Re: [தமிழ் வாசல்] ராமனைப் போல..!

923 views
Skip to first unread message
Message has been deleted

Innamburan S.Soundararajan

unread,
Dec 28, 2013, 6:25:07 AM12/28/13
to thamizhvaasal, min tamil, vallamai
முக்கியமாகக் கால் ஆடக்கூடாது… 
~ அப்படித்தான் நானும் ஒரு தடவை மாட்டிக்கொண்டேன். சரி. திசை மாற்றியது போதும்.
இது இன்றைய சூழ்நிலையில் முக்கியமான பதிவு. இந்த வினா விடை யுக்தியை ஆசி'றி'ய பெ'று' மக்கள் கை விட்டதால் தான் தமிழ்நாடு மண்டுக்கள் மயம்.

அன்று ஒரு நாள். திருச்சிராப்பள்ளியில் சேஷாத்திரி ஐயங்கார் என்ற முன்கோபி அமைதியாக வாழ்ந்துவந்தார். அவருக்கு செளந்தரராஜன் என்ற ஒரு வாய் துடுக்குப்பையன். வாத்தியார் கேள்வி கேட்டதற்கு பிரப்பம்பழம் கொடுத்து விட்டார். பையர் வாத்தியாரை அறைந்து விட்டார். டிஸ்மிஸ்ட். சேஷாத்திரி ஐயங்கார் கிட்டங்கிடுகிடுவென்று பள்ளிக்கு விரைந்து, தலைமை ஆசிரியரிடன், 'நானாக இருந்தால் இரண்டு கன்னத்திலும் அறைந்திருப்பேன். அவன் சாது' என்றாராம். டிஸ்மிஸ் வாபஸ். பிற்காலம், அந்த பையர் ராஜாஜிக்கு வேண்டியவர் ஆனார்.
அன்புடன், புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
இன்னம்பூரான்



2013/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸ்ரீ ராமர் என்னும் இலக்கிய நாயகனை மானிட இலட்சியமாக முன்னிறுத்தப்ப்ட்டு வளர்க்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவன் என்னும் போது எனக்கு ஸ்ரீ ராமரின் பாத்திரப்படைப்பைப் புரிந்து கொள்வதில் சில ஐயங்கள் எழுகின்றன. 

ராமனாக இரு. ராமனைப் பார். ராமனைப் போல் நட. ராமனின் குணங்கள் மானிடப் பொதுமையானவை. இப்படிச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டுப் போன சூழ்நிலைகளில் வளர்ந்தவனுக்குத் தன்னைப் போல் ராமன் என்றாலே ஓர் ஆண்மகன் குடும்பத்தில், தெருவில், நாட்டில் சமுதாயத்தில், பெண்களிடம், மனைவியிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கப்படுகிறோமோ அங்கெல்லாம் ராமனைப் பற்றிய குறிப்பு சொல்லியோ, சொல்லாமலோ வந்துவிடும். 

ஸ்ரீ ராமனைப் பரம்பொருள் என்றும் அவதாரம் என்றும் பார்க்கும் பக்திப் பார்வைகளின் பாதை வேறு. துளஸிதாஸ், ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் என்று பக்தியின் நூலாக ராமாயணத்தை அணுகுவது வேறு. ஆனால் மனித வாழ்க்கைக்கு, மனிதனுக்கு முன்னால் நிறுத்தப்படும் இலட்சியம் என்று பார்த்தால் எப்படி ராமனைப் புரிந்து கொள்வது, புரிந்து கொண்டால் அந்த ஆதர்ச உருவத்தை விமரிசிக்காமல் இருக்க முடியுமா, விமரிசித்தால் அந்த இலட்சிய கருத்தாக்கம் மிஞ்சுமா, வாழ்க்கையோடு ஏதேனும் பொருந்துவதாக இருக்குமா, நாம் அறிவும் அன்பும் கொண்ட மனிதராக சக மனிதர்களோடு கலந்து பழக அது தகுந்த மூல படிவத்தை நமக்குத் தர இயலுமா? இந்த விஷயங்களைப் பற்றிய என் புரிதல்களை எழுதலாம் என்று எண்ணம். 

பக்திப் பார்வை கொண்டவர்களோடு எனக்குப் பிணக்கம் இல்லை. அது தனி பாதை. அதை நானும் ரசிக்கிறேன். ஆனால் மனித வாழ்க்கைக்கு இலட்சியம் என்று கொண்டு வந்து என் சிறுவயது முதல் கொடுக்கப்பட்டமையாலும், இன்றும் வளரும் சமுதாயத்திற்குக் கொடுக்கப்படுகின்றமையாலும் மானிட இலட்சியம் என்ற விதத்தில் அந்தப் பாத்திரப் படைப்பைப் புரிந்து கொள்ள முயலும் போது எனது சிக்கல்கள் என்ன என்பதைக் கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றுகிறது. 

ஸ்ரீ ராமாயணத்தைப் படிக்கும் போது, அதாவது அதை esoteric, mystic text ஆக அல்லாமல் நடைமுறை வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை போதிக்கும் அற வழிகாட்டியாக, practical ethics ஆகப் படிக்கும் போது ஸ்ரீ ராமன் தான் ஓர் ஆண்மகன் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டிய முன் மாதிரியாக நிறுத்தப்படுகிறார். 

சிறு வயதில், அதாவது எலிமெண்டரி ஸ்கூலில் 3ஆவது படிக்கும் பொழுது வரத வாத்யார் என்று ஓர் ஆசிரியர். அவர் ஒரு வகுப்பில் பாடம் நடத்தும் போது மாதாவே தெய்வம், மாத்ரு தேவோ பவ, பிதாவே தெய்வம், பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, குருவே தெய்வம் என்றெல்லாம் சொல்லி வந்தார். கேட்டுக் கொண்டோம். இனிமேல் அப்பா அம்மா கிட்ட அடம் பண்ணக் கூடாது. சமத்தா இருக்கணும். வாத்யார் கிட்ட நல்ல பேர் வாங்கணும் என்றெல்லாம் தோன்றியது. மாலை மாரல் இன்ச்ட்ரக்ஷன் வகுப்பு. நன்னெறிக் கதைகள் சொல்கிறேன் என்று ஆரம்பித்தவர் பிரகலாதன் கதையைச் சொன்னார். ஆர்வமாக அனைவரும் கேட்டோம். ஆனால் என் போதாத காலம். மண்டையில் ஒரு குறுகுறுப்பு. வேறு என்ன? கேள்விதான். 

சார்! என்று கையைத் தூக்கினேன். போ போய்ட்டு சீக்கிரம் வா. என்றார். இல்லை சார் ஒரு கேள்வி என்று மென்று முழுங்கினேன். என்னது? என்றார். பக்கத்துப் பையன்கள் எல்லாம் ஒரே குரலில் கேள்வி கேட்கணுமான்சார் என்றார்கள். 

என்ன கேள்வி...என்றார். 

எனக்குக் குலை நடுக்கம். இருந்தாலும் ஒருவழியாகக் கேட்டு முடித்தேன். 

இல்ல சார். காத்தாலதானே சொன்னீங்க... மாதாவே தெய்வம் மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ ஆசார்ய தேவோ பவன்னு. அப்படீன்னா பிரகலாதனும் அவன் அப்பா அம்மா ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு நடந்துக்காம ஏன் சார்  முரண்டு பண்ணினான். அவனை தெய்வம் தண்டிக்காம ஏன் சார் காப்பாத்திச்சு? அப்ப அவன் வேதக் கட்டளையை மீறினான்னு தானே சார்..... 

பையன்கள் சிரிக்கத்.......தொடங்கவில்லை...அதற்குள் எனக்குக் கைமேல் பலன் கிடைத்தது.... ஆமாம் நன்கு பழுக்கக் காய்ச்சிவிட்டார். அன்று அவருடைய மழு மழு என்ற ஒல்லியான பிரம்பிற்கும் தான் பிறவி எடுத்த முழுப்பலனும் கிடைத்தது. எனக்கோ வெட்கம்...வலி...ஆத்திரம்...பயம்... கொன்று விடுவாரோ என்ற பீதி.... 

ஆனால் பையன்கள் சிலரைச் சுமம சொல்லக் கூடாது. கிலாஸ் விட்டதும் நேரே போய் தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டார்கள். அவர் கூப்பிடுகிறார் என்றதும் எதற்கு என்று தெரியவில்லை... ஐயோ அவர் வேறு போட்டுத் தாக்கினால் என்ன பண்ணுவது என்று அப்படி போகிறா மாதிரி நழுவி வீட்டுக்கு ஓடிவிட்டேன். வீட்டில் அம்மா சுடச்சுடக் காப்பி குடுக்கும் போது மாட்டிக்கொள்ளத் தெரிந்தேன். சட்டென்று தொட்டதும் கை வலி ப்ராணன் போய்விட்டது. என்னடா கையைக் காட்டு என்றார். அது சும்மாம்மா கீழ விளையாட்டுல பட்டுது என்று ஓடிவிட்டேன். மனத்திற்குள் ஒரு உறுத்தல்... ஐயோ அப்பா வருவாரே ஆபீஸிலிருந்து.. அப்பொழுது எப்படிச் சமாளிப்பது...அவரோ ஸ்காட்லண்ட் யார்ட் தோற்றது... அப்படி ஒரு துப்பு துலக்கல்.... 

ஏதோ சமாளித்து விளையாடி வீட்டுக்கு லேட்டாகப் போய், கண்ணில் படாமல் நழுவி, அரைகுறையாக வாயில் போட்டுக்கொண்டு, படிக்கிறா மாதிரி பாவனை, கண்கள் குளமாக என்ன தப்பு செய்தோம்? ஏன் இந்த தண்டனை? சொன்னது அவர். அது ஏன்னு கேட்டது தப்பா? என்று குமுறி வரும் ஆத்தாமைகள்...அப்படியே அந்த வலி, அந்த துயரம் அதிலேயே தூங்கிவிட்டேன். நெடு நேரம் கழித்து சட்டென்று முழிப்பு...ஒன் பாத்ரூம் போய் வந்தால் தேவலை போல்... ஆனால் அப்பாவும் அம்மாவும் பேசும் குரல்.... என் பேர் அடிபட்டது... அவ்வளவுதான் இறுக்கக் கண்ணை மூடிக்கொண்டு நல்ல தூக்கம் போல்.. முக்கியமாகக் கால் ஆடக்கூடாது... 

காதில் விழுகிறது....அதானா ஏண்டான்னு கேட்டதுக்கு விளையாட்டுலன்னான்....அடப் பைத்தியமே சொலலாதோ.. போய் அந்தப் பாழும் மனுஷனை நாலு வார்த்தை....இல்லல்ல அதை விடு அப்படியே... வரும் போது அந்த வாத்யாரே கூப்பிட்டார்... தயங்கித் தயங்கி... நீங்க சொன்னா கோவிச்சுக்கக் கூடாதுன்னு ஆரம்பிச்சார்.....என்னான்னு கேட்டேன்... இல்லை கொழந்தையை நான் ஒரு மடையன் ரொம்ப அடிச்சுட்டேன்....ஏதோ மன வருத்தம் என் சொந்த விஷயம்... பாவம் அவன் மேல தப்பு இல்லை... சும்மாதான் கேட்டான்...பின்ன கேட்கலைன்னா எதுக்கு நடத்தறோம்...ஏன் என்ன நடந்தது... நீங்க வாத்யார்... நீங்க கண்டிக்கறதுஇக்கு உங்களுக்கு உரிமை இல்லையான்ன...இல்லை அது சரி.... ஆனால் எனக்கே மனசு கேட்கலை...உங்களைப் பார்த்து சொல்லலைன்னா தூக்கம் வராது பொல்ல இருந்தது... பையன் நன்னா வருவான்... புத்தி சூக்ஷுமம்... ஆனால் கொஞ்சம் அவனைச் சொல்லி வைங்கோ... அப்படி எல்லார் முன்னாடியும் கேட்க வேண்டாம்னு...ஏன்னா மத்த பையன்களும் இருக்கறச்ச.. 

என்னக் கேட்டு தொலைச்சான்னா அப்படி?...அதுக்குன்னு இப்படியா பேய் மாதிரி அடிக்கும் அசத்து...சிரிக்கிறார்...அப்பாடான்னு இருந்தது... பின்ன அவ்ருக்குக் கோபம் வராம இருக்குமா....பிரகலாதன் கதையைச் சொன்னா இவன் கேட்கறான்னான்... அம்மாவே தெய்வம் அப்பாவே தெய்வம் குருவெ தெய்வம்ன்னு வேதமே சொல்லறதே... பிரகலாதனும் நல்ல பிள்ளையா லட்சணமா கேட்க வேண்டியதுதானே... ஏன் அப்பாவுக்கு அடங்காம அம்மாவுக்கு அடங்காம வாத்யாருக்கு அடங்காம இருந்தான்...அது தப்[பில்லியான்னு....வரத வாத்யாருக்கு என்ன பண்றதுன்னு தெரியல்ல.. போட்டுப் பிச்சிபிட்டார்... இப்ப வரும் போது அழறார்... சார் அதெல்லாம் விடுங்கோ ஆசிரியர் அடிச்சு பையன்கள் வீணாப் போனது இல்ல...நீங்க அடிச்சது அவனுக்கு ஆசீர்வாதம்னு சொல்லித் தேத்திட்டு வந்தேன்..... 

இவன் எதுக்கு கேட்கிறான்... சொல்றார்னா பேசாம கேட்டுக்க வேண்டியது தானே...இது ஒரு பிஞ்சுல பழுத்தது...

அடுக்களைக்கு எழுந்து போய்விட்டால் போல... 

இன்றும் பிரம்படி பயம் இருக்கத்தான் செய்கிறது. 

ஆனால் கேள்விகளும் நிறைய என்று வைத்துக் கொள்ளுங்கள். 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

கி.காளைராசன்

unread,
Dec 28, 2013, 7:12:19 AM12/28/13
to mintamil, தமிழ் வாசல், vallamai
வணக்கம் ஐயா.

----------------------------------
மண்டையில் ஒரு குறுகுறுப்பு. வேறு
> என்ன? கேள்விதான்.
>
மாத்ரு தேவோ பவ,
பித்ரு தேவோ பவ
ஆசார்ய தேவோ பவ
அப்படீன்னா பிரகலாதனும் அவன் அப்பா அம்மா > ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு
நடந்துக்காம ஏன் சார் முரண்டு பண்ணினான். அவனை தெய்வம் தண்டிக்காம ஏன்
சார் காப்பாத்திச்சு? அப்ப அவன் வேதக் கட்டளையை
> மீறினான்னு தானே சார்.....
>
----------------------------------------

மாத்ரு, பித்ரு, ஆசார்ய, தேவர் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளதால்,

மாத்ருவைவிட பித்ரு உயர்வு,
பித்ருவை விட ஆசார்யர் உயர்வு,
ஆசார்யரை விட தேவர் உயர்வு.

பித்ருவை நிந்தனை செய்யும் மாத்ரு தவறானவள்.
ஆசார்யரை நிந்தனை செய்யும் பித்ரு, மாத்ரு தவறானவர்.
தேவரை நிந்தனை செய்யும் ஆசார்யர், பித்ரு, மாத்ரு தவறானவர்.

“பித்ரு தேவோ பவ“ என்று கற்பிக்கப்பட்டாலும்,
தேவாதிதேவனான ஸ்ரீமன் நாராயணனை நிந்தனை செய்பவன் தந்தை என்ற தகுதியைத்
தானே இழந்தவனாகிவிடுவான்.

எனவே
“பிரகலாதன் செய்ததும் சரியே,
அச்சிறுவனை ஸ்ரீமன் நாராயணன் காப்பாற்றியதும் சரியே“ என்று அடியேன் கருதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்
Message has been deleted

Innamburan S.Soundararajan

unread,
Dec 28, 2013, 4:11:42 PM12/28/13
to thamizhvaasal, Mohanarangan V Srirangam, min tamil, vallamai
நீவிர் பின்னூட்டம் போட்டால் Inline image 1 ஆடிடுவீர். அதான் மவுனம்.
அன்புடன் + புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சித்திரத்துக்கு நன்ரி: http://www.varalaaru.com/images/Apr12/Kudakkutthu_Thiruvaiyaru.jpg

செல்வன்

unread,
Dec 28, 2013, 8:51:49 PM12/28/13
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

தாயை தெய்வமாக கருதினாலும் அந்த பக்திக்கு பலனை அளிக்கும் சக்தி தாய்க்கு இல்லை. தாயை வழிபடுவதன் பலனையும் அந்த பரந்தாமனே அளிக்கிறான். பிரகலாதன் இரணியனை தந்தை என்ற முறையில் தெய்வமாக வழிபட்டு இருந்தால் அதற்குரிய பலனையும் அந்த பரந்தாமன் அவனுக்கு அளித்திருப்பான். அந்த விரதத்தை பிரகலாதன் முறித்ததால் அவனுக்கு பாவம் வந்து சேராமல் அவனே காத்தான். கீதையில் "செய் தருமம் அனைத்தையும் விட்டு என்னை சரண்டை. அதன் விளைவுகளில் இருந்து உன்னை காக்கிறேன்" என அருச்சுனனுக்கு கூறிய அதே விதி இங்கே பிரகலாதனுக்கு பொருந்துகிறது.

தாயும், தந்தையும், குருவும் வழிபாட்டுக்கு உரியவர்கள்.ஆனால் உலகத்து உயிர்க்கு எல்லாம் தாயும், தந்தையும், குருவும் ஆனவன் யார்? அந்த ஸ்ரிமன் நாராயணன் தான். அவனை துறந்து பிரத்யக்ஷ தெய்வங்களை வழிபடுவது சிறுபிள்ளைதனம். ஆனால் அத்தகைய பக்திக்கும் பலனை அந்த பரந்தாமன் அளிக்கவே செய்கிறான்.
Message has been deleted

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2013, 11:15:26 PM12/28/13
to thamizhvaasal, Mohanarangan V Srirangam, min tamil, vallamai



2013/12/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
 அவரோடு கூட எத்தனை முறை அப்பாடா நானும் அந்த சஞ்சீவி மலைத் தொட்டுக்கொண்டு பறந்திருக்கிறேன். ராம காரியத்தில் அனுமாருக்கு நான் அஸிஸ்டெண்ட். லீவு நாட்களில் பையன்கள் சேர்ந்து ஏதாவது லூட்டி அடிக்கும் போது போடும் உடனடி நாடகத்தில் நான் எப்பவுமே அனுமார். பழைய கிரிக்கட் பேட்தான் கதை. வீட்டு வாசலில் வந்து கறக்கும் மாட்டு மூககணங்கயிறு பழையது ஒன்று இருந்தது. அதுதான் வால். 
:) 

இன்று யாகம் என்றால் என்ன என்று அறிந்த பின், அரக்கர், காடு, தவம், ரிஷி இவற்றை மூல நூல்களைப் படித்தபின் சிரிப்பு வருகிறது. என்ன கற்பனைகள் இவை! இதற்காக பள்ளிக்கூடம் படிக்கும் ஒரு பையனை யாரோ ஒரு காட்டுத்தாடி அங்கிருந்து வந்து, தன் பொழப்பத்த வேலைக்குக் காவலாக....கேட்டா யாகமாம் ஹவிஸாம் அப்படியே தேவர்கள் வந்து வாங்கிப்பாங்களாம்....ச குழந்தைக் கனவுகள் இவ்வளவு அபத்தமாக கட்டப்படுவதற்குப் பக்கபலமாக இதிஹாஸங்கள்... அவன் படிப்பையும் கெடுத்து, என் படிப்பையும் கெடுத்து, பெற்றவர் சுற்றம் எல்லார் துன்பத்தையும் உண்டாக்கி..அறியாமையைப் பாத்திகட்டி வளர்த்து.... எதிர்த்த வீட்டுக் குழந்தையை தூக்கியபடி அதன் தகப்பன் பால்கனியில் நின்றபடி கதை சொல்லிக்கொண்டு இருக்கிறான்.....ராஜாவொல்லியோ சமத்து பார் அப்பா உனக்கு ஒரு கதை சொல்வேன்னாம்... என்ன கத....ராமர் கதை....ராக்ஷஸாள் கதயா.. ஆமாம் விச்வாமித்ரர் ரிஷியோட போயி யாகத்துல ராமர் காவல் காத்துண்டு.... 

போச்சு..அந்தக் குழந்தை என்னிக்கு வளர்ந்து எல்லாத்தையும் படிச்சு.

இதுபோல எல்லாத்தையும் படித்த பாரதி கதைகள் பற்றியும், யாகம், தவம் பற்றியும் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.


காலத்திற் கேற்ற வகைகள்-அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய்.எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை

சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

மேற்குலத்தார் எவர்?
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

தவமும் யோகமும்
உற்றவர் நாட்டவர் ஊரார் -இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம்-இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர்-நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

யோகம்,யாகம்,ஞானம்

ஊருக் குழைத்திடல் யோகம்;-நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதிமெய்ஞ் ஞானம்.

பதிவு என்னிப் பார்க்க வைக்கிறது.
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2013, 11:21:10 PM12/28/13
to thamizhvaasal, Mohanarangan V Srirangam, min tamil, vallamai
பதிவு எண்ணிப் பார்க்கவைக்கிறது. (கவனமின்றி எழுத்துப் பிழையுடன் எழுதியமைக்கு நண்பர்கள் பொறுத்துக்கொள்ளவும்)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/12/29 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Dec 28, 2013, 11:35:30 PM12/28/13
to சொ. வினைதீர்த்தான், thamizhvaasal, min tamil, vallamai
மிக அருமை ஐயா! நன்றி. 

இந்தப் பகுதியை -- 

கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார். 

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்; 

சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம். <<<< 

இதெல்லாம் பாரதியார் எழுதியது என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள் ஐயா! இல்லையென்றால் நான் எழுதியது என்று நினைத்துக்கொண்டு என்னைப் பற்றிச் சண்டை போடப் போகிறார்கள். 
:-)) 

வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும், <<< 

தகைய அரிதான தென் திசையை அகத்தியர் வென்றது போல .. (வால் ரா) 

Narrationலயே எப்படி ஒரு நுட்பமான ட்விஸ்டு பாருங்க :-) 

***


***





2013/12/29 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 29, 2013, 4:33:18 AM12/29/13
to mint...@googlegroups.com

>>ஆனால் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்கள் குழந்தை திடீரென உங்களிடத்தில் ‘ஏசுதான் ஒரே கடவுள். அவர்தான் நமக்கு உண்மையில் தந்தையும் தாயுமாய் எல்லா உறவுமாய் இருக்கின்றார். நீங்கள் எல்லாம் அவரை ஏர்றுக் கொண்டு வாழ்க்கையில் உய்வு பெறுங்கள் வாழ்நாளை அவமே போக்காதீர்கள்’ என்று போதிக்கத் தொடங்கினால் உங்கள் நிலை என்ன? ஏசு என்று உதாரணத்துக்குச் சொல்கிறேன். உங்கள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் வேறான ஒரு கடவுள் நெறியை உங்கள் குழந்தை யாரோ ஒரு பக்தர் வாயிலாகக் கேட்டு ஈடுபட்டு வந்து சொல்கிறது என்னும் போது? <<

:)))))))

நாரதரை இப்படி நினைத்துப் பார்த்ததே  இல்லை.



 

*** 

Geetha Sambasivam

unread,
Dec 29, 2013, 4:47:21 AM12/29/13
to தமிழ் வாசல், Mohanarangan V Srirangam, min tamil
சரணாகதி தத்துவம் புரிந்தால் அந்தக் குழந்தை இதெல்லாம் கேட்காதோ என்னமோ! :))))) 

பி.கு. உங்களுக்குத் தெரியாத சரணாகதி தத்துவமா? சும்மா நானும் இங்கே இருக்கேன்னு  வருகையைத் தெரியப் படுத்தினேன். :))))


2013/12/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

போச்சு..அந்தக் குழந்தை என்னிக்கு வளர்ந்து எல்லாத்தையும் படிச்சு...படித்தால்....இப்படி உட்கார்ந்துண்டு...நினைச்சு பார்த்து, ‘ராமனைப் போல’ என்று எழுதப் போகிறதோ... 

***

Dr. N.Kannan

unread,
Dec 29, 2013, 5:12:11 AM12/29/13
to mint...@googlegroups.com
குழந்தைப் பருவத்தையும் பெரியோர் பருவத்தையும் போட்டுக் குழப்புவது போல் படுகிறது. நேற்று ஷாப்பிங் மாலில் ஒரு சிறு பையன் என்னைக் கூர்ந்து பார்த்தான். நானும் பார்த்தேன். அவன் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு நிலையில் எனக்கு வெட்கம் வந்து சிரிக்கத்தொடங்கினேன். அவன் இன்னும் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

நாள்.கண்ணன்


Sent from Samsung Mobile


-------- Original message --------
From: Mohanarangan V Srirangam
Date:28/12/2013 8:27 PM (GMT+01:00)
To: Mohanarangan V Srirangam
Cc: min tamil ,தமிழ் வாசல் ,vallamai
Subject: [MinTamil] Re: ராமனைப் போல..!

அப்பொழுது எல்லாம் சின்ன சைஸ் ராமாயணம் கதை, படங்கள் வரைந்து கார்டூனாக ராமாயண புத்தகம் என்று குழந்தைகளுக்கான புத்தகங்கள் உண்டு. நான் அந்த மாதிரி புத்தகங்களுக்குத் தேர்ந்த விமரிசகனாகத்தான் நினைத்து அவற்றைப் படிப்பது வழக்கம். ஏனெனில் எனக்கு என் தாயும் தந்தையும்தான் விரிவாக ராமாயணம் பாரதம் என்று சொல்லியிருக்கிறார்களே! கொஞ்சம் டீடெயில் மிச்ஸிங் என்றாலும் உடனே சொல்லிவிடுவேன். இப்படி இல்லை என்று. ஆனால் அந்தப் படங்கள் போட்ட நூலில் தாடகை, சூர்ப்பணகை, ராவணன் இந்தப் படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அனுமார் அனுமார் என்று சொல்லிக் கொண்டேதான் அந்தப் படங்களைப் பார்ப்பது வழக்கம். ஏதாவது பேப்பரைத் தாண்டி வெளியில் வந்தால் எங்கிருந்தாவது அனுமார் வந்து ஒரே அலேக்காக தூக்கிக்கொண்டு போய்க் காப்பாத்திவிடுவார் என்று ஒரு நம்பிக்கை. 

படத்தில் பார்க்கும் பொழுதே இவ்வளவு பயமாய் இருக்கிறதே..அப்பொழுது இருந்த மக்கள் எவ்வளவு பாவம் கஷ்டங்கள் பட்டிருப்பார்கள் ராவணனிடம். அப்படீ அனுமார் வந்தார்னா... ஏய் என்னன்னு அப்படியே ஒரு அறை விட்டார்னா....ராவணன் சுருண்டு போய் ப்ஹன்னு விழுவான். இப்படித்தான் எண்ணம் ஓடும். பால காண்டம் படங்களைப் பார்க்கும் போது, ராமர் பிறந்தது, நால்வரின் படங்கள், ராமனையும் லக்ஷ்மணனையும் ஒரே தொட்டிலில் போட்டிருப்பார்கள். பரதனையும் சத்ருக்கனனையும் ஒரே தொட்டிலில் போட்டிருப்பார்கள். அப்பொழுது படங்கள் வரைந்த ஏதோ வடக்கிந்திய பேர்வழி. மிகத் திறமையான ஓவியக்காரர். ஒவ்வொரு பாத்திரத்தின் குணங்களைப் படங்களிலேயே கொண்டு வந்திருப்பார். அனுமார் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டு வரும் படம் இருக்கிறதே அதில் அனுமாரின் முகத்தைப் பார்த்திக்கொண்டே இருக்கலாம். தேடிக் கண்டு வெற்றியுடன் திரும்பும் அமைதியான திருப்தி சந்தோஷம் முகத்தில் பளிச்சென்று தெரியும். அவரோடு கூட எத்தனை முறை அப்பாடா நானும் அந்த சஞ்சீவி மலைத் தொட்டுக்கொண்டு பறந்திருக்கிறேன். ராம காரியத்தில் அனுமாருக்கு நான் அஸிஸ்டெண்ட். லீவு நாட்களில் பையன்கள் சேர்ந்து ஏதாவது லூட்டி அடிக்கும் போது போடும் உடனடி நாடகத்தில் நான் எப்பவுமே அனுமார். பழைய கிரிக்கட் பேட்தான் கதை. வீட்டு வாசலில் வந்து கறக்கும் மாட்டு மூககணங்கயிறு பழையது ஒன்று இருந்தது. அதுதான் வால். கடலை உருண்டை இரண்டை வாயில் போட்டு அடக்கியபடி அதுதான் ஆஞ்சநேயரின் முக விலாசம். வசனம் ஈஸி -- அடிக்கடி ஜெய் ராம் ஜெய் ராம். இல்லையென்றால் ‘ராமச்சந்திரனின் தூதன் நானடா ராவணா!’ சத்தம் ரொம்ப போட்டால் பக்கத்தாத்து தங்கம் பாட்டி எட்டிப் பார்ப்பாள். திடீரென்று எட்டிப் பார்த்தால் சமயத்தில் கெடப் நிலைகுலைந்து வாயில் கடலை உருண்டை கடிபட்டுவிடும். அடுத்த கடலை உருண்டை கிடைக்கும் வரை அனுமார் வரமாட்டார். 

அப்பொழுது படித்த ஞாபகம். அவர் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்த ராமரை விசுவாமித்ர மகரிஷி திடீரென்று அங்கு வந்து ராமனை என்னுடன் காட்டிற்கு அனுப்பு என்று கேட்க தசரதர் அழ, வசிட்டர் சொல்லி அனுப்பினார்கள் என்று. ஏதோ யாகம் பண்ணப் போறதாக்வும், அதற்கு ராக்ஷஸாள்ளாம் தொந்தரவு செய்யறதாகவும், விசுவாமித்திரர் யாகம் செய்யும் போது குட்டி ராமர் போய் நின்று அப்படி வில்லை எடுத்து அம்பு விட்டார்னா ராக்ஷஸாள்ளை அப்படியே தள்ளிண்டு போய்க் கடல்ல போட்டுடும். ராமர் பெருமாளோன்னோ... 

ஐயோ இப்படி ஏதாவது விசுவாமித்திரர் வந்து கேட்டா நம்ம அப்பாவும் தன்னுடைய நண்பர்கள் பேச்சைக் கேட்டுண்டு அவரோட அனுப்பிச்சுட்டா என்ன பண்றது....கபடி பேந்தா கோலி எல்லாம் விளையாட முடியாதே....அப்படி மாத்திரம் யாராவது வந்து கேட்டா..அனுப்பிச்சார்னா...அவ்வளவுதான்...கூட போறா மாதிரி நைஸா போயிட்டு..அவர் திரும்பி பார்க்காதப்ப.. சிர்ர்ர்ன்னு பறந்துடணும். வெங்கடேசனாத்து மாடியில போய் ஒளிஞ்சுண்டா அப்பறம் யாராலயும் கண்டு பிடிக்க முடியாது. ஆமாம் எதுக்கு அவரு காட்டுல யாகம் பண்றதுன்னா இவரை வந்து கூட்டுண்டு போகணும்... பாவம் பையன் தானே...என்ன அது யாகம்னா? ஆமாம் விசுவாமித்திரர்தான் பெரிய தபசு ரிஷியாச்சே...அப்படி ஒரு சாபம்னு முறைச்சாலே அவங்கள்ளாம் காலியாயிடுவாங்களே...அப்பறம் ஏன் ராமர் வேண்டும்? ஏம்மா... 

அப்படி இல்லைய்டா... சாபம் கொடுத்துட்டா ரிஷிகளுக்கு அவங்க தவ சக்தியெல்லாம் குறைஞ்சிடும்... மறுபடியும் அவங்க நெடுநாள் தவம் செஞ்சாத்தான் மீண்டும் சக்தி....அதுக்குத்தான் அவங்க சக்தியைக் குறைக்கிறதுக்குத்தான் அரக்கர்கள் எல்லாம் அவங்களுக்கு சும்மா தொல்லை கொடுத்துண்டே இருபபங்க...

யாகம்னா என்ன... 

அது பெரிய வேள்வி குண்டம் அமைச்சு அதுல தீ மூட்டி ஹோமம் பண்ணி மந்திரம் சொல்வாங்க...அப்படியே தேவர்கள் எல்லாம் நேர வருவாங்க....அவங்க கிட்ட ஹவிஸ் வாங்கிக்கிறதுக்கு... 

ஹவிஸ்னா... 

யாகத்துக்குன்னு ஸ்பெஷலா செய்வாங்க.....தேவர்களுக்கு தரத்துக்கு... அதுல கொண்டுவந்து அரக்கர்கள் குப்பை சத்தை மாமிசம் ரத்தம் இதெல்லாம் கொண்டு வந்து போடுவாங்க... அப்படிப் போட்டா யாகம் பவர் போயிடும்.. ரிஷிகள் எல்லாம் யாகத்துல மனம் தியானத்துல இருக்கும் போது பண்ணா அவங்க யாகம் கெடுதோல்லியோ அதுனால யாகத்துல காவல் காக்கறதுக்கு ராமரைக் கேட்டார்... 

ஓ அப்ப ராக்ஷஸாள் வராங்கன்னா ராமருக்குத் தெரியுமா... அப்ப நான் அங்க இருந்து என்ன செய்வேன் தெரியுமா... அப்படீ ஒரு மரத்துல ஏறி உட்கார்ந்துண்டு அங்க கோடியில அவங்க வராங்கன்னா.. ‘ராமா! ராக்ஷஸாள் வராங்க...அம்பு விடு’ன்னு குரல் கொடுப்பேன். அவ்வளவுதான் அப்புடி சும்மா உட்டார்னா...எல்லாம் ஓய் ஓடு ஓடு ராமர் அம்பு தொறத்துதுன்னு ஓட்ரிடுவாங்க...

எல்லாம் அன்று பெரிய மஹா சாகசக் கனவுகள், இதிஹாஸங்கள்...பெரும் தேவ சக்திகள்...! 

இன்று யாகம் என்றால் என்ன என்று அறிந்த பின், அரக்கர், காடு, தவம், ரிஷி இவற்றை மூல நூல்களைப் படித்தபின் சிரிப்பு வருகிறது. என்ன கற்பனைகள் இவை! இதற்காக பள்ளிக்கூடம் படிக்கும் ஒரு பையனை யாரோ ஒரு காட்டுத்தாடி அங்கிருந்து வந்து, தன் பொழப்பத்த வேலைக்குக் காவலாக....கேட்டா யாகமாம் ஹவிஸாம் அப்படியே தேவர்கள் வந்து வாங்கிப்பாங்களாம்....ச குழந்தைக் கனவுகள் இவ்வளவு அபத்தமாக கட்டப்படுவதற்குப் பக்கபலமாக இதிஹாஸங்கள்... அவன் படிப்பையும் கெடுத்து, என் படிப்பையும் கெடுத்து, பெற்றவர் சுற்றம் எல்லார் துன்பத்தையும் உண்டாக்கி..அறியாமையைப் பாத்திகட்டி வளர்த்து.... எதிர்த்த வீட்டுக் குழந்தையை தூக்கியபடி அதன் தகப்பன் பால்கனியில் நின்றபடி கதை சொல்லிக்கொண்டு இருக்கிறான்.....ராஜாவொல்லியோ சமத்து பார் அப்பா உனக்கு ஒரு கதை சொல்வேன்னாம்... என்ன கத....ராமர் கதை....ராக்ஷஸாள் கதயா.. ஆமாம் விச்வாமித்ரர் ரிஷியோட போயி யாகத்துல ராமர் காவல் காத்துண்டு.... 

போச்சு..அந்தக் குழந்தை என்னிக்கு வளர்ந்து எல்லாத்தையும் படிச்சு...படித்தால்....இப்படி உட்கார்ந்துண்டு...நினைச்சு பார்த்து, ‘ராமனைப் போல’ என்று எழுதப் போகிறதோ... 

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Message has been deleted

செல்வன்

unread,
Dec 29, 2013, 11:02:27 AM12/29/13
to Mohanarangan V Srirangam, vallamai, min tamil
2013/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
உங்கள் குழந்தை திடீரென உங்களிடத்தில் ‘ஏசுதான் ஒரே கடவுள். அவர்தான் நமக்கு உண்மையில் தந்தையும் தாயுமாய் எல்லா உறவுமாய் இருக்கின்றார். நீங்கள் எல்லாம் அவரை ஏர்றுக் கொண்டு வாழ்க்கையில் உய்வு பெறுங்கள் வாழ்நாளை அவமே போக்காதீர்கள்’ என்று போதிக்கத் தொடங்கினால் உங்கள் நிலை என்ன? ஏசு என்று உதாரணத்துக்குச் சொல்கிறேன். உங்கள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் வேறான ஒரு கடவுள் நெறியை உங்கள் குழந்தை யாரோ ஒரு பக்தர் வாயிலாகக் கேட்டு ஈடுபட்டு வந்து சொல்கிறது என்னும் போது? 


அரங்கரே..உங்களுக்கு தெரியாதது இல்லை. இரணியன் திருமாலை வழிபட்டவர்களை கொன்றான். கோயில்களை இடித்தான். தானே கடவுள் என்றான். சிவனே கடவுள், முருகனே கடவுள் என சொன்னவர்கள் குடும்பத்தில் பிரகலாதன் விஷ்ணுவே கடவுள் என சொல்லியிருந்து பிரச்சனை வந்திருந்தால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இரணியன் செய்தது அப்படிப்பட்ட விஷயம் அல்ல.

மற்ற மதங்களை நான் பின்பற்றாவிட்டாலும் அவர்கள் கோயிலை இடிப்பது, அம்மத கடவுள்கள் பெயரை சொல்பவர்களை கொல்வது மாதிரி செயல்களில் ஈடுபடுவதை கனவிலும் நினைக்கமாட்டேன். என் குழந்தையை கத்தோலிக்க பள்ளியில் சேர்த்துள்ளேன். தினம் வீட்டுக்கு வந்து "ஜீசஸ் ஈஸ் சூப்பர்ஸ்டார்" என பாட்டு பாடுகிறது. கேட்டு மகிழ்ச்சி தான் அடைகிறேன் :-). இரணியன் உதாரணம் அதனால் இங்கே பொருந்தி வரவில்லை. நாரதர் சிவபக்தர் வீட்டில் கலகம் மூட்டவில்லை. "தானே கடவுள்" என சொல்லி பிறகடவுளர் வழிபாட்டு ஆலயஙக்ளை இடித்த அசுரன் வீட்டிலேயே கலகம் மூட்டினார்


--
செல்வன்

http://selvan.wordpress.com/   (உடல்நலம் குறித்த தமிழ் பதிவு)

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

https://www.facebook.com/war.onsugar (சர்க்கரை மேல் போர்)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

http://www.pinterest.com/holyox/pins/  (தொன்மையான உணவுகள்)

Message has been deleted

N. Kannan

unread,
Dec 29, 2013, 12:25:23 PM12/29/13
to மின்தமிழ்
2013/12/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓ அதுனாலத்தான் போட்டு அந்த வாத்யார் அப்படி அடிச்சுட்டார் போல இருக்கு....:-) 


முதலில் குழந்தைகள் மேல் கைவைப்பதே தப்பு. ஆசிரியர் உம்மை அடித்தது தவறு. ஆனால் பின்னால் வந்து அதற்காக வருந்தியது அவரது உயர் பண்பைக் காட்டுகிறது. இம்மாதிரி ஆசிரியர்களை இப்போது பார்ப்பது துர்லபம். 

பொதுவாக இங்கு நாம் கோபப்படுவதற்குக் காரணமே நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்று கேள்விக்குறியாவது நம்மை அசௌகர்யப்படுத்துவதனால்தான். என்ன ஆகிவிடப்போகிறது? ஹிரண்யனைக் கண்டிருக்கிறது ஆன்மீக உலகம். பின்னால் பெரியார் செருப்பு மாலை போட்டார். அதையும் சகித்துக்கொண்டது தமிழ்ச் சமூகம். 

தாங்கள் யோசிக்க வைக்கிறீர்கள். மாற்றுச்சிந்தனை தருகிறீர்கள். நெருப்பென்று சொன்னால் வாயென்ன வெந்தா போயிடும்? பேசாப்பொருளை பேசித்தான் பார்ப்போமே (ஒரு வரைமுறைக்குள்!)

நா.கண்ணன்
Message has been deleted

Tthamizth Tthenee

unread,
Dec 29, 2013, 9:09:57 PM12/29/13
to mint...@googlegroups.com
அந்த மாதிரி நெனப்பெல்லாம் எனக்கு இல்லீங்க... 

ஏதோ நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். அவவளவுதான். 
நீங்கள்ளாம் பெரியவங்கோ ...புரிஞ்சுருக்கும். 






ஓ அதுனாலத்தான் போட்டு அந்த வாத்யார் அப்படி அடிச்சுட்டார் போல இருக்கு....:-) 



அன்புடன்
தமிழ்த்தேனீ



2013/12/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தாங்கள் யோசிக்க வைக்கிறீர்கள். மாற்றுச்சிந்தனை தருகிறீர்கள். நெருப்பென்று சொன்னால் வாயென்ன வெந்தா போயிடும்? <<< 

அந்த மாதிரி நெனப்பெல்லாம் எனக்கு இல்லீங்க... 

ஏதோ நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். அவவளவுதான். 
நீங்கள்ளாம் பெரியவங்கோ ...புரிஞ்சுருக்கும். 

***

வேந்தன் அரசு

unread,
Dec 30, 2013, 10:14:10 AM12/30/13
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil



29 டிசம்பர், 2013 8:02 முற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2013/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
உங்கள் குழந்தை திடீரென உங்களிடத்தில் ‘ஏசுதான் ஒரே கடவுள். அவர்தான் நமக்கு உண்மையில் தந்தையும் தாயுமாய் எல்லா உறவுமாய் இருக்கின்றார். நீங்கள் எல்லாம் அவரை ஏர்றுக் கொண்டு வாழ்க்கையில் உய்வு பெறுங்கள் வாழ்நாளை அவமே போக்காதீர்கள்’ என்று போதிக்கத் தொடங்கினால் உங்கள் நிலை என்ன? ஏசு என்று உதாரணத்துக்குச் சொல்கிறேன். உங்கள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் வேறான ஒரு கடவுள் நெறியை உங்கள் குழந்தை யாரோ ஒரு பக்தர் வாயிலாகக் கேட்டு ஈடுபட்டு வந்து சொல்கிறது என்னும் போது? 


அரங்கரே..உங்களுக்கு தெரியாதது இல்லை. இரணியன் திருமாலை வழிபட்டவர்களை கொன்றான். கோயில்களை இடித்தான். தானே கடவுள் என்றான். 


இரண்யன் காலத்தில் சிவன் கோவில்கள் இல்லையோ? இருந்தும் அவன் இடிக்கலையோ? 

வேந்தன் அரசு

unread,
Dec 30, 2013, 10:23:55 AM12/30/13
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
வாத்தியார்களைப்பற்றி தீர அறியாமல் பிள்ளைகளை அவரிடம் சேர்க்கக்கூடாது என்பதே இரண்யன் பாடம்,


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

செல்வன்

unread,
Jan 6, 2014, 2:23:25 AM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
உத்தரகாண்டம் வால்மிகி எழுதினது தானா?

ராமாயணத்தில் இடைசெருகல்கள் இல்லையா? பல்லாயிரம் ஆண்டுகளில் பல ராமாயணங்கள், பல வெர்ஷன்கள். அதில் இருக்கும் ஒரு கதை இது. அவ்வளவுதான்.

Geetha Sambasivam

unread,
Jan 6, 2014, 3:19:09 AM1/6/14
to மின்தமிழ்
// பிறரை அழிப்பதற்காக என்ற நோக்கத்தில் கூட சம்பூகன் தவம் செய்யவில்லையே.//


பிறரை அழிக்கும் நோக்கம் மட்டுமின்றித் தானே ஆளவேண்டும் என்னும் எண்ணத்திலும் சம்புகன் தவம் செய்து வந்ததாய்த் தான் படித்திருக்கிறேன். என்றாலும் மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்கிறேன். 

இது பின்னாட்களில் சேர்க்கப்பட்ட கதை என்றே அறிந்திருக்கிறேன். 



2014/1/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

ராமனைப் போல இரு ராமனைப் போல இரு என்று சொல்லிவருவதன் பயன் என்ன? சாதாரணமாக இன்று கல்வி கற்று, உலகம் என்ன என்பதைப் பார்த்துப் பலரோடு பழகி மனம் விரியப் பெற்ற எந்த இளைஞனும் யுவதியும் இதையெல்லாம் படித்துவிட்டு ராமனைப் போல இரு என்றால் என்னைப் போல்தானே அவதியுறுவார்கள்? இல்லை இதையெல்லாம் புரிந்துகொள்ள வேறு சூட்சும அர்த்தங்கள் இருக்கின்றனவா? 

***


ரா.கிருஷ்ணன்

unread,
Jan 6, 2014, 3:34:33 AM1/6/14
to mint...@googlegroups.com
குறைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு படித்தால் அனைத்து வேத, சாஸ்திர, புராண, தந்திரங்களில் அவற்றை காணலாம். இதில் வியக்க ஏதுமில்லை.

அல்லதை விட்டு நல்லதைக் கொள்ள விரும்பினால் இவை அனுபவ ஞான சுரங்கங்கள்.
Message has been deleted
Message has been deleted

செல்வன்

unread,
Jan 6, 2014, 11:44:39 AM1/6/14
to Mohanarangan V Srirangam, vallamai, min tamil

மோகனரங்கன் ஐயா


உத்தரகாண்டம் முழுவதும் பிற்சேர்க்கை என படித்துள்ளேன். சம்பூகன் கதை அதற்கும் பிந்தையது என பல அறிஞர்கள் கூறுகிறார்கள்


http://en.wikipedia.org/wiki/Shambuka

The killing of Shambuka appears in the Valmiki Ramayana, Book 7, the 'Uttarakanda' [Final Chapter], sargas 73-76, in the Adhyatma Ramayana version of Ramayana.

Scholars such as Purushottama Candra Jaina,[2] Bhagawan Singh[3] and John Brockington[4] writes that this story "is of late origin". The story is considered to be of dubious origin due to the following reasons:

  • The story does not find mention in summaries of Ramayana in puranas or the Mahabharata.
  • Hindu texts have never cited the episode of Shambukavadha to debar Sudras from tapasyaa.
  • The entire Uttarakanda itself is suspected to be a later addition due to:
    • Inferior poetic quality of the verses.
    • Occurrence of the phala-shruthi at the end of the sixth Kanda
  • The text of Ramayana, as reflected in the 70 or so existing commentaries varies highly. The story does not appear in any of the other 14 or so Sanskrit versions of Valmiki Ramayana. [5]

Message has been deleted

செல்வன்

unread,
Jan 6, 2014, 12:31:06 PM1/6/14
to Mohanarangan V Srirangam, vallamai, min tamil
ரங்கன் ஐயா

சம்பூகன் கதை வால்மிகி எழுதியது எனவும், எழுதியது இல்லை எனவும் இருவிதமான கருத்துருக்கள் அறிஞர்களிடயே நிலவுகின்றன.

அது வால்மிகி எழுதியதே தான், ராமன் கட்டாயம் சம்பூகனை கொன்றான், அதற்கு பரிசாக கடவுளாக்கபட்டான் என்பது உங்கள் நம்பிக்கை

அது இடை செருகல், ராமன் அப்படி செய்யகூடியவன் இல்லை என்பது என் நம்பிக்கை.

நம் நம்பிக்கை எதுவோ அதற்கு தகுந்த ஆதாரங்களை நாம் தேடிகண்டுபிடிக்கலாம்.

பல சமயங்களில் அப்படிதான் நடந்தும் வருகிறது.

என்னளவில் பட்டாபிஷேகம் வரை வால்மிகி ராமாயணத்தில் கானப்படும் ராமனின் குணாதிசயங்கள் வேறு, உத்தரகான்ட ராமனின் குணாதிசயங்கள் வேறு

முதல் அத்தியாயங்களில் வரும் இராமன் தந்தைக்காக நாட்டு மக்கள் அனைவரும் தன்னிடம் காட்டில் வந்து கெஞ்சியபோதும் முடிசூட மறுத்தவன்

உத்தரகாண்ட இராமன் ஒரே ஒரு குடிமகன் தன் மனைவியை அவதூறாக பேசினான் என்பதற்காக கர்ப்பிணியை காட்டில் விட்டவன்

அதுவும் மனைவியிடம் காட்டில் விடுகிறேன் என்பதை கூட சொல்லாமல் தம்பியிடம் சொல்லி காட்டில் விட சொன்னவன்

முதல் அத்தியாயங்களில் வரும் இராமன் நம்பியோரை கைவிடாதவன். குடும்பத்தின் மேல் அன்பு கொண்டவன், காட்டுக்கு துரத்திய சிற்றன்னையை கூட வெறுக்காதவன்

உத்தரகான்ட இராமன் தாலிகட்டின பெண்டாட்டியை கைவிட்டவன்.

மனைவியை வனவிலங்குகள் வாழும் காட்டில் விடுவது ஸ்திரிஹத்திக்கு ஒப்பானது. மிகப்பெரும் பாவம். தன்னை கொல்ல வந்த அசுரபெண்ணான சூர்ப்பனகையை கூட கொல்லாமல் மூக்கை அரிந்து அனுப்பியவன்

ஆக இந்த இரண்டு பாத்திரபடைப்புகளும் ஒரே எழுத்தாளர் எழுதியது என்பதை நம்ப எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

ஆழ்வார்கள் காலம் இராமாயணத்துக்கு மிக பிற்பட்டது. அவர்கள் காலத்தில் தமிழில் என்ன மாதிரியான இராமாயணங்கள் புழக்கத்தில் இருந்தன என்பது நமக்கு தெரியாது. துளசிதாசர் கூட வேதவதி எனும் பெண்ணை இராவணன் கடத்தியதாக எழுதினார். அவர் பக்தர் என்றாலும் அது மூல இராமாயணத்தில் இல்லை. அதுவே ஆழ்வார் பாடல்களிலும் நிகழ்ந்து இருக்கலாம்.


2014/1/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
  • The text of Ramayana, as reflected in the 70 or so existing commentaries varies highly. The story does not appear in any of the other 14 or so Sanskrit versions of Valmiki Ramayana. [5]
  • >>> 

அதற்குத்தான் ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம், மூன்று வியாக்கியானங்கள் அடங்கிய நூலின் சுட்டியைக் கொடுத்தேன் செல்வன். 

வால்மீகியை மொழிபெயர்த்த ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டக் குறிப்பும் தந்தேன். 

ஆழ்வார்களின் பாடலிலும் குறிக்கப்படுகிறது. 

இனி நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும். 

If you believe that this story does not form part of Valmiki Ramayana, as an article of faith, then I am not one to argue with your faith. 

***
Message has been deleted

ரா.கிருஷ்ணன்

unread,
Jan 6, 2014, 1:09:08 PM1/6/14
to mint...@googlegroups.com
செல்வன் தான் உத்தர காண்டத்தையே இடைச்செருகல் என்றாரே ...பின் அதிலிருந்தே கேட்டால்...

On Monday, January 6, 2014, Mohanarangan V Srirangam wrote:
அதாவது ராமன் ஒரு செயலைச் செய்திருந்தால் அது நியாயமாகத்தான் இருந்திருக்கும். அவரால் ஒறுக்கப்பட்டவர் நிச்சயம் கெட்டவராக இருந்திருப்பார் என்று நாம் நினைப்பது இயல்பு. காரணம் சிறுவயசிலிருந்து கதை சொல்லிகள் நமக்கு மேலும் மேலும் கதையைச் சொல்லி அப்படி உருவாக்கி வைத்திருக்கும் எண்ணம் அது. ஆனால் அந்த எண்ணம் மூல நூல்களைப் போய்ப் படித்தால் அப்படியே இருக்கிறதா? பார்க்கப் போனால் ஏனய்யா மூல நூல்களைப் படித்துத் தொலைத்தோம் என்று சமயத்தில் சிறுவயதின் கனவுலகங்கள் எல்லாம் நொறுங்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. நானும் மிகவும் அவதிப் பாட்டேன். இல்லையென்று சொல்லவில்லை. எனவே உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. 

இங்கே பாருங்கள் அதே உத்தர காண்டத்தில், இன்னொரு கதை. 

விருத்திராசுரன் கதையைப் பலரும் கொஞ்சம் அங்கும் இங்குமாகத் தெரிந்திருக்கலாம். பல இடங்களில் விருத்திரப் பகையே என்று இந்திரனை விளிப்பதாக வரும். 

விருத்திரன் யார்? எப்படி இறந்தான்? அவன் கெட்டவனா? கெட்டவன் இல்லையென்றால் அவன் இறந்ததன் காரணம் யாது? 

விருத்திரனைக் கொன்றதால் இந்திரனுக்கு ப்ரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது என்று உத்தர காண்டத்தில் போட்டிருக்கிறது. ப்ரம்ம ஹத்தி தோஷம் என்றால் பிராம்மணனைக் கொன்றதால் வரும் தோஷம். அப்படி என்றால் விருத்திரன் பிராம்மணன் அல்லவா? சரி பிராம்மணானாக இருந்தாலும் அதர்மமாக, அதாவது, தர்மம் என்றால் நாம் சாதாரணமாகக் கருதும் திருக்குறள் சொல்லும் அறம் என்னும் அர்த்தத்தில் அன்று. ஸ்ரீ ராமன் எந்த தர்மத்தை நிலைநாட்ட உறுதி மூண்டு நின்றானோ அந்த வர்ண தர்மத்தை மீறாமல் தர்மமாக நடந்துகொண்டவன் என்று வால்மீகி ராமாயணம் உத்தர காண்டமே சொல்லுகிறது. எப்படிச் சொல்லுகிறது? ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் போய் முறையிடும் இந்திரன் வாயிலாகவே சொல்லுகிறது. 

அதற்கு ஸ்ரீமஹாவிஷ்ணு சொல்லும் பதில் எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் சரி. 

‘விருத்திரன் எனது பக்தன். எனவே அவனை நான் கொல்ல மாட்டேன். இருந்தாலும் நீ கொல்வதற்கு உனக்கு நான் உபாயம் சொல்லிக் கொடுக்கிறேன்.’ 

அதாவது வேத தர்மப்படி நடந்த ஒரு பிராம்மணன், அதுவும் விஷ்ணு பக்தன், அவனை இந்திரனுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, ஸ்ரீ மஹாவிஷ்ணு தாம் நேரடியாகக் கொல்லாமல் இந்திரன் சூழ்ச்சி செய்து கொல்ல மறைமுக உதவி செய்கிறேன் என்று செய்தது. 

நானாக எதுவும் சொல்லாமல் அந்தப் பகுதிகளை இங்கே அப்படியே தருகிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். 

லக்ஷ்மணன் ராமனிடம் அசுவமேதம் யாகத்தின் பெருமையைச் சொல்லும் கட்டத்தில் சொல்லும் பகுதி இது. 

“முன்பு தேவாஸுரர்கள் ஸ்நேஹமாயிருக்கும்பொழுது விருத்தன் என்று ஓர் அஸுரன் இருந்தான், அவன் எல்லாராலும் கொண்டாடப்பட்டவன்; நோறு யோஜனை அகலமும், முன்னூறு யோஜனை உயரமும் உள்ளவன்; மூன்று லோகங்களிலுள்ள ஸகல வஸ்துக்களையும் தனனைப் போல் பிரீதியுடன் நினைப்பவன்; தர்ம ரஹஸ்யத்தை அறிந்தவன்; நன்றி மறவாதவன்; புண்ய புத்தியுள்ளவன்; ஜாக்கிரதையாய் க்ஷத்திரிய தர்மப்படி பூமியை ஆண்டு வந்தான். அப்பொழுது கிழங்குகளும் வேர்களும் பழங்களும் அமிருதத்தைப் போல் ருசியாயிருந்தன. பூமி பயிரிடாமல் வேண்டிய பதார்த்தங்களைக் கொடுத்தது. இப்படி அத்புதமான ராஜ்யபாலனம் செய்து வருகையில் ஒருக்கால், “உத்தம கதியைக் கொடுக்கக் கூடியது தவமே. மற்றதெல்லாம் புத்தியை மயக்கக் கூடிய ஸுகங்கள். ஆகையால் நிகரற்ற தவம் செய்ய வேண்டும்” என்று நினைத்து, தன் மூத்த புத்திரனை மதுராபதியாக நியமித்து வனத்திற்குச் சென்றான். 

அவனுடைய கடுந்தவத்தால் தேவர்கள் வருத்தமடைந்து விஷ்ணுவிடத்துக்குச் சென்றார்கள். இந்திரன், “ஸ்வாமி! விருத்திரன் செய்யும் தவத்தால் ஸகல லோகங்களும் அவனுக்கு வசப்பட்டன. பலவானும் தர்ம ஆத்மாவுமான அவனை எங்களால் ஜயிக்க  முடியவில்லை. அவன் இன்னும் தவம் செய்து கொண்டிருந்தால் நாங்கள் ஸிருஷ்டியுள்ள வரையில் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். தாங்கள் இப்படி அவனை உபேக்ஷிக்கலாமா? தங்களுடைய பலத்திற்கு முன் அவன் ஒரு க்ஷணமாவது பிழைத்திருக்க முடியுமா? தங்களுடைய பிரீதிக்குப் பாத்ரனானது முதல் அவன் ஸகல லோகங்களுக்கும் அதிபதியானான். தாங்கள் எங்களிடத்தில் கிருபை செய்து ஸகல ஜகத்திற்கும் க்ஷேமத்தை அனுக்கிரஹிக வேண்டும். பயத்தைப் போக்க வேண்டும். இந்தத் தேவர்கள் எல்லோரும் தங்களையே நம்பித் தீனமாய் பிரார்த்திக்கிறார்கள். விருத்திரனைக் கொன்று இவர்களை ரக்ஷிக்க வேண்டும். இதுவரையில் பல தடவைகளில் இவர்களைக் காப்பாற்றவில்லையா? இப்பொழுது கைவிடலாமா? இதனால் அஸுரர்களுக்கு வருத்தமுண்டானாலும் பாதகமில்லை. அவர்கள் பலவான்கள் ஆனதால் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். எங்களுக்கு லோகநாதனான தங்களைத் தவிர வேறு கதியுண்டோ? 

இப்படிப் பிரார்த்திக்கும் இந்திரனையும் தேவர்களையும் பார்த்து மஹாவிஷ்ணு, “அவனுக்கு என்னிடத்தில் விசேஷ பக்தியுண்டு. ஆகையால் அவனைக் கொன்று உங்களை ஸந்தோஷப்படுத்த முடியாது. ஆனால் உங்களுடைய க்ஷேமத்தையும் அவசியம் தேட வேண்டும். ஓர் உபாயத்தைச் சொல்லுகிறேன். என் சக்தியை மூன்றாகப் பிரித்து, ஒன்றை இந்திரனிடத்திலும், மற்றொன்றை வஜ்ராயுதத்திலும் மூன்றாவதைப் பூமியிடத்திலும் வைக்கிறேன். அப்பொழுது தேவராஜன் விருத்ரனை ஸுலபமாய்க் கொல்லலாம்.” என்றார்.’ 

................... 

“தேவர்களுக்குப் பயங்கரனான விருத்ரன் இப்படி நாசமடைந்த பிறகு, இந்திரன் அந்த பிராம்மணனைக் கொன்ற தோஷத்தால் பீடிக்கப்பட்டு, பிரதி க்ஷணமும் மஹா துக்கத்தை அனுபவித்தான். பிரக்ஞையற்றுப் புத்தி சிதறித் தலையில் தடியால் அடிபட்ட மஹா நாகத்தைப்போல் புரண்டான்...” 

(ஸ்ரீ வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், ஸர்க்கம் 84, 85, 86, தமிழ் வசனம் ஸ்ரீ C R ஸ்ரீநிவாசய்யங்கார் B A, லிப்கோ பதிப்பு, 1963) 


அநியாயமாக நட்ந்து கொண்டவனை தண்டித்தது தெய்வம் என்றால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் மிகவும் தர்மவான், நியாயமாக நடந்து கொண்டவன், நல்ல குணங்கள் நிறைந்தவன் என்று இந்திரனாலேயே  கொண்டாடப்ப்பட்ட ஒருவன், தன்னுடைய விசேஷமான பக்தன் என்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவாலேயே கொண்டாடப்பட்ட வைணவன், அவனைக்கொல்ல, யாருக்கோ ஸப்போர்ட் செய்வதற்காகச் சிறிதும் யோசனையின்றி உபாயம் சொல்லித் தருகிறது தெய்வம் என்று கதையை அமைத்தார்களே அவர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள்!. எனக்குத்தான் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவம் போதவில்லை. என் செய்வது! 


***






2014/1/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

// பிறரை அழிப்பதற்காக என்ற நோக்கத்தில் கூட சம்பூகன் தவம் செய்யவில்லையே.//


பிறரை அழிக்கும் நோக்கம் மட்டுமின்றித் தானே ஆளவேண்டும் என்னும் எண்ணத்திலும் சம்புகன் தவம் செய்து வந்ததாய்த் தான் படித்திருக்கிறேன். என்றாலும் மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்கிறேன். 

PRASATH

unread,
Jan 6, 2014, 1:23:52 PM1/6/14
to mint...@googlegroups.com
:)))


2014/1/6 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

PRASATH

unread,
Jan 6, 2014, 1:25:31 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
செல்வன் அண்ணே,

சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது இலக்குமனனா, இராமனா???

(தெரிந்து கொள்ள மட்டுமே...)


2014/1/6 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jan 6, 2014, 1:25:44 PM1/6/14
to vallamai, min tamil, தமிழ் வாசல்
2014/1/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அதாவது ராமன் ஒரு செயலைச் செய்திருந்தால் அது நியாயமாகத்தான் இருந்திருக்கும். அவரால் ஒறுக்கப்பட்டவர் நிச்சயம் கெட்டவராக இருந்திருப்பார் என்று நாம் நினைப்பது இயல்பு. காரணம் சிறுவயசிலிருந்து கதை சொல்லிகள் நமக்கு மேலும் மேலும் கதையைச் சொல்லி அப்படி உருவாக்கி வைத்திருக்கும் எண்ணம் அது. ஆனால் அந்த எண்ணம் மூல நூல்களைப் போய்ப் படித்தால் அப்படியே இருக்கிறதா? பார்க்கப் போனால் ஏனய்யா மூல நூல்களைப் படித்துத் தொலைத்தோம் என்று சமயத்தில் சிறுவயதின் கனவுலகங்கள் எல்லாம் நொறுங்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. நானும் மிகவும் அவதிப் பாட்டேன். இல்லையென்று சொல்லவில்லை. எனவே உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. 



அப்படி எல்லாம் நான் நினைக்கவே இல்லை ஐயா. நான் என் 10 வயதில் இருந்து 2005ம் ஆண்டுவரை நாத்திகனாக தான் இருந்தேன். இணையத்தில் சேர்ந்த புதிதில் மார்க்சிஸ்ட் கட்டுரைகள் எல்லாம் எழுதி இருந்தேன். அதற்கு ஒரு காரணம் சிறுவயதில் சொல்லபட்ட கதைகள். ராமன் வாலியை கொன்றான், சீதையை தீகுளிக்க வைத்தான் என என் அம்மாவும், தாத்தாவும் சொன்னபோது மிகவும் வருத்தபட்டேன். அவர்களுக்கு அதற்கு மேல் விளக்க தெரியவில்லை. மூலநூல்களை படித்து தான் சிறுவயது சந்தேகங்கள் தெளிந்து இராமன் பரம்பொருளின் அவதாரமே என்பதை உணர்ந்தேன். அது இந்த கடந்த எட்டு ஆண்டுகளில் நான் பக்குவம் அடைந்தபின் வந்த மாற்றங்கள்.

அதனால் இது சிறுவயது முதல் இருக்கும் மூடநம்பிக்கை, பிம்பம் அல்ல. உத்தரராமாய்ணமே இடைசெருகல் என்கையில் அதில் வரும் விருத்திராசுரன் கதையை எப்படி உதாரணமாக கொள்வது? புராணம், இதிகாசங்களில் நிறைய இடைசெருகல் இருப்பதாக காஞ்சி பெரியவரே சொல்லியிருக்கிறார். ஆயிரமாயிரம் ஆண்டு பழமையான நூல்கள் அனைத்தும் நேர்வதே இது

செல்வன்

unread,
Jan 6, 2014, 1:27:14 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

2014/1/6 PRASATH <pras...@gmail.com>

செல்வன் அண்ணே,

சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது இலக்குமனனா, இராமனா???


லக்ஷ்மணன் தான். அரிய சொன்னது இராமன்

PRASATH

unread,
Jan 6, 2014, 1:28:56 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
நன்றி அண்ணே...


2014/1/6 செல்வன் <hol...@gmail.com>
Message has been deleted
Message has been deleted

N. Kannan

unread,
Jan 6, 2014, 5:08:16 PM1/6/14
to மின்தமிழ்
2014/1/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ராமாயணத்தை அனுபவிக்கவும் செய்கிறீர்கள். ஆனால் அறிவு பூர்வமாகவும் அலசுகிறீர்களே - என்ற விதத்தில் எழுந்த கெள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் நான் எழுதியது -- 

“ஐயா! நூல்களில் அற்புதமான கருத்துகள், மணிகள் இருக்கின்றன. ஆனால் கால வட்டத்தில் உள்நோக்கம் கொண்ட பல பிற்போக்குக் கூட்டங்களால் இவ்வண்ணம் திரிப்புகளும், வக்கிரமான உருமாற்றல்களும் கூட நட்ந்திருக்கின்றன. குப்பையெது மணியெது என்று சில சமயம் தெரியாமலே போய்விடுகிறது. அதனால் மனிதர்களிடையே நல்ல கருத்துகள் நிற்காமல் நிலைக்காமல் போய்விடுகின்றன். உழவன் பயிரைப் போலவே இருக்கும் சாவியைக் களைகிறான். அப்பொழுதுதான் பயிரின் பலன் கிட்டும்.” 

**

இதைத்தான் பக்தி இயக்கத்தின் மூலம் ஆழ்வார்கள் செய்ய முற்பட்டார்களோ?

 
1. நமது புராண, இதிகாசங்களில் சாரமான விஷ்யமெது என்று முதலில் கண்டு கொள்ளுதல்.
2. இந்த சாரமான விஷத்திலும் ரசமானது எது என்று பிரித்து எடுப்பது (சார தரம் - தரப்படுத்துதல்)
3. பின் இந்த ருசிகரமான விஷத்திலேயே உத்தமமானது எது (சார தமம்) எது என்று கண்டு அதிலேயே ஆனந்தித்து நிற்பது. 

இப்படி நோக்காவிடில், உங்கள் இடுகைகளுக்குப்பின், ‘கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ?’ எனும் ஆழ்வார் சொல் பொருளற்றதாகிறது.

ஒருவகையில் நீங்கள் சொல்லிய விருத்தனென்ற அசுரன் கதை ஜென் கோயன் போல் படுகிறது. நல்லது, கெட்டது, குளிர்-வெப்பம் போன்ற இருபால் வேற்றுமை என்பது பூமண்டல்ப் புரிதல். அதுவே உண்மையென்று கொள்ளலாகாது போலும். சூரியக் கருவிற்குள் நுழையும் விண்கலம் (நுழைய முடிந்தால்) ஓரிடத்தில் பனியில் உறைந்துவிடுமாம். சூரியனுக்குள் பனியா? புரியவில்லை. இவ்வாழ்வு நம் மூளைப்புரிதலையும் விடக் குழப்பமாக உள்ளது. ஆனால் மூளை கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. விஷ்ணுகதை இதைத்தான் சொல்கிறதோ?

2005 வரை தாங்கள் நாத்திகரா? ஆச்சர்யமாக உள்ளது. நீங்களும் ஒரு கண்ணதாசரோ?

நா.கண்ணன்
 
Message has been deleted

Hari Krishnan

unread,
Jan 6, 2014, 11:11:53 PM1/6/14
to mintamil
2014/1/6 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
செல்வன் தான் உத்தர காண்டத்தையே இடைச்செருகல் என்றாரே ...பின் அதிலிருந்தே கேட்டால்...

உத்தர காண்டத்தைப் படித்தவர்களுக்கு, உத்தர காண்டம் இடைச்செருகல் இல்லை என்பதும், உத்தர காண்டத்தில் இராமனுடைய குணாம்சம் எவ்வகையிலும் மாறுபடவில்லை என்பதும் தெரியும்.  ப்ராக்கிங்டன் போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் பால காண்டத்தையும் உத்தர காண்டத்தையும் இடைச் செருகல் என்றும் கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் சொல்லி வருகிறார்கள்.  வால்மீகி இராமாயணத்திலிருந்து பால காண்டத்தையும் உத்தர காண்டத்தையும் நீக்கிவிட்டால், இராமன்,;திருமானின் அவதாரம் என்ற கொள்கை அடிபட்டுப் போய்விடும் என்பது இப்படிப்பட்ட அறிஞர்களின் அடிப்படை அஜென்டா.  இதை ப்ராக்கிங்டன், பகிரங்கமாகவே செய்திருக்கிறார்.

பால காண்டமும் சரி, உத்தர காண்டமும் சரி, இடைச்செருகல் இல்லை என்பதையும்;  நான் அப்படிக் கருதுவதற்கான காரணங்களையும் எழுதியிருக்கிறேன்.  மரபு விக்கியில் அந்தக் கட்டுரைகள் உள்ளன.  வேண்டுபவர்களின் வசதிக்காக சுட்டிகளை இங்கே தருகிறேன்:








இவற்றை நான் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சமயத்தில் சங்க இலக்கிய மேற்கோள்கள் புதியனவாக இருந்தன.  இப்போது இணையம் நெடுகிலும் இந்த மேற்கோள்கள் விரவிக் கிடக்கின்றன.

ப்ராக்கிங்டன்னுடைய தியரியின்படியே பால, உத்தர காண்டங்களை நீக்கிவிட்டாலும், சரபங்கர் பிறப்பு நீங்கு படலம் (வான்மீகத்திலும் இது உண்டு--கம்பன் வர்ணிக்கும் விதத்தில் மட்டும்தான் மிகச் சிறிய மாறுதலைச் செய்திருக்கிறான்) போன்ற பல இடங்களில் இராமன், திருமாலின் அவதாரமே என்பதற்கான செய்திகள் இதிகாசம் நெடுகிலும் இறைந்து கிடக்கின்றன.  இவற்றில் பலவற்றை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறேன்.

மிகச் சிறந்த இராமாயண ஆய்வாளர்களில் ஒருவரான திரு வி இராகவன் தொகுத்தளித்து, சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள The Ramayana Tradition in Asiaவில்  திரு இராகவன், இந்த இடைச்செருகல் வாதத்தை மறுத்திருக்கிறார்.  ஆசியா முழுவதிலும் விரவிக் கிடக்கும் இராமாயணத்தில் பல வேற்றுமைகள் தென்பட்டாலும், அடிப்படையில் சுமார் 60-70 சதம் கதையமைப்பு (ஜப்பான் இராமயணம் உட்பட) ஒரேபோன்ற தன்மையுடன் இருப்பதும் இந்தப் புத்தகத்தில் சுட்டப்பட்டுள்ளது.

சம்புவன் வதைப் படலத்துக்கு வருவோம்.  இது வால்மீகி இராமாயணத்திலும், ஒட்டக் கூத்தருடைய உத்தர காண்டத்திலும் இருப்பது உண்மைதான் என்பதை ரங்கன் சொல்வதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன்.  சம்புவன் அல்லது சம்பூகன் வதைப் படலம் இருக்கிறது உண்மைதான்.  நம் காலத்து விழுமியங்களுடன் அவற்றைக் குழப்பிக் கொள்வது விருப்பமானால், தாராளமாகக் குழப்பிக் கொள்ளட்டும்.  இதனாலெல்லாம் இராமாயணத்தின் தன்மை கெட்டுப் போய்விடவில்லை என்பது என் போன்றோரின் நிலைப்பாடு.

விருத்தாசுரனைக் கொன்ற இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வந்தது ஒரு பக்கம் இருக்கட்டும்.  அபிதான சிந்தாமணி, பக்கம் 716ல் சூதர் என்ற தலைச்சொல்லினடியில் பின்வரும் விவரம் காணப்படுகிறது: 

சூதர்:  1, உரோமஹருஷணர் குமரர்.  வியாசர் மாணாக்கர்.  சூத்திரர்.  இவர் ஒருமுறை புராணபடனஞ் செய்யுங்கால் பலராமரைக் கண்டெழாது இறுமாந்திருந்து, பலராமரா லுயிரிழந்து இருடிகள் வேண்டுகோளால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவர்.  (இவரைக் கொன்ற காரணத்தால் பலராமரை பிரம்மகத்தி பற்றியது.

மேற்படி இடத்தைப் புகைப்பட இணைப்பாகவும் கொடுத்திருக்கிறேன்.  

சூத்திரரைக் கொன்ற பலராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏன் பற்றியது?  ஸ்ரீமதே ரங்காசாரியார் தெருட்டியருள வேண்டும்.

ஸ்ரீமத் ரங்கனாசாரியார் யாரையாவது உருகி உருகி வாழ்த்தியும் வழுத்தியும் துதித்தும் பரவசப்படுகிறார் என்றால், கட்டாயம் அதற்குப் பரிகாரமாக அவரை தூஷித்து எழுதி நிவர்த்தி தேடிக் கொள்வார்.  ரமணர், ராமகிருஷ்ணர், அரவிந்தர், விவேகாநந்தர் என்று பலரும் இந்த சாக்கிய நாயனாரால் கல்லடி பட்டிருக்கிறார்கள்.  

இப்போது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் எழுதிக் கொண்டிருக்கிறார்.  அரியும் சிவனும் ஒண்ணு என்பதை நிறுவுவதற்காகவேனும் ஸ்ரீமத் ரங்கனானந்த தேசிக ஸ்வாமின், சாக்கிய நாயனாராக அவதாரமெடுத்து விஷ்ணுவுக்கும் இந்த கல்லெறி உபசாரத்தை நடத்தியருளும் நாள் வெகுதொலைவிலில்லை என்பது வெள்ளிடை மலை.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
Balarama's Brahmahathi.jpg

Hari Krishnan

unread,
Jan 6, 2014, 11:12:38 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil
2014/1/6 செல்வன் <hol...@gmail.com>
லக்ஷ்மணன் தான். அரிய சொன்னது இராமன்

எந்த இராமயணத்தில், எதை அரியும்படி இலக்குவனிடத்தில் இராமன் சொல்கிறான்?  எந்த இடத்தில்?

Hari Krishnan

unread,
Jan 6, 2014, 11:24:15 PM1/6/14
to mintamil

2014/1/7 Hari Krishnan <hari.har...@gmail.com>

இராமன்,;திருமானின் அவதாரம் என்ற கொள்கை அடிபட்டுப் போய்விடும் என்பது இப்படிப்பட்ட அறிஞர்களின் அடிப்படை அஜென்டா.  இதை ப்ராக்கிங்டன், பகிரங்கமாகவே செய்திருக்கிறார்.

மேற்படிக் கருத்தை இன்னொரு மேனாட்டு அறிஞரான வின்ட்டர்நீட்ஸ் மறுத்திருக்கிறார்.  மேக்ஸ்முல்லரின் காலக் கணக்கே பலவிதமான அஸம்ஷன்களால் நிறைந்தது என்பதையும் சுட்டிக் காட்டியும், அவருடைய காலக் கணக்கு ஆதாரபூர்வமானதன்று என்பதையும் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.  இது ஒரு உபரித் தகவலுக்காக.  இந்த இழையுடன் இதற்கு ‘அஜென்டா’ என்ற வகையில் தொடர்பிருப்பதால் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

ரங்கனாதானந்தாவின் அஜென்டா என்ன என்பது எனக்குத் தெரியாது.

செல்வன்

unread,
Jan 6, 2014, 11:43:32 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

2014/1/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

எந்த இராமயணத்தில், எதை அரியும்படி இலக்குவனிடத்தில் இராமன் சொல்கிறான்?  எந்த இடத்தில்?

    Book III : Aranya Kanda - The Forest Trek

Chapter [Sarga] 18


imaam viruupaam asatiim atimattaam mahodariim |
raakSasiim puruSavyaaghra viruupayitum arhasi || 3-18-20

20. puruSa vyaaghra= oh, manly-tiger; vi ruupaam= freakish; a + satiim= knavish; ati mattaam= overtly, ruttish; mahaa udariim= big, bellied; imaam raakSasiim= this, demoness be; vi ruupayitum arhasi= without, shape [to deface,] apt of you.

"She is freakish, knavish and overtly ruttish, oh, tigerly man, it will be apt of you to deface this paunchy demoness…" Thus Rama said to Lakshmana. [3-18-20]

Verse Locator

iti uk{}to lakshmaNaH tasyaaH kruddho raamasya pashyataH |
uddhR^itya khaDgam cicCheda karNa naasam mahaabalaH || 3-18-21

21. iti uktaH mahaabalaH lakshmaNaH= thus, said, great-mighty, Lakshmana; kruddhaH= infuriated; raamasya pashyataH= while Rama, is seeing; uddhR^itya khaDgam= taking up [drawing,] sword; tasyaaH karNa naasam cicCheda= her, ears, nose, chopped off.

Thus said to that mighty Lakshmana he infuriately drew sword and chopped off her ears and nose before the very eyes of Rama. [3-18-21]

Hari Krishnan

unread,
Jan 6, 2014, 11:47:18 PM1/6/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

On 7 January 2014 10:13, செல்வன் <hol...@gmail.com> wrote:

aam viruupaam asatiim atimattaam mahodariim |
raakSasiim puruSavyaaghra viruupayitum arhasi || 3-18-20

20. puruSa vyaaghra= oh, manly-tiger; vi ruupaam= freakish; a + satiim= knavish; ati mattaam= overtly, ruttish; mahaa udariim= big, bellied; imaam raakSasiim= this, demoness be; vi ruupayitum arhasi= without, shape [to deface,] apt of you.

"She is freakish, knavish and overtly ruttish, oh, tigerly man, it will be apt of you to deface this paunchy demoness…" Thus Rama said to Lakshmana. [3-18-20]


கம்பராமாயணத்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்காகக் கேட்டேன்.

மேற்படி ஸ்லோகத்தில், இராமன் எந்த இடத்தில் சூர்ப்பணகையின் மூக்கையும் செவியையும் அரியும்படி சொல்கிறார்?

இலக்குவன் செய்தது சரியே.  அது வேறு திறக்கு.  ஆனால், சரியாக விளங்கிக் கொள்வதற்காக இதைக் கேட்கிறேன்.  (அது நீங்களாயினும் சரி, நானாயினும் சரி.)

செல்வன்

unread,
Jan 7, 2014, 12:00:40 AM1/7/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

2014/1/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

மேற்படி ஸ்லோகத்தில், இராமன் எந்த இடத்தில் சூர்ப்பணகையின் மூக்கையும் செவியையும் அரியும்படி சொல்கிறார்?

"She is freakish, knavish and overtly ruttish, oh, tigerly man, it will be apt of you to deface this paunchy demoness…" Thus Rama said to Lakshmana. [3-18-20]

Deface means "destroy shape of face by disfigurement" aiya

Hari Krishnan

unread,
Jan 7, 2014, 12:01:46 AM1/7/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil

2014/1/7 செல்வன் <hol...@gmail.com>

Deface means "destroy shape of face by disfigurement" aiya

டீஃபேஸ் என்பதற்கான சமஸ்கிருதச் சொல் என்ன?

Mohanarangan V Srirangam

unread,
Jan 7, 2014, 8:54:17 AM1/7/14
to min tamil
பால காண்டமும் சரி, உத்தர காண்டமும் சரி, இடைச்செருகல் இல்லை என்பதையும்;  நான் அப்படிக் கருதுவதற்கான காரணங்களையும் எழுதியிருக்கிறேன்.  <<<<


நன்றி திரு ஹரிகிருஷ்ணன் 

***


Message has been deleted

செல்வன்

unread,
Jan 7, 2014, 12:48:27 PM1/7/14
to vallamai, Mohanarangan V Srirangam, min tamil, தமிழ் வாசல்
2014/1/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கணவன் மனைவி என்றால் ஸ்ரீராமர் சீதை மாதிரி என்னும் அளவிற்கு சீதாராமர் என்னும் படிவம் மனத்தில் பதியும்படி மரபு நம்மை உருவேற்றியிருக்கிறது. 

இயம் சீதா மா சுதா என்ற ச்லோகத்தைச் சொல்லி எந்தக் கல்யாணமும் நடக்கிறது. 

சீதை, இராமரிடம் தம்பதியினர் கற்றுகொள்ள வேண்டியது என்ன?

இராமன் தசரதன் மகன். தசரதன் பலதாரமணம் புரிந்தவன். இராமன் ஏகபத்தினி விரதன். மனைவியை தவிர சிந்தையாலும் பிற மாதரை தொடாதவன். இந்த 21ம் நூற்ராண்டில் கூட மனிதர்களால் ஒருவனுக்கு ஒருத்தி எனும் அறத்தை பின்பற்ற இயலாமல் வழுக்கி விழுகிறார்கள். அத்தகைய அறமே மன்னர்களிடத்தில் காணப்படாத காலகட்டத்தில் அத்தகையதொரு ஒழுக்கத்தை ஆண்களுக்கு கற்பித்தவர் ஸ்ரீ ராமர்.

பெண்கள் மேல் ஒருவன் கையை வைத்தால் அவனுக்கு என்ன பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்கும் ஸ்ரீ ராமரே உதாரணம். இது இன்றைய சூழலில் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அன்று மன்னர்கள் விரும்பிய பெண்களை அபகரித்து செல்லும் நிலை இருந்தது. அந்த சூழலில் அதற்கு விழுந்த தடை உத்தரவு இராமாயணம். இராவணன் என்ற பெயர் வரகூடாது என்பதற்காகவே பல மன்னர்களும் அடுத்தவன் மனைவியை அபகரிக்கும் வழக்கத்தை விட்டார்கள்.

"இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி" என்ற சொற்றொடரை நமக்கு அளித்தவர் ஜானகி. கணவன் காட்டுக்கு சென்றபோது மகிழ்ச்சியுடன் அரண்மனையை விட்டுவிட்டு கணவனை பின் தொடர்ந்தார். கஷ்டமும், நச்டமும், அரசபோகமும் அனைத்தையும் இரு தம்பதியினரும் ஒன்றாக அனுபவித்தார்கள்.

இது மாதிரியான ஒரு வாழ்வை தான் அனைத்து தம்பதியினரும் அடையவேண்டும் என்பதற்காக சீதா- இராமர் உதாரணம் கூறப்படுகிறது.

அடுத்து தீக்குளிப்பு: சீதை தீக்குளிப்பு ஏன் நிகழ்ந்தது? அப்பாவியான ஒருவரது நடத்தை மேல் களங்கம் கற்பித்தால் அவரது மனம் என்ன பாடுபடும்? சீதை கானகத்தில் அதை இலக்குவனுக்கு செய்தார். மாயமானை தேடிசெல்ல மறுத்த இலக்குவனை "அண்ணன் இறந்ததும் எனை அடைய திட்டமா?" என சுடு சொல்லால் கேட்டார்.

இளையபெருமாள் மனம் அன்று தீகுளித்ததை விட வேதனையை அடைந்து இருக்கும். அதற்கான பரிகாரமே சீதையின் தீகுளிப்பு. 

முன்பு சொன்னதுபோல் உத்தரகாண்ட நிகழ்வுகளை பற்றி நான் கவலைபட போவது இல்லை. இடைசெருகல் இல்லாத தொன்மையான நூல் ஏதும் உலகில் இல்லை

DEV RAJ

unread,
Jan 7, 2014, 10:18:30 PM1/7/14
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் வாசல்
வான்மீகத்தில் தவறில்லை, செல்வன்.
எதையும் மூடி மறைக்கவும் அந்த 
மஹாகவிக்குத் தேவையிருக்கவில்லை.
ரிஷிகள் பதவிக்காகவும், புகழுக்காகவும்
நூல்கள் இயற்றவுமில்லை.

வால்மீகி 'ராம: ராஜ்யம் உபாஸித்வா...'
என எழுதுகிறார். ஶ்ரீராமன் அரசாளவில்லை;
அரசை ஒரு சாதகனைப் போல உபாசித்தவர்,
அவர். 

பிராட்டியின்மீது அவதூறு கூறியவன் 
ஒரு பண்பாடற்ற பாமரான இருக்கலாம். 
ஆனால் ஶ்ரீ ராமனுக்கு அவன் மரியாதைக்குரியவன்.

இக்ஷ்வாகு குலத்தவர் தந்தது குடியாட்சியை,
வெளிப்படையாக அது முடியாட்சிபோல்
தெரிந்தாலும்.ரகுவம்சம் முழுவதையும்
அலச இப்போது அவகாசம் இல்லை.

எல்லா ஊர்திகளும் சாலை விதிமுறைகளைக்
கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  ஆனால் தீயணைப்பு 
ஊர்திக்கு அக்கட்டுப்பாடுகள் பொருந்தா. 


தேவ்

N. Kannan

unread,
Jan 8, 2014, 2:34:21 AM1/8/14
to மின்தமிழ்
2014/1/8 DEV RAJ <rde...@gmail.com>

வான்மீகத்தில் தவறில்லை, செல்வன்.
எதையும் மூடி மறைக்கவும் அந்த 
மஹாகவிக்குத் தேவையிருக்கவில்லை.
ரிஷிகள் பதவிக்காகவும், புகழுக்காகவும்
நூல்கள் இயற்றவுமில்லை.

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இதுவே சநாதன தர்மத்தின் பலமென்றும் புரிகிறது. சற்று விளக்குகிறேன்.

அரங்கனாரின் இடுகைகள் எதிர்மறைபோல் பட்டாலும் அவை உண்மையைத்தான் பேசுகின்றன. ஆனால் இவை முதன்முறையாக அலசப்படுவதாக எண்ணுதல் கூடாது. Ramamayana and Mahabaratha have passed the test of time! இந்தியாவிலென்றில்லை தென்கிழக்கு ஆசியா முழுவதும். பழுதுபட்ட ஒரு கதை இத்தனை பிரபலமாகாது. எனவே பாமரனுக்கும் புரியும் சில விஷயங்களை பண்டிதர்கள் பின்நவீனத்துவ பாணியில் அளிக்கும் போது கொஞ்சம் பயம் வரலாம் ;-)

இராம காதையும், கண்ணன் கதையும் இருக்கின்ற அத்தனை அவதாரங்களிலும் ஏன் இந்திய (மனித) மனத்தில் நின்று போனது? ஆகச்சிறந்த அவதாரங்களாக ஏன் கணிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை மனித அவலத்தைச் சரியாகக் காட்டக்கூடியவையாக உள்ளன. இராமனிடத்தில் நாமிருந்தாலும் இப்படித்தான் சிந்தித்து இருப்போம். மேலும் அது ஒரு காலக்கட்டத்தின் கதை. இன்னும் முக்கியமான சேதி என்னவெனில், இராமனோ, கிருஷ்ணனோ யார் அவதாரமெடுத்தாலும் மண்ணின் விதிகள் மெல்ல, மெல்ல தன் குணங்களைக் காட்ட மறுப்பதில்லை. இருப்பதில் சிறந்தது எது எனுமளவிலேயே அவை சிறப்புப் பெறுகின்றன. ஏனெனில் மண்ணின் விதிகள் கூர்தலுக்குட்பட்டது. பரிணாமம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்துவரும் அவதாரம் கணினித்திரையில் பேசும், பழகும். பெண்ணியம் பேசும், தலித் குரல் கொடுக்கும், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் (;-) இவையெல்லாம் பரிணாமத்திற்கு உட்பட்ட விதிமுறைகள்.

இவை தாண்டி அவனது அரசாட்சி ஒன்றுள்ளது. அங்கு வேறு விதிகள். அங்கு அவன் செயல்படும் விதம் வேறு.

நா.கண்ணன்



 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Geetha Sambasivam

unread,
Jan 8, 2014, 3:18:37 AM1/8/14
to மின்தமிழ்
கடைசி பெஞ்சிலே உட்கார்ந்துட்டு எட்டி எட்டிப் பார்த்துப் படிக்கிறேன்.  கொஞ்சம் தாமதம் தான் ஆகிறது.  என்றாலும் விடாமல் படிக்கிறேன்.


2014/1/8 N. Kannan <navan...@gmail.com>

இவை தாண்டி அவனது அரசாட்சி ஒன்றுள்ளது. அங்கு வேறு விதிகள். அங்கு அவன் செயல்படும் விதம் வேறு.

நா.கண்ணன்



 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--

DEV RAJ

unread,
Jan 8, 2014, 8:28:08 AM1/8/14
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam, தமிழ் வாசல், vallamai
On Tuesday, 7 January 2014 22:06:43 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
இயம் சீதா மா சுதா என்ற ச்லோகத்தைச் சொல்லி எந்தக் கல்யாணமும் நடக்கிறது. 

இயம் ஸீதா மம ஸுதா ஸஹத₄ர்மசரீ தவ||
வடபுல விவாஹங்களில் மட்டுமே

 
இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். என்ன பாத்திரப்படைப்பு இது....தன் மேல் நம்பிக்கை இல்லை. தன் மனைவி மீது நம்பிக்கை இல்லை. தான் நம்புகிற தர்மம், தேவர்கள் அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. மிக உயர்ந்தவர்கள் என்று தானே கருதும் முனிவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. ஏதோ யாரோ சில அறிவற்ற மூட ஜனங்கள்... இவர்கள்தான் ராமனின் வாழ்க்கை முடிவுகளுக்கு வழிகாட்டிகள் என்றால்... Oh God...what is this character, with no identity at all....? கட்சி எதிர்கட்சி ஆடாமல் கொஞ்சம் உங்கள் மனசாட்சியைப் பேச விடுங்கள். 



இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன், ஆயிரநாம உரைகளில் தோய்ந்த
அரங்கனார் விடை கூறவல்லவர் எனும் நம்பிக்கையோடு.
ஆயிர நாமங்களுள் ஒன்றான புருஜித் எனும் திருநாமத்துக்கு
ஶ்ரீ பட்டர் இந்த இராமாயண வசநத்தையே எடுத்துக்காட்டுகிறார் -

ஸத்யேந லோகாந் ஜயதி தீ₃நாந் தா₃நேந ராக₄வ​: | 
கு₃ரூந் ஶுஶ்ரூஷயா வீரோ த₄நுஷா யுதி₄ ஶாத்ரவாந் ||  2-12-29

ஒருகால் ஶ்ரீ பட்டரது இராமாயணப் பனுவல் வாசிப்பிலும் பிழை
இருக்கிறதோ ! 

[இந்த சுலோகம் ஈடு ஐதிஹ்யத்திலும் இருப்பதாக நினைவு]


||ஸத்யேந லோகாந் ஜயதி ||
||ராமோ ராஜ்யமுபாஸித்வா ப்³ரஹ்மலோகம் ப்ரயாஸ்யதி ||
அறநெறி மீறி மனையாளைக் கைவிடுவோனுக்கு
இவை கூடுமோ ?



தேவ் 

N. Kannan

unread,
Jan 8, 2014, 10:13:02 AM1/8/14
to மின்தமிழ்
இவ்விழை தோற்றுவிக்கும் இன்னொரு எண்ணத்தையும் பதிவு செய்துவிட ஆசை! இந்த அவதாரம் எனும் நோக்கு எவ்வளவுதூரம் உண்மையோ அந்த அளவிற்கு பிரச்சனை தரக்கூடியது. இறைவன் இழிந்து வந்து உயிரினத்தைக் காக்கிறான் என்பதில் எச்சந்தேகமும் இல்லை. ஆனால் அதை விளங்கிக்கொள்வதில் பல இடர்கள் உள்ளன.

நம் மின்னூலத்தில் சுபா வெளியிட்ட வையாபுரிப்பிள்ளை நினைவுகள் கொண்ட ஒரு நூலில் வையாபுரியின் தந்தைக்கு ஒரு கொள்கையுண்டு என்று தெரிகிறது. அதாவது இராம நாமத்தைக் கூறிக்கொண்டு பிள்ளைமார் வீட்டிற்குள் யாரும் நுழையக்கூடாதாம். காரணம் வையாபுரியின் தந்தை போட்டிருக்கும் ஒரு கட்டளை. காரணம் கேட்டால், ‘ஒரு மனைவியை ஒழுங்கா வைக்கத்தெரியாத ஒரு சாமியை கும்பிடும் பயல்கள் உள்ளே நுழையக் கூடாது’ என்பதே அந்த விதி. அரங்கனார் போல அவரும் எண்ணியிருப்பார் போல்! இந்தக் கண்ணோட்டம் தமிழக சைவ சித்தாந்தம் உருவாகத்துணை போயிருக்கும் என்று தோன்றுகிறது.

தோற்றரவு, இழிதல், அவதாரம் எனும் கோட்பாடு வேத காலத்திற்கும் முற்பட்டது. நிச்சயமாக திருமூலர், மாணிக்கவாசகர் காலத்திற்கு முற்பட்டது. இதை ஏற்றுக்கொள்வதில் வரும் இடர்களைக் கருதியே தோற்றரவு இல்லாத ஒரு புதிய சித்தாந்தம் தமிழ் மண்ணில் தோன்றியிருக்க வேண்டும். அதுவே சைவ சித்தாந்தமாக பின்னால் அருளாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது குறித்து எனக்கும், முனைவர் லோகாவிற்கும் தொன்று தொட்டு விவாதமுண்டு!

நா.கண்ணன்


2014/1/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Madhurabharati

unread,
Jan 8, 2014, 10:58:00 AM1/8/14
to MinTamil
பெயரும் வடிவமும் கொண்ட கடவுளராகட்டும், அவதாரமாகட்டும் அல்லது தேவதூதராகட்டும் விமர்சனத்துக்குட்படும் விஷயங்கள் அவர் குறித்த நூல்களில் கிடைக்காமல் போகாது - தேடுவோருக்கு.

யார் எதைத் தேடுகிறாரோ அவருக்கு அதுவே கிட்டும்.

பரம்பொருளை வேண்டுகிறவர்கள் அதனையே தேடுகிறார்கள்; அதனை உணரும் தகுதி தமக்கு ஏற்படும்வரை. வீண் விவாதங்களில் காலம் கழிப்பதில்லை.

காரணம்:

மனோவாசாமகோசரா - மனதாலும் வாக்காலும் (அல்லது புலன்களாலும் அறிவாலும்கூட) அது அறியப்படாததாக இருக்கிறது.

நாம் விறகு நிறுக்கும் கருவியால் வானவில்லை அளக்க முயன்றுகொண்டிருக்கிறோம்.

நீண்ட பயணத்துக்குப்பின் அடையப்படும் அந்தக் குறுகிய தூரம்தான் எவ்வளவு பிடிபடாததாக இருக்கிறது!

அன்புடன்
மதுரபாரதி

செல்வன்

unread,
Jan 8, 2014, 2:56:05 PM1/8/14
to vallamai, mintamil, தமிழ் வாசல்

2014/1/7 DEV RAJ <rde...@gmail.com>

பிராட்டியின்மீது அவதூறு கூறியவன் 
ஒரு பண்பாடற்ற பாமரான இருக்கலாம். 
ஆனால் ஶ்ரீ ராமனுக்கு அவன் மரியாதைக்குரியவன்.

இக்ஷ்வாகு குலத்தவர் தந்தது குடியாட்சியை,
வெளிப்படையாக அது முடியாட்சிபோல்
தெரிந்தாலும்.ரகுவம்சம் முழுவதையும்
அலச இப்போது அவகாசம் இல்லை.


தேவ் ஜி

முதற்கண் அந்தக்கால கால மனிதர்களை இந்தகால விதிகளைக் கொண்டு அளப்பது முறை அல்ல. இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் கழித்து இருக்கும் மனித சமூகத்துக்கு நாம் நியான்டர்தால்கள் மாதிரி தென்படுவோமோ என்னவோ?

அடுத்து இராமன் நடத்தியது குடியாட்சி அல்ல. நீதிநூல் மரபுப்படி நடந்த ஆட்சி. குடியாட்சி எனில் கானகத்துக்கு மக்கள் திரண்டுபோய் ஆட்சி செய்ய வா என அழைக்கையில் மறுத்திருக்க மாட்டார். அங்கே ஒட்டுமொத்த நாட்டின் விருப்பத்தையும் தந்தைக்கு அளித்த வாக்குறுதிப்படி நிராகரித்தவர், கல்யாண மேடையில் மனைவிக்கு அளித்த வாக்குறுதியை ஒரு குடிமகனின் பேச்சை கேட்டு நிராகரித்தார் என்பது பொருந்தவில்லை.

பட்டாபிஷேகத்துடன் இராமாயணம் முற்றுபெறுகிறது என்பது தான் என் கருத்து. இலவ குசர் வரலாறு எல்லாம் வாய்மொழியாக பின்னாளில் எழுந்து மூல இராமாயணத்துடன் பிற்சேர்க்கையாக் சேர்க்கபட்டு இருக்கலாம்

N. Kannan

unread,
Jan 8, 2014, 4:38:55 PM1/8/14
to மின்தமிழ்
"ஆக ராஜா ராமன் என்று நினைக்கப்பட்டவர் மொழி, பிரசாரம், கல்வி, ராஜாங்க ஆதரவு ஆகிய வசதிகள் பெற்ற அந்தணர்களின் மனம் குளிர நடந்ததால், அவர்களுக்கு அஞ்சி நடந்ததால் கடவுள் என்று ஆக்கப்பட்டார் என்ற மாதிரியான பார்வைகளுக்கும் இடமிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது நூலின் உள் சான்றுகளை வைத்துப் பார்ப்போமானால். "

>>>>>>

கடவுளாக்கப்படுதல் பற்றிய ஒரு அவதானம்.

உலகில் பொதுவாக பார்க்கப்படும் ஒரு பண்புள்ளது. அதாவது வாழும் போது ஒருவன் எவ்வளவுதான் அநியாயம் செய்திருந்தாலும், அவன் இறந்த பின் அவனிடம் உள்ள நல்லதை மட்டும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பது. அதிசயமாக இருக்கும்! சாவதற்கு முன் தந்தையும் பிள்ளையும் எலியும் பூனையுமாக இருப்பர். இறந்த பின் தந்தை பூஜிக்கத்தக்கவராக கடவுள் அறையில் இருப்பார்.

இதே உளவியல் பனுவலுக்கும் நடப்பதாகப் படுகிறது. வால்மீகி இராமன் என்ற அரசனின் கதையை உள்ளது உள்ளபடி அதன் நிறைகுறைகளோடு சொல்கிறார். நூற்றாண்டுகள் கடந்து அக்கதை மக்களிடம் உலவும் போது அக்கதையில் காணப்படும் குறைகள் மறைந்து நிறைகளே நின்றுவிடுகின்றன. இராமன் கடவுளாகிவிடுகிறான்.

எனவே பிராமணர்களுக்கு செய்ததால் அவன் கடவுளாக்கப்பட்டான் என்பதை மறுபரிசீலணை செய்யலாமென்று தோன்றுகிறது. இராமகாதை, பிராமணர்களால் மட்டும் பரப்பப்படவில்லை. பாமரனுக்கே அக்கதை பிடித்து இருக்கிறது. ஒரு கதையின் வெற்றி என்பது அதில் வரும் பாத்திரங்கள் எவ்வளவு தூரம் உயிருள்ளவையாக உள்ளன என்பதைப் பொறுத்தே அமையும். ஒருமுறை இராமகாதை சொல்லிக்கொண்டு வருகிறார் பரனூர் பெரியவர். எதிரே ஒருவர் கண்களில் நீர் மல்க கேட்டுக்கொண்டு இருக்கிறார். கதை சொன்ன பெரியவருக்கு ஒரே ஆனந்தம். இந்த மனிதர் எவ்வளவுதூரம் இராமனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு இப்படி கண்ணீர் உகுக்கிறார் என்று. கதை (கதாகாலட்சேபம்) முடிந்த பின் அந்த மனிதரைப் பார்த்து கதை சொன்ன பெரியவர் கேட்கிறார். “இராமகாதை உங்கள் உள்ளத்தை உருக்கிவிட்டது போலும்!” என்று. அதற்கு கதை கேட்ட பெரிசு சொன்னதாம், “ஐயா! எங்க வீட்டிலும் ஒரு சித்தி இருந்தா, அவ படுத்தின பாடு உடனே ஞாபகம் வந்தது. அழுதுட்டேன்” என்று :-)

கதை உள்ளத்தை உருக்க வேண்டும், நம்முடன் ஐக்கியப்பட வேண்டும். இராமகாதை இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் பேசப்படுவதே வால்மீகியின் வெற்றிக்குச் சான்று. அவர் வெறுமே இராமனை தெய்வமாகக் காட்டியிருந்தால் இத்தனை ஈடுபாடு வந்திருக்குமா? என்பதே கேள்வி ! ;-)

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Jan 8, 2014, 8:31:29 PM1/8/14
to மின்தமிழ்
மானுடவியலார் உலக சமயங்களைப்பற்றி வெளிப்படுத்திய ஆய்வுச் செய்திகளில் சமயம் என்பது மனித மனத்தில் தோன்றும் அச்சத்தைத் தணிக்க உறுதுணையாகும் உத்தி என்று குரிப்பிடுவார்கள்.  இயற்கையின் அச்சுறுத்துக்களுக்குப் பயந்த மனிதன் தன் சக்திக்கு மீறிய இந்த அச்சுறுத்துக்களில் இருந்து தன்னை மீட்க அந்த இயற்கைச் சக்திகளை சீற்றம் தவிர்த்து நன்மை தர வேண்டி வணங்க ஆரம்பித்தது சமயத்தின் தொடக்கம் என்று குறிப்பிட்டு உருவம் இல்லாத இயற்கைச் சக்திகளுக்கு ஒரு உருவம் படைத்து வணங்க ஆரபித்தததை இயற்கைச் சக்திகளுக்கு உருவம் கொடுத்து வணங்குவதாகக் குறிப்பிடுவர் Humanaized Gods

குமுகத்தில் சிறந்த பண்புகளுடன் உய வாழ்வு வாழ்ந்த மனிதர்கள் போற்றப்பட்டு இறை நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்பதை deified Gods என்று குறிப்பிடுவர்

இந்திரன் வருணன் என்று இயற்கைச் சக்திகள் கடவுள் உருவாக வணங்கிய குமுகம் கிருஷ்ணர் ராமர் போன்ற மனிதரில் மாணிக்கங்களை இறைவனாகக் கருதி வணங்கினர் என்று ஆய்வறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர்

அரிக்கமேடு புகழ் அய்யனபள்ளி அய்யப்பன் அவர்கள் அனைத்துலக மானுடவியலார் மாநாட்டில் இந்த தலிப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.  அதற்கு ஆய்வு உதவியாளன் என்ற நிலையில்  அவருடன் பணியாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது

முழுமையான வாழ்வு வாழாமல் கொலை தற்கொலை விபத்து போற நிகழ்வுகளில் துர்மரணம் அடையும் நல்லவர்கள் கிராம தேவதைகளாக பேய்கள் பேச்சிகளாகக் கிராம அளவில் குடும்ப சாதிக் கடவுளாகவும் மனித இன விருத்தி பொருள் வளம் வேண்டி வணங்கும் கிராம தெய்வங்கள் இன்னொரு வகையான உருவ வழிபாடு என்று நாட்டார் இலக்கியங்கள் குறிப்பிடும்

இம்சை


2014/1/9 N. Kannan <navan...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
Message has been deleted

Subashini Tremmel

unread,
Jan 9, 2014, 3:37:55 PM1/9/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014/1/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
..
நானும் எதுவும் சொல்லவே வேண்டாம். நீங்களே பாருங்கள். 

“ராமன் அதைப் பாடும் சிறுவர்கள் ஸீதையின் புத்திரர்கள் என்று அறிந்து, சுத்தமான ஆசாரமுடைய தூதர்களை அழைத்து, “நீங்கள் வால்மீகி மஹரிஷியிடத்திற்குச் சென்று ஸீதை தோஷமற்றவளாக இருந்தாலும், தபோவனத்தில் தங்களுடைய ஸமீபத்தில் வஸிப்பதால் தோஷம் நீங்கினவளாயிருந்தாலும், தங்களுடைய அனுமதியைப் பெற்று அதை நிரூபிக்கத் தகுந்த பிரமாணம் செய்யட்டும்” என்று சொல்லுங்கள். அந்த மஹரிஷியும் ஸீதையும் அதற்கு இஷடப்படுகிறார்களா என்று அறிந்து வாருங்கள். நாளை காலையில் ஜானகி இந்த ஸபைக்கு வந்து, தான் சுத்தமானவள் என்று நிரூபிக்கட்டும்” என்றார். 

மறுநாள் காலையில் ராமன் யாகசாலைக்குச் சென்று ரிஷிகளை வருவித்தார்... 

ஸீதை கைகூப்பிக் கண்ணீர் பெருகப் பூமியைப் பார்த்த வண்ணமாய் ராமனையே ஹிருதயத்தில் தியானம் செய்து கொண்டிருந்தாள். வேதச்ருதி பிரஹ்மாவைப் பின்தொடர்வதுபோல், ஸீதை வால்மீகியின் பின் வருவதைக்கண்டு எல்லோரும் “நல்லது நல்லது” என்று கொண்டாடினார்கள். அவளுடைய அழகையும் உத்தம குணங்களையும், கஷ்டங்களையும் நினைத்து, அங்கிருந்த ஜனங்கள் ‘ஹா ஹா’ என்று கதறினார்கள். 

கோடி கோடியாய் அங்கே கூடியிருந்த ஜனங்களுக்கு நடுவில் வால்மீகி ஸீதையுடன் சென்று, ராமனைப் பார்த்து, “தசரத புத்திர! இந்த ஸீதை மஹாபதிவிரதை; நீ அனுஷ்டிக்கும் தர்மத்தையே அனுஷ்டிப்பவள்; லோக அபவாதத்திற்குப் பயந்து இவளை என் ஆசிரமத்திற்குச் சமீபத்தில் விட்டாய். அந்த சந்தேகம் நீங்குவதற்காக இப்பொழுது நம்பிக்கையை உண்டாக்குவாள். அதை நீ அங்கீகரிக்க வேண்டும். இந்தச் சிறுவர்கள் ஸீதையின் புத்திரர்கள்; இரட்டைப் பிள்ளைகள்; உன் புத்திரர்களே; உன்னைப் போல் தடையற்ற சக்தியுடையவர்கள். நான் சொல்வதைச் சத்தியம் என்று அறி. நான் வருணனுக்குப் பத்தாவது புத்திரன். இதுவரையில் பொய்யென்பதை அறியாதவன். இந்த ஸீதை தூய்மையுடையவள். ஸீதை தூய்மையற்றவளாயின் அநேக வருஷங்களாய் நான் செய்து வரும் தவத்தின் பலன் எனக்குக் கிடைக்காமற் போகட்டும்...” என்றார். 

----இவ்வாறு சொன்ன வால்மீகியின் வார்த்தையைக் கேட்டு ராமன் கூறிய மறுமொழியைக் கவனியுங்கள்: 

“அதைக்கேட்டு ராகவன் அந்த மஹரிஷியை வணங்கிக் கைகூப்பி, ஸீதையையும் ஸகல ஜனங்களையும் கடைக்கண்ணால் பார்த்து, “ஸகல தர்மங்களையும் அறிந்து புண்ய நிதியாய் பிரஹ்மஞானியாய் விளங்கும் தங்களுடைய வார்த்தை எனக்குப் போதுமான பிரமாணம். முன்பு லங்கையில் ஸகல் தேவ கணங்களும் மஹரிஷிகளும் பார்த்துக் கொண்டிருக்கையில் இவள் இப்படி நம்பிக்கையைச் செய்தாள். அந்தத் தைரியத்தால் இவளை அயோத்யைக்கு அழைத்து வந்தேன். ஆனால் லோக அபவாதம் பொல்லாதது. அதற்குப் பயந்து ஸீதையைத் தள்ளி வைத்தேன். இவள் பாபமர்றவள் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தும் இப்படிச் செய்தேன். இந்த அபராதத்தை மன்னிக்க வேண்டும்.  இந்தக் குசலவர்கள் எனக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளென்று நன்றாகத் தெரியும். ஆனால் இந்த ஜனங்களுக்கெதிரே ஸீதை சுத்தமானவள் என்று ஏற்பட்ட பிறகு அவளிடத்தில் நான் பிரியம் வைப்பது உசிதமல்லவா?” என்றார். 

வாசிக்கும் போதே மனம் வலிக்கின்றது. 

இத்தகைய விளக்கங்களுக்கு பல காரணங்களைக் கூறி  ஸ்ரீராமன் என்ற அவதார வடிவத்தின் சீதை விஷயத்திலான அவரது செயல்களுக்கு  நியாயத்தை கற்பிக்கும் ஆண் உலக பார்வையிலிருந்து பெண்ணாக இருந்து பார்க்கும் என் பெண் உலகின் பார்வை வேறுபடுகின்றது.
 
வால்மீகியின் ராமாயணத்திலிருந்து வரிக்கு வரி நேரடி மொழிபெயர்ப்பாக தாங்கள் வைத்திருக்கும் இந்த வாசிப்பிலிருந்து வால்மீகி ராமாயணத்தில் ஸீதையின் அவல நிலை உண்மையில் மனதைக் கசிய வைக்கின்றது.

தேவர்களைப் பார்த்து ராமன், “தேவ சிரேஷ்டர்களே! வால்மீகி மஹரிஷியின் வார்த்தைகளால் எனக்குப் பூரண நம்பிக்கை யுண்டாயிற்று. ஆனால் இந்த ஜனங்களுக்கெதிரே ஸீதை சுத்தமானவள் என்று நம்பிக்கை செய்த பிறகு அவளிடத்தில் நான் பிரியம் வைப்பது உசிதம்” என்றார். 

அப்பொழுது ஸீதை பதினாகு புவனங்களிலிருக்கும் பிராணிகள் அங்கே வந்திருப்பதைக் கண்டு, லோக அபவாதத்தை நீக்குவதற்குச் சபதம் செய்யும் பாவனையாய் ரஸாதல லோகத்தில் மறைய நினைத்து, தபஸிகள் தரிக்கும் காஷாய வஸ்திரத்துடன், மஹாபதிவிரதையானதாலும் பூமியைப் பிரார்த்திப்பதற்காகவும் தலை குனிந்து கீழ்நோக்கின பார்வையுடன், “நான் ராமனைத் தவிர வேறொருவரை மனத்தாலும் எண்ணாமலிருப்பது ஸத்தியமானால் மாதவனுக்குப் பத்தினியான பூமிதேவி எனக்கு இடம் கொடுக்க வேண்டியது. மனத்தாலும் வாக்காலும் கர்மத்தாலும் ராகவனையே நான்  பூஜிப்பது ஸத்தியமானால் மாதவனுடைய பத்தினியான பூமி தேவி எனக்கு இடம் கொடுக்கட்டும். ராமனைத் தவிர வேறு புருஷனை அறியேன் என்பது நிஜமானால் பூமிதேவி எனக்கு இடம் கொடுக்கட்டும்.” என்று சபதம் செய்தாள். 

உடனே ஒரு ஆச்சரியம் உண்டாயிற்று. பூமி வெடித்து, அதிலிருந்து மஹா பராக்கிரமமுள்ள நாகங்கள் ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஒரு ஸிம்ஹாஸனத்தைத் தலையில் சுமந்துகொண்டு வெளிப்பட்டன. பூமிதேவி ஸீதையை வாரியணைத்து ஆசீர்வதித்து அந்த ஸிம்ஹாஸனத்தில் உட்கார வைத்தாள். உடனே அது மறைந்து ரஸாதலத்திற்குப் போயிற்று. 


இது ஒரு வகையில் உண்மையான நிகழ்வு  + Mythological வடிவம் சேர்ந்த படி விளக்கப்பட்டது போல் தெரிகின்றது. நாகங்கள் வருவது, ஸிம்ஹாசனம் பூமியைப் பிளந்து வருவது என்பதெல்லம் நீக்கி விட்டுப் பார்த்தால் ஸீதையின் இறப்பு என்பதாகவே புரிந்து கொள்ள முடிகின்றது.  

சுபா
 
---- எவ்வளவு பெரிய சாதனை பாருங்கள்! மனைவியை சந்தேகிப்பவரைப் பார்த்திருக்கலாம். ஆனால் சந்தேகித்துச் சந்தேகித்தே உயிரோடு கொன்று, பின்னர் இழுத்து வந்து சத்தியம் செய் என்று ஊர் மன்றத்தில் பொதுவில் வைத்து ஆளையே தொலைத்து விட்ட சாகசம் இருக்கிறதே... இல்லை இதைத்தான் மனித வாழ்க்கையில் இலட்சியம் என்று முன் வைத்தார்களே... அவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள்! 

இதற்கு வருகை புரிந்து கோஷம் போட்டு வாழ்த்துச் சொன்ன பெரியவர்களோ பெரும் ரிஷிக் கணங்கள்! எல்லாரும் மந்த்ர த்ரஷ்டாக்கள்! அதாவது மந்திரங்களை நேரில் க்ண்டவர்கள். பாருங்கள் என்ன அழகாக ஒன்று கூடி ஆகப்பெரிய பிரச்சனை ஒன்றை ஒருவழியாக மீண்டும் முளைக்காத வண்ணம் தீர்த்துக் கட்டிவிட்டார்கள். ஆண் சமுதாயத்திற்கே எவ்வளவு பெரிய பெருமை! பொறுமைக்கு இலக்கணம் என்று சொல்லப்படும் பூமாதேவியே தான் தாங்கும் இந்த ஆடவர்களின் அருமை பெருமையெல்லாம் கண்டு புளாங்கிதம் அடைந்து பொறுக்கமுடியாமல் அடடா...பாவம் என்று அந்த அபலையை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு போய் விட்டாளாம்............. 

....... ராமனைப் போல இரு - என்று முதல் முதலில் சொல்லிக் கொடுத்த பேர்வழி யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

மானிடம், பெண்ணுக்கு நீதி.....இதெல்லாம் சொல்றாங்களே... அப்படீன்னா என்ன? 

கடவுள் அவதாரம் எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்று சொன்னாங்களே....அப்படி என்றால் என்ன? 

***


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Innamburan S.Soundararajan

unread,
Jan 9, 2014, 3:58:27 PM1/9/14
to mintamil, Innamburan Innamburan
கடைசி பெஞ்சு மேலே நிக்கச்சொல்லிட்டா, வாலி வதம் பற்றி எழுதினதற்காக.  அதுலேயிருந்து  பெஞ்சு மேலே தான். நான் இதை எட்டி எட்டிப்பார்த்து படிப்பதுடன் மட்டும் இல்லை தற்காலம் ஶ்ரீமத் ராமாயண பாராயணம் தினந்தோறும் செய்பவன். அமைதி காக்கிறேன். ஸுபாஷிணி மாதிரி எனக்கும் மனம் வலிக்கிறது. புதுமைபித்தன் துடித்தே போய்விட்டார்.

Geetha Sambasivam

unread,
Jan 9, 2014, 9:00:44 PM1/9/14
to மின்தமிழ், Mohanarangan V Srirangam, தமிழ் வாசல்
படிக்கையிலேயே மனம் வலிக்கிறது.  கம்பனை அதிகம் படிக்கலை.  ஓரளவுக்கு வால்மீகியைப் படித்திருப்பதால் ரங்கனார் எழுதி இருப்பது எல்லாம் வால்மீகியும், ராமனும் நேரில் பேசிக்கொள்வது போல் மனதைத் தொட்டது.  அதோடு சமீபத்தில் தான் சீதை மறைந்ததாகச் சொல்லப்பட்ட இடங்களை நேரில் பார்த்ததினால் அதன் தாக்கம் இன்னமும் பெரிதாக இருக்கிறது.  மற்றபடி ரங்கனார் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு விடையையும் அவரே சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன், கடைசி பெஞ்சை விட்டு அகலாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.  


2014/1/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
....... ராமனைப் போல இரு - என்று முதல் முதலில் சொல்லிக் கொடுத்த பேர்வழி யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

மானிடம், பெண்ணுக்கு நீதி.....இதெல்லாம் சொல்றாங்களே... அப்படீன்னா என்ன? 

கடவுள் அவதாரம் எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்று சொன்னாங்களே....அப்படி என்றால் என்ன? 

***


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 9, 2014, 11:10:07 PM1/9/14
to மின்தமிழ்
கீதாம்மா சொன்னதில்,  கடைசி வரிகளை வழிமொழிகிறேன்.. நானும் கடைசி பெஞ்சில்.. 


2014/1/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 9, 2014, 11:32:01 PM1/9/14
to mintamil, Mohanarangan V Srirangam, தமிழ் வாசல்

2014/1/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

படிக்கையிலேயே மனம் வலிக்கிறது.  கம்பனை அதிகம் படிக்கலை.  ஓரளவுக்கு வால்மீகியைப் படித்திருப்பதால் ரங்கனார் எழுதி இருப்பது எல்லாம் வால்மீகியும், ராமனும் நேரில் பேசிக்கொள்வது போல் மனதைத் தொட்டது.

கீதம்மா, உங்களைச் சொல்லவில்லை.  ஆனாலும் ஒன்றைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.  நீங்களும் சரி, பிறரும் சரி, வால்மீகியையோ, கம்பனையோ ‘அவ்வளவாகப்’ படித்ததில்லை என்று சொல்கிறீர்கள்.  சரியாகப் படிக்காதவர்கள் ரங்கனை ஏன் ஆமோதிக்கிறீர்கள்?  அவர் சொல்வது சத்திய வாக்கு என்றால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இராமயணத்தை இவர்தான் முதன்முறையாகப் படிக்கிறாரா?  ஒரு ஐந்தாயிரம் ஆறாயிரம் வருஷங்களில் இவரைத் தவிர இராமாயணம் படிச்சவங்களே இல்லியா?  

நான் பல முறை படித்திருக்கிறேன்.  இவர் சொல்வது எல்லாம் விஷமத்தனமான திரிப்பாகத்தான் இருக்கின்றன.  இப்படியே போனால், பரதன் தலைமேல் இராமன் தன் செருப்பை ஏற்றினான்; அவனுடைய ஆணையால்தான் நாட்டை, செருப்பின் மூலமாக பரதன் ஆண்டான்; இராவணன் என்ற வேதமோதிய பார்ப்பனன், காட்டிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளே என்று இரக்கப்பட்டு சீதைக்கு மறுவாழ்வு கொடுக்க வந்தான்.  அந்தப் பொம்பளைக்குதான் புத்தியில்ல.. கணவனோட கூட்டு சேந்து இராவணனைக் கொன்னுட்டா.  அதனாதான் இராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிச்சதுன்னு வளத்துக்கொண்டே போவார்.  லக்ஷ்மணனை இராமன் போய் ஆற்றில் விழச் சொன்னதாகப் பொருள்படுகிறது இவர் எழுதியிருப்பது:

(இந்தத் தம்பிக்கும் இதுதான் கதி பின்னால், ஏதோ ஒரு சாக்கு சொல்லி ஆளைத் தொலைத்துக்கட்டும் படலம் பின்னால் நடக்கவிருப்பது இதே தம்பிக்குத்தான், 

உத்தரகாண்டத்தை ஒழுங்கா படிச்சாரான்னு கேளுங்க.  இலக்குவன்தான் இராமனுடைய ஆணை பொய்க்கலாகாது என்று சொல்லி, தானே ஆற்றில் விழுகிறான்.  இதுல இராமன் எந்த சாக்கைச் சொல்லி இலக்குவனைத் தொலைத்துக் கட்டியதாக இவர் ரீல் விடுகிறார்?

கடைசி பெஞ்ச்சில் இருந்தால் இருந்துவிட்டுப் போங்கள்.  புரியாத, தெரியாத ஒன்றுக்கு ஏன் ஆதரவளித்து, வலி்க்கிறது, துடிக்கிறது என்றெல்லாம் பேசுகிறீர்கள்?

நாக கணேசனுக்கு மட்டுமல்லாமல், தராசு மோகனரங்கனுக்கும் ஒரே மாதிரியாகப் பிடிக்கப்பட வேண்டும்.  என் நல்ல நண்பர்தான்.  அதற்காக இப்படிக் கண்டபடி எழுதுவது கண்டிக்கத் தக்கது.  அதற்கு அத்தனை பேரும் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, ஆமா ஆமா... பாணியில் வில்லுப்பாட்டுக்கு உடன்பாட்டு பாடுவது--அதுவும் நான் நேரடியாகப் படித்ததில்லை என்ற டிஸ்கியோடு--நிஜமாகவே அருவருப்பாக இருக்கிறது.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 9, 2014, 11:40:26 PM1/9/14
to mintamil



2014/1/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

இத்தகைய விளக்கங்களுக்கு பல காரணங்களைக் கூறி  ஸ்ரீராமன் என்ற அவதார வடிவத்தின் சீதை விஷயத்திலான அவரது செயல்களுக்கு  நியாயத்தை கற்பிக்கும் ஆண் உலக பார்வையிலிருந்து பெண்ணாக இருந்து பார்க்கும் என் பெண் உலகின் பார்வை வேறுபடுகின்றது.
 
இராஜாஜி அவர்களின் சக்கரவர்த்தித் திருமகனில் இறுதிப் பகுதி நினைவுக்கு வருகிறது. (இணையத்தில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அவருடைய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படவில்லையா?).
 
அவர் மிகத் தெளிவாகக் கூறியிருப்பார். நினைவிலிருந்து எழுதுகிறேன். இது கதையாக இருந்தாலும் வரலாறாக இருந்தாலும் அதிலிருந்து படிப்பினைகள் கற்போம்.  நம் நோக்கில் குற்றச்சாட்டுக்கள், குறைகள் கண்டால் அவற்றை நாம் செய்யாதிருந்து நம்மை நெறிப்படுத்திக்கொள்ள அவற்றிலிருந்தும் கற்றுக்கொள்வோம்.
ஏற்கனவே ஒரு இழையில் நான் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

DEV RAJ

unread,
Jan 9, 2014, 11:41:18 PM1/9/14
to mint...@googlegroups.com
On Wednesday, 8 January 2014 20:43:02 UTC+5:30, N. Kannan wrote:
நம் மின்னூலத்தில் சுபா வெளியிட்ட வையாபுரிப்பிள்ளை நினைவுகள் கொண்ட ஒரு நூலில் வையாபுரியின் தந்தைக்கு ஒரு கொள்கையுண்டு என்று தெரிகிறது. அதாவது இராம நாமத்தைக் கூறிக்கொண்டு பிள்ளைமார் வீட்டிற்குள் யாரும் நுழையக்கூடாதாம். காரணம் வையாபுரியின் தந்தை போட்டிருக்கும் ஒரு கட்டளை. காரணம் கேட்டால், ‘ஒரு மனைவியை ஒழுங்கா வைக்கத்தெரியாத ஒரு சாமியை ......


அந்தச் சாமி குறித்து  சைவசமய குரவர் ஒருவர் பாடியிருப்பது அந்த சைவப்பெரியவருக்குத்
தெரியாது போலும் :)) 

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடும்
சேதுபந் தனம்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து..... 


தேவ்

Geetha Sambasivam

unread,
Jan 9, 2014, 11:51:04 PM1/9/14
to மின்தமிழ், Mohanarangan V Srirangam, தமிழ் வாசல்
 //சரியாகப் படிக்காதவர்கள் ரங்கனை ஏன் ஆமோதிக்கிறீர்கள்?  அவர் சொல்வது சத்திய வாக்கு என்றால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இராமயணத்தை இவர்தான் முதன்முறையாகப் படிக்கிறாரா?  ஒரு ஐந்தாயிரம் ஆறாயிரம் வருஷங்களில் இவரைத் தவிர இராமாயணம் படிச்சவங்களே இல்லியா?  //

ரங்கனார் எழுதினதில் என்னைக் கவர்ந்தது வால்மீகியை அவர் மொழிபெயர்த்திருந்த இடங்களே.  அதைத் தான் நேரில் பேசிக்கொள்வதைக் கேட்பது போல் இருந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறேன்.  மற்றபடி.............

சரியாகக் குறிப்பிடாதது என் தவறே. :)) ரங்கனை ஒரு இடத்திலும் ஆமோதித்து எழுதவில்லை;  வலிக்கிறது என்று சொன்னது ஶ்ரீராமனை அவர் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஏற்படுத்திய வலியை மட்டுமே குறிக்கும்.  அதை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்க வேண்டுமோ?? ஆதரவளித்து வலிக்கிறது, துடிக்கிறதுனு சொன்னது  ராமன் இத்தனை வருஷம் ஆகியும் இன்னமும் பேச்சுக் கேட்டுக்கொண்டிருக்கிறானே என்ற ஆதங்கத்திலேயே!  எந்த இடத்திலும் ரங்கன் சொல்வது சரியே எனச் சொன்னதில்லை.  சித்தர்கள், ரிஷிகள், முனிகள் உட்பட அனைவர் பற்றிய அவர் கருத்துக்கும் என் கருத்து எதிர்மாறானவையே. 

நான் ரங்கனின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியவை, முன் பின்னூட்டத்தில் வரவில்லை.  அதைக் கவனிக்காமலேயே க்ளிக் செய்திருக்கிறேன்.  தப்பு முழுவதும் என் மேல் தான். :))))))

5,000 வருஷம் ஆனால் என்ன, எத்தனை வருஷம் ஆனாலும் தான் என்ன?? ராமன் இன்னமும் பேச்சுக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான்.  சுந்தரகாண்டம் படித்துக் கொண்டே இதையும் படித்து வருகிறேன். :))))))  மற்றபடி உங்கள் கோபம் நியாயமானதே!  என்னால் ராமன் சீதையை நிராகரித்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.  அவ்வளவே. இதை ஆணாதிக்கம் என்று சொல்ல என்னால் முடியாது.


2014/1/10 Hari Krishnan <hari.har...@gmail.com>



கீதம்மா, உங்களைச் சொல்லவில்லை.  ஆனாலும் ஒன்றைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.  நீங்களும் சரி, பிறரும் சரி, வால்மீகியையோ, கம்பனையோ ‘அவ்வளவாகப்’ படித்ததில்லை என்று சொல்கிறீர்கள்.  சரியாகப் படிக்காதவர்கள் ரங்கனை ஏன் ஆமோதிக்கிறீர்கள்?  அவர் சொல்வது சத்திய வாக்கு என்றால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இராமயணத்தை இவர்தான் முதன்முறையாகப் படிக்கிறாரா?  ஒரு ஐந்தாயிரம் ஆறாயிரம் வருஷங்களில் இவரைத் தவிர இராமாயணம் படிச்சவங்களே இல்லியா?  

நான் பல முறை படித்திருக்கிறேன்.  இவர் சொல்வது எல்லாம் விஷமத்தனமான திரிப்பாகத்தான் இருக்கின்றன.  இப்படியே போனால், பரதன் தலைமேல் இராமன் தன் செருப்பை ஏற்றினான்; அவனுடைய ஆணையால்தான் நாட்டை, செருப்பின் மூலமாக பரதன் ஆண்டான்; இராவணன் என்ற வேதமோதிய பார்ப்பனன், காட்டிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளே என்று இரக்கப்பட்டு சீதைக்கு மறுவாழ்வு கொடுக்க வந்தான்.  அந்தப் பொம்பளைக்குதான் புத்தியில்ல.. கணவனோட கூட்டு சேந்து இராவணனைக் கொன்னுட்டா.  அதனாதான் இராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிச்சதுன்னு வளத்துக்கொண்டே போவார்.  லக்ஷ்மணனை இராமன் போய் ஆற்றில் விழச் சொன்னதாகப் பொருள்படுகிறது இவர் எழுதியிருப்பது:

(இந்தத் தம்பிக்கும் இதுதான் கதி பின்னால், ஏதோ ஒரு சாக்கு சொல்லி ஆளைத் தொலைத்துக்கட்டும் படலம் பின்னால் நடக்கவிருப்பது இதே தம்பிக்குத்தான், 

உத்தரகாண்டத்தை ஒழுங்கா படிச்சாரான்னு கேளுங்க.  இலக்குவன்தான் இராமனுடைய ஆணை பொய்க்கலாகாது என்று சொல்லி, தானே ஆற்றில் விழுகிறான்.  இதுல இராமன் எந்த சாக்கைச் சொல்லி இலக்குவனைத் தொலைத்துக் கட்டியதாக இவர் ரீல் விடுகிறார்?

கடைசி பெஞ்ச்சில் இருந்தால் இருந்துவிட்டுப் போங்கள்.  புரியாத, தெரியாத ஒன்றுக்கு ஏன் ஆதரவளித்து, வலி்க்கிறது, துடிக்கிறது என்றெல்லாம் பேசுகிறீர்கள்?

நாக கணேசனுக்கு மட்டுமல்லாமல், தராசு மோகனரங்கனுக்கும் ஒரே மாதிரியாகப் பிடிக்கப்பட வேண்டும்.  என் நல்ல நண்பர்தான்.  அதற்காக இப்படிக் கண்டபடி எழுதுவது கண்டிக்கத் தக்கது.  அதற்கு அத்தனை பேரும் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, ஆமா ஆமா... பாணியில் வில்லுப்பாட்டுக்கு உடன்பாட்டு பாடுவது--அதுவும் நான் நேரடியாகப் படித்ததில்லை என்ற டிஸ்கியோடு--நிஜமாகவே அருவருப்பாக இருக்கிறது.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--

Geetha Sambasivam

unread,
Jan 9, 2014, 11:53:05 PM1/9/14
to மின்தமிழ், Mohanarangan V Srirangam, தமிழ் வாசல்
//மற்றபடி ரங்கனார் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு விடையையும் அவரே சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன், கடைசி பெஞ்சை விட்டு அகலாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.  //

இதைக் கவனித்திருந்தீர்களானால் தவறான புரிதலுக்கு இடம் இருந்திருக்காதோ? :)))))))


2014/1/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
Jan 10, 2014, 12:00:48 AM1/10/14
to மின்தமிழ்
2014/1/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>
5,000 வருஷம் ஆனால் என்ன, எத்தனை வருஷம் ஆனாலும் தான் என்ன?? ராமன் இன்னமும் பேச்சுக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான்.  சுந்தரகாண்டம் படித்துக் கொண்டே இதையும் படித்து வருகிறேன். :))))))  மற்றபடி உங்கள் கோபம் நியாயமானதே!  என்னால் ராமன் சீதையை நிராகரித்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.  அவ்வளவே. இதை ஆணாதிக்கம் என்று சொல்ல என்னால் முடியாது.
>>>

உங்கள் இரக்கம் இராமன் மேல் இல்லாமல் சீதை மேல் வந்திருக்க வேண்டும். வால்மீகி காவியம் சீதா காவியம் என்று இங்கு பெரியோர்கள் சொல்லியுள்ளனர். வால்மீகி போன்ற ஒரு பெண்ணியவாதியைக் கண்டிருக்க முடியாது. கதையின் ஓரிடத்திலாவது தாயாரில் குறை வைக்கிறாரா பாருங்கள். கதை படித்த பின் நம் இரக்கம் முழுவதும் ஆணாதிக்க உலகில் பெண் படும் பாடு பற்றி இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் உங்கள் இரக்கம் இராமன் பால் போகிறது. வால்மீகி ஏமாந்தானோ? :-))

க.>

செல்வன்

unread,
Jan 10, 2014, 12:05:07 AM1/10/14
to mintamil, Mohanarangan V Srirangam, தமிழ் வாசல்

2014/1/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

5,000 வருஷம் ஆனால் என்ன, எத்தனை வருஷம் ஆனாலும் தான் என்ன?? ராமன் இன்னமும் பேச்சுக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான்.  சுந்தரகாண்டம் படித்துக் கொண்டே இதையும் படித்து வருகிறேன். :))))))

மகாத்மா காந்தி இராமாயணம் படித்துதான் பல நல்ல பழக்கங்களை கைகொண்டதாக கூறியுள்ளார். நூல்களை படித்து அதில் உள்ள நல்லவற்றை கொள்வது ஒரு பக்கம். இதிகாசங்களை தற்கால நோக்கில் ஆராய்வதும் நல்ல விஷயமே. பல கண்ணோட்டங்களில் பார்த்து கற்றுக்கொள்ள இராமாயணத்தில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிய, புதிய பாடங்கள் நமக்கு கிடைக்கும்.

Dev Raj

unread,
Jan 10, 2014, 12:11:22 AM1/10/14
to mint...@googlegroups.com
On Friday, 10 January 2014 10:35:07 UTC+5:30, செல்வன் wrote:
மகாத்மா காந்தி இராமாயணம் படித்துதான் பல நல்ல பழக்கங்களை கைகொண்டதாக கூறியுள்ளார். நூல்களை படித்து அதில் உள்ள நல்லவற்றை கொள்வது ஒரு பக்கம். இதிகாசங்களை தற்கால நோக்கில் ஆராய்வதும் நல்ல விஷயமே. பல கண்ணோட்டங்களில் பார்த்து கற்றுக்கொள்ள இராமாயணத்தில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிய, புதிய பாடங்கள் நமக்கு கிடைக்கும்
 

செல்வன் சார் நாகையா ரோல் ஏற்கிறார், வாழ்க ! 
ஆனாலும் பேச வேண்டியவை நிறைய



தேவ்

செல்வன்

unread,
Jan 10, 2014, 12:14:13 AM1/10/14
to mintamil

2014/1/9 N. Kannan <navan...@gmail.com>

உங்கள் இரக்கம் இராமன் மேல் இல்லாமல் சீதை மேல் வந்திருக்க வேண்டும். வால்மீகி காவியம் சீதா காவியம் என்று இங்கு பெரியோர்கள் சொல்லியுள்ளனர். வால்மீகி போன்ற ஒரு பெண்ணியவாதியைக் கண்டிருக்க முடியாது. கதையின் ஓரிடத்திலாவது தாயாரில் குறை வைக்கிறாரா பாருங்கள். கதை படித்த பின் நம் இரக்கம் முழுவதும் ஆணாதிக்க உலகில் பெண் படும் பாடு பற்றி இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் உங்கள் இரக்கம் இராமன் பால் போகிறது. வால்மீகி ஏமாந்தானோ? :-))


இராமன் மேல் இரக்கக்கபட எதுவும் இல்லை ஐயா :-) அவன் உலகளந்த திருமால். அவன் வாழ்ந்துகாட்டியது போன்ற ஒரு வாழ்வை வாழ நினைப்பதே முடியாத காரியம். அவன் ஆசையை துறந்த மகாத்மா. கடமையை மனதில் நிறுத்திய யோகி. ஆசா,பாசங்களில் சிக்கி அலைபாயும் சம்சாரிகளான நம் மனதால் அந்த பற்றற்ற ஞானியை புரிந்து கொள்வது இயலாது. அவனது திருவடியை மட்டும் பற்றீனால் போதும். தன் இயல்பை அவனே நமக்கு அறிய தருவான். அப்போதும் அதை முழுக்க உணரும் ஞானம் நம்மை வந்துசேரும் என நம்மால் கூறமுடியாது.

வால்மிகி பெண்ணியவாதியும் அல்ல, ஆணாதிக்கவாதியும் அல்ல. இராமநாமத்தில் மூழ்கி தன்னை தொலைத்தவர். இராமநாமம் உச்சரிக்கையில் ஆண்,பெண் என எந்த பேதமும் இல்லை. 

செல்வன்

unread,
Jan 10, 2014, 12:17:19 AM1/10/14
to mintamil

2014/1/9 Dev Raj <rde...@gmail.com>


செல்வன் சார் நாகையா ரோல் ஏற்கிறார், வாழ்க ! 
ஆனாலும் பேச வேண்டியவை நிறைய

பேசவேண்டியதை முன்பே சொல்லியாகிவிட்டதே தேவ் ஜி? :-) உத்தரகாண்டம் நான் ஏற்றுகொள்வது அல்ல என சொல்லிவிட்டேன். அப்புறம் அதைப்பற்றி வரும் விமர்சன்ங்களுக்கு பதில் எழுதும் அவசியம் இல்லை அல்லவா? உண்மை அல்ல என நம்பும் விஷயத்தை விவாதித்து என்ன பலன்?

Hari Krishnan

unread,
Jan 10, 2014, 12:59:39 AM1/10/14
to mintamil, Mohanarangan V Srirangam, தமிழ் வாசல்

2014/1/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

என்னால் ராமன் சீதையை நிராகரித்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.  அவ்வளவே. இதை ஆணாதிக்கம் என்று சொல்ல என்னால் முடியாது.

இராமன் சீதையை நிராகரிக்கவில்லை.  சீதை, இராமனைப் பிரிந்து காட்டிலே வாழ்ந்தது, அவளுக்களிக்கப்பட்ட தண்டனையானால், இராமன், சீதையைப் பிரிந்து, அவ்வளவு வேதனையையும் தாங்கிக் கொண்டு அரண்மனையில் வாழ்ந்ததும் தண்டனைதான்.  இராமன், தனக்குத் தானே வழங்கிக் கொண்ட தண்டனை.

இல்லையென்றால், அசுவமேத யாகம் போன்ற பெரு வேள்விகளுக்கு அவசியம் என்ற முகாந்திரத்தையாவது காரணம் காட்டி, இராமன் மறுமணம் செய்து கொண்டிருக்கலாம்.  ஏன் செய்து கொள்ளவில்லை?

ஜூலியஸ் ஸீஸர் சொன்ன Caesar's wife must be above suspicion.  என்பது எந்த சந்தர்ப்பத்தில், எதற்காகச் சொல்லப்பட்டது?  போனா டியா ஸ்கேன்டல் என்றால் என்ன?  இராமனை இவ்வளவு திட்டு திட்டினாலும் சீதையை ரங்கனேகூட அவதூறு பேசவில்லை அல்லவா?  சீதையின் மேல் அவதூறு பேச அவருக்குத் துணிவிருக்கிறதா?

அப்படியிருக்கும்போது, ஒன்றுமே இல்லாத ஒரு காரணத்துக்காக பாம்ப்பேயை விவாகரத்து செய்த ஜூலியஸ் ஸீஸர் சொன்ன மேற்படி திருவாசகத்தால் விளைந்தது என்ன?  பாம்ப்பே கெட்டுப் போனவள்; கெட்டுப் போகாதவள் என்று சுமார் இருபத்து மூன்று நூற்றாண்டுகளாக தர்க்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  இணையத்தில் Bona Dea Scandal என்று தேடிப் பாருங்கள்.  அல்லது நான் எழுதிய,






ஆகிய கட்டுரைகளையவது படித்துப் பாருங்கள்.  

யாரோ ஒன்றுக்கும் பொருட்டில்லாத ஒருவன் சொன்னதைக் கேட்டு இராமன், சீதையை வனத்துக்கு அனுப்பினானாம்.  பின் வருவது, நான் பத்தாண்டுகளுக்கும் முன்னர், கலிஃபோர்னியாவின் கம்பன் விழாவுக்காக எழுதிய கனலை எரித்த கற்பின் கனலியிலிருந்து ஒரு பகுதி: 

உத்தர காண்டத்தில் விசயன், பத்திரன், தந்த வக்கிரன், சுமாகதன், காளியன், சுராஞ்சி என்போர் இராமனைக் காண வருகின்றனர்.  அவர்களிடத்திலே, ஊர் மக்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று கேட்கிறான் இராமன்.  முதலில் ஊர் அவன் புகழைப் பேசுவதாக அவர்கள் சொன்னாலும், ‘நீங்கள் கேட்ட நன்மை, தீமை இரண்டையும் கூறுங்கள்.  பயப்பட வேண்டாம்' என்று இராமன் வற்புறுத்திக் கேட்ட பிறகு சொல்கிறார்கள்.
 

மன்னவன் இராமன் மான பங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்கு
இன்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள்
நன்னெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு 
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெருநிலத்து உள்ளோர்

மேற்படி சாரணர்கள்--முனிவர்கள்--வந்து சொன்ன தகவலின் அடிப்படையில்தான் இராமன் முடிவெடுக்க நேர்ந்தது.  ‘பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெருநிலத்து உள்ளோர்’ என்ற இடத்தை கவனிக்கவும்.  மன்னனாகவும், கணவனாகவும் இருந்தாக வேண்டிய நேரத்தில், இராமன், மன்னனாகத் தான் செய்ய வேண்டிதைத் தேர்ந்தெடுத்தான்.

இதை அப்படியே திரித்து, சினிமாக்காரர்களைப் போல எழுதுகிறார் ரங்கன்.  படிக்காமலா எழுதுகிறார்?  அப்படிச் சொல்வாராயின், அது பொய்.

Nagarajan Vadivel

unread,
Jan 10, 2014, 2:04:55 AM1/10/14
to மின்தமிழ்
​இங்கே ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பதல்ல பிரச்சினை

ரங்கனார் நேருக்கு நேர் நெஞ்சுக்கு நீதி என்று தனி மனித உரிமை அடிப்படையில் உள்ள ஏற்ற தாழ்வைச் சுட்டுகிறார்

இறையாண்மை வழி வந்த அரசாளுமையில் சமூக நீதியும் தனி மனித உரிமையும் ஊனப்பட்டு ஊமையாகிப்போவது இயல்புதானே

ஸ்ரீராமன் ஒரு அவதாரம்

ராமன் கோசலைஇன் இளவரசன்

ராமன் ஏக பத்தினி விரதன் என்ற பல நிலைகளில் பார்க்கப்படுவதில் ஒரு குழப்பம் ஏற்படுவது இயற்கை

மிதிலையின் இளவரசி

ராமனின் மனைவி

ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட அபலை 

என்ற எல்லா நிலைகளில் சீதை ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவள்.  

தான் விரும்பியவனை மணந்து அவனுடனே காடேகி அவன் வீரத்தால் மீட்கப்பட்ட பெருமையை உடைய அவள் சிந்தையில் எந்தக் குழப்பமும் எப்போதும் நிகழவில்லை​

சீதை ஒரு முழுமையான ஆளுமை என்பதில் எந்தவித ஐயமும் இல்லை

இம்சை


2014/1/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Jan 10, 2014, 3:00:20 AM1/10/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014/1/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

​இங்கே ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பதல்ல பிரச்சினை

ரங்கனார் நேருக்கு நேர் நெஞ்சுக்கு நீதி என்று தனி மனித உரிமை அடிப்படையில் உள்ள ஏற்ற தாழ்வைச் சுட்டுகிறார்

இறையாண்மை வழி வந்த அரசாளுமையில் சமூக நீதியும் தனி மனித உரிமையும் ஊனப்பட்டு ஊமையாகிப்போவது இயல்புதானே

ஸ்ரீராமன் ஒரு அவதாரம்

ராமன் கோசலைஇன் இளவரசன்

ராமன் ஏக பத்தினி விரதன் என்ற பல நிலைகளில் பார்க்கப்படுவதில் ஒரு குழப்பம் ஏற்படுவது இயற்கை

மிதிலையின் இளவரசி

ராமனின் மனைவி

ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட அபலை 

என்ற எல்லா நிலைகளில் சீதை ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவள்.  

தான் விரும்பியவனை மணந்து அவனுடனே காடேகி அவன் வீரத்தால் மீட்கப்பட்ட பெருமையை உடைய அவள் சிந்தையில் எந்தக் குழப்பமும் எப்போதும் நிகழவில்லை​

சீதை ஒரு முழுமையான ஆளுமை என்பதில் எந்தவித ஐயமும் இல்லை

டாக்டர் நாகராசன்,

மிக அழகாக சுறுக்கமாகத் தந்து விட்டீர்கள். 
மேலும் ஒரு வரியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் நீங்கள் என்பது என் எண்ணம்.

ராமனின் முடிவுகளால் தன் வாழ்க்கையில் அல்லலுற்றவள் சீதை. 

கணவன் மனைவி என்ற உறவில் ஒரு முடிவானது இருவரையும் பாதிக்கக் கூடிய ஒன்றென்றால் அதனைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுகக் வேண்டிய பொறுப்பு இருவருக்கும் உண்டு. ஆனால் இந்த வால்மீகி ராமாயணத்தில் திரு.ரங்கனின் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் காணும் போது முடிவுகளை ராமனே எடுக்க அதன் விளவுகளை தனது சம்மதமின்றி ஆனால், ஏற்கும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு பாத்திரமாகவே சீதை இருக்கின்றார். தனது இறுதி முடிவு வரை.

சுபா

Subashini Tremmel

unread,
Jan 10, 2014, 3:06:29 AM1/10/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014/1/10 செல்வன் <hol...@gmail.com>


2014/1/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
5,000 வருஷம் ஆனால் என்ன, எத்தனை வருஷம் ஆனாலும் தான் என்ன?? ராமன் இன்னமும் பேச்சுக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான்.  சுந்தரகாண்டம் படித்துக் கொண்டே இதையும் படித்து வருகிறேன். :))))))

மகாத்மா காந்தி இராமாயணம் படித்துதான் பல நல்ல பழக்கங்களை கைகொண்டதாக கூறியுள்ளார். நூல்களை படித்து அதில் உள்ள நல்லவற்றை கொள்வது ஒரு பக்கம்.
 
உண்மை செல்வன். மகாத்மா காந்தி என்ற ஒரு ஆணுக்கு இந்திய தேசத்தின் சமூக நலனே தன் வாழ்க்கையாகக் கொண்ட அம்மாமனிதருக்கு ராமனின் குணாதிசியங்களிலிருந்து தனது வாழ்க்கைக்கு ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த பல நல்ல உதாரணங்கள் இருக்கின்றன. அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. ஆனால் சீதையின் நிலையிலிருந்து பார்த்து தன் வாழ்க்குக்கு நீதியும் நெறிகளும் வழிகாட்டுதலும் கற்றுக் கொள்ள நினைக்கும் ஒரு பெண் மனதிற்கு வேறு விஷயங்கள் தான் மனக்கண்களில் தோன்றும். பெண்ணுக்காவும் பார்க்கும் பார்வை உள்ள ஆண்களைத் தவிர்த்து இப்பார்வையைக் காணும் மனப்போக்கை பொதுவாக எதிர்பார்ப்பது பலனைத்தராது என்பதை பல பெண்கள் அறிந்த கால்ம் இது :-)

சுபா
 
இதிகாசங்களை தற்கால நோக்கில் ஆராய்வதும் நல்ல விஷயமே. பல கண்ணோட்டங்களில் பார்த்து கற்றுக்கொள்ள இராமாயணத்தில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிய, புதிய பாடங்கள் நமக்கு கிடைக்கும்.



--
செல்வன்

http://selvan.wordpress.com/   (உடல்நலம் குறித்த தமிழ் பதிவு)

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

https://www.facebook.com/war.onsugar (சர்க்கரை மேல் போர்)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

http://www.pinterest.com/holyox/pins/  (தொன்மையான உணவுகள்)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Jan 10, 2014, 3:28:05 AM1/10/14
to மின்தமிழ்
சீதையிடத்திலோ, ராமனிடத்திலோ எனக்கு இரக்கம் எல்லாம் இல்லை கண்ணன்.  மரியாதையும், பிரமிப்புமே அதிகம்.  எப்படியான வேதனைகளை நாட்டுக்காகவும், குடிமக்களுக்காகவும் தாங்கிக் கொண்டனர் இருவரும்.  சுயநலம் என்பதே இல்லாத வாழ்க்கை அது!  தான், தன் சுகம் என்றில்லாமல் கணவன் மனைவியைப் பிரிந்து போ என்றால், அதைப் புரிந்து கொண்டே தான் மனைவியும் கணவன் சொல்வது சரியே எனப் பிரிந்தும் சென்றாள். சீதையின் மன உரத்தில் பாதி அளவுக்காவது எனக்கு வந்தால் அதுவே போதும்.  அவள் யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. கணவன் தன்னைப் பிரிந்தானே என அவனை வெறுக்கவில்லை.  அவன் நிலையை நன்றாகப் புரிந்து கொண்டாள்.  கடைசிவரை அவன் நினைவாகவே இருந்தாள். அது சத்தியம் என்பதைத் தான் பூமி பிளந்து அவளை உள்வாங்கிக் கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.  

ராமனைப் போலவோ, சீதையைப் போலவோ தம்பதிகளைக் காண முடியாது. சீதை இல்லை என்பதால் ராமன் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு அந்தப்புரத்திற்கு இன்னொரு பெண்ணையா கொண்டு வந்தான்?  இல்லையே!  அவள் இல்லாமல் அவனும் தானே வேதனையை அனுபவித்திருக்கிறான்? சீதைக்கு மட்டுமா வேதனை?? ராமன் அனுபவிக்காத வேதனையா?  என்னால் இதில் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்றெல்லாம் பார்க்க முடியலை. ஏனெனில் துன்பம் அனுபவிப்பது இருவருமே!  உயிரை விட அருமையான மனைவி அருகே இல்லாமல், பெற்ற குழந்தைகளைப் பார்க்க முடியாமல் ராமன் பட்ட கஷ்டத்தை விடவா இன்னொரு கஷ்டம் இருக்க முடியும்?


2014/1/10 N. Kannan <navan...@gmail.com>

--

N. Kannan

unread,
Jan 10, 2014, 3:49:42 AM1/10/14
to மின்தமிழ்
கீதா!

உங்கள் நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ள முடிகிறது.

எப்படியெல்லாம் நம்மை ஐக்கியப்படுத்துகிறது இக்கதை, பாருங்கள். சாகித்ய அகாதமி தலைவராக இருந்த கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி இதைத்தான் சொன்னார் அவரது கேம்பிரிட்ஜ் உரையில். இந்தியாவை இணைக்கும் இரண்டு மர்மக்கயிறுகள் இராமாயணமும், மகாபாரதமும் என்று!

நா.கண்ணன்


2014/1/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 10, 2014, 3:56:46 AM1/10/14
to mintamil



2014/1/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



ராமன் கோசலைஇன் இளவரசன்

ராமன் ஏக பத்தினி விரதன் என்ற பல நிலைகளில் பார்க்கப்படுவதில் ஒரு குழப்பம் ஏற்படுவது இயற்கை

?? 
புதுக் குழப்பம்!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 

N. Kannan

unread,
Jan 10, 2014, 3:57:46 AM1/10/14
to மின்தமிழ்
அன்பின் நாகராச ஐயா:

உங்கள் கருத்துப்படியும் சீதையின் பாத்திரமே அங்கு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது. என்ன, சுபா சொல்கிற மாதிரி இந்த அம்மா இராமனிடம் மனைவி, காதலி என்ற உரிமையிலாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம், ‘என்னையறிந்து, என்னைக் கலந்து கொண்டு உன் முடிவுகளை எடுக்கிறாயா?’ என்று. ஆனால் அவள் பூமியின் புத்ரி. பொறுமையின் சிகரம். தன்னைக் கொடுமைப்படுத்திய அரக்கிகளை மன்னித்தவள், தன்னை மான பங்கப்படுத்த காக்கை உருவில் வந்த அசுரன், இராவணனை மன்னித்தவள். அவளால் இராமனையும் மன்னிக்க முடிகிறது. இப்படிப்பார்த்தால், இராமாயணம் முழுக்க, முழுக்க சீதா காவியம். சீதையின் பெருமையை உலகிற்குக் காட்ட எழுதப்பட்டது. இராமன் துணைப்பாத்திரமாக வருகிறார். ஆனால், ஆணாதிக்க சமூகம் இப்பனுவலைச் சரியாக வாசிக்காமல் இராமனை முதன்மைப்படுத்திவிட்டதோ? என்பது போன்றதொரு கேள்வியை அரங்கனார் இடுகைகள் எழுப்புகின்றன. 

நா.கண்ணன்


2014/1/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Jan 10, 2014, 4:03:17 AM1/10/14
to மின்தமிழ்
2014/1/10 செல்வன் <hol...@gmail.com>
இராமன் மேல் இரக்கக்கபட எதுவும் இல்லை ஐயா :-) அவன் உலகளந்த திருமால். அவன் வாழ்ந்துகாட்டியது போன்ற ஒரு வாழ்வை வாழ நினைப்பதே முடியாத காரியம். அவன் ஆசையை துறந்த மகாத்மா. கடமையை மனதில் நிறுத்திய யோகி.
 

இது வேறு கோணம் செல்வன். ஆனால் அரங்கனார் சுட்டுவது பனுவல் வாசிப்பு பற்றியது. அவர் மூலத்தில் இருப்பதைக் காட்டுகிறார். இல்லை என்று சொல்லி என்ன பயன்?

 
ஆசா,பாசங்களில் சிக்கி அலைபாயும் சம்சாரிகளான நம் மனதால் அந்த பற்றற்ற ஞானியை புரிந்து கொள்வது இயலாது. அவனது திருவடியை மட்டும் பற்றீனால் போதும். தன் இயல்பை அவனே நமக்கு அறிய தருவான். அப்போதும் அதை முழுக்க உணரும் ஞானம் நம்மை வந்துசேரும் என நம்மால் கூறமுடியாது.

வால்மிகி பெண்ணியவாதியும் அல்ல, ஆணாதிக்கவாதியும் அல்ல. இராமநாமத்தில் மூழ்கி தன்னை தொலைத்தவர். இராமநாமம் உச்சரிக்கையில் ஆண்,பெண் என எந்த பேதமும் இல்லை. 


இல்லை செல்வன். வால்மீகி  தாயின் பெருமை சொல்லவே இதை எழுதுகிறார். நம் சரணாகதி தாயாரிடம் மட்டும் இருந்தாலே பலிக்கும். பெருமாளை நம்ப முடியாது ;-)

நா.கண்ணன் 

Tthamizth Tthenee

unread,
Jan 10, 2014, 4:05:41 AM1/10/14
to mint...@googlegroups.com
​அரங்கனாருக்கென்று  தனிப் பாணி

அதில் அவர் வழக்கமாக  யாரையேனும்    விமரிசிக்கத் தொடங்கினால்
கடைசியில்    யாரை இவர் தூஷிக்கிறார் என்று  நாம் நினைக்கிறோமோ

அவரின் புகழ் பாடுவார்

இது ஒரு  பாணி

யாரையேனும் நமக்குப் பிடிக்குமென்றால்  முதலில்  மற்றவர்களோடு சேர்ந்து  கொஞ்சம் திட்டிவிட்டு  அதன் பின்னர் அவர் புகழ் பாடினால்

எல்லோருமே இணைந்து  அவர் புகழ் பாடுவார்கள்  என்பது அரங்கனார் போன்ற    சாதுர்யக்காரகளின் கணிப்பாக இருக்கலாம் 

காத்திருப்போம்

அரங்கன் வலைவீசுகிறார்   அரங்கன் அலை வீசுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ


--

Subashini Tremmel

unread,
Jan 10, 2014, 5:58:54 AM1/10/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014/1/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

​அரங்கனாருக்கென்று  தனிப் பாணி

அதில் அவர் வழக்கமாக  யாரையேனும்    விமரிசிக்கத் தொடங்கினால்
கடைசியில்    யாரை இவர் தூஷிக்கிறார் என்று  நாம் நினைக்கிறோமோ

அவரின் புகழ் பாடுவார்

இது ஒரு  பாணி

யாரையேனும் நமக்குப் பிடிக்குமென்றால்  முதலில்  மற்றவர்களோடு சேர்ந்து  கொஞ்சம் திட்டிவிட்டு  அதன் பின்னர் அவர் புகழ் பாடினால்

எல்லோருமே இணைந்து  அவர் புகழ் பாடுவார்கள்  என்பது அரங்கனார் போன்ற    சாதுர்யக்காரகளின் கணிப்பாக இருக்கலாம் 

காத்திருப்போம்

அரங்கன் வலைவீசுகிறார்   அரங்கன் அலை வீசுகிறது

எனக்கு அப்படி இந்த வாசிப்பில் தெரியவில்லை. திரு.ரங்கன் நேரடியாகவே சொல்கின்றார். நேரடியாகவே விளக்குகின்றார் என்றே நான் புரிந்து கொள்கிறேன் தேனியார்.   எதற்காக காத்திருப்பது ? புரியவில்லையே? 

சுபா

Nagarajan Vadivel

unread,
Jan 10, 2014, 6:29:53 AM1/10/14
to மின்தமிழ்
இது அறிவுலகில் நெடு நாட்களாக நீடித்துவரும் முரண்பாடு என்று கருதலாம்

பண்டைச் சமூகங்கள் முன்னோர் வலியுறுத்திய பண்புக்கூறுகளைக் கேள்வி கேட்காமல் பின்பற்றும் இயல்பில் இயங்குவன.  முன்னோர்கள் எதையும் தீர்க்கமாக யோசித்துத் தீர்வு காண்பவர்.  அவர்கள் சொல்வது எப்போதும் தவறாகாது என்று சிந்திப்பதும் அக்கருத்துக்களை அடி பிறழாமல் அப்படியே வழி வழியாக் எடுத்துச் செல்வதும் இயல்பு. ஆங்கிலத்தில் இதை tenacity என்றழைப்பர்

புதிய சிந்தனைத் தாக்கத்துக்கு ஆளாகும் குமுகம் புதிய கருத்துக்களின் அடிப்படையில் காலம கடந்து நீடிக்கும் பழங்கருத்துக்களின் முரண்பாடு காண்பதும் இயல்பாகும்.  புதிய  சிந்தனை பழைய சிந்தனையோடு முரண்படும்போது சில மாற்றுச் சிந்தனைகள் முகிழ்த்தாலும் பலமான அடித்தளத்தில் அமைந்த பழைய வாழ்வியல் மரபுகளைத் தொலைத்துப் புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் பெரும்பாலோர் தயங்குவார்கள்.

ஒரு சிலர் மாற்றுக்கருத்தை வலியுறுத்தி ஆதாரப் பூர்வமாக வாதிடும்போது அந்தக்கருத்து கவர்ச்சிகரமாகத் தோன்றினாலும் அது நீடித்து நிற்பதில்லை

பழமை வாதத்துக்கு எதிரான அறிவியல் சிந்தனைகள் புராண இதிகாசங்களை எதிர்த்து முன் வைக்கப்படும் சீர்திருத்தக் கருத்துக்கள் எல்லாம் உடனடியாக ஏற்றுக்கொண்டு காலம் காலமாக குமுகம் தங்களை நிலை நிறுத்தும் அடிப்படைப் பண்புகளை விட்டுக் கொடுப்பதில்லை

ஸ்ரீராமனைப்பற்றி எவ்வளவு மாற்றுக் கருத்துக்களை முன் வைத்தாலும் அவை சீர்திருத்த அறிவியல் அடிப்படையில் அமைந்திருந்தாலும் அதைப் பழமைமீது நாட்டம் கொண்ட குமுகங்கள் ஏற்றுக்கொள்வதில்லை

இம்சை


2014/1/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jan 10, 2014, 6:32:55 AM1/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
அன்பு கீதா,

ஒவ்வொருவருக்கும் பார்வையில் வித்தியாசம் இருக்கின்றது. உங்கள் அபிப்ராயத்தை மதிக்கின்றேன்; உங்கள் நம்பிக்கையில் தலையிடுவதை நான் விரும்பவில்லை என்றாலும் என் கருத்தையும் குறிப்பிட விரும்புவதால் ...


2014/1/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>
..  சுயநலம் என்பதே இல்லாத வாழ்க்கை அது!  
 
சுயநலம் என்பதை எப்படி டிபைன் செய்வீர்கள்? ஒரு காட்டில் ஒரு பெண்மனி தனியாக வாழும் சூழல் ஏற்படுவதை ஒரு பெண்ணாக என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ராமன் இலக்குவன் என்ற இரண்டு கூடுதல் நபர்களோடு சென்ற போதே பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட சீதை கர்ப்பினியாக தனியாக ஒரு காட்டில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் உடனே செல்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு சீதை சென்றதாக நான் காணவில்லை. அவளுக்கே தெரியாமல் திடீரென்று விட்டு விட்டு வந்து விட கட்டளை இருக்கும் போது!

இவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டு விட்ட இக்கலத்திலேயே பெண்கள் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு பயணங்கள் செய்கின்றோம். அந்தக் காலச் சூழலை நினைத்துப் பார்க்கிறேன். மனம் திகிலடைகின்றது சீதையின் அப்போதைய சூழலையும் மன நிலையை நினைத்து.  

சீதை உணவிற்கு என்ன செய்திருப்பாள்? வாழ்க்கையில் நிலை பெற என்னென்ன இன்னல்களை அனுபவித்திருப்பாள். நினைத்துப் பார்க்கின்றேன். அவரது சோகங்களை ஓரளவாது புரிந்து  கொள்ள முயற்சிக்கும் போது வேதனை அதிகமாகின்றது.


தான், தன் சுகம் என்றில்லாமல் கணவன் மனைவியைப் பிரிந்து போ என்றால், அதைப் புரிந்து கொண்டே தான் மனைவியும் கணவன் சொல்வது சரியே எனப் பிரிந்தும் சென்றாள். சீதையின் மன உரத்தில் பாதி அளவுக்காவது எனக்கு வந்தால் அதுவே போதும்.  அவள் யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. கணவன் தன்னைப் பிரிந்தானே என அவனை வெறுக்கவில்லை.  அவன் நிலையை நன்றாகப் புரிந்து கொண்டாள்.  கடைசிவரை அவன் நினைவாகவே இருந்தாள். அது சத்தியம் என்பதைத் தான் பூமி பிளந்து அவளை உள்வாங்கிக் கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.  
 
ராமனைப் போலவோ, சீதையைப் போலவோ தம்பதிகளைக் காண முடியாது. சீதை இல்லை என்பதால் ராமன் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு அந்தப்புரத்திற்கு இன்னொரு பெண்ணையா கொண்டு வந்தான்?  இல்லையே!  அவள் இல்லாமல் அவனும் தானே வேதனையை அனுபவித்திருக்கிறான்? சீதைக்கு மட்டுமா வேதனை?? ராமன் அனுபவிக்காத வேதனையா?  என்னால் இதில் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்றெல்லாம் பார்க்க முடியலை. ஏனெனில் துன்பம் அனுபவிப்பது இருவருமே!  உயிரை விட அருமையான மனைவி அருகே இல்லாமல், பெற்ற குழந்தைகளைப் பார்க்க முடியாமல் ராமன் பட்ட கஷ்டத்தை விடவா இன்னொரு கஷ்டம் இருக்க முடியும்?

இன்றைய சூழலில் மனைவியை விட்டு தன் சொந்த குழந்தையயும் விட்டு விட்டு தன் வாழ்க்கையை நடத்தும் ஆண்களில் சிலரை சந்தித்திருக்கின்றேன். என் நெருங்கிய உறவிலேயே கூட இப்படி ஒரு குடும்பம் இருக்கின்றது.  நம் நா.கண்ணனுக்கும் தெரிந்தவர்தான் அப்பெண்.  மனித வாழ்க்கையில் இந்த சோகத்தை நேரடியாகப் பார்த்து அந்தப் பெண்ணின் துன்பத்தை நெருக்கமாக அறிந்த எனக்கு இதில் ஆணின் சுயநலம் அதிகமாகவும் பெண்ணின் துயர் மிக்க சூழல் பெரிதாகவும் தெரிகின்றது.  அவர்களின் ஒரே மகன் தந்தையின் உறவே வேண்டாம் என ஒதுக்கி விட்டான். இதெல்லாம் நிஜக் கதை. 

தெய்வீகக் கதைகளோடு மானிட கதைகளை ஒப்பிடலாமா என நீங்கள் கேட்டால் அதற்கு எனக்கு பதிலில்லை. மனித வாழ்க்கைக்கு உதவும் தெய்வீகக் கதைகளின் கதாநாயகனே எனக்கு பொருளுள்ள தெய்வீகப் புருஷனாகப் படுகின்றான். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. 

சுபா


2014/1/10 N. Kannan <navan...@gmail.com>

2014/1/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>
5,000 வருஷம் ஆனால் என்ன, எத்தனை வருஷம் ஆனாலும் தான் என்ன?? ராமன் இன்னமும் பேச்சுக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான்.  சுந்தரகாண்டம் படித்துக் கொண்டே இதையும் படித்து வருகிறேன். :))))))  மற்றபடி உங்கள் கோபம் நியாயமானதே!  என்னால் ராமன் சீதையை நிராகரித்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.  அவ்வளவே. இதை ஆணாதிக்கம் என்று சொல்ல என்னால் முடியாது.
>>>

உங்கள் இரக்கம் இராமன் மேல் இல்லாமல் சீதை மேல் வந்திருக்க வேண்டும். வால்மீகி காவியம் சீதா காவியம் என்று இங்கு பெரியோர்கள் சொல்லியுள்ளனர். வால்மீகி போன்ற ஒரு பெண்ணியவாதியைக் கண்டிருக்க முடியாது. கதையின் ஓரிடத்திலாவது தாயாரில் குறை வைக்கிறாரா பாருங்கள். கதை படித்த பின் நம் இரக்கம் முழுவதும் ஆணாதிக்க உலகில் பெண் படும் பாடு பற்றி இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் உங்கள் இரக்கம் இராமன் பால் போகிறது. வால்மீகி ஏமாந்தானோ? :-))

க.>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Tthamizth Tthenee

unread,
Jan 10, 2014, 7:45:59 AM1/10/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
எனக்கு அப்படி இந்த வாசிப்பில் தெரியவில்லை. திரு.ரங்கன் நேரடியாகவே சொல்கின்றார். நேரடியாகவே விளக்குகின்றார் என்றே நான் புரிந்து கொள்கிறேன் தேனியார்.   எதற்காக காத்திருப்பது ? புரியவில்லையே? 

​திருமதி சுபாஷிணிட்ரெம்மல் அவர்களே  அப்படியானால்  ரங்கன் அவர்கள் எழுதுவது சரியென்று ஒப்புக் கொள்கிறீர்களா



அன்புடன்
தமிழ்த்தேனீ

2014/1/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Jan 10, 2014, 7:57:14 AM1/10/14
to மின்தமிழ்
2014/1/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>


காத்திருப்போம்

அரங்கன் வலைவீசுகிறார்   அரங்கன் அலை வீசுகிறது

எனக்கு அப்படி இந்த வாசிப்பில் தெரியவில்லை. திரு.ரங்கன் நேரடியாகவே சொல்கின்றார். நேரடியாகவே விளக்குகின்றார் என்றே நான் புரிந்து கொள்கிறேன் தேனியார்.   எதற்காக காத்திருப்பது ? புரியவில்லையே? 


சுபா

தேனீயாரின் கணிப்புமொருவகையில் சரியே! மதியூகியான இந்த ரங்கன் அந்தக் கண்ணன் போல சேட்டைகள் பல செய்பவர்தான். என்ன திட்டம் போடுகிறார் என்பது முதலில் புரிவதில்லை. அது ஒரு கண்ணோட்டம்.

உங்கள் கணிப்புப்படி பார்த்தால் இன்னொன்றும் சொல்லத்தோன்றுகிறது. ஏன் ரங்கன் நம்மை இம்சை படுத்துகிறார் என்று யோசித்தால் ஒன்று புரியும். ரங்கனது எழுத்தை வைத்து ரங்கனைப்பற்றிய ஒரு அபிப்பிராய உருவொன்றை நாம் உண்டாக்கி வைத்திருக்கிறோம். அதை அவர் முயன்று உடைக்கும் போது நமக்கு ஏன் வலிக்கிறது என்றால் நமது ஈகோவும் கூடவே உடைகிறது. சற்று கூர்ந்து யோசித்தால் நிஜ வாழ்விலும், மின்னுலகிலும் பிம்பங்களுக்குள்ளேயே உறவுகள் நடக்கின்றன என்பது புரியும். எல்லோருக்கும் எல்லோர் பற்றியும் ஒரு பிம்பம் இருக்கும். அது உடையும் போது 90% எதிர்வினையே கிளம்பும். காரணம் நம் ஈகோ அதை ஏற்றுக்கொள்ளாததே! இந்த புரிபடாத மனிதரை எந்த பிம்பத்திற்குள் போட்டு அடைப்பது எனும் சிக்கலை நம்மால் சகிக்க முடிவதில்லை. இராமனைப் பற்றிய பிம்பம் நம்மை அவனிடம் அண்டவிடாமல் தடுக்கிறது என்று கூடச்சொல்லலாம். ஏனெனில் நமக்கு பிம்பமே பிடித்துப்போய்விடுகிறது. நாளை கிருஷ்ணன் நம் முன் வந்து தோன்றினால் எதை வைத்து அவனை அடையாளம் கொள்வோம்? அவன் நிச்சயம் என்.டி.ராமாராவ் போல இருக்கப்போவதில்லை :-)

எனவே பிம்பத்தோடு எதிர்வினை செய்வதைவிட்டு நிகழ்வை நிகழ் காலத்தில் காண முயலலாம் ;-)

நா.கண்ணன் 

Hari Krishnan

unread,
Jan 10, 2014, 7:59:31 AM1/10/14
to mintamil

2014/1/10 N. Kannan <navan...@gmail.com>

சற்று கூர்ந்து யோசித்தால் நிஜ வாழ்விலும், மின்னுலகிலும் பிம்பங்களுக்குள்ளேயே உறவுகள் நடக்கின்றன என்பது புரியும். எல்லோருக்கும் எல்லோர் பற்றியும் ஒரு பிம்பம் இருக்கும். அது உடையும் போது 90% எதிர்வினையே கிளம்பும். காரணம் நம் ஈகோ அதை ஏற்றுக்கொள்ளாததே!

!
108.
!

109?
!

துரை.ந.உ

unread,
Jan 10, 2014, 8:11:11 AM1/10/14
to Groups



2014/1/10 N. Kannan <navan...@gmail.com>

. நாளை கிருஷ்ணன் நம் முன் வந்து தோன்றினால் எதை வைத்து அவனை அடையாளம் கொள்வோம்? அவன் நிச்சயம் என்.டி.ராமாராவ் போல இருக்கப்போவதில்லை :-)

எனவே பிம்பத்தோடு எதிர்வினை செய்வதைவிட்டு நிகழ்வை நிகழ் காலத்தில் காண முயலலாம் ;-)

ராமன் : அமைதி சொரூபமாக / அமைதியாய் 
Inline image 2

ராமன் : குருகுலத்தில் / ஆர்வமாய்
Inline image 3
ராமன்: போர்க்களத்தில் / உக்கிரமாய் (இருந்துதான் ஆகவேண்டும் )
Inline image 1

இதுபோல சூழலுக்குத் தகுந்தாற்போல மாற்றம் கொள்வதே இயல்பு / சொலல வந்ததும் அதுவே ,,,

ஆனால் இதையே ‘வேடதாரி’ என்று சொன்னோம் எனில் அது அடிமடியில் கை வைப்பதற்கு ஒப்பு ​​


நா.கண்ணன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/
ramayan-ramayana-195722.jpg
1 a.jpg
Lord-Ram-2.jpg

Subashini Tremmel

unread,
Jan 10, 2014, 8:27:20 AM1/10/14
to Tthamizth Tthenee, மின்தமிழ், Subashini Tremmel


2014/1/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

எனக்கு அப்படி இந்த வாசிப்பில் தெரியவில்லை. திரு.ரங்கன் நேரடியாகவே சொல்கின்றார். நேரடியாகவே விளக்குகின்றார் என்றே நான் புரிந்து கொள்கிறேன் தேனியார்.   எதற்காக காத்திருப்பது ? புரியவில்லையே? 

​திருமதி சுபாஷிணிட்ரெம்மல் அவர்களே  அப்படியானால்  ரங்கன் அவர்கள் எழுதுவது சரியென்று ஒப்புக் கொள்கிறீர்களா

இது என்ன கேள்வி ?
திரு.ரங்கன் தனது கட்டுரையில் எழுதுவது சரி தவறு என்று சொல்லி நீதி வழங்க நான் நீதிபதி இல்லையே. நூலில் இருக்கின்றது ஒரு விஷயம். அதனை மொழி பெயர்த்து வழங்கும் போது அதில் அவருக்கு தோன்றும் கருத்துக்களை முன் வைக்கின்றார்.  நான் மட்டுமல்ல. இக்கருத்தை ஆதரித்தோ மறுத்தோ எழுதும் அனைவரும் அவர் பதிவிலிருந்து எழும் நமது கருத்தை முன் வைக்கிறோம். என்னை உட்பட.

நான் சொல்ல வந்தது திரு.ரங்கன் ஒரு தனி பாணியில் வேறொன்றை சாதுர்யமாக நினைத்துக் கொண்டு இதனைச் செய்கின்றார் என நீங்கள் சொன்னதை மறுத்து. அதாவது, எனக்கு வாசிக்கும் போது அது நேரடியாக தனது வாசிப்பை   வெளிப்படுத்தும் விதமாக்த்தான் தெரிகிறது என்று மட்டுமே குறிப்பிடுகிறேன். இது எனது எண்ணம். 

சாதுர்யமாகத்தான் செய்கின்றார் என்பது நிறைந்த அனுபவம் உள்ள உங்களுக்கு தெரிந்திருக்கலாம். எதையும் நேராகவே பார்த்து புரிந்து கொள்ளும் அனுபவமும் பழக்கமும் எனக்கு.  என் மனதில் படுவதை மட்டும் தானே நான் சொல்ல முடியும்!

சுபா




அன்புடன்
தமிழ்த்தேனீ

2014/1/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>
எனக்கு அப்படி இந்த வாசிப்பில் தெரியவில்லை. திரு.ரங்கன் நேரடியாகவே சொல்கின்றார். நேரடியாகவே விளக்குகின்றார் என்றே நான் புரிந்து கொள்கிறேன் தேனியார்.   எதற்காக காத்திருப்பது ? புரியவில்லையே? 


Subashini Tremmel

unread,
Jan 10, 2014, 8:35:52 AM1/10/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014/1/10 N. Kannan <navan...@gmail.com>
..
எனவே பிம்பத்தோடு எதிர்வினை செய்வதைவிட்டு நிகழ்வை நிகழ் காலத்தில் காண முயலலாம் ;-)

இது பிடித்திருக்கின்றது கண்ணன்.  

பழகிப் போன பிம்பங்களைப் பிடித்துக் கொண்டு அதனையே காண முற்படுவது சுலபம். கனப் பொழுதும் நிகழும் மாறறங்களை பார்க்கத் தெரிந்து அதனைப் பார்க்கப் பழகுதல் சற்று கடினம் தான் என்றா லும் அது காட்டுவது நிகழ்கால உண்மையாக இருக்கு என்று நான் நம்புகிறேன்.

சுபா

நா.கண்ணன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Mohanarangan V Srirangam

unread,
Jan 10, 2014, 9:11:14 AM1/10/14
to min tamil
அதனை மொழி பெயர்த்து வழங்கும் போது அதில் அவருக்கு தோன்றும் கருத்துக்களை முன் வைக்கின்றார். <<<< 

நான் மொழிபெயர்க்கவில்லை. முன்னரே தந்திருக்கிறேன். லிப்கோ பதிப்பு, ஸ்ரீ வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், ஸ்ரீ ஸீ ஆர் ஸ்ரீநிவாசய்யங்கார் அவர்களின் மொழிபெயர்ப்பு. 

***




2014/1/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Jan 10, 2014, 9:42:58 AM1/10/14
to mintamil

2014/1/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

நான் மொழிபெயர்க்கவில்லை. முன்னரே தந்திருக்கிறேன். லிப்கோ பதிப்பு, ஸ்ரீ வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், ஸ்ரீ ஸீ ஆர் ஸ்ரீநிவாசய்யங்கார் அவர்களின் மொழிபெயர்ப்பு. 

திக, திமுகவுக்கு ஃபேவரிட்.  அபத்தமான பிழைகள் மலிந்த பதிப்பில்லையா?  ராமனுக்குப் பல மனைவியர் இருந்ததாக மொழிபெயர்ப்பாளர் அயோத்தியா காண்டத்தில் கூனி-கைகேயி உரையாடலில், மொழிபெயர்ப்பாளர் குறிப்பு என்ற குறிப்பு கூட இல்லாமல், ஏதோ மூலத்திலேயே இருப்பது போன்ற பிரமை தோன்ற அல்லவா செய்திருக்கிறார்.  

பேஷ்.

Mohanarangan V Srirangam

unread,
Jan 10, 2014, 10:19:01 AM1/10/14
to min tamil
திரு ஹரிகிருஷ்ணன் தன் வழக்கப்படி தனிப்பட்ட தாக்குதல்களையே தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். அந்த வழக்கத்தை நிறுத்திக் கொள்ளுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன். 

cc -- மட்டுறுத்துநர் கவனத்திற்கு. 

***


Mohanarangan V Srirangam

unread,
Jan 10, 2014, 10:22:13 AM1/10/14
to min tamil



2014/1/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

​இங்கே ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பதல்ல பிரச்சினை


 
ரங்கனார் நேருக்கு நேர் நெஞ்சுக்கு நீதி என்று தனி மனித உரிமை அடிப்படையில் உள்ள ஏற்ற தாழ்வைச் சுட்டுகிறார் 

நன்றி ஐயா.

 

***
It is loading more messages.
This conversation is locked
You cannot reply and perform actions on locked conversations.
0 new messages