தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள்

328 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 17, 2023, 10:15:00 PM9/17/23
to மின்தமிழ்
ref : https://www.facebook.com/subashini.thf/posts/pfbid08VzDtUgD9ZTL3VDpYVs1G9q5yQKVUz3fwCHT1ZGetLrVgmymZrTeoQ5TWjDyu3kRl


நெதர்லாந்தில் லைடன் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படும் ஆனைமங்கலம் செப்பேடுகள் பற்றியும் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் குலோத்துங்க சோழன் பற்றிய தரவுகளையும் உள்ளடக்கிய ஆய்வு நூலான எனது ராஜராஜனின் கொடை என்ற நூலை நேற்று தோழர் பீர்முகமது அவர்கள் திறனாய்வு செய்தார்.
இந்த நிகழ்வு எக்மோர் புக் ஹவுஸ் நிலையத்தில் சென்னை புக் கிளப் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மிக ஆழமான செறிவான திறனாய்வினைத் தோழர் பீர் முஹம்மது அவர்கள் வழங்கினார்கள்.
book club book review.jpg
நிகழ்ச்சியைத் திறம்பட ஏற்பாடு செய்து நடத்திய சென்னை புக் கிளப் பொறுப்பாளர் ஜாய்சி, கிருபா, பிரேம் மற்றும் தோழர் ஒளிவண்ணன் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
book club book review2.jpg

திறனாய்வு உரையின் காணொளி :
____________________________________________________________________
இந்த நூல் கிடைக்குமிடம்:
__________________________________________________________________________

தேமொழி

unread,
Sep 20, 2023, 4:03:32 PM9/20/23
to மின்தமிழ்
Ref: https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02ejFHhprK7pGg7bNA25y73biL99TdsRL5Gb74GHRKYF7CFBm53aLBfX3dMCexFnywl

வரலாற்று ஆய்வில் களப்பணிகள் - ஒரு பாராட்டுரை
நரசய்யா
இந்நூல் திருமதி சுபாஷினியால் இவ்வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கையேடு. ஆம்; இதை நூல் என்று கூறுவதை விட ஒரு வழிகாட்டிக் கையேடு என்று குறிப்பிடுவதுதான் உத்தமம் என்று நான் நினைக்கிறேன்.
காலஞ்சென்ற திரு சோ. சிவபாதசுந்தரம் ஒலிபரப்புக் கலை என்ற ஒரு நூலை 50களில் வெளியிட்டார். இலங்கையிலும் இங்கிலாந்திலும் அவர் ஒலிபரப்பு வல்லுனராகப் பணியாற்றியவர். இலண்டன் பி பி சி யின் தமிழ் ஓசை என்ற நிகழ்வை ஆரம்பித்து அதை அவர் பல வருடங்கள் நிகழ்த்தியவர். ஆகையால் அவருக்கு ஒலிபரப்புக் கலையில் நல்ல பரிச்சியமும் அறிவாற்றலும் இருந்தது. அந்நூலுக்கு ஒரு முன்னுரை எழுத வேண்டி திரு இராஜகோபாலாச்சாரியாரை சிவபாதசுந்தரம் அணுகினார்.
முதலில் இராஜாஜி ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் நூல்களுக்குச் சாதாரணமாக முன்னுரை எழுதுவதில்லை. தவிரவும் அவருக்கு ஒலிபரப்புக் கலையைப் பற்றிய தெளிவான விவரங்களும் தெரியாது. ஆனால் தொடர்ந்து சிவபாதசுந்தரம் வேண்டிக் கொண்டதால் அவர் “நூலை வைத்துவிட்டுச் செல்லுங்கள். படித்துப் பார்க்கிறேன். பின்னர் சொல்கிறேன்” என்று சொன்னாராம். (இவ்விவரங்கள் சிவபாதசுந்தரமே சொன்னவை) சில நாட்களில் இராஜாஜியே ஆசிரியரை அழைத்து, “இந்நூலுக்குப் பெயரை மாற்றி, ரேடியோ வாத்தியார் என்று வைக்கலாம். ஏனெனில் இந்நூல் மூலம் சாதாரண மனிதர்கள் கூட ஒலிபரப்புக் கலையைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கின்றது” என்றாராம். அதையே பொருளாக வைத்து ஒரு நல்ல முன்னுரையையும் வழங்கினார்.
சுபாஷிணியின் வரலாற்று ஆய்வில் களப்பணிகள் என்று நூலுக்கு களப்பணிகளுக்கு ஒரு வழிகாட்டி என்றே பெயர் வைக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இதை நான் உணர்வு பூர்வமாகக் கூறுகிறேன். அதற்கு ஒரு பின்னணியும் உண்டு.
சென்னைக்குப் புலம் பெய்ர்ந்த பின்னர் நான் வரலாற்று அறிவை வளர்க்கலானேன். அதற்காக எனது மாமாவான சிட்டி சுந்தரராஜனை அணுகினேன். அவர் அதற்குச் சரியான மனிதர் திரு ஐராவதம் மஹாதேவன் என்றார். ஆகையால் எனது வரலாற்று நூல்களுக்கு நான் களப்பணிகள் மேற்கொள்வதற்கு முன் திரு ஐராவதம் மஹாதேவனைத் தொடர்பு கொண்டேன். அவர் விரிவாக சில முக்கிய விஷயங்களை விளக்கியதுடன் மாமண்டூர் பல்லவ குகை, தமிழ் பிராமி கல்வெட்டு காண அழைத்துக் கொண்டு சென்றார்.
குகைகளுக்குச் செல்கையில் எவ்வாறு முதலில் நாம் நம்மையே தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கூறினார். காலணிகள் முதல், குறிப்பெடுக்க எவையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார். அதற்காக ஒருநாள் முழுதும் நான் அவருடன் மாமண்டூர் சென்று பல்லவர் குகைகளையும் சமணப் படுக்கைகளையும் கண்டோம். அவ்வழியில்தான் எனது களப்பணி ஆய்வுகள் தொடர்ந்தன.
ஆகையால் இந்நூலைப் படிக்கும் போது எனக்கு அதில் ஒரு சொந்தமான ஈர்ப்பு உண்டானது. இந்நூலின் முதல் பகுதி களப்பணியை அறிமுகப் படுத்துகிறது. அதன் முக்கியத்துவத்துடன் தொடங்கி அதற்கு வேண்டிய உபகரணங்கள், மற்றும் மேற்கொள்ளவேண்டிய பணிகள், அதற்கு வேண்டிய கேள்விகள் தயாரித்தல், (இது மிகவும் முக்கியமெனக் கருதுகிறேன்; ஏனெனில் பலர் கள ஆய்வுப் பணியின் போது அங்குள்ள மனிதர்களிடம் கேட்க வேண்டியவை என்னவென்று சரியாகத் தயார் செய்து கொண்டு செல்லாமல், பின்னர் அதைக் குறித்துக் கவலைப் படுவதைக் கண்டுள்ளேன்.)
அவர் சொல்வது போல, பலர், ஓரிரு நூல்கள் படித்துவிட்டு பட்டம் பெற்றிருப்பதையும் நான் அறிவேன். அறிமுகத்திலேயே ஆய்வு என்பதைத் தீர்மானமாகக் கூறுகிறார். கள ஆய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும், அதற்கான ஒரு கள ஆய்வுக் குறிப்பேட்டின் மாதிரி ஒன்றையும் தயார் செய்துள்ளார். இது ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பரிசென்றே சொல்லலாம்.
இயல் இரண்டில் தாம் மேற்கொண்ட ஐந்து களப்பணிகளின் விவரங்களைத் தந்துள்ளார். படிப்பதற்குச் சுலபமாகவும், நல்ல விவரங்களைத் தருவதாலும், ஒரு சிறந்த பயண நூல் படிக்கும் மகிழ்வை இது தருகிறது.
மொத்தத்தில் தமிழ் நாட்டு இளைய ஆய்வாளர்களுக்கு, முதலிலேயே சொன்னது போல இது ஒரு கையேடென்றே சொல்லத் தோன்றுகிறது.
இராஜாஜி சிவபாதசுந்தரத்திற்குச் சொன்னது போல இந்நூலுக்குக் களப்பணி வழிகாட்டி என்றே பெயர் வைக்கலாம். கல்லூரிகளின் நூலகங்களுக்கு இந்நூலைப் பரிந்துரைக்கலாம்.
---


தேமொழி

unread,
Sep 21, 2023, 4:01:43 AM9/21/23
to மின்தமிழ்
Ref :    https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02J14bE6NKTzw6enCQ1Bs7jNGiLxX1rJbEiELVwmwvvYAoi7DycvDEqugydFMM5UU3l


தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்கள்..
பல்வேறு புதிய தகவல்களுடன்..!
இந்த அனைத்து நூல்களையும் இணையம் வழி பெற
அல்லது

THFi Books.jpg
---------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 28, 2023, 11:50:29 PM9/28/23
to மின்தமிழ்
THFi Books at Virginia Library.jpeg
📌 விர்ஜினியா நகர நூலகத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை நூல்களையும் ஏனைய சில நூல்களையும் இணைத்து நன்கொடையாக வாங்கி வழங்கிய அமெரிக்க வாழ் தோழர் திரு கோபி அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி 💖🙏🏼
முனைவர் க. சுபாஷிணி
#WhatsappShare

தேமொழி

unread,
Oct 12, 2023, 8:24:27 PM10/12/23
to மின்தமிழ்
Madurai Bok Fair.jpg
மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ‘புத்தகத் திருவிழா’ நடைபெறுகிறது. 

புத்தகத் திருவிழாவில் . . . 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பதிப்பக
நூல்கள் கிடைக்குமிடம் :
எமரால்டு பதிப்பகம் — அரங்கு எண் - 187
Emerald Publishers  —  Stall number: 187

தேமொழி

unread,
Oct 16, 2023, 2:00:05 AM10/16/23
to மின்தமிழ்
மதுரை தமுக்கத்தில் 22-ம் தேதி வரை ‘புத்தகத் திருவிழா’ நடைபெறுகிறது. 

புத்தகத் திருவிழாவில் . . . 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பதிப்பக
நூல்கள் கிடைக்குமிடம் :
எமரால்டு பதிப்பகம் — அரங்கு எண் - 187
Emerald Publishers  —  Stall number: 187

madurai.jpeg

emerald.png
___________________________________________________________________________

தேமொழி

unread,
Dec 1, 2023, 9:29:54 PM12/1/23
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகப் பிரிவின் தயாரிப்பில் தற்சமயம் 4 நூல்கள் தயாராகி வருகின்றன. 

1. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் -  தொகுதி 1  - பேரா.ப.பாண்டியராஜா
2. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் - தொகுதி 2 - பேரா.ப.பாண்டியராஜா
3. கொரியாவில் தமிழ்த் தடங்கள் - நா.கண்ணன்
4. பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம் - அ.க.ஈஸ்வரன்

2024 ஜனவரி மாதம் இந்த நான்கு நூல்களும் உங்களுக்குத் தயாராகிவிடும்.

-- சுபா 
#WhatsAppShare

தேமொழி

unread,
Dec 7, 2023, 6:42:17 PM12/7/23
to மின்தமிழ்


Eeswaran Book Cover.png
வாசகர்களே...
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவின் அடுத்த வெளியீடு உங்களுக்காக.

அ.கா.ஈஸ்வரன் எழுதிய
”பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்”

இம்மாத இறுதி முதல் கிடைக்கும். இணையம் வழி நூலைப் பெறலாம். அறிவிப்புக்குக் காத்திருக்கவும்.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவு

___________________________________________________________________________

தேமொழி

unread,
Dec 13, 2023, 11:47:53 PM12/13/23
to மின்தமிழ்
dr pandiyaraja book patthupaddu 1.jpeg
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக பிரிவின் அடுத்த வெளியீடு. 
பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்களது நூல்.

-- சுபா 
#WhatsAppShare

தேமொழி

unread,
Dec 30, 2023, 1:03:20 AM12/30/23
to மின்தமிழ்
பார்க்க:   https://www.facebook.com/photo/?fbid=3806840872892615&set=a.1631001437143247


eswaran book.jpeg
அச்சாகி தயாராகிவிட்டது..
நூலாசிரியர் அ.கா.ஈஸ்வரன் எழுத்தில்

பொருள் முதல் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்

விலை ரூபாய் 180/-

நூலைப் பெற கீழ்காணும் இணைய நூல் விற்பனையாளர்களைத் தொடர்பு கொள்க.

https://www.commonfolks.in/books/tamil-heritage-Tamil Heritage Foundation

https://wisdomkart.in/books.../tamil-heritage-foundation/
***

தேமொழி

unread,
Jan 2, 2024, 2:30:56 PMJan 2
to மின்தமிழ்
குழுவினர் கவனத்திற்கு . . .
சென்னை புத்தகக் கண்காட்சியில் 
(சென்னை   ஒய். எம். சி. ஏ  - நந்தனம்: ஜனவரி 3 - ஜனவரி 21, 2024)
 
தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள்
கீழ்க்காணும்  புத்தகக் கடைகளில்  கிடைக்கும்:
✔  எமரால்ட் & எழிலினி - அரங்க எண் F58 & 459
✔  ஜெய்பீம் ஃபவுண்டேஷன் - அரங்க எண்  101
✔  ஆழி பதிப்பகம் - அரங்க எண் 501-502
book fair.jpg
அனைவரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்று 
தமிழ் மரபு அறக்கட்டளை  நூல்களை வாங்கிப் பயன்பெறவும் 

47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
நந்தனம் ஒய். எம். சி. ஏ  மைதானம்
ஜனவரி 3 — ஜனவரி 21, 2024
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 9, 2024, 5:27:07 PMJan 9
to மின்தமிழ்
dr pandiya raja book 2.jpeg
பேராசிரியர் ப பாண்டியராஜா அவர்களது பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் தொகுதி -2 
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவின் வெளியீடாக  அடுத்த  வாரம் முதல் கிடைக்கும்.
நூலின் அட்டைப் படத்தில் இடம்பெறும் ஓவியம் இலங்கை மட்டக்களப்பு ஈஸ்வரராஜா குலராஜா அவர்களின் இயற்கைக் காட்சி ஓவியம். 
நூலின் அட்டை தயாரிப்பு எழுத்தோவியர் நாணா.
- முனைவர் க. சுபாஷிணி 
________________________________________________________________________________________

தேமொழி

unread,
Jan 13, 2024, 6:53:40 PMJan 13
to மின்தமிழ்
rajarajan kodai translation.jpeg
ராஜராஜனின் கொடை - வேற்று மொழியில் மொழிபெயர்ப்புக்காக இன்று கையெழுத்திடப்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
--முனைவர் க. சுபாஷிணி 
#WhatsappShare

தேமொழி

unread,
Jan 16, 2024, 9:03:42 PMJan 16
to மின்தமிழ்
suba book.jpeg

தமிழர் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ் நிலத்திலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்றனர். உலகத் தமிழரின் தொடர்ந்த பயணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா..?
1. பண்டைய கிரேக்க ரோமானியரோடு வணிகம்
2. பௌத்த சமய பரவலாக்கப் பின்னனி
3. பல்லவர், சோழர், பாண்டியர் கால பயணங்கள்
4. பொ.ஆ 14ஆம் நூற்றாண்டு கால பயணம் குறிப்பாக மரைக்காயர், லப்பை, சோளிய இஸ்லாமிய வணிகர்கள், தமிழ் வணிகர்களின் பயணங்களினால் ஏற்பட்ட புலம்பெயர்வு
5. அச்சு இயந்திரம் - அச்சுப்பதிப்பாக்கம் உருவாக்கிய புலப்பெயர்வுகளுக்கான தேவைகள்
6. அடிமை வணிகம் - இதன் வழி ஏற்பட்ட பேரளவிலான தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
7. ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
8.யாழ்ப்பாணத் தமிழரின் ஆங்கிலேயர் காலனித்துவ கால புலப்பெயர்வுகள், இலங்கை போர் காலத்தில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள்..
9. 20ஆம் நூற்றாண்டில் - பர்மா மக்கள் நாடு திரும்புதல், மத்திய கிழக்காசியா, ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் இந்திய நாடுகடந்த அரசு
10. உலகத் தமிழாய்வுகளில் தனிநாயகம் அடிகளின் பங்களிப்புகள், அண்மைய புலம்பெயர்வுகள், இன்றைய நிலை
என 10 அத்தியாயங்களில் தமிழரின் 2500 ஆண்டுகால புலப்பெயர்வுகளை விவரிக்கின்றது இந்த நூல்.
நூலாசிரியர்: க.சுபாஷிணி
விலை: 450/- ரூ
சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 101இல் நூல் கிடைக்கும்.

இணையம் வழியாக . . .
-சுபா

தேமொழி

unread,
Jan 18, 2024, 5:02:29 AMJan 18
to மின்தமிழ்
ref:  https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0QJsj1yJWpZ1a9wQsks4PLkYrucEsnBEpRxEDwZvAmh8YTBGJPyxk6u9EZnxsBH34l


தமிழ் நூல் வாசகர்களே...
உங்கள் வாசிப்பிற்கு 3 புதிய சங்கத் தமிழ் நூல்களை கொண்டு வருகிறது தமிழ் மரபு அறக்கட்டளை.
1. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் - தொகுதி 1 - விலை ரூ 250/-
2. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் - தொகுதி 2 - விலை ரூ 250/-
3. நக்கீரர் நடைப்பயணம் - விலை ரூ 180/-
இந்த மூன்று நூல்களையும் நீங்கள் வருகின்ற சனிக்கிழமை முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் பெறலாம்.
அல்லது இணையம் வழி பெறலாம்
இணையம் வழி பெற :
அல்லது வருகின்ற திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள புத்தகத் திறனாய்வு அரங்கில் பெறலாம்.
மிக அழகிய வாசிப்பு அனுபவத்தையும் மனமகிழ்ச்சியையும் இந்த நூற்கள் உங்களுக்கு வழங்கும்.
அன்புடன்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவு

dr pandiyaraja book patthupaddu 1.jpeg
dr pandiyaraja book patthupaddu 2.jpeg
dr pandiyaraja book nakkeerar nadai payanam.jpeg
________________________________________________________________________________________

தேமொழி

unread,
Jan 18, 2024, 11:16:07 PMJan 18
to மின்தமிழ்
Subashini Thf

"ராஜராஜனின் கொடை - ஆனைமங்கலம் செப்பேடுகள், சோழப் பேரரசுக்கும் ஸ்ரீவிஜயப் பேரரசுக்குமான வணிகத் தொடர்புகள், நாகப்பட்டின சூளாமணி விகாரை மற்றும் கடாரப் படையெடுப்பு"
என்ற தலைப்பில் அமைந்த எனது நூல் சென்னை அனைத்துலக புத்தகக் கண்காட்சியில்
அரபு
மலாய்
ஆங்கிலம்
ஆகிய மூன்று மொழிகளில் மொழிபெயர்ப்பதற்குக் கையெழுத்திடப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மனமகிழ்கிறேன். இப்பணியில் இணைந்து செயலாற்றிய இனிய தோழர் பீர் முகமது அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
இந்த நூல் சோழப் பேரரசு நிகழ்த்திய கடாரப் படையெடுப்பு பற்றிய விரிவான தகவல்களை வழங்கும் ஒரு நூல். நெதர்லாந்தின் லைடன் நகருக்கு ஆனைமங்கலம் செப்பேடுகள் எப்படி சென்றடைந்தன... அச்சிப்பேடுகள் கூறுகின்ற செய்திகள்... அதேபோல சூளாமணி விகாரையின் வரலாற்றையும் அதன் சிதைவு எப்படி நடந்தது என்பதை பற்றிய விரிவான விளக்கத்தையும் வழங்குகின்ற ஒரு நூல். இந்த மொழிபெயர்ப்புகளின் வழி இந்த வரலாற்றுச் செய்திகள் ஆங்கிலம் மலாய் மற்றும் அரேபிய நூல் வாசகர்கள் மத்தியில் சென்றடையும் என்பது மகிழ்ச்சி.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகத்தின் வெளியீடாக இந்த நூல் வந்துள்ளது.
தற்சமயம் நடந்து கொண்டிருக்கின்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூல் அரங்கு எண் 101 (ஜெய்பீம்), எமரால்ட் (F58), ஆழி (501-502) ஆகிய அரங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இணையம் வழி பெற : https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
-சுபா

peer suba book.png
peer -suba book.png
-----------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jan 19, 2024, 8:23:32 PMJan 19
to மின்தமிழ்
ref: https://www.facebook.com/photo/?fbid=3820934224816613&set=a.1631001437143247


அண்மையில் எனது புதிய நூலான தமிழர் புலப்பெயர்வு உலகளாவிய பயணங்கள் குடியேற்றங்கள் வரலாறு என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் நூல் பற்றிய செய்தியை பேஸ்புக் பக்கத்தில் நான் பகிர்ந்த போது யாழ்ப்பாணத்திலிருந்து சில நண்பர்கள் இந்த நூல் யாழ்ப்பாணத்தில் எப்படி கிடைக்கும் என்று கேட்டிருந்தார்கள்.

அவர்களது வாசிப்பிற்காக இந்த நூலின் ஒரு பிரதி யாழ்ப்பாணம் நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் சென்று தமிழ் மரபு அரக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் கதிரவன் யாழ்ப்பாணம் நூலகத்தில் இன்று வழங்கினார்.

யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற தமிழ் அலுவலர்கள் யாழ்ப்பாண நூலகத்திலிருந்து இந்த நூலை பெற்று வாசிக்கலாம்.
jaffna library.png
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Feb 3, 2024, 1:18:39 PMFeb 3
to மின்தமிழ்
ref:  https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0EiEvS9VTPeKduDw97PVPd1dtHKcRMZ8pxUjVqqHiKkwt5KNHYSauVrjdk42VjJa7l


ராஜராஜனின் கொடை -ஆனைமங்கலம் செப்பேடு, கடாரப் படையெடுப்பு என்ற தலைப்பிலான எனது ஆய்வு நூல் அரேபிய மொழிக்கு மொழிபெயர்ப்பாகின்றது.
இந்த மொழிபெயர்ப்பு ஏற்பாடுகளைச் செய்த தோழர் பீர்முகமது மற்றும் இந்த மொழிபெயர்ப்பைச் செய்யவிருக்கின்ற மேனாள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரேபிய மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் பஷீர் அகமது ஜமாலி அவர்களும் இன்று இல்லம் வந்திருந்தார்கள்.
ராஜராஜனின் கொடை என்ற நூலின் தலைப்பையும் அதோடு நூலாசிரியரான எனது பெயர் இரண்டையும் அரேபிய மொழியில் எழுதப்படுவதைக் காண்பதே மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த நூல் ஆங்கிலம் அரேபிய மொழி மற்றும் மலேசிய மலாய் மொழி ஆகிய மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளது.
-சுபா
suba book translation.png
suba book translation2.png
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

K R A Narasiah

unread,
Feb 3, 2024, 8:05:46 PMFeb 3
to mint...@googlegroups.com
Congratulations Subha

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/84ba060c-60ee-4c54-ae17-38bef3396dc8n%40googlegroups.com.

தேமொழி

unread,
Feb 5, 2024, 8:44:13 PMFeb 5
to மின்தமிழ்
Kannan Book.jpeg
விரைவில் எதிர்பாருங்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவின் அடுத்த வெளியீடு.
பேராசிரியர் நா.கண்ணனின் கள ஆய்வுகளின் அடிப்படையில் வெளிவரும் கொரிய-தமிழ்த் தொடர்புகளை ஆய்வுப்பூர்வமாக அலசும் ஓர் ஆய்வு நூல்.
--சுபா 
#வாட்சப்செய்தி 

தேமொழி

unread,
Feb 6, 2024, 3:19:18 PMFeb 6
to மின்தமிழ்
ref:  https://www.facebook.com/photo/?fbid=1099562334412950&set=a.746427666393087



தமிழ் மரபு அறக்கட்டளையின் புதிய வெளியீடு

"தமிழர் புலப்பெயர்வு: உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு" எனும் நூலினை முனைவர் க. சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை மூலம்
வெளியிட்டிருக்கிறார். ராயல் அளவில் 370 பக்கங்கள், விலை ரூ 500, நேர்த்தியான தயாரிப்பு. வரலாறு நெடுக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்நூலினைக் காணிக்கையாக்கியிருக்கிறார்.

தமிழர்கள் இன்று 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளனர். தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு இல்லை என்றாலும், தமிழர்கள் இல்லாத நாடு இல்லை எனலாம். உலகம் தழுவிய நாடுகளில் தமிழர்களின் இருப்பும் வாழ்வும் பெருமதியானதாக உருவெடுத்துள்ளன. இச்சூழலில் தமிழர்கள் இன்று "உலகத் தமிழர்" எனும் ஒரு புதிய அடையாளத்தை ஏற்றுள்ளனர்.

தமிழர்களின் இந்தப் பல நூற்றாண்டுக் காலப் புலப்பெயர்வை இந்நூலில் முனைவர் சுபாஷிணி ஆராய்ந்துள்ளார். இதனை நூலாசிரியர் பல்துறை கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறார். ஒரு புதிய வரலாறெழுதியலையும் சாத்தியப்படுத்தி இருக்கிறார். சுபாஷினி அவர்கள் தொகுத்துள்ள தரவுகளும், அவற்றை ஆழ்ந்து அலசும் நுட்பத் திட்பங்களும், எடுத்துரைக்கும் நடையியலும் தனித்துவமானவை. ஒரு தேர்ந்த முறையியலை இந்த நூலில் கையாண்டிருக்கிறார்.

இந்த நூல் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கிறது. மிகக் கடுமையான தேடுதலையும் உழைப்பையும் இதில் காண முடிகிறது. உலகத் தமிழர் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. அறிவின் பயனாக இந்த நூல் மிளிர்கிறது.

நூலாசிரியர் சுபாஷினி அவர்கள் பல சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றவர். அவரது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் பல சிறந்த நூல்களை வெளியிட்டுள்ளது. அனைத்தும் அறிவுப் பெட்டகங்கள். அவற்றில் "தமிழர் புலப்பெயர்வு" முதல் வரிசையில் நிற்கிறது. முனைவர் சுபாஷணியின் ஆய்வுப் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

தேமொழி

unread,
Feb 13, 2024, 1:25:19 AMFeb 13
to மின்தமிழ்
thiruvalluvar yar.jpg
நமது பதிப்பக வெளியீடுகளில் ஒன்றான "திருவள்ளுவர் யார்" என்ற நூலின் திறனாய்வு இன்று நடைபெற உள்ளது. குழுவில் உள்ளவர்கள் கலந்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேமொழி

unread,
Feb 16, 2024, 10:49:10 PMFeb 16
to மின்தமிழ்
Kannan Korea Tamil Book.png

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவரவிற்கும் நமது புதிய நூல்..
பேராசிரியர் நா.கண்ணனின் கள ஆய்வுகளின் அடிப்படையில் வெளிவரும் கொரிய-தமிழ்த் தொடர்புகளை ஆய்வுப்பூர்வமாக அலசும் ஓர் ஆய்வு நூல்.
கொரியாவில் தமிழ்ச் சுவடுகள்
நா. கண்ணன்

இந்நூல் தமிழ்நாட்டிற்கும் கொரிய நாட்டிற்குமான ஆதி தொடர்புகளை ஆய்வப் பூர்வமாக கொரிய-தமிழ்த் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் நூலாகும்.

தேமொழி

unread,
Feb 20, 2024, 8:34:11 PMFeb 20
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடு 
பேராசிரியர் நா.கண்ணனின் கள ஆய்வுகளின் அடிப்படையில் வெளிவரும் 
கொரிய-தமிழ்த் தொடர்புகளை ஆய்வுப்பூர்வமாக அலசும் ஓர் ஆய்வு நூல்.
கொரியாவில் தமிழ்ச் சுவடுகள்
நா. கண்ணன்


kannan  korea book.jpeg

இப்போது விற்பனையில்..
இணையம் வழி நூலைப் பெற..
10% கழிவு விலையில் நூலைப் பெற WISDOMKART10 என்ற கோட் பயன்படுத்துங்கள்
அல்லது
______________________________________________________________________

Dr. Mrs. S. Sridas

unread,
Feb 20, 2024, 10:31:38 PMFeb 20
to mint...@googlegroups.com
அன்புள்ள முனைவர் தேமொழி,

வணக்கம்.
எனது முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவிகள் சிதம்பரம் அண்ணாமலையில் இப்போ இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் 5 நாட்களில் திரும்பி வருகிறார்கள். 
சென்னையில், இந் நூலை எங்கே பெற்றுக் கொள்ளலாம்? சிதம்பரத்தில் கொள்வனவு செய்யும் வசதி உண்டா என்று அறியத்தருவீர்களா?
நன்றி
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 20, 2024, 11:17:15 PMFeb 20
to மின்தமிழ்
வணக்கம், 
 
கீழ்க் காணும்  முகவரியில் உள்ள  . . . 
திசை புத்தக நிலையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் அனைத்தும் கிடைக்கும் முனைவர் ஸ்ரீதாஸ் 

Thisai Book Store
5/9, Parthasarathy Pettai Street, Anna Salai, 
Teynampet, Chennai, Tamil Nadu 600086, India

நன்றி 
அன்புடன் 
தேமொழி 

Dr. Mrs. S. Sridas

unread,
Feb 22, 2024, 7:44:03 AMFeb 22
to mint...@googlegroups.com
நன்றி, அம்மா.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



தேமொழி

unread,
Apr 7, 2024, 1:24:47 AMApr 7
to மின்தமிழ்

தேமொழி

unread,
Apr 21, 2024, 4:19:48 AMApr 21
to மின்தமிழ்

புத்தக நாள் விழாவை ஒட்டி 20-23 ஏப்ரல் சென்னை எக்மோரில் அமைந்துள்ள எக்மோர் புக் ஹவுஸ் நிலையத்தில் நூல்கள் 30% தள்ளுபடி விலையில் விற்பனையாகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் இங்கு வாசகர்கள் வாங்கி பயன்பெற கிடைக்கும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்றே செல்லுங்கள்.
நூல்களை வாங்கி வாசித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாசிப்பு ஒரு சுகமான அனுபவம். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு அனுபவம்!

books.jpg
books 2.jpeg
books 1.jpeg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Reply all
Reply to author
Forward
0 new messages