மட்டித்தல் என வருகிறது.
மட்டித்தல் - இதன் முதன்மைப் பொருள் "அழித்தல்"..

மணி கொள்குட்டிம மட்டித்து, மண்டபம்
துணி படுத்து,அயல் வாவிகள் தூர்த்து, ஒளிர்
திணி சுவர்த்தலம் சிந்தி, செயற்கு அரும்
பணி படுத்து,உயர் குன்றம் படுத்துஅரோ - கம்பன்.

ஏடுகளில்,’மணிகொள்குட்டிமமட்டித்து’ என இருப்பதை
’மணிகொள் குட்டிமம் மட்டித்து’ எனப் பிரிக்கிறோம்.
‘மணிகொள் குட்டிமம் அட்டித்து’ எனப் பிரித்தால் மோனை பொருந்தாது. மட்டித்தல் = அட்டித்தல் என்றாலும்.
(மலர்முலை ஆகம் என்ற உதாரணமும் மோனைக்கு நோக்கினோம்).

இலஞ்சி/ஈரோடு/சென்னை தேவராஜன் அவர்கள் சுந்தர காண்டம் வான்மீகி, கம்பன் ஒப்புமை சொன்னார்:
வால்மீகியின் ‘வாக்யக்ஞன்’ கம்பரின் ‘சொல்லின் செல்வன்’ ஆகிறான்.

கண்டேன் சீதையை - இரு ராமாயணங்களிலும் :

த்ருஷ்டா ஸீதா மஹாபாஹோ ......
த்ருஷ்டா தேவீ   ந ஸந்தேஹ: .......
                                        (வால்மீகி)

கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்  (கம்பர்)

மணி ஸ்ப²டிக முக்தாபி⁴​: மணி குட்டிம* பூ⁴ஷிதை​: |
தப்த ஹாடக நிர்யூஹை​:  ராஜத அமல பாண்டு³ரை​: || 5-3-9||

(வா0 ரா0)

மணி கொள்  குட்டிமம்*  மட்டித்து, மண்டபம்
துணி படுத்து, அயல் வாவிகள் தூர்த்து .......

(க0   இரா0)

மணி குட்டிமம் - மணிகொள் குட்டிமம் (pials inlaid with precious stones)

இரண்டும் சுந்தர காண்டத்தில்.”

-------------------------------------------------------------------------

மடு- > அடு- : மட்டித்தல் > அட்டித்தல்

*9
தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான்காண்;
திரு ஏகம்பத்தான்காண்; தேன் ஆர்ந்து உக்க
ஞானப்பூங்கோதையாள் பாகத்தான்காண்;
நம்பன்காண்; ஞானத்துஒளி ஆனான்காண்;
வானப் பேர் ஊரும் மறிய ஓடி
மட்டித்து நின்றான்காண்; வண்டு ஆர் சோலைக்
கானப்பேரூரான்காண்; கறைக்கண்டன்காண்---
காளத்தியான்அவன், என் கண் உளானே.

வானப்பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் (காண்)
stood destroying, even the heaven to made it fall down running towards it; (மட்டித்தல் destruction)

நா. கணேசன் 

 
 
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 14, 2016, 1:39:22 PM1/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, santhav...@googlegroups.com, DEV RAJ
On Tuesday, January 12, 2016 at 6:27:53 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:

12 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
திருவாசகம் சிவபுராணத்தில் 
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”


நிலைமொழியின் இறுதி ம் இல்லாமல் இப்படி வரும் இடங்களை தேடவும்,

On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு  > அடுப்பு

”போர் அடுதானை சேரலாத!”
”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”


 
 
-- 

N. Ganesan

unread,
Jan 14, 2016, 1:41:47 PM1/14/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Thursday, January 14, 2016 at 6:07:03 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
மடு என்றால் தீவைத்து என்ற பொருத்தமா என தெரியலே


தமிழில் மடுத்தல் = சமைத்தல் என்றுள்ளது. சங்க இலக்கியத்திலிருந்து.
மடையன்/மடைச்சி என்றால் என்ன பொருள் என்று சிந்திக்கலாம்.
மடைப்பள்ளி, மடம் மடையன் தீ மடுக்கும்  இடம்.

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு - நாலடி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. சங்க இலக்கியம் வழியாகப் பார்த்தால் (சிறுசோறு மடுத்தல் = சிறுசோறு சமைத்தல்)
ஆமை தீமடுத்தல் = ஆமைக்கறியைத் தீயினால் சமைத்தல் என்கிற பொருளில் நாலடியார் வெண்பா உள்ளது.
இதற்கான தேவாரம் (அப்பர்) பாடல் முன்னர் இவ்விழையில் தந்துள்ளேன்.

வலையகம் = இணையம் எனினும் அமையும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 14, 2016, 1:41:56 PM1/14/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Thursday, January 14, 2016 at 6:07:03 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

செய்யுள்களை விடுத்து தற்காலச்சொற்களில் மகரம் அகரமாக திரிந்தவை உண்டா


20 சொற்கள் கொடுத்துள்ளேன் இவ்விழையில்.


வேந்தன் அரசு

unread,
Jan 15, 2016, 6:33:44 AM1/15/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம்


14 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:15 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Thursday, January 14, 2016 at 6:07:03 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
மடு என்றால் தீவைத்து என்ற பொருத்தமா என தெரியலே


தமிழில் மடுத்தல் = சமைத்தல் என்றுள்ளது. சங்க இலக்கியத்திலிருந்து.
மடையன்/மடைச்சி என்றால் என்ன பொருள் என்று சிந்திக்கலாம்.
மடைப்பள்ளி, மடம் மடையன் தீ மடுக்கும்  இடம்.

