"தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"

193 views
Skip to first unread message

Anbudan Nilavan

unread,
Apr 14, 2010, 1:22:48 AM4/14/10
to mint...@googlegroups.com
வணக்கம், நண்பர் ஒருவரது பதிவு. படித்துவிட்டு தாங்களின் கருத்துக்கும், விவாதத்திற்கும்.. 

என்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.

வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் ,Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP) என்பது வலைத்தளம் ( இண்டர்னெட் )சம்பந்தப் பட்டது. வலைத்தளம், கணினி (கம்ப்யூட்டர்) சம்பந்தப்பட்டது. கணினி பைனரி சம்பந்தப்பட்டது. பைனரி மின்சாரம் சம்பந்தப்பட்டது. மின்சாரத்தைப் பற்றி நமக்குத் தெரியும்.மின்சாரத்தில் இரண்டு நிலைகள் உள்ளன அவை ஆன் (on)அல்லது ஆப்( Off ) .இந்த இரு நிலைகளை வைத்து தான் கணினிக்கு எண்கணிதம் போதிக்கப்பட்டது. நமக்கு கையில் பத்து விரல்கள் உள்ளதால் தான் நாம் பத்தை அடிப்படையாக கொண்ட தசம எண்முறையை (Decimal)கையாள்கிறோம்.

மினசாரத்திற்கு I,(on)O (off) என இரண்டு நிலைகள் உள்ளதால் இரண்டை அடிப்படையாகக் கொண்ட பைனரி முறையை கையாள்கிறது. இந்த இரண்டே எண்களை வைத்து எவ்வளவு பெரிய எண்களையும் எளிதாகவும் விரைவாகவும் எழுத முடிகிறது.எண்கள், எழுத்துக்கள், படங்கள் ஆகியவை எல்லாமே எண்களாக மாற்றப் பட்டு எண்கள் பைனரியாக மாற்றப் பட்டு அவைகள் கணக்கிட ,எழுத, வாசிக்க, வரைய, பத்திரப் படுத்த கம்ப்யூட்டரால் பயன் படுத்தப் படுகிறது. இந்த பைனரி எண்களைத்தான் டிஜிட்டல் என்கிறோம். தகவல் பரிமாற்றத்திற்கும் இந்த டிஜிட்டல் சிக்னல் தான் பயன் படுகிறது. இந்த டிஜிட்டல் சிக்னல் கம்பி அல்லது கம்பி இல்லா முறையில் உலகின் பல இடங்களுக்கும் அலைபரப்பப் படுகிறது. இந்த தகவல் பரிமாற்ற முறையை ஒழுங்கு படுத்துவதுதான் TCP/IP

தகவல் பரிமாற்றத்தின் ஆரம்ப நிலையை ஆராய்ந்தால் இது மார்க்கோனியின் ரேடியோ தந்தியின் மூலம் மோர்ஸின் குறியீட்டு முறையை பயன் படுத்தி தகவல்கள் அனுப்ப பட்டு வந்தது. அதிலும் இரண்டு ஒலி நிலைகள் குறுகிய ஒலி, நீள் ஒலி ஆகிய இரண்டையும் பயன் படுத்தி செய்திகளை வெகுதொலைவுகளுக்கு அனுப்பினர்.

அவ்வாறு அனுப்பும் போது ஒரு வார்த்தை அனுப்பி முடித்தபின் பெற்றுக் கொண்டவர் Roger என்ற வார்த்தையின் முதலெழுத்தாகிய “R ”என்ற ஆங்கில எழுத்தை அனுப்புவார்கள்.அதாவது. அந்த வார்த்தையின் விளக்கம் இதுதான் "Roger" means "I have received all of the last transmission" அதாவது”நீங்கள் அனுப்பிய கடைசிச் செய்தியை முழுவதுமாக பெற்றுக் கொண்டேன் ” என்று அர்த்தம். இவரிடம் இருந்து இந்த “R ”என்ற சிக்னல் கிடைத்தபின் தான் அடுத்த வார்த்தையை அனுப்புவார். இல்லாவிட்டால் ஏற்கனவே அனுப்பியதையே மீண்டும் அனுப்புவார். இதனால் தகவல் பரிமாற்றம் முழு உத்திரவாதத்துடன் நடைபெறுகிறது.

இதே போன்ற ஒருமுறைதான் இன்றைய இண்டர்னெட் தகவல் பரிமாற்றத்திற்கு பயன் படுகிறது.ஏனென்றால் நமக்கு வேண்டிய தகவல் எங்கோ ஒரு மூலையில் இருந்தும், பல சர்வர்களில் இருந்தும், பல தளங்களை கடந்து நமது கணினிக்கு வருவதற்குள் தகவல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.அதிலும் இந்த பைனரி எண்களுக்கான சிக்னல்கள் எளிதில் தொலைந்து போக வாய்ப்புள்ளதால் அனுப்பிய தகவல் இலக்கு நோக்கி சரியாக சென்றடைந்ததா என உறுதி செய்வதற்கான ஏற்பாடுதான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP). இதனால் தகவலின் அழியாத் தன்மை நிலைநாட்டப் படுகிறது.

மேலோட்டமான விளக்கம் தருகிறேன்.நமக்கு வரவேண்டிய தகவல்கள் எழுத்து, எண்கள், படம் ,ஆகியவை எண்களாக மாற்றப் பட்டு தொடர்ச்சியாக நமக்கு அனுப்பப் படுகிறது. அவ்வாறு அனுப்பப்படு முன் இந்த எண்கள் முதலில் சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி அனுப்பப் படுகிறது.குறிப்பிட்ட சிறு கால (மைக்ரோ செகண்டுகளில்) இடைவெளியிலுள்ள பைனரிகளை சேர்த்து சிறு (பொட்டலங்களாக)பாக்கெட்டுகளாகவும் அந்த பாக்கெட்டில் உள்ள மொத்த எண்களின் கூட்டுத்தொகையும் கடைசியில் அந்த பொட்டலங்களுடன் அனுப்படுகிறது.

உதாரணமாக Tamil என்ற வார்த்தை அனுப்பப் படுவதாகக் கொள்வோம் .இந்த எழுத்துக்களின் பைனரி வடிவம் முறையே 84,97,109,105,108. ஆகவே 84,97,109,105,108,என்ற எண்கள் அனுப்பப் பட்டு , இவைகளின் கூட்டுத்தொகையான 503 என்ற எண்ணும் அதனுடன் அனுப்பப் படுகிறது. இங்கு அந்த தகவலை பெறும் இடத்தில் அந்த பொட்டலங்களில் உள்ள எண்கள் ஒவ்வொன்றும் சரிபார்க்கப் பட்டு பின்னர் அவற்றின் கூட்டுத்தோகையும் கணக்கிடப் பட்டு அந்த பொட்டலங்களுடன் வந்த கூட்டுத்தொகை எண்ணுடன் ஒப்பிடப் பட்டு சரிபார்க்கப் படுகிறது. சரிபார்த்தவுடன் ஒப்புதல் சிகனல் அனுப்பப் பட்டு அடுத்த தகவல் பெறத் தயாராகுகிறது.

இதில் எந்த இடத்தில் தவறு ஏற்பட்டாலும் தவறு என்று செய்தி வந்துவிடும் நிலைத்த முழுமையான தகவல் பரிமாற்றத்திற்கு உத்திரவாதம் தான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP).


யாப்பிலக்கணம்.

இப்பொழுது யாப்பிலக்கணம் பற்றி மேலோட்டமாக அறிவோம்
சங்ககாலப் பாடல்களை ஆய்ந்து பார்க்கும் போது, போற போக்கில் செய்யுள் எழுத முடியாது என்பது புரியும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே செய்யுள் படைக்க யாப்பிலக்கணம் கற்றறிந்து இருக்க வேண்டுமென த் தெரியவருகிறது.

தமிழில் கவிதை பாட யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.யாப்பிலக்கணம் என்றால் என்ன? அது பற்றிய ஒரு உரையாடலைக் கேட்போம். இதில் புலவர் என்ன பாடல் வகை எனக் கேட்க புரவலர் “வெண்பா” என்று சொன்னவுடன் உரையாடல் முற்றுப் பெற வேண்டும் ஆனாலும் புலவர், புரவலரை சோதனை செய்யும் முகமாக உரையாடல் தொடர்கிறது.


புரவலர் : புலவரே ஒரு கவிதை பாடுங்கள் 
புலவர்: வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா, மருட்பா,நூற்பா, இதில் எந்தவகையில் பாட?
புரவலர் : வென்பா வகையில் பாடுக
புலவர்:எதுகையும் மோனையும் கலக்கவா?
புரவலர் : ஆமாம் தொடையில்லா பாட்டுக்கு கண்டிப்பாகத் தடைதான்
புலவர்:அடிக்கு எத்தனை சீர்?
புரவலர் : அளவடி, நாச்சீர்
புலவர்:சீர்க்கு என்ன தளையிட?
புரவலர் : வெண்சீர்வெண்டளை, இயற்சீர்வெண்டளை
புலவர்:சீர்க்கு எத்தனை அசை வைக்க?
புரவலர் : மூவசைச்சீர்
புலவர் பாடினார், பொருள் பெற்றார்.

இங்கு குறிப்பிட்டுள்ள யாப்பிலக்கண உறுப்புக்களை பற்றி மேலோட்டமாகப் பார்ப்போம்.

எழுத்து , அசை, சீர், தளை, அடி ,தொடை

நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும்.

எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். 
இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.

ஒரு அடியில்(வரியில்) எத்தனை சீர்கள் (வார்த்தைகள்)அமையலாம், அந்தசீர்களை இணைக்கும் தளை என்ன வகையாக இருக்கவேண்டும்.என்ன மாதிரியான சீர்கள் வேண்டுமோ அதற்கு தகுந்த அசைகள், அசைகளுக்கு தகுந்த எழுத்துக்கள், மற்றும் எதுகை மோனையை சேர்க்கபடும் விதத்தால் என்ன மாதிரியான தொடை என இவை அணைத்தும் சேர்ந்து அது என்ன பாவினம் என்பதை தீர்மானிக்கிறது.

கேட்கப்படும் பா வகைக்கு தகுந்தமாதிரி இத்தனை விஷயங்களையும் சரியாக இணைத்து சரியான இடத்தில் பொருத்தி அம்மென்றால் ஆயிரமும் ,இம்மென்றால் எண்ணூறும் பாடவல்ல தமிழனின் அறிவை எடுத்துறைக்க இயலுமோ. இன்றைய ஐ.க்யூ சோதனையில் முதலிடம் வகிப்பவர்கள் புலவர்கள்தான் என்றும் கூறுகிறார்கள். இது தமிழ்ப் புலவர்களைப் பற்றிய வரை உன்மைதானென விளங்குகிறது. யாப்பிலக்கணக்கம் புத்திசாலிகளை மட்டும் வடிகட்டி புலமைக்கு அனுப்புகிறது. அதனால்தான் மன்னன் முன் நின்றும் ஆணவத்தோடு புலவர்கள் பேசினார்கள். மன்னனும் அவர்களது திறமை கண்டு வியந்து பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்தான்..அவர்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்தான்.

இனிய ஓசை நயம் அமைந்த பாடல்களைக் கேட்டுப் பழகியவர், அதே ஓசையில் பாடல் புனைய முயன்று, பிறர் படிக்கவும், இவ்வாறே புதியன படைக்கவும் ‘பாடல் அமைப்பை’ எழுத்து, அசை, சீர் என அமைத்து ஒழுங்குபடுத்தியிருத்தல் வேண்டும். இவ்வாறு யாப்பிலக்கணம் தோன்ற, அடுத்தடுத்து வந்தவர் அம்மரபு மாறாமல் கவி படைக்கத் தொடங்கினர். கவிதைகளுக்கு ஒரு அமரத்துவம் ஏற்பட்டு விடுகிறது.

அது மட்டுமின்றி எழுத்தோலை, அதிகம் புழக்கத்தில் இல்லாத காலத்தில் வாய்மொழிப் பாட்டாக கவிதை, செய்யுள் பாடப்பட்டதால் அதை ஒருவர் கேட்டு மற்றவர்க்கு சொல்லும் போது வார்த்தைகள் மாறி பொருள் மாறிவிடும் போக்கு நிலவியது. இதைத் தடுப்பதற்கு தமிழனின் சிந்தனையில் ஏற்பட்ட முறைதான் "யாப்பிலக்கணம்”.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தகவல் பரிமாற்றம் என்பது தலைமுறைகளுக்கிடையில் கவிதை முறையில் மனப்பாடமாக தான் எடுத்துச் செல்லப் பட்டது. அவ்வாறு மனப்பாடமாக கொண்டு செல்லும் கவிதையில் வார்த்தைகளை சேர்க்கவோ, மாற்ற முடியாத ஒரு உன்னதமான ஏற்பாடு தான் யாப்பிலக்கணம் என்பது மறுக்க முடியாத உன்மை.இதன் மறு பெயர்தான் Transmission Control Protocol (TCP)

யாப்பிலக்கணம் - TCP/IP 
எழுத்து - ASCII Equalents
அசை - பைனரி
சீர் - பாக்கெட்டுகள் (பொட்டலங்கள்)
அடி - பாக்கெட் எண்
தளை - கூட்டுத்தொகை எண்
தொடை - Not available
பாவினம் - file format (Text, Jpeg, Mpeg,)

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப் பட்ட வள்ளூவரின் குறளில் வார்த்தையை சேர்க்கவோ மாற்ற முடியாது அப்படி ஏதும் நடந்தால் எளிதாக கண்டு பிடித்து விடலாம். இதுதான் யாப்பிலக்கணத்தின் பெருமை.

வெண்பாவின் இலக்கணத்தைப் பார்ப்போம்

1).ஈற்றடி முச்சீரடியாகவும் (கடைசி வரியில் மூன்று வார்த்தைகளும்)
2)ஏனைய அடி நாற்சீரடியாகவும் பெற்று (ஏனைய வரிகளில் நான்கு வார்த்தைகளும் )
3) காய்ச்சீரும் (வார்த்தையில் எழுத்துக்கள் அமையும் முறை)
4)அகவற்சீரும் ,(வார்த்தையில் எழுத்துக்கள் அமையும் முறை)
5)வெண்சீர் வெண்டளையும், (வார்த்தைகளை இணைக்கும் தளை)
6)இயற்சீர் வெண்டளையுங் கொண்டு (வார்த்தைகளை இணைக்கும் தளை)
7)மற்றைச் சீருந்தளையும் பெறாது 
8)செப்பலோசை பெற்று
9)காசு-பிறப்பு-நாள்-மலர் என்னும் வார்த்தைகளின் அசை அமைப்பு கொண்டு கடைசி வார்த்தை முடிவது வெண்பா எனப் படும்.

இப்ப சொல்லுங்க இத்தனை விஷயங்களை மனதில் வைத்து , கொடுத்த பொருளுக்கு தகுந்தாற்ப் போல் வெண்பா பாடறது எவ்வளவு சிரமம். ஆனாலும் நமது தமிழ்ப் புலவர்கள் இதில் போட்டி போட்டுக்கொண்டு சரமாரியாக கவிதை பாடிய வரலாற்றைக் கேட்கும் போது அவர்களின் அறிவுத் திறனை எப்படித்தான் பாராட்டுவது.

ஆனால் இன்றைய தமிழன் அறிவின் பரிணாமப் படிக்கட்டுகளில் ஏற மறுத்து விட்டு இறங்கிக் கொண்டிருக்கிறான்.

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை (ஊர்வலம்)

என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு யாப்பிலக்கணத்துக்கு சமாதி கட்டிவிட்ட அதிமேத்தாவிகளை தமிழினத்துரோகி என்றுதான் கூறவேண்டும். ஏன் அதை ”உரைநடை ஆளுமை ” அல்லது ”’எழுத்தாண்மை” அல்லது ”கருத்தாண்மை “, “வசன நடை”என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்.ஆனால் தயவு செய்து கவிதை என்று மட்டும் சொல்லாதீர்கள் .அது யாப்பிலக்கணம் படைத்த தமிழனுக்கு இழுக்கு.

மதிகெட்டுப் போனதை ஒத்துக் கொள்ளாமல் மரபுக் கவிதைகளை பழித்துவிட்டு மக்கள் கவிதை , புதுக்கவிதை என்று சொல்லிக் கொண்டு பொருளற்ற முறையில் அர்த்தமற்ற வார்த்தைகளைப் போட்டு, ஒற்றை சொற்களை ஓசை நயமின்றி அடுக்கடுக்காக அடுக்கி விட்டு கவிதை என்று சட்டையை தூக்கி விட்டுக் கொள்பவர்களை என்ன செய்வது. அவர்களின் காதை அறுக்க வில்லிபுத்தூராரைத்தான் கூப்பிடவேண்டும்.

வில்லிபுத்தூரார் யார் என்று கேட்கிறிர்களா.அவருடன் போட்டியிட்டு தப்பான பாடல் பாடினால் அவரது காதை அறுக்க கையில் தொரட்டியுடன் அலைபவர். வில்லிபாரதம் என்ற பெயரில் கம்பனுக்கு இணையாக மகாபாரதம் பாடியவர். ஆனால் ஏனோ பெயர் வாங்க முடியவில்லை. அவருடைய செருக்கு அழிந்த கதையை படிப்போம். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். 


அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

சொற்போர்க் களம் ஒன்று அமைக்கப்பட்டது. அடிகளார் நூறு பாக்கள் கொண்ட நூல் ஒன்று பாடுவதென்றும், அதற்கு வில்லிபுத்தூரார் உரைகூற வேண்டுமென்றும் எப்பாட்டிற்கேனும் உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் திகைத்து விழித்தால் அவர் தோற்றதாக முடிவு செய்து அவர் காதினை அறுத்து விடுதென்றும், அவ்வாறன்றி எல்லாப் பாடல்கட்கும் உரை கூறிவிட்டால் அடிகள் தோற்றதாகக் கொண்டு, அடிகளின் காதைக் கொய்து விடுவதென்றம் முடிவு செய்யப்பட்டது. தக்கார் சிலர் நடுநிலையாளராக அமர்த்தப் பெற்றனர். ஒருவர் காதில் மற்றெருவர் தொரட்டியை மாட்டி தயாராக இருந்தனர்.

அடிகளார் "கந்தரமந்தாதி" என்னும் நூலைப் பாடத் தொடங்கினார். அது யமகங்களால் ஆகியது. யமகம் என்பது யாது? முதல் அடியில் வந்த தொடரே மற்ற அடிகளிலும் வந்து வேறு பொருள் தருவது. அந் நூற்பாடல்களுக்கு வில்லிபுத்தூரார் உரை கூறத் தொடங்கினார். ஐம்பத்து மூன்று பாடல்கள் வரை முடிவு பெற்றன. வில்லிபுத்தூராரும் கல்வியில் வல்லவரேயென்பதை யுணர்ந்த அடிகள் ஐம்பத்து நான்காவது பாடலைத் தகரவருக்கப் பாட்டாகப் பாடினார்.

பாடலைப் பார்ப்போம்:

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

எனப் பாடலைப் பாடினார்.

வில்லிபுத்தூரார் இது பாட்டு அன்று என்றும், வாய்க்கு வந்தபடி கூறியது என்றும், தாம் அதனை ஒப்புக்கொள்ள இயலாதென்றும், வீண் சொற்போரில் இறங்கினார். அருணகிரிநாத அடிகள், "இஃது இலக்கண முறைப்படி பொருளமைதியுடன் பாடப்பெற்ற பாட்டு" என்றார். அடிகளாரே இப் பாட்டிற்குப் பொருத்தமான, திருத்தமான உரை கூறிவிடின் தமது தோல்வியை ஒப்புக்கொள்ளவும் காதை இழக்கவும் உடன்படுவதாக வில்லிபுத்தூராரும் உரைத்தார். அடிகளார் இப்பாடலுக்குப் பொருள் விரித்துரைத்தார். கூறிய பொருள் அமைதியுடையதாக இருந்தது. வில்லிபுத்தூரார் தம் தோல்வியை ஒப்புக் கொண்டார். நடுநிலைமையாளரும், வில்லிபுத்தூரார் தோற்றார், என்று முடிவு கூறினார்கள்.

இதன் பொருளை இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்.

அவ்வளவில் வில்லிபுத்தூரார் எழுந்து தம் தோட்டியை அடிகள் முன் நீட்டி, இத் தோட்டியால் என் செவியினை அறுத்துவிடலாம் என்றார். அடிகள் அத் தோட்டியைத் தம் கையில் வாங்கி, "ஒருவருக்கு ஒரு காதைக் கொடுக்கும் ஆற்றல் நம்மிடம் உண்டா? அவ்வாறாக, ஒருவருடைய காதை அறுப்பது எவ்வாறு நேர்மையுடையதாகும். அவ்வாறு செய்வது இறைவன் திருவுளப் பாங்கிற்கு ஏற்றதன்று. இன்று நாம் உமக்கு உம்முடைய காதினை அறப் பொருளாக வழங்குகின்றோம். இனி, இத்தொழில் ஈடுபடாது ஒழிவீராக" என்று கூறி அத் தோட்டியினை வீசி எறிந்தார்.

அடிகளின் இத்தகைய பெருந்தன்மையைப் பார்த்து அக் காலத்து அறிஞர் ஒருவர்,

காசுக்குக் கம்பன் கருணைக் குஅருணகிரி
ஆசுக்குக் காளமுகில் ஆவனே - தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன் உவக்கப் புகழேந்தி
கூழுக்கிங்கு ஔவை எனக் கூறு

என்றார்


செங்கோல் , சிம்மாசனம் ,பல்லக்கு, தேர்கள், சேனை, பவனி இவையெல்லாம் அனுபவிக்க இருந்தும் தமிழன் ”கால்நடை”யாய் நடப்பேன் என்று கூறினால் இவனை மறை கழன்றவன் அல்லது தகுதியில்லாத தற்குறி என்றுதானே கூற வேண்டும்.


