" மலைகளின் எதிரி இந்திரன்-By ஆதிசைவர்"

68 views
Skip to first unread message

ஆதிசைவர்

unread,
Sep 27, 2010, 5:26:53 AM9/27/10
to mint...@googlegroups.com
தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியத்தில் பல விதமான பாவகைகளில் செய்யுள்
எழுதமுடியும்.அந்த வகையில் "சப்த சித்ர காவ்யம்" என்பதாக சமஸ்கிருத
மொழியில் பரமேஸ்வரனுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் ஒரே ஸ்லோகத்தில்
துதிக்கும்படியான ஒரு ச்லோகத்தை பழைய ஏடு ஒன்றில் கன்டேன்.உங்கள்
ரசனைக்காக அந்த ச்லோகம் இதோ
मित्रात्रिपुत्र नेत्राय त्रयीशात्रव शत्रवे |
गोध्रारि गोध्रजत्राय गोत्रात्रे ते नमो नमः |
மித்ராத்ரி புத்ர நேத்ராய த்யீசாத்ரவ சத்ரவே|
கோத்ராரி கோத்ர ஜத்ராய கோத்ராத்ரே தே நமோ நம: |
பொருள்:
மித்ர-அத்ரிபுத்ர-நேத்ர मित्र अत्रि पुत्र नेत्र என்றால் மித்ரனாகிய
சூரியனையும்,அத்ரியின் மகனாகிய சந்திரனையும் இரு கண்களாகக் கொண்டவர.இது
சிவனுக்கும்,விஷ்ணுவுக்கும் பொருந்தும்.
2.த்ரயீ,சாத்ரவ சத்ரூ त्रयी शात्रव शत्रू என்றால் வேதங்களுக்கு எதிரியான
அசுரர்களின் எதிரி<சிவனும்,விஷ்ணுவும்>
3.கோத்ராரி-கோத்ரஜ-த்ர गोध्रारि गोध्रज त्र என்றால் மலைகளுக்கு எதிரியான
இந்திரனுடைய குலத்தில் பிறந்த தேவர்களை காப்பவர்<சிவனும்,விஷ்ணுவும்>
4.கோத்ராத்ரே தே நமோ நமஹ गोत्रात्रे ते नमो नमः என்றால் பசுவை
பாலிக்கின்ற<சிவனையும்,விஷ்ணுவையும்> உனக்கு மறுபடி மறுபடி நமஸ்காரம்.
குறிப்புகள்:
1.மித்ரன் என்றால் சூரியன் என்று பொருள.அத்ரி புத்ரன் என்றால் அத்ரி
ரிஷியின் மகன் என்று பொருள்.
2.த்ரயீ- ரிக்,யஜுர்,சாம ஆகிய மூன்றும் அடங்கிய வேதத்திற்கு த்ரயீ என்று
பெயர்
3.गोध्र: கோத்ரஹ என்றால் மலை.ஆதிகாலத்தில் மலைகள் எல்லாம் இறக்கைகளுடன்
இருந்ததாகவும் அதனால் அவை பறவைகள் போல அடிக்கடி இடம்பெயர்ந்ததால் லோக
வாசிகளுக்கு கஷ்டம் ஏற்பட்டதால் இந்திரன் மலைகளுடைய இறக்கைகளை
வெட்டியதால் மலைகளின் எதிரியாக இந்திரன் கூறப்படுகிறான.
4.கோத்ராத்ரே-கோ என்றால் பசு.பசு என்பதற்கு ஆன்மாக்கள்,அனைத்து
ஜீவராசிகள் என்று பொருள்.பசுவை காப்பவன் பசுபதி<சிவன்>.
கோபாலன் க்ருஷ்ணன்<விஷ்ணு>
ஆக சூரியனையும்,சந்திரனையும் தம் இரு கண்களாக்கொண்டவரும், வேதங்களுக்கு
எதிரியான அசுரர்களின் எதிரியும்,மலைகளுக்கு எதிரியான இந்திரனுடைய வம்சமான
தேவர் குலத்தை காப்பவரும்,பசுக்களான ஜீவராசிகளை காப்பவரான
உனக்கு<சிவனுக்கு/விஷ்ணுவுக்கு>மறுபடி மறுபடி நமஸ்காரம்.
ஆக இந்த ஒரே ச்லோகத்தை சிவனுக்கும்,பெருமாளுக்கும் சொல்லலாம்.

