தமிழும் தனித்தமிழும் !

231 views
Skip to first unread message

Dev Raj

unread,
Apr 9, 2015, 9:44:51 AM4/9/15
to mint...@googlegroups.com

தமிழும் தனித்தமிழும் !  

ஜெயகாந்தன்

  

தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.

இந்தத் தெளிவு எனக்கிருப்பதால் தனித்தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை. இந்தத் தெளிவு இல்லாததினால் தனித்தமிழ்ப் பிரியர்கள் தம்மை அறியாமலேயே தமிழை வெறுத்து வருகிறார்கள்.

தமிழனது சமுதாய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கலப்புகள் நிகழ்ந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மொழியில் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. இவ்விதக் கலப்பினாலேயே அவனது வாழ்க்கை வளமுற்றது போல - அவனது மொழியும் வளம் பெற்றிருக்கிறது.

தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் இத்தகைய கலப்புக்களையெல்லாம் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டுவிட்ட சிலர், மொழி மட்டும் தனித்திருக்க வேண்டுமென்று ஆசையுற்று அவ்வித முயற்சியில் இறங்குவது ரசனைக்குரியதே. ஒரு முயற்சி என்ற முறையில் அதிலிருக்கும் பலவீனமான அழகைக் கூட என்னால் ரசிக்க முடிகிறது. எனினும் அதுவே தமிழ் என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்தத் தனித்தமிழ் முயற்சியில் சில வியாசங்கள் வரையலாம். நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதிக் கொள்ளலாம். மேடையில் மிகுந்த ஜாக்கிரதையோடு கூடிய ஒரு சமத்காரத்தோடு கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.

என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.

ஒரு மொழியெனின் அதில் இலக்கியம் உருவாக வேண்டும். வாழ்க்கையைப் புறக்கணித்து இலக்கியங்கள் உருவாவதில்லை. இன்றைய தமிழ் இலக்கியம் என்பது - உலக அளவிற்கு உட்பட்ட துறைகளில் உருவாவது, உரைநடையில் நிறைவேறுதல் வேண்டும். உரை நடையென்று செய்யுளுக்கு வந்த உரைபோல அமைதல் கூடாது. எந்த அளவுகு நடைமுறை வாழ்க்கையோடு - அதன் பிரத்தியேக அழகுகளோடு வசனம் இசைந்து உருப்பெறுகிறதோ அந்த இசையையே வசனத்தின் வளர்ச்சியெனக் கொள்ளுதல் வேண்டும். அதற்குமேல் நவீன இலக்கியங்கள் நாம் சந்திக்கின்ற மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

பாத்திரப் படைப்பு என்பது ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு விளங்க - இது இந்தக் காலத்தை - இந்தச் சூழ்நிலையை - இந்தப் பிரதேசத்தை - இந்த வர்க்கத்தை என்றெல்லாம் சம்பாஷணைகளின் மூலமும் சிந்தனைகளின் மூலமும் ஆசிரியனின் விவரிப்பின் மூலமும் நிலை பெறுதல் வேண்டும்.

இந்தச் சாதனையைத் தனித்தமிழ் என்ற ஒரு சாதாரண முயற்சி சாதிப்பது துர்லபம். ஏனெனில் தனித்தமிழ் என்பது ஒரு வாழ்க்கை உண்மையில்லை; அது ஒரு மனமயக்கம்! அல்லது ஒரு குழுவின் விருப்பம். இதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பதே இதன் சிறப்பு.

(எனவேதான் இதனை ஒரு முயற்சி என்று குறிப்பிட்டேன்.)

ஒரு பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகளிருப்பது ஒரு மொழியின் செழுமை. அவ்விதம் இருக்கின்ற வார்த்தைகளை மொழி ஆராய்ச்சியாளர்கள் எந்தெந்த வார்த்தைகள், எந்தெந்தக் காலத்தில், எதனெதன் விளைவாய் எந்தெந்த மொழிகளில் இருந்து வந்திருக்கக் கூடுமென்பதை ஆராய்ந்து குறிக்கலாம். இதற்கு உதவுபவை அம்மொழியின் இலக்கியங்களேயாகும்.

அதாவது இத்தகைய கலப்புக்களை அவ்விலக்கியங்கள் பிரதிபலித்திருக்கக் கூடும் என்று கொள்ளுதல் வேண்டும்.

நாவாய் என்ற வார்த்தை தமிழர் நாகரிகம் கடல் கடந்து சென்ற காலத்திற்கு முன்பு தமிழக மண்ணில் யவனர்கள் வாணிகஞ் செய்யும் பொருட்டு வருவதற்கு முன்பு இருந்திருக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும். நாவாய் என்ற சொல் கப்பலைக் குறிக்கின்ற தனித் தமிழ் சொல்லெனக் கருதுதல் வேண்டா. அஃது கிரேக்க மொழியின் 'நோவே' என்ற கப்பலைக் குறிக்கின்ற சொல்லின் திரிபேயாகும். இவ்விதம் திரிந்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வார்த்தை இருத்தல் கூடும். ஆங்கிலத்தில் 'நேவி' என்றிருப்பது போல.

தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் ஒவ்வொரு காலத்து இலக்கியமும் அந்தந்தக் காலத்தைப் பிரதிபலிப்பனவையாயிருக்கின்றன. அவையாவும் ஒரே செய்யுள் வடிவில் இருப்பினும் ஒரே மாதிரியாக இல்லை.

தமிழுக்கு சிரஞ்சீவித் தன்மை தந்த தமது முற்காலத்துக் கவிஞர்கள் எல்லாம் வாழ்க்கையில் வந்து கலந்த பிறமொழிச் சொற்களைக் கைவிட முடியாமல் கையாண்டு நமது இலக்கியங்களூக்குச் செழுமை தந்திருக்கின்றனர். அதற்கு இடங்கொடுக்காத இலக்கணத்தை அவர்கள் இழுத்து வளைத்திருக்கிறார்கள். அவர்கள் இழுப்பிற்கு இலக்கணம் வளைந்து கொடுத்தும் இருக்கிறது. அதன் மூலம் அவர்கள் புதிய இலக்கணத்தை உருவாக்கியுமிருக்கிறார்கள்.

அன்று அவர்கள் இலக்கியம் சமைத்திருப்பது செய்யுள் உருவத்தில். அவர்களே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் - அவர்கள் காலத்தைவிட எத்தனையோ மடங்கு வேகமானதும் விரைவானதுமான, அதிகக் கலப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நவீன இலக்கியத்தை உரைநடையின் மூலம் உருவாக்குகின்ற ஒருவன் தனித் தமிழைக் காப்பாற்றுவது எங்ஙனம்?

'அந்தோணி சைக்கிளில் போனான். டயர் பஞ்சராயிற்று' என்ற வாக்கியங்கள் தமிழ் இல்லையென்று யார் சொல்லுவது? இதனை எவ்விதம் தமிழாக்குவது? தனித் தமிழ்வாதிகளூக்கு இந்தச் சொற்றொடரில் இரண்டே வார்த்தைகள் தான் இருக்கின்றன. ஆயிற்று, போனான் என்பதே அவை. ஆவதும், போவதும் தமிழனின் எல்லாக் காலத்திலும் இருந்த ஒரு வினை. 

ஆனால் அந்தோணியும், சைக்கிளும், டயரும், பஞ்ச்சரும் ஒரு நவீன காலத்தைப் பிரதிபலிக்கின்ற உண்மைகள் அல்லவா?

இதனை மொழிபெயர்ப்பதன் மூலம் காலமும் இடமும் அற்ற ஒரு கனவு மயக்கத்திற்கு அல்லவா நாம் போய் விடுகிறோம்.

சைக்கிள் என்ற பொருள் நமக்கு வேண்டும். சைக்கிள் என்ற பெயர் நமக்கு வேண்டாம் என்று சிலர் விரும்புவதை வாழ்க்கை எவ்விதம் அனுமதிக்கும்?

எனவேதான் சொல்லுகிறேன் "தமிழ் ஒரு மொழி"




jeyakanthan.jpg

Seshadri Sridharan

unread,
Apr 9, 2015, 11:46:00 AM4/9/15
to mintamil

தமிழும் தனித்தமிழும் !  

தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.

இம்முயற்சி  தொடங்கப்பட்டதால்;தான் 1930 - 40 களில் இருந்தது போல் இன்று தமிழ் இல்லை என்று அறியலாம். என்றோ செத்த மொழி எபிரேயத்தை இன்று மீட் டுக்கொண்டுவரும் போது தமிழில் கலந்துள்ள அயற்சொற்களை களைந்து தமிழ்ச் சொல்லையே கையாள்வது தவறு இல்லையே.  

கைத்தொழுவான் 

தேமொழி

unread,
Apr 9, 2015, 4:40:28 PM4/9/15
to mint...@googlegroups.com

///
அந்தத் தனித்தமிழ் முயற்சியில் சில வியாசங்கள் வரையலாம். நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதிக் கொள்ளலாம். மேடையில் மிகுந்த ஜாக்கிரதையோடு கூடிய ஒரு சமத்காரத்தோடு கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.

என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.

ஒரு மொழியெனின் அதில் இலக்கியம் உருவாக வேண்டும். வாழ்க்கையைப் புறக்கணித்து இலக்கியங்கள் உருவாவதில்லை. இன்றைய தமிழ் இலக்கியம் என்பது - உலக அளவிற்கு உட்பட்ட துறைகளில் உருவாவது, உரைநடையில் நிறைவேறுதல் வேண்டும். உரை நடையென்று செய்யுளுக்கு வந்த உரைபோல அமைதல் கூடாது. எந்த அளவுகு நடைமுறை வாழ்க்கையோடு - அதன் பிரத்தியேக அழகுகளோடு வசனம் இசைந்து உருப்பெறுகிறதோ அந்த இசையையே வசனத்தின் வளர்ச்சியெனக் கொள்ளுதல் வேண்டும். அதற்குமேல் நவீன இலக்கியங்கள் நாம் சந்திக்கின்ற மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
///

"இலக்கியத்திற்கான" சாகித்திய அகாதமி, ஞான பீட விருதுகளை இயல்பு நடையில் எழுதும் ஜெயகாந்தனும் வாங்கியுள்ளார், தமிழில் எழுதுவதற்கு முன்னுரிமை தந்த மு.வ.வும், அகிலனும் வாங்கியுள்ளார்கள்

சாகித்திய அகாதமி விருது -  சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருது 
1961 - அகல் விளக்கு  - மு.வரதராசனார்
1963 - வேங்கையின் மைந்தன்  - அகிலன்
1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

ஞான பீட விருது - இந்தியாவில்இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது
1975 - அகிலன் - சித்திரப்பாவை 
2002 - ஜெயகாந்தன் 

அகிலனும் மு வ வும் எழுதும் தமிழ் பற்றி அனைவரும் அறிவோம்....

மு வ பற்றி கீழே...

மு. வ. தமிழ் பற்றியும் இலக்கியப் பங்களிப்பு பற்றியும்.... (http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/26084-2014-01-29-09-03-29)

இலக்கியச் சிறப்பை இழக்காதவாறு எளிய, இனிய, தெளிந்த தமிழ்நடையில் கைதேர்ந்தவராய் விளங்கினார்! பிரஞ்சு இலக்கிய மேதை பெர்னாட்ஷாவைப் போல, தமிழ் இலக்கிய பண்பாட்டைத் தரணிக்கு உணர்த்திய அறிஞர் மு.வ.! அவரது பெருமையை முன்கூட்டியே உணர்ந்த 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க., மு.வ.வை ”தமிழ் பெர்னாட்ஷா” எனத் தன் அமுதவாக்கால் அழைத்தார்.

- பி.தயாளன்




..... தேமொழி 

பழமைபேசி

unread,
Apr 9, 2015, 8:47:01 PM4/9/15
to mint...@googlegroups.com
மு.வ படைத்ததெல்லாம் இலக்கியமா? மதிப்பீடுகளற்றவை.

இப்படிக்கு,
யாரோ.

Megala Ramamourty

unread,
Apr 9, 2015, 9:33:14 PM4/9/15
to மின்தமிழ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Megala Ramamourty

unread,
Apr 9, 2015, 10:00:12 PM4/9/15
to மின்தமிழ்
//மு.வ படைத்ததெல்லாம் இலக்கியமா? மதிப்பீடுகளற்றவை.//

என்ன பழமைபேசி இது? ‘யாரோ’ சொன்னதையெல்லாம் வாங்கிச்சொல்லி 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழறிஞர் ஒருவரை இப்படியா இழிவுபடுத்துவது?

மு.வ. படைத்தெல்லாம் இலக்கியமில்லாவிட்டால் பின்பு யார் படைத்ததெல்லாம் இலக்கியமாம்? அதையும் சொல்லிவிட்டால் நல்லது.  :-))

குறுந்தொகை விருந்து, நற்றிணை விருந்து, ஓவச் செய்தி, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியக் கட்டுரைகள், மொழியியற் கட்டுரைகள், குறள் காட்டும் காதலர், கண்ணகி, மாதவி, அறமும் அரசியலும்  என்று எத்தனை இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர் அவர்!!

இலக்கிய நூல்கள் படைத்ததோடல்லாமல் ‘கடித இலக்கியம்’ எனும் ஒரு புதுத் துறையை தமிழுக்கு அறிமுகப்படுத்திக் கடிதங்களைக் கூட இலக்கியமாக்கலாம் எனக் காட்டிய பெருமகன்!

கட்டுரைகள், கடிதங்கள் அல்லாமல் நாவல்கள் பலவும் எழுதியவர். அவருடைய கள்ளோ காவியமோ, கரித்துண்டு, அகல்விளக்கு ஆகியவை காலத்தால் அழியாத அமர காவியங்கள் அல்லவா! ’அகல்விளக்கு’ சாகித்ய அகாதெமியின் பரிசு வென்ற நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. (இலக்கியத்தரமற்ற ஒரு நாவலுக்கா சாகித்ய அகாதெமி பரிசு வழங்கும்???)
அதே சாகித்ய அகாதெமியின் வேண்டுகோளுக்கிணங்கவே அவர் ’தமிழிலக்கிய வரலாறு’ எனும் நூலை எழுதினார். அதன் தொடர்ச்சியை எழுதுதற்கு இன்றுவரை ஒரு தமிழனாலோ, தமிழச்சியாலோ இயலவில்லை என்பது வருந்தத்தக்கது.

அவ்வளவு ஏன்...திருக்குறள் படிக்க விழைவோர் பரிமேலழகர் உரையைப் புரிந்துகொள்ள முடியாமல் பரிதவிப்பதைக் கண்ட மு.வ. எளிய உரை ஒன்றை வரைந்தார். அவ்வுரையே இன்றுவரை திருக்குறள் படிப்போர்க்குக் கைவிளக்காக இருந்துவருவதை யாரே மறுப்பர்?

இப்படி, பல மகத்தான நூல்களை யாத்து தமிழன்னையின் கழுத்தில் கவின்மிகு ஆரமாக அணிவித்து அழகுபார்த்த அந்தத் தமிழறிஞரை ‘யாரோ( எழுத்தாளர் திரு. ஜெயமோகனா?) சொல்வதையெல்லாம் கேட்டுவந்து குறைத்து மதிப்பிடலாமா பழமைபேசி? எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது....! 



-மேகலா

Mohanarangan V Srirangam

unread,
Apr 9, 2015, 10:19:52 PM4/9/15
to min tamil
நன்றி மேகலா புலவரே.

செல்வன்

unread,
Apr 9, 2015, 10:21:01 PM4/9/15
to mintamil
மேகலா ஜி

அண்னாச்சி வஞ்சகபுகழ்ச்சி அணியில் எழுதி இருக்காரு...எத்தனை பத்திகளை தட்டச்சிட்டீங்க பாருங்க :-)

Megala Ramamourty

unread,
Apr 9, 2015, 10:26:28 PM4/9/15
to மின்தமிழ்
//அண்னாச்சி வஞ்சகபுகழ்ச்சி அணியில் எழுதி இருக்காரு//

அப்படின்னா என்னங்க செல்வன் ஜி?   :-))

Megala Ramamourty

unread,
Apr 9, 2015, 10:31:22 PM4/9/15
to மின்தமிழ்
’புலவர்’ என்ற பெயர் எனக்குப் பொருத்தமானதாகப் படவில்லையே அரங்கனாரே! வேறு நல்ல பெயராக வைக்கப்படாதோ?    :-)))

Mohanarangan V Srirangam

unread,
Apr 9, 2015, 10:35:15 PM4/9/15
to min tamil
சரி. உங்களுக்குப் பிடிக்காத விதத்தில் இனி உங்களை விளிக்கவில்லை. மன்னிக்கவும். வெறுமனே மேகலா அவர்களே என்று மட்டும் விளிக்கிறேன். ;-)

Megala Ramamourty

unread,
Apr 9, 2015, 10:37:12 PM4/9/15
to மின்தமிழ்
’பிடிக்கவில்லை’ என்று நான் சொல்லவேயில்லையே நண்பரே! எனக்குப் ’பொருத்தம்தானா?’ என்றுதானே வினவினேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் அவ்வாறே அழையுங்கள்!  ;-)

N. Ganesan

unread,
Apr 9, 2015, 10:43:24 PM4/9/15
to mint...@googlegroups.com, vallamai, Santhavasantham, housto...@googlegroups.com

மொழியியல் பற்றி மு.வ எழுதிய நூல்கள் அருமையான அறிமுக நூல்கள். யாரும் அவருக்கு முன் செய்யாத துறை,

மு. வ. நூல்கள் நான்கு.

(1) 
அறமும் அரசியலும்
 
டாக்டர்.மு.வரதராசன்
http://www.tamilvu.org/library/lA411/html/lA411ind.htm

(2) 
இலக்கிய ஆராய்ச்சி
 
டாக்டர்.மு.வரதராசன்
http://www.tamilvu.org/library/lA410/html/lA410hom.htm

(3) 
இலக்கியத் திறன்
 
டாக்டர்.மு.வரதராசன்

http://www.tamilvu.org/library/lA412/html/lA412ind.htm

(4) 
குறள் காட்டும் காதலர்
 
டாக்டர்.மு.வரதராசன்

நா. கணேசன்

Mohanarangan V Srirangam

unread,
Apr 9, 2015, 10:43:28 PM4/9/15
to min tamil
நன்றி மேகலா அவர்களே. :-)

dr.ponmudi

unread,
Apr 10, 2015, 5:00:15 AM4/10/15
to mint...@googlegroups.com

//தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.//

 

இதன் பொருள் என்ன? பிறமொழிச்சொற்களும் கலந்த்திருப்பதுதான் தமிழென்பதா, இதன் பொருள்?

இல்லை! தனித்தமிழே தமிழ்!

பிறமொழிச்சொற்களை ஏற்பதென்றால், அவற்றை தமிழ்மொழியின் இயல்புக்கு ஏற்றவாறு மாற்றித்தானேற்றுக்கொள்ளமுடியும். ‘சமத்காரத்தோடு என்பதெல்லாம் தமிழின் இயல்புக்கு ஏற்றவையாகா!

ஆனால் இவற்றையெல்லாம் இப்படித்தானேற்கவேண்டுமென்பதை எப்படிச்சொல்கிறாரென்பது புரியவில்லை. இதெல்லாம் த்மிழ்மக்கள் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டு அன்றாடம் புழங்குஞ்சொற்களா? இல்லையே?

வியாசங்கள் என்பதற்கான தமிழ்ச்சொல் இல்லையா? தமிழ்ச்சொல் இல்லாதவிட்த்தில் ஒரு பிறமொழிச்சொல்லை ஏற்பதென்பது தேவையாயிருக்கும். ஆனால் தமிழ்ச்சொல்லொன்று இருந்தும் அதை விட்டுவிட்டு ‘அதனிடத்தில் வேற்றுமொழிச்சொல்லைவைப்பது எப்படி சரியானகொள்கையாயிருக்கமுடியும்?

//கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.//

 

‘பெர்சிவல் என்னும் மேனாட்டறிஞர், ‘உள்ளத்தில் தோன்றும் ஒரு கருத்தை தெளிவாய்ச்சொல்வதற்கு உலகிலுள்ள அனைத்துமொழிகளிலும் தமிழ்மொழியே சிறந்ததாயிருக்கிறது எனச்சொல்லியிருக்கிறார்.

ஒரு வேற்றுமஒழிக்கார்ர் அதுவும் மேனாட்டுக்கார்ர் இப்படிச்சொல்கிறார், ஆனால் ஒரு தமிழரோ இந்த கருத்துக்கு நேர்மாறாக, தமிழால் சொல்லமுடியாதென்கிறார்! இது வியப்புக்குரியது!

//என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.//

இவர் முடியவேமுடியாதென்பது இவரெழுதியதைப்போலெழுதுவதைச்சொல்கிறார்போலும். அதன்படிப்பார்த்தால் இலக்கியமென்பது இவரெழுதுவதுபோலெழுதுவதுமட்டுந்தானா? தனித்தமிழில் இலக்கியங்கள் ஒருகாலத்தில் தோன்றின. ஆனால் இன்று பெரிதாய் தோன்றுவதில்லை. அதற்காக தோன்றக்கூடாதென்பதெல்லாமில்லை! இலக்கியக்கட்டுரைகளும் திறனாய்வுகளும் தனித்தமிழிலேதானேயெழுதப்படுகின்றன?

dr.ponmudi

unread,
Apr 10, 2015, 6:04:13 AM4/10/15
to mint...@googlegroups.com
ஜெயகாந்தனின் தமிழ்!

'தனிமனிதன்' என்னும் ஜெயகாந்தனின் ஒரு கதையில்வரும் இரண்டுவரிகளை இங்கே காட்டியுள்ளேன், பாருங்கள்.

தீ மூட்டி மாமிசத்தைச் சுட்டாள். தானும் புசித்து அவனுக்கும் ஊட்டினாள்; தண்ணீர் புகட்டினாள்; அவன் புண்களைக் கழுவிப் பச்சிலைகளைக் கசக்கிச் சாறு பிழிந்து மருந்திட்டாள்.

 

இரண்டாம்வேற்றுமையின் தொகையும் விரியும்:

 

இதில், ‘தீமூட்டிஎன்பதும் தண்ணீர்புகட்டினாள்என்பதும் இரண்டாம்வேற்றுமைத்தொகை. தொகைநிலைத்தொடர்மொழிகளை பிரிக்கக்கூடாதென்பது உண்மையன்றோ? 'தீ மூட்டி' என்றால், தீதான் மூட்டியதென்பதாகும். தீ மூட்டப்படுவதா மூட்டுவதா?

 

மாமிசத்தைச்சுட்டாள், புண்களைக்கழுவி, பச்சிலைகளைக்கசக்கி ஆகியவை இரண்டாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடர்கள். ஆனால் இங்கெல்லாம் புணர்ச்சி தேவையற்றது. புணர்ச்சியில்லாமலெழுதினால்மட்டுமே பொருள் சரியானதாயிருக்கும்.

 

மாமிசத்தைச்சுட்டாள்என்றெழுதுவதால், சுடுவதற்கு வேறொன்றுமிருப்பதாகிறது. அதாவது, அவளிடம் மாமிசமும் மீனுமிருப்பதாகக்கொண்டால், மீனைச்சுடாமல் மாமிசத்தைச்சுட்டாளென்பது சரி. ஆனால் கதைப்படி, அவளிடம் மாமிசத்தைத்தவிர சுடுவதற்கு வேறொன்றுமில்லை.

 

ஒரேயொருபொருள்:

 

சுடுவதற்கு ஒரேயொருபொருள்மட்டுமிருக்கும்போது, எதைச்சுட்டாளென்பதை சிறப்பித்தெழுதவேண்டுமா? மாமிசத்தையல்லாமல் வேறெதைச்சுடுவாள்? ஆதலால், ‘மாமிசத்தைச்சுட்டாள்என்று மாமிசத்தையென்பதற்கு பொருட்சிறப்புகொடுத்தெழுதாமல், சுட்டாளென்பதைமட்டுஞ்சிறப்பிக்குமாறு மாமிசத்தை சுட்டாள்என்று பிரித்தெழுதுவதே சரியாகும்.

 

பிரித்தெழுதுவதுதான் சரி:


புண்களைக்கழுவிஎன்றெழுதினால் புண்களையென்பதற்கும், ‘புண்களை கழுவிஎன்று பிரித்தெழுதினால் கழுவியென்பதற்கும் பொருட்சிறப்பானது இடமாறுகிறது.

 

அவள் புண்களைக்கழுவாமல் வேறெதையுங்கழுவப்போவதில்லையாதலால், ‘புண்களைக்கழுவினாள்என்று சேர்த்தெழுதி, புண்களையென்பதற்கு சிறப்பளிக்கவேண்டியதில்லை. அதற்குமாறாக, ‘கழுவினாள்என்பதைமுதன்மைப்படுத்தி,
புண்களை கழுவினாள்என்றெழுதுவதே சரி.

 

அவன் புண்களைக்கழுவி... என்றால், புண்களைக்கழுவியவன் அவனென்றாகிறதன்றோ? ‘அவனுடைய புண்களைக்கழுவிஎன்றுதானேயிருக்கவேண்டும்? அதுமட்டுமன்றி, இங்கு பொருட்சிறப்பிருக்கவேண்டியது புண்களையென்பதற்கல்லாமல், கழுவியென்பதற்குத்தானாதலால்,


அவனுடைய புண்களை கழுவிஎன்றெழுதுவதுதான் சரியாகும்.


தானும் புசித்து, அவனுக்கும் ஊட்டினாள்என்பதில், ‘தானும்’ ‘அவனுக்கும்என்பவற்றுக்கு  பொருட்சிறப்புண்டாகுமாறு, ‘தானும்புசித்து, அவனுக்குமூட்டினாள்’  என்றிருப்பதே சரி.  தண்ணீர்புகட்டினாள்என்பதை பிரித்தெழுதுவது பிழை. வேண்டுமானால், ‘தண்ணீரை புகட்டினாள்என்றுபிரித்தெழுதலாம்.


 ‘கழுவிப்பச்சிலைஎன்பது பொருந்தாப்புணர்ச்சி. {வினையெச்சத்தையடுத்து பெயெர்ச்சொல்}


 ‘பச்சிலைகளைஎன்பதைவிட, ‘கசக்கிஎன்பதற்கே இங்கு பொருட்சிறப்பு. எனவே, ‘பச்சிலைகளை கசக்கிஎன்றெழுதுவதேசரி. 

சாறு பிழிந்துஎன்று பிரித்தெழுதாமல், ‘சாறுபிழிந்து என்றெழுதுவதேசரி. {இரண்டாம்வேற்றுமைத்தொகை }

 ‘கசக்கிச்சாறுஎன்பதும் பொருந்தாப்புணர்ச்சி. {வினையெச்சத்தையடுத்து பெயெர்ச்சொல்}

 

முழுவதும்பார்த்தால்,


தீமூட்டி மாமிசத்தை சுட்டாள். தானும்புசித்து, அவனுக்குமூட்டினாள்; தண்ணீர்புகட்டினாள். அவனுடைய புண்களை கழுவி, பச்சிலைகளை கசக்கி சாறுபிழிந்து மருந்திட்டாள்.


என்றெழுதுவதே சரியாயிருக்கும். அன்றோ? ஆனால், ஜெயகாந்தன்மட்டுமல்லாமல் எல்லோருமே இன்று இப்படித்தானெழுதுகிறார்களென்பதை சொல்லத்தேவையில்லை. 


இப்போது முதலிலிருப்பதை இதனோடு ஒப்பிட்டுப்பார்த்து எது சரியாயிருக்கிறதென்பதை நீங்களேயெண்ணிப்பாருங்கள்!


On Thursday, April 9, 2015 at 7:14:51 PM UTC+5:30, Dev Raj wrote:

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 10, 2015, 8:03:20 AM4/10/15
to mintamil
கள்ளோ காவியமோ, கரித்துண்டு என்று மு.வ. வின் புதினங்களைத் தேடித்தேடிப்படித்த இளைஞர் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது.
அவருடைய எழுத்து மதிப்பிட முடியாதது எனக்கொண்டாடிய நண்பர்கள் இருந்தார்கள்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Malarvizhi Mangay

unread,
Apr 10, 2015, 8:16:39 AM4/10/15
to mint...@googlegroups.com

சபாஷ் மேகலா.மு.வ வின் இலக்கியவரலாறு.கல்லூரி மாணவியாக பேச்சு ப்போட்டியில் பரிசாகப்பெற்ற முதல்நூல். அவருடைய நாவலுக்குப் பின்னரே மலர்விழி என்ற. பெயரை தமிழர் தம் வீட்டுப்பெண்குழந்தைகளுக்கு தத்துப்பெயராக்கிக்கொண்டனர்.
மதுரைகாமராசர் பல்கலைக்கழகம். அவர் துணைவேந்தராக இருந்தபோது பல்கலைநகர்.வேப்பஞ்சாலை.குடிமனை. குறிஞ்சி இல்லம். தெ.போ.மீ.நூலகம்.என்று  அத்தனைக்கும்
தமிழ்ப்பெயர் வைத்தார்.இன்றுவரை எந்த அரசியல்வாதி
பெயர்வைக்கும்வியாதி தொற்றாமல்  .ம.கா.ப வைக் காத்த
தமிழ்க்காவல் தெய்வம் மு.வ.

பழமைபேசி

unread,
Apr 10, 2015, 8:48:15 AM4/10/15
to mint...@googlegroups.com
பாம்பறியும் பாம்பின கால். இஃகி! 

மு.வரதராசனார் நூற்றாண்டு விழா மலர் ஆசிரியனாக அவரது படைப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் எனப் பலவற்றையும் பிழை திருத்தி அனுப்பினால், மற்ற பல பிழைகளுடன் திரும்ப வரும். இப்படி அனுப்பி, அனுப்பி, ஒன்றுக்கு பல முறை வாசித்தேன். இஃகிஃகி!!

Oru Arizonan

unread,
Apr 10, 2015, 12:10:49 PM4/10/15
to mintamil
//மேகலா ஜி//

இப்படி 'ஜி'போட்டு எழுதுவதைக்கண்டால் எனக்குச் 'சீ'யென்று ஆகிவிடுகிறது.  உடலெல்லாம் பற்றி எரிகிறது.  வலிந்து வேறொரு மொழியைப் புகுத்தித்தானாகவேண்டுமா செல்வன்?
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Apr 10, 2015, 3:31:26 PM4/10/15
to mintamil
எது எதுக்கு உடல் பற்றி எரியவேண்டும் என்பதுக்கு எல்லாம் ஒரு வரைமுறை வேண்டும் அரிசோனரே..ஒண்ணும் இல்லாத விசயத்துக்கு எல்லாம் உடல் பற்றி எரிந்தால் உடல்நலன் என்ன ஆவது? :-)

Oru Arizonan

unread,
Apr 10, 2015, 3:35:50 PM4/10/15
to mintamil
தில்லிக்கருகில் வெறும் கூற்றுமொழியாக இருந்த கடிபோலி இன்று இந்தியாகப் பரிணமித்திருக்கிறது.  உயர்தனிச்செம்மொழியாக இருக்கும் தமிழ் இருக்கையில், தேவை இல்லாமல் இந்தி அடைமொழியை சேர்க்கும் அளவுக்கு நமது நினைப்பு செல்கிறது என்னும்போது....

செல்வன்

unread,
Apr 10, 2015, 3:41:40 PM4/10/15
to mintamil
ஹாஜி முஸ்தபா

டாக்டர் கலைஞர்

இஸ்மாயில் சாஹேப்

என மாற்றுமொழி விளிப்புகள், பட்டங்கள் தமிழில் இருந்துகொண்டுதானே உள்ளன?

Oru Arizonan

unread,
Apr 10, 2015, 4:06:00 PM4/10/15
to mintamil
ஹாஜி என்பது புனிதயாத்திரை செய்ததைக் குறிக்கும் அடைமொழி.
இப்பொழுது டாக்டர் என்பதை விடுத்து முனைவர் என்று குறிப்பிடுகிறார்கள்.
முகமதியர்களை "சாஹேப்" என்று அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.  அதுவும் தற்பொழுது குறையத்துவங்கி உள்ளது.

மேகலா அவர்கள் இவற்றில் எதனுடன் சேர்த்தி?  அவரது தாய்மொழி இந்தியாக இருந்து, அவர் தமிழில் புலமை பெற்றவரா?  அப்படி இருப்பவர்கூட 'ஜி' என்ற விகுதியை விரும்பமாட்டார்.

இனி நாம் வாதித்து என்ன பயன் உண்டாகப்போகிறது?  தாங்கள் தங்கள் விருப்பப்படி செய்யுங்கள், செல்வன்.  

நான் என் மனதில் எழுந்த உணர்சிகளைப் பகிர்ந்துகொண்டேன், அவ்வளவே!

செல்வன்

unread,
Apr 10, 2015, 4:12:25 PM4/10/15
to mintamil
கலைஞர் முனைவர் அல்ல, டாக்டர் மட்டுமே. நம் மக்கள் புதல்வரும் முனைவர் அல்லாத டாக்டரே

பெயரையே சொல்லாமல் ஆடிட்டர் சார், டாக்டர் சார், கலெக்டரய்யா என அழைப்பதை தமிழகமெங்கும் காண இயலும்.

பேச்சுவாக்கில் ஒருவரை மரியாதையாக அழைப்பதில் மொழிக்கலப்பு, தனித்தமிழ் என ஆராய்வதில் பலனில்லை. நான் தனித்தமிழில் எழுதுவது கிடையாது. பேச்சுத்தமிழ் தான்.

பழமைபேசி

unread,
Apr 10, 2015, 5:44:51 PM4/10/15
to mint...@googlegroups.com
மாட்டுனது அண்ணாச்சிங்றதுல மகிழ்ச்சிதான். இருந்தாலும் இப்பைக்கு விட்ரலாமுங்க அரிசோணன் அய்யா. எதனா வலுவாக் கிடைக்காமலா போய்டும்?? இஃகி!!

Oru Arizonan

unread,
Apr 10, 2015, 6:38:55 PM4/10/15
to mintamil
//கலைஞர் முனைவர் அல்ல,//

கொல்லுப்பட்டறையில் ஊசி விற்கிறீர்களா, செல்வன்?  கலைஞர் தமிழ்ச் சொல் அல்ல என்று எங்கும் பதிந்ததாக நினைவு இல்லையே!

தமிழர்கள் ஒருவரையோருவர் 'ஜி' என்றழைத்துப் பேசுவதை, தமிழைப் புறக்கணித்துவரும் தமிழ்நாட்டு இளம்தலைமுறைகள்கூட செய்து நான் கேட்டதில்லை.

நான்தான் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேனே, ஏன் வீணாக வாதத்தை வளர்க்கவேண்டும்?  இனி மேற்கொண்டு இந்தவிஷயத்தில் உங்களுடன் வாதிடமா ட்டேன்.

பழமைபேசி

unread,
Apr 10, 2015, 6:42:13 PM4/10/15
to mint...@googlegroups.com
அய்யா நான் உங்க கட்சிதான். இருந்தாலும் ஒன்னு சொல்லிகிடுதேன்.

கலைஞர் டாக்டர் எனவும் விளிக்கப்படுகிறார்.
அந்த டாக்டர், முனைவர் என்பதற்கு நிகரான டாக்டர் அல்ல.
இதைத்தான் சொல்கிறார் அண்ணாச்சி!!

Oru Arizonan

unread,
Apr 10, 2015, 7:05:04 PM4/10/15
to mintamil
மருத்துவர் என்பதற்கு நிகரான டாக்டர் என்கிறீர்களா?  

கலைஞருக்குக் கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம்  முனைவரைக் குறிக்கும் பட்டம்தான் [கௌரவ  Ph.D பட்டம்தான்].

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பழமைபேசி

unread,
Apr 10, 2015, 7:25:12 PM4/10/15
to mint...@googlegroups.com
அதுதானுங்க அய்யா.... டாக்டர் கலைஞர்னுதானே எல்லாரும் சொல்கிறார்கள்?? அதைப்போல பேச்சுவாக்கில் செல்வன்பையா, நேருஜி, காந்திஜி, பாபு ஜெகஜீவன்ராம்ஜியைப் போல இங்கயும் பாவிச்சிட்டாரு. இதுல விட்ருலாமுங்யா... இன்னொன்னுல சிக்குவாரு எப்படியும்... பிடிச்சிடலாம்!!

N. Ganesan

unread,
Apr 10, 2015, 8:34:05 PM4/10/15
to mint...@googlegroups.com
http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-august-2014/27038-22

இந்தி ஆட்சிமொழியாவதைத் தடுப்போம்! 22 மொழிகளையும் ஆட்சிமொழிகளாக்குவோம்!

விவரங்கள்
எழுத்தாளர்: வே.ஆனைமுத்து
தாய்ப் பிரிவு: சிந்தனையாளன்
பிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2014
 

*   சமயக் கருத்துக்களால் வேறுபட்டிருந்த தலைவர் களை;

*   அரசியல் குறிக்கோளால் வேறுபட்டு நின்ற தலை வர்களை;

*  ஆண்டால், அறிவால், ஆளுமையால் வேறுபட்டு நின்ற தலைவர்கள் - தொண்டர்களை;

* எல்லாச் சாதிகளையும் சார்ந்த - ஏழைகளையும் செல்வந்தர்களையும் ஒன்றிணைத்த முதலாவது போர், கட்டாய இந்தியைக் கல்வியில் திணித் திட்டதை எதிர்த்த போர். அதுவே தமிழன் தொடுத்த முதலாவது மொழிப் போர்!

* தமிழனை, தமிழறிஞர்களை, ஆடவரை, மகளிரை, குழந்தைகளை 1300 பேரைக் களத்தில் இறக்கிச் சிறைப்படுத்திய முதலாவது போர்!

*  நடராசன்-தாளமுத்து இருவரைக் காவு கொண்ட போர்!

*  தமிழ்க் கடலாகவும் வடமொழியை அறிந்த மேதையாகவும் ஆங்கிலப் புலவராகவும் விளங்கிய சாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளாரை;

*  இந்திய தேசியக் காங்கிரசுத் தலைவராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும், வடமொழி வல்லுந ராகவும், அன்றைய முதலமைச்சரை வாதுக்கு இழுத்த வல்லவராகவும் விளங்கிய சோமசுந்தர பாரதியாரை;

* தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் தன்மான மறவ ராகவும் தமிழன் களம்காணக் கவிதைக் கருவி களைத் தந்த கவிஞராகவும் விளங்கிய கனக சுப்புரத்தினக் கவிக்குயிலை;

*  காஞ்சி பரவஸ்து இராச கோபாலாச்சாரியார், அருணகிரிநாதர், ஈழத்துச் சிவானந்த அடிகள் ஆகியோரை;

*  நீதிக்கட்சி ஆதரவாளராக-களம்காண அஞ்சாதவ ராக விளங்கிய ஈரோட்டு வெ. இராமசாமியை;

* ஈ,வெ.ரா.வின் கைவாளாக விளங்கிய குலசேகரப் பட்டணம் தந்த கோமான் செ.தெ. நாயக்கத்தை - கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட வைத்த முதலாவது நிகழ்ச்சி 1938-39 இந்தி எதிர்ப்புப் போரே.

தமிழ்நாடு, கேரள நாடு, தெலுங்கு நாடு, கன்னட நாடு என்கிற நான்கு திராவிட மொழிக்குடும்ப நாடுகள் இணைந்த அரசுப் புலமாக-ஆட்சி மாகாணமாக சென்னை இராசதானி எனப்பட்ட சென்னை மாகாண அரசு விளங்கியது.

17-12-1920 முதல் 1926 வரையிலும் நீதிக்கட்சி ஆட்சியிலும்; 1926 முதல் 1929 முடிய நீதிக்கட்சி ஆதரவு பெற்ற காங்கிரசு சுயேச்சைகள் ஆட்சியிலும்; 1930 முதல் 1937 வரை மீண்டும் நீதிக்கட்சி ஆட்சி யிலும் இருந்த சென்னை மாகாணத்தில் - எல்லாச் சாதிக்காரர்களும் படித்திட ஏற்ற அரசுத் தொடக்கப் பள்ளி களை ஆயிரக்கணக்கிலும், உயர்நிலைப் பள்ளிகளை நூற்றுக்கணக்கிலும் அந்த மூன்று கட்ட ஆட்சிகளிலும் தொடங்கினார்கள் - பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதியில்.

அய்தராபாத் சிற்றரசு, மைசூர் சிற்றரசு, புதுக் கோட்டை சிற்றரசு, கொச்சி, திருவிதாகூர் சிற்றரசுகளிலும் (சுயேச்சை அரசுகளிலும்) உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன.

எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் 6, 7, 8, 9, 10ஆம் வகுப்புகளில் தாய்மொழிப் பாடம் ஒன்றைத் தவிர்த்த மற்ற எல்லாப் பாடங்களும் ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்பட்டன.

1937-இல், சென்னை மாகாணத்தில் 1935ஆம் ஆண்டைய இந்திய அரசுச் சட்டப்படி நடைபெற்ற முதலாவது தேர்தலில் நீதிக்கட்சிக்காரர் 21 பேரே வென்றனர்; படுதோல்வி கண்டனர். காங்கிரசின் சுய ராஜ்யக் கட்சியினர் 159 பேர் வென்றனர். மொத்தம் உள்ள 215 பேரில் காங்கிரசுக்காரர்களே மிகப்பெரும் பான்மையினர்.

காங்கிரசுக்காரராகவும் காந்தியாரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கிய சக்கரவர்த்தி இராசகோபா லாச்சாரியார் தேர்தலில் போட்டியிடவில்லை; எனவே மாகாணச் சட்ட அவை உறுப்பினராக இல்லை.

ஆனால் மேலவை உறுப்பினராக ஆகி, கொல்லைப் புறவழியில் நுழைந்து, அன்றையப் பிரதமர் (Premier) பதவியை அவர் அடைந்தார்.

இந்தியா விடுதலை பெற்றால் - இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி வரவேண்டும் என்று முதன் முதல் சொன்னவர் காந்தியார். அதை வழிமொழிந்த வர் புதுமைப் பாவலர் சுப்பிரமணிய பாரதியார்.

இந்தியாவிலிருந்த அன்றைய மற்ற மாகாணக் காங்கிரசு ஆட்சிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்று மொழி. காந்தியாரின் இந்தி மொழிக் கொள்கையை ஏற்று, மற்ற அந்த மாகாணத்தார் அவர வர் மாகாணப் பள்ளிகளில் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாகத் திணித்தனரா? இல்லை; இல்லை; இல்லை.

ஆனால், சென்னை மாகாணத்தில் மட்டும் சி. இராசகோபாலாச்சாரியார் 6ஆம் வகுப்பு முதல் - அரசுப் பொதுத் தேர்வுக்குரிய கட்டாயப் பாடமாக இந்தியைத் திணித்தார்.

ஆரியக் கொள்கையைக் கல்வியில் புகுத்துகிற உள்நோக்கத்துடன் தான் ஆச்சாரியார் இந்தியைப் புகுத்தினார்.

“இந்தி” என்பது ஒரே வரி வடிவம் கொண்ட, ஒரே பேச்சு வழக்கைக் கொண்ட ஒரு மொழியாக இல்லை என்பதைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் “இந்தி பொது மொழியா?” என்கிற குறு நூலில் விளக்கி எழுதித் தமிழர்க்குப் போர் வாளாகத் தந்தார்.

அன்று அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்த் துறைத் தலைவராகவும் இந்திய தேசிய காங்கிரசுக் கொள்கைக் குன்றாகவும் விளங்கிய அஞ்சாத அரிமா சோமசுந்தர பாரதியாருக்கு, பிரதமர் ஆச்சாரியார் ஆங்கிலத்தில் நெடிய மடலை எழுதித் - “தேசியக் காங்கிரசு வாதியான ஒரு பேராசிரியர் எப்படி அரசின் இந்தி மொழித் திட்டத்தை எதிர்க்கலாம்?” என்றே கேட்டார்.

அரிமா நோக்குக் கொண்ட பாரதியார்-“தமிழ் நாட்டில் இந்திக்கு என்ன வேலை - என்ன தேவை?” என முகத்திலறைந்தாற்போல் பிரதமருக்கு விடை போக்கினார்.

“எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி

எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை

மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”

எனப் போர்ப் பரணி பாடிட, இந்தி எதிர்ப்புக் கால் நடைப் படைக்குப் போர்க்கருவியை ஈந்தார், புரட்சிக் கவிஞர்.

ஈ.வெ.ரா.வின் போர்ப்படைத் தளபதிகளான பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமியும், மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரும், வ.ப.தாமரைக் கண்ணியாரும் அடங்கிய இந்தி எதிர்ப்புப் படை, திருச்சியிலிருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரையை அடைந்தது.

கடல் மணற்பரப்பை மூடிவிட்டதுபோல் கடலெனத் திரண்டிருந்த தமிழர் பெருங்கூட்டம் ஆர்ப்பரித்து வரவேற்றது - இந்தி எதிர்ப்புப் படையை.

“தமிழ் வாழ்க!”, “இந்தி ஒழிக!” என்னும் முழக் கங்கள் முகிலைக் கிழித்துக் கொண்டு வானை முட்டின; கடல் அலைகளை அடக்கின.

மக்களின் மாபெரும் எழுச்சியைக் கண்டுதான்,

11-09-1938 அன்று “தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற நாட்டுப் பிரிவினை முழக்கத்தைத் தமிழர்க்குத் தந்தார், ஈ.வெ.ரா.

அன்றுதான் அவர் “தமிழர் தலைவர்” ஆனார்;

மக்கள் நெஞ்சங்களில் மறுபதிப்பு ஆனார், ஈ.வெ.ரா.

ஆயினும் என்ன?

ஈ.வெ.ரா.வை நன்கு அறிந்த பிரதமர் ஆச்சாரியார், கிஞ்சிற்றும் இறங்கி வரவில்லை.

இரண்டாம் உலகப் போர் வெடித்ததைக் காரண மாகக் காட்டி, எல்லா மாகாணங்களிலும் காங்கிரசு பதவி யிலிருந்து விலகியது. ஆச்சாரியார், கட்டாய இந்தி ஆணையை எடுக்காமலேயே பதவி விலகினார்.

ஆச்சாரியாரும், மாகாண ஆளுநரும், இந்திய அரசப் பிரதிநிதியும் (Viceroy)) நேரில் வேண்டிக் கேட்ட போதும், நீதிக்கட்சித் தலைவராக ஆன ஈ.வெ.ரா., மாகாணப் பிரதமராகப் பதவி ஏற்றிட ஒப்பவில்லை.

மாகாண ஆளுநரின் ஆணைப்படித்தான் கட்டாய இந்திப்பாடம் தமிழகத்தில் - சென்னை மாகாணத்தில் 21-2-1940இல் ஒழிந்தது.

1947 ஆகத்து 15-இல் வெள்ளையன் வெளியேறி னான்.

விடுதலை பெற்ற இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை, 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய சட்டப் பேரவையை (Central Legislative Assembly) வைத்து - அதையே அரசமைப்பு அவை (Constituent Assembly)) என மாற்றி, 9.12.1946 முதலே அரச மைப்புச் சட்ட நடவடிக்கைகளை இடைக்காலப் பிரதமர் நேரு தொடங்கினார்.

இந்தியா முழுவதிலும், அதை அன்று முதல் எதிர்த் தவர் ஈ.வெ.ரா. ஒருவரே; ஒரே அமைப்பு திராவிடர் கழகம் மட்டுமே!

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிட 13 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றுள் ஒன்றே அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு. அக்குழுவின் தலைவராக மேதை அம்பேத்கர் 29.8.1947இல் அமர்த்தப்பட்டார். ஆனால் அதற்கு முன்னரே நேரு தலைமையிலான ஒரு குழு, பெனிகல் நரசிங்கராவ் என்பவரை வைத்து, அரச மைப்புச் சட்ட முதலாவது வரைவை (First Draft) எழுதி அச்சிட்டு, அதை 18.10.1947-இல் அம்பேத்கர் கையில் தந்தனர். அதுவே முதலாவது அரசியல் மோசடி.

அடுத்த மோசடி என்ன தெரியுமா?

“இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி வேண்டும். அது இந்திதான்” என்பதை, அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவோ, அவையோ விவாதித்து முடிவெடுக்க வில்லை. அதற்கு மாறாக, காங்கிரசுக் கட்சியின் மத்திய சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டும் கூடி, தேசிய மொழி பற்றி விவாதித்து, ஒரு வாக்குப் பெரும் பான்மையை வைத்து, “இந்தியே இந்தியாவின் தேசிய மொழி” என்று முடிவெடுத்து, அதையே அரச மைப்புச் சட்டத்தில் நுழைத்தனர்.

இது இரண்டாவது மோசடி.

இதனை அம்பலப்படுத்திட வேண்டி, 1948-இல் குடந்தையில், பெரியார் நடத்திய இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம், காவல்துறையின் வன்கொடு மையைத் தாங்க முடியாமல், தற்காலிகமாக நிறுத் தப்பட்டது.

இந்தி போஜ்புரி, மைதிலி, கரிபோல்டி எனப் பல் வேறு பிரிவுகளைக் கொண்ட மொழி. இத்தனைப் பிரிவு இந்தி மொழிகளையும் பேசுவோர், இந்திய மக்களில் 42ரூ பேரே. மற்ற மொழிகளைப் பேசுவோர் 58ரூ பேர். அந்த இந்தி எப்படி ஆட்சிமொழி?

இவ்வளவையும் மீறித்தான், 1950 சனவரி 26 முதல் நடப்புக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 17ஆம் (XVII)) பகுதியில், “ஆட்சிமொழி - Offical Language” என்னும் தலைப்புடன், நான்கு “பிரிவுகளின் -Chapters”கீழ், விதிகள் 343 முதல் 349 முடிய உள்ளவை - “இந்திய அரசின் ஆட்சி மொழி (அ) அலுவல் மொழியாக, தேவநாகரி வரி வடிவில் உள்ள இந்தி இருக்கும்” எனக் கூறியது.

மேலே காணப்பட்ட ஏழு விதிகளில், எதிலும்-“இந்தி தேசிய மொழி -Hindi is the National Language” என்பதாக இல்லை.

அதாவது இந்தி மொழி இந்திய அரசின் 1) எல்லா நிருவாக அலுவலகங்களிலும்; 2) நாடாளுமன்றத்திலும்; 3) உச்சநீதிமன்றத்திலும் அலுவல் மொழியாக இருக்கும் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

இவற்றை அன்னியில், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது இணைப்பில் (Eighth Schedule) விதிகள் 344(1), 351-இன்படி, 1950 முதல் 2002 வரையில், 14 மொழிகளே இருந்தன. 2003இல் செய்யப்பட்ட 92ஆவது திருத்தத்துக்குப் பிறகு, 22 “மொழிகள்” பட்டியலிடப்பட்டுள்ளன.

இவை “பிராந்திய மொழிகள்” என்றோ, “மாநிலங் களின் மொழிகள்” என்றோ இங்கே குறிப்பிடப்பட வில்லை.

பகுதி – II என்கிற தலைப்பின்கீழ் மட்டும் - “பிராந்திய மொழிகள் -Regional Languages” என்று காணப்பட்டுள்ளது. இதன்கீழ் விதிகள் 345, 346, 347 உள்ளன.

இது மூன்றாவது மோசடி; இது ஓர் அவமானம்.

இந்த நிலையில் “மொழிகள்” என்கிற மேலே கண்ட பட்டியலில் “ஆங்கிலம்” என்பது இல்லை.

அப்படி இல்லாமலே “ஆங்கிலம்-இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில், இணை ஆட்சி மொழியாக இருக்கும்” என்று, “ஆட்சி மொழிச் சட்டம்” என்கிற நிருவாகச் சட்டம் இருக்கிறது.

இது நான்காவது மோசடி. ஏன்?

அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத ஆட்சி மொழிச் சட்டம் - ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க மட்டுமே பயன்படுமே அன்றி, இந்தி ஆட்சிமொழியாக ஆவதைத் தடுக்கப் பயன்படாது. இது உண்மை.

தமிழ்நாட்டுத் தமிழ் மாணவ மறவர்கள், 26.1.1965இல் தன்னெழுச்சியாக மேற்கொண்ட “இந்தி ஆட்சி மொழிச் சட்ட எதிர்ப்புப் போராட்ட மும்” - அதை முன்னெடுத்து முழுவீச்சில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மாபெரும் போராட்டமும் பெற்றுத் தந்த பெரிய வெற்றி இது. இதில் அட்டியில்லை.

ஆனால் இன்று நம் முன் உள்ள உண்மையான நிலைமை என்ன?

1) விதி 344(1)இல் கண்டபடி, 1955இல் ஒரு ஆய்வுக் குழுவை அரசு அமைக்க வேண்டும்; அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து - 1965இல் ஒரு தலை வரைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவில் - அட்டவணை 8இன்கீழ் காணப்படும் மொழிகளின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். அக் குழுவின் பணிகள் எவையெவை என்பதையும், அரசு ஆணை விளக்கிட (define) வேண்டும்.

விதி 344(2)இன்படி, அந்தக் குழுவின் கட்டாயக் கடமை என்பது - பின்கண்டவற்றைப் பற்றி ஆய்வு செய்து, தம் பரிந்துரைகளைக் குடிஅரசுத் தலை வருக்கு அளிப்பதே ஆகும்.

(அ)       இந்திய அரசுத்துறைகளின் அன்றாட அலுவலகப் பணிகளில் படிப்படியாக இந்தி பயன்படுத்தப்படுகிறதா?

(ஆ)      இந்திய அரசின் அலுவலகங்களில் அன்றாடப் பணிகளில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது கட்டுப் படுத்தப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு வருகிறதா?

(இ)       விதி 348இல் சொல்லப்பட்டுள்ள எல்லாப் பணி களிலும் அல்லது அவற்றுள் ஏதாவதொரு பணி யிலும் எந்த மொழியைப் பயன்படுத்தலாம்?

(ஈ)        இந்திய அரசின் ஒரு துறைப் பணியில் அல்லது பலதுறைப் பணிகளில் எந்த வடிவத்திலான எண்களைப் பயன்படுத்தலாம்?

(உ)       இந்திய அரசு அலுவலக அன்றாடப் பணிகளைச் செயல்படுவதற்கான ஆட்சி மொழி, மற்றும் ஒன்றிய அரசுக்கும் ஒரு மாநில அரசுக்கும் இடையே ஆன தொடர்புக்கான மொழி, ஒரு மாநிலத்துக்கும் இன் னொரு மாநிலத்துக்கும் இடையே தொடர்புக்கான மொழி எது என்பதைப் பற்றியும் குடிஅரசுத் தலை வருக்கு அறிக்கை தர வேண்டும்.

அப்படிப்பட்ட குழுவில் யார், யார் இருப்பார்கள்? மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?

விதி 344(4)இன்படி மக்கள் அவையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 உறுப்பினர்களும், மாநிலங்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பினர் களும் - ஆக மொத்தம் 30 உறுப்பினர்கள் இருப்பார்கள்.

கட்சிகள் பெற்றுள்ள உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ற விழுக்காட்டினர், ஒற்றை மாற்று வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இப்படித் தேர்வு செய்யப்பட்ட குழுக்களில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சியினரும் இடம் பெற்றிருந்தார்கள் அல்லவா?

இவர்களின் முயற்சிகளால் இன்றுவரை விளைந்த எதிர் வினைகள் யாவை?

எட்டாவது அட்டவணையில் கண்ட எல்லா மாநி லங்களின் மொழிகளையும் இந்திய ஆட்சிமொழிகளாக ஆக்குவது குறித்து ஆய்வு செய்திட இந்திய அரசு ஒரு குழுவை அமைக்கும் என்று, ஏற்கெனவே அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த ஆட்சி 1998இல் அறிவித்தது.

ஆனால், அது நடைபெறவில்லை.

2004இல் அமைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், கொள்கை அளவில், அப்படி ஒரு குழுவை அமைத்திட உறுதி கூறியது.

அதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் தீர்வுதான் என்ன?

1)            எட்டாம் அட்டவணையில் கண்டுள்ள 22 மொழிகளையும் இந்திய ஆட்சிமொழிகளாக - அலுவல் மொழிகளாக ஆக்கும் தன்மை யில் 343 முதல் 349 வரை உள்ள ஏழு விதி களையும் திருத்தம் செய்க!

2)            ஒவ்வொரு மாநில எல்லைக்குள்ளும் இயங்கு கிற அஞ்சல், தொலைப்பேசி, வருமான வரி, தொடர்வண்டி முதலான எல்லா இந்திய அரசுத் துறைகளிலும்; எல்லா உயர்நீதி மன்றங்களிலும் அந்தந்த மாநில ஆட்சி மொழியே, மய்ய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக-அன்றாட அலுவல் மொழி யாக இலங்கும் என்று உறுதி செய்து, மேற் கண்ட ஏழு விதிகளையும் திருத்தம் செய்க!

3)            மாநில அரசு, இந்திய அரசுடன் மாநில ஆட்சி மொழியின் வழியே தொடர்பு கொள்ளவும், அந்தந்த மாநில மொழியின் வழியே இந்திய அரசு விடை தரவும் வழி செய்க!

என்று நாம் கோருவதே தீர்வாகும் என, மா.பெ.பொ.க. கருதுகிறது.

இது, இந்தியா, தன்னாட்சி உரிமை பெற்ற மொழி மாநி லங்கள் ஒன்றாக இணைந்த ஒரு கூட்டாட்சியாக இயங்க வழிகோலும்.

பண அச்சடிப்பு, தொலைத் தொடர்பு, பாதுகாப்பு முதலான துறைகள் இந்தியா முழுமைக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

இந்தியா ஒரே நாடு என்று சாதனையாகக் கூறும் எந்தக் கட்சி ஆட்சியானாலும் - இந்தியா உடைபடாமல் இருக்க இத்தீர்வுகளை ஏற்கச் செய்திட வேண்டும். 

1.            எட்டாம் அட்டவணையில் கண்ட 22 மொழிக் காரர்களுக்கும் இப்படிப்பட்ட கருத்துக்கொண்ட வேண்டுகோளை அவரவர் தாய்மொழி (அ) ஆட்சி மொழியில் எழுதி நாம் விடுத்திடுவோம்.

2.            இத்தீர்வுக்கு உடன்படுகிற தமிழ்நாட்டில் உள்ள வர்கள் ஒரு குழுவாக இணைந்து, 22 மாநிலங் களுக்கும் நேரில் சென்று, இக்கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவோம்.

3.            22 மொழி மாநிலக்காரர்களையும் கொண்ட குழுவினர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 790 பேர்களுக்கும், மாநிலச் சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் 4200 பேர்களுக்கும் இவ்வேண்டு கோளை விடுப்போம்.

22 மொழிகளின் பகுதிகளிலும் இதுபற்றிய புரிந் துணர்வு பெற்றோர் - இந்திக்கு எதிராக உறுதியாக ஒன்றிணைவர்.

இந்திக்கு எதிர்ப்பு மிகவும் வலுப்பெற்றால் தான், எந்தக் கட்சி இந்திய அரசும் அஞ்சும்; இறங்கிவரும்.

இப்படியெல்லாம் செய்யாமல், தமிழர்கள் மட்டும் தனித்துப் போராடியோ, இரண்டொரு மாநிலத்தினர் இணைந்து போராடியோ, இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுக்க இயலாது என மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சி தெளிவாகவும் உறுதியாகவும் கருதுகிறது.

 

Suba.T.

unread,
Apr 11, 2015, 3:28:42 AM4/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
நல்லதொரு பகிர்வு டாக்டர். கணேசன்.
நிதானமாக வாசித்து பின்னர் கருத்து பகிர்ந்து கொள்கின்றேன்,

சுபா

செல்வன்

unread,
Apr 11, 2015, 3:31:02 AM4/11/15
to mintamil

2015-04-10 18:04 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
மருத்துவர் என்பதற்கு நிகரான டாக்டர் என்கிறீர்களா?  

கலைஞருக்குக் கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம்  முனைவரைக் குறிக்கும் பட்டம்தான் [கௌரவ  Ph.D பட்டம்தான்].


அல்ல...அது பிஎச்டி அல்ல. டி.லிட் பட்டம் (doctor of literature)

--

N D Logasundaram

unread,
Apr 11, 2015, 8:32:22 AM4/11/15
to mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, ara...@gmail.com, Raji M, podhuvan sengai

முகமதியர்களை "சாஹேப்" என்று அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.  அதுவும் தற்பொழுது குறையத்துவங்கி உள்ளது.



ஆனால் நான் தில்லி 10 ஆண்டுகள்   பணியில் இருந்த காலத்து ஜனா ப் எனும் சொல்லையும்  முகமதியர்களுக்குப் பயன் கொள்வர் 

அதுபோல் சீக்கியர்களுக்கு கியனிஜி எனவரும் 

சாஹிப் என்பதே தமிழி சாயபு எனவரு கின்றது 

அன்புடன் 

நூ தா லோ சு 
மயிலை 

N. Ganesan

unread,
Apr 11, 2015, 8:50:12 AM4/11/15
to mint...@googlegroups.com


On Saturday, April 11, 2015 at 5:32:22 AM UTC-7, selvi...@gmail.com wrote:

முகமதியர்களை "சாஹேப்" என்று அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.  அதுவும் தற்பொழுது குறையத்துவங்கி உள்ளது.



ஆனால் நான் தில்லி 10 ஆண்டுகள்   பணியில் இருந்த காலத்து ஜனா ப் எனும் சொல்லையும்  முகமதியர்களுக்குப் பயன் கொள்வர் 

அதுபோல் சீக்கியர்களுக்கு கியனிஜி எனவரும் 

சாஹிப் என்பதே தமிழி சாயபு எனவரு கின்றது 

சஹஸ்ரம் என்னும் சொல் சாயிரம்/ஆயிரம் என திராவிட மொழிகளில் ஆவதுபோல.

நா. கணேசன்

Malarvizhi Mangay

unread,
Apr 11, 2015, 9:46:01 AM4/11/15
to mint...@googlegroups.com

கடிபோலி என்ற பேச்சு மொழி  சமஸ்கிருதவரிவடிவினைப் பெற்று இந்தி உருவானதா? கடிபோலி _இந்தி ஆனதற்குத்
தக்க சான்றாதாரங்கள் தேவை ஐயா.

க்ருஷ்ணகுமார்

unread,
Apr 11, 2015, 11:56:06 AM4/11/15
to mint...@googlegroups.com
நான் கேழ்க்க நினைத்ததை நீங்கள் கேட்டு விட்டீர்கள்.

அன்பின் ஸ்ரீ அரிசோனன் அவர்கள் பகிர விழையும் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்!!

N. Ganesan

unread,
Apr 11, 2015, 12:06:32 PM4/11/15
to mint...@googlegroups.com


On Saturday, April 11, 2015 at 8:56:06 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
நான் கேழ்க்க நினைத்ததை நீங்கள் கேட்டு விட்டீர்கள்.

அன்பின் ஸ்ரீ அரிசோனன் அவர்கள் பகிர விழையும் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்!!

1937-ல் தமிழறிஞர் விளக்கியுள்ளாரே. நூல் வேண்டுமா?

நா. கணேசன்

க்ருஷ்ணகுமார்

unread,
Apr 11, 2015, 12:13:48 PM4/11/15
to mint...@googlegroups.com
அன்பின் ஸ்ரீ நூ த லோ சு ஐயா,

ஜெனாப் என்பது மரியாதைக்குரிய என்று சுட்டும் அடைமொழி.

ஜம்மு காஷ்மீரத்தில் நான் இருந்த போது என்னையும் ஜெனாப் என்றே விளிப்பர். முதலில் ஷாக்காக இருந்தது.  எனக்கு தாடி கீடி வந்து விட்டதோ என்று நினைத்துக்கொள்வேன். அல்லது விளிப்பவர் முஸ்லீமா என்று பார்க்க விழைவேன்.

ஆயினும் பின்னர் தெரிந்தது அன்புடன் மரியாதை மிக பிறிதொருவரை அடைமொழியுடன் விளிப்பதற்கு அவர்கள் ஜெனாப் என்ற சொல்லைக் கையாளுகிறார்கள் என்று.

சாஹிப் என்பதும் அப்படியே.

சீக்கியர்களைப் பொதுவாக சர்தார்ஜி என்று மரியாதையுடன் சீக்கியர்களும் மற்றையோரும் அழைப்பர்.

அவர்களுடைய புனித நூலான குரு க்ரந்த சாஹேப் ஜீ ஐ முறைப்படி கற்றுத் தேர்ந்தவர்களுக்கு **கியானி ஜி** என்று பட்டம் வழங்கப்படுகிறது. எப்படி குரான்-ஏ-கரீமை கற்பவர்களுக்கு மௌலவி என்று பட்டம் வழங்கப்படுகிறதோ அப்படி. பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ கியானி ஜைல்சிங்க் அவர்கள் மத நூல் கற்று **கியானி** என்று பட்டம் பெற்றவர்.பள்ளிப்படிப்பு படிக்காதவர்.

பா ஜி ( paa ji ) என்றும் பொதுவில் பஞ்சாபியர் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் அழைப்பதுண்டு.

துரை.ந.உ

unread,
Apr 11, 2015, 12:24:46 PM4/11/15
to Groups
2015-04-11 4:55 GMT+05:30 பழமைபேசி <pazam...@gmail.com>:
அதுதானுங்க அய்யா.... டாக்டர் கலைஞர்னுதானே எல்லாரும் சொல்கிறார்கள்?? அதைப்போல பேச்சுவாக்கில் செல்வன்பையா, நேருஜி, காந்திஜி, பாபு ஜெகஜீவன்ராம்ஜியைப் போல இங்கயும் பாவிச்சிட்டாரு. இதுல விட்ருலாமுங்யா... இன்னொன்னுல சிக்குவாரு எப்படியும்... பிடிச்சிடலாம்!!

​ப.பே :)))செல்வன் அண்ணாச்சி:))))
​​

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Malarvizhi Mangay

unread,
Apr 11, 2015, 12:27:14 PM4/11/15
to mint...@googlegroups.com

Wise manhoods thinks. ALIKE.

N. Ganesan

unread,
Apr 11, 2015, 12:38:19 PM4/11/15
to mint...@googlegroups.com


On Saturday, April 11, 2015 at 9:24:46 AM UTC-7, துரை.ந.உ wrote:


2015-04-11 4:55 GMT+05:30 பழமைபேசி <pazam...@gmail.com>:
அதுதானுங்க அய்யா.... டாக்டர் கலைஞர்னுதானே எல்லாரும் சொல்கிறார்கள்?? அதைப்போல பேச்சுவாக்கில் செல்வன்பையா, நேருஜி, காந்திஜி, பாபு ஜெகஜீவன்ராம்ஜியைப் போல இங்கயும் பாவிச்சிட்டாரு. இதுல விட்ருலாமுங்யா... இன்னொன்னுல சிக்குவாரு எப்படியும்... பிடிச்சிடலாம்!!

​ப.பே :)))செல்வன் அண்ணாச்சி:))))
​​

தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து 
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.

More here,
N. Ganesan

பழமைபேசி

unread,
Apr 11, 2015, 12:53:32 PM4/11/15
to mint...@googlegroups.com
சிமிழ்த்தலும் படமும் நன்று! இஃகிஃகி!!

N. Ganesan

unread,
Apr 11, 2015, 1:17:38 PM4/11/15
to mint...@googlegroups.com, vallamai


On Saturday, April 11, 2015 at 9:53:32 AM UTC-7, பழமைபேசி wrote:
சிமிழ்த்தலும் படமும் நன்று! இஃகிஃகி!!

நாம கண் நிமையைச் சிமிட்டுவது போல,
சிறுவனை ப்ளஸ்டிக் கூடை சிமிழ்த்துவதை
துரை காட்றாரு.

N D Logasundaram

unread,
Apr 11, 2015, 3:43:33 PM4/11/15
to mintamil
சான்றுகள் என எதனைத்  தரமுடியும் இவை மக்கள் ஆங்காங்கே திட்டு திட்டக பயன்கொண்டது  பொதுவாக சொலவதாகத் தான் எவராலும் முடியும் 

மலைவாழ் மக்களின் மொழி களில் சிறு சிறு கூட்டத்தினர் இடை பேசியவை தங்கலுக்குளொன்று அடுத்த குழுவிவினருடன் சிரறி த்து மாறுபட்டு வரும்

டெஹ்ரி கார்வால் பகுதி என்றால் டெஹ்ரி மக்கள் பேசுவதை கார்வலிகள் புரிந்து கொள்வது சிறிது கடினம் நேபாளி என்றால் மேலும் மாறுபடும் 

அரசரின் கீழ் பலவகநாட்டு மக்களும் கூடுகின்றனர் அவரவர் தெரிந்ததை பேசுகின்றனர் இப்போது கூட மதுர பக்கங்களில் உள்ளோர் பேசுவதை பிரிஜ் பாஷா எனப்பெயரிட்டு உள்ளனர் ஹரியானா என்ற மாநிலமே புதிதாகப் பெயரிடப்பட்டது  பச்சைப் பசேல் என இருப்பதால் ஆனால்  மனதிற்குள் ஹரி எனும் பெயர் தோன்ற வைக்கப்பட்டது இப்போது ஹரியானி என ஒன்றைக் குறிக்கின்றனர் எல்லாம் கலப்பாக கலப்பக் ஒவ்வொருவரும் தனக்கு தனக்கு தெரிந்த ஒன்றை பெயரிட்டுச் செல்கின்றனர் 

துளசி தாசர் எழு தியது ஹிந்தி என்றார்கள் அது எப்படி ஹிந்தி ஆகும் அது போஜ்புரியில்தான் என்பார்கள் இலல்லை அவதி என்பர்கள் துளசிதா சரோ மக்களுக்கு தெரிந்த மொழ்ச்ஹியில் எழுத வேண்டும் அப்போதுதான் மக்களிச் சென்றடையும் என ஜனரஞ்சகமாகப் பாடினார் இது காசி நகரத்து பண்டிதர்களுக்குப் பிடிக்காது அனால் அவர்களது சிறப்பானது என அவர்களெ ச்சொல்லிக்கொல்வது சீர் திருத்தம் செய்யப்பட்டது (சமஸ்கிருதம்) என்பதை  மக்கள் ஏற்கவே இல்லை அவர்களும் கவலைப்படவி ல்லை ஆகவேதான் இன்னும் சமஸ்கிருதம் என்பதை யாரும் பயன் கொள்வதில்லை  கிருஷ்ணகுமார் போன்ற  highly biosed  ( கிண்டலடிக்க வில்லை அவர் பெயரை பயன்கொண்டல்தான் உடன் புரியும் என் வைக்கின்றேன் அவ்வளவே மன்னிக்க)  ) சம்ஸ்கிருத வாதிகள் எதோ சமஸ்கிரிதம் தான்  எல்லாவற்றிற்கும் தாய் அதிலிருந்துதான் எல்லாம் வந்தது எனும் மாயை மட்டுமாள்ள முழுக்க பொய்யைப் பேசுவார்கள் சமசுகிருதம் என மொழிதனியாக திடீரென்று ஒரு பெட்டியிளிருந்தோ அல்லது ஓர் நா ட்டிளிந்தோ வரவில்லை அங்காங்கே இருந்த பிரகீருத மொழிச் சொற்களை சிறுது சிறிது மாற்றி தங்கள் குழுவினர்க்குள் மட்டும் புரியவேண்டும் மற்றவர்களுக்கு புரியவும் கூடாது என்றும் கூட வரை அறுத்து வைத்தது கொண்டது சமசுகிருதம் பிரகிருதமும்  என்பதும் ஒன்றல்ல  பரந்த நிலப்பகுதியில் அங்காங்கே வேறுபாடு மாறுபாடு களுடன் இயங்கியது அவற்றில் இருந்த சொற்களை மாற்றி அமைத்துக்கொண்டு ஏழுதி  வந்தா தை  சிலகலத்திற்குப்பின் சமசுகிருதம் தான் தாய் இதனிலிருந்து மற்றவை வந்தான எனும் முழுப்பொய்யை பரப்பலானர்கள் இவ்வரிகள் எவரையும் சிறிது படுத்த எழுதப்படவில்லை  யதார்த்மான் மெய்யன்வற்றை த்தான்  வைத்தே ன்   ஆகையால்தான் தமிழ் சொற்கள் அதனில் உள்ளன 

  

அரசாண்ட முகமதியர்கள் பயன்கொண்டது உருது  இலக்கிய மொழி யாகினும் மிகச் சாதாரண  எழுதப் படிக்கத் தெரியாத கடை நிலை ஊழியர்களின்  போர்வீரர் களின் வாக்கில் வழங்கிய திரிந்த உருதுவுடன்  அங்காங்கே வாழ்ந்த மக்களின் வாய்வழக்கில் இருந்த கலப்பு மிக்க பிராகிருதம் ஆ னால்  ஏதேனும் தனித்த பெயர் கொண்டும் அழைக்கலாம்  மார்வார் தேசத்தில் மார்வாரி மேவர் நாட்டில் மேவா ரி நேபாளப் பகுதியில் நேவா ரி  
இன்றைய ஹிமாச்சலப் பிரதேசத்தில் டாங் க்ரி பிகாரில் போஜ்பூரி  என பலவேறு வட்டாரமொழி சொற்கள் கலந்தது உருவாகியுள்ளது எனலாம்   

பேசுவதோ எழுதுவதோ இந்த மொழி என எ ப்படி கூற முடியும் அதன் வாக்கிய அமைப்பு வழிதான் இன்றைய தொலைக்கட்சிகளி பேசுவது தமிழ் என்கிறார்கள்  அனால் அதனில் உள்ளதோ நூறில் 75 சொற்கள் ஆங்கிலம் அனால் தமிழ் இயல் வழி தொடங் கி தமிழில் வாக்கிய அமைப்புகொண்டு முடியும் அதனதன் தமிழ்ஆ கின்றது உண்மையில் அதனில் உள்ளவை பற்பல்  ஆங்கிலச் சொற்கள்  அதுபோலத்தான் இந்தியில் வாக்கிய அமைப்பு உருதுவில் உள்ளது வேடிக்கையாக சொல்வார்கள்  கடைசியில் ஹாய் போட்டுவிட்டால் ஹிந்தி ஆகிவிடும் என்று  

ஈவே இந்தியாவில் இந்தியமொழி பெரிதும் ஆளவில்லை 75 சதம்  வேற்று  நாட்டிலிருந்த வந்த மொழிஆட்சியில் உள்ள  மொழிதான் உள்ளது 

இந்தி இந்தியாவின்  மொழி என்பதே தவறு உருது வுடன் உள்நாட்டு மொழிகள் கலந்து உள்ளன  வாக்கிய அமைப்புவழி உருதுதான் என்வே இந்தி இந்திய மொழி ஆகாது 


அரசாங்கக மொழியாக இருந்ததால் உருது சொற்கள் அவைகளை ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டிலும் பரப்பி விட்டனர்  நீதி மன்றம் வருவாய்த்துறை போன்றவற்றில் காணும் ஜில்லா  பிர் கா தா லுக்கா  பசலி ஜமீன்  ஜாமீன் வக்காலத்து  போ ன்றவை 

Oru Arizonan

unread,
Apr 11, 2015, 5:04:58 PM4/11/15
to mintamil
மலர்விழி மங்கை அவர்களே,

நான் தட்சிண பாரத் ஹிந்தி பிரசார் சபா நடத்தும் பிரவேஷிகா வகுப்பு பயில்ம்போது, இந்தியின் வரலாறு [ஹிந்தி கா சரித்திர] என்ற இந்திப் புத்தக்ம்உம பாடநூல்.  அதில் தற்கால இந்தி எப்படி உருப்பெற்றது என்று விளக்கி உள்ளார்கள். 

அபப்ரம்ஷ் ==> ப்ராசீன் ஹிந்தி ==> ஹிந்துஸ்தானி ==> ஹிந்தி என்று கொடுத்துள்ளார்கள்.  

பலவிதமாகப் பேசப்பட்ட ஹிந்தியில் [மைதிலி, புன்தேல்கண்டி, வ்ரஜபாஷா, மார்வாடி] இவை எல்லாம் தற்கால் இந்திக்குள் அடக்கம்.

தில்லி அருகே பேசப்பட்ட கடிபோலி என்ற கூற்றுவழக்கு வாரணாசியைச் சேர்ந்த  "பாரதேந்து ஹரிச்சந்திர" அவர்களின் தாய்மொழி.  தனது மொழி சிறந்து விளங்கவேண்டும் என்பதர்காகே, தந்து சொத்து முழுவதையும் செலவழித்து, வடஇந்தியாவிலுள்ள புலவர்கள், அறிஞர்களை ஒன்று திரட்டி, கடிபோலியில் (Modern Hindi) சிறந்த காவியங்களையும் எழுதச் செய்தார்.  அவரும் ஒரு சிறந்த எழுத்தாளர், நாடக கர்த்தா.

அதனாலேயே அவரை தற்கால இந்தியின் தந்தை [Father of Modern Hindi] என்றும் அழைப்பதுண்டு.

" inaugurated a vibrant and serious Hindi theatre virtually single-handed.'

மேலும் இந்திப்புத்தகங்களின் சுட்டிகள் வேண்டுமேன்றால்ம் தருகிறேன்.

பாரதேந்து ஹரிச்சந்திரா இல்லையென்றால் இந்தி இந்த அளவுக்குப் பிரபலம் அடைந்திருக்காது. 


"After the tenth century, several Sauraseni d ialects were elevated to literary languages, or khari boli("standing dialects"), including Braj BhashaAwadhi and the language of Delhi; the latter still goes by the name Khari Boli in the rural areas outside the city of Delhi itself."

"The dialect of Hindustani on which Standard Hindi is based is Khariboli, the vernacular of Delhi and the surrounding western Uttar Pradesh and southernUttarakhand . This dialect acquired linguistic prestige in the Mughal Empire (1600s) and became known as Urdu, "the language of the court". In the late 19th century, the movement standardising a written language from Khariboli, for the Indian masses in North India, started to standardise Hindi as a separate language from Urdu, which was learnt by the elite. In 1881 Bihar accepted Hindi as its sole official language, replacing Urdu, and thus became the first state of India to adopt Hindi.

After independence, the government of India instituted the following conventions:

  • standardisation of grammar: In 1954, the Government of India set up a committee to prepare a grammar of Hindi; The committee's report was released in 1958 as "A Basic Grammar of Modern Hindi"
  • standardisation of the orthography, using the Devanagari script, by the Central Hindi Directorate of the Ministry of Education and Culture to bring about uniformity in writing, to improve the shape of some Devanagari characters, and introducing diacritics to express sounds from other languages.

The Constituent Assembly adopted Hindi as the Official Language of the Union on 14 September 1949. Hence, it is celebrated as Hindi Day."


ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Apr 11, 2015, 5:16:04 PM4/11/15
to mintamil
எனக்கு ஒரு சிறு சந்தேகம்:

இந்த இழையின் தலைப்பு, " தமிழும் தனித்தமிழும் !"ஆ, அல்லாது,  "இந்தியின் வரலாறா?"

நான் மேகலா அவர்களுக்கு "ஜி" என்ற விகுதி ஏன் என்று நொந்துகொண்டது இப்படி இழையையே புரட்டிப்போட்டுவிட்டதே என்று மிகவும் வருந்துகிறேன்.  

மீண்டும் இழையை அதன் நோக்கமான "தமிழும், தனித் தமிழும்" என்ற தலைப்புக்குக் கொணர்வோமா?

ஒரு விதத்தில் ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் மொழியின்பால் உள்ள முயற்சிகொள் அன்பும், வட இந்தியர்களுக்கு அவர்கள் ஆங்கிலத்திற்கு எதிராக இந்தியாவைத் தங்கள் வசம் வைத்திர்க்க உதவும் என்று வலிந்து முன்னேற்றிய மொழியான [தங்கள் தாய்மொழி இல்லது போனாலும்] "இந்தி"யின்பால் உள்ள பிடிப்பும் தமிழர்களுக்கு இல்லாதது போனது அவலமே!  நாம் நம்மை நாமே பிளந்து, பிரித்தக்  கொள்[ல்]வதில்தான் நமது முழு நேரத்தையும் செலவிடுகிறோம் என்பதும் வருந்தற்குரியதே.

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Apr 11, 2015, 6:59:08 PM4/11/15
to mintamil
இன்னும் ஒரு சான்றையும் கொடுத்து விடுபடுகிறேன்:

Evolution of Hindi: From 'boli' (dialect) to 'rashtrabhasha'-'rajbhasha' (National-Official Language)

18ம் நூற்றாண்டுவரை வேறு கூற்றுமொழியாகவே இருந்தது "கடிபோலி".

Oru Arizonan

unread,
Apr 11, 2015, 6:59:50 PM4/11/15
to mintamil
18ம் நூற்றாண்டுவரை வெறும் கூற்றுமொழியாகவே இருந்தது "கடிபோலி" என்று திருத்திப் படித்துக் கொள்ளுங்கள்.

க்ருஷ்ணகுமார்

unread,
Apr 12, 2015, 1:24:21 AM4/12/15
to mint...@googlegroups.com
\\ மீண்டும் இழையை அதன் நோக்கமான "தமிழும், தனித் தமிழும்" என்ற தலைப்புக்குக் கொணர்வோமா? \\

மிக நல்ல கார்யம் ஸ்ரீ அரிசோனன். மடைமாற்றப்பொங்கலில் நானும் ஊடாலே பொங்கியிருக்கிறேன்.  

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் *அ* என்ற சம்பந்தம் உண்டே என்று.............. நான் பகிர்ந்த விஷயங்களுக்கும் இந்த இழைக்கும் சம்பந்தம் உண்டு என்று ..............என் கைகளை கால் வரை இறக்கி பின்னர் முதுகு வழியாக மேலே கொண்டு சென்று தலைக்கு மேல் உயர்த்தி பின் கீழிறக்கி மூக்கைத் தொடும் படிக்கான shortest root ல்........... இந்த சம்பந்தத்தை நிறுவலாம் தான்.

\\  கிருஷ்ணகுமார் போன்ற  highly biosed  ( கிண்டலடிக்க வில்லை அவர் பெயரை பயன்கொண்டல்தான் உடன் புரியும் என் வைக்கின்றேன் அவ்வளவே மன்னிக்க)  ) சம்ஸ்கிருத வாதிகள் எதோ சமஸ்கிரிதம் தான்  எல்லாவற்றிற்கும் தாய் அதிலிருந்துதான் எல்லாம் வந்தது  \\

அன்பின் ஸ்ரீ நூ த லோ சு ஐயா  அடியேனுக்கு சம்ஸ்க்ருத ஞானமோ தமிழ் ஞானமோ கிடையாது எனத் தெள்ளெனத் தெளிவாக இங்கு கருத்துப் பகிர்ந்திருக்கிறேன்.  ஆனால் எனக்குத் தெரிந்த விஷயங்களில் தெரிந்த வரைக்கும் நிச்சயமாக உறுதியான கருத்துக்களை முன்வைக்கிறேன். தகுந்த காரணங்களுடன் அவை மறுக்கப்பட்டால் நிச்சயமாக அவற்றை பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்வதில் எனக்கு தயக்கமும் கிடையாது. பல சந்தர்ப்பங்களில் இங்கு அது நடந்தும் உள்ளது. ஆனால் காரணமில்லாமல் உரக்கச் சொல்வதாலேயே ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. சம்ஸ்க்ருதம் தான் எல்லாவற்றிற்கும் தாய் என்ற படிக்கான கருத்தை நான் இந்தக் குழுவிலோ வேறு எங்குமோ பகிர்ந்ததில்லை.  ஏனென்றால் இது பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது என்பதால்.  

ஆனால் சம்ஸ்க்ருதம் மட்டுமின்றி பாரதத்தில் பல மொழிகளினூடே கருத்தொற்றுமை இருக்கிறது............. பல சமயங்களினூடே கருத்தொற்றுமை இருக்கிறது........... பல மதங்களினூடே கருத்தொற்றுமை இருக்கிறது............. பல பூகோளப் பரப்புகளிடையே கருத்தொற்றுமை இருக்கிறது............... பல் வேற்றுமைகளுக்கிடையேயும் ..........என்பதில் எனக்கு ஆழ்ந்த ஒரு புரிதல் உண்டு. அதை நிச்சயம் அழுத்தம் திருத்தமாக பகிர விழைகிறேன்.

 தமிழகத்தை விட்டுப் புலம் பெயர்ந்ததும் எனக்குத் தமிழுடனான தொடர்பு பெரும்பாலும் திருப்புகழும் கொஞ்சம் நாலாயிரமும் மட்டுமே.  அதில் எனக்குக் குறையேதுமில்லை.  இப்போது இங்கும் ............. தமிழ் ஹிந்து தளத்தில் சில ஈழத்து அன்பர்கள் மற்றும்  எனது பெருமதிப்பிற்குரிய முனைவர் ஸ்ரீ முத்துகுமாரசுவாமி மஹாசயர் வாயிலாக............. தமிழ் இலக்கியங்கள் பற்றியும்.......... திருமுறைகள் பற்றியும் .............. திருப்புகழை சைவ சித்தாந்தப்படி அறிவதையும்........ தொடர்கிறேன்.  

அதைத் தவிர நான் அன்றாடம் பாரயணம் செய்து வரும் ராமாயண பாகவதாதி க்ரந்தங்களில் நான் வாசித்ததில் பகிரத் தக்க விஷயங்களை பகிர விழைகிறேன்.

சுருங்கச் சொல்ல வேண்டுமானால் என் தரப்பிலிருந்து அழுத்தம் திருத்தமாக நான் ஒரு பாரதவாதி.  இதில் எனக்கு மிக்க பெருமிதமே. 

\\ கிருஷ்ணகுமார் போன்ற  highly biosed \\  ............  Dear sir, thats a subjective statement and with due respects I too can ........................

தாங்கள் சொன்ன சில கருத்துக்களில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு.  

மானக் ஹிந்தி (Standard Hindi) மற்றும் ராஜ்பாஷா ஹிந்தி........... புழக்கத்தில் உள்ள ஹிந்தி இதற்கான வேற்றுமைகளை அனுபவ பூர்வமாக நான் அறிந்துள்ளதால் இங்கு பகிர முயற்சித்தேன்.

ஆனால் அன்பின் ஸ்ரீ அரிசோனன் அவர்கள் சுட்டிக்காட்டிய படி இந்த இழையில் இந்தக் கருத்தைப் விவாதிக்க விழைவது நிச்சயம் நேர்மையான செயல்பாடு ஆகாது. தற்போது எனக்கு அவகாசமும் இல்லை. அவகாசம் கிட்டும் போது நிச்சயம் கருத்துக்களைப் பகிர விழைகிறேன் ஐயா.

Malarvizhi Mangay

unread,
Apr 12, 2015, 1:34:42 AM4/12/15
to mint...@googlegroups.com

தகவலுக்கு நன்றி.

Dev Raj

unread,
Apr 12, 2015, 2:05:10 AM4/12/15
to mint...@googlegroups.com
On Saturday, 11 April 2015 14:16:04 UTC-7, oruarizonan wrote:
மீண்டும் இழையை அதன் நோக்கமான "தமிழும், தனித் தமிழும்" என்ற தலைப்புக்குக் கொணர்வோமா?

ஐயா சொன்னால் அப்பீல் கிடையாது !

'பழகிப் போய்விட்ட சில சொற்களை மிகச் சிரமப்பட்டு மாற்றிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதற்காக பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்வது தேவையற்ற ஒன்று என நான் வாதிடவும் இல்லை. கட்டுமரம் என்ற சொல்லை, ஆங்கிலத்தில் 'கட்டமரான் ' என எடுத்துக் கொள்ளவில்லையா ? அதுபோல காபி என்பது பிறமொழிச் சொல்லாக இருப்பினும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. 'காபி ' போன்ற சில சொற்களுக்கு விதிவிலக்கு தரலாம். தனித்தமிழ் என்பது, கோர்ட் நீதிமன்றம் ஆகலாம்! ஜட்ஜ் நடுவராகலாம். ஜட்ஜ்மெண்ட் தீர்ப்பு ஆகலாம். அதற்காக தீர்ப்பு எழுதப் பயன்படுத்தும் பேனா 'மூடியிட்ட எழுதுகோல் ' ஆகத் தேவையில்லை - இதுவே என் கருத்து. ' - சொன்னவர் தமிழின்பால் ஆழ்ந்த ஈடுபாடுடைய திரு.மு.கருணாநிதி.

 


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages