ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

395 views
Skip to first unread message

N. Kannan

unread,
Apr 17, 2012, 1:32:52 PM4/17/12
to மின்தமிழ்
இந்த இழையில் ஆலயங்கள் பற்றி அலசப் போகிறோம்.

இது தல யாத்திரை அல்ல. அமெரிக்காவில் அப்படியொன்று செய்ய வேண்டுமென்ற ஆசையுண்டு :-)

ஆலயங்களின் சமகால நிலை, மேம்பாட்டிற்கான யோசனைகள், ஆலயங்களின் எதிர்காலம் எனும் போக்கில் அமையப் போகும் அலசல் இது. உண்மையான அக்கறையுள்ளோர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் (சட்டெனக் கோபப்படுபவர்கள் சற்றே ஒதுங்கி நின்றால் நலம்). கோயில்கள் எனும் போது உள்ளாட்டு வெளிநாட்டுக் கோயில்கள் எல்லாம் இடம் பெறும்.

எனக்குக் கோயில்கள் மிகவும் பிடிக்கும். யாருக்குப் பிடிக்காது என்கிறீர்களா? ‘இ’யண்ணா சொல்லியவாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் கோயிலில் உண்டு. காம்யார்த்த பக்தி, உண்மையான பக்தி, காமுகப் பார்வை உள்ளோர், கலைப் பார்வை உள்ளோர், உடற்பயிற்சிக்கு வருவோர் சரித்திரம் படைப்போர்/வேண்டுவோர் என்று எல்லோருக்கும் இடமுண்டு.

கோயில் ஒரு பல்கலைக் கழகம். இதைத் தமிழன் உணர வேண்டும்.

இறைவன் எத்தனையோ வழிகளில் நம்மை ஈர்க்கிறான். ஆஸ்திகனோ, நாஸ்திகனோ இயற்கை ஈர்க்கிறது. கொஞ்ச நேரம் முன்பு வெஸ்டுஹாம் பார்க்கில் அமர்ந்திருந்தேன். அழகிய பூக்களும், மாலைச் சூரியனும், பச்சைப் பசும் புல்லும், வெண்ணீல மேலாப்பு விரித்தார் போல் மேகங்களும் மனதிற்கு இதமாக இருந்தன. இது இறைக்காட்சி என்று யாரும் உணர்வதில்லை, சிலரைத்தவிர. அது இறைவன் என்று சொல்லாமல் ரசித்தாலும் குறை ஒன்றுமில்லை. ரசிப்பு முக்கியம்.

சமீபத்தில் சிவகாசி போனபோது கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோயிலென்று `திருநின்ற ஊர்` எனும் தலத்திற்கு கவிஞர் திலகபாமா அழைத்துச் சென்றார். கீழே பூஜாரி இருந்தார். ஏனோ மேல் நிலை போய் எங்களுக்கு தரிசனம் காட்டச் சோம்பேறித்தனம். கிடைத்த அவகாசத்தில் நானும் பெருமாளும். விடுவேனா சான்ஸை :-) இந்தப் பெருமாள் கொள்ளை அழகு. லிப்ஸ்டிக்கெல்லாம் போட்டுக்கொண்டு ஓர் அழகு. ஒன்றுமே வேண்டாம், சாஸ்திர ஈர்ப்பு, தத்துவ ஈர்ப்பு, ஆகம ஈர்ப்பு ஒன்றும் வேண்டாம். அழகை ரசிக்கத்தெரிந்தால் போதும். பெருமாள் தூண்டில் போட்டுவிடுவார். தொடக்கம் எதிலென்றால் என்ன? மல்லன், கள்ளன் திருமங்கை. அவனை ஈர்த்தது அழகுணர்ச்சி. அந்த ரசிப்பு போதுமென்று எண்ணெழுத்து திருமந்திரத்தைத் தந்தார். அந்த வள்ளல் இதோ!

Inline image 1

 பர்ஜாரகர் (மடப்பள்ளிக்காரர்) வந்து பின்னால் சேவை சாதித்தார். தீர்த்தம் இருந்தது. உத்திரணி இல்லை. வெற்றிலையை மடித்து தீர்த்தம் தந்தார். ரொம்ப நல்லவர். ஏழை. இந்த இறைவனைப் பற்றி இரண்டு ஆழ்வார்கள் பாடியிருந்தாலும், சிறப்பாகச் சொல்லாமல் `இந்த ஊர்க்காரன் இவன்` என்று சொல்லிப் போந்தனராம். இவர் வருத்தம் அது! இந்த ஊர் அம்பாளைப் (தாயார்) பார்த்தும் ஒருவனுக்கு அழகுணர்ச்சி வரவில்லையெனில் அவன் ஜடம். கொள்ளை அழகு! போங்கள். தரிசனம் பெற்று வந்த பின்னும் கீழே பட்டாச்சாரியர் யாருடனோ சிரத்தை இல்லாமல் வம்படித்துக்கொண்டிருந்தார்!

(இன்னும் வரும்)

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Tiruthangal_small.jpg

Chandrasekaran

unread,
Apr 17, 2012, 2:12:38 PM4/17/12
to mint...@googlegroups.com
கண்ணன்
இப்பதான் இங்கே திரும்பிப் பார்க்கறீங்க ;)
அடியேன் ஆஜர்
சந்திரா

Innamburan Innamburan

unread,
Apr 17, 2012, 2:52:51 PM4/17/12
to mint...@googlegroups.com
யானும் உளேன், ஐயா. நாம் கோயிலுக்கு செல்லும்போது, மேற்படி பிரசாரம் செய்ய வேண்டும். நேற்று, ஸுபாஷிணி, நம் கோயில்களில் நாம் செய்யும் அசட்டுத்தனங்களை படம் பிடித்துக் காட்டியிருந்தார். வெட்கி தலை குனிந்தேன். தஞ்சை பெரிய கோயிலில் நமது ஸ்பிளிட்-பெர்ஸனாலிட்டி ஆட்சி புரிகிறது. ஒரு பக்கம் கலைக்கூடம். இன்னொரு பக்கம் கலைக்கூளம். அம்பாள் சன்னதியில் , விதானம் முழுதும் புகை மண்டலம். அருமையான ஓவியங்கள் டேஞ்சரில். மதாபிமானிகள், பக்திமான்கள், அர்ச்சகாதி கூர்ச்சங்கள், பக்தியில்லா அரசு தர்ம பரிபாலன இலாக்கா, தொல்லியல் தொரை எல்லாரும் என் கண் முன்னே குற்றவாளிகளாகப்படுகிறார்கள். எந்த சாமி வந்து, கலப்பு கற்பூரம் கொளுத்தி எனக்காக படைக்கப்பட்ட கலை பொக்கிஷங்களை அழிக்கலாம் என்று சொல்லியது? 
இறைவனை தாக்க மனித யத்தனம் போதும். யானையும், பூனையும், வராகமும், வானரமும் இப்படியெல்லாம் செய்யாது.
இன்னம்பூரான்

2012/4/17 Chandrasekaran <plastic...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Apr 17, 2012, 2:58:59 PM4/17/12
to mint...@googlegroups.com
அன்பின் அண்ணா:

நாம் பேசப்போகின்ற விஷயங்களில் பலவற்றைத் தொட்டுவிட்டீர்கள். இனி களை கட்டும் :-)

நா.கண்ணன்

2012/4/17 Innamburan Innamburan <innam...@gmail.com>:

N. Kannan

unread,
Apr 17, 2012, 3:02:54 PM4/17/12
to mint...@googlegroups.com
அன்பின் சந்திரா:

கோயில் கண்ணில் படாமல் போகுமா? தாங்கள் வியத்தகு வேலைகள்
செய்கின்றீர்கள். நான் உங்களுக்கெல்லாம் தெரியாத சில விஷயங்களை இங்கே
சொல்லப் போகிறேன். இது இங்கிலாந்தின்/அமெரிக்காவின் இந்து மத ஸ்தாபனம்
குறித்தது. நிறையச் செய்ய உள்ளது. தமிழக நிலை தாங்கள் அறியாதது அல்ல.
சமீபத்தியப் பயணம் கேள்விகளை இன்னும் சூடு படுத்தியுள்ளது. அவ்வளவுதான்
:-)

க.>

2012/4/17 Chandrasekaran <plastic...@gmail.com>:

கி.காளைராசன்

unread,
Apr 17, 2012, 3:07:29 PM4/17/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/4/17 N. Kannan <navan...@gmail.com>

இந்த இழையில் ஆலயங்கள் பற்றி அலசப் போகிறோம்.

இது தல யாத்திரை அல்ல. அமெரிக்காவில் அப்படியொன்று செய்ய வேண்டுமென்ற ஆசையுண்டு :-)
 
மல்லன், கள்ளன் திருமங்கை. அவனை ஈர்த்தது அழகுணர்ச்சி. அந்த ரசிப்பு போதுமென்று எண்ணெழுத்து திருமந்திரத்தைத் தந்தார். அந்த வள்ளல் இதோ!

Inline image 1

பச்சை வண்ணம்.
பவள வாய்.
நமோ நாராயணாய நம.
 
இந்த ஊர் அம்பாளைப் (தாயார்) பார்த்தும் ஒருவனுக்கு அழகுணர்ச்சி வரவில்லையெனில் அவன் ஜடம். கொள்ளை அழகு! போங்கள்.
தாயாரைத் தரிசிக்க வேண்டிக் காத்திருக்கிறேன்.
 
தரிசனம் பெற்று வந்த பின்னும் கீழே பட்டாச்சாரியர் யாருடனோ சிரத்தை இல்லாமல் வம்படித்துக்கொண்டிருந்தார்!

அவர்சார்பாகச் சொல்லவேண்டிய கருத்தும் என்னிடம் உள்ளது.
உண்மையான அக்கறையுள்ளோர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் (சட்டெனக் கோபப்படுபவர்கள் சற்றே ஒதுங்கி நின்றால் நலம்).

அன்பன்
கி.காளைராசன்

Tiruthangal_small.jpg

coral shree

unread,
Apr 17, 2012, 10:24:13 PM4/17/12
to mint...@googlegroups.com
அன்பின் திரு கண்ணன்,

எனக்கும் அனுமதி அளிக்க வேண்டி விண்ணப்பம். நம் மக்கள் நம் ஆலயங்களின் பெருமை பற்றி உணர வேண்டுமானால், முதலில் நம் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும். வெளி நாட்டவர் கூட அறிந்திருக்கும் நம் ஆலயங்கள் பற்றிய தொன்மையின் பெருமையை நம்மவர்கள் உணர்ந்தார்களில்லை என்பதுதான் வேதனைக்குரிய விசயம். கோவிலில் சென்றவுடன் அவரவர் பிரச்சனைகளும், துன்பங்களும் நினைவிற்கு வர அங்கே கண்ணிற்குத் தெரிவது அந்த ஆபத்பாந்தவன், அனாதைரட்சகனாக ஆண்டவன் மட்டுமே... அர்ச்சுணனின் கண்களுக்குத் தெரிந்த குறியைப் போல... உடனே ஆண்டவன் தன்னை மட்டுமே காண வேண்டும் என்று பெரிய கற்பூரம் கொளுத்துவது, விளக்கில் எண்ணெய் வழிய வழிய ஊற்றி மீதத்தை சுவர் எல்லாம் பூசிவிட்டு செல்வது, திருநீரை வாங்கி அங்கங்கே கொட்டிவிட்டுச் செல்வது, கன்னத்தில் போட்டுக் கொள்வது, இப்படி பல விசயங்களில் மனம் சென்றுவிடுகிறது..... நாம் முதலில் செய்ய வேண்டியது நம் கலைச்சிற்பங்கள் குறித்த பெருமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.. அதற்கு இன்னும் பல சந்திராக்கள் உருவாக வேண்டும்.

அன்புடன்

பவளா.

2012/4/17 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Tiruthangal_small.jpg

Tthamizth Tthenee

unread,
Apr 17, 2012, 11:25:18 PM4/17/12
to mint...@googlegroups.com
கோயில் ஒரு பல்கலைக் கழகம். இதைத் தமிழன் உணர வேண்டும்.

 

அருமை  ! இதை உணர்ந்தாலே மக்களுக்கு அழகுணர்ச்சி, பராமரிப்பு, போன்றவை தாமாக வரும்.
 
வீட்டைக் கோயில் போல  வைத்துக்கொள்ளவேண்டும்  என்று பெரியவர்கள் சொல்லுவர்
 
இப்போது கோயில்களையே  சரியாகப் பராமரிக்காமல்  சீர்கேடாக வைத்துக்கொள்கிறோம்.
 
குடும்பம் ஒரு கோயில் என்றார் பெரியோர்
 
இப்போது கோயிலிலே  ( இல்லறம்)  முதற்கொண்டு நடத்தி  குடும்பம் நடத்துகிறார்கள் .தூய்மை காப்பதில்லை
 
 
 
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/4/17 N. Kannan <navan...@gmail.com>

Santhanam Swaminathan

unread,
Apr 18, 2012, 1:16:08 AM4/18/12
to mint...@googlegroups.com
கோவில் ஒரு பல்கலைக் கழகம் என்பது உண்மையே.
இதை எல்லாம் விட கோவில் ஒரு மாபெரும் தொழில்!! 
கோடிக் கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் மாபெரும் தொழில்.

 நாளைக்கு திராவிட கழகம் டில்லியில் ஆட்சிக்கு வந்து எல்லா கோவிலகளையும் மூடுங்கள் என்று சொன்னால் பல லட்சம் மக்கள் அடுத்த நிமிடமே வேலை இழப்பர். பூக்காரி, வண்டிக்காரன், சுற்றுலா தொழில், ஹோட்டல்கள்,லாட்ஜுகள், ரயில்,பஸ் ஊழியர்கள், கோவில் கடைகளில் விற்கும் பொருட்களச் செய்வோர் ,உற்பத்தி செய்வோர் என்று பல கோடி.

கோவில் இல்லாத ஊர்களிலும் இத்தொழில்கள் நடை பெறுகிறதே என்று சிலர் வாதிடலாம். உண்மைதான். ஆனால் இந்தியா ஆன்மீக நாடு!! வேத காலம் முதல் நாம் உலகிற்கு வழங்கும் ஒரே கொடை ஆன்மிகம் தான். இதுதான் இந்தியாவின் பணி என்பது விவேகனந்தரின் கணிப்பு. இந்தியா இறந்தால் ஆன்மீகம் செத்தொழியும். ஆனால் இந்தியா இறக்காது என்று சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் கூறுகிறார். 

இந்தியா பற்றி பாரதியின் கணிப்பும் இதுவே. 

எல்லாரும் அமர நிலையை எய்தும் நன் முறையை 
இந்தியா உலகிற்களிக்கும் ஆம் --
இந்தியாஉலகிற்களிக்கும் ஆம் ஆம் 
இந்தியாஉலகிற்களிக்கும் வாழ்க!!

 என்று மும்முறை கூறுகிறார். ஆகவே கோவில்கள் வாழ்க!!
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, April 18, 2012 4:25 AM
Subject: Re: [MinTamil] ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

rajam

unread,
Apr 18, 2012, 1:31:24 AM4/18/12
to mint...@googlegroups.com
>
> இது தல யாத்திரை அல்ல.
> அமெரிக்காவில்
> அப்படியொன்று செய்ய
> வேண்டுமென்ற ஆசையுண்டு :-)
>

அமெரிக்காவுக்கு
வாருங்கள். என் வீட்டைத்
தங்குமிடமாக
வைத்துக்கொள்ளுங்கள் ---
ஆனால் பவளஸ்ரீ போல
விழுந்து விழுந்து
உபசாரம் செய்யும் வயது
எனக்குக்
கடந்துபோய்விட்டது.
வருகிறவர்கள்தாம் எனக்கு
உதவி செய்ய வேண்டும்!
அதனால் ... பவளஸ்ரீ / கீதா
வகை உபசாரத்தை
இப்போதைக்கு
என்னிடமிருந்து
எதிர்பார்க்கமுடியாது!
அது பரவாயில்லை என்றால் ...
இங்கே தங்கித் தங்கள் தல
யாத்திரையைத் தொடங்கலாம்!
என்னால் முடிந்த அளவில்
நான் உதவி செய்வேன்! :-)


மற்றபடி, ... இந்த (சட்டெனக்
கோபப்படுபவர்கள் சற்றே
ஒதுங்கி நின்றால் நலம்)
என்ற கட்டுப்பாடு என்னை
இந்த இழையிலிருந்து மிக
நாசூக்காகவே
விலக்கிவிட்டது! மிக்க
நன்றி! இந்தப்
பட்டியலில் யார் யார்
என்று தெளிவாகவே
தெரிவித்தால் நலம்.
கடவுள் பற்றிப்
பேசும்போது சிலர்
வரக்கூடாது என்ற
விதிவிலக்கு எனக்கு
வியப்பைத் தந்தது.
ஆயினும், இது தங்கள் உலகம்
அன்றோ!

மகிழ்வுடன் இந்த இழை
தொடரவும். பஜனை நிறையவே
கிடைக்கும்.

:-) :-) :-)





Tthamizth Tthenee

unread,
Apr 18, 2012, 2:06:16 AM4/18/12
to mint...@googlegroups.com
கோயிலென்று `திருநின்ற ஊர்` எனும் தலத்திற்கு கவிஞர் திலகபாமா அழைத்துச் சென்றார்.

 

 
திரு நின்ற ஊரா?  அல்லது திருத்தங்கல் என்னும் ஊரா?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/4/17 N. Kannan <navan...@gmail.com>
கோயிலென்று `திருநின்ற ஊர்` எனும் தலத்திற்கு கவிஞர் திலகபாமா அழைத்துச் சென்றார்.

N. Kannan

unread,
Apr 18, 2012, 3:38:54 AM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 rajam <ra...@earthlink.net>:

> மற்றபடி, ... இந்த (சட்டெனக் கோபப்படுபவர்கள் சற்றே ஒதுங்கி நின்றால் நலம்)
> என்ற கட்டுப்பாடு என்னை இந்த இழையிலிருந்து மிக நாசூக்காகவே விலக்கிவிட்டது!
> மிக்க நன்றி! இந்தப் பட்டியலில் யார் யார் என்று தெளிவாகவே தெரிவித்தால் நலம்.

Hi..hi..

Don't be too sensitive about this thread என்பதன் தமிழாக்கம் அது :-)

எல்லோருக்கும் இடமுண்டு.

உங்களுக்கு இல்லாத இடமா!
நிச்சயம் எல்.லே வருவேன். அது இந்த வருடமாகக் கூட இருக்கலாம். வருகின்ற
சில மாதங்கள் அதிக வேலை இருக்கும். பனிக்காலம் வரட்டும்.

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2012, 3:48:26 AM4/18/12
to mint...@googlegroups.com
அது என்னமோ உலகத்தில் இணைய வெளியில் முதன்முறையாக
ஐயா கோவப்படாதீக அம்மா
அம்மா வருத்தப்படாதீக
இதய பலவீனம் உள்ளவர்கள் இங்கே வரவேண்டாம்
அடடா நீங்களா இங்கே
வராதீக வந்து காலவச்சாக் கதை வேற
என்று ஆறாம்திணையில் அதிரடியான நிகழ்வு
மின் தமிழில் மட்டும் ஏன்?
நாங்க இணையத்தில் உணர்வைக்காட்ட உணர்வுருவைப் போட்டு மின்னாடல் செய்வோம்
இங்கே எழுத்திலே பொறி பறக்குது கிண்டல் விண்னைத்த தாண்டி விளையாடுது
கிடைத்தா மகனே தூக்கிடுவேன் இல்ல சொருகீடுவேன் என்று மின் தாதா வேடமும் விளியாட்டும் இங்கே மட்டும் ஏன்?  ஏன்? ஏன்?
நாகராசன்
நாகராசன்

2012/4/18 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Apr 18, 2012, 7:18:54 AM4/18/12
to mint...@googlegroups.com
Dear Professor:

I look at it as unnecessary. I am not really perturbed by electronic
messages. They are simply virtual and non-personal. Should I call it
as a weakness to express our ego on such trivial matters. However,
there are cases where one needs to protest if it affects professional
integrity. வாள் வீசிக்கொண்டே பேசுவது அந்தக் காலத்து எம்.ஜி.ஆர்,
வீரப்பா பாணி :-) காலம் வெகுவாக மாறிவிட்டது. நாம் இன்னும் சூழலை
இனிமையாக்க முயலாம் என்பது என் அபிப்பிராயம். என்ன கொண்டு
போய்விடப்போகிறோம் இறுதியில்? நான் சொன்ன சுடுசொல் பின்னால் வரும்
ஆய்வாளனுக்கு நம்மை எக்காலத்தும் இனம் காட்டிக்கொண்டு இருக்கும். அதைத்
தவிர்க்கலாம். I guess MinTamil is an excellent platform to practice
one preaches or wants to preach :-) ஆறுவது சினம். முனிவது தவிர் :-)

மின்தமிழ் என்றில்லை, வாள் வீச்சு எல்லா மன்றங்களிலும் உண்டு என்று
நம்புகிறேன். சீண்டுதல் என்பது மரத்துபோன உயிருக்கு இருப்பின் சமிக்ஞை
:-)

நா.கண்ணன்

2012/4/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Hari Krishnan

unread,
Apr 18, 2012, 7:39:43 AM4/18/12
to mint...@googlegroups.com


2012/4/18 N. Kannan <navan...@gmail.com>

நான் சொன்ன சுடுசொல் பின்னால் வரும்
ஆய்வாளனுக்கு நம்மை எக்காலத்தும் இனம் காட்டிக்கொண்டு இருக்கும். அதைத்
தவிர்க்கலாம். I guess MinTamil is an excellent platform to practice
one preaches or wants to preach :-) ஆறுவது சினம். முனிவது தவிர் :-)

ம்.  உண்மை.

வாய் மனத்துக்குத் தன்சொல்லை எதிரொலித்தால்
மனக் கண்ணாடி நம் முகத்தை நமக்குக் காட்டும்.

தேரையர் என்றொரு பெரிய சித்த மருத்துவர் இருந்தார்.  அகத்தியரின் மாணவர் என்று சொல்லப்படுபவர்.  இவர் இயற்றிய அத்தனை மருத்துவக் குறிப்புப் பாடல்களும் ‘யான் தேரையன் அல்லனே’ என்று முடியும்.  அதாவது, இந்த முறையில் மருந்து தயாரித்து உட்கொண்டால் இந்த நோய் தீரும் என்பது உறுதி.  அப்படித் தீராவிட்டால் நான் தேரையன் இல்லை; பெயரை மாற்றி வைத்துக் கொள்கிறேன்’ என்ற சவால் இருக்கும். அவரைக் குறித்து ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.