--
Posted By ஆதிசைவர்http://aadhisaivar.blogspot.com

http://twitter.com/aadhisaivar

Tthamizth Tthenee

unread,
Sep 27, 2010, 9:43:51 AM9/27/10
to mint...@googlegroups.com
ஆஹா படிக்கவே  மனம்  குதூகலிக்கிறது
 
அரியும் சிவனும் ஒண்ணு  அறியாதவன் .......  சரி அவனை விட்டுவிடுவோம்  பாவம்
 
இது போன்ற ஒற்றுமையை வளர்க்கும் ஆய்வுகள்  அவசியம்
 
தொடருங்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2010/9/27 ஆதிசைவர் <gvs...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net


Innamburan Innamburan

unread,
Sep 27, 2010, 12:13:45 PM9/27/10
to mint...@googlegroups.com
சுவை பட இருக்கும் கவித்திறன். மற்றபடி வாசகனை பொருத்து! மச்சானும், மாப்பிள்ளையும் என்றுமே பிரிந்தவர்கள் இல்லை.


2010/9/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 27, 2010, 12:23:31 PM9/27/10
to mint...@googlegroups.com
வாசுகி கயிறை உறவுக்காராள்ட்ட குடுத்துட்டு  மத்தை கடையவிட்டு   வெளியே  வரும்  விஷத்தை  மச்சான் கையில் கொடுத்துவிட்டு அவர் பாட்டுக்கு  விஷயம் தெரியாம  வாயிலே  போட்டுண்டு  ,தங்கைக்காரி  ஓடிவந்து தடுக்கலைன்னா  என்ன ஆயிருக்கும், ஏதோ  கண்டம்
நீலமானதோட போச்சு,
 
ஆனாலும் ரெண்டு பேரும் பிரிஞ்சதே இல்லை
 
கடல்லே இறங்கும்போது  மட்டும்  கயிறை  மச்சான் கையிலே  குடுத்துட்டு
உள்ளே  முங்கி  நாலு  லோகத்தையே ரக்‌ஷிக்க தைரியமா  மச்சானை நம்பலையோ
 
அதெல்லாம் மறந்து போச்சா!
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

2010/9/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Sep 27, 2010, 12:29:59 PM9/27/10
to mint...@googlegroups.com
'விஷயம் தெரியாம'
புராண ஆதாரங்கள் சுட்டுக.

ஆகமக்கடல்

unread,
Sep 27, 2010, 9:59:05 AM9/27/10
to மின்தமிழ்
திரு தமிழ்த்தேனீ ஐயா அவர்கள் கூறியதுபோல இந்த ச்லோகம் மிக அருமை.ஆனால்
இதை படிப்பவர்கள் சமஸ்கிருதம் அறிந்தவர்களாக இருந்தாலே எங்கள் கூற்று
உண்மை என புரியும்.தொடருங்கள் ஆதிசைவரே!

ஆகமக்கடல்

unread,
Sep 27, 2010, 9:40:41 PM9/27/10
to மின்தமிழ்
இதேபோல் தமிழில் ஏதேனும் ச்லோகம் உள்ளதா?

ஆகமக்கடல்

unread,
Sep 27, 2010, 12:08:08 PM9/27/10
to மின்தமிழ்
இதுபோல் தமிழில் ஏதேனும் செய்யுள் இருந்தால் அறிஞர்கள் இந்த இழையில்
பகிரலாமே!

ஆகமக்கடல்

unread,
Sep 28, 2010, 2:16:32 AM9/28/10
to மின்தமிழ்
மலைகளின் இறக்கைகளை வெட்டியதாக எந்த புராணத்தில் வருகிறது?

devoo

unread,
Sep 28, 2010, 4:16:51 AM9/28/10
to மின்தமிழ்

கொசு - அரசன் : சிலேடை
-------------------------------------------

இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.


அரசன்:
இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.


