’வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் எவ்வாறு வாழ்வது? அதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்வி உடனே நம் மனத்தில் எழுகின்றது. இதற்கான விடையைத் தன் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏட்டில் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒரு மாமனிதர்!
அவர் வேறுயாருமல்லர்… சிந்தனைத் தெளிவும் கருத்துச் செறிவும் மிளிர ஒன்றரை அடிகளிலேயே வாழ்வின் நீள அகலங்களை அளந்துவிட்ட நீடுபுகழ் வள்ளுவரே அந்த மாமனிதர்!
முடிமன்னர் முதல் குடிமக்கள் ஈறாகச் சாதி சமயப் பேதமின்றி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடின்றி அனைவர்க்கும் வழிகாட்டும் அரிய நூல் வள்ளுவம் என்பது உலகறிந்த ஒன்று. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்றுங்கொண்ட ’முப்பால்’ தமிழகத்திற்கு அப்பாலும் புகழொளி பரப்பிவருகின்றது. விவிலியத்திற்கு (Bible) அடுத்தபடியாக உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நம் திருக்குறளே என்பது தமிழரனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய சாதனை!
இந்த உலக சாதனை ஒருபுறமிருப்பினும், உள்ளூர்த் தமிழர்களாலேயே திருக்குறளுக்கு அடிக்கடிச் சோதனையும் நிகழ்ந்துவிடுகின்ற கொடுமையை என்னென்பது! மணக்குடவர் தொடங்கிக் (கவிஞர்) மகுடேஸ்வரன் வரைப் பலர் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியும், (Almost every major writer/scholar has written commentaries on it.) குறளில் பேசப்படுகின்ற கருத்துக்கள் சிலவற்றில் நம்மவர்க்கு இன்னமும் தெளிவின்றித் தாமும் குழம்பிப் பிறரையும் குழப்பிவருவது வேதனையளிக்கின்றது.
சான்றாக, அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இல்லறவியல், துறவறவியல் உட்பிரிவுகளைக் கருத்தில்கொள்வோம்.
இல்லறவியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் இல்லறத்தார்க்கே உரியன; துறவறவியல் அதிகாரங்கள் அனைத்தும் துறவியர்க்காகவே எழுதப்பட்டன என்ற எண்ணம் இந்தக் குழப்பவாதிகளுக்கு இருக்கின்றது. இந்த எண்ணம் சரிதானா?
இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை என்று கருதுவது பொருந்துமா?
அன்பும், இன்சொற்களும், நல்லொழுக்கமும், தீவினையச்சமும், நடுவுநிலைமையும் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் கைக்கொள்ள வேண்டிய அரும்பண்புகளாயிற்றே! இவற்றை ”இல்லறத்தார்க்கு மட்டுமே” என்று எவ்வாறு முத்திரை குத்தவியலும்? எனவே, இல்லறவியலில் பேசப்படும் பண்புகள் இல்லறத்தார்க்கு ’அவசியம்’ இருக்கவேண்டியவை; ஏனையோரும் பின்பற்றி ஒழுகவேண்டியவை என்று கொள்வதே அறிவுடைமை!
இனி, துறவறவியலுக்கு வருவோம்!
இப்பகுதியில் இடம்பெற்றுள்ள ‘புலால் மறுத்தல்’ எனும் அதிகாரம் அதிக அளவில் சர்ச்சைகளுக்கு ஆட்பட்டு வருவது கண்கூடு. ”புலால் மறுப்பு துறவியர்க்கானது” என்று ஒரு சாராரும், ”இல்லை…இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டியதே அது” என்று மற்றொரு சாராரும் முடிவில்லா விவாதத்தில் ஈடுபட்டுவரக் காண்கிறோம்.
இந்த வி(தண்டா)வாதம் இருக்கட்டும்! இதுகுறித்து வள்ளுவரின் உள்ளம் என்ன எண்ணுகின்றது என்பதைக் குறள்வழி அறிந்துவருவோம்!
’புலால் மறுப்பு இல்லறத்தார்க்கு அல்ல’ என்று உரத்து முழக்கமிடும் ஊனூண் பிரியர்கள் தம் கருத்துக்குச் சான்றுகாட்டும் குறட்பா பின்வருவது…
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. (குறள்: 259)
”அவிசொரிந்து (நெய் வார்த்து) வேள்வி செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் நன்று” என்பது இக்குறளின் பொருள். புவியிலே, அவிசொரிந்து வேள்வி செய்வோர் யார்? முனிவர்கள்(அருளாளர்கள்); ஆகவே அவர்கள் மட்டுந்தான் உயிர்களைச் செகுத்தும் பகுத்தும் உண்ணக்கூடாது. பிறரெல்லாம் ’ஹலால் (இறைச்சிக்) கடையில் புலால் வாங்கி விலாப் புடைக்கப் புசிக்கலாம்…தவறில்லை என்று விளக்கமளிக்கின்றனர் இவர்கள்!
இவ்விளக்கம் ஏற்புடையதா என்பதையறிய நாம் வேறெங்கும் ஆதாரம்தேடி அலையவேண்டியதில்லை. புலால் மறுத்தல் அதிகாரத்திலேயே அதற்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடுகின்றது. ஆம், அந்த அதிகாரத்தின் ஆறாம் குறட்பாவை நோக்கி நம் பார்வையைப் பதிப்போம்!
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (குறள்: 256) என்பது அக்குறட்பா.
இதன் பொருள்: ”பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.
’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!
இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!
”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும்.
ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!” – பாவாணர்
(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)
இதே குறளை, கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆங்கிலக் கவிதை வரிகளில் சொல்வதானால்,
None would kill and sell the flesh
For eating it if they don’t wish.
ஆன்றவிந்தடங்கிய சான்றோரே…அருமைத் தோழர்களே! இனியேனும், ’புலால் மறுத்தல்’ துறவியருக்கு மட்டுமே எனும் பொ(அ)ருளற்ற வாதத்தை விடுத்து, ’அது மண்ணில் வாழும் மானுடர் அனைவர்க்கும் பொதுவானது’ என்பதை உணர்ந்து, ஊனுணவைக் கடிந்து ஒதுக்குவீர்; வள்ளுவ நெறியில் வாழ்வீர்!
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=72093
இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை என்று கருதுவது பொருந்துமா?
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (குறள்: 256) என்பது அக்குறட்பா.இதன் பொருள்: ”பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.
’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!
இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!
”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும்.
ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!” – பாவாணர்
(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)
ஆக அண்ணாச்சி சொல்லவருவது, முற்றிலும் துறந்தவன் துறவி.... அதாவது அத்தகையவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்... ஏனென்றால் அவந்தான் முற்றிலும் துறந்தவனாயிற்றே?? விலங்குகள் கூட தன் பாதுகாப்பு/உணவு கருதித்தான் சில பலதைச் செய்யும்.... அதனினும் ஒரு படி மேலே சென்று முற்றிலும் துறந்தவனாய்.... இருப்பதே துறவுன்னு புது இலக்கணம்.... மிடீலடா சாமி..... ஊருக்குப் போகாத வழியப் புடிக்கப் போயி, எதுக்கெல்லாம் முட்டுக் கொடுக்க வேண்டியதா இருக்கூ.... இஃகிஃகி!!
அன்பு’ என்பது பற்றில் சேருமென்றால் 'அன்பின் குழந்தையான அருள்' பற்றில் சேராதா தோழரே? அதை ஏன் துறவிகளுக்கு முதன்மைப் பண்பாக வள்ளுவர் வலியுறுத்த வேண்டும்?அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு. என்கிறாரே!
//அன்புடமை- அன்பு என்பது பற்று, பந்தத்தில் சேரும். துறவிக்கு பற்று இருக்ககூடாது என்கிறார் வள்ளுவர்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு
ஆக பற்றைவிடவேண்டிய துறவிக்கு அன்புடமை பொருந்தும் என்பது எஞ்ஞனம்?//What a wonderful invention!!!!
’அன்பு’ என்பது பற்றில் சேருமென்றால் 'அன்பின் குழந்தையான அருள்' பற்றில் சேராதா தோழரே? அதை ஏன் துறவிகளுக்கு முதன்மைப் பண்பாக வள்ளுவர் வலியுறுத்த வேண்டும்?
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு. என்கிறாரே!
//இனியவை கூறலும் அதுபோல் தான்...அன்றாடம் பிறமனிதர்களுடன் புழங்கும் இல்லறத்தார்கே அவர் உரியன. துறவிகள் குற்றம் கண்ட இடம் கடிதல் வேன்டும்...ஆசிரியர் ஸ்தானத்தில் இருப்பவர் இன்சொல் மட்டுமே சொல்லிகொண்டிருக்கமுடியாது//
கருணை ததும்பும் மனமுடையவர் அடுத்தவரைக் காயப்படுத்தும் கடுஞ்சொற்களைக் கூறமாட்டார். அன்பு கனிந்து அருள் பொங்கும் மனத்திலிருந்து இன்சொல் தானே வரும்! :-)
***
நடுநிலை::::::மனிதர்களுடனான உறவுக்கே இது எல்லாம் பொருந்தும்...துறவிகள் பற்றைவிட்டவர்கள். அவர்கள் நடுநிலைமை எடுத்து மனிதர்களுடன் உற்வாடி என்ன சாதிக்கபோகின்றனர்?
ஹா...ஹா...ஹா...துறவிகளானாலும் அவர்களும் மனிதர்களே! தம் சீடர்களிடம் தவறுகண்டவிடத்து நடுநிலையோடு நின்று அவற்றைத் திருத்தும் அவசியமும் பொறுப்பும் அவர்களுக்கும் உண்டு!
***
ஈகை..பணம் இருப்பவர்கள் செய்யும் விஷயம். பணமே வைத்துகொள்ளாத துறவி எப்படி ஈகையாளனாக இருக்கமுடியும்?
ஈகை என்பது பணம் அல்லது பொருள் சார்ந்ததாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது வித்தையாகவோ, விஷயதானமாகவோகூட இருக்கலாம். எல்லாவற்றையுமே கரன்சியாகவே பார்ப்பது பெருந்தவறு! :-))
***//அவாவறுத்தலை இல்லறத்தார் கடைபிடிக்கவேண்டும். அது எல்லார்க்குமான அறம்என்பது எப்படிப்பட்ட காமடியோ அதுபோல்தான்புலால் மறுத்தலை எல்லாரும் கடைபிடிக்கவேன்டும். அது எல்லார்க்குமான அறம் என்பதும்.//இதெல்லாம் காமெடி என்று நீங்கள் சொல்வதுதான் பெரிய காமெடி செல்வன்! :-))
புலால் மறுத்தல், இல்லறத்தாரும் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டியது என்பதை,
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
எனும் குறட்பா பொட்டில் அடித்ததுபோல் விளக்கிய பின்பும் நீங்கள் அது துறவியருக்குத்தான் என்று ’பதினாறு வயதினிலே கமல்’ போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் பாருங்கள்...அதுதான் காமெடியின் உச்சம்! :-)))-மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.கொல்லாமை அதிகாரத்துல வர்ற பாட்டு இது.உங்க கணக்குப்படி, கொல்லாமை என்பது துறவறத்தார்க்கு மட்டுமே உரியதுன்னா, இந்தப் பாட்டு என்ன சொல்லுதுனு உங்களுக்கு வெளங்குதா இல்லை வெளக்கணுமா?.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
கொல்லாமை எல்லாருக்குமான அறமல்ல என்பதற்கு படைமாட்சி அதிகாரமெ சான்று
என்னா விளக்கம்டா சாமி! :-)ராஜராஜ சோழன் இல்லாவிட்டால் இராஜேந்திர சோழன் ஏது? அன்பு இல்லாவிட்டால் அருள் ஏது?
கொல்லாமை எல்லோருக்குமான அறம்னு நானும் சொல்லலை; வள்ளுவரும் சொல்லலை
தின்பவர்கள் இல்லையென்றால் உயிர்களைக் கொல்லமாட்டார்கள் இல்லையா?
எனவே உயிர்களைக் கொல்லாதே! ஏற்கனவே கொல்லப்பட்ட உயிர்களையும் புசிக்காதே! என்று மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார் வள்ளுவர்.
இது போன்ற வழிமுறையெல்லாம் இருப்பது முன்னரே தெரிந்திருந்தால், நான் துறவியாகப் போகிறேன்...எனக்கு இந்த இந்த அதிகாரம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி பள்ளி நாட்களில் ~ 10% திருக்குறள் மட்டும் படித்துவிட்டு தப்பியிருக்கலாம்...
//நீதிபதி நடுநிலையுடன் இருக்கமுடியாது..வாதி, பிரதிவாதி என ஏதோ ஒருவர் பக்கம் சார்ந்துதான் தீர்ப்பு சொல்ல முடியும் :-)//நியாயத்தைச் சார்ந்து தீர்ப்புக்கூறுவதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை. அதற்கு ’ஒருபக்கம் சார்தல்’ என்று விளக்கம் கூறுவது... புச்சாக்கீது தல!//
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
’வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் எவ்வாறு வாழ்வது? அதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்வி உடனே நம் மனத்தில் எழுகின்றது. இதற்கான விடையைத் தன் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏட்டில் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒரு மாமனிதர்!
அவர் வேறுயாருமல்லர்… சிந்தனைத் தெளிவும் கருத்துச் செறிவும் மிளிர ஒன்றரை அடிகளிலேயே வாழ்வின் நீள அகலங்களை அளந்துவிட்ட நீடுபுகழ் வள்ளுவரே அந்த மாமனிதர்!
முடிமன்னர் முதல் குடிமக்கள் ஈறாகச் சாதி சமயப் பேதமின்றி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடின்றி அனைவர்க்கும் வழிகாட்டும் அரிய நூல் வள்ளுவம் என்பது உலகறிந்த ஒன்று. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்றுங்கொண்ட ’முப்பால்’ தமிழகத்திற்கு அப்பாலும் புகழொளி பரப்பிவருகின்றது. விவிலியத்திற்கு (Bible) அடுத்தபடியாக உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நம் திருக்குறளே என்பது தமிழரனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய சாதனை!
இந்த உலக சாதனை ஒருபுறமிருப்பினும், உள்ளூர்த் தமிழர்களாலேயே திருக்குறளுக்கு அடிக்கடிச் சோதனையும் நிகழ்ந்துவிடுகின்ற கொடுமையை என்னென்பது! மணக்குடவர் தொடங்கிக் (கவிஞர்) மகுடேஸ்வரன் வரைப் பலர் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியும், (Almost every major writer/scholar has written commentaries on it.) குறளில் பேசப்படுகின்ற கருத்துக்கள் சிலவற்றில் நம்மவர்க்கு இன்னமும் தெளிவின்றித் தாமும் குழம்பிப் பிறரையும் குழப்பிவருவது வேதனையளிக்கின்றது.
சான்றாக, அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இல்லறவியல், துறவறவியல் உட்பிரிவுகளைக் கருத்தில்கொள்வோம்.
இல்லறவியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் இல்லறத்தார்க்கே உரியன; துறவறவியல் அதிகாரங்கள் அனைத்தும் துறவியர்க்காகவே எழுதப்பட்டன என்ற எண்ணம் இந்தக் குழப்பவாதிகளுக்கு இருக்கின்றது. இந்த எண்ணம் சரிதானா?
இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை என்று கருதுவது பொருந்துமா?
அன்பும், இன்சொற்களும், நல்லொழுக்கமும், தீவினையச்சமும், நடுவுநிலைமையும் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் கைக்கொள்ள வேண்டிய அரும்பண்புகளாயிற்றே! இவற்றை ”இல்லறத்தார்க்கு மட்டுமே” என்று எவ்வாறு முத்திரை குத்தவியலும்? எனவே, இல்லறவியலில் பேசப்படும் பண்புகள் இல்லறத்தார்க்கு ’அவசியம்’ இருக்கவேண்டியவை; ஏனையோரும் பின்பற்றி ஒழுகவேண்டியவை என்று கொள்வதே அறிவுடைமை!
இனி, துறவறவியலுக்கு வருவோம்!
இப்பகுதியில் இடம்பெற்றுள்ள ‘புலால் மறுத்தல்’ எனும் அதிகாரம் அதிக அளவில் சர்ச்சைகளுக்கு ஆட்பட்டு வருவது கண்கூடு. ”புலால் மறுப்பு துறவியர்க்கானது” என்று ஒரு சாராரும், ”இல்லை…இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டியதே அது” என்று மற்றொரு சாராரும் முடிவில்லா விவாதத்தில் ஈடுபட்டுவரக் காண்கிறோம்.
இந்த வி(தண்டா)வாதம் இருக்கட்டும்! இதுகுறித்து வள்ளுவரின் உள்ளம் என்ன எண்ணுகின்றது என்பதைக் குறள்வழி அறிந்துவருவோம்!
’புலால் மறுப்பு இல்லறத்தார்க்கு அல்ல’ என்று உரத்து முழக்கமிடும் ஊனூண் பிரியர்கள் தம் கருத்துக்குச் சான்றுகாட்டும் குறட்பா பின்வருவது…
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. (குறள்: 259)”அவிசொரிந்து (நெய் வார்த்து) வேள்வி செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் நன்று” என்பது இக்குறளின் பொருள். புவியிலே, அவிசொரிந்து வேள்வி செய்வோர் யார்? முனிவர்கள்(அருளாளர்கள்); ஆகவே அவர்கள் மட்டுந்தான் உயிர்களைச் செகுத்தும் பகுத்தும் உண்ணக்கூடாது. பிறரெல்லாம் ’ஹலால் (இறைச்சிக்) கடையில் புலால் வாங்கி விலாப் புடைக்கப் புசிக்கலாம்…தவறில்லை என்று விளக்கமளிக்கின்றனர் இவர்கள்!
இவ்விளக்கம் ஏற்புடையதா என்பதையறிய நாம் வேறெங்கும் ஆதாரம்தேடி அலையவேண்டியதில்லை. புலால் மறுத்தல் அதிகாரத்திலேயே அதற்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடுகின்றது. ஆம், அந்த அதிகாரத்தின் ஆறாம் குறட்பாவை நோக்கி நம் பார்வையைப் பதிப்போம்!
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (குறள்: 256) என்பது அக்குறட்பா.இதன் பொருள்: ”பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.
’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!
இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!
”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும்.
ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!” – பாவாணர்
(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)
இதே குறளை, கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆங்கிலக் கவிதை வரிகளில் சொல்வதானால்,
None would kill and sell the flesh
For eating it if they don’t wish.ஆன்றவிந்தடங்கிய சான்றோரே…அருமைத் தோழர்களே! இனியேனும், ’புலால் மறுத்தல்’ துறவியருக்கு மட்டுமே எனும் பொ(அ)ருளற்ற வாதத்தை விடுத்து, ’அது மண்ணில் வாழும் மானுடர் அனைவர்க்கும் பொதுவானது’ என்பதை உணர்ந்து, ஊனுணவைக் கடிந்து ஒதுக்குவீர்; வள்ளுவ நெறியில் வாழ்வீர்!