அகத்தியரிடம் கார்க்கோடகன், தீராத வயிற்று நோய்க்காக மருந்து வேண்டு வந்தான்.  ஒரு நாளில் குணமாக வேண்டிய அந்த மருந்து, ஒருவாரம் ஆகியும் கார்க்கோடகனிடம் வேலை செய்யவில்லை.  தேரையர் அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

மறுநாள் காலை, கார்க்கோடகன் வீட்டுக்குப் போனார்.  ‘இன்று என் குருநாதர் வேறொரு மருந்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறார்.  இன்று மாலைக்குள் சரியாகிவிடும்’ என்று சொல்லிவிட்டு அவரே ஒரு தனிப்பட்ட முறையைக் கையாண்டு கார்க்கோடகனுக்குக் கொடுத்தார்.  மாலைக்குள் இல்லை, அன்று மதியமே வயிற்று வலி சரியாகி விட்டது.

நிறைய சன்மானங்களை அள்ளிக் கொண்டு அகத்தியரைத் தேடிவந்தான் கார்க்கோடகன்.  அகத்தியர் காலடியில் வைத்துவிட்டு அவரை நமஸ்கரித்தான்.  ‘இன்று தாங்கள் தங்களுடைய சீடர் மூலமாகக் கொடுத்தனுப்பிய மருந்து, மாலைக்குள் சரியாக்கிவிடும் என்று அவர் சொன்னார்.  ஆனால், மதியத்துக்குள் சரியாகி விட்டது.  மருத்துவர் என்றால் தாங்களல்லவோ மருத்துவர்’ என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றான்.

அகத்தியருக்கோ ஒரே குழப்பம்.  அவர் எந்த மருந்தையும் கொடுத்தனுப்பவில்லை.  அதுவும் தேரையரிடம் எந்த மருந்தையும் கொடுத்திருக்கவில்லை.  கார்க்கோடகன் கேஸை அவர் மட்டுமே தனியாக டீல் பண்ணிக் கொண்டிருந்தார்.  பிறகு தேரையரை அழைத்து விசாரித்தார்.  ‘என்ன மருந்தைக் கொண்டுபோய்க் கொடுத்தாய்?  எப்படி இவ்வளவு விரைவில் குணமானது?  என்னை விஞ்சிவிட்டாய் போலிருக்கிறதே’ என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

தேரையர் பணிவுடனும் அடக்கத்துடனும் சொன்னார்: ‘ஐயா, தங்களை விட மருத்துவத்தில் மேம்பட்ட ஒருவர் உலகில் இருக்கிறார்களா என்ன?  தாங்கள் எப்போதும் கொடுக்கும் மருந்தைத்தான் நானும் கொண்டுபோய் இன்று காலையில் கொடுத்தேன்’ என்றார்.

அகத்தியருக்கு இப்போது அதிர்ச்சி ஏற்பட்டது.  ‘அது சரி.  அதை நான் கொடுத்தபோது ஏன் வேலை செய்யவில்லை?  நீ கொடுத்தபோது எப்படி இவ்வளவு விரைவில் குணமானது?’ என்று கேட்டார்.

தேரையர் அமைதியாகச் சொன்னார்.  ‘ஐயா!  தாங்கள் கொடுத்திருக்கும் மருந்துக்குப் பாம்பின் நஞ்சு முறிவு என்பதும் தங்களுக்குத் தெரிந்த ஒன்றுதானே?  தாங்கள் எனக்குக் கற்பித்த ஒன்றுதானே?  ஆகவே, இந்த மருந்தைக் கார்க்கோடகன் கடித்து விழுங்கும்போது, அவனுடைய பல்லில் உள்ள நஞ்சும் கலந்து உள்ளே போய்விடுகிறது.  மருந்து உள்ளே சென்றாலும் அதன் பலத்தை இந்த நஞ்சு முறித்துவிடுகிறது.  ஆகவே நான் இன்று அவனுக்கு மருந்தளிக்கும்போது கத்துக்குழாய் வழியாகப் புகட்டினேன். மருந்து நேரடியாக உள்ளே சென்றுவிட்டது.  நஞ்சு கலக்கவில்லை.  எனவே நோயும் குணமாகிவிட்டது‘.

கத்துக்குழாய் என்பது உள்ளே கணுக்களில் குடையப்பட்ட மூங்கில் குழாய், a bamboo tube.  கன்றுக்குட்டிகளுக்குக் கூட கத்துக்குழாய் வழியாகத்தான் மருந்து புகட்டுவார்கள்.

அகத்தியருடைய மருந்து பலிக்கவில்லை என்றால் அது அவர் குற்றமா? கடித்து விழுங்கிய பல்லின் குற்றமா?

உள்ளத்தில் ஆழமான பிம்பம் ஒன்று பதிந்துவிட்டால் சுவரில் இருக்கும் பல்லிகூட சீனத்து ட்ராகனாகத்தான் நெருப்புமிழும்.  பல்லியைக் கோபித்துக்கொண்டு என்ன பயன்!

--
அன்புடன்,
ஹரிகி.

N. Kannan

unread,
Apr 18, 2012, 8:29:11 AM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> உள்ளத்தில் ஆழமான பிம்பம் ஒன்று பதிந்துவிட்டால் சுவரில் இருக்கும் பல்லிகூட
> சீனத்து ட்ராகனாகத்தான் நெருப்புமிழும்.  பல்லியைக் கோபித்துக்கொண்டு என்ன
> பயன்!


உண்மை!

யோசித்துப்பார்த்தால் நமது உறவு என்பது எப்போதும் பிம்பங்களுடன்தான்
நடைபெறுவது புரியும். எல்லோருக்கும் எல்லாரைப் பற்றியும் ஒரு பிம்பம்
இருக்கும். புதிதாக ஒருவர் வரும் போது எதிர்பார்ப்பு இருப்பதற்குக்
காரணம் அவரைப் பற்றிய பிம்பம் இல்லாது இருத்தலே. இரண்டே நாளில் அலுத்துப்
போவதற்குக் காரணம் அதற்குள் அவரைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கிவிடுதலே!
பல நேரம் தோன்றும் கணவனும், மனைவியும் எப்படித்தான் சேர்ந்து குடும்பம்
நடத்துகின்றனரோ என்று !!

ஆயினும், பேராசிரியர் இங்கு சொல்ல வருவது இன்னும் கூட கொஞ்சம் இனிமையாக
சொல்லாடல் இருக்கலாமே என்றுதான். இனிய உளவாக....ஆயிரம் முறை சொல்லிய
குறள். ஆழப்பதிய மறுக்கிறது என்ன செய்ய :-) ?

பிறவிக்குணம் என்றெல்லாம் சொல்லி தப்பிவிட முடியாது. எனக்கு அசாத்திய
கோபம் வரும் (அம்மாவின் பரிசு). ஆனால் மின்தமிழ் என்னை நிரம்ப மாற்றி
இருக்கிறது. பொறுமையைக் கற்றுக் கொடுத்து இருக்கிறது. என்னால் ஒன்று
முடியும் எனும்போதுதான் நான் சொல்லவே முற்படுகிறேன்.

சரி, இதை விடுத்து இழையின் கருத்திற்குச் செல்வோம். முனிவது தவிர் என்றே
இழை நடத்தலாம் போலுள்ளது :-))

நா.கண்ணன்

Hari Krishnan

unread,
Apr 18, 2012, 8:36:32 AM4/18/12
to mint...@googlegroups.com


2012/4/18 N. Kannan <navan...@gmail.com>

இனிய உளவாக....ஆயிரம் முறை சொல்லிய
குறள். ஆழப்பதிய மறுக்கிறது என்ன செய்ய :-)

ரௌத்திரம் பழகு.
சீறுவோர்ச் சீறு - புதிய ஆத்திசூடி.

வள்ளுவர் கடுஞ்சொற்களை ஏராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.  சினத்துக்கும் சீற்றத்துக்கும் உள்ள வேறுபாட்டை, திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டேன்.  அறச்சீற்றம் இல்லாத மனிதன், மனிதனே அல்லன்.  சினம் என்பது தன்னைச் சார்ந்து எழுவது; சீற்றம் என்பது சமூகத்தைச் சார்ந்து எழுவது என்று வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், வள்ளுவர் சீறியிருக்கும் அத்தனை இடங்களும் உறுதிப்படுத்துகின்றன. 

இதையெல்லாம் ரங்கன் இழையில் விடையாக எழுத நினைத்தேன். அதற்குள் அவர் திரையை மூடிவிட்டார்.:))

ஆலயத்துக்குள் லயம் நிலைக்கட்டும்.  லாயத்துக்குள் குதிரைகள் உறங்கட்டும்.  நீங்க உங்க தேரைச் செலுத்துங்க.  கண்ணன் கீதோபதேசம் இனிதே நடக்கட்டும்.  (ஆனா அதுலகூட, ரௌத்திரம் பழகத்தான சொல்றார்!  ரௌத்திரம் ‘பழகு’ என்பதில் உள்ள பழகுதான் கீவேர்ட்.  போறும்.  இத்தோட நிறுத்திக்கறேன்.)  நிறுத்திக் கொள்வதே சாலவும் நன்று.  

N. Kannan

unread,
Apr 18, 2012, 8:38:27 AM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 coral shree <cor...@gmail.com>

> எனக்கும் அனுமதி அளிக்க வேண்டி விண்ணப்பம்.

பவளா! இணையம் தோன்றிய போது உருவான ஓங்காரம் நினைவிருக்கிறது.
சுதந்திரத்தின் மறுபெயர் இணையம் என்று. எனக்கு அதில் இன்னும் நம்பிக்கை
உள்ளது. சுதந்திரம் என்றால் பொறுப்பு என்பதை நான் பின்னால்
கற்றுக்கொண்டேன். பொறுப்புடன் பேசுவதற்கு அனுமதி எதற்கு? அதுவும் இன்னா
சொல் என்னா? எனக்கேட்கும் பவளாவிற்கா அனுமதி? :-)

>
>நம் மக்கள் நம் ஆலயங்களின் பெருமை
> பற்றி உணர வேண்டுமானால், முதலில் நம் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு
> வேண்டும். வெளி நாட்டவர் கூட அறிந்திருக்கும் நம் ஆலயங்கள் பற்றிய தொன்மையின்
> பெருமையை நம்மவர்கள் உணர்ந்தார்களில்லை என்பதுதான் வேதனைக்குரிய விசயம்.

எங்கோ ஓட்டை விழுந்துவிட்டது? 1000 வருடங்கள் தேமேன்று இருந்த ஆலயங்களில்
சிலைகளை ஏன் கம்பிக்கிராதி கொண்டு மூட வேண்டும்? முன்னால இருந்தவனுக்குப்
பொறுப்பு இருந்தது, பின்னால வந்தவனுக்கு பொறுப்பில்லை என்ற பொருளா?
நாமல்லவோ `சுதந்திரமான` இந்தியக் குடிமகன்???????

நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் ஏற்புடையன.

உங்களுக்கு ஒரு வேண்டுதல். இவ்விழையில் நான் அடி எடுத்துத்தான்
கொடுக்கிறேன். நீங்கள் எல்லோரும் மிக அழகாக மாலை தொடுக்கிறீர்கள். எனவே
இவ்விழையை தாங்கள் ஒரு கவன ஈர்ப்பு கட்டுரையாகப் பின்னால் மாற்ற
முடியுமா? அதை நாம் உள்நாட்டு, வெளிநாட்டுக் கோயில் நிர்வாகத்தினருக்கு
பின்னால் அனுப்பலாம். அரசிற்குக் கூட அனுப்பலாம்!

நா.கண்ணன்

N. Kannan

unread,
Apr 18, 2012, 8:42:56 AM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

>
> இப்போது கோயிலிலே  ( இல்லறம்)  முதற்கொண்டு நடத்தி  குடும்பம் நடத்துகிறார்கள் .தூய்மை காப்பதில்லை
>

நல்ல பாயிண்ட். ஜனநடமாட்டம் உள்ள இடத்தில் எல்லோரும் தொழில் செய்ய
ஆசைப்படுகின்றனர்!! :-) முன்பு தேவதாசிகளை அறிமுகப்படுத்தும் இடமாகவும்
கோயில் செயல்பட்டு இருக்கிறது!!

க.>

coral shree

unread,
Apr 18, 2012, 8:43:24 AM4/18/12
to mint...@googlegroups.com
அன்பின் திரு கண்ணன் சார்,

ஆகா அருமையாகச் செய்கிறேன். என்றால் இயன்றவரை தொகுக்க முயல்கிறேன். மிக்க நன்றி,

அன்புடன்

பவளா.

2012/4/18 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Apr 18, 2012, 8:44:31 AM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:

> கோவில் ஒரு பல்கலைக் கழகம் என்பது உண்மையே.
> இதை எல்லாம் விட கோவில் ஒரு மாபெரும் தொழில்!!
> கோடிக் கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் மாபெரும் தொழில்.
>

அடிக்கோடுக்கு வந்துவிட்டீர்கள். நான் அன்றைய வேதாகம சபாவில் கோயிலுக்கு
ஒரு corporate model கொடுத்துப் பேசினேன். இழையில் அது பற்றிப் பேசுவோம்.

க.>

Hari Krishnan

unread,
Apr 18, 2012, 8:55:36 AM4/18/12
to mint...@googlegroups.com


2012/4/18 N. Kannan <navan...@gmail.com>

எங்கோ ஓட்டை விழுந்துவிட்டது? 1000 வருடங்கள் தேமேன்று இருந்த ஆலயங்களில்
சிலைகளை ஏன் கம்பிக்கிராதி கொண்டு மூட வேண்டும்? முன்னால இருந்தவனுக்குப்
பொறுப்பு இருந்தது,

முன்னால இருந்தவனுக்கு நிஜமான பக்தி இருந்தது.  தெய்வத்தின் கூடத்தில் எந்த மூலையிலும் நின்று பொய்சொல்லக் கூட அஞ்சினார்கள்; சந்நிதானத்தில் கோபமோ, ஒருவருக்கொருவர் சண்டையோ இருக்கவில்லை.  இதைப் பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன.

ஆனால், இன்று ஆலயம் மட்டுமல்லாமல், புராதனச் சின்னங்கள் எவற்றிலும் யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்ற வாக்கியம் இடம்பெற்றே ஆகிறது.  அவை எல்லாமும் ஒன்றேபோல் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால், எந்தக் காலகட்டத்தில் இந்தச் சீரழிவு தொடங்கியது என்பது சொல்லாமலே விளங்கும்.

ஒன்றுமில்லை. மஹாபலிபுரத்தில் ஒரு குடைவரைச் சந்நதி.  அம்பாள் சந்நதி.  ஒரே மலையைக் குடைந்து தூணாக்கி, கூரையாக்கி, அறையாக்கிக் கருவறையாக்கி, சுவராக்கி அந்தச் சுவரிலேயே புடைப்புச் சிற்பமாக உருவாக்கப்பட்ட அம்பாள் திருவுரு.  (சரி. சமணாம்பள் திருவுருவாகவே இருந்துட்டுப் போகட்டும்.)  இப்படி, நுண்ணிய வேலைப்பாடுகள் செய்ய முடியாத மலைப்பாறை என்பதால், உருவங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் உடலை ஒட்டியே இருக்கும்.

எந்த மஹாபாவியோ, பூஜை இல்லாத அந்தச் சந்நதியில், அம்பாளின் திருமேனியில் ஜனனஸ்தானத்தைக் கோடாக அழுத்திக் கீறியிருக்கிறான்.  

முன்னால இருந்தவனுக்குப் பொறுப்பு இல்லாமலா சுமார் 1000 ஆண்டுகள் கடந்து வந்த இந்தத் திருவுருவின் மேல், கடந்த சுமார் நூறாண்டுகளுக்குள் (நான் பார்த்த 20 ஆண்டுகளுக்கு அண்மையில் நடந்த ஒன்று என்பதைக், கீறலின் வெளுப்பே உறுதி செய்தது) நடந்திருக்கிறது என்றால், வேலி போட்டால் போதாது.  மின்சார வேலிதான் போடவேண்டும்.

அல்லது, குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படியே சொல்லிக் கொடுத்தாலும், கண் முன்னால் இன்னொருவன் இப்படிச் செய்துகொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தால், இனிய உளவாக இன்னாத... என்று உருப்போட்டுக் கொண்டிருந்தால் போதுமா?

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

இதுவும் குறள்தான்.  இதுக்கு அர்த்தம் என்ன போட்டிருக்குன்னு புத்தகத்தைப் புரட்டிப் பாத்தா தெரிஞ்சுட்டுப் போவுது. :)

Hari Krishnan

unread,
Apr 18, 2012, 9:06:02 AM4/18/12
to mint...@googlegroups.com


2012/4/18 N. Kannan <navan...@gmail.com>

நல்ல பாயிண்ட். ஜனநடமாட்டம் உள்ள இடத்தில் எல்லோரும் தொழில் செய்ய
ஆசைப்படுகின்றனர்!! :-) முன்பு தேவதாசிகளை அறிமுகப்படுத்தும் இடமாகவும்
கோயில் செயல்பட்டு இருக்கிறது!!

தவறாகச் சொல்கிறீர்கள் கண்ணன். டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தோடு நடந்த ஆடியோ பேட்டியை உரைவடிவில் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.  மதுரை மீனாட்சி கோவிலை மீட்ட கம்ப்பன்னா (என்ன கர்நாடக மன்னன்) அந்த இடத்தில், இடைப்பட்ட காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்த புரோகிதர்களிலிருந்து தேவதாசிகள் வரையில் காணாமல் போயிருந்ததையும்; அவர்களை மீட்டு மீண்டும் அவரவர் தொழிலில் ஈடுபடுத்தியதையும் சொல்லியிருக்கிறார்.  வேண்டுமானால் அந்தப் பகுதியின் குரல் பதிவை க்ளிப் செய்து போடுகிறேன்.

தேவதாசி முறை என்பது, கோவிலுக்கு அர்ப்பணித்துவிடப்பட்ட முறை.  பணமும் பலவீனமும் அதிகாரமும் அதிகாரத்தை எதிர்க்க முடியாத சூழலும் அவர்களை இந்தத் தொழிலை மேற்கொள்ளச் செய்தன.  

தாசி என்றால் அந்தத் தொழில் செய்பவள் என்றால், தாசன் என்பதற்கு என்ன பொருள்?  அது ஏன் gigoloவைக் குறிக்கவில்லை?

இப்படி ஒரு பதிவு தேவையா என்றால், இப்படி ஒரு கேள்வி எழுந்ததால் எழுந்த எதிர்வினை என்று மட்டும் பதில் சொல்லி, மீண்டும் விடைபெறுகிறேன்.

(புத்திக்கு இன்னமும் குப்பத்தொட்டில புது இலை வந்து விழும் வரையில்தான் வைராக்கியம் இருக்கிறது.  இதையும் சாம்பராக்கு இறைவா என்று வேண்டிக் கொள்கிறேன்.  இனிமேல் என் குறுக்கீடு இருக்காது.)

N. Kannan

unread,
Apr 18, 2012, 9:09:27 AM4/18/12
to mint...@googlegroups.com
ரோம் நகரில் மட்டும்தான் என்றில்லை, லண்டனிலும் தடுக்கி விழுந்தால் கோயில். நம்ம ஊர் என்ன கெட்டது? மதுரைக்குப் பெயரே Temple City! அத்தனை கோயில்கள். ஒரு கோயில் போறாதா? என்று கேட்கலாம். போறாது என்பதால்தான் இத்தனை தோன்றியிருக்கிறது! ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விசேஷம். பொதுப் பண்புகள் ஒன்று என்றாலும், சட்டென்று கிளம்பி தொழுது திரும்ப அருகில் ஒரு கோயில் இருந்தால் தேவலைதானே? அதனால்தான் இத்தனை கோயில்கள் (தேவாலயங்கள்).

நானும், சுபாவும் ஒருமுறை நெதர்லாந்து சென்றிருந்தோம். அன்று நத்தார் தினம் (கிறிஸ்துமஸ்). சரி, தேவாலயம் போகலாமென்று சென்றால் கோயில் பூட்டி இருந்தது! இந்த அநியாயம் உண்டோ? என்று கேட்டுவிட்டுத் திரும்பினோம். இப்போது ஐரோப்பாவில் கோவிலுக்குப் போக ஆளில்லை. எனவே பழைய தேவாலயங்கள் சொற்ப விலைக்கு விற்பனைக்கு வருகின்றன. புகலென்று சென்றவிடத்தில் நம்மவர்க்கோ கோயிலில்லை. எனவே கடனை, உடனை வாங்கி இந்த சொற்ப விலைத் தேவாலயங்களை நம்மவர் வாங்கிவிடுகின்றனர். ஒரு காலத்தில் ஏசு இருந்தார், இப்போது முருகன் வந்துவிட்டார் என்று கதை!

Inline image 1

உங்கள் எல்லோருக்கும் தெரியும் நானொரு சிவன் கோயில் பிள்ளை என்று. பெருமாள் கண்டு கொள்கிறாரோ இல்லையோ சிவன் என்னை என்றும் கைவிட்டதில்லை. எங்கே போனாலும் மாலை, மரியாதை. சிதம்பர நடராஜர் கோயிலின் ஸ்கேல் மாடல் இச்சிறு கோயில். லண்டன் ஈஸ்ட்ஹாம் சைவ முன்னேற்ற சங்கம் நடத்தும் கோயில். அன்று அப்பர் சுவாமிகளின் குருபூஜை. இந்த சந்நிதியை விட்டு வர மனம் வரவில்லை. ஐம்பொன்சிலைகள் அனைத்தும் அத்தனை அழகு. அவர்கள் அனுமதியுடன் படம் எடுத்தேன்.

இந்தக் கோயில் ஒரு ஆட்டமோபைல் கராஜ் இருந்த இடத்தில் எழும்பியுள்ளது. பெரும்பாலான கோயில்கள் இப்படியான கார் ரிப்பேர் இடங்களில்தான் அமைகின்றன. இந்த இடத்தை விலைக்கு வாங்கி கோயில் கட்டுவதிலும் பிரச்சனை இருந்திருக்கிறது. இது அதிகம் முஸ்லிம்வாழும் தெரு. அங்கு ஒரு இந்துக் கோயில் வருவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை. ஆனால் நடுநிலையான ஆங்கில அரசு கோயில்கட்ட அநுமதி வழங்கியதால் இன்று இங்கொரு கோயில், யோகப் பயிற்சி சாலை, சங்கீதப்பள்ளி இவை நடைபெறுகின்றன.

அப்பரின் கதையை மிக அழகான பதின்ம வயதுச் சிறுமியர் பாவாடை, தாவணியோடு வந்து தமிழில் சொன்னது அழகு! இங்கு வந்து சேரும் நம் பிள்ளைகள் தமிழை முதன் மொழியாகக் கற்கமுடியாத சூழலிலும், தமிழ் புழங்கும் சூழலற்ற நிலையிலும் தமிழைக் கைவிட வேண்டிய சூழ்நிலை. இதற்கு எதிர்நீச்சல் போட்டு அச்சிறார்கள் தமிழில் பேசியது சுவாரசியமாக இருந்தது. பின்னால் கேட்டேன், பி.சுசீலா தெலுங்கில் எழுதி வைத்து தமிழ்ப் பாடல் பாடுவது போல் ஆங்கிலத்தில் எழுதிவைத்து தமிழ் பேசுகின்றனரோ என்று! இல்லை! தமிழில் எழுதி வைத்து தமிழில் வாசித்தனர்! வாழ்த்துக்கள்!!

