வள்ளுவம் வலியுறுத்தும் புலால் மறுப்பு!

227 views
Skip to first unread message

Megala Ramamourty

unread,
Sep 19, 2016, 9:54:01 AM9/19/16
to வல்லமை, மின்தமிழ்

’வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில்  மாற்றுக் கருத்தில்லை; ஆனால் எவ்வாறு வாழ்வது? அதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்வி உடனே நம் மனத்தில் எழுகின்றது. இதற்கான விடையைத் தன் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏட்டில் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒரு மாமனிதர்!

அவர் வேறுயாருமல்லர்… சிந்தனைத் தெளிவும் கருத்துச் செறிவும் மிளிர ஒன்றரை அடிகளிலேயே வாழ்வின் நீள அகலங்களை அளந்துவிட்ட நீடுபுகழ் வள்ளுவரே அந்த மாமனிதர்!

முடிமன்னர் முதல் குடிமக்கள் ஈறாகச் சாதி சமயப் பேதமின்றி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடின்றி அனைவர்க்கும் வழிகாட்டும் அரிய நூல் வள்ளுவம் என்பது உலகறிந்த ஒன்று. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்றுங்கொண்ட ’முப்பால்’ தமிழகத்திற்கு அப்பாலும் புகழொளி பரப்பிவருகின்றது. விவிலியத்திற்கு (Bible) அடுத்தபடியாக உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நம் திருக்குறளே என்பது தமிழரனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய சாதனை!

இந்த உலக சாதனை ஒருபுறமிருப்பினும், உள்ளூர்த் தமிழர்களாலேயே திருக்குறளுக்கு அடிக்கடிச் சோதனையும் நிகழ்ந்துவிடுகின்ற கொடுமையை என்னென்பது! மணக்குடவர் தொடங்கிக் (கவிஞர்) மகுடேஸ்வரன் வரைப் பலர் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியும், (Almost every major writer/scholar has written commentaries on it.) குறளில் பேசப்படுகின்ற கருத்துக்கள் சிலவற்றில் நம்மவர்க்கு இன்னமும் தெளிவின்றித் தாமும் குழம்பிப் பிறரையும் குழப்பிவருவது வேதனையளிக்கின்றது.

சான்றாக, அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இல்லறவியல், துறவறவியல் உட்பிரிவுகளைக் கருத்தில்கொள்வோம்.

இல்லறவியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் இல்லறத்தார்க்கே உரியன; துறவறவியல் அதிகாரங்கள் அனைத்தும் துறவியர்க்காகவே எழுதப்பட்டன என்ற எண்ணம் இந்தக் குழப்பவாதிகளுக்கு இருக்கின்றது. இந்த எண்ணம் சரிதானா?

இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை  என்று கருதுவது பொருந்துமா?

அன்பும், இன்சொற்களும், நல்லொழுக்கமும், தீவினையச்சமும், நடுவுநிலைமையும் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் கைக்கொள்ள வேண்டிய அரும்பண்புகளாயிற்றே! இவற்றை ”இல்லறத்தார்க்கு மட்டுமே” என்று எவ்வாறு முத்திரை குத்தவியலும்? எனவே, இல்லறவியலில் பேசப்படும் பண்புகள் இல்லறத்தார்க்கு ’அவசியம்’ இருக்கவேண்டியவை; ஏனையோரும் பின்பற்றி ஒழுகவேண்டியவை என்று கொள்வதே அறிவுடைமை!

இனி, துறவறவியலுக்கு வருவோம்!



இப்பகுதியில் இடம்பெற்றுள்ள ‘புலால் மறுத்தல்’ எனும் அதிகாரம் அதிக அளவில் சர்ச்சைகளுக்கு ஆட்பட்டு வருவது கண்கூடு. ”புலால் மறுப்பு துறவியர்க்கானது” என்று ஒரு சாராரும், ”இல்லை…இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டியதே அது” என்று மற்றொரு சாராரும் முடிவில்லா விவாதத்தில் ஈடுபட்டுவரக் காண்கிறோம்.

இந்த வி(தண்டா)வாதம் இருக்கட்டும்! இதுகுறித்து வள்ளுவரின் உள்ளம் என்ன எண்ணுகின்றது என்பதைக் குறள்வழி அறிந்துவருவோம்!

’புலால் மறுப்பு இல்லறத்தார்க்கு அல்ல’ என்று உரத்து முழக்கமிடும் ஊனூண் பிரியர்கள் தம் கருத்துக்குச் சான்றுகாட்டும் குறட்பா பின்வருவது…

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 
(குறள்: 259)

”அவிசொரிந்து (நெய் வார்த்து) வேள்வி செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் நன்று” என்பது இக்குறளின் பொருள். புவியிலே, அவிசொரிந்து வேள்வி செய்வோர் யார்? முனிவர்கள்(அருளாளர்கள்); ஆகவே அவர்கள் மட்டுந்தான் உயிர்களைச் செகுத்தும் பகுத்தும் உண்ணக்கூடாது. பிறரெல்லாம் ’ஹலால் (இறைச்சிக்) கடையில் புலால் வாங்கி விலாப் புடைக்கப் புசிக்கலாம்…தவறில்லை என்று விளக்கமளிக்கின்றனர் இவர்கள்!

இவ்விளக்கம் ஏற்புடையதா என்பதையறிய நாம் வேறெங்கும் ஆதாரம்தேடி அலையவேண்டியதில்லை. புலால் மறுத்தல் அதிகாரத்திலேயே அதற்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடுகின்றது. ஆம், அந்த அதிகாரத்தின் ஆறாம் குறட்பாவை நோக்கி நம் பார்வையைப் பதிப்போம்!

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 
(குறள்: 256) என்பது அக்குறட்பா.

இதன் பொருள்: பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.

’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!

இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!

”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும். 

ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!”  – பாவாணர்

(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)

இதே குறளை, கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆங்கிலக் கவிதை வரிகளில் சொல்வதானால்,

None would kill and sell the flesh
For eating it if they don’t wish.

ஆன்றவிந்தடங்கிய சான்றோரே…அருமைத் தோழர்களே! இனியேனும், ’புலால் மறுத்தல்’ துறவியருக்கு மட்டுமே எனும் பொ(அ)ருளற்ற வாதத்தை விடுத்து, ’அது மண்ணில் வாழும் மானுடர் அனைவர்க்கும் பொதுவானது’ என்பதை உணர்ந்து, ஊனுணவைக் கடிந்து ஒதுக்குவீர்; வள்ளுவ நெறியில் வாழ்வீர்!


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=72093

N. Ganesan

unread,
Sep 19, 2016, 10:07:06 AM9/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
அருமை, மேகலை.

வள்ளுவரின் சமயம் காட்டும் இரண்டு குறள்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். இந்த வாரம் முழுதும் இளங்கோ அடிகள் தன் சமயம் சமணம் பரப்ப
எப்படி நாடுகாண் காதையும், கர்நாடக கல்வெட்டுச் சொல் கவுந்தி என்பதும் பயன்படுத்துகிறார் தெய்வக்காவிரி நாடு முழுதும் சொல்லி,
கங்க ராஜ்யத்து சீரங்கத்தில் (திருவரங்கம் வேறு) சமணத்தின் அந்த(ர) சாரணர் வருகை, தொழுகை என எழுதினேன்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 
(குறள்: 259)

இதில் வேதியரின் யாகங்களில் மாடு, ஆடு இடலைக் கண்டிக்கிறார். தேவாரத்தில் மாடு வெட்டி யாகம் செய்வது நிறைய உண்டு.
இந்தியா முழுதும் வேளிர்கள் மாடு வெட்டி யாகம் செய்தால் கடவுள் வரமாட்டார் என நிறுத்தியமை வரலாறு. 

அதேபோல, பிட்சை பாத்திரத்தில் இட்ட ஊனை தின்னலாம் என்று ரிலேக்ஸ் செய்தது பௌத்தம். அதனையும்
நன்கு கண்டித்தவர் வள்ளுவர். 

அத்தோடு தொடர்புடைய ஒரு குறள்:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

புலால் உண்ணலுக்கு துறவி ஆயினும், சாவகர் (Householder) ஆயினும் வள்ளுவர் ஆதரவு இல்லை.

அதே போல் தான், அரசாங்கம் மக்களைக் கொல்லலாம் என்பதற்கும் வள்ளுவர் ஆதரவு இல்லை.
அதனை வள்ளுவர் அரசாங்கம் தூக்குதண்டனை என்கிறார் என்பதெல்லாம் செல்லாது.
பாம்பின்கால் பாம்பறியும். நாமக்கல் கவிஞர் நன்கு விளக்கினார்:

நாகரீகமான அரசாங்கங்கள் யாவும் வள்ளுவர் பாதையில் இன்றும் பயணிப்பதைப் பார்க்கலாம்.
சௌதி அரேபியா மாறவேண்டும் - வள்ளுவர் வழிக்கு வரவேண்டும் என அல்லாவைப் ப்ரார்த்திப்போம்.

நா. கணேசன்

செல்வன்

unread,
Sep 19, 2016, 10:26:46 AM9/19/16
to mintamil, வல்லமை

2016-09-19 8:53 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை  என்று கருதுவது பொருந்துமா?


இல்லறத்தார் என்பவரில் அரசர், ஆண்டி, அமைச்சர் எல்லாரும் அடங்குவர். அவர்கள் எல்லார்க்கும் இது பொருந்தும்.

