சிலப்பதிகாரம் - கண்ணகி சென்ற திசை

1,043 views
Skip to first unread message

Mukunthan Pathmanesan

unread,
Sep 17, 2016, 3:52:59 AM9/17/16
to mint...@googlegroups.com
புகார் நகர வாசலைக் கடந்து செல்கின்றனர்.
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி


​காவிரி வாயிலைக் கடந்து மேற்குத் திசையில் செல்கின்றனர்.
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
 வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து


காவிரி ஆற்றைக் கடந்து காவிரிக்குத் தெற்கே சென்று போம்பொழிலில் இருக்கின்றனர்.
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி


உறையூரின் புறஞ்சிறையில் இருக்கின்றனர்.
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என்.


தென் திசையில் செல்கின்றனர்.
திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ்,
செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து,
கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த,
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி,
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
வெய்யவன் குண திசை விளங்கித் தோன்ற,
வள நீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர்
இள மரக் கானத்து இருக்கை புக்குழி-


வையை ஆற்றின் தென் திசை செல்கின்றனர்.
வையை என்ற பொய்யாக் குலக்கொடி-
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்,
புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து,
கண் நிறை நெடு நீர் கரந்தனள், அடக்கி-
புனல் யாறு அன்று; இது பூம் புனல் யாறு!’ என,
அன நடை மாதரும் ஐயனும் தொழுது;
பரி முக அம்பியும், கரி முக அம்பியும்,
அரி முக அம்பியும், அரும் துறை இயக்கும்
பெரும் துறை மருங்கின் பெயராது; ஆங்கண்,
மாதவத்துஆட்டியொடு மரப் புணை போகி;
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி-



கிழக்கு வாசல் வழியாக மதுரை சென்றனர்.
கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்;

மேற்கு வாசல் வழியாக வெளியேறி வையையின் (தென்புறக்) கரை வழியாக நெடுவேள் குன்றம் சென்றனள்.
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு’ என,
இரவும் பகலும் மயங்கினள் கையற்று.
உரவு நீர் வையை ஒரு கரைக் கொண்டு, ஆங்கு,
அவல என்னாள், அவலித்து இழிதலின்,
மிசைய என்னாள், மிசை வைத்து ஏறலின்;
கடல் வயிறு கிழித்து, மலை நெஞ்சு பிளந்து, ஆங்கு,
அவுணரைக் கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி-




காவிரிப் பாதையில் மேற்குப்புறம் சென்றதாகக் கூறப்பட்டிருக்கின்றது. அதன் பின் உறையூரிலேயே தென்புறம் நோக்கிப் பயணம் செய்கின்றனர்.


கணேசன் ஐயா கூறுவது போல அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்தால், அவர்கள் கிழக்குத் திசை சென்று பின் தென் திசை சென்றதாகக் கூறப்பட்டிருக்குக்கும். அவ்வாறு கூறப்படாததால் அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைக்குச் சென்றதாகக் கூறப்படுவது பிழையான கருத்தாகும். அவர்கள் காவிரியைக் கடந்தபின் வரும் இடத்தில் உறையூர் இருந்திருக்கின்றது.


நன்றி,
முகுந்தன்

Singanenjam Sambandam

unread,
Sep 17, 2016, 8:00:05 AM9/17/16
to mint...@googlegroups.com
மிகச்  சரி முகுந்தன்,நோக்கம்   மதுரை  செல்வது....மேற்குத் தொடர்ச்சி மலை எங்கே வருகிறது இங்கே.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 17, 2016, 8:51:05 AM9/17/16
to மின்தமிழ்


On Saturday, September 17, 2016 at 5:00:05 AM UTC-7, singanenjan wrote:
மிகச்  சரி முகுந்தன்,நோக்கம்   மதுரை  செல்வது....மேற்குத் தொடர்ச்சி மலை எங்கே வருகிறது இங்கே.


நான் குறிப்பிட்ட முக்கியமான மைல்கற்கள் ஒன்றினையும் நாடுகாண், + காடுகாண் காதையில் இருந்து
முகுந்தன் எடுத்துக்காட்டவில்லை.

கிழக்கு, மேற்கு, தெற்கு எல்லாம் ஹைலைட் செய்த முகுந்தன், முக்கியமாக வடக்கு என்பதை விட்டுவிட்டார்.

(1) குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
 வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து 

புகாரில் இருந்து மேற்குத்திசையிலே போய், வட பெருங்கோட்டில் நுழைந்தால் காவிரி உற்பத்தி ஆகும்
மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரும்.

(2) ”பொழில் மண்டிலம்” என்பது மேற்குத்தொடர்ச்சி மலையில் வணிகர்களுக்கு முக்கியமான
இடங்கள். ஐம்பொழில் பரமேசுவரி, ஐஞ்ஞூற்றுவர் (திசையாயிரம்), ... பரிபாடலில் பொழில்மண்டிலம்,
ஐம்பொழில் (=ஐஹொளெ) இதனை வடபெரும் கோடு என்றார் இளங்கோ அடிகள்.

(3) தன் சமண சமயத்தைப் பற்றி விளக்க கவுந்தி அடிகள் என்னும் குரத்தியாரைப் பயன்படுத்துகிறார்.
அவரது தவப்பள்ளி வடபெருங்கோட்டில் மதுரைக்கு வடக்கே ~360 மைல்கற்களில் இருந்தது என்கிறார்.
1 காதம் = ~12 மைல். கெவியூதி என்பது காவதம்/காதம் அல்ல.

(4) அங்கிருந்து தெற்கே வருகின்றனர். வரும்வழியில் சீரங்கபட்டினம். சமணர் ஆட்சியில் - கங்க சோழர்கள்
இருந்த ஊர் - அங்கே அந்தர சாரணர் வருகை, வழிபாடு. சமணம் பற்றிய நற்போதனைகள், விளக்கம்.

(5) பின்னர் தமிழ்நாட்டில் பயணம். வம்பப் பரத்தை, வறுமொழியாளன் நிகழ்ச்சி.

(6) அதற்கப்புறம், வாரணம் அடைதல். அங்கே திருவரங்கம்.
திருவரங்கம் வேறு, சீரங்கம் வேறு. இதனை அரும்பதவுரையாசிரியர் உரையில் பார்க்கலாம்.
திருவேங்கடம் வேறு, வடவேங்கடம் வேறு. வடவேங்கடம் என்று குறிப்பிடும் திருப்புகழ்கள் இரண்டு:
ஒன்றில் மாலவன், இன்னொன்றில் முருகன். ஆனால், திருவேங்கடம் பற்றிய திருப்புகழ்களில் முருகனைப்
பாடுகிறார் அருணகிரிநாதர்.

(7) தெய்வக் காவிரி நாடு, பாயுமிடமெல்லாம் அதன் வேளாண்மைச் சிறப்பு, சோழர் மேலாண்மைக்குக்
கீழிருப்பது, காவிரிநாடு பிறக்குமிடம் இருந்து கடலில் கலக்கும்வரை பாடல் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
நாம்தான் காவிரி என்பது திருச்சி -to- பூம்புகார் என 20-ஆம் நூற்றாண்டில் உரை எழுதியுள்ளோம்.
இளங்கோ அடிகள் காலத்தில் காவிரி நாடு என்றால் திருச்சியில் தொடங்குவதில்லை. இன்றும்தான்.

(8) குடநாட்டில் இருந்து (Coorg) மறையவனை கவுந்தி அடிகள் பயணம் செய்தது மாதிரியே தெற்கே வந்து
திருவரங்கத்தில் சந்திக்கவைக்கிறார். இது வேத வழிப்பட்ட துறவு, சிரமண வழிப்பட்ட துறவு (கவுந்தி அடிகள்)
இரண்டையும் இணையாகக் குறிப்பிடுவது. இதேபோல, தாபதவாகை என்னும் துறையில் இரண்டு பாடல்கள்
புறநானூற்றில் உண்டு. Two modes of Asceticism.

etc., In sum,

குடக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு என்பன நான்கு திசைகள்.
நான்கையும் பேசுகிறார் இளங்கோ அடிகள். இதில் காவிரிக்கு
முக்கியமான வடக்கு திசையில் - வடபொழில் மண்டிலத்தில் பிறப்பதது -
சமணத்தை விவரிப்பதையும், அதன் குரத்தியாரை சந்திப்பதையும்
விட்டுவிட வேண்டாம். 

நா. கணேசன்
 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 17, 2016, 9:14:32 AM9/17/16
to மின்தமிழ்


On Saturday, September 17, 2016 at 5:00:05 AM UTC-7, singanenjan wrote:
மிகச்  சரி முகுந்தன்,நோக்கம்   மதுரை  செல்வது....மேற்குத் தொடர்ச்சி மலை எங்கே வருகிறது இங்கே.

இலக்கியத்தில் Shortest route-ல் போகவேண்டியதில்லை.

ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பது சமண சமய அடிப்படை. வினை, வினைப்பயன் காட்ட
கோவலன் - கண்ணகியை கவுந்தி அடிகளை மேற்குத் தொடர்ச்சி மலையில் -சமண நாட்டில்
சந்திக்கச் செய்து, ~ 360 மைல் நடக்கச் செய்கிறார்.

இதற்கொப்பு: பல இடங்களில் பல குருக்களை - வாழ்வில் எல்லா நிலை, தொழில் இருந்தோர் -
சந்தித்துத் தெளியும் சுதனன் என்னும் செட்டி இளைஞனை வைத்து பௌத்த சமய போதனை
நடாத்தும் கண்டவியூக சூத்திரம். அந்த மாடலில், இளங்கோ அடிகள் கி.பி. 5/6 நூற்றாண்டில்
தமிழில் சமண சமய போதனைக்கு எழுதியது நாடுகாண் காதை, காடுகாண் காதை.
தெய்வக்காவிரி பாயும் வளப்பமான நாடு முழுதும் வளங்காட்டி, சமண சமய போதனை செய்து,
சீரங்கத்தில் (=சீரங்கபட்டினத்தில்) அந்தர சாரணராக வானில் இருந்து வந்த சமண சித்தரைத் தொழுது,
அச் சமய வழிபாடியற்றி, பின்னர் தெற்கே நடந்து கோழி (=வாரணம்) சோழர் தலைநகர் திருச்சி அடைகின்றனர்.
இதனை காவிரியின் நாடுகாண் காதை என்றார் அடிகள். அவரது alter ego கவுந்தி அடிகள். 

காதம் என்றதன் தொலைவைப் பார்த்தோம். சிவஞான யோகிகளின் நள்ளாற்றுப் புராணத்திலே
தீர்த்தம் ஆடுதல் முக்கியமான சைவர்களுக்கு காவேரிக்கு தெற்கே இருமுக்கால் காவதம் என்கிறார்.
காவிரியில் முக்கிய தலங்கள் மாயவரம், மற்றும் புகார். இரண்டு விதமாகக் கணக்கிட்டாலும் 
காவதம் (காதம்) அளவு தெரியும். ~12 மைல் எனக் கொண்டால், கோவலன் கவுந்தி அடிகள் தவப்பள்ளிக்கும்
மதுரைக்கும் உள்ள தூரமும், அடிகள் வடபெருங்கோட்டின் கவுந்திப்பள்ளி எங்கே என்பதும் அறியலாகும்.

மதுரைக் காண்டத்தில் “காட்டுக்குப்” போகிறான் கோவலன், எனவே காடுகாண்காதை என்றார். 
கவுந்தி அடிகளுக்கு இணையாக குடநாட்டு மலையோனையும் குறிப்பிடுகிறார் இங்கே.

 In sum,

குடக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு என்பன நான்கு திசைகள்.
நான்கையும் பேசுகிறார் இளங்கோ அடிகள். இதில் காவிரிக்கு
முக்கியமான வடக்கு திசையில் - வடபொழில் மண்டிலத்தில் பிறப்பதது -
சமணத்தை விவரிப்பதையும், அதன் குரத்தியாரை சந்திப்பதையும்
விட்டுவிட வேண்டாம். 

நா. கணேசன்

PS: தனியிழையில் நள்ளாற்றுப் புராணம் குறிப்பிடும் காவதம் (காதம்) தொலைவும்
மற்ற இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் சான்றுகளும் பார்ப்போம்.
புராண காலத்திலேயே சிதம்பரம் அருகே ஓடும் கொள்ளிடம்,
மயிலாடுதுறை - பூம்புகார் காவேரி, அதற்கும் தெற்கே ஓடும் வெட்டாறு ஆயிரக் கணக்கான
ஆண்டுகளாய் தமிழர்கள் அறிவார்கள். தீர்த்தத்துறைகளைக் குறிப்பிடுகிறார்
நள்ளாற்றுப் புராணமுடையார்.

mukunthan

unread,
Sep 17, 2016, 11:20:27 AM9/17/16
to மின்தமிழ்
கணேசன் ஐயா,
மேற்குத்தொடர்ச்சி மலை போயிருந்தால், மீண்டும் அரங்கம் வர கிழக்கு நோக்கி வரவேண்டும். அதனை அவர் குறிப்பிடவில்லையே? கிழக்குத் திசையில் சென்றதாக வரும் வரிகளைக் காட்டுங்கள் பார்ப்போம்.


அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
வெய்யவன் குண திசை விளங்கித் தோன்ற,
வள நீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர்
இள மரக் கானத்து இருக்கை புக்குழி-

இரவு உங்கள் சீரங்கப்பட்டனத்தில் தங்கி விடியலில் உறையூரை அடையமுடியுமா? உங்கள் புவியியல் எனக்குப் புரியவில்லை.


சீரங்கத்தில் (=சீரங்கபட்டினத்தில்) அந்தர சாரணராக வானில் இருந்து வந்த சமண சித்தரைத் தொழுது,
அச் சமய வழிபாடியற்றி, பின்னர் தெற்கே நடந்து கோழி (=வாரணம்) சோழர் தலைநகர் திருச்சி அடைகின்றனர்.

சீரங்கத்திலிருந்து தெற்கே நடந்தால் திருச்சி வருமா? தயவுசெய்து விளக்கவும்.

N. Ganesan

unread,
Sep 17, 2016, 1:53:06 PM9/17/16
to மின்தமிழ்
முகுந்தன் ஐயா,

என்ன இது?? தயவு செய்து விளக்கவும்.

இந்த உங்கள் மடலுக்கு என் பதில்கள் ஏற்கெனவே.

நா. கணேசன்

nkantan r

unread,
Sep 18, 2016, 2:20:09 AM9/18/16
to மின்தமிழ்
திசை மட்டுமல்ல தூரமும் முக்கியம்;  இருவரும் படத்துடன் விளக்கினால் நலம்! (to mark the north, south, southeast  path taken by them!)

rnkantan

Mukunthan Pathmanesan

unread,
Sep 18, 2016, 3:07:22 AM9/18/16
to mint...@googlegroups.com
கணேசன் ஐயா கூறுவது மஞ்சள் நிறத்தில். இது சிலப்பதிகாரத்துடன் பொருந்தவில்லை .

சிவப்பில் உள்ளது சிலப்பதிகாரப் பாடலுடன் பொருந்துகின்றது.

படம் அண்ணளவாகத் திசைகளைக் காடுகின்றது. அவர்கள் நேர்கோட்டில் பயணித்தனர் என்று கருதவேண்டாம்.

Inline image 1

நன்றி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 18, 2016, 3:29:48 AM9/18/16
to மின்தமிழ்
:))  

கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக  மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று 
திரு. கணேசன் ஒரு  கருத்துத் தெரிவித்தார்.

அதன் பிறகு நானும், சரி.. அவர் சொல்லும் எதையும் பெரிது படுத்தத் தேவையில்லை,  
மகாபாரதத்தில் கலாப்போக்கில் கிளைக்கதைகள் பல முளைத்தது போல  சிலப்பதிகாரத்தில் இவரும்  தனது  பங்கிற்கு ஏதோ எழுத எண்ணம் கொண்டிருப்பார் போல என நினைத்துக் கொண்டேன்.  

நீங்கள் இவ்வளவு தீவிரமாக அவர் சொல்வதற்கு படமெல்லாம் போடுவீர்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை முகுந்தன். .

..... தேமொழி

Singanenjam Sambandam

unread,
Sep 18, 2016, 4:00:24 AM9/18/16
to mint...@googlegroups.com
திரு .கணேசனாருக்கு   எப்படித்தான்   இப்படியெல்லாம்  கற்பனை   சிறகுகள்  விரிகின்றனவோ.......

