![]() ![]() ![]() காசி பிராமணர்கள் அறிவுஜீவிகள் என்று அறிப்படக் காரணம் காசி கல்வி கேள்வியில் சிறந்து குறிப்பாக சமஸ்கிரித ஞானம் கொண்டவ்ர்கள் நிறைந்த நகரம் என்று பன்னெடுங்காலமாக் கருதப்பட்டதே.
சுமார் 3 மில்லியன் மக்களுக்குமேல் வாழும் நகரில் கற்றறிந்தோர் விழுக்காடு 67க்கு மேல்
சமஸ்கிரித அறிவை மேம்படச் செய்ய பல்கலைக் கழகங்களும் சமஸ்கிரிதப் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் நிறைந்து நடுவன் அரசின் தாராள நிதி உதவியுடன் வளமாக இருப்பது வறுமையில் வாடும் தமிழ் மொழி ஆர்வலர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தக்கூடும்
காசி மன்னரால் காசி ராஜா டிரஸ்ட் என்ற நிறுவனம் புராணங்களைப் பதிப்பிக்கும் பணியில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வருகிறது. மூன்றாம் பதிப்பை வெளியிடும்போது அந்நிறுவனத்தில் உள்ள சமஸ்கிரிதப் பண்டிதர்கள் கணினிப் பயன்பாட்டில் பாண்டித்யம் பெற்று கணினி அடிப்படியில் சொற்பட்டியலை உருவாக்கி விளக்கம் எழுத ஆரம்பித்தனர்
அவ்வப்போது இது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது
அக்காலகட்டத்தில் நவீனத் தொழில் நுட்பம் பயன்பாட்டில் இருந்த போது குருவின் காலடி அமர்ந்து அவர் வாயால் பாடம் கேட்டுப் பயிலும் வேதப்பாடசாலைகள் குறைய ஆரம்பித்தன
1975-ல் 159க்குமேல் இருந்த வேதப் பாடசாலைகள் குறைந்து ஆயிரத்துக்கும் குறைவான மாணவ்ர்களே படிக்கும் நிலையை அடைந்துவிட்டது.
வேத அப்பியாசம் செய்து பொறுமையுடன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியகளைவிட மிக அதிக அளவில் பல்வேறுபட்ட பிராமணர்கள் அங்கே இருக்கிறார்கள்
நான் மறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் காசி மன்னரின் அழைப்பின் பேரில் காசிக்கு அழைத்து சென்றபோது இவ்வகை உயர்வகைப் பிராமணர்கள் வேதம் ஓதும் நிகழ்ழ்சியில் கலந்து கொண்டேன் தலைமை ஏற்றவர் தமிழ் நாட்டில் பிறந்து காசியில் வாசம் செய்யும் கணபாடிகள். அவர் தலைமியில் நான்கு வேதங்களையும் இசையுடன் வேத விற்பன்னர்கள் பாடிக்காட்டினர்
காசியில் இவர்களைப்போன்று வேதம் ஓதுவோர் மிகமிகக் குறைவே
காசியில் வந்து குவியும் கணக்கிலா பக்தர்கள், ஆயிரக்கணக்கான சாவதற்கென்றே நடமாடும் வயதான மனிதர்கள், சாரி சாரியாக அனுமன் கட் நோக்கிப் பயனிக்கும் பின ஊர்திகளில் மேல்புறம் மீளாத்துயிலில் இருப்போருக்கும் சேவை செய்ய மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு
பலவிதமான பிராமணர்கள் வாழ்வாதாரத்துக்காகப் பணிபுரிகிறார்கள்
வேதசாரத்தை விளக்கும் விற்பன்னர்களைவிட பூஜை புணஸ்கார தொழில்நுட்பவியலார்களே அதிகம். அவர்களே வேத நியமங்களை மனப்புத்தகத்தில் இருந்து எடுத்து பாமரர் மனம் நிறைய மந்திரம் சொல்லி முடிப்பவர்கள். அவர்கள் வேதத்துக்கும் மக்களுக்கும் இடையே பாலமாகப் பயன்படுபவர்கள்
ஆயினும் அவர்கள் வேத அறிவில் கரை கண்டவர்கள் என்று சொல்ல முடியாது