இல்லறத்தார் அல்லாத துறவியர்க்கு இவை பொருந்தாது. ஏன் எனில்

அன்புடமை- அன்பு என்பது பற்று, பந்தத்தில் சேரும். துறவிக்கு பற்று இருக்ககூடாது என்கிறார் வள்ளுவர்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

ஆக பற்றைவிடவேண்டிய துறவிக்கு அன்புடமை பொருந்தும் என்பது எஞ்ஞனம்?

இனியவை கூறலும் அதுபோல் தான்...அன்றாடம் பிறமனிதர்களுடன் புழங்கும் இல்லறத்தார்கே அவர் உரியன. துறவிகள் குற்றம் கண்ட இடம் கடிதல் வேன்டும்...ஆசிரியர் ஸ்தானத்தில் இருப்பவர் இன்சொல் மட்டுமே சொல்லிகொண்டிருக்கமுடியாது

நடுநிலை::::::மனிதர்களுடனான உறவுக்கே இது எல்லாம் பொருந்தும்...துறவிகள் பற்றைவிட்டவர்கள். அவர்கள் நடுநிலைமை எடுத்து மனிதர்களுடன் உற்வாடி என்ன சாதிக்கபோகின்றனர்?

ஈகை..பணம் இருப்பவர்கள் செய்யும் விஷயம். பணமே வைத்துகொள்ளாத துறவி எப்படி ஈகையாளனாக இருக்கமுடியும்?

புகழுடமை--துறவிக்கு எதற்கு புகழ்? அதுவும் ஒருவகை பற்றும், பந்தமுமெ ஆகும்

ஆக இவை எல்லாம் இல்லறத்தார்கே பொருந்தும் என்பது தெளிவு


--

பழமைபேசி

unread,
Sep 19, 2016, 10:41:12 AM9/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஆக அண்ணாச்சி சொல்லவருவது,  முற்றிலும் துறந்தவன் துறவி.... அதாவது அத்தகையவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்... ஏனென்றால் அவந்தான் முற்றிலும் துறந்தவனாயிற்றே?? விலங்குகள் கூட தன் பாதுகாப்பு/உணவு கருதித்தான் சில பலதைச் செய்யும்.... அதனினும் ஒரு படி மேலே சென்று முற்றிலும் துறந்தவனாய்.... இருப்பதே துறவுன்னு புது இலக்கணம்.... மிடீலடா சாமி..... ஊருக்குப் போகாத வழியப் புடிக்கப் போயி, எதுக்கெல்லாம் முட்டுக் கொடுக்க வேண்டியதா இருக்கூ.... இஃகிஃகி!!

செல்வன்

unread,
Sep 19, 2016, 10:45:03 AM9/19/16
to mintamil, வல்லமை
2016-09-19 8:53 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 
(குறள்: 256) என்பது அக்குறட்பா.

இதன் பொருள்: பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.

’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!

இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!

”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும். 

ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!”  – பாவாணர்

(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)


புலால் உணவு, காமம் போல் தான்.

காமத்துப்பால் எழுதிய அதே வள்ளுவர் அவாவறுத்தல் எழுதினார்.

ஆக இரன்டில் எதை ஒரு மனிதன் பின்பற்றவேண்டும்?

இரன்டையும் தான்.

இல்லறநிலையில் காமத்துப்பால்..துறவியானபின் அவவாறுத்தல்

அவாவறுத்தல் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு உலகில் யாருமே பற்று, பந்தம், பாசம் வைக்ககூடாது என வள்ளுவர் கூறுகிறார் என்றால் அது எத்துனைபெரிய நகைச்சுவையாக இருக்கும்?

வள்ளுவர் இல்லறத்தாரை அவவவறுக்க கூறுகிறாரா? இல்லையெ..கீழ்காணும் குறள்களே சான்று


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


தன்பிள்ளை, குடும்பம், மனைவி என சக உலகத்து இன்பங்களையும் துய்க்கும் நிலையே இல்லறம். பற்றை அறுந்த, பந்தபாசம் துறந்த துறவிக்கு ஏது "மக்கள் மெய்தீண்டும் இன்பம்?"

ஆனால் இந்த நிலையை தாண்டி உய்யவேண்டும்..இதுவே சாஸுவதம் என நினைத்து அங்கேயே தங்கிவிடகூடாது...காமம், மழலை இன்பம் எதுவும் நிரந்தரம் அல்ல. அதை எல்லாம் தாண்டி பற்றை அறுத்ததுறவு நிலைக்கு ஒருமனிதன் செல்லவேண்டும்.

அந்த நிலைக்கு சென்றபின் இல்லறநிலையில் அடைந்த இன்பங்கள் துறவுநிலையில் பாவகரமானவையாக மாறிவிடும். துறவிக்கு காமம் பாவம், இல்லறத்தானுக்கு அல்ல.

புலால் மறுத்தல் அதுபோல் தான்...எந்த உயிரையும் கொன்று தின்னாதிருத்தல் உயர்ந்த அறம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு உயிரை கொன்று உண்பதை விட உண்ணதிருத்தல் மேல் என்பதும் சந்தேகமில்லை. அதெபோல காமவசப்பட்டு கல்யாணம் செய்துகொள்வதை விட 12 வயதில் துறவறம் பூண்டு சாமியாராகி பற்றற்றான் தாளினை பற்றுவது மேல் என்பதும் சந்தேகமில்லை.

ஆனால் அதை எல்லார்க்கும் வள்ளுவர் கட்டாயமாக்கவில்லை...காமம் எப்படி இல்லறநிலையில் அனுமதிக்கபட்டதோ, அதெபோல புலாலும் அனுமதிக்கபட்டதே. துறவுநிலையில் மட்டுமே அவாவறுத்தல், புலால் மறுத்தலுக்கான நியாயங்கள் தோன்றுகின்றன.

கொல்லாமை துறவிக்கான அறம். வள்ளுவர் படைமாட்சி அதிகாரத்தையும் பிறிதோர் இடத்தில் எழுதுகிறார். படைகள் கொல்லாமை அறம் பூன்டவை என நாம் காமடி பண்ணுவதில்லை. கொல்லாமை அதிகாரத்தை எடுத்துக்கொண்டுபோய் போர்க்களத்தில் உபதேசம் பண்ணுவதில்லை.

பொய்யாமை வள்ளுவர் கூற்ம் அறம். அதே வள்ளுவர் தான் ஒற்றாடல்க் அதிகாரத்தையும் எழுதினார்...பொய்யாமை ஒற்றர்கான அறமாக இருக்கவியலாது

ஆக கொல்லாமை, பொய்யாமை, புலால், காமம் எல்லாமே வாழ்க்கையின் ஒவ்வொரு படிமநிலைகளில் அனுமதிக்கபடுபவை...அனைத்தையும் தாண்டி அரசனும், மந்திரியும், படைவீரனும், ஒற்றனும் தம் கடமைகளை செய்துமுடித்து அவாவறுத்து, பற்றை விடுத்து துறவியாகும் வரை இந்த அறங்களை கடைபிடிப்பது அவசியமில்லை.

ஒற்றன் பொய்யாமையை கைக்கொள்லவேண்டும். அது எல்லார்க்குமான அறம்

படைவீரர்கள் கொல்லாமையை கடைபிடிக்கவேண்டும். அது எல்லார்க்குமான அறம்

அவாவறுத்தலை இல்லறத்தார் கடைபிடிக்கவேண்டும். அது எல்லார்க்குமான அறம்

என்பது எப்படிப்பட்ட காமடியோ அதுபோல்தான்

புலால் மறுத்தலை எல்லாரும் கடைபிடிக்கவேன்டும். அது எல்லார்க்குமான அறம் என்பதும்.



--

செல்வன்

unread,
Sep 19, 2016, 10:54:34 AM9/19/16
to mintamil, vallamai

2016-09-19 9:41 GMT-05:00 பழமைபேசி <pazam...@gmail.com>:
ஆக அண்ணாச்சி சொல்லவருவது,  முற்றிலும் துறந்தவன் துறவி.... அதாவது அத்தகையவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்... ஏனென்றால் அவந்தான் முற்றிலும் துறந்தவனாயிற்றே?? விலங்குகள் கூட தன் பாதுகாப்பு/உணவு கருதித்தான் சில பலதைச் செய்யும்.... அதனினும் ஒரு படி மேலே சென்று முற்றிலும் துறந்தவனாய்.... இருப்பதே துறவுன்னு புது இலக்கணம்.... மிடீலடா சாமி..... ஊருக்குப் போகாத வழியப் புடிக்கப் போயி, எதுக்கெல்லாம் முட்டுக் கொடுக்க வேண்டியதா இருக்கூ.... இஃகிஃகி!!

முற்றிலும் துறந்தவன் தான் துறவி என்பதில் எல்லாம் அண்னாச்சிக்கு சந்தேகம். நல்ல காமடி...வெளங்கிடும் நாடு..

துறவி-> துறத்தல்...துறத்தால் தான் துறவின் அடிப்படை..இதை எல்லாம் விளக்கும் நிலையில் இருப்பது காலக்கொடுமைதான் :-) வேணால் கையில் 10 கோடி வெச்சிருப்பவன் துறவின்னு சொல்லி நித்தியானந்தா சாமியாரை துறவியாக்கிடுங்க :-)



--

Megala Ramamourty

unread,
Sep 19, 2016, 11:08:14 AM9/19/16
to மின்தமிழ்
//அன்புடமை- அன்பு என்பது பற்று, பந்தத்தில் சேரும். துறவிக்கு பற்று இருக்ககூடாது என்கிறார் வள்ளுவர்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

ஆக பற்றைவிடவேண்டிய துறவிக்கு அன்புடமை பொருந்தும் என்பது எஞ்ஞனம்?//

What a wonderful invention!!!!

’அன்பு’ என்பது பற்றில் சேருமென்றால் 'அன்பின் குழந்தையான அருள்' பற்றில் சேராதா தோழரே? அதை ஏன் துறவிகளுக்கு முதன்மைப் பண்பாக வள்ளுவர் வலியுறுத்த வேண்டும்? 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.  என்கிறாரே!  

//இனியவை கூறலும் அதுபோல் தான்...அன்றாடம் பிறமனிதர்களுடன் புழங்கும் இல்லறத்தார்கே அவர் உரியன. துறவிகள் குற்றம் கண்ட இடம் கடிதல் வேன்டும்...ஆசிரியர் ஸ்தானத்தில் இருப்பவர் இன்சொல் மட்டுமே சொல்லிகொண்டிருக்கமுடியாது//

கருணை ததும்பும் மனமுடையவர் அடுத்தவரைக் காயப்படுத்தும் கடுஞ்சொற்களைக் கூறமாட்டார். அன்பு கனிந்து அருள் பொங்கும் மனத்திலிருந்து இன்சொல் தானே வரும்!  :-)

***

நடுநிலை::::::மனிதர்களுடனான உறவுக்கே இது எல்லாம் பொருந்தும்...துறவிகள் பற்றைவிட்டவர்கள். அவர்கள் நடுநிலைமை எடுத்து மனிதர்களுடன் உற்வாடி என்ன சாதிக்கபோகின்றனர்?


ஹா...ஹா...ஹா...
துறவிகளானாலும் அவர்களும் மனிதர்களே! தம் சீடர்களிடம் தவறுகண்டவிடத்து நடுநிலையோடு நின்று அவற்றைத் திருத்தும் அவசியமும் பொறுப்பும் அவர்களுக்கும் உண்டு!    

***

ஈகை..பணம் இருப்பவர்கள் செய்யும் விஷயம். பணமே வைத்துகொள்ளாத துறவி எப்படி ஈகையாளனாக இருக்கமுடியும்?

ஈகை என்பது பணம் அல்லது பொருள் சார்ந்ததாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது வித்தையாகவோ, விஷயதானமாகவோகூட இருக்கலாம். எல்லாவற்றையுமே கரன்சியாகவே பார்ப்பது பெருந்தவறு!  :-))

***

//அவாவறுத்தலை இல்லறத்தார் கடைபிடிக்கவேண்டும். அது எல்லார்க்குமான அறம்
என்பது எப்படிப்பட்ட காமடியோ அதுபோல்தான்
புலால் மறுத்தலை எல்லாரும் கடைபிடிக்கவேன்டும். அது எல்லார்க்குமான அறம் என்பதும்.//

இதெல்லாம் காமெடி என்று நீங்கள் சொல்வதுதான் பெரிய காமெடி செல்வன்!  :-))

புலால் மறுத்தல், இல்லறத்தாரும் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டியது என்பதை,

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 

எனும் குறட்பா பொட்டில் அடித்ததுபோல் விளக்கிய பின்பும் நீங்கள் அது துறவியருக்குத்தான் என்று ’பதினாறு வயதினிலே கமல்’ போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் பாருங்கள்...அதுதான் காமெடியின் உச்சம்!    :-)))

-மேகலா






செல்வன்

unread,
Sep 19, 2016, 11:13:01 AM9/19/16
to vallamai, mintamil

2016-09-19 10:02 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
அன்பு’ என்பது பற்றில் சேருமென்றால் 'அன்பின் குழந்தையான அருள்' பற்றில் சேராதா தோழரே? அதை ஏன் துறவிகளுக்கு முதன்மைப் பண்பாக வள்ளுவர் வலியுறுத்த வேண்டும்? 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.  என்கிறாரே!  


அருள் அன்பு பெற்ரெடுத்த குழந்தைதானே தவிர அது அன்பு அல்ல.

ராஜேந்திர சோழன், ராஜராஜ சோழனின் மகன் என்பதால் பிரகதீசுவரர் கோயிலை கட்டியவன் ராஜேந்திரசோழன் என நாம் சொல்லமுடியாது :-) குழவி வேறு, தந்தை வேறு


///கருணை ததும்பும் மனமுடையவர் அடுத்தவரைக் காயப்படுத்தும் கடுஞ்சொற்களைக் கூறமாட்டார். அன்பு கனிந்து அருள் பொங்கும் மனத்திலிருந்து இன்சொல் தானே வரும்!  :-)////


நிச்சயமாக கிடையாது....குற்றம் கண்ட இடத்தில் கடிதல் தான் துறவிக்கு அழகெ ஒழிய இன்சொல் கூறுதல் அல்ல. ஆசிரியர் இன்சொல்லே பேசிகொண்டிருக்க முடியாது. மாணவர்களை திட்டவேண்டிய இடத்தில் திட்டவேண்டும். இல்லையெனில் கல்வி செழிக்காது.திட்டுதல், வன்சொல்கூறுதல் அனைத்தும் கருணையின் வெளிப்பாடே. அதன்நோக்கம் ஒருவரை திருத்துவது


ஹா...ஹா...ஹா...
துறவிகளானாலும் அவர்களும் மனிதர்களே! தம் சீடர்களிடம் தவறுகண்டவிடத்து நடுநிலையோடு நின்று அவற்றைத் திருத்தும் அவசியமும் பொறுப்பும் அவர்களுக்கும் உண்டு!    


நீதிபதி நடுநிலையுடன் இருக்கமுடியாது..வாதி, பிரதிவாதி என ஏதோ ஒருவர் பக்கம் சார்ந்துதான் தீர்ப்பு சொல்ல முடியும் :-)


ஈகை என்பது பணம் அல்லது பொருள் சார்ந்ததாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது வித்தையாகவோ, விஷயதானமாகவோகூட இருக்கலாம். எல்லாவற்றையுமே கரன்சியாகவே பார்ப்பது பெருந்தவறு!  :-))


அப்படி கொடுப்பதை கூட தானமாக, ஈகையாக துறவி கருதகூடாது. அதை தன் கடமையாக கருதி செய்யவேண்டும். அது ஈகை அல்ல.


புலால் மறுத்தல், இல்லறத்தாரும் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டியது என்பதை,
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 

எனும் குறட்பா பொட்டில் அடித்ததுபோல் விளக்கிய பின்பும்


அப்படி ஒன்றும் இது விளக்கவில்லை.

சாப்பிடுபவர்கள் இல்லாவிட்டால் கொல்பவர்கள் இருக்காமட்டார்கள். என சொல்லி துறவிகளை பொதுமக்கள் உண்ணும் புலாலை பிக்ஷையாக கூட வாங்ககூடாது என்பதுதான் இதன் பொருளே ஒழிய பொதுமக்களை புலால் மறுக்கசொல்லி இதில் கூறவே இல்லை.

--

துரை.ந.உ

unread,
Sep 19, 2016, 11:13:45 AM9/19/16
to வல்லமை, Groups
​ இதை நாமா எழுதினோம் ---- 2000 ஆண்டுகளுக்குப்பின் ஒருத்தரின் பீலிங்ஸ் 
இதை ஏண்டா தொடங்கினோம் -- 2 நிமிடத்துக்கு முன்னால் ஒருத்தரின் பீலிங்ஸ் :)))

2016-09-19 20:32 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//அன்புடமை- அன்பு என்பது பற்று, பந்தத்தில் சேரும். துறவிக்கு பற்று இருக்ககூடாது என்கிறார் வள்ளுவர்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

ஆக பற்றைவிடவேண்டிய துறவிக்கு அன்புடமை பொருந்தும் என்பது எஞ்ஞனம்?//

What a wonderful invention!!!!

’அன்பு’ என்பது பற்றில் சேருமென்றால் 'அன்பின் குழந்தையான அருள்' பற்றில் சேராதா தோழரே? அதை ஏன் துறவிகளுக்கு முதன்மைப் பண்பாக வள்ளுவர் வலியுறுத்த வேண்டும்? 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.  என்கிறாரே!  

//இனியவை கூறலும் அதுபோல் தான்...அன்றாடம் பிறமனிதர்களுடன் புழங்கும் இல்லறத்தார்கே அவர் உரியன. துறவிகள் குற்றம் கண்ட இடம் கடிதல் வேன்டும்...ஆசிரியர் ஸ்தானத்தில் இருப்பவர் இன்சொல் மட்டுமே சொல்லிகொண்டிருக்கமுடியாது//

கருணை ததும்பும் மனமுடையவர் அடுத்தவரைக் காயப்படுத்தும் கடுஞ்சொற்களைக் கூறமாட்டார். அன்பு கனிந்து அருள் பொங்கும் மனத்திலிருந்து இன்சொல் தானே வரும்!  :-)

***

நடுநிலை::::::மனிதர்களுடனான உறவுக்கே இது எல்லாம் பொருந்தும்...துறவிகள் பற்றைவிட்டவர்கள். அவர்கள் நடுநிலைமை எடுத்து மனிதர்களுடன் உற்வாடி என்ன சாதிக்கபோகின்றனர்?


ஹா...ஹா...ஹா...
துறவிகளானாலும் அவர்களும் மனிதர்களே! தம் சீடர்களிடம் தவறுகண்டவிடத்து நடுநிலையோடு நின்று அவற்றைத் திருத்தும் அவசியமும் பொறுப்பும் அவர்களுக்கும் உண்டு!    

***

ஈகை..பணம் இருப்பவர்கள் செய்யும் விஷயம். பணமே வைத்துகொள்ளாத துறவி எப்படி ஈகையாளனாக இருக்கமுடியும்?

ஈகை என்பது பணம் அல்லது பொருள் சார்ந்ததாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது வித்தையாகவோ, விஷயதானமாகவோகூட இருக்கலாம். எல்லாவற்றையுமே கரன்சியாகவே பார்ப்பது பெருந்தவறு!  :-))

***

//அவாவறுத்தலை இல்லறத்தார் கடைபிடிக்கவேண்டும். அது எல்லார்க்குமான அறம்
என்பது எப்படிப்பட்ட காமடியோ அதுபோல்தான்
புலால் மறுத்தலை எல்லாரும் கடைபிடிக்கவேன்டும். அது எல்லார்க்குமான அறம் என்பதும்.//

இதெல்லாம் காமெடி என்று நீங்கள் சொல்வதுதான் பெரிய காமெடி செல்வன்!  :-))

புலால் மறுத்தல், இல்லறத்தாரும் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டியது என்பதை,
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 

எனும் குறட்பா பொட்டில் அடித்ததுபோல் விளக்கிய பின்பும் நீங்கள் அது துறவியருக்குத்தான் என்று ’பதினாறு வயதினிலே கமல்’ போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் பாருங்கள்...அதுதான் காமெடியின் உச்சம்!    :-)))

-மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 19, 2016, 11:20:03 AM9/19/16
to mintamil
செல்வன் ஜி

இந்தக் குறளுக்கு என்னங்க அர்த்தம்?

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

கொல்லாமை அதிகாரத்துல வர்ற பாட்டு இது.

உங்க கணக்குப்படி, கொல்லாமை என்பது துறவறத்தார்க்கு மட்டுமே உரியதுன்னா, இந்தப் பாட்டு என்ன சொல்லுதுனு உங்களுக்கு வெளங்குதா இல்லை வெளக்கணுமா?.

அன்புடன்,

தி.பொ.ச.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

செல்வன்

unread,
Sep 19, 2016, 11:23:24 AM9/19/16
to vallamai, mintamil
மேலும் நீங்கள்

கொல்லாமை படைகளுக்கான அறமா என்பதையும்

பொய்யாமை ஒற்றர்க்கான அறமா என்பதையும்'

அவாவறுத்தல் இல்லறத்தார்க்கான அறமா என்பதையும்

இன்னும் கூறவே இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன் :-)

புலால் மறுத்தல் எல்லார்க்குமான அறம் என கூறுபவர்கள்

கொல்லாமை அறம்பூன்டு கொசுவை கூட கொல்லகூடாது

பொய் சொல்லகூடாது

அவாவறுக்கவேன்டும். சின்ன குச்சிமிடாய்க்கு கூட ஆசைபடகூடாது

இப்படித்தான் நான் இருக்கிறேன் என்கிறவர்கள் புலால் மறுத்தலையும் கடைபிடிக்கலாம்., பிறருக்கு உபதேசிக்கலாம்.

செல்வன்

unread,
Sep 19, 2016, 11:30:13 AM9/19/16
to mintamil

2016-09-19 10:20 GMT-05:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

கொல்லாமை அதிகாரத்துல வர்ற பாட்டு இது.

உங்க கணக்குப்படி, கொல்லாமை என்பது துறவறத்தார்க்கு மட்டுமே உரியதுன்னா, இந்தப் பாட்டு என்ன சொல்லுதுனு உங்களுக்கு வெளங்குதா இல்லை வெளக்கணுமா?.


கொல்லாமை அறம்பூண்ட மன்னர்கள், பொதுமனிதர்கள் உண்டு. உதா: அசோகர்

அம்மாதிரி மன்னர்களை காட்டி பெருமைபடுத்தி பாராட்டுகிறார் வள்ளுவர்

அதற்காக எல்லா மன்னராலும் அசோகர் மாதிரி இருக்கமுடியாது...இருந்தால் வள்ளுவர் ஏன் படைமாட்சி அதிகாரம் எழுதுகிறார்?

கொல்லாமை எல்லாருக்குமான அறமல்ல என்பதற்கு படைமாட்சி அதிகாரமெ சான்று


--

Megala Ramamourty

unread,
Sep 19, 2016, 11:32:34 AM9/19/16
to vallamai, மின்தமிழ்
//அருள் அன்பு பெற்ரெடுத்த குழந்தைதானே தவிர அது அன்பு அல்ல.

ராஜேந்திர சோழன், ராஜராஜ சோழனின் மகன் என்பதால் பிரகதீசுவரர் கோயிலை கட்டியவன் ராஜேந்திரசோழன் என நாம் சொல்லமுடியாது :-) குழவி வேறு, தந்தை வேறு//

என்னா விளக்கம்டா சாமி!  :-)
ராஜராஜ சோழன் இல்லாவிட்டால் இராஜேந்திர சோழன் ஏது? அன்பு இல்லாவிட்டால் அருள் ஏது? 

***

//நீதிபதி நடுநிலையுடன் இருக்கமுடியாது..வாதி, பிரதிவாதி என ஏதோ ஒருவர் பக்கம் சார்ந்துதான் தீர்ப்பு சொல்ல முடியும் :-)//

நியாயத்தைச் சார்ந்து தீர்ப்புக்கூறுவதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை. அதற்கு ’ஒருபக்கம் சார்தல்’ என்று விளக்கம் கூறுவது... புச்சாக்கீது தல!

//அப்படி கொடுப்பதை கூட தானமாக, ஈகையாக துறவி கருதகூடாது. அதை தன் கடமையாக கருதி செய்யவேண்டும். அது ஈகை அல்ல.//

ஊரில் உள்ளோர்க்கெல்லாம் துறவி தான் கற்றறிந்ததைத் தருவதில்லை. அவ்வாறு செய்தால் அதனை ஈகை என்றோ ஒப்புரவு என்றோ அழைக்கலாம். தன்னை நாடிவரும் மாணவர்கட்கு மட்டுமே அதைத் தருகிறார். அது கல்விக் கொடையே...ஈகையே! அதனால்தான் அதனை ’விஷயதானம்’ என்றார்கள்!

***

சாப்பிடுபவர்கள் இல்லாவிட்டால் கொல்பவர்கள் இருக்காமட்டார்கள். என சொல்லி துறவிகளை பொதுமக்கள் உண்ணும் புலாலை பிக்ஷையாக கூட வாங்ககூடாது என்பதுதான் இதன் பொருளே ஒழிய பொதுமக்களை புலால் மறுக்கசொல்லி இதில் கூறவே இல்லை.

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனில் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

 
இங்கே உலகு என்பது உலகத்தில் வாழும் அனைத்து மக்களையும் குறிக்கும் சொல். 
”ஏ...உலகே! நீ ஊன் தின்பதை நிறுத்து! அதனை விற்பதைக் கடைக்காரன் நிறுத்துவான்” என்கிறார் வள்ளுவர். இது மக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதை இன்னுமா உடைத்துச் சொல்ல வேண்டும் செல்வன்?     

சரியான டியூப் லைட் நீங்க!  :-)




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

பழமைபேசி

unread,
Sep 19, 2016, 11:35:30 AM9/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
அன்பு மக்களே, அண்ணாச்சிக்கு புலால் உண்ணுதலை வலியுறுத்த வேண்டுமென்கிற ஒரு ஒற்றைப்படை நோக்கமே கரு. அந்த ஒற்றைக்காக ஒழுக்கமுடைமை என்பது கூடத் துறவில் வராது எனச் சொல்கிறார். புவியைச் சுற்றி எண்ணற்ற சூரியன்கள் இருக்கின்றன. எனவே சூரியன் உதிப்பது கிழக்கு என்பது கூடப் பொய். அது போல துறவிக்கு ஒழுக்கம் இருத்தல் வேண்டுமெனக் கருதுவதும் பொய் என்பது போன்ற மொட்டத்தலை, முழங்காலுக்குமான திருமணங்களை முன்னின்று நடத்துவார். அத்தகைய திருமணங்களுக்கான மணமுறிவாளனாக இருக்க எனக்கு ஆசைதான்... ஆனால் நேரமில்லை. நன்றி!!

me the escape!! :-)

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 19, 2016, 11:36:13 AM9/19/16
to mintamil

2016-09-19 20:59 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
கொல்லாமை எல்லாருக்குமான அறமல்ல என்பதற்கு படைமாட்சி அதிகாரமெ சான்று

செல்வன் ஜி

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.:))

கொல்லாமை எல்லோருக்குமான அறம்னு நானும் சொல்லலை; வள்ளுவரும் சொல்லலை.

போர்முனையில இருக்குற படைவீரர்கள் எதிரிகளைக் கொல்லாமல் முத்தமா கொடுப்பாங்க. போரில் கொல்வதுதான் போர்வீரனுக்கான தர்மம்.

அதுக்காக நீங்க உங்கள படைவீரரா நெனச்சிக்கிட்டு போரே செய்யாம அப்பிராணி விலங்குகள அடிச்சி சாப்பிடற்து போர் தர்மமாகுமா? :))

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

செல்வன்

unread,
Sep 19, 2016, 11:45:27 AM9/19/16
to vallamai, மின்தமிழ்

2016-09-19 10:32 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

என்னா விளக்கம்டா சாமி!  :-)
ராஜராஜ சோழன் இல்லாவிட்டால் இராஜேந்திர சோழன் ஏது? அன்பு இல்லாவிட்டால் அருள் ஏது? 

ஆனால் இருவரும் ஒன்றல்ல. வேறு வேறு :-)

தாயும், பிள்ளையுமனாலும் வாயும், வயிறும் வேறு என்பது பழமொழி



நியாயத்தைச் சார்ந்து தீர்ப்புக்கூறுவதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை. அதற்கு ’ஒருபக்கம் சார்தல்’ என்று விளக்கம் கூறுவது... புச்சாக்கீது தல!

இப்படி தீர்ப்புகூறல் எல்லாம் துறவிக்கு எதுக்கு? அது எல்லாம் ஊர் நாட்டாமைகளுக்கு தான் அவசியம். துறவி காட்டில் தவம் செய்யவேண்டியவன். அவன் நடுநிலைமை வகித்து என்ன செய்யபோகிறான்? 


ஊரில் உள்ளோர்க்கெல்லாம் துறவி தான் கற்றறிந்ததைத் தருவதில்லை. அவ்வாறு செய்தால் அதனை ஈகை என்றோ ஒப்புரவு என்றோ அழைக்கலாம். தன்னை நாடிவரும் மாணவர்கட்கு மட்டுமே அதைத் தருகிறார். அது கல்விக் கொடையே...ஈகையே! அதனால்தான் அதனை ’விஷயதானம்’ என்றார்கள்!


துறவியாக ஆசிரியன் ஆகவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. படிப்பறிவே இல்லாதவன் கூட துறவியாகமுடியும். அனைத்தையும் துறக்கும் நிலையே துறவறம்.

சில துறவிகளுக்கு படிப்பறிவு இருக்கலாம், பிறருக்கு சொல்லிகொடுக்க ஏதெனும் தெரியலாம். ஆனால் எல்லாதுறவிக்கும் அப்படி அல்ல. அவர்களுக்கு ஈகை, கொடை என்பது அறமாக்கபடவில்லை. மனிதவாசனையெ படாதகாட்டில் வசிக்கும் துறவிய்ர் உண்டு. அவர் யாருக்கு எதை ஈகையாக கொடுப்பார்கள்?

அதனால் ஈகை என்பது எல்லா துறவியராலும் பின்பற்ற இயலாது. அதனால் அது அவர்களுக்கு கட்டாயம் அல்ல.


தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

 
இங்கே உலகு என்பது உலகத்தில் வாழும் அனைத்து மக்களையும் குறிக்கும் சொல். 
”ஏ...உலகே! நீ ஊன் தின்பதை நிறுத்து! அதனை விற்பதைக் கடைக்காரன் நிறுத்துவான்” என்கிறார் வள்ளுவர்.



"உலகே தின்பதை நிறுத்து" என வள்ளுவர் சொல்லவே இல்லையே? ஏன் குறளின் பொருளை மாற்றி சொல்கிறீர்கள்? :-)

"தினற்பொருட்டு உலகம் கொல்கிறது. தின்பவர் இல்லையெனில் கொல்பவர் இருக்கமாட்டார்கள்" என்பதே இதன் நேரடிப்பொருள்.

இதன் மறைமுகபொருள் "அதனால் அப்படி தினற்பொருட்டு கொல்லபட்ட புலாலை நீ பிட்சையாக கொடுத்தால் கூட வாங்கி உண்ணாதே" என்பதே

--

செல்வன்

unread,
Sep 19, 2016, 11:51:30 AM9/19/16
to mintamil

2016-09-19 10:36 GMT-05:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
கொல்லாமை எல்லோருக்குமான அறம்னு நானும் சொல்லலை; வள்ளுவரும் சொல்லலை

அப்படி வாங்க வழிக்கு

அப்புறம் புலால் மறுத்தல் மட்டும் எப்படி எல்லார்க்குமான அறம் ஆகும்? அதுவும் கொல்லாமையை போல துறவறவியலில் தான் வருகிறது.


அதுக்காக நீங்க உங்கள படைவீரரா நெனச்சிக்கிட்டு போரே செய்யாம அப்பிராணி விலங்குகள அடிச்சி சாப்பிடற்து போர் தர்மமாகுமா? :))

நான் படைவீரன் அல்ல. ஆனால் வீரன் :-)

வீரன் புலால் உண்பது அவசியம். ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் போட்டுவிழும் பயந்தாங்கொள்ளிகள் புலால் உண்ணவேன்டியது கிடையாது :-).



--

Megala Ramamourty

unread,
Sep 19, 2016, 11:56:06 AM9/19/16
to மின்தமிழ், vallamai
"தினற்பொருட்டு உலகம் கொல்கிறது. தின்பவர் இல்லையெனில் கொல்பவர் இருக்கமாட்டார்கள்" என்பதே இதன் நேரடிப்பொருள்.

அப்படி வாங்க வழிக்கு! 

தின்பவர்கள் இல்லையென்றால் உயிர்களைக் கொல்லமாட்டார்கள் இல்லையா? எனவே உயிர்களைக் கொல்லாதே! ஏற்கனவே கொல்லப்பட்ட உயிர்களையும் புசிக்காதே! என்று மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார் வள்ளுவர். 

//இதன் மறைமுகபொருள் "அதனால் அப்படி தினற்பொருட்டு கொல்லபட்ட புலாலை நீ பிட்சையாக கொடுத்தால் கூட வாங்கி உண்ணாதே" என்பதே//

 இது புத்தத் துறவிகளுக்கானது!  :-)

அட...நம்ம செல்வனுக்கு நேர்பொருளும் புரிந்துவிட்டது; மறைபொருளும் விளங்கிவிட்டது. வெரிகுட் செல்வன்!   :-)

இக்குறள் சொல்லும் நீதி:  உலகே! நீ உயிர்களைக் கொல்வதும் பாவம்; கொல்லப்பட்ட உயிர்களைப் புசிப்பதும் பாவம்! இரண்டையும் விட்டுவிடு!   







செல்வன்

unread,
Sep 19, 2016, 12:08:00 PM9/19/16
to vallamai, மின்தமிழ்
2016-09-19 10:56 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
தின்பவர்கள் இல்லையென்றால் உயிர்களைக் கொல்லமாட்டார்கள் இல்லையா?

ஆமாம்

 
எனவே உயிர்களைக் கொல்லாதே! ஏற்கனவே கொல்லப்பட்ட உயிர்களையும் புசிக்காதே! என்று மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார் வள்ளுவர். 


மக்களுக்கு அல்ல....துறவிகளுக்கு..இது துறவறவியலில் வருவது என்பதை நினைவில் கொள்க :-)

சில வகை பாவங்கள் மக்களுக்கு அனுமதிக்கபட்டதே...உதா: கொலை (படைகளுக்கு), பொய் சொல்லுதல் (ஒற்றர்களுக்கு), காமம்,புலால் ஆகியவையும் அதுபோல பொதுமக்களுக்கு அனுமதிக்கபட்டதே

துறவிகளுக்கு தான் இவை முற்றிலும் மறுக்கபட்டவை


இக்குறள் சொல்லும் நீதி:  உலகே! நீ உயிர்களைக் கொல்வதும் பாவம்; கொல்லப்பட்ட உயிர்களைப் புசிப்பதும் பாவம்! இரண்டையும் விட்டுவிடு!   

இரன்டையும் விட்டுவிடு துறவியே...:-)

உலகம் தினற்பொருட்டு கொல்கிறது. நீ அதனால் அதை தின்னாதே துறவியே.. நீ தின்ன விரும்பினால், நீ தின்னவேண்டும் என்பதற்காக அவ்வுயிரை கொல்வார்கள். ஆக நீ தின்னாதே முனிபுங்கவா :-)




--

செல்வன்

unread,
Sep 19, 2016, 12:17:35 PM9/19/16
to vallamai, மின்தமிழ்


படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்.

படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.


படைமாட்சி எழுதிய அதே வள்ளுவர் துறவுநிலையில் படைக்கருவி ஏந்துதலை கண்டிக்கிறார்

ஆக படைக்கருவி ஏந்தல் அரசியல் நிலையில் சரி, துறவு நிலையில் தவறு என்பதை உணர்ந்தால் புலால் மறுத்தலும் அதுபோலவே என உணர்வோம்.

ஒரு நிலைக்கு பொருந்தும் அறம் பிறிதொரு நிலையில் பொருந்தாது

பற்றை விடசொன்ன அதே வள்ளுவர் கீழ்க்காணும் குறளை எழுதுகிறார்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

ஆக செல்வம் சேர்த்தல் ஒரு நிலையில் சிறப்பு,,,இன்னொரு சிலையில் சிறப்பல்ல.

குறள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளுக்கான அறநூல் என்பதையும், ஒரு நிலைக்கான அறம் பிறிதொரு நிலைக்கு பொருந்தாது என்பதையும் உனராமல் பேசிகொன்டிருப்பதில் பலனில்லை.

தேமொழி

unread,
Sep 19, 2016, 2:39:31 PM9/19/16
to மின்தமிழ்
இது போன்ற வழிமுறையெல்லாம் இருப்பது முன்னரே தெரிந்திருந்தால், நான் துறவியாகப் போகிறேன்...எனக்கு இந்த இந்த அதிகாரம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி  பள்ளி நாட்களில் ~ 10% திருக்குறள் மட்டும் படித்துவிட்டு தப்பியிருக்கலாம்... 
 

செல்வன்

unread,
Sep 19, 2016, 2:42:12 PM9/19/16
to mintamil

2016-09-19 13:39 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இது போன்ற வழிமுறையெல்லாம் இருப்பது முன்னரே தெரிந்திருந்தால், நான் துறவியாகப் போகிறேன்...எனக்கு இந்த இந்த அதிகாரம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி  பள்ளி நாட்களில் ~ 10% திருக்குறள் மட்டும் படித்துவிட்டு தப்பியிருக்கலாம்...

நானும் தான் மார்க்கட்டிங் படிக்கபோகிறேன். எனக்கு எதுக்கு கெமிஸ்ட்ரி வகுப்பு என எஸ்கேப் ஆகியிருக்கலாம் :-)


--

Oru Arizonan

unread,
Sep 19, 2016, 5:25:24 PM9/19/16
to mintamil


2016-09-19 8:32 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//
//நீதிபதி நடுநிலையுடன் இருக்கமுடியாது..வாதி, பிரதிவாதி என ஏதோ ஒருவர் பக்கம் சார்ந்துதான் தீர்ப்பு சொல்ல முடியும் :-)//

நியாயத்தைச் சார்ந்து தீர்ப்புக்கூறுவதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை. அதற்கு ’ஒருபக்கம் சார்தல்’ என்று விளக்கம் கூறுவது... புச்சாக்கீது தல!//

அது புச்சு இல்லே மேகலா தங்கச்சி!  சின்னா, சின்னானு  ஒருத்தரு முன்னாலே எளுதிப்புட்டுப் போனாப்புலே!   அத்தப்படிச்சு நாங்களே ரொம்பக் கொளம்பிப்போயி இருக்கோம்.

அத்தத்தான் செல்வம் தம்பி எடுத்துப்போட்டு, தானே சொல்லறமாதிரி பண்ணி சொல்லிக்கினு இருக்காப்பலே.

தங்கச்சி, நீங்க நல்லாத்தான் எளுதறாப்பலே!  சொம்மா ரவுண்டு கட்டி அடிங்க!  அண்ணாச்சி பின்னாலே இருக்கேனில்ல!

ஒரு அரிசோனன்  [அண்ணாச்சி] 

Innamburan S.Soundararajan

unread,
Sep 19, 2016, 11:48:50 PM9/19/16
to mintamil
'கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கை...'
~ இது நான் அறியாதது. ஏதேனும் ஆதாரம் கொடுத்தால், நலம்.
நல்ல கட்டுரை, மேகலா.
இன்னம்பூரான் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Sep 20, 2016, 1:02:42 AM9/20/16
to மின்தமிழ், வல்லமை
2016-09-19 19:23 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

’வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில்  மாற்றுக் கருத்தில்லை; ஆனால் எவ்வாறு வாழ்வது? அதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்வி உடனே நம் மனத்தில் எழுகின்றது. இதற்கான விடையைத் தன் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏட்டில் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒரு மாமனிதர்!

அவர் வேறுயாருமல்லர்… சிந்தனைத் தெளிவும் கருத்துச் செறிவும் மிளிர ஒன்றரை அடிகளிலேயே வாழ்வின் நீள அகலங்களை அளந்துவிட்ட நீடுபுகழ் வள்ளுவரே அந்த மாமனிதர்!

முடிமன்னர் முதல் குடிமக்கள் ஈறாகச் சாதி சமயப் பேதமின்றி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடின்றி அனைவர்க்கும் வழிகாட்டும் அரிய நூல் வள்ளுவம் என்பது உலகறிந்த ஒன்று. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்றுங்கொண்ட ’முப்பால்’ தமிழகத்திற்கு அப்பாலும் புகழொளி பரப்பிவருகின்றது. விவிலியத்திற்கு (Bible) அடுத்தபடியாக உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நம் திருக்குறளே என்பது தமிழரனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய சாதனை!

இந்த உலக சாதனை ஒருபுறமிருப்பினும், உள்ளூர்த் தமிழர்களாலேயே திருக்குறளுக்கு அடிக்கடிச் சோதனையும் நிகழ்ந்துவிடுகின்ற கொடுமையை என்னென்பது! மணக்குடவர் தொடங்கிக் (கவிஞர்) மகுடேஸ்வரன் வரைப் பலர் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியும், (Almost every major writer/scholar has written commentaries on it.) குறளில் பேசப்படுகின்ற கருத்துக்கள் சிலவற்றில் நம்மவர்க்கு இன்னமும் தெளிவின்றித் தாமும் குழம்பிப் பிறரையும் குழப்பிவருவது வேதனையளிக்கின்றது.

சான்றாக, அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இல்லறவியல், துறவறவியல் உட்பிரிவுகளைக் கருத்தில்கொள்வோம்.

இல்லறவியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் இல்லறத்தார்க்கே உரியன; துறவறவியல் அதிகாரங்கள் அனைத்தும் துறவியர்க்காகவே எழுதப்பட்டன என்ற எண்ணம் இந்தக் குழப்பவாதிகளுக்கு இருக்கின்றது. இந்த எண்ணம் சரிதானா?

இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை  என்று கருதுவது பொருந்துமா?

அன்பும், இன்சொற்களும், நல்லொழுக்கமும், தீவினையச்சமும், நடுவுநிலைமையும் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் கைக்கொள்ள வேண்டிய அரும்பண்புகளாயிற்றே! இவற்றை ”இல்லறத்தார்க்கு மட்டுமே” என்று எவ்வாறு முத்திரை குத்தவியலும்? எனவே, இல்லறவியலில் பேசப்படும் பண்புகள் இல்லறத்தார்க்கு ’அவசியம்’ இருக்கவேண்டியவை; ஏனையோரும் பின்பற்றி ஒழுகவேண்டியவை என்று கொள்வதே அறிவுடைமை!

இனி, துறவறவியலுக்கு வருவோம்!



இப்பகுதியில் இடம்பெற்றுள்ள ‘புலால் மறுத்தல்’ எனும் அதிகாரம் அதிக அளவில் சர்ச்சைகளுக்கு ஆட்பட்டு வருவது கண்கூடு. ”புலால் மறுப்பு துறவியர்க்கானது” என்று ஒரு சாராரும், ”இல்லை…இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டியதே அது” என்று மற்றொரு சாராரும் முடிவில்லா விவாதத்தில் ஈடுபட்டுவரக் காண்கிறோம்.

இந்த வி(தண்டா)வாதம் இருக்கட்டும்! இதுகுறித்து வள்ளுவரின் உள்ளம் என்ன எண்ணுகின்றது என்பதைக் குறள்வழி அறிந்துவருவோம்!

’புலால் மறுப்பு இல்லறத்தார்க்கு அல்ல’ என்று உரத்து முழக்கமிடும் ஊனூண் பிரியர்கள் தம் கருத்துக்குச் சான்றுகாட்டும் குறட்பா பின்வருவது…

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 
(குறள்: 259)

”அவிசொரிந்து (நெய் வார்த்து) வேள்வி செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் நன்று” என்பது இக்குறளின் பொருள். புவியிலே, அவிசொரிந்து வேள்வி செய்வோர் யார்? முனிவர்கள்(அருளாளர்கள்); ஆகவே அவர்கள் மட்டுந்தான் உயிர்களைச் செகுத்தும் பகுத்தும் உண்ணக்கூடாது. பிறரெல்லாம் ’ஹலால் (இறைச்சிக்) கடையில் புலால் வாங்கி விலாப் புடைக்கப் புசிக்கலாம்…தவறில்லை என்று விளக்கமளிக்கின்றனர் இவர்கள்!

இவ்விளக்கம் ஏற்புடையதா என்பதையறிய நாம் வேறெங்கும் ஆதாரம்தேடி அலையவேண்டியதில்லை. புலால் மறுத்தல் அதிகாரத்திலேயே அதற்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடுகின்றது. ஆம், அந்த அதிகாரத்தின் ஆறாம் குறட்பாவை நோக்கி நம் பார்வையைப் பதிப்போம்!

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 
(குறள்: 256) என்பது அக்குறட்பா.

இதன் பொருள்: பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.

’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!


நன்று! நன்று!! சரியான கருத்து.

 

இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!

”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும். 

ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!”  – பாவாணர்

(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)


ஆம். இது புத்தமதக் கொள்கையை கடியும் குறள். இன்னும் நிறைய குறட்கள் சொல்லலாம். காட்டுக்கு, 260ஆம் குறள். இக்குறளில் கொல்லான் என்ற சொல் புத்த
மதத்தை மறுத்து சொன்னது. அப்படியே ஆன்மா பற்றியப் பார்வையிலும், புத்த மதக்
கருத்துக்களை மறுத்திருப்பார் தேவர் பெருமான்.


மிக நல்ல கட்டுரை!

இரா.பா

 

இதே குறளை, கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆங்கிலக் கவிதை வரிகளில் சொல்வதானால்,

None would kill and sell the flesh
For eating it if they don’t wish.

ஆன்றவிந்தடங்கிய சான்றோரே…அருமைத் தோழர்களே! இனியேனும், ’புலால் மறுத்தல்’ துறவியருக்கு மட்டுமே எனும் பொ(அ)ருளற்ற வாதத்தை விடுத்து, ’அது மண்ணில் வாழும் மானுடர் அனைவர்க்கும் பொதுவானது’ என்பதை உணர்ந்து, ஊனுணவைக் கடிந்து ஒதுக்குவீர்; வள்ளுவ நெறியில் வாழ்வீர்!


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=72093

--

வேந்தன் அரசு

unread,
Sep 20, 2016, 6:46:43 AM9/20/16
to vallamai, மின்தமிழ்
இவை எலலாமெ வெட்டி வாதம்.

மெய்ப்பொருள் காண்பது அறிவுனு சொல்லிட்டார். அவரவர் மெய்ப்பொருள் அவரவர்க்கு.
நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என் ஒரு பிள்ளை அடம்பிடிக்கலாம். நான் அரசியலுக்குப் போவது இல்லை’ என்று..





--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Sep 20, 2016, 9:32:22 AM9/20/16
to mintamil, vallamai
பிற எல்லா குறளும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைக்கான அறத்தை குறிக்கிறது என ஒத்துக்கொள்ள தயங்காத நாம் புலால் மறுப்பு என்றதும் அது எல்ல மனிதர்க்கும், எக்காலத்துக்கும் பொருந்தும் என வாதாட ஆரம்பித்துவிடுகிறோம் :-)

படைச்செருக்கு அதிகாரத்தில் வள்ளுவர் இவ்விதம் ஆயுதமேந்துதலை போற்றி கூறுகிறார்

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும்.

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் 
வைக்கும்தன் நாளை எடுத்து.


புலால் மறுத்தலில் வள்ளுவர் இவ்விதம் ஆயுதமேந்துதலை மறுத்து கூறுகிறார்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்.

ஆக இந்த இரண்டு அதிகாரங்களும் ஒரே சமயம், ஒரெ மனிதனுக்கு பொருந்தும் என கூறவியலுமா?

ஆனால் பொருந்தும் என இழையில் காமடி பண்ணபடுகிறது..

தட்டிகேட்க ஆளில்லைன்னா தம்பி சண்டபிரசண்டன் எனும் கதையாக இத்தனை நாள் புலால் மறுப்பு பிரச்சாரம் நம் இலக்கியங்களையும், இதிகாசங்களையும் மோசடியாக மேற்கோள் காட்டி நடந்துவந்தது..இனி அது நடக்காது..நடக்கவிடமாட்டோம் :-)

Megala Ramamourty

unread,
Sep 20, 2016, 9:43:29 PM9/20/16
to மின்தமிழ், vallamai
பாராட்டுக்கு நன்றி கணேசன் ஐயா.

மேலதிக விளக்கங்களுக்கும் நனிநன்றி!

அன்புடன்,
மேகலா


2016-09-19 10:07 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அருமை, மேகலை.

வள்ளுவரின் சமயம் காட்டும் இரண்டு குறள்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். இந்த வாரம் முழுதும் இளங்கோ அடிகள் தன் சமயம் சமணம் பரப்ப
எப்படி நாடுகாண் காதையும், கர்நாடக கல்வெட்டுச் சொல் கவுந்தி என்பதும் பயன்படுத்துகிறார் தெய்வக்காவிரி நாடு முழுதும் சொல்லி,
கங்க ராஜ்யத்து சீரங்கத்தில் (திருவரங்கம் வேறு) சமணத்தின் அந்த(ர) சாரணர் வருகை, தொழுகை என எழுதினேன்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 
(குறள்: 259)

இதில் வேதியரின் யாகங்களில் மாடு, ஆடு இடலைக் கண்டிக்கிறார். தேவாரத்தில் மாடு வெட்டி யாகம் செய்வது நிறைய உண்டு.
இந்தியா முழுதும் வேளிர்கள் மாடு வெட்டி யாகம் செய்தால் கடவுள் வரமாட்டார் என நிறுத்தியமை வரலாறு. 

அதேபோல, பிட்சை பாத்திரத்தில் இட்ட ஊனை தின்னலாம் என்று ரிலேக்ஸ் செய்தது பௌத்தம். அதனையும்
நன்கு கண்டித்தவர் வள்ளுவர். 

அத்தோடு தொடர்புடைய ஒரு குறள்:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

புலால் உண்ணலுக்கு துறவி ஆயினும், சாவகர் (Householder) ஆயினும் வள்ளுவர் ஆதரவு இல்லை.

அதே போல் தான், அரசாங்கம் மக்களைக் கொல்லலாம் என்பதற்கும் வள்ளுவர் ஆதரவு இல்லை.
அதனை வள்ளுவர் அரசாங்கம் தூக்குதண்டனை என்கிறார் என்பதெல்லாம் செல்லாது.
பாம்பின்கால் பாம்பறியும். நாமக்கல் கவிஞர் நன்கு விளக்கினார்:

நாகரீகமான அரசாங்கங்கள் யாவும் வள்ளுவர் பாதையில் இன்றும் பயணிப்பதைப் பார்க்கலாம்.
சௌதி அரேபியா மாறவேண்டும் - வள்ளுவர் வழிக்கு வரவேண்டும் என அல்லாவைப் ப்ரார்த்திப்போம்.

நா. கணேசன்

On Monday, September 19, 2016 at 6:54:01 AM UTC-7, megala.ramamourty wrote:

’வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில்  மாற்றுக் கருத்தில்லை; ஆனால் எவ்வாறு வாழ்வது? அதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்வி உடனே நம் மனத்தில் எழுகின்றது. இதற்கான விடையைத் தன் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏட்டில் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒரு மாமனிதர்!

அவர் வேறுயாருமல்லர்… சிந்தனைத் தெளிவும் கருத்துச் செறிவும் மிளிர ஒன்றரை அடிகளிலேயே வாழ்வின் நீள அகலங்களை அளந்துவிட்ட நீடுபுகழ் வள்ளுவரே அந்த மாமனிதர்!

முடிமன்னர் முதல் குடிமக்கள் ஈறாகச் சாதி சமயப் பேதமின்றி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடின்றி அனைவர்க்கும் வழிகாட்டும் அரிய நூல் வள்ளுவம் என்பது உலகறிந்த ஒன்று. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்றுங்கொண்ட ’முப்பால்’ தமிழகத்திற்கு அப்பாலும் புகழொளி பரப்பிவருகின்றது. விவிலியத்திற்கு (Bible) அடுத்தபடியாக உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நம் திருக்குறளே என்பது தமிழரனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய சாதனை!

இந்த உலக சாதனை ஒருபுறமிருப்பினும், உள்ளூர்த் தமிழர்களாலேயே திருக்குறளுக்கு அடிக்கடிச் சோதனையும் நிகழ்ந்துவிடுகின்ற கொடுமையை என்னென்பது! மணக்குடவர் தொடங்கிக் (கவிஞர்) மகுடேஸ்வரன் வரைப் பலர் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியும், (Almost every major writer/scholar has written commentaries on it.) குறளில் பேசப்படுகின்ற கருத்துக்கள் சிலவற்றில் நம்மவர்க்கு இன்னமும் தெளிவின்றித் தாமும் குழம்பிப் பிறரையும் குழப்பிவருவது வேதனையளிக்கின்றது.

சான்றாக, அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இல்லறவியல், துறவறவியல் உட்பிரிவுகளைக் கருத்தில்கொள்வோம்.

இல்லறவியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் இல்லறத்தார்க்கே உரியன; துறவறவியல் அதிகாரங்கள் அனைத்தும் துறவியர்க்காகவே எழுதப்பட்டன என்ற எண்ணம் இந்தக் குழப்பவாதிகளுக்கு இருக்கின்றது. இந்த எண்ணம் சரிதானா?

இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை  என்று கருதுவது பொருந்துமா?

அன்பும், இன்சொற்களும், நல்லொழுக்கமும், தீவினையச்சமும், நடுவுநிலைமையும் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் கைக்கொள்ள வேண்டிய அரும்பண்புகளாயிற்றே! இவற்றை ”இல்லறத்தார்க்கு மட்டுமே” என்று எவ்வாறு முத்திரை குத்தவியலும்? எனவே, இல்லறவியலில் பேசப்படும் பண்புகள் இல்லறத்தார்க்கு ’அவசியம்’ இருக்கவேண்டியவை; ஏனையோரும் பின்பற்றி ஒழுகவேண்டியவை என்று கொள்வதே அறிவுடைமை!

இனி, துறவறவியலுக்கு வருவோம்!



இப்பகுதியில் இடம்பெற்றுள்ள ‘புலால் மறுத்தல்’ எனும் அதிகாரம் அதிக அளவில் சர்ச்சைகளுக்கு ஆட்பட்டு வருவது கண்கூடு. ”புலால் மறுப்பு துறவியர்க்கானது” என்று ஒரு சாராரும், ”இல்லை…இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டியதே அது” என்று மற்றொரு சாராரும் முடிவில்லா விவாதத்தில் ஈடுபட்டுவரக் காண்கிறோம்.

இந்த வி(தண்டா)வாதம் இருக்கட்டும்! இதுகுறித்து வள்ளுவரின் உள்ளம் என்ன எண்ணுகின்றது என்பதைக் குறள்வழி அறிந்துவருவோம்!

’புலால் மறுப்பு இல்லறத்தார்க்கு அல்ல’ என்று உரத்து முழக்கமிடும் ஊனூண் பிரியர்கள் தம் கருத்துக்குச் சான்றுகாட்டும் குறட்பா பின்வருவது…

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 
(குறள்: 259)

”அவிசொரிந்து (நெய் வார்த்து) வேள்வி செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் நன்று” என்பது இக்குறளின் பொருள். புவியிலே, அவிசொரிந்து வேள்வி செய்வோர் யார்? முனிவர்கள்(அருளாளர்கள்); ஆகவே அவர்கள் மட்டுந்தான் உயிர்களைச் செகுத்தும் பகுத்தும் உண்ணக்கூடாது. பிறரெல்லாம் ’ஹலால் (இறைச்சிக்) கடையில் புலால் வாங்கி விலாப் புடைக்கப் புசிக்கலாம்…தவறில்லை என்று விளக்கமளிக்கின்றனர் இவர்கள்!

இவ்விளக்கம் ஏற்புடையதா என்பதையறிய நாம் வேறெங்கும் ஆதாரம்தேடி அலையவேண்டியதில்லை. புலால் மறுத்தல் அதிகாரத்திலேயே அதற்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடுகின்றது. ஆம், அந்த அதிகாரத்தின் ஆறாம் குறட்பாவை நோக்கி நம் பார்வையைப் பதிப்போம்!

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 
(குறள்: 256) என்பது அக்குறட்பா.

இதன் பொருள்: பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.

’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!

இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!

”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும். 

ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!”  – பாவாணர்

(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)

இதே குறளை, கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆங்கிலக் கவிதை வரிகளில் சொல்வதானால்,

None would kill and sell the flesh
For eating it if they don’t wish.

ஆன்றவிந்தடங்கிய சான்றோரே…அருமைத் தோழர்களே! இனியேனும், ’புலால் மறுத்தல்’ துறவியருக்கு மட்டுமே எனும் பொ(அ)ருளற்ற வாதத்தை விடுத்து, ’அது மண்ணில் வாழும் மானுடர் அனைவர்க்கும் பொதுவானது’ என்பதை உணர்ந்து, ஊனுணவைக் கடிந்து ஒதுக்குவீர்; வள்ளுவ நெறியில் வாழ்வீர்!


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=72093

Megala Ramamourty

unread,
Sep 20, 2016, 9:47:18 PM9/20/16
to மின்தமிழ்
//கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கை...'
~ இது நான் அறியாதது. ஏதேனும் ஆதாரம் கொடுத்தால், நலம்.//

பாராட்டுக்கு நன்றி ’இ’ ஐயா.

புத்தபிரான், உயிர்களை உணவுக்காகப் புத்தத் துறவிகள் கொல்லக்கூடாது; அவை கொல்லப்படுவதையும் கண்ணால்  பார்க்கக்கூடாது; அவை பாவம் என்றாரே தவிர, அவர்கள் புலாலுணவை பிக்ஷையாக ஏற்கக்கூடாது என்றோ,அவற்றை முற்றாகக் கடிந்து ஒதுக்கவேண்டும் என்றோ கூறவில்லை எனத் தெரிகின்றது. 

உப்பலவண்ணா (Uppalavanna) எனும் புத்தப் பெண் துறவி காட்டில் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, அப்பகுதிக்கு வந்த திருடர்கள் சிலர் ஒரு பசுவைக்கொன்று புசித்துவிட்டு, அந்த ஊனின் மிச்சத்தை இப் பெண் துறவிக்காக வைத்துவிட்டுச் சென்றனராம். தியானத்திலிருந்து கண்விழித்த துறவியார், அவ்வூனைப் புத்தருக்குக் கொண்டுசென்று கொடுத்ததாகக்கூறப்படுகிறது.   :-)

(புத்தர் இறுதியில் மரணமடைந்ததே கெட்டுப்போன பன்றி இறைச்சியை உண்டதால்தான் என்று ஒரு கருத்துண்டு. ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுக்கும் இக்கருத்தில் உடன்பாடு) 

*****


In Buddhism, the views on vegetarianism vary between different schools of thought. According to Theravada, the Buddha allowed his monks to eat porkchicken and fish if the monk was aware that the animal was not killed on their behalf. Theravadins also believes that the Buddha allowed the monks to choose a vegetarian diet, but only prohibited them from eating humanelephantsnakehorsedogcatliontigerbearleopard, and hyena flesh.
[...]

***

to clarify the position on meat eating to the monks, the Buddha said:

"Monks, I allow you fish and meat that are quite pure in three respects: if they are not seen, heard or suspected to have been killed on purpose for a monk. But, you should not knowingly make use of meat killed on purpose for you."




2016-09-19 23:48 GMT-04:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
'கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கை...'
~ இது நான் அறியாதது. ஏதேனும் ஆதாரம் கொடுத்தால், நலம்.
நல்ல கட்டுரை, மேகலா.
இன்னம்பூரான் 

Megala Ramamourty

unread,
Sep 20, 2016, 9:48:58 PM9/20/16
to vallamai, மின்தமிழ்
பாராட்டு மொழிகளுக்கு நன்றி பானுகுமார் ஐயா. 


அன்புடன்,
மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Sep 20, 2016, 9:54:35 PM9/20/16
to மின்தமிழ்
//அது புச்சு இல்லே மேகலா தங்கச்சி!  சின்னா, சின்னானு  ஒருத்தரு முன்னாலே எளுதிப்புட்டுப் போனாப்புலே!   அத்தப்படிச்சு நாங்களே ரொம்பக் கொளம்பிப்போயி இருக்கோம். அத்தத்தான் செல்வம் தம்பி எடுத்துப்போட்டு, தானே சொல்லறமாதிரி பண்ணி சொல்லிக்கினு இருக்காப்பலே.//

செல்வன் அண்ணாச்சிக்கு இதுல ரொம்ப நாள் அனுபவம் கீது அரிசோனன் அண்ணாச்சி! :-)

அன்புடன்,
மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Sep 20, 2016, 10:06:49 PM9/20/16
to மின்தமிழ், vallamai
//மெய்ப்பொருள் காண்பது அறிவுனு சொல்லிட்டார். அவரவர் மெய்ப்பொருள் அவரவர்க்கு. நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என் ஒரு பிள்ளை அடம்பிடிக்கலாம்.//

வேந்தரே! இப்ப பள்ளிக்கூடம் போகாம இருக்கறதுதான் ’மெய்ப்பொருள்’னு நினைக்கிற பிள்ளை நாலு வருடம் கழிச்சு ’உண்மையாவே ஞானம் வந்து’ தகப்பனைப் பார்த்து, ”பிள்ளைப் பருவத்தில் என் துடுக்கடக்கிப் பள்ளிக்கு அனுப்பாத பாதகனே!”ன்னு கேட்டுச்சுன்னு வைங்க அப்ப என்ன பண்றது?”   :-)


-மேகலா



--

Megala Ramamourty

unread,
Sep 20, 2016, 10:55:58 PM9/20/16
to மின்தமிழ், vallamai
//...இத்தனை நாள் புலால் மறுப்பு பிரச்சாரம் நம் இலக்கியங்களையும், இதிகாசங்களையும் மோசடியாக மேற்கோள் காட்டி நடந்துவந்தது..இனி அது நடக்காது..நடக்கவிடமாட்டோம்//

பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்!      :-))

செல்வன்

unread,
Sep 28, 2016, 5:24:28 AM9/28/16
to vallamai, மின்தமிழ்
படைகொண்டார் நெஞ்சம்

திருக்குறள் மனிதனின் பல்வேறு வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்ற நூல். ஒவ்வொரு வாழ்க்கை நிலைக்கான அறங்கள் மாறுபடும். ஒரு வாழ்க்கை நிலையில் அறமாக கூறப்படுதல் பிறிதொரு நிலையில் பிழையாகும். 

உதாரணமாக பொருள்செயல்வகை அதிகாரத்தில் வள்ளுவர் இவ்வாறு எழுதுகிறார்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

பொருள்: பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

இதே துறவறவியலில் இவ்வாறு எழுதுகிறார்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை 
ஆண்டும் அஃதொப்பது இல்.

பொருள்: தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

இவ்விரண்டு குறள்களையும் படித்தால் முதல் குறள் இல்லறத்தார்க்கு எழுதப்பட்டது என்பதும், அவர்களுக்கு செல்வம் சேர்ப்பதே சிறப்பு என்பதையும் வள்ளுவர் வலியுறுத்தினார் என்பதும் தெளிவாகும். "வேண்டாமை அன்ன விழுச்செல்வம்" என்பது இல்லறத்தார்க்கு கூறப்பட்டது அல்ல என்றும், முற்றும் துறந்த முனிவர்களுக்கே அது கூறப்பட்டது என்பதும் வெள்ளிடைமலை.

புலால் மறுத்தலில் இவ்வாறு வள்ளுவர் எழுதுகிறார்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்.

பொருள்: படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.

இதே படைமாட்சி அதிகாரத்தில் படைக்கருவிகளின் சிறப்பை கீழ்கண்டவாறு எடுத்துரைக்கிறார்

படைச்செருக்கு அதிகாரத்தில் வள்ளுவர் இவ்விதம் ஆயுதமேந்துதலை போற்றி கூறுகிறார்

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும்.

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் 
வைக்கும்தன் நாளை எடுத்து.

ஆக தலையில் மூளை என்ற வஸ்து கொஞசமேனும் இருக்கும் யாரும் புலால் மறுத்தல் அதிகாரம் படைவீரர்க்கு எழுதப்படவில்லை என்பதை புரிந்து கொள்வதில் கொஞ்சமும் சிரமம் இருக்காது.

ஆனால் அப்படி சொல்லித்தான் புலால் மறுத்தல் எல்லார்க்குமான அறம் என நம் மக்கள் காமடி பண்ணீ வருகிறார்கள்.

இவர்களை வள்ளுவர் மன்னித்தாலும் நாம் மன்னிக்ககூடாது :-)

Reply all
Reply to author
Forward
0 new messages