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=72093
--
அருமை, மேகலை.வள்ளுவரின் சமயம் காட்டும் இரண்டு குறள்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். இந்த வாரம் முழுதும் இளங்கோ அடிகள் தன் சமயம் சமணம் பரப்பஎப்படி நாடுகாண் காதையும், கர்நாடக கல்வெட்டுச் சொல் கவுந்தி என்பதும் பயன்படுத்துகிறார் தெய்வக்காவிரி நாடு முழுதும் சொல்லி,கங்க ராஜ்யத்து சீரங்கத்தில் (திருவரங்கம் வேறு) சமணத்தின் அந்த(ர) சாரணர் வருகை, தொழுகை என எழுதினேன்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. (குறள்: 259)
இதில் வேதியரின் யாகங்களில் மாடு, ஆடு இடலைக் கண்டிக்கிறார். தேவாரத்தில் மாடு வெட்டி யாகம் செய்வது நிறைய உண்டு.இந்தியா முழுதும் வேளிர்கள் மாடு வெட்டி யாகம் செய்தால் கடவுள் வரமாட்டார் என நிறுத்தியமை வரலாறு.அதேபோல, பிட்சை பாத்திரத்தில் இட்ட ஊனை தின்னலாம் என்று ரிலேக்ஸ் செய்தது பௌத்தம். அதனையும்நன்கு கண்டித்தவர் வள்ளுவர்.அத்தோடு தொடர்புடைய ஒரு குறள்:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்
புலால் உண்ணலுக்கு துறவி ஆயினும், சாவகர் (Householder) ஆயினும் வள்ளுவர் ஆதரவு இல்லை.அதே போல் தான், அரசாங்கம் மக்களைக் கொல்லலாம் என்பதற்கும் வள்ளுவர் ஆதரவு இல்லை.அதனை வள்ளுவர் அரசாங்கம் தூக்குதண்டனை என்கிறார் என்பதெல்லாம் செல்லாது.பாம்பின்கால் பாம்பறியும். நாமக்கல் கவிஞர் நன்கு விளக்கினார்:நாகரீகமான அரசாங்கங்கள் யாவும் வள்ளுவர் பாதையில் இன்றும் பயணிப்பதைப் பார்க்கலாம்.சௌதி அரேபியா மாறவேண்டும் - வள்ளுவர் வழிக்கு வரவேண்டும் என அல்லாவைப் ப்ரார்த்திப்போம்.நா. கணேசன்
On Monday, September 19, 2016 at 6:54:01 AM UTC-7, megala.ramamourty wrote:
’வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் எவ்வாறு வாழ்வது? அதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்வி உடனே நம் மனத்தில் எழுகின்றது. இதற்கான விடையைத் தன் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏட்டில் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒரு மாமனிதர்!
அவர் வேறுயாருமல்லர்… சிந்தனைத் தெளிவும் கருத்துச் செறிவும் மிளிர ஒன்றரை அடிகளிலேயே வாழ்வின் நீள அகலங்களை அளந்துவிட்ட நீடுபுகழ் வள்ளுவரே அந்த மாமனிதர்!
முடிமன்னர் முதல் குடிமக்கள் ஈறாகச் சாதி சமயப் பேதமின்றி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடின்றி அனைவர்க்கும் வழிகாட்டும் அரிய நூல் வள்ளுவம் என்பது உலகறிந்த ஒன்று. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்றுங்கொண்ட ’முப்பால்’ தமிழகத்திற்கு அப்பாலும் புகழொளி பரப்பிவருகின்றது. விவிலியத்திற்கு (Bible) அடுத்தபடியாக உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நம் திருக்குறளே என்பது தமிழரனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய சாதனை!
இந்த உலக சாதனை ஒருபுறமிருப்பினும், உள்ளூர்த் தமிழர்களாலேயே திருக்குறளுக்கு அடிக்கடிச் சோதனையும் நிகழ்ந்துவிடுகின்ற கொடுமையை என்னென்பது! மணக்குடவர் தொடங்கிக் (கவிஞர்) மகுடேஸ்வரன் வரைப் பலர் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியும், (Almost every major writer/scholar has written commentaries on it.) குறளில் பேசப்படுகின்ற கருத்துக்கள் சிலவற்றில் நம்மவர்க்கு இன்னமும் தெளிவின்றித் தாமும் குழம்பிப் பிறரையும் குழப்பிவருவது வேதனையளிக்கின்றது.
சான்றாக, அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இல்லறவியல், துறவறவியல் உட்பிரிவுகளைக் கருத்தில்கொள்வோம்.
இல்லறவியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் இல்லறத்தார்க்கே உரியன; துறவறவியல் அதிகாரங்கள் அனைத்தும் துறவியர்க்காகவே எழுதப்பட்டன என்ற எண்ணம் இந்தக் குழப்பவாதிகளுக்கு இருக்கின்றது. இந்த எண்ணம் சரிதானா?
இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை என்று கருதுவது பொருந்துமா?