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

iraamaki

unread,
Sep 18, 2016, 4:27:05 AM9/18/16
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய முகுந்தன்,
 
நீங்கள் கொடுத்துள்ள படம் சரியில்லை. அவர் சொல்லும் கருநாடகச் சீரங்கப்பட்டினம் பாதிவழி தான். மேற்குத் தொடர்ச்சிமலை அங்கில்லை. அதற்கும் மேலே தலைக்காவிரிக்குப் போகவேண்டும். (எந்த மலையென்று இவர் சொல்லவேயில்லை. நான் இவர்கூற்றின் உச்சகட்டத்தை எடுத்து மேலே  தலைக் காவிரி வரை கொண்டுபோகிறேன். அவ்வளவு தான். இடையில் வேறு ஏதாவது மலையைச் சொன்னால் அதற்குத் தக்க கணக்குப்போடவேண்டும்.) தலைக் காவிரியிலிருந்து பூம்புகார் என்பது ஆற்றுப்போக்கின் படி கிட்டத்தட்ட 700/750 கி.மீ. அதிலிருந்து மீண்டும்  திரும்பி வருவதென்றால் கிட்டத்தட்ட 550/600 கி.மீ.  ஆக மொத்தம் 1250/1350 கி.மீ நடந்திருக்கவேண்டும்.  இது இவர் சொன்ன 360 மைலுக்கு (576 கி.மீ) 2 1/2 மடங்கு.
 
ஆற்றின் ஓரத்தில் மேடுபள்ளம் பார்த்து நடந்துசெல்வது மிகக் கடினம். ஆற்றுக்கரையில் சாலை இருந்ததா என்று தெரியாது. விவரிப்பைப் பார்த்தால், காடு, வயல் என்று எல்லாம் தாண்டித்தான் 30 காதத்திற்கும் கூட நடந்து போகிறார்கள் 30 காதம் என்பது கோவலன் கூறிய பாதையின் தூரம். அதன்படி பார்த்தால் உறையூருக்குப் போகவேண்டாம். தஞ்சாவூரிலிருந்து நேரே கொடும்பாளூர் வந்துவிடலாம். இதற்குமாறாய் கவுந்தியே உறையூர்வழி அழைத்துச்  செல்கிறார். உறையூர் மூன்று சமண நெறிகளுக்கும் முகன்மையான ஊர். அவர் கூட்டிப்போன பாதை 30 காதத்திற்கும் கூட அளவானது. இதைக்கூட நண்பர் கணேசன் இதுகாறும் தன் மடலிற் சொல்லவில்லை. எப்பொழுதுமே மூலத்தின் பட்டகைகளை அவர் கண்டுகொள்ளமாட்டார். இவர்தான் மூலம் படிக்கிறவரில்லையே? வீட்டை விட்டு வெளியேவந்து பழக்கப்படாத ஒரு பெண், இவ்வளவு தொலைவு நடப்பாளோ?  இப்படிச் சுற்றிக்கொண்டு உறையூருக்கு வந்துசேரவே   குறைந்தது ஒரு மாதமாகும்.
 
ஆகக் கணக்கேபோடாது, திரு. நா. கணேசன் சும்மா ஒரு ”குண்ட்ஸ்” அடித்துவிட்டிருக்கிறார். நாமும் விவரங்கெட்டுத் தேடிக்கொண்டிருக்கிறோம். எல்லாம் ”கோடு”  என்ற ஒரு சொல்லால் விளைந்த முட்டாள் தனம் நாம் அதைக் கரையென்று பொருள்கொள்ளுகிறோம். காவிரியின் வடபெருங்கரை என்பது தான் அங்குள்ள பொருள். புகாருக்குப் பக்கத்தில் கொள்ளிடப்படுகைக்கருகில் திரு.கணேசன் நடந்துபார்த்திருப்பாரா என்பது கேள்விக்குறி. ஒரு சமவெளிப் பகுதியில் இருக்கும் கரைகள் பெருங்கரைகளாகத்தான் இருக்கும்.  (கோடு என்பது நீர்க்கரையாய் இருக்கலாம் என்று பலரும் இங்கு சொன்னார்.)
 
கோவலன் வீட்டிலிருந்து ஒரு காத தூரத்தில் ஊருக்கு வெளியிலிருக்கும் கவுந்தியின் பள்ளியை எங்கோ மலை என்று இவர் பொருள் கொண்டு, 700/750 கி.மீ. நடக்கவைக்கிறார். கவுந்தியை அதுவரை முன்பின் தெரியாத கோவலன் 700/750 கி.மீ. தேடிப்போய்ப் பார்ப்பது முற்றிலும் வியப்பாயிருக்கிறது.
 
இன்றைக்கும் சம்பாதி கோயிலுக்கருகில் புத்தர் பள்ளியின் தொல்லாய்வுச்சின்னம் இருக்கிறது. பல்லவனீச்சுரம் கோயிலிருக்கிறது. சமணர் பள்ளியில் அதற்கருகில் இருந்திருக்கவே பெருத்த வாய்ப்புண்டு. கையில் இருக்கின்ற பட்டகைகளை எல்லாம் விட்டுவிட்டு எங்கோ கருநாடகத்தில் செயினரைத் தேடிக்கொண்டிருக்கும் இவரை என்ன சொல்வது?
 
இவர் சிலம்பைப் படித்த அழகு ஒருபக்கம் சிரிப்பை வரவழைத்தாலும், நம்மையெல்லாம் பார்த்து அவர் சிரிப்பது எனக்கு நன்றாய்ப் புரிகிறது. இவர்  ஆராய்ச்சிகள் இப்படித்தானிருக்கும். நான் பல ஆண்டுகள் பலமுறை பார்த்துவிட்டேன்.  எல்லாமே இவருக்கு குத்து மதிப்புத்தான். துல்லியம் என்பதற்கு ”வீசை என்ன விலை?”யென்று கேட்பார்?
 
இன்னும் எவ்வளவு சுற்றியடிக்கப் போகிறாரோ?
 
அன்புடன்,
இராம.கி. 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
kannaki path.jpg

Suba

unread,
Sep 18, 2016, 6:03:51 AM9/18/16
to மின்தமிழ்
என்ன சொல்வதென்று தெரியவில்லை.
-சுபா

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Mukunthan Pathmanesan

unread,
Sep 18, 2016, 7:34:08 AM9/18/16
to mint...@googlegroups.com

அனைவருக்கும் வணக்கம்.

மின்தமிழ் குழுப் பக்கத்திற்குப்  புதிதாக வரும் ஒருவர் சில பக்கங்களுக்குச் சென்று பார்த்தால் , தலைப்புக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வட பெருங்கோடு =  குடமலைத் தொடர், யோசனை = 10 மைல், மணிபல்லவம் ஒரு கற்பனை என்று மீண்டும் மீண்டும் வருவதைப் பார்க்கலாம். அதை மறுத்து எழுதாவிட்டால் புதிதாக வருபவர்கள் அது சரியான கருத்து என்று எடுத்துக் கொள்ளக் கூடுமல்லவா.

அதனால் தான் அது சரியான கருத்தல்ல என்று விட்டு விடாமல் அதற்குரிய காரணங்களை இங்கே விளக்கியிருந்தேன்.

ஒருவர் தனது கருத்தைக் கூறுவதை யாரும் தடை போட முடியாது. ஆனால் அது பல்வேறு இழைகளில் மறுக்கப்படாமல் போகும் போது அது உண்மையாக ஆகிவிடக் கூடாது தானே.

ஒரு இழையில் அதற்கு மறுப்புக் கருத்து வரும் போது அதற்குச் சரியான பதிலளிக்காமல் வெவ்வேறு இழைகளில் தான் கூறிய கருத்தை மீண்டும் மீண்டும் கூறுவது சரியல்ல என நினைக்கின்றேன்.

இதைத் தவிர்க்க வேண்டுமானால் தனது கருத்தைத் தலைப்புக்குப் பொருந்தும் இழைகளில் மட்டும் கூறுவது போல இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.

நன்றி,
முகுந்தன்

Suba

unread,
Sep 18, 2016, 8:02:58 AM9/18/16
to மின்தமிழ், Dr.Subashini
திரு.முகுந்தன்,

உங்கள் ஆதங்கம் புரிகின்றது.
எனது பதில் திரு.கனேசனுக்குத்தான். அவர் தொடர்ந்து குழப்புகின்றார்.  
அவர் சற்று வாசித்து இழைக்கு ஏற்ற, ஆய்வுக்குந்த வகையில் தமது கருத்துக்களை பதிந்தால் நன்று.

உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.
மிக நல்ல முயற்சி.
தொடர்க!

சுபா

N. Ganesan

unread,
Sep 18, 2016, 10:10:47 AM9/18/16
to மின்தமிழ்


On Saturday, September 17, 2016 at 8:20:27 AM UTC-7, mukunthan wrote:
கணேசன் ஐயா,
மேற்குத்தொடர்ச்சி மலை போயிருந்தால், மீண்டும் அரங்கம் வர கிழக்கு நோக்கி வரவேண்டும். அதனை அவர் குறிப்பிடவில்லையே? கிழக்குத் திசையில் சென்றதாக வரும் வரிகளைக் காட்டுங்கள் பார்ப்போம்.

அன்பின் முகுந்தன்,

இது எந்தக் காதையில் உள்ள வரிகள்? இந்தக் காதையில் சீரங்கபட்டினத்து அந்த சாரணர் சந்திப்பு நிகழ்கிறதா? அவ்வாறு எழுதியுள்ளேனா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 18, 2016, 10:23:24 AM9/18/16
to மின்தமிழ்


On Saturday, September 17, 2016 at 11:20:09 PM UTC-7, nkantan r wrote:
திசை மட்டுமல்ல தூரமும் முக்கியம்;  இருவரும் படத்துடன் விளக்கினால் நலம்! (to mark the north, south, southeast  path taken by them!)

What Mukunthan is quoting some lines from some other Chapter and Canto. Those lines clearly talk of Tiruvarangam as mentioned by me several times.

The Sriranga Patna episode of meeting Jaina Arhats happens in a different Canto and Chapter. I have explained that just like
Vadavengadam vs Tiruvengadam in Tamil, Ciirangam of the Ganga country where the Kaveri creates the largest rangam needs to
be differentiated from Tiruvarangam.

You caught the main point: The distance from Kavunti Adikal's monastery (tavap paLLi) is some 360 miles North of Madurai,
some where in Vada perum KoDu, the Wesern Ghats region where Kaveri river is born and flows South. 

Cilappathikaram is a historical novel of about 15 centuries old, it is funny to read North Indian invasion etc.,
and Iraamaki dates it to First century BCE!  

You saw Mukundan's Irungadal and Perungadal picture:

Note that Mukundan left together the North direction totally, but the original Cilappatikaram mentions it as Vada Perum Kodu,
"vaDa perum" is a stock phrase usually for mountains North of Tamil country.

N. Ganesan

N. Ganesan

unread,
Sep 18, 2016, 10:34:12 AM9/18/16
to மின்தமிழ்


On Sunday, September 18, 2016 at 12:07:22 AM UTC-7, mukunthan wrote:
கணேசன் ஐயா கூறுவது மஞ்சள் நிறத்தில். இது சிலப்பதிகாரத்துடன் பொருந்தவில்லை .

சிவப்பில் உள்ளது சிலப்பதிகாரப் பாடலுடன் பொருந்துகின்றது.


Not really. You can draw the picture with 300- 360 miles distance from Madurai in the Northerly direction that is said in the epic novel.
Ilango AdikaL's Vada Perum Kodu and Kavunthi Adikal's tava-c-ciRai. was there acc. to the epic. 

Ciirangam of Ganga Rajya is just a point on the way South to Madurai, but Kovalan meets Kavunthi AdikaL North of Sriranga Patna
in the Western Ghats.

It is confusing when you give lines from different Canto and different Chapter the lines. Let me know where I quote
your lines and say these are Ciiranga Pattinam?  Did I ever say these are lines
denoting Ciirangam of Western Gangas? Staunch supporters of Jainism, where Kavunthi, Kovalan and Kannaki
meet the Arhats descending from the Sky and get trained and worship Jaina gods.

For completeness, I request you to quote the lines from Cilampu which I say is Sriranga Pattinam.
I also showed the description of Sriranga Patna where the Jaina Arhat episode happens, and the match
with which Ciirangam looks with pictures. Please use that to claim I did wrong.

Thanks!
N. Ganesan
 
படம் அண்ணளவாகத் திசைகளைக் காடுகின்றது. அவர்கள் நேர்கோட்டில் பயணித்தனர் என்று கருதவேண்டாம்
 

Inline image 1

நன்றி

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 18, 2016, 11:37:23 AM9/18/16
to மின்தமிழ், vallamai


On Sunday, September 18, 2016 at 4:34:08 AM UTC-7, mukunthan wrote:

அனைவருக்கும் வணக்கம்.

மின்தமிழ் குழுப் பக்கத்திற்குப்  புதிதாக வரும் ஒருவர் சில பக்கங்களுக்குச் சென்று பார்த்தால் , தலைப்புக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வட பெருங்கோடு =  குடமலைத் தொடர், யோசனை = 10 மைல், மணிபல்லவம் ஒரு கற்பனை என்று மீண்டும் மீண்டும் வருவதைப் பார்க்கலாம். அதை மறுத்து எழுதாவிட்டால் புதிதாக வருபவர்கள் அது சரியான கருத்து என்று எடுத்துக் கொள்ளக் கூடுமல்லவா.


பல குழுக்களில் எழுதிவருகிறேன், முகுந்தன் ஐயா. மணிபல்லவம் என்பது ஒரு கற்பனையூர் 400 யோசனை தொலைவில் பூம்புகாரினின்றும் இருப்பது என்கிறது மணிமேகலை.
இதனை நீங்கள் எந்த ஊர் என்கிறீர்கள்? இலங்கையா? நிச்சயமாக இல்லை.

யோசனை = 10 மைல். எனப் பலரும் பயன்படுத்தியுள்ளனர். நான் மட்டுமில்லை. உ-ம்: பாரதியார் ஒளிவேகம் கணக்கிடலில் 1 யோசனை = 1 காதம் எனப் பயன்படுதியுள்ளது காட்டியுள்ளேன்.
படித்துப் பார்க்கவும். தமிழ்ச் சமணர்கள், 1 யோசனை = 40 மைல் (= 4 காதம்) எனக் கொண்டுள்ளனர் (தமிழ் அகராதிகளிலும், ஒலியியல் விஞ்ஞானம் காட்டுவதும் விரிவாக எழுதியுள்ளேன்.

வடபெருங்கோடு = குடமலை, குடநாட்டு மலைகள். பலரும் எழுதியுள்ளனர் என்பதைக் கொடுத்துள்ளேன். வடபெருங்கோடு, வடபெருங்கல் எல்லாம் ஸ்டாக் ஃப்ரேஸஸ்.
 


அதனால் தான் அது சரியான கருத்தல்ல என்று விட்டு விடாமல் அதற்குரிய காரணங்களை இங்கே விளக்கியிருந்தேன்.

ஒருவர் தனது கருத்தைக் கூறுவதை யாரும் தடை போட முடியாது. ஆனால் அது பல்வேறு இழைகளில் மறுக்கப்படாமல் போகும் போது அது உண்மையாக ஆகிவிடக் கூடாது தானே.


இந்த 3 முடிபுகளை நீங்கள் எங்கே மறுத்திருக்கிறீர்கள்? தந்தால் படிப்பேன். இதுவரை கூகுள் துழாவல் உங்களிடம் பார்த்துள்ளேன், ஆனால், இந்த 3 முடிபுகளை எங்கே மாற்றியுள்ளீர்கள்? 

(1)
 மணிபல்லவம் என்பது ஒரு கற்பனையூர் 400 யோசனை தொலைவில் பூம்புகாரினின்றும் இருப்பது என்கிறது மணிமேகலை.
இதனை நீங்கள் எந்த ஊர் என்கிறீர்கள்? இலங்கையா? நிச்சயமாக இல்லை.

(2)
யோசனை = 10 மைல். எனப் பலரும் பயன்படுத்தியுள்ளனர். நான் மட்டுமில்லை. உ-ம்: பாரதியார் ஒளிவேகம் கணக்கிடலில் 1 யோசனை = 1 காதம் எனப் பயன்படுதியுள்ளது காட்டியுள்ளேன்.
படித்துப் பார்க்கவும். தமிழ்ச் சமணர்கள், 1 யோசனை = 40 மைல் (= 4 காதம்) எனக் கொண்டுள்ளனர் - தமிழ் அகராதிகளிலும், ஒலியியல் விஞ்ஞானம் காட்டுவதும் விரிவாக எழுதியுள்ளேன்.

(3)
வடபெருங்கோடு = குடமலை, குடநாட்டு மலைகள். பலரும் எழுதியுள்ளனர் என்பதைக் கொடுத்துள்ளேன். வடபெருங்கோடு, வடபெருங்கல் எல்லாம் ஸ்டாக் ஃப்ரேஸஸ்.
 
