அன்றொரு நாள்:மே 27;
அஸ்தமனம்!
வரலாற்றுடன், அன்றாடம் சுகித்து, அழுது, வாழ்ந்தவர்கள் அதை அசை போடுவதும், குப்பனும், சுப்பனும் எழுதியதை படித்து விட்டு அதற்கு பூசை போடுவதும் வெவ்வேறு அணுகுமுறைகள். மே 27, 1964 அன்று அமரரான இந்திய தேசபக்தன், முதல் பிரதமர், பண்டித ஜவஹர்லால் நேஹ்ரு அவர்களின் வாழ்க்கை/அரசியல்/கொள்கைகள்/ ஆளுமை பற்றி என்றென்றும் குறை காணும் கும்பல்கள் உண்டு. பாமரமனிதரான அவரும் ஏதோ தெய்வீகக்குழந்தையாகத் தன்னை காட்டிக்கொள்ளவில்லை. அவருக்கும் லேடி மெளண்ட்பேட்டனுக்கும் தலைவனுக்கும், தலைவிக்கும் உள்ள காதல் உறவு இருந்திருக்கலாம். அவரும் பத்மஜா நாயுடுவும் காதலர்கள். ஆனால், இந்த பாழாப்போன காங்கிரஸ் கலாச்சாரம் அவர்கள் மணம்புரிவதற்கு முட்டுக்கட்டை போட்டது. அவரை பற்றி லக்ஷோபலக்ஷப்பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் சில வரிகளை மட்டும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுத விழைகிறேன்.
பமேலா மெளண்ட்பேட்டன் நினைவு கூறுகிறார்.
’..நேரு சிரஸானம் செய்து காண்பித்தார்... அவருடைய தேஹாரோக்கியம் நன்றாக இருந்தது...1946 லிருந்து எங்கள் குடும்பம் அன்யோன்யம். என் அம்மாவும் அவரும் மிகவும் ஒருவரையொருவர் காதலித்தனர்...அவளுக்கு அவர் தினந்தோறும் காலை 2 மணிக்கு லிகிதம் எழுதுவார். அவை ஒரு இலக்கியக்குவியல்...58 வயதில் அம்மா இறந்து விட்டாள். அவளுடைய தலை அணியின் அடியில் இந்த கடிதக்குவியல். அம்மாவோ அவற்றை அப்பாவுக்கு உயில் எழுதி வைத்திருந்தாள். அவர் முதலில் என்னை படிக்கச்சொன்னார்... நேஹ்ரு அடிக்கடி சொல்லும் ‘all manners of things’ என்ற சொற்றொடரால் அவரை கேலி செய்வோம்... ஒரு நாள் அம்மா சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடன் விருந்து அருந்தினாள். ஒருவரை ஒருவர் கேலி செய்த வண்ணம்.,,’
~ இப்படி பல குறிப்புக்கள்.
அன்றைய தினம், நான் சென்னையில் உத்யோகம். திடீரென ஒரு பலத்தக்காற்று வீசல். கண்ணாடி டம்ளர் விழுந்து உடைந்தது. தத்க்ஷணமே துக்கச்செய்தி ரேடியோவில் அலறியது.
இன்னம்பூரான்
27 05 2012
http://indiapicks.com/stamps/Gallery/1987-88/1337_Nehru.jpg

உசாத்துணை:
http://www.india-intro.com/history/historical-figures/141-remembering-nehru-and-others.html
மே 27, 1964 அன்று அமரரான இந்திய தேசபக்தன், முதல் பிரதமர், பண்டித ஜவஹர்லால் நேஹ்ரு அவர்களின் வாழ்க்கை/அரசியல்/கொள்கைகள்/ ஆளுமை பற்றி என்றென்றும் குறை காணும் கும்பல்கள் உண்டு.
பாமரமனிதரான அவரும் ஏதோ தெய்வீகக்குழந்தையாகத் தன்னை காட்டிக்கொள்ளவில்லை.
தத்க்ஷணமே துக்கச்செய்தி ரேடியோவில் அலறியது.
அன்றொரு நாள்:மே 27;
அஸ்தமனம்!
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மறைவுச் செய்தி கேட்டவுடன் எங்கல் ஊரில் மதம் சாதி என்ற வேறுபாடின்றி மக்கள் அனைவரும் மூலக்கடையில் கூடினர். கூட்டம் ஏற்பாடு செய்தவர் கோமள விலாஸ் மணி ஐயர் என்பவர். திராவிட இயக்கத்தவர்களைக் கடுமையாக வெறுத்தவர். என்னைக் கண்ணால் காண்பதே பாவம் என்று கருதியவர். இரங்கல் கூட்டத்தில் நானும் பேசினேன். அன்றுதான் திராவிட இயக்கத்தினரின் வாக்கு சாதுர்யத்த்தை உணர்ந்தார். வெறுப்பை மறந்து அப்படியே எழுந்து கட்டியணைத்துக் கொண்டார். அது முதல் வெறுப்பு மறைந்து பாசம் துளிர்த்தது. 1967 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிக்கான ஆதி திராவிட வேட்பாளர்களுக்காக இவர் போன்ற அந்தணர்கள் கிராமம் கிராமமாக இறங்கி வாக்குக் கேட்டனர். வெற்றி பெறமுடியாத தொகுதி என்று தீர்மானிக்கப்பட்ட தொகுதியில் வெற்றி பெற அவர்கள் காரணமாக இருந்தனர்
நேருவின் மறைவு வலுமிக்க மத்திய ஆட்சி தளர்ந்து மாநிலக் கட்சிகள் மத்திய அரசை நடத்த ஆதரவு தர வேண்டிய சூழல் தொடங்கியது
நாகராசன்2012/5/28 PARTHA SARATHI <rkpsa...@gmail.com>
இன்னம்பூரான் அய்யா அவர்களெ, இதெல்லாம் படிக்கும்போது, இது எனக்கு பெரிய
இடத்துச் சமாசாரம் போல் தெரிகிறது. கருத்து சொல்ற அளவுக்கு வயது
அனுமதிக்குமா?....என்பது தெரியவில்லை.
ஆனால் இம்மாதிரி சமாசாரங்களுக்கெல்லாம் (நேரு விஷயம் அல்ல) பொதுவாக நான்
படித்த ஒரு ஆங்கில வார்த்தை நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த ஆங்கில
வார்த்தையின் அர்த்தம் இந்த இடத்தில் சொன்னால் பொருந்துமா என்பதும்
தெரியலீங்க, அய்யா,
"Caesar's wife must be above suspicion."
> -- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
என்னது? இன்னம்பூராரின் அப்பா சுருட்டுக்குடித்தாரா?
(பாமரகீர்த்தியில் இதுவும் அடங்குமோ :-)?
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> “இன்னம்பூராரின் அப்பா“ என்று எங்கம் குறிப்பிட வில்லையே!
> நான் எனது தந்தை சுருட்டுக் குடித்தத்தார் என்றுதான் கூறியுள்ளேன்.
> தங்களுக்குச் சரியாக விளங்காத வகையில் நான் எழுதியதற்காக வருந்துகிறேன்.
>
தம்பி எழுதிய மூலம் கிடைக்கவில்லை, ஒட்டிய பகுதியை வாசித்தால் இப்படியும்
பொருள் கொள்ள வாய்ப்புள்ளது ;-)
கவலையற்க! அது சும்மா ‘இ’ அண்ணாவோட விளையாட்டு. ஏதாவது சுவாரசியமாய்
சொல்வார் மேலும், எனும் எதிர்பார்ப்பில்.
க.>