அன்பும், இன்சொற்களும், நல்லொழுக்கமும், தீவினையச்சமும், நடுவுநிலைமையும் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் கைக்கொள்ள வேண்டிய அரும்பண்புகளாயிற்றே! இவற்றை ”இல்லறத்தார்க்கு மட்டுமே” என்று எவ்வாறு முத்திரை குத்தவியலும்? எனவே, இல்லறவியலில் பேசப்படும் பண்புகள் இல்லறத்தார்க்கு ’அவசியம்’ இருக்கவேண்டியவை; ஏனையோரும் பின்பற்றி ஒழுகவேண்டியவை என்று கொள்வதே அறிவுடைமை!
இனி, துறவறவியலுக்கு வருவோம்!
இப்பகுதியில் இடம்பெற்றுள்ள ‘புலால் மறுத்தல்’ எனும் அதிகாரம் அதிக அளவில் சர்ச்சைகளுக்கு ஆட்பட்டு வருவது கண்கூடு. ”புலால் மறுப்பு துறவியர்க்கானது” என்று ஒரு சாராரும், ”இல்லை…இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டியதே அது” என்று மற்றொரு சாராரும் முடிவில்லா விவாதத்தில் ஈடுபட்டுவரக் காண்கிறோம்.
இந்த வி(தண்டா)வாதம் இருக்கட்டும்! இதுகுறித்து வள்ளுவரின் உள்ளம் என்ன எண்ணுகின்றது என்பதைக் குறள்வழி அறிந்துவருவோம்!
’புலால் மறுப்பு இல்லறத்தார்க்கு அல்ல’ என்று உரத்து முழக்கமிடும் ஊனூண் பிரியர்கள் தம் கருத்துக்குச் சான்றுகாட்டும் குறட்பா பின்வருவது…
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. (குறள்: 259)”அவிசொரிந்து (நெய் வார்த்து) வேள்வி செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் நன்று” என்பது இக்குறளின் பொருள். புவியிலே, அவிசொரிந்து வேள்வி செய்வோர் யார்? முனிவர்கள்(அருளாளர்கள்); ஆகவே அவர்கள் மட்டுந்தான் உயிர்களைச் செகுத்தும் பகுத்தும் உண்ணக்கூடாது. பிறரெல்லாம் ’ஹலால் (இறைச்சிக்) கடையில் புலால் வாங்கி விலாப் புடைக்கப் புசிக்கலாம்…தவறில்லை என்று விளக்கமளிக்கின்றனர் இவர்கள்!
இவ்விளக்கம் ஏற்புடையதா என்பதையறிய நாம் வேறெங்கும் ஆதாரம்தேடி அலையவேண்டியதில்லை. புலால் மறுத்தல் அதிகாரத்திலேயே அதற்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடுகின்றது. ஆம், அந்த அதிகாரத்தின் ஆறாம் குறட்பாவை நோக்கி நம் பார்வையைப் பதிப்போம்!
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (குறள்: 256) என்பது அக்குறட்பா.இதன் பொருள்: ”பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.
’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!
இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!
”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும்.
ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!” – பாவாணர்
(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)
இதே குறளை, கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆங்கிலக் கவிதை வரிகளில் சொல்வதானால்,
None would kill and sell the flesh
For eating it if they don’t wish.ஆன்றவிந்தடங்கிய சான்றோரே…அருமைத் தோழர்களே! இனியேனும், ’புலால் மறுத்தல்’ துறவியருக்கு மட்டுமே எனும் பொ(அ)ருளற்ற வாதத்தை விடுத்து, ’அது மண்ணில் வாழும் மானுடர் அனைவர்க்கும் பொதுவானது’ என்பதை உணர்ந்து, ஊனுணவைக் கடிந்து ஒதுக்குவீர்; வள்ளுவ நெறியில் வாழ்வீர்!
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=72093
to clarify the position on meat eating to the monks, the Buddha said:
"Monks, I allow you fish and meat that are quite pure in three respects: if they are not seen, heard or suspected to have been killed on purpose for a monk. But, you should not knowingly make use of meat killed on purpose for you."
'கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கை...'~ இது நான் அறியாதது. ஏதேனும் ஆதாரம் கொடுத்தால், நலம்.நல்ல கட்டுரை, மேகலா.இன்னம்பூரான்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--