புலமையைவிட பாமரர்களிடம் இருந்து பணம் பறிக்கும் திறமை அதிகம் என்று சொல்லப்படுவதுண்டு
அவர்களில் மிகச் சிலரே சமஸ்கிரிதத்தில் முழுமையான புலமை வாய்ந்தவர்கள். பெரும்பாலானோர் வேதத்தைன் ஓதுவாரே ஒழிய ஓதும் மந்திரங்களுக்கு அர்த்தம் என்ன என்று தெரியாதவர்கள். பெரும்பாலும் மதச்சடங்குகளைச் செய்வதும் முன்னோர் கற்பித்த வேத உச்சாடனம் செய்வதும் அச்சில் உள்ள ஹிந்தியில் உள்ள புத்தகங்களை விற்பதுமே அவர்களின் அன்றாட வேலை
கேட்போருக்கு அர்த்தம் தெரியாது என்பதால் அவர்கள் மனப்பாடம் செய்ததை அப்படியே ஒப்புவிப்பதும் உண்டு
(இங்கே வடபழனிக் கோவிலுக்கு சமஸ்கிரித அறிஞர் ஜமதக்னி சென்ற்போது அங்கே இறைவனுக்கு மந்திரம் ஓதுபவர் ஈமக்கிரியைக்கான மந்திரம் ஓதுவதைக் கண்டு அவரைக்கூப்பிட்டுச் சொல்ல அவர் தான் சொல்லுவதே சர் என்று பிடிவாதம் பிடிக்க அவர் சமஸ்கிரித சுலோகங்களைச் சொல்லி விளக்கியதாகச் சொன்னார்)
ஆகவே காசியில் பெரும்பாலும் சாஸ்திரம் சொல்லும் சாஸ்திரிகள் சமஸ்கிரிதப் பண்டிதர்களைவிடப் பலமடங்கு அதிகம்
தொடரும்
அடுத்து காசியின் சமஸ்கிரிதச் சிறப்பு
நாகராசன்
|

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
99-ம் ஆண்டு காசிக்குச் சென்றோம். தமிழ்நாட்டை விடவும் அங்கே நன்கு படித்த சம்ஸ்கிருத அறிவு நிறைந்தவர்கள் பலரும் இருக்கிறதைக் கண்கூடாய்க் கண்டோம். இவர்களில் கன்னடம் பேசும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அதிகம். இப்போ தெரியலை.
2010/11/21 Prof.V.Nagarajan <radius.co...@gmail.com>
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அதே கேஸ்தான் தமிழ்நாட்டிலேயும். கடந்த 100 வருடங்களில் வேதப்பயிற்சி,
வேதப்பாடசாலைகள் போன்றவை பிராமணர்களாலேயே பெருமளவில் உதாசீனப்பட்டு
விட்டன. 200 வருடங்கள் முன் 95% பிராமணர்களுக்கு குறைந்த அளவிலோ,
அதிகமாகவோ வேதப்பயிற்சி இருக்கும். தற்காலத்தில் அது 0.005% தான்
இருக்கும். வேதங்கள் வாய்வழியாக வருபவையால், பல வேத சாகைகள் மறைகின்றன.
ஐரானிகலாக 'மறை'என்பது புதிய அர்த்தம் கொள்கிறது. மறை
பிராமணர்களிடமிருந்தே மறைகின்றன. அதற்கு பிராமணர்கள் தங்களைத் தவிர
யாரையும் குற்றம் சொல்ல முடியாது.
விஜயராகவன்
மாநிலம் தழுவிய இயக்கங்களின் தாக்கம் எல்லா சமூகங்களிலும் இருக்கும்.
அவ்வகையில் கழகங்களின் தாக்கம் பிராமணர்களிடமும் உண்டு. வேதம் ஓதுதல்
என்பது கொரியாவில் விவசாயம் செய்வது போல. State subsidy/sponsorship
இருந்தால் மட்டும் நடக்கும். சங்க காலம் தொட்டு தமிழ்க் குமுகாயம் 1%
குறைவான ஒரு குடியை வேதம் கற்றல், ஓதுதல் போன்ற தொழிலுக்கு என சிறப்பாக
வைத்திருந்து பாதுகாத்து வந்தது. அவர்களுக்காக சதுர்வேத மங்கலமென
கிராமங்களையே அரசுகள் கொடுத்தன. கட்டக் கடைசியாக ஊட்டுப்பிறை நடந்தது
60களில் எனலாம். அதுவரை வேதம் ஓதுதல் அரசு கவனிப்புப் பெற்ற ஒரு தொழில்.
ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே பிராமணர்களின் கவனம் வெகுவாகச்
சிதறிவிட்டது. ஆயினும் வேத அப்பியாசம் என்பது இந்தியாவிலிருந்து போகாது.
தமிழ்நாடு ஒரு காலத்தில் வேதாந்த விசாரங்களில் சிறப்புற்று இருந்தது.
இப்போது அது மெல்ல, வேதங்களை மதிக்கும், சநாதன தர்மங்களை மதிக்கும்
மாநிலங்களுக்கு நகர்ந்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் ஒரு மாபெரும் வேத
பாடசாலை இருப்பதாக அறிகிறேன். பிற மாநிலங்களிலும் இருக்கும். தமிழ்
நாட்டிலும் காமகோடி, பரனூர் பெரியவர்களின் கவனிப்பில் வேதபாடம்
ஓடிக்கொண்டு இருக்கிறது. ஜெ.ஜெ. காலத்தில் கோயில் குருக்களுக்கு limited
syllabus வேத பாராயணம் ஆதரிக்கப்பட்டது. இப்போது கருணாநிதியைக் கேட்டால்
சரியென்றுதான் சொல்லுவார். ஆனால், அவர் சார்ந்த கழகத்தின் இமேஜ் அதற்கு
இடம் கொடுக்காது. உலகில் எல்லாம் வரும் போகும். எல்லாம் ஒரு சுழற்சி
அவ்வளவுதான்.
க.>
2010/11/22 விஜயராகவன் <vij...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
On Nov 22, 3:23 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> ஒரு விதத்தில் சரினு சொல்லலாம். உங்க கேள்வியின் அர்த்தம் எப்படி இருந்தாலும்
> காசியில் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் போன்றவற்றின் அடிப்படையும், அதன் உள்
> பொருளும் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு எடுத்துச் சொல்லிச் செய்ய
> வைப்பார்கள். இங்கே தமிழ்நாட்டில் தெரிஞ்சாலும் நேரம் இல்லை, நேரம்
> இருந்தாலும் சொல்வதில்லை. அங்கே ஒவ்வொரு சடங்குக்கும் ஏன், எதுக்கு, எப்படி
> என்பது விலாவரியாகச் சொல்லப் படுகின்றது. மேலும் இதை எல்லாம் பிராமணர்கள்
> மட்டுமே படிக்கணும்னு பநாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஒரு போதும் சொன்னதும்
> இல்லை. நம் முன்னாள் பிரதமர் லால்பஹாதூர் சாஸ்திரி இப்படி சாஸ்திரங்களில் கரை
> கண்டு சாஸ்திரிப் பட்டம் வாங்கியவர் தான், பிறப்பால் பிராமணர் அல்ல.
>
பிறப்பால் மாத்திரம் ஒருவருக்கு வேதம் கற்கலாம் என்பது
இனிமேலும் நிற்காது - சட்ட பூர்வமாக. திருவரங்கத்தில்
ஸ்ரீமான்தாங்கிகள் (சீமாந்தாங்கிகள்) கௌசிக புராணம்
படிப்போரை சிவிகையில் துக்கிச் செல்லும் மரியாதை
இணையாணையர் ரத்து செய்துவிட்டதாக செய்திகள்
வந்தன.
வேத பாடசாலைகள் கணினிமயம் ஆகவேண்டும்.
இணையத்தில் வேத, ஆகம பாடங்கள் கிரந்த
எழுத்தில் உரையுடன் இடம்பெற வேண்டும்.
விரும்புவோர் ஹிந்து மத சாஸ்திரங்கள், வேதங்கள்,
உபநிஷதங்கள், ... படித்துக்கொள்ள வாய்ப்பு
இந்திய, மாநில சர்க்கார்கள் நிதியுதவியுடன்
செய்யவேண்டும். இந்தியப் பல்கலைக்கழகங்கள்
மட்டுமல்ல, ஏராளமான ஐரோப்பிய, அமெரிக்க,
ஜப்பான் பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள்
இந்த ப்ராஜக்டுகளுடன் சேர்ந்து தம் உழைப்பையும்,
அறிவாற்றலையுல் அளிக்க முன்வருவர்.
பல பௌத்த, சமண நூல்களும் வடமொழிகளில்
தாம் உள்ளன, அவற்றை கிரந்தத்தில் எழுதிப்
படிக்க இயலும்.
நா. கணேசன்
இரண்டு நாட்கள் போதவே போதாதே? என்றாலும் காசி விஸ்வநாதர் ஆலயம், அன்னபூரணி ஆலயம், விசாலாக்ஷி ஆலயம், பைரவர் ஆலயம்(இது காசி யாத்திரையில் கடைசியில் வரும்) போன்றவையும், துளசிதாசரின் ராமாயணக்கண்காட்சியும், பநாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும் பார்க்கவேண்டிய இடங்கள். ஹநுமான் காட்டிலும், கேதார் காட்டிலும் தமிழிலே பேசினாலே புரிந்துகொள்வார்கள். கேதார் காட் கோயில் திருப்பனந்தாள் காசி மடத்தால் நிர்வகிக்கப் படுகிறது. தங்கும் வசதிகளும், சாப்பாடு வசதிகளும் உண்டு. கங்கை இப்போது கொஞ்சம் வேகத்தைக் குறைத்துக்கொண்டிருப்பாள். குளிர் இருக்கும். குளிருக்குப் பாதுகாப்பான உடைகள் எடுத்துச் செல்லவும்.
2010/11/22 kalairajan krishnan <kalair...@gmail.com>
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்

ஒரு விழுக்காடு மட்டும் அந்தணர்கள் என்ற விதி சமுதாய அமைப்பில் 99 விழுக்காடு மேலே வரக்கூடாது என்று ஏற்பாடு செய்யப்பட்ட தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. .
பிராமணர்கள் என்ற வகுப்பு மற்றவர்களும் மேலே வந்து அவர்களைப்போல் ஆக உதவுவதற்காக உருவானகுழு. அது பின்னாளில் ஒரு சாதியாக உயர் சாதியாகத் தங்களை நிலைநாட்டிக்கொண்டு வழிமாறிப்போனது
ஒரு பிராமணனிமன் மகன் பிரமணனாகத்தான் இருக்கவேண்டும் என்றும் கீழ் நிலையில் இருப்பவன் பிராமணம் கற்றால் பெற்றால் பிராமணன் ஆகக்கூடாது என்று எங்கே உள்ளது என்று ஸ்வாமி விவேகானந்தர் கேள்வி எழுப்புகிறார். சாதி பற்றிய அவர் கருத்து இணைப்பில்
கோவில் அர்ச்சகர்களாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சட்டமே இங்கே இருக்கிறது.
பூஜை செய்பவர்கள் எல்லாம் பிராமணர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பது எல்லாரும் பிராமணர்கள் ஆகவேண்டும் என்ற ஸ்வாமி விவேகானந்தரின் கருத்துக்கு மாறாக பிராமணர்களை ஒழித்தே சமூகநீதி காக்கமுடியும் என்ற தவறான தர்க்கவாதத்தில் இருப்பதே இன்றைய நிலை
ஒரு விழுக்காடு பிராமணர்கள்மேலும் எண்ணிகையில் உயரவேண்டும் என்பதற்குப் பதிலாக அந்த ஒரு விழுக்காடு இருப்பவர்களையும் தாழ்த்தவேண்டும் என்ற கொள்கைநிலைக்கு சமூகநீதிகாக்கும் அரசு வந்துவிட்டது. அதுவே சமூகநீதி என்று வாதாட வரிந்துகட்டி நிற்பது நிதர்சன உண்மை
நாகராசன்
பிராமணர்கள் வெறும் உஞ்சவிருத்தி மட்டும் செய்து கொண்டு கோயிலில் மணி ஆட்டிக்கொண்டும் வேத பாராயணம் செய்து கொண்டும் மட்டும் இருக்கவில்லை. உங்களால் முடியவில்லை என்றால் யார் வற்புறுத்துகின்றார்கள்?? கோயிலில் மணி ஆட்டுவது ஒன்றும் சுலபமான வேலையும் இல்லை. கருவறைக்குள் நின்று கொண்டு அந்த அடுக்கு தீபாராதனைத் தட்டை எல்லா அடுக்குகளும் ஏற்றப் பட்டுத் தூக்கிப் பார்க்கவேண்டும். மணியையும் தூக்கிப் பார்க்கவேண்டும். அதற்கு உரிய பலம் இருப்பது அப்போது தான் தெரியும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எங்கே பிராமணன் சுயநலம் கருதாது அன்பும் அறிவும் கொண்டு அதை மற்றவகளுக்குச் சென்றடையச் செய்கிறானோ அங்கு ஆணியமும் பெண்ணியமும் இறை உணர்வுடன் நல்வழியில் வாழுகிறதோ அங்கு
ராணுவத்துக்கும் காவல்துறைக்கும் என்ன வேலை இருக்க முடியும்?. அவர்கள் ஒரு அரசாங்கத்தின் நிழலில் வாழவேண்டும் என்ற நியதி உண்டா? அவர்களை ஆட்சி செய்யவேண்டும் என்பதற்கான தேவை என்ன?
எல்லாரும் நல்லவராக உயர்ந்தோராக கடவுளின் குழந்தையாக வாழும் இடமே பிராமணம் வாழும் இடம். சத்ய யுகத்தில் சொன்ன திராவிட இயக்கம் கலியுகத்தில் வாய்மொழிந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மானுடத்தின் உயர்நிலை அதுவே
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
.எந்த காலத்திலும் ஆயுதத்தை கையில் எடுத்து பிராமணன் போராட கூடாது.மகாபாரதத்தில் ஆயுதம்
நாகராஜன் வடிவேல் ஐயா,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ப்ரகாஷ்
தமிழ்நாட்டு கோவில்களில் 10-15% கோவில்களில்தான் பிராமணர்கள்
அர்ச்சகர்களாக உள்ளனர்.
அர்ச்சகர்களுக்கு பின்னால் தேவஸ்தான் போர்ட் இதைப்பற்றி முடிவு
செய்கிறது. தேவஸ்தான் போர்ட் அங்கத்தினர்கள் பிராமண கமிட்டி இல்லை.
தேவஸ்தான போர்டுகள் அரசு துறையான இந்து மத சம்பந்த மந்திரியின் கீழ்
இயங்குகிரது. எல்லோரும் இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் அடி பணிகிறனர்.
ஒரு சட்டரீதியான ஜனநாயக அமைப்பான இந்தியாவில் பல தளங்கள், பல அமைப்புகள்
சேர்ந்து உள்ளன.நீங்கள் சொல்லுவது (சில) கோவில்களில் நடப்பதென்றால்,
அதற்கு இந்த எல்லா அமைப்புகளும், முறைகளும் காரணம். பிராமணர்கள் தங்கள்
அடாவடி செய்தே அர்ச்சகர்களாக உள்ளனர் என்றால், அது மிகை. சிலரின்
அடாவடிக்கு தேவைக்கு மேலான சக்தியை கொடுக்கின்றீர்
விஜயராகவன்
தமிழ் நாட்டில் தொடங்கப்பட்ட அணைத்து சமயத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ற திட்டத்தோட நிலைமை பாத்தா வேற யாரும் கருவரைக்குள்ள நுழையவே முடியாதுன்னு புரிஞ்சிக்கலாம்.. சுப்ரீம் கோர்ட்ல இந்த திட்டம் வர கூடாதுன்னு சொன்னவங்க தாக்கல் செய்த மனுவுல இருந்தது என்னன்னா " பிராமணங்கள தவிர வேற யாராவது சாமிய தொட்ட தீட்டு ஏற்பட்டு.. சிலையில இருந்து சாமி வெளி ஏறிடும்.. அதனால கோவில்களோட புனிதம் போயிடும்.."இந்த ஒரு விஷயத்த தவிர பிரமாணங்க ரொம்பவே நல்ல குணம் உள்ளவங்கதான்
சுதந்திர தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே.

தமிழ்நாட்டு கோவில்களில் 10-15% கோவில்களில்தான் பிராமணர்கள்
> அர்ச்சகர்களாக உள்ளனர்.
is not the real Statistics. i will try to bring the exact details.