கவர்ந்த கண்கள்

201 views
Skip to first unread message

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 27, 2009, 4:32:17 AM3/27/09
to minT...@googlegroups.com
நேற்று "கண்ணன்" இழையில் அடியேன் கூறியிருந்த "கப்யாஸம்" பற்றிய இடுகை இதோ. மன்னிக்கவும் சற்றே பெரியது.
 
"கவர்ந்த கண்கள்" என்ற இந்த தலைப்பை உபயோகிக்க, மானசீகமாக சாண்டில்யன் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுகிறேன். இத்தலைப்பு அவர் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினத்தின் தலைப்பு. இதில், பிள்ளை உறங்காவில்லிதாசரை, இராமநுசர் எவ்வாறு அரங்கனின் திருக்கண்களைக் காட்டி நல்வழிப்படுத்தினார் என்ற வரலாற்றை சுவையாகச் சொல்லியிருப்பார். முதலில் தன் மனைவின் கண்களால் கவரப் பட்டு, வெறும் "வில்லி" யாக இருந்தவர், எவ்வாறு திருவரங்கனின் "கரியவாகிப் புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி, நீண்ட அப் பெரியவாய கண்கள்"-ஆல் கவரப்பட்டு, இராமநுசரை சரணடைந்து உய்ந்து போனார் என்று வெகு சுவையாகச் சொல்லியிருப்பார்.
 
இந்த இடுகையிலும், அந்த கண்களைப் பற்றி, அவை எவ்வாறு சரணடந்தவர்கள், சரணடையாதவர்கள் என்று அனைவரையும் வாசியறக் கவர்கிறது என்பது பற்றி எழுதவிருப்பதால் இத்தலைப்பை "காப்பி" அடித்துள்ளேன். சாண்டில்யன் பொறுத்து மன்னித்தருள்வாராக.
 
துக்கத்தில் இருப்பவர் ஒருவரிடம் நாம் சென்று கேட்டால், அவர் சொல்லக்கூடிய முதல் வார்த்தை, "கடவுள் இன்னும் கண்ண திறக்கல". ஒரு சாதாரணமான வார்த்தை! ஆனால் இதன் ஆழ்பொருள்.... "அவன் திருக்கண் திறந்து பார்த்தால் போதும்" அனைத்து சாபங்களும் நீங்கும் என்பதுதான். இதுபற்றியே நாம் முன்னரே பார்த்த கோதையின் வார்த்தை ... " செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ..... அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து" என்றாள். அவனுடைய கண்கள் எப்படிப் பட்டது என்ற ஒரு விசாரணை "சாந்தோக்ய உபநிஷத்தில்" வருமிடத்தில், "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்று வருகிறது.
 
இப்பதத்திற்கு பொருள் சொல்லப் புகுங்கால், இராமநுசருடைய குருவாகிய யாதவப்ரகாசர், அவை குரங்கின் ஆசனவாய் எவ்வாறு சிவந்து இருக்குமோ அவ்வாறு சிவந்து இருக்கும் என்ன, இராமநுசர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. இதிலிருந்து அவர்களுக்குள் சில மனஸ்தாபங்கள் வந்தது என்ற சில நிகழ்வுகளை இப்பொழுது விட்டுவிடுவோம்! இது இராமநுசரின் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைவரையும் காத்தருளும் அவன் திருக்கண்களுக்கு ஒரு குரங்கின் ஆசனவாயையா உவமையாகச் சொல்வது? நிச்சயமாக இராது என்று துணிவு கொண்டார். பின்னர் அவர் ப்ரம்மசூத்ரத்திற்கு உரை எழுதப்புகுங்கால் "கப்யாஸம்" என்ற சொல்லுக்குப் பின் வருமாறு உரைசெய்தார்.
 
" கம்பீராம்பஸ் ஸமுத்பூத-சும்ருஷ்ட நாள-ரவிகரவிகஸித-புண்டரீக தள-அமல-ஆயதேக்ஷணா"
 
1. கம்பீராம்பஸ் ஸமுத்பூத - தாமரைக்கு, "ஜலஜம்", "அம்புஜம்", "அம்போஜம்", "நீரஜம்" என்று பல பெயர்கள் உள்ளன. தாமரை, நீரிலன்றி வேறு எங்கும் வளராது. "கம்பீராம்பஸ் ஸமுத்பூத" என்ற பதம் தாமரையின் இத்தன்மையையே குறிக்கும். பிள்ளை லோகாச்சார்யர் என்ற வைணவ ஆச்சார்யரும், தன்னுடைய நூலான "ஸ்ரீவசன பூஷண"த்தில், "தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன், தானே, நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே" என்று விவரிக்கிறார். (இவர் இராமாநுசருக்குப் பிற்பட்டவர்). இராமாநுசரும், "நீரிலிருந்து பிரியாமல் இருக்கும் தாமரையைப் போல்" கண்ணனின் கண்கள் இருப்பதாக எழுதிவைத்தார். இதற்கு ஆதாரமாக எதைக் கொண்டார்?
 
'நீரார் கமலம் போல் செங்கண்மால் என்றொருவன்"......... (திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல்)
 
இப்பாசுரத்திற்கு உரை செய்த நம்பிள்ளை என்ற ஆச்சார்யர் " கப்யாஸ ஸ்ருதி ஸ்பஷ்டமாகவே உதாகரிக்கப்பட்டுள்ளது" என்று நீருக்கும், தாமரைக்கும் இருக்கும் சம்பந்தத்தை நிறுவினார்.
 
சிவந்தது என்று யாதவப்ரகாசரும் கூறினார். ஆனால் அந்த சிவப்பு எங்கே, இந்த அழகிய தாமரையின் சிவப்பு எங்கே?
 
இன்னொரு பாசுரமும் இக்கருத்தை வெகுவாக நிறுவுகிறது.,........
 
"அழறலர் தாமரைக் கண்ணன்" ........ (நம்மாழ்வாரின் திருவிருத்தம்)
 
அழறு - (நீரில் உண்டான) சேறு.  ஆக, சேற்றிலே நின்று வளர்ந்த தாமரைப் போன்ற கண்களை உடையவன்.
 
சரி, கம்பீரம் என்று ஒரு வார்த்தையைச் சேர்த்துள்ளாரே ஏனோ?  கம்பீரம் என்றால் "பெரிய" அல்லது "சிறந்த" என்று பொருள். இதை எந்த ஆழ்வார் பாசுரம் விளக்குகிறது? இதோ......
 
"தண் பெருநீர்த் தடம் தாமரை மலர்ந்தாலொக்கும் கண் பெருங்கண்ணன்" ...........(நம்மாழ்வாரின் திருவாய்மொழி)
 
இதிலுள்ள "பெருநீர்" என்றதிலிருந்து "கம்பீர" என்று அர்த்தம் செய்தார். இந்த ஒரு பாசுரம் மட்டுமே விளக்கத்துக்குப் போதுமானதாக இருக்க, மேலும் இரண்டு பாசுரங்கள் உதாரணமாக மேலே காட்டப்பட்டுள்ளன.
 
2. சும்ருஷ்ட நாள - தாமரையை அதன் தண்டிலிருந்து பிர்த்தாலும் அதன் அழகு போய்விடும் அல்லவா. ஆகையால், தண்டோடு சேர்ந்த தாமரை என்கிறார். அந்த தண்டு எவ்வாறு இருக்கும்? மென்மையாக இருக்கும் என்பதைத்தான் "சும்ருஷ்ட" என்ற வார்த்தையால் விளக்குகிறார். "நாளம்" என்றால் "தண்டு". இதற்கான ஆழ்வார் பாசுரம் யாதெனில்?
 
"...மென்கால் கமலத்தடம் போல் பொலிந்தன,........ எம்பிரான தடங்கண்களே" ......... (நம்மாழ்வாரின் திருவிருத்தம்)
 
 "மென்கால்" - "மென் = சும்ருஷ்ட", "கால் = நாள"
 
3. ரவிகர விகஸித - சரி, நீர் இருக்கிறது, மென்மையான தண்டிருக்கிறது. அத்தாமரை அலர்ந்த கோலத்தில் அல்லவா அதன் அழகு மிளிரும்! அதை அலர வைப்பது எது? கதிரவன். "ரவிகர விகஸித": "ரவிகர = கதிரவனால்" "விகஸித = மிளிர்வுடன் அலர்த்தப்பெற்ற". இதற்கான பாசுரம் இதோ......
 
"அஞ்சுடர வெய்யோன்... செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வன்" ............ (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)
 
அந்த தாமரைக் கண்களுக்கு செம்மையைத் தந்தவன் அஞ்சுடரவெய்யோன் தானே.????  இதோ மேலும் ஒரு பாசுரம்.......
 
"செந்தண் கமலம்...... சிவந்த வாயோர் கருநாயிறு அந்தமில்லாக் கதிர்பரப்பி அலர்ந்ததொக்கும் அம்மானே" ............ (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)   
 
"செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்"........ (குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி).
இப்பாசுரத்தில் கண்களைப் பற்றிச் சொல்லாவிடினும், தாமரை, கதிரவனால் அலர்த்தப்படுகிறது என்பது சொல்லப்படுகிறது.
 
ஆக, மேலே கூறியுள்ள பாசுரங்களின் துணையோடு, எம்பெருமானின் திருக்கண்கள் "பெருநீரைவிட்டுப் பிரியாத, மென்மையான தண்டுடன் கூடிய, கதிரவனால் அலர்த்தப்பெற்ற, செம்மையுடைய தாமரையைப் போலே இருக்கும்" என்று இராமநுசர் நிறுவினார்.
 
மேலும் " தள", "அமல", "ஆயத" என்ற மூன்று அடைமொழிகளைக் குறிக்கிறார். இது என்ன???
 
"தள" - தள என்ற வடமொழிச் சொல் தமிழில் "தடமாக" வழங்கப்படுகிறது. ஆழ்வார்கள் "தாமரைக்கண்ணன்", "தாமரைத்தடங்கண்ணன்", "கமலத்தடங்கண்ணன்", "கமலத்தடம் பெருங்கண்ணன்" என்று பல இடங்களில் குறிக்கின்றனர். "தடம்" என்றால் குளம் என்றும், "விசாலமான" என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு.
 
'நீலத்தடவரை மேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல........ எம்பிரான் கண்ணின் கோலங்களே" ................. (நம்மாழ்வாரின் திருவிருத்தம்)
இவ்விடத்தில் "தடம்" என்றது "தடாகம்" என்ற குளம் என்ற பொருளினடியாகக் கொள்ளப்பட்டது.
 
"அமல" - குற்றமற்ற
 
"கமலக்கண்ணன்....... அமலங்களாக விழிக்கும்" ................... (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)
 
"அமலங்களாக" என்றதன் மூலம், குறையற்ற பார்வை என்கிறார். அதாவது அவன் நம்மைக் காக்க நினைத்து நம்மை நோக்கும் நோக்கு, குற்றமற்ற உண்மையான நோக்கு என்றபடி (இதை நேற்றே பார்த்தோம்) இவ்விடத்தில் "அமலம்" என்பது தாமரைக்கு அடைமொழியாகக் கொள்ளப்பட்டதால் "குற்றமற்ற பொலிவுடைய தாமரையைப் போல்" என்று பொருள்
 
"ஆயத" - என்றால் "நீண்ட" அல்லது "பெரிய" என்று பொருள்.
 
"கரியவாகிப் புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி, நீண்ட அப் பெரியவாய கண்கள்" .................. (திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான்)
இதில் உள்ள "நீண்ட" "பெரிய" என்ற சொற்களைக் கொண்டு "ஆயத" என்று நிறுவினார். இப்பாசுரத்தில்  "மிளிர்ந்த" என்ற சொல்லை நோக்குங்கால், தாமரை எப்பொழுது மிளிர்வோடு இருக்கும்?
 
"பெருநீரில் அதைவிட்டுப் பிரியாமல் (கம்பீராம்பஸ் ஸமுத்பூத), மென்மையான தண்டுடன் (சும்ருஷ்ட நாள), செம்மையாக, செம்மையுடைய கதிரவனால் அலர்த்தப்பெற்று (ரவிகர விகஸித), நீர்தடத்தில் பொலிந்து (தள) குற்றமற்று (அமல)" இருந்தால் மிளிர்வோடு இருக்கும்.
 
அப்படிப்பட்ட நீண்ட, பெரிய (ஆயத) கண்கள்தான் தன்னைப் பேதைமை செய்ததாகக் கூறுகிறார் திருப்பாணாழ்வார். இப்பாடலைப் பாடிவிட்டு அடுத்தப் பாடலில்... "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று முடிக்கிறார். எப்பேர்பட்ட அநுபவம். தன் மனைவியின் கண்களால் கவரப்பட்ட வில்லியும் இக்கண்களைக் (இராமாநுசருடைய ஆசியுடன்) கண்ட பின் இதற்கே அடிமையாகி, "பிள்ளை உறங்காவில்லி தாசர்" ஆகிப்போனார்.
 
இப்பேர்பட்டக் கண்களுக்குக் குரங்கின் ஆசனவாயின் சிவப்பையா உவமையாகக் கூறுவது என்று துடிதுடித்த இராமநுசரும், அதை மறுப்பதற்காக ஒன்றுக்கு மேற்ப்பட்ட உதாரணங்களையும், மிகச் சிறந்த அடைமொழிகளையும் காட்டி உரை செய்தார்.
 
அதனால் தான்........ "கவர்ந்த கண்கள்"
 
"தெள்ளிய தமிழ் மாலைகள் ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"........... (ஸ்வாமி வேதாந்த தேசிகன்) .... விளக்கம் தேவையேயில்லை.
 
 
அடியேன்
வேங்கடேஷ்
 
பி.கு. மேலே எழுதியவை அனைத்தும், காஞ்சீபுரம் மஹாவித்வான் அண்ணங்கராச்சார்யாரின் விளக்கத்தை அடியொற்றியே அமைந்தது. நிறைகள் அவரையே சாரும். குற்றங்கள் இருப்பின் அது அடியேனின் சிறிய ஞானத்தினாலான பிழையே!  மன்னித்தருள வேண்டும்.

 


From Chandigarh to Chennai - find friends all over India. Click here.

Narayanan Kannan

unread,
Mar 27, 2009, 4:52:32 AM3/27/09
to minT...@googlegroups.com
அதே கண்கள்! என்று கூட தலைப்பிட்டிருக்கலாம். முன்பு பிரபலமாக ஓடிய படம் ;-) நிற்க.

அடுக்கடுக்கான உட்பொருள் விளக்கம். அந்தாதி முறைப்படி, பாமாலை என்பதை
நிருவும் வண்ணம் வேறெங்கிருந்தும் எடுக்காமல் ஆழ்வார்கள்
ஸ்ரீசூக்தியிலிருந்து பேசுவது பெரியோர் சிறப்பு. அத்தனையும் அத்துபடியாக
இருந்தால் ஒழிய இது செய்முறைப்படாது. அவர்களது database பெரியது. It's an
interconnected network. க்ஷண நேரத்தில், மின்னல் பரவுவது போல், வேத
சூத்திரங்களுக்கும், ஆழ்வார் ஸ்ரீசுக்திக்கும், ஸ்ரீமத்
இராமாயணத்திற்கும் பாயும் அழகு, கேட்டுப் பரவசித்தால் ஒழிய அறிய
மாட்டாது.

இவ்வளவும் பேசிவிட்டு வித்யா கர்வமென்பது துளிக்கூட வாராது, 'அடியேன்'
எனும் பாவம் கொள்ளும் போது ஈகோ வெட்கப்பட்டு ஓடோடிவிடும்.

என்னவொரு சம்பிரதாயம்! என்னவொரு வித்யை!

இதுவொரு "தாமரைப் புரட்சி" என்று நான் அழைக்கிறேன்.
அரங்கத்தில் நிகழ்ந்த தாமரைப்புரட்சி!!

வாழ்க, வாழ்க!

க.>

பிகு: மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்காதே என்பது போல் அமலங்களாக
விழிக்கும் பெரிய கண்களைப் பற்றிப் பேசும் போது, யாதப்பிரகாசரை நினைப்பதே
நெஞ்சைச் சுடுகிறது.

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 27, 2009, 5:06:41 AM3/27/09
to minT...@googlegroups.com
கண்ணன் சார், 

<பிகு: மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்காதே என்பது போல் அமலங்களாக
விழிக்கும் பெரிய கண்களைப் பற்றிப் பேசும் போது, யாதப்பிரகாசரை நினைப்பதே
நெஞ்சைச் சுடுகிறது.
>
இந்தச் சூடுதான் இராமாநுசரை இவ்வளவு வெறியுடன் பலப்பல உதாரணங்களுடன் யாதவப்ரகாசருக்கு மறுப்பெழுத வைத்தது. இந்தச் சூட்டுடன் இந்த உரையைப் படிக்கும் பொழுது, அவன் திருக்கண்களின் உண்மையான மிளிர்வு நம் மனதில் பதிகிறது. அந்த யாதவப்ரகாசர் இல்லையென்றால், இவ்வளவு அழகிய உரை கிடைத்திருக்குமா? கிடைத்தும் இருக்கலாம், கிடைக்காமலும் இருக்கலாம். அனைத்தும் "பல பல மாய மயக்குக்களால் இன்புறும் விளையாட்டுடையானின்" செயல்தானே!!!!!
 
அடியேன்
வேங்கடேஷ்


Check out the all-new Messenger 9.0! Click here.

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 27, 2009, 6:10:07 AM3/27/09
to மின்தமிழ்
"தெள்ளிய தமிழ் மாலைகள் ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"

கண்ணழகில் மயங்கிப் போகவைத்ததற்கு, நன்றியும் வணக்கமும்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

On Mar 27, 1:32 pm, Thirumalai Vinjamoor Venkatesh

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 27, 2009, 7:29:24 AM3/27/09
to minT...@googlegroups.com
கிருஷ்ணமூர்த்தி சார்,
 
<கண்ணழகில் மயங்கிப் போகவைத்ததற்கு, நன்றியும் வணக்கமும்.>
பதிலுக்கு அடியேனுடைய சிரம் தாழ்ந்த வந்தனங்களையும் ஏற்க வேண்டுகிறேன்.
 
அடியேன்
வேங்கடேஷ்


Add more friends to your messenger and enjoy! Invite them now.

karth...@gmail.com

unread,
Mar 27, 2009, 7:37:56 AM3/27/09
to மின்தமிழ்
அடடா! சுகமான வாசிப்பு அனுபவம். உங்கள் விளக்கங்களுக்கும்
சொல் திறமைக்கும் என் வணக்கம். மேலும் மேலும் எழுதுங்கள்.
நன்றி.

ரெ.கா.

On Mar 27, 4:32 pm, Thirumalai Vinjamoor Venkatesh


<vinjamoor_venkat...@yahoo.com> wrote:
> நேற்று "கண்ணன்" இழையில் அடியேன் கூறியிருந்த "கப்யாஸம்" பற்றிய இடுகை இதோ. மன்னிக்கவும் சற்றே பெரியது.
>
> "கவர்ந்த கண்கள்" என்ற இந்த தலைப்பை உபயோகிக்க, மானசீகமாக சாண்டில்யன் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுகிறேன். இத்தலைப்பு அவர் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினத்தின் தலைப்பு. இதில், பிள்ளை உறங்காவில்லிதாசரை, இராமநுசர் எவ்வாறு அரங்கனின் திருக்கண்களைக் காட்டி நல்வழிப்படுத்தினார் என்ற வரலாற்றை சுவையாகச் சொல்லியிருப்பார். முதலில் தன் மனைவின் கண்களால் கவரப் பட்டு,
>  வெறும் "வில்லி" யாக இருந்தவர், எவ்வாறு திருவரங்கனின் "கரியவாகிப் புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி, நீண்ட அப் பெரியவாய கண்கள்"-ஆல் கவரப்பட்டு, இராமநுசரை சரணடைந்து உய்ந்து போனார் என்று வெகு சுவையாகச் சொல்லியிருப்பார்.
>

> com/invite/

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 27, 2009, 7:38:55 AM3/27/09
to minT...@googlegroups.com
<இதுவொரு "தாமரைப் புரட்சி" என்று நான் அழைக்கிறேன்.
அரங்கத்தில் நிகழ்ந்த தாமரைப்புரட்சி!!
>

இதோ இப்புரட்சியின் இன்னொரு சுவாரசியம். அடியேன் இட்ட மடலைப் பார்த்து, அடியேனுடைய நண்பர் காவல்கழனி வேங்கடக்ருஷ்ணன் ஒரு சுவையான பாசுரத்தை எடுத்துக்காட்டி மடலனுப்பினார். அவரிடம் தமிழில் மடலனுப்பும் வசதி இல்லாததால் அவர் சார்ப்பில் அடியேன் அனுப்புகிறேன்.
 
தாமரையை எம்பெருமான் கண்களுக்கு உவமையாகச் சொல்வதைப் பார்த்தோம். வேறு ஏதாவது அவயவங்களுக்கும் உவமையாக ஆழ்வார்கள் கூறுகின்றனர்களா!!!  இதோ வேங்கடக்ருஷ்ணன் எடுத்துக் காட்டிய பாசுரம்.
 
"... கைவண்ணம் தாமரை, வாய் கமலம் போலும், கண்ணிணையும் அரவிந்தம், அடியும் அகுதே..." (மன்னிக்கவும் ஆய்த எழுத்தை எப்படி தட்டுவது என்று தெரியவில்லை) ......................(திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம்).
 
இவர் வாக்கில், அவன் கைகள், வாய், கண்கள், திருவடி அனைத்துக்குமே தாமரைதான் உவமை. கொடுத்துவைத்த தாமரை!!!
 
அடியேன்
வேங்கடேஷ்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 27, 2009, 7:42:23 AM3/27/09
to minT...@googlegroups.com
ரெ.கா சார்,

<அடடா! சுகமான வாசிப்பு அனுபவம். உங்கள் விளக்கங்களுக்கும்
சொல் திறமைக்கும் என் வணக்கம். மேலும் மேலும் எழுதுங்கள்.
நன்றி.
>

மிக்க நன்றி. அடியேனுடய வந்தனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்
 
அடியேன்
வேங்கடேஷ்

N. Ganesan

unread,
Mar 27, 2009, 7:53:42 AM3/27/09
to மின்தமிழ்

Thirumalai Vinjamoor Venkatesh wrote:
(மன்னிக்கவும் ஆய்த எழுத்தை எப்படி தட்டுவது என்று தெரியவில்லை)

q = ஃ

Hope this helps,
ng

annamalai sugumaran

unread,
Mar 27, 2009, 8:00:01 AM3/27/09
to minT...@googlegroups.com

.//ஆழ்பொருள்.... "அவன் திருக்கண் திறந்து பார்த்தால் போதும்" அனைத்து சாபங்களும் நீங்கும் என்பதுதான். இதுபற்றியே நாம் முன்னரே பார்த்த கோதையின் வார்த்தை ... " செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ..... அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து" என்றாள்//

செங்கண்மால் திருக் கண்கள் எப்போதாவது மூடியிருக்குமா ?
மனிதன் எப்போதும் குறை சொல்வான் தான்  போய் இடித்துவிட்டு ,மேஜை இடித்து விட்டது என்பான்
கண்   படும் படி நிற்க  அந்த வித்தையை இன்னும் சொல்லிகொடுங்கள்  வேங்கடேஷ்!

மிக அருமையான விளக்கங்கள் ! தொடருங்கள் !
நன்றி 
அன்புடன் ,
ஏ சுகுமாரன்  




 

2009/3/27 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>
நேற்று "கண்ணன்" இழையில் அடியேன் கூறியிருந்த "கப்யாஸம்" பற்றிய இடுகை இதோ. மன்னிக்கவும் சற்றே பெரியது.
 
"கவர்ந்த கண்கள்" என்ற இந்த தலைப்பை உபயோகிக்க, மானசீகமாக சாண்டில்யன் --
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 27, 2009, 8:03:56 AM3/27/09
to minT...@googlegroups.com
சுகுமாரன் சார்,
 
<செங்கண்மால் திருக் கண்கள் எப்போதாவது மூடியிருக்குமா ?>
 
"உறங்குவான் போல் யோகு செய்பவன்" அல்லவா? கண்கள் மூடியும் இருக்கும்.
 
<கண்   படும் படி நிற்க  அந்த வித்தையை இன்னும் சொல்லிகொடுங்கள்  வேங்கடேஷ்!

மிக அருமையான விளக்கங்கள் ! தொடருங்கள் !>

தங்களுக்கு அடியேனுடைய நன்றியும் வந்தனங்களும்

அடியேன்

வேங்கடேஷ்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 27, 2009, 8:05:18 AM3/27/09
to minT...@googlegroups.com
கணேசன் சார்,
 
மிக்க நன்றி. வேலை செய்கிறது. இதோ.....  ஃ
 
அடியேன்
வேங்கடேஷ்


From: N. Ganesan <naa.g...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Friday, 27 March, 2009 5:23:42 PM
Subject: [MinTamil] Re: கவர்ந்த கண்கள்

Download prohibited? No problem. CHAT from any browser, without download.

N. Ganesan

unread,
Mar 27, 2009, 8:38:52 AM3/27/09
to மின்தமிழ்

Thirumalai Vinjamoor Venkatesh wrote:
> கணேசன் சார்,
>
> மிக்க நன்றி. வேலை செய்கிறது. இதோ.....  ஃ
>  
> அடியேன்
> வேங்கடேஷ்
>

இதெல்லாம் வந்ததற்கு அடிப்படை வரலாற்றை எழுதுவேன்.
அதில் என் பங்கு அணிற்பங்காகவும் உண்டு.

ஸ்ரீமதி கமலம் கூட்டொலிகள் (diphthongs) தட்டெழுத ஒருமுறை கேட்டார்.

ஐ = ai, ஔ = au.

யூனிகோட் வருவதன் முன், ஹார்வர்ட் - கியோட்டா ஸ்கீம் வந்தது,
அதில் தமிழ் எழுத்துக்கள் சேர்த்தப்பட்டன. உம்:
See CTamil (Univ. of Paris, list owner: Jean-Luc Chevillard)
discussions:
http://www.services.cnrs.fr/wws/info/ctamil

A frequently used scheme for translitteration of Tamil is:
a A i I u U e E ai o O au K
k G c J T N t n p m y r l v Z L R n2 (See Here for variants) “
http://www.services.cnrs.fr/wws/arc/ctamil/2002-04/msg00004.html


Pl. note that t is used by Indologists for , what is normally written
as "th" by Tamils. Since we Tamils don't have the aspirated letters
of Sanskrit etc., we just use "th" (I discussed this long ago with
Muthu,
while forming Anjal translit. scheme). Now Muthu's anjal sceheme
is almost univeraslly used in e-kalappai, nhm, ..... editors.

-----------

பேரா. செல்வா தமிழின் ஒலிப்பு முக்கியத்துவத்தை விளக்கி வருகிறார்,
பலரும் ஆங்கிலக்கல்வி, உரோமன்/ஆங்கில எழுத்தைக் கொண்டு
தமிழ் வாசிக்கும் நிலை. இந்நிலையில் agam, azhagu, piRagu, mugappu,
idugai, ... என்றெல்லாம் எழுதுதல் கன்னடம், தெலுங்குக்குப் பொருத்தமே
தவிர, தமிழுக்குச் சற்றும் பொருந்தாது. akam, azhaku, piRaku, makappu,
idukai என்றோ, aham, azhahu, piRahu, muhappu, iduhai, என்றோ *தமிழை*
ஆங்கில எழுத்தில் எழுத வேண்டும். நா. கண்ணன் தொல்காப்பியத்தில்
“செந்தமிழ் சிவணிய நிலங்கள்” என்றால் என்றால் என்ன? என வினவினார்.
மதறாஸை விட்டுவிடுங்கள், ‘தி ஹிந்து’ பேப்பரில் பிற மாநில ஜர்னலிஸ்ட்ஸ்
எழுதும் தமிழ் வார்த்தை மரபு தமிழுக்குப் பெரிய ஊறும், தீங்கும் ஆகும்.

செந்தமிழ் சிவணிய மரபு: பாண்டி நாட்டிலும், கொங்கிலும், இலங்கையிலும்
காணலாம். அவர்கள் எழுதும் வார்த்தைகளில் ஆங்கில எழுத்தில்
உயிரெழுத்துக்களின் இடைப்பட்ட ககரம் ஒருவகை ஹகர ஒலி.
Fricative sound for intervocalial -k-, something like -h- sound.
Hence, see http://noolaham.net (Note: *not* http://noolagam.net :) )
For Tamil to survive into the future, it's essential that
intervocalical -k-
is written in English script as -k- or -h-, definitely not as -g-.

will give a long essay with what linguists like late lamented Zvelebil
say on this.

முதலில் கல்யாண், முத்து, ... எல்லாம் மதறாஸ் மரபில்தான்
agam, azhagu, piRagu, mugappu, idugai, ... என்றெழுதிக்
கொண்டிருந்தார்கள். பிழையைச் சுட்டிக் காட்டினேன், பிறகு திருத்தம்
வந்தது.

மேலும் விரிவாகப் பின்னர்,
நா. கணேசன்

devoo

unread,
Mar 27, 2009, 8:39:07 AM3/27/09
to மின்தமிழ்
Mar 27, 1:32 pm, Thirumalai Vinjamoor Venkatesh

//மேலே எழுதியவை அனைத்தும், காஞ்சீபுரம் மஹாவித்வான்
அண்ணங்கராச்சார்யாரின் விளக்கத்தை அடியொற்றியே அமைந்தது.//

பலமுறை படித்தும் போதுமென்று தோன்றவில்லை.
இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள்.
எம்பெருமானது திருமேனி பஞ்சோபநிஷத் மயமானது என்பர்;
எம்பெருமானாரது திருமேனி த்ரமிடோபநிஷத் மயமானது.

//அழறலர் தாமரை//

இச்சொல் ‘பங்கஜம்’ என்பதற்கு நிகரானது;
அழறு – சேறு – பங்கம் (Pankam)
சேற்றில் முளைத்த செந்தாமரை - பங்கஜம்.


//இந்தச் சூடுதான் இராமாநுசரை இவ்வளவு வெறியுடன் பலப்பல உதாரணங்களுடன்
யாதவப்ரகாசருக்கு மறுப்பெழுத வைத்தது.//

இதில் உண்மை இருக்கலாம்;ஆயினும் ‘தயைக ஸிந்து’,
‘காரேய் கருணை’ என்னும் விசேஷணங்களுக்குச்சேரப் பொருள் கொள்வதே
முறையானது.
பிற்காலத்தில் யாதவரையும் அவர் கருணையோடு ஆட்கொண்டார்.
பரந்த மனம் கொண்ட பாஷ்யகாரர், அருளிச்செயலை அறியாதாரும் அதில் புதைந்து
கிடக்கும் பொருளைச் சுவைக்கும் வண்ணம் வடமொழி என்னும் ஊடகம் வழியே அதை
வெளி உலகுக்கு அறிவித்தார் என்பதே உண்மை. ஓசைப்படாமல் செய்த ஓர் அரிய
தமிழ்ப்பணி.


தேவ்

N. Ganesan

unread,
Mar 27, 2009, 8:45:04 AM3/27/09
to மின்தமிழ்

devoo wrote:
> Mar 27, 1:32 pm, Thirumalai Vinjamoor Venkatesh
>
> //மேலே எழுதியவை அனைத்தும், காஞ்சீபுரம் மஹாவித்வான்
> அண்ணங்கராச்சார்யாரின் விளக்கத்தை அடியொற்றியே அமைந்தது.//
>
> பலமுறை படித்தும் போதுமென்று தோன்றவில்லை.
> இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள்.
> எம்பெருமானது திருமேனி பஞ்சோபநிஷத் மயமானது என்பர்;
> எம்பெருமானாரது திருமேனி த்ரமிடோபநிஷத் மயமானது.
>
> //அழறலர் தாமரை//
>
> இச்சொல் ‘பங்கஜம்’ என்பதற்கு நிகரானது;
> அழறு – சேறு – பங்கம் (Pankam)

அளறு - செந்தமிழ்ச் சொல்.
அழறு - என்ற பேச்சுவழக்கை ஆழ்வார் பயன்படுத்துகிறார்.

கண்ணாலம் என்கிறாளே ஆண்டாள்,
ஆத்தாளை என்பார் அபிராமி பட்டர்.
எளிய மக்களுக்கு தாம் துய்த்த இறையின்பைத் தர
முக்கியமான இடங்களில் மக்கள்வழக்கை
வழங்குகின்றனர்.

அன்பிணை
நா. கணேசன்

Narayanan Kannan

unread,
Mar 27, 2009, 9:32:32 AM3/27/09
to minT...@googlegroups.com
2009/3/27 devoo <rde...@gmail.com>:

> பலமுறை படித்தும் போதுமென்று தோன்றவில்லை.
> இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள்.
> எம்பெருமானது திருமேனி பஞ்சோபநிஷத் மயமானது என்பர்;
> எம்பெருமானாரது திருமேனி த்ரமிடோபநிஷத் மயமானது.
>

அடடா! அத்திருவடி சம்மந்தம் இருப்பதே பெரிய பேரு அல்லவா? பரனூர் அண்ணா
சொல்வார், சும்மா வந்து கியூவிலே நில்லு அது போதும்ன்னு. அதுதான் நம்ம
கேஸு ;-) நினைச்சாலே சுகமா இருக்கு.

> இதில் உண்மை இருக்கலாம்;ஆயினும் ‘தயைக ஸிந்து’,
> ‘காரேய் கருணை’ என்னும் விசேஷணங்களுக்குச்சேரப் பொருள் கொள்வதே
> முறையானது.
> பிற்காலத்தில் யாதவரையும் அவர் கருணையோடு ஆட்கொண்டார்.

அதை மனத்தில் கொண்டுதான் நான் எழுதினேன். யாதவர் அப்படிச் சொல்லும் போது
பின்னால் நின்று கொண்டிருந்த பாஷ்யக்காரரின் சுடு கண்ணீர் யாதவரின்
முதுகில் படுகிறது. யாதவர் உடனே, உமக்கு என் வியாக்கியானத்தில் இஷ்டம்
இல்லையோ? என்கிறார். நெஞ்சு சுடும் போது சுடு கண்ணீர் வரும்.
ஆனந்தபாஷ்யம் செய்யும் போது குளிர் கண்ணீர் வரும். எம்பெருமானார்
நெஞ்சைச் சுட்ட அவ்வருணனையை மீண்டும், மீண்டும் நாம் ஏன் எழுதுவானேன்?
என்பதே என் விண்ணப்பம்.

தாசன்
கண்ணன்

devoo

unread,
Mar 27, 2009, 10:38:06 AM3/27/09
to மின்தமிழ்
Mar 27, 1:32 pm, Thirumalai Vinjamoor Venkatesh

"தெள்ளிய தமிழ் மாலைகள் ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"

செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி, தெளியாத மறை நிலங்கள்
தெளிகின்றோமே - ஸ்வாமி தேசிகன்.
இவர் உடையவருக்கு சுமார் 130 ஆண்டுகளுக்குப்பின்
தோன்றியவர்;ஆனால் உள்ளத்தால் உடையவரோடு வாழ்ந்தார்.
‘ஸங்கல்ப ஸூர்யோதயம்’ என்னும் நாடகம் எழுதினார்.
அதில் உடையவரும் ஒரு பாத்திரம்; அதில் தம்மையும்
அவருக்குச் சீடனாக்கிக் கொண்டு, தொண்டுகள் செய்வதாக
அமைத்தார். உடையவர் காலத்தில் பிறந்து அவருக்கு அணுக்கத் தொண்டு செய்யும்
பேறு கிட்டாத குறையை இதன் மூலம் தீர்த்துக் கொண்டார்.
இல்லறத் துறவியாக வாழ்ந்த இம்மாமனிதர்,
‘யதிப்ரவர பாரதீ ரஸபரேண நீதம் வய:’-
’துறவியற்கிறைவரின் உரைகளில் சுவை காண்பதில்
என் இளமை கழிந்தது’ என்று தம்மைப் பற்றிக் கூறிக்கொள்கிறார்.

நீங்கள் தற்போது எழுதிவரும் இப்பகுதி அச்சுவையை மின்தமிழ்
அரங்கிற்கு அளித்து வருகிறது.

நாலாயிரம் குறித்து இவர் அருளிய ‘நிகம பரிமளம்’ தற்போது
மறைந்து விட்டது ஒரு பெரிய குறைதான்.

தேவ்

devoo

unread,
Mar 27, 2009, 11:06:25 AM3/27/09
to மின்தமிழ்
Mar 27, 5:45 pm, "N. Ganesan"

அளறு - செந்தமிழ்ச் சொல்.//

ஆம் நண்பரே,
நினைவுக்கு வருகிறது -

எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே.

ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று

தேவ்

devoo

unread,
Mar 27, 2009, 1:06:36 PM3/27/09
to மின்தமிழ்
Mar 27, 5:38 pm, "N. Ganesan"

மேலும் விரிவாகப் பின்னர்,

நா. கணேசன்//

நீங்கள் பல இழைகளில் இதுபோலவே கூறி வருகிறீர்கள்.
உங்களுக்கு நேரமின்மையால் பல கருத்துக்களும் முழு வடிவம் பெறாமல்
பாதியில் நிற்கின்றன; மின்பரப்பில் உங்கள் பங்களிப்பும், அனுபவமும் மிக
அதிகம்.அனைத்தையும் தொகுத்துச் சுவைபட வழங்கினால் நன்றாக இருக்கும்.

தேவ்

Kumaran Malli

unread,
Mar 27, 2009, 5:42:45 PM3/27/09
to minT...@googlegroups.com

மிக அருமையாக இருக்கின்றது வேங்கடேஷ் ஐயா. அடியேனும் மீண்டும் மீண்டும் படித்தேன். மற்ற அன்பர்கள் இந்த இழையில் இட்டவற்றையும் படித்துச் சுவைத்தேன். மிக்க நன்றி.

Narayanan Kannan

unread,
Mar 27, 2009, 6:47:17 PM3/27/09
to minT...@googlegroups.com
2009/3/27 devoo <rde...@gmail.com>:

> நாலாயிரம் குறித்து இவர் அருளிய ‘நிகம பரிமளம்’ தற்போது
> மறைந்து விட்டது ஒரு பெரிய குறைதான்.
>

தேசிகன் பற்றி அவ்வப்போது எழுதுங்கள். அவர் எழுதிய அளவிற்கு வேறு யாரும்
எழுதியதில்லை என்று நினைக்கிறேன். அவரது நூல்களெல்லாம்
கணக்கிடப்பட்டுவிட்டனவா? 'நிகம பரிமளம்' கிடைக்க வாய்ப்பே இல்லையா?
நானறிந்தவரையில் வைணவ நூல்கள் பதிப்பிக்கப்பட்டு குடும்பச் சொத்தாக
பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. திருவாய்மொழி ஓலைச்சுவடிகளை பெர்லின்
நூலகத்தில் கூட பார்த்திருக்கிறேன்.

க.>

devoo

unread,
Mar 27, 2009, 11:49:00 PM3/27/09
to மின்தமிழ்
Mar 28, 3:47 am, Narayanan Kannan

தேசிகன் பற்றி அவ்வப்போது எழுதுங்கள். //


நீங்கள் ஆர்வத்துடன் கேட்பது மகிழ்ச்சி தருகிறது.
இவர் சுமார் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
அவற்றில் 32 வைணவக்கோட்பாட்டின் நுட்பங்களை விளக்குகின்றன.

‘ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்’ தலையாயது.
இதை முறையாகப் பாடம் கேட்கும் வழக்கம் இன்றளவும்
நீடித்து வருகிறது.

‘யாதவாப்யுதயம்’ பெருங்காப்பியம்;கண்ணபிரானின் வரலாறு.
அப்பைய தீக்ஷிதர் அவர்களையும் இது கவர்ந்தது.

‘பாதுகா ஸஹஸ்ரம்’ ஆயிரம் பாக்கள் கொண்டது.
எம்பெருமானின் திருவடி நிலைகளது பெருமை கூறுவது.
ஒரே இரவில் இதை ஸ்வாமி அருளினார் என்று கூறப்படுகிறது.
இது உருவான இடம் திருவரங்கம்.

‘ஸங்கல்ப ஸூர்யோதயம்’ ஓர் அருமையான நாடகம்.
அங்கதச் சுவை நிரம்பியது.மாந்தரிடம் காணப்படும் பாசாங்குத்தனத்தையே
பாத்திரங்களாகப் படைத்து
நகைச்சுவை மிளிர விவரிக்கிறார். தெரியாததைத் தெரிந்ததாகக்
காட்டிக் கொள்வது; நன்கு தெரிந்ததையும் தெரியாததுபோல் மறைப்பது இவை
எக்காலத்திலும் இருந்து வருவது நமக்குப்
புரிகிறது. ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் இவர் எவ்வளவு தூரம்
வெறுக்கிறார் என்பதும் தெற்றென விளங்குகிறது.
இவர் மீது மரியாதை கூடுகிறது.

‘ஹம்ஸ ஸந்தேசம்’ – இதுவும் ஓர் அழகிய காவியம்.
இது காளிதாஸரின் மேக ஸந்தேசத்தை அடியொற்றியது
என்று கூறுவர்.ஆனால் இவர்தம் தனித்தன்மை அந்நூலிலிருந்து
இக்காவியத்தை மிகவும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
பிறவற்றை மேலும் விரிவாகக் கூறுவேன்.

தேவ்

Kumaran Malli

unread,
Mar 27, 2009, 11:52:16 PM3/27/09
to minT...@googlegroups.com
நன்றி தேவ் ஐயா.

2009/3/27 devoo <rde...@gmail.com>

Narayanan Kannan

unread,
Mar 28, 2009, 2:29:34 AM3/28/09
to minT...@googlegroups.com
2009/3/28 devoo <rde...@gmail.com>:

> பிறவற்றை மேலும் விரிவாகக் கூறுவேன்.
>


ஆகா!
சுவைக்கக் காத்திருக்கிறோம்.
தத்வத்ரயசாரம் அண்ணா சொல்லி முதன்முறை கேட்டதன் பாதிப்பு இன்னும்
நீங்கவில்லை. என்ன ஆழம், என்ன அலசல். அப்பப்பா!
அண்ணா சொல்வது சரி, வைணவத்திற்கு கோட்டை கட்டிவிட்டார் தேசிகன்.

க.>

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 30, 2009, 12:10:10 AM3/30/09
to minT...@googlegroups.com
கண்ணன் சார்,
 
<எம்பெருமானார் நெஞ்சைச் சுட்ட அவ்வருணனையை மீண்டும், மீண்டும் நாம் ஏன் எழுதுவானேன்?
என்பதே என் விண்ணப்பம்.
>

புரிகிறது. எம்பெருமானாருடைய காருண்யத்தைத் தெரிவிக்கவே அவ்வாறு எழுதினேன். நிறுத்துகிறேன்.
 
காரேய் கருணை இராமாநுச! இக்கட்லிடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மையை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான், வந்து நீ என்னை உய்த்தபின், உன்
சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!
 
இந்த காருண்யத்தின் அடியாகத்தான் அவரை "இதத்தாய் இராமாநுசன்" என்றனர் முன்னோர்.
 
அடியேன்
வேங்கடேஷ்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 30, 2009, 12:28:09 AM3/30/09
to minT...@googlegroups.com
கணேசன் சார்,
 
தாங்கள் சொன்னது போல்தான் உரையில் உள்ளது. அதாவது "அழறு என்று அளறு".
 
ஆழ்வார்கள் வழக்குச்சொற்களை பல இடங்களில் உபயோகிக்கின்றனர். திருநாவாய் என்ற திவ்யதேசத்தைப் பாடும் பொழுது, "குறுக்கும் வகை உண்டு கொலோ" என்கிறார். மலையாள தேசத்தில் வழங்கும் ஒரு சொல் குறுக்கும்.  இவ்வாறு பலவிடங்களில் குறிக்கின்றனர்.
 
அடியேன்
வேங்கடேஷ்

From: N. Ganesan <naa.g...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Friday, 27 March, 2009 6:15:04 PM
Subject: [MinTamil] Re: கவர்ந்த கண்கள்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 30, 2009, 12:53:41 AM3/30/09
to minT...@googlegroups.com
தேவ் சார்,
 
<செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி, தெளியாத மறை நிலங்கள்
தெளிகின்றோமே - ஸ்வாமி தேசிகன்
>
தவறுக்கு மன்னிக்கவும். திருத்தியமைக்கு நன்றி!.
 
அடியேன்
வேங்கடேஷ்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Mar 30, 2009, 12:55:47 AM3/30/09
to minT...@googlegroups.com
குமரன் சார்,


<மிக அருமையாக இருக்கின்றது வேங்கடேஷ் ஐயா. அடியேனும் மீண்டும் மீண்டும் படித்தேன். மற்ற அன்பர்கள் இந்த இழையில் இட்டவற்றையும் படித்துச் சுவைத்தேன். மிக்க நன்றி>
 
பெருமை அனைத்தும் காஞ்சீபுரம் அண்ணங்கராச்சாரியாரையே சேரும். அவர் எழுத்தை அடியொற்றியே எழுதினேன்.
 
அடியேன்
வேங்கடேஷ்.

Ranga Veeravalli

unread,
Apr 15, 2023, 12:26:48 PM4/15/23
to மின்தமிழ்
அவை நல்லோருக்கு நமஸ்காரம்.

'திருமாலுக்கு ஏன் செங்கண்??!' என்று திடீரென்று என்னுள் எழுந்த இந்தக் கேள்விக்கு, வலை.வளியில் விடை தேடியபோது, அது என்னை 'கவர்ந்த கண்கள்' பதிவிற்கு அழைத்து வந்தது.

ஶ்ரீமான் திருமலை வெங்கடேஷ் அவர்களின் பதிவின் *சாரசத்தி(தா)ல்* காதலாகி, நூல்வரிசையாய் அதைத் தொடர்ந்த மற்ற பதிவுகளில் எல்லாவற்றிலும் மூழ்கித் திளைத்து, 

'நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று',

என்ற மூதுரையின் நினைவூட்டலால், உடனே இந்த வலைக்குழுவின் நிர்வாகத்தைத் தேடிப்போய், என்னையும் இணைத்துக் கொள்ள விண்ணப்பித்தேன்... 

சுமார் அரை மணி நேரத்தில், என்னையும் ஒரு பொருட்டாய் ஏற்று..... - இதோ, எனது பிரணாமங்களுடன் தங்களின் மிசையிலே - முதற் கூறிய என் ஐயத்தையே முதல் பதிவாக்க முற்படுகிறேன்:

"திருமாலுக்கு ஏன் செங்கண்??!!"  

{தாமரையை அவரது திருக் கண்களுக்கு உவமையாய் கூறப் போக, { 'அரவிந்த தளாய தாக்‌ஷம்' - தாமரையின் தனியான இதழ்(கள்) - என்பது அனேகமாய் அழகிய பெரிய கண்களுக்குப் பொருத்தமான உபமானாயிருக்கலாக - அதனை (தவறாய்) நீட்டி, அதன் உண்மை நிறமான இளஞ்சிவப்பை (வெளிர்/வெண்சிவப்பு, குருவகம், எயிறு போன்ற நிறம்) பொத்தம்பொதுவாய் சிவப்பென்றும், அதுவே பின்னால் சிவந்த கண்ணென்றும், சொல்லப் போந்ததோ?? }

அறிஞர்களின் கருத்துகளை அறிய, ஆவலுடன் காத்திருக்கும், 

தமிழ் மற்றும் ஆன்மிக நேயன், தங்களின் விதேயன், 

ரங்கமன்னார் வீரவல்லி.

இசையினியன்

unread,
Apr 16, 2023, 12:38:16 PM4/16/23
to மின்தமிழ்
செங்கண் என்றால்

1. ஒரு மீன் வகை
2. ஒரு நெல் வகை
3. சிவந்த கண்கள்

பொதுவாக தமிழ் இலக்கியங்கள் ஒருவரின் கண்களை மீனோடு  ஒப்புமை செய்யும். 
பொதுவாக புலவர்கள் உதட்டை மட்டுமே தாமரையோடு உவமை செய்வர். 
கண்களை ஒரு போதும் தாமரையோடு ஒப்புமை செய்வது இல்லை. 

ஆகவே, 
 செங்கண் திருமால் என்றால் "செங்கண் என்ற மீனின் கண்களைப் போன்ற சிவந்த கண்களைக் கொண்ட திருமால்" எனப் பொருள் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. 
Reply all
Reply to author
Forward
0 new messages