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு - நாலடி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. சங்க இலக்கியம் வழியாகப் பார்த்தால் (சிறுசோறு மடுத்தல் = சிறுசோறு சமைத்தல்)
ஆமை தீமடுத்தல் = ஆமைக்கறியைத் தீயினால் சமைத்தல் 

தீ மூட்டுதல் என்ற பொருள் பொருத்தமாக இருக்கும். 

N. Ganesan

unread,
Jan 15, 2016, 12:12:21 PM1/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
”சிறுசோறு மடுத்தல்” என சங்க இலக்கியத்தில் வருகிறது. அங்கே ”சிறுசோறு சமைத்தல்” என்னும் பொருள்.
சிறுசோறு மூட்டுதல் என்பது பொருளில் பொருந்தாது. மடம், மடைப்பள்ளி, மடையன், ... சொற்களொடு பொருளைப்
பார்த்தாலும் மட்- என்னும் தாதுவினின்றும் மடுத்தல் = சமைத்தல் என்பது பொருந்துகிறது. மலர் அலர் ஆதல் போல், 
தமிழில் மடுப்பு அடுப்பு என ஆகிறது.

நா. கணேசன்
 


N. Ganesan

unread,
Jan 16, 2016, 11:31:55 PM1/16/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham
மடுத்தல்:அடுத்தல் ‘சமைத்தல்’ வினையிலிருந்து மட்டித்தல்:அட்டித்தல் ‘அழித்தல்’ (போரில்)
என உவமையாகுவினைச் சொல்லாகப் பயன்படுகிறது. அதனை முன்னர் பார்த்தோம்.

மட்டித்தல்:அட்டித்தல் - சேர்த்தல்,  இணைத்தல், பூசுதல், அப்புதல் என்ற பொருளிலும்
பல இடங்களில் பயில்கிறது. முக்கியமான பழைய நகைக்கு ஒரு பெயர் தரும் வினைச்சொல்
இஃது.

மட்டனம் maṭṭaṉam, n. . Smearing, rubbing over; பூசுகை. மான்மதக் கல வைச் சாந்த மட்டனஞ் செய்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45).

மட்டிகை maṭṭikai, n.  Seal of cowdung put upon bundled sheafs of paddy or straw on the threshing-floor or upon corn sacks; களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலிய வற்றின்மேல் இடுஞ் சாணிமுத்திரை. (M. M. 483.)

பூசுதல் என்னும் பொருளுடைய மர்த-/மர்திக- என்னும் வடமொழி வினைச்சொல் இதிலிருந்து
வந்ததெனக் கொள்ளலாம்:

மட்டித்தல் To put on, clap on, daub, as sandal paste; பூசுதல். குளிர் சாந்த மட் டித்து (திவ். நாய்ச். 6, 10).;  To cleanse, as the floor; மெழுகுதல். மணிநிலஞ் சந்தனங்கொண்டு மட்டியா (மேருமந். 629); To mix and knead; பிசைதல். சுண்ணமொடு மட்டித்துக் கலந்த குங்குமக் கொழுஞ்சேறு (பெருங். உஞ்சைக். 40, 222-3). 

Oyster = மட்டி/மட்டம் (due to its joined shell). ஆய்ஸ்டர்கள் மிகுந்த பகுதி மட்டக்களப்பு.
களர் நிலம் - களப்பு. Batticola எனப்படும் ஈழ நாட்டு ஊர். மரமணம் > அரமணம் என்னும்
ரமண தேசம், மரமண > வரமண > Burma என அழைக்கப்படுதலுக்கு மட்டக்களப்பு Batticola
ஆதலை ஒப்பிடுக. மண்ணான்:வண்ணான், மருமம்:வரும- (க்ஷத்ரியர் பெயர், உடற்காப்புக்கலை)
போல. மட்டி/மட்டம் ஆய்ஸ்டர்-மீனின் ஓடு. எப்பொழுதும் ’ஆய்ஸ்டர் ஷெல்’ மட்டித்து (= சேர்ந்து,
இணந்து, பூண்டு) இருப்பதால் மட்டச்சிப்பிமீன் எனப்படுகிறது. அதனால் கடற்கரை நகரப் பெயரும்.
மட்டிச் சிப்பி = Oyster shell. இதே வேர்தான், தேங்காய் மட்டை

மேலே, சேர்த்துக்கட்டிய வீடு மாடி/மாடம். அட்டாலை/அட்டாலி - மேல்வீடு (< மட்டாலை).
அட்டிகை < மட்டிகை (cf. மட்டி = oyster shell):
அட்டிகை aṭṭikai, n. < K. aḍḍike. cf. அட்டு-. Closely fitting necklace of gold wires or of precious stones; கழுத்தணிவகை.
அட்டியல் aṭṭiyal, n. [T. aḍḍigalu.] Closely fitting necklace. See அட்டிகை.
அட்டியல் < மட்டியல்.
அட்டாளை aṭṭāḷai, n. < aṭṭāla. Covered platform for watching a garden; காவற்பரண். (J.)
அட்டாளைப்பெட்டி aṭṭāḷai-p-peṭṭi , n. < id. +. Case of shelves; தட்டுக்கள் உள்ள பேழை. Loc.

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

மட்டித்து:அட்டித்து - கனக்கப் பூசி
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்
(ஆளுடையபிள்ளை திருவுலா மாலை, 11-ஆம் திருமுறை).

திருமங்கை மன்னர் நடராஜா ஆடும்போது
தோளிலே மட்டித்த (= பொருந்திய/சேர்ந்த/இணைந்த) 1000 கைகளும்
திசைகள் எல்லாம் ஆடுதலைப் பாடுகிறார்: பெரிய திருமடல் பாசுரம்,
மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா          (2750)
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,
அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்,
பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,
தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்
கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்           (2751)
மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,
தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?,

மங்கையாழ்வார் சிவபிரானின் தோளில் பொருந்தும்
1000 கைகளை மட்டித்தல் என்கிறார். மட்டித்தல் > அட்டித்தல்
எனவும் வரும். தேவாரச் சான்று தரலாம்:

கருமானின்உரி-அதளே உடையா வீக்கி,
கனைகழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி,
வரு மானத் திரள்தோள்கள் மட்டித்து ஆட,
வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி (அப்பர் தேவாரம்)

ஆயிரம்திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம்அசுரர் வாழும் அணி மதில்மூன்றும் வேவ
ஆயிரம்தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம்அடியும் வைத்த அடிகள்---ஆரூரனாரே (அப்பர் தேவாரம்).

ஒவ்வொரு அடியிலும் அகர ஓசை சிறப்பாகப் பயிலுதலால்,
அட்டித்து என்பது இன்னும் பொருத்தம். அப்படிப் பழம்
பதிப்புகளில் பார்க்கலாம்.

ஆயிரம்திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம்அசுரர் வாழும் அணி மதில்மூன்றும் வேவ
ஆயிரம்தோளும் அட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம்அடியும் வைத்த அடிகள்---ஆரூரனாரே (அப்பர் தேவாரம்)

(ஆண்டாள் வாரணம் ஆயிரத்திலும்
குங்குமம் அப்பி, குளிர்சாந்தம் அட்டித்து என்பதா?
குங்கும மப்பி, குளிர்சாந்தம் மட்டித்து என்பதா?
இருவகையிலும் பதிப்புகள் உண்டு.)
மட்டித்தல் > அட்டித்தல். சேர்த்தல், பொருத்தல், பூசுதல்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 
யாப்பினுள் அட்டிய நீர் - குறள்
அட்டிய < மட்டிய = சேர்த்திய. இங்கே, ஊற்றிய.
தாரை வார்த்தலுக்கு அட்டிக் கொடுத்தல் என்பது கல்வெட்டு.
(அளகத்தின் அட்டிய தாது - திருக்கோவையார். 
அட்டுதல் < மட்டுதல் “சேர்த்துதல்/பொருந்துதல்”, அட்டிகை < மட்டிகை)

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 17, 2016, 8:33:43 PM1/17/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Thursday, January 14, 2016 at 6:07:03 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

செய்யுள்களை விடுத்து தற்காலச்சொற்களில் மகரம் அகரமாக திரிந்தவை உண்டா


நம் கொங்கு மண்டிலத்தில் அதிகம் புழங்கும் ஒரு சொல்லையே தருகிறேன்.

மட்-/மாட்- என்ற தாதுமுளை பொருந்து-/பூசு/-இணை- என்ற பொருளுடையது.
மாடம்/மாடி. மாட்சி/மாண்பு =உயர்ச்சி, பெருமை, அழகு. 
மாண்டார் = உயர்ந்த நிலையில் வாழ்பவர்கள்.

மட்டி/மட்டம் = oyster. அதனால் மட்டக் களப்பு, இதனை சிங்களத்தில்
மடக்களப்பு என எழுதுவர். மரத்தாலாய சித்தம்பலம் சிதம்பரம்,
வெங்காலூரில் காட்டுமல்லேசுரம் காடுமல்லேசுரம், கார்த்திகை கார்திகை,
அரத்தனம் அரதனம் (ரத்னம்), நக்கர் நகர் (திருநள்ளாற்றில் நகவிடங்கர் லிங்கம்
- நேற்று நெட்ரம்பாக்கத்தில் கண்ட லிங்கம் வருணனைக் குறிப்பதாக தெரிகிறது.)
 என ஃபோனடிக் ஸ்க்ரிப்ட்ஸ் எழுதலை ஒத்தது - மட்டக்களப்பை மடக்களப்பு என எழுதல்.

மட்டனம் maṭṭaṉam, n. . Smearing, rubbing over; பூசுகை. மான்மதக் கல வைச் சாந்த மட்டனஞ் செய்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45).
மட்டிகை maṭṭikai, n.  Seal of cowdung put upon bundled sheafs of paddy or straw on the threshing-floor or upon corn sacks; களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலியவற்றின்மேல் இடுஞ் சாணிமுத்திரை. (M. M. 483.)

