Navaratri

31 views
Skip to first unread message

Jana Iyengar

unread,
Sep 25, 2014, 8:00:17 AM9/25/14
to mintamil, J.K. Babla, Miku Agencies, Ashok Kumar, Aniruddh Iyengar, ATUL SHAH, Anirudh Iyer, Apurva Barbhaya, bharat savla, G Baskaran Nair, anjali borgaonkar, chandrashekhar ghag, Chandrakant Gaitonde, Lion Vijay Havelia, Vinod Thukral - MD - Caple Traders, chambamani, Dr. G. H. Kuchan, dr_jai...@yahoo.in, desigan srinivasan, drmanikruia, Dwarka Jalan, francis...@gmail.com, G Ramasamy GR, PICHUMANI G, P Srinivasan, Lion Hetal Pathak, Hansa Shah, I, Rukmani Iyengar, Innamburan S.Soundararajan, Bharat Jethwa, Jagdish Jani, srinivasan ramaswamy, ksheeroo, Mudassir Khwaja, Ap Kannan, Raju Manwani, Ramakrishana Murthy, Shyam Malpani, Gopi Nair, Aravind N, Nilesh Gaikwad, n zed, nandkisho...@hotmail.com, Nanu Sodha, PRK MURTHY, Anil Panchal, Amit Patel, Parag Parekh, Jayendra Parekh, Sundararajan Ramaswamy, Sharadchandra Relekar, Subhash Udaipuri, LION J KRISHNA SANKAR, MJF LION SACHIN RATNAPARKHI, pankaj shah, Pankaj Bafna, uday...@windalsprecision.com, vishwanath...@gmail.com, Santosh Shetty, Dr Pravin Chhajed, Dr sharad Ruia, Prashant Patil, Lion KL Parmar, Muralidharan Vedantaubhaya, rmd1956, Drhemanth Dugad


--
Jana
9ratri.pdf

N. Ganesan

unread,
Sep 25, 2014, 8:21:51 AM9/25/14
to mint...@googlegroups.com, vallamai, Santhavasantham
On Thursday, September 25, 2014 5:00:17 AM UTC-7, iyenga...@gmail.com wrote:
--
Jana

நன்றி, ஜனார்தனையங்கார்! இந்தக் கொற்றவை எந்த ஊரில் இருக்கிறாள்?

தமிழின் பழைய கொற்றவை வாழ்த்து:

மூவிலை நெடுவேல் ஆதி வானவன்
இடமருங்கு ஒளிக்கும் இமையக் கிழவி
தனிக்கண் விளங்கு நுதற்பிறை மேல்ஓர்
மிகப்பிறை கதுப்பிற் சூடி வளைக்கையின்
வாள்பிடித்து ஆளியேறித் தானவன்
மாளக் கடும்போர் கடந்த குமரி
மூவா மெல்லடித் திருநிழல்
வாழி காக்கவிம் மலர்தலை யுலகே!

சங்க இலக்கியம் கொல்லிப்பாவை என்பதும், மாமல்லபுரத்தில் மயிடாசுரனுடன் போர்புரிவதும் இக் கன்யாகுமரியே.

இந்தியாவில் 4500 ஆண்டுகளாக கொற்றி/துற்கை வழிபாடு:

http://nganesan.blogspot.com/2013/07/crocodile-korravai-ivc-cult-2007.html

ஐராவதம் மகாதேவன் ஜல்லிக்கட்டு என்னும் முத்திரை ஆராய்ந்து பார்த்தால் கொற்றவை மகிடனுடன் (Mahisha, Mahesha?) செய்யும் போர் எனத் தெரிகிறது:

http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

























*சிந்தின் கொற்றி - கொல்லிப்பாவை*
வாழி காக்கஇம் மலர்தலை உலகே!

N. Ganesan

unread,
Sep 26, 2014, 11:27:32 AM9/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Thursday, September 25, 2014 5:21:51 AM UTC-7, N. Ganesan wrote:
On Thursday, September 25, 2014 5:00:17 AM UTC-7, iyenga...@gmail.com wrote:
--
Jana

நன்றி, ஜனார்தனையங்கார்! இந்தக் கொற்றவை எந்த ஊரில் இருக்கிறாள்?

ஆண்டவன்  எங்கே  எனக்கேட்காதீர்!
        அன்னையாய் வருகின்றான்!
   அவனது  சார்பில் அனைவர்க்கும்  தாயாய் 
        அவனே  வருகின்றான்!
தாண்டவ  மாடிய  ஈசனும்  ஒருநாள்
        தாயும்  ஆனவனாய் 
   சங்கடம்  நீக்கிடக்  காவிரி  தாண்டி 
         தாயாய்  மருந்தளித்தான்!
 
குட்டிகள்  பெற்ற பன்றியும் இறக்கக் 
      கூக்குரல்  தனைக் கேட்டே
   கொண்ட வருத்தம்  தீர்த்திட  ஈசன் 
       குழைந்தோர்   தாயானான் 
இட்டமு டன்தாய்  ஏனமாய்த்  தோன்றி
       இரக்கத் தின்வடி வாய்     
   இளம்பன்றிக்கும் பாலினை ஊட்டி 
        எல்லாம் ஒன்றென்றான்!

பெற்றுவ  ளர்த்தல்  கற்றுத்  தருதல் 
        பிறரிடம்  பழக்கிடுதல்
   பேணிய  நட்பில்  பிறரைநே  சித்தல் 
        பிழைகளைப்  பொறுத்திடுதல்   
சுற்றம்  அறிதல்  தோழமை கொள்ளல் 
         சுடர்மிகும்  அறிவூட்டல் 
     துயரம  னைத்தையும் போக்குதல்  யாவும்  
         தூயதாய்த்  தொண்டன்றோ?

ஆடும் பூனையும்  கோழியும் நாய்களும்  
        அருமைச்  சேய்களையே 
   ஆபத்தின்றிக்  காலடிக்குள்ளே 
         அணைத்துடன்  நடந்திடுமே!
மாடும் கன்றின்  மேனியை  நாவால்
           வளைத்துத்  தூய்மைசெயும்; 
     மடிப்பால்  அளிக்கும்;  துள்ளிடச்  செய்யும்; 
            வாழ்வியல் கற்பிக்கும் 
 
 பெற்றதாயை  வணங்கிடும்  மைந்தர் 
          பெரும்புகழ்  பெற்றிடுவார்!
      பிறந்த நாட்டை  அன்னை என்றே 
           பேணிக் காத்திடுவார் 
  உற்ற  தெய்வம் உமைகலைமகளாய் 
           ஓங்கிய கொற்றவையாய் 
       உலகைப் படைத்து  வளர்த்துக் காப்பாள் 
            ஒண்புகழ்  போற்றிடுவோம்!

நன்றி அன்புடன் புலவர் இரா.இராமமூர்த்தி.    
 
On Thursday, September 25, 2014 8:19:26 PM UTC-7, meev1955 wrote:
பெற்ற தாயை, அவளின் பெருமையை மிக நெருக்கமாகச் சொல்லும் கவிதை. நன்றி.
அன்புடன்,
மீ.வி.


திருவிளையாடற் புராணத்தில் ஒரு புராணத்தை நயமாகப் பாடித்தந்துள்ளார்கள்.
மதுரையில் மண்டபத் தூண்களில் நாயக்கர் காலச் சிற்பமாக இருக்கிறது.

அன்புடன்
நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages