அன்பு நிறை சிங்கை கிருஷ்ணன்
மற்றும் இவ்விழையில் நல்ல கருத்துகள் வைத்து சிறப்பித்தோர்களுக்கு,
,
தமிழ் இயலில் காணும் நூற்பாக்கள் மொழியானது மிகவும் எல்லையற்று
தனியாரின் மனம் போனவாக்கினில் யெல்லாம் சிதறிச் சென்றுவிடாமல்
ஓர் கட்டுப்பாட்டினுக்குள் சென்றால்தான் நன்கமையும் எனும் கருத்தில்
உருவாகுவையே
இலக்கியம் கண்டபின் இயல் தோன்றுதல் வரலாறு என்பதனை நன்கே அறிவீர்
மக்கள் வாய்வழி அமைந்துவிடும் சொற்களின் புணர்வுகள் யாவற்றையும்
நூற்பாக்களின் உட்புகுத்தவே பல்வேறு காலங்களில் இயலாசிரிரியர்கள்தொடர்ந்து
முயன்று வந்துள்ளனர்
அதான்று இயலாசிரியர் அவற்றின் உரைகாரர் இவர்களிடை சிலபோது கருத்து
வேறுபாடுகள் வந்துள்ளதும் அறிவீர்கள்
(வீரசோழியம் ழகரம் டகரமா அல்லது ளகரமாக மாறுமா? என்பதில்)
புணர்வு விதிகள் யாவும் மக்கள் வாய்வழி புணரும் வழியில் மட்டுமல்லமல்
மொழியில் பொருள் கோள் நிலையிலும் ஐயம் தோன்றாமல் நிற்கவும் வழிவகுக்க
வேண்டும் என்பதால் சிலபொது
வழு அமைதி / போலி / இலக்கணப்போலி / எனவெல்லாம் காட்டிச் சென்றுள்ளனர்
திருவாளர் சாமிநாதன் அவர்கள் காட்டிய நூற்பா மிகச் சரியானதே
முரண்பாடுகள் என திவாகர் காட்டியதை யு ம் அவரே இடைப்போலி யெனவும் காட்டியுள்ளார்
வல்லமை இணைய தளத் தில் இதற்காகவே ஒர் கருத்தினை வைத்தேன் ஆங்கே
நூற்பா ஏதும் காட்டாமல் இயல்பாக எளிதாக ஒர் சொல் புணர்வு எப்படி அமைய முடியும்
எனும் கருத்தினை வைதுள்ளேன் இதுவேதான் ஆயிரம் ஆயிரம்ஆண்டுகளாக மக்கள் பயன்
கொண்டு வந்துள்ள வழி என புள்ளியல் வழி 90 (+ 1150) எடுத்துக்காட்டுகள் வைத்தேன்
நகல் காண்க
கோயில் - கோவில்
கோ + இல் = கோயில்
கோ = இறைவன் = கடவுள்
கோ = இறை = நாடாளும் மன்னன்
என 'கோ' விற்கு இரு பொருள்கள் உள்ளன அறிவோம்
இல்= வாழும் இடம் = இல்லம்
கோவில்:இச்சொல் இறைவனை வழிபடும் இடம் என்னும்
பொருளில் வழங்குதல் ஏனோ இந்நாள் நன்கே பரந்துள்ளது.
எனினும் மேற்காட்டிய இருவித பயன்பாடுகளில் கோயில்
என யகர இகரம் (யி) இட்டு எழுதுதலே பிழை அற்றதாகும்
இச்சொல் நிலைமொழி யின் 'ஓகார' த்துடன் வருமொழியின்
இல் லின் 'இகரம்' சேரும் புணர்வில் 'இ' யின் இணைஒலியான
(அணித்ததான) 'யி' கரம்தன் இயல்பாக வரமுடியுமே அன்றி
'வி' என இதழ் குவியும் சேய்மை ஒலியாக வருவது இயைபு
உடையது ஆகாதது காணலாம்
மேலும்
கோயில் எனும் சொல்தான் நம் இலக்கிய நூல்களில் யாங்கணும்
காண்கின்றோம் சங்க நூல்களிலும் சிலம்பு மணிமேகலை முதல்
பிற்கால நூல்கள் வரை யாவற்றிலும் / கோவில் என எவ்விடத்திலும்
காணாது / கோயில் எனும் சொல்தான் தெள்ளத் தெளிவாக நூறு
சதம் பயனில் உள்ளமை காணமுடிகின்றது. இணைப்பில் உள்ள இரு
கோப்பினைக் காண்க. அதனில் வைத்துள்ள 90 எடுதுக்காட்டுகள்
அல்லாமல் இறைவழிபாட்டு திரு மறை நூல்களாம் 12 சைவத் திரு
முறைகள் ஆழ்வார்களின் 4000 திவ்யப் பிரபந்த பாசுரங்களை நோக்க
ஆங்கெல்லாம் கோயில் எனும் சொல்லே பயன் கொள்ளப்படவும்
அந்த 1150 இடங்களில் யாங்கணும் கோவில் என காணவே இல்லை
என்பதும் உணரப்பட்டது. சைவம் வைணவம் எனும் இரு மரபுகளின்
தலையாய தலங்களாம் தில்லை திருவரங்கம் இரண்டும் கோயில்
எனத்தான் குறிக்கப் படுகின்றனதும் அறிவோம் அல்லவா?
எனவே நாம் இனி கோயில் எனவே வழுவின்றியே எழுதுவோமே
XX கோவில் XX எனும் சொல் பயன்பாட்டினைத் முற்றிலும் தவிர்ப்போம்
நூ தா லோ சு
மயிலை