அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி!

500 views
Skip to first unread message

amachu

unread,
Aug 9, 2009, 9:26:26 AM8/9/09
to mint...@googlegroups.com
On Aug 8, 3:47 am, amachu <ramada...@amachu.net> wrote:
> On Sat, 2009-08-08 at 12:16 +0530, V, Dhivakar wrote:
> > நன்றி அவ்வையாரே!
>
> > அன்பு ஆமாச்சு!
> > not to revolt against" or "to co-exist with"
>
> > மேற்கண்டவை எல்லாம் அந்தந்தக் காலத்தில் உள்ள தலைவர்கள் என்று
> > சொல்லப்படுபவர்கள் கையில் உள்ளது.
>
> > மக்கள் பெரும்பாலும் 'அப்பாவி'களே.. அவர்களுக்கு தனியே சென்று
> > ஒரு ஆட்சிக்கு எதிராக 'ரிவோல்ட்' செய்வது என்பது அவ்வளவு எளிதில்
வராது.
> > இது உலகெங்கும் இதுவரை கண்ட உண்மைதானே.
>
> > சரியானதலைவன்தான் பெரும்பாலான மக்களின் பாதுகாப்புக்கு
பொறுப்பேற்கிறான். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும்
நிர்ணயிக்கிறான். சமூகம் என்பதின் கோட்பாடும் இதுதான்.
>
> > அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி - இது பழமொழி

There is some element of truth in that but not to the complete extent.

I must also disagree to that particularly in Indian context.

நமது சமூகக் கட்டமைப்பு கூடுமானவரையில் பரந்து விரிந்ததாக அதிகாரங்கள்
சென்று குவிக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தைச் சாராததாக இருந்தமையால் தான் தமது
அடையாளத்தை தற்காலம் வரை காத்து வந்துள்ளது.

இவ்வாதம் விஜயநகர சாம்ராஜ்யம் உள்ளிட்டவற்றை சார்ந்தும் எழுந்து
வந்துள்ளமையால், நான் வாசித்து நினைவில் இருக்கும் ஒரு சம்பவத்தை மேற்கோள்
காட்டுகிறேன். அச் சாம்யாஜ்யம் அமையப் பெற்றதும் தமிழகப் பகுதிகளில் அதீத
வரி வசூலிக்க முற்பட்ட போது, அவர்களோடு பொதுவான அடையாளம் வேண்டி இருக்க
இசைந்த தமிழ் வேந்த மரபினர் கிளர்ந்து எழுந்ததாகவும், பின்னர் தமது
தவறுணர்ந்து இணக்கமான சூழலுக்கு விஜய நகரம் இசைந்ததாகவும் வாசித்த
நினைவுண்டு. இவற்றை அறிந்திருப்போர் இங்கிருந்தால் சுட்டி உதவுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.

அதிகாரம் அடி வரை பரவியிருந்த கட்டமைப்பைக் கொண்டதால் தானே இது முடிந்தது.
மன்னரோடு நின்றிருந்தால் மதி கெட்டு இசைந்திருப்பார்கள்.

--

ஆமாச்சு




V, Dhivakar

unread,
Aug 10, 2009, 12:37:22 AM8/10/09
to minT...@googlegroups.com
விஜயநகர அரசு என்பது நமக்குக் கிடைத்த 'கடவுளின் பரிசு'. அந்த அரசு மட்டும் நம்மை ஒரு இருநூறு ஆண்டுக் காலம் ஆளவில்லையென்றால் இந்தோனேசியாவைப் போல நம் தென்னகம் ஆகியிருக்கும். காலம் ஒவ்வொரு சமயமும் மக்களுக்கு நன்மையே செய்கிறது என்பதை சமகாலத்தில் உள்ளவர் ஒப்புக்கொள்ளத் தயக்கம் கொள்வர். ஆனால் பின்னர் வரும் நிலையைப் பார்க்கும்போது, 'ஆஹா.. அவர்கள் மட்டும் வந்திராவிட்டால் நமது சமூகம் என்னவெல்லாம் ஆகி இருக்குமோ.. என்று எண்ணத் தொடங்குவர்.
 
அதே போல மராத்தியரும் கூட.. மராத்தியரின் வருகை தமிழகத்தில் விஜயநகர ராயருக்குப் பின் உடனடியாக ஏற்பட்டது. இதுவும் பிற்காலங்களில் நல்லது என ஏற்றுக் கொள்ளப்பட்டவையே..
 
இங்கு ஏனோ வினைப் பயனை சம்பந்தப்படுத்தாமல் இருக்கமுடியவில்லை. பாருங்கள் பராந்தகர் காலத்திலிருந்து அடுத்த நூறாண்டுகள் நாம் மராட்டியரோடு (ராஷ்ட்ரகூடரோடு) போராடிக்கொண்டு அவர்களை வென்று கொண்டே இருந்தோம்.. ஒரே ஒரு போரைத் தவிர ராஷ்ட்ரகூடர் தமிழரிடம் இழந்தது மிக மிக அதிகம். ஆனால் அதே மராட்டியர் சிவாஜி மூலமாக எதிரிகளே இல்லாத ஒரு காலத்தில் மிக எளிதாக தமிழகத்தில் வடக்கு மற்றும் கீழைப்பகுதிகளை வெற்றிகொண்டனர். வெற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் ஆங்கிலேயர் சிறப்பாக கால் ஊன்றும் வரை ஆட்சியை தக்கவைத்துக் கொண்டனர். அதே போல கன்னட சாளுக்கியர்களும். பல்லவர் காலத்திலும், சோழர்கள் காலத்திலும் சாளுக்கிய பன்றிக்கொடி பலமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே பன்றிக் கொடிஒரு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்ய விஸ்தரிப்பு எனும் வடிவத்தில் தமிழகமெங்கும் பரி பூரணமாக பரவி ஆட்சி செய்ததையும் மறக்கக் கூடாது,
 
சரி! மக்கள் சம்மதம் பற்றியதுதானே உங்கள் கேள்வி? அந்தந்த காலகட்டத்தில் உலாவிய சூழ்நிலை பொறுத்தே அவர்கள் சம்மதம் அமையும். சோழர்கள் காலத்தில் ராஷ்ட்ரகூடரையும் சாளுக்கியரையும் தன் கால் தூசுக்கு சமமாகப் பாவித்த அதே மக்கள், பிற்காலத்தில் தாங்கள் துயருற்று, நாசமடையும் தருவாயில் காப்பாற்ற வந்த அதே விஜயநகரத் தெலுங்கு ராயரையும், மராத்திய மந்திரிகளையும் வேறு வழியில்லாமல் தலைவராக ஏற்றுக் கொள்ளத் துவங்கினார்கள் என்றே கருத இடமுண்டு. எந்த இனமும் மற்ற இனத்தை தலைமையாக ஏற்றுக் கொள்ள சம்மதிக்காது. அப்படி சம்மதம் தெரிவித்தால் அந்த இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றியவர்களுக்கு நன்றிக் கடனாகவே இருந்ததாக எண்ண வேண்டும் (இது 1400-1800,  நானூறு ஆண்டுகால தமிழர் சரிதத்தினை மட்டும் மனதில் கொண்டு சொல்வது).
 
தி

Innamburan Innamburan

unread,
Aug 10, 2009, 1:58:10 AM8/10/09
to minT...@googlegroups.com
ராம்தாஸ்! எப்போ வராப்பலே?
இன்னம்பூரான்


2009/8/10 V, Dhivakar <venkdh...@gmail.com>

amachu

unread,
Aug 10, 2009, 3:36:19 AM8/10/09
to minT...@googlegroups.com
On Mon, 2009-08-10 at 10:07 +0530, V, Dhivakar wrote:
>
> சரி! மக்கள் சம்மதம் பற்றியதுதானே உங்கள் கேள்வி? அந்தந்த காலகட்டத்தில்
> உலாவிய சூழ்நிலை பொறுத்தே அவர்கள் சம்மதம் அமையும். சோழர்கள் காலத்தில்
> ராஷ்ட்ரகூடரையும் சாளுக்கியரையும் தன் கால் தூசுக்கு சமமாகப் பாவித்த அதே
> மக்கள், பிற்காலத்தில் தாங்கள் துயருற்று, நாசமடையும் தருவாயில்
> காப்பாற்ற வந்த அதே விஜயநகரத் தெலுங்கு ராயரையும், மராத்திய
> மந்திரிகளையும் வேறு வழியில்லாமல் தலைவராக ஏற்றுக் கொள்ளத்
> துவங்கினார்கள் என்றே கருத இடமுண்டு. எந்த இனமும் மற்ற இனத்தை தலைமையாக
> ஏற்றுக் கொள்ள சம்மதிக்காது. அப்படி சம்மதம் தெரிவித்தால் அந்த இனத்தை
> அழிவிலிருந்து காப்பாற்றியவர்களுக்கு நன்றிக் கடனாகவே இருந்ததாக எண்ண
> வேண்டும் (இது 1400-1800, நானூறு ஆண்டுகால தமிழர் சரிதத்தினை மட்டும்
> மனதில் கொண்டு சொல்வது).
>

இந்த நானூறு ஆண்டுகால முக்கியமான சரித்திரத்தை தமிழர்களுக்கு சொல்லும்
புத்தகங்களும் மக்களும் மிகச் சொற்பம்.

மீண்டும் மீண்டும் கேட்பதெல்லாம் ஆரிய அக்கப்போர்களே!

--

ஆமாச்சு

V, Dhivakar

unread,
Aug 10, 2009, 5:56:37 AM8/10/09
to minT...@googlegroups.com
>>>இந்த நானூறு ஆண்டுகால முக்கியமான சரித்திரத்தை தமிழர்களுக்கு சொல்லும்
புத்தகங்களும் மக்களும் மிகச் சொற்பம்<<<.
 
நிறைய இருந்தாலும் மக்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருப்பது சொற்ப நூல்களே!
 
நம்முடைய பாரத பண்டைய நாகரீகத்தை இவர்கள் (vijaynagara and Marattas) காப்பாற்றினார்கள் என்பது எப்படி உண்மையோ, இவர்கள் நமது பண்டைய கோயில்களுக்கு புத்துயிர் ஊட்டியது எவ்வளவு உண்மையோ, இவர்கள் காலத்தில் தமிழ் 'வளரவில்லை' என்பதும் உண்மைதான். 'திருப்புகழ்' பாடிய அருணகிரிநாதரும், கவி காளமேகமும், அன்னை அபிராமியின் அன்பு பக்தரான அபிராமிபட்டரும் மிகவும் சிரமப்பட்டே தமிழை வளர்த்தார்கள் என்பது சரித்திர உண்மை. குமரகுருபரர் சற்று அதிர்ஷ்டம் நிறைந்தவர்தான் - ஆனால் அவருக்கு சைவ மடங்கள் அண்டமாக இருந்தன என்பதையும் நினனவில் கொள்ளவேண்டும். அதேபோல கச்சியப்ப முனிவர் எழுதிய கந்தபுராணத்தில் தமிழ்த் தேன் அப்படியே சொட்டும். ஆனால் அரசர்கள் ஆதரவு அதற்கில்லை.
பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடல் புராணமும் இதே வகைதான், இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்தான்.
 
ஏன் தமிழ் அந்த நானூறு ஆண்டுகாலங்களில் சிறக்கவில்லை: இதற்கு காரணம் கூட தாய்மொழிப் பிரியம் கொண்ட அரசர்கள்தான். மராத்தியர் ஆண்டபோது அவர்கள் வடமொழியைத்தான் அதிகம் ஆதரித்தார்கள். (கீழே ஒரு சிறு குறிப்பு, விக்கியிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ளது), அவர்களுக்கு முன் ஆண்ட தெலுங்கரும் அப்படியே வடமொழியில் பிரியம் காட்டியதுதான். கூடவே தெலுங்குக்கும் பிரதானம் கொடுக்கப்பட்டது. இவை எல்லாம் இயற்கை என்பதால், அவர்களை நாம் தமிழின் எதிரிகளாக சித்தரிக்கக்கூடாது.
 
ஏனெனில் சென்னையில் இருந்து தென்கோடி வரை உள்ள பாளையக்காரர்கள் முக்கால்வாசிப் பேர் தெலுங்கர்கள். அவர்களுக்கு நம் கோயில் பிடித்திருந்தது. நம் வளநாட்டு மண் பிடித்திருந்தது. நம் மக்களிடம் கூட பிரியமாக இருந்தனர். மக்களோடு மக்களாய் கலந்தும் போயினர். ஆனால் ஏனோ மொழியைப் பற்றிய பிடிப்பு அவ்வளவாக இல்லை என்றே சொல்லவேண்டும். எடுத்துச் சொல்ல பாரதி போல கவிஞர்கள் அப்போது தோன்றவில்லையோ, ஒருவேளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா போன்றோர் சற்று 'லேட்'டாக பிறந்தார்களோ..
 
ஆனால் இத்தனை கஷ்டத்திலும் தமிழ் மெல்ல நகர்ந்துகொண்டே காலத்தை ஓட்டியது, அதற்கு மிக முக்கியகாரணம் சைவமடங்களான திருவாவடுதுரையும், தருமபுரமும். இடைப்பட்ட காலங்களில் மடங்கள் சேவை தமிழுக்கு மிக மிக அதிகமான அளவில் இருந்ததை நாம் பாராட்டியே ஆகவேண்டும், இதுவும் சரித்திர உண்மை.
 
திவாகர்
from viki the following ponts:(only for example)
Shahuji I patronized learning and promoted literature. There are some dramas(koothu) in manuscript in the Thanjavur library which belong to this period. Bhulokadevendra Vilasam,Athirupavathi Kalyanam,Sankaranarayana Kalyanam,Chandrikahasa Vilasa Natakam,Koravanji and Vishnu saharasraja vilasam are some works in Tamil drama which belong to this period. However, almost all Tamil works of Shahuji's period indicate a decline in quality. The usual plot is that some princess falls in love with Sahendra or Shahuji and secures him at last. The king is described in them as a linguist and a conqueror. Besides these, there are a few stray pieces praising Ekoji, Shahuji and Serfoji.There are also some Telugu works from this period which are also lower in quality when compared to those of the Nayak period. Sahasraja vilasa nataka narrates how Shahuji I defeated the Muslim sultans and conquered all lands up to Varanasi. Vishnu sahasraja vilasam is a Tamil koothu written in Telugu script.

A large number of high-quality Sanskrit works were produced during this period. Dharmakuta heaps praises on Shahuji I. Tryambaka Raya Makhi gave a new interpretation to the Ramayana. Venkata Krishna Dikshitar who was a court-poet of Shahuji I composed Natesa Vijayam.

Apart from this, Bhaskara Dikshit wrote Ratnatulika while Veda Kavi wrote Vidya Parinayam and Jivananda
தகவல் : விக்கி
 
 
 
On 8/10/09, amachu <rama...@amachu.net> wrote:
On Mon, 2009-08-10 at 10:07 +0530, V, Dhivakar wrote:
>
> சரி! மக்கள் சம்மதம் பற்றியதுதானே உங்கள் கேள்வி? அந்தந்த காலகட்டத்தில்
> உலாவிய சூழ்நிலை பொறுத்தே அவர்கள் சம்மதம் அமையும். சோழர்கள் காலத்தில்
> ராஷ்ட்ரகூடரையும் சாளுக்கியரையும் தன் கால் தூசுக்கு சமமாகப் பாவித்த அதே
> மக்கள், பிற்காலத்தில் தாங்கள் துயருற்று, நாசமடையும் தருவாயில்
> காப்பாற்ற வந்த அதே விஜயநகரத் தெலுங்கு ராயரையும், மராத்திய
> மந்திரிகளையும் வேறு வழியில்லாமல் தலைவராக ஏற்றுக் கொள்ளத்
> துவங்கினார்கள் என்றே கருத இடமுண்டு. எந்த இனமும் மற்ற இனத்தை தலைமையாக
> ஏற்றுக் கொள்ள சம்மதிக்காது. அப்படி சம்மதம் தெரிவித்தால் அந்த இனத்தை
> அழிவிலிருந்து காப்பாற்றியவர்களுக்கு நன்றிக் கடனாகவே இருந்ததாக எண்ண
> வேண்டும் (இது 1400-1800,  நானூறு ஆண்டுகால தமிழர் சரிதத்தினை மட்டும்
> மனதில் கொண்டு சொல்வது).
>


devoo

unread,
Aug 10, 2009, 8:11:44 AM8/10/09
to மின்தமிழ்
Aug 10, 2:56 pm, "V, Dhivakar"

*Tryambaka Raya Makhi gave a new interpretation to the Ramayana*

இராமபிரான் எந்த ஒரு சூழ்நிலையிலும் அறத்திற்கு மாறாக நடந்து கொள்ளவில்லை
என்பதை விவரிக்கும் அருமையான நூல். இதன் பெயர் ‘தர்மாகூதம்’என்பதாகும்.

தேவ்

ariv...@gmail.com

unread,
Aug 10, 2009, 11:40:34 AM8/10/09
to மின்தமிழ்
இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது எந்த அறத்தில் சேரும்?

விதிமால் அறியா விமலனின் அடிப்பொடியன்
சிவ அறிவொளியன்

devoo

unread,
Aug 10, 2009, 12:04:31 PM8/10/09
to மின்தமிழ்
Aug 10, 8:40 pm, "arivo...@gmail.com" <arivo...@gmail.com>
இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது எந்த அறத்தில் சேரும்?//

அமரர் M.M.இஸ்மாயில் போன்றோர் கூர்மையாக அலசி ஆராய்ந்துள்ளனர் - இது
விஷயத்தில் விவாதம் தேவையில்லாத அளவுக்கு.

தேவ்

karth...@gmail.com

unread,
Aug 10, 2009, 9:33:46 PM8/10/09
to மின்தமிழ்
வால்மீகி இராமாயணத்தில் ராமன் யுத்தம் புரிந்தே
வாலியைக் கொன்றான் என்றிருக்கிறது என
சோ அவருடைய "எங்கே பிராமணன்?" டிவி நிகழ்ச்சியில்
சொல்லக் கேட்டேன். ஆனால் கம்பர் தெளிவாக
"மரத்தில் மறைந்திருந்தே கொன்றான்" என்று
சொல்வதுடன் அந்தச் செயல் தகாதது என்ற
விவாதத்தையும் வைத்துள்ளார். ஏன் இப்படிச்
செய்தார்?

ரெ.கா.

Tirumurti Vasudevan

unread,
Aug 10, 2009, 9:39:27 PM8/10/09
to minT...@googlegroups.com
2009/8/11 karth...@gmail.com <karth...@gmail.com>:

> வால்மீகி இராமாயணத்தில் ராமன் யுத்தம் புரிந்தே
> வாலியைக் கொன்றான் என்றிருக்கிறது என
> சோ அவருடைய "எங்கே பிராமணன்?" டிவி நிகழ்ச்சியில்
> சொல்லக் கேட்டேன். ஆனால் கம்பர் தெளிவாக
> "மரத்தில் மறைந்திருந்தே கொன்றான்" என்று
> சொல்வதுடன் அந்தச் செயல் தகாதது என்ற
> விவாதத்தையும் வைத்துள்ளார். ஏன் இப்படிச்
> செய்தார்?

ஐயா தெரிந்தவரை, வால்மீகி ராமனை வரலாற்று பாத்திரமாகவே பார்த்து "உள்ளது
உள்ளபடி" எழுதினார். கம்பர் காலத்தில் ராமர் தெய்வமாக ஆகிவிட்டதால் பல
மனத்தடைகள் இருந்து இருக்க வேண்டும். பல இடங்களில் அவர் வேறுபட்டு
எழுதுகிறார்.
திவா

INTHIRA JIT

unread,
Aug 11, 2009, 12:30:02 AM8/11/09
to minT...@googlegroups.com


10 ஆகஸ்ட், 2009 10:07 am அன்று, V, Dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:

விஜயநகர அரசு என்பது நமக்குக் கிடைத்த 'கடவுளின் பரிசு'.

அன்பின் திவாகர் சார்.,

ஹரிஹரனும் புக்கரும் எந்த அரச வம்சத்தினர் ? எதற்க்காக அவர்களுக்கு சாம்ராஜ்ய ஆசை வந்தது? ஏன் தென்னிந்திய மக்கள் அவர்களுக்கு அப்படி ஒரு ஆதரவு கொடுத்தனர்?  அதனால் அவர்கள் எதை பாது காத்தனர் ? மகராச்டிரத்துக்கு தெற்கே இருந்த ஒரு வுணர்வு வடமொழி பேசிய வடக்கே ஏன் இல்லை ?

விஜய நகரத்துக்கும் மராத்தியதுக்கும் ஏன் வடக்கு பக்கம் ஆட்சியை விஸ்தரிக்க முடியவில்லை?

மக்களின் தேவைக்கும் அவர்களின் எண்ணத்திற்கும் ஏற்ப விஜய நகர பேரரசு வுருவாகபட்டதா? இல்லை அரசனின் தேவைக்காக வுருவக்க பட்டதா?

சிறிது விளக்குங்களேன்!

அன்புடன்
இந்திரஜித்
 


V, Dhivakar

unread,
Aug 11, 2009, 5:27:15 AM8/11/09
to minT...@googlegroups.com
அன்பு இந்திரஜித்!
 
கேள்விகள் அதிகமாக இருக்கும்போது இதற்கான விடைகள் மிகப் பெரிய புத்தகமாக இருக்கும்.
 
நீங்கள் கேள்விகள் கேட்பது பற்றி எனக்கு மகிழ்ச்சியே என்றாலும் விதண்டா விவாதம் வராத பட்சத்தில் இந்த கேள்விகளுக்கான பதில்கள் புரிந்து கொள்ளப்படவேண்டும்.
 
விசயநகர அரசு உருவான விதம், அது அழிந்த விதம் பற்றிய பல புத்தகங்கள் உள்ளன. Burton Stein's Vijayanagara என்ற கைக்கு அடக்கமான புத்தகம் ஒன்றை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். பல உண்மைகள், உங்களுக்குத் தெரியவரும்.
 
இனம் என்று எடுத்துக்கொண்டால் விஜயநகரப் பேரரசில், கன்னட, துளு, தெலுங்கு மற்றும் தமிழ் மன்னர்கள் பலர் இருந்தனர். உண்மையான திராவிட மன்னர்கள் இவர்கள்தான். புகழ்பெற்ற கிருஷ்ணதேவராயர் துளு என்றால், செல்லப்பர் (சளுவ நரசிம்மன்) எனும் மாமன்னர் தமிழர். ஹரிஹர புக்கர்கள் கன்னடர் என்றால் ராமராஜு தெலுங்கர்.
 
இவர்கள் வருவதற்கு முன்னர் இருந்த நிலை புரியவேண்டும். சுல்தான்களின் கொடுமை தெரியவேண்டும், மாலிக்காபூரின் வன்முறை, இவன் ஒருவனிடம் மட்டுமே உயிரிழந்த கன்னட ஓய்சாள மன்னர், வீர பல்லாளன் தமிழருக்கும் தமிழ்க் கோயிலுக்கும் செய்த நன்மைகள் தெரியவேண்டும், முஸ்லிம் படைத்தலைவர்கள் இன்றைய மேற்கு/வடக்கு கர்நாடகத்திலும், நமது திருச்சி-மதுரையிலும் செய்த கொடுமைகள் புரியவேண்டும்..
இவையெல்லாம் சரித்திர நிகழ்வுகள். இவைகளின் வாத விவாதங்கள் வேஸ்ட். சாதாரணமாக பெரியவர்கள் எழுதிய சரித்திரப் பாடப் புத்தகங்களைப் படிக்காமல், இவைகளின் மீது ஆராய்ச்சி செய்யப்பட்ட கட்டுரைகள் ஏராளம்.. அவற்றையெல்லாம் படித்தால்தான் விஜயநகரத்தின் அருமை புரியும்.
 
அடிக்கடி ஏன் வன்முறை என்ற பதத்தினை உபயோகப்படுத்திறேன் என்றால் சுல்தானின் படைத்தலைவர்கள் செய்த அட்டூழியம் தென்னிந்தியா அதுவரை கண்டிராதது. ஒரு கன்னட ராஜாவின் உடலை சமைத்து அதை உணவாக அவன் மனைவிக்கு அனுப்பி வைத்த கொடுமைகள் உண்டு. அந்த ராஜாவின் ஏழு மகன்களும் (இத்தனைக்கும் சிறுவர்கள்) வன்முறைக்கு பயந்து ஒரே இரவில் இஸ்லாமியராக ஆன சம்பவங்கள் உண்டு..
 
திவாகர்

devoo

unread,
Aug 11, 2009, 6:32:29 AM8/11/09
to மின்தமிழ்
மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் சொல்வதை முன் வைத்தாலும் சாயத்தை
ஏற்றிவிடும்
போக்கில் மாற்றத்தை எதிர்பார்க்க இயலாது.

தேவ்

> On 8/11/09, INTHIRA JIT <inthira...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > 10 ஆகஸ்ட், 2009 10:07 am அன்று, V, Dhivakar <venkdhiva...@gmail.com>எழுதியது:


>
> >> விஜயநகர அரசு என்பது நமக்குக் கிடைத்த 'கடவுளின் பரிசு'.
>
> > அன்பின் திவாகர் சார்.,
>
> > ஹரிஹரனும் புக்கரும் எந்த அரச வம்சத்தினர் ? எதற்க்காக அவர்களுக்கு சாம்ராஜ்ய
> > ஆசை வந்தது? ஏன் தென்னிந்திய மக்கள் அவர்களுக்கு அப்படி ஒரு ஆதரவு கொடுத்தனர்?
> > அதனால் அவர்கள் எதை பாது காத்தனர் ? மகராச்டிரத்துக்கு தெற்கே இருந்த ஒரு
> > வுணர்வு வடமொழி பேசிய வடக்கே ஏன் இல்லை ?
>
> > விஜய நகரத்துக்கும் மராத்தியதுக்கும் ஏன் வடக்கு பக்கம் ஆட்சியை விஸ்தரிக்க
> > முடியவில்லை?
>
> > மக்களின் தேவைக்கும் அவர்களின் எண்ணத்திற்கும் ஏற்ப விஜய நகர பேரரசு
> > வுருவாகபட்டதா? இல்லை அரசனின் தேவைக்காக வுருவக்க பட்டதா?
>
> > சிறிது விளக்குங்களேன்!
>
> > அன்புடன்

> > இந்திரஜித்- Hide quoted text -
>
> - Show quoted text -

Innamburan Innamburan

unread,
Aug 11, 2009, 9:35:32 AM8/11/09
to minT...@googlegroups.com
'... செருகளத்து உருத்து எய்யாதே...மறைந்திருந்து, வில்லால், எவ்வியது என்னை...' [4164] என்ற வினாவை (இந்த இடுகையின் பின்னணி)

நான் கம்பராமாயண ராமன்/வாலியைப் பற்றி மற்றுமே சுருக்கமாக சில கருத்துக்களை கூறுகிறேன். 

  1. வாலிவதம் ராமனால், 'என் கருத்து' என்று திட்டமிடப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை: பாடல் 4049;
  2. சுக்ரீவன் தன்னலம் கருதி ஆமாம் போட்டான்;ஆரவாரம் செய்தான்.: பாடல் 4050.
  3. வாலியின் ஊழ்வினையோ! 'நெடுந்துணை உடைமையால்..' என்று தாரை மோப்பம் பிடித்து எச்சரித்ததை, பெண்புத்தி என்று உதறினான். பாடல்: 40 63.
  4. இராமனின் புகழ் பாடினான்: பாடல்கள் 4070 -4074. அவை பொய்த்தன.
  5. '...வாலியின் கண் வரும் தீயிடை, தன் கூந்தல் தீகின்றாள்...' என்ற தீநிமித்தம் வேறு. பாடல் 4061.
  6. வதைக்கப்பட்டபின் தான் '...இதுவும் தான் ஓர் ஓங்கு அறமோ?.. என்ற பின்புத்தியான ஆண்புத்தி அவனுக்கு. பாடல் 4121
  7. '...கொடிப்பூ மிலைந்து செல்க...' என்ற ராமன் சுக்ரீவனிடம் சொன்ன உத்தி போரிலக்கணத்திற்கு மாசு படியும் உத்தி. பாடல் 4100
  8. '...வாலி மேல், கோல் ஒன்று,வாங்கித்தொடுத்து, நாணொடு தோள் உறுத்து இராகவன் துர்ந்தான்..' எனபதும், '...அந்த அம்பு, 'கதலியின் கனியினைக்கழியச் சேரும் ஊசியில் சென்றது...' என்பதும், இக்கால கொரில்லாப்போரைப்போல என்ற கருத்தை நோக்குக. மும்பையில் பயங்கரவாதிகள் இவ்வாறே தான் சுட்டனர்.  பாடல்கள் 4104, 5.
  9. வாலி பாடல்கள் 4121-39 லில் 14க்கு மேற்பட்ட வாதங்களை எடுத்துவைக்கிறான், மரண படுக்கையிலிருந்து. இகழ்வு, அறம் சாற்றுதல், வினாவுதல், உவமை எல்லாம் அற்புதம். அற்புதமே!  படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்பது போல, '...                      தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன்று ஆமோ!.. என்றும், ' அறிந்திருந்து அயர்ந்துளார் போல்!.. என்று உவமை, ...' தேவியை பிரிந்தபின், திகைத்தனை போலும்...' என்கிறான்; 'ஓவியத்து எழுத ஒன்னா உருவத்தாய்' என்று மானிடர்களுக்கு இயலாத பெருந்தன்மையோடு, விளிக்கிறான். மனுநீதியை உதவிக்கு அழைக்கிறான்; என்னே பரிவு! என்னே கனிவு! '...என் பால் எப்பிழைக்கண்டாய்? அப்பா! பரக்கழி நீ பூண்டால், புகழை யார்க் கற்பாலார்? என்று முடியா வழக்கை தொடங்குகிறான், தனது அந்திம திசையில். அவனல்லோ, காருண்யமூர்த்தி! நீ செய்தது, 'வீரம்...வாரம் அன்று;..என் உடல் பாரமன்று, பகையன்று, தன்னிலை விளக்கம் தருகிறான். மேலும் பல கூறி, முத்தாய்ப்பாக, நீ '...வாலியைப் படுத்தாய் அல்ல;மன் அறவேலியை படுத்தாய்...' என்று 'விறல் வீரனே என்று பண்புடன் விளிக்கிறான். 
  10. வாலி கூறிய 'அனையனவையை' ராமன் பாடல்கள் 4139-4150 ஆகிய 12 பாடல்களில் மறுத்து பழங்கதை கூறுகிறான்;சுக்ரீவன் வாலியை கல்லால் அடைத்து பற்றி பேச்சு இல்லாமல், 'அபயம்..புல்லலை.. பொங்கினாய்! (சுக்ரீவன்)...என் ஆருயிர் காதலன்... என்று சால்ஜாப்பு வகையில் இப்பாடல்கள்; கம்பன் ராமனுக்கு வாதாடும் ஆற்றல் அளிக்கவில்லை. 
  11. நான்கு பாடல்களில்- 4151-4154- வாலி அவற்றை திறம்பட மறுக்கிறான். மனிதனின் களவியலும், இயற்கை புணர்ச்சியும், பரத்தை வேட்டலும் அறியாத வாலி, குரங்கினத்தை தாழ்த்திகொண்டு, யான் 'குற்றம் உற்றிலன்..' என்கிறான்.  4151-4154.
  12. ஒன்பது பாடல்களில், ராமன் வாத த்திலிருந்து விலகி, கஜேந்திர மோக்ஷப் பாடம் படித்து, '...நீ அறியா நெறி இன்னம்...' என்று புகழுரை பாடியும் - 4159- முன்னம் இலக்குவனிடம் தான் எடுத்த நிலையிலிருந்து முரண்பட்டு, தக்கவிடையைத் தவிர்க்கிறான். 
  13. '... செருகளத்து உருத்து எய்யாதே...மறைந்திருந்து, வில்லால், எவ்வியது என்னை...' [4164] என்ற வினாவை (இந்த இடுகையின் பின்னணி) ராமன் தவிர்க்க, தனது முன்னைய தார்மீக நிலையிலிருந்து விலகி, இலக்குவன், நீ அடைக்கலம் கேட்டால்..என் செய்வது?...' என்று சப்பைக்கட்டு இடுகிறான். அண்ணனுக்கு ஏற்ற தம்பி இவனா? சுக்ரீவனா?
  14. இது தான் வைணவத்தின் அடைக்கலத்தத்துவம் என்றால், பெரியாழ்வாரின் பரதத்துவ நிர்ணயம் பொய். அளித்ததோ பெருமாளே. எனவே, இலக்குவனின் கூற்று தகாததது. அதனால் தான் மூதறிஞர் ராஜாஜி, வால்மீகியிலிருந்தே இதை 'தூக்கி எறிந்து விட்டார்.
  15. பிறகு வாலி மோக்ஷம்; அங்கதனின் சோகம்; தாரையின் புலம்பல்.
  16. 'பிராரப்தம்' என்ன? நாத்திகன் என்ற ஒரே காரணத்தால், நரசிங்க அவதாரம் ஹிரண்ய கசிபுவை வதைத்து கொன்றது, ராமாவதாரத்தின் பிராப்தம்.
  17. பாகவத புராணமோ, கிருட்டினனின் மரணம், வாலிவதத்தின் ஆகாமியம் என்கிறது. வேறு என்ன புராண, இதிகாஸ  சாட்சியம் தேவை?
இன்னம்பூரான்

படித்தவை:
1. கம்பராமாயணம்: அண்ணாமலைப் பல்கலை கழக வெளியீடு: 181 பாடல்கள் கிஷ்கிந்தா காண்டத்தில்; இடைசெருகல்கள் இருக்கலாமோ? வை.மு.கோ பதிப்பில் 158 பாடல்கள்.
2. இராஜாஜி: இராமாயணம் (அவரது கூற்று வால்மீகியை பற்றியது): ப.363.



2009/8/11 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

amachu

unread,
Aug 11, 2009, 12:29:12 PM8/11/09
to minT...@googlegroups.com
On Mon, 2009-08-10 at 15:26 +0530, V, Dhivakar wrote:
> >>>இந்த நானூறு ஆண்டுகால முக்கியமான சரித்திரத்தை தமிழர்களுக்கு சொல்லும்
> புத்தகங்களும் மக்களும் மிகச் சொற்பம்<<<.
>
> நிறைய இருந்தாலும் மக்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருப்பது சொற்ப நூல்களே!
>
> நம்முடைய பாரத பண்டைய நாகரீகத்தை இவர்கள் (vijaynagara and Marattas)
> காப்பாற்றினார்கள் என்பது எப்படி உண்மையோ, இவர்கள் நமது பண்டைய
> கோயில்களுக்கு புத்துயிர் ஊட்டியது எவ்வளவு உண்மையோ, இவர்கள் காலத்தில்
> தமிழ் 'வளரவில்லை' என்பதும் உண்மைதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் இருந்த அதிகப்படியான
வடமொழிக் கலப்பிற்கு காரணம் இந்த நானூறு ஆண்டுகால திராவிடர் ஆட்சிதானே?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் இருந்த வடமொழிக் கலப்பை
எதிர்த்து தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

இதில் பரிதிமாற் கலைஞரின் நூல்களை வாசித்ததில்லை. மறைமலையடிகளின் சில
புத்தகங்களைப் புரட்டியதுண்டு. இவர்களது படைப்புக்களில் தமிழ்
தேய்ந்தமைக்கும் இம்மன்னர்களது ஆட்சியால் ஏற்றபட்ட மாற்றங்களுக்கும் உள்ள
தொடர்பு எடுத்தாளப்பட்டுள்ளதா?

மறை மலை அடிகளின் சில நூல்களிலும் ஆரிட வாடை தென்பட்டதே ஒழிய இவற்றைப்
பற்றிய குறிப்புகளை நான் பார்த்த நினைவில்லை. அவர் இவற்றையும் எடுத்துக்
கொண்டு ஆராய்ந்துள்ளாரா?

கீழிருக்கும் பகுதியை தொடர்ச்சி கருதி அப்படியே விடுகிறேன்.

> ஏன் தமிழ் அந்த நானூறு ஆண்டுகாலங்களில் சிறக்கவில்லை: இதற்கு காரணம் கூட
> தாய்மொழிப் பிரியம் கொண்ட அரசர்கள்தான். மராத்தியர் ஆண்டபோது அவர்கள்
> வடமொழியைத்தான் அதிகம் ஆதரித்தார்கள். (கீழே ஒரு சிறு குறிப்பு,
> விக்கியிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ளது), அவர்களுக்கு முன் ஆண்ட
> தெலுங்கரும் அப்படியே வடமொழியில் பிரியம் காட்டியதுதான். கூடவே
> தெலுங்குக்கும் பிரதானம் கொடுக்கப்பட்டது. இவை எல்லாம் இயற்கை என்பதால்,
> அவர்களை நாம் தமிழின் எதிரிகளாக சித்தரிக்கக்கூடாது.
>
> ஏனெனில் சென்னையில் இருந்து தென்கோடி வரை உள்ள பாளையக்காரர்கள்
> முக்கால்வாசிப் பேர் தெலுங்கர்கள். அவர்களுக்கு நம் கோயில்
> பிடித்திருந்தது. நம் வளநாட்டு மண் பிடித்திருந்தது. நம் மக்களிடம் கூட
> பிரியமாக இருந்தனர். மக்களோடு மக்களாய் கலந்தும் போயினர். ஆனால் ஏனோ
> மொழியைப் பற்றிய பிடிப்பு அவ்வளவாக இல்லை என்றே சொல்லவேண்டும். எடுத்துச்
> சொல்ல பாரதி போல கவிஞர்கள் அப்போது தோன்றவில்லையோ, ஒருவேளை
> மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா போன்றோர் சற்று 'லேட்'டாக
> பிறந்தார்களோ..
>
> ஆனால் இத்தனை கஷ்டத்திலும் தமிழ் மெல்ல நகர்ந்துகொண்டே காலத்தை ஓட்டியது,
> அதற்கு மிக முக்கியகாரணம் சைவமடங்களான திருவாவடுதுரையும், தருமபுரமும்.
> இடைப்பட்ட காலங்களில் மடங்கள் சேவை தமிழுக்கு மிக மிக அதிகமான அளவில்
> இருந்ததை நாம் பாராட்டியே ஆகவேண்டும், இதுவும் சரித்திர உண்மை.
>

--

ஆமாச்சு

V, Dhivakar

unread,
Aug 12, 2009, 1:35:25 AM8/12/09
to minT...@googlegroups.com

>>பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் இருந்த அதிகப்படியான
வடமொழிக் கலப்பிற்கு காரணம் இந்த நானூறு ஆண்டுகால திராவிடர் ஆட்சிதானே?<<
 
சங்ககாலத்தோடு தனித்தமிழ் நின்றுவிட்டது. பல்லவர், களப்பிரர் காலத்தில் சமண, புத்த மற்றும் வைதீக சமயங்கள் மூலம் தமிழ் வடமொழியோடு தோழமை கொண்டுவிட்டதாகவே சொல்லலாம். பொதுவாகவே தமிழும் வடமொழியும் இணக்க மொழிகளே. வடமொழி தனக்கு வேண்டியதை தமிழில் இருந்து பெற்றுக்கொண்டதை சொல்லாமல் இருக்கமுடியாது. வடமொழியின் முக்கிய வார்த்தையான 'பூஜை' எனும் சொல் தமிழ் 'பூ-செய்' எனும் வார்த்தையால் வந்தது. ச - ஜ வானதைப் போல, வடமொழி 'ஜ' தமிழில் 'ச' வானதை திரு டி.ஸ்ரீனிவாசாச்சாரியார் தன் தமிழ்நாடு (1928) நூலில் தெரிவிக்கிறார். (இந்த நூலை முதலில் த.ம.அ வுக்கு கொடுக்கவேண்டும், இது ஆங்கிலமும், தமிழும் கலந்த நூல்.)
 
பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் பல்லவர்கள் அனைவர் காலத்திலும்  வடமொழி  ஆட்சி-மொழி யாக இருந்ததை கல்வெட்டுகள் மூலம் பார்க்கலாம். தமிழ் ஏழாம் நூற்றாண்டு முதல் கல்வெட்டுகளில் ஆட்சி மொழிக்கிணையாக வரத்தொடங்கினாலும், இயற்கையான மொழி வேறுபாடுகள் கொண்ட பிரதேசங்களான ஆந்திரம், கர்நாடகம் போன்றவைகளின் கலப்புகளினால் வடமொழி நமக்கு வேண்டியிருந்தது. 10ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தமிழ் வடமொழியை விட நல்ல வளம் பெற்று இருந்ததை எத்தனையோ சரித்திர ஆதாரங்களும், தமிழ் இலக்கிய செல்வங்களும் நமக்கு விவரிக்கின்றன.ஆனால் வடமொழி இலக்கியங்கள், தமிழிலக்கிய நூல்கள் போல மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படவும்வில்லை, மன்னர்கள் ஆதரவும் அதிகமாக இல்லை (குறிப்பாக சோழர்கள் காலத்தில்).
 
தமிழில் வடமொழியின் நேரடி கலப்பு அதாவது, ஜ, ஷ போன்ற வார்த்தைகள் 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே வந்திருக்கவேண்டும். பக்தி இலக்கியங்களில் இந்த வார்த்தைகள் இல்லை. குறிப்பாக ரோஷம் என்பதை ஆண்டாள் உரோடம் என்று சொல்கிறாள். தனித்தமிழ் எனும்போது பக்தி இலக்கியத்தில் ஏகப்பட்ட வார்த்தைகள் வடமொழிக்கு மாற்றாக இருக்கின்றன. நம்மாழ்வார் முதற்கொண்டு மாணிக்கவாசகர் வரை தமிழை சங்க காலத் தமிழோடு ஒப்பிட்டுப் பார்த்து செய்யுள் வகை செய்தனர். தனித் தமிழ் என்று பார்க்கும்போது ஒரு பெரிய அகராதி அளவுக்கு, நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலிருந்தும், தேவார திருவாசகங்களிலிருந்தும் எடுக்கும் அளவுக்கு ஏகப்பட்ட தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன.
 
இத்தகைய செல்வம் நிறைந்த தன்னிகரில்லா தமிழை விஜயநகரப் பேரரசோ மராத்தியரோ வளர்ச்சியடைய செய்யவில்லை என்று ஒரு குறை சொல்லலாமே தவிர தமிழ் இவர்கள், (அரசர்கள்) யாரையும் நம்பி இருந்ததில்லை. ஏற்கனவே சொன்னது போல திருவிளையாடல் புராணத்திலும், சீறா புராணத்திலும், குமரகுருபரர் படைப்புகள் மூலமும் தன்னிகரில்லா புகழ் பெற்று வந்தாள். திருப்புகழ் அவளுக்கு அணிவிக்கப்பட்ட வைர மாலை என்றால் அருள் வள்ள ராமலிங்க அடிகளின் திருவருட்பாவை என்னவென்று சொல்வது.
 
ஒருவேளை தமிழ் மன்னர்கள் தொடர்ந்து இருந்திருந்தால், தமிழ் மென்மேலும் சிறப்புற்றிருக்கும். அதிக அளவில் காவியங்கள் வந்திருக்க வாய்ப்புண்டு. பாரதி கனவு கண்டது போல அவருக்கு முன் காலத்திலேயே பல மொழிகளிலும் தமிழ்க் காவியங்கள் மொழி மாற்றத்திற்கும், பிற மொழிக் காவியங்கள் தமிழிலும் அதிகமாக படைக்கப்பட்டிருக்கலாம். இவைதான் உண்மையான மொழி வளர்ச்சி. இந்த வளர்ச்சி அந்த நானூறு ஆண்டு காலத்தில் இல்லை.
 
மறைமலை அடிகளின் புத்தகங்கள் சில படித்துள்ளேன். அவர் தமிழ்மேல் கொண்ட பற்று அளவில்லாதது. அதே போல சமயத்தின் மேலும், பூர்வ ஜன்மங்கள், வரும் ஜன்மங்கள் மேலும் அவர் நம்பிக்கை கொண்டு எழுதியுள்ளார்.
 
திவாகர்

 

 

 
 
 
On 8/11/09, amachu <rama...@amachu.net> wrote:
On Mon, 2009-08-10 at 15:26 +0530, V, Dhivakar wrote:
> >>>இந்த நானூறு ஆண்டுகால முக்கியமான சரித்திரத்தை தமிழர்களுக்கு சொல்லும்
> புத்தகங்களும் மக்களும் மிகச் சொற்பம்<<<.
>
> நிறைய இருந்தாலும் மக்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருப்பது சொற்ப நூல்களே!
>
> நம்முடைய பாரத பண்டைய நாகரீகத்தை இவர்கள் (vijaynagara and Marattas)
> காப்பாற்றினார்கள் என்பது எப்படி உண்மையோ, இவர்கள் நமது பண்டைய
> கோயில்களுக்கு புத்துயிர் ஊட்டியது எவ்வளவு உண்மையோ, இவர்கள் காலத்தில்
> தமிழ் 'வளரவில்லை' என்பதும் உண்மைதான்.



N. Kannan

unread,
Aug 12, 2009, 8:02:32 AM8/12/09
to minT...@googlegroups.com
திவாகர்,

தமிழ் மொழியை `மாத்ரு பாஷை` என்றும் `வடமொழியை` அரசமொழி என்று
சொல்வதிலும் ஒரு பொருள் உள்ளது. இப்போதைய Lingua Franca என்று ஆங்கிலத்தை
இந்தியா கொண்டுள்ளது. அதை இந்தி என ஆக்க முற்படும் போது முதல் எதிர்குரல்
கொடுப்பவன் தமிழனாக இருக்கிறான். அக்காலத்தில் இந்தியா முழுவதற்குமான ஒரு
Lingua Franca சங்கதமாக இருந்திருக்கிறது. இல்லையெனில் இராமானுஜரும்,
கூரத்தாழ்வானும் எப்படிக் காஷ்மீரம் போய் ஆகமங்களைப் பெற்றிருக்க
முடியும்.

எனவே இறையாண்மை என்று வரும் போது Lingua Franca தேவையாகத்தானே உள்ளது!

மேலும் அரசனைத் தெய்வமெனக்காணும் பழக்கம் தமிழகத்தில் உண்டு

`திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும்`

எனும் திருவாய்மொழி இதைச் செப்பும். வள்ளுவத்திலிருந்தும் சான்று எடுக்க முடியும்.

எனவே அன்று `தேவபாஷை` என்று அவர்கள் சொன்னது Lingua Franca என முடிவு செய்யலாம்.

நாம்தான் வழக்கம் போல் சண்டப்பிரசண்டராக அதை மொழிப்போராக மாற்றிவிட்டோம்!!

ஏதோ தோன்றியது. உங்களுக்குச் சரித்திரம் தெரியும் ;-)

க.>

2009/8/12 V, Dhivakar <venkdh...@gmail.com>:

N. Ganesan

unread,
Aug 12, 2009, 8:04:42 AM8/12/09
to மின்தமிழ்

On Aug 12, 7:02 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> திவாகர்,
>
> தமிழ் மொழியை `மாத்ரு பாஷை` என்றும் `வடமொழியை` அரசமொழி என்று
> சொல்வதிலும் ஒரு பொருள் உள்ளது. இப்போதைய Lingua Franca என்று ஆங்கிலத்தை
> இந்தியா கொண்டுள்ளது. அதை இந்தி என ஆக்க முற்படும் போது முதல் எதிர்குரல்
> கொடுப்பவன் தமிழனாக இருக்கிறான். அக்காலத்தில் இந்தியா முழுவதற்குமான ஒரு
> Lingua Franca சங்கதமாக இருந்திருக்கிறது. இல்லையெனில் இராமானுஜரும்,
> கூரத்தாழ்வானும் எப்படிக் காஷ்மீரம் போய் ஆகமங்களைப் பெற்றிருக்க
> முடியும்.
>
> எனவே இறையாண்மை என்று வரும் போது Lingua Franca தேவையாகத்தானே உள்ளது!
>
> மேலும் அரசனைத் தெய்வமெனக்காணும் பழக்கம் தமிழகத்தில் உண்டு
>
> `திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும்`
>
> எனும் திருவாய்மொழி இதைச் செப்பும். வள்ளுவத்திலிருந்தும் சான்று எடுக்க முடியும்.

வேதத்திலும் உண்டு.

>
> எனவே அன்று `தேவபாஷை` என்று அவர்கள் சொன்னது Lingua Franca என முடிவு செய்யலாம்.
>
> நாம்தான் வழக்கம் போல் சண்டப்பிரசண்டராக அதை மொழிப்போராக மாற்றிவிட்டோம்!!
>
> ஏதோ தோன்றியது. உங்களுக்குச் சரித்திரம் தெரியும் ;-)
>
> க.>
>

> 2009/8/12 V, Dhivakar <venkdhiva...@gmail.com>:


>
>
>
>
>
> >>>பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் இருந்த அதிகப்படியான

> > வடமொழிக் கலப்பிற்கு காரணம் இந்த நானூறு ஆண்டுகால திராவிடர் ஆட்சிதானே?<<- Hide quoted text -

V, Dhivakar

unread,
Aug 12, 2009, 8:19:15 AM8/12/09
to minT...@googlegroups.com
மேலும் அரசனைத் தெய்வமெனக்காணும் பழக்கம் தமிழகத்தில் உண்டு
>
> `திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும்`
>

 
நிறையவே உண்டு கண்ணன். அதுவும் எல்லா சோழ மன்னர்களின் மெய்க் கீர்த்தியும் முதலில் ஆரம்பிக்கும்போது திருமாலைச் சுட்டிக்காட்டி அந்த மன்னவனையும் போற்றுகின்றன. (குலோத்துங்க சோழன் 1, இரண்டு, மூன்று என உட்பட எல்லோருமே)
 
எல்லோரும் (தற்சமயம் தசாவதாரம் படத்துக்குப் பின்) குறை சொல்லும் ஒட்டக்கூத்தனார் மன்னனை திருமாலோடு ஒப்பிட்டு, உத்தரகாண்டத்தில் பாடியுள்ளார். பிறகு அந்தத் திருமால்தான் பரம்பொருள் என்றும் ஒரு பாட்டு எழுதியுள்ளார்.
 
கலிங்கத்துப் பரணியும் அப்படியே குலோத்துங்கனை சுட்டிக் காண்பிக்கின்றது.
 
ராஜராஜன் தெய்வமாகவே பெரிய கோயிலில் சிலை வடிக்கப்பட்டு பூசிக்கப்பட்டான் - அவன் தேவியோடு. அவனுக்கு கோவில் திருவிழாவில் (ராஜேந்திர சோழர் காலத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டின் படி) தினப்படி ஊர்வலம் கூட உண்டு.
 
தி

 

devoo

unread,
Aug 14, 2009, 3:18:14 AM8/14/09
to மின்தமிழ்
Aug 12, 10:35 am, "V, Dhivakar"

வடமொழியின் முக்கிய வார்த்தையான 'பூஜை' எனும் சொல் தமிழ் 'பூ-செய்' எனும்
வார்த்தையால் வந்தது.//

வட மொழியின் முக்கிய வார்த்தை பூஜை அன்று; பூஜா ஆகும்.
வேற்றுமை உருபு சேர்ந்தாலன்றி வடமொழியில் ஐகாரத்தில் சொற்கள் முடிவுறா.
’பூஜநம் ’வழிபடுதல்,போற்றுதல் இரண்டுக்கும் பயனாகும் சொல்.
பூஜ் என்பது வேர்.பூசுதல் என்பதோடு இணக்க வேண்டுமெனில்
அதற்கு ‘லேபநம்’ எனும் சொல் உள்ளது, ‘லிப்’ எனும் வேருடன்.

பூசை என்பது பூனைக்கான தமிழ்ச் சொல் .
பூ செய் என்றால் பூவைப் பயிர் செய் என்றுதான் பொருள் ; அருச்சனை செய்
என்றாகாது.
’நெல் செய்யப் புல் தேயும்’என்பது நம் எண்ணங்களில் positive approach
வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஓர் அருமையான பழமொழி. நெல் செய்தல்
என்றால் என்ன ? செய் என்பது விளைநிலத்தைக் குறிப்பது.

இரு மொழிகளுக்கும் நெடுங்கணக்கு ஒன்றாக இருப்பதால் சொல்லொலியில் ஒற்றுமை
காணப்படுகிறது.’கன்னம்’என்றே ஒரு சொல் வட மொழியில் உள்ளது;ஆனால் பொருள்
வேறு.தமிழில் ’நீ’ முன்னிலை ஒருமைச் சுட்டு; அதே பதம் வடமொழியில்
வழிநடத்தலைக் குறிக்கும் வேர்ச்சொல்.
நீ - நயநம்,நேத்ரம்,நேதா (ஹிந்தியில் நேதாஜீ).

மீனா,பானு ஆகிய சொற்களைப் பிற மொழியில் காண்கிறோம்.
உச்சரிப்பு ஒற்றுமையை வைத்து முடிச்சுப் போடுவது தவறு.
‘சால மிகுத்துப் பெயின் ‘ - வள்ளுவம்;
‘pain' ஆங்கிலச்சொல்;வள்ளுவர் தோமையாரிடமிருந்து இதைக் கேட்டறிந்து
கொண்டு குறளில் புகுத்தினார் என்று முடிவு கட்ட வழிவகுக்கும் இப்போக்கு!


தேவ்

Raja sankar

unread,
Aug 14, 2009, 3:23:02 AM8/14/09
to minT...@googlegroups.com
அருமையான விளக்கம்.

ராஜசங்கர்



2009/8/14 devoo <rde...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Aug 14, 2009, 3:43:49 AM8/14/09
to minT...@googlegroups.com
;-)))))))))))))))))))
சில சமயம் ஏன் இப்படி வரிந்துகட்டிக்கொண்டு இதுதான் அதுன்னு
சொல்கிறார்கள் என்று புரியவேயில்லை.
திவா

2009/8/14 devoo <rde...@gmail.com>:


> ‘pain' ஆங்கிலச்சொல்;வள்ளுவர் தோமையாரிடமிருந்து இதைக் கேட்டறிந்து
> கொண்டு குறளில் புகுத்தினார் என்று முடிவு கட்ட வழிவகுக்கும் இப்போக்கு!
>
>

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

N. Kannan

unread,
Aug 14, 2009, 5:01:42 AM8/14/09
to minT...@googlegroups.com
> மீனா,பானு ஆகிய சொற்களைப் பிற மொழியில் காண்கிறோம்.
> உச்சரிப்பு ஒற்றுமையை வைத்து முடிச்சுப் போடுவது தவறு.
> ‘சால மிகுத்துப் பெயின் ‘ - வள்ளுவம்;
> ‘pain' ஆங்கிலச்சொல்;வள்ளுவர் தோமையாரிடமிருந்து இதைக் கேட்டறிந்து
> கொண்டு குறளில் புகுத்தினார் என்று முடிவு கட்ட வழிவகுக்கும் இப்போக்கு!
>

சார்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க :-)))

க.>

N. Ganesan

unread,
Aug 14, 2009, 8:15:05 AM8/14/09
to மின்தமிழ்

On Aug 14, 2:18 am, devoo <rde...@gmail.com> wrote:
> Aug 12, 10:35 am, "V, Dhivakar"
> வடமொழியின் முக்கிய வார்த்தையான 'பூஜை' எனும் சொல் தமிழ் 'பூ-செய்' எனும்
> வார்த்தையால் வந்தது.//
>

பூசு- என்னும் வினைச்சொல்லால் பிறக்கும் சொல் பூசை, பூசல்.
மலர் : மாலை சங்கதத்தில் மாலா என்றாகிறது அல்லவா,
அதுபோல், பூசை பூஜா ஆகியிருக்கிறது.

எதைப் பூசினர் என்று பிறகொருமுறை பார்ப்போம்.

நா. கணேசன்

v4vijayakumar

unread,
Aug 14, 2009, 1:03:25 PM8/14/09
to மின்தமிழ்
On Aug 12, 5:02 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
...

> எனவே இறையாண்மை என்று வரும் போது Lingua Franca தேவையாகத்தானே உள்ளது!
...

ஆங்கிலம் Lingua Franca ஆன கதை எல்லோருக்கும் தெரியும். நம்மை ஆட்சி
செய்தவர்கள் பேசிய மொழி. சமஸ்கிருதம் யார் பேசிய மொழி ? இந்தியாவை ஆண்ட
மன்னர்களில் யார் சமஸ்கிருதம் பேசினார்கள். இல்லை, இது Esperanto போல ஒரு
உருவாக்கப் பட்ட மொழியா ?

v4vijayakumar

unread,
Aug 14, 2009, 1:08:31 PM8/14/09
to மின்தமிழ்
On Aug 14, 12:18 pm, devoo <rde...@gmail.com> wrote:
...

> ’பூஜநம் ’வழிபடுதல்,போற்றுதல் இரண்டுக்கும் பயனாகும் சொல்.
...

போஜநம் - சாப்பிடுவது :-)

v4vijayakumar

unread,
Aug 14, 2009, 1:30:22 PM8/14/09
to மின்தமிழ்
On Aug 14, 12:18 pm, devoo <rde...@gmail.com> wrote:
...
> இரு மொழிகளுக்கும் நெடுங்கணக்கு ஒன்றாக இருப்பதால் சொல்லொலியில் ஒற்றுமை
> காணப்படுகிறது.
...

ஏன் எல்லா மொழிகளிலும் அகரம் முதலாவதாக இருக்கிறது ? இதிலிருந்து எல்லா
மொழிகளுக்கும் ஒரே ஒரு மொழிதான் பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டும் என்று
தெரிகிறது. இல்லையா ?

Reply all
Reply to author
Forward
0 new messages