பெண் சித்தர்கள்....சில கேள்விகள்...

1,504 views
Skip to first unread message

RKS

unread,
May 28, 2010, 8:46:39 AM5/28/10
to tamizh...@googlegroups.com, mint...@googlegroups.com
 
 

Sent to you by RKS via Google Reader:

 
 




பண்டைய இந்திய கலாச்சாரத்தில், ஞானத்தால் முதிர்ந்து, இறைவனுக்கு இணையாய் பாவிக்கப்பட்ட சித்த மகா புருஷர்கள் ரசவாதம், மருத்துவம் , சோதிடம் , மாந்திரீகம் போன்ற பல கலைகளிலும் தேர்ந்து சிறந்து விளங்கினார்கள்.

இப்படியான மேன்மையான நிலையெய்திவர்கள் பெரும்பாலும் ஆண்களாய் இருப்பது நமக்கு பல கேள்விகளை விதைக்கிறது.

சித்தர்களில் பெண்கள் பற்றி பெரிதான குறிப்புகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை... அப்படியே பெண்கள் இருந்திருந்தாலும் அக் காலத்தைய ஆணாதிக்க சமூகத்தின் தாக்கத்தினால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் எஞ்சியிருக்குமென எதிர்பார்க்கவும் இயலாது.

சமூகவியல் காரணங்களினால் பெண் சித்தர்களைப் ப்ற்றிய குறிப்புகள் கிடைகக்வில்லையா அல்லது நிதர்சனத்தில் பெண் சித்தர்கள் இல்லையா என்பதும் விவாதத்திற்குறியது.

எமக்கு கிடைத்திருக்கும் விவரங்களின் வகையில் சில பெண் சித்தர்கள் வாழ்ந்தததாக குறிப்புகள் சில கிடைத்தாலும், அவர்களின் வரலாறு மற்றும் அவர்களின் குரு யார், அவர்களுக்கு சீடர்கள் உண்டா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இவர்களின் பாடல்களோ அல்லது அவர்களின் அற்புதங்கள் பற்றிய விவரங்களும் இல்லை. அப்படியான படைப்புகள் ஏதும் இல்லையா அல்லது காலத்தால் அவை மறைக்க பட்டதா என்பதெல்லாம் ஆராச்சிக்குரியது...

மிகச் சமீபமாய் பரமாச்சாரியார். ராணி சென்னம்மாள், மாயம்மாஆகிய மூன்று பெண் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் முறையே காஞ்சிபுரம், பிதானூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில்ஜீவ சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன.

இவர்களைப் பற்றிய மேலதிக விவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். போதுமான ஆதாரஙகள் மற்றும் பாடல்கள் கிடைக்கும் போது விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்..

மாயம்மா ஜீவ சமாதி கன்னியாகுமரி


 
 

Things you can do from here:

 
 

Dr M.D.Jayabalan

unread,
May 29, 2010, 10:51:16 AM5/29/10
to மின்தமிழ்
பரமாச்சாரியார், மாயம்மா,சென்னம்மாள் பற்றி இதுவரை நான் அறிந்ததில்லை.
நன்றி.

அவ்வையாரும் ஒரு சித்தர் என்ற கருத்து ஒரு காலத்தில் பரவலாகப்
பேசப்பட்டது என்று நினைவு. சரியா?


எம்.டி.ஜெயபாலன்

On May 28, 5:46 pm, RKS <sathishas...@gmail.com> wrote:
>   Sent to you by RKS via Google Reader: பெண் சித்தர்கள்....சில கேள்விகள்...

> via சித்தர்கள் இராச்சியம் by nore...@blogger.com (தோழி) on 5/27/10

> Things you can do from here:

> - Subscribe to சித்தர்கள் இராச்சியம் using Google Reader
> - Get started using Google Reader to easily keep up with all your
> favorite sites


Tthamizth Tthenee

unread,
May 29, 2010, 12:13:34 PM5/29/10
to mint...@googlegroups.com
காரைக்கால் அம்மையாரையும் பெண் சித்தர் என்றே குறிப்பிடுவார்கள்
 
என்று நினைக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
29-5-10 அன்று, Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

annamalai sugumaran

unread,
May 29, 2010, 1:02:21 PM5/29/10
to mint...@googlegroups.com
 
மாயம்பாவின் சமாதி சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் சட்டக்கல்லூரிக்கு  எதிரில் தவசி அடிகளார் என்னும் வாழும் சித்தரின் குடிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது .
மாயம்மா அவர்கள் கன்னியா குமரியில் வாழும் போது அவர்களைப் பின்தொடர்ந்து நிறைய நாய்கள் செல்லும் .அவ்வாறே இப்போதும் அவரது சமாதியைச் சுற்றி நிறைய நாய்கள் அமர்ந்திருப்பதை நான் நிறைய தடவைப் பார்த்ததுண்டு .
நான் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து பலமுறை அந்த சமாதிக்கு சென்றிருக்கிறேன் .எனவே இந்தத் தகவலில் எனக்கு சந்தேகம் இல்லை .
யாராவது சேலம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சென்று அந்த சுழலை அனுபவிக்கலாம் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Geetha Sambasivam

unread,
May 30, 2010, 2:33:41 AM5/30/10
to mint...@googlegroups.com
சக்கரத்தம்மா என்றொரு பெண் சித்தர் வாழ்ந்திருக்கிறார், சென்ற நூற்றாண்டுகளில்,. திருவான்மியூரில் இவரின் சமாதி இருக்கிறது. குறிப்புகள் சேகரித்து வைத்துள்ளேன். சீக்கிரமா எழுதறேன்.

2010/5/29 annamalai sugumaran <amirth...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 30, 2010, 3:14:03 AM5/30/10
to mint...@googlegroups.com
உலகில் பல அற்புதங்கள் நிகழ்கின்றன, நம்முடைய ஜூன் மாத சந்திப்பில் இறைவணக்கம் பாட  சிந்துஜா என்னும் பெண்ணை வேண்டினேன்,அவர்கள் மிக நன்றாகப் பாடுவார்கள், இன்று அந்தப் பெண் யதேச்சையாக என்னை  கைப்பேசியில் தொடர்பு கொண்டார்,வீட்டிற்கு வரலாமாஎன்று கேட்டார்,வாருங்கள் என்றேன்
அப்போது நான் பெண் சித்தர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன், அந்தப் பெண் சிந்துஜா அவர்கள் வந்தார்கள்,
 
மின் தமிழில் பெண் சித்தர்களை பற்றிய இழை கணிணியில் ஒளிர்ந்துகொண்டிருந்தது, பெண் சித்தர்களைப் பற்றி ஆராய முற்படும்போது, அந்தப் பெண்  சிந்துஜா  அவர்கள் இயல்பாக அதைப் பார்த்துவிட்டு, ஒரு பெண் சித்தரைப் பற்றி சொல்லவா என்று கேட்டார், என்னுடைய பாக்கியத்தை வியந்தபடி சொல்லம்மா என்றேன் அவர் அளித்த விவரங்களைக் கீழே எழுதியிருக்கிறேன், 

இந்த சிந்துஜா என்னும் பெண்  வந்து,  நான் முன்பின் அறியாத ஸ்ரீசக்கரம்மா என்னும் சித்தரைப் பற்றி அறிந்து கொள்ள உதவியதை,  இன்று ஸ்ரீசக்கரம்மா என்னும் பெண் சித்தர் என்மேல் அருள் கொண்டு தானே வந்து தன்னைப் பற்றிக் கூறியதைப் போல் உணர்ந்தேன்,

திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ சக்கரம்மா கோயிலைப் பற்றி கேள்விப்பட்டேன் அவர் ஒரு பெண் சித்தர்,இந்த சித்தரின் காலம் 1854, வடாற்காடு அருகில் உள்ள தேவிகா புரத்தில் ஒரு சிவாச்சாரியார் பரம்பரையில் வந்த சேஷகுருக்கள் தம்பதியருக்கு மகளாக வந்துதித்தவர், ஒன்பதே வயதில் திரு சாம்பசிவ சிவாச்சாரியாருக்கு மணமுடித்து வைத்தனர்,  கோமளீஸ்வரன் பேட்டைக்கு குடி வந்தார்,அந்தக் கோமளீஸ்வரர் கோயிலில் இறைப் பணி மேற்கொண்டார், தன்னுடைய  20 ஆவது வயதில் கணவனை இழந்தார்,  அந்த இருவது வயதிலேயே திருமுடி மழித்து,வெண்ணிற ஆடை அணிந்து யார் சொல்லியும் கேளாமல்  துறவறம் பூண்டார், அப்போதிலிருந்து குளிக்கவில்லை,நீரும் குடிக்கவில்லை, உணவும்  உண்ணவில்லை மோனத்தவத்தில் பத்தாண்டுகள் இருந்தார், தன்னுடைய முப்பதாவது வயதில் ஒரு நாள் உடல் சிலிர்த்து கோடி சூர்யப் ப்ரகாசமாய் முகம் மலர, சந்திர சூரியருக்கும் அப்பாற்பட்டஒரு பேரொளி கிடைக்கப் பெற்றார்,துக்கத்தையும், இன்பத்தையும்  சமமாக பாவிக்கும் ஸ்திதப்ரக்ஞன் ஆனார்,

ஆஹா  பரவொளியைக் கண்டேன் என்று திருவாய் மலர்ந்தருளினார்,

அதன் பிறகு மக்களுக்கு தரிசனம் அளிக்க ஆரம்பித்தார், புன்னகையோடு  காட்சிதரும் அவரின் பரித்த ஓசையுடனானன அந்த சிரிப்பே அருளாக வழங்கப்பட்டது
இவரை  அடையாளம் கண்டவர்  மைலாப்பூரைச் சேர்ந்த மருத்துவர், மனித நேயர், மருத்துவக் குலச் செம்மல் நஞ்சுண்ட ராவ், அவர்களின் நாட்குறிப்பை வைத்துதான்   இந்த ஸ்ரீசக்கர சித்தரின்  பல விவரங்களை சேகரித்திருக்கின்றனர்

இல்லையெனில் இவரைப் பற்றிய விவரங்கள் எப்போது வெளிவந்திருக்கும் என்றே தெரியாது
இந்த ஸ்ரீசக்கரம்மா  அவர்கள் சிவ பூஜையும் ,ஸ்ரீசக்கர பூஜையும் செய்வார்கள்,
மஹா பெரியவா ஸ்ரீமத்  சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்திருக்கிறார், தியானம்  செய்திருக்கிறார் என்பது விசேஷச்  செய்தி,
 

காயத்ரீ மந்திரம் போல் ஸ்ரீசக்ரம்மாவைப் பற்றி மந்திரம் ஒன்று உள்ளது

”ஓம் குரு தேவ்யை ச: வித்மஹே பரப்ரும்மைச; தீமஹி
தன்னோ  அனந்தம்பா ப்ரசோதயாத்:”


திருவான்மியூரில் கலாக்‌ஷேத்திரா அவன்யூவில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் கோயில் பக்கத்தில்  சக்கரை அம்மா கோயில் இருக்கிறது,அந்தக் கோயிலில் ஸ்ரீசக்கரை அம்மா என்கிற இந்த சித்தரின்  தியான மண்டபமும் அவருடைய அதிஷ்டானமும் உள்ளது

இந்த பெண் சித்தரின் பூர்வாஸ்ரமப் பெயர்  அனந்தம்பாள்
சித்தரான பிறகு அவர்கள்   ஸ்ரீ சக்ரம்மா என்று அழைக்கப் பட்டார்,  முதலில் ஸ்ரீசக்கர  என்று அழைக்கப்பட்டு  பின்னர் ஸ்ரீசக்கரையாக மறுவி  ,அதன் பின்னர் ஸ்ரீ சக்கரம்மா  நிலைத்தது, சிறுவயதில், உடைந்த சிவலிங்கத்தை  தன் கால் எலும்பை உடைத்து சரிசெய்ய முயற்சித்திருக்கிறார், அவர்கள் பத்தாண்டுகள் உணவு அருந்தவில்லை, நீரும் அருந்தவில்லை வானில் பறக்கும் சித்தி பெற்றவர்  என்று சொல்கிறார்கள்
பௌர்ணமி நாட்களிலும் திருவாதிரை நாட்களிலும்  பக்தர்கள் அதிக அளவில் கூடும் கோயில் இது,

திரு வி கல்யாணசுந்தரம் அவர்கள் ”உள்ளொளி” என்னும் நூலில் இந்த சித்தரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்
திரு வீ க அவர்கள் கல்லூரியின் மாடியில் உலாவிக்கொண்டிருக்கும் போது  சித்தர் ஸ்ரீசக்கரம்மா வானத்திலிருந்து பறந்துவந்து நின்றார் என்று குறிப்பிட்டிருக்கிறார்

அவரைப் பற்றிய ஒரு பாடல்

”திருவான்மியூர் செய்த தவம் என்ன தாயே
குருவாய் அருள் காட்ட குடி கொண்டாய் நீயே”

பக்தி வந்தி சேருமிடம் பக்தர் மனம் சொக்குமிடம்
அக்கம்பக்கம் மட்டுமின்றி அகிலம் வந்து நிற்குமிடம்
புண்ணியத்தின் மொத்த வரி புரிந்தவர்க்கு சொர்க்க புரி
சன்னிதிக்கு வந்துவிட்டால் சகலருக்கும் சொர்க புரி

அனந்தம் என்றால் கணக்கில்லை அருளுக்கும் கணக்கில்லை
மனதாறப் பேசுகின்ற மகிமைக்கும்  கணக்கில்லை
எண்ணிக்கையில் அடங்காத எத்தனை -பேர் நன்மைபெற்றார் 
பன்னிரண்டு சுற்று வந்து பல குறையும் தீரக்கண்டார்

இளமையான வயதினிலே என்ன இது துறவறமா
வெயில் மழையும் பார்க்காமல் வெட்ட வெளி அனுபவமா
பத்தாண்டும் உணவில்லை பக்கம் யாரும் செல்லவில்லை
என்ன இது என்ன என்றே ஏங்காத மனிதரில்லை

மானுடம் பறந்து வந்து மாடியிலெ நிற்குமா
மற்றவர்க்கு சொன்னாலும் மனித மனம் நம்புமா
வானில் பறக்கின்ற சித்தி பெற்ற தேவீ நீ
வாழ்க்கையில் பறப்போர்க்கு வழிகாட்ட தேவை நீ

மேற்கண்ட பாடலை இயற்றியவர் ”இலக்கியச் சாரல்” நிறுவனர் கவிமாமணி இளையவன் அவர்கள்
 
இந்தப் பாடலையும், ஸ்ரீசக்கரம்மா அவர்களைப் பற்றிய ப்ரவசனத்தையும்  இசைச்சொற்பொழிவு வடிவில்  குமாரி சிந்துஜா அவர்கள் பாடியிருக்கிறார்கள்,அந்த ப்ரவசனத்தை,பாடலைக் கேட்டால் இன்னும் அதிக விவரங்கள் கிடைக்கும்
என் மகள் போன்ற  குமாரி சிந்துஜாவுக்கு நன்றி


அன்புடன்
தமிழ்த்தேனீ

 

 



30-5-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:

Innamburan Innamburan

unread,
May 30, 2010, 7:51:38 AM5/30/10
to mint...@googlegroups.com
தேன் வந்து பாயுது காதினிலே. ஒரு சிறிய செய்தி. டா.நஞ்சுண்ட ராவ் அவர்களி
இல்லம், மைலாப்பூர் மேற்கு மாடாவீதியில். சிவப்பு கட்டிடம். இன்றும்
இருக்கிறது. சென்னையில் முதல் முதலாக மின்சார தொடர்பு பெற்ற தனியார்
இல்லம்.
இன்னம்பூரான்

2010/5/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
May 30, 2010, 7:56:38 AM5/30/10
to mint...@googlegroups.com
கூடிய விரைவில்  அந்தப் பெண் சிந்துஜா பாடிய பாடல்கள் நம் அனைவரின் காதுகளிலும் தேனாய் வந்து பாயும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
30-5-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
Reply all
Reply to author
Forward
0 new messages