இம் மூன்று முடிபுகளும் ஏதாவது மாற்றம் இருந்தால், ஆதாரங்களுடன் தந்தீர்களால், ஆய்ந்து பார்க்கத் தயார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 18, 2016, 3:45:03 PM9/18/16
to மின்தமிழ்


On Sunday, September 18, 2016 at 12:29:48 AM UTC-7, தேமொழி wrote:
:))  

கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக  மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று 
திரு. கணேசன் ஒரு  கருத்துத் தெரிவித்தார்.


சமண சமயத்தின் நாடாகிய கர்நாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கச் செல்கிறான் கோவலன்.

இலக்கியங்கள் பல செய்திகளைச் சேர்த்துச் சொல்பவை. 20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள்
இளங்கோ அடிகள் குறிப்பிடும் காவிரி பாயும் நாட்டில் பாதியை விட்டுவிட்டனர்.

நா. கணேசன்
 
அதன் பிறகு நானும், சரி.. அவர் சொல்லும் எதையும் பெரிது படுத்தத் தேவையில்லை,  

..... தேமொழி

            
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 18, 2016, 3:49:54 PM9/18/16
to மின்தமிழ்


On Sunday, September 18, 2016 at 1:00:24 AM UTC-7, singanenjan wrote:
திரு .கணேசனாருக்கு   எப்படித்தான்   இப்படியெல்லாம்  கற்பனை   சிறகுகள்  விரிகின்றனவோ.......


இலக்கியம் படிப்போம், வாருங்கள். 

இப்போதைய கட்சியினர்கள் எழுதினால் நேரடி பிஸினஸ்க்கு பூம்புகார் - திருச்சி - மதுரை என எழுதலாம்.
ஆனால், இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் காவிரிநாடு முழுதும் காட்டுகிறார். கவுந்தி அடிகள்
தவப்பள்ளி 30 காதம் மதுரைக்கு வடக்கே உள்ளது என்கிறார் தன் 5-ஆம் நூற்றாண்டு நாவலில்.

ஆனால், சிலம்பில் அடிகள் சமண சமயம் போதிக்க அது தழைத்து வாழும் தழைக்காடு, சீரங்கம் (திருவரங்கம் அன்று),
அதற்கும் வடக்கே சென்று தன் நாவலில் கவுந்தி அடிகளைச் சந்திக்கவைக்கிறார்.

நா. கணேசன்
 
2016-09-18 12:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 18, 2016, 4:16:18 PM9/18/16
to மின்தமிழ்


On Sunday, September 18, 2016 at 12:45:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, September 18, 2016 at 12:29:48 AM UTC-7, தேமொழி wrote:
:))  

கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக  மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று 
திரு. கணேசன் ஒரு  கருத்துத் தெரிவித்தார்.


சமண சமயத்தின் நாடாகிய கர்நாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கச் செல்கிறான் கோவலன்.


அப்படியானால் சிவசமுத்திரம் அருவி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளின் குறிப்புகளை இளங்கோ எழுதாமல் விடுவாரா?

..... தேமொழி

N. Ganesan

unread,
Sep 18, 2016, 4:20:26 PM9/18/16
to மின்தமிழ்
2016-09-18 13:16 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, September 18, 2016 at 12:45:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, September 18, 2016 at 12:29:48 AM UTC-7, தேமொழி wrote:
:))  

கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக  மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று 
திரு. கணேசன் ஒரு  கருத்துத் தெரிவித்தார்.


சமண சமயத்தின் நாடாகிய கர்நாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கச் செல்கிறான் கோவலன்.


அப்படியானால் சிவசமுத்திரம் அருவி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளின் குறிப்புகளை இளங்கோ எழுதாமல் விடுவாரா?

கண்டவியூக சூத்திரம் படிக்க வேண்டுகிறேன்.

இலக்கியம்: பெரியார் vs. ஜெயகாந்தன் பார்வை.
 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 18, 2016, 6:10:58 PM9/18/16
to மின்தமிழ்


On Sunday, September 18, 2016 at 1:20:26 PM UTC-7, N. Ganesan wrote:


2016-09-18 13:16 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, September 18, 2016 at 12:45:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, September 18, 2016 at 12:29:48 AM UTC-7, தேமொழி wrote:
:))  

கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக  மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று 
திரு. கணேசன் ஒரு  கருத்துத் தெரிவித்தார்.


சமண சமயத்தின் நாடாகிய கர்நாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கச் செல்கிறான் கோவலன்.


அப்படியானால் சிவசமுத்திரம் அருவி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளின் குறிப்புகளை இளங்கோ எழுதாமல் விடுவாரா?

கண்டவியூக சூத்திரம் படிக்க வேண்டுகிறேன்.

கண்டவியூக சூத்திரம், பி. எல். வைத்தியா பதிப்பு, 1960

இதில் தென்னிந்தியாவின் பல இடங்கள் பற்றிய குறிப்புகள் பூடகமாகச் சொல்லப்பட்டுள்ளன.


இது நீங்கள் முன்னர் குறிப்பிட்டது.


இளங்கோ வேறு எந்த தமிழக  இடங்களையும் தனது இலக்கியத்தில் பூடகமாகச் சொல்லியுள்ளாரா , இல்லை என்றே தோன்றுகிறது.  

ஒரு சுற்றுலா வழிகாட்டி போல தெளிவாகத்தான் இடப்பெயர்களை, தெருக்களை எல்லாம் விவரமாகக் கொடுத்திருக்கிறார். 


இது இடைக்காலச் சோழர் காலம் இல்லை, அதனால் தஞ்சை பெருநகரமாக மாறி இருந்திருக்காது. அதற்கும் முன்னர் என்பதால் ...புகார் தலைநகரிலிருந்து, உறையூர் தலைநகருக்கு வர செம்மையான பெருவழி நிச்சயம் இருந்திருக்கும்.  

காவிரியின் வடகரையின் வழியே  வந்து, திருவரங்கம் அருகே காவிரியைத்தாண்டி, தென்கரையில் உள்ள உறையூர் வழியே மதுரையை நோக்கி சென்றார்கள் என்றுதான் ஒரு புனைக்கதையாக இருந்தாலும் எழுத்தாளர் எழுதினால் மக்கள் நம்புவார்கள் 

மாறாக உண்மையாக நடந்த நிகழ்வின் அடிப்படையில் எழுதினாலும் கோவலனும் கண்ணகியும் தங்கள் நோக்கத்தைக் கைவிட்டு ஊர் சுற்றவும் எண்ணியிருக்க மாட்டார்கள்.

இளங்கோ போல இலக்கியத் திறமை கொண்டவர்கள் காவிரிநாட்டின் வளமையை சிறப்பைக் காட்ட மற்றுமொரு இலக்கியம் படைக்க எந்தத் தடையும் இருந்ந்திருக்கவும்  வாய்ப்பில்லை.

சுருக்கமாக தொலைவு என்ற ஒரே கருத்தை வைத்துத் தொடர்ந்தால் ...
 ஏரணம் மிகவும் அடிவாங்குகிறது.   
அதனால் ஒன்று கோவலனுக்கு குத்து மதிப்பாகக் கூட கணக்கிடத் தெரியவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம். 
அல்லது அந்தக் கால அளவையில் அவர்கள் குறிப்பிடும் தூரம் அது என்றும் புரிந்து கொள்ளலாம். 


அப்படியே அவர்  பூடகமாக கொடுத்தாலும், இத்தனை நூற்றாண்டுகளில் உரை எழுதிய  ஒருவருக்கும் இளங்கோ சொல்லிய  பூடகக் குறிப்புகள் புரியாமல் போயிருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

தேமொழி

unread,
Sep 18, 2016, 6:22:09 PM9/18/16
to மின்தமிழ்

புகாரில் இருந்து உறையூர் வருவதற்கு காவிரியின் தென்கரையில் வந்தாலே போதும், 
நான்  முன்னர் குறிப்பிட்டதில் திருத்தம் செய்கிறேன்.

N. Ganesan

unread,
Sep 18, 2016, 8:12:08 PM9/18/16
to மின்தமிழ், vallamai


On Sunday, September 18, 2016 at 3:10:58 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, September 18, 2016 at 1:20:26 PM UTC-7, N. Ganesan wrote:


2016-09-18 13:16 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, September 18, 2016 at 12:45:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, September 18, 2016 at 12:29:48 AM UTC-7, தேமொழி wrote:
:))  

கோவலன் கண்ணகியை சமாதானப் படுத்த இரண்டாம் தேனிலவுக்காக  மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று 
திரு. கணேசன் ஒரு  கருத்துத் தெரிவித்தார்.


சமண சமயத்தின் நாடாகிய கர்நாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கச் செல்கிறான் கோவலன்.


அப்படியானால் சிவசமுத்திரம் அருவி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளின் குறிப்புகளை இளங்கோ எழுதாமல் விடுவாரா?

கண்டவியூக சூத்திரம் படிக்க வேண்டுகிறேன்.

கண்டவியூக சூத்திரம், பி. எல். வைத்தியா பதிப்பு, 1960

இதில் தென்னிந்தியாவின் பல இடங்கள் பற்றிய குறிப்புகள் பூடகமாகச் சொல்லப்பட்டுள்ளன.


இது நீங்கள் முன்னர் குறிப்பிட்டது.


இளங்கோ வேறு எந்த தமிழக  இடங்களையும் தனது இலக்கியத்தில் பூடகமாகச் சொல்லியுள்ளாரா , இல்லை என்றே தோன்றுகிறது.  


எப்படி சொல்லுகிறீர்கள்? நிறைய பூடகமாக மக்கள் (கதாபாத்திரங்கள்) பெயர்களையும் இடப் பெயர்களையும் இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.
மாதவி என்பது குருக்கத்தி. கர்ணிகா என்பது தாமரை, எனவே இலக்குமி. கண்ணகிக்குப் பெயர்,
கனக - விஜயர் என்னும் கற்பனை மன்னர்களுக்கு பெயர்க் காரணம் கூறியுள்ளேன்.
‘பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய் நாடிக் கோடல்’  - ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்னும் காவுந்தி/கவுந்தி அடிகள்
இருவரையும் தம் மக்கள் என்கிறார்.  அதனால் நகைப்புக்கிடமாகி, சபித்து, கண்ணகி வேண்டச் சாப நீக்கம்.  Gaunti/Gaavunti பெயர் ஜைன இலக்கிய வெண்பாக் கருத்து.

இடப்பெயர்களில் கண்டவியூகம் டெக்னிக் தான். திருச்சி என்றோ, உறையூர் என்றோ சொல்கிறாரா நாடுகாண், காடுகாண் காதையில்.
பூடகமாக அல்லவா சொல்கிறார்? என்ன பெயர் சொல்கிறார் எனப் பார்த்து விளக்குங்கள். அதுதான் கண்டவியூக டெக்னிக் என
இனங்காண உதவிற்று. 

நாடுகாண் காதையில் காவிரிநாடு முழுதும் பாடுகிறார். இதை காவிரி பிறப்பு, அது ஓடி வரும் இடமெல்லாம் வேதியர் யாகங்கள்,
வேளாண் சிறப்பு, ... வர்ணனை தந்துள்ளார்.
 
ஒரு சுற்றுலா வழிகாட்டி போல தெளிவாகத்தான் இடப்பெயர்களை, தெருக்களை எல்லாம் விவரமாகக் கொடுத்திருக்கிறார். 


அப்படி சொல்லமுடியாது.  செங்குட்டுவன் என்ற சேர மன்னன் கேரக்டர் வட இந்தியா, ஹிமாலய படையெடுப்பைப் பாருங்கள்.
எல்லா இடமும் பூடகமாகவே சொல்லியிருக்கிறார். தெருத்தெருவாக இமயமலைக்குப் போவதை சொல்லலை.

புகாரில் இருந்து மதுரைக்கு புதுக்கோட்டை வழியாக நடப்பது தான் எளிது, குறைந்த வழி. அதைவிட்டுவிட்டு,
காவிரி வழியாக வட் பெருங்கோடு அடைந்து பொழில் மண்டிலத்தில் காவுந்தியைக் கண்டு, சீரங்கம் வந்து பின்னர்
உறையூர் அடைகின்றனர். அதன் பின்னர் திருவரங்கம் வருகின்றனர். தெளிவாகப் பாடியுள்ளார்.
 

இது இடைக்காலச் சோழர் காலம் இல்லை, அதனால் தஞ்சை பெருநகரமாக மாறி இருந்திருக்காது. அதற்கும் முன்னர் என்பதால் ...புகார் தலைநகரிலிருந்து, உறையூர் தலைநகருக்கு வர செம்மையான பெருவழி நிச்சயம் இருந்திருக்கும்.  

காவிரியின் வடகரையின் வழியே  வந்து, திருவரங்கம் அருகே காவிரியைத்தாண்டி, தென்கரையில் உள்ள உறையூர் வழியே மதுரையை நோக்கி சென்றார்கள் என்றுதான் ஒரு புனைக்கதையாக இருந்தாலும் எழுத்தாளர் எழுதினால் மக்கள் நம்புவார்கள் 


வட கரை என்று அடிகள் பாடவில்லை. வடபெருங்கோடு என்று ஸஹ்யாத்ரியைப் பாடியுள்ளார். 360 மைல் மதுரைக்கு வடக்கே உள்ள மலைநாடு என்கிறார்.
நாடுகாண் காதையை சமண இலக்கியம் பரப்பச் செய்துள்ளார் இளங்கோ அடிகள். எனவே, அச் சமயம் சிறப்பாக வாழும் காவிரி நாட்டைப் பாடினார்.
 
மாறாக உண்மையாக நடந்த நிகழ்வின் அடிப்படையில் எழுதினாலும் கோவலனும் கண்ணகியும் தங்கள் நோக்கத்தைக் கைவிட்டு ஊர் சுற்றவும் எண்ணியிருக்க மாட்டார்கள்.

இளங்கோ போல இலக்கியத் திறமை கொண்டவர்கள் காவிரிநாட்டின் வளமையை சிறப்பைக் காட்ட மற்றுமொரு இலக்கியம் படைக்க எந்தத் தடையும் இருந்ந்திருக்கவும்  வாய்ப்பில்லை.


காவிரிநாட்டின் வளமையை தன் முத்தமிழ்க் காப்பியத்தில் பாடியுள்ளார். அதற்கு என்ன தடை? வேறெந்த நூலும் அடிகள் இயற்றியதாக யாரும் எழுதவில்லை.
 
சுருக்கமாக தொலைவு என்ற ஒரே கருத்தை வைத்துத் தொடர்ந்தால் ...
 ஏரணம் மிகவும் அடிவாங்குகிறது.   
அதனால் ஒன்று கோவலனுக்கு குத்து மதிப்பாகக் கூட கணக்கிடத் தெரியவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம். 
அல்லது அந்தக் கால அளவையில் அவர்கள் குறிப்பிடும் தூரம் அது என்றும் புரிந்து கொள்ளலாம். 


காதம் எவ்வளவு தொலைவு என்று நன்கு தெரிகிறது. மேலும், பல செய்திகளால் தெய்வக் காவிரி நாட்டு வளம்
அந்நதிப் பிறப்பில் இருந்து பாடிக் கொடுத்துள்ளார். உ-ம்: சீரங்கத்தில் சமண தெய்வங்களின் சந்திப்பு.
அதற்குப் பல காதம் வடக்கே கவுந்தி வாழ்வு. அவருடன் தெற்கே நடத்தி காவிரி நாட்டு வளம் பாடுகிறார்.
 

அப்படியே அவர்  பூடகமாக கொடுத்தாலும், இத்தனை நூற்றாண்டுகளில் உரை எழுதிய  ஒருவருக்கும் இளங்கோ சொல்லிய  பூடகக் குறிப்புகள் புரியாமல் போயிருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

திருச்சி என்றோ உறையூர் என்றோ சொல்லலை அடிகள். பூடகமாக சொல்லியுள்ளார். பல இடங்களில் இந்த நுணுக்கம் பார்க்கலாம் இளங்கோவின் நாவலில்.
எந்த உரையைப் படித்து சொல்கிறீர்கள்? பழைய உரையில் சீரங்கம் என்று சொல்லி இருப்பது குறிப்பிட்டேன். பார்க்கவில்லையா. அப்போதெல்லாம்,
சீரங்கம் கங்கராஜ்யத்தின் இடம்.  திருச்சியில் இருப்பது திருவரங்கம். இரண்டுக்கும் இடையே பல நிகழ்ச்சிகள். வடவேங்கடம், திருவேங்கடம்
போல, சீரங்கம், திருவரங்கம் வேறுபடுத்திப் பார்த்தால் இக் காதைகள் புரிந்துகொள்ளலாகும்.  
சீரங்கம், சீரங்க வர்ணனை சிலம்பில் கர்னாடக காவிரி. சமணம் செழிக்கச் செய்த கங்க மன்னர்கள் ஆட்சியில் - இது திருச்சி அடைவதன் முன்னர்
என்று இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் தெளிவாகச் சொல்லியுள்ளார். உரையிலும் உள்ளது.

கவுந்தி/காவுந்தி அடிகளை வடபெருங்கோடு என்னும் கர்நாடக மலைகளின் தவப்பள்ளியில் படைத்து, சீரங்கத்தில் (பட்டினம்) சமண தெய்வங்களைச் சந்தித்து,
பின்னர் பல நிகழ்ச்சிகளுக்கு அப்புறம் திருச்சி வருகின்றனர். இது சிலப்பதிகாரத்தில் உள்ள செய்தி. படித்துப் பாருங்கள்.

சீரங்கம் என்று பழைய உரைகாரர் ஏன் சொல்கின்றனர் என்றும் விளங்கிக்கொள்ள முடியும். ஆழ்வார் பாசுரம் ஒன்றில் கூட சீரங்கம் என்று வராது.
அந்த இடம் வேறு. கங்கர்கள் ராஜ்யத்தில் சமண சமயிகள்.

 திருவரங்கத்து பள்ளிகொண்டானைப் பின்னர் குடநாட்டு மறையவன் வாயிலாகப் பாடுகிறார். சீரங்கபட்டினத்தில் இருந்து தெற்கே பல காதம் வந்த பின்னர்
பாடியுள்ளார்.

நா. கணேசன்

 

..... தேமொழி











 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 18, 2016, 9:35:24 PM9/18/16
to மின்தமிழ்
உங்கள் வழி புரிதல் உங்கள் விருப்பம் திரு. கணேசன் ... 
அதற்கு கண்டவியூகம் டெக்னிக் மற்றும் காதம் எவ்வளவு தொலைவு  என்ற உங்கள் கோணம் அடிப்படை.

எனக்கு ...
நாட்டின் தலைநகர் >>  தலைநகர் >> தலைநகர் என்ற வசதியான பெருவழிப்பாதை பயணம் (இது போன்று பயணிப்பதில், உணவு, தங்குமிடம், வழித்துணை போன்ற பல வசதிகளும் உள்ளன, வணிகர் வண்டித்தடமாகவும்  இருக்கும்).  

இது போன்ற ஏரண அடிப்படை மட்டுமே.   இளங்கோ சொன்ன சதுக்கபூதம் இருந்தது என்பதை, கண்ணகி வானுலகம் சென்ற முறை, மதுரையை தீயிட்டு கொளுத்திய முறை  நாம் ஏற்றுக் கொள்ளாதது போலவே அக்கால செய்திகளை பொருந்தாவிடில் ஒதுக்கிவிடுவது பொருந்தும் என்பது எனது கருத்து.  

தேமொழி

unread,
Sep 19, 2016, 1:32:43 AM9/19/16
to மின்தமிழ்
March 30th, 2015


சிலம்பில் ஊர்ப்புனைவுகள்

முனைவர் இரமேஷ் சாமியப்பா

[...]

சிலம்பில் ஊர்ப்புனைவுகள்:
சங்க இலக்கியத்தின் ஆற்றுப்படை நூல்கள் நானில வருணனை வழியிடைப்புனைவுகள் ஊரை வருணித்துப் புனைவினை விரித்துரைக்கின்றன. இதனைப் பின்தொடர்ந்த இலக்கியங்களில் குறிப்பாகக் காப்பியங்கள் ஊரினைச் சித்திரிப்பதை ஓர் உட்கூறாகவே கொண்டன. தண்டியாசிரியர், பெருங்காப்பிய இலக்கணம் கூறும்போது, நாடு, நிலம், பொழுது வருணனைகளைக் காப்பியக் கூறுகளில் அடக்குவர். சிலப்பதிகாரத்தில் காணப்படும் ஊர்ப்புனைவுகளை நாட்டுப் புனைவுகள், பெருநகரப் புனைவுகள், வழியிடைப் புனைவுகள் மற்றும் சிற்றூர்ப் புனைவுகள் என்ற வகையில் காணமுடிகின்றது.

நாடுகள்
சிலப்பதிகாரக் கதை நிகழும் சோழ, பாண்டிய, சேர நாடுகளைத் தவிர பதினெட்டு நாடுகளின் பெயர்கள் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் எடுத்தாளப்பட்டுள்ளன. நாவலம், தமிழ்நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, சேரநாடு, கொங்கு நாடு, கோசர் நாடு, கங்க நாடு கட்டி நாடு, குடகு, கருநடம், கொங்கணம், மாளுவம், மத்திம நாடு, யவனர் வளநாடு, ஆரிய நாடு, இலங்கை, அவந்தி நாடு, வச்சிர நாடு ஆகியன குறிக்கப் பெற்றுள்ளன.

பெருநகரப் புனைவுகள்
சிலப்பதிகாரக் கதை, சேர,சோழ, பாண்டியர்களின் தலைநகரங்களான வஞ்சி, புகார், மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நிகழ்வதாக அமைக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் புகார், மதுரை இரண்டு நகரங்களின் நீர் வளம், நில வளம், தொழில் வளம், வாணிப வளம் மற்றும் கலை வளம் சிறப்புகளை விரிவாகப் புனைகின்றார் ஆசிரியர் இளங்கோவடிகள்.

புகார் நகரம்
புகார் நகரம், மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் என்னும் இருபகுதியாக விளங்கியுள்ளது. மன்றங்கள், கோயில்கள், மற்றும் நகர வீதிகளில் காருகர், காழியர், கூவியர், பரதவர், வாசவர், தச்சர், கண்ணனொடையாட்டியர், பன்னிணவிலைஞர், ஓசுநர், கருங்கைகொல்லர், கண்ணுள் வினைஞர், கஞ்சகாரர், செம்புசெய்குநர், மண்ணீட்டாளர், பொன்செய்கொல்லர், நன்கலம் தருநர், தின்னகாரர், தோலின் தின்னர், பெரும்பாணர், கைவினைஞர், வண்ணம், சுண்ணம், சாந்தி, பூ, புகை, விரை, உப்பு முதலியன பகர்வோர்களுக்கு மருவூர்ப்பாக்கத்திலும் மன்னன் இருப்பிடம், வாணிகர், உழவர், வேதியர்,அரசு அலுவலர், படைப்பிரிவினர், ரத்தினங்களைத் துளையிடுவோர், சங்கு வளையல் செய்வோர், மருத்துவர், வானநூல் வல்லோர் ஆகியோருக்குப் பட்டினப்பாக்கத்திலும் தனித்தனிக் குடியிருப்புகள் அமைந்திருப்பதைச் சுட்டிச் செல்வர். .(இந்திர. 7-39).

மதுரை நகரம்
கோபுரங்களுடன் நான்கு வாயில்கள், பலபொறிகளையுடைய கோட்டை, அகழி, காவற்காடு, கிழக்கில் புறஞ்சிறை மூதூர், பற்றிய புற அமைப்பினை எடுத்துரைத்த ஆசிரியர் மதுரை அக அமைப்பாகக் காவற் கணிகையர் வீதி, ஆடற்கத்தியர் இருபெரு வீதி, அங்காடி வீதி, பொற்கடை வீதி, இரத்தினக் கடை வீதி, அறுவைக் கடை வீதி, கூலக்கடை வீதி, நால்வகை வருணத்தாருக்கும் தனித்தனித் தெருக்கள், ஆய்ச்சியர் குடியிருப்புகள், குறுந்தெருக்கள், சந்திகள், முடுக்குகள் ஆகியன விரித்துரைக்கப் பெற்றுள்ளன.

வழியிடைப் புனைவுகள்
கோவலன் கண்ணகி காவிரிபூம்பட்டினத்திலிருந்து மதுரை நோக்கி கவுந்தியடிகளுடன் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழிகளாகப் புகார் – திருவரங்கம், உறையூர்-கொடும்பை, கொடும்பை-மதுரை (3 வழிகள்) ஆகியன சுட்டப்படுகின்றன. மதுரை தீக்கிரையான பின்பு கண்ணகி நிலை தெரியாது சென்ற மதுரை-நெடுவேள் குன்றம், சேரமன்னன் மலை பளம் காணச் சென்ற,மேற்கரை வஞ்சி -நீலகிரி  மற்றும் சேரநாடு-தங்கால் என்னும் எட்டு வழிகள் புனைவு பெற்றுள்ளன.

சிற்றூர்ப் புனைவுகள்
சிலப்பதிகாரத்தில் முப்பத்து மூன்று சிற்றூர்கள் சுட்டப்படுகின்றன. இவ்வூர்கள் ஊர்ச்சிறப்பினை விளக்கும் போதும் வழிகளை விளக்க வரும் வழியிடை ஊர்ப்புனைவுகளாகவும் வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிடும்போதும் ஊர்கள் இடம்பெறுகின்றன.
 
ஊர்ச்சிறப்பு
கலைஞன் ஊர், ஊரின் தலைமை, சொந்த ஊரைச் சுட்டல், தெய்வம் சார்ந்த ஊர், புனிதத்தலமாக ஊர், தொன்மை ஊர், மணம் மலி ஊர் என்று ஊர்ச்சிறப்பினைப் பாகுபடுத்தற்கியலும்.

கலைஞன் ஊர்
ஊரின் சிறப்பு அவ்வூரில் வாழும் கலைஞராலும் வெளிப்படும். செங்குட்டுவன் நீலகிரியிலிருந்து தலைநகர் திரும்பிய பின்பு பறையூரைச் சார்ந்த கூத்தச்சாக்கையனின் ஆடலைக் கண்டு மகிழ்ந்தான் என்ற குறிப்பு நடுகற் காதையில் இடம் பெறுகிறது. இதனை,
பரந்தரு நால்வகை மறையோன் பறையூர்க்                          
கூத்தர் சாக்கையன் ஆடலில் மகிழ்ந்து         (நடுகற். 76-77)
என்னும் அடிகள் குறிக்கின்றன.

ஊரின் தலைமை
மன்னனின் உடைமைப் பொருளாக ஊர் சுட்டப்படுகிறது. செங்குட்டுவன் மலைவளம் காணச் செல்லும்போது அவனது ஆளுகைக்குட்பட்ட நீலகிரியின் நெடும்புறத்தில் பாட் வீடு அமைத்து தங்கியிருந்தான். இதனை,
பாடிவீடு அமைத்துத் தங்கி (கால்கோள். 83-85)
என்னுமடி விளக்குகிறது. பாண்டியனுக்குச் சொந்தமான ஊராகக் குமரியம் பெருந்துறை கூறப்படுகிறது. இவ்விடத்தில் குமரித்துறைவன் என்று பாண்டியன் தலைமை குறித்துக் கூறுவதன் மூலம் ஊர் சுட்டப்படுகின்றது.
 
சொந்த ஊரைச் சுட்டல்
மாடலன் அடைக்கலக் காதையில் தன்னைக் கோவலனிடத்து அறிமுகம் செய்கின்றான். அப்போது அவனது சொந்த ஊராகத் தலைச்செங்கானம் என்ற ஊரினைக் குறிப்பிடுகின்றான். தான் சொந்த ஊரை ஒருவர் குறிப்பதனாலும் ஊர்ப்பெயர் இடம்பெறுவது அறியப்படுகிறது.

தெய்வம் உறையும் ஊர்.
ஓர் ஊரானது அவ்வூரில் உறைந்துள்ள தெய்வம் சுட்டியும் விளக்கம் பெறுகின்றது.சிலப்பதிகாரத்தில் கொற்கை, வெண்குன்று, ஏரகம், செந்தில், என்னும் நான்கு ஊர்கள் இவ்வகையில் இடம்பெறுகின்றன. கொற்கையின் முழுமுதற் கிழத்தி மதுராபதி என்று கட்டுரை காதையில் கூறும்போதும் குன்றக் குரவையில் மகளிர் முருகனைப் புகழ்ந்து பரவும் போதும் மேற்கூறப்பெற்ற தலங்கள் புனைவு பெறுகின்றன.

புனிதத் தலமாக ஊர்
ஊரின் சிறப்புகளில் ஒன்றாக அதன் புனிதத்தன்மையைக் குறிப்பர். மாடல மறையோன் அடைக்கலக் காதை, நீர்ப்படைக் காதை ஆகிய இரு காதைகளிலும் தன் வழிச் செலவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றான். குமரியம் பெருந்துறையில் தான் நீராடிவிட்டுத் திரும்புவதாகக் கூறுவதன் மூலம் குமரியம் பெருந்துறை பழங்காலம் முதல் புனித நீராடல் தலமாக விளங்குவதை காண்கிறோம். இதனை,
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு                                          
குமரியம் பெருந்துறை கொற்கையிற் படிந்து (அடைக். 14-15)
என்றும்,
மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு                                       
 குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்  (நீர்ப். 68-69)
என்றும் குறிப்பதன் மூலம் அறிய முடிகிறது.
ஊரின் தொன்மை
புகார் சோழன் மூதூர், பதியெழு அறியாப் பழங்குடி என்று சுட்டப்படுகிறது. ஊரின் பழமையைக் காட்ட இவ்வடைகளைப் புலவர்கள் சங்க காலந்தொட்டு பயன்படுத்தி வருகின்றனர். சோழனின் உறையூர் சிலம்பில் ஐந்திடங்களில் பயிலுகின்றது.
“————   ———   ————-  தவப்பெருஞ் சிறப்பின்                                 
காவுந்தியையும் தேவியுங் கணவனும்                                               
முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய                                     
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென் (நாடுகாண். 245-248)
என்னுமடிகளில் கவுந்தியடிகள் கண்ணகி கோவலன் இருவருடன் உறையூர் வந்த செய்தி கூறப்படுகிறது. இப்பாடலடியில் உறையூர் பமாற்றுப் பெயராக வாரணம் குறிக்கப்பெறுகிறது. வாரணம் என்பதற்குரிய பெயர்க்காரணமும் கூறப்பெறுகிறது. முறம் போன்ற செவிகளையுடைய யானையைப் போரிலே கெடுத்த பக்கத்தே சிறகுகளையுடைய கோழியின் பெயரமைந்த நகரம் என்பர்.

இத்தகு பெருமிதமுடைய உறையூரின் புறஞ்சேரியில் புகுந்த கவுந்தியடிகள் சாரணர் கூறிய மொழிகளைக் கோவலன் கண்ணகிக்கு விரித்துரைக்கின்றார்.(காடு1-11) அச்சமயம் அப்பும்பொழிலில் இருந்த காமுகனும் பரத்தையும் சொல்லாடியதன் விளைவாகச் சாபம் பெற்று நரியாக உருமாறி உறையூர் காவற்காட்டில் ஒதுங்கினர். மூவரும் அருக தெய்வத்தை வணங்கிய பின்னர் அக்கோயிலைச் சார்ந்த தவப்பள்ளியில் உறைகின்றனர். இதனை,
கவுந்தி யிட்ட தவந்தரு சாபம்                                                   
கட்டிய தாகலின் பட்டதை யறியார்                                            
குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு                                               
 —– —————     ————–   ———-                                               
உறையூர் நொச்சி யொருபுடை யொதுங்க (நாடுகாண். 217-245)
என்ற அடிகளால் அறிகின்றோம். மேற்கண்டவற்றால் உறையூரில் கோட்டையும் காவற்காடும் புறஞ்சிறையும் நிக்கந்தன் பள்ளியும் இருந்த செய்தி புலனாகிறது.

மணம்மலி ஊர்
ஊரைத் தலைமையுடன் இணைத்துப் பேசப்படுவது போன்று அவ்வூர் மணம் பெற்றுத் திகழ்வதாகவும் புனைவு பெறுகிறது. தொன்டி என்னும் ஊரில் உள்ளோர் இட்ட அகில், துகில், ஆரம், கருப்பூரம் முதலான பொருட்களோடு கொண்டலானது கூடல் வந்தது என்று ஆசிரியர் புனைவர். ஊர்காண்காதையில் (106-110) இடம்பெறும் இச்செய்திமூலம் கூடலில் விற்பனக்கு வந்த தொண்டி விளைபொருட்களை அறிகின்றோம்.

வழிகாட்டிகளாக ஊர்கள்
சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களில் வடவேங்கடம், உஞ்சை, அரங்கம், திருமால்குன்றம், கொடும்பை, நெடுவேள்குன்றம் என்னும் ஐந்து ஊர்கள் வழியிடையில் அமைந்த ஊர்களாகக் காட்டப்படுகின்றன.

விஞ்சையன் சென்ற வழிப்புனைவு
புகார் நகரில் நடைபெறவிருக்கும் இந்திரவிழாவினைக் காண விஞ்சையன் வரும் வழியாக உஞ்சை, வடவேங்கடம் என்னும் இரு ஊர்கள் சுட்டப்படுகின்றன. வேங்கடமலை, தமிழகத்தின் வடக்கெல்லையாக வேனிற்காதையில் குறிப்பிடப்படும்போதும் மாங்காட்டு மறையோன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் செல்லும் ஊரினைச் சுட்டும்போதும் வடவேங்கடம் குறிக்கப்பெறுகிறது. இதனை,
வீங்குநீர் அருவி வேங்கட மென்னும்                                             
ஓங்குயர் மலையை துச்சி மீமிசை (காடுகாண். 41-42)
என்று மறையோன் வேன்கடமலை அருவிகள் நிறைந்த மலையாகச் சுட்டுவதன் மூலம் அறிகின்றோம்.
உஞ்சை நகரம் விந்தியமலைக்கு வடக்குப்பகுதியில் அமைந்த அவந்தி நாட்டின் தலைநகரமாகும். இவ்வூர் சிலப்பதிகாரத்தில் மூவிடங்களில் பயிலுகின்றது. விஞ்சையன் உஞ்சை நகரைக் கடந்து விந்திய மலை காடுகள் தாண்டி வேங்கடமலை வருவததாகப் புனைவு அமைகிறது. வடக்கே இமயமலை தொடங்கி தெற்கே வடவேங்கடம் வரையிலான புவியலமைப்பு சுட்டப்படுகிறது.

கண்ணகி சென்ற வழிப்புனைவு
கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி மூவரும் மதுரை நோக்கிக் காவிரியின் வடகரை வழிச் செல்கின்றனர். செல்லும் வழியில் திருவரங்கத்தை அடைகின்றனர். அவ்அரங்கம் காவிரியாற்றின் இடையில் அடர்ந்த சோலையோடு மணம் மிகுந்து இருந்தது என்பது,
ஆற்றுவீ யரங்கத்து வீற்று வீற்றாகி                                              
குரங்ககை உடுத்த மரம்பயில் அடுக்கத்து                                       
வானவர் உறையும் பூநாறு ஒருசினை (நாடு காண்.156-158)
என்ற அடிகள் உணர்த்தி நிற்கின்றன. மாங்காட்டு மறையோன் இவ்வரங்கத்தில் திருமால் கிடந்த கோலத்தில் காட்சியளிப்பார் என்று கூறுகின்றான். இதனை,
விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தி                                         
திருவமர் மார்பன் கிடந்த வண்ணம் (காடுகாண். 39-40)
என்ற அடிகள் உணர்த்தி நிற்கின்றன. அரங்கம் ஆற்றிடைக்குறையில் இருந்தமை வியன்பெருந் துருத்தி என்பதன் மூலம் அறியப்படுகிறது.

கோவலன் கண்ணகி மதுரைக்குச் செல்லும் வழியில் கொடும்பை என்ற ஊர் சுட்டப்படுகிறது.
அறையும் பொறையும் அசிடை மயக்கம்                                          
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந்                                     
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று                                                
கொடும்பை நெடுங்குளம் கோட்டகம் புக்கால் (காடுகாண்.68-71)
என்னுமடிகள் மறையோன் கூறுவதாக உள்ளது. உறையூரிலிருந்து கிளம்பி கொடும்பாளூர் அருகே நெடுங்கோட்டகத்தை அடையலாம் என்று அரும்பதவுரைகாரர் பொருளுரைப்பர். அடியார்க்கு நல்லார், கொடும்பை என்பதனைக் கொடும்பாளூர் என்றும் நெடுங்குளம் என்றும் இரு ஊர்களைக் குறிப்பர்.
கொடும்பை-கொடும்பாளூர், நெடுங்குளம் என்பதும் ஊர்ப்பெயர்.      இவையிரண்டும் இணைப்பெயர் பெற்ற ஊர்கள். இக்காலத்தும்         இணைத்தே பெயர்க் கூறப்படுதல் காணலாம்.8
என்பர். கொடும்பாளூரிலிருந்து மதுரைக்குச் செல்லும்போது மூன்று வழிகளைப் பற்றி மறையோன் சுட்டும்போது திருமால் குன்றம் இடம்பெறுகிறது. கொடும்பாளூரிலிருந்து தெற்கே மதுரை அமைந்திருந்தது. தெற்கே செல்லும் மூவழியில் கிழக்குப் பக்கத்து வழியில் சென்றால் திருமால் குன்றம் அடையும் வழி உள்ளது எனும்போது ஊர் இடம்பெறுகிறது.

வரலாற்றுச் செய்திகள்
ஊரைப் புனையும்போது வரலாற்றுச் செய்திகள் இடம்பெறுவதன்மூலம் ஊர்கள் இடம்பெறுகின்றன. போர்க்களவெற்றி, ஆட்சி மாற்றம், நிவந்தம் அளித்தல், பெயர்க்காரணம்,நிகழ்வின் தொடர்ச்சியைச் சுட்டுதல் என்னும் வகையில் ஊர் இடம்பெறுதலை பாகுபடுத்தற்கியலும்.
போர்க்கள வெற்றி
செங்குட்டுவனின் வென்றிச் சிறப்பினை கூற வந்த இளங்கோவடிகள், செங்களம், வியலூர், நேரிவாயில், இடும்பில் மற்றும் அகப்பா என்று ஐந்து ஊர்கள் இடம்பெறுகின்றன. இவற்றுள் அகப்பா செங்குட்டுவனின் முன்னோர் வென்ற அரண்களுள் ஒன்றாக இடம்பெறுகிறது. நீர்படைக் காதையில் மாடலன் மறையோன் செங்குட்டுவனின் சினம் தணிக்க அவனது முன்னோர் பெற்ற வெற்றியோடு அவன் பெற்ற வெற்றிகளையும் குறிப்பிடும்போது ஊர்கள் இடம்பெறுகின்றன.
 
கறிவளர் சிலம்பிற் துஞ்சும் யானையின்                           
சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்                            
ஆர்புனை நெரியல் ஒன்பது மன்னரை                                  
நேரிவாயில் நிலைச் செரு வென்று                                   
நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற் புறத்திறுத்துக்                  
கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி                      
உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக்                             
கடும்புனற் கங்கை பேர்யாற்று வென்றாய் (நடுகற். 114-121)
என்ற அடிகளில் வியலூர், நேரிவாயில், இடும்பில் மற்றும் கங்கை பேரியாற்றங்கரை ஆகியன குறிக்கப்பெற்றுள்ளன.
செங்குட்டுவனின் வெற்ரிச் சிறப்பினைக் கூறவந்த மறையோன் கூற்றில் இவ்வூர்கள் ஆளப்பட்டுள்ளன. செங்குட்டுவன் தன் மைத்துனன்வளவன் கிள்ளியோடு பொருத ஒன்பது சோழரை நேரிவாயிலில் வென்ற பிறகு பின் அவர்களை இடும்பில் மீண்டும் புறத்திறுக்கின்றான். இங்கு இடும்பில் என்பது இடும்பாவனத்தைக் குறிக்கின்றது. காட்சிகாதையில், சோழ, பாண்டியரையும் குறுநிலமன்னர்களையும் வென்ற செய்தி கூறப்படுகின்றது. நீலன் என்னும் ஒற்றன் வடதிசை மன்னர் இமயமலை அடிவாரத்தில் உள்ள குயிலாலுவத்தில் அமைந்த உமையொருபாகனை வணங்கி நீங்கினர் எனும்போது ஊர் கூறப்பெற்றுள்ளது.

ஆட்சி மாற்றம்
பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவிற்குப் பின்னர் அப்பாண்டிய நாட்டின் அரசுரிமையைக் கொற்கையில் இருந்த வெற்ரிவேற் செழியன் பெற்றான் என்று உரைபெறு கட்டுரையில் குறிக்கப் பெறுகிறது. நீர்ப்படக் காதையில் இச்செய்தியினை, மாடலன் செங்குட்டுவனுக்கு கூறுகின்ற போது இடம் பெறுகிறது. மதுரையில் பாண்டியன் நெடுங்செழியன் இறப்புக்குப்பின்  நடந்த அரசியல் நிகழ்வுகளை விவரிக்கும்போது கொற்கை இடம்பெறுகிறது.கொற்கை இளவரசன் வெற்றிவேற் செழியன் மதுரை வந்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய செய்தியினை செங்குட்டுவனுக்கு வழிபயணி கூறுவதாகப் படைத்துளார்.

நிவந்தமாக ஊர்
கட்டுரை காதையில், பாண்டிய மன்னன் நிவந்தமாகத் தங்கால், வயலூர் என்னும் ஊர்களைத் தானமாக வார்த்திகன் என்னும் பார்ப்பனுக்கு பாவம் போக்க கொடுக்கின்றான். இதன,
தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன்                                            
மடங்கா விளையுள் வயலூர் நல்கி (கட்டுரை. 118-119)
என்ற அடிகள் உணர்த்தி நிற்கும். மதுராபுரித் தெய்வம் பாண்டிய மன்னனின் செங்கோல் சிறப்பினை விளக்குமிடத்து இவ்விரு ஊர்களும் இடம்பெறலாயின.
 
கடல்கோள் ஊர்கள்
புகார், குமரிகோடு என்னுமிரு ஊர்கள் கடல்கோளால் அழிந்த செய்தியினை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மங்கலவாழ்த்துப் பாடலில் கால்ந்தோறும் நீளுகின்ற புகழான் மட்டும் என்றென்றும் நடுக்கின்றி நிலைபெறுகின்ற புகார் நகரம் என்பது வருணனை. நாகர் நகருடனும் நாகனாடதனொடும் ஒருதன்மைத்தாய் என்றது இவ்வுலகில் காணப்படாத அவ்விரண்டு நகரங்களையும் போன்று இலக்கியங்களில் மட்டும் இருக்கின்றது என்று உரை எழுதிச் செல்வர்.9 (ப.41_
காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் பாண்டியன் புகழினைக் கூறும்போது குமரிக்கோட்டை கொடுங்கடல் கொண்டது என்பர்.
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்                                        
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள   காடுகாண். 19 – 20 )
 
என்ற அடிகளில் குமரிக்கோடு கடல்கோளால் அழிந்த செய்தி இடம்பெறுகிறது. திருவிதங்கோடு, அதங்கோடு, விளவங்கோடு என்பது போன்று குமரிகோடும் ஊரின் பெயராகும்.
 
பழம்பிறப்பு ஊர்கள்
சிலப்பதிகாரக் காலகட்டத்தில் மக்களிடையே உழ்வினை நம்பிக்கை இருந்து வந்துள்ளது. கோவலன் இறப்பிற்கு ஊழ்வினையைக் காட்டும் ஆசிரியர் கோவலன் முற்பிறப்பில் அயற்புல ஊரில் வாழ்ந்ததாகக் கூறுகிறார்.
கடிபொழில் உடுத்த கலிங்க நன்னாட்டு                                            
வடிவேற் தடக்கை வசுவும் குமரனும்                                                
தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும்                                             
காம்பெழு கானக் கபில புரத்தினும் (கட்டுரை.128-131)
என்னுமடிகளில் கலிங்க நாட்டின் கபிலபுரம், சிங்கபுரம் என்னும் ஊர்களில் முறையே குமரனும் வசுவும் ஆட்சி புரிந்த செய்தி கூறப்படுகிறது. சிங்கபுரத்தின் அரசு அலுவலராகக் கோவலன் பணியாற்றியதாக ஆசிரியர் உரைக்கின்றார். இவ்வாறு சிங்கபுரம், கபிலபுரம் என்னும் இரு அயற்புல ஊர்கள் இடம்பெறுகின்றன.
இனிய நீர்வளமுடைய கழனிகளையுடைய மருதப் பரப்பின்கண் உள்ள சிஙபுரம் என்னும் நகரத்தினும் மூங்கில் வளருகின்ற காட்டினையுடைய முல்லைநிலத்தில் அமைந்த கபிலபுரம் என்னும் நகரத்தினும் இருந்து ஆள்கின்ற வசுவும் குமரனும் என்பது புனைவுச் செய்தி. இப்புனைவில் சிங்கபுரம் வளமையுடைய செல்வச் செழிப்பிற்குக் காரணமான மருதநிலத்தை உடையதாகச் சிறப்பிக்கப்படுகிறது. ஊரினைப் புனையும் போது ஓர் ஊரினை வளமிக்க மருத நில ஊராகவும் மற்றொரு ஊரினை மூங்கில் நிறைந்த ஊராகவும் சிதிரிக்கின்றார்.சிங்புரமானது சாத்தனார் கூறும் பழம்பிறப்புக் காதையிலும் ‘சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரம்’ (பதி.47) என்று குறிக்கப் பெறுகிறது.

ஒப்புமையாக ஊர்
தந்தை ஏவிய பணிவிடையைச் செய்தலே உறுதிப்பொருள் என்று துணிந்து மனைக்கிழத்தியுடனும் இளையவனுடனும் செல்லுதற்கரிய காட்டின்கண் சென்ற இராமனைப் பிரிந்த அயோத்தி போன்று புகார் நகரம் பெரிதும் கவலையுற்றது போலக் கோவலனைப் பிரிந்த புகார் நகரம் துயறுற்றது என்று இரு நகரங்கள் ஒப்புமையாக இடம்பெறுகிறது.
 
பிற
கண்ணகி மதுரையை எரித்த பின்னர் அங்கிருந்து வெளியேறி வயை கரையின் ஒருபுறமாக மேற்கு நோக்கிச் சென்று நெடுவேள் குன்றத்தை வந்தடைகின்றாள் என்று ஆசிரியர் புனைகின்றார்.
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு                                        
அவல என்னாள் அவலித்து அழிதலின்                                               
மிசைய என்னாள் மிசை வைத்து தேறலிற்                                      
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு                                
அவுணரைக் கடந்த சுடரிலைலை நெடுவேல்                                      
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறி  (கட்டுரை.185-190)
என்ற அடிகளில் குறிக்கப்பெறுகிறது.

வரந்தருகாதையில் மாடல மறையோன் தேவந்தியின் வரலாற்றைக் கூறும்போது காப்பியத் தொல்குடி என்னும் ஊர்ச் சுட்டப்படுகிறது. பாசண்ட சாத்தன் மாலதியின் மகனாகத் தோன்றி வளர்ந்ததாகக் கூறுகின்றான். இவ்வூர் தற்போது நாகை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகில் உள்ளது.

தொகுப்புரை
இயற்கையின் உறுப்பாக வாழ்ந்த மனிதனின் கூட்டு வாழ்க்கைச் சிந்தனை ஊராகப் பரிணமித்தது.      சங்கப்புலவர்கள்  இருகைகோளிலும் ஊரைப் புனைந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் 17 நாடுகள், 3 பெரு நகரங்கள், 33 சிற்றூர்கள்  நேரடியாகவும் மறைமுகமாகவும் இடம்பெறுகின்றன.
சோழநகரம் புகாரும் பாண்டிய நகரம் மதுரையும் விரிவாகப் பேசிய ஆசிரியர் வஞ்சி நகர அமைப்பினைச் சுட்டவில்லை.   சிற்றூர்ப்  புனைவுகள்  சிறப்பு, வழிகாட்டுதல்,வரலாற்றுச் செய்தியினைக் கூற இடம்பெற்றுள்ளன


அடிக்குறிப்புகள்:
1. சா.இரமேஷ், சங்க இலக்கியத்தில் ஊர்ப்புனைவுகள், முனைவர் பட்ட ஆய்வேடு, அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி, செப்டம்பர் 2000.
2. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், எழுத்ததிகாரம், கழக வெளியிடு, சென்னை, முதற்பதிப்பு, 1985 ப. .
3. மேலது, ப.
4. சேனாவரையர் (உ.ஆ), தொல்காப்பியம், சொல்லதிகாரம், கழக வெளியிடு, சென்னை, முதற்பதிப்பு, 1985 ப.
5. மேலது, ப–

 
முனைவர் இரமேஷ் சாமியப்பா
தமிழ் உதவிப்பேராசிரியர்
அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி)
கும்பகோணம்
அலைபேசி:9486073399

Mukunthan Pathmanesan

unread,
Sep 19, 2016, 8:16:54 AM9/19/16
to mint...@googlegroups.com
​​​
வணக்கம் கணேசன் ஐயா,


Not really. You can draw the picture with 300- 360 miles distance from Madurai in the Northerly direction that is said in the epic novel.
Ilango AdikaL's Vada Perum Kodu and Kavunthi Adikal's tava-c-ciRai. was there acc. to the epic.

Ciirangam of Ganga Rajya is just a point on the way South to Madurai, but Kovalan meets Kavunthi AdikaL North of Sriranga Patna
in the Western Ghats.


300 மைல் தீரத்தை இங்கே குறிப்பிட்டுள்ளேன் கவுந்தியடிகளின் பள்ளி இருந்த இடம் என்று நீங்கள் கருதும் இடத்தை இதில் காட்ட முடியுமா? ​
Inline image 1


​(4) அங்கிருந்து தெற்கே வருகின்றனர். வரும்வழியில் சீரங்கபட்டினம். சமணர் ஆட்சியில் - கங்க சோழர்கள்
இருந்த ஊர் - அங்கே அந்தர சாரணர் வருகை, வழிபாடு. சமணம் பற்றிய நற்போதனைகள், விளக்கம்.

​ திருவரங்கத்து பள்ளிகொண்டானைப் பின்னர் குடநாட்டு மறையவன் வாயிலாகப் பாடுகிறார். சீரங்கபட்டினத்தில் இருந்து தெற்கே பல காதம் வந்த பின்னர்

பாடியுள்ளார்.
 
ஐயா,
காடுகாண் காதை ஆரம்பத்தில் புகார்க் காண்ட இறுதியில் வரும் நிகழ்வுகளின்  பொழிப்பைக் கூறுவதைப் பாருங்கள்.
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,

சாரணர் வருகை அன்று இரவு அரங்கத்தில் தங்கி விடியலில் உறையூர் (வாரணம்) கடக்கின்றனர்.. நீங்கள் கூறுவது போல அது சீரங்கப்பட்டினம்  எனின் அது சாத்தியமா?


திருவரங்கம் வேறு, சீரங்கம் வேறு. இதனை அரும்பதவுரையாசிரியர் உரையில் பார்க்கலாம்.​
உங்களிடம் இருக்கின்றதா? அவர் கூறிய வரிகளை இங்கே குறிப்பிடமுடியுமா? இணைப்பு அல்லது நூலின் பெயர் தரமுடியுமா? (அல்லது அடியார்க்கு நல்லார் கூறியதையா கூறுகின்றீர்கள்)
 
 



யோசனை = 10 மைல். எனப் பலரும் பயன்படுத்தியுள்ளனர். நான் மட்டுமில்லை. உ-ம்: பாரதியார் ஒளிவேகம் கணக்கிடலில் 1 யோசனை = 1 காதம் எனப் பயன்படுதியுள்ளது காட்டியுள்ளேன்.
படித்துப் பார்க்கவும். தமிழ்ச் சமணர்கள், 1 யோசனை = 40 மைல் (= 4 காதம்) எனக் கொண்டுள்ளனர் - தமிழ் அகராதிகளிலும், ஒலியியல் விஞ்ஞானம் காட்டுவதும் விரிவாக எழுதியுள்ளேன்.
நீங்கள் எழுதியதை அவ்விழையிலேயே பலமுறை மறுத்துள்ளேன். நீங்கள் ஏற்பதாகத் தெரியவில்லை. யோசனை 10 மைல் என்பதையே விடாப்பிடியாகப் பிடிக்கின்றீர்கள் ஏனெனத் தெரியவில்லை.
 http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_2/20005a5e_93.pdf
ஆரியபட்டாவின் படி
புவி விட்டம் : 1050 யோசனை
சூரியனின் விட்டம் :  4410 யோசனை

இதனைத் தற்போதைய அளவுகளுக்கு மாற்றினால்,

புவி விட்டம் : 1050 யோசனை = 7918 மைல் : 1 யோசனை = 7.5 மைல்
சூரியனின் விட்டம் :  4410 யோசனை = 864,575 மைல் : 1 யோசனை = 196 மைல்

இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?



வடபெருங்கோடு = குடமலை, குடநாட்டு மலைகள். பலரும் எழுதியுள்ளனர் என்பதைக் கொடுத்துள்ளேன். வடபெருங்கோடு, வடபெருங்கல் எல்லாம் ஸ்டாக் ஃப்ரேஸஸ்.
இல்லை ஐயா. பாவாணர் கூறியதிலிருந்து தான் நீங்கள் முடிவெடுக்கின்றீர்கள். வடபெருங்கோடு = வடபெருங்கல் என நீங்கள் எடுக்கின்றீர்கள். இடத்திற்குத் தகுந்த பொருள் கொள்ளவில்லை. பாவாணர் கூறியற்கு இலக்கிய ஆதாரங்களில்லை. வடபெரும்கோடு/வடபெருங்கல்/வடபெருங்கயிலை/வடபெருங்குன்று/வடபெரும்பனிமலை என்பன வெவ்வேறு. நீங்கள் அதனை ஒன்றாக எடுக்கின்றீர்கள்.
வடபெருங்கயிலை : இமயம் எனின் கவுந்தி இருந்தது இமயமலையிலா?
https://groups.google.com/forum/#!msg/minTamil/mMOicRCiEB0/nRpfqw7YBgAJ


மணிபல்லவம் என்பது ஒரு கற்பனையூர் 400 யோசனை தொலைவில் பூம்புகாரினின்றும் இருப்பது என்கிறது மணிமேகலை.இதனை நீங்கள் எந்த ஊர் என்கிறீர்கள்? இலங்கையா? நிச்சயமாக இல்லை.
வேறொரு இழையில் இதுபற்றி எழுதுகின்றேன். மணிபல்லவம் புகாரிலிருந்து 30 யோசனை தூரம். நீங்கள் யோசனை = 10 மைல் என எடுத்துக்கொண்டு அது கற்பனை என்கின்றீர்கள்.


இலக்கியங்கள் பல செய்திகளைச் சேர்த்துச் சொல்பவை. 20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள்
இளங்கோ அடிகள் குறிப்பிடும் காவிரி பாயும் நாட்டில் பாதியை விட்டுவிட்டனர்.

அடியார்க்கு நல்லாரும் விட்டுவிட்டாரா?



Cilappathikaram is a historical novel of about 15 centuries old, it is funny to read North Indian invasion etc.,
and Iraamaki dates it to First century BCE!  

You saw Mukundan's Irungadal and Perungadal picture:

Note that Mukundan left together the North direction totally, but the original Cilappatikaram mentions it as Vada Perum Kodu,
"vaDa perum" is a stock phrase usually for mountains North of Tamil country.

இராம.கி ஐயா சிலம்பின் காலம் என ஒரு புத்தகம் எழுதியவர். நீங்கள் சிலம்பு 5ம் நூற்றாண்டு எனக் கருதினால் அவரது ஆய்வுக் கருத்துக்களுக்குப் பதில் கூறலாமே? அதை விடுத்து  5ம் நூற்றாண்டு எனத் திரும்பத் திரும்பக் கூறுவது ஏன்?

நானும் ஒரு இழை ஆரம்பித்து சிலம்பு 10ம் நூற்றாண்டு எனக் கூறிவிட்டு, அதனைப் பலரும் மறுத்தாலும் அவர்களின் கருத்தை ஏற்காமல் , பல்வேறு இழைகளில் சிலம்பு 10ம் நூற்றாண்டு எனத் திரும்பத் திரும்பக் கூறினால் அது சரியான முறையா?   நீங்கள் அதனை ஏற்றுகொள்வீர்களா?


கணேசன் ஐயா, உங்கள் இழைகளிலிருந்து நிறைய விடயங்களை அறிந்துகொண்டேன். ஆனால் ஏற்கவியலாத சிலவற்றை நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுவது வருத்தமளிக்கின்றது. 


நன்றி,
முகுந்தன்.



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Sep 19, 2016, 8:31:26 AM9/19/16
to மின்தமிழ்

i am not literally inclined or skilled to analyse this thread; but i do remember reading silapadhikaram prose version where i vaguely remember kovalan asking a brahmin about the route and was told about the srirangam (near trichy!) and not near mysore.  this was my impression and i never had an idea that kovalan traversed into kannada land. 

i have to order Murugavel's Milirkal where the heroine travels along the route taken by kovalan (and later by murugavel)

do see and comment:

http://andhimazhai.com/news/view/murugavel-08-08-2014.html  (

சிலம்பின் பாதை! -இரா.முருகவேள்


regards

rnkantan

N D Logasundaram

unread,
Sep 19, 2016, 9:24:15 AM9/19/16
to mintamil
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி 
 வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து 

நா கணேசனார்

புகாரில் இருந்து மேற்குத்திசையிலே போய், வட பெருங்கோட்டில் நுழைந்தால் காவிரி உற்பத்தி ஆகும்
மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரும்.

கணேசனார்

திரு கணேசனாருக்கு தன மனதில் வந்து புகுந்துள்ள எண்ணம்தான் சிறப்பு என வாதிடும் போக்கு எப்போதும் போல் இங்கும் தொடர்ந்து வந்து ள்ளது அவ்வளவே

கொண்டு எனும் சொல் புகார்நகரைவிட்டு கிளம்பிய கோவலன் கண்ணகி மேற்குநோக்கி காலடிவைத்து தம்  செலவினை தொடங்கினார்  என்றுதானே பொருள் 
எப்படி பல நூறு கிமீ தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வரை'
எப்படி செலவர் அப்படி அவர்கள் மதுரை இருக்கும் திசை அறியாதவர்களா 

அது சரி வடபெருங்கோடு எது ?? மலர் ப்பொழில்  உடைய வடபெருங்கோடு  மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ளதா 

வட எனும் சொல் ஆலமரத்தை க்குறிக்கும் என முன்பே காட்டினேன்
 பொழில் எனும் அடுத்து வரும்  சொல் அப்போதுதான் சிறப்பான ப்பொருளுடன்  பொருந்து

மேற்கு த் தொடர்ச்சி ம லையில் வடபெருங்கோடு எனும் மலை எப்படி வரும் 

என்னே அறிவுடைமை !!!


அது சரி இதனில் கா தம் பற்றி நா ன் எழுதிய திருநள்ளாற்றுப்புராணத்தை  நுழைக்கப்பார்க்கின்ரீர் 

மற்றவர்நே நே ரத்தை வீணடிப்பதில்  எரிச்சலூட்டுவதில் தொடர்ந்து  திறமையை  கா ட்டு கின்ரீர்
சிறிதும் இன்னும் மாறவில்லை
மாறவே மாட்டீர் போலும் மடலாடல் எல்லோருக்கும் தொடர்ந்து இடர் படுத்துவதில் என்ன அப்படி மகிழ்ச்சி ???



நூ த லோ சு 
மயிலை 

2016-09-17 18:21 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, September 17, 2016 at 5:00:05 AM UTC-7, singanenjan wrote:
மிகச்  சரி முகுந்தன்,நோக்கம்   மதுரை  செல்வது....மேற்குத் தொடர்ச்சி மலை எங்கே வருகிறது இங்கே.


நான் குறிப்பிட்ட முக்கியமான மைல்கற்கள் ஒன்றினையும் நாடுகாண், + காடுகாண் காதையில் இருந்து
முகுந்தன் எடுத்துக்காட்டவில்லை.

கிழக்கு, மேற்கு, தெற்கு எல்லாம் ஹைலைட் செய்த முகுந்தன், முக்கியமாக வடக்கு என்பதை விட்டுவிட்டார்.

(1) குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
 வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து 

புகாரில் இருந்து மேற்குத்திசையிலே போய், வட பெருங்கோட்டில் நுழைந்தால் காவிரி உற்பத்தி ஆகும்
மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரும்.

(2) ”பொழில் மண்டிலம்” என்பது மேற்குத்தொடர்ச்சி மலையில் வணிகர்களுக்கு முக்கியமான
இடங்கள். ஐம்பொழில் பரமேசுவரி, ஐஞ்ஞூற்றுவர் (திசையாயிரம்), ... பரிபாடலில் பொழில்மண்டிலம்,
ஐம்பொழில் (=ஐஹொளெ) இதனை வடபெரும் கோடு என்றார் இளங்கோ அடிகள்.

(3) தன் சமண சமயத்தைப் பற்றி விளக்க கவுந்தி அடிகள் என்னும் குரத்தியாரைப் பயன்படுத்துகிறார்.
அவரது தவப்பள்ளி வடபெருங்கோட்டில் மதுரைக்கு வடக்கே ~360 மைல்கற்களில் இருந்தது என்கிறார்.
1 காதம் = ~12 மைல். கெவியூதி என்பது காவதம்/காதம் அல்ல.

(4) அங்கிருந்து தெற்கே வருகின்றனர். வரும்வழியில் சீரங்கபட்டினம். சமணர் ஆட்சியில் - கங்க சோழர்கள்
இருந்த ஊர் - அங்கே அந்தர சாரணர் வருகை, வழிபாடு. சமணம் பற்றிய நற்போதனைகள், விளக்கம்.

(5) பின்னர் தமிழ்நாட்டில் பயணம். வம்பப் பரத்தை, வறுமொழியாளன் நிகழ்ச்சி.

(6) அதற்கப்புறம், வாரணம் அடைதல். அங்கே திருவரங்கம்.
திருவரங்கம் வேறு, சீரங்கம் வேறு. இதனை அரும்பதவுரையாசிரியர் உரையில் பார்க்கலாம்.
திருவேங்கடம் வேறு, வடவேங்கடம் வேறு. வடவேங்கடம் என்று குறிப்பிடும் திருப்புகழ்கள் இரண்டு:
ஒன்றில் மாலவன், இன்னொன்றில் முருகன். ஆனால், திருவேங்கடம் பற்றிய திருப்புகழ்களில் முருகனைப்
பாடுகிறார் அருணகிரிநாதர்.

(7) தெய்வக் காவிரி நாடு, பாயுமிடமெல்லாம் அதன் வேளாண்மைச் சிறப்பு, சோழர் மேலாண்மைக்குக்
கீழிருப்பது, காவிரிநாடு பிறக்குமிடம் இருந்து கடலில் கலக்கும்வரை பாடல் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
நாம்தான் காவிரி என்பது திருச்சி -to- பூம்புகார் என 20-ஆம் நூற்றாண்டில் உரை எழுதியுள்ளோம்.
இளங்கோ அடிகள் காலத்தில் காவிரி நாடு என்றால் திருச்சியில் தொடங்குவதில்லை. இன்றும்தான்.

(8) குடநாட்டில் இருந்து (Coorg) மறையவனை கவுந்தி அடிகள் பயணம் செய்தது மாதிரியே தெற்கே வந்து
திருவரங்கத்தில் சந்திக்கவைக்கிறார். இது வேத வழிப்பட்ட துறவு, சிரமண வழிப்பட்ட துறவு (கவுந்தி அடிகள்)
இரண்டையும் இணையாகக் குறிப்பிடுவது. இதேபோல, தாபதவாகை என்னும் துறையில் இரண்டு பாடல்கள்
புறநானூற்றில் உண்டு. Two modes of Asceticism.

etc., In sum,

குடக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு என்பன நான்கு திசைகள்.
நான்கையும் பேசுகிறார் இளங்கோ அடிகள். இதில் காவிரிக்கு
முக்கியமான வடக்கு திசையில் - வடபொழில் மண்டிலத்தில் பிறப்பதது -
சமணத்தை விவரிப்பதையும், அதன் குரத்தியாரை சந்திப்பதையும்
விட்டுவிட வேண்டாம். 

நா. கணேசன்
 

2016-09-17 13:22 GMT+05:30 Mukunthan Pathmanesan <muku...@gmail.com>:
புகார் நகர வாசலைக் கடந்து செல்கின்றனர்.
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி


​காவிரி வாயிலைக் கடந்து மேற்குத் திசையில் செல்கின்றனர்.
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
 வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து


காவிரி ஆற்றைக் கடந்து காவிரிக்குத் தெற்கே சென்று போம்பொழிலில் இருக்கின்றனர்.
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி


உறையூரின் புறஞ்சிறையில் இருக்கின்றனர்.
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என்.


தென் திசையில் செல்கின்றனர்.
திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ்,
செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து,
கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த,
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி,
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்

அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,


கணேசன் ஐயா கூறுவது போல அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்தால், அவர்கள் கிழக்குத் திசை சென்று பின் தென் திசை சென்றதாகக் கூறப்பட்டிருக்குக்கும். அவ்வாறு கூறப்படாததால் அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைக்குச் சென்றதாகக் கூறப்படுவது பிழையான கருத்தாகும். அவர்கள் காவிரியைக் கடந்தபின் வரும் இடத்தில் உறையூர் இருந்திருக்கின்றது.


நன்றி,
முகுந்தன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 19, 2016, 9:26:28 AM9/19/16
to மின்தமிழ்


On Monday, September 19, 2016 at 5:16:54 AM UTC-7, mukunthan wrote:
​​​
வணக்கம் கணேசன் ஐயா,

Not really. You can draw the picture with 300- 360 miles distance from Madurai in the Northerly direction that is said in the epic novel.
Ilango AdikaL's Vada Perum Kodu and Kavunthi Adikal's tava-c-ciRai. was there acc. to the epic.

Ciirangam of Ganga Rajya is just a point on the way South to Madurai, but Kovalan meets Kavunthi AdikaL North of Sriranga Patna
in the Western Ghats.


300 மைல் தீரத்தை இங்கே குறிப்பிட்டுள்ளேன் கவுந்தியடிகளின் பள்ளி இருந்த இடம் என்று நீங்கள் கருதும் இடத்தை இதில் காட்ட முடியுமா? ​

Yes. In your circles, the arc in present day Karnataka. Somewhere there Kavunti aDikaL's tavappaLLi. 
 
Inline image 1

​(4) அங்கிருந்து தெற்கே வருகின்றனர். வரும்வழியில் சீரங்கபட்டினம். சமணர் ஆட்சியில் - கங்க சோழர்கள்
இருந்த ஊர் - அங்கே அந்தர சாரணர் வருகை, வழிபாடு. சமணம் பற்றிய நற்போதனைகள், விளக்கம்.

​ திருவரங்கத்து பள்ளிகொண்டானைப் பின்னர் குடநாட்டு மறையவன் வாயிலாகப் பாடுகிறார். சீரங்கபட்டினத்தில் இருந்து தெற்கே பல காதம் வந்த பின்னர்
பாடியுள்ளார்.
 
ஐயா,
காடுகாண் காதை ஆரம்பத்தில் புகார்க் காண்ட இறுதியில் வரும் நிகழ்வுகளின்  பொழிப்பைக் கூறுவதைப் பாருங்கள்.
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,

சாரணர் வருகை அன்று இரவு அரங்கத்தில் தங்கி விடியலில் உறையூர் (வாரணம்) கடக்கின்றனர்.. நீங்கள் கூறுவது போல அது சீரங்கப்பட்டினம்  எனின் அது சாத்தியமா?



Here it is just a recollection and repeating of events of what happened in Sriranga Pattinam.
Such a great event of meeting Jaina deities, Andha ChaaraNar has happened few days earlier,
and the Mantras told then are recollected and retold.

It is common for people to recollect a great event after some days. They use the same prayers
first taught at Srirangapatnam in the Jaina worship at VaaraNam. For example, when one travels,
he recites the prayers learnt elsewhere. That is what happens here. 

 
திருவரங்கம் வேறு, சீரங்கம் வேறு. இதனை அரும்பதவுரையாசிரியர் உரையில் பார்க்கலாம்.​
உங்களிடம் இருக்கின்றதா? அவர் கூறிய வரிகளை இங்கே குறிப்பிடமுடியுமா? இணைப்பு அல்லது நூலின் பெயர் தரமுடியுமா? (அல்லது அடியார்க்கு நல்லார் கூறியதையா கூறுகின்றீர்கள்)
 
 



யோசனை = 10 மைல். எனப் பலரும் பயன்படுத்தியுள்ளனர். நான் மட்டுமில்லை. உ-ம்: பாரதியார் ஒளிவேகம் கணக்கிடலில் 1 யோசனை = 1 காதம் எனப் பயன்படுதியுள்ளது காட்டியுள்ளேன்.
படித்துப் பார்க்கவும். தமிழ்ச் சமணர்கள், 1 யோசனை = 40 மைல் (= 4 காதம்) எனக் கொண்டுள்ளனர் - தமிழ் அகராதிகளிலும், ஒலியியல் விஞ்ஞானம் காட்டுவதும் விரிவாக எழுதியுள்ளேன்.
நீங்கள் எழுதியதை அவ்விழையிலேயே பலமுறை மறுத்துள்ளேன். நீங்கள் ஏற்பதாகத் தெரியவில்லை. யோசனை 10 மைல் என்பதையே விடாப்பிடியாகப் பிடிக்கின்றீர்கள் ஏனெனத் தெரியவில்லை.
 http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_2/20005a5e_93.pdf
ஆரியபட்டாவின் படி
புவி விட்டம் : 1050 யோசனை
சூரியனின் விட்டம் :  4410 யோசனை

இதனைத் தற்போதைய அளவுகளுக்கு மாற்றினால்,

புவி விட்டம் : 1050 யோசனை = 7918 மைல் : 1 யோசனை = 7.5 மைல்
சூரியனின் விட்டம் :  4410 யோசனை = 864,575 மைல் : 1 யோசனை = 196 மைல்

இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?



The Yojana calculation as 196 miles is obviously wrong. You can see the Verses of different Lokas
in MerumantirapuraaNam, Milky Ocean's dimensions given by Pillaiperumal Iyengar, .... 
They are all exaggerations. 
 
 

வடபெருங்கோடு = குடமலை, குடநாட்டு மலைகள். பலரும் எழுதியுள்ளனர் என்பதைக் கொடுத்துள்ளேன். வடபெருங்கோடு, வடபெருங்கல் எல்லாம் ஸ்டாக் ஃப்ரேஸஸ்.
இல்லை ஐயா. பாவாணர் கூறியதிலிருந்து தான் நீங்கள் முடிவெடுக்கின்றீர்கள். வடபெருங்கோடு = வடபெருங்கல் என நீங்கள் எடுக்கின்றீர்கள். இடத்திற்குத் தகுந்த பொருள் கொள்ளவில்லை. பாவாணர் கூறியற்கு இலக்கிய ஆதாரங்களில்லை. வடபெரும்கோடு/வடபெருங்கல்/வடபெருங்கயிலை/வடபெருங்குன்று/வடபெரும்பனிமலை என்பன வெவ்வேறு. நீங்கள் அதனை ஒன்றாக எடுக்கின்றீர்கள்.
வடபெருங்கயிலை : இமயம் எனின் கவுந்தி இருந்தது இமயமலையிலா?
https://groups.google.com/forum/#!msg/minTamil/mMOicRCiEB0/nRpfqw7YBgAJ


In the Himalayas, does Kaveri river flow? Ilango AdikaL specifically says he is singing the whole country from origin to dissolution in the sea of Kaveri river. 

We have the distance of where Kavundi AdikaL lived clearly mentioned. Also, see the epigraphic evidence of the name, Gavundi, the name of Jaina lady in Karnataka
 

மணிபல்லவம் என்பது ஒரு கற்பனையூர் 400 யோசனை தொலைவில் பூம்புகாரினின்றும் இருப்பது என்கிறது மணிமேகலை.இதனை நீங்கள் எந்த ஊர் என்கிறீர்கள்? இலங்கையா? நிச்சயமாக இல்லை.
வேறொரு இழையில் இதுபற்றி எழுதுகின்றேன். மணிபல்லவம் புகாரிலிருந்து 30 யோசனை தூரம். நீங்கள் யோசனை = 10 மைல் என எடுத்துக்கொண்டு அது கற்பனை என்கின்றீர்கள்.


இலக்கியங்கள் பல செய்திகளைச் சேர்த்துச் சொல்பவை. 20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள்
இளங்கோ அடிகள் குறிப்பிடும் காவிரி பாயும் நாட்டில் பாதியை விட்டுவிட்டனர்.

அடியார்க்கு நல்லாரும் விட்டுவிட்டாரா?


Cilappathikaram is a historical novel of about 15 centuries old, it is funny to read North Indian invasion etc.,
and Iraamaki dates it to First century BCE!  

You saw Mukundan's Irungadal and Perungadal picture:

Note that Mukundan left together the North direction totally, but the original Cilappatikaram mentions it as Vada Perum Kodu,
"vaDa perum" is a stock phrase usually for mountains North of Tamil country.

இராம.கி ஐயா சிலம்பின் காலம் என ஒரு புத்தகம் எழுதியவர். நீங்கள் சிலம்பு 5ம் நூற்றாண்டு எனக் கருதினால் அவரது ஆய்வுக் கருத்துக்களுக்குப் பதில் கூறலாமே? அதை விடுத்து  5ம் நூற்றாண்டு எனத் திரும்பத் திரும்பக் கூறுவது ஏன்?

Nowadays anyone can print from a PDF. It does not mean that Cilambu is First or Second century BCE. The academic consensus is Cilampu is 5th century or later.

I gave you look at the stories in the Cilampu novel about the star Canopus (= Agastya), do these stories make it before majority of Sangam poems, i. e., First century BCE???
 

நானும் ஒரு இழை ஆரம்பித்து சிலம்பு 10ம் நூற்றாண்டு எனக் கூறிவிட்டு, அதனைப் பலரும் மறுத்தாலும் அவர்களின் கருத்தை ஏற்காமல் , பல்வேறு இழைகளில் சிலம்பு 10ம் நூற்றாண்டு எனத் திரும்பத் திரும்பக் கூறினால் அது சரியான முறையா?   நீங்கள் அதனை ஏற்றுகொள்வீர்களா?


You can write anything, just like Iraamaki writes. But I go by academic professors and their reasons. I have not seen any shred of evidence that Cilampu predates ~5th century CE.
 

கணேசன் ஐயா, உங்கள் இழைகளிலிருந்து நிறைய விடயங்களை அறிந்துகொண்டேன். ஆனால் ஏற்கவியலாத சிலவற்றை நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுவது வருத்தமளிக்கின்றது. 


Again, I am convinced of Cilampu's 5th century CE date. And, modern commentators did not understand Naadu KaaN Kaathai singing the Whole of Kaveri country which the author of the epic novel himself clearly says.

N. Ganesan 

Malarvizhi Mangay

unread,
Sep 19, 2016, 9:36:39 AM9/19/16
to mint...@googlegroups.com

ஐயாமாரே! அம்மாமாரே!
இலக்கியம் படிங்க.ரசிங்க! அதுல
சொன்னதெல்லாம் சத்தியம்
சத்தியத்தைத்தவிர வேறில்லை
என்றெண்ணி அதுபோன பாதைல போறேங்கறது அபத்தம்.
அந்த நேரத்துல வேற இலக்கியம்
படிங்க ரசிங்க.கலை கலைக்காகவே!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 19, 2016, 9:38:47 AM9/19/16
to மின்தமிழ்
Thanks for the link. The lawyer might not have read Cilampu at all, may be some Puliyur Kesikan commentary etc., all derive from mid-20th century commentary on Cilampu.

But the epic novel itself says some thing different. Look at the way Ilango aDikaL uses the common epigraphic term, Gavundi  of Karnataka for the Jaina nun as Kavunti (as Tamil script demands).
He mentions VadaperumkoDu - Sahyadri and its distance ~300-360 miles from Mathura, and teaches Jainism in the Western Gangas' region, The Sriranga patna. The commenator clearly
distinguishes between Ciirangam and Trichy's Tiruvarangam, and he plays on the place names. a technique used in GaNDavyUha suutra. I don't think any book like the lawyer's you mention
has compared Cilampu yatra which Ilango aDikaL uses to "uuzh vinai uruttu vantuuTTal" of Jainism, meeting Jaina gods, & the name Kavunti itself is attested scores of times in Karnataka
as Gavundi (& Gavunda), and there is KavuntappaaDi in Kongu country, common names in Karnataka epigraphy. These names are not from Trichy to Poompuhar.

BTW, to make money in Madurai, there are shorter ways from Puhaar. Ilango aDikaL did not choose to take the couple via that way. He shows the entire Kaveri country, and makes them
meet Gavundi (Kavunti) in Karnataka some miles north of Sriranga (patna).

N. Ganesan
 


regards

rnkantan

N. Ganesan

unread,
Sep 19, 2016, 9:55:43 AM9/19/16
to மின்தமிழ், vallamai


On Monday, September 19, 2016 at 6:36:39 AM UTC-7, malarmangay64 wrote:

ஐயாமாரே! அம்மாமாரே!
இலக்கியம் படிங்க.ரசிங்க! அதுல
சொன்னதெல்லாம் சத்தியம்
சத்தியத்தைத்தவிர வேறில்லை
என்றெண்ணி அதுபோன பாதைல போறேங்கறது அபத்தம்.
அந்த நேரத்துல வேற இலக்கியம்
படிங்க ரசிங்க.கலை கலைக்காகவே!


ஆமாம். வடநாட்டில் சம்ஸ்கிருத நூல்களில் ஏரோபிளேன் டெக்னாலஜி என்பது போல,
ஹிண்டுயிஸம் பல நூற்றாண்டுகளாக எந்த ஆதரவும் கொடுக்காத சமண நூல் சிலப்பதிகாரத்தை
1950களில் இருந்து தமிழர் இமயமலை வென்றது, ... போன்ற செய்திகளைக் கதை கட்ட ஆரம்பித்தனர்.

வி. கனகசபைப் பிள்ளை கஜபாஹு ஸின்க்ரானிஸம், எனவே கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என்றார்.
அதனை இ-மெயில்களில் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு என்றும் கங்கைப் படையெடுப்பு, ஹிமாலய வெற்றி
என்று எல்லாம் எழுத ஆரம்பித்தனர். பேரா. பாண்டியராசா அவர்களுக்கு தினமணி கட்டுரையில் 
நெற்குன்றம் வேறு, சாலியூர் என்பது வேறு (கிழக்குக் கடற்கரை)
எனக் குறிப்பிட வி. கனகசபை நூல் ரெஃபெரென்ஸ் கொடுத்தேன். 

கண்டவியூக சூத்திரமோ, அதனைப் பார்த்து பின்னூற்றாண்டுகளில் சமணம் பரப்ப கவுந்தி அடிகள்
(the common epigraphic term in Karnataka, Gavundi) என்ற கதாபாத்ரத்தை தன் alter ego ஆக படைத்துள்ளதோ,
வடபெருங்கோடு என்றும், பொழில்மண்டிலம் என்றும் தூரத்தை 30 காதம் எனக் கொடுத்ததும்
Gavundi என்ற பேரும், காதம் தொலைவும் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியலை.
தெய்வக் காவிரிநாட்டு வளம் முழுதும் பாடுகிறேன் என்று அவரே காவ்யநாவலில் சொல்லியிருந்தாலும்
ஒருவரும் கண்டுக்கலை.

பிழையாக கி.மு. 1-ஆம் நூற்றாண்டு, மணிபல்லவம்-னா சிலோன் (மணிமேகலை), குமரிக்கண்டம்
சிலம்பில் இருக்கிறது, .... என்றல்லவா ஆராய்ச்சிகள் போய்க்கொண்டுள்ளன? 

குமரிக் கண்டம், மதுரை சுனாமி, சிலம்பு கி.மு. 1-ஆம் நூற்றாண்டு, இளங்கோ காவிரி நாடு முழுதும்
பாடுகிறேன் என்று கவுந்தி அடிகள் என்ற பெயரை கர்நாடக கல்வெட்டுகளில் ஏராளமாக இருப்பதைப்
பயன்படுத்துவதை விட்டுவிட்டு திருச்சியோடு நிறுத்துவது ... இவையெல்லாம் அண்மைக்காலத்தில்
நிகழ்வன. இவற்றுக்கும் ~5-ஆம் நூற்றாண்டு நாவலுக்கும் ஒரு தொடர்புமில்லை.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Sep 19, 2016, 10:16:09 AM9/19/16
to மின்தமிழ்


On Monday, September 19, 2016 at 6:24:15 AM UTC-7, selvi...@gmail.com wrote:
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி 
 வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து 

நா கணேசனார்

புகாரில் இருந்து மேற்குத்திசையிலே போய், வட பெருங்கோட்டில் நுழைந்தால் காவிரி உற்பத்தி ஆகும்
மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரும்.

கணேசனார்

திரு கணேசனாருக்கு தன மனதில் வந்து புகுந்துள்ள எண்ணம்தான் சிறப்பு என வாதிடும் போக்கு எப்போதும் போல் இங்கும் தொடர்ந்து வந்து ள்ளது அவ்வளவே

கொண்டு எனும் சொல் புகார்நகரைவிட்டு கிளம்பிய கோவலன் கண்ணகி மேற்குநோக்கி காலடிவைத்து தம்  செலவினை தொடங்கினார்  என்றுதானே பொருள் 
எப்படி பல நூறு கிமீ தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வரை'
எப்படி செலவர் அப்படி அவர்கள் மதுரை இருக்கும் திசை அறியாதவர்களா 

அது சரி வடபெருங்கோடு எது ?? மலர் ப்பொழில்  உடைய வடபெருங்கோடு  மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ளதா 

வட எனும் சொல் ஆலமரத்தை க்குறிக்கும் என முன்பே காட்டினேன்
 பொழில் எனும் அடுத்து வரும்  சொல் அப்போதுதான் சிறப்பான ப்பொருளுடன்  பொருந்து

மேற்கு த் தொடர்ச்சி ம லையில் வடபெருங்கோடு எனும் மலை எப்படி வரும் 

என்னே அறிவுடைமை !!!


அது சரி இதனில் கா தம் பற்றி நா ன் எழுதிய திருநள்ளாற்றுப்புராணத்தை  நுழைக்கப்பார்க்கின்ரீர் 

நீங்கள் திருநள்ளாற்றுப் புராணம் எழுதினீர்களா? 

தீர்த்தம் ஆடலைச் சொல்லும்ப ழைய திருநள்ளாற்றுப் புராணத்தில் உள்ள காதம் என்பதன் தொலைவு
மற்ற தமிழ் நூல்களுடன் ஒத்துவருகின்றன.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 19, 2016, 2:44:51 PM9/19/16
to மின்தமிழ், vallamai


On Monday, September 19, 2016 at 5:31:26 AM UTC-7, nkantan r wrote:

i am not literally inclined or skilled to analyse this thread; but i do remember reading silapadhikaram prose version where i vaguely remember kovalan asking a brahmin about the route and was told about the srirangam (near trichy!) and not near mysore.  this was my impression and i never had an idea that kovalan traversed into kannada land. 


Kovalam meeting the brahmin at Trichy happens much later and in the next Canto than what I am talking about.

This happens in the next Chapter which is the beginning Chapter in Madurai KaaNDam.
Here the Brahmin from Coorg country (KuDa NaaDu) has already visited Kanyakumari,
Pothikai Hill of Agastya and returning home. On the way back, he meets the
Jaina couple, and their religious teacher, Kavunti aDikaL at VaaraNam (modern Trichy)
and extols both Tiruvarangam and TiruvEngadam.

I've mentioned all this before. In India, there are two major modes
of ThuRavu renunciation. One is Brahmanical, while the other is Shramanical.
In the PuRanAnURu anthology, both modes of renunication is represented
by one poem each (tho' people have not yet written about it). Same thing
is done in the epic novel by Ilango aDikaL, the Shrmanic mode is represented
by Kavundi aDikaL - the epic author chooses the name carefully, Gavundi/Gaavundi,
a term used in Karnataka inscriptions scores of times. When Kavundi travels
along with the couple, whom she calls as her own children to a harlot and vaRumozi fellow.
This name and her calling her disciples as children has VELAN vedam's poem:
"pal AvuL uyttu viDinum kuzak kanRu vallatAm tAy nADik kODal".
In the next Canto, Ilango aDikaL brings in the Brahmanic mode of renunciation
and going on a pilgrimage to Theerthams. The brahmin mentions Tiruvarangam Seshasayee
and TiruvEngaDavan (as having both chakra and conch) - probably the Varaha murthy
as that region is famous for this form of Vishnu.

On the two modes of renunciation in PuRam, and later in Ilango's epic,
I suggest reading the publications from Prof. Johannes Bronkhorst.
It is noteworthy that Kavundi (Gavundi in Kannada inscriptions) aDikaL, as well as
the KuDa nATTu brahmin bith come from around the same place. i.e., Karnataka,
specifically Coorg area.

Sincerely,
N. Ganesan

 

தேமொழி

unread,
Sep 20, 2016, 2:07:08 AM9/20/16
to மின்தமிழ்
கோவலன் கண்ணகி பயணத் துவக்கம்...

புகார் காண்டம்......விவாதத்திற்குரிய / விவாதிக்கப்படும் வரிகள்.  



புகார்க் காண்டம்
10. நாடுகாண் காதை

ந.மு.வேங்கடசாமி நாட்டார் - உரை 


அதிகாலைப்பொழுதில் கண்ணகியும் கோவலனும் பூம்புகாரில் இருந்து  வெளியேறுகிறார்கள்...
[அடைப்புக்குறிக்குள் வரி எண்கள்]

வரி  28 இல்  ... ஊர் கோட்டை மதிலுக்கு வெளியே, ஊர்வாயிலை கடந்து  பயணம் துவக்கம் 

[28-31 - காவல் காடு கடகிறார்கள் ]

கலையிலாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும்,
பல் மலர் அடுக்கிய, நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகி-
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,


[34-37 ஊருக்கு வெளியே "ஒரு காவதம்" கடந்த பின்னர் கவுந்தியை சந்திக்கிறார்கள்]

குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப் 
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-


[கண்ணகியால் நடக்க இயலவில்லை]
ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,


[41-43 மதுரை எவ்வளவு தூரம் - கானகியின் கேள்வி ]
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்; 
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு

(என் விளக்கம் இங்கு ....
இந்த நக்கு...விரக்தி கலந்ததாகவும்  இருக்கலாம்..
கோவலன் தனது  மனதிற்குள் டி எம் எஸ் போல...

ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்
இது காலதேவனின் கலக்கம்
ஹ..ஹ..ஹ..ஹ..
என்ற விரக்திச் சிரிப்புடன்...
இதோ ஆறு ஐந்து காதத்தில் வந்துவிடும் என்றும் தேற்றி இருக்கலாம் 
இதோ  பக்கம்தான் அஞ்சாறு மைல்தான் என்பது போல...

அல்லது ...

கண்ணகியின் அறியாமையைக் கண்டு வியந்து எள்ளி நகையாடி அதற்கு ஆறு x ஐந்து = 30 காதம் அல்லவா  போகவேண்டும் என்றும் சொல்லியிருக்கலாம், இதை எப்படியோ கண்ணகி தனக்கு விளங்கும் வகையில்  புரிந்து கொள்ளட்டும் என்று நினைத்திருக்கலாம்..
செய்யக் கூடிய ஆள்தான் அவன் )


கவுந்தியின் பள்ளியை அடைந்து,  கவுந்தியை சந்திக்கிறார்கள்..  யார் நீங்கள், பெரிய இடத்துப் பிள்ளைகள் போலிருக்கிறீர்களே எங்கு வந்தீர்கள் என கவுந்தி கேட்கிறார் ... 
மதுரை போகிறோம் அவ்வளவுதான் சொல்வதற்கு இருக்கிறது என்பது கோவலன் பதில்.
கவுந்திக்கு கண்ணகியால் பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை, 
தடுக்கிறார்.

[52-55]
‘பாடகச் சீறடி பரல் பகை உழவா;  (கண்ணகியால் நடக்க இயலாது)
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு
அரிது; இவள் செவ்வி அறிகுநர் யாரோ?
“உரியது அன்று; ஈங்கு ஒழிக” என, ஒழியீர்;

அவர்கள் சொல்வதைக் கேட்பதாக இல்லை என்று தெரிந்ததும்...
சொன்னால் கேட்பதாக  இல்லையே நீங்கள்...நானும் மதுரை போகும் திட்டத்தில் இருக்கிறேன், சேர்ந்தே போவோம் என்கிறார், 


[56-60]
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்
அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த,
தென் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்,
போதுவல் யானும்; போதுமின்’

கோவலன் நன்றி சொல்கிறான். 

ஆக, கவுந்தியின் கவலையெல்லாம் கண்ணகி பற்றியதே. 


பிறகு கண்ணகியால் சோலை, தோட்டம், துரவு, வயல், வரப்பு, வாய்க்கால் வழியாக நடக்க இயலாதது என்று கூறி ..
"சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி"....
"வாய்க்கால் - வயல் வரப்புகளின்  வழி"...
சரியல்லவென்று 
கவுந்தி கண்ணகிக்கு ஏற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்கிறார்- பயண வழி கவுந்தியின் தேர்வு பார்க்க வரிகள் 61 - 101]



பயணம் பலநாட்கள் தொடர்கிறது, சோழநாட்டின் வளம் காண்பிக்கப்படுகிறது. காவிரியின்   வடகரையின் வழியே பல ஊர்களைக் கடக்கிறார்கள் 

[102-157 ஒருநாளில் ஒரு காத தூரமல்லது நடக்கமுடியாதவராய், பல நாட்கள் தங்கிச் செல்லுகின்ற நாளில் ஒருநாள்  ஆற்றிடையே உள்ள அரங்க நகர் வருகிறார்கள்]

[150-157]
உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையிற் றோன்றும்
ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு
காவத மல்லது கடவா ராகிப்
பன்னாட் டங்கிச் சென்னா ளொருநாள்
ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,

பிறகு சாரணருடன்  சந்திப்பு நடக்கிறது  ... 
காவிரி ஆற்றைக்கடந்து தென்கரை வருகிறார்கள்.

[214-218]
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,

இடையில் வம்பர்கள் கேலி செய்து கவுந்தியிடம் சாபம் பெறுகிறார்கள்,
(இன்றைய திருச்சியில் இவர்கள் போன்ற வம்பர்கள் கிடையாது என்பது என் எண்ணம்)
 பிறகு மூவரும்  உறையூர் அடைகிறார்கள்.  


[246-248]
காவுந்திஐயையும், தேவியும், கணவனும்,
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என்.
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-

==================================================================

பூம்புகார் >>> உறையூர் வழி...இன்றும் ஸ்டேட் ஹைவேதான்   (SH-22) 

[வழியில் கரிகாலன் கட்டிய கல்லணை பற்றிய குறிப்பு ஏதும்  பாடலில்  இல்லை, அப்பொழுது கல்லணை இருந்ததா? இருந்தும் குறிப்பிடவில்லையா ?]

State Highway (SH-22) connects Kallanai(Grant Anaicut) with Poompuhar. Total length of SH-22 is 98 km.

படத்தில் காட்டியபடி  பூம்புகார் புறநகரில் இருந்து கொடும்பாளூர் புறநகர் வரை இன்றைய 
அளவில் தொலைவு  105.00 mi (168.98 km)

கொடும்பாளூருக்கு சற்று வடக்கில்  விராலிமலையில் மதுரை செல்ல மூன்று வழிகள் பிரிகிறது ...

நேர் தெற்கில் >>> கொடும்பாளூர் வழியாக மதுரை செல்லும் வழி 
இன்றைய National Highway 38 (NH 38) வழி 

மேற்கில் >>>மணப்பாறை ... திண்டுக்கல்  வழியாக மதுரை செல்ல
இன்றைய National Highway 83(NH 83) வழி 

கிழக்கில் >>>தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரை  செல்லும் வழி 
இன்றைய National Highway 36 (NH 36) வழி 


தொலைவை மட்டுமே வைத்து முடிவெடுக்க நினைத்தால்...
  • கோவலன் உண்மை சொன்னானா .... தெரியாது.
  • அவன் மனதில் இருந்த வழியின் தொலைவு 30 காதமென இருக்கலாம்
  • ஆனால் கவுந்தியை சந்தித்த பிறகு அவர் கவலையெல்லாம் கண்ணகிக்கு ஏற்ற வழியைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே  


Mukunthan Pathmanesan

unread,
Sep 20, 2016, 2:35:49 AM9/20/16
to mint...@googlegroups.com
காடுகாண் காதை ஆரம்பத்தில் புகார்க் காண்ட இறுதியில் வரும் நிகழ்வுகளின்  பொழிப்பைக் கூறுவதைப் பாருங்கள்.
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,

சாரணர் வருகை அன்று இரவு அரங்கத்தில் தங்கி விடியலில் உறையூர் (வாரணம்) கடக்கின்றனர்.. நீங்கள் கூறுவது போல அது சீரங்கப்பட்டினம்  எனின் அது சாத்தியமா?


Here it is just a recollection and repeating of events of what happened in Sriranga Pattinam.
Such a great event of meeting Jaina deities, Andha ChaaraNar has happened few days earlier,
and the Mantras told then are recollected and retold.
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
அன்று அவர் உறைவிடத்தில் தங்கி விடியலில் வாரணம் கழிந்து என மிகத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதையும் நீங்கள் சில நாள் முன்பு என எப்படித்தான் எடுத்துக்கொள்கின்றீர்களோ தெரியவில்லை.


The Yojana calculation as 196 miles is obviously wrong. You can see the Verses of different Lokas
in MerumantirapuraaNam, Milky Ocean's dimensions given by Pillaiperumal Iyengar, .... 
They are all exaggerations.
சாயனர் சொன்னால் சரி, ஆரியபட்டா சொன்னால் பிழையா?

Ilango AdikaL specifically says he is singing the whole country from origin to dissolution in the sea of Kaveri river. 

இதற்கான வரிகளைத் தரமுடியுமா?


திருவரங்கம் வேறு, சீரங்கம் வேறு. இதனை அரும்பதவுரையாசிரியர் உரையில் பார்க்கலாம்.​
உங்களிடம் இருக்கின்றதா? அவர் கூறிய வரிகளை இங்கே குறிப்பிடமுடியுமா? இணைப்பு அல்லது நூலின் பெயர் தரமுடியுமா? (அல்லது அடியார்க்கு நல்லார் கூறியதையா கூறுகின்றீர்கள்)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Mukunthan Pathmanesan

unread,
Sep 22, 2016, 7:09:43 AM9/22/16
to mint...@googlegroups.com

2016-09-19 1:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆனால், சிலம்பில் அடிகள் சமண சமயம் போதிக்க அது தழைத்து வாழும் தழைக்காடு, சீரங்கம் (திருவரங்கம் அன்று),
அதற்கும் வடக்கே சென்று தன் நாவலில் கவுந்தி அடிகளைச் சந்திக்கவைக்கிறார்.

அடியார்க்கு நல்லார் திருவரங்கம் , சீரங்கம் என ஒரே இடத்தைத் தான் குறிப்பிடுகின்றார். (அது சீரங்கப்பட்டனம் அல்ல)







Mukunthan Pathmanesan

unread,
Sep 22, 2016, 7:21:26 AM9/22/16
to mint...@googlegroups.com










iraamaki

unread,
Sep 22, 2016, 7:54:12 AM9/22/16
to mint...@googlegroups.com
நா.கணேசனைக் காட்டிலும், அடியார்க்கு நல்லாருக்குச் செயினம் தெரியுமோ?  நா.க. சொல்லிவிட்டால், அப்புறம் மறுபேச்சில்லை. அது சீரங்கப்பட்டினமே தான். திருவரங்கமல்ல. இனி எல்லோரும் கப்சிப்பென்று அடங்குவதே நல்லது. Smile))))))))) எவ்வளவு சான்றுகளைக் கொண்டுவந்து இங்கு கொட்டிச் சீரங்கப் பட்டினமென நிறுவியிருக்கிறார். மீண்டும் நீங்கள் திருவரங்கம் என்கிறீர்களே?
 
”கத்தோலிக்க குருமாருக்கு முன்னால் கலீலியோ” என்ற நினைப்போ?
உலகம் தட்டைதான். உருண்டையேயல்ல.
பெரியவர் சொல்லிவிட்டார்.
 
அன்புடன்,
இராம.கி.










 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/rhSmkgQEI70/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
 
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
wlEmoticon-smile[1].png
3.jpg
4.jpg
5.jpg

N. Ganesan

unread,
Sep 22, 2016, 8:42:38 AM9/22/16
to மின்தமிழ்


On Thursday, September 22, 2016 at 4:09:43 AM UTC-7, mukunthan wrote:

2016-09-19 1:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆனால், சிலம்பில் அடிகள் சமண சமயம் போதிக்க அது தழைத்து வாழும் தழைக்காடு, சீரங்கம் (திருவரங்கம் அன்று),
அதற்கும் வடக்கே சென்று தன் நாவலில் கவுந்தி அடிகளைச் சந்திக்கவைக்கிறார்.

அடியார்க்கு நல்லார் திருவரங்கம் , சீரங்கம் என ஒரே இடத்தைத் தான் குறிப்பிடுகின்றார். (அது சீரங்கப்பட்டனம் அல்ல)

சீரங்கம் வேறு; திருவரங்கம் வேறு. இதனைத் தெளிவாகப் பழைய உரைகாரர் குறிப்பிட்டுள்ளனர்.

வடவேங்கடம் வேறு, திருவேங்கடம் வேறு என்பது போல.

நா. கணேசன் 

Mukunthan Pathmanesan

unread,
Sep 23, 2016, 3:16:15 AM9/23/16
to mint...@googlegroups.com
பழைய உரைகாரர் குறியதை இணைத்திருந்தேனே.. பார்க்கவில்லையா

--

N. Ganesan

unread,
Sep 23, 2016, 9:00:30 AM9/23/16
to மின்தமிழ்
2016-09-23 0:15 GMT-07:00 Mukunthan Pathmanesan <muku...@gmail.com>:
பழைய உரைகாரர் குறியதை இணைத்திருந்தேனே.. பார்க்கவில்லையா

பழய உரைகாரர் குறியதை படித்துதானே எழுதியிருக்கிறேன்.
 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages