
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆம் சுபா. நன்றி.
2011/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>
ராஜம் அம்மா வேறொரு இழையில் காமதேனு பற்றி தகவல் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்கள். தஞ்சைக்கு அருகிலே ஒரு கிராமத்தில் ஒரு ஐயனார் கோயிலில் நான் பார்த்த காமதேனு சிலை ஒன்றின் படத்தை இங்கே இணைத்திருக்கின்றேன். இந்த இழையில் காமதேனு பற்றிய தகவல்களை வழங்குங்களேன்.
About Kamadhenu
http://books.google.com/books?id=SLcv-Ow6Ux4C&pg=PA733&dq=kamadhenu&hl=en&ei=6GLkTeLnAoSougPqkpWWBw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDEQ6AEwAg#v=onepage&q=kamadhenu&f=false
1. முதல் முதலில் எங்கே (எந்தப் புராணத்தில், இலக்கியத்தில்) காமதேனு, கற்பகத் தரு பற்றிச் சொல்லுகிறார்கள்?
2. புராணச்செய்தியின் மூலம் தருவீர்கள? எந்தப் புராணம்? இலக்கிய வரிகள் என்ன? -- இவை போன்றவும் பிற விவரங்களும் தெரிந்தால் உதவியாக இருக்கும்.
3. காமதேனுவுக்கு இப்படிப் பெண்ணின் உடல் உறுப்புக்களும், ... குஞ்சலத்துடன் இரட்டைப் பின்னல், பொட்டு, குண்டலங்கள், பிற நகைகள், ... எல்லாம் அமைந்த உருவத்தைப் படைத்தது யார்? எப்போது அப்படி உருவாக்கினார்கள்?
4. மடுவும் முலைகளும் (சொல்லாட்சி தவறில்லை என்று எழுதினேன். அவையோருக்கு objection என்றால் மன்னிக்கவும்; "மார்பகம்" என்று மாற்றிப் படித்துக்கொள்ளவும்) ஒரே பிறவிக்குச் சேர்ந்து இருப்பது முரண்பாடு அல்லவா? அதை ஏன் யாரும் சரி செய்யவில்லை?
4. காமதேனு ஒரு முனிவரிடம் வளர்ந்ததாக எங்கேயோ படித்த நினைவு. அப்படி அது/அவள் ஒரு முனிவரிடம் வளர்ந்தது உண்மையா? அப்படியானால் வளர்த்த முனிவர் யார்?
5. காமதேனு யாருக்கு வாகனம்? ஏன்? இதைப் பற்றிப் புராணச் செய்தி உண்டா?
6. "கேட்டது எல்லாம் தரும்" காமதேனு என்ற நம்பிக்கை எப்போது யாரால் தொடங்கப்பட்டது?
7. கற்பகத் தருவையும் காமதேனுவையும் சேர்த்தே சொல்லுவது வழக்கமானால், அது ஏன்? கேட்டதை எல்லாம் கொடுக்கும் படிவங்கள் இரண்டு ஏன்? ஒன்றால் மட்டும் அதைச் செய்ய முடியாதா?
உ வே ரங்க தாத்தாச்சாரியர் ஸ்வாமிகள்
--
2011/5/31 rajam <ra...@earthlink.net>1. முதல் முதலில் எங்கே (எந்தப் புராணத்தில், இலக்கியத்தில்) காமதேனு, கற்பகத் தரு பற்றிச் சொல்லுகிறார்கள்?என்ன அக்கா இது! காமதேனுவைக் குறிப்பிடாத புராணம் ஏதாவது இருக்கிறதா என்ன? கற்பகத் தருவைப் பேசாத காப்பியமும் உண்டா? தரு என்று சொன்னாலே, கற்பகத் தருவையும், தேவலோகத்தையும் குறிப்பதாகத்தானே பல செய்யுள்கள் அமைந்துள்ளன?
2. புராணச்செய்தியின் மூலம் தருவீர்கள? எந்தப் புராணம்? இலக்கிய வரிகள் என்ன? -- இவை போன்றவும் பிற விவரங்களும் தெரிந்தால் உதவியாக இருக்கும்.அநேகமாக எல்லாப் புராணங்களிலும் இருக்கின்ற கதை. வசிஷ்டரிடமிருந்து விஸ்வாமித்திரர் பறித்துக்கொள்ள முயன்ற கதைதான் கம்பராமாயணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறதே! இந்தப் பசுவைப் பிடித்துச் செல்ல முயன்ற அஷ்ட வசுக்களில் ஒருவரான த்யோ, சாபத்தால் சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்தார். தேவவிரதன். பின்னாளில் பீஷ்மர். (மற்ற ஏழு வசுக்களும் குற்றத்துக்கு நேரடித் தொடர்பற்றவர்கள் என்பதால், பிறந்தவுடனேயே கங்கையில் எறியப்பட்டு, சாப விமோசனம் பெற்றார்கள்.)
சபலை என்றும் சொல்வார்கள்.
காமதேனுப் பசுவுக்கு ஒரு மகள் உண்டு. நந்தினி. (பெங்களூர் முழுக்க நந்தினி பால்தான்.)
3. காமதேனுவுக்கு இப்படிப் பெண்ணின் உடல் உறுப்புக்களும், ... குஞ்சலத்துடன் இரட்டைப் பின்னல், பொட்டு, குண்டலங்கள், பிற நகைகள், ... எல்லாம் அமைந்த உருவத்தைப் படைத்தது யார்? எப்போது அப்படி உருவாக்கினார்கள்?இதெல்லாம் பிற்கால ஓவியர்களின் கற்பனை. இலக்கியச் சான்று ஏதும் இல்லை. ராவணனுக்கு சிம்மெட்ரிக்கலாக பத்துத் தலைகளை வரைகிறார்கள். இரண்டு டைமென்ஷன் படத்தில் அப்படித்தான் செய்ய முடியும். ஆனால், ஜப்பானில் செய்யப்பட்ட ராமாயண அனிமேஷன் படத்தில், ராவணனை மிக அழகாகச் சித்திரித்திருந்தார்கள். அவன் தசக்ரீவன்--பத்துக் கழுத்தன் என்ற முக்கியமான குறிப்பை விட்டு விட்டு நம்மவர்கள், ஒரு கழுத்தில் பத்துத் தலைகளைத் தொங்க விடுகிறார்கள். அதுவும் unbalanced. ஒரு பக்கம் நான்கு; மறுபக்கம் ஐந்து தலைகள்! இப்படி ஒருத்தன் இருந்தா, எப்படி நடந்து போவான் என்று நினைத்துக் கொள்வதுண்டு.ஆனாலும் அந்த ஜப்பான் அனிமேஷன் ராமாயணத்தில் ராவணனின் பத்துத் தலை, பத்துக் கழுத்து அமைப்பு வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தது.பசு என்றாலே பெண். தெய்வப் பசு. தேவலோகப் பசு. பெண் சிநேகிதி, பெண் ரசிகை என்பது போல எம்ஃபஸிஸ் தேவைப்பட்டவர்களின் கற்பனை, ஐடை, குஞ்சலம், மார்பகம் எல்லாம். (இஸ்லாத்தில் இதுபோன்ற ஒரு பசு உண்டு. அதற்குத்தான் மார்பகங்கள் உள்ளதாகக் காட்டுகிறார்கள். நம் புராணங்களில், மடிதான் உண்டு. கூந்தல், குஞ்சலம் தோடு தொங்கட்டான், மார்பகம் என்று எதையும் யாரும் வர்ணிக்கக் காணோம்.
4. மடுவும் முலைகளும் (சொல்லாட்சி தவறில்லை என்று எழுதினேன். அவையோருக்கு objection என்றால் மன்னிக்கவும்; "மார்பகம்" என்று மாற்றிப் படித்துக்கொள்ளவும்) ஒரே பிறவிக்குச் சேர்ந்து இருப்பது முரண்பாடு அல்லவா? அதை ஏன் யாரும் சரி செய்யவில்லை?சிற்பிகள், ஓவியர்கள் கற்பனைக்கு ஏற்பட்ட முட்டுப்பாடு. இஸ்லாத்தின் தாக்கமும் பிற்காலத்தில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு.
4. காமதேனு ஒரு முனிவரிடம் வளர்ந்ததாக எங்கேயோ படித்த நினைவு. அப்படி அது/அவள் ஒரு முனிவரிடம் வளர்ந்தது உண்மையா? அப்படியானால் வளர்த்த முனிவர் யார்?என்னங்கக்கா! வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கதை ராமாயணத்திலும் பாரதத்திலும் உண்டாச்சே! (ஆனால் வசிஷ்டர் வளர்த்தது நந்தினியை என்று மங்கலாக நினைவு. சரிபார்க்க வேண்டும்.)
5. காமதேனு யாருக்கு வாகனம்? ஏன்? இதைப் பற்றிப் புராணச் செய்தி உண்டா?யாருக்கும் வாகனமில்லை. தேவலோகப் பசு. அவ்ளதான்.
6. "கேட்டது எல்லாம் தரும்" காமதேனு என்ற நம்பிக்கை எப்போது யாரால் தொடங்கப்பட்டது?எப்ப அதுக்கு காம-தேனு என்று பேர் வச்சாங்களோ அப்பவே இந்த நம்பிக்கையும் கலந்துதானே இருந்திருக்கிறது? காம=விரும்பிய (தைத் தரும்) தேனு=பசு. தொட்டுல்ல போட்டு பேர் வச்சதுமே நம்பிக்கையும் வந்தூட்சி.
7. கற்பகத் தருவையும் காமதேனுவையும் சேர்த்தே சொல்லுவது வழக்கமானால், அது ஏன்? கேட்டதை எல்லாம் கொடுக்கும் படிவங்கள் இரண்டு ஏன்? ஒன்றால் மட்டும் அதைச் செய்ய முடியாதா?
ம்ம்ம்? அப்போ காமதேனுவுக்கு இரண்டு சகோதரியர் உண்டு; இந்த மூன்று பசுக்களும் ஒரே மாதிரியான தன்மையுடையவை என்பதும், நந்தினி என்ற மகள் உண்டு, அதுவும் இப்படிப்பட்டதே என்பது எதற்காம்? Variety is the spice of life!
(காமதேனுவின் சகோதரியர் பெயர் தொண்டைல மாட்டிட்டு நிக்குது. ஞாபகம் வந்தா சொல்றேன். இல்லாட்டி, உ வே ரங்க கனபாடிகள் சொல்வார்!)
--
அன்புடன்,
ஹரிகி.
On May 31, 2011, at 11:35 AM, Hari Krishnan wrote:2011/5/31 rajam <ra...@earthlink.net>
1. முதல் முதலில் எங்கே (எந்தப் புராணத்தில், இலக்கியத்தில்) காமதேனு, கற்பகத் தரு பற்றிச் சொல்லுகிறார்கள்?
4. மடுவும் முலைகளும் (சொல்லாட்சி தவறில்லை என்று எழுதினேன். அவையோருக்கு objection என்றால் மன்னிக்கவும்; "மார்பகம்" என்று மாற்றிப் படித்துக்கொள்ளவும்) ஒரே பிறவிக்குச் சேர்ந்து இருப்பது முரண்பாடு அல்லவா? அதை ஏன் யாரும் சரி செய்யவில்லை?சிற்பிகள், ஓவியர்கள் கற்பனைக்கு ஏற்பட்ட முட்டுப்பாடு. இஸ்லாத்தின் தாக்கமும் பிற்காலத்தில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு.இஸ்லாத்தின் தாக்குதல் எனக்குத் தெரியாது. தெரிந்தவர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

--
திருப்பூவணப் புராணத்தில் காமதேனு,
426 ஊனநீங்குமையர்கையிலுள்ளொருமையோடுகோ
தானநல்கினோர்கணீடுதரையிலின்பமருவியே
தீனமின்றிவாழ்ந்துபின்றிருந்தருந்தவத்தினா
லானகாமதேனுவின்றனமுகநன்கருந்துவார்
1902ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது செய்யப்பெற்ற திருப்பூவணம் கோயிலில் உள்ள காமதேனுவைப் படம் எடுத்து ள்ளோம். அதையும் இங்கே விரைவில் இணைத்து வெளியிடுகின்றேன்.
அன்பன்
கி.காளைராசன்