ஆனால் இந்தத் தமிழைத் தக்க வைக்க இவர்கள் எடுக்கும் முயற்சி!! கைலாசத்தைக் கையில் தூக்குவது போல்தான் அது!! இராவண பிரயர்த்தனம் :-)

நா.கண்ணன்
Chitambaram.jpg

N. Kannan

unread,
Apr 18, 2012, 9:21:47 AM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

> அல்லது, குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படியே சொல்லிக்
> கொடுத்தாலும், கண் முன்னால் இன்னொருவன் இப்படிச் செய்துகொண்டிருப்பதைப் பார்க்க
> நேர்ந்தால், இனிய உளவாக இன்னாத... என்று உருப்போட்டுக் கொண்டிருந்தால் போதுமா?
>
> உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
> கொள்வர் பெரியார்ப் பணிந்து.


ஆக! இடையில் நாகரீகம் கெட்டுப் போயிருக்கிறது. அது எப்படி, ஏன்
என்பதுதான் கேள்வி. நான் குற்றமாக இதைச் சொல்லவில்லை. பிரச்சனையின் வேர்
தெரிந்தால் பிரச்சனை அப்போதே தீர்ந்தது! இல்லையா!?

சரி, வேரரறுந்து போய்விட்டது என்பது உண்மையானால், சிறுகுழந்தைகளுக்குச்
சொல்லித் தர வேண்டும். இங்கு கண்ணிழந்தவர்களை அழைத்துச் செல்ல நாய்க்கு
பயிற்சி அளிக்கிறார்கள். அதைச் சுட்டுப் போட்டாலும் சிவப்பு விளக்கில்
தெருவைக் கடக்காது. இங்கு குழந்தைகளுக்கு வீதி விதிகளைச்
சொல்லித்தருகிறார்கள். எனவே தவறுகள் நடப்பதில்லை.

எலெக்ரிக் பென்ஸிங் வைக்க வேண்டுமென்று சொல்வது நம்மை நாமே
கீழ்மைப்படுத்துவதாகும்.

எனவேதான் எனக்கு இம்முறை தோன்றியது, தமிழகம் மிகவும் கீழான ஒரு tribal
society போன்று இயங்குவதாக. கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை. இந்தியாவிலும்,
ஆப்பிரிக்காவிலும்தான் இந்நிலை. மற்ற நாடுகள் வெகுவாக
நாகரீகமடைந்துவிட்டன!

எனவே மீண்டும் அதே கேள்வி. மிகவும் நளினமான, நாகரீகமாக இருந்த ஒரு சமூகம்
எப்போது சீர்கெட்டுப் போனது? ஏன் சிலையை சிறை வைக்கும் நிலை?

சிந்திப்போம் :-)

நா.கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2012, 9:28:57 AM4/18/12
to mint...@googlegroups.com
"  ஏன் சிலையை சிறை வைக்கும் நிலை?"
 
சிறையில் வைக்கவேண்டியவர்களையெல்லாம்  வெளியில் வைத்திருப்பதால்  ஏற்பட்ட  நிலை இது  !
 
நம்  முன்னோர்கள்  ஆத்திகமோ நாத்திகமோ 
 
கடவுள் என்று சொன்னார்கள். அப்படி இல்லையென்றால்  சிற்பம் என்று சொல்லிக் கொடுத்தார்கள். சிற்பம் என்பது ஒரு கலை என்று சொல்லிக் கொடுத்தாரகள்
 
கலைகளை மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்
 
நம் பாரம்பரியங்களைக் காக்க திரு ஹரிகி கூறியதைப் போல சீற வேண்டிய நேரத்தில் சீறினார்கள்.
 
நாம் இப்போதெல்லாம் எதற்குமே  சீறுவதில்லை
 
அதுதான் ப்ரதான காரணம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2012/4/18 N. Kannan <navan...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 18, 2012, 9:31:26 AM4/18/12
to mint...@googlegroups.com


2012/4/18 N. Kannan <navan...@gmail.com>

எலெக்ரிக் பென்ஸிங் வைக்க வேண்டுமென்று சொல்வது நம்மை நாமே
கீழ்மைப்படுத்துவதாகும்.

நம்மை நாமேதான் கீழ்மையில்லை, சிறுமைப்படுத்திக்கொண்டு நிற்கிறோமே!  அதற்கான சாட்சியம்தானே மகாபலிபுரத்தில் நான் கண்ட அம்மன் சிலை!  இதைவிடவும் கேவலமாக ஒரு நாட்டு மக்கள் நடந்துகொள்ள முடியுமா?

இப்டித்தான் ஓர் அரசன் வடக்கில், கோட்டையின்மேல் துளசி தீர்தத்தைத் தெளித்துக் கொண்டிருந்தான்.  படையை வலுப்படுத்தவே இல்லை. கோட்டைச் சுவரின்மேல் கால்வைத்து ஏறவேண்டுமானால், துளசி தீர்த்தத்தை மிதித்துக் கொண்டல்லவா ஏற வேண்டும்?

எல்லாம் சரியாகத்தான் நடந்துகொண்டிருந்தன. இஸ்லாமியப் படையெடுப்பு வரை.

யுத்தம் நடக்கும் சமயத்தில் நம்மை மின்சார வேலிபோட்டுக் காத்துக் கொள்ளவது கூட நம்மை நாமே கீழ்மைப்படுத்தும் கணக்கில் வந்துவிடும் போலிருக்கிறது.

(நோமோர் ஆன்ஸரிங்.  தீவிர வேலை செஞ்சிங்.... சிந்தனைப் போக்கை செதுக்கிப் பார்க்க அஞ்சுபவர்களுக்கு இடையில் என்ன வேலை வேண்டிக்கிடக்கிறது!)

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2012, 10:27:44 AM4/18/12
to mint...@googlegroups.com
தேவதாசி முறை என்பது, கோவிலுக்கு அர்ப்பணித்துவிடப்பட்ட முறை.  பணமும் பலவீனமும் அதிகாரமும் அதிகாரத்தை எதிர்க்க முடியாத சூழலும் அவர்களை இந்தத் தொழிலை மேற்கொள்ளச் செய்தன.  
தாசி என்றால் அந்தத் தொழில் செய்பவள் என்றால், தாசன் என்பதற்கு என்ன பொருள்?  அது ஏன் gigoloவைக் குறிக்கவில்லை?


தவறான கருத்துக்குச் சரியான திருத்தம். 

திரு ஹரிகிருஷ்ணனுக்கு நன்றி. 

***


Innamburan Innamburan

unread,
Apr 18, 2012, 11:10:13 AM4/18/12
to mint...@googlegroups.com

சரி, இதை விடுத்து இழையின் கருத்திற்குச் செல்வோம்.’ (நா.க.)

~~~~~~~

இன்றைய ஹிந்து இதழில் மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலை பற்றி, கோயில் ஒழுங்கு, சம்பிரதாயங்கள், பண்டிகைகள், கலை, சிற்பம் ஆகியவற்றை பற்றியும், பெனாய்.கே.பெஹல் அவர்களின் ‘தெய்வீகத்திருமணம்’ என்ற திரைப்படம் மதீப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளியறை வைபவம் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. என்னே நுட்பம்! பெருமானுக்கு வலிக்கப்போகிறதே, என்று அம்பாளின் மூக்குத்தியை கழட்டிவிடுகிறார்கள். பூரி ஜெகன்னாத்துக்கு ஜலதோஷம் என்று சாம்பிராணி பிடித்துக்காட்டி, ஊரே கவலைப்படுவது போல. கோயிலில் 330 லக்ஷம் சிற்பங்கள் உள்ளனவாம். மேலும், அந்த சித்திர ஊர்வலத்தில், நான் சொன்னது போல, கை, கால் அலம்ப குளம்,  பிரார்த்தனை, ஞானம் மட்டுமல்லாமல், வாழ்வியலின் எல்லா கூறுகளையும் பிரதிபலிக்கறது, கோயில் வளாகம் என்பதையும் காட்டுகிறார். அற்புதமாக, ஒரே பாறையில் செதுக்கிய சிற்பங்கள் உடைய ஆயிரம்கால் மண்டபமும் இடம் பெறுகிறது.

இது தான் ஆக்க பூர்வமான வந்தனம். என்னுடைய ஒரு கேள்வி: மட சாம்பிரணிகளே! அந்த ஆயிரங்கால் மண்டபத்தை சீரழித்து, குங்குமமும், பாவாடை சீட்டியும் விற்கிறீர்களே. சிற்பங்களை சின்னாபின்னம் செய்து மதுரை பொம்மை (அதுவும் கலை தான்), அர்ச்சனைத்தட்டு (என்ன விலை!) எல்லாம் விற்கிறீர்களே. தெய்வம் வாய் திறந்து கேட்க இயலாதது என்ற திமிர் தானே, போலி ஆன்மீக வாதிகளே!

அது போகட்டும். இன்றைய ஜூனியர் விகடனில் திருவஹீந்திரபுரம் பற்றி, புகார். எந்த தரப்பு நியாயம் தெரியவில்லை. கோர்ட்டுக்கு முன்னால் பற்பல வழக்குகளாம்! பெருமாளே! உன்னை காப்பாற்றுவது யாரப்பா? 

சந்தானம் சாரிடம் ஒரு விண்ணப்பம்: இந்த வேலை வாய்ப்பு, ஆக்கப்பூர்வமில்லாத, பக்தியை இழந்த அத்துபடி வேலைகளால், யாருக்கு லாபம்? முதற்கண்ணாக, கோயில் ஒழுங்கை பரிபாலனம் செய்க. கோயில் சுற்றுப்புறத்தை துப்புரவாக வைக்க. குறைந்தது குப்பை போடாமல் இருக்க. மனதை, கொஞ்சம் தூசி தட்டி, தூய்மையுடன் கோயிலுக்கு செல்க.

அது எல்லாம் முடியாது என்றால், நாத்திகனாக மாறிவிடுக.

இன்னம்பூரான்

18 04 2012 

rajam

unread,
Apr 18, 2012, 12:32:38 PM4/18/12
to mint...@googlegroups.com
இப்போது கோயில்களில் "இல்லறம்" நடத்திக் "குடும்பம்" நடத்துவது பற்றி எனக்குத் தெரியாது. எல்லோரும் என்ன தொழில் செய்ய ஆசைப்படுகின்றனர் என்றும் தெரியாது.


நான் மீனாட்சி கோயிலுக்குப் பத்தடி தூரத்தில் வளர்ந்தவள். 4~5 வயதில், ஒவ்வொரு நாளும் விடியலுக்குமுன் தூக்கக் கலக்கத்தில் தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து போய் அந்தக் கோயிலைச் சுற்றிவந்து பழக்கப்பட்டவள். ஒவ்வொரு சிலையையும் கல் தூணையும் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தவள். கிளி மண்டபக் கிளிகளைச் சிறுபிள்ளைத்தனமாகச் சீண்டியவள். "மீனாட்சியைக் கள்ளன் கொண்டு போயிட்டான்" எனச்சொன்னால், அந்தக் கூண்டுக் கிளிகள் பட பட என்று சிறகடித்துக் கூண்டுக்குள்ளேயே தத்தளிப்பது அப்போது சிரிப்பைத் தந்தது. இதெல்லாம் பாவம் என்று பிற்காலத்தில் புரிந்தது. வேப்பிலையைப் பறித்து அந்த ஒற்றை ஒட்டகத்துக்கு ஊட்டியது உண்டு. காளையைப் பார்த்துப் பயந்து விலகியதுண்டு. இன்றும் அங்கே போக முடிந்தால் ... ஒவ்வொரு மூலை முடுக்கையும் விளக்கிச் சொல்லுவேன்! 

அது நிற்க.

"தேவதாசிகளை அறிமுகப்படுத்தும் இடமாகவும் கோயில் செயல்பட்டு இருக்கிறது" என்று சொல்வது எனக்குச் சரிப்பட்டுவரவில்லை.

சிலப்பதிகார மாதவி கணிகை. அவள் சோழனின் தலைக்கோல் பெற்றவள். அவளுக்கும் கோயிலுக்கும் எந்தவகைத் தொடர்பும் இல்லை. "இறைவன்" எனப்பட்ட நாட்டுக் காவலன் பிறகு சமயச் சார்புடைய "இறைவன்" ஆனான் என்றால் ... அது வேற விஷயம்.  

அது கிடக்க.
தேவதாசி பற்றிய ஆய்வுக்கட்டுரை படிக்கவேண்டுமா? 
Dr. Saskia Kersenboom  (http://www2.warwick.ac.uk/fac/arts/theatre_s/postgraduate/maipr/staff/saskia_kersenboom.pdf) செய்த ஆராய்ச்சி பற்றி, குறிப்பாக அவர் எழுதிய நூலையும் (நித்யசுமங்கலி, தேவதாசி மரபு பற்றி) புரட்டிப் பார்க்கலாம்: http://www.amazon.com/Nityasumangali-Devadasi-Tradition-South-Asia/dp/8120803302
முன்பே தெரிவித்திருக்கிறேன். நான் ஒரு தேவதாசியிடம் சிறு வயதில் வீணைப் பயிற்சி பெற்றிருக்கிறேன் என்று. சிலருக்கு நினைவிருக்கலாம்.
மேலும் ...
மார் தட்டிப் பெருமை கொண்ட தமிழரசர்கள் பிற நாடுகளைப் போரில் வென்று அங்கேயிருந்து பிடித்துக்கொண்டு வந்து இங்கே பெருமையாக ... "கொண்டி மகளிர்" என்று சொல்லி, "வேளம்"ஏற்றி வைத்து அனுபவித்த கூட்டமே பின்னால் "தேவதாசி" என்று ஆனது. தேவதாசியைப் பற்றிப்  பேசும் எவரும் அந்தத் "தேவதாசி"களுக்கு யார் யார் "தேவதாசர்"கள் ஆனார்கள் என்று சொல்வதில்லை!

"தேவதாசி" என்றால் ஒரு பொருள். "கண்ணதாசன், பாரதிதாசன்" என்றால் இன்னொரு வகைப்பொருள். இதெல்லாம் தமிழக hypocrisy-யின் ஒரு பக்கம் மட்டுமே!

 


Kamala Devi

unread,
Apr 18, 2012, 12:42:54 PM4/18/12
to mint...@googlegroups.com
என்ன அருமையான ஈஷ்வர தரிசனம்.கட்டுரையை 2 முறை படித்தேன்.தொடர்க,
அடுத்தமாதம் இறுதியில் ஞானும் குடும்ப சகிதம் லண்டனில் இருப்பேன்.
அப்பொழுது அம்பலங்கள் வழிபாடில் நினைவில் கொள்கிறேன்
ஹ்ம்ம்
, யாரும் மறக்காமலிருந்தால் ,
அன்பு கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 18/4/12, N. Kannan <navan...@gmail.com> wrote:
--
Chitambaram.jpg

Kamala Devi

unread,
Apr 18, 2012, 12:45:34 PM4/18/12
to mint...@googlegroups.com
சேச்சி,
 மிக அருமையான விளக்கம். தேவதாசிகளில் பல ஸ்த்ரீகள் ரத்னங்கள்.
அம்பலப்பணிகட்காக தங்களை அர்ப்பனித்து பணம் ஈட்டிக்கொடுத்த பல பெண்களின் வரலாறு ஞாபகம் வருகிறது.
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 18/4/12, rajam <ra...@earthlink.net> wrote:

From: rajam <ra...@earthlink.net>
Subject: Re: [MinTamil] ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
To: mint...@googlegroups.com

Kamala Devi

unread,
Apr 18, 2012, 12:48:38 PM4/18/12
to mint...@googlegroups.com
Chitambaram.jpg

N. Kannan

unread,
Apr 18, 2012, 1:32:07 PM4/18/12
to mint...@googlegroups.com
ஸ்வாமி

தாசனுக்கும், தாசிக்கும் பொருள் தெரியாமலா எழுதுகிறேன்?

புரந்தரதாசன் எனும் பொழுதோ, தாசனுதாசன் எனும் பொழுதோ கள்ளச் சிரிப்பு
சிரிக்காத தமிழ் மனம் தேவதாசி என்றவுடன் ஏன் கிளு, கிளுக்கிறது. இருவரும்
அடிப்படையில் தேவனுக்கு தாசம் செய்பவர்கள்தானே!

கோயில் இதில் ஈடுபடவில்லையா? இன்று கூட நாட்டியாஞ்சலியை கோயிலில் வைத்து
ஏன் நடத்துகிறார்கள்? கஜூராஹோ கோயிலில் அதுவொரு சுற்றுலா ஐட்டம்!

ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
(என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்?

தேவதாசிகள் கோயில் நர்த்தகிகள் இல்லையா?

ஆயிரம் வருட மரபு ஐயா! மார்தட்டிப் பேசிக்கொள்ளலாம்!

ஆங்கிலேயருக்கு நன்றி. வணக்கம். :-)

நா.கண்ணன்

2012/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

N. Kannan

unread,
Apr 18, 2012, 1:36:11 PM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 Innamburan Innamburan <innam...@gmail.com>:

> சந்தானம் சாரிடம் ஒரு விண்ணப்பம்: இந்த வேலை வாய்ப்பு, ஆக்கப்பூர்வமில்லாத,
> பக்தியை இழந்த அத்துபடி வேலைகளால், யாருக்கு லாபம்? முதற்கண்ணாக, கோயில்
> ஒழுங்கை பரிபாலனம் செய்க. கோயில் சுற்றுப்புறத்தை துப்புரவாக வைக்க. குறைந்தது
> குப்பை போடாமல் இருக்க. மனதை, கொஞ்சம் தூசி தட்டி, தூய்மையுடன் கோயிலுக்கு
> செல்க.
>
> அது எல்லாம் முடியாது என்றால், நாத்திகனாக மாறிவிடுக.

அண்ணா! நச்சென்றால் நச்!

பக்கத்து நாடு, ஸ்ரீலங்கா. அங்கேயிருந்து தமிழ்நாடு வந்து நாம் கோயிலை
சிங்கப்படுத்தும் நிலை கண்டு கேலி செய்கிறார்கள். ஏனிந்த அவலநிலை. நாய்
கூட கோயிலில் சுவரில் ஒண்ணுக்கு அடிக்க யோசிக்கும். இவன்
யோசிப்பதில்லையே! கோயில் வெளிப்புரச் சுவர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட
கழிவறை. தமிழகமே ஏன் மணக்காது?

இவர்களை `ஆத்திகர்கள்` என்று யார் சொல்ல முடியும் அண்ணா?

நாகரீகம் கற்றுத்தந்தது இந்தியா என்கிறோம். எப்போது?

நா.கண்ணன்

rajam

unread,
Apr 18, 2012, 2:03:44 PM4/18/12
to mint...@googlegroups.com

> தேவதாசிகள் கோயில்
> நர்த்தகிகள் இல்லையா?
>

இல்லை என நினைக்கிறேன்.
நானே ஒரு "தேவதாசி"யிடம்
வீணை படித்திருக்கிறேன்.
அவர் ஒரு "நர்த்தகி" இல்லை.
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

geeyes

unread,
Apr 18, 2012, 2:06:09 PM4/18/12
to மின்தமிழ்

On Apr 18, 11:06 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> கோயிலென்று `திருநின்ற ஊர்` எனும் தலத்திற்கு கவிஞர் திலகபாமா அழைத்துச்
> சென்றார்.
>
> திரு நின்ற ஊரா?  அல்லது திருத்தங்கல் என்னும் ஊரா?


>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> 2012/4/17 N. Kannan <navannak...@gmail.com>
>

அது திருநின்றஊரா திருத்தங்கலா ?
(’திருத்தண்கால்’ என்று திருமங்கையும் பூதமும் சொல்கின்றனர்)
சிவகாசிக்கு அருகில் உள்ளது.
அங்கு இறைவன் பெயர்தான் : நின்ற நாராயணப் பெருமாள்.
விளக்கமோ திருத்தமோ தரவும்.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

geeyes

unread,
Apr 18, 2012, 2:26:48 PM4/18/12
to மின்தமிழ்

> திரு நின்ற ஊரா? அல்லது திருத்தங்கல் என்னும் ஊரா?
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 2012/4/17 N. Kannan <navannak...@gmail.com>
>

அது திருநின்றஊரா திருத்தங்கலா ?
(’திருத்தண்கால்’ என்று திருமங்கையும் பூதமும் சொல்கின்றனர்)
சிவகாசிக்கு அருகில் உள்ளது.

அங்குள்ள இறைவன் பெயர்தான் : நின்ற நாராயணப் பெருமாள்.

N. Kannan

unread,
Apr 18, 2012, 2:33:17 PM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 geeyes <gmsan...@gmail.com>:

> அது திருநின்றஊரா திருத்தங்கலா ?
> (’திருத்தண்கால்’ என்று திருமங்கையும் பூதமும் சொல்கின்றனர்)
> சிவகாசிக்கு அருகில் உள்ளது.
> அங்கு இறைவன் பெயர்தான் : நின்ற நாராயணப் பெருமாள்.
> விளக்கமோ திருத்தமோ தரவும்.
>

அன்பின் திரு. ஜி.ஸன்தானம்

அது திருத்தங்கல்தான். கிருஷ்ணனின் பேரனான அநிருத்தன் திருமணத்திற்காக
திருவுடன் தங்கிய இடம். மற்றவர்கள் பெருமாளின் இட/வல புறம் உள்ளனர்
(தெரியாது நேரே பார்க்கின்).

திருநின்ற பெருமாள் நின்ற ஊர் திருநின்ற ஊர் என்று சொல்லிவிட்டேன். தவறுதான் :-)

நா.கண்ணன்

N. Kannan

unread,
Apr 18, 2012, 2:54:33 PM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 rajam <ra...@earthlink.net>:

>
>> தேவதாசிகள் கோயில் நர்த்தகிகள் இல்லையா?
>>
>
> இல்லை என நினைக்கிறேன்.  நானே ஒரு "தேவதாசி"யிடம் வீணை படித்திருக்கிறேன்.
> அவர் ஒரு "நர்த்தகி" இல்லை.
>


தேவதாசி ஒழிப்பு நடைபெற்று இவ்வழக்கம் முடியும் தருவாயில் தாங்கள்
சந்தித்துள்ளீர்கள். `தேவர் அடியார்கள்` என்று பெயர் வைத்துக் கொண்டோர்
கோயிலோடு சம்பந்தமில்லை என்று சொல்வது முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது
போல் படவில்லையா?

கை கோர்க்க வேண்டிய சமயத்தில் கை விலக்குவது ஏனோ? :-(

நா.கண்ணன்

rajam

unread,
Apr 18, 2012, 3:14:40 PM4/18/12
to mint...@googlegroups.com

On Apr 18, 2012, at 11:54 AM, N. Kannan wrote:

> 2012/4/18 rajam <ra...@earthlink.net>:
>>
>>> தேவதாசிகள் கோயில்
>>> நர்த்தகிகள் இல்லையா?
>>>
>>
>> இல்லை என நினைக்கிறேன்.
>> நானே ஒரு "தேவதாசி"யிடம்
>> வீணை படித்திருக்கிறேன்.
>> அவர் ஒரு "நர்த்தகி" இல்லை.
>>
>
>
> தேவதாசி ஒழிப்பு
> நடைபெற்று இவ்வழக்கம்
> முடியும் தருவாயில்
> தாங்கள்
> சந்தித்துள்ளீர்கள்.



உண்மை!


> `தேவர் அடியார்கள்`
> என்று பெயர் வைத்துக்
> கொண்டோர்
> கோயிலோடு சம்பந்தமில்லை
> என்று சொல்வது
> முழுப்பூசணியை சோற்றில்
> மறைப்பது
> போல் படவில்லையா?



எனக்கு அதுபற்றித்
தெளிவில்லை.
எனவே மேற்கொண்டு சொல்லத்
தெரியவில்லை.


>
> கை கோர்க்க வேண்டிய
> சமயத்தில் கை விலக்குவது
> ஏனோ? :-(



கைவிலக்க எனக்கு
மனமில்லை; அறிவும் இல்லை!



Sridharan Raghavan

unread,
Apr 18, 2012, 10:34:21 AM4/18/12
to mint...@googlegroups.com
ஐயா, தாங்கள் சென்ற இடம் திருத்தங்கல். எனக்கும் அதே மடப்பள்ளி பரிசாரகர் தான் தரிசனம் செய்துவைத்தார். 

sridharan



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

N. Kannan

unread,
Apr 18, 2012, 4:59:56 PM4/18/12
to mint...@googlegroups.com
2012/4/18 Sridharan Raghavan <rsridh...@gmail.com>:

> ஐயா, தாங்கள் சென்ற இடம் திருத்தங்கல். எனக்கும் அதே மடப்பள்ளி பரிசாரகர் தான்
> தரிசனம் செய்துவைத்தார்.
>

போச்சுடா! அந்த பட்டாச்சாரியருக்கு பிறகு என்னதான் வேலை? :-)

க.>

rajam

unread,
Apr 18, 2012, 7:38:00 PM4/18/12
to mint...@googlegroups.com
1. ராஜராஜனுக்கு முன்பே "கொண்டி மகளிர்" பற்றி, சங்க இலக்கியத்திலும் மணிமேகலையிலும் குறிப்பு உண்டு. இவர்களுக்கும் கோயிலுக்கும் எந்தத் தொடர்பும் இலக்கியத்தில் காட்டப்படவில்லை.
2. இவர்கள் நாடுபிடி மன்னர்களால் கடத்திக்கொண்டுவரப்பட்டவர்கள்.  
3. மாதவியின் பெருமைகளைப் பற்றிப் படித்தால் ... அவள் கோயிலைச் சேர்ந்தவள் இல்லை. நடனம், யாழ் இசைத்தல் இன்ன பிற கலைகளில் தேர்ந்திருந்தாள் என்று தெரிகிறது.
4. எப்போது "தேவதாசி" என்று இவர்களெல்லாம் குறிக்கப்பட்டார்கள் என்று தேடிப்பார்க்கலாம்.

எனவே நடனத்துக்கும் "தேவதாசி"க்கும் கோயிலில் "குடும்பம்" நடத்துவது பற்றிச் சொல்வதற்கும் பொத்தாம்பொதுவாகத் தொடர்பு காட்டுவது நல்ல ஆய்வு இல்லை.

தாவூத் அலியின் ஒரு கட்டுரையை அண்மையில் சுபாவுக்கு அனுப்பினேன். நேரம் இருக்கும்போது அவர்கள் அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் தாவூத் அலியின் கட்டுரை இடைக்கால நிலை பற்றிப் பேசுகிறது. 

On Apr 18, 2012, at 10:32 AM, N. Kannan wrote:

rajam

unread,
Apr 18, 2012, 8:11:37 PM4/18/12
to mint...@googlegroups.com
இந்த பவளஸ்ரீப் பொண்ணு ஒரு "எல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல்!" இது தலெய்ல நல்லா மொளகா அரைக்கலாம், நெறெய நெறெய அரைக்கலாம்! :-)

Hari Krishnan

unread,
Apr 18, 2012, 8:20:30 PM4/18/12
to mint...@googlegroups.com


2012/4/18 rajam <ra...@earthlink.net>
தேவதாசிகள் கோயில் நர்த்தகிகள் இல்லையா?


இல்லை என நினைக்கிறேன்.  நானே ஒரு "தேவதாசி"யிடம் வீணை படித்திருக்கிறேன்.
அவர் ஒரு "நர்த்தகி" இல்லை.


அவர் என்ன பொருள் தெரியாமாலா எழுதுகிறார்?

rajam

unread,
Apr 18, 2012, 9:27:16 PM4/18/12
to mint...@googlegroups.com, Hari Krishnan
அவருக்குத் தெரியாததா, ஹரீ!

 
அவர் "ஆலயத்தில்" பலரும் நந்தனாரே!

Dhivakar

unread,
Apr 19, 2012, 12:33:23 AM4/19/12
to mint...@googlegroups.com
ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
(என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்? 

அணுகினான்!!!

கண்ணன் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதுதான் நல்லது என் நினைக்கிறேன். 

ராஜராஜசோழன் அந்த தாசிகளில் ஒருத்தியையே (அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) மணந்து ராணியாகவும் ஆக்கினான். தேவதாசிகள் அந்தக் காலத்தில் அவர்கள் இருந்த நிலை வேறு. தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் காமநோக்கால் அணுகுவது என்பது சோழர்காலம் வரை தெய்வக்குற்றம் போலக் கருதப்படுவது - எத்தனையோ ஆய்வுக்கட்டுரைகள் இதைப்பற்றி வந்துவிட்டன.

தேவதாசிகள் காலத்தின் கொடுமையால் வேறுவிதமாகப் பார்க்கப்பட்டனர். ஒரு தேவதாசியால் ஸ்ரீரங்கமே தலைநிமிர்ந்து நின்றது. இஸ்லாமியப் படையெடுப்பின் போது அவள் தியாகம் இன்றும் அங்கே மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. இன்றும் கூட அவர்களின் சில குடும்பங்களில் சாவு ஏற்பட்டால் ஸ்ரீரங்கத்துக் கோயிலிலிருந்து விறகு போன்றவை அனுப்பப்படும்.

கோயில்களில் தேவதாசிகளின் பங்கு மிக முக்கியமானது. எல்லா கோயில்களும் தேவதாசிகள் வாழ்வுக்காக நிலம் கொடைகள் பெற்றுள்ளன. இங்குள்ள் சிம்ஹாசலம் கோயிலில் கூட தேவதாசிகளுக்கு அவர்கள் சேவைக்காகவும், நடனத்துக்காகவும் கொடை வழங்கிய கல்வெட்டுகள் ‘ஏராளமாக’ தெலுங்கு, பிராக்ருத மொழியில் உள்ளன.

ஏற்கனவே இந்த புதிய ஆண்டுக்கென என்னுடைய ஒரு கட்டுரையை தமிழ் மரபில் சுபா பதித்துள்ளார். அது கந்தாடை மணவாள ஐயங்கார் பற்றிய செய்திகள் கொண்டது. இப்போது இங்கே இன்னொர்ரு கூடுதல் செய்தியும் தருகிறேன். கந்தாடை மணவாள ஐயங்கார் முதன் முதலாக கோயிலில் திருவேங்கடவன் முன்பு பாட்டும் நடனமும் ஆடுவதற்கு தேவதாசிகளை காஞ்சிபுரத்திலிருந்தும் ஸ்ரீரங்கத்திலிருந்தும் வர்டவழைத்துப் போஷித்தார் (ஆதாரம தி.தே கல்வெட்டுக் கட்டுரைகள் மற்றும் திரு பி.வி.ஆர்.கே பிரசாத் (முன்னால் ஆலய நிர்வாக அதிகாரி) அவர்களின் திருமலை சரித்திரம்).

தேவதாசிகளின் ஒரு காலத்தில் மிகவும் உன்னத, மிகவும் மேற்பட்ட ’சாதி’யாக இருந்தனர். காலம் மாறிப்போச்சு.

திவாகர்

2012/4/18 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shylaja

unread,
Apr 19, 2012, 12:50:00 AM4/19/12
to mint...@googlegroups.com


2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>
ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
(என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்? 

அணுகினான்!!!

கண்ணன் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதுதான் நல்லது என் நினைக்கிறேன். 

ராஜராஜசோழன் அந்த தாசிகளில் ஒருத்தியையே (அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) மணந்து ராணியாகவும் ஆக்கினான். தேவதாசிகள் அந்தக் காலத்தில் அவர்கள் இருந்த நிலை வேறு. தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் காமநோக்கால் அணுகுவது என்பது சோழர்காலம் வரை தெய்வக்குற்றம் போலக் கருதப்படுவது - எத்தனையோ ஆய்வுக்கட்டுரைகள் இதைப்பற்றி வந்துவிட்டன.

தேவதாசிகள் காலத்தின் கொடுமையால் வேறுவிதமாகப் பார்க்கப்பட்டனர். ஒரு தேவதாசியால் ஸ்ரீரங்கமே தலைநிமிர்ந்து நின்றது. இஸ்லாமியப் படையெடுப்பின் போது அவள் தியாகம் இன்றும் அங்கே மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. இன்றும் கூட அவர்களின் சில குடும்பங்களில் சாவு ஏற்பட்டால் ஸ்ரீரங்கத்துக் கோயிலிலிருந்து விறகு போன்றவை அனுப்பப்படும்...//
 
சரியாக சொன்னீர்கள் திவாகர் வெள்ளயம்மா என்ற தேவதாசியின் தியாகம்  உன்னதமானது  வெள்ளைகோபுரமென்று அதனை என் அப்பாவின் உதவியுடன்  கதை வடித்தேன்  யாரும் விரும்பினால் இங்கே அதை இப்போதே அளிப்பேன். 



--
நாளும் பெரியபெருமாள் அரங்கர் நகைமுகமும்
தோளும், தொடர்ந்து என்னை ஆளும் விழியும்; துழாய் மணக்கும்
தாளும், கரமும், கரத்தில் சங்கு, ஆழியும், தண்டும், வில்லும்
வாளும் துணை வருமே தமியேனை வளைந்துகொண்டே
 
 
 
 
 
அன்புடன்
ஷைலஜா

Nagarajan Vadivel

unread,
Apr 19, 2012, 1:09:16 AM4/19/12
to mint...@googlegroups.com
இதெல்லாம் பாலியல் கோணங்கித்த்தனத்தின் விளைவால் காமாலைக் கண்ணால் ஆண்குலம் கண்ட காட்சி.  பென்ணென்பவள் இறைவனின் படைப்பு ஆணைவிட அதிக நளினத்துடன் உருவான உயிர்
குமுகச் சங்கிலி மரபுவழி மரபணுக்களாலும் கருத்துப் பரிமாற்றத்தாலும் தொடர இயற்கையின் படைப்பு பெண் என்பதெல்லாம் போய் பெண் என்பவள் ஒரு பொருள் ஒரு ஜடம் துய்க்கும் சந்தைப் பொருள் என்று கருத்துப்பிழையை உருவாக்கி அதைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட நினக்கும் குறுகிய மனப்பாங்கு
தமிழகத்தில் மானுடவியலார் அதிகம் இருந்தது பென் தெய்வங்களே என்றும் பெண்கள் ஆளுமையின் இரவல் பிரகாசிகளாகவே ஆண்கள் விளங்கி வந்தனர் என்றும் உயர் கடவுளர் தென்னாட்டில் பரவத் துவங்கியதும் ஆண் கடவுளர் முதன்மை பெற்றனர் என்றும் பெண் கடவுளர் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக 1920 களில் வெளியடப்பட்ட நூலும் (தென் இந்தியாவின் கிராம தேவதைகள்) அதே தலைப்பில் ஒரு முனவர் பட்ட ஆய்வறிக்கையும் என்னிடமுள்ளது
குமுக மாற்றத்தில் தாசி என்ற இந்தப் பிரிவு தமிழகத்தில் எப்போது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்
1980-களில் அமெரிக்காவில் இருந்து இரண்டு மானிடவியல் அறிஞர்கள் வந்தனர்.  அவர்கள் நோக்கம் தஞ்சாவூரில் வாழ்ந்த 90 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தேவதாசிகளைச் சந்தித்து ஆய்வுத் தகவலைப் பெற வேண்டும் என்பது
இங்கே பெண் உயர்ந்தால் துலாபாரத்தில் ஆண்கள் பக்கம் இறங்கிவிடும் என்று என்னும் என்ன இருக்கும் வரை ஒன்றும் நடக்கப்போவதில்லை.  வெறும் சீண்டல் குறும்புகளைத் தவிர
40 ஆண்டுகளில் சீனம் பெண்களை உயர்த்திப் பிடித்ததுபோல் தமிழகத்தில் நடக்குமா என்பது கேள்விக்குறியே
நாகராசன்

2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>

Dhivakar

unread,
Apr 19, 2012, 1:30:55 AM4/19/12
to mint...@googlegroups.com
எங்கள் சீரங்கத்து சிங்கியே (சிங்கத்தின் பெண்பால்)

அனுப்பி உதவுக.. ஆவலாகப்படிக்கிறோம்.

2012/4/19 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Apr 19, 2012, 1:47:15 AM4/19/12
to mint...@googlegroups.com

நம்ம ஆழ்வார் எழுதிய நலம்விரும்பியே!!
 
சீரங்கத்து சிங்கியே  என்பதை சுருக்கினால் சீசி என்றுவருகிறதே  அடுத்தமடலில் பெயரை மாற்றுக:)
இப்படி யாரும் கேட்கமாட்டார்களா என்றுதானே ஆசைப்பட்டேன்?:) அளிக்கிறேன் தனி இழையில் அதற்குமுன்....
நான் சின்ன வயதில் சந்தித்த  தேவதாசிப்பெண்மணியைப்பற்றி சிலவரிகளும்  அந்தப்பரம்பரை நின்றுபோன வருத்தம்பற்றியும் பகிர்ந்துகொள்ள ந்னைக்கிறேன்..
2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>

shylaja

unread,
Apr 19, 2012, 2:10:17 AM4/19/12
to mint...@googlegroups.com
அந்த தெருவுக்குப்பேரே  குறுக்குத்தெரு(கொஞ்சம் பேர் மாத்தி இருக்கிறேன்  ஊர்க்காரர்களுக்கு எது என புரிந்துவிடும்)
குறுக்குத்தெருவில் சின்ன சந்து. அதில் உள்ளடங்கிய ஒரு வீடு அங்கே எழுபதைக்கடந்த அந்தப்பெண்மணியை என் பதினாலாவது வய்தில் சந்தித்தேன். அவள் வீட்டருகே என் தோழி என்னோடு பள்ளியில் படித்துக்கொண்டிருந்ததால் அவள் அந்தப்பெண்மணியைப்பற்றி போற்றி சொல்லியதால் பார்க்க ஆவலானது.வீட்டில் அங்குபோவதாய் சொல்லவில்லை சொன்னால் விடமாட்டார்கள் என்று தெரியும்:)
 
இன்பக்கனாஒன்று கண்டேன்
என்று ஊஞ்சலில் அமர்ந்தபடி  கூந்தலை(ஆறடிக்கு மயில்தோகைபோல! நரையாவது ஒன்றாவது எழுபதிலும் எழிலாகவே இருந்தது) முதுகில் பரப்பியபடி  துளிக்கூட பிசிறில்லாமல் பாடிக்கொண்டிருந்தார். கனாதான்  ஆனந்தவல்லி என்ற அந்த பெண்மணியைப்போல தேவதாசிகளாய் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு கனவுதான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலிருந்து வாழ்க்கையைக்கனவாகவே கொண்டு பிறவியுடன் சம்பந்தப்படட் இசை நாட்டியத்துடன் வாழ்ந்தவர்கள் ஆனந்தவல்லியைப்போன்றவர்கள்.  சமூகத்தின் அலட்சியத்தையும் பரிகாசத்தையும் மீறி கலையை மூச்சாகக்கொண்டு  பிரபலம் அடைந்த சிலரும் உண்டு. 
 
எதுக்குப்பாப்பா என்னைப்பார்க்க இங்கிட்டு வந்தே? வீட்ல திட்டப்போறாங்கம்மா?
என்றார் ஆனந்தவல்லி விரக்தியாய் சிரித்தபடி..
 
 
இல்லங்கம்மா  வீட்ல சொல்லமாட்டேன்..ஆனா  விஜி(என் தோழி) உங்களைப்பற்றி  பெருமையா சொன்னா...பார்க்க அழகு பாட்டில் குயில் ஆட்டத்தில் மயில் அப்படீன்னு சொன்னா..உங்களைப்பத்தி சொல்லுங்களேன்..
 
எல்லாம்  அந்தக்காலம்மா...எங்க பரம்பரையே ஆன்மீகத்தோட தொடர்பு கொண்டது.. எங்க நாட்டியம் கோயில்களிலே வழிபாட்டின் ஒரு அங்கமா இருந்திச்சி.. ஆடும் தேவதாசிக்குத்தான் அர்த்தமண்டபத்துவரை பூர்ணகும்பம் ஏந்தும் உரிமை உண்டு இந்தவெள்ளைக்காரங்க ஆட்சிக்கு வந்தப்போதான்  எங்கள்மேல சமூகத்தின்பார்வையே வித்தியாசமாகிப்போனது..கடவுளுக்கு அடியார்களாய் இறைசேவைக்கு எஙக்ளை அர்ப்பணிச்சிக்கிறதை ஒரு சில தேவதாசிகளின் போக்குனால கேவலமா பிரசாரம் பண்ணிட்டாங்க.. கோவில் நாட்டியத்தோட விபசாரத்தை சம்பந்தப்படுத்தி ஆடலையே ஆலயவழிபாட்டிலேருந்து நீக்கணும்னு சர்ச்சை கிளம்பினது சட்டம் 1930லவந்ததுல 5000ஆண்டுகளா இருந்த பாரம்பரியம் நின்னுபோயிட்டது. எங்க பாட்டிகாலத்திலியே கோவில்ல ஆடறது நின்னுபோயிடிச்சி ஆனாலும் தேவதாசிபரம்பரைங்கறதால் இப்படி இன்னமும் விடாம பாட்டு நடனம் கத்துக்கிட்டதை  ்தேடிவரவங்களுக்கு சொல்லித்தரோம்... ஆனாலும் உள்ளூர்ல யாரும் வரதில்ல  டவுன் பொண்ணுங்கதான்  வராங்க...
 
அதற்குமேல் அந்தவயதில் அந்த பெண்மணியிடம் எனக்குபேசதெரியவில்லை.
 
 
 
 
இசைநாட்டியத்தின் பெட்டகமாக இருந்தவர்களிடமிருந்து கலையைக்கற்ற வெளி உலகம் இன்று அவர்களை எண்ணிப்பார்க்காதது மட்டுமல்ல நிராகரித்தும் விட்டது.
‘மாதவி பிறந்தகுலத்தில்பிறந்தவள் நான்’ என்கிறார்  இந்திரா ராஜன்  சென்னையில் நாட்டியப்பள்ளி நடத்துகிறார் பல பிபலநடனமங்கையர்கள் இவரது நாட்டியக்கூடத்திலிருந்து வந்தவர்கள்.. 
 

2012/4/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--

Kamala Devi

unread,
Apr 19, 2012, 2:33:00 AM4/19/12
to mint...@googlegroups.com
அன்பின் திவாகர்,
இவிடெ ஞானும் சில கருத்துக்களைச்சொல்லாலாமா, கூடாதா, என்று பலமுறை யோசித்தபிறகே எழுதுகிறேன்
தேவர்க்கு அடியாள், எனும் சொல் தமிழில் உயரிய சொல் கமலம், என் எனக்கு விளக்கியவர், என்னுடன் கல்வெட்டு ஆய்வில் உதவிய புலவர் கிருஷ்ணமாச்சாரி அவர்கள்.சினிமாவிலும் கதைகளிலும் சொல் திரிபு மாறி
கூடா விளியாக மாறியதற்கு காரணம், அப்பெண்களை இழிமைப்படுத்திப் பார்ப்பதற்குக் காரணம் எந்தா தெரியுமா?
முக்காத்துட்டு சின்னம்மா, எனும் அப்பாவிக்குழந்தையின் பேரில் விழுந்த அபாண்டம்
.நூல்,,--தாசி தவிலடித்தாளா?--ஆசிரியர்-நாராயண சாஸ்திரி.17ம் நூற்றாணு கலவெட்டிலும் இச்செய்தி உண்டு
அந்த பெண்கள் பாவம் , பாவம், திவாகர், அவர்கள் ஈஷ்வர சமர்ப்பணம் என்றால் சரீரமும் அர்ப்பணம் என்றே நம்பினார்கள், கேரளத்திலும் இந்த
பெண்கள் உண்டு.அவர்கள் பணத்தால் ஸ்ரீ கோவிலில் செங்கல் வாங்கிய
கதைகள் எல்லாம் எழுதினால் கண்ணீர் வரும். வரலாறு படிக்கும்போது, நெஞ்சு விம்முகிறது
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Thu, 19/4/12, Dhivakar <venkdh...@gmail.com> wrote:

From: Dhivakar <venkdh...@gmail.com>
Subject: Re: [MinTamil] ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
To: mint...@googlegroups.com

Dhivakar

unread,
Apr 19, 2012, 5:09:55 AM4/19/12
to mint...@googlegroups.com
ஏற்கனவே இந்த புதிய ஆண்டுக்கென என்னுடைய ஒரு கட்டுரையை தமிழ் மரபில் சுபா பதித்துள்ளார். அது கந்தாடை மணவாள ஐயங்கார் பற்றிய செய்திகள் கொண்டது. இப்போது இங்கே இன்னொர்ரு கூடுதல் செய்தியும் தருகிறேன். கந்தாடை மணவாள ஐயங்கார் முதன் முதலாக கோயிலில் திருவேங்கடவன் முன்பு பாட்டும் நடனமும் ஆடுவதற்கு தேவதாசிகளை காஞ்சிபுரத்திலிருந்தும் ஸ்ரீரங்கத்திலிருந்தும் வர்டவழைத்துப் போஷித்தார் (ஆதாரம தி.தே கல்வெட்டுக் கட்டுரைகள் மற்றும் திரு பி.வி.ஆர்.கே பிரசாத் (முன்னால் ஆலய நிர்வாக அதிகாரி) அவர்களின் திருமலை சரித்திரம்). 

மன்னிக்கவும். பெயரில் ஒரு சிறு திருத்தம்.

கந்தாடை மணவாள ஐயங்கார் அல்ல, கந்தாடை ராமானுஜ ஐயங்கார் எனப் படிக்குமாறு வேண்டுதல்.


2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>

N. Kannan

unread,
Apr 19, 2012, 9:41:10 AM4/19/12
to mint...@googlegroups.com
ஆகா! கூட்டுச் சேர்ந்துட்டாங்கப்பா! நம்ம அக்கா என்னைப் பொத்தாம் பொது என்று சொல்வது ஆச்சர்யம். Declining the most obvious seems very strange here! Look at the following passage:

Genesis and growth of Devadasi system

There are many opinions about the genesis and growth of this system. For a comprehensive understanding of the dominant schools of thoughts, many factors have to be taken into consideration while trying to trace its origin and development. Factors like religious beliefs, caste system, male domination and economic stress have been recognized as the stimulants behind the perpetuation of this phenomenon.

The beginning can perhaps be mapped out in the inscription found in temples. The word Emperumandiyar which was used in the sense of Vaishnavas before 966 A.D. got the meaning of dancing girls, attached to Vishnu temples, in inscriptions of about 1230-1240 A.D. in the time of Raja Raya III. [Raghavacharya: I, 118]. In many quarters the emergence of the Devadasies has been linked to the downfall of Buddhism in India that the Devadasies were Buddhist nuns can be deduced from many evidences: They are unknown to ancient India. Jaatakas, Kautillya or Vatsayana do not mention them, but later Puranas found them useful. The system started only after the fall of Buddhism and records about them start appearing around 1000 A.D. [Bharatiya Sanskruti Kosh, IV, 448]. It is viewed that the Devadasies are the Buddhist nuns who were degraded to the level of prostitutes after their temples were taken over by Brahmins during the times of their resurgence after the fall of Buddhism.

Devadasi Drummer- Miniature Painting
The Devadasi system was set up (Times of India report dated10-11-1987) as a result of a conspiracy between the feudal class and the priests (Brahmins). The latter, with their ideological and religious hold over the peasants and craftsmen, devised a means that gave prostitution a religious sanction. Poor, low-caste girls, initially sold at private auctions, were later dedicated to the temples. They were then initiated into prostitution.

Of course it will create a clan war here!! :-)

But fact is a fact.

http://www.sikhspectrum.com/052007/devadasi.htm

Please Google Devadasi and see yourself!

N.Kannan



2012/4/19 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Apr 19, 2012, 9:50:38 AM4/19/12
to mint...@googlegroups.com
2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>:

> ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
> (என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்?
>
> அணுகினான்!!!
>
> கண்ணன் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதுதான் நல்லது என் நினைக்கிறேன்.
>
> ராஜராஜசோழன் அந்த தாசிகளில் ஒருத்தியையே (அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க)
> மணந்து ராணியாகவும் ஆக்கினான். தேவதாசிகள் அந்தக் காலத்தில் அவர்கள் இருந்த
> நிலை வேறு. தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் காமநோக்கால் அணுகுவது
> என்பது சோழர்காலம் வரை தெய்வக்குற்றம் போலக் கருதப்படுவது - எத்தனையோ
> ஆய்வுக்கட்டுரைகள் இதைப்பற்றி வந்துவிட்டன.
>

மன்னிக்க வேண்டும் திவாகர்!

நான் இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படி எழுதினேன். அவரது முன்னாளைய
கணையாழி கட்டுரை ஒன்றில் ராஜராஜன் விஷம் வைத்த இனிப்பு உள்ள தட்டு ஒன்றை
வைத்து அவனுக்கு சுகம் தந்த பின் தேவதாசிப் பெண்களை உண்ணச் செய்வானாம்.
இது ஒருவகையான ஆட்சித்திமிர். (depends on her luck she will survive or
die) அக்கட்டுரையை சென்னையில் உள்ளோர் யாராவது கண்டு சொன்னால் நலம்!

Of course, இது உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும். சரித்திர
வாசிப்புக்களில் இப்படியும் உண்டு. அவ்வளவுதான்.

சரி, இந்த இழையின் நோக்கம் தேவதாசிகள் அல்ல. விரும்புவோர் தனியிழையில்
சிந்திக்கலாம்!

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Apr 19, 2012, 9:50:53 AM4/19/12
to mint...@googlegroups.com
One more view
Inline image 2Inline image 3
Nagarajan

2012/4/19 N. Kannan <navan...@gmail.com>
devadasi3.jpg
devadasi2.jpg

N. Kannan

unread,
Apr 19, 2012, 10:16:59 AM4/19/12
to mint...@googlegroups.com
2012/4/19 shylaja <shyl...@gmail.com>:

> எல்லாம்  அந்தக்காலம்மா...எங்க பரம்பரையே ஆன்மீகத்தோட தொடர்பு கொண்டது.. எங்க
> நாட்டியம் கோயில்களிலே வழிபாட்டின் ஒரு அங்கமா இருந்திச்சி.. ஆடும்
> தேவதாசிக்குத்தான் அர்த்தமண்டபத்துவரை பூர்ணகும்பம் ஏந்தும் உரிமை உண்டு

> இசைநாட்டியத்தின் பெட்டகமாக இருந்தவர்களிடமிருந்து கலையைக்கற்ற வெளி உலகம்


> இன்று அவர்களை எண்ணிப்பார்க்காதது மட்டுமல்ல நிராகரித்தும் விட்டது.
> ‘மாதவி பிறந்தகுலத்தில்பிறந்தவள் நான்’ என்கிறார்  இந்திரா ராஜன்  சென்னையில்
> நாட்டியப்பள்ளி நடத்துகிறார் பல பிபலநடனமங்கையர்கள் இவரது
> நாட்டியக்கூடத்திலிருந்து வந்தவர்கள்..
>

இந்த இரண்டு பாயிண்டும் முனைவர் ராஜம் அவர்களுக்கு பதில் சொல்லிவிடுகின்றன.

நாட்டியத்திற்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பு என்பது சிந்து சமவெளி
காலத்திலிருந்து உள்ளதாக பேரா.நாகராஜன் சுட்டி காட்டுகிறது.

khajuraho dance festival என்று கூகுள் செய்தால் மிக அழகிய படங்கள்
கிடைக்கும். பிரபல ஒடிசி வித்வான் கேளுசரண் மகோபாத்யா கஜூராஹோ/கொனாரக்
கோயில் சிற்பங்களிலிருந்துதான் தன் நடன அடைவுகளை அமைக்கிறார் என்று
சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தில் கூட பெருவுடையார் கோயில் கர்ணங்களைப் பார்த்து நடனமாடிய ஒரு
நர்த்தகியுண்டு. எம்ஜிஆர் காலத்தில் அவர் அரசு நர்த்தகியாக இருந்தார்.

தேவதாசிகளின் கடைசிப் பெண் என்று ஒருவரை சமீபத்தில் போரூர் கோயிலில்
நடந்த நடனாஞ்சலியில் சந்தித்தேன்.

நம் ஆலயம் புனிதமானதுதான். ஆயினும் கோயிலில் கோட்டான்கள்
புகுந்துவிட்டதால்தான் ஒரு பராசக்தி படம் தோன்றியது. உள்ளதை உள்ளபடி
பார்க்கக் கற்றுக் கொண்டால் மேற்கொண்டு பிழைகள் நடைபெறாமல் தவிர்க்கலாம்.


அவ்வளவுதான்.

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Apr 19, 2012, 11:19:15 AM4/19/12
to mint...@googlegroups.com
தமிழகத்தில் கூட பெருவுடையார் கோயில் கர்ணங்களைப் பார்த்து நடனமாடிய ஒரு
நர்த்தகியுண்டு. எம்ஜிஆர் காலத்தில் அவர் அரசு நர்த்தகியாக இருந்தார்.


http://www.youtube.com/watch?v=OuDL1hRC43Y&feature=related

Nagarajan
2012/4/19 N. Kannan <navan...@gmail.com>
2012/4/19 shylaja <shyl...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Apr 19, 2012, 11:21:02 AM4/19/12
to mint...@googlegroups.com
ஸ்வர்ணமுகி?????

Dhivakar

unread,
Apr 19, 2012, 12:31:14 PM4/19/12
to mint...@googlegroups.com
அன்புள்ள டாக்டர் கண்ணன் 

இந்தக் கோயில் பதிவில் ராஜராஜன் பெயரில்லாமல் நிறைவில்லை. தமிழகத்தில் உள்ள அத்தனை கோயிலகளையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு ராஜராஜேஸ்வரம் மட்டுமே இன்று இருந்திருந்தால் நீங்கள் பாராட்டும் அத்தனை மேற்கத்தியரும் இந்தக் கோயில்தான் உலகத்திலேயே அதிசயமானது என்று ஒட்டு மொத்தமாக சொல்லியிருப்பார்கள். 

ராஜராஜன் பற்றிய எதிர்மறை கருத்துகளுக்கு நான் படித்தவரையில் எந்தவித ஆதாரமில்லை.ஒரு பெரிய கோயில் கட்டுவது என்றால் சாமானியமானது அல்ல. இன்றைய இணைய உலகில் ராஜராஜனைப் பற்றி அவதூறுகள் பரவி வருகின்றன. இளப்பமாகப் பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். எதிரிகளும் குறை சொல்லத் தயங்கிய மன்னனாகத்தான் ராஜராஜன் இருந்தான். அவனைப் பற்றிய எதிர்மறையான கல்வெட்டுகளை எதிர்கள் எனச் சொல்லக்கூடிய ராட்டிரகூடர்களோ ஏனைய மன்னர்களோ அண்டை நாட்டிலும் கூட எடுக்கவில்லை..   நாளுக்கு ஒன்று என கல்வெட்டு மூலம் நிகழ்வுகளைச் சொன்னவன்.. தன் கடை வருடங்களை சாமானியமாகக் கழித்தவன். இவன் சிற்பங்கள், ஓவியங்கள் மட்டுமே போதும்.. இவன் எப்படிப்பட்டவன் என்பதை ஊர் சொல்ல.. 

ராஜராஜன் இறப்புக்குப் பிறகு அவனைத் தெய்வமாகப்போற்றியவர்கள் பற்றிய கல்வெட்டுகள் உண்டு.  தெய்வத்துக்கு சமானமானமாக தினம் வீதி உலா கூட அவன் சிலைக்கு உண்டு.

இவனல்லவோ தமிழன் நெஞ்சத்தை தலை நிமிரச் செய்கின்றவன்.. இவனைப் பற்றி எதிர்மறையாக சொன்னால் எனக்குப் பிடிக்காது என எழுதியுள்ளீர்கள். ராஜராஜன் என அல்ல, யாரைப் பற்றியுமே தகுந்த ஆதாரமிலாமல் எழுதினால் எனக்குப் பிடிக்காது. ராஜராஜனைப் பற்றி எழுதுவதற்கு முன்னால் இணையத்தைத் தேடுவதற்குப் பதிலாக அவன் கல்வெட்டுகள், அவனைப் பற்றிய இலக்கியங்கள், அவன் சந்ததிகள் எழுதிய சரித்திரங்கள் படித்திட வேண்டும். 

கோயில் என்றால் ராஜராஜன், ராஜராஜன் என்றால் கோயில்.

Of course I agree ராஜராஜன் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் உங்களுக்கு அவனை ஏன் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஏன் ராஜராஜைப் பற்றிய எதிர்மறைக் கருத்தை மிந்தமிழில் பதிக்கவேண்டும்?

கடைசியில் ஒன்று. எனக்கு எல்லாம் தெரியும் என்ற வகையில் எழுதுவதில்லை. ஆனால் தெரிந்து தெரிந்து ஒரு மாபெரும் மன்னன் இப்படிப் பேசப்படுவது சரியில்லை. இனி இந்தப் பதிவில் என் கருத்து இருக்காது என்ற உறுதியும் கூடவே..

2012/4/19 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Apr 19, 2012, 1:05:09 PM4/19/12
to mint...@googlegroups.com
2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>:

> ராஜராஜன் என அல்ல, யாரைப் பற்றியுமே தகுந்த ஆதாரமிலாமல் எழுதினால் எனக்குப் >பிடிக்காது.

ஐயா நான் என்ன செய்வது! இந்திரா பார்த்தசாரதி முறையாகப் பட்டம் பெற்று
டெல்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவர் எழுத்தை
நம்பிச் சொன்னேன். அதில் தவறு இருக்க வாய்பில்லை (I do not question his
integrity).


> Of course I agree ராஜராஜன் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் உங்களுக்கு அவனை
> ஏன் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஏன் ராஜராஜைப் பற்றிய
> எதிர்மறைக் கருத்தை மிந்தமிழில் பதிக்கவேண்டும்?
>

அப்படியென்றில்லை. பொதுவாக nobody is perfect. இராஜராஜன் அப்பழக்கற்றவன்
என்பது Pope is infallible என்று சொல்வது போல். கல்வெட்டுக்கள்
(மெய்கீர்த்திகள்) உண்மைதான் பேசுகின்றன என நம்புகிறீர்கள். அது உங்கள்
விருப்பம். இராஜராஜன் மீது எனக்கென்ன கோபம். மாமானா, மச்சானா/ இல்லை
பங்காளியா? பொதுவாக அரசியல் தலைவர்களை விழுந்து கும்பிடுவது எனக்குப்
பிடிக்காது. அரசியல் என்றால் வன்முறை இருக்கும், அடுத்துக்கெடுத்தல்
இருக்கும், அதிகார வெறி இருக்கும். ஈதெல்லாம் இயற்கை. அப்படியுள்ள
ஒருவரைத் தெய்வம் போல் பார்ப்பது எனக்குக் கூச்சமளிப்பது. எனவே அவனை
மனிதனாகப் portrait செய்யும் எழுத்து என்னைக் கவர்கிறது. இதை எதிர்மறையாக
எடுத்துக்கொண்டால் அதற்கு நானென்ன செய்வது? இராஜராஜனைப் புகழ
இணையவெளியில் நிறையப் பேர் உண்டு. அவனை மனிதனாகக் காண்பவர் குறைவு.

மற்றபடி, இதனால் என் மீது தப்பு அபிப்பிராயம் கொள்ள வேண்டாம். I see very
well that I touch the sensitive spot of many people. You may call me
the most unpopular person in MinTamil :-) In that way I am unique :-)

நா.கண்ணன்

கி.காளைராசன்

unread,
Apr 19, 2012, 1:11:14 PM4/19/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/4/19 N. Kannan <navan...@gmail.com>
2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>:

ஐயா நான் என்ன செய்வது! இந்திரா பார்த்தசாரதி முறையாகப் பட்டம் பெற்று
டெல்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவர் எழுத்தை
நம்பிச் சொன்னேன். அதில் தவறு இருக்க வாய்பில்லை (I do not question his
integrity).

அன்புள்ளம் கொண்டு உசாத்துணையைக் குறிப்பிடுமாறு வேண்டுகிறேன்.
அன்பன்
கி.காளைராசன்

N. Kannan

unread,
Apr 19, 2012, 1:23:24 PM4/19/12
to mint...@googlegroups.com
2012/4/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>:

> அன்புள்ளம் கொண்டு உசாத்துணையைக் குறிப்பிடுமாறு வேண்டுகிறேன்.


பஞ்சதந்திரம் கமல் ஞாபகம் வருகிறது. கேட்பது எளிது, பதில் சொல்வது கடினம் :-))

நான் தான் முன்னமே சொன்னேனே நினைவிலிருந்து எழுதுகிறேன் என்று. இது
குறித்து நான் சென்னையில் அவருடன் பேசி இருக்கிறேன். கணையாழியில் முன்பு
வந்த கட்டுரை. சென்னைவாசிகள் அவரை அணுகிக் கேட்கலாமே! You don't have to
believe me :-)

சரி...நான் விவாதிக்க வந்த விஷயமே வேறு! அடுத்து மேலே போவோம்.

நா.கண்ணன்

Subashini Tremmel

unread,
Apr 19, 2012, 3:14:22 PM4/19/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
இந்த இழை மிகத் தேவையான ஒன்று. தொடர்ந்து பல தகவல்களை விவாதிப்போம்.

சுபா

2012/4/17 N. Kannan <navan...@gmail.com>
இந்த இழையில் ஆலயங்கள் பற்றி அலசப் போகிறோம்.

இது தல யாத்திரை அல்ல. அமெரிக்காவில் அப்படியொன்று செய்ய வேண்டுமென்ற ஆசையுண்டு :-)

ஆலயங்களின் சமகால நிலை, மேம்பாட்டிற்கான யோசனைகள், ஆலயங்களின் எதிர்காலம் எனும் போக்கில் அமையப் போகும் அலசல் இது. உண்மையான அக்கறையுள்ளோர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் (சட்டெனக் கோபப்படுபவர்கள் சற்றே ஒதுங்கி நின்றால் நலம்). கோயில்கள் எனும் போது உள்ளாட்டு வெளிநாட்டுக் கோயில்கள் எல்லாம் இடம் பெறும்.

எனக்குக் கோயில்கள் மிகவும் பிடிக்கும். யாருக்குப் பிடிக்காது என்கிறீர்களா? ‘இ’யண்ணா சொல்லியவாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் கோயிலில் உண்டு. காம்யார்த்த பக்தி, உண்மையான பக்தி, காமுகப் பார்வை உள்ளோர், கலைப் பார்வை உள்ளோர், உடற்பயிற்சிக்கு வருவோர் சரித்திரம் படைப்போர்/வேண்டுவோர் என்று எல்லோருக்கும் இடமுண்டு.

கோயில் ஒரு பல்கலைக் கழகம். இதைத் தமிழன் உணர வேண்டும்.

இறைவன் எத்தனையோ வழிகளில் நம்மை ஈர்க்கிறான். ஆஸ்திகனோ, நாஸ்திகனோ இயற்கை ஈர்க்கிறது. கொஞ்ச நேரம் முன்பு வெஸ்டுஹாம் பார்க்கில் அமர்ந்திருந்தேன். அழகிய பூக்களும், மாலைச் சூரியனும், பச்சைப் பசும் புல்லும், வெண்ணீல மேலாப்பு விரித்தார் போல் மேகங்களும் மனதிற்கு இதமாக இருந்தன. இது இறைக்காட்சி என்று யாரும் உணர்வதில்லை, சிலரைத்தவிர. அது இறைவன் என்று சொல்லாமல் ரசித்தாலும் குறை ஒன்றுமில்லை. ரசிப்பு முக்கியம்.

சமீபத்தில் சிவகாசி போனபோது கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோயிலென்று `திருநின்ற ஊர்` எனும் தலத்திற்கு கவிஞர் திலகபாமா அழைத்துச் சென்றார். கீழே பூஜாரி இருந்தார். ஏனோ மேல் நிலை போய் எங்களுக்கு தரிசனம் காட்டச் சோம்பேறித்தனம். கிடைத்த அவகாசத்தில் நானும் பெருமாளும். விடுவேனா சான்ஸை :-) இந்தப் பெருமாள் கொள்ளை அழகு. லிப்ஸ்டிக்கெல்லாம் போட்டுக்கொண்டு ஓர் அழகு. ஒன்றுமே வேண்டாம், சாஸ்திர ஈர்ப்பு, தத்துவ ஈர்ப்பு, ஆகம ஈர்ப்பு ஒன்றும் வேண்டாம். அழகை ரசிக்கத்தெரிந்தால் போதும். பெருமாள் தூண்டில் போட்டுவிடுவார். தொடக்கம் எதிலென்றால் என்ன? மல்லன், கள்ளன் திருமங்கை. அவனை ஈர்த்தது அழகுணர்ச்சி. அந்த ரசிப்பு போதுமென்று எண்ணெழுத்து திருமந்திரத்தைத் தந்தார். அந்த வள்ளல் இதோ!

Inline image 1

 பர்ஜாரகர் (மடப்பள்ளிக்காரர்) வந்து பின்னால் சேவை சாதித்தார். தீர்த்தம் இருந்தது. உத்திரணி இல்லை. வெற்றிலையை மடித்து தீர்த்தம் தந்தார். ரொம்ப நல்லவர். ஏழை. இந்த இறைவனைப் பற்றி இரண்டு ஆழ்வார்கள் பாடியிருந்தாலும், சிறப்பாகச் சொல்லாமல் `இந்த ஊர்க்காரன் இவன்` என்று சொல்லிப் போந்தனராம். இவர் வருத்தம் அது! இந்த ஊர் அம்பாளைப் (தாயார்) பார்த்தும் ஒருவனுக்கு அழகுணர்ச்சி வரவில்லையெனில் அவன் ஜடம். கொள்ளை அழகு! போங்கள். தரிசனம் பெற்று வந்த பின்னும் கீழே பட்டாச்சாரியர் யாருடனோ சிரத்தை இல்லாமல் வம்படித்துக்கொண்டிருந்தார்!

(இன்னும் வரும்)


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Tiruthangal_small.jpg

Subashini Tremmel

unread,
Apr 19, 2012, 3:23:26 PM4/19/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
பலர் இந்த நோக்கில் பார்ப்பதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் தேவையான, நிதர்சனமான பார்வை.
கோயில் பலருக்கு வருவாய் ஈட்டித்தருகின்றது என்பதோடு தமிழகத்தின் உள்ள கோயில் கலைச்செல்வங்களின் அடைப்படையில்  இன்னமும் நன்கு சீர்படுத்தி மேலும் வருமானத்தை ஈட்டும் ஒரு வாய்ப்பினை இன்னமும் கூட அமைக்கலாம் என்பது எனது மாற்ற முடியாத கருத்து. இருக்கின்ற வளத்தை சரியாக பயன்படுத்தத் தெரியாதவர்களாக நமது சமூகம் உள்ளது என்பது வேதனைக்குறிய விஷயம்.

எகிப்தில் நான் சுற்றுலா சென்றிருந்த சமயம் உணர்ந்த ஒரு விஷயம்.. அங்கே ஐயாயிரம் ஆண்டு பழமையான கோயில்களும் இறைவடிவங்களும் இறைவடிவ சிலைகளும் தான் இன்று அந்த நாட்டிற்கு, (அந்த பல தெவ்ய்வ வழிபாட்டை மறுக்கும் மக்களுக்கு) மூலதனமாக அமைந்திருக்கின்றது. சுற்றுலாத்துறை அந்த நாட்டின் முன்னனி வருவாய் ஈட்டும் மூலதனமாக உள்ளது. அப்படிப்பட்ட ஏழ்மை நாட்டில் கூட சுத்தத்தை மக்கள் கடைபிடிக்கின்றனர். ஆனால் நமது ஊரிலோ குப்பை என்பது என்ன என்ற ப்ரக்ஞை அற்ற ஒரு சமுதாயம் சாலைகளை பொது இடங்களை மட்டும் குப்பைகளைப் போட்டு நாசம் செய்வது மட்டுமல்லாமல் கோயில்களிலும் குப்பைகளைப் போடுவது.. பாலை ஊற்றி மண்டபத்தையும் சுவற்றையும் சேதப்படுத்துவது வர்ணங்களால் எழுதி வைத்து சிதைப்பது என்று தங்கள் வளங்களை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாக மாறி உள்ளது.

சுபா

2012/4/18 Santhanam Swaminathan <swam...@yahoo.com>
கோவில் ஒரு பல்கலைக் கழகம் என்பது உண்மையே.
இதை எல்லாம் விட கோவில் ஒரு மாபெரும் தொழில்!! 
கோடிக் கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் மாபெரும் தொழில்.

 நாளைக்கு திராவிட கழகம் டில்லியில் ஆட்சிக்கு வந்து எல்லா கோவிலகளையும் மூடுங்கள் என்று சொன்னால் பல லட்சம் மக்கள் அடுத்த நிமிடமே வேலை இழப்பர். பூக்காரி, வண்டிக்காரன், சுற்றுலா தொழில், ஹோட்டல்கள்,லாட்ஜுகள், ரயில்,பஸ் ஊழியர்கள், கோவில் கடைகளில் விற்கும் பொருட்களச் செய்வோர் ,உற்பத்தி செய்வோர் என்று பல கோடி.

கோவில் இல்லாத ஊர்களிலும் இத்தொழில்கள் நடை பெறுகிறதே என்று சிலர் வாதிடலாம். உண்மைதான். ஆனால் இந்தியா ஆன்மீக நாடு!! வேத காலம் முதல் நாம் உலகிற்கு வழங்கும் ஒரே கொடை ஆன்மிகம் தான். இதுதான் இந்தியாவின் பணி என்பது விவேகனந்தரின் கணிப்பு. இந்தியா இறந்தால் ஆன்மீகம் செத்தொழியும். ஆனால் இந்தியா இறக்காது என்று சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் கூறுகிறார். 

இந்தியா பற்றி பாரதியின் கணிப்பும் இதுவே. 

எல்லாரும் அமர நிலையை எய்தும் நன் முறையை 
இந்தியா உலகிற்களிக்கும் ஆம் --
இந்தியாஉலகிற்களிக்கும் ஆம் ஆம் 
இந்தியாஉலகிற்களிக்கும் வாழ்க!!

 என்று மும்முறை கூறுகிறார். ஆகவே கோவில்கள் வாழ்க!!
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, April 18, 2012 4:25 AM

Subject: Re: [MinTamil] ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
கோயில் ஒரு பல்கலைக் கழகம். இதைத் தமிழன் உணர வேண்டும்.
 
அருமை  ! இதை உணர்ந்தாலே மக்களுக்கு அழகுணர்ச்சி, பராமரிப்பு, போன்றவை தாமாக வரும்.
 
வீட்டைக் கோயில் போல  வைத்துக்கொள்ளவேண்டும்  என்று பெரியவர்கள் சொல்லுவர்
 
இப்போது கோயில்களையே  சரியாகப் பராமரிக்காமல்  சீர்கேடாக வைத்துக்கொள்கிறோம்.
 
குடும்பம் ஒரு கோயில் என்றார் பெரியோர்
 
இப்போது கோயிலிலே  ( இல்லறம்)  முதற்கொண்டு நடத்தி  குடும்பம் நடத்துகிறார்கள் .தூய்மை காப்பதில்லை
 
 
 
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/4/17 N. Kannan <navan...@gmail.com>

கோயில் ஒரு பல்கலைக் கழகம். இதைத் தமிழன் உணர வேண்டும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Apr 19, 2012, 3:37:23 PM4/19/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/4/18 N. Kannan <navan...@gmail.com>
ரோம் நகரில் மட்டும்தான் என்றில்லை, லண்டனிலும் தடுக்கி விழுந்தால் கோயில். நம்ம ஊர் என்ன கெட்டது?

கண்ணன், உண்மை. ஐரோப்பா முழுதுமே இந்த நிலையை நான் பார்க்கின்றேன். ஜெர்மனியில் உதாரணமாக ஒவ்வொரு சிற்றூரிலும் குறைந்தது மூன்று தேவாலயங்களாவது உள்ளன. பெரிய நகரங்களில் மிகப் ப்ரமாண்டமான தேலயங்கள் பல உள்ளன. தடுக்கி விழுந்தால் தேவாலயம்.. இதனை நான் அயர்லாந்திலும் கூட பார்த்தேன். கத்தோலிக்க சமயம் மிகப் பெரிதாக வளர்ச்சியுற்ற போது எல்லா இடங்களிலும் தேவாலயங்கள் அமைக்கும் பணி அரசர்களின் ஆதர்வோடும் போப்பின் ஆதரவோடும் நிகழ்ந்துள்ளது. பின்னர் ப்ரோட்டஸ்டன் மதம் பரவ ஆரம்பித்த வேளையில் ஜெர்மானிய, டென்மார்க் அரசர்களின் பெறும் ஆதரவைப் பெற்று பல தேவாலயங்கள் கட்டப்பட்டன. 
..
Inline image 1
..

இந்தக் கோயில் ஒரு ஆட்டமோபைல் கராஜ் இருந்த இடத்தில் எழும்பியுள்ளது. பெரும்பாலான கோயில்கள் இப்படியான கார் ரிப்பேர் இடங்களில்தான் அமைகின்றன. இந்த இடத்தை விலைக்கு வாங்கி கோயில் கட்டுவதிலும் பிரச்சனை இருந்திருக்கிறது. இது அதிகம் முஸ்லிம்வாழும் தெரு. அங்கு ஒரு இந்துக் கோயில் வருவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை. ஆனால் நடுநிலையான ஆங்கில அரசு கோயில்கட்ட அநுமதி வழங்கியதால் இன்று இங்கொரு கோயில், யோகப் பயிற்சி சாலை, சங்கீதப்பள்ளி இவை நடைபெறுகின்றன.

இதற்கு ஐரோப்பாவில் உள்ள இலங்கைத் தமிழ் நண்பர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தீவிர நாட்டத்துடன் சைவம், தமிழ், இசை கலை போன்றவற்றை வளர்க்க கோயில்களை ஏற்படுத்தி வகுப்புக்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். ஜெர்மனி, சுவிஸர்லாந்தில் உள்ள தமிழ் குழந்தைகள் பாடும் கர்னாடக சங்கீதமும் சிவராத்திரி பூஜையும் மனக்கண்ணில் அப்படியே தெரிகின்றன. 

..

ஆனால் இந்தத் தமிழைத் தக்க வைக்க இவர்கள் எடுக்கும் முயற்சி!! கைலாசத்தைக் கையில் தூக்குவது போல்தான் அது!! இராவண பிரயர்த்தனம் :-)


உண்மை. இது ஒரு விதமான தவம்.

சுபா
 

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Chitambaram.jpg

Subashini Tremmel

unread,
Apr 19, 2012, 3:42:45 PM4/19/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/4/18 N. Kannan <navan...@gmail.com>
..

எனவே மீண்டும் அதே கேள்வி. மிகவும் நளினமான, நாகரீகமாக இருந்த ஒரு சமூகம்
எப்போது சீர்கெட்டுப் போனது? ஏன் சிலையை சிறை வைக்கும் நிலை?

சிறை வைப்பவர்களின் பார்வையிலிருந்து நோக்கினால்..
1.ஏதாவது கிறுக்கி தங்கள் பெயரை எழுதி வைப்பார்கள்
2.வர்ணத்தை பூசி வைப்பார்கள்
3.பக்தி மேலீட்டால் எண்ணையைத் தடவுவது .. குங்குமத்தைக் கொட்டுவது போன்ற வேலைகளைச் செய்வார்கள்..
4. இல்லை சுரண்டி சுரண்டியே சிலையை வீணாக்கி விடுவார்கள்..

இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நம் மக்கள் செய்வார்கள். என்ன செய்வது..? இவை நம் சொத்த் உஎன்ற என்ற எண்ணமே அடியோடு இல்லாத நிலையில் பாதுகாப்பு தேவையாகத் தான் இருக்கின்றது. சட்டமும் ஒழுங்கும் இன்னமு டஹிகல் தேவை.. 
யுனெஸ்கோ பராமரிப்பில் உள்ள தாராசுரத்தைப் பார்க்கும் போது அனைத்து கோயில்களையுமே அப்படி வைத்திருக்க நம்மால் முடியாத என்ற எண்ணம் மேலோங்குகின்றது. விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் நாம் செய்ய வேண்டிய தலையாய கடன்.

சுப


சிந்திப்போம் :-)


நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Apr 19, 2012, 3:46:53 PM4/19/12
to mint...@googlegroups.com
2012/4/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

>
> இந்த இழை மிகத் தேவையான ஒன்று. தொடர்ந்து பல தகவல்களை விவாதிப்போம்.
>

நன்றி சுபா!

இந்த இழையின் நோக்கம் வேறு. தேனீ ஐயாவின் ஒரு சிந்தனை நம்மையெல்லாம் தேவதாசிகள் பின்னால் விரட்டி விட்டுவிட்டது :-) ஐயா! உம்மைக் குறை சொல்லவில்லை. சிந்தனை சார்புடையது. அது ஒன்றிலிருந்து ஒன்றுக்குக் கிளைக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்று இவ்விழை நிரூபித்துவிட்டது :-) சரி, ஆனால் இவ்விழையின் நோக்கம் அதுவல்லவே! எனவே மீண்டும் ராஜபாட்டைக்கு வருவோம்!!

சென்ற இடுகையில் இங்கிலாந்துத் தேவாலயங்கள் சொற்ப விலைக்கு வருகின்றன எனச் சொன்னேன். அப்படியெனில் யோசிக்க வேண்டும். கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கையும், வருமானமும் குறையும் போது கோயிலின் இருப்பே கேள்விக்குறியாகிறது என்று! சுமார் 30 வருடங்களுக்கு முன். ஒப்பில்லா அப்பனை தரிசித்துவிட்டு அப்படியே திருநாகேஸ்வரம் போன்ற கோயில்களுக்குப் போய் வந்தோம். பல கோயில்களில் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றும் வருவாய் கூட இல்லை, அல்லது இருக்கின்ற வருவாய் யார் வயிற்றையோ கழுவப் போய்விடுவதால் கோயிலில் விளக்கில்லை என்றாகிவிடுகிறது.

Inline image 2

ஈஸ்ட்ஹாம் முருகன் கோயில். ராஜம் அக்காவிற்கு வாக்குக் கொடுத்து இருந்தேன். இந்த முருகனிடம் போய் அவருக்காக சண்டை போடுகிறேன் என்று.

Inline image 3

அழைத்துச் சென்ற திரு.பத்மநாப ஐயர். இக்கோயில் நீஸ்டன் ஸ்வாமி நாராயண் கோயிலை முன்னுதாரணமாக வைத்து தென்னாட்டு சிற்பக் கலையைக் காட்ட உருவான கோயில். அளவில் சிறியதுதான். ஆயினும், கர்பகிரகம் முழுவதும் கருங்கல்லால் ஆனது (உள்ளே படமெடுக்க அனுமதி இல்லை). கோயிலுக்குள் பிரதானமாக முருகன், அருகில் விநாயகர், பளிங்குக் கல்லில் வடநாட்டுச் சிவன், அதே போல் ஆஞ்சநேயர், கன்னங்கரேர் என்று அலர்மேல் மங்கை (ஒரே அழகு), ஸ்ரீநிவாசன் (அதற்கு மேல் அழகு), அருகில் குருவாயூரப்பன் (என்ன காம்பினேஷன் என்று கேட்கக்கூடாது :-), ஹண்முகப்பெருமான் இப்படி. தாயார் முன்னால் உட்கார்ந்தேனா. கண்ணை மூடினேனா, அக்காவோட விண்ணப்பம் (ஏண்டா! நீ இப்படி இரண்டு பொண்டாட்டியோட நன்னா இருகே! நான் இங்கே வயது போல், இளமை போய் கிடக்கிறேன். இது உனக்கே நியாயமா? ) சுத்தமாய் மறந்து போச்சு! என்ன செய்ய? ஆனாலும் முருகன் எப்படியும் என் ஹார்ட் டிஸ்கிலிருந்து இந்த வேண்டுகோளை எக்ஸ்ட்ராக்ட் செய்திருப்பார் :-)

இப்போது கேள்வி என்னவென்றால், இந்தக் கோயில் இப்படியே தமிழர்களை நம்பி எத்தனை காலம் நிற்கும்? இப்போதே இரண்டாம், மூன்றாம் தலைமுறைகள் கோயிலுக்கு வருவதில்லை. பெற்றோர் வருந்தி அழைத்தாள் வந்து கொஞ்சு தமிழ் பேசிவிட்டுப் போகின்றனர். ஆனால் நமக்கு கோயிலிடம் உள்ள ஈர்ப்பு அவர்களுக்கு இல்லை. அவர்கள் கவனத்தைக் கவர ஆயிரம் விஷயங்கள். முறைப்படி வாராவாரம் அழைத்துக் கொண்டு போக தாத்தா பாட்டி கிடையாது. அப்பா, அம்மா இரண்டு பேரும் படு பிசி.

இதற்கான விடையை அக்கோயிலிலே கண்டேன். அதைச் செய்ய நம்ம சிவாச்சார்யர்கள் கொஞ்சம் மெனக்கிட வேண்டும்!

நா.கண்ணன்
Mrugan-2.jpg
Mrugan-1.jpg

Subashini Tremmel

unread,
Apr 19, 2012, 3:48:03 PM4/19/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>

ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
(என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்? 

அணுகினான்!!!

கண்ணன் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதுதான் நல்லது என் நினைக்கிறேன். 
ஆமாம். நானும் வழி மொழிகிறேன். 

ராஜராஜசோழன் அந்த தாசிகளில் ஒருத்தியையே (அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) மணந்து ராணியாகவும் ஆக்கினான். தேவதாசிகள் அந்தக் காலத்தில் அவர்கள் இருந்த நிலை வேறு. தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் காமநோக்கால் அணுகுவது என்பது சோழர்காலம் வரை தெய்வக்குற்றம் போலக் கருதப்படுவது - எத்தனையோ ஆய்வுக்கட்டுரைகள் இதைப்பற்றி வந்துவிட்டன.
உண்மை. தேவதாசிகள் ஆலயத் திருப்பணிகள் செய்த பல செய்திகள் இணையத்திலேயே கூட வந்துள்ளன. திருவாரூர் பரவை ராஜேந்திரனின் காதலி என்பதோடு எவ்வளவு திருப்பணிகள் செய்திருக்கின்றார் என்பவையெல்லாம் மீண்டும் நினைவு கூறத்தக்க செய்திகள். நான் டாக்டர். பத்மாவதியின் கட்டுரையை மின்னக்கம் செய்து போடுகின்றேன்.


சுபா

N. Kannan

unread,
Apr 19, 2012, 3:52:48 PM4/19/12
to mint...@googlegroups.com
2012/4/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

> சிறை வைப்பவர்களின் பார்வையிலிருந்து நோக்கினால்..
> 1.ஏதாவது கிறுக்கி தங்கள் பெயரை எழுதி வைப்பார்கள்
> 2.வர்ணத்தை பூசி வைப்பார்கள்
> 3.பக்தி மேலீட்டால் எண்ணையைத் தடவுவது .. குங்குமத்தைக் கொட்டுவது போன்ற
> வேலைகளைச் செய்வார்கள்..
> 4. இல்லை சுரண்டி சுரண்டியே சிலையை வீணாக்கி விடுவார்கள்..
>

சுபா! நாம் பார்க்கவில்லையா? வழிபாடு என்று சொல்லி கற்பூர, விளக்கு
எண்ணெய் அப்படியே விதானத்திற்குப் போய் அங்குள்ள அழகிய ஓவியங்களை
பாதிப்பதை. இதற்கு யார் சிறை வைப்பார்கள்? இது உள்ளே நடக்கும்
சமாச்சாரம். மல்லையில் திறந்து கிடக்கும் கோயிலில் அம்பாள் சிலையை
கவனமின்றி கையாண்ட நிலை பற்றி ஹரிகி சொன்னார். சரி! மீனாட்சி கோயிலில்
நிர்வாகத்தின் அனுமதியோடு காளி எனும் தெய்வத்திருவுருவின் மீது கண்ட
மேனிக்கு வெண்ணெய் வீசப்படுகிறதே (எவனாவது அம்மா முகத்தில் வெண்ணெயை வீசி
அடிப்பானா?).

ஆரம்பப்பள்ளியிலிருந்து அங்கு கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நல்ல
வேளையாக இங்கிலாந்துக் கோயில்களில் தெய்வங்களுக்கு இந்த அவமானம் இல்லை!

நா.கண்ணன்

Subashini Tremmel

unread,
Apr 19, 2012, 3:53:15 PM4/19/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/4/19 N. Kannan <navan...@gmail.com>

2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>:
> ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
> (என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்?
>
> அணுகினான்!!!
>
> கண்ணன் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதுதான் நல்லது என் நினைக்கிறேன்.
>
> ராஜராஜசோழன் அந்த தாசிகளில் ஒருத்தியையே (அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க)
> மணந்து ராணியாகவும் ஆக்கினான். தேவதாசிகள் அந்தக் காலத்தில் அவர்கள் இருந்த
> நிலை வேறு. தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் காமநோக்கால் அணுகுவது
> என்பது சோழர்காலம் வரை தெய்வக்குற்றம் போலக் கருதப்படுவது - எத்தனையோ
> ஆய்வுக்கட்டுரைகள் இதைப்பற்றி வந்துவிட்டன.
>

மன்னிக்க வேண்டும் திவாகர்!

நான் இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படி எழுதினேன். அவரது முன்னாளைய
கணையாழி கட்டுரை ஒன்றில் ராஜராஜன் விஷம் வைத்த இனிப்பு உள்ள தட்டு ஒன்றை
வைத்து அவனுக்கு சுகம் தந்த பின் தேவதாசிப் பெண்களை உண்ணச் செய்வானாம்.
இது ஒருவகையான ஆட்சித்திமிர். (depends on her luck she will survive or
die) அக்கட்டுரையை சென்னையில் உள்ளோர் யாராவது கண்டு சொன்னால் நலம்!

கண்ணன்,

இது ராஜராஜனைப் பற்றித் தெரியாதவர்கள் பேசுவது போல உள்ளது. இந்திரா பார்த்தசாரதி இப்படி கருத்துச் சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை. அப்படியே சொல்லியிருந்தாலும் கூட இது மிகச்சாதாரணமாக ராஜராஜனை சித்தரிக்கு மொரு கூற்று. ராஜராஜனைப் பற்றி அறிந்து கொள்ள சதாசிவ பண்டாரத்தாரின் சோழர் காலம், நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் போன்றவற்றை வாசிப்பது நலம். சோழர்களின் சைவ, தமிழ் தொண்டு அளப்பறியது. அதில் ராஜராஜன் ஒரு சிகரம் என்பதை மறக்கலாகாது!.

சுபா

 

Of course, இது உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும். சரித்திர
வாசிப்புக்களில் இப்படியும் உண்டு. அவ்வளவுதான்.

சரி, இந்த இழையின் நோக்கம் தேவதாசிகள் அல்ல. விரும்புவோர் தனியிழையில்
சிந்திக்கலாம்!

நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

N. Kannan

unread,
Apr 19, 2012, 3:59:11 PM4/19/12
to mint...@googlegroups.com
2012/4/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

>
>
> 2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>
>>
>> ராஜ ராஜ சோழன் எந்தெந்த தேவதாசி எந்தெந்தத்தெரு என்று விவரம் தருகிறான்
>> (என்கிறார்கள்). அவர்களை அவன் புரந்தரதாசரை அணுகுவது போலா அணுகினான்?
>>
>> அணுகினான்!!!
>>
>> கண்ணன் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதுதான் நல்லது என் நினைக்கிறேன்.
>
> ஆமாம். நானும் வழி மொழிகிறேன்.
>>
>>

Suba:

I feel sorry, if I have hurt anybody. I looked at him as a King.
Considering the liberty a feudal system offers in those times, if you
insist that Rajaraja was chaste. I believe you. Even recently, it was
a practice in Kerala that the lower caste people should leave their
bride with the high priest (Nambudiri) on the day of the nuptial. Only
after he enjoys the lady, the legal husband will enjoy her. That is
the liberty a feudal system offers to power.

In no way I degrade Devadasi or for that matter any woman. I am a
stanch feminist. You know that.

No more comments!

Kannan

Subashini Tremmel

unread,
Apr 19, 2012, 4:02:50 PM4/19/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்புள்ள கண்ணன்,


2012/4/19 N. Kannan <navan...@gmail.com>
2012/4/19 Dhivakar <venkdh...@gmail.com>:


>  ராஜராஜன் என  அல்ல, யாரைப் பற்றியுமே தகுந்த ஆதாரமிலாமல் எழுதினால் எனக்குப் >பிடிக்காது.

ஐயா நான் என்ன செய்வது! இந்திரா பார்த்தசாரதி முறையாகப் பட்டம் பெற்று
டெல்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவர் எழுத்தை
நம்பிச் சொன்னேன். அதில் தவறு இருக்க வாய்பில்லை (I do not question his
integrity).

இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை கண்ணன்.  அவர் எழுத்தை நம்பிச் சொல்வது என்பதை விட இவ்வகை வரலாற்றுச் செய்திகளை அலசும் போது நாம் மூல கல்வெட்டுக்கள், வரலாற்று ஆய்வு நூல்கள் ஆகியவற்றை அலசி பேசுவது சிறப்பு என்பது எனது தாழ்மையான கருத்து. திரு.திவாகர் சொலும் கருத்தே என்னுடையதும்.. ராஜராஜனைப் பொறுத்த வரையில்!

 

> Of course I agree ராஜராஜன் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் உங்களுக்கு அவனை
> ஏன் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஏன் ராஜராஜைப் பற்றிய
> எதிர்மறைக் கருத்தை மிந்தமிழில் பதிக்கவேண்டும்?
>

அப்படியென்றில்லை. பொதுவாக nobody is perfect. இராஜராஜன் அப்பழக்கற்றவன்
என்பது Pope is infallible என்று சொல்வது போல். கல்வெட்டுக்கள்
(மெய்கீர்த்திகள்) உண்மைதான் பேசுகின்றன என நம்புகிறீர்கள். அது உங்கள்
விருப்பம். இராஜராஜன் மீது எனக்கென்ன கோபம். மாமானா, மச்சானா/ இல்லை
பங்காளியா? பொதுவாக அரசியல் தலைவர்களை விழுந்து கும்பிடுவது எனக்குப்
பிடிக்காது.

இக்கால அரசியல் தலைவர்களோடு ராஜராஜனையோ பிற்கால சோழர்களையோ, பாண்டிய மன்னர்களையோ,  முந்தைய ஏனைய மன்னர்களையோ ஒப்பிட்டு பார்ப்பதே தவறு என்பது எனது பணிவான கருத்து.  

அரசியல் என்றால் வன்முறை இருக்கும்,

அரசியலில் மட்டுமல்ல.. சமையத்திலும் வன்முறை, வெறுப்பு, கோபம் கொலை எல்லாம் இருக்கும்.. மறுக்க முடியுமா நாம்.
 
அடுத்துக்கெடுத்தல்
இருக்கும், அதிகார வெறி இருக்கும். ஈதெல்லாம் இயற்கை. அப்படியுள்ள
ஒருவரைத் தெய்வம் போல் பார்ப்பது எனக்குக் கூச்சமளிப்பது.
 
தெய்வம் போல பார்க்க வேண்டாம். ராஜராஜனை ராஜராஜனாகப் பார்க்க வேண்டியது அவசியம். 

இந்த இழையை திசை திருப்ப நான் விரும்பவில்லை. முதலில் ஆரம்பித்த கோயில்கள் பற்றிய விஷயங்களிலேயே நமது சிந்தனை சென்றால் நலம்.

சுபா
 
எனவே அவனை
மனிதனாகப் portrait செய்யும் எழுத்து என்னைக் கவர்கிறது. இதை எதிர்மறையாக
எடுத்துக்கொண்டால் அதற்கு நானென்ன செய்வது? இராஜராஜனைப் புகழ
இணையவெளியில் நிறையப் பேர் உண்டு. அவனை மனிதனாகக் காண்பவர் குறைவு.

மற்றபடி, இதனால் என் மீது தப்பு அபிப்பிராயம் கொள்ள வேண்டாம். I see very
well that I touch the sensitive spot of many people. You may call me
the most unpopular person in MinTamil :-) In that way I am unique :-)

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

N. Kannan

unread,
Apr 19, 2012, 4:03:01 PM4/19/12
to mint...@googlegroups.com
2012/4/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> இது ராஜராஜனைப் பற்றித் தெரியாதவர்கள் பேசுவது போல உள்ளது. இந்திரா
> பார்த்தசாரதி இப்படி கருத்துச் சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை. அப்படியே
> சொல்லியிருந்தாலும் கூட இது மிகச்சாதாரணமாக ராஜராஜனை சித்தரிக்கு மொரு கூற்று.

Suba

That's what I read in Kanaiyazhi. It was an existential game he used
to play it seems. It was indeed thrilling for him but not for the poor
soul that consumes poison hidden in a sweet. I confirmed it with him
later during a conversation. Probably he should substantiate his
stance.

Kannan

Innamburan Innamburan

unread,
Apr 19, 2012, 4:05:39 PM4/19/12
to mint...@googlegroups.com
இறைவன் எங்கும் நிறைந்து இருப்பதால், இவ்விழை எத்தனை திசைகள் மாறினாலும், 'சர்வ தேவ நமஸ்காரோ கேசவம் பிரதிகச்சதி'. அவ்வழியில் தொடருக, கண்ணன். நம்பூதிரி பூரிப்பு மிகைப்படுத்திய சமாச்சாரம். வணக்கத்துக்குரிய நாராயண குரு உபதேசம் கேட்கவும். 'முதலில் ஆரம்பித்த கோயில்கள் பற்றிய விஷயங்களிலேயே நமது சிந்தனை சென்றால் நலம்.:சுபா' ரைட்டு, ஸுபாஷிணி.
இன்னம்பூரான்


2012/4/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 19, 2012, 4:16:24 PM4/19/12
to mint...@googlegroups.com
மன்னர்கள் கோவில் எழுப்புவதும் கொடையளிப்பதும் அவர்கள் போரிடுவதன் மூலம் உயிர்வதை செய்த பாவத்தைப் போக்கிக்கொள்ளவே என்ற அனுமானம் உள்ளது
ராஜா ராஜன் பெரிய கோவில் கட்டியது அவன் போரில் நிறைய உயிர்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்ததால் என்று கூறுவோர் உண்டு
ராஜராஜன் மத்தியில் கட்டுப்பாட்டை உருவாக்கி ஆளுமை நடத்தி வரி வசூலித்தல் போன்ற ஆட்சிக்கூறுகளைக் குமுகத்தின் கடைக்கோடிக்கு எடுத்துச் சென்றதால் அவன் மக்கள் பார்வைக்கு உட்பட்டான் என்பதால் அவன் செயல்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படும் சூழல் உருவானது
பன்னாட்டு வணிகம் நல்லுறவு என்று கீழ்த்திசையில் ஆதிக்கம் செலுத்தி கிழக்காசியக் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை அவனுக்குறியது
தகவல் இருந்தால் குறை செல்வது எளிது இயல்பு
நாகராசன்

2012/4/20 Innamburan Innamburan <innam...@gmail.com>

N. Kannan

unread,
Apr 19, 2012, 4:20:16 PM4/19/12
to mint...@googlegroups.com
2012/4/19 Innamburan Innamburan <innam...@gmail.com>:

> கண்ணன். நம்பூதிரி
> பூரிப்பு மிகைப்படுத்திய சமாச்சாரம்.

//In case of sambandham with Namboothiri men, the system benefited
both the Namboothiri Brahmins as well as matrilineal castes like the
Nairs for two reasons. First, Namboothiri Brahmins had
institutionalized primogeniture, permitting only the eldest son to
marry within the caste. Younger sons (also called aphans) in
Namboothiri families were expected to establish sambandham with Nair
and Ambalavasi (temple service castes) women. Secondly, Nair families
encouraged the sambandham arrangement with Namboothiri men, thereby
increasing their tharavadu and caste status.[5]//


Just an example. Are we shy to see a spade as a spade?

Source: http://en.wikipedia.org/wiki/Nair_ceremonies_and_customs

OK, I don't talk anymore on this.

Kannan

Innamburan Innamburan

unread,
Apr 19, 2012, 4:50:25 PM4/19/12
to mint...@googlegroups.com
கண்ணன் சாரே! அந்த விக்கிப்பீடீயா கட்டுரை ஒரு ஆர்ஃபன் (அனாதை). The spade metaphor is passe. The ethically correct application is what Lord Templeman memorably stated in Street v.Mountford 1985: "a five pronged implement for manual digging is a fork", whatever the manufacturer chooses to call it." Go for the jugular, Kannan.
அன்புடன்,
இன்னம்பூரான்

2012/4/19 N. Kannan <navan...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 19, 2012, 10:23:04 PM4/19/12
to mint...@googlegroups.com


2012/4/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை கண்ணன்.  அவர் எழுத்தை நம்பிச் சொல்வது என்பதை விட இவ்வகை வரலாற்றுச் செய்திகளை அலசும் போது நாம் மூல கல்வெட்டுக்கள், வரலாற்று ஆய்வு நூல்கள் ஆகியவற்றை அலசி பேசுவது சிறப்பு என்பது எனது தாழ்மையான கருத்து. திரு.திவாகர் சொலும் கருத்தே என்னுடையதும்.. ராஜராஜனைப் பொறுத்த வரையில்!

அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், நம் பண்டைய இலக்கியங்களையும், வாழ்நெறியையும் அவர் பார்க்கும் விதத்தில் பார்வைப் பிறழ்வு இருக்கிறது.  (கிருஷ்ணனின் சிறுவயது விளையாட்டுத் தோழியான பாஞ்சாலி, சிறுவயதில் கிருஷ்ணனைக் காதலித்தாள் என்கிறார். பாணாசுரன் என்ற பெயரைக்கூட சரியாக எழுதமுடியவில்லை--நெடுகிலும் அவனை பாணாஸ்வரனாக்கிவிட்டார்,  கிருஷ்ணா கிருஷ்ணா புத்தகத்தில் சுமார் 30-40 சதம் பொய்யும் புனைசுருட்டும். His understanding is either lacking depth or is coloured by one of these -isms.)  

எனவே, இந்த மாதிரியான அலசல்களுக்கு இந்திரா பார்த்தசாரதியின் ஆய்வோ, ஜட்ஜ்மென்ட்டோ உரைகல் ஆகாது என்பது என் கருத்து.  (இப்படி எழுதினால், ‘இபா மேல் காய்கிறான்; இபாவை வெறுக்கிறான்’ என்று முத்திரை குத்தத் துடிப்பார்கள்.  ‘ஒங்களுக்குத்தான் வில்லியப் பிடிக்காதே’ என்று ரங்கனே தொலைபேசியில் குறிப்பிட்டார்.  இவர்கள் யாரும் என்னுடைய பங்காளிகளோ, ஜன்மப் பகைவர்களோ அல்லர். தவறான அணுகுமுறை என்று படுவதைச் சொல்கிறேன்.  சரியான அணுகுமுறை என்றுபடும்போது அதையும் குறிப்பிடத் தவறியதில்லை.)  மஹாபாரதத்துக்கு, கமலா சுப்பிரமணியத்தின் உணர்ச்சி மயமான, ஆனால் வியாசரிலிருந்து பெரும் பகுதியும் தடம்புரண்ட வர்ஷனை எடுத்துக் கொண்டதுபோல், இங்கும் ஏதாவது தாப்பர், ரோப்பர் என்று கம்யூனிஸ சிந்தனையாளர் தடம் போட்டுக் கொடுத்திருக்கலாம்.  இபாவின் கருத்துகள் பல இடங்களில் இடறுகின்றன என்பதைத் திறந்த மனத்தோடு அணுகுபவர்கள் அறிவார்கள்.

‘நான் கருதுகிறேன்’போன்ற பிரயோகங்கள் குறிப்பிட்ட சிலருக்கு ‘கத்தி வீசுகிறான்’ என்பது போலப் படுவதால், ‘என்பது எளியேனுடைய அரைக்காசுகூட பெறாத கருத்து என்ற கருத்தை இங்கே உள்ளோர் திருப்பாதத்தில் தெண்டம் சமர்ப்பித்து விஞ்ஞாபிக்கிறேன்’ என்று திருத்திச் சொல்லி விடைபெறுகிறேன்.

வேணும் ஆசிர்வாதம். உபயகுசலோபரி.

Mohanarangan V Srirangam

unread,
Apr 19, 2012, 10:28:15 PM4/19/12
to mint...@googlegroups.com
On Fri, Apr 20, 2012 at 7:53 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2012/4/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை கண்ணன்.  அவர் எழுத்தை நம்பிச் சொல்வது என்பதை விட இவ்வகை வரலாற்றுச் செய்திகளை அலசும் போது நாம் மூல கல்வெட்டுக்கள், வரலாற்று ஆய்வு நூல்கள் ஆகியவற்றை அலசி பேசுவது சிறப்பு என்பது எனது தாழ்மையான கருத்து. திரு.திவாகர் சொலும் கருத்தே என்னுடையதும்.. ராஜராஜனைப் பொறுத்த வரையில்!

அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், நம் பண்டைய இலக்கியங்களையும், வாழ்நெறியையும் அவர் பார்க்கும் விதத்தில் பார்வைப் பிறழ்வு இருக்கிறது.  (கிருஷ்ணனின் சிறுவயது விளையாட்டுத் தோழியான பாஞ்சாலி, சிறுவயதில் கிருஷ்ணனைக் காதலித்தாள் என்கிறார். பாணாசுரன் என்ற பெயரைக்கூட சரியாக எழுதமுடியவில்லை--நெடுகிலும் அவனை பாணாஸ்வரனாக்கிவிட்டார்,  கிருஷ்ணா கிருஷ்ணா புத்தகத்தில் சுமார் 30-40 சதம் பொய்யும் புனைசுருட்டும். His understanding is either lacking depth or is coloured by one of these -isms.)  

எனவே, இந்த மாதிரியான அலசல்களுக்கு இந்திரா பார்த்தசாரதியின் ஆய்வோ, ஜட்ஜ்மென்ட்டோ உரைகல் ஆகாது என்பது என் கருத்து.  (இப்படி எழுதினால், ‘இபா மேல் காய்கிறான்; இபாவை வெறுக்கிறான்’ என்று முத்திரை குத்தத் துடிப்பார்கள்.  ‘ஒங்களுக்குத்தான் வில்லியப் பிடிக்காதே’ என்று ரங்கனே தொலைபேசியில் குறிப்பிட்டார்.

ஒரு முறை தொலைபேசியில் பேசும் போது ‘வில்லியை எனக்குப் பிடிக்காது’ என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அதை ஞாபகப் படுத்தும் விதத்தில் சொன்னேன். 
:-)
 
 இவர்கள் யாரும் என்னுடைய பங்காளிகளோ, ஜன்மப் பகைவர்களோ அல்லர். தவறான அணுகுமுறை என்று படுவதைச் சொல்கிறேன்.  சரியான அணுகுமுறை என்றுபடும்போது அதையும் குறிப்பிடத் தவறியதில்லை.)  மஹாபாரதத்துக்கு, கமலா சுப்பிரமணியத்தின் உணர்ச்சி மயமான, ஆனால் வியாசரிலிருந்து பெரும் பகுதியும் தடம்புரண்ட வர்ஷனை எடுத்துக் கொண்டதுபோல், இங்கும் ஏதாவது தாப்பர், ரோப்பர் என்று கம்யூனிஸ சிந்தனையாளர் தடம் போட்டுக் கொடுத்திருக்கலாம்.  இபாவின் கருத்துகள் பல இடங்களில் இடறுகின்றன என்பதைத் திறந்த மனத்தோடு அணுகுபவர்கள் அறிவார்கள்.

‘நான் கருதுகிறேன்’போன்ற பிரயோகங்கள் குறிப்பிட்ட சிலருக்கு ‘கத்தி வீசுகிறான்’ என்பது போலப் படுவதால், ‘என்பது எளியேனுடைய அரைக்காசுகூட பெறாத கருத்து என்ற கருத்தை இங்கே உள்ளோர் திருப்பாதத்தில் தெண்டம் சமர்ப்பித்து விஞ்ஞாபிக்கிறேன்’ என்று திருத்திச் சொல்லி விடைபெறுகிறேன்.

வேணும் ஆசிர்வாதம். உபயகுசலோபரி.

--
அன்புடன்,
ஹரிகி.

--

Hari Krishnan

unread,
Apr 19, 2012, 10:35:48 PM4/19/12
to mint...@googlegroups.com


2012/4/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

ஒரு முறை தொலைபேசியில் பேசும் போது ‘வில்லியை எனக்குப் பிடிக்காது’ என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அதை ஞாபகப் படுத்தும் விதத்தில் சொன்னேன். 
:-)

ஒருமுறையும் அவ்வாறு சொன்னதில்லை.  ‘அப்படிப் புரிந்துகொண்டேன்’ என்று சொன்னால் அது வேண்டுமானால் சரியாக இருக்கலாம். வில்லியின் விவரிப்பு ஜைமினி பாரதத்தையும் தேவி பாகவதத்தையும் ஒட்டி நடக்கிறது என்றும் சொல்லியிருக்கிறேன்.  ஆழ்ந்து படிக்காமலா சொல்ல முடியும்? விரோதமிருந்தால் படிக்க முடியுமா?  வார்த்தைகளை என் வாயில் போடவேண்டாம்.  I use my words consciously, at least 99% of the time. வில்லியிலேயே அழகான இடங்களை ஏராளமாக எடுத்து எழுதியிருக்கிறேன். வில்லியில் ஈடுபடாமலா ஒப்பிட்டுப் படிக்க முடியும்?  இலக்கிய மடிசஞ்சிகளைப் போல நீங்களும் பேசலாமா?

அரவுயர்த்தோன் கொடுமையினும் முரசுயர்த்தோய், உனதருளுக் கஞ்சினேனே!

முரசுயர்த்தோய் என்று வில்லி குறிப்பிடுவது தர்மபுத்திரனை.  நான் குறிப்பிடுவது ரங்கனை. :))

Mohanarangan V Srirangam

unread,
Apr 19, 2012, 10:39:53 PM4/19/12
to mint...@googlegroups.com
ஐயா ! எனக்கு நினைவு இருக்கிறது. தாங்கள் ஒரு வேளை மறந்திருக்கலாம். ஆயினும் இது பெரிய விஷயம் இல்லை. எனவே இப்பொழுது தாங்கள் சொல்லும் நிலையை வைத்துக் கொள்வோம். 

:-)

***

--

geeyes

unread,
Apr 20, 2012, 2:54:41 PM4/20/12
to மின்தமிழ்

இந்திரா பார்த்தசாரதி சுமார் 10-15 ஆண்டுகளுக்குமுன் ‘கணையாழி’யில் ஒரு
கட்டுரையில் இதே போன்று எழுதியிருந்ததாக நினைவு. அதில் அவர் முகலாயப்
பேரரசர் அக்பரைப் பற்றித்தான் இப்படிக் குறிப்பிடுகிறார்-
சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை மொத்தமாக ஒரு மைதானத்தில்
நிற்கவப்பாராம். தட்டிலுள்ள இனிப்புத் துண்டங்களில் ஏதாவது சிலவற்றில்
விஷம் கலந்திருக்குமாம். கைதிகளுக்குக் கொடுத்துக்கொண்டே வரும்போது எந்த
கைதி சாவார் என்பதுதான் அக்பருக்கு சஸ்பென்ஸ், த்ரில், விளையாட்டு.
(ராஜராஜனைப் பற்றி ஏதாவது அதில் இருந்ததா என்பது நினைவில்லை).

அந்தக்கால ‘கணையாழி’ இதழ்கள் சில என்னிடமிருப்பதால் பரண்களில் தேடினால்
குறிப்பிட்ட இதழ் கிடைக்கக்கூடும்.
இ.பா. வின் கருத்து இறுதியானதாக இருக்கத் தேவையில்லைதான். சென்னையில்
அவரைக் காணநேர்ந்தால் கேட்டுப்பார்க்கலாம்.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

N. Kannan

unread,
Apr 20, 2012, 3:31:25 PM4/20/12
to mint...@googlegroups.com
அன்பின் ஸன்தானம்:

மிக்க நன்றி.

நான் காட்டிய மேற்கோள் தவறாக இருக்கலாம். ஆனால் நான் சொல்ல வந்த
கருதுகோள் உண்மை. அதாவது வேளாண் சமூகத்தில் (feudal set up) தேவர்
அடியார்கள் என்று ஒரு காலத்தில் உயர்வாக மதிக்கப்பட்ட பெண்கள்
இழிதொழிலுக்கு உயர் சாதி இந்துக்களால் ஆட்படுத்தப்பட்டனர் என்பது உண்மை.
அதை மறைத்து இங்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழில் `தேவடியாள்` எனும் இழி
சொல்லே தேவர் அடியாள் என்பதன் மருவூதான்.

எதற்கெடுத்தாலும் உசாத்துணை கேட்கும் நண்பர்களுக்காக ஒரு சொட்டு:

//செந்தமிழ்ச் செல்வியானவள் பல்லாயிரம் ஆண்டுகளாக இனிது நடம் புரிந்து
வருகின்ற யாழ்ப்பாணப் பழம் பதியின் கண்ணே, இன்னிசைக் கவிவாணர் பலர்
தோன்றிக் காலப் பெரும் பரப்பில் தம்மடிச்சுவட்டைப் பதித்துப் போய்
மறைந்தனர். அன்னாருட் புலவர் (நட்டுவச்) சுப்பையனார் ஒருவரென்பதைப்
பலரறியார். இப் புலவர் யாத்ததாக நாம் அறியக் கிடக்கின்ற நூல்
ஒன்றேயாகும். ஏறக்குறைய நானூறு விருத்தப் பாக்களாலானது இப் பனுவலெனக்
கூறுவர். அதனில் அதிபெரும் பாகம் எமக்கெட்டிலது; மறைந்தொழிந்து
போயிற்றெனலாம். தமிழ்ப் பற்றுடையார் தம் நினைவினில் முன்பின் மூன்று
தலைமுறையாக தவழ்ந்து வந்த ஒரு சில செய்யுட்கள் மாத்திரம் நவாலியூர் ந.
சி. கந்தையா பிள்ளை அவர்களின் அரிய தமிழ்த் தொண்டுகளுள் ஒன்றாக அச்சேறிச்
சென்ற இருபது ஆண்டுகளாக நடமாடி வருகின்றன.

இந் நூலின் பெயர் கனகி புராணம். கனகி சயமரம் (சுயம்வரம்) என்னும் பெயரும்
அதற்குண்டு, கனகி என்பாள் கவினார் வண்ணார்பண்ணைச் சிற்றூரில், இப் புலவர்
காலத்தில், வாழ்ந்த கட்டழகியாம் ஒரு கணிகை மாது. இப் பொது மகளோடு
புலவரவர்கள், பிரசித்தி பெற்ற அக் காலத்தவர் பலரைப் போன்று, தொடர்பு
பூண்டு சில காலங் கழித்தனர் என்பர். இத் தொடர்பின் விளைவாகப் பெற்ற அவலத்
தீயினாற் புடமிடப்பட்டுப் புதுவாழ்வெய்தி, தாம் பட்ட பெரும்பாட்டை
மற்றையோர் தவிர்த்தல் வேண்டி உலகுக்கு நல்லறிவுறுத்தும் வேட்கையுந்த இக்
காப்பியத்தை யாத்தனர் போலும்.

பாட்டுடைத் தலைவியோ ஒரு பரத்தை; நூற் பொருளோ அன்னாளின் கண்கவர் கட்டழகும்
உளப்பான்மையும், அவற்றோடு, விளக்கை நாடிப் போய் நாசமுறும் விட்டிலைப்
போல், விரும்பி அவளை அடைந்தார் தம் குணாகுணங்களும் அவளோடவர்கள் துய்த்த
சிற்றின்ப வாழ்வின் வெம்பேறும். எனினும், இந் நூலினுக்குக் கவியலங்காரப்
பண்பு உண்டென்பதை மறுக்க முடியாது//

இது எதைப்பற்றிய நூல்? யார் எழுதியது? ஆவலுள்ளோருக்காக:

யாழ்பாணம் வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் கணிகை பற்றிய புராணம் இது!
இந்நூலின் பெயர், “கனகி புராணம்”
நூலாசிரியர்: சுப்பையா நட்டுவனார்.

தொடுப்பு: http://noolaham.net/project/01/38/38.htm
முகப்படை பார்க்க வேண்டுமெனில் : http://noolaham.net/project/01/38/38.pdf

நா.கண்ணன்


2012/4/20 geeyes <gmsan...@gmail.com>:

N. Kannan

unread,
Apr 20, 2012, 3:53:21 PM4/20/12
to mint...@googlegroups.com
2012/4/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> http://www.youtube.com/watch?v=OuDL1hRC43Y&feature=related
>

இன்றுதான் இவ்விழியம் பார்த்தேன். நர்த்தகியாக இருந்த ஒரு பெண் உண்மையான தேவர் அடியாராக மாறிய அதிசயத்தை!

Inline image 1

நா.கண்ணன்
dance_girl.jpg

Innamburan Innamburan

unread,
Apr 20, 2012, 4:38:51 PM4/20/12
to mint...@googlegroups.com
எதற்கெடுத்தாலும் உசாத்துணை கேட்கும் நண்பர்களுக்காக ஒரு சொட்டு:
~ சொட்டு: 'ஷொட்டா' அல்லது குட்டா"


2012/4/20 N. Kannan <navan...@gmail.com>

நா.கண்ணன்

--
dance_girl.jpg

N. Kannan

unread,
Apr 21, 2012, 3:50:53 AM4/21/12
to mint...@googlegroups.com
2012/4/20 Innamburan Innamburan <innam...@gmail.com>

>
> எதற்கெடுத்தாலும் உசாத்துணை கேட்கும் நண்பர்களுக்காக ஒரு சொட்டு:
> ~ சொட்டு: 'ஷொட்டா' அல்லது குட்டா"
> இ
>


ஐயா! தெரியாதைய்யா! இங்கு சொட்டு என்பது an example என்று பொருள் படுகிறது :-)

இந்த ஷொட்டும் வேண்டாம், குட்டும் வேண்டாம் :-)

க.>

Mohanarangan V Srirangam

unread,
Apr 21, 2012, 6:39:10 AM4/21/12
to mint...@googlegroups.com
அதாவது கண்ணன், சில பேர் எழுதினா உசாத்துணை தரலைன்னா தப்பு. 

ஜில பேர் எழுதினா உசாத்துணை கேட்டா தப்பு !!! 

யாருக்கும் வெட்கமில்லை -- சோ. 

***

Subashini Tremmel

unread,
Apr 21, 2012, 7:08:01 AM4/21/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/4/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பொது அரங்கில் யாராவது ஒருவர் சொன்னதையோ அல்லது நூலில் உள்ளதை சுட்டிக் காட்டுவது போல எழுதினாலே அதற்கு உசாத்துணை கட்டாயம் தேவை. அது யாருக்கும் விதி விலக்கல்லை. கல்லூரியிலேயே இதனை சொல்லித் தருகின்றார்கள். இதனை இங்கே நாம் ஒன்றும் புதிதாக இங்கே பாடம் எடுக்க வேண்டியதில்லை.

>>ஜில பேர் எழுதினா உசாத்துணை கேட்டா தப்பு !!! 
இது நேரடியாக ஹைலஜாவின் கதையைச் சுட்டிக் காட்டுவது போல .. ஆனால் மறைமுகமாக இந்த இழையில் குறிப்பிடுகின்றீர்கள் என்று சும்மா மடல்களைப் படிப்பவர்களுக்கே தெரியும். அவர் தான் தெளிவாக வாய்வழியாக தனது தந்தையார் தனக்குச் சொன்ன செய்தி எழுதியிருக்கின்றாரே. அதனை வாசிக்கவில்லையோ. இல்லை வாசித்தும் இருப்பதை இல்லாதது போல காட்ட நினைக்கும் ஒரு எழுத்து விளையாட்டோ.. 

சரி .. எப்போதான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று-ன்னு தொடரப் போகின்றதோ இந்த இழை..!!

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Apr 21, 2012, 7:31:22 AM4/21/12
to mint...@googlegroups.com
பொது அறிவுத் தகவல்களுக்கு உசாத்துணை -( பாலின் நிறம் வெண்மை, நெல்லுக்குளே அரிசி போன்றவற்றிக்கு ) கொஞ்சம் ஓவர்
ஒரு கருத்தை மறுக்கவோ நிறுத்தவோ முன்னர் வெளியான தரமான தகவல்கள் வெளியான நூல்களை சஞ்சிகலை ஆதாரம் காட்ட உசாத்துனை தேவை
அப்படியே அப்பட்டமாக சுட்ட பக்கங்களுக்கு அதன் ஆசிரியர்களுக்கு நன்று கூற உசாத்துணை
மற்றொருவரின் மூலக்கருத்தைப் பற்றிச் பேசும்போது அவரின் கருத்துக்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள உசாத்துணை
இணையத்தில் இருந்து உசாத்துணை அளித்தால் இணையதளம், இணையப் பக்கம், இணையத்தைப் பார்த்த நாள் போன்றவற்றுடன் உசாத்துனை
என் கருத்து என் கருத்து உன் கருத்தும் என் கருத்து என்று நியதிமீறாமல் என் கருத்துக்கு உதவியாய் இருந்த மற்றவர்கருத்து என்று மறவாமல் நன்றியுடன் குறிப்பிட உசாத்துணை அவசியம்
நாகராசன்

2012/4/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Apr 21, 2012, 10:12:53 PM4/21/12
to mint...@googlegroups.com
என் கருத்து:
1. நமக்குத் தெரிந்த தொடக்க காலத்தில், நாடுபிடி தமிழ் மன்னர்கள் பிற நாடுகளிலிருந்து பிடித்துக்கொண்டுவரப்பட்ட பெண்கள் முதலில், சங்க காலத்தில்,  "கொண்டி மகளிர்" என்று அழைக்கப்பட்டார்கள். பிறகு எப்போதோ கால மாற்றத்தால் அவர்கள் "வேளம்" ஏற்றப்பட்டு, பிறகு "தேவரடியார் > தேவதாசி" என்று குறிக்கப்பட்டார்கள்.    

2. இந்தப் பரம்பரையில் வந்த பெண்கள் தங்களை "மாதவி பரம்பரையில்" வந்தவர்கள் என்று சொல்வதையும் உற்று நோக்கவேண்டும். மாதவி ஒரு "நர்த்தகி" மட்டுமில்லை; அவள் யாழ் வாசித்தலில் சிறந்திருந்தாள்; மற்றும் பல கலைகளைப் பயின்றிருந்தாள்;  அதனாலன்றோ கோவலனுக்கு எதிராக யாழ் இசைக்க அவளால் முடிந்தது!
3. மாதவிக்கும் கோயிலுக்கும் எந்த வகைத் தொடர்பும் இல்லை. 

4. எனவே, "தேவதாசி = கோயில் நர்த்தகி" என்ற கூற்று எனக்கு உடன்பாடு அன்று.
5. நானே ஒரு "தேவதாசி"யிடம் வீணை படித்திருக்கிறேன். அவருக்கோ, அவருடைய மக்களுக்கோ நடனம் பற்றிய தொடர்பு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
பிற பின்னர், தேவையானால்.


On Apr 19, 2012, at 7:16 AM, N. Kannan wrote:

2012/4/19 shylaja <shyl...@gmail.com>:

எல்லாம்  அந்தக்காலம்மா...எங்க பரம்பரையே ஆன்மீகத்தோட தொடர்பு கொண்டது.. எங்க
நாட்டியம் கோயில்களிலே வழிபாட்டின் ஒரு அங்கமா இருந்திச்சி.. ஆடும்
தேவதாசிக்குத்தான் அர்த்தமண்டபத்துவரை பூர்ணகும்பம் ஏந்தும் உரிமை உண்டு

இசைநாட்டியத்தின் பெட்டகமாக இருந்தவர்களிடமிருந்து கலையைக்கற்ற வெளி உலகம்
இன்று அவர்களை எண்ணிப்பார்க்காதது மட்டுமல்ல நிராகரித்தும் விட்டது.
‘மாதவி பிறந்தகுலத்தில்பிறந்தவள் நான்’ என்கிறார்  இந்திரா ராஜன்  சென்னையில்
நாட்டியப்பள்ளி நடத்துகிறார் பல பிபலநடனமங்கையர்கள் இவரது
நாட்டியக்கூடத்திலிருந்து வந்தவர்கள்..


இந்த இரண்டு பாயிண்டும் முனைவர் ராஜம் அவர்களுக்கு பதில் சொல்லிவிடுகின்றன.

நாட்டியத்திற்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பு என்பது சிந்து சமவெளி
காலத்திலிருந்து உள்ளதாக பேரா.நாகராஜன் சுட்டி காட்டுகிறது.

khajuraho dance festival என்று கூகுள் செய்தால் மிக அழகிய படங்கள்
கிடைக்கும். பிரபல ஒடிசி வித்வான் கேளுசரண் மகோபாத்யா கஜூராஹோ/கொனாரக்
கோயில் சிற்பங்களிலிருந்துதான் தன் நடன அடைவுகளை அமைக்கிறார் என்று
சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தில் கூட பெருவுடையார் கோயில் கர்ணங்களைப் பார்த்து நடனமாடிய ஒரு
நர்த்தகியுண்டு. எம்ஜிஆர் காலத்தில் அவர் அரசு நர்த்தகியாக இருந்தார்.

தேவதாசிகளின் கடைசிப் பெண் என்று ஒருவரை சமீபத்தில் போரூர் கோயிலில்
நடந்த நடனாஞ்சலியில் சந்தித்தேன்.

நம் ஆலயம் புனிதமானதுதான். ஆயினும் கோயிலில் கோட்டான்கள்
புகுந்துவிட்டதால்தான் ஒரு பராசக்தி படம் தோன்றியது. உள்ளதை உள்ளபடி
பார்க்கக் கற்றுக் கொண்டால் மேற்கொண்டு பிழைகள் நடைபெறாமல் தவிர்க்கலாம்.
அவ்வளவுதான்.

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Apr 22, 2012, 12:13:01 AM4/22/12
to மின்தமிழ்
வள்ளுவம் கடிந்துரைக்கும் வரைவின் மகளிர்
சமுதாயத்தின் ஓர் அங்கமாக இருந்து வந்துள்ளனர்.

பொது மகளிர் வேறு; ருத்ர கணிகையர் வேறு.
பொன்விலை மகளிர், பூவிலை மகளிர் சிலம்பில்
இடம் பெறுகின்றனர். ஆலயத்தின் ஆடல் மகளிர்
காலப்போக்கில் இழி நிலை அடைந்தது
வேறு விஷயம்.

’ந்ருத்தம்’ உபசாரங்களில் ஒன்று
என்பதால் ஆலய வழிபாடு பரவலான
காலகட்டத்தில் அதற்கென ஒரு பெண்பாலர்
குழாம் ஏற்பட்டது. பின்னர் இவர்களது நிலை
சீர்கேடடைந்ததும் வரலாற்று உண்மை.

கணிகை பொன்னனையாளுக்காகவே
ஒரு திருவிளையாடல் நிகழ்ந்தது;
’திருப்புகழ்’ எனும் அருட் களஞ்சியம்
வெளி உலகுக்குத் தெரிய வந்ததே
இக்குலப் பெண்மணி ஒருத்தியால்தான்.

குஜராத் ஸோமநாதர் ஆலயத்தில் நவராத்ரி
சமயத்தில் கணிகையிடம் தேவியை
ஆவாஹநம் செய்து ஆராதிக்கும் (கௌல
மார்கம்) வழக்கமும் இருந்துள்ளது

தேவ்

Hari Krishnan

unread,
Apr 22, 2012, 1:48:39 AM4/22/12
to mint...@googlegroups.com


2012/4/22 DEV RAJ <rde...@gmail.com>

கணிகை பொன்னனையாளுக்காகவே
ஒரு திருவிளையாடல் நிகழ்ந்தது;
’திருப்புகழ்’ எனும் அருட் களஞ்சியம்
வெளி உலகுக்குத் தெரிய வந்ததே
இக்குலப் பெண்மணி ஒருத்தியால்தான்.

அருணகிரிநாதருடைய தாயாரே ருத்திர கணிகையார்தாம்.  இதை ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணத்தில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் விஸ்தாரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  பரத்தையர், கணிகையர், ருத்ர கணிகையர் என்று மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்.  ஏழெட்டுப் பக்கங்களுக்கு ஓடும் விளக்கம்.  தேவைப்பட்டால் பாடல்கள்--பொருள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து இடுகிறேன். 

ஆனால் ஒன்று. கணிகையர் என்போர் நடன மகளிர் அல்லர். All statistics are made of data but not all data can become statistics என்பதுபோலத்தான் இதுவும்.  

தமிழ்நாட்டில் ஆலயங்களில் ஆடக்கூடாது என்ற சட்டம் உண்டு.  இந்தச் சட்டம் இயற்றப்படக் காரணமாக இருந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள்.  பத்மா சுப்பிரமணியம் அவர்களுடைய பேட்டியில் (இப்போது செய்து கொண்டிருப்பது இதுபோன்ற பேட்டிகளை ட்ரான்ஸ்க்ரைப்--எடிட் செய்வது--புத்தகமாக வெளியிட) சொல்கிறார்: ‘ஆலயங்களில் நடனமாடக் கூடாது என்ற சட்டத்தை இயற்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.  அதை முதன்முதலாக உடைத்தவள், மீறியவள், பாப்பாத்தியாகிய நான்’ என்று பலத்த சிரிப்புடன் சொல்கிறார்.

N. Kannan

unread,
Apr 22, 2012, 6:36:22 AM4/22/12
to mint...@googlegroups.com
2012/4/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> சரி .. எப்போதான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று-ன்னு தொடரப் போகின்றதோ இந்த
> இழை..!!


சுபா

தடையின்றித் தொடரும். கிளைத்தல் இயல்பானதே. அதில் என்றும் எனக்கு
வருத்தம் கிடையாது. சொல்ல இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. நீரை நீக்கி
பாலை மட்டும் பின்னால் நம் பவளா வழங்குவார். கவலையற்க! :-)

க.>

N. Kannan

unread,
Apr 22, 2012, 12:26:06 PM4/22/12
to mint...@googlegroups.com
ஆலயங்களின் தோற்றுவாய் என்ன? யாரால் மிகச் சரியாகக் கூறவியலும்? எங்கிருந்தோ தத்துவங்கள் பிறக்கின்றன. கவிதை பிறக்கிறது. இசை வருகிறது. அதே உந்து சக்திதான் பிரம்மாண்டமான கோயில்களையும் உருவாக்கியுள்ளது. இது ஒரு பார்வை.

பிறப்பு என்பதே ஒரு பரிதவிப்பு. பலருக்கு அப்படித்தோன்றுவதில்லை என்பதும் உண்மை. கண்டதே காட்சி. கொண்டதே கோலம் என்று இருப்போரே அதிகம்! ஆயினும் பரிதவிப்பு உள்ளோருக்கு இறைவன் தேவைப்படுகிறான். இந்த existential angst என்பது பாடாய், படுத்தி எடுக்கிறது. எல்லாவற்றிற்கும் பொருள் கேட்கிறது அறிவு. அது ஒரு புறம் இருக்க, புகலாய் ஓரிடத்தில் வந்து சேரும் போது இறைவனிடம்தான் தஞ்சம் புக வேண்டியுள்ளது. பாரதியின் புகல் வாழ்வில் பாடியதுதான், `உலகத்து நாயகியே! எங்கள் முத்து மாரியம்மா!` என்பது. மாரியம்மனுக்கு கோயில் சிங்கப்பூரில் இருக்கிறது, மலேசியாவில் இருக்கிறது. லண்டனிலும் இருக்கிறது. லண்டனில் தோன்றிய ஆதி பழம் கோயில்களில் டூடிங் சாலையில், ஒரு ஷாப்பிங் ஆர்கேடை கோயிலாக மாற்றிய ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலும் ஒன்று!

Inline image 1

எந்த இடம் என்பது முக்கியமில்லை. தன் நம்பிக்கைக்கு பாத்திரமான இறைவன் கூட இருக்க வேண்டுமென்ற குமுகாய உளநெருக்கலே கோயில்கள் உருவாகக் காரணமாகின்றன எனத்தெரிகிறது!

லண்டனின் இன்னொரு மூத்த கோயில் உயர்வாசல் குன்று முருகன் கோயிலாகும். இக்கோயில் பழைய சர்ச் ஒன்றுக்குள் உருவானது. கீழேயுள்ள விழியத்தைப் பாருங்கள். எப்படி ஒரு கோயில், இன்னொரு கோயிலுக்குள் குடிகொண்டு இருக்கிறது என்று!


Inline image 2

ஆக, ஆலயம் என்பதோர் உளவியல் நெருக்கடி! கோயிலென்று வந்துவிட்டால் புனிதம் தானே குடிகொண்டு விடுகிறது. இக்கோவிலுக்கு நேர்ந்து கொண்டு, அலகு குத்தி காவடி எடுப்போர் ஏராளம். கீழேயுள்ள வலைப்பதிவைக் காணுங்கள்.

http://www.londonhindutemples.com/2011/07/highgatehill-murugan-temple-200a.html

தமிழகத்தில் இருக்கும் போது கோயிலின் தேவை பற்றிய கேள்வியே எழுவதில்லை. ஏனெனில் அது அங்கு இருக்கிறது. இருப்பதால் முடிந்த மட்டும் அழுக்குப் படுத்த முடிகிறது. கஷ்டப்பட்டு இடம் வாங்கி, அரசியல் பேரம் பேசி ஒரு இடம் வாங்கி அங்கு கோயில் கட்டிக் கும்பிடும் போதுதான் கோயிலின் அருமை புரியும்!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதுதான் எவ்வளவு உண்மை.

நா.கண்ணன்


HighgateMurugan.jpg
Muthumariyamman.jpg

கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 4:46:18 PM4/22/12
to mint...@googlegroups.com
வணக்கம்.
‘மாதவி பிறந்தகுலத்தில்பிறந்தவள் நான்’ என்கிறார்  இந்திரா ராஜன் 
 திருப்பூவணம் உற்சவரை, ஸ்ரீ பொன்னனையாளுக்கு மகன் போன்றவர் என்கிறது புராணம்.

அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Apr 22, 2012, 5:12:51 PM4/22/12
to mint...@googlegroups.com
பண்டிட்ஜி அவர்களுக்கும்
ஐயா ஹரிகி அவர்களுக்கும் வணக்கம்.

2012/4/22 DEV RAJ <rde...@gmail.com>

’ந்ருத்தம்’ உபசாரங்களில் ஒன்று
என்பதால் ஆலய வழிபாடு பரவலான
காலகட்டத்தில் அதற்கென ஒரு பெண்பாலர்
குழாம் ஏற்பட்டது.

1359   உரைத்திடினிந்தவுலகின்மேலாகியோதரிதாயநால்வேத

சிரப்பொருளாகித்திகழ்ந்திடுமிந்தத்திருவெழுத்தஞ்சினைச்சேர்த்து

விரித்தியாமிவணேமேவுபதேசம்விதிப்படிவிளம்பியானந்த

நிருத்தமாடுதுநுமுளக்கமலமதாநிகழ்திருவம்பலந்தன்னில்

Tthamizth Tthenee

unread,
Apr 23, 2012, 1:27:51 AM4/23/12
to mint...@googlegroups.com
"எந்த இடம் என்பது முக்கியமில்லை. தன் நம்பிக்கைக்கு பாத்திரமான இறைவன் கூட இருக்க வேண்டுமென்ற குமுகாய உளநெருக்கலே கோயில்கள் உருவாகக் காரணமாகின்றன எனத்தெரிகிறது!"
 
 
சத்தியமான  வார்த்தைகள்
 
அதனால்தான்  சென்னையில் ஆட்டொ ஸ்டாண்ட் களிலும் ஒவ்வொரு தெரு முக்கிலும் , ஒரு சிறு வினாயகர்  கோயிலாவது இருக்கிறது
 
நாத்திகரோ ,ஆத்திகரோ  அரசியல்வாதிகளை  சந்தோஷப்படுத்த நாத்திகர் போல் நடித்தாலும்  விபத்தில்லாமல் வாகனத்தை ஓட்டி பொருள் ஈட்டவேண்டும் என்னும் எண்ணமுடையவராகவே இருப்பர் "குமுகாய உளநெருக்கல்"   காரணமாகவே 
இப்படிப்பட்ட  சிறு கோயில்கள் உருவாகின்றன.
 
 
ஆக மொத்தத்தில்  மனிதர்கள் தங்கள்   குமுகாய உளநெருக்கல்களுக்கு ஒரு வடிகால் தேவை என்று உணர்ந்துதான் ஆலயங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
 
"நடுக்கடலில் தத்தளிக்கும் போது  பிடித்துக் கரை சேரத் துடிக்கும் உள்ளத்துக்கு ஏதேனும் ஒரு சிறு மரத்துண்டு கிடைத்தாலும்  அதுவே கடவுளாகத் தோன்றும்"
 
அப்படிக் கரை சேர்ந்த பிறகு அந்த மரத்துண்டை மறந்து போகும் மனிதர்களுக்கு இடையே  நன்றி மறவாத  சில நல்ல உள்ளங்கள்  நன்றிக் கடனாக  அந்த மரத் துண்டையே   தாம் இருக்கும் வரை கடவுளாகக்   கருதி  பத்திரப்படுத்தி வைத்து  அதையே தெய்வமாக வணங்குவோரும் இருக்கிறார்கள்.
 
இதனால்தன்  நட்ட கல்லும் தெய்வமே  நாதன் உள்ளிருக்கையில் என்னும் சொல்வழக்கு தோன்றியதோ என்று தோன்றுகிறது
 
அப்படி ஒவ்வொரு ஆபத்திலும் மனிதர்களைக்  காப்பது எதுவாயினும்   அதை தெய்வமாகவே வணங்குதல் மனிதர்க்கு மரபு,
 
அதனால்தான் கிராமங்களில்  தங்களைக் காக்க ஒரு தெய்வத்தை, அதுவும் தங்களுக்காக தியாகம் செய்த ,அல்லது தங்களைக் காத்து உயிர் நீத்த மனிதர்களையும், மற்ற பிற பறவைகள், விலங்குகள் போன்றவற்றையும் உருவமாக செதுக்கி வைத்தோ  ,உருவாக்கி வைத்தோ அதை வணங்கும்  மரபு ஏற்பட்டிருக்கும் என்பது என் அனுமானம்.
 
தெய்வம் தோன்றுமா? என்னும் கேள்வி பல காலமாக நம் சிந்தனையில் இருக்கிறது ,அதை ஒட்டி விவாதங்களும் தோன்றுகின்றன.
 
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
 தோன்றலின் தோன்றாமை நன்று"
 
என்னும் வள்ளூவன் வாக்கு கூட  புகழ் அடைந்தால்தான் தோன்றவேண்டும் இல்லையேல் தோன்றிப் பயனில்லை  என்பதை உணர்த்துமாறு அமைந்திருக்கிறதோ!
 
 
 
முதன் முதலில் இப்படிப்பட்ட குமுகாய உணர்வுதான் ஆலயங்கள் ஏற்பட வழி வகுத்தன.
 
அப்படி ஏற்பட்ட சிறு ஆலயங்களை   இயற்கைச் சீற்றத்திலிருந்து  தங்களைக் காத்துக்கொள்ளவும்,    எதிரிகளிடமிருந்து  தங்களைக் காத்துக்கொள்ளவும் யோசித்து பெரிய மதிற் சுவர்களையும் எழுப்பி மக்கள்    தஞ்சமைடையும்  பொது இடங்களாக மாற்றி  வைத்தனர்.
 
அப்படித் தஞ்சமடைந்த மக்கள்  அந்தப் பொது இடங்களால் தாங்கள் காப்பாற்றப்பட்டதை உணர்ந்து  ஆலயங்களின் அவசியத்தை உணரத் தொடங்கி ,ஆலயங்களைப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தையும் உணர்ந்து ஆலயங்களைப் பராமரிக்கவும் தொடங்கினர்.
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
2012/4/22 N. Kannan <navan...@gmail.com>
It is loading more messages.
0 new messages