--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//தமிழை கடவுள் நிலைக்கு கொண்டு செல்லும்போது -- அது "ராமனாய் இருந்தால் என்ன? ராவணனாய் இருந்தால்"என்ற சிந்தை தான் நம் கம்பர் உள்ளிட்ட ஆழ்வார் மற்றும் எல்லா சான்றோர்களுக்கும் உள் நினைப்பாய் தோன்றி இருக்கிறது.//
தமிழை பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்,வண்தமிழ்,ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழவர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார்.
அதற்காக இணையக் கடலில் மூழ்கியுள்ளேன். ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ஞானத்தமிழ் என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக்கொண்டும் பெருமையடைகிறார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கண்ணன் ஐயா உங்கள் வைணத் தமிழின் நேர்த்தியைப்
படிக்கப் படிக்கத் தமிழைப் பக்திமொழியெனப் பகன்றதன்
சூட்சுமம் புரிந்தது.
On 06-Jun-2015 3:44 pm, "Bala Sundara Vinayagam" <balasundar...@gmail.com> wrote:
>
> இருந்தமிழ் என்றால் என்ன பொருள்? அதைச் சொல்லுங்கள் !
>
> 13.6.2015 சனிக்கிழமையன்று காரைக்குடி த.மு.எ.ச.கலை இலக்கியக்கூட்டத்தில் “நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் தமிழ்ச்சுவை” என்ற பொருளில் உரையாற்ற வாய்ப்பு அமைந்துள்ளது.
சொல்வதைக் கேட்கத் தாங்கள் காரைக்குடிக்கு வரவேண்டுமே:) :))
அரக்கர்கள் அனைவருமே சிவபக்தர்கலாகத்தான் காட்டப்படுகிறார்கள். தவம் செய்து வரம் பெரும் அவர்கள், அதனால் விளைந்த செருக்கால் அழிந்து போகிறார்கள்.
இருந்த தமிழ்..
இருக்கின்ற தமிழ்,
இருக்கவிருக்கும் தமிழ் _
இப்படியுங் கொள்ள விழைவு.
--
......அவர்கள் தங்கள் முழுமுதற்கடவுளை அடைய. எனவே தமிழை வெகுவாகப்புகழ்வது பாசுரங்களின் நோக்கத்தைப் பின் தள்ளுவதாகும். எதுவும் தமக்கும் தம் இறைவனுக்கும் தடையாகி இருப்பின் தாம் தூக்கியெறியத் தயாரென்றும் சொல்வார்கள். அஃது எதுவாக இருந்தாலும் அவர்களுக்குத்தேவையில்ல; ....
இவர் ஒரு பிராமண வகுப்பில் பிறந்தவர். முன்குடுமிச் சோழிய பிராமணர். சோழநாட்டைச்சேர்ந்தவர் என்று பொருள்..........
தொண்டரிப்பொடியாழ்வார் பிராமணத்துவத்தை தன்னோடு கொண்டவர். அதே நேரத்தில் அதை தனக்கு இடையூறாக ஆக்கவில்லை. அப்படியாகுமேயாயின் எனக்கு அது தேவையில்லை. அதை நான் வீசிவிடத்தயார். எனக்குத்தேவை அரங்கன் மட்டுமே.
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண மைதன்னைஒளித்திட்டேன். என்கண் இல்லை; நின்கணும் பத்தன் அல்லேன்;களிப்பதுஎன் கொண்டு? ந,ம்பீ! கடல் வண்ணா! கதறுகின்றேன்;அளித்து எனக்கு அருள் செய், கண்டாய், அரங்கமாநகருளானே!
முன்குடுமிச் சோழிய பிராமணர். சோழநாட்டைச்சேர்ந்தவர் என்று பொருள்.
தங்களுடைய கருத்துகள் ஆழ்வார்கள் பாசுரங்களைப் பற்ரியவை மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில் இருப்பதைப் பார்க்கிறேன். தாங்கள் ஏன் தங்களுக்குப் பட்ட விதத்தில், அது விமரிசனமோ, வித்யாசமான பார்வையோ எதுவானாலும், ஓரிழை ஆரம்பித்து எழுதக் கூடாது? இது ஓர் அபிப்ராயம் மட்டுமே. அறிவுரை என்று முனியாதீர்கள். உங்களுடைய கருத்தாடல்கள், ஆங்கிலத்தில், சுய நிலை விளம்பல் பற்ரிப் படித்தேன். அதில் உண்மை இருக்கிறது. என்னை மிகவும் யோசிக்க வைத்தது. நன்றி ஐயா.ஐயா! திரு கண்ணனைத் தாங்கள் இவ்விதம் சொல்லலாம். ஆனால் எனக்குப் பொருந்தாது, ஏனெனில் நான் வைணவன் இல்லை. உலகின் பல மதங்கள், பல தத்துவங்களில் ஆழமாக ரசித்துத் தோய்ந்தவன். அவ்வளவே. அவ்வவற்ரின் நிறைகுறைகள் மனித குலப்பொதுவிற்கு என்ன நன்மை செய்திருக்கிறது என்று கற்பது என் நோக்கம். விட்டால் அரேபியப் பண்பாட்டின் தத்துவப் பங்களிப்பு பற்றியும் முழுத் தோய்வுடன் விளக்க முடியும். ஸ்ரீதாயுமானவர் பற்ரியும் இங்கு எழுதியுள்ளேன். எனக்கு மிகவும் ஈடுபாடு என்பது விவேகாநந்தர் சிந்தனை ரீதியிலான ஹிந்து மத விளக்கங்களில். பல மதங்கள், அவற்ரின் கட்டமைப்புகள் பற்ரிக் கற்கும் போது ஆழ்வார்கள் காட்டிய மார்க்கம், அளித்த சமுதாயச் சிந்தனைகள், தந்த தத்துவத் தெளிவுகள், மனித குலப் பொதுவிற்கு நன்மை பயப்பன என்று கருதுவதால், அதைப் பற்ரி சிறிது விரிவாக எழுதியிருக்கிறேன் இணைய வெளிகளில். வைணவ குலப் பிறப்பு என்பது தொட்டில் முதல் அதில் பரிச்சயத்தைத் தந்தது என்பதும் உண்மை. அது வைத்து நான் பெரிதும் வீர வைணவன் என்றெல்லாம் அபிப்ராயம் கொண்டு விடாதீர்கள். என்னுடைய அக்கறையும், மதமும் என்பது மனிதம். உலகப் பொது மானிடத்தின் ஆக்க பூர்வமான பங்களிப்புகள் எங்கெங்கு உண்டோ அவற்ரின்பால் கற்பதில் ஈடுபாடு. அவ்வளவே..>..அவர் எழுதுவதிலிருந்து திரு மோகன் ரங்கன் எழுதுவதிலிருந்து, இவாளெல்லாம் ஆழ்வார் பாசுரங்களில் படித்து - மதுரைப்பாஷையில் - பழந்தின்று கொட்டை போட்டவர்கள்.>>>
***
2015-06-07 14:27 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
--
மோகனரங்கன் என்ற ஒருவர் ஒரு வைணவ வலைப்பதிவை வைத்து வைணவத்தைப்பற்றி விளக்கி வருகிறார். அவர் எழுத்துக்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அது தாங்கள்தான் என்று நினைத்தேன்.
மோகனரங்கன் என்ற ஒருவர் ஒரு வைணவ வலைப்பதிவை வைத்து வைணவத்தைப்பற்றி விளக்கி வருகிறார். அவர் எழுத்துக்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அது தாங்கள்தான் என்று நினைத்தேன்.
......இவர் அங்கிருந்து திருவரங்கத்தில் வந்து குடியேறி கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு நந்தவனம் அமைத்து பூக்கள் திருவரங்கத்து அளிக்கும் கைங்கர்யம் செய்துவந்தார். இவர் காலத்தில் திருமங்கையாழ்வார் திருவரங்கத்து ஜீயராகி, அக்கோயிலைப் புத்த மதத்தவரின் தாக்குதலிலிருந்து kakka கோயிலைச்சுற்றிப் பெருமதில்களை (இன்றுமுள) எழுப்பினார். அப்படி எழுப்பும்போது, இவரின் நந்தவனம் குறுக்கிட, அங்கிருந்த ஒருவர் திருமங்கையாழ்வாரிடம், இந்த வனம் ஒரு அரங்கனின் ஆத்ம பக்தரால் உருவாக்கப்பட்டு பேணப்படுகிறது. அவர் இங்கு வந்த காரணமே அரங்கனருகில் இருக்கவே என்றதும், ஆழ்வார் (ஜீயர் திகைத்து அஃதை அழிக்காமல் சுற்றிக்கட்டுக என்றார். அந்த நந்தவனம் இன்றிருக்கா என்று தெரியாது. இரு ஆழ்வார்களும் சந்தித்துப் பேசியதாக எந்த நிகழ்வுமில்லை. ஒருவேளை, ஜீயர் ஒரு வி ஐ பி. ஆனால், விப்ரநாராயாணர் ஒரு பாமர பக்தர் என்பதால் (ஆழ்வாரனது பிற்பாடு) அது நிகழ வாய்ப்பில்லை எனலாம். மேலும், தன்னை அனைத்து ஆழ்வார்களுக்கும் கீழாக வைத்த்ப்பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து பெருமால் பக்தர்களில் கால்களுக்கும் கீழே வைத்துப்பார்ப்பதால், இவர் திருமங்கையாழ்வாரைத் தூரத்திலிருந்தே தரிசித்து (என்னே அற்புதமான பாக்யம் இவருக்கு ! Fantastic gift from his God to be close to Thirumangaialvaar! ) மகிழ்ந்திருக்கலாம். Please note he called himself Tondaradippodi.
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்நெருப்பிலே கிடந்து கற்றோர் நினைவிலே நடந்துஓர் ஏனஇருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதைபொருப்பிலே பிறந்துதென்னன் புகழிலே கிட்ந்து சங்கத்து
இதில் திருஞான சம்பந்தர் செய்த செயலும் திருமால் செய்த செயலும் கூறப்பட்டிருப்பது அற்புதம்.
ஓதி இன்புறுக என்பார் என் குருநாதர் த்மிழ்க்கடல் இராய.சொ.அவர்கள்தமிழை உண்ர்ச்சி பூர்வமாகப் படிக்க விரும்பினால் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் படியுங்கள்.அதிலும் திருமங்கை மன்னன் பாசுரங்களையும் ஆண்டாள் நாச்சியார் அருளிய பாசுரங்களையும்
இருக்கலாம். சோழிய என்ற பொருள் சோழநாட்டிற்கும் வருமென்பது என் கேள்வி. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது பழமொழி. சோழியச்செட்டியார்கள் உண்டல்லவா ? One of them said to me: We are from that part of TN; hence, the sooziya for us.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
//அவரே, அவரே! இங்கு ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி மூல கிரந்தங்களை வைத்துப் பேசும் தகுதியுடைய பெருமகனார் இவர் ஒருவரே. மற்ற படி நானெல்லாம், பெருமாளுக்குச் சூட்டிய மாலையை பட்டாச்சார்யர் தரும் போது பெருமாளே ஆலிங்கனம் செய்து கொள்கிறார் என்று நம்பும் அசடுகள்!//அன்புள்ள டாக்டர் கண்ணன்,
அதே சமயத்தில் தங்களைத் தாழ்த்தி 'அசடுகள்' என உவமையாகக் காட்டியிருப்பது வருத்தமாக இருக்கிறது,
பெருமாள் தரும் மாலையை பட்டர் அணிவிக்கும்போது பெருமாளே அணிவிப்பதாக நீங்கள் மட்டும் இல்லை. நானும் இன்னும் பல்லாயிரம் பேர்களும் அந்த நினைப்பு வகையில் அடங்குவர். ஆண்டாள், திருமங்கை மன்னர், குலசேகரப் பெருமான் போன்ற ஆழ்வார்களும் அடங்குவர். எளிமையான பக்திக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இறைவனும் இதை விரும்புவதாக நம்மாழ்வாரும் மாணிக்கவாசகரும் எடுத்துரைக்கிறார்கள்.உவமையை மாற்றி எழுதுங்கள்.
ஆழ்வார்களைப்பொறுத்தவரை கிட்டத்தட்ட அவர்கள் பற்றி வரும அனைத்து தகவல்களையும் லெஜன்ட்ஸ் (Legends) என்றுதான் எடுக்க வேண்டும். அதில் மரபாக (Traditional beliefs, also called Vaishnava Sampradaya, which include practices based on such legendary beliefs) வரும் கருத்துக்களை நாம் ஏற்றுப்பேசுகிறோம். ஆழ்வார்களது சரித்திரங்களை ஒரு வரலாற்றாராய்ச்சியாளன் என்ற நிலையிலிருந்து எவருமே எழுதவில்லை. ஏனென்றால், அவர்களது ஆராய்ச்சியின் முடிவு மரபு வழியாகச் சொல்லப்பட்டு ஏற்று மகிழ்ந்த வரலாற்றுக்கு மாறாக இருந்துவிட்டால் பக்தர்கள் மனம் நோவர். பக்தர்கள் விரும்புவதெல்லாம், அவர்கள் மத நாயகர்களைப்பற்றிய விதந்தோதும் கற்பனைக்குமெட்டா செயல்களும் சொற்களுமாம். இஃதெல்லாம் வரலாற்றைத் தாரா; மாறாக, புகழ்ப்பாடும் வரலாறு ஹாகியோக்ராஃபியையே தரும். அவர்களுக்கு அதுதான் வேண்டும். இதில் மு ராகவையங்கார் எழுதிய ஆழ்வார்கள் காலநிலை என்ற நூலைச்சேர்க்கக்கூடாது. அவர் ஒரு தமிழறிஞர். பாசுரங்களின் சொல்ல்ப்பட்டவைகளை வைத்து ஒரு ஊகங்களாக அவர் ஆழ்வார்கள் காலங்களை ஆராய்ந்தார். நான் பேசுவது வரலாற்றாய்ச்சியாளர்கள். ((இஃது அரசியல் நாயகர்களுக்கும் பொருந்தும். அண்ணாவை “”சி ஐ ஏ ஏஜண்ட்”” என்று சேஷன் தன் சுய சரிதையில் குறிப்பிட்டதால் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறை தாக்கப்பட்டது.)
திருமங்கையாழ்வார் காலத்தால் பிந்தியவர் அவரைக் கடைக்குட்டி ஆழ்வார் என்று சொல்வது மரபு. தொண்டரிப்பொடியாழ்வாரின் நந்தவனம் திருமங்கையாழ்வார் மதில்கள் கட்டியபோது இருந்தது என்றால், இருவருக்கும் காலம் வெகுதூரமில்லை; சமகாலத்தவர் இல்லையென்றாலும். ஒரு நந்தவனம் அதைப் பேணுவோர் தலைமுறை தலைமுறையாக இருந்தாலொழிய தொடராது. கேட்பாரற்று அழிந்துவிடும். திருமலையில் இராமானுஜரின் தாய்மாமன் கட்டிய நந்தவனம் இன்றும் பேணப்படுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாகப் பேணியிருந்தால், பல தலைமுறைகளுக்கு முந்தியவர் தொண்டரடிப்பொடியாழ்வார்; இல்லாவிட்டால், அவ்வளவு காலதூரம் இருக்காது. அது சரி, இன்று அந்த நந்தவனம் இருக்கின்றதா? திருச்சிக்காரர்கள் எங்கே?
திருமங்கையாழ்வார் திருவரங்க மடத்து ஜீயரா இல்லை என்று அம்மடத்து வரலாற்றையறிந்து ஆதாரத்துடன் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன். இல்லையென்றால், நான் கேட்டது கேட்டதுதான்; மாற்றமில்லை.
சைவ மடங்கள் (ஆதினங்கள்); பிள்ளைகளைத் தவிர எவரையும் தலைவராக ஏற்கா. எ.கா. மதுரை சைவ மடத்தலைவராக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் எழுந்த எதிர்ப்புக்களிடையே மதுரை ஆதினம் பத்திரிக்கையாளர்களிடம் இராஜசேகரன் என்ற நித்தியானந்தா சைவப்பிள்ளை வகுப்பைச்சேர்ந்தவர் என்பதற்கு தாசில்தாரின் கொடுத்த ஜாதிச்சான்றிதழைக் காட்டினார். அவ்வளவு ஜாதிப்பற்றுடையது அம்மடங்கள். சங்கரமடங்கள் பற்றி அனைவரும் அறிந்ததே.
வைணவ மடங்கள் பிராமணரல்லாதோரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளும். அதற்கு முதல்படி வைத்தவர் இவ்வாழ்வார். வைணவர்கள் இராமனுஜர், ஆளவந்தார் வழி இவை வந்தவையாதலால், பரம ஞானிகளுக்கு ஜாதிகள் இல என்பதே கொள்கை. ஜீயர்கள் பரம ஞானிகள். அவர்களுக்கு சாதிகள் கிடையா. அதைத்தகர்க்கும் முயற்சிகளுக்கு இறைவனருள் இல்லையென்பது என் நம்பிக்கை..
திருமங்கையாழ்வார் திருவரங்க மடத்து ஜீயரா இல்லை என்று அம்மடத்து வரலாற்றையறிந்து ஆதாரத்துடன் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன். இல்லையென்றால், நான் கேட்டது கேட்டதுதான்; மாற்றமில்லை.
He has inherited his brahminism and if they proved to be hindrances to him in his pilgrim's progress towards Srirangan, he is all too willing to cast off them. He has a point there we must note. i.e. according to me. Brahminims in so many become a fertile fodder to feed their egos. Nambillai saw such a person within the premises of the temple he was on a visit; and turned his face away from that person. When his shisya asked why, he explained as I wrote.
2015-06-05 10:20 GMT-07:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>://தமிழை கடவுள் நிலைக்கு கொண்டு செல்லும்போது -- அது "ராமனாய் இருந்தால் என்ன? ராவணனாய் இருந்தால்"என்ற சிந்தை தான் நம் கம்பர் உள்ளிட்ட ஆழ்வார் மற்றும் எல்லா சான்றோர்களுக்கும் உள் நினைப்பாய் தோன்றி இருக்கிறது.//மதிப்பிற்குரிய ருத்ரா அவர்களே,இந்த சிந்தனையுடன் நான் வேறுபடுகிறேன்.திருமூலரும்,"என்னை இறைவன் நன்றாகப் படைத்தனன்தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!"என்று இயம்பிச் சென்றிருக்கிறார்.இதுகண்டு தமிழில் இறைவன்மீது காவியம், பக்திப்பாடல்கள் செய்த அனைவருமே தமிழன், தமிழ்மொழி என்ற பெருமிதத்துடனேதான் அணுகியிருக்கிறார்கள். இறைவனைத் துதித்தேத்த மனிதன் செப்பும் மொழி தமிழே என்று மார்தட்டியிருக்கிரார்கள்.திருமூலரோ இறைவனுக்கு எந்தமொழியில் துதிக்கப்படுவதைவிட தமிழில் துதிக்கப்படுவதே சாலச்சிறந்தது என்று கருதிய "தனை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!' என்று பகர்ந்திருக்கிறார்.கம்பநாட்டாரும் இராமனைத் திருமாலின் அவதாரமாகவே தனது இராமகாதையில் காட்டியிருக்கிறார். எனவே, "இராமனை இருந்தாலென்ன, இராவணனாய் இருந்தால் என்ன?" என்ற சிந்தை அவர்களிடம் இருந்திருப்பதாக அவரது இராமகாதையில் ஒருவரிகூட்ட காட்ட முடியாது.அப்படியிருக்க, நாரணனையே துதித்துப் பாடிய ஆழ்வார்கள் அவ்வாறு உட்கருத்துடன் செயல்பட்டிருப்பர்கள் என்பதை எவராலும் ஏற்க இயலாது என்பதைத் தங்கள் முன்வைக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
அன்புடன்,ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
.......என் கருத்து: ஆழ்வார்கள் தமக்கும் பெருமாளின் திருவடிகளைப்பற்ற எதுவும் தடையாக இருக்குமானால் அதை-அவற்றைத் தூக்கியெறியத் அவர்கள் தயங்கியதே இல்லை. இதைவைத்த்ப்பார்க்கும்போது, தமிழை அவர்கள் ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தினார்களே ஒழிய, இறைவனுக்குக் நிகராகக்கொள்ளவில்லை. நிகரென்றால் அஃதொரு தடையாகும். அதை விலக்கியிருப்பர் என்பது.
இது சரியா இல்லையா என்பதை இங்கெழுதிக்கொண்டிருக்கும் ஆழ்வார்க்கடியர்கள் எவரேனும் சொல்லலாம்.
........ சங்கதம் இருந்த உயர் பீடத்தை தமிழுக்கு அளித்தனர். அது இன்றுவரை பெரும் புரட்சி. சைவத்தால் அதை இன்றளவும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. ஆனால் தமிழகம் இக்கதையை அப்படியே மாற்றிப்போட்டு வைணவம் என்பது சங்கதம் சார்ந்தது என்பது போல் காட்டிவிட்டது மாபெரும் சரித்திரப்பிழை. இதை நான் தொடர்ந்து சொல்வதால் எனக்கு பகைமை கூடுவதைக் கண்கூடாகக் காண்கிறேன். இங்கு பலரும் அதை உணர்வர். “நேர்படச் சொல்” என்கிறான் பாரதி. என்னத்த நேர்படச் சொல்வது? ஏற்றுக்கொண்டால்தானே!
நானிலப் பகுப்பு,திணைக்கோர்
தெய்வம் /அப்பவே துவங்கியாச்சு
இந்த அக்கப் போர்.
இறை உணர்வைப் பெருக்கிக்கொள்ள ஒரு மொழி தேவை. அந்த மொழி மூலம்தான் நாம் இறைவனைத் தொழுகின்றோம். வேதங்களும் அதையே வழிமொழிகின்றன.
விவிலியத்தில் மதகுருமார்கள் வழிபாட்டின்போது இறைவனிடம் பேசும்போது இப்படி ஒன்றும் விளங்காத மொழியில் பேசுகிறார்கள்.
சுமேரு போன்று இதுவும் பழந்தமிழின் வடிவமாக இருக்கலாம்.அவர்கள் பேசும் மொழியின் ஒலிவடிவம் கிடைக்குமா?
தமிழ்க் கடவுளுக்குத் தமிழில் வணங்க தமிழ் வேண்டும் என்று முதலில் முயற்சி செய்தவர்கள் ஆதி சைவர்களும் ஆழ்வார்களுமே
பாவம் காளைராசன் ஐயா.அதற்குள் ஆமென் போடுவதா?
குறைந்த பட்சம் அது பைபிளின் மூலமொழி வடிவமான
ஹீப்ரு மொழியாக இருக்க வாய்ப்புள்ளது என்ற நல் ஊகத்தையாவது அவருக்கு வழங்கலாமே!
--
தொழுமின் நீர்; கொடுமின்;கொண்மின்!!
முனைவர் ராஜம் அவர்கள் சங்ககாலத்தில் சாதி, தீண்டாமை வேற்றுமை இருந்ததில்லையென விளக்கம் எழுதியுள்ள அருமையான நூல் அண்மையில் மணற்கேணி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். ஆனால் ஆழ்வார்கள் காலத்தில் சாதி வேறுபாடுகள் இருந்துள்ளன. தொண்டரடிப்பொடியாழ்வார் காலத்தில் பலர் சாதி வேற்றுயைப் பாராட்டி வந்துள்ளனர். பழக்கவழக்கங்கள் காரணமாகச் சாதிவேற்றுமையை ஒரு ஆச்சாரமாக-ஒழுக்கமாக-தூய நடத்தையாக அவர்களில் பலர் எண்ணினர். ஆதலால் சாதி வேற்றுமை பாராட்டுதலும் ஒழுக்கந்தான் என்று அவர்கள் கூறினர்.; அதற்கு கேடு சூழ்வது ஒழுக்கநெறியைச் சிதைப்பது எனக்கருதினர்.இந்த வேண்டாத வேற்றுமையை ஒழிக்கவேண்டுமென்றால் விப்ரநாராயணர் என்னும் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடியுள்ள பாசுரம் தமிழர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடிகொள்ள வேண்டிய பாடலாகும். அப்பாடல்தான் கீழ் வருவது:
பழுதுஇலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்இழிகுலத்தவர்கள் ஏனும் எமடியார்களாகில்
தொழுமின்நீர் கொடுமின்; கொண்மின்! என்று நின்னோடு
வழிபட அருளினாய்போல்; மதில்திரு அரங்கத்தானே.
“குற்றமற்ற நடத்தையையுடைய, நான்கு மறைகளையும் பல கலைகளையும் கற்றுணர்ந்தவர்களே! உங்களுக்கு ஒரு உண்மையை உரைக்கின்றேன். கேளுங்கள்!
நீங்கள் நினைக்கிறபடி இழிகுலத்தவர்களானாலும் அவர்கள் எமது அன்பர்களாயிருந்தால் அவர்களை நீங்கள் வணங்குங்கள். விலக்கி வெறுக்க வேண்டாம். அவர்களுக்கு வேண்டுவனவற்றைக்கொடுங்கள்; அவர்கள் அன்பைப் பெறுங்கள். அல்லது கொள்வினை கொடுப்பினை செய்துகொண்டு ஒரு சாதியினராயாக ஆகிவிடுங்கள்” என்று கூறி மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்து அண்ணல் அவரடியார்க ளையும் அவரோடு ஒத்து வணங்கும் அருளை வழங்கிய கருணையைப் போற்றுகிறார்.திருமாலின் உத்தம அடியார்கள் எவராயினும் அவர்கள் உண்டு மிச்சமான எச்சில் உணவைக்கொடுத்தாலும் புனிதமானது என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் கருத்து. ‘தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பார் ஆகில் ஊனக்காரர்கள் ஏனும் போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதம் அன்றே” என்பது அவர் மொழி.
இவ்வாறு மேலே சுட்டிய இரண்டு பாசுரங்களில் ஒன்று சமபந்தி உணவை வலியுறுத்துகிறது; அடுத்தது கொள்வினை கொடுப்பினையைக் குறித்து உரைக்கிறது. சங்க காலத்தில் சாதி வேற்றுமையில்லை என்கிற முனைவர் திருமிகு ராஜம் அவர்களின் நூல் கருத்தை நோக்குகிற போது இவை தமிழர் நெறி என்று உணரலாம்.மேலும் நான் “வானுளார் அறியலாகா வானவா என்பாராகில், தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பாராகில்’ என்பதனை விரிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
இலக்கிய கூட்டத்தில் உரையாற்றுவது தொடர்பாக நான்கு பதிவுகள் இட்டுள்ளேன். முதல் பதிவு தவிர மற்ற மூன்று பதிவுகள் குறித்து பின்னூட்டங்கள் குறைவு/ இல்லை. நண்பர்கள் பார்த்து இயன்றால் கருத்துக்கள் இடும்படி கேட்டுக்கொள்கிறேன்.அன்புடன்சொ.வினைதீர்த்தான்
ஆழ்வார்களின் தமிழ் ஆளுகையும் ஆர்வமூட்டலும் வியக்க
வைக்கிறது ஐயா.பக்தியிலக்கியம் அன்னைத்தமிழின்மீது
அயராதபற்றினையும் இறையின்பத்தையும் நமக்குத்தரும்
என்பதை உங்களுடைய. பதிவுகள் எடுத்துரைக்கின்றன.
இந்தியாவின் பழைமையான சமூக அமைப்பைப் பாடும் ஆழ்வார் பாடல் போல பக்தி இலக்கியங்களிலும்,இரு செம்மொழிகளின் இலக்கியங்களிலும் அதன் தொடக்கங்களில் இருந்து காண்கிறோம்.
- {$} சங்கநிதி, பதுமநிதி இரண்டும் தந்து...... அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
ஆழ்வார்களின் தமிழ் ஆளுகையும் ஆர்வமூட்டலும் வியக்க
வைக்கிறது ஐயா.பக்தியிலக்கியம் அன்னைத்தமிழின்மீது
அயராதபற்றினையும் இறையின்பத்தையும் நமக்குத்தரும்
என்பதை உங்களுடைய. பதிவுகள் எடுத்துரைக்கின்றன.
அன்பின் சொ.வி. ஐயா,-பள்ளிகள், கோவில்கள் போன்றவற்றில் நிகழும் இலக்கியக் கூட்டங்களில்நம்மாழ்வாரின் இப் பாசுரங்களும் இடம் பெற்றால் சிறக்கும்.எனது முனைவர் பட்ட ஆய்வேட்டில் இப்பதிகத்தில் ஒருபாட்டை முகப்பில்கொடுத்திருந்தேன். ஏ. கே. ராமானுஜன் மொழிபெயர்ப்பில். பல எஞ்சினீரிங் பேராசிரியர்கள்தமிழ் என்ற சொல்லையே இங்கு கேட்டிராதவர்கள். அவர்களுக்கு நம்மாழ்வார் பாசுரம் தந்தேன்.நா. கணேசன்திருவாய் மொழி
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்
3532 என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ? (1)
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே (5)
3537 இன் கவி பாடும் பரம் கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே (6)
3538 வைகுந்த நாதன் என வல்வினை மாய்ந்து அறச்
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை
வைகுந்தன் ஆகப் புகழ வண் தீம் கவி
செய் குந்தன் தன்னை எந் நாள் சிந்தித்து ஆர்வனோ? (7)
3539 ஆர்வனோ ஆழி அங்கை எம் பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைச்
சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கே? (8)
3540 திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர்
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ
மறப்பு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே? (9)
3541 உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே (10)
3542 இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்தும்
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே (11)
ஆழ்வார்களின் தமிழ் ஆளுகையும் ஆர்வமூட்டலும் வியக்க
வைக்கிறது ஐயா.பக்தியிலக்கியம் அன்னைத்தமிழின்மீது
அயராதபற்றினையும் இறையின்பத்தையும் நமக்குத்தரும்
என்பதை உங்களுடைய. பதிவுகள் எடுத்துரைக்கின்றன.
எம்பல் பிறப்பிடைதோறும் எம்தொழுகுலம் தாங்களேகும்பி நாகர்கள் ஏத்துவரேனும் அவர்கண்டீர்உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியாந்தன்னைநம்மாழ்வார் பாடல்கள் பலவும் நான் குறிப்பிட்ட தொண்டரடிப்பொடியாழ்வர் பாசுரக் கருத்தினை எடுத்துக்காட்டுகின்றன.“நம்பனை ஞாலம் படைத்தவனைத் திருமார்பனை
திருமாலை யார் தொழுதாலும் அவர் பல பிறப்பிலும் தான் தொழத்தக்கவர் என்பது ஆழ்வார் குறிப்பு. மேலும் அவர்
மேலும் கூறுகிறார்:
“வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள்என்று உள்
கலந்தார் அடியார்தமடியார் எம்அடிகளே”
திருமாலுக்கு அன்புபூண்ட அடியார்க்கு அடியார் - அந்த அடியாருக்கு அடியாரின் அடியார் - யாராயிருந்தாலும் சரிஅவர்களே எம்தலைவராவார்; எம்மால் வணங்கப்படும் அடியார் என்கிறார் நம்மாழ்வார்.
இந்தச் சிறந்த பாசுரங்களின் பண்பை அறிந்த எந்தத் தமிழரும் மக்களிடம் வேற்றுமை பாராட்டமாட்டார்கள்.
ஆழ்வாரின் பாடல்கள் வைணவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் அனைவரும் வேறுபாடுகள் இல்லாதவர்கள் என்ற கருத்த உணர்த்துகின்றன. இத்தகைய கர்த்தினை எல்லா மதச் சான்றோர்களும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். அவரவர் பாடல்களிலும் போதனைகளிலும் புகன்றிருக்கின்றனர். ஒவ்வொரு சமயத்துள்ளும் ஒற்றுமை தோன்றினால் அவ்வொற்றுமை பலருள்ளும் பரவி மக்கள் சமுதாயத்தில் ஒற்றுமை மலராதா?
| 3532 | என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ? (1) |
| 3533 | என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய் என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே? (2) |
| 3534 | ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ? (3) |
| 3535 | அப்பனை என்று மறப்பன் என் ஆகியே தப்புதல் இன்றி தனைக் கவி தான் சொல்லி ஒப்பிலாத் தீவினையேனை உய்யக்கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? (4) |
| 3536 | சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன்கவி நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில் |
கருத்துக்கும் பாசுர மடல் சுட்டிக்கும் நன்றி திரு கண்ணன்.அன்புடன்சொ.வினைதீர்த்தான்
என்னுடைய உரையில் நான் ஏற்கனவே இங்கு முகநூலில் பகிர்ந்துகொண்ட முதலாழ்வார்கள்,ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப்பொடியாழவர் பாடல்கள் குறித்த 5 கருத்துக்களுடன் பெரியாழ்வார்,நம்மாழ்வார்,மதுரகவியாழ்வார், திருப்பாணாழ்வார் பாசுரங்கள் வழியாக 7 கருத்துக்களும் ஆக 12 கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டேன். அவற்றைச் சுருக்கமாக எதிர்வரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.
வணக்கம் .
ஐயா உள்ளூரில் இருந்தும் என்னால் வர இயலாமல் போனது.
On 14-Jun-2015 12:14 pm, "சொ. வினைதீர்த்தான்" <karu...@gmail.com> wrote:
>
> குறிப்பிட்டவாறு 13.6.2015 மாலை த.மு.எ.க.ச சார்பில் காரைக்குடி, மகரிஷி வித்யாமந்திர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் “நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் தமிழ்ச்சுவை” என்ற தலைப்பில் சிறபுரையாற்றினேன்.
கற்றலின் கேட்டல் நன்று .
தங்களது உரையைப் பதிவு செய்தால் கேட்டுப் பலனடைவேன்.
வேங்கடவனுக்குப் பல்லாண்டு பாடியுள்ள காப்பியக்கவிஞர் அண்ணன் மீனவனார் முன்னிலை வகித்து மிக்க மகிழ்ச்சி. பேராசிரியர்கள் திரு கார்மேகம்,திரு ஆறு.மெய்யாண்டவர்,திரு தெட்சணாமூர்த்தி,நண்பர்கள் திருமிகு மாரியப்பன்,இரகுபதி,பிரபு,சதீஸ்ராஜா மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். முனைவர் திரு நாகநாதன் தன் இன்துணை தமிழாசிரியை திருமிகு கலைவாணி,பிள்ளைகளுடன் கலந்துகொண்டது மகிழ்ச்சியளித்தது.
> தலைமைவகித்த எழுத்தாளர் திரு ஜனநேசன் தன் உரையில் திவ்வியபிரபந்தம் காலச்சூழல்,பாவகைகள்,நோக்கம் குறித்துச் சிறப்பாக உரைத்தார்.
>
> என்னுடைய உரையில் நான் ஏற்கனவே இங்கு முகநூலில் பகிர்ந்துகொண்ட முதலாழ்வார்கள்,ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப்பொடியாழவர் பாடல்கள் குறித்த 5 கருத்துக்களுடன் பெரியாழ்வார்,நம்மாழ்வார்,மதுரகவியாழ்வார், திருப்பாணாழ்வார் பாசுரங்கள் வழியாக 7 கருத்துக்களும் ஆக 12 கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டேன். அவற்றைச் சுருக்கமாக எதிர்வரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.
>
> பிறகு நண்பர்கள் கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. கருத்துக்களைக் கோர்வையாகச் சொல்லியமைக்கும் தொகுத்து நேர்த்தியாகக் கூறியமைக்கும் நண்பர்கள் என்னுரையைப் பாராட்டி வாழ்த்தினார்கள். திரு அங்கமுத்து நன்றிகூற கூட்டம் நிறைவுற்றது. நிகழ்வினைச் செயலர் திரு அழகர்சாமி, தலைவர் திரு நாகராசன் சிறப்பாகச்செய்திருந்தனர். சில படங்கள் பகிர்ந்துள்ளேன்.
> நன்றி.
>
> சொ.வினைதீர்த்தான்
>
>
மிகவும் மகிழ்வாக இருக்கிறது ஐயா! மின்தமிழ், நம் பண்பாட்டைச் சரியாப் புரிந்து கொள்ள உதவும் ஊடகம். மின்ஞானம் என்பது கூட்டுறவால் விளைவது. நாங்களும் உங்கள் உரையில் பங்கேற்றோம் என்பதுவே மகிழ்ச்சி. நீங்கள் பேசியதை எங்களுக்கும் சொல்லுங்கள். “
கூடியிருந்து குளிர வாய்ப்பளிக்கும் குழுமம் எங்கள் புகல் என்று சொல்லுவதில் மகிழ்கிறேன்.
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.
--
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.
மாலே மாயப் பெருமானே மாமா யனே என்றென்று
மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே. (2953)
பதவுரை
|
மாலே |
- |
பெரியோனே! |
|
மாயம் பெருமானே |
- |
ஆச்சரியகுணநிதியே! |
|
மா மாயனே |
- |
மஹத்தான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே! |
|
என்று என்று |
- |
என்று இங்ஙனம் பல விதங்களான திருநாமங்களைச் சொல்லி |
|
மாலே ஏறி |
- |
பித்தம் பிடித்து |
|
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் |
- |
ஸர்வேச்வரனது க்ருபையினால் பொருந்தப்பெற்ற திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் |
|
பால் ஏய் தமிழர் |
- |
(அருளிச்செய்ததான) பாலுக்குச் சமானமான இனிமையுள்ள தமிழில் வல்லவர்களென்ன |
|
இசைகாரர் |
- |
இசையறிந்து பாடவல்லவர்களென்ன |
|
பத்தர் |
- |
பக்திமான்களென்ன ஆகிய இவர்களல்லாரும் |
|
பரவும் |
- |
கொண்டாடும்படியமைந்த |
|
ஆயிரத்தின் பால் |
- |
ஆயிரம் பாட்டினுள் |
|
பட்ட |
- |
தோன்றின |
|
இவை பத்தும் |
- |
இந்தப் பத்துப்பாட்டையும் |
|
வல்லார்க்கு |
- |
ஓதவல்லவர்களுக்கு |
|
பரிவது இல்லை |
- |
யாதொரு துக்கமும் உண்டாகமாட்டாது. |
தமிழ்ச்சுவை, இசை, பக்தி என வேண்டியவர் வேண்டியதையளிக்கும் கற்பகத்தரு நம்மாழவார் பாடல்! அடடா! இதனை அண்டியவருக்கு என்றும் இன்பமே.
நன்றி திரு தேவ்.
சொ.வினைதீர்த்தான்.
தங்களது பதிவுகளும் பால் ஏயன்னவே சொ.வி ஐயா.
--