----------
கீழடி அகழாய்வில் நெருப்பு மூலம் பொருட்கள் தயாரிக்கும் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடியில் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதன் அருகே நெருப்பு மூலம் இரும்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பொருட்கள் தயாரித்ததற்கு அடையாளமாக கருப்பு நிற சாம்பல் துகள்கள் இருந்தன.
கீழடி, அக்காலத்தில் தொழில் நகரமாக இருந்ததற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/00a24d42-8255-4020-b703-9c80ae2cc630o%40googlegroups.com.
கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கீழடி பகுதி தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இவை வலுச் சேர்ப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை தற்போது அகழாய்வுகளை நடத்திவருகிறது. இது கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாவது கட்ட அகழாய்வாகும்.
இதில் கொந்தகை பகுதி ஈமக் குழிகள் அமைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அகரம் பகுதி மக்கள் வாழ்ந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள், தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகின்றன. அதில், கீழடி பகுதியில் வெட்டப்பட்ட ஆய்வுக் குழி ஒன்றில், இரும்பு உலை போன்ற அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது.
கீழடியில் நடந்துவந்த அகழாய்வில் ஜூன் 20ஆம் தேதியன்று 1.53 மீட்டர் ஆழத்தில் ஒரு எடை கல் கண்டெடுக்கப்பட்டது. இந்த எடைக் கல் கறுப்பு நிறத்தில் உருளை வடிவில் இருந்தது.
இதன் அடிப்பாகம் தட்டையாக இருந்தது. ஏதன் மேல் பகுதி பளபளப்பாக்கப்பட்டிருந்தது. இதன் பதினெட்டு கிராம். இதன் உயரம் 20.74 மி.மீட்டராகவும் அகலம் 23.59 மி.மீட்டராகவும் இருந்தன. இதனுடன் இரும்பு, தாமிரப் பொருட்கள் கிடைத்தன.
ஜூன் 25ஆம் தேதியன்று 1.22 மீட்டர் ஆழத்தில் ஒரு எடைக் கல் கண்டெடுக்கப்பட்டது.இதுவும் கறுப்பு நிறத்தில் பளபளப்பாக்கப்பட்டு, உருளை வடிவில் இருந்தது. இதன் எட்டு கிராம். இதன் உயரம் 16.40 மி.மீட்டராகவும் அகலம் 18.80 மி.மீட்டராகவும் இருந்தது. இதனுடன் இரும்புப் பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூன் 24ஆம் தேதியன்று 1.5 மீட்டர் ஆழத்தில் 150 கிராம் எடையுடைய எடை கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் கறுப்பு நிறத்தில் பளபளப்பாக்கப்பட்டு, உருளை வடிவில் இருந்தது. இதன் நீளம் 41.26 மி.மீட்டராகவும் அகலம் 47.11 மி.மீட்டராகவும் இருந்தன. இதனுடனும் ஒரு இரும்புப் பொருள் கிடைத்தது.
ஜூலை 3ஆம் தேதியன்று நடந்த அகழாய்வில், 1.45 மீட்டர் ஆழத்தில் 300 கிராம் எடையுள்ள எடைக் கல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் கறுப்பு நிறத்தில் பளபளப்பாக்கப்பட்டு, உருளை வடிவில் இருந்தது. இதன் நீளம், அகலம் ஆகியவை 57.78 மி.மீட்டராக இருந்தன. இந்த எடை கல்லுடன் இரும்பு, செம்பு, கண்ணாடியிலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆகவே இதுவரை 8, 18, 150, 300 கிராம் எடையுடைய நான்கு எடைகற்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்தப் பகுதியில் அடுப்புக் கரி நிறைய இடங்களில் கிடைத்துள்ளது. 0.61 மிமீ ஆழத்தில் உலை ஒன்று இருந்த தடயமும் கிடைத்துள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு, இக்குழிகளில் கிடைத்துள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை இப்பகுதி தொழில் கூடமாக செயல்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.
எடைக் கற்கள் மூலம் இப்பகுதியில் வணிகமும் நடைபெற்றிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"இந்த எடை கற்களின் அளவு 8 கிராமிலிருந்து 300 கிராம் வரைதான் என்பதால், உலோகப் பொருட்களை எடைபோட இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்" என்கிறார் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கும் மாநில தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம்.
தற்போது தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, அகரம், கொடுமுடி என பல இடங்களில் மாநில தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுகள் நடந்துவருகின்றன..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1f70b124-abcd-45a0-9dc8-0e1147d78ad2o%40googlegroups.com.
சிவகங்கை அருகே இடையமேலூரில் தாது பஞ்ச கால கல்வெட்டைக் கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா கண்டுபிடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''இந்தக் கல்வெட்டு இடையமேலூரில் கங்காணி ஊருணி (எ) கங்கா ஊருணிக் கரையில் உள்ள விநாயகர் கோயில் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது இரண்டரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் உடையது. மொத்தம் 13 வரிகள் எழுதப்பட்டுள்ளன.
அதில் ‘உ’ எனத் தொடங்கி 1877-ம் ஆண்டு மேற்படி ஊரிலிருக்கும் பெரி.மு.நா. நாச்சியப்பன் ஆதிமூல கடவுளர் பேருக்கு வெட்டி வைத்திருக்கும் சண்முக நதி தெப்பக் குளத்திலிருந்து தண்ணீர் பெறுகிற கால்வாய் மேலடி சொல்வார்க்கு திருத்திக் கொடுத்தது தாது வருஷம்’ என எழுதப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கல்வெட்டில் எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன. 10 மற்றும் 11-ம் வரிகள் மிகவும் தேய்ந்து தெளிவில்லாமல் உள்ளன. தமிழ் ஆண்டுகளில் தாது ஆண்டு பத்தாவது ஆண்டாகும். தாது ஆண்டான 1876-77இல் ஏற்பட்ட பஞ்சம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்து ஆடியது. தாது பஞ்சத்தை சென்னை மாகாணப் பஞ்சம் என்றே அழைக்கின்றனர். இப்பஞ்ச காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தனர். இதில் மக்கள் கொத்துக் கொத்தாக உணவின்றி இறந்தனர்.
கல்வெட்டில் சொல்லப்படுகிற நாச்சியப்பன் என்பவர் இலங்கை கண்டியை ஒட்டிய பகுதியில் தொழில் செய்து வந்துள்ளார். அதில் கிடைத்த வருவாயில் சொந்த ஊரில் ஊருணியை அமைத்துள்ளார். இத்தகவலை அவரது வம்சாவளியினரும், ஊர்மக்களும் தெரிவிக்கின்றனர்.
மேலும் தாது பஞ்ச காலத்தில் மழையில்லாததால் விவசாயம் பொய்த்துப் போனது. வறுமையில் இருந்த ஊர் மக்களுக்கு ஊருணியை வெட்டும் வேலையை வழங்கி வாழ்வாதாரத்தை அவர் பாதுகாத்து இருக்கலாம். தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்வதற்கான கால்வாயை ஊர்ச்சபை (அ) ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பது இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. மேலும் தாது பஞ்சகால கல்வெட்டு கிடைத்திருப்பது இன்றைய ஊரடங்கு சூழலில் மக்களின் துன்பத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது'' என்று கூறினார்.

மேல்மலையனூருக்கு பாண்டியர் ஆட்சிக்காலத்தில் 'ராஜேந்திரசோழ நல்லூர்' என்ற பெயர் வழங்கப்பட்டுளதாக, இராஜ நாராயண பெருமாள் கோயில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள இராஜ நாராயணப் பெருமாள் கோயிலில் தென்புற அதிட்டானத்தில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதாக விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
"கண்டறியப்பட்ட இக்கல்வெட்டில் மூன்றாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 30-வது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1298-ம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சோழர் ஆட்சி முடிந்து, பாண்டியர் ஆட்சி வந்தபோது இக்கோயில் கட்டப்பட்டதைத் தெரிவிக்கின்றது.
கல்வெட்டில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் பல்குன்றக் கோட்டத்தில், உத்தம சோழ வளநாட்டில் சிங்கபுர நாட்டில் மலையனூர் அமைந்திருந்ததைக் குறிப்பிடுகிறது. மலையனூர் என்ற பெயர் பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்டதைக் கல்வெட்டு கூறுகிறது.
மேலும், 'ராஜேந்திரசோழ நல்லூர்' என்ற பெயரும் மலையனூருக்கு இருந்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வூரைச் சேர்ந்த மாடமுடையான் காமன் பெருங்கன் எதிரி சோழ பல்லவரையன் என்பவர், இராஜ நாராயண பெருமாள் கோயில் கட்டியதைக் கல்வெட்டு கூறுகிறது.
'சிங்கபுரம்' என்பது தற்போது 'சிங்கவரம்' என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டின் மூலம் பாண்டியர் காலத்தில் பெருமாள் கோயில் கட்டப்பட்டதையும் அக்காலத்தில் இருந்த நாட்டுப் பிரிவுகள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. சோழர் காலம் தொடங்கி பாண்டியர் காலத்திலும் தற்காலம் வரை மலையனூர் என்ற பெயர் 1000 ஆண்டுகளாக தற்போது வரை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது".
இவ்வாறு ரமேஷ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்த சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைத்துள்ளது கொடுக்கூர் கிராமம்.
இங்கே தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செங்கல் சூளை கற்களுக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பூமிக்கடியில் பழமையான முதுமக்கள் தாழி, மதுக்குடுவை, எலும்புகள், பானை ஓடுகள், கீழடியில் கிடைக்கப்பெற்றது போன்று பெரிய செங்கற்கள் கிடைத்துள்ளன.
பழங்கால பொருட்கள் கிடைத்ததையடுத்து இப்பகுதி மக்கள் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியரும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளருமான ரமேஷ் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் கைப்பற்றி, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் குறித்து பிபிசி தமிழுக்கு விளக்கமளித்த விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியரும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளருமான ரமேஷ், "பழமைவாய்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ள மண் பானைகள், தாழிகள், எலும்புகள், மதுக் குடுவைகள் கிடைத்துள்ளது. இங்கே கிடைக்கப்பெற்ற மதுக்குடுவையைப் போன்று ஆதிச்சநல்லூரிலும் கிடைத்திருக்கிறது. ஆனால் இங்கே முழுமையாக கிடைக்கவில்லை, பாதி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் பழங்கால கட்டடங்கள் இருந்ததற்கு அடையாளமாக பெரிய செங்கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, கருப்பு மற்றும் சிவப்பு வடிவிலான பானைகள் கிடைத்திருப்பதன் மூலம் இவைகள் 2000 ஆண்டுகள் முற்பட்ட சங்ககாலத்தை சார்ந்தது என்பது தெரிகிறது. இதில் மேற்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால் எழுத்து பொறிக்கப்பட்ட அல்லது குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது," என்றார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர், "இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களை அங்கேயே பாதுக்காக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இதனை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தால் விழுப்புரம் அரசு கல்லூரியில் பாதுக்கப்படும். மேலும் இதுகுறித்த தகவல், தமிழக தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார் ரமேஷ்.
கிடைக்கப்பெற்ற தொல்லியல் பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
"கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கப் பெற்ற மண் குடுவைகள் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். கீழடியில் கிடைக்கப்பெற்றதை போல் பெரிய செங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இங்கே அகழாய்வு நடத்த வேண்டும். மேலும், கிடைத்த தொல்லியல் பொருட்கள் தொடர்பாக தமிழக தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஒரு வார காலத்தில் தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்," என தெரிவித்துள்ளார் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

சோழர் கால சிற்பமைவு கொண்ட ஒரு நடுகல்லும் அதனருகில் அழகிய சோழர் கால எழுத்தமைதி கொண்ட தனி கல்வெட்டும் இருந்தன. கல்வெட்டு படித்து ஆய்வு செய்த போது அது சோழமன்னன் முதலாம் பராந்தகனின் 15 -ஆவது ஆட்சி ஆண்டைச் சேர்ந்தது என்பதும் அவ்வூரைச் சேர்ந்த அரச அதிகாரியொருவர் அங்கு ஒரு ஏரியை வெட்டி அதன் பராமரிப்பு செலவுக்காக ஏரிப்பட்டி தானம் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல் இருப்பதையும் அறிந்தனர்.
மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிப்படைகளிலேயே இதுதான் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கிறது கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன.
காலத்தால் பழமையான இந்த கல்வெட்டில் தமிழியில் (தமிழ் பிராமி) எழுதப்பட்டிருக்கிறது. ஒரு எண்பட்டைத் தூணில் கிடைத்திருக்கும் இந்தக் கல்வெட்டில், 'எகன் ஆதன் கோட்டம்' என்ற வார்த்தைகள் கிடைத்துள்ளன.
அடுத்ததாக, வட்டெழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதில் 'இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.பி. 7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தமிழில் இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் 'பள்ளிப்படை' என்ற வார்த்தை இடம்பெற்ற பழமையான கல்வெட்டாக இது இருக்கலம் என மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இதற்குப் பிறகு அந்தக் கோயில் வளாகத்தில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையை விஜயரங்க சொக்கநாதன் ஆண்ட காலத்தில் கி.பி. 1722ல் இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மிகவும் விரிவாக அமைந்திருந்த இந்தக் கல்வெட்டில் 43 வரிகள் இடம்பெற்றிருந்தன.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் பெயர்களை வரிசையாகப் பட்டியலிட்டிருக்கும் இந்த கல்வெட்டு, அந்த கோயிலை பள்ளிப்படை சமாதி எனக் குறிப்பிட்டு, குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு உரிமையானது என கூறுகிறது.
"இதுவரை தமிழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், நடுகற்களில் சமண படுகைகளில்தான் கிடைத்திருக்கின்றன. முதல் முறையாக ஒரு தூணில் அந்த எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. தவிர, தமிழி எழுத்துகளில் புள்ளி வைக்கும் முறை கிடையாது. ஆனால், இங்கு கிடைத்திருக்கும் 'அதன் ஏகன் கோட்டம்' என்ற வார்த்தைகளில் நான்கு இடங்களிலுமே புள்ளிகள் இருக்கின்றன.
ஆகவே இது பிற்காலத் தமிழியாக இருக்கலாம். இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளில் ஆனைமலை கல்வெட்டில்தான் முதன்முதலில் புள்ளி இருந்தது. 'ட்' என்ற ஒரு எழுத்தின் மேல் இந்தப் புள்ளி அமைந்திருந்தது. ஐராவதம் மகாதேவன் அதனை கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டார். இந்தக் கல்வெட்டும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்" என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனரும் ஆய்வாளருமான சொ. சாந்தலிங்கம்.
இதுதவிர, கோட்டம் என்ற சொல் இதில் இடம் பெற்றிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழி கல்வெட்டில் இதுவரை கோட்டம் என்ற சொல் இதுவரை இடம்பெற்றதில்லை. பூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டில்தான் முதன்முதலாக கோட்டம் என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே கோட்டம் என்ற சொல் இடம்பெற்ற முதல் தமிழி கல்வெட்டும் இதுதான்" என்கிறார் சாந்தலிங்கம்.
'இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற வட்டெழுத்துக் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் பள்ளிப்படை என்ற சொல், அந்த இடம் பள்ளிப்படை கோவிலாக, அதாவது மறைந்தவர்களின் சமாதி மீது எழுப்பப்பட்ட கோவிலாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
"திருச்சுழியில் உள்ள சுந்தர பாண்டிய ஈஸ்வரன் பள்ளிப்படைதான் இதுவரை கிடைத்ததிலேயே பழைய பள்ளிப்படையாக கருதப்பட்டு வந்தது. இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால், இந்த கல்வெட்டை வைத்து இதனை பள்ளிப்படை என்று கொண்டால், இதுதான் பழமையான பள்ளிப்படையாக இருக்கும்" என்கிறார் சாந்தலிங்கம்.
மூன்றாவது கல்வெட்டான கி.பி. 1722 ஆண்டைச் சேர்ந்த விசயரங்க சொக்கநாதன் கால கல்வெட்டில் வரிசையாக நாயக்க மன்னர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, பாண்டிய மன்னர்களின் பெயரான நெடுஞ்செழியன் பெயரும் பராந்தகப் பாண்டியன் பெயரும் இடம்பெற்றிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது. "விடையாவும் நெடுஞ்செழியன் பராந்தக பாண்டிய ராசாகளின் பட்டயத்தில் கண்டபடி" என்று இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.

நெடுஞ்செழியன் என்ற பெயருடன் சங்ககால பாண்டியர்கள் மூவர் இருந்துள்ளனர். பராந்தக பாண்டியனின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இந்த மன்னர்களைப் பற்றி 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விசயரங்க சொக்கநாதனுக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
"இந்த இடம் தொடர்பான பட்டயங்கள் ஏதும் இருந்திருக்கலாம். அந்த பட்டயங்களில் இந்த மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அதை வைத்து விசயரங்க சொக்கநாதன் இந்த மன்னர்களின் பெயர்களையும் கல்வெட்டில் பொறித்திருக்கக்கூடும்" என்கிறார் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் வருகைதரு பேராசிரியரான சு. ராஜவேலு.
புகழ்பெற்ற வேள்விக்குடி செப்பேட்டில், சங்ககாலத்தில் வழங்கப்பட்ட நிலத்தை 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுகளைக் காண்பித்து திரும்பப் பெற்ற செய்தி இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ராஜவேலு.
தற்போது இந்த இடத்தில் உள்ள ஏகநாதர் கோவில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள 1942ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டிலும் அந்த இடம் ஜீவசமாதி என்றே குறிப்பிடப்படுகிறது.
---
The three-chambered historical site is on banks of Arjuna River at Sivakasi’s M Pudhupatti village; no idols, statues of god identified so far
27th August 2020
VIRUDHUNAGAR: A three-chambered rock-cut temple, believed to be 1,200 years old, has been identified on the banks of the Arjuna River at Sivakasi’s M Pudhupatti village. The structure, cut into the side of a block of limestone, was covered in thickets and debris until a week ago when residents in the locality chanced upon it.
Though archaeologists identified the structure as a rock-cut temple, no idol, statue, or relief of gods or goddesses has so far been identified inside the temple’s three chambers -- the garbhagriha (sanctum sanctorum), ardhamandapam, and maha mandapam. A 20-feet long limestone mound marks the entrance to it. There are traces of cement on the walls and in the ceiling.
Archeologists believe these might have been part of the repair carried out by devotees around 100 years ago. At several places inside the structure, the limestone is falling apart; there is a massive hole in the ceiling of the maha mandapam. Retired assistant director of the State Archeology Department Dr C Santhalingam said, “The temple is unique in three aspects.
First: It is a Sandhara-type of temple. There is no identified Sandhara-type rock-cut temple in India”. These temples have a circumambulatory passage (pradakshinapath) around the shrine. Not all temples have these passages, said sources. “Second: The temple has two circumambulatory passages; this is very rare. While one passage moves in a clockwise direction from the ardhamandapam, the second one is adjacent to the mahamandapam,” he added.
“Third: The temple is carved entirely out of limestone,” he said. The stone is considered an inferior type owing to its features. “This is the reason why there is no artistic design, sculpture, or carving in the temple. However, there are niches on both the sides of the entrance to the garbagriha. Moreover, there is a stone naga statue in the garbagriha,” said Santhalingam. The residents might have placed it there over a century ago to offer worship. The interior of the structure and the surrounding riverbank were cleaned by the local body.
‘From the Pandian Era’
The temple belongs to the early-Pandian era, around 8th century CE. It is similar to the Valli cave temple in Tiruchendur, which is carved out of sandstone, a rock similar in features to limestone, Santhalingam said.
---
The vessel, carrying copper and tin ingots used to make weapons and jewellery, sank off the coast near Salcombe in Devon and is thought to date back to 900BC. It was discovered by the South West Maritime Archaeological Group after a team of amateur researchers brought its cargo to the surface. The goods – 259 copper ingots and 27 of tin – were believed to be destined for Britain but collected from several different sources in Europe.
The discovery – which is one of the oldest ever – revealed the high level of sophistication maritime trade in Europe had reached, even in ancient times.
The find as a whole is testimony to the incredible seafaring capabilities of prehistoric Britons.
A bronze sword and three gold wrist bracelets, known as torcs, were also found at the spot, but the main body of the ship is thought to have perished.
A Bronze Age settlement is known to have existed close to where the wreck was found – the boat was probably attempting to land there when disaster struck just 300 yards from the shore.
The waters around this stretch of the Devonshire coast are notoriously treacherous.
Researchers theorised it was likely to have been powered with paddles and had a crew of around 15.
Engineer Jim Tyson, who took part in the dives, said in 2010: “You have something in your hands that had not seen the light of day in 3,000 years.
“The last person to do so must have died in the shipwreck.
“It shows definite communications and trade – these people were trading as we would these days.”
The British Museum took charge of the artefacts and valued them before giving the team a sum, which was not disclosed.
Experts at the University of Oxford are analysing the cargo to establish its exact origins.
Ben Roberts, a Bronze Age expert, told the Sunday Telegraph: “It is an incredibly exciting find.
“What we have here is really, really good evidence of trade. We don't get many shipwreck sites.
“It is very rare to get a snapshot of this level of activity. It is very possible there were also animals and people going across the Channel too.
“We hardly ever get to see evidence of this cross Channel trade in action. It is a huge amount of cargo.''
Devon’s coast is full of shipwrecks both old and new that have washed up over the years.
The nearby Salcombe Cannon wreck, which is protected, previously yielded Europe's largest collection of 17th-century Moroccan gold coins.
Another vessel dating back to the Bronze Age had earlier been discovered in Salcombe but was only found to hold 53 artefacts.
The team got their first hint about the latest ancient haul when small pieces of copper were found on the seabed.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/0ca74f0d-2595-4338-bf95-097c1c31a9edn%40googlegroups.com.
கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வரும் நிலையில், நகர நாகரிகங்களைச் சுற்றியே அகழாய்வு நடத்திக்கொண்டிருக்காமல் தொல்குடிகள் வாழ்ந்த ஊரகப் பகுதிகளுக்கும் அகழாய்வுப் பணிகளை நகர்த்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் தமிழ் மண்ணின் வரலாற்றையே திருத்தி எழுத முடியும் என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.
ராஜராஜனின் தாய் வானவன் மாதேவி மலைய மான்கள் என்ற தொல்குடியில் பிறந்தவர். கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் குலத்தில் பிறந்தவர். ராஜராஜனைப் பற்றியும் கண்டராதித்தனைப் பற்றியும் தெரிந்தவர்களுக்கு தொல்குடிகளான மலைய மான்கள் குலத்தையும் மழவராயர் குலத்தையும் பற்றி எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது.
இது குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன், ''தொல்குடிகள்தான் அரசுகள் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தவர்கள். இந்தியத் தொல்லியல் துறையும் மாநிலத் தொல்லியல் துறையும் இதுவரை ஆகழாய்வு செய்திருக்கும் அரிக்கன்மேடு, கொற்கை, அழகன்குளம், பூம்புகார் உள்ளிட்ட அனைத்து இடங்களுமே சங்க காலத்தில் வர்த்தக மண்டலங்களாக இருந்தவை.
அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் தலைநகரங்கள் போல் இருந்தவை. இவைதான் அரசின் கருவூலங்கள். ஆனால், ஒரு அரசின் தோற்றம், உருவாக்கம் என்பது தொல்குடிகளில் இருந்துதான் தொடங்கியது. இதை உணர்ந்துதான் இப்போது சீனா, எகிப்து, சுமேரியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் தொல்குடிகளைப் பற்றிய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அங்கெல்லாம் இப்போது ஊரகத் தொல்லியல் ஆய்வுகள் அதிகளவில் நடக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை ஏ.எல்.பாஷ்யம், ரோமிலா தாப்பர், செண்பகா லட்சுமி, விமலா பெக்லே போன்றவர்கள்தான் தொல்குடிகளின் பூர்விகத்தைத் தேடி ஊரகத் தொல்லியல் ஆய்வுகளை நடத்தியவர்கள். பாட்டாளி மக்களின் தொன்மை வரலாற்றை இந்தியாவில் பதிவுசெய்தவர்கள். ஆனால், தனிப்பட்ட ஆய்வாளர்கள் இத்தனை ஆர்வம் காட்டினாலும் மத்திய - மாநில தொல்லியல் துறைகள், ஊரகத் தொல்லியல் ஆய்வு குறித்து இன்னும் போதிய புரிதல் இல்லாமலே இருக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை நகரப் பண்பாட்டுத் தாக்கம் இல்லாத சங்க காலத்து ஊர்கள் ஏராளம் இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் நாங்கள் அப்படியான 375 ஊர்களை அடையாளம் கண்டு ஆய்வுகளை நடத்தி இருக்கிறோம். இந்த ஊர்களில் இருந்து சங்க காலத்து ஆயுதங்கள், மக்கள் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், தமிழ் எழுத்துகள் உள்ளிட்டவற்றைக் கண்டெடுத்திருக்கிறோம்.
இங்கெல்லாம் நமது தொல்லியல் துறையினர் இன்னும் முழுமையாக ஆய்வுகளை மேற்கொண்டால் இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தொல்குடிகளின் வரலாற்றை முழுமையாக அறிய முடியும். இதையெல்லாம் இப்போது அங்கு வசிக்கும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் சங்ககாலப் பெருமை கொண்ட ஊரில் நாமும் வாழ்கிறோம் என்ற உணர்வை அந்த மக்களுக்கு ஊட்ட முடியும். இதன் மூலம் தேசப்பற்றை வளர்ப்பதுடன் தொல்குடிகளின் பண்பாடு, கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் முடியும்.
தமிழை வளர்த்தவர்கள் தொல்குடிகள்தான். புறநனூற்றில் வரும் சங்ககாலப் புலவர்கள் 400 பேரில் தொண்ணூறு சதவீதம் பேர் ஊரகப்பகுதிகளில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட கிராமங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இதன் மூலம் சங்க காலத்தில் கிராமங்களிலும் வளமான கல்வியறிவு இருந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
இத்தனை சிறப்புகள் இருந்தும் ஊரகத் தொல்லியல் ஆய்வுகள் குறித்து நாம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். ஊரகத் தொல்லியல் ஆய்வுகள் குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமே இப்போது தன்னார்வத்தில் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி வருகிறது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் கா.ராஜன், பழநி அருகே பொருந்தல் என்ற கிராமத்தில் நடத்திய ஊரகத் தொல்லியல் ஆய்வில் கி.மு. 490-ம் ஆண்டைச் சேர்ந்த நெல்மணியைக் கண்டுபிடித்தார். இப்படி ஒரு சிலர் மட்டுமே தங்களது சுயமுயற்சியில் ஊரகத் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற ஆய்வுகள் ஊருக்கு ஊர் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், கீழடி, கொடுமணல் எனக் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் நிதி ஒதுக்கித் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படுகின்றன. அதுவும் தேவையான ஒன்றுதான் என்றாலும் அதற்கு நிகராக ஊரகத் தொல்லியல் ஆய்வுகளையும் ஊக்கப்படுத்த வேண்டிய நேரம் இது. இதற்காக ஒரு கிராமத்துக்கு 3 லட்ச ரூபாய் ஒதுக்கினாலே போதுமானது. இப்படிச் செய்வதன் மூலம் தொல்குடிகளைப் பற்றிய மேலும் பல வரலாற்று உண்மைகளை நாம் அறியமுடியும்.
ஏனென்றால் விவசாய உற்பத்தியில் தொடங்கி இரும்புத் தொழிற்சாலைகளைக் கண்டது வரை அனைத்தையும் நமக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் தொல்குடிகள்தான். அதுமாத்திரமல்ல... பண்டமாற்று வர்த்தகத்தையும் அதன் மூலம் அந்நியச் செலாவணி ஈட்டுவதையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படித்து வைத்திருந்தவர்கள் நம் தொல்குடிகள்.