தமிழா நீ கவிதை பாட வேண்டுமென்றால் யாப்பிலக்கணத்தின் ஏதாவது ஒரு பண்பையாவது பயன் படுத்து, உனது கவிதையில்.உதாரணமாக ஈற்றடி முச்சீராகவும் மற்றைய மூன்று அடிகளும் நாச்சீராகவும் உள்ள எளிய பண்பை பயன்படுத்தி கவிதை எழுதுங்கள். பின்னர் ”அசை ”போடுங்கள். ”தளை ”தானாகவே வந்துவிடும். பின்பு போட்டிக்கு ”தொடை”யை தட்டி கூப்பிடுங்கள்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவனால் முடியும் போது உங்களால் முடியாதா? யாராலும் கவிதை பாட முடியும் என்பதை நிரூபிக்க கம்பன் தன் வீட்டு வேலைக்காரி, தட்டான். கருமான், வண்ணான், அம்பட்டையன் ஆகிய அனைவரையும் கவிதை பாடவைத்தான்.அவர்கள் பாடிய பாடலை பின்னர் பார்ப்போம். இதனால் தான் ”கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்” என்றார்கள்.அந்த கட்டுத்தறியிலும் கேவலமானவனா இன்றையத் தமிழன். 

ஆகவே தமிழ் மேல் ஆர்வம் உள்ள கவிஞர்களே வாழ்க்கையில் ஒரு வெண்பாவாவது இலக்கணத்தமிழில் பாடுங்கள். 


--
வாழ்க தமிழுடன்,
நிலவன்.

http://blog.nilavan.net
http://www.mentamil.com
http://www.bangaloretamil.com

devoo

unread,
Apr 14, 2010, 3:48:42 AM4/14/10
to மின்தமிழ்
>> தமிழ் மேல் ஆர்வம் உள்ள கவிஞர்களே வாழ்க்கையில் ஒரு வெண்பாவாவது
இலக்கணத்தமிழில் பாடுங்கள் <<

யாப்புண்ணு ஆரமிச்சுச் சந்துரு ஐயா கடசீல ஒரு ஆப்பு வச்சிட்டாகளே,
எந்த மண்டவத்துல போயி வாங்கியார ?


தேவ்

செல்வ புவியரசன் selva puviyarasan

unread,
Apr 14, 2010, 5:58:23 AM4/14/10
to mint...@googlegroups.com
நான்படிக்க வேண்டுமடி உன்னிதயம் உட்புகுந்து
நான்கறைகள் உள்ளிருக்கும் நான்மறையை- ஆனாலும்
எண்ணுகின்றேன் பெண்ணே இதிகாசம் கற்றிடவும்
கண்ணிரண்டால் என்முகத்தைப் பார். 

ச்சும்மா.... பயிற்சிக்காக பள்ளிநாட்களில் எழுதிப்பார்த்தது.

2010/4/14 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.

ananda rasa thiruma

unread,
Apr 14, 2010, 8:53:48 PM4/14/10
to mint...@googlegroups.com
திரு அன்புடன் நிலவன்
யாப்புக் கட்டுரை எழுதிய நண்பரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். யாப்புக்குப் பரிந்து கட்டுரை எழுதியதற்காக அன்று. அதனை வலைதளத் தகவல் பரிமாற்ற முறையான இன்றைய அறிவியல் வளர்ச்சியுடன் மிகச் சிறப்பாகப் பொருத்திக் காட்டிய முறை மிக அருமை.
வில்லிபுத்தூரார், தொரட்டி, அருணகிரியார், அவர் பாடல் எல்லாம் வேறு சூழலில் வேறு புலவர் பாடியதாகப் பதிவு உண்டு. சான்றாகத் தொரட்டிக்குப் பேர்போனவர் ஒட்டக்கூத்தர் என்பது பதிவு. எப்படியாயினும் கட்டுரையும் எடுத்துக்காட்டுக்களும் சிறப்பாக இருந்தன.

அன்புடன்
ஆராதி

2010/4/14 செல்வ புவியரசன் selva puviyarasan <selvapuv...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 15, 2010, 2:41:40 AM4/15/10
to mint...@googlegroups.com

எங்கள் ஒரே விண்ணப்பம்/விக்ஞாபனம்/கோரிக்கை/தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், யாப்பு ஒழுங்குடன் கூடிய கவிதையோ அல்லது வேறு என்ன கழுதையோ அதற்கான தர்மங்களைக் கடைப்பிடித்து செய்யுங்கள் என்பதுதான்.

யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் கவிதை செய்தாலும் வெறும் வார்த்தைகளைக் கணக்குப் போட்டுக்கொல்லாதீர்கள்.

யாப்பிலக்கணத்தை மீறி புதுக்கவிதை வடிக்கிறேன் என்று சொல்லி விட்டு வெறும் ஓசையை கவிதையாகக் கொடுக்காதீர்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

இதில் பரிதாபத்துக்கு உரியவர்கள் எங்களைப் போன்ற பாமர வாசகர்கள்தான்.  மேற்கண்ட விண்ணப்பத்தை முன்வைத்தால் நான் சொல்வதை மரபுக் கவிதையில் பாடிக் காட்டு என்று புதுக்கவிதை எழுதுபவாகள் இம்சிக்கிறார்கள்.  யாப்பிலக்கணத்தில் அமைந்ததைப் போன்ற சொல்லொழுங்குடன் ஒரு புதுக் கவிதையை எழுதிக் காட்டு என்று மற்றொரு கோஷ்டியினர் சித்ரவதை செய்கிறார்கள்.

இவர்களுக்கு இடையில் சிலர் எங்கோ தினமணியில் வந்ததைப் படித்து விட்டு தமிழினத் துரோகி, அந்தணப்பதர் என்கிற ரீதியில் என்னைத் திட்டுவதால் தங்கள் தமிழ்ப் பற்று நிலைநிறுத்தப் படும் என்ற தவறான கணக்குப் போட்டுஇப்போது தனி அஞ்சலிலும் விஷத்தை அனுப்புகிறார்கள்.

பேசாமல் வேறு ஏதாவது மொழிக்குத் தாவி அங்கே ஏதாவது அறைகுறையாக எழுதி அங்குள்ள கவிஞர்களிடம் திட்டு வாங்கலாம் என்று தோன்றுகிறது.  அங்கே ஒரு ஆறுதல் என்னவென்றால் அவர்கள் திட்டுவது நமக்கு அதிகமாகப் புரிய குறைந்தது ஐம்பது ஆண்டுகள் ஆகும். 

அதுவரை என்னைப் போன்றவர்கள் உயிருடன் இருப்பதும் சந்தேகம்தான்.

இந்த என்னுடைய தனிப்பட்ட கருத்து ஒரு பக்கம் இருக்க,

நிலவன் அனுப்பி இருக்கும் பதிவு மிகவும் பயனுள்ள விஷயங்கள் பொதிந்த பதிவு.  வாழ்த்துக்கள்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
திரு  செல்வப் புவியரசு!   நான்மறையும்,  இதிகாசமும்  கற்க  நினைக்கின்ற  
வழி  இனிமையாக   இருக்கிறது.  
 
என்முகத்தைப்  பார்  என்று  முடித்தீரா.  எனக்கு   ஒரு  சபலம்.  பார் 
என்ற  சொல்லை  வைத்து  வெண்பா   ஒன்றைச்  செய்தேன்.  தருமி  போல்  இப்பொழுதே  
கூறிவிடுகிறேன்.  எவ்வளவு   பிழை  இருக்கிறதோ   அவ்வளவு   போக  மிச்சத்தை......
 
 
பாரளந்த செம்மல் பனிக்குமென்  நெஞ்சத்தைக்
காரளந்த  மேனிகொண்டு காவானேல் -- தேரளந்த
வீதியெலாம் சென்று  வியன்விண்  பெருமானார்
மேதினியில்  ஊர்வேன்  மடல். 
 
***

 



--
http://www.vadakkuvaasal.com/

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 2:45:27 AM4/15/10
to mint...@googlegroups.com
அதெல்லாம்  இருக்கட்டும்.  உமக்குத்தான்  வெண்பா  என்றால்  உயிராச்சே!   எங்கே  படித்துப் 
பொருள்  சொல்லுங்கள்  பார்ப்போம்.  
ரொம்ப  பிகு பண்ணினால்
பெங்களூர்க் கவிதாயினியை  
யமகா  ஓட்டச்  சொல்லிவிடுவோம் !!
:--))))

 

shylaja

unread,
Apr 15, 2010, 2:58:00 AM4/15/10
to mint...@googlegroups.com


2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>

அதெல்லாம்  இருக்கட்டும்.  உமக்குத்தான்  வெண்பா  என்றால்  உயிராச்சே!   எங்கே  படித்துப் 
பொருள்  சொல்லுங்கள்  பார்ப்போம்.  
ரொம்ப  பிகு பண்ணினால்
பெங்களூர்க் கவிதாயினியை  
யமகா  ஓட்டச்  சொல்லிவிடுவோம் !!
:--))))<<<>>>>
 
 
ஐயோ நான்பாட்டுக்கு  பார்வையாளினியா  கொஞ்சநாளா இருக்கேனே   பொறுக்கலையா  அரங்கனாரே!:) அய்யம்பேட்டைக்காரரே  கவிதையை அளிக்கக்கேட்டும் இங்கே அளிக்காம அதிசியமா  வாயைமூடிட்டு இருக்கேனாக்கும்:):)



--
ஷைலஜா

//தமிழில் பேசுதல் தாழ்வில்லை
தவறாய்ப்பேசுதல் மாண்பில்லை
அமிழ்தினுமினிய தமிழினிலே
அத்தனை ரசமும் கொஞ்சுகவே!
தமிழில் கனவுகள் காண்பவரும்
தமிழில் சிந்தனை செய்பவரும்
தமிழின் இனிமையில் ஆழ்ந்தவரும்
தமிழர்! வேறே தகுதியெது?//

இசைக்கவி ரமணன்

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 3:14:19 AM4/15/10
to mint...@googlegroups.com
>>>அய்யம்பேட்டைக்காரரே  கவிதையை அளிக்கக்கேட்டும் இங்கே அளிக்காம அதிசியமா  வாயைமூடிட்டு இருக்கேனாக்கும்<<<
 
அதாம்மா!    உங்க  கவிதை  வரலேன்னு   என்ன   கடுப்பாயிட்டார்  பார்த்தீங்களா? 
ஒவ்வொரு வெண்பா  வரும்  போதும்    ஆர்வமா  வந்து  பார்க்கிறாரு.   இல்லைன்ன  உடனே   ஒரு  அலுப்பு:--)))) 

 

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 15, 2010, 3:19:22 AM4/15/10
to mint...@googlegroups.com

ரங்கனாரே..

உங்கள் கவிதையை தாண்டிச் சென்றுவிட்டேன்.  தவறு என்னுடையதுதான்.

உபச்சாரம் இல்லை.  உண்மை.  பனிக்குமென் நெஞ்சம் - மிக அற்புதமான படிமம்.  இவை போன்றவற்றைத்தான் நான் மரபுக் கவிதையில் கேட்பது.  நம் புலவர்கள் செய்கிற உட்டாலங்கடி வேலைகளை சொல்லிக் காட்டும்போதுதான் அவர்களுக்குக் கோபம் வருகிறது.

புதுமையும் மரபும் சேர்ந்த ஒரு பார்வையில் வந்திருக்கிறது உங்கள் வெண்பா.  அதில் அசை சீர் கணக்கு எல்லாம் என்னிடம் கேட்டால் எனக்குத் தெரியாது.

யாராவது எதையாவது பாடிவிட்டு கமாஸ் என்றால் இது கமாஸ் இல்லை - கதையடிக்கிறீர் என்று என்னால் சொல்ல முடியும்.  சரி.  நீர் சரியான கமாஸ் பாடிக் காண்பியும் என்று என்னை யாராவது நெருக்கினால் ரொம்பவும் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு வேறு எங்காவது நழுவி ஓடிப்போய்விடுவேன். 

அதே போலத்தான் இந்த மரபுக் கவிதை சமாச்சாரமும்.

அதற்காக கவிதாயினியை யமகா ஓட்டச் சொல்கிறேன் என்று சொல்வதெல்லாம் உச்சகட்ட மிரட்டல்.  இதற்கு டெல்லியில் இருக்கும் என்னுடைய நண்பர்களே எவ்வளவோ நல்லவர்கள் என்று தோன்றுகிறது.

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 3:22:12 AM4/15/10
to mint...@googlegroups.com
ஹாங்  ஹங்  அப்படி  வாரும்  வழிக்கு;--))))

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 3:23:29 AM4/15/10
to mint...@googlegroups.com
தலீவீ  பேர்  சொன்னா  அதிருதுல்லலல....

shylaja

unread,
Apr 15, 2010, 3:43:47 AM4/15/10
to mint...@googlegroups.com
ஏதோ என் பேரைச் சொலலியாவது ஒரு உன்னதமான மரபுக் கவிதையை அய்யம்பேட்ட்டைக்காரரை படிக்க வச்சிட்டீங்க:)

2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>

shylaja

unread,
Apr 15, 2010, 3:55:06 AM4/15/10
to mint...@googlegroups.com
இதென்ன திருவரங்கத்துக்கு வந்த சோதனை? கவிதை எழுதிய நீவிர் செய்யவேண்டிய பணியை எம்மிடம் நகர்த்துவதும் ஏன்?:) ஆயினும் சொன்னால் விரோதமில்லை சொல்லுவேன் கேளும்!

2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
அந்த வெண்பாவுக்குப் பொருள்  சொல்லுங்க என்றேன்  அவர்   ஒரு ஷொட்டு  கொடுத்துவிட்டுப்  போய்விட்டார்.  
எங்க  கவிதாயினி  நீங்களாவது  பொருள்  சொல்லுங்க  பார்ப்போம்.  

 

shylaja

unread,
Apr 15, 2010, 3:58:04 AM4/15/10
to mint...@googlegroups.com


2010/4/15 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>



--

shylaja

unread,
Apr 15, 2010, 4:03:14 AM4/15/10
to mint...@googlegroups.com
மன்னிக்கவும் அவசரத்தில் சற்றுமுன்  அர்த்தம் எழுதுமுன்பாய்  மடலை  க்ளிக்கிவிட்டேன்!
 
 
பாரளந்த செம்மல் பனிக்குமென்  நெஞ்சத்தைக்
காரளந்த  மேனிகொண்டு காவானேல் -- தேரளந்த
வீதியெலாம் சென்று  வியன்விண்  பெருமானார்
மேதினியில்  ஊர்வேன்  மடல். 
 

 

இதானே  தருமி எழுதின கவிதை?(மண்டபத்துல தருமிக்கு எழுதிக்கொடுத்தார் ஒருத்தர் உமக்கு அது தேவை இல்லை யாம் அறிவோம் உம் கீர்த்தி:))
 
பார் அளந்த செம்மல்  (வாமனன்)   குளீர்ந்திருக்கும் என் மனதை காரளந்த மேனி(ஆழிமழைக்கண்ணாவா இங்க?அழியில் புக்கு முகுந்து..அதனாலயா?) கொண்டு  காப்பாறுவான் ஆனால்  தேர் செல்லும் வீதியில் எல்லாம் சென்று  வியன் விண் பெருமானார்  அதாவது விண்ணகரப்பெருமான் எனும் ஒப்பியப்பனா இதை விளக்கினா மேல சொல்வேன்!:) இல்லேன்னா கஷ்டம் :)


2010/4/15 shylaja <shyl...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 15, 2010, 4:08:39 AM4/15/10
to mint...@googlegroups.com

பாரளந்த செம்மல் பனிக்குமென்  நெஞ்சத்தைக்
காரளந்த  மேனிகொண்டு காவானேல் -- தேரளந்த
வீதியெலாம் சென்று  வியன்விண்  பெருமானார்
மேதினியில்  ஊர்வேன்  மடல்.

வாமனனை நினைத்து உருகும் என் நெஞ்சத்தை
மழையை அளந்து, அடக்கி இந்திரன் கர்வத்தைப் போக்கிய  மாலவனே காப்பான் என்று எண்ணி, தேரளந்த வீதியியெலாம் சென்று, அவன்  தேரோட்டம் நடத்திய கோகுலத்தின் வீதியெலாம்

நாம் வியந்து போற்றும் விண் பெருமானாள் படைக்கப்பட்ட மேதினியில்
அடியேனும்  மடல் இடுவேன்  என்று பொருள் படுமாறு எழுதி இருக்கிறீர்கள்
என்று நினைக்கிறேன்

ஏதோ நான் புரிந்து கொண்டவரை

புரிந்துகொண்டவரை

எழுதியிருக்கிறேன்

ஸ்ரீரங்கத்து தேவதை பொருள் கண்டு திருத்திக்கொள்ள காத்திருக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

 

 



15-4-10 அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

shylaja

unread,
Apr 15, 2010, 4:18:35 AM4/15/10
to mint...@googlegroups.com
தேனிஸார்  மூணாவது வரி கொஞ்சம் உதைக்கறதே! பா எழுதியவரே கொஞ்சம் விளக்குங்கப் பா!”:)

2010/4/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 15, 2010, 4:22:50 AM4/15/10
to mint...@googlegroups.com
நாலு வரிகளும் உதைத்த உதையில்தானே உளரிக்கொட்டினேன்
 
உங்களுக்கு பரவாயில்லை மூன்றாவது வரி மட்டும் தான் உதைக்கிறது

Hari Krishnan

unread,
Apr 15, 2010, 4:24:27 AM4/15/10
to mint...@googlegroups.com
2010/4/15 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

எங்கள் ஒரே விண்ணப்பம்/விக்ஞாபனம்/கோரிக்கை/தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், யாப்பு ஒழுங்குடன் கூடிய கவிதையோ அல்லது வேறு என்ன கழுதையோ அதற்கான தர்மங்களைக் கடைப்பிடித்து செய்யுங்கள் என்பதுதான்.

யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் கவிதை செய்தாலும் வெறும் வார்த்தைகளைக் கணக்குப் போட்டுக்கொல்லாதீர்கள்.

யாப்பிலக்கணத்தை மீறி புதுக்கவிதை வடிக்கிறேன் என்று சொல்லி விட்டு வெறும் ஓசையை கவிதையாகக் கொடுக்காதீர்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

இதில் பரிதாபத்துக்கு உரியவர்கள் எங்களைப் போன்ற பாமர வாசகர்கள்தான்.  மேற்கண்ட விண்ணப்பத்தை முன்வைத்தால் நான் சொல்வதை மரபுக் கவிதையில் பாடிக் காட்டு என்று புதுக்கவிதை எழுதுபவாகள் இம்சிக்கிறார்கள்.  யாப்பிலக்கணத்தில் அமைந்ததைப் போன்ற சொல்லொழுங்குடன் ஒரு புதுக் கவிதையை எழுதிக் காட்டு என்று மற்றொரு கோஷ்டியினர் சித்ரவதை செய்கிறார்கள்.

என்னுடைய கவலை என்னவென்றால், மரபு என்ற பெயர் காதில் விழுந்ததுமே, என்னவோ பண்டிதமும், அகவிதையும் நிறைந்த ஏதோ ஒரு பிண்டத்தைதான் மரபுக் கவிதை என்று சொல்கிற கோஷ்டி ஒன்று கிளம்பி கடந்த தலைமுறை முழுவதையும் மூவன்னா சலவை செய்து வைத்திருக்கிறது.  பாரதி எழுதியது முழுக்க முழுக்க மரபுதான்.  முன்னரேயே ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.  பாரதியின் எந்தப் பாடலை வேண்டுமானால் எடுத்துப் போடுங்கள்.  அதற்கு யாப்பிலக்கண அடிப்படை என்ன, யாப்பு வகை என்ன என்பதைச் சொல்கிறேன்.  யாப்பை மீறி கவிதை இயற்றினான் பாரதி என்று சொல்வதெல்லாம் பீலா, டபுள்டாவு.   உதாரணத்துக்கு ஒரு ஆச்சரியமான யாப்புவகைக் கட்டமைப்பை பாரதியின் பாஞ்சாலி சபதத்திலிருந்து எடுத்துப் போடுகிறேன்.  (என் விளக்கங்கள் ஒருகாலத்தில் இணையத்தில் வந்துகொண்டிருந்தன.  அவற்றில் ஒரு பகுதி இது.)

====================================================
எண்ணி லாத பொருளின் குவையும்
யாங்க ணுஞ்செலும் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர்
வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தராட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். (19)

பதம் பிரித்து: 

எண் இலாத பொருளின் குவையும்
யாங்கணுஞ் செலும் சக்கர மாண்பும்
மண்ணில் ஆ(யா)ர்க்கும் பெறல் அரிதாம் ஓர்
வார்கடல் பெரும் சேனையும் ஆங்கே
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று
வேண்டும் இன்பமும் பெற்றவ னேனும்
கண் இலாத் திரிதராட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். 


அ. சொற் பொருள்

வார்கடல்: நெடுங் கடல்.  வார்: நீண்ட, நேரான, நெடும்.

ஆ. இலக்கணம் - 

இ. யாப்பு

எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  கட்டளைக் கலிப்பாக்களுக்கு எழுத்துக் கணக்கு உண்டு.  (கட்டளை என்று தொடங்கும் எல்லா வகைப் பாவினமும் ஒவ்வொரு அடியிலும் ஒரே அளவான எழுத்துகளோடு இருக்கும்.)  எண்சீர் விருத்தத்துக்கும் கட்டளைக் கலிப்பாவுக்கும் உள்ள ஒரே வேற்றுமை, 'சந்தத்ததால் அளவொத்து வருவது விருத்தம்; எழுத்தால் அளவொத்து வருவது கட்டளைக் கலிப்பா.'  மற்றபடி இவை இரண்டும் ஒரே மாதிரியான அமைப்பை உடையவ¨தாம்.  மேற்படிப் பாவில் எழுத்தெண்ணிப் பார்க்கலாம்.  எண்ணும் போது, ஒற்று ஒழித்து எண்ண வேண்டும்.  அதாவது க், ச், ப், ந், ய், ல், போன்ற எல்லாப் புள்ளி எழுத்துகளையும் விட்டுவிட்டு எண்ண வேண்டும்.  'கடுகு' என்ற சொல்லில் இருப்பது மூன்றெழுத்துகள்.  'கண்ணுக்குள்' என்ற சொல்லில் இருப்பதும் மூன்றே எழுத்துகள்தாம்.  க ணு கு.  ண், க், ள் ஆகிய மூன்றையும் விட்டுவிட வேண்டும்.

