632 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கொலோன் (Cologne/Koln) மாதாகோயில்
கட்டி முடிக்கப்பட்ட தினம். அந்த நிகழ்வை தேசீய விழாவாக ஜெர்மானியர்கள்
கொண்டாடினர். மாமன்னன் வில்லியம் I வந்து சிறப்பித்தார். உலக புகழ் பெற்ற
இந்த கதீட்ரலை 1990ல் கண்டு, அங்கு தொழுது, மகிழ்ந்தோம். எல்லாரையும் போல
குயில் கடியாரமும், இ-டி-கொலோனும் வாங்கி வந்தோம்.
இந்த வானளாவிய கதீட்ரல், இரண்டாம் உலக யுத்தத்தின் போது, பிரிட்டீஷ்
விமானப்படையால் தாக்குண்டு, சிறிதளவு பழுதடைந்தது. அதன் உயரமே, அடையாளம்
காட்டி, அதை பாதுகாத்தது எனலாம் யுத்தம் முடிந்த பிறகு, அந்தப்படையை
சேர்ந்த வீரர்கள், சொத்தப்பணம் போட்டு,நிதி திரட்டி, அதை புனர்நிர்மாணம்
செய்தார்கள்.
ஆகஸ்ட் 14, 1947: பாகிஸ்தான் பிறந்த தினம்.
இன்னம்பூரான்
அடடா! அப்படியா?
அங்கு நம் சுபாவிற்கு மாதா ஒரு மேஜிக் காட்டியது தெரியுமோ?
நானும் சுபாவும் அங்கு போய் தரிசித்துவிட்டுத் திரும்பிய போது
வாசற்கதவைத் தாண்டியவுடன் சுபாவின் கைகளிலிருந்து ஒரு மலர் வந்தது :-))
எப்படி வந்தது என்று இன்னும்தான் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன்!
> ஆகஸ்ட் 14, 1947: பாகிஸ்தான் பிறந்த தினம்.
>
கெட்ட விஷயங்களை ஏன் நினைவு படுத்துகிறீர்கள்? :-(
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
புணரமைப்பு அல்ல புனரமைப்பு:)
ஆகஸ்ட் 17, 1945
Proklamasi! என்ற சொல், இந்தோனேஷியாவின் தாரக மந்திரம்.
“Kami, bangsa Indonesia, dengan ini menjatakan kemerdekaan Indonesia.
Hal-hal jang mengenai pemindahan kekoeasaan d.l.l., diselenggarakan dengan tjara saksama dan dalam tempo jang sesingkat-singkatnja.
Djakarta, hari 17 boelan 8 tahoen 05
Atas nama bangsa Indonesia
<<tanda tangan Soekarno/Hatta>>
Soekarno - Hatta”
{PROCLAMATION}
WE THE PEOPLE OF INDONESIA HEREBY DECLARE THE INDEPENDENCE OF
INDONESIA. MATTERS WHICH CONCERN THE TRANSFER OF POWER AND
OTHER THINGS WILL BE EXECUTED BY CAREFUL MEANS AND IN THE
SHORTEST POSSIBLE TIME.
DJAKARTA, 17 AUGUST 1945
IN THE NAME OF THE PEOPLE OF INDONESIA
SOEKARNO—HATTA}
[இணைக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விலக்கிக்கொள்ளப்பட்டது]
டச்சுக்காரர்களின் கலோனிய ஆட்சியை எதிர்த்து, ராஜதந்தரமும், வன்முறையும் கலந்த புரட்சி எழுந்த நாள். விடுதலை கிடைக்க நான்கு வருடங்கள் பிடித்தன. 2005ம் வருடம், டச்சு அரசே, இந்த நாளை, இந்தோனேஷியாவின் சுதந்திரநாள் என அறிவித்தது. இந்தோனேஷியாவின் முதல் ஜனாதிபதி ஸுகர்ணோ அவர்களுக்கு, பெயர், வடமொழியில்! அந்த அளவுக்கு, இந்தியாவின் தாக்கம். சுதந்திர போராட்டத்தின் போது, சுகர்ணோ அவர்கள், தப்பி ஓட வேண்டிருந்தது, ஒரு தனி விமானத்தில். மறைமுக உதவி, நேரு. விமான ஓட்டி, பிஜூ பட்னாய்க். [பிற்கால முதல்வர், ஒரிஸ்ஸா.]
ஆகஸ்ட் 17, 1947:
சர்ச்சைக்குரிய, ராட்க்லிஃப் தீர்வு, அள்ளித்தெளித்த கோலமாக, இந்தியா - பாகிஸ்தான் எல்லை வகுத்தது, மேற்கு திசையில். அதன் பலனை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆகஸ்ட் 17, 1982:
ஜெர்மனியில் வெளிவந்தது, முதல் சீ.டீ.
இன்னம்பூரான்
“ ஞானம் நாடும் போது, வன்முறை உதவாது.”
பிரம்மகுமாரி நாட்காட்டி: 17 08 2010
ஆகஸ்ட் 17, 1945
Proklamasi! என்ற சொல், இந்தோனேஷியாவின் தாரக மந்திரம்.
“Kami, bangsa Indonesia, dengan ini menjatakan kemerdekaan Indonesia.
Hal-hal jang (yang) mengenai pemindahan kekoeasaan (kekuasaan) d.l.l., diselenggarakan dengan tjara (cara) saksama dan dalam tempo jang (yang) sesingkat-singkatnja (singkatnya).
Djakarta, hari 17 boelan (bulan) 8 tahoen (tahun) 05
Atas nama bangsa Indonesia
<<tanda tangan Soekarno/Hatta>>
Soekarno - Hatta”
{PROCLAMATION}
WE THE PEOPLE OF INDONESIA HEREBY DECLARE THE INDEPENDENCE OF
INDONESIA. MATTERS WHICH CONCERN THE TRANSFER OF POWER AND
OTHER THINGS WILL BE EXECUTED BY CAREFUL MEANS AND IN THE
SHORTEST POSSIBLE TIME.DJAKARTA, 17 AUGUST 1945
IN THE NAME OF THE PEOPLE OF INDONESIA
SOEKARNO—HATTA}
[இணைக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விலக்கிக்கொள்ளப்பட்டது]
டச்சுக்காரர்களின் கலோனிய ஆட்சியை எதிர்த்து, ராஜதந்தரமும், வன்முறையும் கலந்த புரட்சி எழுந்த நாள். விடுதலை கிடைக்க நான்கு வருடங்கள் பிடித்தன. 2005ம் வருடம், டச்சு அரசே, இந்த நாளை, இந்தோனேஷியாவின் சுதந்திரநாள் என அறிவித்தது. இந்தோனேஷியாவின் முதல் ஜனாதிபதி ஸுகர்ணோ அவர்களுக்கு, பெயர், வடமொழியில்! அந்த அளவுக்கு, இந்தியாவின் தாக்கம். சுதந்திர போராட்டத்தின் போது, சுகர்ணோ அவர்கள், தப்பி ஓட வேண்டிருந்தது, ஒரு தனி விமானத்தில். மறைமுக உதவி, நேரு. விமான ஓட்டி, பிஜூ பட்னாய்க். [பிற்கால முதல்வர், ஒரிஸ்ஸா.]
ஆகஸ்ட் 17, 1947:
சர்ச்சைக்குரிய, ராட்க்லிஃப் தீர்வு, அள்ளித்தெளித்த கோலமாக, இந்தியா - பாகிஸ்தான் எல்லை வகுத்தது, மேற்கு திசையில். அதன் பலனை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆகஸ்ட் 17, 1982:
ஜெர்மனியில் வெளிவந்தது, முதல் சீ.டீ.
இன்னம்பூரான்
“ ஞானம் நாடும் போது, வன்முறை உதவாது.”
பிரம்மகுமாரி நாட்காட்டி: 17 08 2010
2010/8/16 Innamburan Innamburan <innam...@googlemail.com>
ஆகஸ்ட் 15, 1947: இந்தியா விடுதலை அடைந்த தினம். 'இன்றைய தினம் ஸ்பெஷல் எடிஷன்' பார்க்கவும்.
ஆகஸ்ட் 18, 1920 :
பெண்பாலோருக்கு உரிமைகள் கொடுப்பது என்றால், ஆண்பாலோர்களில் பலருக்கு ஒவ்வாமை. அவர்கள் தான் முழநீளம் பேசுவார்கள், இல்லறத்தில் இற்செறிக்கப்பட்டதால். இந்தியாவில் பெண்ணியம் தலையெடுத்தது, வங்காளத்தில், ராஜா ராம் மோஹன் ராய். சென்னை மாகாணத்தில், ஜி.சுப்ரமண்ய அய்யர். இன்று வரை, நாடாளுமன்றத்தில், பெண்பாலோருக்கு அதிக இடம் கொடுப்பது பற்றி இழுபறி. மேதகு (!) அமெரிக்காவில், பெண்பாலோருக்கு வாக்குரிமை 1920 வரை இல்லை. இரண்டு வருட இழுபறிக்குப்பின், அதுவும்:
சாஸனம் கீழே. [காப்புரிமை கிடையாது]
ஆகஸ்ட் 18, 1997 :
77 வருடங்கள் கடந்த பின் ஒரு பெண்ணால், விர்ஜீனியா ராணுவ கல்லூரியில் இடம் பிடிக்க முடிந்தது. இந்தியா பரவாயில்லை எனலாம்.
“சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் மனிதன் சோம்பேறியல்ல. உழைப்பு புலன் படலாம், படாமலும் இருக்கலாம்.”
- விக்டர் ஹ்யூகோ
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 19, 1934 :
‘சிறு துளி பெருவெள்ளம்’. அன்னை காவேரியின் பிரவாகமாக பயணித்து, ஸர் ஹென்றி காட்டான் அமைத்த தஞ்சை டெல்டாவில் பாய்ந்து, வாடிய பயிர்களை உயிர்ப்பிக்கலாம். அல்லது சங்கமம் பிரவேசித்து சுனாமியாக ஆவேசம் கொண்டு, மூரி நிமிந்து, முழங்கி புறப்பட்டு பாழ் படுத்தலாம், மக்கள் சக்தி கொடுங்கோலர்களை ஆதரித்தது போல. இன்றைய தினம் வன்முறை பிரசாரத்தினால் மதி இழந்தோ அல்லது அரசியல் வஞ்சகத்தாலோ. ஜெர்மானியர் ஹிட்லரை சர்வாதிகாரியாக தேர்ந்தெடுத்தார்கள் - உலகப்போர், சர்வநாசம், பல்லாயிரமக்கள் சாவு. ஆனால், ஜெர்மனி நாடு புத்துயிர் பெற்று, கிழக்கும், மேற்கும் இணைந்து, தற்காலம் வளமுடன் வாழ்கிறது. அதுவும் மக்கள் சக்தி தான். அன்று ந்யூ யார்க் டைம்ஸ் கொடுத்தக் கணக்கு:45 மிலியன் வாக்காளர்களில், 43,438,378 பேர்கள் வாக்களிக்க, 38,279,514 பேர்கள் ‘ஆமாம்’ போட்டாலும், மனசாட்சியை மதித்து, 4, 287, 808 பேர்கள் ‘இல்லை’ என்றார்கள்.871,056 வாக்குக்கள் செல்லுபடி ஆகாமல் செய்யப்பட்டன. எந்த அளவுக்கு, ஆளுமை படைத்தவர்கள் மக்களை ஆட்டிப்படைக்கமுடியும் என்பதை சுட்டவே, துல்லிய கணக்கு. நமக்கும் ஒரு படிப்பினை.
ஆகஸ்ட் 19, 1989 :
55 வருடங்கள் கடந்த பிறகே, இதே தினத்தில், கிழக்கும், மேற்கும் இணையத் தொடங்கி, ஜெர்மனிக்கு நல்லகாலம் பிறந்தது.
“ ஆளும் சக்தியை தீ என்க. அருகில் சென்றால் பொசுக்கும்; முற்றும் விலகினால், உறைந்து போவீர்கள்.” - டயோஜினஸ்: கிரேக்க ஞானி [412 கி.மு.? - 323 கி.மு.]
இன்னம்பூரான்
விட்டுப்போன சேதி. நான் ஜெர்மனி போனதினால்தான் இரண்டும் சேர்ந்தது.
கார்பசேவ் எல்லோருக்கும் தெரியும். என்னைத் தெரியுமோ? :-))
நான் ஜெர்மனியில் வேலைக்குச் சேர்ந்தது ஜூன். ஆகஸ்டில் கிழக்கும்,
மேற்கும் சேர்ந்துவிட்டது. அங்கு போய், நம் கணக்கிற்கு சுவரை
இடித்துவிட்டு வந்தேன்! ;-)
க.>
On 19 Aug, 17:21, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/8/19 Innamburan Innamburan <innambu...@googlemail.com>

ஆகஸ்ட் 20, 1858 :
விஞ்ஞான உலகில் புரட்சிகரமான வரவு சார்லஸ் டார்வின்னின் உயிரினத்தோற்றத்தை/ வளர்ச்சியை பற்றி , ‘survival of the fittest’ கொள்கை, பல ஆண்டுகள் ஆய்வு செய்த பின். ஒவ்வாரு இனமும், தன்னுள் போட்டியிட்டு, அதில் பிழைத்தெழுந்தவர்கள் மட்டுமே இனம் பெருக்க இயலும் என்பது அந்த கோட்பாடு. அதே வருடம், ஆல்ஃப்ரெட் வாலேஸ் என்பவரும், அதே கோட்பாட்டை, சற்றே மாற்றிக் கூறினார், விதவிதமான இனங்களின் மேல், சூழலின் தாக்கத்திற்கு அழூத்தும் கொடுத்து.
ஆகஸ்ட் 20, 1940 :
ஆளுமைத்திறனில் நிகரற்றவரான இங்கிலாந்த்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அந்த நாட்டு விமானப்படையை புகழ்ந்து இன்றைய தினம் கூறிய வசனம், இன்றைய மேற்க்கோள். அந்த விமானப்படையின் அருமை, பெருமைகளை அறிய எனக்கு ஒரு நேரடி வாய்ப்பு கிடைத்தது. இந்திய விமானப்படையை தயார் செய்ததிலும், மரபுகளை அளித்ததிலும், அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு.
ஆகஸ்ட் 20, 1991:
'மூன்று நாள் சூழ்ச்சி' ஸோவியட் ரஷ்யாவில் - ஆகஸ்ட் 19, 20, 21.- ஆகஸ்ட் 20 முக்யதினம். புரட்சி ‘தோல்வியுற்று’ போனாலும், சோவியட் ரஷ்யாவும், கம்பூனீஸமும் அழிவதற்கு, வித்திட்டது. ஆட்சியில் இருந்த கார்ப்பச்சோவ்வும் இறங்கிப்போய்விட்டதற்கு வைழி வகுத்ததது, இந்த புரட்சித்தனமான சூழ்ச்சி.
ஆகஸ்ட் 20, 2010
வரலக்ஷ்மி விரதம்.
விரிவான தகவல் உபயம்: திருமதி. ஸ்வர்ணலக்ஷ்மி.
“ ‘மானிட இனத்தின் அமர்க்களம்’ என்பதின் வரலாற்றில் என்றும் காணாத வகையில், மிக சிறுபான்மையோருக்கு (ஆர்.ஏ.ஃப்.) மிக அதிக பெரும்பாலோர் கடன் பட்டுள்ளனர்.”
வின்ஸ்டன் சர்ச்சில்
விட்டுப்போனதை, மரியாதையுடன், உரைப்பது தான் பண்பு.
தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த நாள். சட்டசபையில் ஆங்கிலேய
உறுப்பினர்கள் பயந்த இந்தியர் களில், ஸர் அஷுடோஷ் முகர்ஜியும்,
சத்யமூர்த்தியும் அடங்குவர். பெருந்தலைவர் காமராஜின் ஆசான்.
நாட்டுப்பற்று மிகுந்தவர். சென்னை மேயராக இருந்தபோது, தீர்க்கதரிசியாக,
பூண்டி நீர்த்தேக்கம் நிறுவியவர். தேவதாசி வழக்கத்தை ஒழிக்கவேண்டும் என
டா. முத்துலக்ஷ்மி ரெட்டி கொணர்ந்த தீர்மானத்தை, கர்நாடக பண்பு தன்னை
விட்டு விலகாததால், எதிர்த்து வாங்கிக்கட்டிக்கொண்டார். ஒரு ஆசைகள்
நிறைவேறாமல், மறைந்த மாமனிதன். 1. இந்தியாவின் விடுதலை; 2.அருமை பெண்
லக்ஷ்மியின் திருமணம். திருமதி.லக்ஷ்மி தான் வாசகர் வட்டம் நிறுவியவர்.
பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு பயிற்சி அளித்தார். திரு.நரசய்யா சமீபத்தில்
மறைந்த இவரை, என்னை விட நன்கு அறிந்தவர்.
இன்னம்பூரான்
2010/8/20 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> ஆகஸ்ட் 20, 1858 :
ஆகஸ்ட் 21, 1959 :
1893ல் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட ஹவாய், அமெரிக்கவின் 50 வந்த் மாநிலமாக, அதிபர் ஐஸன்ஹோவரால் பிரகடனம்.
அந்த வன்முறை கிளப்பிய பயம். இன்றளவும் தமிழகத்தில் நிழலாடுகிறது.
செம்மொழி மாநாட்டின் போது அது பூதாகார வடிவெடுத்து எல்லோரையும்
சிரமத்தில் ஆழ்த்தியது. தமிழ் மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தின் வித்து
அந்நிகழ்வு.
க.>
ஆகஸ்ட் 22, 1631 :
சென்னை மாநகரம் பிறந்த நாள். நாயக்கமன்னர்களிடம் துண்டு நிலம் வாங்கிய ப்ரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி, வாமன அவதாரம் போல, நம் தலையிலேயே கை வைத்தது. மேலதிக விவரங்களுக்கு, மின் தமிழர் திரு. நரசய்யாவின் ‘மதராச பட்டினம்’ படிக்கவும். அப்பெயரை கொண்ட சினிமாக்கதை எடுத்த கதை வேறு.
ஆகஸ்ட் 22, 1904 :
1977லிருந்து தன் மறைவு வரை 27 ஆண்டுகள் சைனா மீது ஆதிக்கம் செலுத்தி, சீர்த்திருத்தங்களை கொணர்ந்த சீன பெரும்தலைவர் டெங் க்ஸ்யாபிங்க் (உச்சரிப்பு மாறலாம், சைனாவிலேயே!) பிறந்த தினம்.
ஆகஸ்ட் 22, 1971 :
அமெரிக்காவின் உளவுத்துறையின் (எஃப்.பீ. ஐ) தலைவர் எட்கர் ஹூவர் பழி வாங்குவதிலும், வழக்கு ஜோடனை செய்வதிலும் மன்னர். ‘காம்டென் 28’ என்ற குழுவை கைது செய்து வியட்னாம் போரை எதிர்ப்பவர்களை முடக்குவதில் முனைந்தார். 20.05.1973 அன்று, இவரின் ஜோடனை வழக்கு நீதிமன்றத்தால் தூக்கி எறியபட்டது. அமெரிக்காவின் வரலாற்றில், சாக்கோ-வான்செட்டி வழக்கைப்போல இது ஒரு கரும்புள்ளி.
ஆகஸ்ட் 22, 1978 :
கென்யாவின் தந்தை எனப்புகழப்படும் ஜோமோ கென்யாட்டா தமது 89 வது வயதில்,
உறக்கத்திலேயே மறைந்தார். உலகளவில் போற்றப்பட்டவர், நேருவைப் போல. அவரது ஆட்சியில் கென்யா கொழித்தது -1963 - 1978.
ஆகஸ்ட் 22, 1996 :
அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன், மிகவும் சர்ச்சைக்குள்ளான ‘மக்கள் நல” சட்டத்தை (The Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 (PRWORA, Pub.L. 104-193, 110 Stat.) கொணர்ந்தார்.
“ பூனை கருப்பா இருந்தா என்ன? வெளுப்பா இருந்தா என்ன? எலியை பிடித்தால் சரி.
-டெங் க்ஸ்யாபிங்க்
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 23, 1914:
ஜப்பான் ஜெர்மனி மேல் போர் தொடுத்து, சைனாவின் க்யிங்க்டோ பகுதி மேல் குண்டு விசியது.
ஆகஸ்ட் 23, 1926:
காதல் மன்னன் ருடால்ஃப் வாலண்டினோ தனது 31வது வயதில் இறந்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் மனம் கலங்கினர்.
ஆகஸ்ட் 23, 1927:
நேற்று தற்செயலாகச் குறிப்பிடப்பட்ட ஃபெர்டினாண்டோ நிக்கொலொ ஸாக்கோவும், பார்தலோமியோ வான்செட்டியும், சர்ச்சைக்கு உட்பட்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு, இத்தினம், மரணதண்டனையால் மின்சாரம் பாய்ச்சப்பட்டு உயிர் துறந்தனர், அமெரிக்காவில். கடைசி வரை அவர்கள் தாங்கள் நிரபராதி என்று வாதாடியும் பயனில்லை. செலஸ்டினோ.எஃப்.மடிரோய்ஸ் என்பவன் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டபோதிலும், பயனில்லை. அவனும் அன்றே, அங்கேயே, வேறு ஒரு கொலைக்குற்றத்திற்காக, மரணதண்டனையால் மின்சாரம் பாய்ச்சப்பட்டு உயிர் துறந்தான். வான்செட்டி, சிறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து, தனக்கு தீங்கு இழைத்தவர்கள்ஐ மன்னித்ததாகக் கூறினான். இந்த நிகழ்வு, சாக்ரட்டீஸ்சின் மரண தண்டனை போல உருக்கமான நிகழ்வு என்று சொல்வதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை. என் சிறுவயதில், இந்த வழக்கைப் பற்றிய புத்தகம் படித்தது நினைவில் இருக்கிறது.
“ மனிதர்கள் யாவரும் - அமெரிக்கனோ, ரஷ்யனோ, சைனாக்காரனோ, பிர்ட்டீக்காரனோ, மலாய்க்கரோ, இந்தியனோ, ஆஃப்பிரிக்கனோ - அவரவது நாட்டு ஆளுமையை கடந்து சென்ரு, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது அவர்களின் கடமை.” (நார்மன் கஸின்ஸ் -எழுத்தாளர், இதழாசிரியர், நிருபர், பேராசிரியர்.[1915-1990]
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 24, 1200 :
இங்கிலாந்தின் ‘தீய’ ஜான் என்ற மன்னன், பிரபுக்களின் கட்டாயத்தினால், முதல் ‘மாக்னா கார்ட்டா’ என்ற அரசியல் சாஸனத்தை பிரகடனம் செய்து விட்டு, போப்பாண்டவரை அதை ரத்து செய்யக்கோரி ‘புண்னியம்’ கட்டிக்கொண்டான். போப்பாண்டவரும் ஒத்து ஊதினார், 15 வருடம் கழித்து.
ஆகஸ்ட் 24, 1591 :
ஆல்புகர்க் என்ற போர்த்துகீசியன் மலாக்காவை கைப்பற்றினான்.
ஆகஸ்ட் 24, 1608 :
சூரத் துறைமுக நகரில் ஆங்கிலேயர் வந்து குந்தினர்.
ஆகஸ்ட் 24, 1690 :
கல்கத்தவின் ஜன்ம தினம்.
ஆகஸ்ட் 24, 1759 :
ஆஃப்பிரிக்க அடிமைகளை விற்கும் கொடுமையை எதிர்த்த வில்லியம் வில்பெர்ஃபோர்ஸ்ஸின் ஜன்ம தினம்
ஆகஸ்ட் 24, 1857 :
அமெரிக்காவின் முதல் பொருளாதார வீழ்ச்சி.
ஆகஸ்ட் 24, 1891 :
முதல் சினிமா கேமரா காப்புரிமை பெற்றது: தாமஸ் ஆல்வா எடிஸn.
ஆகஸ்ட் 24, 1954 :
அமெரிக்காவிn கம்யூனிஸ்ட் கட்சி அம்பேல்!
ஆகஸ்ட் 24, 1995 :
விண்டோஸ் 95 வருகை.
“ காலை தோறும், ஒவ்வொரு மனிதனும் நீதிக்கு முன்; மாலை தோறும் தீர்வு” - ராய்.எல்.தாம்ப்ஸன்.”
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 26, 1883 :
தமிழ்காந்தி என்று அறியப்பட்ட தமிழ்த்தென்றல் திருவாளர். திரு.வி.கல்யாணசுந்தரனார் பிறந்த நாள். அவரது ‘வாழ்க்கைக்குறிப்புகள்’ ஒரு கருவூலம். அவரது வரலாற்று நூல் ஒன்று தான் உள்ளது -சாகித்ய அகாடமியின் வேண்டுகோள் படி, அவரின் மாணாக்கர் மு.வ. அவர்களின் சீடர் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் எழுதிய சிறிய நூல். அவர் கோவையில் வாழ்கிறார். மற்றபடி திரு.வி.க. அவர்களைப்பற்றிய மற்ற நூல்கள் அரைத்த மா. சாகித்ய அகாடமி, இந்த நூலை மற்ற மொழிகளில் மொழிப்பெயர்த்திருக்கவேண்டும். தவறிவிட்டார்கள். ஆங்கிலத்தில் அவரின் அரசியல் நோக்கிய வரலாறு வரவேண்டும் என்பது என் அவா. தமிழ்ப்புலவர், சைவசமய சொற்பொழிவாளர், தொழிலாளர் இயக்கத்தலைவர், இதழாசிரியர், மார்க்ஸிஸ்ட், காந்தீயவாதி, அரசியல்வாதி,பெண்ணியவாதி, சீர்திருத்தவாதி, சமரசம் நாடுபவர், எழுத்தாளர். சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் மரபு கட்டளை அவரை போற்றி பதிவுகள் அமைத்தது, நமக்கு பெருமிதம்.
ஆகஸ்ட் 26, 1910 :
அன்னை தெரசா பிறந்த தினம். அவரது நூற்றாண்டு வருடமிது. சான்றோர்களை தேடிப்போனால், கிடைக்காமல் போகலாம். அவர்க்ளே தேடி வந்தால்! ஒருமுறை சென்னையில், என் மனைவியின் தலையில் கை வைத்து ஆசி அளித்தபோது , அவள் புளகாங்கிதம் அடைந்தாள்.
ஆகஸ்ட் 26, 1920 :
அமெரிக்காவின் அரசியல் சாஸனம் 19வது தடவையாகத் திருத்தப்பட்டது, பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க. அது வரை பெண்ணினம், அமெரிக்காவில், ஒரு படி கீழ்!
ஆகஸ்ட் 27, 1987 :
அமெரிக்காவில் ‘911’ அவசர உதவி தொலைபேசி இலக்கம் என்று அறிவிப்பு.
“புவியாளவேண்டும் என்று வாழும்போது பறக்கிறோம்! இறந்தபின், வேண்டப்பட்ட நிலம் மிகக்குறைவு!”
இன்னம்பூரான்
ஆக! அவர் இந்தியராகிவிட்டார். கிறிஸ்தவ வழக்கப்படி தலையைத் தொட்டு
ஆசீர்வதித்தல் இல்லை என்று நம்புகிறேன் ;-)
க.>
க.>
ஆகஸ்ட் 28, 1770 :
ஜெர்மானிய தத்துவஞானி ஜியார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகெல் மறைந்தார்.
ஆகஸ்ட் 28, 1828 :
தென் அமெரிக்காவின் உருகுவே நாடு சுதந்திரம் பெற்ற தினம். பிரேசிலும் அர்ஜெண்டினாவும் போட்டுக்கொண்ட போரில், இங்கிலாந்து தலையிட்டு, இதை சாத்தியமாக்கிற்று. விவசாயத்தை நம்பும் இந்த நாடு, செல்வம், வாழ்க்கைத் தரம், நேர்மை ஆகியவகைகளில் ஒரு முன்னோடி.
ஆகஸ்ட் 28, 1859 :
அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மானிலத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிப்பு.
ஆகஸ்ட் 28, 1950 :
பீபீஸீயின் தொலைக்காட்சி கடல் கடந்தது.
ஆகஸ்ட் 28, 1957 :
மலேஷியாவின் அரசியல் சாஸனம் அமல்.
ஆகஸ்ட் 28, 1975 :
எத்தியோப்பியாவின் 3000 ஆண்டு பாரம்பரிய வம்சாவளியின் கடைசி மாமன்னர் ஹைல் சலீஷி மரணம். முதலில் முசோலினியின் பலிகடா. இங்கிலாந்தில் அடைக்கலம். அவரின் கண்ணியம் யாவரையும் ஈர்த்தது. பிற்காலம், புரட்சியில் தூக்கி எறியப்பட்டு, வறுமையில்.
ஆகஸ்ட் 28, 1979 :
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனெரல் மெளண்ட்பேட்டன் பிரபு குணுவெடிப்புக்கு பலியானார். ராணி எலிசெபெத் திருமணத்துக்கு, அண்ணல் காந்தியின் பரிசு (அவர் நெய்த சிறிய கதர் துண்டுகள்) சுமந்து சென்று, ‘இதை முடி சூட்டும் விழா அணிகலன்களுடன், கோஹினூருடன், பத்திரமாக லண்டன் டவரில் வை’ என்றார்.
ஆகஸ்ட் 28, 1991 :
மால்டோவா, சோவியட் ரஷ்யாவிடமிருந்த்உ பிரிந்தது.
ஆகஸ்ட் 28, 2008 :
பாரக் ஒபாமா டெமாக்ரடிக் கட்சியின் சார்பாக, ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டார்.
“பேச்சு மனிதனின் மொழி என்றால், இலக்கியம் சமுதாயத்தின் மொழி.
- லூயி டெ போனால்ட் (தத்துவ ஞானி, அரசியல்வாதி-1754/1840)
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 28, 1749 :
பிரபல ஜெர்மானிய எழுத்தாளரும், விஞ்ஞானியும் ஆன ஜோஹாண் ஒல்ஃப்காங் வொன் கதே பிறந்தார்.
ஆகஸ்ட் 28, 1828 :
பிரபல ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் பிறந்தார். அண்ணல் காந்திக்கு மானஸீக குரு.
ஆகஸ்ட் 28, 1845 :
அமெரிக்காவின் புகழ் வாய்ந்த ‘அமெரிக்க விஞ்ஞானி’ இதழ் தொடக்கம். அன்று ஒரு பக்கம். இன்று இணைய தளத்திலும்.
ஆகஸ்ட் 28, 1963 & 2008 :
1963:
உலகவரலாற்றில் பொன் எழுத்துக்களில் பதிக்கவேண்டிய தினம். அமெரிக்காவின் இனவெறி ஒழிப்பு தினம். அடிமைகளாக இருந்த கறுப்பு நிற மக்கள் மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்ட தினம். தலைவர் மார்ட்டின் லூதர் கிங் அண்ணல் காந்தி வழி நடந்து, 200,000 நபர்களுடன், ‘என் கனவு யாதெனில்...’ என்ற அமரவாக்குடன் தொடங்கிய போராட்டம், வெள்ளையர் ஆதிக்கத்தை குலைத்தது. அந்த சொற்பொழிவை இங்கே காணலாம்.
http://www.nytimes.com/learning/general/onthisday/big/0828.html#article
2008:
பாரக் ஒபாமா என்ற கறுப்பர் டெமாக்ரடிக் கட்சியின் சார்பாக, ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டார். முதலில் ‘நிக்கர்’ என்றும், பிறகு ‘நீக்ரோ’ என்றும் இகழப்பட்டு, ‘கறுப்பர்’ என்று இனங்க்காணப்பட்டவர்களை, தற்காலம், ‘ஆஃப்ரோ அமெரிக்கர்’ என்று தான் குறிப்பிடவேண்டும். அமெரிக்காவில் பெரும்பாலும் ஒழிக்கப்பட்ட இனவெறி, இந்தியாவில் இல்லை என்று சொல்ல இயலாது. தற்காலம் சாதி அடிப்படையில் தான் அரசியல், இந்தியாவில். ஒபாமாவின் சிறந்த சொற்பொழிவைக்கேட்க:
http://www.youtube.com/watch?v=Z-m0S1vJCb8
ஆகஸ்ட் 28, 1981:
ஐட்ஸ்/ஹெச் ஐ வி. பற்றிய முதல் விழிப்புணர்வு ஆவணம் வெளியான தினம்.
“ சந்துஷ்டியும், ஜயமும் இருந்துவிட்டால், சுமுகம் தானாகவே வராதா? என்ன?
- [மேடம் ஆன் சொஃபி ஸ்வெட்ச்சின் - ஆன்மீகவாதி 1782 - 1857]
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
29 08 1632
இங்கிலாந்தின் தத்துவ ஞானி ஜான் லாக் பிறந்த தினம். சமுதாயவியலில், வால்டையர், ஹாப்ஸ், லாக் ஆகிய மூவரும் சோஷல் காண்ட்ராக்ட் கோட்பாட்டின் மூன்று கூற்றுக்களை, அவரவது, அறிவித்து பகழ் அடைந்தவர்கள்.
29 08 1831
மைக்கேல் ஃபாரடே மின்சாரத்தின் பயனை (induction) கண்டு பிடித்த தினம்.
29 08 1833
இங்கிலாந்து தன் சாம்ராஜ்யம் முழுவதிலும் அடிமை முறையஒ ஒழித்த தினம்.
29 08 1984
மன்னராட்சிகள் ஒழியத்தொடங்கிய வரலாற்றில், எகிப்திய மன்னர் ஃபரூக்கை எதிர்த்து, மக்களாட்சியைக் கொணர்ந்த முகம்மது நஜீப் மறைந்த தினம்.
29 08 1986
இங்கிலாந்தின் இரட்டையர் இருவரின் 100வது பிறந்த தினம்.
“ மனிதனுக்கும் சற்றே உயர்ந்திருக்கும் விலங்கினத்திற்கும் உள்ள வித்தியாசம், படினிலையில், தரத்தில் அல்ல.”
- சார்லஸ் டார்வின் (1809 - 1882)
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 30, 1574 :
குரு ராம்தாஸ் அவர்கள் நான்காவது குருவாக, அந்த குரு பரம்பரையில்.
ஆகஸ்ட் 30, 1918 :
ஃபேன்னி காப்லான் லெனினை சுட்டு படுகாயப்படுத்தினார். 'சிவப்பு பயங்கரத்தின்' தொடக்கம்.
ஆகஸ்ட் 30, 1941 :
நாஜிப்படைகள் லெனின் கிராட்டை முற்றுகையிட்டன. 30 மாதம் அது நீடித்தது.
ஆகஸ்ட் 30, 1945 :
ஜப்பானில் ஜெனெரல் டக்ளஸ் மகார்தர் தலைமையில் அமெரிக்க மேலாண்மை.
ஆகஸ்ட் 30, 1957 :
கலைவாணர் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்தார். விஜயராகவாச்சாரி சாலையில் இருந்த அவரது இல்லத்தில் சென்று இறுதி மரியாதை செலுத்தினேன். அக்காலத்து ஆனந்த விகடனில் வந்த கட்டுரையை 25 08.2010 விகடனின் காலப்பெட்டகத்தில் படித்து பயன் பெறலாம்.
ஆகஸ்ட் 30, 1967 :
அமெரிக்க உச்சனீதிமன்றத்தின் முதல் ஆஃப்பிரிக்கன்-அமெரிக்கன் நீதியரசர், தர்கொட் மார்ஷால், நியமனம்.
ஆகஸ்ட் 30, 1990 :
அமெரிக்க அதிபர் ஜார்ஜ். ஹெச். டபிள்யூ. புஷ் வளைகுடா பிரச்னையிலிருந்து ஒரு புதிய உலக சீர்திருத்தம் வரும் என்றார். என்னே ஆரூடம்! உலக களேபரத்துக்கு சரம் வைக்க, அவரது திருமகனாரும், சர்ச்சைக்குரிய தேர்தலில் பதவிக்கு வந்த அதிபரும், குளறுபடி மன்னனும் ஆன ஜார்ஜ் புஷ் வெடி வெடி வைத்தார்.
“சீக்கியர்கள் வைகறையில் எழுந்து இறவனின் நாமத்தை மையமித்து தியானிக்கவேண்டும். ந்ழுந்தவுடன், காலைக்கடன்களை முடித்து, குளித்து, குருத்வாராவின் அமுதக்குளத்தில் நீராடி, ‘ஹர, ஹர‘ என்று ஜெபித்தால், தீயவை, பாவங்கள், வலிகள் எல்லாம் ஓடோடிவிடும்.
குரு ராம்தாஸ்
இன்னம்பூரான்
பி.கு.:
நன்றி, ஸுரேஷ். சொல்லப்போனால், ஐஏஎஸ் மாணவர்கள் இதை விரும்பிப் படிக்கிறார்கள். நான் எழுதுவது சில துளிகள். அதுவே நேரம் எடுத்துக்கொள்கிறது. மற்றவர்கள் இந்த இழையை மேன்படுத்தலாம். அது சரி. அது என்ன இன்னம்பூரான் நண்பன்! நாம் யாவரும் யாவருக்கும் நண்பர்களே. தேனியார் உம்மை தேடுகிறார். நமக்கு சாரத்தியம் செய்த ஸுரேஷ் எங்கே? என்கிறார், கண்ணன். திருவேங்கடமணி உம்மை குசலம் விசாரிக்கிறார்.
விசனம் எனக்கும் உண்டு என்றாலும், தங்களது சரித்திரப் பேரேட்டில்
டயானாவைப் பேரழகி என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்க ஊர்
கருத்தம்மா, அவளை விட அழகி !!
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பி.கு.
1.எப்படி இருந்தால் என்ன? வருத்தம் வருத்தம் தான். இன்றளவும், அகால மரணம் எய்திய ஸில்க் ஸ்மிதா, 'பசி' ஷோபா, ஸ்மித்தா பாட்டீல் அவர்கள் இழந்த வாழ்க்கையை பற்றி எனக்கு விசனம். டயனாவும் அந்த ராஜ குடும்பத்தை உண்டு, இல்லை என்று பாடாய் படுத்தி விட்டாள். பட்டினி அவள் நோன்பு! ஊடகம் அவள் அழைப்பு! ஆனால் அதிகப்படி. கொன்னுப்புட்டாங்களே, படு பாவிகள்.
2. கண்ணன்: நீவிர் டயானாவை பார்த்தது இல்லையா? பேரழகி.
3. நான் மட்டும் தான் இந்த இழையை படிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வருக சான்றோர்களே.
--
இளமையே
இனிமையே
இன்பமே
இன்னுயிரே
இன்னம்பூராரே
இனிய செய்திகளையும் ‘அரிய’ செய்திகளையும் அள்ளித் தரும் உங்கள் வள்ளல்
குணம் வாழ்க!!
தி
2010/9/3 Innamburan Innamburan <innam...@googlemail.com>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
அடடா! எவ்வளவு முக்கிய நாள்!
அந்தக் காலத்துக் கதை சொல்லுமேன். வாஷிங்க்டனில் திருமணம் போல்!!
வாழ்த்துக்கள்!!
க.>
ஸெப்டம்பர் 5, 1698
தாடிக்கு வரி, ரஷ்யாவில். விதித்த புத்திமான்! பீட்டர், தி க்றேட்.
ஸெப்டெம்பர் 5, 1793
ஃப்ரென்ச் புரட்சி தீயாக மாறி, கொடுங்கோல் அராஜகமாக இயங்கத் தொடங்கிய தினம்.
ஸெப்டெம்பர் 5, 1839
சைனாவுக்கும் , பிரிட்டனுக்கும் முதல் ‘கஞ்சாப்போர்’ தொடங்கிய தினம். சைனாவுக்கு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்துவதற்காக, கனம் பொருந்திய? ஆங்கிலேய அரசு இரு முறை போர் புரிந்து, சைனாவுடன் ‘ கட்டப்பஞ்சாயத்து உடன்படிக்கைகள் செய்து கொண்டது. அப்பாடா! காலம் மாறிப்போச்சு. ஒரு சமாச்சாரம் தெரியுமோ? அசல் கஞ்சா பார்க்கவேண்டுமானால், அரசு கஜானாவுக்குப் போகவேண்டும். யூ.பி.யில் நீமச் என்ற இடத்தில் அரசு கஞ்சா தொழிற்சாலை உள்ளது, உரிமம் பெற்ற கஞ்சா உறிஞ்சும் பெருமகனார்களுக்காக!
ஸெப்டெம்பர் 5, 1882
அமெரிக்காவின் தொழிலாளர் தினமாக தொடங்கிய தினம். அங்கு அது தொழிளாலர்களின் ஒற்றுமையை முன்வைக்கும் ஊர்வல தினம். அத்துடன் சரி. மே தினம் மாதிரி அல்ல.
ஸெப்டெம்பர் 5, 1888
இந்தியாவில், ஆசிரியர் தினம்.
தத்துவப்பேராசிரியரும், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவரும் ஆன டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம். அவர் புகழுடன் வாழ்ந்த காலத்தில் சென்னைவாழ் ஆர். நாகராஜ சர்மா என்பவர் ஹிந்து இதழில், விடாக்கொண்டனாக, டாக்டர். ரா. வைப்பற்றி, ஆதாரங்களுடன் குறை காண்பார். மற்றவர்கள் படைப்புகளை தனது என்று சொந்தம் கொண்டாடுகிறார் என்பார். நாங்கள் விரும்பி படிப்போம்.
ஸெப்டெம்பர் 5, 1937
ஸ்பானிஷ் உள்நாட்டுப்போர் தொடங்கிய தினம். இதழ்களும் மிக்க ஆர்வம் காட்டியதால், ‘முதல் மீடியா போர்’ என்பார்கள். எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல எழுத்தாளர்கள் மக்கள் தரப்பை ஆதரித்தனர். 1984, அனிமல் ஃபார்ம் ஆகிய பிரபல நூல்களை எழுதிய ஜார்ஜ் ஆர்வல் நேரில் கலந்து கொண்டனர். நேருவும் ஆர்வம் காட்டினார். அங்குசென்றார், ஆனால் பங்கு கொள்ள இயலவில்லை என்று படித்ததாக ஞாபகம்.
இந்த கொடுமையான போரில் 300 ஆயிரம் மக்கள் இறந்தனர். அவர்களில் 120 ஆயிரம் பேர் இருதரப்பாலும் கொலை செய்யப்பட்டவர்கள்.
ஸெப்டெம்பர் 5, 1957
இங்கிலாந்து முதல் முறையாக பொது இடங்களில், ட்ரங்க் தொலைபேசி வசதி செய்தது - பிர்ஸ்டலில்.
ஸெப்டம்பர் 5,
அரப்-இஸ்ரேலிய தற்காலிக உடன்படிக்கை, சண்டை, சச்சரவை தணிக்க, சினாய் என்ற இடத்தில் நடந்த தினமே 1972 ல் ம்யூனிச் ஒலிம்பிக் கிராமத்தில் பாலஸ்டீனியர், இஸ்ரேலி விளையாட்டு வீரர்களை கொண்றனர். நேற்றுக்கூட, ‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி’ என்ற மாதிரி, அமெரிக்காவில் இரு தரப்பும் பேச்சு வார்த்தை.
ஸெப்டெம்பர் 5, 1990
ஶ்ரீலங்காவின் ‘கறுப்பு ஸெப்டம்பர’் தினம். கிழக்கு பல்கலைக்கழகத்தில் [வந்தருமூலை] என்ற இடத்தில் பாதுகாப்பு நாடி சரன் அடைந்திருந்த தமிழினத்தினரை, சிங்கள் ராணுவம் தாக்கி, 158 பேர்களை கொன்றது. அரசு அமைத்த விசாரணைக்குழு, ஆள் கடத்தலும், கொலையும் நடந்ததாக அறிவித்து, தவறு செய்தவர்களை சுட்டியும், மேல் நடவடிக்கஇ இல்லை என்று விக்கிப்பீடீயா சொல்கிறது.
ஸெப்டெம்பர் 5, 1997
அன்னை தெரஸா மறைந்தார்.
ஸெப்டெம்பர் 5, 1957
‘சாலையில்’ என்ற ஜாக் கெரெளக் என்பவரின் பிரபல நூல் பிரசுரம்.
ஸெப்டம்பர் 5, 1958
ரஷ்யாவின் போரஸ் பேடர்னாக் என்பவரின் பிரபல ‘டாக்டர் ஷிவாகோ’ என்ற தடிமனான நாவல் வெளிவந்தது. அவருக்கு பல இன்னல்கள்.
“இசை அமைப்பது பெரிய விஷயமில்லை. மற்றவர்களுக்குத் தோன்றாத மெட்டு உனக்கு தோன்றவேண்டும். அவ்வளவு தான்.
- ராபெர்ட் ஷூமன் (பிரபல இசையமைப்பாளர்)
இன்னம்பூரான்
அதானே! என்னடாது நம்ம மோகனரங்கன் பற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்களே என்று
பார்த்தேன் :-))
(அவர் ஏன் தாடி வைத்து இருக்கிறார் என்பது ஆய்விற்குரிய பொருள்). அவர்
தாடி வைத்த தினம் உங்கள் சரித்திர ஏட்டில் பதிவாகியுள்ளதா? ;-)
க.>
ஸெப்டம்பர் 7, 1533
இங்கிலாந்தின் மஹாராணி எலிசெபெத் 1 பிறந்த தினம். அல்லி ராணி. அந்நாட்டு மன்னர்களில் ஒரே ஆணவம் மிகுந்த, அரசியல் தந்திரியான ஆண் எனலாம், பெண்ணியம் புரியாதவர்கள்!
ஸெப்டெம்பர் 7, 1822
போர்ச்சுகலிடமிருந்து பிரேசில் விடுதலை. டாம் பெட்ரோ 1 இந்த பிரகடனம் செய்தார்.
ஸெப்டெம்பர் 7, 1916
அப்பாடா! அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் சட்டப்படி நஷ்ட ஈடு பெறும் உரிமை பெற்றனர். - (Federal Employers Liability Act (39 Stat. 742; 5 U.S.C. 751)
ஸெப்டெம்பர் 7, 1927
உருப்படியான எலெட்ரானிக் தொலைக்காட்சியை ஃபிலோ டேலர் ஃபார்ன்ஸ்வொர்த் இயக்கினார்.
ஸெப்டெம்பர் 7, 1940
வரலாறு காணாத அளவு லண்டன் மீது ஹிட்லரின் விமானப்படைகள் சரமாரியாக குண்டுகளை வீசி, நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்தனர். அஞ்சா நெஞ்சர்களான, ஆங்கில மக்கள், கொஞ்சம் கூட கவலைப்படாமல், அவரவர் வேலையை கவனித்தனர். தற்காலம், இந்த துணிச்சலை மும்பையிலும் பார்த்தோம்.
|
|
ஸெப்டெம்பர் 7, 1953
சோவியட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரியதரிசியாக ( அதாவது நாட்டின் சர்வாதிகாரியாக) நிகிடா க்ருஷேவ் பதவி ஏற்றார். கொஞ்சம் நம்ம லாலு மாதிரி. காரிய பைத்தியம்!
ஸெப்டெம்பர் 7, 1965
இந்திய எல்லையில் சைனா படைகளை குவிக்க தொடங்கியது. இன்றும் பிரச்னை. தீவிரம் கூடி விட்டது.
ஸெப்டெம்பர் 7, 1978
பல்கேரியன் ரகசிய போலீஸ்காரன் கியுல்லினோ, கார்ஜி மார்கோவ் என்ற பல்கேரிய எதிர்ப்பாளரை லண்டனில் கொன்றார், ஒரு குடையில் ரகசியமாக அமைக்கப்ப்ட்ட விஷ ஊசியால் குத்தி. பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வகையில் ப்ளேக் ஊசி போட்டு கொல்லப்பட்டதாக, ‘பவானி சன்யாசி வழக்கு’ என்றது வங்காளத்தில் பிரபலமாக பேசப்பட்டது.
ஸெப்டெம்பர் 7 , 1986
தென்னாஃப்பிரிக்காவின் ஆங்க்ளிகன் கிருத்துவ அமைப்பின் முதல் கறுப்பர் பிஷப், டெச்மாண்ட் டுடு.
ஸெப்டெம்பர் 7.2005
எகிப்தில் முதல் தேர்தல், அதிபருக்கு ஆக. அதற்கு பின்னணியில் வன்முறை இருந்தது.
ஸெப்டெம்பர் 7, 2008
உலக பொருள் சந்தை, ஆதாரம் இல்லாமல் ஒடிந்து, உடைந்து, லக்ஷக்கணக்கான மத்தியத்தர மக்களை உயிருடன் புதைத்த சுனாமி போன்ற சரிவுக்கு கட்டியம் கூறப்பட்ட நிகழ்வு - மிக பெரிய ஃபேனி மேய், ஃப்ரெட்டி மேக் என்ற பேராசையால் கட்டுப்பாடு இழந்த வீட்டுக்கடன் நிறுவனங்களை அமெரிக்க அரசு எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
“பாம்பேய் என்ற புராதன நகரின் இடிபாடுகளை ஆராய்ந்த போது, தாயக்கட்டைகள் கிடைத்தன. அவற்றில் சில முறைகேடாக்கப்பட்டிருந்தன. (லோடெட்). மனிதனின் கூறு கெட்ட குணத்திற்கு வேறு என்ன சான்று வேண்டும்?”
-லார்ட் கில்ம்யூர்.
[சகுனியும், காம்மன்வெல்த் கேம்ஸ்ஸும், கிரிக்கெட்டும் கண் முன்னே நிற்கின்றன.]
இன்னம்பூரான்
பி.கு.
1.அன்பர் ஒருவர் தனி இழையில் சர்வபள்ளியை எள்ளி நகையாடினார், என்ன கிழித்து விட்டாரென்று. 'பாயிண்ட் மேட்.' என்ற தோற்றம்! இந்த விதண்டாவாதம், பரிமேலழகருக்கும், இளம்பூரணாருக்கும், பேராசியருக்கும், சிலப்பதிகாரத்துக்கு உரை கண்ட திருவாளர் வேங்கசாமி நாட்டாருக்கும், மேலும் திருவாளர்கள் திரு.வி.கல்யாணசுந்தரத்துக்கும், மு.வரதராசனுக்கும் பொருந்தும். தவிர, சர்வபள்ளி அவர்களின், பீ.டி.ராஜூ அவர்களின் நூல்களை படித்தால், இந்திய சித்தாந்தங்களை பற்றி தெளிவு பிறக்கும்.
2. வ.உ.சி அவர்களை பற்றிய பதிவு, மின்வெட்டார் வருகையினால் ( அது படுத்தும் பாடு சொல்லி மாளாது. இன்று காலையில் கூட), நடு நிசியில் சேமிக்க முடியாமல், தவறவிடப்பட்டது. தவறு எனது தான். அது கீழே:
“ஸெப்டம்பர் 5, 1872
‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம். ஸ்வாமி விவேகானந்தரை தரிசித்த சான்றோர்களில் ஒருவர். மேலதிக விவரங்களுக்கு இந்த நூலை முழுதும் படியுங்கள்.
http://www.noolaham.org/wiki/index.php/கப்பலோட்டி_-_செக்கிழுத்த_செம்மல்_வ._உ._சி
ஸெப்டம்பர் 8.
1664: டச்சுக்காரர்கள் ந்யூ ஆம்ஸ்டெர்டாம் என்ற நகரை பிரிட்டனிடம் கொடுத்தனர். அது கூகிள் படங்களில் அகப்படாது; அது தான் இன்றைய ந்யூயார்க்.
1913: தற்கால தமிழ் இலக்கியத்தில் சுவை பட எழுதி வந்த திரு. மஹாதேவன் (‘தேவன்’) பிறந்த தினம். மேலதிக விவரங்களை காண:
http://ta.wikipedia.org/wiki/முதற்_பக்கம்
அவரது அருமையான படைப்புகளில் சில சுவைக்க:
http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=devan
1926: ஜெர்மனி லீக் ஆஃப் நேஷன்ஸ்ஸில் (அக்கால யூ.என்.) அனுமதிக்கப்பட்டது. வந்தது கேடு!
1933: பிரபல ஹிந்தி சினிமா பாடகி ஆஷா பான்ஸ்லே பிறந்த தினம். 12 ஆயிரம் பாடல்களாம்!
1941: லெனின் க்ராட் நகரை ஜெர்மானியர் முற்றுகையிட்டனர்: இரண்டாம் உலகப்போர்.
1943: ஜெர்மன் ராணுவ மேலாண்மை தளத்தை (மெடிட்டரேனியன்) அமெரிக்க போர்விமானங்கள் தாக்கின; இரண்டாம் உலகப்போர்.
&
இத்தாலி, ஐந்து நாட்களுக்கு முன் சரணைடந்ததை, இன்று தான் ஜெனெரல் வைட் ஐஸன்ஹோவர் பிரகடனம் செய்தார். பிற்காலம் அமெரிக்க அதிபரானவர். உலகெங்கும் மதிக்கப்பட்டவர்.
1944: லண்டன் மீது ஜெர்மனி முதல் தடவையாக வீசிய வீ 2 ராக்கெட், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
&
மெண்டன் என்ற இடம் ஜெர்மனியின் பிடியிலிருந்து விடுவிக்கப்ப்அட்டது.
1959: ஆசிய டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட் தொடங்கப்பட்டது.
1962: அல்ஜீரியா, மக்கள் கருத்துக்கேட்ட பிறகு, தன்க்கு அரசியல் சாஸனம் வகுத்துக்கொண்டது.
1974: எதிராளியின் கூடாரத்தை வேவு பார்ப்பது அரசியலருக்கு கை வந்த கலை. ஆனால், குற்றங்கள் பல - பொய், புனைசுருட்டு, திருட்டு -செய்த அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் பதவியிலிருந்து விலக, சட்டப்படி அவருக்கு கடுமையான தண்டனைகள் காத்திருக்க, அவருக்கு பின் அதிபரான கெரால்ட் ஃபோர்ட் அவருக்கு பொது மன்னிப்பு அளித்தார், சட்டத்தின் ஒரு ஓட்டையை பயன்படுத்தி. அந்த அழியாக்கறை படிந்த தினம். பிற்காலம், பில் க்ளிண்டன், பதவி விலகும் போது, மார்க் ரிச் என்ற ஏமாற்றுக்காரனுக்கு பொது மன்னிப்பு அளித்தார். கறை மேலும் கறுத்தது.
“ சொற்கள் பயனிழந்தால், இசை பேசும்.”
ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன்
["ஏன்? என் ஃபோட்டோக்களும் பேசுகின்றனவே."
- நாவன்னா காவன்னா]
இன்னம்பூரான்
இ சார்
தேவன் அடியேனுடைய அபிமான எழுத்தாளர். அவர் பற்றி அடியேன் எழுதியுள்ளது
தமிழ் மரபு விக்கியில் சேர்க்கப்பட்டுள்ளது. என்னுடைய வலைப்பூவிலும்
உள்ளது. அடுத்த வருடம் தேவன் பிறந்தநாள் அறிவிப்பு எழுதும்போது
மறக்காமல் சேர்த்து விடும்படி இப்போதே கோரிக்கை......
தி
2010/9/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
ஸெப்டம்பர் 9
1839:
ஜான் ஹெர்ஷல் முதல் முறையாக கண்ணாடி ப்ளேட் ஃபோட்டோ எடுத்தார்.
1850:
கலிஃபோர்னியா அமெரிக்காவின் 31வது மாநிலமாக இணைந்தது.
1886:
இலக்கிய, கலை சார்ந்த படைப்புகளுக்கு காப்புரிமையின் முதல் கட்டம்: பெர்ன் கலந்தாய்வு.
1923:
துருக்கிய மக்களாட்சிக்கு வித்திட்ட முஸ்தாஃபா கெமால் பாஷா மக்கள் கட்சியை தொடங்கினார். [நல்லது பல செய்த, அவர் பிற்காலம் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்.]
1940:
ஜார்ஜ் ஸ்டிப்லிட்ஸ் முதல் முறையாக கணினியை வெகு தூரத்திலிருந்து இயக்கிக் காட்டினார்.
1947:
வந்தாரே, கணினியை குலைக்கும் வண்ணத்திப்பூச்சியின் கரு! பிறுகு சுண்டெலி, கிருமிகள் வகையறா.
1974:
கவனமாகப் படிக்கவும். பின்னூட்டத்தில் கருத்து தெரிவிக்கவும். கேப்டன் விக்ரம்
பட்ரா பிறந்த சுபதினம். 25 வயது கூட ஆகாத இந்த வீர இளைஞன் கார்கில் போரில் ‘ஜய் மாதா தீ’ என்ற தாய் வணக்கம் கூறிய படியே, வீரமரணம் எய்தார், ஜூலை7,1999 அன்று. அவரை, பாகிஸ்தானி ராணுவம் கூட ‘ஷேர்ஷா’ [சிங்கப்பெருமாள்] என்று தான் செல்லப்பெயரால் அறிந்திருந்தார்கள். இந்தியாவின் தலையாய ராணுவ விருது, ‘பரம வீர் சக்ரா’ அவருக்கு 15 08 1999 அன்று அளிக்கப்பட்டது. சோகமே உருவான அவரின் தந்தை பெற்றுக்கொண்டார்.
இம்மாதிரியான பிரிட்டனின் விருது, விக்டோரியா க்ராஸ் (செப்பு மெடல்). அந்த நாட்டு அரசு ‘ஜேக்கா’ என்ற வீரருக்கு அளித்த விக்டோரியா க்ராஸ் விருது வழங்கும் போது பிரகடனம் செய்யும் வருணனை ஹிட்லரைக்கூட உணர்ச்சி வசப்படவைக்கும்! ஒரு பேச்சுக்கு சொன்னேன். நம் ஷேர்ஷாவை பற்றி பக்கம் பக்கமாக எழுதவேண்டும் என்று ஆசை. உங்கள் பதிலை பொருத்து இருக்கிறது.
1976:
சைனாவின் அதிபர் மாஸேட்டுங்க் 82 வயதில் மறைந்தார். ஒரு சகாப்தம் ஓவர்.
1993:
அப்பாடா! ஒருபாடாக, பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை கணக்கில் சேர்த்துக்கொண்டது [ரெகனைஸ்ட்]. பதில் மரியாதையும் இஸ்ரேல் அளித்தது. ஆனால் சண்டை, சச்சரவு ஓயவில்லை.
1998:
இந்தியன் கிரிக்கெட் டூர் ரத்து. இங்கிலாந்தின் கேப்டன் கூச், மேலும் அவரது ஏழு சகபாடிகளுக்கு வீஸா மறுக்கப்பட்டது, இந்திய அரசால். காரணம்: அவர்கள் நிறவெறி தென்னாப்பிரிக்காவில் விளையாடினார்கள்.
இன்றைய நிலையில் கிரிக்கெட் கூறு கெட்டுவிட்டது. சகுனிகளுக்கு தான் காலம்!
“ஒரு குழந்தை மலரல்ல, பூ ஜாடியை அலங்கரிக்க! கொழுந்து விட்டு எரிய வேண்டிய கனல்.”
ஃப்ரான்கோ ரபிலே
இன்னம்பூரான்
என்ன? 1947-ல் கணினி வைரஸ்ஸா?
பிறுகு சுண்டெலி என்றால் என்ன? (பிருகு மகராஜ்?)
க.>
ஸெப்டம்பர் 10
1823:
சைமன் பொலிவர் பெரு நாட்டின் அதிபர் ஆன தினம். மற்ற நாட்டு தலைவர்களை பற்றி அறிவது நலமே -கரிபால்டி, மாஜினி, கவூர், டிகால், சர்ச்சில், அப்ரஹாம் லின்கன், பெரான், பிஸ்மார்க், லெனின்,ஃபிடல் காஸ்டரோ வகையறா. அது நமக்கு தன்னடக்கத்தையும் அளிக்கும். பொலிவர் மாவீரன்; நிகரற்ற நாட்டுப்பற்று கொண்டவர்; ஸர் ஆர்தர் க்வில்லர்-கூச் எழுதிய பொலிவரின் வரலாறு படிக்கவேண்டும்.
1846:
தையல் இயந்திரத்துக்கு காப்புரிமை பெற்றார், எலியாஸ் ஹோவ்.
1858:
’55 பண்டோரா’ என்ற வான் மண்டல அமைப்பை கண்டறிந்தார், ஜார்ஜ் மேரி ஸேர்ள்.
1918:
‘ரின் டின் டின்’ பிறந்த தினம். உலகப்புகழ் பெற்ற சினிமா ‘நாய்’கன்! நேற்று ஒருவர் என்னிடம் சொன்னார், ‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டீல் வைத்தாலும் நரகலை நாடும்’ என்று. முட்டாள். எங்கள் ‘மிஸ்டர் பிக்கிள்ஸ்’, 'லேடி' ‘ பாட்ச்’, ‘வில்ஸ்’ ஆகிய பட்டிகள் நேயத்தில், நன்றியில், மனிதர்களை மிஞ்சியவர்கள். ‘ரின் டின் டின்’ பல அவதாரங்கள் எடுத்த அதிசய நாய். காண்க, அவர் பெருமிதம்:
1967:
பூகோள அமைப்பு நாட்டுப்பற்றின் அடித்தளம், கலாச்சாரத்தின் வெளிப்பாடாக, பெரும்பாலும். ஆனால், ஸ்பெயின் நாட்டை அண்டிய ஜிப்ரால்டர் மக்கள் வாக்களித்தது, பிர்ட்டீஷ் மேலாண்மை நீடிக்கவேண்டும் என்று. இன்றும் அதே நிலைப்பாடு.
2000:
நேற்று கேப்டன் விக்ரம் பாட்ராவின் வீரமரணம் பற்றி பார்த்தோம். நாளை மற்றொரு சாகசம் காண்போம். இன்று ஒன்று. ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இனவெறி பேயாட்டம் ஆடும். (நாம் திருந்தாவிடில், தமிழ்நாட்டில் கூத்தாடும் இனபேதம் இனவெறியாக உரு எடுத்து கூளியாக மாறும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அணுகுமுறையால்; இது என் கருத்து.) அப்படிப்பட்ட இனவெறியாட்டம் ஸீரலியோன் என்று குட்டி நாட்டில் ஆறு ஆங்கில வீரர்களை பிணைக்கைதியாக்கினர். அது பெரிதல்ல. அவர்கள் சித்திரவதை மன்னர்கள். அசாத்திய துணிச்சலுடன் காட்டில் புகுந்து அவர்களை மீட்க சென்ற படையின் ‘வானிலிருந்து குதிப்போன்’ [பாராட்ரூப்பர்] வீர மரணம் எய்தினார். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த ராணுவ வீரர்களுடன் இணைந்து பணியாற்றிய வீரர்கள் சிலருடன் எனக்கு அறிமுகம் உண்டு. நேரில் பல விஷயங்கள் கேட்டறிந்தேன். ஸீரலியோன் வைரச்சுரங்கம். அதை கைப்பற்றவே இராக்கதர்கள் ஆட்சி. அதனால் தான் வைரத்தை ரத்தக்கறைப்பட்டது என்பர். அது உண்மை.
2002: நடு நிலை நாயகனும், கறுப்புப்பண பொக்கிஷதாரும் ஆன ஸ்விட்சர்லாந்து,’ லேட் லத்திஃப்பாக’ ஐ.நாவின் 190வது அங்கத்தினாராக சேர்ந்தது.
2006: ‘டோங்கா’ ‘டோங்கா’ என்று கேள்விப்பட்டது உண்டோ? அது ஒரு தீவுக்கூட்டம். மன்னராட்சி. அதன் மன்னர் பிரான் தெளாஃபிகுவா மறைந்த தினம் அவர் இந்தியா வந்த போது, நாடே தலை உயர்த்தி அவரை பார்த்தது! அத்தனை உயரம்! பக்கவாட்டிலும் பார்த்தது; அத்தனை தடிமன். இத்தனைக்கும் ஸாஃப்ட். அவர் கூட வந்தவர்களும் ஜாம்பவான்கள். ரகசியம்: குலை குலையாக வாழைப்பழம் சாப்பிட்டார்கள்!
2008:
வரலாற்றிலேயே மாபெரும் விஞ்ஞான ஆய்வு என்று அறியப்பட்ட பெரிய ஹாட்றன் கொல்லைடர் [The Large Hadron Collider at CERN]என்ற சோதனை அமைப்பு உயிர்ப்பிக்கப்பட்ட தினம். சமீபத்தில் பழுது அடைந்து, சீர்திருத்தப்பட்டது.
“சின்ன சின்ன விஷயங்கள் தான் தொல்லை தருகின்றன. யானையிடமிருந்து தப்பலாம்; ஈயிடமிருந்து?
- ஜோஷ் பில்லிங்ஸ்
இன்னம்பூரான்
பி.கு: ‘பரமவீர் சக்ரா’ கேப்டன் விக்ரம் பட் ராவை பற்றி எழுதுகிறேன்; அந்த ஹார்வார்ட் அட்டேக்கர் ‘ப்யூப்பாவா? வைரஸ்ஸா’ என்ற விவரம் சரியாக எழுதப்படவில்லை. ஆய்வு செய்து சொல்கிறேன், கண்ணன்.
ஸெப்டம்பர் 12
1846
“எப்படி ஓடினரோ!” படித்தீர்களோ? ராபெட் ப்ரெளனிங்க் புகழ் வாய்ந்த கவிஞர். எலிஸெபெத் பேர்ரெட் மேலும் புகழ் வாய்ந்தவர்; கொஞ்சம் மாற்றுதிறனாளி. அதனால் என்ன? ராபெட் ப்ரெளனிங்குடன் ஓடிப்போய்விட்டார்.
1897
ஐரீன் ஜோலியட் க்யூரி பிறந்த தினம். தாய், தந்தை, கணவர், அம்மையார் எல்லாரும் நோபல் பரிசல் பெற்றவர்கள். மகவுகளும் விஞ்ஞானிகள். அடேயப்பா!
1913
உங்களுக்கு ஜெஸ்ஸீ ஓவன்ஸ் தெரியுமோ? 1936 ஒலிம்பிக்ஸ்சில் நான்கு தங்க மெடல் வாங்கிய ஆஃப்ரோ-அமெரிக்கன். அக்காலம், கறுப்பர்கள் அமெரிக்க ‘தலித்கள்’ தான். இருந்தும் பாருங்கள். இந்தியாவில், இப்படியெல்லாம் தருணம் அளிக்கும் காலம் வருமோ, ஐயா?
1919
அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் தொழிலாளிக்கட்சியில் சேர்ந்தார். வந்தது வினை.
1933
சிவப்பு விளக்கெல்லாம் பச்சை தான் என்று அறியீரோ? ப்ளூம்ஸ்பரி நகரில் சிக்னலுக்கு காத்திருந்த லியோ ஸ்ஸிலார்ட் என்பவருக்கு, ஒரு பச்சை விளக்கு மின்னலடித்தது, மூளையில்! அணுசக்தி தொடரியக்கம் இப்படி ஜென்மம் எடுத்தது அறிக. இதே மாதிரி தான் ஆர்க்கிமிடூசுக்கு ஒரு பொருளின் வால்யூம் பற்றிய தெளிவு, ஸ்னானம் செய்யும் போது! நிர்வாணமாக ( அப்டித்தான் குளிப்பாஹ.), ‘யுரேகா’ (கண்டேன்! கண்டேன்!) என்றுக்கூவிக்கொண்டு ஓடினாராம். அமெரிக்காவில் மன்ஹாட்டன் திட்டம் ரக்சியமான அணுசக்தி ஆய்வு. அணுவை பிளந்தால், அணுகுண்டு தயாரிக்க இயலும். அதற்கு, அந்த ஆய்வில் அணு குலையும் க்ஷணத்தை க்ரிடிகாலிட்டி என்பர். நிகழும் நேரம் அறியாத நிலை. ஒரே டென்ஷன். என்ரிகோ ஃபெர்மி என்றை இளம்விஞ்ஞானி தான் டீம் லீடர். இது லன்ச் உண்ட பிறகு தன் நிகழும் என்று உணவருந்த போய்விட்டார். அப்படித்தான் நடந்தது? கனவில் உதித்த விஞ்ஞான சூத்ரம் தெரியுமோ? கேட்டா...!
உடனே மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் என்றெல்லாம் பேச்சுப்படவேண்டாம். மறுப்பு எழுத, கை வலிக்கும்!
1943
மைக்கேல் ஒண்டாட்ஜி என்ற எழுத்தாளர் பிறந்த தினம். சிங்களத்தை சார்ந்தவர்.
1948
போலீஸ் ஆக்க்ஷன் என்பர். ஜின்னாவின் மறைவுக்கு காத்திருந்த மாதிரி, இந்தியா ஹைதராபாத் சமஸ்தானத்தின் மீது படையெடுத்தது. எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரே நாளில் மீர் லைக் அலி என்ற பொம்மை திவானும், ஸையத் ரஸ்வி என்ற ரஸாக்கர் அரக்கனும் பாகிஸ்தானுக்கு பறந்தோடி விட்டனர். இதன் ஹீரோ ஜெனெரல் செளத்ரியின் அறிமுகம் பிற்காலம் கிடைத்தது.
இரண்டு செவி வாய் செய்திகள்: 1. வருமுன் காப்போனாக, ராஜாஜி, சந்தேஹபோஸ்தமன எல்லையோர அதிகாரிகளை தென்கோடி சீமைக்கு அனுப்பி விட்டார். 2. ஆற அமர, நேரு ஹைதராபாத் வந்தார். விமான தளத்துக்கு மாநில அதிபரான (பேருக்கு) நைஜாம் வரவேண்டும். ‘His Exalted Highness’ தயங்கினார். பரவாயில்லை என்று நேரு விட்டு விட்டார். விடாக்கண்டரன படேல் வந்த போது, நைஜாம், நிர்பந்திக்கபட்டார். யாரவது ஆதாரம் இருக்கிறதா? என்று தேடவும்.
1974
எதியோப்பிய மஹாராஜாவும், ரஸ்தஃபரி என்ற இயக்கத்தலைவரும் ஆன ஹைல் ஸலீஷீ, 58 வருட ஆட்சிக்கு பிறகு, ராணுவ புரட்சியில் தூக்கி அடிக்கப்பட்டார். உலக சமுதாயத்தில் அவருக்கு மிக்க மதிப்பு உண்டு, பதவியில் இருந்த போது. அக்காலம் சென்னைக்கு வந்திருந்தார். வரவேற்கவேண்டிய மாநில அதிபர் ஶ்ரீ ஶ்ரீபிரகாசாவின் மகன் இறந்து போனதால், அவரால் அந்த கடமையை செய்யமுடியவில்லை. நேரு, எதிர்கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தனக்கு தீராத தலைவலி கொடுத்த ராஜாஜியை வேண்டினார். முன்னாள் கவர்னர் ஜெனெரல் அல்லவா. அருமையாக அந்த கடமையை செய்தார்.
1977
தென்னாஃப்பிரிக்கவின் கறுப்பர்களின் விழிப்புணர்ச்சி தலைவர் ஸ்டீவ் பிக்கோ போலீஸ் கஸ்டடியில் இருந்த போது இறந்தார்.
2007
'13' தீநிமித்தமா? பிலிப்பைன்ஸ் 13 வது (மாஜி)அதிபர் ஜோச்ஃப் எஸ்ட்றடா கொள்ளைக்குற்றத்துக்காக தண்டிக்கபட்டார். வழக்கம் போல, பிற்காலம் பொது மன்னிப்பு!
2009
மெடல் மன்னன் நார்மன் எர்னெஸ்ட் போர்லாக் என்ற வேளாண் விஞ்ஞானி மறைந்த தினம். இந்தியாவுக்கு பசுமை புரட்சி கொணர்ந்த மஹரிஷி. மெடல் வரிசை: நோபல், அமெரிக்காவின் ‘பாரத ரத்னா’வான அதிபர் அளிக்கம் விடுதலை மெடல், அமெரிக்க நாடாளுமன்றங்களின் தங்க மெடல், இந்தியாவின் ‘பத்மவிபூஷண்’.
“ஓ! நீ கூடவா? நான் மட்டும் தான் என்று நினைத்தேன்! “ என்ற கேட்பின், அது நட்பின் ஜனனம் என்று அறிக.”
- க்ளைவ் ஸ்டேபிள்ஸ் லூயி
இன்னம்புரான்
பி.கு.
பின்னூட்டங்களுக்கு நன்றி. திரு. ஆராதிக்கு இன்றைய மேற்கோள் பதிலளிக்கறதோ? 50/60 வருடங்களுக்கு முன் நான் தொகுத்து வைத்துக்கொண்டது ஒரு மாதம் முன் கிடைக்க, அதிலிருந்து இவை வரவு. அக்காலம், மனைவி, மக்கள், சுற்றம், நண்பர் குழு, ஆஃபீசு, டின்னர், க்ளப் என்றெல்லாம் தனிமையில்லாக்காலம். ஆனால், நான் என்றும் ‘தனித்து’ இருந்தததில்லை. நேரமும் போதவில்லை. மணிக்கணக்காக, ‘இன்றைய தினம்’ கிறுக்கும் இருக பிடித்துக்கொண்டது.
உடனே மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் என்றெல்லாம் பேச்சுப்படவேண்டாம். மறுப்பு எழுத, கை வலிக்கும்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஸெப்டம்பர் 13
122
இங்கிலாந்தில் ரோமானியர்கள் ‘ஹாட்ரியன் சுவர்’ எனப்படும் கோட்டைச்சுவர் எழுப்பத்தொடங்கினர். ரோமானிய சுவர்களில், குறிப்பிட்ட இடைவெளிகளில், கோட்டைக்கதவுகள்: கேட்: இடத்தை பற்றி நோட்டம் விடாமல்,அளவு மட்டும் பார்த்ததால், ஒரு கேட் அதல பாதாளத்தை நோக்கி!
1503
மைக்கேல் ஏஞ்செலோ என்ற அமரத்துவம் வாய்ந்த சிற்பி டேவிட் என்ற சிலையை வடிக்க தொடங்கினார்.
1592
மைக்கெல் மேந்தைய்ன் என்ற கட்டுரையாளர் மறைந்த் தினம். உரை நடை வகுத்தவர்.
1759
ஜேம்ஸ் வொல்ஃப் ஜெனரல் இறந்த தினம். இறக்கும் தருணம், ஒரு ஆங்கில கவிதை (An Elegy Written in a Country Churchyard) யை ஒப்புவித்து, ‘இந்த வீரமரணத்தை விட அந்த கவிதை பாடி இருந்தால் எனக்கு மேன்மை’ என்று சொன்ன ரசிகன்.
1766
ஜான் புல் என்றால் இங்கிலாந்து. அங்க்கிள் சாம் என்றால் அமெரிக்கா. இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன பெயர் வைக்கலாம்? ‘அங்க்கிள் சாம்’ என்ற அமரத்துவம் பெற்ற சாமுவேல் வில்ஸன் பிறந்த தினம். மேலதிக விவர்ங்களுக்கு சில நாட்கள் காத்திருக்கவும்.
1894
ஜே.பீ. பீரிஸ்ட்லி என்ற ஆங்கில கட்டுரையாளர்/நாடக ஆசிரியர்/ நாவல் ஆசிரியர் பிறந்த தினம்.
1898
ஹான்னிபால் குட்வின் ஸெல்லுலாய்ட் ஃபோட்டோ ஃபில்முக்கு காப்புரிமை பெற்றார்.
1992
உலக ரிக்கார்ட்: 57.8°C (136.04°F) வெப்பம். லிபியாவின் அல் அஸிஸியா என்ற இடத்தில்.
1940
இங்கிலாந்து பக்கிங்க்ஹாங்க் அரண்மனை மீது ஜெர்மானிய குண்டு வீச்சு.
1943
சியாங்கே ஷேக் சைனாவில் அதிபர் ஆனார். காலாகாலத்தில் இறக்கம் கண்டார்.
1971
கம்யூனிஸ்ட் சைனாவின் மார்ஷல் லின் பியோவ் (தலைவர் மா ஸே துங்க்க்கு அடுத்தபடி தலைவர்) நாட்டை விட்டு ஓடினார். அவர் சென்ற விமானம் நொறுங்கியது.
1989
மதத் தலைவர் டெஸ்மாண்ட் டுடு நிறவெறியை எதிர்த்து மாபெரும் ஊர்வலம் நடத்தினார்.
1997
அன்னை தெரெஸாவின் உடல் நல்லடக்கம்
2001
9/11 அன்று நடந்த கொடுமையின் விளைவாக, நிறுத்தப்பட்டிருந்த விமானப்போக்குவரத்து மறுபடியும் தொடங்கப்பட்டது.
2007
பழங்குடியினரின் உரிமை சாசனம் பிரகடனப்பட்டது, அமெரிக்காவில். அப்றம், சப்பரம்!
“Standard English is tasteless stuff”
- J.B.Priestley
இன்னம்பூரான்
உடனே மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் என்றெல்லாம் பேச்சுப்படவேண்டாம். மறுப்பு எழுத, கை வலிக்கும்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஸெப்டம்பர் 14
786
‘ஆயிரத்து ஒரு கதைகள்’ என்ற அற்புத கதை சொல்லியும், இஸ்லாமிய காலீஃப் மன்னரும் ஆன ஹரூன் அல் ரஷீத் அரியணை ஏறிய தினம்.
1769
அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் என்ற விஞ்ஞானி/எக்ஸ்ப்ளோரர் பிறந்த தினம்.
1814
அமெரிக்க தேசீய கீதம் உருவெடுத்த தினம்.
1879
குடும்பக்கட்டுப்பாடு பற்றி உலகுக்கே விழிப்புணர்ச்சி அளித்த மார்கெரெட் ஸேங்கெர் பிறந்த தினம்.
1886
ஜான் மசர்யக் என்ற செக்கோஸ்லாவிய ராஜதந்திரியும், அரசியல் தலைவருமானவர் பிறந்த தினம்.
1917
ரஷ்யா ‘குடியரசாக’ பிரகடனம்.
1927
இஸடோரா டங்கன் என்ற அமெரிக்க நாட்டிய சிரோன்மணி மறைந்த தினம்.
1940
அமெரிக்காவில் சமாதானம் நிலவும் காலத்திலும் இளைஞர்களுக்கு ராணுவப்பயிற்சி அமலுக்கு வந்தது. இந்தியாவில் நினைத்து, விடப்பட்ட நல்ல ஆலோசனை. இங்கு இது அமலில் இருந்தால், நல்லொழுக்கம் கூடி இருக்கலாம்!
1948
ஐநா கட்டிடத்துக்கு அடித்தளம் போட்டார்கள். செயல்பாடுகளுக்கு எப்போதோ?
1960
பெட் ரோலியம் ஏறுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு தொடங்கிய தினம். அன்றிலிருந்து உலகை ஆட்டிப்படைக்கிறார்கள்.
1982
க்ரேஸ் கெல்லி பேரழகி, சிறந்த நடிகர். Have you seen Alfred Hitchcock’s ‘The Man who knew too much’? மொனக்கோ மன்னரை மணந்தார். கார் விபத்தில் அவர் இறந்த தினம்.
2001
9/11 பலியானவர்களுக்கு ஆக மாபெரும் கூட்டுப்பிரார்த்தனை.
2003
எஸ்டோனியா யூரோப்பியன் யூனியனில் சேர்ந்தது.
2010
நேற்று தலை சிறந்த தமிழ் இலக்கிய ஆசிரியை ஆர். சூடாமணி மறைந்தார்.
“பட்டி மன்றத்தின் பயன், தன் கருத்து கண்டு கொள்வது. மற்றவரது அன்று.”
- ஆர்ஸன் வெல்லஸ் [ஐயா படா கில்லாடி. ஒரு நாள் அமெரிக்காவையே ஆட்டி படைத்துவிட்டார், தன் வாக்சாதுர்யத்தினால்; போதாக்குறைக்கு ரீட்டா ஹேவர்த் என்ற கனவழகியை மணம் புரிந்துக் கொண்டார்.
இன்னம்பூரான்
பி.கு. இந்திய/தமிழ் சான்றோர்கள், நிகழ்வுகள் பற்றி தேடி வருகிறேன். பொறுத்தாள்க.
1909
அறிஞர் அண்ணா பிறந்த தினம். தமிழக அரசியுல் வரலாற்றில் அழியா புகழ் பெற்றவர்.
பாரதரத்னா வை நேரு கையால் வாங்கியவர். அவரது சிறு பால்யத்தில் மிக
ஒல்லியாக இருத்தலைப் பார்த்து, இந்தப் பையன் 30 வயசு தாங்காது என ஒரு
சமுஸ்க்ருத ஆசிரியர் சொல்லிவைத்தாராம். ஆனால் தனது நூற்றாண்டு விழாவைத்
தானே காணும் வாய்ப்பைப் பெற்றதாக இன்றைய நாளிதழ் கூறுகிறது. (1955 இல்
போட்டோவில் கூட (95 வயது) ஒல்லிதான். எப்படித்தான் அந்த உடம்பு அந்த
கனமான சட்டை மற்றும் கோட்டையும், இதையும் விட கனமான தலைப்பாகையையும்
தாங்கியதோ.. இஞ்சினீயர் மூளை என்பதால் இதற்கும் ஏதாவது சூட்சுமம்
வைத்திருப்பாரோ என்னவோ..
2010/9/15 ஆராதி <aara...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
ஸெப்டம்பர்
1916
மாஜி என்றால் இளப்பம்! இந்திய மாஜி வீரர்களுக்கு அரவணைப்பு போதாது. [நம் தணிக்கைத்துறை அப்படியல்ல. நான் ஓய்வு பெற்று இருபது வருடங்கள் ஆயினும், என்னிடம் பயிற்சி பெற்றவர்களும் ஓய்வு பெற்றுவிட்டாலும், 150வது ஆண்டு விழாவுக்கு அழைப்பு! ஹூம்! ‘தணிக்கைத்துறையின் தணியாவேகம்’ என்ற இழை எனக்கு பிடிவாரண்டு வந்த கதையுடன் நற்றாற்றில் நிற்கிறது. அது நிற்க!] எங்கேயோ போகிறேன்! அமெரிக்காவின் 3 மிலியன் மாஜி ராணுவ அங்கத்தினர்கள் உள்ள அமெரிக்கன் லீஜன் தொடங்கிய தினம். இருந்தும் இன்னல்படும் மாஜிகளை அங்கு கண்டிருக்கிறேன். மேல்மட்டத்துக்கு ஒரு விதி;கீழ்மட்டத்துக்கு ஒரு அநீதி.
1916
பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மியின் ஜன்ம தினம். அதிகமாகப் பேசப்படாத செவிவாய் செய்தி;நம்பலாம். தேவதாசியாக, இந்த மதுரைக்கார பெண்ணை பொட்டு கட்டப்போகும் தருணத்தில், இவளை மீட்க, சதாசிவத்தையும், கல்கியையும், ராஜாஜி அனுப்பினார். ஒருவர் அவளை மணம் புரியவேண்டும். இருவரும் விரும்பினார்கள். ராஜாஜி ‘சதாசிவம்’ என்றாம். மேலதிக விவரங்கள், மின் தழிழர்கள் அளிப்பார்கள்.
1919
கத்தை கத்தையாக அர்ஜெண்டினா தூதரலுவலகத்திலிருந்து வரும் எனக்கு, புதுக்கோட்டையில். ஜூவான் பெரான், ஈவா பெரான் படங்களுடன்! மக்கள் நலம் விரும்பிகள் என்ற பிரசாரம். அக்காலத்து மார்க்கோஸ் தம்பதிகளைப்போல (ஃபிலிப்பைன்ஸ்), ஊர்ப்பணத்தை விரயம் செய்த ஆளுனர் இவர். ஒரு முகூர்த்தம் பார்த்து, மக்கள் இதுகளை இறக்கினர்.
1963
மலேயா, சிங்கப்பூர்,, பிரிட்டீஷ் வடக்கு போர்னியா (ஸபா) ஸரவக் (1975) இணைந்து மலேஷியா உருவான தினம்.
1975
ஆஸ்ட்றிலியாவிலிருந்து விடுதலை, பப்புவா ந்யூ கினியாவுக்கு.
1977
மரியா கல்லாஸ் என்ற பிரபல கிரேக்க-அமெரிக்க பாடகி மறைந்த தினம்.
1978
ஜீ பூம்பா என்பது போல், மூரி நிமிர்ந்து ஓ ஒ என்று முழங்கி புறப்பாடு செய்த ஆரவாரத்துடன் ஈரானின் தபாஸ் நகரைத்தை துவைத்து எடுத்தது, ஒரு 7.7 ரிச்டர் ஸ்கேல் பூகம்பம். மூன்றே நிமிடங்கள். 11,000 மக்கள் உயிரிழந்தனர்.40 கிராமங்கள் காலி.
1980
Jean Piaget என்ற உலகப்புகழ் சிறார் உளவியல் ஆய்வாளர் மறைந்த தினம். அவர் அங்குமிங்கும் அலையவில்லை. தன் குழந்தைகளை வைத்து ஆய்வு செய்தார்.
1987
புவியன்பு: ஓசோ ஓட்டை, உலகை ஓட்டாண்டியாக்கிவிடும் என்ற கவலையில், அதிலிருந்து நம்மை உஜ்ஜீவிக்க, மோந்த்ரரியால் (Montreal) பிரகடனம் செய்யப்பட்ட தினம்.
1992
கறுப்பு புதன்கிழமை என்று ஆங்கில அரசு நடுநடுங்கிய தினம். ஜெர்மானிய மார்க், இக்கால இந்திய தங்கம் போல, அல்ல, பலமடங்கு ஏற, ஆங்கில பவுண்டு அதலபாதாளம் சென்றது: உபயம்: செல்வ சூதாட்டக்காரர்கள்.
“பயந்தாங்கொள்ளிகளுக்கு ஆயிரம் சாவு; வீரனுக்கு ஒன்றே ஒன்று”
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
இன்னம்பூரான்
பி.கு. திரு. ஆராதி கேட்பது நியாயமே. அவசர மொழிப்பெயர்ப்பு. இது பரவாயில்லை: ‘ செலவில்லாமல் பெறலாம் நற்பண்பு. அது இலவசமாக பெற்றத்தரக்கூடியவை எல்லாமே”.
Sorry for inturreption!!
There was no proof in this story, as I have read several articles on MS.
Only point Rajaji's interruption necessitated in MS life, asking her
to end the cinema career.
D
2010/9/16 Innamburan Innamburan <innam...@googlemail.com>: