ஓண நினைவுகள்!

64 views
Skip to first unread message

shylaja

unread,
Aug 29, 2012, 3:00:53 AM8/29/12
to mintamil, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல்
காலனியில் எங்கள்   குடும்ப நண்பர்களின் வீட்டில் நவராத்திரி நாட்களுக்கு  குடும்பத்தலைவர்கள்   எங்களோடு  என்னவோ  தூக்கு மேடைக்குச்செல்லும்  கைதிகள்போல சோகமாய் வருவார்கள். நவராத்திரி என்றால் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டில்  மாலை எங்கள்குடும்பங்கள் கூடி பக்திப்பாடல்கள் பாடிவிட்டு  2ஜி 3ஜி  என பல ஜீக்கள்,கருணாநிதி ஜெயலலிதா  எடியூரப்பா பங்காரப்பா ராஜ்குமார் வரை  என்று ஆண்கள் அரசியல் பேச நாங்க பிசிபேளாபாத் ஆலு பரோட்டாவிலிருந்து ஆனந்தவிகடனில் வந்த கதைகள்,சினிமாவிமர்சனம் வரை எல்லாம்  அலசி   சுண்டல்+ டின்னரை முடித்துக்கொண்டுஇரவு வீடு திரும்புவோம்.
 
சிலவருடங்கள் முன்புஓமனா என்று ஒரு மலையாளப்பெண்  காலனியில் குடிபுகுந்து எங்களுக்கு தோழியானாள். அவள்கணவரும்  எங்கள் கணவர்களுக்கு நண்பரானார். 
 
ஓணத்திருநாள் வருவதால் அன்றைக்கு விருந்துக்கு நாங்கள் எல்லாரும் வரவேண்டுமென ஓமனா கேட்டுக்கொண்டாள்.. ’ கூடிய சீக்கிரமே கணவருக்கு துபாயில் வேறு்  நல்ல வேலைகிடைத்துப்போய்விட இருப்பதால் இந்த ஓணம்  க்ராண்டா செய்றோம் வழக்கத்தைவிட குடும்பமே கூடுகிறது நீங்களும் வாங்க; என்று அழைத்துவிட்டாள்.
 
எங்காவது  எங்களோடு வெளியே ஷாப்பிங்கிற்கு மால் என்று வந்துவிட்டால்  எங்களுக்கு ஏதோ தூரத்து உறவு போல   அதுவும் புடவைக்கடைப்பக்கம்  வந்தா்ல்  போதும்,விரோதிபோல  முகத்தை வைத்துக்கொ்ண்டு ஒரு மூலையில் நிற்கும் எங்கள்  பதிகள்
 
 ஓணம் பண்டிகைக்கு தோழி ஓமனா வீட்டுக்கு  விடிகிறபோதே எழுந்துகொண்டுவி்ட்டார்கள்.பளிச்சென  பட்டுவேட்டி (ஜரிகைபோட்டது)   பட்டு சட்டை கட்டிக்கொண்டு(மச்சினர்கள் கல்யாணத்தின் போதெல்லாம் இதைக்கட்டிக்கொள்ள தோன்றாது என்னவோ பிறந்துவளர்ந்ததே  இங்கிலாந்தில்போல  பேண்ட்டும் இன் செய்த ஷர்ட்டுமாய் போட்டுக்கொண்டு எப்போதோ பம்பாயில் வேலைபார்த்த தோரனையில்  ஹிந்தியில்  பல வார்த்தைகளுடன் சொற்ப தமிழில்  பேசி அலட்டல்மன்னராய் இருக்கும் என் சு பதி(சுபுத்ரமாதிரி சு பதி:)ஓணத்தன்று  மல்லுவாக  மாறி நின்றார். மற்ற    தோழிகளின் கணவர்களும் மலையாளஆ்ண்களாய் அங்கே காணவும் தெரி் ந்துபோனது முதல்நாள் இவர்கள் எல்லாரும்  சலூனுக்கு      திட்டமிட்டு  போன காரணம்  எதற்கு என்று:)
 
ஓமனாவின் வீட்டில் ஓணத்தன்று அவள் குடும்பமே  கூடி விட்டது..பெண்வாசனை அதிகம் தெரிந்தது!
 
 ‘நாட்டிலிருந்தால் இப்படித்தான்  அத்தரைபேரும்  கூடிக்கொண்டாடுவோம் இப்போள்  இவ்விட பெங்கலூரில் ஆளுக்கொரு திசைல இருக்கோம்  ஓணம் சமயம் எங்க குடும்பமே  கூடிக்களிப்போம் டான்சும் உண்டாக்கும்” என்று ஓமனா  புத்தாண்டுதினம் நடந்த சந்திப்பில் சொல்லிவிட்டாள்..
 
குடும்பப்பொறுப்புகளில் ஆண்களின் பங்கு என்பதைப்பற்றிக்  காட்டுக்கத்திப்  பட்டிமன்றம்  : நடத்தும் போதெல்லாம் கேட்காத எங் கள் பதிகளின் செவிகள்  ஓமனா முணுமுணுத்ததை கேட்டுவிட்டதுபோலும்!  உடனேயே,’உங்க குடும்பமா எதுக்குப்பிரிக்கறீங்க மேடம் எங்க குடும்பமும் அதுதானே.?”   என.எது என்னுதோ அது உன்னுது எது உன்னுதோ அது என்னுது  என்கி்ற விளம்பரப்பாடல்  போல  சுதாவின் கணவர் ஜோக்கடித்தார்.
 
 
மனுஷனுக்கு வீட்டைவிட்டுவெளியே வந்தா    ஜோக்கா  கொட்டுமே-----  சுதா பல்லைக்கடித்தாள்.
 
ஆண்கள் உலகில் இதெல்லாம் சகஜம்டி என்று  ஜனனி அவளை சமாதனப்படுத்தினாள்.
 
மலையாள மக்களைகுஷி்ப்படுத்தவோ என்னவோ”உங்க கேரளா  தமிழுக்கு எவ்வளவு  கொடுத்திருக்கு!!  ஆஹா  அன்று பத்மினி ராகினி  இன்றுஅசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க தமிழ் உலகுக்குஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா?’ என்று  சுரேஷ் ஆரம்பித்தார்.
 
 
ஆஹா  ஒரு ஆம்பிளை  பெயர் நினைவிருக்கா பாரேன் இவங்களுக்கு?  கிசுகிசுத்தாள் விஜி.
 
ஓம்னா வீட்டு வாசல்  நிறைய  பூக்கோலம் பார்த்ததும்  ” ஆஹா  பூலோகமே இங்கு  வந்ததோ?” என்று கவிதை பாடாதகுறையாக  வியக்கவும்  விஜி”போதுமே  கிருஷ்ண ஜெயந்திக்கு மாஞ்சிமாஞ்சி  குட்டிக்குட்டிக்கால் எல்ல்லாம் போட்டு  வீட்டில்  ஒருத்தியாய்  அத்தனையும் செய்வேன் அப்போ  கண்டுக்கிட்டதே இல்லையே நீங்க இப்ப என்ன  பூக்கோலம் பார்த்து பூ  லோகம்னு  ரொம்பத்தான்  வழியல்?”  என்றாள்.
 
.
 
 
சுரேஷை  மிஞ்சினார்  ஆதித்யா  ///ஓமனாவின் ஒன்றுவிட்ட சகோதரிஎன ஒரு இளம்பெண்  கூந்தலை  விரித்து நுனிமுடிச்சிட்டு அதில்  மல்லிகைப்பூ சுற்றிக்கொண்டு மலையாள  பாணி உடையில் குனிந்து கோலம்போடவும், 
 
 கோலம்போடக்குனிகின்றாய்
 கோலம் அழகா
உன்கோலம் அழகா
 
என்று கவிதைஎ ழுத கைதுறுதுறுப்பதாய் ரகசியமாய் நண்பர்களிடம் சொல்ல  கேட்ட  என் தோழி அவர் மனைவி சசிகலா, ’வீட்டில் புது்சாவாங்கி இருக்கற பூந்துடைப்பமும் அழகு ’ என்றாள்  சிரித்தபடி.
 
ஆக  நாங்கள் எல்லாம் தமிழ்ப்பெண்களாய்  பட்டுசேலை பின்னிய தலை என்று அவர்கள் வீட்டில் நுழைய எங்கள் பதிகள்  வேஷ்டி பட்டுஷர்ட்டுடன் நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டையும் தீற்றிக்கொண்டு  தொடந்தனர்.
 
உள்ளே யேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்  ஏஷியா நெட்டில்
 
 யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
 
 ”அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!!”
வழக்கம் போல ஆண்களில்  ஒரு குரல்  பாட்டை  ரசித்தமாதிரி தெரியவில்லை.
 
 
ஏஷியா நெட்  சானல்தான்  பெஸ்ட் என்ப்துபோல  பேசிவிட்டு  ஓமனாவின் குடும்பத்தார் சிலரோடு  எங்கள்  பதிகள்  அரைகுறை்மலையாளத்தில்பேச ஆரம்பித்தனர்.
 
என்ன ஆச்சு இவங்களுக்கு என நாங்கள்: கிண்டலாய்  கேட்டு சிரித்தபடி  ஹாலில் அமர்ந்தோம்.
 
ஓ ?
ஒ!
 
என் கணவர் சம்மந்தமே  இல்லாமல் மைக்கேல் மதனகாமராஜன் பார்த்த பாதிப்பில்  குரல்கொடுத்தார்,.
 
‘இவள் என் கசின்  பேரு வனஜை  பாலக்கோட்டில்  இருக்கா  தமிழ்  பேசும் உங்களாட்டம்” என்றாள் ஓமனா.
 
பார்க்க   வனஜா சற்று துறுதுறுப்பாக இருந்தாள்..  அவள் நகர்ந்தும் ஹாலில்  ஜொள் பெருகியதால் நாங்கள்”   நினைவில் வச்சிக்குங்க ரெண்டு வளர்ந்த  குழந்தைங்க” என்றோம்
 
“அட  ரெண்டு வளர்ந்த குழந்தைக்கு வனஜை அம்மையோ   ஓ நம்ப முடியவில்லை வில்லை வில்லை” என்றார் ஆதித்யா.
 
“ அட  ரெண்டு வளர்ந்த குழந்தைன்னு சொன்னது  உங்களுக்கெல்லாம்...” என்றேன் நான்.
 
 
கைகொட்டுக்களி  நடனத்தைப்பார்க்கும் போது ,” ஆஹா எத்தனை எளிமையான உடை  மலையாள மங்கயைர்க்கு!
பண்டிகைனாலும் நம்மவீட்டு மாதர்குல திலகங்கள் போல பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குறாங்களே””என்று  தங்களுக்குள் பேசிக்கொள்வதாய் நினைத்துக்கொண்டு
 காமிராவுடனிருந்த  எங்கள் கணவர்கள் அனைவருமே  பிசி ஸ்ரீராம் சந்தோஷ் சிவன் பாலும்மகேந்திரா, கேவி ஆன்ந்த ஆனார்கள்.. பத்திரிகைக்குக்கொடுக்க என்னை நல்லபோஸ்ல நல்லதாபோட்டோ எடுங்கன்னு நான் கரடியா கத்தினதை நினைத்துக்கொண்டேன்::)
 
 கை கொட்டுக்களிமுடிந்ததும்,’ எத்தரை சுந்தரமாயிட்டு?” என்று  தைரியமாய் ,மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்  ஆதித்யா.
 
”சூர்யா டிவில  நயனதாரா  க்ளோபல்வாமிங் பத்தி  ரொம்ப சிந்திச்சிப்பேசாறாங்க  அதைவைங்க ”என்று  விரட்டினார் சுரேஷ்
 
பேசறதைக்கேட்கவா அல்லது பார்க்கவா என்று ஜனனி சீண்டினாள்..
 
 
”க்ளோபால் வாமிங்! இட்ஸ்  சீரியஸ் யு  நோ?ஏந்தான் இப்படி அவேர்னெ்ஸ்சே இல்லாம் இருக்கீங்களோ நம்ம லேடீஸ்லாம்    சரி சரி  கமான் யார் லெட்ஸ் வாட்ச்  சூர்யா சானல்”
 
’ஓ’  என்றேன் நான் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி
 
 எசியா நெட்ல   மோகன்லால்  மமுட்டி ப்ருத்விராஜ் இன்னும் சில  ஹாண்ட்சம் ஆண்கள் வராங்களாம்,நாங்க கேக்கணுமே என்ற  எங்கள்  குரல்களை ’  கடலினக்கர போனோரே காணாப்போயினபோனோரே  என்ற  பழைய பாடலை  தாளம்போட்டு ரொம்ப அனுபவித்துத்தப்பும் தவறுமாய் பாடிய அவர்களின் குரல்கள்  அமுக்கிவிட்டுவிட்டன:)
 
ஓமனாவின்  சமையல்  அட்டகாசமாய் இருந்தது  அதிலும்ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் ஓண விருந்தாகும் என்று அதைப்பற்றி அவள்  விவரித்தாள்.
 
. உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு. தரையில் பாய் விரித்து அமர்ந்துதான் உண்ண வேண்டும். இலையில் இடது ஓரத்தில் முதலில் அப்பளம், அதற்கு மேல் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு வைக்க வேண்டும்.
இலையின் இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரியும், அதற்கு கீழே சர்க்கரை வரட்டியும், இடது புறத்தின் மேல் உப்பில் இட்ட கறிகளான எலுமிச்சை, மாங்காய், இஞ்சிக்கறி பின்னர் ஓலன் எரிசேரி, அவியல் கிச்சடி, பச்சடி, துவரன் ஆகியவை பரிமாறிய பின்னர் கடைசியில் சாதம் பரிமாறப்படும். இதற்கு பிறகுதான் பருப்பு, சாம்பார், காளன், பாயாசம் அடுத்தடுத்து பரிமாறப்படும். முதலில் சாதத்துடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாயாசமும், அடை பிரதமன், கடலை பிரதமன், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், பாலடை என்று பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசத்துடன் சிறிது சாதம். இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் தென் கேரள பகுதியில் மட்டுமே காணப்படும். இதன் பிறகு கடைசியாக சிறிது மோருடன் சாதம் சாப்பிடுவதுடன் நிறைவு பெறுகிறது. வட கேரள பகுதிகளில் ஓண சத்யவுக்கு முன்பே இலையில் பழம், அப்பளம், நெய், சீனி ஆகியவற்றை கலந்து பிசைந்து சாப்பிடுவர். அதன் பின்னர் ஓண சத்ய உண்பர். கொல்லத்தில் பைன் ஆப்பிள் கொண்டு தயார் செய்யப்பட்ட சாராயம் கண்டிப்பாக இருக்கும்(எங்களுக்கு இல்லை சத்தியம்:)). மரச்சீனி கிழங்கும் வைப்பது
 
 ஒமனாவின் ஒன்றுவிட்ட தங்கை அசப்பில் மீ  ரா ஜாஸ்மின்போலதுறுதுறுவென்றிருந்தாள்.. அவள்  சுரேஷுடன் வந்த தம்பியைப்பார்த்து ,’நீங்க அப்படியே ப்ரித்விராஜ்போல இருக்கீஙக் எனப்புகழ்ந்துவிட்டாள்.
 
ஆஹா...   இந்த மொழி  சத்தம்போ்டாதே படத்தில நடிச்ச ப்ருத்விராஜையா சொல்றீங்க
நம்பமுடியாமல் கேட்டார்  சுரேஷ்.
 
அதே அதே என்று அந்தப்பெண் அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள்
 
மொழி ஜாதி  மாறினால் என்ன  நாமெல்லாம் இப்போ ஒரே குடும்பம் இந்த மீரா  ஜாஸ்மினை நம்மப்ருத்விராஜுக்கு  முடிச்சால் என்ன?
 
 
சுரேஷ் ஏதோ கணக்குபோட ஆரம்பித்தார்.
 
சாப்பாடு ஆனதும்மறுபடி அந்தமீராஜாஸ்மின் சுரேஷின் தம்பியை’ எத்தரை ஸ்மார்ட்டாயிட்டு?” என்றோஎன்னவோ மலையாளத்தில் புகழ்ந்தாள்.
 
ஆஹா  காதல் வந்திருச்சா?
 
சுரேஷ் என் கணவரிடம்,”பௌர்ணமிபோல  என்ன ஒரு பளிச்  லுக்!அந்தப்பெண் நம்மகுடும்பத்துக்கு வந்தா எவ்வளவு  நல்லாயிருக்கும் சொல்லுங்க ?  ஆனாலும்பாருங்க  நமக்கும் வாய்ச்சீருக்கே..?”  என்று முனகினார்  அவர் மனைவி,”்ஹலோ மாசத்துல ஒரு்நாள்தான் பௌர்ணமி     பளிச் லுக்காம் பளிச் லுக்!  அமாவாசைக்குபோனாலும்வானத்தைகைவிடாம மறுபடி வளர்ந்திட்டே வர்ர நிலாத்துண்டங்கள்  நாங்க!!   பௌர்ணமி ஒரு நா வந்து தலையகாமிச்சிட்டுப் போய்டும்  இளமையும் நில்லா யாக்கையும் நில்லா...  அடிகளார் பாட்டு்  தெர்யுமில்ல?”!
 
ஆனாலும் சுரேஷின் தம்பியைவிடவும் சுரேஷ்  இப்படி ஒரு வாய்ப்பைதவறவிடக்கூடதென நினைத்தார்போலும்
 
 நல்ல நாள் இன்னிக்கு ஓணம் அதிலும் திருவோணம் ஆஹா  என்றார்  புதிதாய் கண்டுபிடித்த மாதிரி!
 
மதியம் மணி 3 ஆனதும்விடைபெற்றுக்கொண்டோம் .
 
 அப்போது மீரா ஜாஸ்மின் சுரேஷிடம்,” உங்கப்ரதர் ரொம்ப ஸ்வீட்  ...  ஐ லைக் ஹிம் சோ மச்”. என்றாள்
 
இதான் சமயம் நழுவவிடாதே சுரேஷ்  உன் தம்பியும்  மௌனமா இருக்கான் மௌனம் சம்மதம்  .. மனசிலாயி? என்று
 
ஆதித்யன்  உசுப்பினார்
 
 
சுரேஷ்  ஓமனாவிடம் சென்று,” உங்க கசின்  அதான் மீரா  ஜாஸ்மின் மாதிரி  இருக்காங்களே  - அவங்க---?” என இழுத்தார்.
 
“ ஆமாம்.. அவ  வாயாடி ஏதும் பேசிட்டாளா எசகுபிசகா?  ஏய்  இவ்விட  வா”
என்று அவளை அழைத்துவிட்டாள்.அதற்குள் அவள் ஓ்டி வந்தபடி,” சேச்சி...  சுரேஷ் அங்கிள்  தம்பிய  நீங்க பார்த்தீங்களா?  அப்படியே  ப்ருத்விராஜ் போல  இருக்கார் இல்லையா?” என்றாள்
 
“ஓ ஆமா  அப்படியே  அவர்தான்  அதான் சேட்டன் நினைவு வந்துதா உனக்கு?  அது ஒண்ணுமில்ல சுரேஷ்  இவள் காலேஜுக்கு  திருச்சூர்க்கு  விழாக்கு ஒருவாட்டி ப்ருத்விராஜ் வந்தாராம்  இவளைப்பார்த்து  ஏதோ சொன்னாராம்  அன்னிலிருந்து  இவள் அவரை சேட்டன் என்பாள்.. இப்போ அவர் மாதிரி இருக்குற உங்க தம்பியை  தனக்கு சேட்டன்னு சொல்றா”
 
சேட்டன்?
 
என்ன அர்த்தம்?
 
திரும்ப வீடு் வரும்போது சுரேஷ் கேட்டார்.
 
சேட்டன்னா அழகன்னு  அர்த்தம். என்றோம் நாங்கள்  வேண்டுமென்றே.
 
 
ஓ?
 
என்ற சுரேஷைப்பார்த்து  எல்லோரும் சிரித்துவிட்டோம்!!! 
 
 இப்படியாக எங்களின் ஓணத்திருநாள் அமைந்தது.
 
 
 
 
 
 

coral shree

unread,
Aug 29, 2012, 3:13:24 AM8/29/12
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல்
அன்பின் ஷைலு,

மிக அருமை.. உங்கள் அனுபவத்தை ஒரு சிறுகதையாகவே படைத்துவிட்டீர்களே.....

அன்புடன்
பவளா

2012/8/29 shylaja <shyl...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

meena muthu

unread,
Aug 29, 2012, 3:17:33 AM8/29/12
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல்
நகைச்சுவை இழையோட அதனூடே ஓணம் பற்றிய தகவலும் சொல்லி ...!
இப்படி அசத்த ஷைலுவால் மட்டுமே இயலும் :) மிக ரசித்தேன்.

2012/8/29 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Aug 29, 2012, 4:39:21 AM8/29/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல், தென்றல்
நன்றி  பவழா...என்னவோ சிலர்  படிச்சி நடுங்கி ஒடுங்கிப்போயிட்டாங்களாம்  கதை விட்றாங்க பாருங்க:)

2012/8/29 coral shree <cor...@gmail.com>

shylaja

unread,
Aug 29, 2012, 4:40:10 AM8/29/12
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல்
ரசிச்சி கருத்து சொன்ன மீனாஜிக்கு மிக்க நன்றி

2012/8/29 meena muthu <ranga...@gmail.com>

sk natarajan

unread,
Aug 29, 2012, 4:57:37 AM8/29/12
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல்
மிகவும் அருமையாக இருந்தது
உங்களுடன் பயணித்தது போல இருந்தது
இன்று திருமண நிச்சயம் நடந்து விடும் என நினைப்பில் இருந்த போது ச்சே  ...சேட்டன் என்று சொல்லி ...ஒரு வாலிபரின் கனவை முடித்துவிட்டீர்களே :)

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/8/29 shylaja <shyl...@gmail.com>

DEV RAJ

unread,
Aug 29, 2012, 5:10:06 AM8/29/12
to mint...@googlegroups.com
On Wednesday, 29 August 2012 12:31:16 UTC+5:30, Shylaja N wrote:
>>> எப்போதோ பம்பாயில் வேலைபார்த்த தோரனையில் ஹிந்தியில்  பல வார்த்தைகளுடன்
சொற்ப தமிழில்  பேசி அலட்டல்மன்னராய் இருக்கும்
என் சு பதி(சுபுத்ரமாதிரி சு பதி:)ஓணத்தன்று  மல்லுவாக  மாறி நின்றார். <<<



உங்கள் ஸுபதியின் மி அ முகவரி  கிடைத்தால் தேவலை;
அவரிடம் ஒரு முகமைச் செய்தி பகிர வேண்டும் :))



தேவ்

shylaja

unread,
Aug 29, 2012, 5:10:12 AM8/29/12
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல்
:):)  நன்றி சாக்கி....வாலிபருக்கு  கன்னட உடுகி  சிக்கியாச்சு:)

2012/8/29 sk natarajan <sknatar...@gmail.com>

shylaja

unread,
Aug 29, 2012, 5:24:59 AM8/29/12
to mint...@googlegroups.com

 தேவ்  ஜீக்கும் மைபா  நல்ல  ஃபில்டர்காபி  முறுகல்  தோசை உண்டே!!:)
2012/8/29 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

S NEELAKANTAN

unread,
Aug 29, 2012, 5:30:15 AM8/29/12
to mint...@googlegroups.com
என்ன தான் மைபா தோசை பில்ட்டர் காபி அந்த ஓணம் சாப்பாட்டுக்கு பக்கத்திலே கூட  வராது. கிச்சடி,மாங்காய் பச்சடி, அவியல், ஓலன், காளன், எருசேரி , பப்படம், பருப்புவடை , பால்பாயசம்  ஆஹா ஆஹா  
 


2012/8/29 shylaja <shyl...@gmail.com>

N. Kannan

unread,
Aug 29, 2012, 5:52:50 AM8/29/12
to mint...@googlegroups.com
2012/8/29 DEV RAJ <rde...@gmail.com>:

> உங்கள் ஸுபதியின் மி அ முகவரி கிடைத்தால் தேவலை;
> அவரிடம் ஒரு முகமைச் செய்தி பகிர வேண்டும் :))
>

ஏதோ மல்லு ஜொள்ளு விட்டுக்கொண்டு வந்த அத்தனை ஆம்பளைகளையும் ஒரே வாராக
வாரிவிட்டார். எல்லோருக்கும் சொல்ல வேண்டும் ;-)

இந்த சேட்டன்/அண்ணா என்பதெல்லாம் சும்மா ஒரு கவசம் என்பது ஆண்
வர்க்கத்திற்குத் தெரியாதா என்ன! ;-)

க.>

Innamburan Innamburan

unread,
Aug 29, 2012, 6:44:02 AM8/29/12
to mint...@googlegroups.com
நாரயணா! 
என்னது இது? இந்த ஷை காளமேகியாயினி ஆகிவிட்டாளா? இத்தகைய  அருமையான இலக்கியம் படித்து நானூறு வருடங்கள் ஆயின. ஏதோ அந்த வேலை, இந்த வேலை என்று இருந்தால், இப்படியா முன்னால் சொல்லாமல் அவுத்து விட்றது? ரொம்ப எஞ்ஞாய்டு. 
'ஷை'க்கு தனி மடல்: நானும் இந்த மாதிரி வாங்கிக்கட்டிண்டிருக்கேன். அதுலெ ஒரு திருப்தி.
இன்னம்பூரான்
பி.கு, ஸுபதியின் நாமம்: நாரயணன். டபிள் மீனிங்க் உங்கள் இஷ்டம்.

2012/8/29 N. Kannan <navan...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2012, 6:53:06 AM8/29/12
to mint...@googlegroups.com
//ஏதோ மல்லு ஜொள்ளு விட்டுக்கொண்டு வந்த அத்தனை ஆம்பளைகளையும் ஒரே வாராக

வாரிவிட்டார். எல்லோருக்கும் சொல்ல வேண்டும் ;-)

இந்த சேட்டன்/அண்ணா என்பதெல்லாம் சும்மா ஒரு கவசம் என்பது ஆண்

வர்க்கத்திற்குத் தெரியாதா என்ன! ;-)//


தங்களுக்கென்று பலபேர் முன்னிலையில் வரதட்சினை என்ற பணம் கொடுத்து
சொந்தமாக்கிகொண்ட ஜீவன் உள்ள பொருள் (கல்லானாலும் புல்லானாலும்)
கண்டிசன்ஸ் அப்ளை என்ற உடுக்குறியிட்ட பொடி எழுத்தில் எழுதப்பட்ட பொது
மன்றில் எப்படி நடக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறுவதைக் குற்றம் என்று
கூறுகிறார்கள்

திருமண ஒப்பந்தம் ஒரு சார்பானது அதில் தப்பிக்கும் சரத்து வேண்டும் என்றே
நீக்கப்பட்டு பெண்களுக்கே சாதகமாக எழுதப்பட்டுள்ளது

பெண்கள் பார்வை நாகரிகமானது வரையறைக்குட்பட்டது தன் பொருளைக் கவனமாகப்
பார்வையிட்டு கட்டுக்குள் வைப்பது

ஆண்கள் பார்வை நாகரிகமற்றது கொள்ளிக்கண் எல்லை தாண்டுவது பார்வையாலே
ஊர்ந்து உயிரெடுப்பது

என்னதான் விதவிதமா ரூம் போட்டு யோசித்தாலும் அவர்கள் கட்சிதான் எப்போதும்
ஜெயிக்கும்போல் தெரிகிறது.

ஹலோ தோக்குற கட்சி எதாவது பாயிண்ட் இருக்கா?

நாகராசன்

2012/8/29 N. Kannan <navan...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 29, 2012, 6:54:06 AM8/29/12
to mint...@googlegroups.com
நாராயணா!  நாராயணா    என்டெ குருவாயூரப்பா
ஓணம் நல்ல படியாக் கழிஞ்சு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/8/29 Innamburan Innamburan <innam...@gmail.com>
330.gif

Innamburan Innamburan

unread,
Aug 29, 2012, 6:54:48 AM8/29/12
to mint...@googlegroups.com
ஹலோ தோக்குற கட்சி எதாவது பாயிண்ட் இருக்கா?
~ இருக்கே.


Tthamizth Tthenee

unread,
Aug 29, 2012, 6:56:00 AM8/29/12
to mint...@googlegroups.com
பார்வை ஒன்றே போதுமே
 
பல்லாயிரம் சொல் வேண்டுமா

 

பேசாத கண்ணும் பேசுமா
பெண்வேண்டுமா  பார்வை போதுமா?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/8/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

coral shree

unread,
Aug 29, 2012, 6:56:40 AM8/29/12
to mint...@googlegroups.com
அதெப்படி இவ்ளோஓஓஓஓஓஓஒ உண்மைவிளம்பியா இருக்கீக பேரா.....ஐயா..... ஒரு வேளை ஓணம் அப்படீங்கறதாலயா......?

அன்புடன்
பவளா

2012/8/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2012, 6:56:56 AM8/29/12
to mint...@googlegroups.com
இருக்கு ஆனா இல்ல
நாகராசன்

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2012, 6:58:26 AM8/29/12
to mint...@googlegroups.com
பாம்பின் கால் பாம்பறியும் நீங்கள் அறியாததா
நாகராசன்

2012/8/29 coral shree <cor...@gmail.com>:

shylaja

unread,
Aug 29, 2012, 7:16:41 AM8/29/12
to mint...@googlegroups.com


2012/8/29 N. Kannan <navan...@gmail.com>
<<<<<:):)  அடட்டா  இளம் பெண்கள் பற்றிய ரகசியம் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்களே கண்ணன்:)

shylaja

unread,
Aug 29, 2012, 7:20:11 AM8/29/12
to mint...@googlegroups.com

்  ஏன் இசார்  இப்படி  மானத்தை வாங்றீங்க அருமையான  இலக்கியம்னெல்லாம் சொல்லி?:0 அவங்கவங்க நடுங்கி சுருண்டுட்டாங்க ஆல்ரெடி:)   என்ஞாய்டுன்னா அதுல  மகிழ்ச்சி அதே மதி!
 
  ஸுபதியின் நாமம்  நானோ(கார்  அவர் தயாரிப்பு இல்ல):)   இங்க அவங்க நண்பர்கள் மத்தில:)
2012/8/29 Innamburan Innamburan <innam...@gmail.com>

shylaja

unread,
Aug 29, 2012, 7:21:34 AM8/29/12
to mint...@googlegroups.com

::  ஆறு மனமே ஆறு!:)  (சும்மா  பாடிப்பாத்தேன் புரபசர்:)
2012/8/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

shylaja

unread,
Aug 29, 2012, 7:22:50 AM8/29/12
to mint...@googlegroups.com
ஆமா  இங்கயும் அப்படியே கழிஞ்சி...  க்ரூப் மடல்களைத்தலை கண்லகாட்டினாதானே?:)

2012/8/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
330.gif

shylaja

unread,
Aug 29, 2012, 7:24:25 AM8/29/12
to mint...@googlegroups.com
நல்ல பாட்டு தான் தேனி சார்:)  நீங்க எப்படி ஓணத்துக்கு அழைச்சா எங்க காலனி நண்பர்கள்போலத்தான் போவீங்களா?:)

2012/8/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
பார்வை ஒன்றே போதுமே

shylaja

unread,
Aug 29, 2012, 7:25:25 AM8/29/12
to mint...@googlegroups.com
நல்லபாம்பரசர்! சத்யம் தான் பேசுவார் பவழா:)

2012/8/29 coral shree <cor...@gmail.com>
அதெப்படி இவ்ளோஓஓஓஓஓஓஒ உண்மைவிளம்பியா இருக்கீக பேரா.....ஐயா..... ஒரு வேளை ஓணம் அப்படீங்கறதாலயா......?

shylaja

unread,
Aug 29, 2012, 7:25:57 AM8/29/12
to mint...@googlegroups.com
இப்ப யாரைப்பாம்புங்கறீங்க?:)

2012/8/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
பாம்பின் கால் பாம்பறியும் நீங்கள் அறியாததா

Tthamizth Tthenee

unread,
Aug 29, 2012, 7:28:36 AM8/29/12
to mint...@googlegroups.com
அம்மணிகள்  ரொம்ப கெட்டி  எங்களை மாதிரி இளைஞர்களை அழைப்பதில்லை

 

அழைத்தால் யோசிப்போம் எப்படிப் போவதென்று
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/8/29 shylaja <shyl...@gmail.com>

S NEELAKANTAN

unread,
Aug 29, 2012, 7:49:43 AM8/29/12
to mint...@googlegroups.com
 இன்றைக்கு அம்மணிகள் ராஜ்ஜியம்   ஏதோ வென்றுவிட்டோம் என்று  காலை வாரிவிடுகிரார்கள்.
நமக்கும் காலம் வராமலா போகும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் நாலு ஸ்திரீகள் முன்னில் புருஷன்மார்
வா துறக்கா திருக்கின்னது தான் நல்லது எப்போழான ஸ்திரீகள் பல்டியடிக்குன்னு பறையான் பற்றில்லா
 


2012/8/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

துரை.ந.உ

unread,
Aug 29, 2012, 8:30:16 AM8/29/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல், தென்றல்


2012/8/29 coral shree <cor...@gmail.com>
அன்பின் ஷைலு,

மிக அருமை.. உங்கள் அனுபவத்தை ஒரு சிறுகதையாகவே படைத்துவிட்டீர்களே.....

சிறுகதையா ...இது சிறு கதையா !?

ரொம்பக் கோவமா இருக்கேன் அக்கா ..
(ஒரு அக்காவுக்காக இன்னோர் அக்காவிடும் சண்டை போடும் நிலையில் நான் ,,,,அய்யகோ)

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Hari Krishnan

unread,
Aug 29, 2012, 8:38:19 AM8/29/12
to mint...@googlegroups.com


2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>
எருசேரி ,

எரிச்சேரி.  எரிச்ச கறியாக்கும்.  (எரிச்சேரி என்றதும் அம்மாவுக்கு நடந்த கேடரேக்ட் ஆபரேஷன் நினைவுக்கு வருகிறது.  சென்னை தி நகரில் நடந்த சிகிச்சை அது.  80களில் கேடரக்ட் சிகிச்சை கொஞ்சம் அவஸ்தையானது.  டாக்டர் கெட்டிக்கார, அனுபவசாலி; வயது முதிர்ந்தவர்.  சிகிச்சை முடியும் தறுவாயில் சொன்னாராம் ‘நல்லவடியா முடிஞ்சது... செத்த ஏமாந்திருந்தாலும் மாமி கண்ணு எரிச்சேரியாயிருக்குமாக்கும்....’ [டாக்டர் இப்படிச் சொன்னதாகச் சொன்வர் அம்மாவேதான்!]

அம்மா காலத்தோடு எரிச்சேரி சேரி.  மறந்தாச்சு. :)

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Aug 29, 2012, 8:40:43 AM8/29/12
to mint...@googlegroups.com


2012/8/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ஓணம் நல்ல படியாக் கழிஞ்சு

அது அப்படியில்லையாக்கும்.  கழிஞ்ஞு.  கேட்டோ?

S NEELAKANTAN

unread,
Aug 29, 2012, 9:15:33 AM8/29/12
to mint...@googlegroups.com
 ஹரிக்ரிஷ்ணன் பரஞ்ஞது சரியாண. பிற்றைய திவசத்து குழம்பும் கீரையும் கலந்து கச்சட்டியிளிட்டு
சூடாக்கியதாணா எரிச்சகறி. டாக்டர்   பரஞ்ஞது   சரியாண.
அதனுடைய அர்த்தம் என்னவென்றால் : முந்தின நாள் குழம்பையும் கீரை கறியையும் கல்சட்டியில்
நல்ல சூடாக்கினால் அது குழைந்து  கூழாகிவிடும். அதைத்தான் அந்த பாலக்காடு டாக்டர் கொஞ்சம்
தப்பு நடந்திருந்தாலும் கண்ணு கூழு  மாதிரி ஆயிருக்கும் என்று அவருடைய தமிழாளைத்தில்
சொன்னார்  கொஞ்சம் மூக்கை இரண்டு கைகளாலும் அடைத்துக்கொண்டு தமிழை கொஞ்சம் வளைத்து
பேசினால் தமிழாளம் (தமிழ் கலந்த மலையாளம் ) ஆகிவிடும்.
ஹரிக்ரிஷ்ணன் பாலக்காடான ?? . பாலக்காடில் ஏது கிராமம் ???   


--

Geetha Sambasivam

unread,
Aug 29, 2012, 9:21:17 AM8/29/12
to mint...@googlegroups.com
தஞ்சை ஜில்லா எரிச்சேரி என்னும் எரிச்ச கறி திரு நீலகண்டன் சொல்லி இருக்காப்போலத் தான்.  அதுவும் தைப்பொங்கல் அன்னிக்குச் செய்யும் குழம்பில் இது கட்டாயமாய்ச் செய்வாங்க.  ஆனால் கேரளத்து எரிசேரி வேறு.  சேனையும், வாழையும் துண்டங்களாக நறுக்கிப் போட்டு வேக வைத்து மிளகு பொடி, உப்பு. மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து அரிசியை ஊறவைச்சுத் தேங்காயோடு சேர்த்து நைசாக அரைத்துக் கலந்து பின்னர் தேங்காய் துருவலையும், கடுகு, உ.பருப்பும், தே,எண்ணெயில் கருகப்பிலையோடு தாளிச்சு.  அந்தப்பக்குவமே தனி.  தனி சேனையிலும், தனி வாழைக்காயிலும் கூடச் செய்யலாம்.

2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 29, 2012, 9:23:26 AM8/29/12
to mint...@googlegroups.com
கல்யாணம் ஆன புதிசிலே தலைப்பொங்கல் அன்னிக்கு மாமியார் எரிச்சேரி பண்ணணும்னு எல்லாரும் சாப்பிட்டப்புறம் சொல்லவும் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம்.  ராத்திரிக்குப் பண்ணுவாங்க போலனு நினைச்சு நாக்கைத் தீட்டிக் கொண்டு ராத்திரி சாப்பிடறச்சே எரிச்சேரி இல்லையா? பண்ணணும்னு சொன்னீங்களே, மறந்துடுத்தானு கேட்டப்போ அடுப்பிலே கொதித்துக் கொண்டிருந்த குழம்பை விட்டு இதான் எரிச்சேரினு சொன்னதும், நான் மயக்கம் போட்டு விழாத குறை.  இந்த எரிசேரியே அவங்களுக்குத் தெரியலை.  அப்புறமாப் பாடம் எடுக்க வேண்டியதாப் போச்சு.

2012/8/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
தஞ்சை ஜில்லா எரிச்சேரி என்னும் எரிச்ச கறி திரு நீலகண்டன் சொல்லி இருக்காப்போலத் தான்.  அதுவும் தைப்பொங்கல் அன்னிக்குச் செய்யும் குழம்பில் இது கட்டாயமாய்ச் செய்வாங்க.  ஆனால் கேரளத்து எரிசேரி வேறு.  சேனையும், வாழையும் துண்டங்களாக நறுக்கிப் போட்டு வேக வைத்து மிளகு பொடி, உப்பு. மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து அரிசியை ஊறவைச்சுத் தேங்காயோடு சேர்த்து நைசாக அரைத்துக் கலந்து பின்னர் தேங்காய் துருவலையும், கடுகு, உ.பருப்பும், தே,எண்ணெயில் கருகப்பிலையோடு தாளிச்சு.  அந்தப்பக்குவமே தனி.  தனி சேனையிலும், தனி வாழைக்காயிலும் கூடச் செய்யலாம்.
360.gif

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2012, 9:29:00 AM8/29/12
to mint...@googlegroups.com
360.gif

Geetha Sambasivam

unread,
Aug 29, 2012, 9:35:01 AM8/29/12
to mint...@googlegroups.com
இது பாரம்பரிய எரிசேரி அல்ல பேராசிரியரே!

2012/8/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
360.gif

Hari Krishnan

unread,
Aug 29, 2012, 9:49:49 AM8/29/12
to mint...@googlegroups.com


2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

ஹரிக்ரிஷ்ணன் பாலக்காடான ?? . பாலக்காடில் ஏது கிராமம் ???   


ஹேஏய்!  என்னவாக்கும் தெரிஞ்சுண்டேள்! ஞான் துளியாக்கும் தலையாளத்துல ஸம்ஸாரிச்சேன்!  ஞான் பாலக்காடோ!  என்டே குருவாயூரப்பா!  ஞான் பாலக்காடுமில்லா பட்டிக்காடுமில்லா.... (பட்டின்னா ஒங்க தமிழ்ல பேஷற அர்த்தமாக்கும்.  தெரிஞ்சுதா?  மலைஞாளத்து பட்டியில்லா!)

ஏன்ரீ!  நானு கன்னடதல்லி மாத்தாடுவாகா, நானு கர்நாடகா மகாவா!  அர்ரம் குர்ரம் சேஸினவாடு தெலுகுவாடா?

அய்ய!  இன்னா சோக்கா கீதுப்பா இது... நம்ம லாங்குவேஜ வச்சிக்கினு நம்ம வெடத்த கண்டுபுஷ்டுவாரு போல்தெர்தே!  அய்ய.. உப்ப ஸொல்லு... இத்தான் நம்ம ஒர்ஜ்னல் பாச... தெர்தா?  மெர்ஸல் கிர்ஸல் ஆவாம, நெல்லா ரோசன பண்ணி, தோ அப்டீக்கா குந்திக்கினு கண்டுபுடி பாக்கலாம்.... 

(விளையாட்டுக்காக ஒருமையில் குறித்ததற்கு மன்னிக்கவும்.:) )

Hari Krishnan

unread,
Aug 29, 2012, 9:56:18 AM8/29/12
to mint...@googlegroups.com


2012/8/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

தஞ்சை ஜில்லா எரிச்சேரி என்னும் எரிச்ச கறி திரு நீலகண்டன் சொல்லி இருக்காப்போலத் தான்.  

எங்கம்மா பண்ணினதும் தஞ்சாவூர் எரிச்சேரியேதான்.  அம்மா ஃப்ரம் மன்னார்குடி.  மன்னார்குடி சந்தான ராஜகோபாலஸ்வாமி  தாயார் பேருதான் அம்மாவுக்கு.  சம்பகலக்ஷ்மி. :)

Geetha Sambasivam

unread,
Aug 29, 2012, 10:29:17 AM8/29/12
to mint...@googlegroups.com
அட? எனக்கு எரிச்சேரி பண்ணிக் கொடுத்த எங்க மாமியாரும் சம்பகலக்ஷ்மி தான். :))))  இப்போத் தான் இங்கே ஶ்ரீரங்கம் வந்துட்டுப் போனார். 

2012/8/29 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

S NEELAKANTAN

unread,
Aug 29, 2012, 10:00:21 AM8/29/12
to mint...@googlegroups.com
நண்பர்களுக்கு நன்றி. இன்றைய நாள் ஷைலஜா சேச்சியின் கதையில் ஆரம்பித்து எல்லாரும் அவரவர் பாஷையிலே மற்றவாளை காலை  வாரிவிட்டு  ஒரு நல்ல டைம் பாஸ். எப்படியோ மலையாளம், தமிழ், தமிழாளம் எல்லாம் நண்பர்களுக்கு அத்துபடியாகிவிட்டது. ஹரிக்ரிஷ்ணன் வரார் என்ன சொல்லவரார் என்று பார்த்து பின்னர் பதிலளிக்கிறேன்
 


2012/8/29 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

S NEELAKANTAN

unread,
Aug 29, 2012, 10:06:18 AM8/29/12
to mint...@googlegroups.com
என்னா ஹரிக்ரிஷ்ணன்
எங்கம்மா பண்ணினதும் தஞ்சாவூர் எரிச்சேரியேதான்.  அம்மா ஃப்ரம் மன்னார்குடி.  மன்னார்குடி சந்தான ராஜகோபாலஸ்வாமி  தாயார் பேருதான் அம்மாவுக்கு.  சம்பகலக்ஷ்மி. :)
 
இப்போ  மாட்டின்டேளா. நீங்க ஊட்ட மாடும் இல்லை, பசுமாடும் இல்லை, ஜரகண்டியும்  இல்லை, பலக்காடும் இல்லை ஏன்னு சொல்லிவிட்டு இப்போ மன்னார்குடி என்று சொன்னா யார் நம்புவார்கள்  


 


2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2012, 10:34:47 AM8/29/12
to mint...@googlegroups.com
அடேங்கப்பா சாமியோவ்
ஓணத்த்ன்னிக்கு 14 வகைப் பதார்த்தம் கூட்டு எரிச்சேரி இப்படித்தான் கேள்வி.
இங்க தமிழே கூட்டாகி எரிச்சேரிக் கூழாகி அடடா என்ன இனிமை
அப்பு கொன்னுட்டீங்க அப்பு தமிழை
ஓணம் ஸ்பெஸல் தமிழ்
நாகராசன்

2012/8/29 Hari Krishnan <hari.har...@gmail.com>:

shylaja

unread,
Aug 29, 2012, 10:37:08 AM8/29/12
to mint...@googlegroups.com
அடேயப்பா  மலையாளத்துல  அடிச்சி நகத்தறீங்க..மலையாள கண்டனோ?:)

2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

shylaja

unread,
Aug 29, 2012, 10:41:29 AM8/29/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல், தென்றல்
அடடா  துரை   கூல் கூல்!!   நாமெல்லாம் ஒரே கட்சி!!! 

2012/8/29 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

shylaja

unread,
Aug 29, 2012, 10:42:50 AM8/29/12
to mint...@googlegroups.com

எரிச்சேரியா? ஓ?!  எரிகுழம்புன்னு  ஒண்ணு  எங்கயோ சாப்பிட்ருக்கேனே அது மறந்தே போச் இப்ப.
2012/8/29 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

shylaja

unread,
Aug 29, 2012, 10:43:30 AM8/29/12
to mint...@googlegroups.com
On 29 August 2012 08:40, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2012/8/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஓணம் நல்ல படியாக் கழிஞ்சு

அது அப்படியில்லையாக்கும்.  கழிஞ்ஞு.  கேட்டோ?>>>

மனசிலாயி!!


shylaja

unread,
Aug 29, 2012, 10:44:25 AM8/29/12
to mint...@googlegroups.com
அட  அட  பயங்கரமா மலையாலம் பேசறீங்களே....  !!!

2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

shylaja

unread,
Aug 29, 2012, 10:45:53 AM8/29/12
to mint...@googlegroups.com
கண்ணோடு காண்பதெல்லாம்  புரபசரே   வயிற்றுகுச்சொந்தமில்லை:)

360.gif

shylaja

unread,
Aug 29, 2012, 10:47:22 AM8/29/12
to mint...@googlegroups.com


2012/8/29 Hari Krishnan <hari.har...@gmail.com>

இந்த மெட்ராஸ்  பாஷைக்கு  க்ளாஸ் எடுங்களேன்  எனக்கு  கத்துக்க ஆசை  அட்லீஸ்ட் சென்னைபோனா  லேசா  சண்டையாவது போடக்கத்துக்கணும்:0

shylaja

unread,
Aug 29, 2012, 10:48:32 AM8/29/12
to mint...@googlegroups.com


2012/8/29 Hari Krishnan <hari.har...@gmail.com>


2012/8/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
தஞ்சை ஜில்லா எரிச்சேரி என்னும் எரிச்ச கறி திரு நீலகண்டன் சொல்லி இருக்காப்போலத் தான்.  

எங்கம்மா பண்ணினதும் தஞ்சாவூர் எரிச்சேரியேதான்.  அம்மா ஃப்ரம் மன்னார்குடி.  மன்னார்குடி சந்தான ராஜகோபாலஸ்வாமி  தாயார் பேருதான் அம்மாவுக்கு.  சம்பகலக்ஷ்மி. :)

ஜம்பகலக்ஷ்மின்னும் சொல்றாங்க...  செண்பகம் தான் சரியோ?
--
அன்புடன்,
ஹரிகி.

--

shylaja

unread,
Aug 29, 2012, 10:49:19 AM8/29/12
to mint...@googlegroups.com
ஆஹா  லக்ஷ்மிகடாக்ஷமாக இருக்கிறதே இழை!

2012/8/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

shylaja

unread,
Aug 29, 2012, 10:50:08 AM8/29/12
to mint...@googlegroups.com
டைம் பாஸ்தான்  இப்படி என்னிக்காவது!!

2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2012, 10:54:28 AM8/29/12
to mint...@googlegroups.com
பர்த்தால் பசி தீரும்
இதுதானே உங்கள் மை பா முறுகல் தோசை காபி வழங்கப் பயன்படும் தாரக் மந்திரம்
ஆவி பறக்குதுன்னா கணினித் திரையில் புகை மூட்டம்
பஜ்ஜி ஒரு பிளேட் போட்டால் நாவின் சுவை நரம்புகள் சுற்றிக் கூத்தடிக்கும்
மை பா சொல்லவேண்டியதில்லை இணையத்தில்  உலக நெகட்டிவ் காபிரைட் ஒங்களுடையதுதானே
வயிற்றுப்பாடு என்று ஆண்கள் படும்பாடு கண்ணீர்க்கதை
நாகராசன்


2012/8/29 shylaja <shyl...@gmail.com>
360.gif

shylaja

unread,
Aug 29, 2012, 10:54:28 AM8/29/12
to mint...@googlegroups.com
ஓணம் இன்னிக்கு  ஜோராய்க்கழிஞ்சி புரபசரே!

2012/8/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2012, 10:55:33 AM8/29/12
to mint...@googlegroups.com
பார்த்தால் பசி தீரும்
ஹி ஹி பயந்து ஓடியதில் ஒருகால் இடறிவிட்டது
நா>

2012/8/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
360.gif

shylaja

unread,
Aug 29, 2012, 10:59:14 AM8/29/12
to mint...@googlegroups.com
நான்  பர்த்தா(கணவர்) பசி தீரும்னு படிச்சேன்:)  என்னது உங்களுக்கு  பயமா?:)  கால் இடறிச்சாமா?:)  நம்பறோம்:)ஆமா அதென்ன  இ சாரைக்காப்பியடிக்கிறீங்க  ம்?  இ சார்  வந்து  இந்த நா   சாரை என்னனு கேளுங்க:)
360.gif

Tthamizth Tthenee

unread,
Aug 29, 2012, 11:04:53 AM8/29/12
to thamiz...@googlegroups.com, minT...@googlegroups.com
நாகராஜனுக்கு  காலா? அது இடறிற்றா? என்னய்யா இது அதிசியம்

 

அன்புடன்
 
தமிழ்த்தேனீ


2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>
நாகராஜன் சார் காலு மடங்கியோ . குறைச்சு முக்குட்டு தைலம் மடங்கிய ஸ்தலத்தில் தடவி
சுடு தண்ணிர ஒழிச்சான் மதி இரண்டு திவசம் கொண்டு சரியாஹும்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

330.gif
360.gif

S NEELAKANTAN

unread,
Aug 29, 2012, 10:55:05 AM8/29/12
to mint...@googlegroups.com
இந்த தமிழ் மலையாள மற்றும் தமிழாள படைப்புகளுக்கும் பங்கெடுத்த நண்பர்களுக்கும் ஓண சாப்பாடு
கிடைக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள் நல்ல ஒரு பொழுதுபோக்காக இருந்தது வளர நன்னி
 


2012/8/29 shylaja <shyl...@gmail.com>

S NEELAKANTAN

unread,
Aug 29, 2012, 11:01:12 AM8/29/12
to thamiz...@googlegroups.com, minT...@googlegroups.com
நாகராஜன் சார் காலு மடங்கியோ . குறைச்சு முக்குட்டு தைலம் மடங்கிய ஸ்தலத்தில் தடவி
சுடு தண்ணிர ஒழிச்சான் மதி இரண்டு திவசம் கொண்டு சரியாஹும்
 


---------- Forwarded message ----------
From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
Date: 2012/8/29
Subject: Re: [MinTamil] Re: ஓண நினைவுகள்!
To: mint...@googlegroups.com


360.gif

Nagarajan Vadivel

unread,
Aug 29, 2012, 11:11:36 AM8/29/12
to mint...@googlegroups.com
//நாகராஜனுக்கு  காலா? அது இடறிற்றா? என்னய்யா இது அதிசியம்//

பறந்து பறந்து பூவில் தேனெடுக்கும் தேனீக்கு பாம்பின் கால் பாம்பறியும் என்பது தெரிய வாய்ப்பில்லையே

நாகராசன்

2012/8/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
330.gif
360.gif

Innamburan Innamburan

unread,
Aug 29, 2012, 12:49:29 PM8/29/12
to mint...@googlegroups.com

என் பாட்டியும் ஜம்பகலக்ஷ்மி. என் தங்கையும் ஜம்பகலக்ஷ்மி.

Subashini Tremmel

unread,
Aug 29, 2012, 1:05:59 PM8/29/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அருமை .. அருமை ஷைலஜா.. படித்து சிரிப்பு தாளவில்லை. :-)))))
சுபா

2012/8/29 shylaja <shyl...@gmail.com>
காலனியில் எங்கள்   குடும்ப நண்பர்களின் வீட்டில் நவராத்திரி நாட்களுக்கு  குடும்பத்தலைவர்கள்   எங்களோடு  என்னவோ  தூக்கு மேடைக்குச்செல்லும்  கைதிகள்போல சோகமாய் வருவார்கள். நவராத்திரி என்றால் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டில்  மாலை எங்கள்குடும்பங்கள் கூடி பக்திப்பாடல்கள் பாடிவிட்டு  2ஜி 3ஜி  என பல ஜீக்கள்,கருணாநிதி ஜெயலலிதா  எடியூரப்பா பங்காரப்பா ராஜ்குமார் வரை  என்று ஆண்கள் அரசியல் பேச நாங்க பிசிபேளாபாத் ஆலு பரோட்டாவிலிருந்து ஆனந்தவிகடனில் வந்த கதைகள்,சினிமாவிமர்சனம் வரை எல்லாம்  அலசி   சுண்டல்+ டின்னரை முடித்துக்கொண்டுஇரவு வீடு திரும்புவோம்.
 
சிலவருடங்கள் முன்புஓமனா என்று ஒரு மலையாளப்பெண்  காலனியில் குடிபுகுந்து எங்களுக்கு தோழியானாள். அவள்கணவரும்  எங்கள் கணவர்களுக்கு நண்பரானார். 
 
ஓணத்திருநாள் வருவதால் அன்றைக்கு விருந்துக்கு நாங்கள் எல்லாரும் வரவேண்டுமென ஓமனா கேட்டுக்கொண்டாள்.. ’ கூடிய சீக்கிரமே கணவருக்கு துபாயில் வேறு்  நல்ல வேலைகிடைத்துப்போய்விட இருப்பதால் இந்த ஓணம்  க்ராண்டா செய்றோம் வழக்கத்தைவிட குடும்பமே கூடுகிறது நீங்களும் வாங்க; என்று அழைத்துவிட்டாள்.
 
எங்காவது  எங்களோடு வெளியே ஷாப்பிங்கிற்கு மால் என்று வந்துவிட்டால்  எங்களுக்கு ஏதோ தூரத்து உறவு போல   அதுவும் புடவைக்கடைப்பக்கம்  வந்தா்ல்  போதும்,விரோதிபோல  முகத்தை வைத்துக்கொ்ண்டு ஒரு மூலையில் நிற்கும் எங்கள்  பதிகள்
 
 ஓணம் பண்டிகைக்கு தோழி ஓமனா வீட்டுக்கு  விடிகிறபோதே எழுந்துகொண்டுவி்ட்டார்கள்.பளிச்சென  பட்டுவேட்டி (ஜரிகைபோட்டது)   பட்டு சட்டை கட்டிக்கொண்டு(மச்சினர்கள் கல்யாணத்தின் போதெல்லாம் இதைக்கட்டிக்கொள்ள தோன்றாது என்னவோ பிறந்துவளர்ந்ததே  இங்கிலாந்தில்போல  பேண்ட்டும் இன் செய்த ஷர்ட்டுமாய் போட்டுக்கொண்டு எப்போதோ பம்பாயில் வேலைபார்த்த தோரனையில்  ஹிந்தியில்  பல வார்த்தைகளுடன் சொற்ப தமிழில்  பேசி அலட்டல்மன்னராய் இருக்கும் என் சு பதி(சுபுத்ரமாதிரி சு பதி:)ஓணத்தன்று  மல்லுவாக  மாறி நின்றார். மற்ற    தோழிகளின் கணவர்களும் மலையாளஆ்ண்களாய் அங்கே காணவும் தெரி் ந்துபோனது முதல்நாள் இவர்கள் எல்லாரும்  சலூனுக்கு      திட்டமிட்டு  போன காரணம்  எதற்கு என்று:)
 
ஓமனாவின் வீட்டில் ஓணத்தன்று அவள் குடும்பமே  கூடி விட்டது..பெண்வாசனை அதிகம் தெரிந்தது!
 
 ‘நாட்டிலிருந்தால் இப்படித்தான்  அத்தரைபேரும்  கூடிக்கொண்டாடுவோம் இப்போள்  இவ்விட பெங்கலூரில் ஆளுக்கொரு திசைல இருக்கோம்  ஓணம் சமயம் எங்க குடும்பமே  கூடிக்களிப்போம் டான்சும் உண்டாக்கும்” என்று ஓமனா  புத்தாண்டுதினம் நடந்த சந்திப்பில் சொல்லிவிட்டாள்..
 
குடும்பப்பொறுப்புகளில் ஆண்களின் பங்கு என்பதைப்பற்றிக்  காட்டுக்கத்திப்  பட்டிமன்றம்  : நடத்தும் போதெல்லாம் கேட்காத எங் கள் பதிகளின் செவிகள்  ஓமனா முணுமுணுத்ததை கேட்டுவிட்டதுபோலும்!  உடனேயே,’உங்க குடும்பமா எதுக்குப்பிரிக்கறீங்க மேடம் எங்க குடும்பமும் அதுதானே.?”   என.எது என்னுதோ அது உன்னுது எது உன்னுதோ அது என்னுது  என்கி்ற விளம்பரப்பாடல்  போல  சுதாவின் கணவர் ஜோக்கடித்தார்.
 
 
மனுஷனுக்கு வீட்டைவிட்டுவெளியே வந்தா    ஜோக்கா  கொட்டுமே-----  சுதா பல்லைக்கடித்தாள்.
 
ஆண்கள் உலகில் இதெல்லாம் சகஜம்டி என்று  ஜனனி அவளை சமாதனப்படுத்தினாள்.
 
மலையாள மக்களைகுஷி்ப்படுத்தவோ என்னவோ”உங்க கேரளா  தமிழுக்கு எவ்வளவு  கொடுத்திருக்கு!!  ஆஹா  அன்று பத்மினி ராகினி  இன்றுஅசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க தமிழ் உலகுக்குஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா?’ என்று  சுரேஷ் ஆரம்பித்தார்.
 
 
ஆஹா  ஒரு ஆம்பிளை  பெயர் நினைவிருக்கா பாரேன் இவங்களுக்கு?  கிசுகிசுத்தாள் விஜி.
 
ஓம்னா வீட்டு வாசல்  நிறைய  பூக்கோலம் பார்த்ததும்  ” ஆஹா  பூலோகமே இங்கு  வந்ததோ?” என்று கவிதை பாடாதகுறையாக  வியக்கவும்  விஜி”போதுமே  கிருஷ்ண ஜெயந்திக்கு மாஞ்சிமாஞ்சி  குட்டிக்குட்டிக்கால் எல்ல்லாம் போட்டு  வீட்டில்  ஒருத்தியாய்  அத்தனையும் செய்வேன் அப்போ  கண்டுக்கிட்டதே இல்லையே நீங்க இப்ப என்ன  பூக்கோலம் பார்த்து பூ  லோகம்னு  ரொம்பத்தான்  வழியல்?”  என்றாள்.
 
.
 
 
சுரேஷை  மிஞ்சினார்  ஆதித்யா  ///ஓமனாவின் ஒன்றுவிட்ட சகோதரிஎன ஒரு இளம்பெண்  கூந்தலை  விரித்து நுனிமுடிச்சிட்டு அதில்  மல்லிகைப்பூ சுற்றிக்கொண்டு மலையாள  பாணி உடையில் குனிந்து கோலம்போடவும், 
 
 கோலம்போடக்குனிகின்றாய்
 கோலம் அழகா
உன்கோலம் அழகா
 
என்று கவிதைஎ ழுத கைதுறுதுறுப்பதாய் ரகசியமாய் நண்பர்களிடம் சொல்ல  கேட்ட  என் தோழி அவர் மனைவி சசிகலா, ’வீட்டில் புது்சாவாங்கி இருக்கற பூந்துடைப்பமும் அழகு ’ என்றாள்  சிரித்தபடி.
 
ஆக  நாங்கள் எல்லாம் தமிழ்ப்பெண்களாய்  பட்டுசேலை பின்னிய தலை என்று அவர்கள் வீட்டில் நுழைய எங்கள் பதிகள்  வேஷ்டி பட்டுஷர்ட்டுடன் நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டையும் தீற்றிக்கொண்டு  தொடந்தனர்.
 
உள்ளே யேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்  ஏஷியா நெட்டில்
 
 யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
 
 ”அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!!”
வழக்கம் போல ஆண்களில்  ஒரு குரல்  பாட்டை  ரசித்தமாதிரி தெரியவில்லை.
 
 
ஏஷியா நெட்  சானல்தான்  பெஸ்ட் என்ப்துபோல  பேசிவிட்டு  ஓமனாவின் குடும்பத்தார் சிலரோடு  எங்கள்  பதிகள்  அரைகுறை்மலையாளத்தில்பேச ஆரம்பித்தனர்.
 
என்ன ஆச்சு இவங்களுக்கு என நாங்கள்: கிண்டலாய்  கேட்டு சிரித்தபடி  ஹாலில் அமர்ந்தோம்.
 
ஓ ?
ஒ!
 
என் கணவர் சம்மந்தமே  இல்லாமல் மைக்கேல் மதனகாமராஜன் பார்த்த பாதிப்பில்  குரல்கொடுத்தார்,.
 
‘இவள் என் கசின்  பேரு வனஜை  பாலக்கோட்டில்  இருக்கா  தமிழ்  பேசும் உங்களாட்டம்” என்றாள் ஓமனா.
 
பார்க்க   வனஜா சற்று துறுதுறுப்பாக இருந்தாள்..  அவள் நகர்ந்தும் ஹாலில்  ஜொள் பெருகியதால் நாங்கள்”   நினைவில் வச்சிக்குங்க ரெண்டு வளர்ந்த  குழந்தைங்க” என்றோம்
 
“அட  ரெண்டு வளர்ந்த குழந்தைக்கு வனஜை அம்மையோ   ஓ நம்ப முடியவில்லை வில்லை வில்லை” என்றார் ஆதித்யா.
 
“ அட  ரெண்டு வளர்ந்த குழந்தைன்னு சொன்னது  உங்களுக்கெல்லாம்...” என்றேன் நான்.
 
 
கைகொட்டுக்களி  நடனத்தைப்பார்க்கும் போது ,” ஆஹா எத்தனை எளிமையான உடை  மலையாள மங்கயைர்க்கு!
பண்டிகைனாலும் நம்மவீட்டு மாதர்குல திலகங்கள் போல பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குறாங்களே””என்று  தங்களுக்குள் பேசிக்கொள்வதாய் நினைத்துக்கொண்டு
 காமிராவுடனிருந்த  எங்கள் கணவர்கள் அனைவருமே  பிசி ஸ்ரீராம் சந்தோஷ் சிவன் பாலும்மகேந்திரா, கேவி ஆன்ந்த ஆனார்கள்.. பத்திரிகைக்குக்கொடுக்க என்னை நல்லபோஸ்ல நல்லதாபோட்டோ எடுங்கன்னு நான் கரடியா கத்தினதை நினைத்துக்கொண்டேன்::)
 
 கை கொட்டுக்களிமுடிந்ததும்,’ எத்தரை சுந்தரமாயிட்டு?” என்று  தைரியமாய் ,மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்  ஆதித்யா.
 
”சூர்யா டிவில  நயனதாரா  க்ளோபல்வாமிங் பத்தி  ரொம்ப சிந்திச்சிப்பேசாறாங்க  அதைவைங்க ”என்று  விரட்டினார் சுரேஷ்
 
பேசறதைக்கேட்கவா அல்லது பார்க்கவா என்று ஜனனி சீண்டினாள்..
 
 
”க்ளோபால் வாமிங்! இட்ஸ்  சீரியஸ் யு  நோ?ஏந்தான் இப்படி அவேர்னெ்ஸ்சே இல்லாம் இருக்கீங்களோ நம்ம லேடீஸ்லாம்    சரி சரி  கமான் யார் லெட்ஸ் வாட்ச்  சூர்யா சானல்”
 
’ஓ’  என்றேன் நான் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி
 
 எசியா நெட்ல   மோகன்லால்  மமுட்டி ப்ருத்விராஜ் இன்னும் சில  ஹாண்ட்சம் ஆண்கள் வராங்களாம்,நாங்க கேக்கணுமே என்ற  எங்கள்  குரல்களை ’  கடலினக்கர போனோரே காணாப்போயினபோனோரே  என்ற  பழைய பாடலை  தாளம்போட்டு ரொம்ப அனுபவித்துத்தப்பும் தவறுமாய் பாடிய அவர்களின் குரல்கள்  அமுக்கிவிட்டுவிட்டன:)
 
ஓமனாவின்  சமையல்  அட்டகாசமாய் இருந்தது  அதிலும்ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் ஓண விருந்தாகும் என்று அதைப்பற்றி அவள்  விவரித்தாள்.
 
. உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு. தரையில் பாய் விரித்து அமர்ந்துதான் உண்ண வேண்டும். இலையில் இடது ஓரத்தில் முதலில் அப்பளம், அதற்கு மேல் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு வைக்க வேண்டும்.
இலையின் இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரியும், அதற்கு கீழே சர்க்கரை வரட்டியும், இடது புறத்தின் மேல் உப்பில் இட்ட கறிகளான எலுமிச்சை, மாங்காய், இஞ்சிக்கறி பின்னர் ஓலன் எரிசேரி, அவியல் கிச்சடி, பச்சடி, துவரன் ஆகியவை பரிமாறிய பின்னர் கடைசியில் சாதம் பரிமாறப்படும். இதற்கு பிறகுதான் பருப்பு, சாம்பார், காளன், பாயாசம் அடுத்தடுத்து பரிமாறப்படும். முதலில் சாதத்துடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாயாசமும், அடை பிரதமன், கடலை பிரதமன், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், பாலடை என்று பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசத்துடன் சிறிது சாதம். இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் தென் கேரள பகுதியில் மட்டுமே காணப்படும். இதன் பிறகு கடைசியாக சிறிது மோருடன் சாதம் சாப்பிடுவதுடன் நிறைவு பெறுகிறது. வட கேரள பகுதிகளில் ஓண சத்யவுக்கு முன்பே இலையில் பழம், அப்பளம், நெய், சீனி ஆகியவற்றை கலந்து பிசைந்து சாப்பிடுவர். அதன் பின்னர் ஓண சத்ய உண்பர். கொல்லத்தில் பைன் ஆப்பிள் கொண்டு தயார் செய்யப்பட்ட சாராயம் கண்டிப்பாக இருக்கும்(எங்களுக்கு இல்லை சத்தியம்:)). மரச்சீனி கிழங்கும் வைப்பது
 
 ஒமனாவின் ஒன்றுவிட்ட தங்கை அசப்பில் மீ  ரா ஜாஸ்மின்போலதுறுதுறுவென்றிருந்தாள்.. அவள்  சுரேஷுடன் வந்த தம்பியைப்பார்த்து ,’நீங்க அப்படியே ப்ரித்விராஜ்போல இருக்கீஙக் எனப்புகழ்ந்துவிட்டாள்.
 
ஆஹா...   இந்த மொழி  சத்தம்போ்டாதே படத்தில நடிச்ச ப்ருத்விராஜையா சொல்றீங்க
நம்பமுடியாமல் கேட்டார்  சுரேஷ்.
 
அதே அதே என்று அந்தப்பெண் அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள்
 
மொழி ஜாதி  மாறினால் என்ன  நாமெல்லாம் இப்போ ஒரே குடும்பம் இந்த மீரா  ஜாஸ்மினை நம்மப்ருத்விராஜுக்கு  முடிச்சால் என்ன?
 
 
சுரேஷ் ஏதோ கணக்குபோட ஆரம்பித்தார்.
 
சாப்பாடு ஆனதும்மறுபடி அந்தமீராஜாஸ்மின் சுரேஷின் தம்பியை’ எத்தரை ஸ்மார்ட்டாயிட்டு?” என்றோஎன்னவோ மலையாளத்தில் புகழ்ந்தாள்.
 
ஆஹா  காதல் வந்திருச்சா?
 
சுரேஷ் என் கணவரிடம்,”பௌர்ணமிபோல  என்ன ஒரு பளிச்  லுக்!அந்தப்பெண் நம்மகுடும்பத்துக்கு வந்தா எவ்வளவு  நல்லாயிருக்கும் சொல்லுங்க ?  ஆனாலும்பாருங்க  நமக்கும் வாய்ச்சீருக்கே..?”  என்று முனகினார்  அவர் மனைவி,”்ஹலோ மாசத்துல ஒரு்நாள்தான் பௌர்ணமி     பளிச் லுக்காம் பளிச் லுக்!  அமாவாசைக்குபோனாலும்வானத்தைகைவிடாம மறுபடி வளர்ந்திட்டே வர்ர நிலாத்துண்டங்கள்  நாங்க!!   பௌர்ணமி ஒரு நா வந்து தலையகாமிச்சிட்டுப் போய்டும்  இளமையும் நில்லா யாக்கையும் நில்லா...  அடிகளார் பாட்டு்  தெர்யுமில்ல?”!
 
ஆனாலும் சுரேஷின் தம்பியைவிடவும் சுரேஷ்  இப்படி ஒரு வாய்ப்பைதவறவிடக்கூடதென நினைத்தார்போலும்
 
 நல்ல நாள் இன்னிக்கு ஓணம் அதிலும் திருவோணம் ஆஹா  என்றார்  புதிதாய் கண்டுபிடித்த மாதிரி!
 
மதியம் மணி 3 ஆனதும்விடைபெற்றுக்கொண்டோம் .
 
 அப்போது மீரா ஜாஸ்மின் சுரேஷிடம்,” உங்கப்ரதர் ரொம்ப ஸ்வீட்  ...  ஐ லைக் ஹிம் சோ மச்”. என்றாள்
 
இதான் சமயம் நழுவவிடாதே சுரேஷ்  உன் தம்பியும்  மௌனமா இருக்கான் மௌனம் சம்மதம்  .. மனசிலாயி? என்று
 
ஆதித்யன்  உசுப்பினார்
 
 
சுரேஷ்  ஓமனாவிடம் சென்று,” உங்க கசின்  அதான் மீரா  ஜாஸ்மின் மாதிரி  இருக்காங்களே  - அவங்க---?” என இழுத்தார்.
 
“ ஆமாம்.. அவ  வாயாடி ஏதும் பேசிட்டாளா எசகுபிசகா?  ஏய்  இவ்விட  வா”
என்று அவளை அழைத்துவிட்டாள்.அதற்குள் அவள் ஓ்டி வந்தபடி,” சேச்சி...  சுரேஷ் அங்கிள்  தம்பிய  நீங்க பார்த்தீங்களா?  அப்படியே  ப்ருத்விராஜ் போல  இருக்கார் இல்லையா?” என்றாள்
 
“ஓ ஆமா  அப்படியே  அவர்தான்  அதான் சேட்டன் நினைவு வந்துதா உனக்கு?  அது ஒண்ணுமில்ல சுரேஷ்  இவள் காலேஜுக்கு  திருச்சூர்க்கு  விழாக்கு ஒருவாட்டி ப்ருத்விராஜ் வந்தாராம்  இவளைப்பார்த்து  ஏதோ சொன்னாராம்  அன்னிலிருந்து  இவள் அவரை சேட்டன் என்பாள்.. இப்போ அவர் மாதிரி இருக்குற உங்க தம்பியை  தனக்கு சேட்டன்னு சொல்றா”
 
சேட்டன்?
 
என்ன அர்த்தம்?
 
திரும்ப வீடு் வரும்போது சுரேஷ் கேட்டார்.
 
சேட்டன்னா அழகன்னு  அர்த்தம். என்றோம் நாங்கள்  வேண்டுமென்றே.
 
 
ஓ?
 
என்ற சுரேஷைப்பார்த்து  எல்லோரும் சிரித்துவிட்டோம்!!! 
 
 இப்படியாக எங்களின் ஓணத்திருநாள் அமைந்தது.
 
 
 
 
 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Aug 29, 2012, 1:10:06 PM8/29/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
2012/8/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
அம்மணிகள்  ரொம்ப கெட்டி  எங்களை மாதிரி இளைஞர்களை அழைப்பதில்லை


 

அழைத்தால் யோசிப்போம் எப்படிப் போவதென்று
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/8/29 shylaja <shyl...@gmail.com>
நல்ல பாட்டு தான் தேனி சார்:)  நீங்க எப்படி ஓணத்துக்கு அழைச்சா எங்க காலனி நண்பர்கள்போலத்தான் போவீங்களா?:)


2012/8/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
பார்வை ஒன்றே போதுமே
 
பல்லாயிரம் சொல் வேண்டுமா

 

பேசாத கண்ணும் பேசுமா
பெண்வேண்டுமா  பார்வை போதுமா?
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/8/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
> வாரிவிட்டார். எல்லோருக்கும் சொல்ல வேண்டும் ;-)
>
> இந்த சேட்டன்/அண்ணா என்பதெல்லாம் சும்மா ஒரு கவசம் என்பது ஆண்
> வர்க்கத்திற்குத் தெரியாதா என்ன! ;-)
>
> க.>
>
360.gif

Subashini Tremmel

unread,
Aug 29, 2012, 1:18:02 PM8/29/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
திரு.நீலகண்டன்.. அழகாக மலையாளம் எழுதுகின்றீர்களே.. நீங்கள் மலையாளமா ?

சுபா

2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>
 ஹரிக்ரிஷ்ணன் பரஞ்ஞது சரியாண. பிற்றைய திவசத்து குழம்பும் கீரையும் கலந்து கச்சட்டியிளிட்டு
சூடாக்கியதாணா எரிச்சகறி. டாக்டர்   பரஞ்ஞது   சரியாண.
அதனுடைய அர்த்தம் என்னவென்றால் : முந்தின நாள் குழம்பையும் கீரை கறியையும் கல்சட்டியில்
நல்ல சூடாக்கினால் அது குழைந்து  கூழாகிவிடும். அதைத்தான் அந்த பாலக்காடு டாக்டர் கொஞ்சம்
தப்பு நடந்திருந்தாலும் கண்ணு கூழு  மாதிரி ஆயிருக்கும் என்று அவருடைய தமிழாளைத்தில்
சொன்னார்  கொஞ்சம் மூக்கை இரண்டு கைகளாலும் அடைத்துக்கொண்டு தமிழை கொஞ்சம் வளைத்து
பேசினால் தமிழாளம் (தமிழ் கலந்த மலையாளம் ) ஆகிவிடும்.
ஹரிக்ரிஷ்ணன் பாலக்காடான ?? . பாலக்காடில் ஏது கிராமம் ???   
On 29 August 2012 18:10, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2012/8/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஓணம் நல்ல படியாக் கழிஞ்சு

அது அப்படியில்லையாக்கும்.  கழிஞ்ஞு.  கேட்டோ?
--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Aug 29, 2012, 10:52:09 PM8/29/12
to mint...@googlegroups.com


2012/8/29 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

இப்போ  மாட்டின்டேளா. நீங்க ஊட்ட மாடும் இல்லை, பசுமாடும் இல்லை, ஜரகண்டியும்  இல்லை, பலக்காடும் இல்லை ஏன்னு சொல்லிவிட்டு இப்போ மன்னார்குடி என்று சொன்னா யார் நம்புவார்கள்  

அம்மா மன்னார்குடின்னா அப்பாவும் அந்த ஊரா?  அப்பாவே சொந்த ஊர்ல பொறக்காத போது நா மட்டும் அப்பாவோட ஊர்ல எப்படிப் பொறந்திருக்க முடியும்?

அப்பா பொறந்த ஊரு சொந்த ஊருன்னா, சிந்தாதிரிபேட்டைதான் எனக்குச் சொந்த ஊரா இருக்க முடியும்.  இல்ல நான் பொறந்த எடம்னா, சாந்தி தியேட்டர் பின்பக்கத்தில் இருக்கும் எல்லிஸ் ரோடு; அதுக்கப்புறம் நாப்பது வருஷம் நங்கநல்லூரு.  இப்ப ஏழு வருஷமா பெங்களூரு.

நமக்கு அல்லா பாசையும் எய்தவும் வரும்; பேசவும் வரும்.... மெட்ராஸ் தமிய்ல எட்த்து உடட்டா?  (கண்ணன் முகத்தைச் சுளிப்பார்.   அவருக்கு இந்தப் பாசாங்கும் நல்ல பழக்கம்தான். :)) நான் மெட்ராஸ் தமிழில் அடிக்கடி கம்பராமாயணம் முதற்கொண்டு பலதும் எழுதி வருவதுதான் எழுத்தாளர் சொக்கன் முதற்கொண்டு, யாஹூ ஐயப்பன் வரை.... போன பதிமூணு வருஷத்துல, ஒரு தலைமுறைக்கு பழைய தமிழ் இலக்கியத்தை எடுத்துச் சென்றிருக்கிறது.  வேணும்னா சொக்கன், ஐயப்பன், பாரா, கேவி ராஜா.... இன்னும் பெரிய பட்டியல் தரேன்... கேட்டுப் பாத்துக் கொள்ளவும்.:) )

Hari Krishnan

unread,
Aug 29, 2012, 11:01:55 PM8/29/12
to mint...@googlegroups.com


2012/8/29 shylaja <shyl...@gmail.com>

ஜம்பகலக்ஷ்மின்னும் சொல்றாங்க...  செண்பகம் தான் சரியோ?

ஆமா. மாமா, சித்திகள் எல்லாருக்கும் ஜம்பாக்காதான்.  ரெகார்ட்படி சம்பா.  இரண்டாம் உலகப்போரில் Women Auxiliary Corps of India என்றொரு பிரிவு ராணுவத்தில் இருந்தது.  அதில் ஸைஃபர் ஆபீஸராகப் பணியாற்றினார். அதாவது, இந்தக் காலத்துல க்ரிப்டோன்னு ஒண்ணு, கம்ப்யூட்டர்ல பண்றாங்களே, அதை அப்பல்லாம் மேன்யுவலா பண்ணினாங்க.  இங்லீஷ்ல ரொம்ப ஸ்டாரங்கா இருந்தாத்தான் வேலைக்கு சேர முடியும்.  பிரிட்டிஷ்காரன் வாய்ல முழுப்பேரும் நுழையலன்னு சம்பகம்னு சுருக்கினா.  அவன் என்னடான்னா, சம்பா கம், சம்பா கம்...னு சொல்லத் தொடங்கிட்டான்.  அதுக்கப்புறம் கடசி வரைக்கும் சம்பாதான்.

சம்பகலக்ஷ்மியும் செண்பகலக்ஷ்மியும் ஒண்ணா இருக்கலாம்.  ஆனா எங்க அம்மா சம்பகலக்ஷ்மிதான்.  (அடட டட டா!  இது மின்தமிழா!  தெரியாத்தனமா வாயக் கொடுத்துட்டேன்.  இதனால் சகலவிதமானபேர்களுக்கும்--மாடரேட்டர் உள்ளிட்ட அனைவருக்கும்--அறிவிப்பது என்னவென்றால், நான் சொன்ன சொந்த விவரங்கள் பொதுச்சொத்தில்லை.  அவற்றைப் பற்றி மனம்போனபோக்கில் கருத்துத் தெரிவிக்க யாருக்கும் உரிமையில்லை.)

S NEELAKANTAN

unread,
Aug 30, 2012, 1:45:11 AM8/30/12
to mint...@googlegroups.com
நமஸ்காரம்  வணக்கம்  நான் பிறந்து வளர்ந்தது கன்யாகுமரி மாவட்டம் தலைநகர் நாகர்கோவில் நான் படித்தது மலையாளம் பள்ளிக்கூடம்  தமிழ் வகுப்பு அதனால் மலையாளம் நான்றாக பேச்ச கற்றுக்கொண்டுவிட்டேன். அப்பாவின் பூர்வீகம் அம்பலப்புழை நண்பர்கள்  மலையாளிகள் தமிழர்கள் அப்பா அம்மா இருந்தது ஹைதராபாத் அதனால் கொஞ்சம் தெலுங்கு வரும் பின்னர் மேல்படிப்பு வேலை எல்லாம் மும்பை அதனால் ஹிந்தியும் மராத்தியும் தெரியும் ஒரு வருடம்  பெங்களூர் அருகில் நிலமங்களாவில்  ஒரு ப்ராஜெக்டிர்காக இருந்தேன் அதனால் சொல்ப சொல்ப, ஊட்டமாடு ஹாகித ஹோகித என்ற   4/5  வார்த்தைகளை வைத்து காலம் தள்ளினேன்  சிறு வயது முதலே என்னை தமிழில் எழுத ஊக்குவித்தவர் என் தாத்தா. யார் எப்படி பேசி பழகுகிறார்களொஅ  அவர்களுக்கு ஏற்றால் போல் என்னுடைய பாஷையும் பழகும் விதமும் மாறும் இப்படி சொன்னால் உடனே நம்முடைய குழுமம் (சில நாண்பர்கள் ) "வந்தேறி" என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்  பரவாயில்லை நம்முடைய குழும நண்பர்கள் ஊக்குவிப்பதனால் கவிதை, கதை கட்டுரை எல்லாம் எழுதுகிறேன் அவ்வளவு தான் 
 


2012/8/30 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

GANDHIMATHI krishnan

unread,
Aug 30, 2012, 1:52:16 AM8/30/12
to mint...@googlegroups.com
அனைவர்க்கும் வணக்கம் .
                                                 நான் உங்கள் (சைலஜா )  மேல் மிகவும் கோபமாக உள்ளேன் .என் அம்மா தான் இந்த மெயில் படிப்பர் .ஓணம் பற்றி ஏழுதி இருந்ததால் படித்தேன் .ஆபீசில் இருந்து ஓணம் உணவை பற்றி நீங்கள் ஏழுதி இருந்ததை படித்தவுடன் மிகவும் கடுப்பாக மலையாள நண்பர்கள் ஒருவரும் அருகில் இல்லாததும்  ஓணம் அன்று அடை பிரதமன் சாபிட முடியாமல் தயிர் சாதம் சாப்பிடுவதை  நினைத்தும் உங்கள் மேல் அளவு கடந்த  கோபம் .
கடுப்பாக 
இரா .ஜெய்சங்கர்.

2012/8/30 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Address:-
R.Gandhi&Co
122,Rajalakshmi Buildings,
Sastri Road,Ramnagar,
Coimbatore-641009
Ph.No:-0422-2236076
Cell:-9965550712

shylaja

unread,
Aug 30, 2012, 2:17:13 AM8/30/12
to mint...@googlegroups.com
முதல்ல நீங்க  காந்திமதியா  கிருஷ்ணனா  அல்லது  ஜெய்சங்கரா(வல்லவனுக்கு வல்லவன்?:)  சொல்லுங்க!!!
 
ஓணம் உணவை எப்போதோ சாப்பிட்டதை சொன்னேன்  மத்தபடி நானும்  நேத்து  தயிர் சாதம் தாங்க:) அதுக்கு முன்னாடி லேசா வத்தக்குழம்பு தக்காளிரசம்  துளி இலைவடாம்,கொஞ்சம் போலபீன்ஸ் உசிலி லைட்டா பச்சடி  அவ்ளோதானே சாப்பிட்டேன்?:) எனக்கும் ஒரு மலயாளத்தோழியும் எதுவும் கொடுக்கவில்லை!!நான்  கோபமாவே இல்லையே!  ஆறுவது சினம்  ஔவைப்பாட்டி சொல்லி இருக்காங்க!!

2012/8/30 GANDHIMATHI krishnan <rgan...@gmail.com>

S NEELAKANTAN

unread,
Aug 30, 2012, 2:35:32 AM8/30/12
to mint...@googlegroups.com
ஜெய் ஷங்கர் : நீங்க எல்லாருடைய ( 85 மெயிலையும் ) ஒன்னு விடாமல் படியுங்கள் பின்னர் நீங்கள் சிரித்து சிரித்து உங்கள்  வயிறு புண்ணாகிவிடும்  அப்புறம் அதற்கு என்ன மருந்து என்பதை   
 ஷைலஜா சொல்லுவாங்க. அப்புறம்  ஓண  சாப்பாட்டை பற்றிய நினைவே வராது உங்களுக்கு  
 


2012/8/30 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Aug 30, 2012, 3:16:06 AM8/30/12
to mint...@googlegroups.com
ஆமா   அந்த மெட்ராஸ் பாஷை   மடலைக்கண்டிப்பா  காந்திமதி க்ருஷண  ஜெய்சங்கர்(ன்னாலே அன்புள்ள மான்விழியே  பாட்டு நினைவுக்கு வருது:)))) படிச்சாகணும்:)

2012/8/30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

DEV RAJ

unread,
Aug 30, 2012, 5:34:00 AM8/30/12
to mint...@googlegroups.com
On Wednesday, 29 August 2012 02:25:21 UTC-7, Shylaja N wrote:
>>> மைபா  நல்ல  ஃபில்டர்காபி  முறுகல்  தோசை உண்டே!!:) <<<


ஒன்னாங்ளாஸியிட்டு  சாய் கிட்டுமெங்கில்
மதி; வேறொன்னும் வேண்டா.

கமலம் சேச்சி எவிடெ போயி ?


தேவ்


On Wednesday, 29 August 2012 02:25:21 UTC-7, Shylaja N wrote:

 தேவ்  ஜீக்கும் மைபா  நல்ல  ஃபில்டர்காபி  முறுகல்  தோசை உண்டே!!:)
2012/8/29 DEV RAJ <rde...@gmail.com>
On Wednesday, 29 August 2012 12:31:16 UTC+5:30, Shylaja N wrote:
>>> எப்போதோ பம்பாயில் வேலைபார்த்த தோரனையில் ஹிந்தியில்  பல வார்த்தைகளுடன்
சொற்ப தமிழில்  பேசி அலட்டல்மன்னராய் இருக்கும்
என் சு பதி(சுபுத்ரமாதிரி சு பதி:)ஓணத்தன்று  மல்லுவாக  மாறி நின்றார். <<<



உங்கள் ஸுபதியின் மி அ முகவரி  கிடைத்தால் தேவலை;
அவரிடம் ஒரு முகமைச் செய்தி பகிர வேண்டும் :))



தேவ்
 இப்படியாக எங்களின் ஓணத்திருநாள் அமைந்தது.
 
