
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திருப்பாசேத்திக்கு முன்னால் மடப்புரம் காளி கோவில் உள்ளதே அங்கு சென்றீர்களாமிக பிரசித்தி பெற்ற கோவில்
வணங்கம்.
அருமையானதொரு பதிவு.
திருப்பாச்சேத்தி அருகில் உள்ள ஆவரங்காடு கிராமம் வெட்டு குத்து இவற்றிற்குப் பேர்போனது. கொலைகளில் பயன்படுத்தப்பெற்ற அனைத்து ஆயுதங்களும் திருப்பாச்சேத்தியில் தயாரிக்கப்பட்டவை.
எனவே தயாரிப்பில் இருந்தவர்கள் கொலை வழக்குகளில் முக்கிய சாட்சிகளாகக் காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அழைந்தே நொடித்துப் போயினர்.
தொழிலும் தேய்ந்து போனது.
ஊரெங்கும் இருந்த பட்டரைகள் இப்போது ஒன்றிரண்டாக உள்ளன.
On 05-Mar-2016 2:25 pm, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
> வணக்கம்.
>
> தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
>
>
>
>
> தமிழகத்தின் திருப்பாச்சேத்தி என்னும் ஊர் நீண்ட காலமாக அரிவாள் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ஒரு ஊர். சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின் போது இப்பகுதியில் இருக்கும் கொல்லர்கள் மூலமாகத்தான் இங்கு போர் ஆயுதங்கள் செய்யப்பட்டன. மருது பாண்டியர்கள் சிவகங்கையை ஆண்ட சமயத்தில் வெள்ளையர்களை எதிர்த்து செய்த போரில் பயன்படுத்திய
கைத்துப்பாக்கிகள் (மின்தமிழில் துப்பாக்கிக் கவுண்டர் இழை) ஈட்டிகள், வீச்சு அரிவாள்கள், வெட்டுக்கத்திகள், பாதுகாப்பு கேடயங்கள் போன்றவை திருப்பாச்சேத்தியில் தான் தயாரிக்கப்பட்டன.
>
> தமிழகத்தில் தற்சமயம் புழக்கத்தில் உள்ள அரிவாள் வகைகள் காடுகளை வெட்ட, விவசாயப் பணிகளுக்காக, தேங்காய் மட்டையை உரிக்க என்பதோடு கிராமிய கோயில்களில் நேர்த்திக் கடன் சார்த்த என வெவ்வேறு வகைகளில் பயன்பாட்டில் இருக்கின்றன. அரிவாள் என்றால் உடன் நம் சிந்தனையில் தோன்றுவது திருப்பாசேத்தி அரிவாள் அல்லவா? அந்த திருப்பாச்சேத்தி பகுதியில் சந்தைச்சாலையில் இருக்கும் ஒரு அரிவாள் செய்யும் பட்டறையில் அரிவாள் செய்யப்படுவதை இந்த விழியப் பதிவில் காண்போம்.
>
> கால மாற்றத்தில் திருப்பாச்சேத்தி அரிவாள் தொழிலும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் வன்முறை கலாச்சாரத்தில் பயன்படும் வகையில் இருப்பதாலும் தற்சமயம் அரிவால் பட்டறை நடத்துபவர்கள் சில கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகின்றது. பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலையும் பாதுகாப்பான முறையில் அமையவில்லை. கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கு அருகிலேயே மணிக்கனக்காக உட்கார்ந்து தான் உருவாக்கும் அரிவாள் ஒவ்வொன்றையும் தட்டி தட்டி செம்மையாக்கும் பனியில் ஈடுபடும் தொழிலாலர்களின் நிலை வருத்தப்படக்கூடிய வகையில் தான் இருக்கின்றது. இவ்வகை தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் அமைய வேண்டியதை வலியுறுத்த வேண்டியதும் இது தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டியதும் அவசியமே.
>
> ஏறக்குறைய 6 நிமிடப் பதிவு இது.
>
> விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2016/03/blog-post.html
> யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=iXl05N8wnJQ&feature=youtu.be
>
> பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
>
> நன்றி: திருமதி.யோகலட்சுமி, டாக்டர்.மலர்விழி மங்கை
>
> அன்புடன்
> முனைவர்.சுபாஷிணி
> [தமிழ் மரபு அறக்கட்டளை]
>
--
கண்ணன் அவர்களே எப்புடி எங்க entry.
That's Dr.Suba.But i could 'nt expect this shock. Now l consider as a women's day
gift for me from our beloved THF.
Thanks a lot.