இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்
பண்டைக் காலத்தே ஏழு தமிழ்க் கழகங்கள் செயற்பட்டதாக மகாவமிசம் குறிப்பிடுகின்றது. மேலும், இற்றை மதுரை நகரம்தான் மூன்றாம் தமிழ்க் கழகத்தை ஓம்பியது (hosted) என்பது நிறுவப்பட வேண்டியுள்ளது. கழக(சங்க) இலக்கியங்கள் வண்ணிக்கின்ற விந்திய மலைக்குத் தெற்கே கிடக்கின்ற நிலத்தையும் தீவுகளையும் குறிப்பறிவது ஆர்வமூட்டவதாய் உள்ளது, இது இலெமூரியாக் கண்டத்தினுட்படுவதாகலாம். அதன் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
தமிழகமும் இந்தியப் பேராழியும்
இந்தியப் பேராழியின் திரிவாக்கம் (Evolution of Indian Ocean):
இலெமூரியர்கள் :
In the pre-historic past the entire North India – that is, the entire area north of the Vindhya Hills up to Tibet – was under the sea. The area south of the Vindhyas, the present Arabian Sea, South Africa, Australia and Southeast Asia formed the Gondwana archipelago. The Austrics inhabited the southern portion of Gondwanaland, the Negroes inhabited the southwestern portion and the Austrico-Negroids, the Dravidians of today, inhabited the central portion. The bio-racial structure of different ethnic groups indicates the race to which they belong.
by P R Sarkar, January 1970 RU, Patna, Published in: Prout in a Nutshell Part 21 , chapter: How to Unite Human Society
சேசாத்திரி
2012/10/15 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
அய்யா,//வணக்கம். தங்கள் கட்டுரை மிகவும் அருமை. பெரும்பாலனவர்க்கு இது பற்றித் தெரியாது//.இது பேராசிரியர் சா. குருமூர்த்தியின் கட்டுரை. நான் தமிழில் மொழி பெயர்த்தேன் அவ்வளவே.உங்கள் கட்டுரையில் எனக்கு 2 சந்தேகங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு//இலெமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்றா அல்லது வேறு வேறா ?//இலெமூரிய என்பது மேலை அறிஞர்களது கருத்தாக்கம். குமரிக் கண்டம் என்பது தமிழ் இலக்கியக் குறிப்பீடு. நிலப் பரப்பளவு வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம் மற்றபடி குமரிக் கண்டம் என்பது இலெமூரியாவின் ஒரு பகுதி என்பதில் தவறு இல்லை.//35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கோண்ட்வானா நில நடுக்கத்தால் சிதறிய போது இலமூரியா உருவானது. இதில் தென் இந்தியாவும், கிழக்கிந்திய தீவுகளும் தென்னிந்தியாவிற்குத் தெற்கே நில நடுக்கோடு வரை கடலுக்குள் மூழ்கிப்போன நிலப் பகுதிகளும் தென் ஆப்பிரிக்காவும் அடங்கும்.இலெமூரியாக் கண்டர் சிதைவுக்குப் பின் இந்தியா, பகுசுத்தான் மற்றும் தக்காணத்திற்குத் தென்பாலுள்ள பகுதிகளையும், வங்கம் - அரபிக்கடலுள்ள தீவுகளையும் அவை சார்ந்து கடலுக்குள் மூழ்கிப் போன நிலப் பகுதிகளையும், இந்துக் கடலுள் தமிழகம் சார்ந்த நிலப் பகுதிகளையும் அந்நிலப்பகுதி மாலத்தீவைத் தொடர்ந்து மடகாசுக்கர் வரையுள்ள நிலப்பகுதிகளையும் தமிழகத்தின் கிழக்கே சந்தா தீவு வரை நீண்டு கிடந்த நிலப்பகுதியையும் கொண்டதையே குமரிக்கண்டம் என்று கூறுகிறார்கள். //இலெமூரியா என்பது ஒன்றிணைந்த ஒரு பெருங் கண்டம் ஆனால் இது ஒரேயடியாக மூழ்கிவிடவில்லை. மாறாக பல லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வான நிலங்கள் மட்டும் நீரில் அமிழ்ந்து அங்காங்கே தீவு போன்ற பல நிலங்களாய் அது திரிந்தது. இந்தத் தீவுகள் ஆழமில்லாத நீரால் சூழப்பட்டதால் மக்கள் கழுத்தளவு நீரில் நடந்தே ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு பெயர்ந்தனர் என்கிறார் பிரபாத் ரஞ்சன சர்க்கார். இப்படித்தான் நீக்ரோக்களும் ஆத்திரிக்குகளும் நண்நிலக்கோட்டில் ஒன்று கலந்தனர் என்கிறார் அவர். அந்த கலப்பினத்தவரே திராவிடர். இந்த நிகழ்வு 70,000 ஆண்டுகளுக்கும் 40,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக நிகழ்ந்திருக்கலாம். எனவே குமரிக் கண்டம் என்பது நீங்கள் கீழே ஒட்டியுள்ள நிலம் போல் பெரும் நிலப்பரப்பாக இல்லாமல் தீவுக் கூட்டமாக இருந்த நிலப்பரப்பே. இந்தோனேசியா பாப்புவா நியுகினியா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.கோண்டுவானா என்பதும் மேலை அறிஞர்களின் கருத்தாக்கம் தான்.இதைப் பற்றிக் கொஞ்சம் வரைபடம் மூலம் தெளிவு படுத்த இயலுமா ?
//எனினும், குமரியர் - நாவலந்தீவின் உரிமை மாந்தர் வரலாறு என்ற நூலில் "ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே டேதிசு கடலின் உள்ளிருந்து இமயமலையும் அதைச் சார்ந்த ராக்கிமலை, காஷ்மீர், நேபாளம் ஆகியவை தோன்றின. ஆயினும், இதை நாவலந்தீவு என்றனர். வடக்கில் தக்காணம் முதல் தெற்கில் இந்து மாக்கடல் பகுதிக்குள்ளிலும் கிழக்கில் சந்தா தீவு முதல் மேற்கில் மடகாசுகர் வரையிலும் பரவிக்கிடந்த நிலப்பகுதியை நாவலந்தீவு என்று கூறுவோருமுளர். வரலாற்று நிகழ்ச்சியை நோக்கும் போது சிந்து சமவெளியிலுள்ள மொஹஞ்சோதாரோ, பாகிஸ்தான், நாகலாந்து , பர்மா, நேபாளம் ஆகியவை நாலவம் தீவுக்குள் அடக்கம்."இது மேற்கூறிய தங்களின் கருத்துக்கு மாறாக உள்ளதே. இதைப் பற்றிக் கூற முடியுமா ?//நாவலந்தீவு என்பது உண்மையில் காசுமீரத்தை முதலில் குறித்து பின் காசுமீரம் உள்ளிட்ட தென்குமரிமுனை வரையான இந்தியப் பகுதியைச் சுட்டியது. ஆனால் நாவலந்தீவு என்பதை தெற்கே இந்தியப் பேராழியில் இருந்த குமரிக் கண்டமாக தப்பாக பொருள் கொண்டுள்ளனர் தமிழறிஞர்.//இவை அனைத்தையும் படிக்கும் போது சற்று குழப்பம் ஏற்படுகிறது. //மேற்சொன்ன என் விளக்கம் உங்களைத் தெளிவு படுத்தி இருக்கும் என நம்புகிறேன்.//ஆதலால், குமரிக்கண்டம், லெமூரியா, நாவலம் தீவு ஆகியவை ஒன்றா இல்லை வெவ்வேறா// ?இலெமூரிய என்பது துண்டுபடாத ஒரு பெரு நிலம் அதன்போது மனிதனே தோன்றவில்லை. குமரிக் கண்டம் மூழ்கிய இலெமூரியாவின் எச்சப்பகுதியான தீவுக் கூட்டங்களே.நாவலந்தீவு குமரிக் கண்டத்தை குறிப்பதல்ல மாறாக 1947 ஆண்டைய இந்திய நிலப்பரப்பைக் குறிப்பது.இதுவே நான் கொண்டுள்ள குமரிக் கண்டக் கொள்கை. இதற்கு பிரபாத் ரஞ்சன் சர்க்காரே காரணகர்.
2012/10/17 seshadri sridharan <ssesh...@gmail.com>
>
>
> அம்மணிகள் சுபா, கீதா மற்றும் செல்வன் ஆகியோர் கவனத்திற்கு இந்த கட்டுரையை தமிழ்மரபு விக்கியில் பேரா. சா. குருமூர்த்தியின் பகுப்பில் இட வேண்டுகிறேன்.
>
> சேசாத்திரி
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"குமரிக்கண்டம்தான் லெமுரியா -லெமுரியாதான் குமரிக் கண்டம் " - என்று
முன்பெல்லாம் சில தமிழ் அறிஞர்களும்- ஆர்வலர்களும்
எண்ணியும்-பேசியும்-எழுதியும் வந்தனர். இன்றும் சிலர் இதை செய்து
வருகிறார்கள். இது சரியல்ல.
அண்மைக் காலங்களில் வரும் நூல்களில் குமரிக் கண்டம் பற்றி எழுதும் தமிழ்
ஆர்வலகள் குமரிக்கண்டம் எனும் சொல்லைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள்
கோண்டுவானா என்று எழுதுகிறார்கள். ஆய்வரங்ககளிலும் -கூட்டங்களிலும் உரை
நிகழ்த்தும்போது ‘குமரிக்கண்டம் அல்லது கோண்டுவானா’ என்று
குறிப்பிடுகிறார்கள்."குமரிக்கண்டம்-லெமுரியா -கொண்டுவனா" ஆகிய மூன்றும்
ஒன்றல்ல.
லெமுரியா பற்றி சிறு குறிப்பு ஒன்று சில நாட்களுக்கு முன்
எழுதியிருந்தேன்.அதைத் தொடர்வதற்கு முன் "கோண்டுவானா" பற்றி ஒரு சிறு
குறிப்பு.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கண்டு பிடிக்கப்பட்ட ரயில்
வண்டி, 1850 களில் பல நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அப்போது ரயில்
என்ஜினை இயக்கத் தேவைப் பட்ட எரிபொருளாகிய நிலக்கரியை தேடிக் கண்டு
பிடிக்கும் பணியில் புவியியல் அறிஞர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நம்
இந்தியத் துணைக் கண்டத்தில் 1853 ஆம் ஆண்டு , கிழக்கிந்தியக் கம்பனியரால்
ரயில் வண்டி அறிமுகப் படுத்தப்பட்டது. 1851 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட
எங்கள் "இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை"(ஜியலாஜிக்கல் சர்வே ஆப்
இந்தியா), யை சேர்ந்த புவி அறிவியலாளர் 'மேட்லிகாட்’ நம் நாட்டின்
கிழக்குப் பகுதியில் தாமோதர் பள்ளத்தாக்கிலும், கிழக்கு மத்தியப்
பிரதேசம் , ஜார்க்கன்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நிலக்கரி
படிவங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தார். இப் படிவங்கள் அடங்கிய படிவப்
பாறைகளில் (SEDIMENTARY ROCKS ) GLOSSOPTERIS எனப்படும் தொல்தாவர
எச்சங்கள் (PLANT FOSSILS ) உள்ளதை அவர் கண்டறிந்தார். இலத்தின் மொழியில்
GLASSA என்றால் நாக்கு என்று பொருள். இந்தத் தாவர இலைகள் நாக்கு போன்று
இருந்ததால் இந்தப் பெயர் வந்தது. GLOSSOPTERIS FOSSILS உள்ள பாறைப்
படிவங்கள் , மேற்சொன்ன மாநிலங்களில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் கண்டு
பிடிக்கப்பட்டன. அந்த வனங்களில் 'GOND ' என அழைக்கப்படும் பழங்குடியினர்
வாழ்ந்து வருகிறார்கள். 'கோண்டு ' இன மக்கள் வாழும் வனப் பகுதியில் உள்ள
படிவப் பாறைகளுக்கு ' மேட்லிகட் ' 'கோண்டுவானப் பாறைகள் ' என
பெயரிட்டார். இதுதான் "கோண்டுவானா " பெயர் வந்த வரலாறு.
பாறைகளுக்கு வைத்த பெயர் எப்படி ஒரு நிலப்பகுதிக்கு சூட்டப்பட்டது என்பதை
பின்னர் பார்ப்போம்.
2012/10/19 செல்வன் <hol...@gmail.com>:
அய்யா,//வணக்கம். தங்கள் கட்டுரை மிகவும் அருமை. பெரும்பாலனவர்க்கு இது பற்றித் தெரியாது//.
உங்கள் கட்டுரையில் எனக்கு 2 சந்தேகங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு//இலெமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்றா அல்லது வேறு வேறா ?//
//35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கோண்ட்வானா நில நடுக்கத்தால் சிதறிய போது இலமூரியா உருவானது. இதில் தென் இந்தியாவும், கிழக்கிந்திய தீவுகளும் தென்னிந்தியாவிற்குத் தெற்கே நில நடுக்கோடு வரை கடலுக்குள் மூழ்கிப்போன நிலப் பகுதிகளும் தென் ஆப்பிரிக்காவும் அடங்கும்.இலெமூரியாக் கண்டர் சிதைவுக்குப் பின் இந்தியா, பகுசுத்தான் மற்றும் தக்காணத்திற்குத் தென்பாலுள்ள பகுதிகளையும், வங்கம் - அரபிக்கடலுள்ள தீவுகளையும் அவை சார்ந்து கடலுக்குள் மூழ்கிப் போன நிலப் பகுதிகளையும், இந்துக் கடலுள் தமிழகம் சார்ந்த நிலப் பகுதிகளையும் அந்நிலப்பகுதி மாலத்தீவைத் தொடர்ந்து மடகாசுக்கர் வரையுள்ள நிலப்பகுதிகளையும் தமிழகத்தின் கிழக்கே சந்தா தீவு வரை நீண்டு கிடந்த நிலப்பகுதியையும் கொண்டதையே குமரிக்கண்டம் என்று கூறுகிறார்கள். //
இதைப் பற்றிக் கொஞ்சம் வரைபடம் மூலம் தெளிவு படுத்த இயலுமா ?
//எனினும், குமரியர் - நாவலந்தீவின் உரிமை மாந்தர் வரலாறு என்ற நூலில் "ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே டேதிசு கடலின் உள்ளிருந்து இமயமலையும் அதைச் சார்ந்த ராக்கிமலை, காஷ்மீர், நேபாளம் ஆகியவை தோன்றின. ஆயினும், இதை நாவலந்தீவு என்றனர். வடக்கில் தக்காணம் முதல் தெற்கில் இந்து மாக்கடல் பகுதிக்குள்ளிலும் கிழக்கில் சந்தா தீவு முதல் மேற்கில் மடகாசுகர் வரையிலும் பரவிக்கிடந்த நிலப்பகுதியை நாவலந்தீவு என்று கூறுவோருமுளர். வரலாற்று நிகழ்ச்சியை நோக்கும் போது சிந்து சமவெளியிலுள்ள மொஹஞ்சோதாரோ, பாகிஸ்தான், நாகலாந்து , பர்மா, நேபாளம் ஆகியவை நாலவம் தீவுக்குள் அடக்கம்."
இது மேற்கூறிய தங்களின் கருத்துக்கு மாறாக உள்ளதே. இதைப் பற்றிக் கூற முடியுமா ?//
//இவை அனைத்தையும் படிக்கும் போது சற்று குழப்பம் ஏற்படுகிறது. //
//ஆதலால், குமரிக்கண்டம், லெமூரியா, நாவலம் தீவு ஆகியவை ஒன்றா இல்லை வெவ்வேறா// ?
| தென்காசி சுப்பிரமணியன் |
இனி,
HENRY BENDICT MEDLICOTT (1870 ) (படத்தில் பின் நிற்பவர்களில்
வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர்)
டின் கண்டுபிடிப்புகள் 1876 ஆம் ஆண்டு அச்சேறின. 'கோண்டுவான ' எனும் சொல்
அச்சேறியது அப்போதுதான். ஆண்டு 1876 (படம்).அசெற்றியவர் 'OTTOKAR
FEISTMANTLE '
எனும் ஆங்கிலேயர்.
ஒன்பது ஆண்டுகள் கழித்து , வியென்னா பல்கலைக் கழகப் பேராசிரியர் 'EDVARD
SUESS ' தான் எழுதிய நூலில் இந்திய, மடகாஸ்கர், தென் ஆப்ரிக்கா , தென்
அமெரிக்கா , ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் அடங்கிய நிலத்
தொகுப்புக்கு'கோண்டுவானா லேன்ட் ' என்று பெயரிட்டார். லெமுரியா அந்த
காலத்தில் பரபரப்பாகக் பேசப் பட்டு வந்தாலும் -அது ZOOLOGICAL பெயர்.
'கோண்டுவானா ' ஒரு GEOLOGIST ஆல் வழங்கப்பட்ட GEOLOGICAL பெயர். SUESS
புவியியல் பேராசிரியர். எனவே அவர் 'லெமுரியா 'விற்கு பதிலாக 'கோண்டுவானா’
வை தேர்ந்தெடுத்தார். இப்படித்தான் தென் கண்டங்கள் அனைத்திலும்
கோண்டுவானா படிவப்பாறைகள் இருப்பதால் , அவை அனைத்தும் அடங்கிய நிலத்
தொகுப்புக்கு 'கோண்டுவானா லேன்ட்'என பெயரிடப்பட்டது.
பின்னர் 1912 இல் ALFRED WAGNER என்ன செய்தார் என்பதை பிறகு பார்ப்போம்
படம்-GSI யின் புவி ஆய்வாளர்கள்(முதல் குழு)1860
படம்-இன்றய GOND இனத்தவருடன் ஆங்கில ஆய்வாளர்.
படம்-GSI பதிவேடு (GONDUWANA -அச்சேறியது)
2012/10/23 seshadri sridharan <ssesh...@gmail.com>:
2012/10/23 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்.
அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார
உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின்
வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய "முதற்தாய் மொழி"
வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்
கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்
படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர்,
பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம்
அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும்
தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும்
நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா
கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம்,
திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப்
பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள்
குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு
என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட
நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான்
உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள்
தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும்
சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும்,
தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச்
சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக
எடுத்துக்காட்டலாம்.
https://www.youtube.com/watch?v=auNmfvqj8zs
நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று
அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு
தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம்
".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற
நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது
நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது
!!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.
தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள்
இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன்
நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் "
இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990
வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த
கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் ,
சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல்,
முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை
இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச்
சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் "
அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை
இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு
கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850
இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் "
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை
பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த
நாகராசன்
2012/10/23 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
2012/10/25 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
வழக்கில் உள்ள வரலாற்றுத் தகவலின் நம்பகத்தன்மையை நிறுவும் பணியில்
பெரியவர் சொன்னார் ஒரு காலத்தில் சொன்னார் என்பது ஏற்புடைத்தல்ல
அதே நேரம் அறிவுத் தேடலில் ஈடுபட்ட முந்தைய அறிஞர்களின் செயல்
பார்வைக்கோணம் பயன்படுத்திய ஆவணங்கள் ஆகியவற்றை இன்றைக்குப்
பொருந்துவதில்லை என்பதால் முற்றும் தவறென்று புறம் தள்ளுவது தேவையில்லை
என்பது என் கருத்து
பாவாணர் தான் வாழ்ந்த காலத்தில் அவர் பயன்படூத்திய வளங்கள் அவர் ஒரு
குறிப்பிட்ட கருத்துக்கொள்கையை ஒரு புலம் சார்ந்து பற்றிநின்று ஆய்ந்த
செயல் திட்டம் ஆகியன இன்றைய ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படுமல்லவா
புதிய விதிகள் நிறுவப்படும்போது பழைய விதிகள் காலாவதியானாலும் அவை ஒரு
குமுகத்தின் வரலாற்றின் அறிவுத் தேடலில் ஒரு மைல்கல்
அந்த ஆய்வாளரை தவறிழைத்தார் என்று குறை கூறுவதைவிட அவர் செயலை ஆய்ந்து
அவரது நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாமல்லவா?
நாகராசன்
2012/10/25 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
சிங்கநெஞ்சன் அவர்கலுக்கு வணக்கம். நான் முன்பு பதிந்த இழையை நீங்கல் பார்த்தீர்களா என்பது தெரியவில்லை. நீங்கல் கேட்ட குமரி ஆறு சிலம்பின் உரையாசிரியர்கள் காலத்துக்கு முன் இருந்ததா என்பதற்கு கீழ் வரும் இழையில் பதிலலித்துளேன். ஏற்கனவே பார்த்திருந்தால் சரி.ஆனால் நீங்கல் கூரியது போல் அறிவியல் ரீதியாக குமரிக்கன்டம் அவ்வள்வு பெரிய நிலப்பரப்பா என்பதில் எனக்கும் கேள்விகல் பல உள்லது. இப்போது உள்ளத எல்லாம் ஊகங்கள் தான். எனக்கு ஆப்பிரிக்க தென்னமேரிக்க equatorilal forest பகுதிகளில் (நிலநடுக்கோட்டு பகுதியில்) மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் ஏதாவது பகுதிகல் மாறி மாறி பாலைவனங்கலாக அகுமா என்பதை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
குமரிக்கண்டம் குமரி ஆறு போன்ற சொற்கள் உரையாசிரியர்கள் காலத்துக்கு முன் உள்ளதா?-----------------ஏழ் "முன்"பாலை நாடுகளும் ஏழ் 'பின்"பாலை நாடுகளும்------------------
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
குமரி கடல் அதில் மூழ்கி உள்ள மனிதர்கள் வாழ்ந்த இடம் என்பது 1917 இல் சுப்ரமணிய சாஸ்திரி என்ற தமிழ் ஆசிரியர் மடகாஸ்கர் பாப்புவா நியூ குணியா தென் தமிழ்நாட்டை இணைத்த கோடுகள் மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் மற்றும் அவரின் நிதி உதவியால் எழுதிய குழுவினர் மற்றும் குழந்தை போன்றவர்கள் இலக்கிய மேற்கோள்களை வைத்து எழுதிய தரவுகளை தான் இந்த படம் சுட்டுகிறதுஎங்களை போன்ற கடல் சார் மேலாண்மை மற்றும் கடல் பயணத்தில் ஆய்வு செய்து சொன்னது உள்ள இடங்களை பற்றிய குறிப்புகள் இல்லை