 
 
 
 
 

shylaja

unread,
Aug 30, 2012, 6:42:29 AM8/30/12
to mint...@googlegroups.com


2012/8/30 DEV RAJ <rde...@gmail.com>

On Wednesday, 29 August 2012 02:25:21 UTC-7, Shylaja N wrote:
>>> மைபா  நல்ல  ஃபில்டர்காபி  முறுகல்  தோசை உண்டே!!:) <<<


ஒன்னாங்ளாஸியிட்டு  சாய் கிட்டுமெங்கில்
மதி; வேறொன்னும் வேண்டா.

கமலம் சேச்சி எவிடெ போயி ?


தேவ்>>>>>

 

ஓ  டீயே மதுரமோ:) 

 


Nagarajan Vadivel

unread,
Aug 30, 2012, 7:04:07 AM8/30/12
to mint...@googlegroups.com
ஐயா
உங்களுக்குத் தெரிந்த இந்த டீயே மதி எனக்குத் தெரியாமப் போச்சே

காலையிலிருந்து பேசிப் பேசியே ஓணம் பண்டிகையைக் கழித்து விட்டேன்

நேற்று எங்கள் பல்கலைக் கழகத்தில் படாகானா

ஓணம் விருந்தைச் சமைத்துப் பரிமாறி மாணவர்கள் தாங்களும் உண்டு தங்களுடைய
ஆசிரியர்களுக்கும் படைத்திருக்கிறார்கள்.

இன்றூ காலை முதல் பீரியட் என்னுடையது. அவசர அவசரமாக விருந்துண்ட
வகுப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்

மாணவர்கள் ஐயா இரண்டு மூன்று முறை உங்களைத் தொலை பேசியில் அழைத்து ஓணம்
விருந்துக்கு வருமாறு அழைக்க முயற்சித்தோம் உங்கள் தொலை பேசியில் இருந்து
மறு மொழி வரவில்லை

அப்படி முக்கியமாக என்ன ஐயா செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்டார்கள்

எப்படிச் சொல்லுவேன் அதை எப்படிச் சொல்லுவேன்

வெட்டிக்கு நாக்குக்கு ஒரு சுவையும் இல்லாமல் மின் தமிழில் ஓணம் பற்றி
மடலாடியதை எப்படிச் சொல்லுவேன்'

நாகராசன்


2012/8/30 DEV RAJ <rde...@gmail.com>:

shylaja

unread,
Aug 30, 2012, 7:21:54 AM8/30/12
to mint...@googlegroups.com

Respected Prof!
 
கணிணிகிட்ட  வேலை செய்யறப்போ அல்லது உங்க பாஷைல
  மின் தமிழ்ல ஓணம் பற்றி மடலாடறப்போன்னு வச்சிக்குங்களேன்...அதுக்கு கண்ணு தானே முக்கியம்   போன் அடிச்சா  காது விழிச்சிக்க  வேண்டாமா?:)  முதல்ல காதை கவனிங்க   பெசண்ட் நகர்ல மசாஜுக்குதலையைக்கொடுத்த இடம்பக்கத்துல ஏகப்பட்ட   ஈஎன் டி  க்ளினிக்கு  இருக்கு நானே பார்த்ருக்கேன். 
அடுத்த ஓணத்துக்கு   விருந்து நிச்சயம்:)
2012/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஜோ (Joe)

unread,
Aug 30, 2012, 7:38:19 AM8/30/12
to mint...@googlegroups.com
இது எங்க கேம்ப் ஓணம் விருந்து அக்கா.  :-)

Inline images 1


Inline images 2

Inline images 3

Inline images 4

2012/8/30 shylaja <shyl...@gmail.com>



அடுத்த ஓணத்துக்கு   விருந்து நிச்சயம்:)



--
ன்புடன்  ஜோ





DSC00453.jpg
DSC00485.jpg
DSC00451.jpg
DSC00452.jpg

Nagarajan Vadivel

unread,
Aug 30, 2012, 7:39:46 AM8/30/12
to mint...@googlegroups.com
நினைப்பு பொழப்பைக் கெடுத்த கதையாப் போச்சே.

சொக்கா முழு ஓணம் விருந்து. அதுவும் காசில்லாம ஐயோ சுத்தமாக் கிடைக்காமப் போச்சே

எங்க ஊருல மொபைல்ல சைலன்ட் மோட்ல வச்சுத் தெரிஞ்ச நம்பருக்கு மட்டும்
பேசனும்னு வீட்ல கட்டளை ஆறு மனசே ஆறு

இதுல அடுத்த ஓணம் நிச்சயமாம். அதுக்கு காதை ஈ.என்.டி கிட்டக் காட்டித்
தீட்டிக்கனுமாம்

மத்தவங்க வாயத்தப்பத்திக் வயித்தப்பத்திக் கவலைப் படுறாய்ங்களா?

இப்ப அடுப்புல உப்புமா. இப்ப கீரைக் கூட்டு நேத்திக்கு ஓணம் பண்டிகை
டைம்ல சத்தப் போடாபமப் போய் சாப்பிட்டு வந்த ஐடெம் பற்றி ஒரு பட்டியல

சொக்கா மின் தமிழ்ல் எனக்கு ஓணம் விருந்தில்ல இப்ப மட்டுமில்ல அடுத்த
வருஷத்துக்கும் இல்ல

நல்லாச் சாப்பிட்டுவிட்டு படிக்குறவன் நாக்கில் எச்சில் ஊறும்படி என்னமா
மாத்தி மாத்தி வித விதமா எழுதுறாய்ங்க

நாகராசன்

2012/8/30 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Aug 30, 2012, 7:52:46 AM8/30/12
to mint...@googlegroups.com
On 30 August 2012 07:38, ஜோ (Joe) <josephk...@gmail.com> wrote:
இது எங்க கேம்ப் ஓணம் விருந்து அக்கா.  :-)
 
 
ஆ  ஜோரா  இருக்கே ஜோ!  ஏற்கனவே ஒருத்தர் ஓண சாப்பாடு சாப்பிடமுடியலைன்னு   புலம்பிஃபையிங் அவருக்கு இதை சமர்ப்பணம் பண்ணிடுங்க!!!
 
தம்பி  வேஷ்டில  கேரளமண்ணின் மகன் போல  இருக்கீங்க  !!!

Inline images 1


Inline images 2

Inline images 3

Inline images 4

2012/8/30 shylaja <shyl...@gmail.com>


அடுத்த ஓணத்துக்கு   விருந்து நிச்சயம்:)



--
ன்புடன்  ஜோ





DSC00453.jpg
DSC00485.jpg
DSC00451.jpg
DSC00452.jpg

Nagarajan Vadivel

unread,
Aug 30, 2012, 8:00:09 AM8/30/12
to mint...@googlegroups.com
இன்றைய நாள் இனிய நாள் எந்நாளும் அவருக்கும் அவர் மூலம் மற்றவருக்கும்

பாத்தாலே வெள்ளந்தியாக் கள்ளம் கபடமில்லா இருக்குறார்

அக்கான்னு அன்பாக் கூப்பிட்டு எல்லாத்தையும் எவ்வளவு நல்ல மனதோட மேஜைமேல் பரப்பி வைத்து சாப்பிட வாங்கன்னு அழைக்கிறார்.

எல்லாத்தையும் ஒளிச்சு வச்சுக்கிட்டு நீங்களே சாப்பிடும் வித்தைய அவருக்குச் சொல்லிக் கொடுத்து கெடுத்துடாதீங்க ப்ளீஸ்

நாகராசன்

2012/8/30 shylaja <shyl...@gmail.com>


DSC00452.jpg
DSC00451.jpg
DSC00453.jpg
DSC00485.jpg

shylaja

unread,
Aug 30, 2012, 8:05:28 AM8/30/12
to mint...@googlegroups.com


2012/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இன்றைய நாள் இனிய நாள் எந்நாளும் அவருக்கும் அவர் மூலம் மற்றவருக்கும்

பாத்தாலே வெள்ளந்தியாக் கள்ளம் கபடமில்லா இருக்குறார்

அக்கான்னு அன்பாக் கூப்பிட்டு எல்லாத்தையும் எவ்வளவு நல்ல மனதோட மேஜைமேல் பரப்பி வைத்து சாப்பிட வாங்கன்னு அழைக்கிறார்.

எல்லாத்தையும் ஒளிச்சு வச்சுக்கிட்டு நீங்களே சாப்பிடும் வித்தைய அவருக்குச் சொல்லிக் கொடுத்து கெடுத்துடாதீங்க ப்ளீஸ்

நாகராசன்>>

 

ஜோ       அக்கா மேல உண்மையான அன்பு அபிமானம்  இருந்தா   புரபசருக்கு நீங்க பதில் சொல்லுங்க பாக்கலாம்:)

Nagarajan Vadivel

unread,
Aug 30, 2012, 8:12:20 AM8/30/12
to mint...@googlegroups.com
கலியுக நாரதர் வேலையை ஆரம்பிடச்சுட்டார்

இனி அடுத்து ஆள் திரட்ட ஆரம்பிப்பார்

பயந்த சுபாவம் உள்ள என்னை நோக்கி ஆட்டோ வரும்

சாப்பாடுன்னாலே அன்னலட்சுமிகள் ஜமாச் சேந்திடுவாங்க.

இப்ப பயந்து நடுங்கி மருண்டு சுருண்டு கிடல்லுற அப்புரானியை அடிக்க வருவாய்ங்க

பாப்பம்

நாகராசன்

2012/8/30 shylaja <shyl...@gmail.com>:

ஜோ (Joe)

unread,
Aug 30, 2012, 8:14:01 AM8/30/12
to mint...@googlegroups.com
ஹா, ஹா, ஹா

எங்க அக்கா ரொம்ப நல்லவங்க ஐயா, அவங்களும் கள்ள கபடமில்லா குழுந்தை போல்தான்.

2012/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இன்றைய நாள் இனிய நாள் எந்நாளும் அவருக்கும் அவர் மூலம் மற்றவருக்கும்

பாத்தாலே வெள்ளந்தியாக் கள்ளம் கபடமில்லா இருக்குறார்

அக்கான்னு அன்பாக் கூப்பிட்டு எல்லாத்தையும் எவ்வளவு நல்ல மனதோட மேஜைமேல் பரப்பி வைத்து சாப்பிட வாங்கன்னு அழைக்கிறார்.

எல்லாத்தையும் ஒளிச்சு வச்சுக்கிட்டு நீங்களே சாப்பிடும் வித்தைய அவருக்குச் சொல்லிக் கொடுத்து கெடுத்துடாதீங்க ப்ளீஸ்

ஜோ (Joe)

unread,
Aug 30, 2012, 8:15:13 AM8/30/12
to mint...@googlegroups.com
வந்தேன், பதில் தந்தேன், இந்த மடலை காணும் முன்பே.

2012/8/30 shylaja <shyl...@gmail.com>




 

ஜோ       அக்கா மேல உண்மையான அன்பு அபிமானம்  இருந்தா   புரபசருக்கு நீங்க பதில் சொல்லுங்க பாக்கலாம்:)


ஜோ (Joe)

unread,
Aug 30, 2012, 8:17:54 AM8/30/12
to mint...@googlegroups.com
ஐயா,

அப்படி எல்லாம் யாரும் வரமாட்டாங்க :-)

2012/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கலியுக நாரதர் வேலையை ஆரம்பிடச்சுட்டார்

இனி அடுத்து ஆள் திரட்ட ஆரம்பிப்பார்

பயந்த சுபாவம் உள்ள என்னை நோக்கி ஆட்டோ வரும்

சாப்பாடுன்னாலே அன்னலட்சுமிகள் ஜமாச் சேந்திடுவாங்க.

இப்ப பயந்து நடுங்கி மருண்டு சுருண்டு கிடல்லுற அப்புரானியை அடிக்க வருவாய்ங்க

பாப்பம்

நாகராசன்

2

Nagarajan Vadivel

unread,
Aug 30, 2012, 9:10:48 AM8/30/12
to mint...@googlegroups.com
ஜோ ஐயா
நீங்கள் உண்மைதான் பேசுவீங்க நம்பறேன்

இவ்வளவு ஐட்டம் வைத்துப் படம் போட்டதால் அதே நேரம் இனாமாகக் கிடைத்த விருந்தை மிஸ் பண்ணிவிட்டதால் புலம்பிஃபையிங்

நன்றி உங்கள் நடுநிலை விளக்கத்துக்கு

நீங்க உங்க அக்காவிடம் எனக்காகப் பரிந்துரை செய்து ஏற்கனவே கொடுக்க வேன்டிய மை பா  முறுகலான தோசை மற்றும் பில்டர் காபியை இந்தப் பிரச்சினையை மனதில் கொண்டு கட் பண்ண வேண்டாம் என்றூ பரிந்துரையுங்கள்

கலியணவும் செருமானிய உணவும் என்றோ கிடைக்கப் போகும் பலாக்காய்.  மை பா மு.தோ பி கா இன்றே கிடைக்கும் களாக்காய்

நழுவ விடலாமா

நாகராசன்

2012/8/30 ஜோ (Joe) <josephk...@gmail.com>

ஜோ (Joe)

unread,
Aug 30, 2012, 9:12:18 AM8/30/12
to mint...@googlegroups.com
நிச்சயம் ஐயா சொல்கிறேன்.

2012/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
ஜோ ஐயா

நீங்கள் உண்மைதான் பேசுவீங்க நம்பறேன்

shylaja

unread,
Aug 30, 2012, 9:34:50 AM8/30/12
to mint...@googlegroups.com


2012/8/30 ஜோ (Joe) <josephk...@gmail.com>

ஹா, ஹா, ஹா

எங்க அக்கா ரொம்ப நல்லவங்க ஐயா, அவங்களும் கள்ள கபடமில்லா குழுந்தை போல்தான்.
 
>>>>.தம்பி  உடையாள் படைக்கு(க) அஞ்சாள்:))
நீவிர் வாழ்க  நின் கொற்றம் வாழ்க!

2012/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இன்றைய நாள் இனிய நாள் எந்நாளும் அவருக்கும் அவர் மூலம் மற்றவருக்கும்

பாத்தாலே வெள்ளந்தியாக் கள்ளம் கபடமில்லா இருக்குறார்

அக்கான்னு அன்பாக் கூப்பிட்டு எல்லாத்தையும் எவ்வளவு நல்ல மனதோட மேஜைமேல் பரப்பி வைத்து சாப்பிட வாங்கன்னு அழைக்கிறார்.

எல்லாத்தையும் ஒளிச்சு வச்சுக்கிட்டு நீங்களே சாப்பிடும் வித்தைய அவருக்குச் சொல்லிக் கொடுத்து கெடுத்துடாதீங்க ப்ளீஸ்

--
ன்புடன்  ஜோ





Nagarajan Vadivel

unread,
Aug 30, 2012, 10:02:24 AM8/30/12
to mint...@googlegroups.com
இழை 93-ஐத் தொட்டு சதமடிக்கப் போகுது
தம்பி உடையாள் படைக்க அஞ்சாள்
ஆனா படைத்ததைப் ககிர்வேன் என்று வாயைத் திறக்காத
படைக்(க)கஞ்சம் மாதிரித் தெரியுதே
நாகராசன்

2012/8/30 shylaja <shyl...@gmail.com>


Kamala Devi

unread,
Aug 30, 2012, 10:02:53 AM8/30/12
to mint...@googlegroups.com
அடடா. இவ்வளவு நடந்திருக்கிறதா ஒண தினத்தன்று?
உத்திராட தினத்திலிருந்து இன்று அவிட்டம் வரை ஒரே பிசி, ஏன் என்பதை பிறகு சொல்கிறேன்.
மைதிலி, கட்டுரை நன்று. ஆனால் ஒரே ஒரு நெருடல்,
ஓண சத்ய,யில் ரசம் பரிமாறுவதில்லையே ? எந்த ஊர்ப்பெண் ஓமனா என்று
தெரியவில்லையே ?
பிரதமனுக்குப்பிறகு புளிசேரியில் தானே விபவம் முழுமை பெறும் ?
மலையாள சத்ய வட்டம் கேரளத்திலும் எங்கள் இல்லத்தில் ரசம் சேர்த்துக்கொண்டது ஞாபகமே இல்லை..எப்படியாயினும் சுவை பட விவரணை நன்று
அன்பில் கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 29/8/12, shylaja <shyl...@gmail.com> wrote:

From: shylaja <shyl...@gmail.com>
Subject: [MinTamil] ஓண நினைவுகள்!
To: "mintamil" <minT...@googlegroups.com>, "vallamai" <vall...@googlegroups.com>, "தமிழ் வாசல்" <thamiz...@googlegroups.com>, "தமிழ் சிறகுகள்" <tamizhs...@googlegroups.com>, "தென்றல்" <thamizh...@googlegroups.com>
Date: Wednesday, 29 August, 2012, 7:00 AM

காலனியில் எங்கள்   குடும்ப நண்பர்களின் வீட்டில் நவராத்திரி நாட்களுக்கு  குடும்பத்தலைவர்கள்   எங்களோடு  என்னவோ  தூக்கு மேடைக்குச்செல்லும்  கைதிகள்போல சோகமாய் வருவார்கள். நவராத்திரி என்றால் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டில்  மாலை எங்கள்குடும்பங்கள் கூடி பக்திப்பாடல்கள் பாடிவிட்டு  2ஜி 3ஜி  என பல ஜீக்கள்,கருணாநிதி ஜெயலலிதா  எடியூரப்பா பங்காரப்பா ராஜ்குமார் வரை  என்று ஆண்கள் அரசியல் பேச நாங்க பிசிபேளாபாத் ஆலு பரோட்டாவிலிருந்து ஆனந்தவிகடனில் வந்த கதைகள்,சினிமாவிமர்சனம் வரை எல்லாம்  அலசி   சுண்டல்+ டின்னரை முடித்துக்கொண்டுஇரவு வீடு திரும்புவோம்.
 
சிலவருடங்கள் முன்புஓமனா என்று ஒரு மலையாளப்பெண்  காலனியில் குடிபுகுந்து எங்களுக்கு தோழியானாள். அவள்கணவரும்  எங்கள் கணவர்களுக்கு நண்பரானார். 
 
ஓணத்திருநாள் வருவதால் அன்றைக்கு விருந்துக்கு நாங்கள் எல்லாரும் வரவேண்டுமென ஓமனா கேட்டுக்கொண்டாள்.. ’ கூடிய சீக்கிரமே கணவருக்கு துபாயில் வேறு்  நல்ல வேலைகிடைத்துப்போய்விட இருப்பதால் இந்த ஓணம்  க்ராண்டா செய்றோம் வழக்கத்தைவிட குடும்பமே கூடுகிறது நீங்களும் வாங்க; என்று அழைத்துவிட்டாள்.
 
எங்காவது  எங்களோடு வெளியே ஷாப்பிங்கிற்கு மால் என்று வந்துவிட்டால்  எங்களுக்கு ஏதோ தூரத்து உறவு போல   அதுவும் புடவைக்கடைப்பக்கம்  வந்தா்ல்  போதும்,விரோதிபோல  முகத்தை வைத்துக்கொ்ண்டு ஒரு மூலையில் நிற்கும் எங்கள்  பதிகள்
 
 ஓணம் பண்டிகைக்கு தோழி ஓமனா வீட்டுக்கு  விடிகிறபோதே எழுந்துகொண்டுவி்ட்டார்கள்.பளிச்சென  பட்டுவேட்டி (ஜரிகைபோட்டது)   பட்டு சட்டை கட்டிக்கொண்டு(மச்சினர்கள் கல்யாணத்தின் போதெல்லாம் இதைக்கட்டிக்கொள்ள தோன்றாது என்னவோ பிறந்துவளர்ந்ததே  இங்கிலாந்தில்போல  பேண்ட்டும் இன் செய்த ஷர்ட்டுமாய் போட்டுக்கொண்டு எப்போதோ பம்பாயில் வேலைபார்த்த தோரனையில்  ஹிந்தியில்  பல வார்த்தைகளுடன் சொற்ப தமிழில்  பேசி அலட்டல்மன்னராய் இருக்கும் என் சு பதி(சுபுத்ரமாதிரி சு பதி:)ஓணத்தன்று  மல்லுவாக  மாறி நின்றார். மற்ற    தோழிகளின் கணவர்களும் மலையாளஆ்ண்களாய் அங்கே காணவும் தெரி் ந்துபோனது முதல்நாள் இவர்கள் எல்லாரும்  சலூனுக்கு      திட்டமிட்டு  போன காரணம்  எதற்கு என்று:)
 
ஓமனாவின் வீட்டில் ஓணத்தன்று அவள் குடும்பமே  கூடி விட்டது..பெண்வாசனை அதிகம் தெரிந்தது!
 
 ‘நாட்டிலிருந்தால் இப்படித்தான்  அத்தரைபேரும்  கூடிக்கொண்டாடுவோம் இப்போள்  இவ்விட பெங்கலூரில் ஆளுக்கொரு திசைல இருக்கோம்  ஓணம் சமயம் எங்க குடும்பமே  கூடிக்களிப்போம் டான்சும் உண்டாக்கும்” என்று ஓமனா  புத்தாண்டுதினம் நடந்த சந்திப்பில் சொல்லிவிட்டாள்..
 
குடும்பப்பொறுப்புகளில் ஆண்களின் பங்கு என்பதைப்பற்றிக்  காட்டுக்கத்திப்  பட்டிமன்றம்  : நடத்தும் போதெல்லாம் கேட்காத எங் கள் பதிகளின் செவிகள்  ஓமனா முணுமுணுத்ததை கேட்டுவிட்டதுபோலும்!  உடனேயே,’உங்க குடும்பமா எதுக்குப்பிரிக்கறீங்க மேடம் எங்க குடும்பமும் அதுதானே.?”   என.எது என்னுதோ அது உன்னுது எது உன்னுதோ அது என்னுது  என்கி்ற விளம்பரப்பாடல்  போல  சுதாவின் கணவர் ஜோக்கடித்தார்.
 
 
மனுஷனுக்கு வீட்டைவிட்டுவெளியே வந்தா    ஜோக்கா  கொட்டுமே-----  சுதா பல்லைக்கடித்தாள்.
 
ஆண்கள் உலகில் இதெல்லாம் சகஜம்டி என்று  ஜனனி அவளை சமாதனப்படுத்தினாள்.
 
மலையாள மக்களைகுஷி்ப்படுத்தவோ என்னவோ”உங்க கேரளா  தமிழுக்கு எவ்வளவு  கொடுத்திருக்கு!!  ஆஹா  அன்று பத்மினி ராகினி  இன்றுஅசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க தமிழ் உலகுக்குஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா?’ என்று  சுரேஷ் ஆரம்பித்தார்.
 
 
ஆஹா  ஒரு ஆம்பிளை  பெயர் நினைவிருக்கா பாரேன் இவங்களுக்கு?  கிசுகிசுத்தாள் விஜி.
 
ஓம்னா வீட்டு வாசல்  நிறைய  பூக்கோலம் பார்த்ததும்  ” ஆஹா  பூலோகமே இங்கு  வந்ததோ?” என்று கவிதை பாடாதகுறையாக  வியக்கவும்  விஜி”போதுமே  கிருஷ்ண ஜெயந்திக்கு மாஞ்சிமாஞ்சி  குட்டிக்குட்டிக்கால் எல்ல்லாம் போட்டு  வீட்டில்  ஒருத்தியாய்  அத்தனையும் செய்வேன் அப்போ  கண்டுக்கிட்டதே இல்லையே நீங்க இப்ப என்ன  பூக்கோலம் பார்த்து பூ  லோகம்னு  ரொம்பத்தான்  வழியல்?”  என்றாள்.
 
.
 
 
சுரேஷை  மிஞ்சினார்  ஆதித்யா  ///ஓமனாவின் ஒன்றுவிட்ட சகோதரிஎன ஒரு இளம்பெண்  கூந்தலை  விரித்து நுனிமுடிச்சிட்டு அதில்  மல்லிகைப்பூ சுற்றிக்கொண்டு மலையாள  பாணி உடையில் குனிந்து கோலம்போடவும், 
 
 கோலம்போடக்குனிகின்றாய்
 கோலம் அழகா
உன்கோலம் அழகா
 
என்று கவிதைஎ ழுத கைதுறுதுறுப்பதாய் ரகசியமாய் நண்பர்களிடம் சொல்ல  கேட்ட  என் தோழி அவர் மனைவி சசிகலா, ’வீட்டில் புது்சாவாங்கி இருக்கற பூந்துடைப்பமும் அழகு ’ என்றாள்  சிரித்தபடி.
 
ஆக  நாங்கள் எல்லாம் தமிழ்ப்பெண்களாய்  பட்டுசேலை பின்னிய தலை என்று அவர்கள் வீட்டில் நுழைய எங்கள் பதிகள்  வேஷ்டி பட்டுஷர்ட்டுடன் நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டையும் தீற்றிக்கொண்டு  தொடந்தனர்.
 
உள்ளே யேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்  ஏஷியா நெட்டில்
 
 யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
 
 ”அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!!”
வழக்கம் போல ஆண்களில்  ஒரு குரல்  பாட்டை  ரசித்தமாதிரி தெரியவில்லை.
 
 
ஏஷியா நெட்  சானல்தான்  பெஸ்ட் என்ப்துபோல  பேசிவிட்டு  ஓமனாவின் குடும்பத்தார் சிலரோடு  எங்கள்  பதிகள்  அரைகுறை்மலையாளத்தில்பேச ஆரம்பித்தனர்.
 
என்ன ஆச்சு இவங்களுக்கு என நாங்கள்: கிண்டலாய்  கேட்டு சிரித்தபடி  ஹாலில் அமர்ந்தோம்.
 
ஓ ?
ஒ!
 
என் கணவர் சம்மந்தமே  இல்லாமல் மைக்கேல் மதனகாமராஜன் பார்த்த பாதிப்பில்  குரல்கொடுத்தார்,.
 
‘இவள் என் கசின்  பேரு வனஜை  பாலக்கோட்டில்  இருக்கா  தமிழ்  பேசும் உங்களாட்டம்” என்றாள் ஓமனா.
 
பார்க்க   வனஜா சற்று துறுதுறுப்பாக இருந்தாள்..  அவள் நகர்ந்தும் ஹாலில்  ஜொள் பெருகியதால் நாங்கள்”   நினைவில் வச்சிக்குங்க ரெண்டு வளர்ந்த  குழந்தைங்க” என்றோம்
 
“அட  ரெண்டு வளர்ந்த குழந்தைக்கு வனஜை அம்மையோ   ஓ நம்ப முடியவில்லை வில்லை வில்லை” என்றார் ஆதித்யா.
 
“ அட  ரெண்டு வளர்ந்த குழந்தைன்னு சொன்னது  உங்களுக்கெல்லாம்...” என்றேன் நான்.
 
 
கைகொட்டுக்களி  நடனத்தைப்பார்க்கும் போது ,” ஆஹா எத்தனை எளிமையான உடை  மலையாள மங்கயைர்க்கு!
பண்டிகைனாலும் நம்மவீட்டு மாதர்குல திலகங்கள் போல பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குறாங்களே””என்று  தங்களுக்குள் பேசிக்கொள்வதாய் நினைத்துக்கொண்டு
 காமிராவுடனிருந்த  எங்கள் கணவர்கள் அனைவருமே  பிசி ஸ்ரீராம் சந்தோஷ் சிவன் பாலும்மகேந்திரா, கேவி ஆன்ந்த ஆனார்கள்.. பத்திரிகைக்குக்கொடுக்க என்னை நல்லபோஸ்ல நல்லதாபோட்டோ எடுங்கன்னு நான் கரடியா கத்தினதை நினைத்துக்கொண்டேன்::)
 
 கை கொட்டுக்களிமுடிந்ததும்,’ எத்தரை சுந்தரமாயிட்டு?” என்று  தைரியமாய் ,மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்  ஆதித்யா.
 
”சூர்யா டிவில  நயனதாரா  க்ளோபல்வாமிங் பத்தி  ரொம்ப சிந்திச்சிப்பேசாறாங்க  அதைவைங்க ”என்று  விரட்டினார் சுரேஷ்
 
பேசறதைக்கேட்கவா அல்லது பார்க்கவா என்று ஜனனி சீண்டினாள்..
 
 
”க்ளோபால் வாமிங்! இட்ஸ்  சீரியஸ் யு  நோ?ஏந்தான் இப்படி அவேர்னெ்ஸ்சே இல்லாம் இருக்கீங்களோ நம்ம லேடீஸ்லாம்    சரி சரி  கமான் யார் லெட்ஸ் வாட்ச்  சூர்யா சானல்”
 
’ஓ’  என்றேன் நான் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி
 
 எசியா நெட்ல   மோகன்லால்  மமுட்டி ப்ருத்விராஜ் இன்னும் சில  ஹாண்ட்சம் ஆண்கள் வராங்களாம்,நாங்க கேக்கணுமே என்ற  எங்கள்  குரல்களை ’  கடலினக்கர போனோரே காணாப்போயினபோனோரே  என்ற  பழைய பாடலை  தாளம்போட்டு ரொம்ப அனுபவித்துத்தப்பும் தவறுமாய் பாடிய அவர்களின் குரல்கள்  அமுக்கிவிட்டுவிட்டன:)
 
ஓமனாவின்  சமையல்  அட்டகாசமாய் இருந்தது  அதிலும்ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் ஓண விருந்தாகும் என்று அதைப்பற்றி அவள்  விவரித்தாள்.
 
. உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு. தரையில் பாய் விரித்து அமர்ந்துதான் உண்ண வேண்டும். இலையில் இடது ஓரத்தில் முதலில் அப்பளம், அதற்கு மேல் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு வைக்க வேண்டும்.
இலையின் இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரியும், அதற்கு கீழே சர்க்கரை வரட்டியும், இடது புறத்தின் மேல் உப்பில் இட்ட கறிகளான எலுமிச்சை, மாங்காய், இஞ்சிக்கறி பின்னர் ஓலன் எரிசேரி, அவியல் கிச்சடி, பச்சடி, துவரன் ஆகியவை பரிமாறிய பின்னர் கடைசியில் சாதம் பரிமாறப்படும். இதற்கு பிறகுதான் பருப்பு, சாம்பார், காளன், பாயாசம் அடுத்தடுத்து பரிமாறப்படும். முதலில் சாதத்துடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாயாசமும், அடை பிரதமன், கடலை பிரதமன், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், பாலடை என்று பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசத்துடன் சிறிது சாதம். இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் தென் கேரள பகுதியில் மட்டுமே காணப்படும். இதன் பிறகு கடைசியாக சிறிது மோருடன் சாதம் சாப்பிடுவதுடன் நிறைவு பெறுகிறது. வட கேரள பகுதிகளில் ஓண சத்யவுக்கு முன்பே இலையில் பழம், அப்பளம், நெய், சீனி ஆகியவற்றை கலந்து பிசைந்து சாப்பிடுவர். அதன் பின்னர் ஓண சத்ய உண்பர். கொல்லத்தில் பைன் ஆப்பிள் கொண்டு தயார் செய்யப்பட்ட சாராயம் கண்டிப்பாக இருக்கும்(எங்களுக்கு இல்லை சத்தியம்:)). மரச்சீனி கிழங்கும் வைப்பது
 
 ஒமனாவின் ஒன்றுவிட்ட தங்கை அசப்பில் மீ  ரா ஜாஸ்மின்போலதுறுதுறுவென்றிருந்தாள்.. அவள்  சுரேஷுடன் வந்த தம்பியைப்பார்த்து ,’நீங்க அப்படியே ப்ரித்விராஜ்போல இருக்கீஙக் எனப்புகழ்ந்துவிட்டாள்.
 
ஆஹா...   இந்த மொழி  சத்தம்போ்டாதே படத்தில நடிச்ச ப்ருத்விராஜையா சொல்றீங்க
நம்பமுடியாமல் கேட்டார்  சுரேஷ்.
 
அதே அதே என்று அந்தப்பெண் அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள்
 
மொழி ஜாதி  மாறினால் என்ன  நாமெல்லாம் இப்போ ஒரே குடும்பம் இந்த மீரா  ஜாஸ்மினை நம்மப்ருத்விராஜுக்கு  முடிச்சால் என்ன?
 
 
சுரேஷ் ஏதோ கணக்குபோட ஆரம்பித்தார்.
 
சாப்பாடு ஆனதும்மறுபடி அந்தமீராஜாஸ்மின் சுரேஷின் தம்பியை’ எத்தரை ஸ்மார்ட்டாயிட்டு?” என்றோஎன்னவோ மலையாளத்தில் புகழ்ந்தாள்.
 
ஆஹா  காதல் வந்திருச்சா?
 
சுரேஷ் என் கணவரிடம்,”பௌர்ணமிபோல  என்ன ஒரு பளிச்  லுக்!அந்தப்பெண் நம்மகுடும்பத்துக்கு வந்தா எவ்வளவு  நல்லாயிருக்கும் சொல்லுங்க ?  ஆனாலும்பாருங்க  நமக்கும் வாய்ச்சீருக்கே..?”  என்று முனகினார்  அவர் மனைவி,”்ஹலோ மாசத்துல ஒரு்நாள்தான் பௌர்ணமி     பளிச் லுக்காம் பளிச் லுக்!  அமாவாசைக்குபோனாலும்வானத்தைகைவிடாம மறுபடி வளர்ந்திட்டே வர்ர நிலாத்துண்டங்கள்  நாங்க!!   பௌர்ணமி ஒரு நா வந்து தலையகாமிச்சிட்டுப் போய்டும்  இளமையும் நில்லா யாக்கையும் நில்லா...  அடிகளார் பாட்டு்  தெர்யுமில்ல?”!
 
ஆனாலும் சுரேஷின் தம்பியைவிடவும் சுரேஷ்  இப்படி ஒரு வாய்ப்பைதவறவிடக்கூடதென நினைத்தார்போலும்
 
 நல்ல நாள் இன்னிக்கு ஓணம் அதிலும் திருவோணம் ஆஹா  என்றார்  புதிதாய் கண்டுபிடித்த மாதிரி!
 
மதியம் மணி 3 ஆனதும்விடைபெற்றுக்கொண்டோம் .
 
 அப்போது மீரா ஜாஸ்மின் சுரேஷிடம்,” உங்கப்ரதர் ரொம்ப ஸ்வீட்  ...  ஐ லைக் ஹிம் சோ மச்”. என்றாள்
 
இதான் சமயம் நழுவவிடாதே சுரேஷ்  உன் தம்பியும்  மௌனமா இருக்கான் மௌனம் சம்மதம்  .. மனசிலாயி? என்று
 
ஆதித்யன்  உசுப்பினார்
 
 
சுரேஷ்  ஓமனாவிடம் சென்று,” உங்க கசின்  அதான் மீரா  ஜாஸ்மின் மாதிரி  இருக்காங்களே  - அவங்க---?” என இழுத்தார்.
 
“ ஆமாம்.. அவ  வாயாடி ஏதும் பேசிட்டாளா எசகுபிசகா?  ஏய்  இவ்விட  வா”
என்று அவளை அழைத்துவிட்டாள்.அதற்குள் அவள் ஓ்டி வந்தபடி,” சேச்சி...  சுரேஷ் அங்கிள்  தம்பிய  நீங்க பார்த்தீங்களா?  அப்படியே  ப்ருத்விராஜ் போல  இருக்கார் இல்லையா?” என்றாள்
 
“ஓ ஆமா  அப்படியே  அவர்தான்  அதான் சேட்டன் நினைவு வந்துதா உனக்கு?  அது ஒண்ணுமில்ல சுரேஷ்  இவள் காலேஜுக்கு  திருச்சூர்க்கு  விழாக்கு ஒருவாட்டி ப்ருத்விராஜ் வந்தாராம்  இவளைப்பார்த்து  ஏதோ சொன்னாராம்  அன்னிலிருந்து  இவள் அவரை சேட்டன் என்பாள்.. இப்போ அவர் மாதிரி இருக்குற உங்க தம்பியை  தனக்கு சேட்டன்னு சொல்றா”
 
சேட்டன்?
 
என்ன அர்த்தம்?
 
திரும்ப வீடு் வரும்போது சுரேஷ் கேட்டார்.
 
சேட்டன்னா அழகன்னு  அர்த்தம். என்றோம் நாங்கள்  வேண்டுமென்றே.
 
 
ஓ?
 
என்ற சுரேஷைப்பார்த்து  எல்லோரும் சிரித்துவிட்டோம்!!! 
 
 இப்படியாக எங்களின் ஓணத்திருநாள் அமைந்தது.
 
 
 
 
 
 

--

shylaja

unread,
Aug 30, 2012, 10:17:00 AM8/30/12
to mint...@googlegroups.com


2012/8/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இழை 93-ஐத் தொட்டு சதமடிக்கப் போகுது
தம்பி உடையாள் படைக்க அஞ்சாள்
ஆனா படைத்ததைப் ககிர்வேன் என்று வாயைத் திறக்காத
படைக்(க)கஞ்சம் மாதிரித் தெரியுதே
நாகராசன்

<<,இன்னும்  நாலைஞ்சி க்ரூப்ல   வந்ததையும் சேர்த்து  சதமெல்லாம் அப்போவே அடிச்சாச்சு:)
 
படைத்ததைப்பகிரணும் அவ்ளோதானே  இனிமே  தண்ணீ கொதிக்கறதையும் படம் எடுத்துப்போடுட்றேன் சாமி:) 
 
 
2012/8/30 shylaja <shyl...@gmail.com>


2012/8/30 ஜோ (Joe) <josephk...@gmail.com>

Kamala Devi

unread,
Aug 30, 2012, 10:20:57 AM8/30/12
to mint...@googlegroups.com
தேவ், எவிடெ போகாம் ?
குழந்தைகள், கணவருக்கு உணவு பரிமாறிவிட்டு,
அதி அத்தியாவசிய பிரமுகர்களுக்கு இரண்டு நாட்களாக எமது கைப்பாஜகத்தில் விருந்து படைத்துக்கொண்டிருந்தேன்.
யாருக்கு ? நிங்ஙள் அறிவீர்கள் , எனது அதிதிகள் யாரென்று ?
மனநல மருத்துவமனைப்பெண்களுக்கு உத்திராடம் தினத்தில் --
திருவோண தினத்தில் சுற்று வட்டமெல்லாம் துப்புரவுசெய்யும் பங்ளாதேஷ்
மகன்களுக்கு, [15 இளையர்கள்]
இன்று அவிட்டம் தினத்தில் முதியோர் இல்லத்தில் அசலாய ஓண சத்ய , ஞானே விடியல் 4 மணிக்கு எழுந்து , பார்த்துப்பார்த்து, அவர்களுக்கு பதமாய் ,சமைத்துக்கொண்டுபோனேன். உதவிக்கு, 2 வழக்கறிஞ்ர்கள் தோழிகள் ,
பரிமாறுவதற்கும் பாத்திரம் தூக்கவும் உதவினார்கள்,
எனக்கு அவர்களைப்பற்ரியெல்லாம் இதற்குமேல் எழுத முடியாது. கண்ணீர் வழிய வழிய, கண்ணீரை விழுங்கி விழுங்கி, , ஞான் , தேவ்,
நிங்ஙள் என்னை அறிந்தவர். என்னுடைய பிரமுகர்களோடு இப்படியாக ஒணம் முடிந்தது
கமலம் சேச்சி
http://www.kamalagaanam.blogspot.com

--- On Thu, 30/8/12, DEV RAJ <rde...@gmail.com> wrote:
2012/8/29 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/ how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@ googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/ group/minTamil

shylaja

unread,
Aug 30, 2012, 10:22:53 AM8/30/12
to mint...@googlegroups.com


2012/8/30 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

அடடா. இவ்வளவு நடந்திருக்கிறதா ஒண தினத்தன்று?
உத்திராட தினத்திலிருந்து இன்று அவிட்டம் வரை ஒரே பிசி, ஏன் என்பதை பிறகு சொல்கிறேன்.
மைதிலி, கட்டுரை நன்று. ஆனால் ஒரே ஒரு நெருடல்,
ஓண சத்ய,யில் ரசம் பரிமாறுவதில்லையே ? எந்த ஊர்ப்பெண் ஓமனா என்று
தெரியவில்லையே ?
பிரதமனுக்குப்பிறகு புளிசேரியில் தானே விபவம் முழுமை பெறும் ?
மலையாள சத்ய வட்டம் கேரளத்திலும் எங்கள் இல்லத்தில் ரசம் சேர்த்துக்கொண்டது ஞாபகமே இல்லை..எப்படியாயினும் சுவை பட விவரணை நன்று
அன்பில் கமலம்
 
 
 
<<<<> வாங்க கமலம்   பண்டிகை  சிறப்பாகமுடிஞ்சுதா  ?  பிசியாகத்தான் இருப்பீர்கள் என தெரியும்
 
ஓமனா வுக்கு நாகர்கோயில்  பிறந்தவீடு  புகுந்த  வீடு கோழிக்கோடு   ரசம்  செய்தாங்க  ஒருவேளை நாங்க(நவ) ரசப்பிரியர்கள் என்பதால் இருக்கலாம்!!
http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 29/8/12, shylaja <shyl...@gmail.com> wrote:

From: shylaja <shyl...@gmail.com>
Subject: [MinTamil] ஓண நினைவுகள்!
To: "mintamil" <minT...@googlegroups.com>, "vallamai" <vall...@googlegroups.com>, "தமிழ் வாசல்" <thamiz...@googlegroups.com>, "தமிழ் சிறகுகள்" <tamizhs...@googlegroups.com>, "தென்றல்" <thamizh...@googlegroups.com>
Date: Wednesday, 29 August, 2012, 7:00 AM

காலனியில் எங்கள்   குடும்ப
 
 ::)
 
 அதைப்பற்றி அவள்  விவரித்தாள்.
 ,
 இப்படியாக எங்களின் ஓணத்திருநாள் அமைந்தது.
 
 
 
 
 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kamala Devi

unread,
Aug 30, 2012, 10:32:59 AM8/30/12
to mint...@googlegroups.com
என்ன அழகான உணவுப்படையல்,
நாடன் சொமந்ந அரிச்சோறு,கா வற்றல், சர்க்கர உப்பேரி,என எல்லாம் சரி, ஆனால் மத்தங்ங கொண்டு செய்யும் எலிசேரி எவிடெ, புளிசேரி எவிடே ?
ஜொசப் குரியன் >
--- On Thu, 30/8/12, ஜோ (Joe) <josephk...@gmail.com> wrote:

From: ஜோ (Joe) <josephk...@gmail.com>
Subject: Re: [MinTamil] Re: ஓண நினைவுகள்!
To: mint...@googlegroups.com
Date: Thursday, 30 August, 2012, 11:38 AM

இது எங்க கேம்ப் ஓணம் விருந்து அக்கா.  :-)

Inline images 1


Inline images 2

Inline images 3

Inline images 4

2012/8/30 shylaja <shyl...@gmail.com>


அடுத்த ஓணத்துக்கு   விருந்து நிச்சயம்:)



--
ன்புடன்  ஜோ





DSC00451.jpg
DSC00452.jpg
DSC00453.jpg
DSC00485.jpg

Kamala Devi

unread,
Aug 30, 2012, 10:36:54 AM8/30/12
to mint...@googlegroups.com
அப்படியா ? நீலகண்டன்,
இங்கு ஹரி, தேவ், ஆழ்வார், என பலருக்கு மலையாளம் தெரியும்
தேவ், அருமையாக மலையாளம் பேச வல்லவர்.
கைகொடுங்கள், நிறைய எழுதுங்கள்
--- On Thu, 30/8/12, S NEELAKANTAN <sneelak...@gmail.com> wrote:

From: S NEELAKANTAN <sneelak...@gmail.com>
Subject: Re: [MinTamil] Re: ஓண நினைவுகள்!
To: mint...@googlegroups.com
Date: Thursday, 30 August, 2012, 5:45 AM

நமஸ்காரம்  வணக்கம்  நான் பிறந்து வளர்ந்தது கன்யாகுமரி மாவட்டம் தலைநகர் நாகர்கோவில் நான் படித்தது மலையாளம் பள்ளிக்கூடம்  தமிழ் வகுப்பு அதனால் மலையாளம் நான்றாக பேச்ச கற்றுக்கொண்டுவிட்டேன். அப்பாவின் பூர்வீகம் அம்பலப்புழை நண்பர்கள்  மலையாளிகள் தமிழர்கள் அப்பா அம்மா இருந்தது ஹைதராபாத் அதனால் கொஞ்சம் தெலுங்கு வரும் பின்னர் மேல்படிப்பு வேலை எல்லாம் மும்பை அதனால் ஹிந்தியும் மராத்தியும் தெரியும் ஒரு வருடம்  பெங்களூர் அருகில் நிலமங்களாவில்  ஒரு ப்ராஜெக்டிர்காக இருந்தேன் அதனால் சொல்ப சொல்ப, ஊட்டமாடு ஹாகித ஹோகித என்ற   4/5  வார்த்தைகளை வைத்து காலம் தள்ளினேன்  சிறு வயது முதலே என்னை தமிழில் எழுத ஊக்குவித்தவர் என் தாத்தா. யார் எப்படி பேசி பழகுகிறார்களொஅ  அவர்களுக்கு ஏற்றால் போல் என்னுடைய பாஷையும் பழகும் விதமும் மாறும் இப்படி சொன்னால் உடனே நம்முடைய குழுமம் (சில நாண்பர்கள் ) "வந்தேறி" என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்  பரவாயில்லை நம்முடைய குழும நண்பர்கள் ஊக்குவிப்பதனால் கவிதை, கதை கட்டுரை எல்லாம் எழுதுகிறேன் அவ்வளவு தான் 
 

shylaja

unread,
Aug 30, 2012, 11:56:35 AM8/30/12
to mint...@googlegroups.com


2012/8/30 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

தேவ், எவிடெ போகாம் ?
குழந்தைகள், கணவருக்கு உணவு பரிமாறிவிட்டு,
அதி அத்தியாவசிய பிரமுகர்களுக்கு இரண்டு நாட்களாக எமது கைப்பாஜகத்தில் விருந்து படைத்துக்கொண்டிருந்தேன்.
யாருக்கு ? நிங்ஙள் அறிவீர்கள் , எனது அதிதிகள் யாரென்று ?
மனநல மருத்துவமனைப்பெண்களுக்கு உத்திராடம் தினத்தில் --
திருவோண தினத்தில் சுற்று வட்டமெல்லாம் துப்புரவுசெய்யும் பங்ளாதேஷ்
மகன்களுக்கு, [15 இளையர்கள்]
இன்று அவிட்டம் தினத்தில் முதியோர் இல்லத்தில் அசலாய ஓண சத்ய , ஞானே விடியல் 4 மணிக்கு எழுந்து , பார்த்துப்பார்த்து, அவர்களுக்கு பதமாய் ,சமைத்துக்கொண்டுபோனேன். உதவிக்கு, 2 வழக்கறிஞ்ர்கள் தோழிகள் ,
பரிமாறுவதற்கும் பாத்திரம் தூக்கவும் உதவினார்கள்,
எனக்கு அவர்களைப்பற்ரியெல்லாம் இதற்குமேல் எழுத முடியாது. கண்ணீர் வழிய வழிய, கண்ணீரை விழுங்கி விழுங்கி, , ஞான் , தேவ்,
நிங்ஙள் என்னை அறிந்தவர். என்னுடைய பிரமுகர்களோடு இப்படியாக ஒணம் முடிந்தது
கமலம் சேச்சி
http://www.kamalagaanam.blogspot.com
 
 
என்ன  ஒரு உன்னதச்செயல் செய்திருக்கீங்க   ரொம்ப பெருமையாய்  இருக்கு  உங்களை நினச்சா  கமலம் மேடம்! 

ஜோ (Joe)

unread,
Aug 30, 2012, 12:08:22 PM8/30/12
to mint...@googlegroups.com
சேச்சி, 

யங்கள் இருக்கினது மறுபூமியானு, கிட்டியது கொண்டு மெஸில் ஈ ஓணம் ஆகோஷங்கள் யங்கள் இண்டாக்கி, 

அதுக்காறனம் கொறைச்சி செமிக்கனும். :-))))))))))))))))

2012/8/30 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

என்ன அழகான உணவுப்படையல்,
நாடன் சொமந்ந அரிச்சோறு,கா வற்றல், சர்க்கர உப்பேரி,என எல்லாம் சரி, ஆனால் மத்தங்ங கொண்டு செய்யும் எலிசேரி எவிடெ, புளிசேரி எவிடே ?
ஜொசப் குரியன் >
--- On Thu, 30/8/12, ஜோ (Joe) <josephk...@gmail.com> wrote:

Kamala Devi

unread,
Aug 30, 2012, 7:53:37 PM8/30/12
to mint...@googlegroups.com
மெஸ்சில் சமைத்ததா? அடடா? அப்படியானால் இது போதும்.

சேச்சி
http://www.kamalagaanam.blogspot.com

--- On Thu, 30/8/12, ஜோ (Joe) <josephk...@gmail.com> wrote:

From: ஜோ (Joe) <josephk...@gmail.com>
Subject: Re: [MinTamil] Re: ஓண நினைவுகள்!
To: mint...@googlegroups.com

Kamala Devi

unread,
Aug 30, 2012, 8:02:08 PM8/30/12
to mint...@googlegroups.com
உன்னதமோ, பெருமைப்படவோ ஒன்றுமே இல்லை மைதிலி,
கேரளத்தில்எங்கள் இல்லத்தில்  அனுமதியின்றி வாதலில் கூட யாரும் நுழைய முடியாது.இங்கு சிங்கையில் துப்புரவு செய்யும் [சாலை கூட்டும்
தம்பிகளை நேரில் காணும் வலி, என்னைக்கண்டாலே மேடம், என்று மகிழ்ந்து நிற்கும் அந்த அன்பான தம்பிகள்---என்ன சொல்ல,
பிறவி எடுத்ததின் துளி கடப்பாடு , இப்படியாவது மனம் மகிழ செய்யமுடிவது ஈஷ்வரனின் கட்டளை
க.
. http://www.kamalagaanam.blogspot.com


--- On Thu, 30/8/12, shylaja <shyl...@gmail.com> wrote:

From: shylaja <shyl...@gmail.com>
Subject: Re: [MinTamil] Re: ஓண நினைவுகள்!
To: mint...@googlegroups.com

S NEELAKANTAN

unread,
Aug 30, 2012, 12:35:49 PM8/30/12
to mint...@googlegroups.com
நிங்கள் பரஞ்ஞது சரியா கிட்டிய சாதனங்கள் கொண்டு பக்ஷணம் உண்டாக்கி . வளர நன்னாயிருன்னு 
சேச்சி பரஞ்ஞது மத்தங்காய் கொண்டு உண்டாகிய ஓலன். எருசேரி  வாழக்காயும் சேனையும் சேர்த்து
உண்டாக்கணம் துபாயிலும் மற்றைய மிடில் ஈஸ்ட் கண்ட்ரியில் சேனையும் வாழக்காயும் கிட்டான்
விஷமம்.  எல்லாவற்கும் நல்ல நாடன் ஓண சாப்பாடு கிட்டி வளர சந்தோஷம். போட்டோ வளர்
நன்னாயிரின்னு போட்டோ கண்டப்ப ஞங்கள் எல்லவர்க்கும் சந்தோஷமாய் .

ஆமாம்  இந்த பென் சார் எங்கே போய்விட்டார் அவர் இருந்தால் இந்த ஓணத்தை ஒரு கலக்கு
கலக்கியிருப்பார் பென் சாரை தேடிக்கண்டு பிடியுங்கள்    
 
 


2012/8/30 ஜோ (Joe) <josephk...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Aug 31, 2012, 8:56:38 AM8/31/12
to mint...@googlegroups.com
பென்சார் வடநாடு போயல்லோ
 வரும்   வன்னு பதில் பரையும்

 

அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/8/30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>
330.gif
Reply all
Reply to author
Forward
0 new messages