Oyster = மட்டி/மட்டம் (due to its joined shell). ஆய்ஸ்டர்கள் மிகுந்த பகுதி மட்டக்களப்பு.
களர் நிலம் - களப்பு. Batticola எனப்படும் ஈழ நாட்டு ஊர். மரமணம் > அரமணம் என்னும்
ரமண தேசம், மரமண > வரமண > Burma என அழைக்கப்படுதலுக்கு மட்டக்களப்பு Batticola
ஆதலை ஒப்பிடுக. மண்ணான்:வண்ணான், மருமம்:வரும- (க்ஷத்ரியர் பெயர், உடற்காப்புக்கலை)
போல. மட்டி/மட்டம் ஆய்ஸ்டர்-மீனின் ஓடு. எப்பொழுதும் ’ஆய்ஸ்டர் ஷெல்’ மட்டித்து (= சேர்ந்து,
இணந்து, பூண்டு) இருப்பதால் மட்டச்சிப்பி மீன் எனப்படுகிறது. அதனால் கடற்கரை நகரப் பெயரும்.
மட்டிச் சிப்பி = Oyster shell. இதே வேர்தான், தேங்காய் மட்டை

மேலே, சேர்த்துக்கட்டிய வீடு மாடி/மாடம். அட்டாலை/அட்டாலி - மேல்வீடு (< மட்டாலை).
அட்டிகை < மட்டிகை (cf. மட்டி = oyster shell); அட்டியல் < மட்டியல்
அட்டிகை aṭṭikai, n. < K. aḍḍike. cf. அட்டு-. Closely fitting necklace of gold wires or of precious stones; கழுத்தணிவகை.
அட்டியல் aṭṭiyal, n. [T. aḍḍigalu.] Closely fitting necklace. See அட்டிகை.
அட்டியல் < மட்டியல்.
அட்டாளை aṭṭāḷai, n. < aṭṭāla. Covered platform for watching a garden; காவற்பரண். (J.)
அட்டாளைப்பெட்டி aṭṭāḷai-p-peṭṭi , n. < id. +. Case of shelves; தட்டுக்கள் உள்ள பேழை. Loc
ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது, எனவே: அட்டாளை < மட்டாளை.

கோத்தல் என்னும் வினையால் தமிழர் உடையான கோமணம்/கோவணம் பெயர் பெறும்.
கௌபீனம் என்னும் வடசொல் இதுதான். பழனி முருகவேள் தரித்துநிற்பது. கொங்கு/கங்கு எனில்
வளைவு வளைவுடைய ஆண்கள் அணிகலன்: கங்கணம். பூர- = தண்ணீர், எனவே பூரண (கும்பம்).
இதுபோல் -ண விகுதிபெறும் சொற்கள்பல. சம்மணம் > அம்மணம், மட்டணம் > அட்டணம் பார்ப்போம்.

பண்டை இந்தியாவில் மக்கள் இருக்கையில் அமரும் முறைகள் இரண்டு:
(1) சம்மணங்கால் - சமழ்த்துதல்/சமட்டுதல்/சவட்டுதல் வினை போலும்.
சமணம் (ச்ரமணம்) என்ற சொல் இதிலிருந்தாகலாம். தீர்த்தங்கரர், புத்தர் தியானத்தில் அமரும்
நிலை. எனவே அவர்களுக்கு ஆழ்வார் எனப் பெயர். ஆழ்ந்த தியானம் ஆழ்வார். இருகாலும்
மடங்கி இருப்பது சம்மணம் போட்டு உட்காருதல். சம்மணம் > அம்மணம் ‘nude'  சமண அடிகளைக்
கண்டு மக்கள் கொடுத்த பெயர். இதே போல, இன்னொன்று, நிர்வாணம் ‘nude' இதுவும் சிரமண
சமயங்கள் கொடுத்த பெயரே. தவசிகள் அமரும் நிலை சம்மணங்கால் போட்டு உட்காருதல்.
உட்கார்தல் = உட்கு ஆர்தல் (உட்கு - உள்ளுக்கு) - திருவாய்மொழி ஈடு.

(2) அரசர்களும், மடத் தலைவர்களும் உட்காரும் நிலை அதிகார தோரணை காட்டுவது.
இதனை, அட்டணங்கால் போட்டு உட்காருதல் என்கிறோம். 4300 ஆண்டுக்கு முன்னே
கொற்றவையின் பூசகன் கதிர மரத்தில் அட்டணங்கால் போட்டு அமர்ந்துள்ளான்:
Figure 11 in
Also see, the Gharial croc "Proto-Pasupati" has the same "shaman" in the same mode,

மட்- என்னும் தாதுவினால் மட்டை (தேங்காய் மட்டை), மட்டி/மட்டம் (ஆய்ஸ்டர் சிப்பி ‘shell'
ஒன்றின் ஒன்று இருத்தலால்), மட்டனம் - பூசுதல், ... போல, மட்டணம் - ஒன்றின் மேல் ஒன்று
பொருத்துதல். எனவே அட்டணங்கால் < *மட்டணங்கால், அட்டாலை < *மட்டாலை, ...

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Jan 17, 2016, 10:47:37 PM1/17/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம்
ரொம்ப பாடுபடுறீங்க. நன்றி

17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:23 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 18, 2016, 1:21:06 PM1/18/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham
On Sunday, January 17, 2016 at 7:47:37 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
ரொம்ப பாடுபடுறீங்க. நன்றி


தமிழ் எழுதுவோரில் சொன்முதல்மெய் இழத்தலை மாற்றிச் சொல்வதால் பல புரியாமைகள் ஏற்படுகின்றன.
அதை விளக்கவே, இவ்விழை. ப. அருளி போன்றோர் எழுதியுள்ள அலர் > மலர், அம்மம் > மம்மம் ஏன் பொருந்தாது
என சொன்முதல்மெய் இழக்கும் எல்லாச் சொற்களின் தொகுதி பார்த்தால் புலனாகும். திரு. சேசாத்திரி
ப. அருளி எழுதுவதை எழுத, நீங்களும் உள்வாங்கி அலர் தான் மலர் ஆகும் என்று சொன்னதை இவ்விழையில்
உள்ள வார்த்தைகளைக் கொண்டு பார்க்கணும். மலர் தான் ஆதி. அலர் அதனின்றும் பிறப்பு.
அலர் ஆதி என்றால் (1) மாலை என்று ஏன் உள்ளது? (2) ஆலை என்றோ, சாலை என்றோ மாலைக்கு ஏன் பேரில்லை?
இப்பி > சிப்பி, அமணர் > சமணர் என எழுதுவதும் பார்க்கிறோம், அவற்றுக்கும் இக் கேள்விகள் கேட்டால் எந்த திசையில்
மாற்றம் என விளங்கிவிடும்.

மலர் > அலர், மோய்தல் > ஓய்தல், மடுப்பு > அடுப்பு, மட்டியல் > அட்டியல், மட்டணங்கால் > அட்டணங்கால்.
அட்டணைக்கால் - கல்வெட்டுக்களில் வரும், மாடி போல, கால்கள் உயரமாக வைத்து அதன் மீது அரசர்
அமரச் செய்யும் பீடம். அட்டணங்கால் - கால் மேல் கால் போட்டு அமருதல். அதிகாரத்தைக் காட்டுவது.
பழைய சினிமாப் படங்களில் கர்நாட்டிக் கச்சேரி நடக்கும் பிரமுகர்கள் முன்வரிசையில் அட்டணங்கால்போட்டு அமர்ந்திருப்பர்.
சிந்து முத்திரைகளில் கொற்றவை-விடங்கர் தம்பதியரின் பூசாரி அட்டணங்காலுடன் அமர்ந்திருப்பதையும்,
புலி அவன் ஏவலுக்குப் பார்த்துக் காத்திருப்பதும் காட்டியுள்ளேன். அட்டிகை, அட்டணங்கால், ... 
போன்றன மட்-மாட்- (மாடி, மாட்சி/மாண்பு) என்னும் ம்- என்பது பலரும் அறியாத செய்தி. கொங்குநாட்டுச்
சொல்லான இதற்குப் பிழைபட்ட விளக்கம் கொடுத்துள்ளார் ஒருவர்.

கொங்குநாட்டு எழுத்தாளர் வா. மு. கோமு ‘அட்டணங்கால்’ பயன்படுத்துகிறார்:
மெல்பர்னிலும், டாக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை மசக்காளிபாளையத்தில் அட்டணங்கால் போட்டு படுத்தபடி ரசித்து விடுகிறோம். பார்வையாளர்கள் அரங்கத்தில் புலி மாதிரியும், கரடிமாதிரியும் வேசம் போட்டு அமர்ந்து கொண்டு ஆட்டம் பார்க்கிறார்கள். கங்குலி ஐ ஆம் மிஸ் யூ என்றும் மம்மி ஐ ஆம் ஹியர் என்றும் கையில் அட்டைகள் வைத்து ஆட்டு ஆட்டென ஆட்டுகிறார்கள்.”

வா. மு. கோமுவின் இன்னொரு கதையில்:
”மீனாகுமாரி, நான் தங்கி இருக்கும் அறைக்குச் சொந்தக்காரருடைய ஒரே செல்ல மகள். அருகில்தான் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறாள். இப்படி உங்களை அமரவைத்து மீனாகுமாரிபற்றி ரகசியம் பேசுவது, அவள் குடும்பத்தாருக்குத் தெரிந்தால், இந்த நகரில் இப்படி இனிமையான வீடு எனக்கு இல்லை என்று ஆகிவிடும். இரண்டு, மூன்று நாட்கள் எங்காவது பிளாட்ஃபாரத்திலோ, பஸ் நிறுத்தத்திலோ, சுரங்கப் பாதையிலோ தலைக்குத் துணி மூட்டை கொடுத்து, அட்டணங்கால் போட்டுக்கிடக்க நேரிடும். புரிந்து இருப்பீர்கள்… இது ரகசியம்.”


ய்-, வ்-, ச்-, ம்-, ந்- இம் மெய்கள் கெட்டுத் தமிழில் பல சொற்கள் உருவாகியுள்ளன.
வார்-/வால்- :கீழே தொங்கும் தன்மையால். எனவே ஆலித்தல், மேலிருந்து கீழே விழும் மழைக்குப் பெயர்.
வால்- > ஆல்-  : ஆலிக்கட்டி = hailstone. விடங்கர் > இடங்கர்  (அலர்முலை ஆகம் போல, இடங்கர், ஆலித்தல் சங்க இலக்கியத்தில்.
இவை பிற்கால நிலை. அதற்கும் முந்தைய சொற்கள் மலர், விடங்கர், வாலித்தல், ... வேதத்திலும் இவ்வாறான சொற்கள் உண்டு.)
யால்- > ஆல் மரம் (cf. யானை). யாலுதல் செய்யும் விழுது, விழுதுபோலும் துதிக்கை)
சம்மணம் > அம்மணம் : சமண முனிகள் நிலை - உ-ம்: சிரவண பெளகுளத்திலே.
மர்மம்/மம்மம் > அம்மம், மலர் > அலர்.
நுண்ணி > உண்ணி (உண்ணி க்ருஷ்ணன் - குருவாயூரில், உண்ணி - நாயில் உள்ள நுண்ணிய ticks)


இச் சொற்றொகுதிகளை ஆராய்வோருக்கு “மெய்முதலா? உயிர்முதலா? - இச் சொற்களில்”
என்ற கேள்விக்கு விடை தெற்றென விளங்கும்.

NG

N. Ganesan

unread,
Jan 20, 2016, 12:32:37 PM1/20/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, santhav...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam
மடுத்தல்/அடுத்தல் - ஓர் உவமையாகுவினை

உவமையாகு பெயர்கள் பல அறிவோம். உவமையாகு வினைச்சொற்கள் பற்றி காட்டுகள். வரையறைகள் உண்டா? உ-ம்: சமைத்தலுக்கும், போருக்கும் ஒப்புமைகள் தென், வட மொழிப் பழமையான இலக்கியங்களில் உண்டு. எனவே, அடுதல் என்பது உவமையாகு வினைச்சொல் எனலாம். In the Heroic Age classics (Greek, Latin, Sanskrit and Tamil), the King roasted the enemies, he parched the enemies in battle, etc., are common.

மொழிகளின் வரலாற்றில் எழுத்து என்பதே அண்மைக்கால நிகழ்வுதான். எழுத்தில்லாக் காலம் மிக நீண்டது. தமிழில் ”எழுத்து” என்பது ஓர் உவமையாகுவினையில் உருவானது. பழங்காலத்தில் ”எழுதுதல்” என்றால் ஓவியங்கொண்டு சித்திரித்தல். பருத்தித் துணி, தானியங்கள் கட்டிய சாக்குமூட்டை, ஓலைகள் போன்றவற்றில் பெயர்களை, எடைகளை ஓவியங்களாய் வரைந்தனர், அதாவது “எழுதினர்”. இதுவே, சிந்து “எழுத்து” ஒரு கண்ணெழுத்து/ஓவியம். சிந்து எழுத்தை ரா. மதிவாணன் போன்றோர் மெய், உயிர் எழுத்துக்கள் என வாசிப்பது உயிரெழுத்து போன்றன உலக வரலாற்றில் ஏற்படுமுன்னர் என்பதை உணர்வோம். இருக்கும் 400 சிந்து எழுத்துக்களைப் பார்த்தால் அவை உயிர் எழுத்து, மெய்யெழுத்து ஏற்படும் காலத்துக்கு முந்தையது என விளங்கும். பின்னர் 1000 ஆண்டு கழித்து, சிவ சூத்திரங்கள், பாணினி, தொல்காப்பியம் போன்றவற்றில் மெய், உயிர் எழுத்துக்கள் கண்டறியப்பட்டன. ஓவியம் வரைதல் என்னும் பொருள்கொண்ட “எழுதுதல்” என்னும் வினைச்சொல்லை உவமையாகுவினையாக Writing with alphabet என்பதற்குத் தமிழில் பயன்படுத்தலாயினர். ”எழுதுதல்” என்பதன் பொருள் கால ஓட்டத்தில் மாறிவிடுகிறது. கண்ணைக் கவரும் எழுத்து கண்ணெழுத்து - Symbols painted (primarily on cloth, gunny bags, leaves such as palms and even on pandanus petals) ஒருவகை ஓவியங்கள். தமிழ்மொழி “எழுதப்படும்போது” பண்டை ஓவிய “எழுத்து” (பெயிண்டிங்) என்னும் பெயர் Writing என்ற பொருளுக்கு மாறுகிறது. இன்றும் திரைச்சீலையில் படமெழுதல் என்கிறோம்.

சங்க இலக்கியம் படித்தால் மடுத்தல் = சமைத்தல் என்பது தமிழின் அடிப்படையான 
வினைச்சொற்களில் ஒன்று என அறியலாகும். வகுத்தல் என்னும் வினை தருவது வகுப்பு.
அதுபோல், மடுத்தல் (=சமைத்தல்) என்னும் வினைதருவது மடுப்பு. சொன்முதல் ம் கெட்டு
அடுப்பு எனவரும். மடுத்தல் சொன்முதல் ம் கெட்டு அடுத்தல் (= சமைத்தல்) எனப் புழங்குகிறோம்.

மடுதல்/அடுதல் சமைக்கும் தீயிற்கும், சுடுதல் அழிக்கும் தீயிற்கும் பயன்படும்.
இதனைப் புறப்பாட்டு குறிப்பிடுகிறது:

|| “அடுதீ யல்லது சுடுதீ யறியாது
இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்” (புறம். 70)

என்பதனால் தங்கள் உணவு அடுதற்குரிய தீயைச் சுடுதீயென்னாது வேறோர் நன்பெயர்
கொடுத்து அடுதீயெனப் பாகுபடுத்திப் பாராட்டுதலும் அறிவின் பயனேயாம். சிலப்பதிகாரம்
வஞ்சின மலையில் “எரியங்கி வானவன்” (49) எனவும் வருதல் காண்க.  “ ||
பாஷா கவிசேகரர் மகாவித்துவான் ரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
(1930களில் மகாவித்துவான் ஐயங்கார் ஸ்வாமி நடத்திய தமிழ் வகுப்புகளில் போதித்த செய்திகள்
அடங்கிய நூல். அண்ணாமலைப் பல்கலையின் வெளியீடுகளில் இரண்டாவது.
அப்போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலையில் தனி பிரெஸ் இல்லை. எனவே,
சுவாமி சித்பவானந்தர் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன அச்சகத்தில் அச்சிட்ட நூல்.
சிறுவனாக இருந்தபோது பராய்த்துறை சி. அடிகள் ஆசீர்வதித்து அளித்த நூலிலிருந்து தட்டச்சுகிறேன். பக். 90)

அடுதீ = மடுக்கும் தீ, அதாவது சமைக்கும் தீ. இதனைக் கலித்தொகை கொண்டு விளக்கலாம்.
அடுத்தல் < மடுத்தல், அடுப்பு < மடுப்பு என அறியலாகும்.
மடுத்தல் = சமைத்தல் (சங்க இலக்கியச் சான்று)
எனவே தான், மடுப்பு > அடுப்பு; மடுத்தல் > அடுத்தல் (சமையல்)

கலித்தொகை 59

ஆய்தொடி யைதுயிர்த் திவனுண்ணோ யாதென்னு
நோயிலை யிவட்கென நொதுமலர் பழிக்குங்காற்
சிறுமுத்த னைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ
நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ;
எனவாங்கு;

நச்சினார்க்கினியர் மடுத்தல் = சமைத்தல் என விளக்குகிறார்:
எ - து: ஆராய்ந்திட்ட தொடியினையுடையாய்! நீதான் ஐதாக உயிர்த்து இவன் மனத்திலுண்டாகிய நோய் யாதென்று கேட்கும் நோய் இவட்கு இல்லை யென்று யான் கூற அதுகேட்டு அயலார் நினைப்பழிக்குமளவிற் சிறிய குழமகனைப் பேணி வளர்த்து அவனுக்கு வேறொருத்தியுடைய பெண் மகனைக் கோடற்குச் சிறுசோற்றைச் சமைத்து ஆயத்திற்கு இட்டு நீ நறிய நுதலையுடைய மகளிரோடே மகிழ்ந்த நோன்பின் பயன் நினக்கு வந்து பொருந்துமோ? பொருந்தாது காண்; எ - று.

எனவாங்கு
எ-து; என்று; எ - று. ஆங்கு - அசை. ||

மடுத்தல்/அடுத்தல் = சமைத்தல். இந்த வினைச்சொல் மனிதகுலத்தில் அடிப்படையான வினைகளைத் தமிழில் குறிப்பிடும் ஓர்சொல். உவமையாகு பெயர்கள் பல. மடுத்தல்/அடுத்தல் என்னும் வினையை “மட்டித்தல்/அட்டித்தல், அடுதல்” என போரிடலுக்கு உவமையாகுவினையாகப் பண்டைய தமிழில் பயன்படுத்தியுள்ளனர். அடுதல் - அட்டூழியம், அட்ட களம் என்றெல்லாம் வரும். நெடுநெடு > நடுதல்,
நடத்தல் (bipedalism) - நட்ட நெல்லம்பயிர், நெகிழ்தல் > நகர்தல். வணிகர்களின் முகாம் நகரம். பின்னர் city என்றாகிறது. மடுத்தல் > அடுத்தல் என்று உவமையாகுவினையாய் வளர்ச்சி பெறக் காரணமாக உள்ள சமைத்தல் - போரிடல் ஒப்புமைகளை இரா. இராகவையங்காரின் அழகுத் தமிழ்நடையில் படிப்போம்:

இரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, அண்ணாமலைப் பல்கலை:
“இதுகாறும் தொகுத்துக்கூறிய வாற்றாற் பழந்தமிழரொழுக்கம் வேத வழக்கோடு மாறுபடாதியைதல் நன்கு தெளியலாகும். இவ்வுண்மையானன்றே,

”ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” (தேவாரம்) எனவும், 
                                                                  “புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை” (திருமடல்)
எனவும், இருபெருந் தெய்வங்களையும் தெய்வத் தமிழ்ப் பெரியார் வாயாரப் பாடினரென்று துணியலாம். “தென்னானாய் வடவானாய்” (திருநெடுந்தாண்டகம் 10) என்பதும் இக்கருத்தை ஐயமறத் தெளிவித்த லுணரலாம்.

    இனித் தமிழர் தம் பெருவீரச் செயலிற் பாராட்டிக் கூறிய செருக்கள வேள்வியினியல்பு,
   “களவழித், தேரோர் தோற்றிய வென்றியும்”
                                                         (தொல். புறத். 21)
என்புழி நச்சினார்க்கினியர் உரைத்த உரையானும், புறப்பாட்டில்,

                    “அரசுபட வமருழக்கி
                     உரைசெல முரசுவவ்வி
                     முடித்தலை அடுப்பாகப்
                     புனற்குருதி  யுலைக்கொளீஇத்
                     தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியி
                     னடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய” (புறம். 26)
என வருதலானும் அறிந்ததேயாம். இவ்வரிய வழக்கம் வடநூலார்க்கும் ஒத்ததாதல் மஹாபாரதத்து அநுசாசன பருவத்துச் (192 வடமொழி, V. N. கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு_

  “செருக்களத்துப் படையெடுத்துப் பொருபவன் பெருவேள்வியைச் செய்து தூயனாயவன். அவன் (தோல்) கேடகம் மான்றோல், வில் தண்டம், தேர் வேள்வி வேதி, கொடி யூபம், பரிவார் தருப்பை, போர்க்கிளர்ச்சி, செருக்கு, சினம் இவை முத்தீ, உவகை ச்ருவம், தேர்ப்பாகன் புரோஹிதன், படைகள் வேள்விக்கருவிகள், அம்பு சமித்து, உடல்வேர்வை தேன், மக்கள்தலை புரோடாசம், உதிரம் ஆகுதிநெய், துணிகள் அவிக்கலம், உடல்நிணம் நெய்யொழுக்கு, ஊணூன் பூதங்கள் வேள்வி யந்தணர், அத்தகைய மக்களும் யானை குதிரைகளும் உணவும் குடிநீரு மாகும். இறந்த வீரர்களின் அணிகலங்கள் வேள்வி முகவைகள்” என்பன முதலாக வருதலான் நன்கறிந்துகொள்க.

   இராஜதரங்கிணி (7, 980-81)யில் யமன் அடுக்களையாகிய போர்க்களத்தில் இம்மாதிரி வேள்வியில் வேதாளத்திற்குத் தசையுணவும், உதிரப் புனலும், ஈந்தது கூறுதல் காணலாம்.

  இப்பழைய வழக்கம் பிற்காலத்து வடகோடியிலும் உண்டென்பது இதனால் உணரலாம். இக்கள வேள்வியிற் கூழ் கொடுத்தற்குப் பரணி நாளைக் கொள்ளும் வழக்கமும் 27 நாள்களில் ஒன்றான பரணிக்கு அதிதெய்வம் யமனாதல் பற்றியென்பது துணியத்தகும். ஏர்க்களத்தோடு போர்க்களத்தை உவமித்தோ அன்றி உருவகித்தோ இவர் கூறும் ஒரு முறை, வேத வழக்கொடுபட்டதே யென்பது களம் () என்னுஞ் சொல் கதிரடிக்குந் தரைக்குப் (ரிக்வேதம் 10, 48, 7; நிருக்தம் 3, 10) பெயராம் ஒற்றுமைபற்றியென்று உய்த்துணரலாகும்.

    இத்தமிழர் தேரிற் பரியும் அத்திரியும் பூட்டுதலும் சகடத்தில் எருது பூட்டுதலும் வேத வழக்கிற் கண்டனவேயாம். “ [...]

மடுத்தல்/அடுத்தல் - சமையல் வினையிலிருந்து பொருதலுக்கு உவமையாகுவினையாய் ஆதற்போல,
படம் எழுதுதல் எப்படி உயிர், மெய் எழுத்தை எழுதுதல் என்னும் உவமையாகுவினையாய் பரிணாம வளர்ச்சி பெறுகிறது எனப் பார்க்கலாம்.

    மடுத்தல்/அடுத்தல் - சமையலும், போரிடலும்
                     “அரசுபட வமருழக்கி
                     உரைசெல முரசுவவ்வி
                     முடித்தலை அடுப்பாகப்
                     புனற்குருதி  யுலைக்கொளீஇத்
                     தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியி
                     னடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய” (புறம். 26)

நா. கணேசன்

தேமொழி

unread,
Jan 20, 2016, 2:15:16 PM1/20/16
to மின்தமிழ்


On Wednesday, January 20, 2016 at 9:32:37 AM UTC-8, N. Ganesan wrote:
மடுத்தல்/அடுத்தல் - ஓர் உவமையாகுவினை

உவமையாகு பெயர்கள் பல அறிவோம். உவமையாகு வினைச்சொற்கள் பற்றி காட்டுகள். வரையறைகள் உண்டா? உ-ம்: சமைத்தலுக்கும், போருக்கும் ஒப்புமைகள் தென், வட மொழிப் பழமையான இலக்கியங்களில் உண்டு.

இப்பொழுதும் வழக்கில் உண்டு.

கடுகு போல பொரிந்து தள்ளினான் 
செய்தியைக் கேட்டதும் கொதித்துப் போனாள்
சும்மா தாளிசிட்டாங்க 
வறுத்து எடுத்துட்டாங்க 
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது...
இன்ன பிற ....

வேந்தன் அரசு

unread,
Jan 20, 2016, 8:41:19 PM1/20/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம், சந்தவசந்தம், Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam
மா என்பது இந்தியில் ஆம் என ஆகியிருக்கே

20 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:42 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 21, 2016, 1:58:57 AM1/21/16
to மின்தமிழ், vallamai
2016-01-20 17:41 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மா என்பது இந்தியில் ஆம் என ஆகியிருக்கே


நல்ல கண்டுபிடிப்பு.

பலமுறை மாமரம் > ஆமர > ஆம்ர என சொன்முதல் ம் இழப்பு காட்டுகளில் ஒன்றாக
எழுதியுள்ளேன். 20-25 காட்டுகளில் ஒன்று.

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Jan 21, 2016, 9:06:42 PM1/21/16
to vallamai, மின்தமிழ்


21 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 1:55 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
இது போல சில நீங்க சொல்லுங்க.

தேமொழி

unread,
Jan 21, 2016, 10:35:10 PM1/21/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
இப்படி ஒரு assignment கொடுத்தால், திரு. கணேசன் விடிய விடியத் தூங்காமல் சொற்களை உற்சாகமாகப் பித்து உதறிக் கொண்டிருப்பாரே !!!! 


..... தேமொழி 
Reply all
Reply to author
Forward
0 new messages