இப்படி எண்ணினால், மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அடியிலும் இருபது எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  ஒவ்வோர் அரை அடியிலும் பத்துப் பத்து எழுத்துகள் இருக்கின்றன.  (பதம் பிரிக்காத வடிவத்தில் எண்ணவும்.)  ஓர் அடி என்பது இரண்டு பாகங்களாகப் பிரிந்திருக்கிறது.  'எண்ணி லாத' என்று தொடங்கி, 'குவையும்' என்பது வரை அரை அடி.  அதற்கு அடுத்ததாக 'யாங்கணும்' என்று தொடங்குவதும் அதே முதல் அடிதான்; சற்றே உள்ளே மடக்கிப் போட்டிருப்பதால் இதனை 'மடக்கடி' என்று சொல்வார்கள்.  இது முதல் அடியின் இரண்டாவது அரை அடி.  ஒரே நீண்ட அடியாகவும் இந்தப் பாடலை எழுத முடியும்.  அதாவது இப்படி:

எண்ணி லாத பொருளின் குவையும் யாங்க ணுஞ்செலும் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர் வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தராட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்.

ஐந்து சீர்களுக்கு மேல் போகும் எல்லா விருத்தங்களிலும், சிந்துப் பா வகைகளிலும் ஓரடியை இரண்டாகப் பிரித்து, இரண்டாவது அரை அடியை மடக்கி எழுதுவார்கள்.  பார்வைக்கு எடுப்பாக இருக்கும் என்பதுதான் இதன் பயன்.  வேறு எந்தவிதமான நோக்கமோ, அமைப்புக் கட்டுப்பாடோ கிடையாது.  இது ஒரு பதிப்புச் செளகரியம் (publishing convenience).  அவ்வளவுதான்.  

மேற்படி கட்டளைக் கலிப்பா 'எண்' என்று நேரசையில் தொடங்கியிருக்கிறது.  அடிக்கு இருபது எழுத்துகள் பயிலும்.  நிரையசையில் தொடங்கும்போது அடிக்கு இருபத்தோ ரெழுத்து இருக்கும்.  பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்கள் கொடுத்திருக்கும் குறிப்பிலிருந்து:

"எண்சீர் கொண்ட நாலடிப் பாடல்களில் இரண்டு வகை உண்டு.  ஒன்று எண்சீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தம்.  மற்றொன்று, கட்டளைக் கலிப்பாவாகும்.  இக் கட்டளைக் கலிப்பாவினை இனம் காணும் முறை: நேரசையில் தொடங்கும் அரையடியில் ஒற்று நீக்கி எண்ணுமிடத்துப் பதினோரெழுத்து இருக்கும்; நிரையசையில் தொடங்கும் அரையடியில் பன்னிரண்டு எழுத்து இருக்கும்.  காப்பியங்களில் இவ்வகையைக் காணலாம்.  பாரதியாரிலும் இப் பாடல்கள் பல. ... ... ... ... ... ... ... ... மரபு வழிப்பட்ட இவையேயன்றி நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோரெழுத்தும் கொண்ட புதுவகையான கட்டளைக் கலிப்பாக்களும் பாரதியாரில் உள்ளன."

எழுத்துக் கணக்கெல்லாம் பார்த்து எழுதினால் அந்தப் பாட்டில் உயிர் எப்படி இருக்கும், கவிதை எப்படி இருக்கும், உணர்ச்சி எப்படி இருக்கும் என்றெல்லாம் விமரிசிப்பவர்களும், கவலைப் படுபவர்களும் இதைப் பார்க்கவும்:

நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்துநித மேகமளந்தே
பெற்றதுன் முகமன்றிப் பிரிதொன்றில்லை.
சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே
திருமித் தழுவியதில் நின்முகங்கண்டேன்.

(கண்ணம்மா என் காதலி - பின்னே வந்து கண் மறைத்தல்.)

ஒவ்வோர் அடியையும் எழுத்தெண்ணிப் பாருங்கள்.  'நெரித்த' என்று நிரையசையில் தொடங்கும் இந்தத் தரவில் ஒவ்வோர் அரையடிக்கும் பன்னிரண்டும், பதின்மூன்றுமாக எழுத்துகள் அமைந்திருப்பதைக் காணலாம்.  உங்கள் வசதிக்காக ஒற்று நீக்கிக் கணக்குப் போட்டும் காட்டுகிறேன்.  

நெரித திரைகடலி நிமுககடே 
 3          5            5 = 13
நீல விசுபினிடை நிமுககடே
              2     5                 5 = 12
திரித நுரையினிடை நிமுககடே;
   3         5             5 = 13
சின குமிழிகளி நிமுககடே;
               2      5         5 = 12
பிரிது பிரிதுநித மேகமளதே
  3        5           5 = 13
பெறது முகமறி பிரிதொறிலை.
                 3     4          5 = 12

சிரித ஒலியினிலு கைவிலகியே
   3        5           5 = 13
திருமி தழுவியதி நிமுககடே.
                 3      5          5 = 13.

இந்தக் கவிதையில் இருந்து கடைசித் தரவை மட்டும் தந்திருக்கிறேன்.  நான்கு தரவுகளை (stanza) கொண்ட இந்தக் கவிதை முழுவதிலும் இந்த அமைதி பொருந்தி வரும்.  இந்தப் பாடலில் உணர்ச்சி இல்லையா, அழகில்லையா, கவிதையில்லையா?  முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  

====================================================

கம்பன், கடிமணப் படலத்தில், சீதை ராமனை நினைத்துத் தனக்குத்தானே பேசிக்கொள்வதைச் சொல்கிறான்.

'கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?

கருப்புச் சூரியன் (வில்லை முறித்தபின்) போன சமயத்தில் அவனுடைய காலைப் பற்றிக்கொண்டே போன என் மனமே!  (எப்படி இருந்தாலும் நீ என்னிடம் திரும்பி வந்துதானே தீரவேண்டும்?)  அவன் வருகின்ற நாளில் அவன் பின்னால் ஒதுங்கியபடி வந்துதானே சேரப்போகிறாய்?  எத்தனையோ  வருஷங்களாக என்னோடு கிடந்து என்னோடேயே இருந்து வரும் நீ, இன்றைக்கு ஒருநாள் மட்டும்தானே மிச்சம் இருக்கிறது, நாளைக்குத் திருமணம் ஆகப்போகிறது இல்லையா?  அதுவரைக்கும்கூட பொறுக்க முடியாமல் இப்படிக் கிடந்து உழல்கிறாயே!  ஒருநாள் பொறுக்க முடியாதவர்கள் யாராவது உண்டா?

கலிவிருத்தம் இது.

சுந்தர காண்டத்தில், தனிமையில் ராமனை நினைத்து வாடிக்கொண்டிருக்கும்போது சொல்கிறாள்:

'கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர்; நினையா
வில்லாளனை, யாதும் விளித்திலிரோ?

புத்திகெட்ட சந்திரனே!  கதிர்களாகிய வாளைக் கொண்டு என்னைத் துன்புறுத்தும் நிலாவே (நிலா வேற; சந்திரன் வேற. சந்திரனுடைய கிரணங்களுக்கு நிலா என்று பெயர்)!  போகாமல் நீண்டுகொண்டே இருக்கும் இரவே!  எல்லாரும் என்னையே துன்புறுத்துகிறீர்களே, என்னைப் பற்றி நினைக்கவே நினைக்காத அந்த வில்லாளன்கிட்ட போயி ஒர்த்தர்கூட ஒருவார்த்தை சொல்லி அழைக்க மாட்டீ்ர்களா?

கலிவிருத்தம்.  கந்தரனுபூதி முழுக்கப் பயி்ல்வது இந்த விருத்தத்திலுள்ள சந்தமதான்.

இதெல்லாம் கவிதை இல்லை என்றால் போய்ட்டுப் போவுது. நீங்க நல்லா இருங்க. :-)


மரபில் தோய்ந்தவனுக்குக் கவிதை எழுதத் தெரியாது என்று நினைப்பதும் ஒரு மூடநம்பிக்கைதான்.   யாப்பு இருக்கிறதா இல்லையா என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, கவிதையைப் பாருங்கள்.  யாப்பு தெரிந்தவனுடைய கவிதானுபவம் கொஞ்சம் அதிகம்தான்.  அதை அனுபவிக்கிறவனுக்குத்தான் தெரியும்.  கமாஸ் இல்லை என்று உறுதியாகச் சொல்லத் தெரிந்தால் சங்கீத ஞானம் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.  அந்த அடிப்படை தெரியாதவனால் அப்படிச் சொல்ல முடியாது.  அதற்காக கமாஸ் பாடிக் காட்டத் தேவையில்லை.  

வெண்பா எழுதினால் உடனே வெடவெடவென்று நடுங்கி, கவிதை செத்துப் போச்சே என்று கவலைப்படவே தேவையில்லை.  புதுக்கவிதை மட்டும் என்ன லேசான விஷயமா?  கடிவாளம் இல்லாத குதிரைமேல் சவாரி செயவதைப் போன்றது புதுக்கவிதை.  கடிவாளம் பிடிக்கத் தெரிஞ்சவனுக்கு, கடிவாளம் இல்லாமல் ஓட்டவும் வரும்.  மரபுக்கவிதையை நீ எழுதிக் காட்டு பாக்கலாம் என்றும் சவால் விடவிலலை; புதுக்கவிதையை எழுதிக்காட்டு என்றும் சவால் விடவில்லை.  கவிதை இல்லையென்று தோன்றினால், இல்லை என்று சொல்லிவிட்டுப் போங்கள்.  அதனால் ஒரு பாதகமும் இல்லை.  மரபே தப்பு என்று சொல்வது சரியான போக்கில்லை.

பெரியவர்களை எதிர்த்துப் பேசுகிறேன் என்று தயவுசெய்து எண்ணவேண்டாம்.  உபசாரத்துக்காக இல்லை, உண்மையாகவே சொல்கிறேன்.  நான் சொல்லியிருப்பது உங்களுக்குப் பிடிக்காமல் போனால், உங்களுடைய பாதங்களைத் தொட்டு நமஸ்கரிக்கிறேன். மரபு என்றாலே கொலைகாரன் என்று சொல்லாமல் இருப்பதே பெரிய உபகாரம்.  மன்னிச்சுக்கங்கண்ணா.  
 

--
அன்புடன்,
ஹரிகி.

shylaja

unread,
Apr 15, 2010, 4:25:38 AM4/15/10
to mint...@googlegroups.com
ஆக அது கவிதைதானே ஏன் இப்படி நடு சொல்லைமட்டும் மாற்றி உதைப்பதாகவே சொன்னால் கவிஞர் அப்புறம் நெற்றிக்கண் திறந்துடுவார்  ஏற்கனவே சோ முழி:):)

Tthamizth Tthenee

unread,
Apr 15, 2010, 4:34:33 AM4/15/10
to mint...@googlegroups.com
இலக்கணம் அறிந்தோர்க்கெல்லாம் கவிதை வராமலிருக்கும்
 
கவிதை படைப்போருக்கெல்லாம்  இலக்கணம் தெரியாமலுமிருக்கும்
 
கவிதையது  நம் மனதிருப்பை  அடுத்தவர்க்கு உரைத்திடத்தானே யெனில்
 
அசையும் ,சீரும் , தளையும் தொடையும், எதுகையும் ,மோனையும்
யாப்பும் இன்றிப் எழுதுகின்ற  புதுக்கவிதையையும்   போற்றிடலாம்  
பொறுப்போடு எல்லோரும் வெண்பா பாடும் வேந்தர்களாய்  மாறிப் போனால்
 
பாமரர்க்கு தமிழ் புரிய   வழியின்றி  ஆகிப்போகும்

துரை.ந.உ

unread,
Apr 15, 2010, 5:03:01 AM4/15/10
to mint...@googlegroups.com
அன்புப் பெரியவர்களுக்கு ,
 
சிறியவனின் தலையீட்டை மன்னிக்க வேண்டுகிறேன்
வெண்பாவை  எளியதளத்திற்கு அனைவருக்கும் புரியும் வகையில்  மாற்றம் கொண்டுவருவதற்கு 
தாங்கள் மனது வைத்தால்  எதுவும் இங்கே சாத்தியமே
 
முதன்முதலாய்ப் படிக்கும்போதே பொருள் தருவதுபோல் எழுதினால் பாமரனுக்கும் எளிதில் போய்ச் சேரும்
 
கீழே  நடைமுறை வாழ்வை சொல்லி இருக்கிறேன்
( முழுமையான மரபு அல்ல என்றாலும் முன்றிருக்கிறேன் அய்யா )
 
அப்பாவின் எண்ணம் :

புழுக்கம் தருமுனக்கு என்றாலும் வாழ்வில்

பழகத்தான் வேண்டும்நீ பாரம் சுமக்க;

பழுதூக்க வேண்டி இருக்கும் வழியில்;

வழுவாக வேண்டும் அதற்கு

 

தாரமே ஆதாரம் :

ஆதாரம் என்றெண்ணி அள்ளித் தெளித்தேன்

சேதாரம் ஆனபின்னால் தள்ளித் துரத்தினர்

பாரம் சுமக்கத் தயாராக ஓடிவந்து

தாரமவள் நிற்கிறாள் முன்பு

 

 இந்தப்பாதை சரி என்றால் சைகைதாருங்கள்

இயன்றவரைத் தொடந்திடுவேன்

 

 நன்றி அய்யா

(தவறு இருந்தால் மன்னிக்கவும்)
 
--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

செல்வ புவியரசன் selva puviyarasan

unread,
Apr 15, 2010, 4:02:56 AM4/15/10
to mint...@googlegroups.com
வணக்கம்.  நீங்கள் எழுதியதே மன்னிக்கவும்... இயற்றியதே ஒரிஜினல் நேரிசை வெண்பா. நாயகன் நாயகி பாவனையில் நல்லதொரு கவிதை. காரளந்த மேனிகொண்டு என்பதில் வரும் வர்ணனையும் பாரளந்த என்பதில் வரும் அவதாரக்குறிப்பும் அழகு. பனிக்குமென் நெஞ்சத்தை வெகுபிரமாதமான சொல்லாட்சி. நான் இட்ட வெண்பா பதிவு விளையாட்டுப்பதிவு. இப்படி நிறைய எழுதியிருக்கிறேன். வெண்பா என்பது வெறும் தளைகள் மட்டுமல்ல, அதில் செப்பலோசையும் பயின்றுவரவேண்டுமென்ற என் தந்தையின் அறிவுறுத்தலால் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டேன். மற்றபடி, வெண்பா எழுதுவதே கடினமானதென்னும் கருத்தொன்று உலவிவருகிறது. வெண்டளை பயின்றுவர எழுதுவது அப்படியொன்றும் கடினமானதில்லை என்பது எனது அபிப்ராயம். கட்டளை கலித்துறையே உண்மையான சவால். மின்தமிழ் நண்பர்களில் கட்டளை கலித்துறை எழதுபவர்கள் எவருமுண்டோ? 
 

2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
திரு  செல்வப் புவியரசு!   நான்மறையும்,  இதிகாசமும்  கற்க  நினைக்கின்ற  
வழி  இனிமையாக   இருக்கிறது.  
 
என்முகத்தைப்  பார்  என்று  முடித்தீரா.  எனக்கு   ஒரு  சபலம்.  பார் 
என்ற  சொல்லை  வைத்து  வெண்பா   ஒன்றைச்  செய்தேன்.  தருமி  போல்  இப்பொழுதே  
கூறிவிடுகிறேன்.  எவ்வளவு   பிழை  இருக்கிறதோ   அவ்வளவு   போக  மிச்சத்தை......
 
 
பாரளந்த செம்மல் பனிக்குமென்  நெஞ்சத்தைக்
காரளந்த  மேனிகொண்டு காவானேல் -- தேரளந்த
வீதியெலாம் சென்று  வியன்விண்  பெருமானார்
மேதினியில்  ஊர்வேன்  மடல். 
 
***

 
On 4/14/10, செல்வ புவியரசன் selva puviyarasan <selvapuv...@gmail.com> wrote:

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 6:03:27 AM4/15/10
to mint...@googlegroups.com
மடல் என்பதில்   முடித்தேனா.  இப்பொழுது  மடல் என்று  ஆரம்பித்து   வெண்பா.  அதனுடைய  முடிவுச்சொல்   அடுத்த வெண்பாவின்  ஆரம்ப  எழுத்து.   அப்படி   ..... அவ்வளவுதான் மாட்டிண்டீங்க
**************************
 
2)
மடலூர்ந்த  நெஞ்சத்து மங்கையர்கோன் தாளை
விடலென்று மென்நெஞ்சே வாழ்வில் -- திடம்பொலிந்த
தாளிணையும் வேல்நுனியும் தண்டமிழும்  கொண்டு
ஆளும்செய ஆளும் அரண். 
 
3)
அரணாகும் மாதவனே அன்பீனும் அருளாய்த் 
தருணத்தில்  தாங்கும்  தயாபரனாய்த் -- திரணமென 
எவர்காப்பும் என்செய்யும் நம்காப்பும் காப்பன்றே 
அவன்காக்கும்  காப்பொன்றே காப்பு. 
 
4)
காப்பு  மறந்ததுவும்  கண்ணன்  கழல்பாதம் 
கூப்ப  மறந்ததுவும் கையென்றால் -- தீப்பொறிதான் 
எரிக்க மறுப்பதுவும் ஏந்துபுனல் நனையா 
திருக்க வடுப்பதுவும் காண். 
 
5)
காணார்  உலகிதனைக்  கண்டவர்தாம்   ஓரார் 
கோணா கம்மிதித்து  நட்டான் குரக்கினத்தை
சேணாடு தந்துவணப் புள்ளுயர்த்திப் பாரித்தான் 
கோணாத நெஞ்சுள் புரிந்து. 
 
(மேலும் வரும் அபாயம் உண்டு)

 

Swarna Lakshmi

unread,
Apr 15, 2010, 6:04:02 AM4/15/10
to mint...@googlegroups.com
காரளந்த மேனி கொண்டு என்னை காப்பாற்ற வரவில்லையெனில், அவன் தேரோடும் வீதியினில் சென்று அவன் உலவும் மண்ணில் மடல் (தாமரை மடல் - மலர்கள்?) இடுவேனென்று அர்த்தமோ?!! அல்லது அங்கப்ப்ரதட்சிணம்?
நான் தமிழ்ல ரொம்ப வீக்!! தப்பாயிருந்தால் மன்னிச்சிடுங்கோ!!


From: shylaja <shyl...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thu, 15 April, 2010 1:48:35 PM
Subject: Re: [MinTamil] Re: "தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"

shylaja

unread,
Apr 15, 2010, 6:07:53 AM4/15/10
to mint...@googlegroups.com
அபாயம் பற்றிக்கவலை இல்லை, அபயமென அரங்கன்(நீங்க இல்ல):) இருக்க!
  நாங்கள்  அர்த்தம் சொன்ன மடல் என முடித்த வெண்பாவை டமால்னு விளக்கிவிட்டு மேலே செல்லவும்!

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 6:09:26 AM4/15/10
to mint...@googlegroups.com
தாங்கும்  தயாபரனாய்த் -- திரணமென 
எவர்காப்பும் என்செய்யும் நம்காப்பும் 

 

இந்த  இடத்தில் ஒன்று  தயாபரனாய்த்  வராது இல்லையேல் திரணமென   என்று  வராது.    காய்ச்சீர் முன்  நிரையசை வராது.   இருந்தாலும்  இரண்டு வார்த்தையையும்  விட மனசில்லை.  ஆனால் ஒரு வழி செய்வோம்.

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 6:16:05 AM4/15/10
to mint...@googlegroups.com
>>>அதில் செப்பலோசையும் பயின்றுவரவேண்டுமென்ற என் தந்தையின் அறிவுறுத்தலால் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டேன்<<<
 
வாங்க  நல்லா  மட்டிக்கிட்டீங்க.    உங்கள்  தந்தையைப்  பற்றிய  நினைவுகளையும்,   பதிவுகளையும்  நீங்கள்  செய்தால்  என்ன?    செப்பலோசை  பயின்றுவர  வேண்டும்  என்று  வற்புறுத்தும் தந்தையைப்  பற்றிச் சொல்ல   நி்றைய  இருக்க  வேண்டுமே!    வேடிக்கை  பார்த்தது  போதும் புவி.   ஓர்  இழை தொடங்குக.

 

devoo

unread,
Apr 15, 2010, 6:38:47 AM4/15/10
to மின்தமிழ்
மடலூர்ந்த நெஞ்சத்து மங்கையர்கோன் தாளை
விடலென்று மென்நெஞ்சே வாழ்வில் -- திடம்பொலிந்த
தாளிணையும் வேல்நுனியும் தண்டமிழும் கொண்டு
ஆளும்செய ஆளும் அரண்


அருமை அரங்கனாரே ! இதை ஒரு தனியனாகவே சேர்க்கலாமோ,
வைணவ உலகு ஏற்குமா ?

தேவ்


On Apr 15, 5:03 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> On 4/15/10, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
>
>
> > இதென்ன திருவரங்கத்துக்கு வந்த சோதனை? கவிதை எழுதிய நீவிர் செய்யவேண்டிய பணியை
> > எம்மிடம் நகர்த்துவதும் ஏன்?:) ஆயினும் சொன்னால் விரோதமில்லை சொல்லுவேன்
> > கேளும்!
>

> > 2010/4/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >> அந்த வெண்பாவுக்குப் பொருள்  சொல்லுங்க என்றேன்  அவர்   ஒரு ஷொட்டு
> >> கொடுத்துவிட்டுப்  போய்விட்டார்.
> >> எங்க  கவிதாயினி  நீங்களாவது  பொருள்  சொல்லுங்க  பார்ப்போம்.
>

> >>   On 4/15/10, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
> >>> ஏதோ என் பேரைச் சொலலியாவது ஒரு உன்னதமான மரபுக் கவிதையை
> >>> அய்யம்பேட்ட்டைக்காரரை படிக்க வச்சிட்டீங்க:)
>

> >>> 2010/4/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >>>> தலீவீ  பேர்  சொன்னா  அதிருதுல்லலல....
>

> >>>> On 4/15/10, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
>
> >>>>> ஹாங்  ஹங்  அப்படி  வாரும்  வழிக்கு;--))))
>

> >>>>> On 4/15/10, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com> wrote:
>
> >>>>>> ரங்கனாரே..
>
> >>>>>> உங்கள் கவிதையை தாண்டிச் சென்றுவிட்டேன்.  தவறு என்னுடையதுதான்.
>
> >>>>>> உபச்சாரம் இல்லை.  உண்மை.  பனிக்குமென் நெஞ்சம் - மிக அற்புதமான படிமம்.
> >>>>>> இவை போன்றவற்றைத்தான் நான் மரபுக் கவிதையில் கேட்பது.  நம் புலவர்கள் செய்கிற
> >>>>>> உட்டாலங்கடி வேலைகளை சொல்லிக் காட்டும்போதுதான் அவர்களுக்குக் கோபம் வருகிறது.
>
> >>>>>> புதுமையும் மரபும் சேர்ந்த ஒரு பார்வையில் வந்திருக்கிறது உங்கள்
> >>>>>> வெண்பா.  அதில் அசை சீர் கணக்கு எல்லாம் என்னிடம் கேட்டால் எனக்குத் தெரியாது.
>
> >>>>>> யாராவது எதையாவது பாடிவிட்டு கமாஸ் என்றால் இது கமாஸ் இல்லை -
> >>>>>> கதையடிக்கிறீர் என்று என்னால் சொல்ல முடியும்.  சரி.  நீர் சரியான கமாஸ் பாடிக்
> >>>>>> காண்பியும் என்று என்னை யாராவது நெருக்கினால் ரொம்பவும் அப்பாவி போல முகத்தை
> >>>>>> வைத்துக் கொண்டு வேறு எங்காவது நழுவி ஓடிப்போய்விடுவேன்.
>
> >>>>>> அதே போலத்தான் இந்த மரபுக் கவிதை சமாச்சாரமும்.
>
> >>>>>> அதற்காக கவிதாயினியை யமகா ஓட்டச் சொல்கிறேன் என்று சொல்வதெல்லாம்
> >>>>>> உச்சகட்ட மிரட்டல்.  இதற்கு டெல்லியில் இருக்கும் என்னுடைய நண்பர்களே எவ்வளவோ
> >>>>>> நல்லவர்கள் என்று தோன்றுகிறது.
>
> >>>>>> அன்புடன்
>
> >>>>>> பென்னேஸ்வரன்
>

> >>>>>> 2010/4/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >>>>>>>  >>>அய்யம்பேட்டைக்காரரே  கவிதையை அளிக்கக்கேட்டும் இங்கே அளிக்காம
> >>>>>>> அதிசியமா  வாயைமூடிட்டு இருக்கேனாக்கும்<<<
>
> >>>>>>> அதாம்மா!    உங்க  கவிதை  வரலேன்னு   என்ன   கடுப்பாயிட்டார்
> >>>>>>> பார்த்தீங்களா?
> >>>>>>> ஒவ்வொரு வெண்பா  வரும்  போதும்    ஆர்வமா  வந்து
> >>>>>>> பார்க்கிறாரு.   இல்லைன்ன  உடனே   ஒரு  அலுப்பு:--))))
>

> >>>>>>>   On 4/15/10, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
> >>>>>>>> 2010/4/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >>>>>>>>> அதெல்லாம்  இருக்கட்டும்.  உமக்குத்தான்  வெண்பா  என்றால்
> >>>>>>>>> உயிராச்சே!   எங்கே  படித்துப்
> >>>>>>>>> பொருள்  சொல்லுங்கள்  பார்ப்போம்.
> >>>>>>>>> ரொம்ப  பிகு பண்ணினால்
> >>>>>>>>> பெங்களூர்க் கவிதாயினியை
> >>>>>>>>> யமகா  ஓட்டச்  சொல்லிவிடுவோம் !!
> >>>>>>>>> :--))))<<<>>>>
>
> >>>>>>>> ஐயோ நான்பாட்டுக்கு  பார்வையாளினியா  கொஞ்சநாளா இருக்கேனே
> >>>>>>>> பொறுக்கலையா  அரங்கனாரே!:) அய்யம்பேட்டைக்காரரே  கவிதையை அளிக்கக்கேட்டும்
> >>>>>>>> இங்கே அளிக்காம அதிசியமா  வாயைமூடிட்டு இருக்கேனாக்கும்:):)
>

> >>>>>>>>>   On 4/15/10, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>


> >>>>>>>>> wrote:
>
> >>>>>>>>>> எங்கள் ஒரே விண்ணப்பம்/விக்ஞாபனம்/கோரிக்கை/தெண்டனிட்டுக் கேட்டுக்
> >>>>>>>>>> கொள்வது என்னவென்றால், யாப்பு ஒழுங்குடன் கூடிய கவிதையோ அல்லது வேறு என்ன
> >>>>>>>>>> கழுதையோ அதற்கான தர்மங்களைக் கடைப்பிடித்து செய்யுங்கள் என்பதுதான்.
>
> >>>>>>>>>> யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் கவிதை செய்தாலும் வெறும்
> >>>>>>>>>> வார்த்தைகளைக் கணக்குப் போட்டுக்கொல்லாதீர்கள்.
>
> >>>>>>>>>> யாப்பிலக்கணத்தை மீறி
>

> ...
>
> read more »

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 6:42:16 AM4/15/10
to mint...@googlegroups.com
ஐயா!   அப்படி  நினைப்பதே   பெரும்  அபசாரம். 
என் புன்கவியெல்லாம்   கொண்டு  தனியனாக்க
வைணவ உலகு அப்படி ஒன்றும்
காய்ந்து போய்விடவில்லை.
எனினும்  ஆசீர்வாதங்களுக்கு நன்றிகள்:--)))

 

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 6:47:32 AM4/15/10
to mint...@googlegroups.com
துரை  சார்!   நீங்க   எழுதுகின்ற   வேகம்  எல்லாம்  எனக்கு  வருமா?
 
குறளையே   வைத்துச்  செய்யுள்  பண்ணுகிறவர்!.
 
நான்  எதோ  சும்மா   திடீர்  வேகம்   அவ்வளவுதான்   
திரு செல்வப் புவியரசு எழுதியதைப் பார்த்ததும்   ஒரு  விறுவிறுப்பு.
:--)))

 
--

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 15, 2010, 7:07:56 AM4/15/10
to mint...@googlegroups.com
கிருஷ்ணகிரியில் எஸ்.எல்.எல்.சி முடித்து விட்டு ஊர் சுற்றிக் கொண்டு இருந்தேன். 
 
எனக்குத் தெரிந்த ஒரு பெண் - என்னை விடப் பெரிய பையன் ஒருத்தன்.  நான் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சுலபமாக சென்று வந்து கொண்டிருந்தவன்.  அதைப் பார்த்து அந்தப் பையன் என்னை உயிர் நண்பனாக ஆக்கிக் கொண்டான்.  அவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் பலத்த எதிர்ப்பு.
 
நான்தான் அவர்கள் இடையில் தூது போய்க் கொண்டு இருந்தேன்.   அந்தப் பெண்ணின் பெற்றோர் ஒருநாள் அவளுடைய பற்கள் நொறுங்குமாறு அடித்துத் தாக்கினார்கள். 
 
ஒருநாள் என்னுடைய உதவியால் அந்தப் பெண் வீட்டை விட்டுத் தப்பி வந்து காதலனுடன் நெய்வேலிக்கு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள்.
 
என்னுடைய கைங்கர்யத்தால்தான் இருவரும் ஒடிப் போனார்கள் என்ற தேவ ரகசியம் அவர்கள் இருவரும் பஸ் ஸ்டாண்ட் போவதற்காக ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருநத்போது பார்த்து விட்ட எங்கள் தெருவைச் சேர்ந்த ஒரு சாயபுப் பெண்மணி ஊருக்கெல்லாம் பறையடித்து் சொல்விட்டாள்.  அச்சாபீஸ் காரர் வீட்டுப் பைய்னதான் அவர்களை வண்டி ஏற்றி அனுப்பி வைத்தான் என்று ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக செய்தியைப் பரப்பி விட்டாள்.
 
தப்ப வழியில்லாமல் வகையாக மாட்டிக் கொண்டேன்.
 
பெண் வீட்டில் என்னை பெண்டைக் கழற்றுவதற்குத் தேடத் துவங்கினார்கள்.  அதற்கு முன்பே அப்பா என்னை வெளுத்து வாங்கியதால் அன்று இரவே ஜோலார்பேட்டை போய் அங்கிருந்து ஒரு ரயில் பிடித்து சென்னைக்கு ஓடிவந்து விட்டேன்.  அங்கே ஒரு அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் வேலக்கு சேர்ந்து விட்டேன்.  மாலை நேரங்களில் மெல்லிசைக் குழுக்களில் பேங்கோஸ், டிரம்ஸ் முதலிய வாத்தியங்கள் வாசித்து கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தேன்.  என்றாவது ஒருநாள் டைரக்டர் ஆகலாம் என்று கோடம்பாக்கத்தையும் சுற்றி வந்தேன்.
 
அப்படி ஓரிரு மாதங்கள் போயின.  பிறகு இரண்டு மாதங்களில்  ஒருவகையான கடுமையான காய்ச்சல் என்னைத் தாக்கியது.  குளிர்நடுக்கத்துடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன்.
 
அச்சகத்தில் என்னுடன் வேலை செய்த நண்பன் ஒருவன்  ராயப்பேட்டை மருத்துவமனையில் என்னை  சேர்த்து விட்டான்.  மருத்துவ மனையில் ஏறத்தாழ நினைவு தவறிப் போகும் அளவுக்கு கிறுகிறுத்துப் படுத்துக் கொண்டிருந்தேன். 
 
தலைமை மருத்துவர் ஒருவர் என் படுக்கைக்கு  வந்தார்.  அவரைச்சுற்றி சுமார் 15 மருத்துவ மாணவர்கள்.  அவர்களிடம் தலைமை மருத்துவர் என்னைக் காட்டிக் காட்டி ஆங்கிலத்தில் ஏதேதோ சொல்லத் துவங்கினார்.
 
படுக்கையில் நடுங்கிக் கொண்டிருந்த எனக்கு இவர்கள் எல்லோரும் என்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்ற பயம் ஒருபக்கம். 
 
ஏதோ விபரீதமாக எனக்கு நடந்து கொண்டிருக்கிறதோ என்கிற பீதி ஒரு பக்கம்.  
 
அந்த மருத்துவர்கள்  என்ன பேசிக் கொள்கிறர்கள் என்று புரியாத ஒரு அவதி ஒரு பக்கம்.
 
ஏறத்தாழ அன்று இருந்த நிலையில்தான் இன்று நான் இருக்கிறேன்.  மரபுக் கவிதை குறி்த்து எல்லோரும பின்னிப் பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  இடையில் ஏதாவது எழுந்து சொல்லலாமா என்று முயற்சித்து கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன். 
 
தலை கிறுகிறுக்கிறது.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
துரை  சார்!   நீங்க   எழுதுகின்ற   வேகம்  எல்லாம்  எனக்கு  வருமா?



--
http://www.vadakkuvaasal.com/

Hari Krishnan

unread,
Apr 15, 2010, 7:10:52 AM4/15/10
to mint...@googlegroups.com


2010/4/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

இலக்கணம் அறிந்தோர்க்கெல்லாம் கவிதை வராமலிருக்கும்
 
கவிதை படைப்போருக்கெல்லாம்  இலக்கணம் தெரியாமலுமிருக்கும்
 
கவிதையது  நம் மனதிருப்பை  அடுத்தவர்க்கு உரைத்திடத்தானே யெனில்
 
அசையும் ,சீரும் , தளையும் தொடையும், எதுகையும் ,மோனையும்
யாப்பும் இன்றிப் எழுதுகின்ற  புதுக்கவிதையையும்   போற்றிடலாம்  
பொறுப்போடு எல்லோரும் வெண்பா பாடும் வேந்தர்களாய்  மாறிப் போனால்


ஒரு சின்ன சவால்.  மோனை இல்லாமல் ஒரு நாலுவரி (புதுசோ இல்ல வேற என்ன பேர்ல சொல்றீங்களோ அது) எழுதிக் காட்டுங்க பாப்போம்.  நீங்க எழுதறதுல உள்ள மோனையை நான் காட்டுகிறேன்.  

நமக்குத் தொழில்கவிதை நாட்டுக் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்

என்ற பாரதி வெண்பா புரிகிறது என்றால், பாமரர்க்கு வெண்பா புரியும் என்றுதான் பொருள்.  வெண்பா என்றால் என்னவோ ஐஸ்லாந்தில் கிடைக்கிற வஸ்து என்று நினைத்துக்கொண்டால் வெண்பா புரியாதுதான்.  அதாவது அதனுடைய ஸ்ட்ரக்சர் புரியாது என்று சொல்லவந்தேன்.  இந்த ஸ்டரக்சர் சரியாக அமைந்துவிட்டால், அங்க யாரோ சொல்றாங்களே, செப்பலோசை, அது தானாகவே வந்து உட்கார்ந்துகொள்ளும்.  

தயவுசெய்து நான் சொல்வதை எள்ளலாகவோ, கோபமான கருத்து வெளிப்பாடாகவோ புரிந்துகொள்ளாதீர்கள்.  மிகுந்த வணக்கத்துடனும் பணிவுடனும் சொல்கிறேன்.  இலக்கணம் தெரியாது என்று சொல்வது வேறு; இலக்கணம் தெரியாமலேயே நல்ல கவிதையை இயற்றுவது வேறு.  ஓசையமைதியில் இருக்கிறது சாவி.  நல்ல புதுக்கவிதைக்கும் ஓசையமைதி என்றொன்று உண்டு.  இதற்குமேல் அவங்கவங்க இஷ்டம்.  நான் வர்ல ஆட்டைக்கு. :-) 

Hari Krishnan

unread,
Apr 15, 2010, 7:27:10 AM4/15/10
to mint...@googlegroups.com


2010/4/15 Hari Krishnan <hari.har...@gmail.com>



2010/4/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
இலக்கணம் அறிந்தோர்க்கெல்லாம் கவிதை வராமலிருக்கும்
 
கவிதை படைப்போருக்கெல்லாம்  இலக்கணம் தெரியாமலுமிருக்கும்
 
கவிதையது  நம் மனதிருப்பை  அடுத்தவர்க்கு உரைத்திடத்தானே யெனில்
 
அசையும் ,சீரும் , தளையும் தொடையும், எதுகையும் ,மோனையும்
யாப்பும் இன்றிப் எழுதுகின்ற  புதுக்கவிதையையும்   போற்றிடலாம்  
பொறுப்போடு எல்லோரும் வெண்பா பாடும் வேந்தர்களாய்  மாறிப் போனால்


அசையும், சீரும் இல்லாமல் எந்த ஒரு வார்த்தையாவது எழுத முடியுமா?  அசை என்றால் சிலபிள்.  சிலபிள் இல்லாமல் எப்படி ஒரு வார்த்தை வரும்? ஆங்கிலக் கவிதை இலக்கணத்தை எடுத்து, தமிழ்க்கவிதை இலக்கணத்தோடு பொருத்திக் காட்டவா?  சந்தவசந்தக் குழுவில் செய்திருக்கிறேன்.  அதை எடுத்து அனுப்புகிறேன்.  பாருங்கள்.  

ஒரு சின்ன கேள்வி.  பாரதியின் சூரிய அஸ்தமன வர்ணனை பாஞ்சாலி சபதத்தில் வருகிறது.   என் விளக்கக் குறிப்பிலிருந்து அந்தப் பகுதியைத் தருகிறேன்.

========================
பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட்டு எரிவன! ஓகோ!
என்னடீ இந்த வன்னத்து இயல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத் தீவுகள்! பாரடீ
நீலப் பொய்கைகள்! அடடா நீல
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடீ!
எத்தனை செம்மை! பசுமையும் கருமையும்
எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள், சுடரொளிப் பொற்கரை யிட்ட
கரும் சிகரங்கள்! காணடி ஆங்கு
தங்கத் திமிங்கிலந்தாம் பல மிதக்கும்
இருட்கடல்! ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்! 

அ. சொற் பொருள்: 

வன்னம்: வண்ணம்; வர்ணம்.

ஆ. இலக்கணம்: - 

இ. யாப்பு:

நிலைமண்டில ஆசிரியப்பா.  முற்றிலும் - ஓரடியிலும் - எதுகை பயிலாமல் நடப்பதைப் பார்க்கலாம்.  மோனை முதலிய அமையாது வேறுபடத் தொடுக்கும் தொடையைச் 'செந்தொடை' என்று யாப்பருங்கலக் காரிகை குறிக்கிறது.  எதுகை, மோனை அமையாமல் செய்வதைச் செம்மையான தொடை (தொடை: தொடுக்கப்பட்டதாகிய பாடல்) என்று இலக்கணம் சொன்னார்கள்.  ஓசை இலக்கணத்தை ஒட்டியும், மற்ற உறுப்புகளை விடுத்தும் இயற்றும் இந்த நிலையை அடைய மிகுந்த பயிற்சி தேவை.  பாரதியே கூட எதுகையைத் தவிர்த்திருக்கிறானே தவிர, மோனையை முற்றிலும் விட முடியவில்லை பாருங்கள்.  மோனை என்பது (முதல் நிலை கடந்ததும்) தன்னை அறியாமல் நிகழ்வது.  தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாதது.  இலக்கணத்தை விட்டு விட்டு எழுதப்படுவதாகச் சொல்லப்படும் புதுக்கவிதைகளிலும் ஏராளமான அளவில் மோனை பயில்வதைக் காணலாம்.  
=====================

இதே 152வது பாடலுக்குக் குறிப்புரையில், உரைநடையில் ஒருமுறை சூரிய அஸ்தமனத்தை வர்ணித்திருக்கிறான் பாரதி.  இந்தப் பகுதியில் என்ன சொல்லியிருக்கிறானோ, கிட்டத்தட்ட அதையே, அப்படியே உரைநடையில் எழுதியிருக்கிறான்.  இரண்டையும் ஒப்பிட்டால், உரைநடையில்தான் அழகும் கம்பீரமும் நயமும் உணர்ச்சியும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வெளிப்படுகின்றன.

இருந்தாலும்.  இதோ இந்த மேற்படி வருணனையைத்தான் கவிதை என்கிறோம்.  அழகிலும் கம்பீரத்திலும் நயத்திலும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் வெடித்துச் சிதறி வண்ணவண்ணமாகக் கொட்டுகிறதே அதை உரைநடை என்றுதான் சொல்கிறோம். கவிதையை விஞ்சிய உரைநடை என்றுதானே சொல்கிறோம்?   ஏன் இதை உரைநடை என்றும், அதைக் கவிதை என்றும் சொல்வதில்லை?  அப்படியானால் கவிதை என்பது என்ன?  

சொல்லவருவதுதான் முக்கியம் என்றால், உரைநடையில் சொல்வதில் என்ன தடை இருக்கமுடியும்?  இதோ எழுதிக்கொண்டிருக்கிறேனே இதையே யாப்பு வடிவத்தில் எழுதிக்காட்ட முடியும்.  ஆனாலும், இதைச் சொல்வதற்கு உரைநடையைத்தானே தேர்ந்திருக்கிறேன்?

எனக்கு விடை சொல்லுங்கள்.  எது கவிதை, எது உரைநடை?  ஒரே கவிஞன் எழுதிய ஒரே காட்சி வருணனையில் ஒன்றைக் கவிதை என்றும் அதைக் காட்டிலும் மிக அழகான இன்னொன்றை உரைநடை என்றும் ஏன் சொல்கிறோம்?  கொஞ்சம் என் மரமண்டைக்குப் புரியும்படி விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  :-)

மண்டை கிறுகிறுக்கிறது என்று சொல்பவருக்கு:

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
பாட்டைப் பண்ணோ டொருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா....

இதையெல்லாம் கேட்டா கிறுகிறுக்கத்தான் செய்யும்.  அதுக்குள்ள ஜன்னி வந்துட்ட மாதிரி பாவனையெல்லாம் பண்ணவேண்டாம். என்ன? :-))


PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 15, 2010, 7:32:53 AM4/15/10
to mint...@googlegroups.com
அட, உண்மையைச் சொன்னா ஏண்ணா கோபிச்சிக்கிறீங்க?
 
பென்னேஸ்வரன்

2010/4/15 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
http://www.vadakkuvaasal.com/

Hari Krishnan

unread,
Apr 15, 2010, 7:40:05 AM4/15/10
to mint...@googlegroups.com
2010/4/15 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
அட, உண்மையைச் சொன்னா ஏண்ணா கோபிச்சிக்கிறீங்க?
 
பென்னேஸ்வரன்


உண்மையைச் சொன்னால் கோபம் வருகிறது என்று சொன்னால் அதற்கு அர்த்தம் வேற.  அந்த அர்த்தத்துல நீங்க சொல்றீங்கன்னு நான் புரிஞ்சுக்கல.  இதுக்கு முந்தின மடல்ல அழுத்தந் திருத்தமா ஒண்ணு சொல்லியிருக்கேன்:

 ================
தயவுசெய்து நான் சொல்வதை எள்ளலாகவோ, கோபமான கருத்து வெளிப்பாடாகவோ புரிந்துகொள்ளாதீர்கள்.  மிகுந்த வணக்கத்துடனும் பணிவுடனும் சொல்கிறேன்.  இலக்கணம் தெரியாது என்று சொல்வது வேறு; இலக்கணம் தெரியாமலேயே நல்ல கவிதையை இயற்றுவது வேறு.  ஓசையமைதியில் இருக்கிறது சாவி.  நல்ல புதுக்கவிதைக்கும் ஓசையமைதி என்றொன்று உண்டு.  இதற்குமேல் அவங்கவங்க இஷ்டம்.  நான் வர்ல ஆட்டைக்கு. :-
=================

தெர்துங்களாண்ணா?  ஆ? சும்மா புரியாத மாதிரி பண்ணாதீங்கோண்ணா... எங்க வாத்தியார் (பேராசிரியர் நாகநந்தி) கூட நல்ல நாடக ஆசிரியர், நடிகர், எழுத்தாளர்தான் (மேஜர் சுந்தரராஜன் நடித்த ஜஸ்டிஸ், ஆர் எஸ் மனோகர் நடித்த துரியோதனன் -- 1978ம் வருட இசை இலக்கிய நாடக மன்றம் (கலை இலக்கிய நாடக மன்றமா...பெயர் தற்சமயத்துக்கு நினைவில தடுமாறுகிறது) அளித்த ‘ஆண்டின் சிறந்த நாடகத்துக்கான விருதை‘ப் பெற்றது.  அவருகூட அய்யம்பேட்டைதான்.  எனக்கு அய்யம்பேட்டையும் தெரியும், அம்மாபேட்டையும் தெரியும்.  என்ன? :-))

annamalai sugumaran

unread,
Apr 15, 2010, 7:43:04 AM4/15/10
to mint...@googlegroups.com
பாரளந்த செம்மல் பனிக்குமென்  நெஞ்சத்தைக்
காரளந்த  மேனிகொண்டு காவானேல் -- தேரளந்த
வீதியெலாம் சென்று  வியன்விண்  பெருமானார்
மேதினியில்  ஊர்வேன்  மடல். 

 

 
மடலேறுதல் என்றால் என்னவென்று பலருக்கு மறந்து போயிற்றா ?
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Innamburan Innamburan

unread,
Apr 15, 2010, 7:47:36 AM4/15/10
to mint...@googlegroups.com
ஆழம் தெரியாமல் காலை விடுவதை, மன்னிக்கவும்.
எதுகை, மோனைக்கு ஊற்று இங்கே,

"பெண் வீட்டில் என்னை பெண்டைக் கழற்றுவதற்குத் தேடத் துவங்கினார்கள்." என்பதிலிருந்து, "பெண் அகத்தில் 'பென்'நை பெண்ட்' எடுத்த வகை என்ன? என்ன?
 என்னலாமே" என்பதிலிருந்து வெண்பா பிடிக்கலாமே. நமக்கு கற்பனை வளம் போதாது.

இன்னம்பூரான்

2010/4/15 annamalai sugumaran <amirth...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 15, 2010, 7:49:06 AM4/15/10
to mint...@googlegroups.com
இதற்கு அந்தப் பெண்வீட்டாரே தேவலை என்று தோன்றுகிறது.
 
 
பென்னேஸ்வரன்

2010/4/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>



--
http://www.vadakkuvaasal.com/
330.gif

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 7:59:46 AM4/15/10
to mint...@googlegroups.com
6)
புரிந்த  மலர்ப்பாதப்  புண்ணியனே   புணரி
திரிந்து திரைமோதும்  மூதுலகம் தாளால்
வரிந்து அளந்திட்ட வண்ணச்சே வடியே
தெரிந்து உளந்தொட்ட தாள்.
 
7)
தாள்தடவும்  விண்ணுலகும் தன்சோதி வைத்தங்கு
ஆள்தேடிச் சூழ்தரு மோர்வரவும் -- மாளாத
காதல் மாழாந்து கன்னிமையோர் பொன்பூக்கும்
போதம் ஒன்றே புகல்.
 
8) 
புகல்வோம் புரிவோம் பொன்வண்ண மூர்த்தி 
அகலாது நெஞ்சத்துள்  வைத்து -- மிகைவாழ்நாள் 
தீர்ந்து அவனடிக்கே  தொண்டுக் கடன்பூணப் 
பேர்ந்தும் அவனுகப்பே பயன். 
 
9) 
பயனெண்ணிப் பாரில் பலவருத்த  முற்றார் 
செயலென் எனவெண்ணிச் சோர்ந்தார் -- அயன்விதியில் 
இட்டதுவே  கிட்டிவரும் என்னில் இறையடியே 
இட்டமுடன் ஒட்டிநிற்கைத்  திறன். 
 
10) 
திறனாக  எண்ணித்  தீர்ந்த  விதிக்கே 
அறமாவ தேதென்னில் உய்வாம் -- மறவாமல் 
மாதவனை  மன்ன மனத்தி லிருத்துவதே 
ஏதமிலாச் செய்கை யுணர். 
 
(அதுக்குள்ள  அப்பாடா  என்றால் எப்படி)

 

Tthamizth Tthenee

unread,
Apr 15, 2010, 8:03:02 AM4/15/10
to mint...@googlegroups.com
மடலேறுதல் என்றால்  அது சரி
 
ஊர்வேன்  மடல்
 
இது மடலூர்தல் அல்லவா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
15-4-10 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதினார்:

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 15, 2010, 8:04:03 AM4/15/10
to mint...@googlegroups.com
ஹலோ யாருங்க மண்டபத்திலே?
 
தொல்லை தாங்கலை சாமி.  இப்பவே கண்ணக் கட்டுதே..

Tthamizth Tthenee

unread,
Apr 15, 2010, 8:05:07 AM4/15/10
to mint...@googlegroups.com
(அதுக்குள்ள  அப்பாடா  என்றால் எப்படி)
 
மூச்சு வாங்குது
 
இன்னும் போகவேண்டிய தூரம் நினைத்து
 
அன்புடன்
தமிழ்த்தேனீ



 
15-4-10 அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதினார்:

annamalai sugumaran

unread,
Apr 15, 2010, 8:05:49 AM4/15/10
to mint...@googlegroups.com
ஊர்வேன் மடல்
ஊர்வேன் மடலில்

annamalai sugumaran

unread,
Apr 15, 2010, 8:08:53 AM4/15/10
to mint...@googlegroups.com
அப்பாடி ! படிக்கவே இப்படி !
எப்படி எழுதினீர் இத்தனை ?
அதானே யாருங்க அது மண்டபத்தில்! ,
யாருங்க அது  உங்க மண்டையிலே !

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 8:09:34 AM4/15/10
to mint...@googlegroups.com
அண்ணா!  அப்டீக்கா   லெப்ட்ல  ஒடிச்சீங்கன்னா   வழி  இருக்குண்ணா. 
அப்டியே   கொஞ்சம்  ரைட்ல வலிச்சுகினீங்கன்னா  சேர்  இருக்குண்ணா.
சும்மா  உட்காருங்கன்ணா.
 
கதைவை எல்லாம்  இழுத்துப்  பூட்டியாச்சுங்கண்ணா!
 
வேற  வழியில்லேண்ணா! 
 
எல்லாம்   ப்ளான்  பண்ணிப்  பண்றாங்கண்ணா
:--))))

 

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 15, 2010, 8:11:38 AM4/15/10
to mint...@googlegroups.com
அதானே?
 
அநியாயமாக இருக்கே?

Tthamizth Tthenee

unread,
Apr 15, 2010, 8:54:13 AM4/15/10
to mint...@googlegroups.com
அதை அவர்  எப்போது எழுதினார்
 
அரங்கனல்லவா  எழுதினார்
 
எல்லாம்   ப்ளான்  பண்ணிப்  பண்றாங்கண்ணா
 
ஓ அப்படியா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
15-4-10 அன்று, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> எழுதினார்:



--

Swarna Lakshmi

unread,
Apr 15, 2010, 9:50:07 AM4/15/10
to mint...@googlegroups.com
ஸ்ரீரங்கமனோகரத் திருவந்தாதி அதி அற்புதம்.
எங்கள் அபிராமியந்தாதியோடு போட்டி போடுமோ?!! (இன்னும் 90 பாடல்கள் தானே - 90 நிமிஷங்களில் வந்து விடும்.)
 
காத்திருக்கிறோம்.
 
 


From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thu, 15 April, 2010 5:29:46 PM

Subject: Re: [MinTamil] Re: "தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 9:57:47 AM4/15/10
to mint...@googlegroups.com
அண்ணாமலை சார்!   திரு செல்வப் புவியரசின் பார் என முடிந்த பாடலைக் கண்டேன்.   பார் என்று தொடங்கி  வெண்பா பண்ணினால் என்று எண்ணம்.  ஒரு காலத்தில் யாப்பு என்றால்  பித்து.    அப்பறம்   யாப்பு பக்கமே போவதில்லை.   இனிமேலும்  போகப்போவதில்லை. 
 
சரி வெண்பா வந்துவிட்டது.   சரியா என்று  இலக்கணம் சரி பார்க்கணும்.   ஹரியண்ணாவிடம் போன் செய்து    ‘கொஞ்சம் இதைக்  கேளுங்கண்ணா’  என்றேன்.    ஓகே  என்று  ஆமோதிப்பு   கிடைத்தது. 
 
கடைசி வரியில்   ‘மேதினியில்’   என்பதற்கு    ’மடல்’
  என்பதைவிட    ஏ = இ  என்றபடி இருந்தால் சிறப்பு  மோனைக்கு  என்றார்.   
 
அதற்கு  மாதிரம்  என்று  போட்டால்  வந்திவிடும்   என்றேன்.   குட்  என்றார்.   
 
ஆனால் எனக்கு இந்த  மேதினியில் மோகம்.   ஏனெனில்   மேனி மேதினி  பனி என்பவை   ஒன்றிற்கொன்று   assonance  தருகின்றன.  கொஞ்சம் ஆங்கில வழி   ப்ரோஸடியிலும்  மயக்கம்.  
 
சரி அப்படியே  இருக்கட்டும் என்று  விட்டுவிட்டேன்.  
 
அப்பறம் கத்தி பிடித்தவன் கையும்   கவனம்  செய்வோன் வாயும் சும்மா இருக்குமா? 
அதான்:--)))) ஹி ஹி ஹி  
 
(ஒரு வியப்பு ---  யாப்பில்    எப்படி    விரல்நுனியில்  இலக்கணம்  வைத்துக்கொண்டு  இருக்கிறார்  பாருங்கள்  திரு ஹரிகி)  
 

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 10:04:13 AM4/15/10
to mint...@googlegroups.com
அம்மா  தாயே   பரதேவதை!    உங்களுக்குக்  கோடி  நமஸ்காரமம்மா!
 
அபிராமி  அந்தாதியோடு   போட்டியா?    சொல்லவே  கூடாது.
 
அவர்கள் எல்லாம் போட்ட  பிச்சைதானே  தாயே  
நாம்  இன்று   ஏதோ  தமிழ்  என்று    நிறம்  பெறுவது  எல்லாம். 
 
ஆழ்வார்  பாசுரத்தில்  வரும் --   ’ஊரா  மிலைக்க   குருடாவும்  மிலைக்கும்’  என்று. 
 
அதுபோல்   பெரியவர்களின்   தோளில்  உட்கார்ந்திருக்கிறோம்.
அவர்களாகப்  பார்த்து  ’சபாஷ்டா!   பேரா.’  என்று   ஒரு  சின்ன  கிள்ளு  கிள்ளினால்    அதுதானே   நமக்குப்  பேறு.  அல்லவா? 
:--))))  

 
On 4/15/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 10:05:24 AM4/15/10
to mint...@googlegroups.com
 குருடா   ---இல்லை  குருட்டா.  அப்பாடி.   திரு  மதுரபாரதியின்  பிரம்புக்கு  முன்
முந்திக்கொண்டு  விட்டேன்:--))))

 

Swarna Lakshmi

unread,
Apr 15, 2010, 10:22:50 AM4/15/10
to mint...@googlegroups.com
ஐயனே, யாருக்குத் தெரியும் யார் யாருக்கு என்ன குடுப்பினை என்று!! உங்களை அந்தாதி எழுத வைத்து விடுவது என்று அந்த மாதவன் முடிவு செய்தால், மறுக்க இந்த மானுடன் யார்? (உங்களால் எனக்கும் கொஞ்சம் எதுகை மோனை எல்லாம் வரது) வால்மீகியிடம் நீ ராமாயணம் எழுதுவாய் என்று கொஞ்ச நாள் முன் யாராவது சொல்லியிருந்தால், அவர் கையிலிருந்த கத்தியை வைத்து அந்த மனிதரை குத்தியிருப்பாரோ என்னவோ?? அதனால் அவர் எழுதாமலா போய் விட்டார்?
 
இந்தக் காலத்துக்கு நீர்தான் அபிராமி (அச்சுத??) பட்டரோ என்னவோ??!! :)) (பாருங்கள் - உங்களுக்கும் உங்கள் பாடலுக்கும் பெயர் நான் வைத்து விட்டேன் - எவ்வளவு பெரிய காரியம் - பாட்டை மாத்திரம் தான் நீங்கள் எழுத வேண்டும் :)) )
 
பொங்கும் தமிழ் எங்கும் தங்குக!!


From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thu, 15 April, 2010 7:35:24 PM

Hari Krishnan

unread,
Apr 15, 2010, 10:27:15 AM4/15/10
to mint...@googlegroups.com


2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>


(ஒரு வியப்பு ---  யாப்பில்    எப்படி    விரல்நுனியில்  இலக்கணம்  வைத்துக்கொண்டு  இருக்கிறார்  பாருங்கள்  திரு ஹரிகி)   

சொன்னா தற்பெருமை என்று தோன்றும்.  ஆனாலும் தன்னை வியத்தலும் தகும் என்று இலக்கணமே சொல்லியிருக்கிறார்கள்.  எந்தெந்த சந்தர்ப்பத்தில் அப்படிச் செய்யலாம் என்றும் உண்டு. இதுவும் அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பமாகப் படுவதால் இங்கே ஒரு சாம்ப்பிள்:

(முன்னெச்சரிக்கை: திரு பெண்ணேஸ்வரனையும் அவரைப் போன்றவர்களையும் இதற்குமேல் படிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு இரட்டை நாகபந்தம் என்று பெயர்.

இதில் ஒரு நேரிசை வெண்பாவும் ஓர் இன்னிசை வெண்பாவும் உள்ளன.  வெண்பாக்களும், இந்த நாகபந்தத்தை எழுதுவதற்கான விதிமுறைகளும் இரண்டாம் படத்தில் உள்ளன.

1975ல் எழுதியது.  அதாவது, இதை எழுதும்போது எனக்கு வயது 22. (ஆறாம் திணையில் இதை 2001ல் வெளியிட்டிருந்தார்கள்.  என்னுடைய ஹரிமொழி.காமில் வைத்திருந்தேன்.  அது போச்சு.  கூடவே இதுவும் போச்சு.)

ஹரிக்கு சுமாரா இலக்கணம் தெரியும்.  விரல் நுனியிலெல்லாம் இல்லை. :))
irattia naga bandha vidhi murai.htm
NagaBandham-aaraamthinnai.jpg

Tthamizth Tthenee

unread,
Apr 15, 2010, 10:27:39 AM4/15/10
to mint...@googlegroups.com
ஐயனே, யாருக்குத் தெரியும் யார் யாருக்கு என்ன குடுப்பினை என்று!!
 
 
 
என்ன ஒரு அருமையான  வாழ்த்து
 
கொடுத்து வைத்தவர் அரங்கன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
15-4-10 அன்று, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

shylaja

unread,
Apr 15, 2010, 10:29:12 AM4/15/10
to mint...@googlegroups.com


2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>

6)
புரிந்த  மலர்ப்பாதப்  புண்ணியனே   புணரி
திரிந்து திரைமோதும்  மூதுலகம் தாளால்
வரிந்து அளந்திட்ட வண்ணச்சே வடியே
தெரிந்து உளந்தொட்ட தாள். >>>>>
 
திருவடி தரிசனம் இந்தப்பாட்டில்.
 
7)
தாள்தடவும்  விண்ணுலகும் தன்சோதி வைத்தங்கு
ஆள்தேடிச் சூழ்தரு மோர்வரவும் -- மாளாத
காதல் மாழாந்து கன்னிமையோர் பொன்பூக்கும்
போதம் ஒன்றே புகல்.
 
8) 
புகல்வோம் புரிவோம் பொன்வண்ண மூர்த்தி 
அகலாது நெஞ்சத்துள்  வைத்து -- மிகைவாழ்நாள் 
தீர்ந்து அவனடிக்கே  தொண்டுக் கடன்பூணப் 
பேர்ந்தும் அவனுகப்பே பயன். 
 
9) 
பயனெண்ணிப் பாரில் பலவருத்த  முற்றார் 
செயலென் எனவெண்ணிச் சோர்ந்தார் -- அயன்விதியில் 
இட்டதுவே  கிட்டிவரும் என்னில் இறையடியே 
இட்டமுடன் ஒட்டிநிற்கைத்  திறன். 
 
10) 
திறனாக  எண்ணித்  தீர்ந்த  விதிக்கே 
அறமாவ தேதென்னில் உய்வாம் -- மறவாமல் 
மாதவனை  மன்ன மனத்தி லிருத்துவதே 
ஏதமிலாச் செய்கை யுணர். 
 
(அதுக்குள்ள  அப்பாடா  என்றால் எப்படி)
 
 
<<<.அத்தனையும் அருமை!  எளிமையாயும் இருப்பதால் மிக நன்று.
 

Tthamizth Tthenee

unread,
Apr 15, 2010, 10:33:04 AM4/15/10
to mint...@googlegroups.com
தரவிறக்கம் செய்து பத்திரமாக  வைத்திருக்கிறேன்  பொறுமையாய்ப் படிக்க
 
கொஞ்சமேனும் கற்றுக்கொள்ளலாமே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
15-4-10 அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதினார்:



--

shylaja

unread,
Apr 15, 2010, 10:33:07 AM4/15/10
to mint...@googlegroups.com


2010/4/15 Hari Krishnan <hari.har...@gmail.com>


ஹரிக்கு சுமாரா இலக்கணம் தெரியும்.  விரல் நுனியிலெல்லாம் இல்லை. :))<<<<<<<>>>.. 
 
உடம்பு முழுக்க  இருக்குங்கண்ணாவ்!  அடேயப்பா  பாம்பைப்பார்த்துப்படித்துப்பேச்சே வரலை.   22 வயசுலயே இப்படியா? உங்ககூடல்லாம் நான் நின்னு பேசவும் தகுதி இருக்கோ என்னவோ நான்பாட்டுக்கு  கலாட்டா பண்ணிட்டு பேசிட்டு இருக்கேனே!

--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Swarna Lakshmi

unread,
Apr 15, 2010, 10:45:10 AM4/15/10
to mint...@googlegroups.com
ஷைலஜா! நீங்களே இப்படி சொன்னால், நான் தமிழ் பக்கமே தலை வைக்காமல் இருந்தால் தான் முடியும்.
 
ஹரிகி சார்! கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்... atleast இப்படி இன்னும் எத்தனை ஆச்சரியங்கள் இருக்கிறதுன்னு தெரிஞ்சுக்கலாமே...


From: shylaja <shyl...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thu, 15 April, 2010 8:03:07 PM

Subject: Re: [MinTamil] Re: "தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"

shylaja

unread,
Apr 15, 2010, 10:59:56 AM4/15/10
to mint...@googlegroups.com


2010/4/15 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
ஷைலஜா! நீங்களே இப்படி சொன்னால், நான் தமிழ் பக்கமே தலை வைக்காமல் இருந்தால் தான் முடியும்.<<<<<<<<<<...
 
நான்  ஆசிரியப்பால கவிதை எழுத   மூணுமாசம் ஆகும் அதுக்கு  நாப்பத்தெட்டு  இலக்கணபுத்தகங்களை பக்கத்துல வச்சிப்பேன்  தளைதட்டாமல் வெண்பா எழுதினதே இல்லை! அரங்கேற்றுமுன்பாக தமிழ் வல்லுனர்கள்கிட்ட சமர்ப்பிச்சிட்டுதான்  (அதுல அவங்க பங்கு அதிகம் இருக்கும்:))) அளிப்பேன்! அதனால  என்னைப்போய் நீங்களேன்னு  தள்ளிவைக்காதீங்க ஸ்வர்ணா நாமெல்லாம் ஒரே  சைட்ல நிற்போம்!
 
ஹரிகி சார்! கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்... atleast இப்படி இன்னும் எத்தனை ஆச்சரியங்கள் இருக்கிறதுன்னு தெரிஞ்சுக்கலாமே...<<<<>>>>>>
 
 மகாசமுத்திரத்தை இரு கைகண்டு அள்ளுவதோ? அதுதான் சாத்தியமோ? ஆச்சரியத்தமிழ்க்கடல்=ஹரிக்ருஷ்ணன்  அரங்கனார்  அண்ணாகண்ணன் கொரியா கண்ணன்  தேவ் போன்று பலர் இங்கே! சாம்பிளைத்தான் இப்போ பாத்தி்ருக்கோம்! சீரிய சிங்காசனத்தினின்றும் எழுந்துவந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்ன்னு விண்ணப்பிச்சிப்போம்!


From:

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 12:12:02 PM4/15/10
to mint...@googlegroups.com
 
11)
உணர்ந்தும்  உள்ளாழ்ந்தும்   உயிரை  உண்ணும்
தணந்தும்  தன்வழிக்கே  தாரம் -- மணந்தாலும்
விட்டுப் பிரியாத வீட்டின்பம்  பாரித்துக்
கட்டில் இருப்பதுவே கதி.
 
12)
கதியை  நினைத்துக்  கவலுறுதல் வேண்டா
மதிநலம்  தந்திடும்  மாயன் ---  வதியுமிடம் 
வைகுந்தம் வாழ்வு மவன்சித்த மாகும் 
செய்யும் பணிகைங்கர் யம். 
 
13) 
அம்மா  வீட்டின்  அருமை  உணர்ந்திட்டே 
வெம்மா  யம்மெல்லாம் விட்டகல -- வேங்கடனைக் 
கூவா  திருந்தக்கால் கிள்ளாய்  கர்மத்தின் 
ஓவாதக் கட்டு மிகும். 
 
14) 
மிகுநரை  இல்லா மாதவன்தன்  மாயம் 
உகுநரை இல்லா வலித்தால் -- இகுநர் 
இருவினைக் கட்டழிய  ஈறிலா இன்பத் 
திருமாலால் வீடு பெறும். 
 
15) 
பெற்றும்  பேறிழந்தும்  பார்முதலாம் புண்ணியமே 
கற்கும்  கல்வியெலாம் என்றிருப்பார் -- புற்கலமாய்ப் 
போந்த   வழியெல்லாம் போதந்த  மார்க்கமாய்ப் 
பாந்தமாய் நிற்கும் பரம். 
 
16) 
பரத்தில் மாலாகிப்  பாம்பணையில்  கேட்டுத் 
தரையில் தானுவந்து  நடந்து -- திரமாக 
ஊனுடலில் உள்ளொளியாம் உலகம் உய்ய 
மானுடத்தைச் சார்ந்த சுடர். 
 
17) 
சுடர்கொள் விளக்கேற்றிச் சுந்தரனைக் காணுங்கால் 
அடர்கொள் இருளென்னாம்  அன்பில் -- திடர்கொள் 
தேற்றத்தைத்  தீங்கழலைத்  தாமோ  தரன்தன்னை 
ஆற்றவினி  தாமவன் பா. 
 
18)
பாவும் படுபொருளும் பார்முடிவும் பங்கயத்தோன் 
தேவும்  திசைவிண்ணும் எல்லாம் -- கூவுகின்ற 
கூப்பாடு  கேட்குமிடம் கொண்டடையும் கைச்சரக்கே 
ஆப்பவிழும்  ஊழின் கடை. 
 
19) 
கடைந்த வெண்ணெய்க் கையகலம் கொண்டு 
மிடைந்து  மாலானார்க் கூந்தல் --- அடைந்திட்ட 
ஆயன் கோவிந்தன்  ஆவினத்தை  மேய்த்திட்டான் 
சேயனாம்  என்னிது சொல். 
 
20) 
சொல்கடந்து  தாதை சொல்கடவா பெற்றியினால் 
கல்கடந்த ராக்கதனின்  விதியை  -- அல்கடந்த  
தன்றே ஆரணியத் தொல்கடந்து  தத்துவமாய் 
நின்றதந்த நாயகன் பேர். 
***

 

annamalai sugumaran

unread,
Apr 15, 2010, 12:23:18 PM4/15/10
to mint...@googlegroups.com
 12  )
கதியை  நினைத்துக்  கவலுறுதல் வேண்டா
மதிநலம்  தந்திடும்  மாயன் ---  வதியுமிடம் 
வைகுந்தம் வாழ்வு மவன்சித்த மாகும் 
செய்யும் பணிகைங்கர் யம்
 
13) 
அம்மா  வீட்டின்  அருமை  உணர்ந்திட்டே 
வெம்மா  யம்மெல்லாம் விட்டகல -- வேங்கடனைக் 
கூவா  திருந்தக்கால் கிள்ளாய்  கர்மத்தின் 
ஓவாதக் கட்டு மிகும். 

 

அந்தாதி மாறுகிறதே !

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 12:34:18 PM4/15/10
to mint...@googlegroups.com
அண்ணாமலையாரே!   அந்தாதி  என்பதில்   வரியந்தாதி,   சொற்கோவை அந்தாதி,  சொல்  அந்தாதி,   எழுத்தந்தாதி,  ஒலியந்தாதி  என பலவகை  உண்டு. 
 
இங்கு முடிவு எழுத்து ய்+அம்.  அடுத்து ஆரம்பிப்பது   அம்  என்பதில்.
:--)))

 
On 4/15/10, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote:

annamalai sugumaran

unread,
Apr 15, 2010, 12:37:44 PM4/15/10
to mint...@googlegroups.com
அடேடே அப்படியெல்லாம் இருக்கா !  

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 15, 2010, 12:39:34 PM4/15/10
to mint...@googlegroups.com
மோகனரங்கனாரே
 
விட்டுப் பிரியாத வீட்டின்பம் பாரித்துக்
கட்டிலில் கிடப்பதே கதி
 
என்றும் வர வாய்ப்புண்டோ?
 
அதே போல 12ல் வரும் கடைசி வரி

செய்யும் பணிகைங்கர் யமே
 
என்று வர வாய்ப்புண்டோ?
2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
http://www.vadakkuvaasal.com/

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 1:23:53 PM4/15/10
to mint...@googlegroups.com
On 4/15/10, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> wrote:
மோகனரங்கனாரே
 
விட்டுப் பிரியாத வீட்டின்பம் பாரித்துக்
கட்டிலில் கிடப்பதே கதி
 
என்றும் வர வாய்ப்புண்டோ?
 
 
திரு பென்னேஸ்வரன்!    கட்டில் இருப்பதே  கதி  என்பது   படுக்கை என்பதை   முழுக்க
குறிப்பிடுவத்ற்கு  வரவில்லை.   கட்டு  என்பது   சங்கத்  தமிழில்   இல்செறித்தல்.   தலைவன்  வருகைக்காக   ஆற்றி  இருத்தல்.    இந்த   அகத்திணை  மொழியை   ஸ்ரீவைஷ்ணவம்   கையாண்டு   தன்னுடைய   முக்கியமான   சித்தாந்தக்  கருத்தை   தமிழிலக்கண  ரீதியாகத்  தருகிறது.  அது  என்னவென்றால்   ஜீவன்   பரம்பொருளை  நோக்க   ஸ்த்ரீ  என்ற  நிலையில்  இருப்பவன்.   ஸ்த்ரீ  என்பதன்  உடல் இலக்கணங்களையெல்லாம்    விட்டுவிடும்.  இப்பொழுது  நாம்   தத்துவம் பேசுவதால்  அதற்கு  ஒரு  மொழிதான்  இவையெல்லாம்.    Bridal  Mysticism.   இங்கு கட்டில் இருப்பது என்பது  ஜீவன்  தன்  இயல்பில்   நிலைத்து  நிற்பது   என்னும்  பொருளினதாய்   வரும்.
 
எனவே நீங்கள்  சொல்வதுபோல்    கட்டிலில்  கிடப்பது  என்றால்   வெறும்  ப்ராக்ருதமான   உடல்மய  உறவுதான்   பேசப்படுகிறது.  அது  இங்கு   வேண்டற்பாலது  அன்று. 
 
மேலும்    கட்டிலில்  என்பது   நேர்நிரை    ஈரசை  விளச்சீர்.கூவிளம்.   கிடப்பது   என்பது  நிரைநிரை  விளச்சீர். கருவிளம்
ஈரசை  விளச்சீர்.  
ஈரசை விளச்சீர்   முன்   நேரசைதான்   வரும்  வெண்பாவில்.   விளச்சீர்  முன்  நிரையசை  சேருதல் இல்லை.  தளை தட்டும்.  வெண்டளை   த்ட்டினால்   செப்பலோசை  முறியும். அது  பாவில் குற்றமாகும்.   கட்டில்  இருப்பதே கதி   என்பதில்   நேர்நேர்  க்கு  முன்   நிரைநிரை வருகிறது.  நேர்நேர்  மாச்சீர்.  மாச்சீருக்கு முன்   நிரையசைதான்  வரும்.
 
இங்கு   முக்கியமானது  அதைவிடச்   சொல்லவந்த  கருத்தும்  பங்கப்பட்டுப்  போகும்.   இது  வெறும்   காவியக் கவியாய்  மட்டும் இருந்தால்   பெரும் பாரம்  இல்லை.  ஆனால்  காவியம் சாஸ்திரம்  இரண்டும்   விரோதிக்காமல்   வரவேண்டிய   ‘உபயகவி’.   மிகவும் கஷ்டம்.

 
அதே போல 12ல் வரும் கடைசி வரி

செய்யும் பணிகைங்கர் யமே
 
என்று வர வாய்ப்புண்டோ?
 
பென்னேஸ்வரன்
 
 
முடிவுச்சொல்    யமே  என்றால்     வாய்பாட்டிற்குப்  பொருந்தாது.  அதாவது  வெண்பாவில்    நான்கு  அடிகள்  வரவேண்டும்.   முதல்  மூன்று  அடிகள்   வெண்டளை  பிறழாத   நான்கு  சீர்களால்  அமையவேண்டும்.   நேரிசை  வெண்பா   இரண்டாம்  அடியில்  நான்காவது  சீர்  தனிச்சொல்லாய்  இருக்கவேண்டும்.   அந்தத்  தனிச்சொல்   முதல்  இரண்டு  அடிகளின்   எதுகையோடு  ஒத்த  எதுகை  கொண்டிருக்க  வேண்டும்.   குறள்  வெண்பாவாய்  இருந்தால்   இரண்டாம்  அடியில்  தனிச்சொல் பெறாது  நான்கு அடிகளும்   எதுகையில்   பொருந்தி   அமையும். 
 
ஆனால்  எப்படி  இருப்பினும்   கடைசி  அடி  மூன்று  சீர்கள்  தான்  அமைய  வேண்டும்.   மூன்றாவது   முடிவுச்சீர் (கடைசி  நான்காவது  அடியில்)    ஓரசைச்  சொல்லாய்  இருத்தல் சிறப்பு.  அதுவும்   நாள்,  மலர்  என்ற  வாய்ப்பாடு  கொண்டிருத்தல்   வேண்டும்.   இப்பொழுது  பெறும்  என்று   ஒரு வெண்பா  முடிகிறது  என்று  வைத்துக்கொள்வோம்.   பெறும்  என்பது    இரண்டு குறில் எழுத்து சேர்ந்த   நிரையசை.  மலர்  என்னும்   வாய்ப்பாடும்    நிரையசை.  எனவே மலர்  வாய்ப்பாட்டிற்கு  ஒத்துவருகிறது.   பேர்   என்று   ஒரு  வெண்பா  முடிந்தால்    அது  நேரசை.   நாள்  என்னும்  வாய்ப்பாட்டிற்கு   ஒத்து வருகிறது.    சரி  ஒரு  இடத்தில்   தெரிவு  என்று  முடிகிறது  எனக்  கொள்வோம்.  அப்பொழுது   அது   நிரைநேர்.   வு என்பதில் உள்ள   உகரம்  குற்றியலுகரம்.  அப்படியும் வருவதற்கு  வாய்ப்பாடு   பிறப்பு  என்பது.    வரலாம்.   ஆனால்  நாள்  மலர்  என்பவற்றிற்குத்தான்   முன்னுரிமை.    சரி  ஒரு  வெண்பா  தேசு என்று  முடிகிறது.  வரலாமா?   ஆம் அதற்கு  வாய்ப்பாடு    காசு.  அங்கு  தேசு  என்பதில் உகரம்  குற்றியலுகரம். 
 
ஆக   வாய்ப்பாடுகள்   நான்காவது  அடியில்  உள்ள மூன்று  சீர்களில்   மூன்றாவது  முடிவுச்சீரான  சொல்லுக்கு     நாள்  மலர் ;     அடுத்தபடி    காசு   பிறப்பு.  
 
நீங்கள்   யமே என்று  முடியலாமா  என்றால்    நான்கு  வாய்ப்பட்டினுள்  ஏதாவது  பொருந்துகிறதா?
யமே என்பதும்    நிரையசை  ஆனால்   நாள் மலர்    காசு   பிறப்பு   இந்த  நான்கு  வாய்ப்பட்டுகளில்   எது  போலவேனும்    இருக்கிறதா?
 
எனவே  கூடாது.
 
(என்ன  ஓவர் ரம்பமா?   உமக்காக  இல்லையென்றாலும்   
குழந்தைகள்  எல்லாம்  எவ்வளவோ  பேர்  ஆர்வமா  இருக்கா
பார்த்தீர்களா?  அவர்களுக்காக  என்று  வைத்துக்கொள்ளும்).
:--))))

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 1:35:03 PM4/15/10
to mint...@googlegroups.com
>>>குறள்  வெண்பாவாய்  இருந்தால்   இரண்டாம்  அடியில்  தனிச்சொல் பெறாது  நான்கு அடிகளும்   எதுகையில்   பொருந்தி   அமையும்<<
 
இது  குறள்  வெண்பா   அன்று. மன்னிக்கவும்.   என்றோ கற்றது.  மறதி.
ஒருவிகற்பத்தால்   வந்த  தனிச்சொல் பெறாத   இன்னிசை  வெண்பாவாகும்.

 

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 3:14:40 PM4/15/10
to mint...@googlegroups.com
21)
பேரா  பிறவி   பேர்க்கும்  பெருமான்தன்
வேராம்  அடியிணைகள்  வித்தாம் --  சோராதக்
காதல்  தொழும்பால்  களிபாயும் தொண்டில்
நோதல்  அதிலில்லை  நுகர்.
 
22)
நுகரும்  ஐம்புலன்கள் நசையற்று நன்மைப்
பகரும் பருமொழியால் பாலித்து -- அகரம்
காப்பதுவாய்  ஆங்கவர்க்கே   ஆனதிவ் வான்மா
மோப்பக்  குறைவிலது  உலகு.
 
23)
உலகு படைத்ததுவும்  உள்ளொடுக்கி  வைத்ததுவும்
அலகில் விளையாட்டாம்  என்பர் -- விலகாது
ஈன்ற  புகழ்ஞாலம்  கன்றுகக்கும் தாய்ப்பசுபோல்
நான்றநா ராயணனே தலை.
 
24)
தலையாவார்  மூவருளும்   தானும்   ஒருவன்
கலையா துலகத்தின்  கர்மம்  ---  சிலைகொண்டு
சிந்தினான்  தென்னிலங்கைச்  சீரும்  சிதல்வாழ்வும்
மந்திபாய்  தோழமை உற்று.
 
25)
உற்றபழி நீக்கி   உருப்பிணியை   மாலையிட்டான்
பற்றற்றார்  உள்ளம்   மகிழ ---   முற்றும்
துறந்தவர்கள் பக்கம் துணையாய்  நின்றவனே
மறுத்தாலும் மாபக்கம் வலிது.

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 15, 2010, 8:42:54 PM4/15/10
to mint...@googlegroups.com

மூட்டையில் இருந்து என்னென்வெல்லாம் வெளியில் வருகிறது பாருங்கள்.  ‘

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/4/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Apr 15, 2010, 9:33:40 PM4/15/10
to mint...@googlegroups.com


2010/4/15 Hari Krishnan <hari.har...@gmail.com>



இதற்கு இரட்டை நாகபந்தம் என்று பெயர்.

இதில் ஒரு நேரிசை வெண்பாவும் ஓர் இன்னிசை வெண்பாவும் உள்ளன.  வெண்பாக்களும், இந்த நாகபந்தத்தை எழுதுவதற்கான விதிமுறைகளும் இரண்டாம் படத்தில் உள்ளன.


நான் யாரையாது எதாவது கெட்ட வார்த்தைல திட்டிட்டேனோ?  குகையில் மௌனம் எதிரொலிக்கிறதே!  குழந்தைப் பசங்க விளையாட்டை எல்லாம் கொண்டு வந்து பூச்சாண்டி காட்டிட்டேனோ என்னவோ....மன்னிச்சுருங்க பெரியவங்களே....

 



--
அன்புடன்,
ஹரிகி.

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 9:43:04 PM4/15/10
to mint...@googlegroups.com
எல்லாம்   வியப்பில்  பேச்சு  வராமல்  பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
நீங்க  ஒண்ணு   குகை  அது  இதுன்னு  பயமுறுத்துறீக.
:--))))

 

Astrologer Vighnesh சென்னை

unread,
Apr 15, 2010, 9:59:34 PM4/15/10
to mint...@googlegroups.com
பாம்பு என்றால் படையும் அஞ்சும் என்ற மொழி இருக்கே ஹரிகிருஷ்ணன் ஜீ.
அதான் இந்த மௌனம்.
இதில் எனக்கு எல்லாம் மடல் இடும் அருகதை கிடையாது. அதான் பார்த்து பரவசம் அடைந்தேன். சிங்கை குமார் அவர்கள் இந்த மாதிரி எல்லாம் இருக்குனு போனவருடம் நம்பிக்கை குழுமத்தில் சந்தித்தபோது சொல்லிக்கொண்டிருந்தார்.இப்போது இங்கே காணக் கிடைத்தேன். தமிழ் மொழியின் பெருமை உங்கள் மூலமாக அறிக்றேன்.
கே.வீ.விக்னேஷ்   சென்னை

2010/4/16 Hari Krishnan <hari.har...@gmail.com>



--
K V.Vighnesh
Chennai-93
mbl: +919382633377 or 9444961820
kvvig...@yahoo.co.in
http://astrologicalremedies.blogspot.com
http://in.groups.yahoo.com/group/Astro-Health-Remedies/join
skype: astrovighnesh

Innamburan Innamburan

unread,
Apr 15, 2010, 10:35:05 PM4/15/10
to mint...@googlegroups.com
அட்டநாகபந்தம் கூட உண்டு, விக்னேஷ். அணிகலன் பூட்ட, பூட்ட மகிழ்ச்சி. சில சமயம் 'Overkill'.
நமக்கு எளிதாக, மாலைமாற்று:

" நீ வாத மாதவா தாமோக ராகமோ
  தாவாத மாதவா நீ"
திருப்பி படியுங்கோ, அதே வரும், ' மோரு போருமோ' போல. 

தண்டியலங்காரத்தில் வரும் சித்திரகவியில் இது ஒன்று. திரு. வ.து. இராமசுப்பிரமணியம் உரையில் நான் படித்தது. அஞ்சேல். அருகதை என்றெல்லாம் சொல்லாமல், அரிய நூல்களை படிப்போம்; மடலிடுவோம்.
இன்னம்பூரான்

2010/4/15 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 10:49:12 PM4/15/10
to mint...@googlegroups.com
 
26)
வலிதென்று வாங்கி  வல்லரக்கன் வாழ்வு
பொலிந்து நின்றபிரான் தொட்டான் -- கலிகன்றி
தொட்டதமிழ் எங்கும் தோன்றித்  தோய்ந்துநின்று
இட்டமுடன் எனையாண்ட கோ.
 
27)
கோவாகி  ஞாலம் காத்தளிக்கக் கானடைந்தான்
ஓவாமல் என்னைக் காக்குமவன் -- நாவாயில் 
உண்டே உவந்துரைக்கப் பேருண்டே பின்னும் 
கண்டுணர உண்டன்றே கண். 
 
28) 
கண்ணாகி  நின்று  ககனம் புரந்தான் 
எண்ணிற்கும் அரியன் என்னுள் அமர்ந்தான் 
அண்ணிக்கும்  அமுதூறும் அன்பர்க்கு  ஆளாய்ப் 
பண்ணினான் என்னைப் பரன். 
 
29) 
பரனடியே சென்று பார்வண்ணம் கண்டால் 
மரவடியின் மாபணயம் தானாம் -- திரமாக 
வேதம்  உரைப்பதெல்லாம் வேந்தன்  நடைகாட்ட 
நீதம்  நெறியாகி நின்று. 
 
30) 
நின்றென்னுள்  என்றும்  நிமலன் தனைக்காட்டான் 
அன்றென்னுள்  வீற்றது  எவ்வாறு? -- கன்றாய்க் 
குனிந்து நீர்சுவைத்தான்  கல்லிதயன் என்னைக் 
கனிந்து காவாத தென்?
***
 

karthi

unread,
Apr 15, 2010, 11:16:17 PM4/15/10
to mint...@googlegroups.com
இது ஏன் நமக்கு என்ற எண்ணம் வந்தாலும் இங்கிருக்கும்
தமிழும் கவிதையும் வா வா வந்து படி என்று இழுத்துக்கொண்டு வந்திருப்பதால்...
 
அஞ்சுவைக் கவிதைகள், அருஞ்சுவைக் கவிதைகள்! இந்தக் கொடைக்கு நன்றி.
 
இனி கொஞ்சம் மயிர் பிளக்கும் வேலை:
Those who cannot do can certainly criticise! ஆகவே
பொருட்படுத்த வேண்டாம்.
 
ரெ.கா.
 
 
 
 
----- Original Message -----
Sent: Friday, April 16, 2010 10:49 AM
Subject: Re: [MinTamil] Re: "தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"

 
 
27)
கோவாகி  ஞாலம் காத்தளிக்கக் கானடைந்தான்
ஓவாமல் என்னைக் காக்குமவன் -- நாவாயில் 
உண்டே உவந்துரைக்கப் பேருண்டே பின்னும் 
கண்டுணர உண்டன்றே கண். 
 
உணரலாம். காணமுடியுமோ?
 
பரனடியே சென்று பார்வண்ணம் கண்டால் 
மரவடியின் மாபணயம் தானாம் -- திரமாக 
வேதம்  உரைப்பதெல்லாம் வேந்தன்  நடைகாட்ட 
நீதம்  நெறியாகி நின்று. 
 
திறமாக?
 
30) 
நின்றென்னுள்  என்றும்  நிமலன் தனைக்காட்டான் 
அன்றென்னுள்  வீற்றது  எவ்வாறு? -- கன்றாய்க் 
குனிந்து நீர்சுவைத்தான்  கல்லிதயன் என்னைக் 
கனிந்து காவாத தென்?
 
காட்டான்தானே? இப்ப மாட்டிக் கொண்டீர்களா?
 
 

srirangammohanarangan v

unread,
Apr 15, 2010, 11:28:00 PM4/15/10
to mint...@googlegroups.com
On 4/16/10, karthi <karth...@gmail.com> wrote:
இது ஏன் நமக்கு என்ற எண்ணம் வந்தாலும் இங்கிருக்கும்
தமிழும் கவிதையும் வா வா வந்து படி என்று இழுத்துக்கொண்டு வந்திருப்பதால்...
 
அஞ்சுவைக் கவிதைகள், அருஞ்சுவைக் கவிதைகள்! இந்தக் கொடைக்கு நன்றி.
 
இனி கொஞ்சம் மயிர் பிளக்கும் வேலை:
Those who cannot do can certainly criticise! ஆகவே
பொருட்படுத்த வேண்டாம்.
 
ரெ.கா.
 
வாருங்கள்   ரெ கா!

 
 
 
 
----- Original Message -----
Sent: Friday, April 16, 2010 10:49 AM
Subject: Re: [MinTamil] Re: "தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"

 
 
 
27)
கோவாகி  ஞாலம் காத்தளிக்கக் கானடைந்தான்
ஓவாமல் என்னைக் காக்குமவன் -- நாவாயில் 
உண்டே உவந்துரைக்கப் பேருண்டே பின்னும் 
கண்டுணர உண்டன்றே கண். 
 
உணரலாம். காணமுடியுமோ?
 
கண்டுணர்தல்,  உணர்கண்ணின்  பார்வை என்பன சாத்திரம்  கூறும்  மார்க்கம்.  ஊனக்கன்ணால்   கண்டதாக   சாத்திரமும்  கூறவில்லை.   ‘என்றேனும்   கட்கண்ணால்   காணாத  அவ்வுருவை  நெஞ்சென்னும்  உட்கண்ணேல்  காணும்  உணர்ந்து’  என்பது  ஆழ்வார்  வாக்கு.   கட்கண் --  ஊனுடலின்  கண்;   சாத்திர  திருஷ்டி  என்பது  வேதாந்தம்  கூறும்   கருத்து.

 
பரனடியே சென்று பார்வண்ணம் கண்டால் 
மரவடியின் மாபணயம் தானாம் -- திரமாக 
வேதம்  உரைப்பதெல்லாம் வேந்தன்  நடைகாட்ட 
நீதம்  நெறியாகி நின்று. 
 
திறமாக?
 
திரமாக.  ஸ்திரமாக  என்பதன்   தமிழ்வடிவம்.   certainty  என்ற  பொருள்.   திறமாக  என்றால்   ably,  aspectwise

 
30) 
நின்றென்னுள்  என்றும்  நிமலன் தனைக்காட்டான் 
அன்றென்னுள்  வீற்றது  எவ்வாறு? -- கன்றாய்க் 
குனிந்து நீர்சுவைத்தான்  கல்லிதயன் என்னைக் 
கனிந்து காவாத தென்?
 
காட்டான்தானே? இப்ப மாட்டிக் கொண்டீர்களா?
 
நெஞ்சென்னும்  உட்கண்ணால்   காணுவதும்,  அந்தக்  காட்சி  புறக்காட்சியாக   மாறவேண்டும்  எனத்  துடிப்பதும்,  அவன்  அவ்வாறு   காட்டானே  என்று  கலங்கியும்  தெளிந்தும்  போதல்  பக்திக் கவிதைகளின் சிறப்பு.
 
*  

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 1:02:29 AM4/16/10
to mint...@googlegroups.com
31)
தென்னன்  பொருப்பில்  திகழ்ந்த  பசுந்தமிழை
மன்ன  நிறுத்தினான்   மாலுக்கே -- தன்பெருமைத்
தானும்  அறிவரியான்  தாமோதரன்  தாளுக்கே
ஆனான்  குருகூ ரரசு.
 
32)
அரசும் செல்வமும் ஆட்படையும் கொண்டு
கரைந்து கிளர்ந்தான் குலசேகரன் -- மறத்தை
உதிர்த்த உத்தமனும் ஊர்திரும்பிய  பொய்யே
கதியெனவே   காக்குமெமை இங்கு.
 
33)
இங்கும்  அங்கும்  இடைச்சுவரைத் தாம்தள்ளி
மங்காத  ஞானம்  இயல்வாக  -- பொங்கோதம்
சூழ்ந்த  புவனியும்   விண்ணுலகும் ஒன்றாக்கும்
ஆழ்ந்த  அருளே துணை.
 
34)
துணையாவன்   யாவன்  நெடுமாலை  அல்லால்
பிணைதந்து கேட்டாலும்  போக்கார்  -- அணைதந்து
மீட்டதோர்  காதல்  மீளும்  இழக்குமோ
ஈட்டிய கஞ்சன்கைப் பொருள்.
 
35)
பொருளாவ தெல்லாம்  பிரமன்நற் தாதை
மருளாகும் மாயத்தை  நீக்கி --  அருள்கொண்டு
பூமாதின்   பாகவதர்  நல்லெண்ணம் வித்தாக
சேமம்  உடைத்திவ்  வுயிர்.

devoo

unread,
Apr 16, 2010, 1:25:18 AM4/16/10
to மின்தமிழ்
*நின்றென்னுள் என்றும் நிமலன் தனைக்காட்டான்

அன்றென்னுள் வீற்றது எவ்வாறு? -- கன்றாய்க்
குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன் என்னைக்
கனிந்து காவாத தென்?*


‘அன்றென்னைப் புறம் போகப் புணர்த்ததென் செய்வான் ?’
என்னும் வினாவைப்போலுள்ளது.
’கன்றாய்க் குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன்’
இதன் பொருள் யாது ?


தேவ்

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 1:37:54 AM4/16/10
to mint...@googlegroups.com
ஓரிரு  நண்பர்களுக்கு  ஐயம்.   ‘என்ன  ஏற்கனவே   எழுதிவைத்ததை   எடுத்துப்  போடுகிறாயா?’  என்று.   நான்  இந்த  வெண்பா  பக்கமெல்லாம் போவதில்லை.   கவிதை  என்று  தோன்றும்போது   எழுதுவது.  அது  எப்படி  வருகிறதோ,  சந்தம்,   உரையோசையுடன்  கூடிய  புதுக்கவிதை,  அல்லது  கொஞ்சம்  வஞ்சிப்பா  கலிப்பா  கலப்பு  என்று  எதையும்   அந்த  நேரத்தில்  வந்தவிதமாக  எழுதிப்போவது.   இப்படித்தான்   என்  வழக்கம்.
 
இது   மிக  எதேச்சையாக,   திரு  செல்வப்புவியரசின்    கல்லூரிநாள்  முயற்சி  ஒன்றைப்  படிக்கும்போது    ஒரு  ஸடன்   எண்ணம்.    அவர்  ‘பார்’  என்று  முடித்ததை வைத்து  சும்மா  ஒரு  வெண்பா எழுதலாம்  என்று.   
 
அது  எங்கே   என்னை  தரதர   என்று   இழுத்துக்கொண்டே  போகிறது.   100ல்  முடித்துவிட்டால்    உன்  பேரில்  ஒரு  வெண்பா பாடுகிறேன்   என்று   கணபதியிடம்   தாஜா  பண்ணியிருக்கிறேன்.   இப்படியே  போனால்   நமக்குத்  தாங்காது.  ஏகப்பட்ட  வேலை  எல்லாம்   கிடப்பில். 
 
இது  நின்று  விட்டது என்றால்    இனி  மறந்தும்கூட   யாப்பு  பக்கம்  தலைவைத்துக்கூட   படுப்பதில்லை   என்று   தீர்மானம்  எழுந்த வண்ணம்  இருக்கிறது. 
 
சின்ன  வயசில்  ஒரு   புலவரைச்  சந்தித்துப்  பேசிக்கொண்டிருந்த போழ்து  அவர் சொன்னது.   ‘அப்பா!    இந்த   யாப்பு,   சீட்டுக்கட்டு,   தத்துவம்,   குடி,   கோயில்குளம்,  ஷோக்கு   இதில்  போனவர்கள்   ஒருநாளும்   உருப்பட்டதில்லை.’   கொஞ்சம் ஓவர்  ஸ்டேட்மண்ட்.  இருந்தாலும்  அனுபவ   உண்மை ஏதோ  இருக்கத்தான் செய்கிறது.
 
சரி  உருப்பட்டுத்தான்   இப்ப  என்ன  செய்யப்  போகிறோம்?
 
‘சென்றதினி  மீளாது  மூடரே(என்  மேல்  பாரதிக்கு  எப்பொழுதும்  ஒரு  மரியாதை  உண்டு)
 
நீர்  சென்றதையே  சிந்தை  செய்து
கொன்றழிக்கும்  கவலை  என்னும்
படுகுழியில்   வீழ்ந்து  குமையாதீர்!
 
இன்று  புதிதாய்ப்  பிறந்தோம்
என்ற  எண்ணமதைத்   திண்ணமுற  இசைத்துக்கொண்டு
தின்று
விளையாடி 
இன்புற்றிருந்து   வாழ்வீர்!
 
தீமையெலாம்   அழிந்துபோம்.
திரும்பி வாரா.’
 
என்ன?  எங்களுக்குள்   இப்படியே   ஒருவருக்கொருவர்  
நியாயப் படுத்திக்கொண்டு   கதையை  ஓட்டுகிறோம் என்று  பார்க்கிறீர்களா?  
 
சரி  விடுங்க.  எல்லாம்  கூட்டிக்  கழிச்சுப்  பார்த்தா  
விடை   பூஜ்யம். 
பூஜ்யம் என்றால்    HOLINESS   சார்.:--))))  

 
On 4/16/10, karthi <karth...@gmail.com> wrote:

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 1:49:06 AM4/16/10
to mint...@googlegroups.com
On 4/16/10, devoo <rde...@gmail.com> wrote:
*நின்றென்னுள்  என்றும்  நிமலன் தனைக்காட்டான்
அன்றென்னுள்  வீற்றது  எவ்வாறு? -- கன்றாய்க்
குனிந்து நீர்சுவைத்தான்  கல்லிதயன் என்னைக்
கனிந்து காவாத தென்?*


‘அன்றென்னைப் புறம் போகப் புணர்த்ததென் செய்வான் ?’
என்னும் வினாவைப்போலுள்ளது.
’கன்றாய்க்  குனிந்து நீர்சுவைத்தான்  கல்லிதயன்’
இதன் பொருள் யாது ?


தேவ்
 
 
தேவ்ஜி   என்னது  இது?   ‘கற்றுக்  கறவை’   வியாக்யானப்  பொருள்  பற்றி  முன்னர்   எழுதியிருந்தேனே!    மறந்து  போயிற்றா?   இதோ
 
 
என்னை  எத்தனை  முறை   சந்தித்து  இருக்கிறீர்?   ‘கல்லிதயன்’    என்றால்   உடனே  புரியவேண்டுமே.:--))))

--
"

Swarna Lakshmi

unread,
Apr 16, 2010, 2:09:47 AM4/16/10
to mint...@googlegroups.com
100 வந்தே விடும் !! தொடருங்கள் - இருக்கிற வேலை கிடப்பிலேயே இருக்கட்டும். இது மாதிரி எத்தனை பேரால் எழுத முடியும்.
 
ஹரிகி ஐயா! பாம்பெல்லாம் பார்த்து பயந்து தான் போயிருக்கிறோம். கொஞ்சம் விளக்குங்களேன்.
 
நன்றி
ஸ்வர்ணா


From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 16 April, 2010 10:32:29 AM

Subject: Re: [MinTamil] Re: "தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 2:35:59 AM4/16/10
to mint...@googlegroups.com
36)
உயிரேநீ  நல்லை  உனைக்காத்துக்  கொண்டாய்
அயர்க்கும்   என்னெஞ்சு அலமந்து -- பயிர்ப்பும்
எனைவிட்டு  ஏகினதால்  ஏதிலார் தம்மை
வினையென்னச்  சூழுமிப் பொன்.
 
37)
பொன்தோய்க் குடுமி  புகழ்மாறன்  வெற்பில்
கன்னவிலும்  தோட்கண்ணன் தாகம் --  சென்னி
தாக்கியதால்    தன்னை  இழந்தான்   தளர்ந்து
ஊக்கியதும்  உலகின்நல் லூழ்.
 
38)
ஊழையும்  உப்பக்கம்  காண்பர் உத்தமன்தன்
பாழையும் பயிர்செய்யும் பான்மை -- ஆழில்
உடல்கருவி ஊட்டுவினை உய்யும் நெறியாய்
மடலெடுக்க  முந்திவரும்  மாண்பு.
 
39)
மாண்பெரிய  வையம் மலிதிரைநீர்  பௌவம்
கோணரிய  கொள்கைத்தாம்  கோலம் -- சேண்பெரிய
நாட்டில்  ஈர்ப்புடைத்தாம்   இவ்வுலகம்  நானிலத்தார் 
கோட்பாட்டை  உணராரோ  தேர்ந்து.
 
40)
தேர்ந்த   கொள்கையராய் மாலின் திருவடிக்கே
ஓர்ந்த  நெஞ்சத்தார்  ஆனார்  --- ஆர்ந்த
முனிவரரும்  யோகிகளும்  முன்னைப்பல்  வேதம்
கனிந்தபயன் கேசவனென் றே.

karthi

unread,
Apr 16, 2010, 2:43:33 AM4/16/10
to mint...@googlegroups.com
"சரி  உருப்பட்டுத்தான்   இப்ப  என்ன  செய்யப்  போகிறோம்? "
 
படித்த ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.
(வார்த்தைக்கு வார்த்தை அல்ல):
 
"இருந்து என்ன ஆகிறது,
செத்தாவது தொலைவோம்;
செத்துத்தான் என்ன ஆகப்போகிறது!
இருந்தாவது தொலைவோம்"

Geetha Sambasivam

unread,
Apr 16, 2010, 2:44:11 AM4/16/10
to mint...@googlegroups.com
//ஷைலஜா! நீங்களே இப்படி சொன்னால், நான் தமிழ் பக்கமே தலை வைக்காமல் இருந்தால் தான் முடியும்.
 
ஹரிகி சார்! கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்... atleast இப்படி இன்னும் எத்தனை ஆச்சரியங்கள் இருக்கிறதுன்னு தெரிஞ்சுக்கலாமே...//

இலக்கணமே தெரியாத என்னைப் போன்றோர் படித்து வியக்கத் தான் முடியும், மெளனமாய்ப்  படித்து வருகிறேன்.



2010/4/15 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

devoo

unread,
Apr 16, 2010, 3:28:04 AM4/16/10
to மின்தமிழ்
’கன்றாய்க் குனிந்து நீர்சுவைத்தான் கல்லிதயன்’

ஜய தீர்த்தரின் சரிதம் நினைவுக்கு வந்து விட்டது; பீமா நதியில்
குதிரையிலிருந்து இறங்காமலே நீர் மட்டத்துக்குக் குனிந்து,
கரங்களைப் பின்புறம் கட்டிக்கொண்டு அவர் நீர் அருந்தியதும்,
அதுவே குரு க்ருபைக்கு அவரைப் பாத்திரராக்கியதும்
புகழ் பெற்ற நிகழ்ச்சி.

கல்லிதயத்துக்கு எல்லாம் போட்டிக்கு வரக்கூடாது;
ஒருவனுக்கே உரிமை


தேவ்


On Apr 16, 12:49 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> On 4/16/10, devoo <rde...@gmail.com> wrote:
>
>
>
> > *நின்றென்னுள்  என்றும்  நிமலன் தனைக்காட்டான்
> > அன்றென்னுள்  வீற்றது  எவ்வாறு? -- கன்றாய்க்
> > குனிந்து நீர்சுவைத்தான்  கல்லிதயன் என்னைக்
> > கனிந்து காவாத தென்?*
>
> > ‘அன்றென்னைப் புறம் போகப் புணர்த்ததென் செய்வான் ?’
> > என்னும் வினாவைப்போலுள்ளது.
> > ’கன்றாய்க்  குனிந்து நீர்சுவைத்தான்  கல்லிதயன்’
> > இதன் பொருள் யாது ?
>
> > தேவ்
>
> தேவ்ஜி   என்னது  இது?   ‘கற்றுக்  கறவை’   வியாக்யானப்  பொருள்  பற்றி
> முன்னர்   எழுதியிருந்தேனே!    மறந்து  போயிற்றா?   இதோ
>
> http://groups.google.com/group/mintamil/msg/3c57dda795df6a40
>
> என்னை  எத்தனை  முறை   சந்தித்து  இருக்கிறீர்?   ‘கல்லிதயன்’    என்றால்
> உடனே  புரியவேண்டுமே.:--))))
>
> --
>
> > "
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 4:13:47 AM4/16/10
to mint...@googlegroups.com
41)
ஏபாவம்  பரமே   எங்குற்றீர்  எல்லோரும்
ஆமாறும்   அறியேன்  அன்னையர்க்கென்  ஆனேன்
சேர்ப்பாரும்  எங்கே சேவகனும்   வாரான்
மாற்பால் மனச்சுழலில்  யான்.
 
42)
யானேயோ நெறிநின்றேன் யத்தினமும் என்கடவேன்
கோனேயோ வேங்கடத்தில் காட்டுங்கை -- வானேர்
வரைமூங்கில் குட்டியொடு குரக்காடும்  கருத்தோ 
அரைசேர்த்த அங்கைகள்  கூப்பு.
 
43)
கூப்பிட்ட யானை புள்துரத்த வந்துநின்றால்
காப்பிடுமோ காதல் கயம்படுமோ -- ஓர்ப்புஇலாய்!
வேர்த்தோடி  நின்ற  வினதைச் சிறுவனுக்கே
பேர்த்திங் குள்ளதுவோ ஒப்பு.
 
44)
ஒப்பாரில் லப்பன் உவமைக்கும் எட்டாதான்
எப்பாரும் உய்ய இவண்வந்தான் -- கப்பாகக்
கையில் குடையா  மலையெடுத்தான் குன்றே
எய்ப்பினில் வைப்பாம்  நமக்கு.
 
45)
நமக்கென்றும்   சேமம்  நாரணன்  பாதம்
உமக்கென்ன  வேறுடையீர் கண்டீர் -- இமவானின்
பெண்ணோர் பங்கானான்  மார்க்கண்டர் கொண்டு
கண்ணாவான் காட்டே  கரி.

V, Dhivakar

unread,
Apr 16, 2010, 4:45:04 AM4/16/10
to mint...@googlegroups.com
ரங்கனாரே! ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் பொருள் விளக்கம் கொடுத்துச் சென்றால் அடியேனைப் போல எளியேனும் இன்னமும் அருமையாக உணர வாய்ப்புண்டு..


இமவானின்
பெண்ணோர் பங்கானான்  மார்க்கண்டர் கொண்டு
கண்ணாவான் காட்டே  கரி.

இதற்கு என்ன பொருள்!

தி


2010/4/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 5:12:55 AM4/16/10
to mint...@googlegroups.com
46)
கரிந்த  பிள்ளைக்குக்  காப்பும்தான்  ஆனான்
எரிந்த  பிள்ளைகள்  மீட்டான் -- பரிந்துவந்து
பார்த்தர்க்காய்  தேர்கடவிப்  பாருள்ளார்  தாமுய்ய
வார்த்தை யளித்தான் கவி.
 
47)
கவியானேன்  காகுத்தன்   காக்கும் திறத்தை
புவியெங்கும்  போற்றப் பூரித்தேன் என்றே
சவியாதுப்  புள்ளின்  பிரிவேக்கம்  கொண்டான்
அவியுணா  அமரர்க்கும் வாழ்வு.
 
48)
வாழ்வா வதுமேது   வாழ்ந்தார்  பலரென்ப
வீழ்ந்தார்  மீண்டார் எனல்மிகையே -- தாழ்வின்றி
தாதை சொற்கேளாது தன்னரசை எய்தென்ன
வேதம்  நெறியுரைத்தான் விண்டு.
 
49)
விண்டார்  என்பதுவென்   வீங்கிள  மூங்கிலொடு
தண்டார்   வேங்கடவன்  தண்ணிலவம் -- அண்டர்தாம்
வந்த   முறையீடு   கேட்கைக்கு  ஆம்நிலையம்
தந்த முகம்கண்டும் தமர்.
 
50)
தமருகந்த  தெவ்வுருவம் தானாம் உகப்பு
தமருகப்பர் தன்னுகப்பே என்னில் -- சமருகந்த
களத்தில் தன்னுகப்பாய்ச்  சாற்றினான்  கீதை
அளப்பரிய  தாமவன் ஏது.

Hari Krishnan

unread,
Apr 16, 2010, 5:31:47 AM4/16/10
to mint...@googlegroups.com


2010/4/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

//ஷைலஜா! நீங்களே இப்படி சொன்னால், நான் தமிழ் பக்கமே தலை வைக்காமல் இருந்தால் தான் முடியும்.
 
ஹரிகி சார்! கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்... atleast இப்படி இன்னும் எத்தனை ஆச்சரியங்கள் இருக்கிறதுன்னு தெரிஞ்சுக்கலாமே...//

இலக்கணமே தெரியாத என்னைப் போன்றோர் படித்து வியக்கத் தான் முடியும், மெளனமாய்ப்  படித்து வருகிறேன்.


கீதா, ஸ்வர்ணா, ஷைலஜா எல்லாருக்கும்,

சொல்லிக் கொடுங்கள் என்றால் என்ன எனப் புரியவில்லை.  எதைச் சொல்லித் தருவது!  எப்படி எழுதுவது என்றா?  அதற்காகத்தான் சார்ட் போட்டுக் கொடுத்திருக்கிறேன்.  இல்லை எப்படிப் படிக்கணும் என்றா?  ஒவ்வொரு பாம்பின் தலையாகத தொடங்கி, அதனதன் உடல் வழியாகப் படித்தால் வெண்பா கிடைக்கும்.

This was written more out of a boyish curiosity than out of any other impulse.  I repeat, boyish curiosity.  அப்போது தண்டியலங்காரம் படித்துக்கொண்டிருந்தேன்.  எல்லாமே சுயமாகப் படித்ததுதானே!  எல்லா வகையான சித்திர கவிகளுக்கும் படமும், எழுதவேண்டிய விதிமுறைகளையும் கொடுத்திருக்கிறார்கள்.  இரட்டை நாக பந்தத்துக்குப் படத்தை மட்டும் கொடுத்துவிட்டு, ‘இயற்றவேண்டிய விதிகளைக் குருமுகத்தான் அறிக’ என்று சொல்லிவிட்டார்கள். அதுபோல, அட்டநாக பந்தத்துக்கு விதி இருக்கிறது; படம் தரப்படவில்லை.  பின்னாளில் சந்தக் கவிமாமணி தமிழழகன் இயற்றிய அட்ட நாகபந்தத்தைப் பார்த்தேன்.  இதே இரட்டை நாகபந்தத்தின் நான்கு புறங்களிலும் இரண்டிரண்டு தலைகளைக் கொடுத்து, gridஐ தனித்தனியாக உடைத்திருந்தது.  நாலு சீர் கொண்ட சின்ன வாக்கியம் எழுதி, அதையே எல்லாப் பாம்புகளிலும் நிரப்பும் வகையில் அது அமைந்திருந்தது.  ஆகவே தண்டியலங்காரத்தில் காணப்படும் விதிமுறைக்கான படம் இது இல்லை என்று புரிந்துகொண்டேன்.

குருமுகத்தான் அறிக என்று போட்டிருக்கவே, ‘இதை எழுதியே தீரவேண்டும்’ என்று ஒரு வேகம் ஏற்பட்டது.  நமக்கு முருகப் பித்து நிறைய உண்டு.  குளித்து, முருகனுக்கு ஒரு சின்ன மானசீக பூஜை பண்ணி, வணங்கி எழுந்து, ‘ஏண்டாப்பா நீதானே எனக்கு குரு....நீயே சொல்லிக் குடுத்துடு’ என்று வேண்டிக்கொண்டு தொடங்கியது.  நான்கு அல்லது ஐந்து மணிநேரங்களில் விதிமுறைகளை நானே தயாரித்துக்கொண்டு எழுதிபும் முடித்தேன்.  (ஐயோ சாமி....நான் பெரிய பக்தனாக்கும் என்று விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக இதைச் சொல்லவில்லை.  நாக்கை நீட்டச்சொல்லி முருகன் என்னிடம் சொல்லவும் இல்லை.:))) அருணகிரி மாதிரி ரொம்ப பெரியவங்களுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம் அது.  நான் இப்பதான் மலைக்கு நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறேன்.  ஆனால், வேண்டிக்கொண்டால் நிச்சயம் கிடைக்கிறது என்பது என் அனுபவம். இதுக்குமேல இது வேணாம்.  உட்டுடலாம்.)

இதப் போயி பெரிசா சொல்றதாவது!  என் மைத்துனன் ஒருவன் இருக்கிறான்.  கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் வித்தகன்.  தமிழ் தெரியாது. தட்டித் தடுமாறிப் பேசுவான்.  திருமணமே செய்துகொள்ளாமல், வாழ்க்கையையே படிப்பதற்காக என்று அர்ப்பணித்தவன்.  இப்போது சில கன்னடப் பத்திரிகைகளில் எழுதுகிறான்.  பாதுகா ஸஹஸ்ரத்திலிருந்து சில சித்திரக் கவி வகைகளை எனக்கு பத்துநாள் முன்னால் அனுப்பினான்.  The Knight's moves என்று கட்டுரை.  சதுரங்கப் பலகையில் பாதுகா ஸஹஸ்ரத்தில் உள்ள அந்த ஸ்லோகங்களை நிரப்பி, மந்திரி (பிஷப் அல்லது நைட்) எந்தக் கட்டத்திலெல்லாம் நகருமோ அந்த வாட்டில் படித்தால் ஒரு தனி வாக்கியம்; குதிரை நகரும் கட்டங்களில் ஒரு வாக்கியம் என்றெல்லாம் வந்திருக்கிறது.  அதையெல்லாம் எனக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் கன்னடத்தில் எழுதியிருப்பதால் இன்னமும் நான் அவற்றை சரியாகப் படித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை.  அவனைச் சந்திக்கும்போது இதைப்பற்றிக் கேட்க வேண்டும்.  இங்கேயே பாதுகா ஸஹஸ்ரம் பத்தி தெரிஞ்சவங்க விள்கினாலும் நல்லா இருக்கும்.  

அவர்களெல்லாம் பண்ணாத காரியத்தையா நாம பண்ணிட்டோம்.  வாயப் பொத்திக்கொண்டு இத்தனை நாள் இருந்தேன்.  என்னவோ ஒரு சின்ன விளையாட்டு வேகத்தில் என்னுடைய புன்கவியையும் அனுப்பி வைத்தேன்.  மத்தபடி இது சாதனை என்றோ, வேற என்னவோ ஒண்ணு என்றோ நான் நினைக்கவில்லை.  சித்திர கவி வகைகளை புதுக்கவிதைக்காரங்களும் செய்யறாங்க.  யாப்பிலக்கணப்படி இல்லாமல் அவங்கவங்களுக்குத் தோணினபடி. என்ன சொல்லவந்தேன் என்றால், யாப்பிலக்கணத்தை மதிக்கவில்லை, அதன்படி எழுதினால் தீட்டு வந்துவிடும் என்று நினைக்கிறவர்களுக்குக்கூட, இப்படியெல்லாம் எழுதிப் பார்ககவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா!  

இது கவிதையா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல என்னால் முடியும்.  ஆனால் இது புத்திக்கான விளையாட்டு.  கவிதை என்பது மனத்தாலும் படைக்கப்படுவதுதான்; புத்தியாலும் படைக்கப்படுவதுதான்.  அவ்ளதான் எனக்குத் தெரியும்

வேற என்ன சொல்லிக்கொடுக்கணும்னு எதிர்பார்க்கறீங்கன்னு சொன்னா எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். 



srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 6:46:50 AM4/16/10
to mint...@googlegroups.com
51)
ஏதுக்கிம்  மானிடம்   பாடும் நற்புலவீர்
வாதுக்காம்  பொருளென்  வீணன்றோ -- சேதுக்காம்
கல்லும்  குரக்கிடவே மண்குளித்த ஓரணிலம்
சொல்லும்  பொருளொன்றே ஓர்ப்பு.
 
52)
ஓர்ப்பரிய  பெம்மான்தன்  உள்ளம்கேள் பூங்குயிலே! 
கார்ப்பணியத்   தாலென்  கலக்கம் -- ஏற்பரிய
குற்றமென்  கூறாய்  எனக்கேள்  குணக்கடலை
நறறவம்  அவன்கைச் சார்வு. 
 
53) 
சார்வே அவனடியார்   செய்தவமும் தொண்டே 
நேர்வேதக்  கூற்றவன்தன் சொல்லே --- போர்நாள் 
பகையொழித்தான்  பங்கயத்தான் நூலளித்தான் பத்தித் 
தகைமை  ஈதென்றான்  தந்து.
 
54)
தந்தக்  கோடுதிரத்  தான்முட்டும்  கல்லில் 
சொந்தம்  எதுகண்டு ஆனையடும் -- தன்னின் 
உறவும் உயிர்நட்பும் ஆனான்  அவன்நேர் 
உறவில்லை உண்மை உரை.
 
55) 
உரைக்கலாகா   ஊழித்  தவம்செயினும் குணங்கள் 
பரக்கப் பேசில்   பிரமன்  ---  திரையில் 
துளியெண்ணிச்  சோரார் சோர்வர்  திருமால் 
அளியெண்ணிச் செல்பி ரமர்.

annamalai sugumaran

unread,
Apr 16, 2010, 6:53:38 AM4/16/10
to mint...@googlegroups.com
ஆசுக்குக் காளமேகம் மட்டுமா 
 ஆவானே இப்போது எங்கள் 
அரங்கனுமே ! வாழ்க !சீருடன்  
கூடி நிறைக நூறு  சீக்கிரமே .
 
அன்பான உளறலுடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 7:32:13 AM4/16/10
to mint...@googlegroups.com
56)
அமரர்க்  கிடமாகும் அரங்கனார்த்  தீவம்
குமரர்க்காம்  கோகுலமும்  ஆகும் -- தமருக்கே
தஞ்சம்  அதுவாகும்  தாரணியில்  வைகுந்தம்
கஞ்சைக் காய்ந்தான் கழல்.
 
57)
கழல  வினையெல்லாம் கைகாட்டும்  தாதை
அழலவிரும்  நேமி   அவன்கை --  மழலை
தாயுகக்கும் வண்ணம் தமருகந்தான் தாள்கள்
போயிருக்கும் நமக்கே புகல்.
 
58)
புகல   வரிதே   பரந்தா மன்புகழை
அகல   வரிதவன்நற் காப்பு --- அகலிடத்தே 
ஆராயற்  பாற்றோ  அன்பும் அருளும் 
வேராதல்  கண்டும்  இழப்பு. 
 
59) 
இழந்தான்   பிரமன்   இடைச்சியும் பெற்றாள் 
உழந்தான்  தயரதனும்  பெற்று -- முழந்தாள் 
கைவைத்தான் முன்வினைக் காடழித்தான் காட்டாமல் 
நைவித்தான் நாளுமெனை இங்கு. 
 
60) 
இங்கும்  அங்கும்  இடர்பாய்ந்து நின்றதுகொல் 
சங்கம்  தங்கும்  திருக்குருகூர் -- மங்காத 
வைந்நுதிய சக்கரநல் கையன் அருளொன்றே 
கைநிதியாம் காரிமாறன் காப்பு. 

devoo

unread,
Apr 16, 2010, 7:43:31 AM4/16/10
to மின்தமிழ்
கரிந்த பிள்ளைக்குக் காப்பும்தான் ஆனான்
எரிந்த பிள்ளைகள் மீட்டான் -- பரிந்துவந்து
பார்த்தர்க்காய் தேர்கடவிப் பாருள்ளார் தாமுய்ய
வார்த்தை யளித்தான் கவி.

கரிந்த பிள்ளை – பரீக்ஷித்
எரிந்த பிள்ளைகள் – ஈனில்லிலிருந்து காணாமல்போன
குழந்தைகள் ?!

தேவ்


On Apr 16, 4:12 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> >>> On 4/16/10, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
>
> >>>> 26)
> >>>> வலிதென்று வாங்கி  வல்லரக்கன் வாழ்வு
> >>>> பொலிந்து நின்றபிரான் தொட்டான் -- கலிகன்றி
> >>>> தொட்டதமிழ் எங்கும் தோன்றித்  தோய்ந்துநின்று
> >>>> இட்டமுடன் எனையாண்ட கோ.
>
> >>>> 27)
> >>>> கோவாகி  ஞாலம் காத்தளிக்கக் கானடைந்தான்
> >>>> ஓவாமல் என்னைக் காக்குமவன் -- நாவாயில்
> >>>> உண்டே உவந்துரைக்கப் பேருண்டே பின்னும்
> >>>> கண்டுணர உண்டன்றே கண்.
>
> >>>> 28)
> >>>> கண்ணாகி  நின்று  ககனம் புரந்தான்
> >>>> எண்ணிற்கும் அரியன் என்னுள் அமர்ந்தான்
> >>>> அண்ணிக்கும்  அமுதூறும் அன்பர்க்கு  ஆளாய்ப்
> >>>> பண்ணினான் என்னைப் பரன்.
>
> >>>> 29)
> >>>> பரனடியே சென்று பார்வண்ணம் கண்டால்
> >>>> மரவடியின் மாபணயம் தானாம் -- திரமாக
> >>>> வேதம்
>

> ...
>
> read more »

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 8:19:49 AM4/16/10
to mint...@googlegroups.com


On 4/16/10, devoo <rde...@gmail.com> wrote:
கரிந்த  பிள்ளைக்குக்  காப்பும்தான்  ஆனான்
எரிந்த  பிள்ளைகள்  மீட்டான் -- பரிந்துவந்து
பார்த்தர்க்காய்  தேர்கடவிப்  பாருள்ளார்  தாமுய்ய
வார்த்தை யளித்தான் கவி.

கரிந்த பிள்ளை – பரீக்ஷித்
எரிந்த பிள்ளைகள் – ஈனில்லிலிருந்து காணாமல்போன
                                   குழந்தைகள் ?!

தேவ்
 
 

எரிந்த பிள்ளைகள்  --  பல பொருள்  தரும்.   உபாத்யாயர் மக்கள்.; 
 
இரண்டாம் வேற்றுமைத் தொகை இருப்பதுபோல் மூன்றாம் வேற்றுமைத் தொகை உண்டா தெரியவில்லை.   இல்லையென்றாலும் இங்கு  மூன்றாம் வேற்றுமை வருவித்துக்கொண்டால் எரிந்த பிள்ளைகளால் மீட்டான்.  யாரை?   பாண்டவர்களை.
 
எப்படி?   த்ரௌபதியின்   பரிபவத்தைப்  பார்த்திருந்த  அனைத்துப்  பேரையும்  அழிப்பேன்  என்று  சபதம்  பண்ணினான்  ஸ்ரீகிருஷ்ணன்.   அத்தனை  பேரும்  அழிந்தனர். 
இந்தக்  கட்டத்தைச்  சொல்லி  வரும்போது   ஸ்ரீரங்கத்தில்   பூர்வாசாரியர்கள்  காலத்தில்   கோஷ்டியில்  ஒருவர்  எழுந்திருந்து   ‘பாண்டவரும்தாமே   பார்த்திருந்தது.  அவர்களை எப்படி  விட்டுவைத்தான்? ’ என்றார்.
 
ஆசார்யர்  ‘அவர்களையும்  நிரஸிக்க  ப்ராப்தமே.  ஆயினும்   ஏன்  சபதம்  செய்தான்?   த்ரௌபதியின்  குழல்  முடிக்கைக்காக.   அப்படி  இருக்கும்  போது   பாண்டவரையும்  நிரஸித்தால்   அது  த்ரௌபதிக்கு  வைதவ்யத்தை   அன்றோ  தரும்.   ‘விரிந்த  கூந்தல்  காணாதான்   வெறுங்கழுத்து   காண்பனோ?’     இருந்தாலும்   பாண்டவர்களின்  ஸ்தானத்தில்    யுவ பாண்டவர்களை   இல்லாது  செய்தான்  அச்வத்தாமாவின்  அஸ்திராக்னியில்  கூடாரத்தில்  இரவில்.---
 
இவ்வாறு  சமாதானம்  சொன்னார்.   அந்தச்  சம்பவத்தையும்   உள்ளடக்கியது.

செல்வ புவியரசன் selva puviyarasan

unread,
Apr 16, 2010, 8:08:12 AM4/16/10
to mint...@googlegroups.com
சிங்கம் சிலிர்த்தெழ நானுமோர் சிற்றெறும்பு ஆனேன் என்பதில் மகிழ்ச்சி.  பாருங்கள்.  எனது உரைநடையிலும் வெண்டளை பயின்றுவர ஆரம்பித்துவிட்டது. திருவரங்கத்தார் அந்தாதி வெற்றிபெற வாழ்த்துகள். இப்படி அவரால் தினமொரு அந்தாதி பாடிவிட இயலும். தமது விரிவான வாசிப்பின் காரணமாக இலக்கியச்சுவையோடும் இயல்பாக எளிதாக செய்யமுடியும். அதில் ஆச்சர்யம் கொள்ள எதுவுமில்லை...என்னைப்போன்ற இளையகவிகளுக்கே காரிகை(அட...யாப்பப்பா) இசைவதில்லை. வெண்டளை பயின்றுவர பாடல் செய்தால் அது சங்கராபரணம் ராகத்தில் பாடும் வகையில் அமையுமென்று படித்த நினைவு. அப்படியொரு திரைப்பாடலும் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்...இசையறிந்த நண்பர்கள் சொல்லலாம். மற்றபடி நான் ஏற்கெனவே சொன்னதை மீண்டுமொருதடவை நினைவுறுத்துகிறேன்...  கட்டளை கலித்துறையே உண்மையான சவால். மின்தமிழ் நண்பர்களில் கட்டளை கலித்துறை எழுதுபவர்கள் எவருமுண்டோ?

2010/4/16 devoo <rde...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 9:35:41 AM4/16/10
to mint...@googlegroups.com
நீங்க  வேற  புவி.   நானே   தலையை விட்டுவிட்டு  ஆட்டிப் படைக்குது.
கற்பனை +  செய்யுள் நலம்+  சாத்திரக் கருத்துகள்  மூன்றையும் 
கழைக்கூத்தாடி  மாதிரி   பாலன்ஸ்  பண்ண  வேண்டியிருக்கு.
 
ஒரு விதத்தில்  இன்பம்தான்.  ஆனா   ஸ்கூலுக்குப்  போகாத  பையனை  மிட்டாய் 
காட்டி  அடைச்சுப்  போடுவாங்களே  அது  மாதிரி  பேந்த  பேந்த  முழிச்சுக்கிட்டு  இருக்கேன்.
 
நூறு  முடிச்சா  அப்பறம்  மழைக்குக்கூட  ஒதுங்க  மாட்டேன்னு  
முடிவு  பண்ணிட்டேன்.
பிரசவ வைராக்கியமா  ஆகாம  இருக்கணும்.
:--)))

 

srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 11:05:08 AM4/16/10
to mint...@googlegroups.com
61)
காப்பும்  பேறும்  கிட்டுவிக்கும்  ஆறாய்க் 
கோப்புண்டான்  தானாய்க் கண்ணன் -- கூப்புங்கை
ஆறன்று அன்பால் நமவென்னல் வாய்புலர்த்தல்
வீறுசர  ணாகதியே அறிவு.
 
62)
அறிவும் ஆம்பொருளும்  ஆன்றவறி வோனும்
செறியும் முப்படையாய்ச் சேரும் -- முறியாத 
மூர்த்தியாய் முவ்வுலகும் ஆனான் முந்துகழல் 
சேர்விக்கும் சத்தியமாம் இயன்று. 
 
63) 
இயன்றது இவ்வுலகம் இன்மை  இலதால் 
பயின்றது பரம்பொருளின் பான்மை -- துயின்றதுவும் 
யோகு  தொலைந்ததுவும் கள்ளம்  தன்மை 
யாகமெனல் யாரறிவார் சொல்?  
 
64) 
சொல் ஒன்றால்  சகம்படைத்தான் சொல்லில் 
சொல்லே தன்னுருவும்  ஆனான் -- சொல்லால் 
அகப்படான் சிந்தை  இறந்தான்  அன்பால் 
அகப்பட்டுக் கொண்டான்  தழும்பு. 
 
65) 
தழும்பார்த்த  தாம்பால்  தாயும்  தளைக்க 
அழும்பார்க்கும் அஞ்சுமந் நோக்கும் -- தொழுங்காதல் 
தொண்டர்க்கே கட்டுண்ணத்  தொல்நோக்கில் ஆச்சி 
அண்டர்கோன்  கற்பித்தாள்  அன்று. 
***

 
கைநிதியாம் காரிமாறன் காப்பு. 
***

 
அளியெண்ணிச் செல்பி ரமர்.
***

 
***


 
***

 
***

 
***

 
வேதம்  உரைப்பதெல்லாம் வேந்தன்  நடைகாட்ட 
நீதம்  நெறியாகி நின்று. 
 
30) 
நின்றென்னுள்  என்றும்  நிமலன் தனைக்காட்டான் 
அன்றென்னுள்  வீற்றது  எவ்வாறு? -- கன்றாய்க் 
குனிந்து நீர்சுவைத்தான்  கல்லிதயன் என்னைக் 
கனிந்து காவாத தென்?
***
 
***
 

2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>


2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
2010/4/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ச்சும்மா.... பயிற்சிக்காக பள்ளிநாட்களில் எழுதிப்பார்த்தது.









srirangammohanarangan v

unread,
Apr 16, 2010, 11:56:01 AM4/16/10
to mint...@googlegroups.com
66)
அன்றே உலகம்  அளந்ததுவோ அன்றேல்
கன்றே மேய்க்கத்தான் கற்றதுவோ -- நன்றாய்த்
தேர்கடவும்   பெம்மானார் தீர்ந்தார்  தொண்டிற்கே
யார்கடப்பார் கண்ணன்தாள்  தொண்டு.
 
67)
தொண்டிற்கே உள்ளம் தீர்ந்தால் திவத்தில்
அண்டர்க்கே அன்பாய்   இருப்பர் -- கண்டார்க்கே
காதல் கடல்புரைய கண்ணன் விளைவித்தான்
நோதல்  தவிர்த்தான் பதம்.
 
68)
பதமும் பாரிப்பும்  பக்குவமும் பத்தர்
நிதமும் அவனாகம்  செய்யும் -- சதமாகச்
சந்நிதியில் தாமிருக்க வேட்ட  சடகோபன்
இந்நிலத்தில்  மீண்டான் பரிந்து.
 
69)
பரிந்து  திருவும்  அவனுள்ளம்   மாற்றிப் 
புரிந்ததுவும் பேருதவி  யாகும் -- தெரிந்ததுவே 
தேவர்கோன்  தன்னிச்சை  மிக்கோன் திருந்திவந்த 
சீவனையே சீற்றம் கொளும். 
 
70) 
கொள்ளக் குறைவிலனாம் என்றெண்ணும் தாதை 
தள்ளக் கோபித்தால் தான்மகிழும் -- விள்ளற்  
கரியதாம்  விந்தை கமலைதாள் போற்றல்
உரியதாம் என்றும் உயிர்க்கு.

shylaja

unread,
Apr 16, 2010, 12:06:52 PM4/16/10
to mint...@googlegroups.com
பா மழைல நனைகிறோம்!   எழுதும் வேகத்துக்கு படித்துப்பொருளை உணர இயலவில்லை  ..ஆனால் உணர்ந்து வாசிக்கிறோம்!முழுதும் முடித்ததும் சில ஐயங்களை எழுப்பி அதனைத்தீர்த்துவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் புலவரே!

2010/4/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>

--
ஷைலஜா

//தமிழில் பேசுதல் தாழ்வில்லை
தவறாய்ப்பேசுதல் மாண்பில்லை
அமிழ்தினுமினிய தமிழினிலே
அத்தனை ரசமும் கொஞ்சுகவே!
தமிழில் கனவுகள் காண்பவரும்
தமிழில் சிந்தனை செய்பவரும்
தமிழின் இனிமையில் ஆழ்ந்தவரும்
தமிழர்! வேறே தகுதியெது?//

இசைக்கவி ரமணன்

Swarna Lakshmi

unread,
Apr 16, 2010, 12:42:15 PM4/16/10
to mint...@googlegroups.com
ஹரிகி சார், ரொம்ப சிம்பிளாக சொன்னால், தமிழ் இலக்கணம் எல்லாம் தெரியவே தெரியாது.
 
நான் படித்தது ஒரு தமிழ் நாட்டு அரசாங்கப்பள்ளியில் - மிகப்புகழ் பெற்ற பெண்கள் பள்ளி அது; தமிழாசிரியைகள் எல்லாம் வந்து புத்தகத்தில் இருப்பதை தூங்கிக் கொண்டே படித்துக் காட்டுவார்கள். நாங்களும் அதை தூங்கிக்கொண்டே காதில் போட்டுக்கொள்வோம் - தலையில் ஒன்றும் ஏறாது. எப்போதாவது என் தமிழ் ஆர்வம் கொஞ்சம் தலை காட்டினாலும் ஆசிரியர்களும், வகுப்புத்தோழிகளும் அதன் தலையில் ஒரு குட்டு குட்டி விடுவார்கள் (maths and science ல மார்க் வாங்கினாலும் புண்ணியம் - தமிழ ஏன் படிச்சு டைம் வேஸ்ட் பண்ணறே?!!) இது இப்படி இருக்க, பத்தாம் வகுப்புக்கு மேல் வந்த தமிழாசிரியைக்கு தமிழ் மேல் ஆனாலும் ஒரு எள்ளல். அவர் அழகழகான செய்யுள்களை எல்லாம் எப்படி கொன்றிருக்கிறார் தெரியுமா - முருகன் பிள்ளைத்தமிழை அவர் வதைத்து எடுத்து கிண்டல் பண்ணியது இன்னும் என் கண்களில் ரத்தம் வரவழைக்கும்!! அவர் மேலேயிருந்த வெறுப்பினாலேயே நான் கொஞ்சம் தனியாக ஆர்வம் எடுத்து படிக்க ஆரம்பித்தேன் - ஆனால் இலக்கணம் எல்லாம் ரொம்ப தூரம். அரசாங்கப்பள்ளியே இப்படி என்றால், தனியார்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
 
அதனால், தமிழ் இலக்கணத்தை அதன் உண்மையான அழகோடு, கொஞ்சம் சாதாரணமானவர்களும் புரிந்து கொள்கிற மாதிரி யாராவது பொறுமையாக சொல்லித்தந்தால், அதை விக்கியில் இணைத்தால், எத்தனையோ பேருக்கு உதவியாக இருக்கும். மெல்ல மெல்ல, செய்யுள்களைப் படித்து புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள் (கோனார் தமிழ் உரை இல்லாமல்). அடிப்படை அறிவு (தேமா, புளிமா உட்பட) கூட இல்லாமல் தமிழ் தமிழ் என்று அடித்துக்கொள்கிற ஜீவன்கள் கடைத்தேற ஒரு வழி.
 
அதுதான் கேட்கிறோம்.
 
நன்றி
ஸ்வர்ணா


From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 16 April, 2010 3:01:47 PM

Subject: Re: [MinTamil] Re: "தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )"
It is loading more messages.
0 new messages