அன்றொரு நாள்:மே 27; அஸ்தமனம்!

2 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
May 27, 2012, 7:06:54 PM5/27/12
to mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Innamburan Innamburan

ன்றொரு நாள்:மே 27;

அஸ்தமனம்!


வரலாற்றுடன், அன்றாடம் சுகித்து, அழுது, வாழ்ந்தவர்கள் அதை அசை போடுவதும், குப்பனும், சுப்பனும் எழுதியதை படித்து விட்டு அதற்கு பூசை போடுவதும் வெவ்வேறு அணுகுமுறைகள். மே 27, 1964 அன்று அமரரான இந்திய தேசபக்தன், முதல் பிரதமர், பண்டித ஜவஹர்லால் நேஹ்ரு அவர்களின் வாழ்க்கை/அரசியல்/கொள்கைகள்/ ஆளுமை பற்றி என்றென்றும் குறை காணும் கும்பல்கள் உண்டு. பாமரமனிதரான அவரும் ஏதோ தெய்வீகக்குழந்தையாகத் தன்னை காட்டிக்கொள்ளவில்லை. அவருக்கும் லேடி மெளண்ட்பேட்டனுக்கும் தலைவனுக்கும், தலைவிக்கும் உள்ள காதல் உறவு இருந்திருக்கலாம். அவரும் பத்மஜா நாயுடுவும் காதலர்கள். ஆனால், இந்த பாழாப்போன காங்கிரஸ் கலாச்சாரம் அவர்கள் மணம்புரிவதற்கு முட்டுக்கட்டை போட்டது. அவரை பற்றி லக்ஷோபலக்ஷப்பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் சில வரிகளை மட்டும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுத விழைகிறேன்.

பமேலா மெளண்ட்பேட்டன் நினைவு கூறுகிறார்.

’..நேரு சிரஸானம் செய்து காண்பித்தார்... அவருடைய தேஹாரோக்கியம் நன்றாக இருந்தது...1946 லிருந்து எங்கள் குடும்பம் அன்யோன்யம். என் அம்மாவும் அவரும் மிகவும் ஒருவரையொருவர் காதலித்தனர்...அவளுக்கு அவர் தினந்தோறும் காலை 2 மணிக்கு லிகிதம் எழுதுவார். அவை ஒரு இலக்கியக்குவியல்...58 வயதில் அம்மா இறந்து விட்டாள். அவளுடைய தலை அணியின் அடியில் இந்த கடிதக்குவியல். அம்மாவோ அவற்றை அப்பாவுக்கு உயில் எழுதி வைத்திருந்தாள். அவர் முதலில் என்னை படிக்கச்சொன்னார்... நேஹ்ரு அடிக்கடி சொல்லும் ‘all manners of things’ என்ற சொற்றொடரால் அவரை கேலி செய்வோம்... ஒரு நாள் அம்மா சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடன் விருந்து அருந்தினாள். ஒருவரை ஒருவர் கேலி செய்த வண்ணம்.,,’

~ இப்படி பல குறிப்புக்கள்.

அன்றைய தினம், நான் சென்னையில் உத்யோகம். திடீரென ஒரு பலத்தக்காற்று வீசல். கண்ணாடி டம்ளர் விழுந்து உடைந்தது. தத்க்ஷணமே துக்கச்செய்தி ரேடியோவில் அலறியது.

இன்னம்பூரான்

27 05 2012

http://indiapicks.com/stamps/Gallery/1987-88/1337_Nehru.jpg

Inline image 1

உசாத்துணை:

http://www.india-intro.com/history/historical-figures/141-remembering-nehru-and-others.html

கி.காளைராசன்

unread,
May 27, 2012, 8:58:55 PM5/27/12
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/5/28 Innamburan Innamburan <innam...@gmail.com>

மே 27, 1964 அன்று அமரரான இந்திய தேசபக்தன், முதல் பிரதமர், பண்டித ஜவஹர்லால் நேஹ்ரு அவர்களின் வாழ்க்கை/அரசியல்/கொள்கைகள்/ ஆளுமை பற்றி என்றென்றும் குறை காணும் கும்பல்கள் உண்டு. 

 

பாமரமனிதரான அவரும் ஏதோ தெய்வீகக்குழந்தையாகத் தன்னை காட்டிக்கொள்ளவில்லை.

 அப்போது நாங்கள் ‘கல்லல்‘ என்ற ஊரில் வசித்து வந்தோம்.
கோயிலுக்கு அருகே மிகப்பெரிய தெப்பம்.
எனது தந்தையார் அதிகாலையிலேயே குளித்து வந்து விடுவார்.
அன்றய தினம் குளித்து வந்த அவர்,
இன்று சுருட்டில் இருந்த தீ, அப்படியே பறந்து வந்து என் நெஞ்சில் பட்டுவிட்டது! ‘கெட்ட சகுனம்‘ என்ன நடக்கப் போகிறதோ? என்றார்.

தத்க்ஷணமே துக்கச்செய்தி ரேடியோவில் அலறியது.

(அந்த வானொலிப் பெட்டி, திருச்சிராப்பள்ளி மட்டுமே எடுக்கும், அதுக்கும் வீடு நெடுகிலும் கம்பிவலை (ஏரியல்) கட்டியிருக்க வேண்டும்)

அன்பன்
கி.காளைராசன்

Geetha Sambasivam

unread,
May 27, 2012, 9:30:39 PM5/27/12
to thamiz...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Innamburan Innamburan
அப்போது நான் பள்ளி மாணவி.

ஜவஹர்லால் நேஹ்ரு அவர்களின் வாழ்க்கை/அரசியல்/கொள்கைகள்/ ஆளுமை பற்றி என்றென்றும் குறை காணும் கும்பல்கள் உண்டு.  //

ஹிஹிஹி, நானும். ஆனால் பாருங்க அப்போ பள்ளியில் படிச்சிட்டு இருந்த நான் நேரு இறந்த செய்தி கேட்டு அழுதிருக்கேன்.  நினைவு இருக்கு. கொஞ்சம் சரித்திரம் புரிய ஆரம்பிச்சவுடனே மாறிப் போச்சு.  என்றாலும் முதல் பிரதமருக்கு அஞ்சலியைச் செலுத்திக்கிறேன்.

2012/5/28 Innamburan Innamburan <innam...@gmail.com>

ன்றொரு நாள்:மே 27;

அஸ்தமனம்!



You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Tthamizth Tthenee

unread,
May 28, 2012, 12:13:49 AM5/28/12
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, mintamil, vall...@googlegroups.com, Innamburan Innamburan
இருசக்கர  ஊர்தியில்  தங்கசாலைத் தெருவில்  வந்து கொண்டிருந்தேன்

 

செய்தி காதில் விழுந்தது.
 
அப்படியே வாகனத்தை பக்கவாட்டில் நிறுத்திவிட்டு  நின்று வருந்தினேன்.
 
அதன் பிறகு பயம் வந்தது சாலைகளில் குழப்பம் ஏதேனும் விளையுமோஎன்று , அதனால் விரைந்தேன் வீட்டுக்கு.  ரோசாச் சிரிப்புடன் கண்ணில் பட்டார் நேரு ஒரு கடையிலிருந்து.
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/5/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>

rajam

unread,
May 28, 2012, 2:11:47 AM5/28/12
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
அந்த நாளில் மு.வ அவர்கள் பாத்திமாக் கல்லூரிக்கு வந்ததாகவும், அவருக்கு நானும் என் தோழியரும் உணவு பரிமாரியதாகவும் நினைவு.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
May 28, 2012, 3:03:26 AM5/28/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
இச்செய்தியை நேரில் அனுபவித்தவர்களின் ஞாபகங்களைப் பதிவில் காண்பதே ஒரு அரிய செய்தியாகத்தான் இருக்கின்றது.

சுபா

2012/5/28 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Innamburan Innamburan

unread,
May 28, 2012, 5:14:30 AM5/28/12
to mintamil, thamizhvaasal, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
ஸுபாஷிணி சொல்வது போல், பகிர்வுகள் வரலாற்றை உரைக்கின்றன. எல்லாருக்கும் நன்றி. ஆம். பவளசஙரி. நேரமே போதவில்லை. நண்பர் பார்த்தசாரதி. ஆம். அந்த மேற்கோள் இங்கு பொருந்தவில்லை. 
'.... a young patrician named Publius Clodius Pulcher managed to gain admittance disguised as a woman, apparently for the purpose of seducing Pompeia. He was caught and prosecuted for sacrilege. Caesar gave no evidence against Clodius at his trial, and he was acquitted. Nevertheless, Caesar divorced Pompeia, saying that "my wife ought not even to be under suspicion."[4] This gave rise to aproverb, sometimes expressed: "Caesar's wife must be above suspicion...' (விக்கிப்பீடீயா)
தவிர, சீஸருக்கு பல மனைவிகள். நேரு தவறு யாதும் செய்யவில்லை. 

2012/5/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
மறைவுச் செய்தி கேட்டவுடன் எங்கல் ஊரில் மதம் சாதி என்ற வேறுபாடின்றி மக்கள் அனைவரும் மூலக்கடையில் கூடினர்.  கூட்டம் ஏற்பாடு செய்தவர் கோமள விலாஸ் மணி ஐயர் என்பவர்.  திராவிட இயக்கத்தவர்களைக் கடுமையாக வெறுத்தவர். என்னைக் கண்ணால் காண்பதே பாவம் என்று கருதியவர்.  இரங்கல் கூட்டத்தில் நானும் பேசினேன்.  அன்றுதான் திராவிட இயக்கத்தினரின் வாக்கு சாதுர்யத்த்தை உணர்ந்தார்.  வெறுப்பை மறந்து அப்படியே எழுந்து கட்டியணைத்துக் கொண்டார்.  அது முதல் வெறுப்பு மறைந்து பாசம் துளிர்த்தது.  1967 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிக்கான ஆதி திராவிட வேட்பாளர்களுக்காக இவர் போன்ற அந்தணர்கள் கிராமம் கிராமமாக இறங்கி வாக்குக் கேட்டனர்.  வெற்றி பெறமுடியாத தொகுதி என்று தீர்மானிக்கப்பட்ட தொகுதியில் வெற்றி பெற அவர்கள் காரணமாக இருந்தனர்
நேருவின் மறைவு வலுமிக்க மத்திய ஆட்சி தளர்ந்து மாநிலக் கட்சிகள் மத்திய அரசை நடத்த ஆதரவு தர வேண்டிய சூழல் தொடங்கியது
நாகராசன்


2012/5/28 PARTHA SARATHI <rkpsa...@gmail.com>
இன்னம்பூரான் அய்யா அவர்களெ, இதெல்லாம் படிக்கும்போது, இது எனக்கு பெரிய
இடத்துச் சமாசாரம் போல் தெரிகிறது. கருத்து சொல்ற அளவுக்கு வயது
அனுமதிக்குமா?....என்பது தெரியவில்லை.

ஆனால் இம்மாதிரி சமாசாரங்களுக்கெல்லாம் (நேரு விஷயம் அல்ல) பொதுவாக நான்
படித்த ஒரு ஆங்கில வார்த்தை நினைவுக்கு வந்தது.  ஆனால் அந்த ஆங்கில
வார்த்தையின் அர்த்தம் இந்த இடத்தில் சொன்னால் பொருந்துமா என்பதும்
தெரியலீங்க, அய்யா,

"Caesar's wife must be above suspicion."
> -- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
>

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

N. Kannan

unread,
May 28, 2012, 5:46:25 AM5/28/12
to mint...@googlegroups.com
2012/5/28 கி.காளைராசன் <kalair...@gmail.com>:

>  அப்போது நாங்கள் ‘கல்லல்‘ என்ற ஊரில் வசித்து வந்தோம்.
> கோயிலுக்கு அருகே மிகப்பெரிய தெப்பம்.
> எனது தந்தையார் அதிகாலையிலேயே குளித்து வந்து விடுவார்.
> அன்றய தினம் குளித்து வந்த அவர்,
> இன்று சுருட்டில் இருந்த தீ, அப்படியே பறந்து வந்து என் நெஞ்சில் பட்டுவிட்டது!
> ‘கெட்ட சகுனம்‘ என்ன நடக்கப் போகிறதோ? என்றார்.


என்னது? இன்னம்பூராரின் அப்பா சுருட்டுக்குடித்தாரா?
(பாமரகீர்த்தியில் இதுவும் அடங்குமோ :-)?

க.>

Innamburan Innamburan

unread,
May 28, 2012, 7:38:28 AM5/28/12
to mint...@googlegroups.com
அது காளைராஜனின் அப்பா. இன்னம்பூரானின் அப்பா சுட்டுப்பொசுக்கி இருப்பார். எதற்கும் ஒரு ஃபோட்டோ தேடி அனுப்புறேன். நான் 'அன்றொரு நாள்: மே: 27: அஸ்தமனம்' கட்டுரையை விரிவு படுத்தவேண்டும். செய்கிறேன்.
இன்னம்பூரான்


2012/5/28 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.காளைராசன்

unread,
May 28, 2012, 9:50:58 AM5/28/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/5/28 N. Kannan <navan...@gmail.com>
“இன்னம்பூராரின் அப்பா“ என்று எங்கம் குறிப்பிட வில்லையே!
நான் எனது தந்தை சுருட்டுக் குடித்தத்தார் என்றுதான் கூறியுள்ளேன்.
தங்களுக்குச் சரியாக விளங்காத வகையில் நான் எழுதியதற்காக வருந்துகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

N. Kannan

unread,
May 28, 2012, 6:05:47 PM5/28/12
to mint...@googlegroups.com
2012/5/28 கி.காளைராசன் <kalair...@gmail.com>:

> “இன்னம்பூராரின் அப்பா“ என்று எங்கம் குறிப்பிட வில்லையே!


> நான் எனது தந்தை சுருட்டுக் குடித்தத்தார் என்றுதான் கூறியுள்ளேன்.
> தங்களுக்குச் சரியாக விளங்காத வகையில் நான் எழுதியதற்காக வருந்துகிறேன்.
>

தம்பி எழுதிய மூலம் கிடைக்கவில்லை, ஒட்டிய பகுதியை வாசித்தால் இப்படியும்
பொருள் கொள்ள வாய்ப்புள்ளது ;-)

கவலையற்க! அது சும்மா ‘இ’ அண்ணாவோட விளையாட்டு. ஏதாவது சுவாரசியமாய்
சொல்வார் மேலும், எனும் எதிர்பார்ப்பில்.

க.>

sk natarajan

unread,
May 28, 2012, 9:47:27 PM5/28/12
to thamiz...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Innamburan Innamburan
அருமையான  பதிவு ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/5/28 Innamburan Innamburan <innam...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages