அப்பாவின் கோரிக்கை ........

27 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 21, 2021, 6:41:01 PM6/21/21
to மின்தமிழ்

என் தந்தை கரம்பற்றி
நான் நடந்ததாக
எனக்கு நினைவில்லை !

அதை வாங்கிக் கொடுங்கள்
இதை வாங்கிக் கொடுங்கள்
என என் தந்தையிடம்
நான் கேட்டதாக
நினைவுகள் இல்லை !

அப்பாவின் முதுகில்
அமர்ந்து யானை
சவாரி செய்ததாகவோ
அவர் ஓட்டும்
வண்டியில் அமர்ந்து
பள்ளிக்குச்சென்றதாகவோ
எந்த வித நினைவுகளும் இல்லை !

ஏழு வயதில்
அப்பாவின் பாடையோடு
இடுகாட்டிற்குப்போனது
மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது !

ஆறடி உயரமுள்ள
அப்பாவை
ஆறடி உயரமுள்ள
குழிக்குள் உள்ளே இறக்கி
கல்லைப் போடு
கல்லைப் போடு
மண்ணைப் போடு
மண்ணைப் போடு
என்று மற்றவர்கள் சொல்ல
கல்லைப் போட்டு
மண்ணைப் போட்டு குழியை
மூடியது மட்டுமே
நினைவுகளில் இருக்கிறது !

கங்காரு போலவே
பிள்ளைகளைச்
சுமந்து கொண்டே
அலைகின்றாய் என
நண்பர்கள் திட்டியபோதும்
அவரவராய் வளரட்டுமே
எனப் பலர் அறிவுறுத்தியபோதும்
உங்களோடு இருப்பதிலே
உள்ளபடியே மகிழ்ச்சிதான் !

நான் இழந்ததை
உங்களுக்கு தருவதற்காக
எனை வருத்திக்கொள்வதை
எனது பலவீனமாய்
எடுக்க மாட்டீர்கள்
எனும் நம்பிக்கை
எனக்கு உண்டு
என் குழந்தைகளே !

ஆண்டு தோறும்
திதி அன்று திவசம் என்று
தந்தையை இழந்தவர்கள்
உழைக்காதவர்கள்
உண்பதற்கு
இழவு வரி அளிக்கும்
ஏற்பாட்டில் எனக்கு
உடன்பாடில்லை !

என் தந்தை நினைவுநாளில்
முதியோர் இல்லத்தில்
நுழைகின்றேன்
அங்கிருப்போர்
என் தந்தை வயதிலிருப்போர்
இருகரம் கூப்பி
எழுந்து நின்று வணங்கும் போது
என் தந்தையும் உயிரோடு
இருந்திருந்தால்
இவர் வயதில் இருப்பாரோ
எனும் எண்ணம் ஓட
அவர்களுக்கு வணக்கம்
சொல்லிபடியே நுழைகின்றேன் !
என்னால் முடிந்ததை
அவர்களுக்கு செய்கின்றேன் !

என் குழந்தைகளே !
தாத்தாவின் நினைவு நாளில்
அப்பாவின் கோரிக்கை ....
எதிர்காலத்தில்
என வழியைப் பின்பற்றுங்கள் !
அர்த்தமற்ற சடங்குகளை
ஆழக்குழி தோண்டிப்
புதையுங்கள் !
பெற்றோரின் நினைவு நாளில்
எளியோருக்கு உதவுங்கள் !



தேமொழி

unread,
Jun 22, 2021, 6:17:05 AM6/22/21
to மின்தமிழ்
#WhatsappShare

அன்புள்ள அப்பாக்கள்-6

தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பெருவிருப்புடையவன்  அடியேன். அவருடைய பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டாலும் இந்த அன்புள்ள அப்பாக்கள் வரிசையில் கீழ்க்காணும் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதினேன்.

' புத்தியோட பொழச்சுக்கோ' என்று அறிவுறுத்தும் அநேகருக்கு அப்பால் இப்படி ஓர் அப்பா!  இவர்களாலேதான் இவ்வுலகம் காலையில் கதிரவனையும் மாலையில் இருளையும் நிலவையும் , மண்ணில் மழையையும் காண்கிறோம்!

இதோ மணவை முஸ்தபா அவர்கள் தன்னுடைய தந்தை சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நமக்கும் அது சற்று கேட்கிறது!

........ "அறிவியல் தமிழில் நூல்களை அதிகம் கொண்டு வரவேண்டும் என்ற என்னுடைய ஆர்வம் ஒரு புறமிருக்க, என்னுடைய தந்தை தனது 102 ஆவது வயதில் மரணப்படுக்கையில் இருக்கும்போது என்னை அழைத்து,

" உன்னுடைய வருமானத்தில் பாதி உனக்காகவும் பாதி சமுதாயத்திற்காகவும் பயன்பட வேண்டும் " என்றும்,

" உன்னுடைய நேரத்தில் பாதி உனக்காகவும் பாதியை பொதுநலனுக்காகவும் செலவழிக்க வேண்டும் " என்றும் கேட்டுக் கொண்டார். அதன்படியே நடந்து வருகிறேன். "

-- மணவை முஸ்தபா.

மா. பாரதிமுத்துநாயகம்

Jayabalan Mavanna

unread,
Jun 23, 2021, 2:26:36 PM6/23/21
to மின்தமிழ்
ஏழு வயதில்
அப்பாவின் பாடையோடு
இடுகாட்டிற்குப்போனது
மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது !

The quoted lines moved my heart so much that I couldnot resist my tears.



Reply all
Reply to author
Forward
0 new messages