கொசு:
இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
,
( திரு .வி. சுப்பிரமணியன் அவர்கள் - சந்தவசந்தம்)


தேவ்

On Sep 27, 8:40 pm, ஆகமக்கடல் <tve...@gmail.com> wrote:
> இதேபோல் தமிழில் ஏதேனும் ச்லோகம் உள்ளதா?
>
> Innamburan Innamburan wrote:
> > 'விஷயம் தெரியாம'
> > புராண ஆதாரங்கள் சுட்டுக.
> > இ
>

> > 2010/9/27 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
> > > வாசுகி கயிறை உறவுக்காராள்ட்ட குடுத்துட்டு  மத்தை கடையவிட்டு   வெளியே  வரும்  விஷத்தை  மச்சான் கையில் கொடுத்துவிட்டு அவர் பாட்டுக்கு  விஷயம் தெரியாம  வாயிலே  போட்டுண்டு  ,தங்கைக்காரி  ஓடிவந்து தடுக்கலைன்னா  என்ன ஆயிருக்கும், ஏதோ  கண்டம்
> > > நீலமானதோட போச்சு,
>
> > > ஆனாலும் ரெண்டு பேரும் பிரிஞ்சதே இல்லை
>
> > > கடல்லே இறங்கும்போது  மட்டும்  கயிறை  மச்சான் கையிலே  குடுத்துட்டு
> > > உள்ளே  முங்கி  நாலு  லோகத்தையே ரக்‌ஷிக்க தைரியமா  மச்சானை நம்பலையோ
>
> > > அதெல்லாம் மறந்து போச்சா!
>
> > > அன்புடன்
> > > தமிழ்த்தேனீ
>

> > > 2010/9/27 Innamburan Innamburan <innambu...@googlemail.com>


>
> > >> சுவை பட இருக்கும் கவித்திறன். மற்றபடி வாசகனை பொருத்து! மச்சானும், மாப்பிள்ளையும் என்றுமே பிரிந்தவர்கள் இல்லை.
> > >> இ
>

> > >> 2010/9/27 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
> > >>> ஆஹா படிக்கவே  மனம்  குதூகலிக்கிறது
>
> > >>> அரியும் சிவனும் ஒண்ணு  அறியாதவன் .......  சரி அவனை விட்டுவிடுவோம்  பாவம்
>
> > >>> இது போன்ற ஒற்றுமையை வளர்க்கும் ஆய்வுகள்  அவசியம்
>
> > >>> தொடருங்கள்
>
> > >>> அன்புடன்
> > >>> தமிழ்த்தேனீ
>

> > >>> 2010/9/27 ஆதிசைவர் <gvsi...@gmail.com>

ஆகமக்கடல்

unread,
Sep 28, 2010, 4:23:22 AM9/28/10
to மின்தமிழ்
அருமை ஐயா பகிர்வுக்கு நன்றி

devoo

unread,
Sep 28, 2010, 4:46:52 AM9/28/10
to மின்தமிழ்
Sep 28, 1:16 am, ஆகமக்கடல்

> மலைகளின் இறக்கைகளை வெட்டியதாக எந்த புராணத்தில் வருகிறது?<


வால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டத்தில் மைநாக மலை வாயு மைந்தரிடம் கூறுவது
-

பூர்வம் க்ருதயுகே தாத பர்வத: பக்ஷிண: அபவந் |
(123)

........................................................................................................
தத: க்ருத்த: ஸஹஸ்ராக்ஷ: பர்வதாநாம் சதக்ரது: |
பக்ஷாந் சிச்சேத வஜ்ரேண தத்ர தத்ர ஸஹஸ்ரச: || 125 ||

( முன்பு க்ருத யுகத்தில் மலைகளுக்குச் சிறகு இருந்தது. அவை தொல்லை
தந்தன. அதனால் சினம் கொண்ட இந்திரன் வஜ்ராயுதத்தால் ஆயிரக்கணக்கில்
அம்மலைகளின் சிறகை வெட்டினான் )

தேவ்

coral shree

unread,
Sep 28, 2010, 8:08:48 AM9/28/10
to mint...@googlegroups.com
ஆஹா, அருமையான விளக்கங்கள்....வால்மீகி இராமாயணத்தில் தங்களுக்குள்ள ஆழ்ந்த ஞானம் வியக்கச் செய்கிறதுங்க..... வாழ்த்துக்கள்.

2010/9/28 devoo <rde...@gmail.com>

--

devoo

unread,
Sep 28, 2010, 9:31:15 AM9/28/10
to மின்தமிழ்
ஆழ்ந்த ஞானம் எல்லாம் கிடையாது அம்மா ; பல வலைத் தளங்களை மெலெழுந்த
வாரியா பார்க்கிறேன், அவ்வளவுதான். பல மூல நூல்கள் வலையேற்றம்
கண்டுள்ளன; நேரம் செலவழித்து அவற்றைப் பார்வையிட வேண்டும -

http://valmikiramayan.net/

http://www.sacred-texts.com/hin/maha/index.htm

http://www.scribd.com/

இங்கு ஆதிசைவர் ஐயா கூறும் ச்லோகம் சப்தசித்ர வகை சேர்ந்தது என்று
கொள்ளலாம். ஆநந்தவர்தநர் என்பவர் எழுதிய ’த்வந்யாலோகம்’ விவரிக்கும்
சித்ரகாவ்யம் சப்தசித்ரம், அர்த்தசித்ரம் என இருவகைப்படும். பட்டநாயகர்
என்னும் அறிஞர் இவர் கூறுவதை மறுக்கிறார். அபிநவ குப்தர் என்பவர்
ஆநந்தவர்தநர் கூறுவதை ஆதரித்து மேலும் வலிமையாக அதை நிறுவுவார். ஒரு
ஹிந்தி வலைப்பூவில் பார்த்தேன். நீங்கள் ஹிந்தி ஸாஹித்யமும் தெரிந்தவர்
என்பதால் இது பற்றிக் கூற முற்பட்டேன் -

http://raj-bhasha-hindi.blogspot.com/2010/05/12.html

தேவ்

coral shree

unread,
Sep 28, 2010, 10:06:39 AM9/28/10
to mint...@googlegroups.com
நன்றி சார். நானும் பார்க்கிறேன்.

2010/9/28 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

ஆகமக்கடல்

unread,
Sep 28, 2010, 12:46:44 PM9/28/10
to மின்தமிழ்
மூல ச்லொகத்தை தேடிபிடித்து வெளியிட்ட தேவ் ஐயா அவர்களுக்கு என் சிரம்
தாழ்ந்த நமஸ்காரங்கள்

ஆதிசைவர்

unread,
Sep 28, 2010, 1:00:42 PM9/28/10
to மின்தமிழ்
திரு தேவ் ஐயா அவர்களுக்கு என் நன்றிகள். மலைகளின் இறக்கைகளை வெட்டிய
விஷயம் எந்த புராணத்தில் வருகிறது?என திரு ஆகமக்கடலார் கேட்டதற்கு,நான்
பதில் கூற யோசித்துக்கொண்டிருந்தேன்.ஏனெனில் நான் இவ்விஷயத்தை
காளிதாசரின் குமாரசம்பவத்தில் மைனாக மலை சம்பாஷணையில் படித்ததாக
ஞாபகம்.ஆனால் இவர் புராண ப்ரமானம் கேட்கிறாரே என்று.தக்க சமயத்தில்
ப்ரமான ச்லோகமும் விளக்கமும் அளித்தமைக்கு என் நன்றிகள்

On Sep 28, 1:46 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Sep 28, 1:16 am, ஆகமக்கடல்
>
> > மலைகளின் இறக்கைகளை வெட்டியதாக எந்த புராணத்தில் வருகிறது?<
>
> வால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டத்தில் மைநாக மலை வாயு மைந்தரிடம் கூறுவது
> -
>
> பூர்வம் க்ருதயுகே தாத பர்வத: பக்ஷிண:    அபவந்   |
> (123)
>

> ...........................................................................­.............................

devoo

unread,
Sep 29, 2010, 1:15:54 AM9/29/10
to மின்தமிழ்
நான் இன்னும் புராண ஆதாரம் தரவில்லை , ஐயா.
ஸ்ரீ ராமாயண , மஹாபாரதங்கள் இதிஹாஸத்தோடு சேர்ந்தவை.
இந்த நிகழ்வு பற்றிய குறிப்பு மறையிலும் எங்காவது இருக்கக் கூடும்


தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages