அவ்வையார் பாடலில் பொருள் குற்றம் ??

12,142 views
Skip to first unread message

Prakash Sugumaran

unread,
Jan 9, 2013, 12:19:55 AM1/9/13
to mintamil, தமிழ் சிறகுகள், Panbudan

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும் 

நெல் உயர குடி உயரும்

குடி உயர கோல் உயரும் 

கோல் உயர கோன் உயர்வான்

அவ்வையாரின் இந்த பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக தோன்றுகிறது. வரப்பின் உயரம் நிலத்தின் தன்மையை பொறுத்தது. இஷ்டம் போல உயர்த்திக் கொள்ள முடியாது. அப்படி உயரமான வரப்பு இருந்தாலும் அதன் உயரத்துக்கு ஏற்ப நீரை நிரப்பினால் அது குட்டையாகவோ குளமாகவோ ஆகி விடும். அதில் பயிர் செய்ய முடியாது. நீர் அதிகமாக இருந்தால் நெல் விளையாது. அழுகிவிடும். நீர் உயர உயர நெல்லும் உயர நெல், தாமரை கொடியல்ல........... விவரம் அறிந்தவர்கள் தெளிவிக்கவும்.

ஒன்று மட்டும் புரிகிறது. இன்று போல அன்றும் மெத்தப் படித்தவர்கள் என்பாருக்கும், சராசரி உலக நடைமுறை வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவாகிறது.



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Karuannam Annam

unread,
Jan 9, 2013, 12:31:47 AM1/9/13
to mint...@googlegroups.com
உயர என்றால் இவ்விடத்தில் உயரம் கூடுவதைக் குறிக்கவில்லை. வரப்பு எடுப்பிப்பதை, அமைவதைக் குறிக்கிறது என எண்ணுகிறேன். வரப்பு அமைந்தால் நீர் தேங்கும்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
2013/1/9 Prakash Sugumaran <praka...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன்

unread,
Jan 9, 2013, 1:50:45 AM1/9/13
to tamizhs...@googlegroups.com, mintamil, Panbudan

வரப்பு, (p. 915) [ vrppu, ] s. [pl. வரப்புகள்.] A ridge to retain water in corn-fields, வயல்வரம்பு. (c.) 2. A limit, border, எல்லை.

வரப்புப்போட, inf. To make ridges.
வரப்புள், s. A rice-field, வயல். (சது.)

வரம்பு, (p. 915) [ vrmpu, ] s. A low ridge in a tilled piece of ground, as வரப்பு. 2. (சது.) A boundary, limit, extent, எல்லை. (நீதி.) 3. A way, வழி. 4. (R.) A brim, விளிம்பு. வரம்புயரநீருயரும். As the ridges are raised, the water will rise.

****


வரப்பு என்பது வயலுக்கு மட்டும் என்று எண்ணினால் உங்கள் பதில் சரியானது.   நீர்நிலைகளின் எல்லைகள், அதிகரிக்க அது சுற்றி இருக்கும் வயல்வெளியில் நெல்லும் செழித்து வளரும்.  வரப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் சரியாகப் பார்த்து விட்டால்  அவ்வையார் சொன்னது சரியாக விளங்கும்.

Geetha Sambasivam

unread,
Jan 9, 2013, 2:29:39 AM1/9/13
to tamizhs...@googlegroups.com, mintamil
:)))))  இதுக்குத் தான் ஆசான் வரணும்னு சொல்றது!

2013/1/9 ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் <jee...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Jan 9, 2013, 3:32:55 AM1/9/13
to mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள், Panbudan
வணக்கம்.

2013/1/9 Prakash Sugumaran <praka...@gmail.com>

வரப்புயர நீர் உயரும்

வரப்பு என்பது வயலுக்கும் பொருந்தும், கண்மாய்க்கும் பொருந்தும் 

நீர் உயர நெல் உயரும் 

நெல் உயர குடி உயரும்

நெல் என்பது தானியத்தைக் குறிக்கும், நெற்பயிரை அல்ல.  
எனவே நெல் உயரும் என்பது அறுவடையாகும் நெல்லின் அளவு உயரும் என்பதாகும்.

அன்பன்
கி.காளைராசன் 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Prakash Sugumaran

unread,
Jan 9, 2013, 7:38:35 AM1/9/13
to mint...@googlegroups.com
நெல் என்பது தானியத்தைக் குறிக்கும், நெற்பயிரை அல்ல//
நன்றி. மிகச்சரியான பார்வை.

2013/1/9 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Jan 9, 2013, 7:50:06 AM1/9/13
to mint...@googlegroups.com
உயர என்றால் இவ்விடத்தில் உயரம் கூடுவதைக் குறிக்கவில்லை. வரப்பு எடுப்பிப்பதை, அமைவதைக் குறிக்கிறது என எண்ணுகிறேன். வரப்பு அமைந்தால் நீர் தேங்கும்//
சரியாக குறிப்பிட்டு உள்ளீர்கள். நன்றி.
வரப்புயர என்பதை வரப்பின் நீளம் அதிகரிக்க என அர்த்தம் கொண்டால், அந்தளவு தூரத்துக்கு நீர் முறையாக பாய்ந்து, வயல்கள் நிறைந்து, நெல் விளைந்து, நெற்களம் பெருகும்.....

2013/1/9 Karuannam Annam <karu...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jan 9, 2013, 8:18:45 AM1/9/13
to tamizhs...@googlegroups.com, mintamil, Panbudan


9 ஜனவரி, 2013 12:19 AM அன்று, Prakash Sugumaran <praka...@gmail.com> எழுதியது:

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும் 

நெல் உயர குடி உயரும்

குடி உயர கோல் உயரும் 

கோல் உயர கோன் உயர்வான்

அவ்வையாரின் இந்த பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக தோன்றுகிறது. வரப்பின் உயரம் நிலத்தின் தன்மையை பொறுத்தது. இஷ்டம் போல உயர்த்திக் கொள்ள முடியாது. அப்படி உயரமான வரப்பு இருந்தாலும் அதன் உயரத்துக்கு ஏற்ப நீரை நிரப்பினால் அது குட்டையாகவோ குளமாகவோ ஆகி விடும். அதில் பயிர் செய்ய முடியாது. நீர் அதிகமாக இருந்தால் நெல் விளையாது. அழுகிவிடும். நீர் உயர உயர நெல்லும் உயர நெல், தாமரை கொடியல்ல........... விவரம் அறிந்தவர்கள் தெளிவிக்கவும்.

ஒன்று மட்டும் புரிகிறது. இன்று போல அன்றும் மெத்தப் படித்தவர்கள் என்பாருக்கும், சராசரி உலக நடைமுறை வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவாகிறது.


முற்காலப்பாடல்கள் எல்லாம் அவை ஏறி நக்கிரன் போன்ற  பிற புலவர்களின் கேள்விகளால் தோட்கப்பட்டவை. அதனால் குறை காண்பது அரிது. 


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Jan 9, 2013, 1:29:42 PM1/9/13
to mint...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள்
வரப்பு, நெற்பயிர், நீர், விவசாயம் பற்றி உண்மை தெரியவில்லை. 
>>>ஒன்று மட்டும் புரிகிறது. இன்று போல அன்றும் மெத்தப் படித்தவர்கள் என்பாருக்கும், சராசரி உலக நடைமுறை வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவாகிறது.>>>
ஆன்னல் இது உண்மை எனத் தெரிகிறது.

..... தேமொழி

nswami...@socal.rr.com

unread,
Jan 9, 2013, 5:27:54 PM1/9/13
to mint...@googlegroups.com, தேமொழி
அவ்வை சொன்னது சரிதானே.

வரப்பு கூட இல்லாம நிலம் பரந்து கிடந்த காலம் அது. நெல்லுக்கு தேங்கும் நீர் வேண்டும்.
வரப்பு இருந்தாதான் தண்ணி தேங்கும். வரப்புயர என்றால் அதிக வரப்பால் சூழப்பட்ட பெரும் பரப்பளவு கொண்ட நிலம்.
நெல்லுயரும்னா, நெல் அதிகமாக விளையும். கையில் பணப்புழக்கம் அதிகமாகும்.
அதனால் குடி மக்கள் உயர்வார்கள். குடி உயர்ந்தால் அவ்ர்கள் செலுத்தும் வரியால்
கோன் உயர்வான்.

”குடி” உயரக் கோன் உயர்வதை இன்றும் நடைமுறை வாழ்க்கையில் காண்கிறோம்.
( டாஸ்மாக்கினால் அரசு எவ்வளவு கொழிக்கிறது ?) (;-)

அவ்வை கூட “சிறுகள் பெறினும் எமக்கீயும் கோவே” என்று தனக்குக் குடிக்க கள் கொடுத்த
அதியமானைப் புகழ்ந்தது உண்டு.

சுவாமிநாதன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 9, 2013, 10:50:09 PM1/9/13
to mint...@googlegroups.com
திரு. பிரகாஷ்

நீங்கள் வரப்பு என்பதற்கு வயலின் கரை என்று பொருள் கொண்டதால் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். 

வரப்பு என்பதற்கு பொதுவாக எல்லை என்ற பொருளும் உண்டு.

இங்கே வரும் வரப்பு என்பது நீர் நிலைகளின் எல்லையைக் குறிக்கும்.

ஆக, வரப்பு உயர நீர் உயரும் என்பது நீர் நிலைகளின் எல்லையை உயர்த்தினால் மழை காலங்களில் அதிக நீரை சேமித்து வைக்க முடியும். இதனால் மழையற்ற காலங்களில் நீரில்லாமல் நெற்பயிர் வாடுவதிலிருந்து பயிரைக் காத்து விளைச்சலை அதிகப்படுத்த முடியும் அல்லவா.?

இதைத்தான் ஔவையார் சொல்கிறார்.

அன்புடன்,

தி.பொ.ச.





2013/1/9 Prakash Sugumaran <praka...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Prakash Sugumaran

unread,
Jan 11, 2013, 6:55:58 AM1/11/13
to mint...@googlegroups.com

நன்றி தி பொ ச அவர்களே .. அப்படியும் அர்த்தம் கொண்டு உருவாகப் படுத்தலாம். இருந்தாலும் ஒரு குறை.. நீர்நிலைகளின் எல்லைகளை கரை என்றும் வயல்வெளிகளின் எல்லைகளை வரப்பு என்றும் குறிப்பிடும் வார்த்தைகள் அந்தகாலத்தில் இருந்தே வழக்கில் இருக்கும் நிலையில்  நீர்நிலைகளின் எல்லையை உயர்த்துவதை அவ்வை எதற்கு வரப்பு உயர என குறிப்பிட்டு இருக்க வேண்டும் ? 

( உதாரணம் : ஏரிக்கரை, ஆற்றங்கரை, கடற்கரை )


2013/1/10 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Jan 12, 2013, 4:32:39 AM1/12/13
to mint...@googlegroups.com
ஆன்னல் இது உண்மை எனத் தெரிகிறது//
வெளியே சொல்லக்கூடாத உண்மையோ :))

2013/1/9 தேமொழி <them...@yahoo.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

தேமொழி

unread,
Jan 12, 2013, 5:10:45 PM1/12/13
to mint...@googlegroups.com
ஹி.ஹி.ஹீ....வாயைக் கிளறாதீங்கோ பிரகாஷ் 
பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் 
..... தேமொழி 


On Saturday, January 12, 2013 1:32:39 AM UTC-8, Prakash Sugumaran wrote:
ஆனால்  இது உண்மை எனத் தெரிகிறது//
Reply all
Reply to author
Forward
0 new messages