பண்ணாடி

596 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 20, 2015, 9:04:18 PM9/20/15
to மின்தமிழ், vallamai
பண்ணாடி என்றால் என்ன பொருள் என இன்னம்பூரான் கேட்டிருந்தார். பழமைபேசி, ஈரோடு கதிர், செல்வன், துரை. சுந்தரம், பொன். வெங்கடேசன், .... இன்னும் பல கொங்குநாட்டினர் விளக்கலாம். பலகாலமாக மானேஜர் என்னும் பொருளில் பயன்படுவது பண்ணாடி. அதனை விளக்கும் முன்னர் 17 ஆண்டுகள் முன்பு எழுதிய மடல் கண்டேன். புழைக்கடை > புடக்களி/பொடக்காளி என மெட்டாதீஸிஸ் ஆகும் எனப் பார்த்தோம். பழைய மடலில் சில கொங்குச்சொற்கள். பேரா. பெருமாள்முருகன் தன் ப்ளாகில் பல சொற்களை எழுதியிருந்தார். திருச்செங்கோடு நாவல் பற்றி எழுந்த பிரச்சினையில் தன் பிளாகை மூடிவிட்டார்.

கொங்கில் இட்டேரி என்போம். சிவகங்கைச்சீமையில் இட்டரை என்றார் டாக்டர் ஜேபி.

ஜேய்பி மடலுக்கு என் மறுமொழி:
From Sat Oct 2 07:08:42 1999 
Delivered-To: listsaver-o...@egroups.com 

சிவகங்கைச் சீமைக் "கோக்குமாக்கு" என்பது கொங்குநாட்டில் "கோப்புமாப்பு" எனச் 
சொல்லப்படுகிறது. இவையெல்லாம் "குறைப்பு மறைப்பு" என்பதன் மரூஉவோ? 

"இட்டரை" என்பதைக் கொங்குமண்ணில் "இட்டேரி" என்பர். அது "இரட்டைவேலி" 
என்று பேராசிரியர்களிடம் கேட்டுள்ளேன். "அரைக்கீரை"யை "ரக்கிரி" என்பர். 

முக்கியமாக, மாடு காளைக்கன்றை ஈன்றால் "சேங்கண்ணு" போட்டிருக்கு என்பர்! 
இது, அழிந்த இலக்கிய வழக்கு. சேதா = காளை என்றெல்லாம் சங்க இலக்கியத்தில் வரும். 
செம்பருதி, வஞசிக்கொடி, வஞ்சியம்மா போன்றனவெல்லாம் ஒரு தலைமுறைக்குமுன் பரவலாக 
வழங்கிய பெயர். அண்ணியை "நங்கை", தம்பி மனைவி =கொழுந்தி(யா). 
பாவாயி என்பது திருச்செங்கோட்டில் பொதுப்பெயர்; இது பாவை என்பதன் விளிச்சொல். 
இகர விகுதி பல கல்வெட்டுகளில் பெயர்ச்சொல்லுக்குத் தமிழகமெங்கும் காணலாம். 
பச்சாயி/பச்சையம்மாள் (மணிவண்ணன் சொன்னது) பேரூர்ப் பகுதியில் பொதுப்பெயர். 
பேரூர் அம்மன்: பச்சையம்மன்/மரகதவல்லி. (பார்வதி கருப்புதானே; 'ச்யாமளா) 

சாமி என்பது கொங்குநாட்டில் தான் அதிகமாக வழங்கும் பெயர் விகுதி. பழனிசாமி, ராமசாமி, 
மயில்சாமி, குயில்சாமி, ஆறுச்சாமி குழந்தைசாமி, பெரியசாமி, சின்னச்சாமி, ....என்று. 
இது முதல் முதலாக, சாமி என்று, கொங்குமண்ணில் விளைந்த சமண இலக்கியத்தில் 
காணலாம். சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் "சீவகசாமி" என்று சொல்வார். 
தமிழின் பண்டைய கல்வெட்டுகள் பல கொங்குநாட்டில் சமண முனிவருக்கு 
தானம் கொடுத்ததே. (புகழியூர், அறச்சலூர், ...) சங்க இலக்கியத்தில் வரும் 
பல தமிழ்ப் பெயர்கள் கொங்குநாட்டில் குலப்பெயர்களாக இன்றும் விளங்குவதைப் 
பின்னர் விளக்குவேன். 

நானும், பூபதியும் இணைந்தால் ஒரு வட்டாரச் சொல்லகரதியே தொகுத்துவிடலாம் :-) 

வணக்கத்துடன், 
நா. கணேசன் 

Dr. Jayabarathi wrote: 
இதன் தொடர்பாக நாட்டு வழக்கு ஒன்று: 

1. "இந்த கோக்குமாக்கு வேலய நெடுகவே செய்துக்கினு 
வந்திருக்காங்கிரேன்!" 
2. "நெடுக போய்க்கிட்டே இருங்க. அங்ஙின ஒரு சொமதாங்கிகிட்ட 
வடக்கால ஒரு இட்டரை பிரியும். அப்பிடியே நெடுகப் போனா நம்ம 
பெரிசுவோட பண்ணவீடு வரும்". 

1.நெடுக = நீண்டகாலமாக; தொடர்ந்து 
2.நெடுக = நேராக 

செட்டிநாடு, சிவகங்கை வட்டாரவழக்கு. 
>>>> 

N. Ganesan

unread,
Sep 20, 2015, 10:15:31 PM9/20/15
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஒரு அழகான கொங்குப்பழமொழி பண்ணாடி என்ற சொல்லின் பொருள்காட்டும்:
ஆள் ஆளும் பண்ணாடி; எருது ஆர் மேய்க்கிறது?

On Sunday, September 20, 2015 at 6:04:18 PM UTC-7, N. Ganesan wrote:
பண்ணாடி என்றால் என்ன பொருள் என இன்னம்பூரான் கேட்டிருந்தார். பழமைபேசி, ஈரோடு கதிர், செல்வன், துரை. சுந்தரம், பொன். வெங்கடேசன், .... இன்னும் பல கொங்குநாட்டினர் விளக்கலாம். பலகாலமாக மானேஜர் என்னும் பொருளில் பயன்படுவது பண்ணாடி. அதனை விளக்கும் முன்னர் 17 ஆண்டுகள் முன்பு எழுதிய மடல் கண்டேன். புழைக்கடை > புடக்களி/பொடக்காளி என மெட்டாதீஸிஸ் ஆகும் எனப் பார்த்தோம். பழைய மடலில் சில கொங்குச்சொற்கள். பேரா. பெருமாள்முருகன் தன் ப்ளாகில் பல சொற்களை எழுதியிருந்தார். திருச்செங்கோடு நாவல் பற்றி எழுந்த பிரச்சினையில் தன் பிளாகை மூடிவிட்டார்.

கொங்கில் இட்டேரி என்போம். சிவகங்கைச்சீமையில் இட்டரை என்றார் டாக்டர் ஜேபி.

ஜேய்பி மடலுக்கு என் மறுமொழி:
From Sat Oct 2 07:08:42 1999 

தேமொழி

unread,
Sep 20, 2015, 10:49:45 PM9/20/15
to மின்தமிழ்
On Sunday, September 20, 2015 at 7:15:31 PM UTC-7, N. Ganesan wrote:
ஒரு அழகான கொங்குப்பழமொழி பண்ணாடி என்ற சொல்லின் பொருள்காட்டும்:
ஆள் ஆளும் பண்ணாடி; எருது ஆர் மேய்க்கிறது?



எல்லோருமே அதிகாரம் செய்ய ஆசைப்பட்டால், யார்தான்  மாடு மேய்ப்பது?

நான் கொண்ட பொருள் சரியா திரு. கணேசன்?

..... தேமொழி

bala subramani

unread,
Sep 20, 2015, 10:58:37 PM9/20/15
to mintamil
பண்ணாடி  என்பது உழு தொழிலில் ஈடுபடும் தேவந்திர குல இனத்தில் ஒரு பிரிவு 

கொங்கு நாட்டில் பல பிரிவுகளை கொண்டு வாழ்கிறார்கள் ,பேரூர் கோவில் இவர்களின் தாக்கங்களை கொண்டது 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பழமைபேசி

unread,
Sep 20, 2015, 11:55:18 PM9/20/15
to மின்தமிழ்
அண்ணன் சொன்னதைப் போல, கொங்குப் பகுதியில் வெகு பரவலாகப் பாவிக்கப்படும் சொல்தான்.
பண்ணையை ஆள்பவர்.

பண்ணாடி paṇṇāṭi : (page 2452)

பண்ணாடி paṇṇāṭi

n. < பண்ணையாளி. The owner of a farm, landed proprietor; பண்ணைக்கு உரியவன். 

N. Ganesan

unread,
Sep 21, 2015, 12:00:35 AM9/21/15
to மின்தமிழ்


On Sunday, September 20, 2015 at 7:49:45 PM UTC-7, தேமொழி wrote:
On Sunday, September 20, 2015 at 7:15:31 PM UTC-7, N. Ganesan wrote:
ஒரு அழகான கொங்குப்பழமொழி பண்ணாடி என்ற சொல்லின் பொருள்காட்டும்:
ஆள் ஆளும் பண்ணாடி; எருது ஆர் மேய்க்கிறது?



எல்லோருமே அதிகாரம் செய்ய ஆசைப்பட்டால், யார்தான்  மாடு மேய்ப்பது?

நான் கொண்ட பொருள் சரியா திரு. கணேசன்?


சரியே.
 

..... தேமொழி
 


On Sunday, September 20, 2015 at 6:04:18 PM UTC-7, N. Ganesan wrote:
பண்ணாடி என்றால் என்ன பொருள் என இன்னம்பூரான் கேட்டிருந்தார். பழமைபேசி, ஈரோடு கதிர், செல்வன், துரை. சுந்தரம், பொன். வெங்கடேசன், .... இன்னும் பல கொங்குநாட்டினர் விளக்கலாம். பலகாலமாக மானேஜர் என்னும் பொருளில் பயன்படுவது பண்ணாடி. அதனை விளக்கும் முன்னர் 17 ஆண்டுகள் முன்பு எழுதிய மடல் கண்டேன். புழைக்கடை > புடக்களி/பொடக்காளி என மெட்டாதீஸிஸ் ஆகும் எனப் பார்த்தோம். பழைய மடலில் சில கொங்குச்சொற்கள். பேரா. பெருமாள்முருகன் தன் ப்ளாகில் பல சொற்களை எழுதியிருந்தார். திருச்செங்கோடு நாவல் பற்றி எழுந்த பிரச்சினையில் தன் பிளாகை மூடிவிட்டார்.

கொங்கில் இட்டேரி என்போம். சிவகங்கைச்சீமையில் இட்டரை என்றார் டாக்டர் ஜேபி.

ஜேய்பி மடலுக்கு என் மறுமொழி:
From Sat Oct 2 07:08:42 1999 
Message has been deleted

N. Ganesan

unread,
Sep 21, 2015, 12:04:10 AM9/21/15
to மின்தமிழ்

with typo corrections.


On Sunday, September 20, 2015 at 7:58:37 PM UTC-7, s.bala subramani B+ve wrote:
பண்ணாடி  என்பது உழு தொழிலில் ஈடுபடும் தேவந்திர குல இனத்தில் ஒரு பிரிவு 

கொங்கு நாட்டில் பல பிரிவுகளை கொண்டு வாழ்கிறார்கள் ,பேரூர் கோவில் இவர்களின் தாக்கங்களை கொண்டது 

பண்ணாடி என்பது கொங்குநாட்டுச் சொல். ஜாதிச் சொல் அல்ல.

முன்பு பேரூரில் நாற்றுநடும் திருவிழா நடக்கும். அப்போது இந்திரனும், அவன் மனைவியும்
பள்ளன் பள்ளியாய் வந்து நாற்று நடுவதாய் பேரூர்ப் புராணத்தில் விரிவாகக்
கச்சியப்பமுனிவர் பாடியுள்ளார். பள்ளு இலக்கியங்கள் தமிழில் பல.

நா. கணேசன்

பழமைபேசி

unread,
Sep 21, 2015, 12:04:29 AM9/21/15
to மின்தமிழ்

சொல் பாவிக்கப்பட்டதற்கான மூலம்:

ttp://maniyinpakkam.blogspot.com/2008/12/blog-post_1717.html

வாராங்கோ வாராங்கோ
பண்ணாடி வாராங்கோ
பச்சைகொடை புடிச்சி வாராங்கோ

bala subramani

unread,
Sep 21, 2015, 12:07:12 AM9/21/15
to mintamil

bala subramani

unread,
Sep 21, 2015, 12:08:12 AM9/21/15
to mintamil

bala subramani

unread,
Sep 21, 2015, 12:11:50 AM9/21/15
to mintamil
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி.


N. Ganesan

unread,
Sep 21, 2015, 12:15:33 AM9/21/15
to மின்தமிழ்


On Sunday, September 20, 2015 at 9:11:50 PM UTC-7, s.bala subramani B+ve wrote:
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி.


ஆமாம். என்ன பொருள்?

நா. கணேசன் 

bala subramani

unread,
Sep 21, 2015, 12:17:03 AM9/21/15
to mintamil

பழமைபேசி

unread,
Sep 21, 2015, 12:17:47 AM9/21/15
to மின்தமிழ்
பண்ணாடி, மண்ணாடி எல்லாம் ஆகுபெயரே.
பண்ணையை ஆளுவோர் பண்ணாடி. மண்ணை ஆள்வோர் மண்ணாடி!!

பழமைபேசி

unread,
Sep 21, 2015, 12:21:07 AM9/21/15
to மின்தமிழ்
பழனித் தலத்தில் காணியாளனாகிய

கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி.

—– பழனிப் பட்டயம், 


ஆகுபெயர்தான். பழநிக் காணியாளன்!!

bala subramani

unread,
Sep 21, 2015, 12:22:50 AM9/21/15
to mintamil
பண்ணுதல்  என்றால் பயிர்  தொழில் செய்பவர்கள் என்ற பொருள் 

அவர்களின் சான்றிதழில் பயிர் தொழில் செய்பவர்கள் என்றே சொல்கிறார்கள் 
ஒத்த பண்பாடை கொண்டவர்கள்   இன்று ஜாதிய கட்டமைப்பில் வந்து உள்ளார்கள் 
கடல் கடந்த  பயிர் தொழில் செய்பவர்கள் என்ற என் ஆய்வில் பல பண்ணாடி மக்கள் இன்று பாலக்காடு கணவாய் பொருந்தல் நாகரிக பகுதிகளில் பரவி உள்ளார்கள் 

கோவை வேளாண்மை கல்லூரி நிலம் அவர்களிடம் இருந்து வாங்கப் பட்டது  தான் 

N. Ganesan

unread,
Sep 21, 2015, 12:25:59 AM9/21/15
to மின்தமிழ்
2015-09-20 21:22 GMT-07:00 bala subramani <sunke...@gmail.com>:
பண்ணுதல்  என்றால் பயிர்  தொழில் செய்பவர்கள் என்ற பொருள் 

அவர்களின் சான்றிதழில் பயிர் தொழில் செய்பவர்கள் என்றே சொல்கிறார்கள் 
ஒத்த பண்பாடை கொண்டவர்கள்   இன்று ஜாதிய கட்டமைப்பில் வந்து உள்ளார்கள் 
கடல் கடந்த  பயிர் தொழில் செய்பவர்கள் என்ற என் ஆய்வில் பல பண்ணாடி மக்கள் இன்று பாலக்காடு கணவாய் பொருந்தல் நாகரிக பகுதிகளில் பரவி உள்ளார்கள் 

கோவை வேளாண்மை கல்லூரி நிலம் அவர்களிடம் இருந்து வாங்கப் பட்டது  தான் 


பண்ணாடி என்பது ஜாதிப் பெயர் அல்ல. கொங்குநாட்டில் பல பொருள்கள் உள்ள சொல்.
பண்ணாடி என்றால் கணவன், தலைவன் என்ற பொருள். உன் பண்ணாடி எங்கே? என்று
கேட்பது எல்லா வீட்டிலும் உண்டு.

நா. கணேசன் 

bala subramani

unread,
Sep 21, 2015, 12:34:15 AM9/21/15
to mintamil
என்ன செய்வது இன்று ஜாதி சொல்லாக மாறி விட்டது  குறிப்பாக  கடந்த 20 ஆண்டுகளில் சற்று அதிகமாக 

--

N. Ganesan

unread,
Sep 21, 2015, 12:42:01 AM9/21/15
to மின்தமிழ்
On Sunday, September 20, 2015 at 9:34:15 PM UTC-7, s.bala subramani B+ve wrote:
என்ன செய்வது இன்று ஜாதி சொல்லாக மாறி விட்டது  குறிப்பாக  கடந்த 20 ஆண்டுகளில் சற்று அதிகமாக 


ஜாதிகள் அழிந்துவரும் காலம் இது.

பண்ணாடி எப்போதுமே எல்லாருக்கும் பொதுவான சொல். மேனேஜர் என்ற பொருள்.
இதனை ஒரு ஜாதிக்கு மட்டும் என கொங்குநாட்டில் யாரும் சொல்வதில்லை.

நா. கணேசன் 

bala subramani

unread,
Sep 21, 2015, 12:44:09 AM9/21/15
to mintamil
ஜாதிகள் அழிந்துவரும் காலம் இது.
அய்யா எந்த காலத்தில் இருக்கிறீர்கள் 


கும்மி அடிக்கிறார்கள் ஜாதி பெயரை சொல்லிக் கொண்டு 

--

பழமைபேசி

unread,
Sep 21, 2015, 12:45:45 AM9/21/15
to மின்தமிழ்
ஃபேசுபுக் அலறுகிறது!!

N. Ganesan

unread,
Sep 21, 2015, 1:03:21 AM9/21/15
to மின்தமிழ், vallamai

அமைச்சர் கழுதையார் என நகைச்சுவைக் கதையொன்று எழுதியுள்ளார் வா. மணிகண்டன்.
ஊர்ப்பண்ணாடி என்றுள்ள சொல் ஊர்த்தலைவன், (தஞ்சை மாவட்டத்தில் நாட்டாமை) எனப் பொருள்.

dorai sundaram

unread,
Sep 21, 2015, 1:22:34 AM9/21/15
to mint...@googlegroups.com
பண்ணைத்தொழிலான வேளாண்மைச் (விவசாயம்) சூழலில் தலைமையாளர்
(உரிமையாளர்) பண்ணாடி என அழைக்கப்பட்டுள்ளனர். வேளாளர் குடும்பங்களில் பெண்கள் தம் கணவரைப் பண்ணாடி என்றழைக்கும் மரபு நுழைந்திருக்கலாம். கொங்குப்பகுதியில் வேளாண் மக்களோடு பழகிய பிற மக்களும் ஊர் வழக்கை
ஒட்டி “பண்ணாடி” என்று கணவரை அழைப்பதைப்பார்க்கிறோம். சற்றே நகர்ப்பண்புகளோடு தொடர்புடையவர்கள் இவ்வாறு “பண்ணாடி” என அழைப்பதில்லை. நாட்டாரியல் சார்ந்தது இம்மரபு என நினைக்கிறேன். 
“வீட்டுக்காரர்” என்னும் வழக்கினை ஒப்பிடுக. வீட்டுக்கு உரிமையாளரையும்,
கணவரையும் ஒருசேரக் குறிக்கும் சொல் இது. கோவைப்பகுதியில் தெலுங்கு
பேசும் மக்கள் கூடத் தம் கணவன்மாரை “இண்ட்டிவாரு” என்றோ “இண்ட்டி ஆயன” 
என்றோ அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன்.  ”இல்லான்”  என்பதில் மட்டும் 
இந்தக் கருதுக்கு இடமில்லை. பண் என்பதிலிருந்து பண்படுத்துதல், பிறகு 
நிலத்தைப்பண்படுத்தும் வேளாண்மைக்கும் இந்தப் “பண்” என்னும் வேர்ச்சொல் 
அடிப்படையாய் அமைந்து வேளாண் தலைவன் பண்ணாடி எனப் பெயர் 
பெற்றிக்கவேண்டும்.
சுந்தரம்.

--

dorai sundaram

unread,
Sep 21, 2015, 2:26:04 AM9/21/15
to mint...@googlegroups.com
மண்ணை ஆள்பவர் மண்ணாடி என்னும் குறிப்பைப் பார்த்தேன். கொங்கு நாட்டுக்கல்வெட்டுகளில் மன்றாடி  என்னும் சொல் பயில்கிறது. இச்சொல்லே
மக்கள் வழக்கில் மண்ணாடி என மருவியிருக்கலாம். மன்றாட்டு என்னும் கல்வெட்டுச் சொல்லிலிருந்து மன்றாடி பெறப்படுகிறது. அரசனிடம் ஒரு தொகையைப் பொன்னாக வைத்து, அரசனிடம் மன்றாட்டு என்னும் உரிமையை
ஒருவர் பெறுவார். அதன்படி, அரசன் அவருக்கு நிலம் அளிப்பார். நிலம் பெறுபவர் மன்றாடி. நிலத்தை வேளாண்மை செய்து வரி செலுத்தினாலும் நிலத்தின் முழு உரிமையை மன்றாடி நுகர்வார். பெரிய நிலப்பரப்புகளை இவ்வாறு மன்றாடிகள்
பெற்று உழுகுடிகளை வைத்து வேளாண்மை செய்தும், ஆடு,மாடு போன்ற கன்று காலிகளை இடையர் மக்களைக் கொண்டு வளர்த்தும் செல்வாக்காக இருப்பார். 
இம்மன்றாடிகள் கோவில் நிருவாகத்திலும் பதவி வகிப்பர். கோவை மாவட்டக்கல்வெட்டுகளில் மட்டுமே இவ்வகையான மன்றாடிகள் பற்றிய 
குறிப்புகள் உள்ளன எனக்கல்வெட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தின்
மற்ற பகுதிகளில் மன்று என்பது அவை(சபை)யைக்குறிக்கும் சொல்லாகும். 
சுந்தரம்.

பழமைபேசி

unread,
Sep 21, 2015, 8:00:29 AM9/21/15
to மின்தமிழ்
நன்றிங்க அய்யா. மண்ணாடி/பண்ணாடி, இன்று குறிப்பிட்ட சாதியினரின் இரு பிரிவுகளாகப் புழக்கம். இஃகிஃகி!!

N. Ganesan

unread,
Sep 21, 2015, 9:26:07 AM9/21/15
to மின்தமிழ்


On Sunday, September 20, 2015 at 10:22:34 PM UTC-7, dorai sundaram wrote:
பண்ணைத்தொழிலான வேளாண்மைச் (விவசாயம்) சூழலில் தலைமையாளர்
(உரிமையாளர்) பண்ணாடி என அழைக்கப்பட்டுள்ளனர். வேளாளர் குடும்பங்களில் பெண்கள் தம் கணவரைப் பண்ணாடி என்றழைக்கும் மரபு நுழைந்திருக்கலாம். கொங்குப்பகுதியில் வேளாண் மக்களோடு பழகிய பிற மக்களும் ஊர் வழக்கை
ஒட்டி “பண்ணாடி” என்று கணவரை அழைப்பதைப்பார்க்கிறோம். சற்றே நகர்ப்பண்புகளோடு தொடர்புடையவர்கள் இவ்வாறு “பண்ணாடி” என அழைப்பதில்லை. நாட்டாரியல் சார்ந்தது இம்மரபு என நினைக்கிறேன். 
“வீட்டுக்காரர்” என்னும் வழக்கினை ஒப்பிடுக. வீட்டுக்கு உரிமையாளரையும்,
கணவரையும் ஒருசேரக் குறிக்கும் சொல் இது. கோவைப்பகுதியில் தெலுங்கு
பேசும் மக்கள் கூடத் தம் கணவன்மாரை “இண்ட்டிவாரு” என்றோ “இண்ட்டி ஆயன” 
என்றோ அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன்.  ”இல்லான்”  என்பதில் மட்டும் 
இந்தக் கருதுக்கு இடமில்லை. பண் என்பதிலிருந்து பண்படுத்துதல், பிறகு 
நிலத்தைப்பண்படுத்தும் வேளாண்மைக்கும் இந்தப் “பண்” என்னும் வேர்ச்சொல் 
அடிப்படையாய் அமைந்து வேளாண் தலைவன் பண்ணாடி எனப் பெயர் 
பெற்றிக்கவேண்டும்.
சுந்தரம்.

பண் என்றால் ஒழுங்கு, ஒழுங்கமைதியைப் பண்ணுதல்.
ஒலி பலவகையில் ஒழுங்கற்றதாய் இருந்தால் சத்தம்.
ஆனால், ஒழுங்கோடு இயைந்தால் பண், பண் இசை.
அதுபோல், காடு, தோட்டம், வீடு, ஊர், ... எதுவாயினும்
ஒழுங்காக, கோப்பாக நடத்தல் பண். 
இதனை நாட்டுதல் பண்+நாட்டு = பண்ணாட்டு.
செய்பவர் பண்ணாடி.

தோட்டத்தின் முதலாளியும் பண்ணாடி.
ஊரின் நாட்டாண்மையும் பண்ணாடி
வீட்டின் தலைவனும் பண்ணாடி 
தோட்டத்துக்கு கூலியாட்களை அழைத்துவந்து
வேலைவாங்குபவனும் பண்ணாடி.
பல ஊர்களில் பண்ணாடி தோட்டம் (அ) காடு
இருக்கிறது. இவை அனேகமாக கொங்கு வேளாளர்களுடையதாக
இருக்கும்.

 இது ஓர் பொதுச்சொல்லாக எப்பொழுதும் கொங்குநாட்டில்
இருக்கிறது. ஜாதிச்சொல் அல்ல. புதிதாக இதனை
ஒரு ஜாதிச் சொல் என்று செய்ய வேண்டியதில்லை.
சென்னையில் இருந்து கொங்குநாடு வருவோர் கிராமப்புறங்களில்
வாழ்ந்தால் பண், பண்ணை, பண்ணாட்டு, பண்ணாடி, ...
போன்ற சொற்களின் வியாபகத்தைப் புரிந்துகொள்ளலாம்.


நா. கணேசன்

அமைச்சர் கழுதையார் என நகைச்சுவைக் கதையொன்று எழுதியுள்ளார் வா. மணிகண்டன்.
ஊர்ப்பண்ணாடி என்றுள்ள சொல் ஊர்த்தலைவன், (தஞ்சை மாவட்டத்தில் நாட்டாமை) எனப் பொருள்.

 
பண்ணாடி எப்போதுமே எல்லாருக்கும் பொதுவான சொல். மேனேஜர் என்ற பொருள்.
இதனை ஒரு ஜாதிக்கு மட்டும் என கொங்குநாட்டில் யாரும் சொல்வதில்லை.

N. Ganesan

unread,
Sep 21, 2015, 9:52:29 AM9/21/15
to மின்தமிழ், vallamai


On Sunday, September 20, 2015 at 11:26:04 PM UTC-7, dorai sundaram wrote:
மண்ணை ஆள்பவர் மண்ணாடி என்னும் குறிப்பைப் பார்த்தேன். கொங்கு நாட்டுக்கல்வெட்டுகளில் மன்றாடி  என்னும் சொல் பயில்கிறது. இச்சொல்லே
மக்கள் வழக்கில் மண்ணாடி என மருவியிருக்கலாம். மன்றாட்டு என்னும் கல்வெட்டுச் சொல்லிலிருந்து மன்றாடி பெறப்படுகிறது. அரசனிடம் ஒரு தொகையைப் பொன்னாக வைத்து, அரசனிடம் மன்றாட்டு என்னும் உரிமையை
ஒருவர் பெறுவார். அதன்படி, அரசன் அவருக்கு நிலம் அளிப்பார். நிலம் பெறுபவர் மன்றாடி. நிலத்தை வேளாண்மை செய்து வரி செலுத்தினாலும் நிலத்தின் முழு உரிமையை மன்றாடி நுகர்வார். பெரிய நிலப்பரப்புகளை இவ்வாறு மன்றாடிகள்
பெற்று உழுகுடிகளை வைத்து வேளாண்மை செய்தும், ஆடு,மாடு போன்ற கன்று காலிகளை இடையர் மக்களைக் கொண்டு வளர்த்தும் செல்வாக்காக இருப்பார். 
இம்மன்றாடிகள் கோவில் நிருவாகத்திலும் பதவி வகிப்பர். கோவை மாவட்டக்கல்வெட்டுகளில் மட்டுமே இவ்வகையான மன்றாடிகள் பற்றிய 
குறிப்புகள் உள்ளன எனக்கல்வெட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தின்
மற்ற பகுதிகளில் மன்று என்பது அவை(சபை)யைக்குறிக்கும் சொல்லாகும். 
சுந்தரம்.


நீதிமன்றம் என கோர்ட்டுகளை இன்று சொல்கிறோம். அவ்வாறு தந்தவர் கோவை வக்கீல்
கந்தசாமி முதலியார் என்பார்கள். பேரூர்ப் பச்சைநாயகி கிள்ளை விடுதூது அவர் செய்தது.
என்னிடம் இருக்கிறது. ஆறுமுக நாவலர் காலத்தில் கிறித்துவர்கள் ஆன வேளாளர்களும்,
அவர்களுக்கெதிர்ப்பாய் சைவ வேளாளர்களும் கண்டனங்கள் எழுதிய பிரபந்தங்கள் பல.
கிறிஸ்துவ பாதிரியார்கள் அரசாங்க ஆதரவுடன் சமய மாற்றஞ் செய்வதைக் கண்டிக்கும்
நூல் பேரூர்க் கிள்ளைவிடுதூது. இவை போன்றன பல. சம்ஸ்கிருதத்தில் வந்தன ஆராயப்பட்டுள்ளன.
ஆனால், தமிழில் கிறித்துவம் - சைவம் மோதல்கள் இன்னும் ஆழமாகப் பார்க்கப்படவில்லை.
வள்ளலார் இரண்டையும் கலந்து தமிழர்க்குப் புதுச் சமயம் தந்தார். வள்ளலார் சமயத்தில்
சமணம் நிறைய உண்டு என ஆராய்ந்துள்ளனர்.

கந்தசாமியாரின் மகன் சி. கே. சுப்பிரமணியமுதலியார். இவரும் பெரிய கோவை வக்கீல்.
இவர் வ.உ.சி. கோவைச் சிறையில் இருந்து வெளிவரக் கேஸ் நடாத்தியவர். எனவே,
வ.உ.சி. மகனுக்கு சுப்பிரமணியன் எனப் பெயரிட்டார். சிவக்கவிமணி சிகேஎஸ்
பேரூர் வேளாளர்களைக் கொண்டு எல்லா சிவ தலங்களுக்கும் யாத்திரை செய்வார்.
என் உறவினர்கள் பலர் சென்றுள்ளனர். சைவ சன்மார்க்க சங்கம் வெள்ளக்கிணறு
குடும்பத்தார் நன்கொடை நிலங்கள். பின்னர் 100 ஏக்கர் அளித்து கோவைகிழார்,
ரத்தினசபாபதி முதலியார் போன்றோர் வாழ்த்தி தொடங்கினது பேரூர் தமிழ்க் கல்லூரி.
 
மன்றாடியார்கள், மன்றம், மன்றில் நீதி வழங்குதல் பெரியபுராணம்.
கோவையில் இருந்து போன மன்றாடியார்கள் நாயர்களுடன் கலந்து
விட்ட குடும்பம் என எம்ஜிஆர் அவர் குடும்ப வரலாற்றைப் பலமுறை சொல்லியுள்ளார்.
கேரளாவில் பாலக்காடு பகுதியில் பல மன்னாடியார்கள் உண்டு,
எம்ஜிஆர் அங்கராத் மன்றாடியார்கள் குடும்பம். மலைகளில் உள்ள சாதிகளில்
அவர்கள் தலைவர்கள் மன்னாடியார்கள் குன்னுவ மன்னாடியார்கள்.
மன்றாடி மன்னாடி/மண்ணாடி என திரிந்துள்ளது. இவை பல சாதிகளிலும்
உள்ள பெயர்கள். தனி சாதி அல்ல.

நா. கணேசன்

Suba.T.

unread,
Sep 21, 2015, 12:08:39 PM9/21/15
to மின்தமிழ், Subashini Tremmel
பண்ணாடி மண்ணாடி என்ற சொல்லை வைத்து மிகஅழகாக விரிவான பல தகவலக்ளை இந்த இழையில் காண்கின்றேன்.
டாக்டர். கணேசனோ அல்லது ஆர்வமுள்ள யாரேனும்  இந்த தலைப்பை வைத்து ஒரு முழு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். இவ்வாண்டின் இறுது மின்தமிழ் மேடை சஞ்சிகை விவசாயம் பற்றி கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியிட இத்தகவல் உதவும்.

சுபா

--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

வேந்தன் அரசு

unread,
Sep 22, 2015, 5:18:20 PM9/22/15
to vallamai, மின்தமிழ்
என் பெரியப்பா ஒரு விவசாயி. அவரை அவரது பண்ணை ஆட்கள் பண்ணாடி என்றுதான் குறிப்பிடுவார்கள். பண்னாட்டு என்பது அதிகாரம் செய்வது.

தென்னை மரத்தின்; மட்டைகளின் இருவிளிம்புகளையும இணைத்து மரத்தோடு பலமாக ஒட்டிக் கொண்டு இருக்கும். சவ்வு போன்ற பாகம் சல்லடையாகவும், வலைபோன்று பின்னி பிணைந்திருக்கும். இதனை பன்னாடை என்று அழைப்பார்கள்.

இது திட்டு வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது. நல்லதை விட்டு அல்லதை வைத்துக்கொள்வதால்.

20 செப்டம்பர், 2015 ’அன்று’ 9:04 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
பண்ணாடி என்றால் என்ன பொருள் என இன்னம்பூரான் கேட்டிருந்தார். பழமைபேசி, ஈரோடு கதிர், செல்வன், துரை. சுந்தரம், பொன். வெங்கடேசன், .... இன்னும் பல கொங்குநாட்டினர் விளக்கலாம். பலகாலமாக மானேஜர் என்னும் பொருளில் பயன்படுவது பண்ணாடி. அதனை விளக்கும் முன்னர் 17 ஆண்டுகள் முன்பு எழுதிய மடல் கண்டேன். புழைக்கடை > புடக்களி/பொடக்காளி என மெட்டாதீஸிஸ் ஆகும் எனப் பார்த்தோம். பழைய மடலில் சில கொங்குச்சொற்கள். பேரா. பெருமாள்முருகன் தன் ப்ளாகில் பல சொற்களை எழுதியிருந்தார். திருச்செங்கோடு நாவல் பற்றி எழுந்த பிரச்சினையில் தன் பிளாகை மூடிவிட்டார்.

கொங்கில் இட்டேரி என்போம். சிவகங்கைச்சீமையில் இட்டரை என்றார் டாக்டர் ஜேபி.

ஜேய்பி மடலுக்கு என் மறுமொழி:
From Sat Oct 2 07:08:42 1999 
Delivered-To: listsaver-o...@egroups.com 

சிவகங்கைச் சீமைக் "கோக்குமாக்கு" என்பது கொங்குநாட்டில் "கோப்புமாப்பு" எனச் 
சொல்லப்படுகிறது. இவையெல்லாம் "குறைப்பு மறைப்பு" என்பதன் மரூஉவோ? 

"இட்டரை" என்பதைக் கொங்குமண்ணில் "இட்டேரி" என்பர். அது "இரட்டைவேலி" 
என்று பேராசிரியர்களிடம் கேட்டுள்ளேன். "அரைக்கீரை"யை "ரக்கிரி" என்பர். 

முக்கியமாக, மாடு காளைக்கன்றை ஈன்றால் "சேங்கண்ணு" போட்டிருக்கு என்பர்! 
இது, அழிந்த இலக்கிய வழக்கு. சேதா = காளை என்றெல்லாம் சங்க இலக்கியத்தில் வரும். 
செம்பருதி, வஞசிக்கொடி, வஞ்சியம்மா போன்றனவெல்லாம் ஒரு தலைமுறைக்குமுன் பரவலாக 
வழங்கிய பெயர். அண்ணியை "நங்கை", தம்பி மனைவி =கொழுந்தி(யா). 
பாவாயி என்பது திருச்செங்கோட்டில் பொதுப்பெயர்; இது பாவை என்பதன் விளிச்சொல். 
இகர விகுதி பல கல்வெட்டுகளில் பெயர்ச்சொல்லுக்குத் தமிழகமெங்கும் காணலாம். 
பச்சாயி/பச்சையம்மாள் (மணிவண்ணன் சொன்னது) பேரூர்ப் பகுதியில் பொதுப்பெயர். 
பேரூர் அம்மன்: பச்சையம்மன்/மரகதவல்லி. (பார்வதி கருப்புதானே; 'ச்யாமளா) 

சாமி என்பது கொங்குநாட்டில் தான் அதிகமாக வழங்கும் பெயர் விகுதி. பழனிசாமி, ராமசாமி, 
மயில்சாமி, குயில்சாமி, ஆறுச்சாமி குழந்தைசாமி, பெரியசாமி, சின்னச்சாமி, ....என்று. 
இது முதல் முதலாக, சாமி என்று, கொங்குமண்ணில் விளைந்த சமண இலக்கியத்தில் 
காணலாம். சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் "சீவகசாமி" என்று சொல்வார். 
தமிழின் பண்டைய கல்வெட்டுகள் பல கொங்குநாட்டில் சமண முனிவருக்கு 
தானம் கொடுத்ததே. (புகழியூர், அறச்சலூர், ...) சங்க இலக்கியத்தில் வரும் 
பல தமிழ்ப் பெயர்கள் கொங்குநாட்டில் குலப்பெயர்களாக இன்றும் விளங்குவதைப் 
பின்னர் விளக்குவேன். 

நானும், பூபதியும் இணைந்தால் ஒரு வட்டாரச் சொல்லகரதியே தொகுத்துவிடலாம் :-) 

வணக்கத்துடன், 
நா. கணேசன் 

Dr. Jayabarathi wrote: 
இதன் தொடர்பாக நாட்டு வழக்கு ஒன்று: 

1. "இந்த கோக்குமாக்கு வேலய நெடுகவே செய்துக்கினு 
வந்திருக்காங்கிரேன்!" 
2. "நெடுக போய்க்கிட்டே இருங்க. அங்ஙின ஒரு சொமதாங்கிகிட்ட 
வடக்கால ஒரு இட்டரை பிரியும். அப்பிடியே நெடுகப் போனா நம்ம 
பெரிசுவோட பண்ணவீடு வரும்". 

1.நெடுக = நீண்டகாலமாக; தொடர்ந்து 
2.நெடுக = நேராக 

செட்டிநாடு, சிவகங்கை வட்டாரவழக்கு. 
>>>> 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Sep 22, 2015, 10:18:04 PM9/22/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Tuesday, September 22, 2015 at 2:18:20 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

தென்னை மரத்தின்; மட்டைகளின் இருவிளிம்புகளையும இணைத்து மரத்தோடு பலமாக ஒட்டிக் கொண்டு இருக்கும். சவ்வு போன்ற பாகம் சல்லடையாகவும், வலைபோன்று பின்னி பிணைந்திருக்கும். இதனை பன்னாடை என்று அழைப்பார்கள்.

இது திட்டு வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது. நல்லதை விட்டு அல்லதை வைத்துக்கொள்வதால்.


பன்னு- பனுவல், எனவே பன்னாடை. பன்னுதல் பிற்காலத்தில் பின்னுதல் என்றும் வருகிறது. 
நிறையப் பேசியுள்ளோம். திரு. தேவ் அவர்கள் ஆரம்பித்த இழை:

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 23, 2015, 1:21:12 AM9/23/15
to mintamil

பண்ணாடி = முதலாளி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 23, 2015, 9:02:50 AM9/23/15
to மின்தமிழ், kalair...@gmail.com, vallamai


On Tuesday, September 22, 2015 at 10:21:12 PM UTC-7, kalai wrote:

பண்ணாடி = முதலாளி


இல்லை. பண்ணாடி என்றால் முதலாளியாக இருக்க வேண்டியதில்லை.
தோட்டத்துக்கு ஆட்களை அழைத்துவந்து வேலைவாங்கும்
கொத்துக்காரரும் பண்ணாடிதான். காட்டுப் பண்ணாடி என்றால் தோட்டத்தில்
நடக்கும் வேலைகளைக் கண்காணிக்கும் மானேஜர்.
மானேஜர் என்பதற்கு நல்ல பழைய தமிழ்ச்சொல் பண்ணாடி.
மானேஜ்மெண்ட் = பண்ணாட்டு.
பண்ணாடி என்ற சொல்லுக்கு மானேஜர், தலைவர், அதிகாரி என்ற பொருட்கள் உண்டு.
முதலாளியாக இருக்கணும் என்ற அவசியமில்லை. ஒரு பரம ஏழைப் பெண்,
அவள் கணவனை அவனும் ஏழை - “உன்/உங்க பண்ணாடி எங்கே?” எனக் கேட்பது
தினமும் பார்க்கலாம்.

மெரிசல் என்ற மெட்ராஸ் சொல்லுக்கு வெறித்தல் என்ற சொல்லின் அனைத்துப்
பொருளும் உண்டு. அதே போல, பண்ணாடி என்ற கொங்குச் சொல்லுக்கும்
தொடர்புடைய பொருள்கள் உண்டு. பண்ணாடி என்பதன் ப்ரதானமான பொருள் மானேஜர்.
கணவன், தலைவன், அதிகாரி, .... என்ற தொடர்புடைய அர்த்தங்கலும் உண்டு.
சொல்லும் இடத்தைப்போல பொருள் கொள்ளணும்.

அமைச்சர் கழுதையார் - கதையை வாசித்தீர்களா?
அமைச்சர் கழுதையார் என நகைச்சுவைக் கதையொன்று எழுதியுள்ளார் வா. மணிகண்டன்.
ஊர்ப்பண்ணாடி என்றுள்ள சொல் ஊர்த்தலைவன், (தஞ்சை மாவட்டத்தில் நாட்டாமை) எனப் பொருள்.



அமைச்சர் கழுதையார் என நகைச்சுவைக் கதையொன்று எழுதியுள்ளார் வா. மணிகண்டன்.
ஊர்ப்பண்ணாடி என்றுள்ள சொல் ஊர்த்தலைவன், (தஞ்சை மாவட்டத்தில் நாட்டாமை) எனப் பொருள்.

அமைச்சர் கழுதையார்

------------------------

பண் என்றால் ஒழுங்கு, ஒழுங்கமைதியைப் பண்ணுதல்.
ஒலி பலவகையில் ஒழுங்கற்றதாய் இருந்தால் சத்தம்.
ஆனால், ஒழுங்கோடு இயைந்தால் பண், பண் இசை.
அதுபோல், காடு, தோட்டம், வீடு, ஊர், ... எதுவாயினும்
ஒழுங்காக, கோப்பாக நடத்தல் பண். 
இதனை நாட்டுதல் பண்+நாட்டு = பண்ணாட்டு.
செய்பவர் பண்ணாடி.

தோட்டத்தின் முதலாளியும் பண்ணாடி.
ஊரின் நாட்டாண்மையும் பண்ணாடி
வீட்டின் தலைவனும் பண்ணாடி 
தோட்டத்துக்கு கூலியாட்களை அழைத்துவந்து
வேலைவாங்குபவனும் பண்ணாடி.
பல ஊர்களில் பண்ணாடி தோட்டம் (அ) காடு
இருக்கிறது. இவை அனேகமாக கொங்கு வேளாளர்களுடையதாக
இருக்கும்.

 இது ஓர் பொதுச்சொல்லாக எப்பொழுதும் கொங்குநாட்டில்
இருக்கிறது. ஜாதிச்சொல் அல்ல. புதிதாக இதனை
ஒரு ஜாதிச் சொல் என்று செய்ய வேண்டியதில்லை.
சென்னையில் இருந்து அவசரமாக ஓரிரு நாள்கள் கொங்குநாடு வருவோர் கிராமப்புறங்களில்
வாழ்ந்தால் பண், பண்ணை, பண்ணாட்டு, பண்ணாடி, ...
போன்ற சொற்களின் வியாபகத்தைப் புரிந்துகொள்ளலாம்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Sep 23, 2015, 5:14:45 PM9/23/15
to மின்தமிழ்

in charge - a person who is in charge (of something)
boss - boss around
கங்காணி

(but not a leader or தலைவன்/தலைவி)

N. Ganesan

unread,
Sep 23, 2015, 5:30:17 PM9/23/15
to மின்தமிழ், vallamai


On Wednesday, September 23, 2015 at 2:14:45 PM UTC-7, தேமொழி wrote:

in charge - a person who is in charge (of something)
boss - boss around
கங்காணி

(but not a leader or தலைவன்/தலைவி)


Yes. kaGkANi is not தலைவன்/தலைவி, but paNNATi has that meaning.

For example, Urp paNNATi = leader of a village, avaL paNNATi = her husband.

N. Ganesan
 

N. Ganesan

unread,
Sep 23, 2015, 5:31:14 PM9/23/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

For feminine gender noun, it's "paNNATicci".
 

N. Ganesan
 

N. Ganesan

unread,
Sep 23, 2015, 8:35:30 PM9/23/15
to மின்தமிழ், vall...@googlegroups.com
பண்ணாடியின் மனைவிக்குப் பண்ணாடிச்சி எனப் பெயர்.

இரு சிறுகதைகள்:
கருணைக் கொலை:

வாயிக்கி வணங்காத பூவும் பல்லுக்கு மெதுவான கல்லும்

N. Ganesan

unread,
Sep 30, 2015, 10:30:40 AM9/30/15
to மின்தமிழ், ksuba...@gmail.com, vallamai


On Monday, September 21, 2015 at 9:08:39 AM UTC-7, Suba.T. wrote:
பண்ணாடி மண்ணாடி என்ற சொல்லை வைத்து மிகஅழகாக விரிவான பல தகவலக்ளை இந்த இழையில் காண்கின்றேன்.
டாக்டர். கணேசனோ அல்லது ஆர்வமுள்ள யாரேனும்  இந்த தலைப்பை வைத்து ஒரு முழு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். இவ்வாண்டின் இறுது மின்தமிழ் மேடை சஞ்சிகை விவசாயம் பற்றி கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியிட இத்தகவல் உதவும்.

சுபா

பண்ணாடி - கணவன் என்ற பொருளில் ஆளப்படும் கவிதை ஒன்று.
கொங்குநாட்டில் விதவை ஆகும்போது வெள்ளைப் புடைவை அணிவது பழைய வழக்கம்.
இப்பொழுது மாறிவருகிறது.

பஞ்சவர்ணம்



என்னைய கேட்டா பஞ்சவர்ணம்தான்
எங்க ஊர்லயே அழகான பொண்ணு

அவ உதடு ரோஜா வர்ணம்
தோலு மஞ்சவர்ணம்
முடி கருப்புவர்ணம்
பல்லு வெள்ளவர்ணம்
காதுமடல் சிவப்புவர்ணம்

பாத்துப்பாத்துதான் பஞ்சவர்ணத்துக்கு
பேரு வச்சாங்களோன்னு நினைப்பேன்.

ஒத்தைக்கையில குச்சிமிட்டாய் வச்சுக்கிட்டு
இன்னோரு கையில பஞ்சவர்ணத்தோட
கையப்புடிச்சுகிட்டு நடக்கறதுன்னா
அடியாத்தி.....  ஒரே சந்தோசந்தா

ஒரு நாள் பஞ்சுவுக்கு
கல்யாணம்னு சொன்னாங்க
அன்னைக்கு பார்க்கணுமே பஞ்சுவ
என்னா அழகு பட்டுப்புடவையில
நாந்தான் தோழிப்பொண்ணு மாதிரி
அவகூடவே இருந்தேன்

அடுத்தமுற ஊருக்கு போனப்ப
பஞ்சவர்ணம் வெள்ளப்புடவ கட்டிகிட்டு
மூளியா இருந்துச்சு. நல்லால்ல
ஏன்னு கேட்டேன்

அவிக பண்ணாடி சாமிகிட்ட
போயிட்டாங்கன்னு அழுதுச்சு

அவிக பண்ணாடி சாமிகிட்ட
பட்டுபுடவ எடுத்துகிட்டா போகணும்
எனக்குந்தா அழுகாச்சி வந்துச்சு

அந்த சாமிய நீங்க பார்த்தா
பஞ்சவர்ணத்தோட பட்டுசேலைய
வாங்கித்தாங்களேன்......

-          க. பிரேமலதா, விளாங்குறிச்சி.....

N. Ganesan

unread,
Sep 30, 2015, 11:49:25 PM9/30/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Monday, September 21, 2015 at 9:08:39 AM UTC-7, Suba.T. wrote:
பண்ணாடி மண்ணாடி என்ற சொல்லை வைத்து மிகஅழகாக விரிவான பல தகவலக்ளை இந்த இழையில் காண்கின்றேன்.
டாக்டர். கணேசனோ அல்லது ஆர்வமுள்ள யாரேனும்  இந்த தலைப்பை வைத்து ஒரு முழு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். இவ்வாண்டின் இறுது மின்தமிழ் மேடை சஞ்சிகை விவசாயம் பற்றி கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியிட இத்தகவல் உதவும்.

சுபா

பண்ணாடி - கணவன் என்ற பொருளில் ஆளப்படும் கவிதை ஒன்று.
கொங்குநாட்டில் விதவை ஆகும்போது வெள்ளைப் புடைவை அணிவது பழைய வழக்கம்.
இப்பொழுது மாறிவருகிறது.

இந்தப் புதுக் கவிதை பற்றி ஒரு செய்தி சொல்லணும். 
புறநானூறு போன்ற பாடல்களில் போருக்குப் புறப்படும், இறக்கும் வீரர்களோடு
வெள்ளை நிறம் தொடர்புபடுத்தப்பட்டு பாடல் முழுக்க ஒலிக்கும்.
வெண்மையான வாகை மரத்தின் மலர் பார்த்திருப்பீர்கள். சிவப்பான பட்டு
உடுத்துக் கலியாணம் நடக்கும் வேளையிலும், ஈட்டி போன்ற கருமரத்தால்
செய்யும் கொற்றவைப் பாவைக்கு வெள்ளை நூலும், வெள்ளையான வாகைமலரும்
சார்த்தி வழிபாடும், அறுகு மணமும் நடப்பதை சங்க இலக்கிய திருமணப்
பாடல்கள் காட்டுகின்றன. அப்போது, கொற்றவையின் கணவன் வருணன்.
வருணன் என்னும் மகரவிடங்கருக்கான மந்திரமே திருமணங்களில்
இன்றும் ஓதப்படுகிறது. அப்ப்போதெல்லாம் ஆகோள் பூசல்கள்
அதிகம், குறுநில மன்னர்கள், ஏழு வேளிர்கள் இடையிலே தீராத பூசல்கள்,
போர்கள். போருக்கான நிறம் வெண்மை. போரால் பட்ட கணவன் ஞாபகார்த்தமாக
வெள்ளைச்சீலை வாழ்க்கை முழுதும் கணவனை இழந்தோர் அணிந்தார்கள்.
இன்றுவரை நடக்கிறது. இப்பொழுது கொஞ்சங் கொஞ்சமாக மாறத் தொடங்கியுளது.

நா. கணேசன்
 

தேமொழி

unread,
Oct 1, 2015, 12:20:48 AM10/1/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, September 30, 2015 at 8:49:25 PM UTC-7, N. Ganesan wrote:

On Monday, September 21, 2015 at 9:08:39 AM UTC-7, Suba.T. wrote:
பண்ணாடி மண்ணாடி என்ற சொல்லை வைத்து மிகஅழகாக விரிவான பல தகவலக்ளை இந்த இழையில் காண்கின்றேன்.
டாக்டர். கணேசனோ அல்லது ஆர்வமுள்ள யாரேனும்  இந்த தலைப்பை வைத்து ஒரு முழு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். இவ்வாண்டின் இறுது மின்தமிழ் மேடை சஞ்சிகை விவசாயம் பற்றி கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியிட இத்தகவல் உதவும்.

சுபா

பண்ணாடி - கணவன் என்ற பொருளில் ஆளப்படும் கவிதை ஒன்று.
கொங்குநாட்டில் விதவை ஆகும்போது வெள்ளைப் புடைவை அணிவது பழைய வழக்கம்.
இப்பொழுது மாறிவருகிறது.

இந்தப் புதுக் கவிதை பற்றி ஒரு செய்தி சொல்லணும். 

 

இது மிக நல்ல கவிதை. நன்றி திரு. கணேசன்


 
புறநானூறு போன்ற பாடல்களில் போருக்குப் புறப்படும், இறக்கும் வீரர்களோடு
வெள்ளை நிறம் தொடர்புபடுத்தப்பட்டு பாடல் முழுக்க ஒலிக்கும்.
வெண்மையான வாகை மரத்தின் மலர் பார்த்திருப்பீர்கள். சிவப்பான பட்டு
உடுத்துக் கலியாணம் நடக்கும் வேளையிலும், ஈட்டி போன்ற கருமரத்தால்
செய்யும் கொற்றவைப் பாவைக்கு வெள்ளை நூலும், வெள்ளையான வாகைமலரும்
சார்த்தி வழிபாடும், அறுகு மணமும் நடப்பதை சங்க இலக்கிய திருமணப்
பாடல்கள் காட்டுகின்றன. அப்போது, கொற்றவையின் கணவன் வருணன்.
வருணன் என்னும் மகரவிடங்கருக்கான மந்திரமே திருமணங்களில்
இன்றும் ஓதப்படுகிறது. அப்ப்போதெல்லாம் ஆகோள் பூசல்கள்
அதிகம், குறுநில மன்னர்கள், ஏழு வேளிர்கள் இடையிலே தீராத பூசல்கள்,
போர்கள். போருக்கான நிறம் வெண்மை. போரால் பட்ட கணவன் ஞாபகார்த்தமாக
வெள்ளைச்சீலை வாழ்க்கை முழுதும் கணவனை இழந்தோர் அணிந்தார்கள்.


இது தமிழ்ப் பண்பாடு என்றா சொல்கிறீர்கள்?  இது இந்தியா முழுவதுமே உள்ளது என நான் நினைத்தேன்.

Chanda Hai Tu Mera Suraj Hai Tu - Aradhana 

என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் - சிவகாமியின் செல்வன் 

கைம்பெண் இருவர்,  இந்தி ஆராதனா ஷர்மிளா தாகூரும், தமிழ் சிவகாமியின் செல்வன் வாணிஸ்ரீயும் வெள்ளைப்புடவை அணிகிறார்களே.

வடநாட்டிலும் வெள்ளைச்சீலை வழக்கம் உண்டென்று எண்ணுகிறேன்.  


பெரும்பாலும் இந்து மதம் இப்ழக்கத்தை சமணத்திடம் இருந்து "கடன்" வாங்கியிருக்கக் கூடும் ;-))
  
சுவேதாக்கள், துறவறம் போன்ற வாழ்க்கைமுறையை மேற்கொள்ளத் துவங்கியவர்கள்.

..... தேமொழி

N. Ganesan

unread,
Oct 1, 2015, 12:35:28 AM10/1/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, September 30, 2015 at 9:20:48 PM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, September 30, 2015 at 8:49:25 PM UTC-7, N. Ganesan wrote:

On Monday, September 21, 2015 at 9:08:39 AM UTC-7, Suba.T. wrote:
பண்ணாடி மண்ணாடி என்ற சொல்லை வைத்து மிகஅழகாக விரிவான பல தகவலக்ளை இந்த இழையில் காண்கின்றேன்.
டாக்டர். கணேசனோ அல்லது ஆர்வமுள்ள யாரேனும்  இந்த தலைப்பை வைத்து ஒரு முழு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். இவ்வாண்டின் இறுது மின்தமிழ் மேடை சஞ்சிகை விவசாயம் பற்றி கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியிட இத்தகவல் உதவும்.

சுபா

பண்ணாடி - கணவன் என்ற பொருளில் ஆளப்படும் கவிதை ஒன்று.
கொங்குநாட்டில் விதவை ஆகும்போது வெள்ளைப் புடைவை அணிவது பழைய வழக்கம்.
இப்பொழுது மாறிவருகிறது.

இந்தப் புதுக் கவிதை பற்றி ஒரு செய்தி சொல்லணும். 

 

இது மிக நல்ல கவிதை. நன்றி திரு. கணேசன்


 
புறநானூறு போன்ற பாடல்களில் போருக்குப் புறப்படும், இறக்கும் வீரர்களோடு
வெள்ளை நிறம் தொடர்புபடுத்தப்பட்டு பாடல் முழுக்க ஒலிக்கும்.
வெண்மையான வாகை மரத்தின் மலர் பார்த்திருப்பீர்கள். சிவப்பான பட்டு
உடுத்துக் கலியாணம் நடக்கும் வேளையிலும், ஈட்டி போன்ற கருமரத்தால்
செய்யும் கொற்றவைப் பாவைக்கு வெள்ளை நூலும், வெள்ளையான வாகைமலரும்
சார்த்தி வழிபாடும், அறுகு மணமும் நடப்பதை சங்க இலக்கிய திருமணப்
பாடல்கள் காட்டுகின்றன. அப்போது, கொற்றவையின் கணவன் வருணன்.
வருணன் என்னும் மகரவிடங்கருக்கான மந்திரமே திருமணங்களில்
இன்றும் ஓதப்படுகிறது. அப்ப்போதெல்லாம் ஆகோள் பூசல்கள்
அதிகம், குறுநில மன்னர்கள், ஏழு வேளிர்கள் இடையிலே தீராத பூசல்கள்,
போர்கள். போருக்கான நிறம் வெண்மை. போரால் பட்ட கணவன் ஞாபகார்த்தமாக
வெள்ளைச்சீலை வாழ்க்கை முழுதும் கணவனை இழந்தோர் அணிந்தார்கள்.


இது தமிழ்ப் பண்பாடு என்றா சொல்கிறீர்கள்?  இது இந்தியா முழுவதுமே உள்ளது என நான் நினைத்தேன்.


இந்தியா முழுதும் திராவிடப் பண்பாடு அடிமானமாக இருக்கிறது. Dravidian substratum.
கர்நாடகாவில் கௌடர்களின் பெண்கள் வெள்ளைச்சீலை அணிவர்.  

ஏன் வெள்ளை எனக் காட்டச் சங்க இலக்கியம் பயன்படும். இந்தியாவின் சமய. சமூக அமைப்பு
பழமையான செய்திகளைச் சொல்ல சங்க நூல்கள் ஒரு பாய்ண்ட்டர்.

Nagarajan Vadivel

unread,
Oct 1, 2015, 1:33:43 AM10/1/15
to மின்தமிழ்

கொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)


கொங்கதேசம்:
  ராயர் – அரசர் - சேரமான்
|
|
நான்கு ஆறு நாடுகள் (4 x 6 = 24 நாடுகள்): ப்ரதானி காமுண்ட (பிரதானி காமிண்டன் [கவுண்டன்] , ஆறுநாட்டார்)
|
|
இருபத்திநாலு நாடுகள்: ப்ரபு காமுண்ட (பிரபு காமிண்டன் [கவுண்டன்], ராஷ்ட்ரிபெரியநாட்டார்பெரியஎஜமானர்,பெரியகாராளர்பெரியபட்டக்காரர்)
|
|
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் சமஸ்தானங்கள்: சம்ஸ்தான காமுண்ட (சமஸ்தான காமிண்டன் [கவுண்டன்], நாட்டார்,சின்னஎஜமானர்காராளர்பட்டக்காரர்)
|
|
சமஸ்தானத்தில் காணி ஊர்கள்: காணி காமுண்ட (காணி காமிண்டன் [கவுண்டன்], காணியாள கவுண்டர்)

|
|
காணிக்குள் கிராமங்கள்: க்ராம காமுண்ட ( கிராம காமிண்டன் [கவுண்டன்ஊர்கவுண்டர்ஊர்கொத்துகாரர்) – 
ஊர் காவல்: ஊர் சாம்புவன் (தலையாரி)
|
ஊர் க்ராம மண்யகார (கிராம மணியகாரர்ஊர் மணியம்) -
ஊர் கணக்கர்க்ராம கர்ணம் (கர்ணையம்கணக்குப்பிள்ளை) –
உதவியாளர்க்ராம தண்டம் (தோட்டிதலையாரிதண்டல்காரர்)
|
|
கிராமத்துக்குள் கவுண்டர்கள்: காமுண்ட (காமுண்டன் [கவுண்டன்], பண்ணையக்காரன்பண்ணாடி)
இவருக்குக்கீழ் பண்ணையாட்கள்.

மறதிஞானி

டிஸ்கி:  இதனால் சகலருக்கும் குறிப்பாகச் சுட்டுப் பிழைக்கும் சுப்பர்களுக்குச் சொல்வதி யாதெனில் இது காப்புரிமை பெற்றது.  உசாத்துணை கொடுத்தால் சுட்டு வெட்டு ஒட்டு என்று விளையாடிவிடுவார்கள் என்பதால் இணைப்பு முடக்கப்பட்டது 

--
Reply all
Reply to author
Forward
0 new messages