

அயர்லாந்துக்குப் பயணம்
மேலும் பல படங்களுடன் இக்கட்டுரையை வாசிக்க.http://subastravel.blogspot.com/அன்புடன்சுபா--Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

எங்கள் பயணம் ப்ராங்பெர்ட் விமான நிலையத்திலிருந்து அயர்லாந்தின் தலைநகரமான டப்ளின் சென்று பின்னர் அங்கிருந்து பட்டியலிடப்பட்டிருந்த இடங்களுக்குச் செல்வது என அமைக்கப்பட்டிருந்தது.
ஓ! சென்னையிலிருக்கும் கன்னிமாரா நூலகம் மற்றும் ஹோட்டல், தங்க்களின்
பெயரை இங்கிருந்துதான் பெற்றனவோ! தங்களின் செய்திக்கு நன்றி!
> ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் கோடை காலத்தின் உச்ச சமையம். எனது தோட்டத்துச்
> செடிகளைப் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது. அண்டை வீட்டு நண்பர் தோட்டத்துச்
> செடிகளுக்கு நீர் விடுவதற்கு சம்மதம் தெரிவித்தாலும் மனம் அவ்வளவாக எனக்கு
> திருப்தியில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறைய நீறைக் கொட்டி
> வைத்து சில செடிகளை முன்னர் இழந்திருக்கிறேன். அல்லது வெயிலில் காய்ந்து
> செத்துப் போனால் என்ன செய்வது. சரி. உதவி செய்வதற்காவது யாராவது
> இருக்கின்றார்களே. அதிகம் மனச் சஞ்சலம் வேண்டாம் என நானே என்னை சமாதனப்
> படுத்திக் கொண்டு பயணத்தின் தயாரிப்பு வேலைகளில் எனது மனதை செலுத்தினேன்.
>
நம்பனும்! முழுசா நம்பனும்! நம்பலாமா, வேணாமான்னு இருக்கக் கூடாது!
(தனுஷ் ஸ்டைலில் படிக்கவும் :-) )
தங்களின் செடிகள் அனைத்தும் நன்றாகவே பராமாரிக்கப்பட்டிருக்குமென்று
நம்புகிறேன்!
அன்புடன்,
பாபு கோதண்டராமன்
Usually the British peerage is associated with a place name. Robert
Bourke, an Irishman, when Ireland was part of the United Kingdom, was
given a peerage and part of that he became Lord Connemara. So,
Connemara does refer to the Irish city in the County of Galway.
Vijayaraghavan
இன்றைய அயர்லாந்து - ஓர் அறிமுகம்அயர்லாந்து எனக் குறிப்பிடும் போது வடக்குப் பகுதியான வட அயர்லாந்து நீங்கிய பகுதியே அயர்லாந்து என்று அழைக்கப்படுவது. இத்தீவில் வட கிழக்குப் பகுதி இங்கிலாந்தின் ஆட்சிக்குட்படுத்தப்பட்ட பகுதி. இது நீங்கலாக உள்ள ஏனைய பகுதிகளே அயர்லாந்து என்பதாகும்.
விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் உடனே ஒரு சந்தேகம் வந்தது எங்கள் இருவருக்கும். இங்கு எந்த வகை பணம் புழக்கத்தில் உள்ளது? உடனேயே பணம் மாற்றிக் கொள்ள வேண்டுமா ? என்று. விமான நிலையத்தில் பணம் மாற்றிக் கொள்ளும் இடத்தில் வந்து விசாரித்ததில் அயர்லாந்தில் யூரோ பணமே புழக்கத்தில் உள்ளது என்றும் வடக்கு அயர்லாந்து செல்ல வேண்டுமென்றால் மட்டுமே அதற்கு பணம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிந்து கொண்டோம். எங்கள் பயணம் முழுதுமே வடக்குப் பகுதி தவிர்த்து அயர்லாந்து நாட்டில் மட்டுமே என்பதால் பணம் மாற்ற வேண்டுமே என்ற அந்தக் கவலையை விட்டு எங்கள் சுற்றுலா வழிகாட்டி எங்கிருக்கின்றார் என்று தேடிக் கொண்டு புறப்பட்டோம்.தொடரும்..!அன்புடன்சுபாஉசாத்துணை:Atlas of Irish History - Editor: Sean Duffy--Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings2011/12/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>அயர்லாந்துக்குப் பயணம்என்றாவது ஒரு நாள் சுற்றிப் பார்க்கச் செல்ல வேண்டும் என நான் மனதில் வைத்திருக்கும் பட்டியலில் உண்மையிலேயே அயர்லாந்து இடம்பெறவில்லை. ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் என் மாமியார் அவ்வப்போது தனது முந்தைய அயர்லாந்து பயணத்தைப் பற்றியும் இரண்டு வாரங்கள் தாம் சைக்கிளில் பயணம் செய்து மக்களையும் ஊர்களையும் சுற்றிப் பார்த்ததையும் கூறிக் கொண்டிருந்தது மனதில் சிறிய அளவில் ஒரு ஆசையை உருவாக்கி விட்டது என்று தான் சொல்வேன். அவருக்கு நாங்களும் அங்கு சென்று வர வேண்டும்.. குறிப்பாக ரிங் ஆஃப் கேரி பகுதிக்குச் சென்று பார்த்து வர வேண்டும் என ஆசை. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இருந்த அனுபவம் நிச்சயம் இப்போது சற்று மாறுபட்டதாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இருந்தாலும் "ஏன்.. ஒரு முறை விடுமுறையை இங்கே கழித்தால் என்ன" என்ற எண்ணம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மனதில் வலுவாக பதிந்து விட்டது. அப்புறம் என்ன.. பயணத்திற்கான தேதியை உறுதி செய்து பயண டிக்கெட்களையும் வருட ஆரம்பத்திலேயே முன்பதிவு செய்து வாங்கி வைத்து விட்டோம்.
>From: Subashini Tremmel>Sent: Sunday, December 11, 2011 9:07 AM.>அயர்லாந்து ஒரு தீவு. ஐரோப்பாவிலேயே மூன்றாவது பெரிய தீவு என்பதும் உலகிலேயே இருபதாவது பெரிய தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது. >அரசியல் ரீதியாக இத்தீவு இரண்டு மாபெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதி (Northern Ireland) இங்கிலாந்தின் ஒரு பகுதியாகவும் >தெற்கும் ஏனைய பகுதியும் அயர்லாந்து குடியரசு (Republic of Ireland) எனவும் அழைக்கப்படுகின்றது.வட அயர்லாந்த் இங்கிலாந்தின் பகுதி இல்லை.இங்கிலாந்து + வேல்ஸ் + ஸ்காட்லாட் = க்ரேட் ப்ரிட்டன்க்ரேட் ப்ரிட்டன் + வட அயர்லாண்ட் = யுனைடெட் கிங்க்டம்
நீங்கள் அனுப்பிய மேப்பை பார்த்தீரானால், பிரிட்டனுக்கும் அயர்லாந்திற்க்கும் இடையில் சின்ன தீவு இருக்கும். அதுதான் நம்ம வூரு , நம்ம பேட்டை, நம்ம வீடு இருப்பது – ஐய்ல் ஆஃப் மேன்.
ஐய்ல் ஆஃப் மேன் என்பது க்ரௌன் ப்ரொடெக்டொரேட் . தனி நாடாட்டம்.
1918 வரை அயர்லாண்ட் யுனைடெட் கிங்க்டமின் பகுதியாக இருந்தது. 1919 அது தனியான குடியரசாகியது.வகொவி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>அதாவது டப்ளினில் (Dublin) முதலில் இரண்டு நாட்கள் இருந்து பின்னர் மூன்றாம்>பகுதிக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கி .....
>நாள் கால்வே(Galway Region) சென்று பின்னர் கோன்னிமாரா (Connemara)
ஓ! சென்னையிலிருக்கும் கன்னிமாரா நூலகம் மற்றும் ஹோட்டல், தங்க்களின்
பெயரை இங்கிருந்துதான் பெற்றனவோ! தங்களின் செய்திக்கு நன்றி!
நம்பனும்! முழுசா நம்பனும்! நம்பலாமா, வேணாமான்னு இருக்கக் கூடாது!
> ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் கோடை காலத்தின் உச்ச சமையம். எனது தோட்டத்துச்
> செடிகளைப் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது. அண்டை வீட்டு நண்பர் தோட்டத்துச்
> செடிகளுக்கு நீர் விடுவதற்கு சம்மதம் தெரிவித்தாலும் மனம் அவ்வளவாக எனக்கு
> திருப்தியில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறைய நீறைக் கொட்டி
> வைத்து சில செடிகளை முன்னர் இழந்திருக்கிறேன். அல்லது வெயிலில் காய்ந்து
> செத்துப் போனால் என்ன செய்வது. சரி. உதவி செய்வதற்காவது யாராவது
> இருக்கின்றார்களே. அதிகம் மனச் சஞ்சலம் வேண்டாம் என நானே என்னை சமாதனப்
> படுத்திக் கொண்டு பயணத்தின் தயாரிப்பு வேலைகளில் எனது மனதை செலுத்தினேன்.
>
(தனுஷ் ஸ்டைலில் படிக்கவும் :-) )
தங்களின் செடிகள் அனைத்தும் நன்றாகவே பராமாரிக்கப்பட்டிருக்குமென்று
நம்புகிறேன்!
அன்புடன்,
பாபு கோதண்டராமன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil










இன்றைய அயர்லாந்து - ஓர் அறிமுகம்
அயர்லாந்து எனக் குறிப்பிடும் போது வடக்குப் பகுதியான வட அயர்லாந்து நீங்கிய பகுதியே அயர்லாந்து என்று அழைக்கப்படுவது. இத்தீவில் வட கிழக்குப் பகுதி இங்கிலாந்தின் ஆட்சிக்குட்படுத்தப்பட்ட பகுதி. இது நீங்கலாக உள்ள ஏனைய பகுதிகளே அயர்லாந்து என்பதாகும்...
ரோனல்ஸ்வே ஏர்போர்ட்.
டப்ளினில் இருந்து டக்ளஸ் (ஐல் ஆஃப் மேனின் தலைநகரம்) நகரத்திற்க்கு
படகில் போகலாம் , இந்த சேவை கோடை காலத்தில்தான்
> > ஐய்ல் ஆஃப் மேன் என்பது க்ரௌன் ப்ரொடெக்டொரேட் . தனி நாடாட்டம்.
>
> இந்த தீவு (தனி நாடு மாதிரி இல்லையா) பற்றி மேலும் கொஞ்சம் விபரம் னேரம்
> இருக்கும் போது எழுதுங்களேன்.
இந்த தீவு க்ரௌன் டிபெண்டென்ஸி ஆனதால் அதன் நாட்டுத்தலவர் இங்கிலாந்தின்
அரசர் / அரசி. அதற்கு அதன் கரன்ஸி இருக்கு. அது யூரபியன் யூனியன்
உறுப்பினர் இல்லை.
வகொவி
வகொவி
| நான் அங்கு சேர்ந்தவுடன் அதைத் தான் அவர்களிடம் சொன்னேன்! ”முழுக முடியாது எனக்கூறி நீங்கள் கட்டிய கப்பல் தனது கன்னி ஓட்டத்திலேயே முழுகிவிட்டது இதையாவது சரியாகக் கட்டுங்களேன்!” என்றேன்! ஆனாலும் சில சம்பவங்கள் நிகழத்தான் செய்தன. நரபலி போன்றவை!அவற்றை நான் கடலோடியில் பதித்துள்ளேன். விரும்பினால்
சொல்கிறேன் |
|
இதை என்னுடைய நாவலிலும் அப்படியே குறிப்பிட்டுள்ளேன்.
2011/12/13 Vijay Vanbakkam <vcv...@hotmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
| திவாகர், நீங்கள் சொல்வது அவ்வளவு சரியல்ல! ஜெர்மானியர்கள் சொன்னதெல்லாம் உண்மையல்ல! ஏனெனில் 1902 ல் நியூ காசில் அபான் டைன் என்ற இடத்தில் கட்டப்பட்ட ஆர். எம். எஸ் கார்பேதியா என்ற கப்பல் தான் டைடானிக் மூழ்கியபோது பலரைக் காப்பாற்றியது. எம்டனை மூழ்கடித்த எச். எம். என்
இசட் சிட்னி முதலில் எச். எம். எஸ். ஃபேடான் என்ற்றியப்பட்ட இங்ல்லாந்தில் கட்டப்பட்ட கப்பல் தான்! ஜெர்மானியர்கள் போர் காலத்தில் பொய்ப் பிரசாரம் பல செய்தனர். அதில் இதுவும் ஒன்று! நரசய்யா --- On Tue, 12/13/11, Dhivakar <venkdh...@gmail.com> wrote: |
| லண்டனில் விமானத்தில் நான் 30 மாலுமிகளின் தலைவனாக இற்ங்கியபோது ஒரு மாலுமி எங்களை வரவேற்க வந்திருந்தார். 30+1=31 என்பதை இந்திய கப்பல் தலைமையகம் 13 என்று தவறாஃபேக்ஸ் செய்திருந்தது. ஆகையால் எங்களை யூஸ்டன் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த வேன் டிரைவர் மறுத்து விட்டார். அழைக்க வண்ட்ர்ஹிருந்த மாலுமி சொன்ன் படி நான் அந்த
டிரைவரை 10 ஷில்லிங் வேலை செய்யுமா எனக் கேட்டேன். (அன்னா ஹசாரே பொறுத்தருள்க!) உடனே அந்த டிரைவரின் மறுப்பு பறந்து விட்டது. ஆனால் போலீஸ் பார்க்க நேர்கையில் எங்களில் சிலர் குனிந்து அமரவேண்டுமெனச் சொன்னார்! அந்தக் குளிரிலும் எனக்கு வியர்ர்க்கத்தான் செய்தது! (அப்போது 10 ஷில்லிங் நல்ல பணம் இப்போது 10 பவுண்டு கூட வேலசெய்யாது) அதே போல யூஸ்டன் ஸ்டேஷனில்
எங்கள்து சாமன்களுக்குசில பவுண்டுகள் கட்ட வேண்டுமென்று சொன போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனே அங்கிருந்த் may I help you என்று போர்ட் மாட்டிக்கொண்டு இருந்த ராணுவ அதிகாரியிடம் சென்றேன், அவர் இந்திய ராணுவத்தின்பருக்கு உதவ் முடியாதெனச் சொல்லிவிட்டார் தொடரும் |
ஆனாலும் சில சம்பவங்கள் நிகழத்தான் செய்தன. நரபலி போன்றவை!அவற்றை நான் கடலோடியில் பதித்துள்ளேன். விரும்பினால் சொல்கிறேன்
நரசய்யா
--- On Tue, 12/13/11, Vijay Vanbakkam <vcv...@hotmail.com> wrote:
From: Vijay Vanbakkam <vcv...@hotmail.com>
Subject: RE: [MinTamil] Re: அயர்லாந்தின் அழகில்... பகுதி 1
To: "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>
Received: Tuesday, December 13, 2011, 4:47 AM--நீங்கள் போன ஹார்லன்ட் அன்ட் வுல்ஃப் கப்பல் தொழிற்சாலைதான் , 1911ல் டைடேனிக்கை கட்டினர். கட்டும்போது டைடேனிக் "முழுகாதது" (unsinkable) என டாம்பீகமாக பீற்றினர். அதன் கன்னி பிரயாணத்தில் ஐஸ்பெர்கை மோதி 1500 பெயர்களுடன் கவிழ்நத்து.
வகொவி
Date: Tue, 13 Dec 2011 15:36:21 +0530
Subject: Re: [MinTamil] Re: அயர்லாந்தின் அழகில்... பகுதி 1
From: naras...@gmail.com
To: mint...@googlegroups.com
நான் டிசம்பர் 6, 1960 அன்று அப்போதே தொடங்கப்பட்ட போயிங்க் 707 விமானத்தில் எவரஸ்ட் என்ற பெயர் கொண்டது பம்பாயிலிருந்து கெய்ரோ ரோம் வழியாக லண்டன் அடைந்து, அங்கிருந்து யூஸ்டன் ஸ்டேஷனில் ரயிலேறி, லிவர்பூல் வரை சென்று ஃபெர்ரி மூலம் மறுநாள் குளிரில் பெல்ஃபாஸ்ட் சென்றடைந்தேன்! (நான் சென்றது தான் மூன்றாவது ஜெட் விமானம்; அதற்கு முன்னர் எல்லாம் சூபர் கான்ஸ்டலேஷன் விமானங்கள் -ஜெட் புரொபல்லர் - அதில் ஒன்றின் பெயர் ராணி ஆஃப் மதுரை!).இப்போதும் பசுமையாக நினைவுகள் உள்ளன!நரசய்யா
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஜெர்மானியர்கள் போர் காலத்தில் பொய்ப் பிரசாரம் பல செய்தனர். அதில் இதுவும் ஒன்று!
லண்டனில் விமானத்தில் நான் 30 மாலுமிகளின் தலைவனாக இற்ங்கியபோது ஒரு மாலுமி எங்களை வரவேற்க வந்திருந்தார். 30+1=31 என்பதை இந்திய கப்பல் தலைமையகம் 13 என்று தவறாஃபேக்ஸ் செய்திருந்தது.
ஆகையால் எங்களை யூஸ்டன் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த வேன் டிரைவர் மறுத்து விட்டார். அழைக்க வண்ட்ர்ஹிருந்த மாலுமி சொன்ன் படி நான் அந்த டிரைவரை 10 ஷில்லிங் வேலை செய்யுமா எனக் கேட்டேன். (அன்னா ஹசாரே பொறுத்தருள்க!) உடனே அந்த டிரைவரின் மறுப்பு பறந்து விட்டது. ஆனால் போலீஸ் பார்க்க நேர்கையில் எங்களில் சிலர் குனிந்து அமரவேண்டுமெனச் சொன்னார்! அந்தக் குளிரிலும் எனக்கு வியர்ர்க்கத்தான் செய்தது! (அப்போது 10 ஷில்லிங் நல்ல பணம் இப்போது 10 பவுண்டு கூட வேலசெய்யாது)





டப்ளினில் முதல் நாள்
| விக்ராந்த் முதல் முறையாக்க் கடல் பயிற்சிக்குச் சென்ற போது ஹார்லேண்ட் அண்ட் வுல்ஃப் கூடத்தின் ஒரு ஃபோர்மேன் Big Sam சொன்னார். “நான் இந்தக் கட்டும் பணியில் பல காலமாக உள்ளேன், டைடானிக் கட்டினபோது இருந்த சிலர் சொன்னது கூட உண்மை. நான் சகுனத்தில் நம்புவன். இவ்வளவு பெரிய கப்பல் முதல் தடவை
போகும் போது ஒரு நரபலியாவது கடல் வாங்கி விடும்” நாங்கள் ஐரிஷ் கடலில் பயிற்சிக்குச் சென்றோம். நான் விமான் தளத்தில் கமாண்டர் மேத்யூ வுடன் இருந்தேன். இவர் ஆங்கிலேயர். எங்கள் ப்யிற்சிக்காக வந்திருந்தார். இப்போது பின்னோக்கிச் செல்லவேண்டும். யூஸ்டன் ஸ்டேஷனில் சாமன்களை ஏற்ற கொடுக்க வேண்டிய பணம் எங்களிடம் இல்லை! ஆதலால் நான் லண்டன் ட்யூப் ட்ரெயினில் ஜெர்மைன் ஸ்ட்ரீட்டுக்கு (The Naval Attache office of teh Indian High Commission is located in Jermaine Street) ஓடினேன். அங்குதான் நேவல் அட்டாச்சி அலுவலகம் உள்ளது. ஒரே நாளில் லண்டனி ட்யூப் ட்ரெய்னில் செல்லும் தைரியம் எனக்கு வந்திருந்ததே ஒரு ஆச்சர்யம் தான்! எப்போதும் போல வெளி நாட்டில் இந்தியத் தூதரகத்தில் ஒருவித
உதவியும் கிடைக்கவில்லை. (வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்த விவரம் தெரியும்!) “ஏதோ நீங்களாகத்தான் சமாளித்துக் கொள்ள வேண்டும்” என்று சொன்ன அதிகாரி உடனே நழுவி விட்டார்! நான் ஸ்டேஷனுக்கு வந்தபோது எல்லாமாலுமிகளும் சிதறிப் போயிருந்தனர். ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டால் முடிந்து விடும் என்று எண்ணிய எனக்கு
உதவ் முன்வந்தது ஒரு மராத்திய இளைஞன். அவன் பெயர் இனாம்தார். அவன் ஒவ்வொருவராகச் சென்று பணம் சேர்த்தான். எப்படியோ சமாளித்து வேண்டிய பணம் சேர்ந்தவுடன் சாமான்களை ஃபெர்ரியில் ஏற்றியபோது அந்தக் குளிருலும் எனக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. இரண்டு கால்களும் வலிக்க ஒரு பெஞ்சில் அமர்ந்து விட்டேன். ஓடிச் சென்று ஒரு
காஃபி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து எனக்கு உதவியதும் அதே இளஞன் தான்! இப்போது ஐரிஷ் கடலுக்குச் செல்வோம்: அங்குதான் விக்ராந்த் தனது 40.000 குதிரைச் ச்க்தி எஞ்சின்களால் செலுத்தப்பட்டு பயிற்சியில் இருந்தது ஒரு கேனட் விமானம் தயாராகக் கேடபுல்ட்டின் மீது நின்றுகொண்டிருந்தது.
நான் ஃப்ளைட் டெக் சீஃபாக பணியேற்றுக் கொண்ட பின்னர் இனாம் தாரை எனது உதவியாளராக வைத்துக் கொண்டேன் கேனட்விமனம் கேடபுல்ட்டில் பொருத்தப்ப்ட்டது. இப்போதிருந்து அவ்விமானம் பறக்கும் வரை முழுப்பொறுப்பும் எனது. விமானிக்கு நான் சைகை கொடுத்த பின்னர் பைலட் தனது எஞ்சின்களை full thrust ல் வைத்தார், நாங்கள் விமனத்தின் பின்
புற்ம் இருக்க வேண்டியிருப்பதால், விமானத்தின் ஜெட் outlet டிலிருந்து தப்பியிருக்க முழங்கால்களில் குனிந்து அமர்ந்திருக்க வேண்டும் அப்போது தான் அந்த வெளியேறும் எரிவாயு எங்கள் தலைக்கு மேலே செல்லும். தலையைத் தூக்கினால் அந்த் வேகம் நம்மைத் தூக்கி எறிந்து விடும். முழு த் தலைக் கவசம். அதனுடனேயே பொருத்தப்பட்டுள்ள கேட்கும் உபகரணங்கள் ஒலி தடுக்கும் காதுறைகள்
இவற்றுடன் ஹெளடா எனப்படும் கண்ட்ரோல் கேபினில் உள்ள எனது மற்றொரு உதவியாளருக்கு நான் shoot order தந்தேன். நானும் இனாம்தாரை டெக் லெவலில் இருக்கப் பணித்து விட்டு விமானத்து நகர்தலைக் கவனித்துக் கொண்டிருந்தேன் ஏனெனில், 120 அடி தூரத்திற்குள் விமானம் சுமார் 100 மைல் வேகத்தை எட்ட வேண்டும்..இல்லையெனில் அது பறக்கும் வேகத்தையடையாது. இதுவும் எனது பொறுப்பு. சற்றும் எதிர்பாராத வண்ணம், விமானம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில், இனாம்தார் வியப்புடன் விமானம் செல்வதைப் பார்க்க வேண்டி சற்றே எழுந்து விட்டான், நான் அவனுக்குச் செய்த சைகை அவனால் பார்க்கமுடியுமுன்னரே விமனத்தின் வாயு வெளியேற்றத்தின் வேகம அவனை டெக்கின் மேல் இரு முறை ச்ம்மர் சால்ட்
அடிக்க வைத்து விட்டது. அப்படியே தூக்கி எறியாப்பட்ட இனாம்தார் கீழேயிருந்த Gun Sponson ல் தலையிலடிபட்டு விழுந்தான். விமானம் செலுத்தப்படுவதற்கு முன் தயாராக பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரின் மூலம் அவன் லண்டன் ப்ரெய்ன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டான். ஆனால் அங்கு சேருமுன்னரே அவனது ஆவி பிரிந்து விட்டது. (இதைக் கடலோடி நூலிலும் பதிவு செய்துள்ளேன்) இதுதான் நரபலியோ? மறுநாள் இரவு நாங்கள் இதைப்ப்ற்றி மிகவும் விவாதித்தோம். நரசய்யா --- On Fri, 12/16/11, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote: |
இனாம்தார் கீழேயிருந்த Gun Sponson ல் தலையிலடிபட்டு விழுந்தான். விமானம் செலுத்தப்படுவதற்கு முன் தயாராக பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரின் மூலம் அவன் லண்டன் ப்ரெய்ன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டான். ஆனால் அங்கு சேருமுன்னரே அவனது ஆவி பிரிந்து விட்டது.



டப்ளினில் முதல் நாள்ப்ராங்க்பெர்ட் விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய 2 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் டப்ளினை வந்தடைந்தோம். ஏர் லிங்குஸ் அயர்லாந்தின் விமான நிறுவனம். நாங்கள் பயணித்த விமானத்தில் பணி நிமித்தம் பயணிப்பவர்களும் குடும்பத்தினரைக் காணச் செல்பவர்களும் என ஏறக்குறைய விமானம் நிரம்பி இருந்தது.டப்ளினை வந்திறங்கியவுடன் எங்கள் பயண வழிகாட்டி நிச்சயமாகக் காத்திருப்பார் என்ற எண்ணம் மனதில் இருந்தது. பணம் மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்று உறுதியானவுடன் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தோம். நாங்கள் பதிவு செய்திருந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயர் பலகையை கையில் ஏந்திக் கொண்டு ஜொஅன்னா நின்று கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னரே எங்களுடன் பயணித்து வந்திருந்த 4 ஜோடிகள் அவர்கள் பயணப் பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தனர். நானும் என் கணவரும் தான் சற்று தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறோம். எங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் பெயரைக் கேட்டு பதிவு அட்டையை சரிபார்த்துக் கொண்டு எங்களை அழைத்துக் கொண்டு பேருந்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.





டப்ளின் நகர சாலைகளில்
இங்கிலீஷ் உணவு வகைகள் போலவே டோஸ்ட் ரொட்டி, முட்டை, சாசேஜ், தேனீர், காப்பி, பழங்கள் என அமைந்திருக்கும். சற்று அலுப்பைத் தரக்கூடிய ஒரு காலை உணவு. எனக்கு பிடிக்காத காலை உணவு வகை. பிடிக்கவில்லையென்றாலும் காப்பியும் ஜேம் தடவிய ரொட்டியும் சாப்பிட்டு நாங்கள் புறப்பட்டோம்.
தொடரும்..
அன்புடன்சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



டப்ளின் நகர சாலைகளில்அயர்லாந்தின் மிக முக்கிய நகரம், தலை நகரம், வர்த்தக நகரம் என்ற சிறப்புக்களோடு கலைத்துவமும் பரிமளிக்கும் ஒரு நகரம் டப்ளின். எங்கள் பயணத்தின் இரண்டாம் நாள் ஒரு நாள் முழுதும் இந்த நகரத்தை நாங்கள் சுற்றிப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பு அமைந்தது. காலையில் தங்கும் விடுதியிலேயே ஐரிஷ் வகை காலை உணவு. இதில் பிரத்தியேகமாக ஏதும் காணப்படவில்லை. லண்டனில் காலை உணவு சாப்பிட்டவர்களுக்கு இதற்கும் அயர்லாந்தில் தங்கும் விடுதிகளில் கிடைக்கும் உணவிற்கு வித்தியாசம் இல்லாமல் இருப்பதை உணரலாம். இங்கிலீஷ் உணவு வகைகள் போலவே டோஸ்ட் ரொட்டி, முட்டை, சாசேஜ், தேனீர், காப்பி, பழங்கள் என அமைந்திருக்கும். சற்று அலுப்பைத் தரக்கூடிய ஒரு காலை உணவு. எனக்கு பிடிக்காத காலை உணவு வகை. பிடிக்கவில்லையென்றாலும் காப்பியும் ஜேம் தடவிய ரொட்டியும் சாப்பிட்டு நாங்கள் புறப்பட்டோம்.டப்ளினில் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் எங்களுக்குள்ள நேரத்தில் பார்த்து முடிக்க முடியாது என்ற காரணத்தால் பகலில் சாலையில் நடந்து சென்று எந்த இடங்களைப் பார்த்து வரலாம் என திட்டமிட்டோம். எங்கள் பயண திட்டத்தில் மேலும் ஒரு நாள் இறுதியாக டப்ளினில் இருக்கும் வகையில் பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ஆக அவசரப் பட்டுக் கொண்டு செல்லாமல் நிதானமாக முக்கிய இடங்களைப் பார்த்து தகவல்கள் சேகரித்து வருவதோடு டப்ளின் சாலைகளில் நடந்து மக்களையும் சாலை காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்றும் ஆவல் இருந்தது. ஆக இரண்டு இடங்களை மட்டும் பார்ப்போம் என முடிவு செய்து கொண்டோம்.டப்ளினுக்கு சிறப்பு சேர்க்கும் சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களாக கீழ்க்கண்பவற்றை குறிப்பிடலாம்.
- ட்ரினிடி காலேஜ், நூலகம்
- கெல்ஸ் புத்தகம்
- டப்ளின் கோட்டை
- டப்ளின் துறைமுகம்
- ஃபீனிக்ஸ் பார்க்
- செயிண்ட் பேட்ரிக் கேத்தீட்ரல்
- க்ரிஸ்ட் சர்ச் கெத்தீட்ரல்
- டெம்பல் பார்
- கின்னஸ் ஸ்டோர்
- டப்ளின் மிருகக்காட்சி சாலை
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நானும் ஒபீலிக்ஸ் விசிறி. படங்கள் அபாரம். தத்ரூபம்.இ
2016-03-09 0:02 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
When I landed in Belfast on a cold December morning, in 1960, I checked into a hotel but found the charges were more than twice my daily allowance given by Government. Quickly moved into a house of Alexander family. The couple were my age group. The land lady (I was a paying guest and there we call it a dig) was in the beginning a bit racial but she needed money as she herself was a ph D scholar in Queen's University. She asked me if I can speak English! To teach her a lesson I wrote in large letters "A thing of Beauty is JOYCE for ever" since her name was Joyce. I quoted the revised version of John Keats from Endymion. She realised her mistake and she became quite close to me later (to such an extent that there was கிசு கிசு on board Vikrant about us. (Suba you can read my story மூச்சை நிறுத்திவிடு it is in the collection தீர்க்கரேகைகள் ) I have written a short story about this


7. கெல்ட் இனக்குழுவின் விரிந்த பயணம்
கெல்ட் இனக்குழுவினர் கடைபிடித்த சமய நெறி அவர்கள் தங்கள் சிந்தனைகளை எழுத்து வடிவில் எழுதி வைப்பதை தடை செய்திருந்தது. ஆயினும் கூட கெல்ட் மக்கள் உருவாக்கிய 500க்கும் மேற்பட்ட கி.மு.5 லிருந்து கி.மு 1 வரையிலானை எழுத்து ஆவணங்கள் பல கிடைத்திருக்கின்றன. ஆனால் இகெல்ட் இனக்குழுவினர் பொனீசியன், எட்ரஸ்கன், ரோமானிய, கிரேக்கம், போன்ற மக்களின் எழுத்துருக்களை தங்கள் சிந்தனைகளை வடித்து வைக்க பயன்படுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல. அக்காலத்தின் கெல்ட் இனக்குழுவைச் சார்ந்த அறிஞர்கள் லத்தீன் மொழியிலும், கிரேக்க மொழியிலும் தங்கள் இலக்கியத்தை எழுதி வைப்பதைக் கடைபிடித்தனர் என்பதும் மிகச் சுவாரசியமான ஒன்றாகவே அமைகின்றது. ஆயினும் கிறிஸ்துவ சமயம் பரவ ஆரம்பித்த காலத்தில் கெல்ட் மக்கள் தங்கள் மொழியை எழுத்து மொழியாக பதிவிட ஆரம்பித்தனர்.
கெல்ட் மக்களின் மற்றுமொரு சிறப்பு அம்சமாகத் திகழ்வது இந்த மக்கள் உருவாக்கிய புராணங்கள். எண்ணற்ற புராணங்கள், கதைகள் இறைவனைப் பற்றியும், இறைவியைப் பற்றியும், முனிவர்கள் பற்றியும், ஐம்பூதங்கள் பற்றியும் என புராணக்கதைகளுக்குப் பஞ்சமில்லாத நிலையைக் காண முடிகின்றது.மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றான சமஸ்கிருதத்திற்கும் கெல்ட் மொழிக்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறும் கருத்துக்களை ஒதுக்க முடியவில்லை. அவை மட்டுமன்றி கெல்ட் இனக்குழு மக்களின் புராணங்களும் அவற்றின் கதாமாந்தர்களும் அவற்றிற்கான பெயர்களும் இந்திய நிலப்பகுதியில் இருக்கும் சமஸ்கிருத புராணங்களையும் கதாமாந்தர்களின் பெயர்களுடனும் ஒத்திருப்பதைச் சில குறிப்புக்களில் காணமுடிகின்றது.
On Wednesday, March 9, 2016 at 3:42:33 PM UTC-8, Suba.T. wrote:7. கெல்ட் இனக்குழுவின் விரிந்த பயணம்கெல்ட் இனக்குழுவினர் கடைபிடித்த சமய நெறி அவர்கள் தங்கள் சிந்தனைகளை எழுத்து வடிவில் எழுதி வைப்பதை தடை செய்திருந்தது. ஆயினும் கூட கெல்ட் மக்கள் உருவாக்கிய 500க்கும் மேற்பட்ட கி.மு.5 லிருந்து கி.மு 1 வரையிலானை எழுத்து ஆவணங்கள் பல கிடைத்திருக்கின்றன. ஆனால் இகெல்ட் இனக்குழுவினர் பொனீசியன், எட்ரஸ்கன், ரோமானிய, கிரேக்கம், போன்ற மக்களின் எழுத்துருக்களை தங்கள் சிந்தனைகளை வடித்து வைக்க பயன்படுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல. அக்காலத்தின் கெல்ட் இனக்குழுவைச் சார்ந்த அறிஞர்கள் லத்தீன் மொழியிலும், கிரேக்க மொழியிலும் தங்கள் இலக்கியத்தை எழுதி வைப்பதைக் கடைபிடித்தனர் என்பதும் மிகச் சுவாரசியமான ஒன்றாகவே அமைகின்றது. ஆயினும் கிறிஸ்துவ சமயம் பரவ ஆரம்பித்த காலத்தில் கெல்ட் மக்கள் தங்கள் மொழியை எழுத்து மொழியாக பதிவிட ஆரம்பித்தனர்.கெல்ட் மக்களின் மற்றுமொரு சிறப்பு அம்சமாகத் திகழ்வது இந்த மக்கள் உருவாக்கிய புராணங்கள். எண்ணற்ற புராணங்கள், கதைகள் இறைவனைப் பற்றியும், இறைவியைப் பற்றியும், முனிவர்கள் பற்றியும், ஐம்பூதங்கள் பற்றியும் என புராணக்கதைகளுக்குப் பஞ்சமில்லாத நிலையைக் காண முடிகின்றது.மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றான சமஸ்கிருதத்திற்கும் கெல்ட் மொழிக்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறும் கருத்துக்களை ஒதுக்க முடியவில்லை. அவை மட்டுமன்றி கெல்ட் இனக்குழு மக்களின் புராணங்களும் அவற்றின் கதாமாந்தர்களும் அவற்றிற்கான பெயர்களும் இந்திய நிலப்பகுதியில் இருக்கும் சமஸ்கிருத புராணங்களையும் கதாமாந்தர்களின் பெயர்களுடனும் ஒத்திருப்பதைச் சில குறிப்புக்களில் காணமுடிகின்றது.ஏதோ தொடர்பு இருக்கும்தான் போலிருக்கிறது ...சமய நம்பிக்கை எழுதுவதைத் தவிர்த்தது ...பிறமொழி எழுத்துக்களை எடுத்து எழுத ஆரம்பித்தது....புராண நம்பிக்கை கதைகள் இன்னபிற....மரபணுவியல், மானுடவியல் ஆய்வாளர்கள் என்ன ஆய்வு செய்துள்ளார்கள் இவர்களது தோன்றல் பரவல்களைப் பற்றி....தொடருங்கள் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது.நான் இன்று கட்டுரை படித்தேன்... அதைத் தனி இழையில் பகிர்வேன் ......... தேமொழி

புதிய தகவல்கள் நிறையவே தெரிந்து கொண்டேன்!.. சுவாரஸ்யமாக இருக்கிறது..ரொம்ப ரொம்ப நன்றி சுபா!.
அயர்லாந்தைப் பற்றியும், கெல்ட் மரபுப் பழக்கவழக்க்காகளைப்படியும் விவரிப்பது மிகவும் புதிய அறிவைத தருகிறது. மிக்க நன்றி, சுபா அவர்களே!
--
--
































16. அயர்லாந்து உணவு வகைஅயர்லாந்தில் இருந்த முதல் மூன்று நாட்களும் எனக்கு ஏறக்குறைய உள்ளூர் உணவு பற்றிய சிறு அறிமுகம் ஆகியிருந்தது. அதில் நான் மிக சலித்துக் கொண்ட உணவு என்றால் அது காலை உணவு தான். எப்போதும் வெள்ளை ரொட்டித்துண்டுகள், அவற்றிற்கான பட்டர், ஜாம், அவித்த பீன்ஸ், அவித்து எண்ணெயிலோ நெய்யிலோ வாட்டிய உருளைக்கிழங்குகள்.. என்றே மூன்று நாட்களைக் கழித்திருந்தேன். அசைவப்பிரியர்களுக்குப் பன்றி இறைச்சியைப் பதப்படுத்தி சமைத்தும் வைத்திருந்தார்கள். இது இங்கிலாந்தின் காலை உணவேதான். அயர்லாந்திலும் இது ஒட்டிக் கொண்டு விட்டது போலும். முதல் நாள் சாப்பிடவே பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்கள் சலிப்பில்லாமல் ஏதோ கடமைக்குச் சாப்பிடுகின்றோம் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டேன். பிடிக்காத மனிதர்களைக் கூட சில வேளைகளில் சில காரணங்களுக்காக நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொள்கின்றோமே.. அப்படித்தான்!
17. ஈமச்சடங்கு கல்திட்டைகள்மானுடவியல் கூறுகளை ஆராய முற்படும் போது உலகமெங்கிலும் உள்ள மக்களிடையே பல்வேறு ஒற்றுமைக் கூறுகள் இருப்பதைக் கண்டறிய முடிவதோடு மக்கள் சிந்தனைகளிலும் பல விசயங்களில் ஒற்றுமை இருப்பதைக் காண்கின்றோம். அடிப்படையில் எங்கிருந்தால் என்ன? மனித இனம் என்பது, பௌதிக கோட்பாடுகளின் அடிப்படையில் ஹோமோ செப்பியன்கள் என்ற இனத்தினிலிருந்து கிளைத்தவர்கள் தானே.இப்படி பொதுக்கூறுகளை, அதிலும் பண்டைய மக்களின் வாழ்வியல் கூறுகளில் காணும் போது, குறிப்பாக ஒரு சில விசயங்களில் இருக்கின்ற ஒற்றுமைகள் என்பன, இவ்வகை ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்கு ஆச்சரியத்தை அளிக்கத்தவருவதில்லை, எனது பல பயணங்களிலும் சரி, அருங்காட்சியகத் தகவல் சேகரிப்புக்களிலும் சரி, மானுடவியல் சார்ந்த அருங்காட்சியகங்களில் பொதுவாக வாழ்விடங்கள் அமைத்தல், வாழ்வியலில் அடங்கும் பல்வேறு சடங்குகள், ஈமக்கிரியைச் சடங்குகள், விவசாயம், இறப்புக்குப் பின் மனித உடல் என்பன போன்ற விசயங்களில், பல ஒற்றுகள் பல இனங்களுக்கிடையே இருப்பதைக் கண்டிருக்கின்றேன். அப்படி ஒரு ஆச்சரியத்தை அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்திற்குச் சென்ற போது நேரில் பார்த்து வியந்தேன்.எங்களின் பயணத்தில் அடுத்ததாக அமைந்தது லிமெரிக் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கற்கால ஈமச்சடங்கு கல்திட்டைக்கான பயணம். போல்னப்ரோன் (Poulnabrone) என அழைக்கப்படும் இந்தச் சின்னம் அயர்லாந்தின் பாதுகாக்கப்படும் அறிய தொல்பொருள் சின்னங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.அயர்லாந்தின் மேற்குப் பகுதியில் பரவலாக இவ்வகையான ஈமச்சடங்கு கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 90 கல்திட்டைகள் அடையாளம் காணப்பட்டு தொல்பொருள் சின்னங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதே போன்ற கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவிலும் இருப்பதாகவும் இவை நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் என்றும் அங்கிருந்த தகவல் பலகையிலிருந்து அறிந்து கொண்டேன்.இவ்வகை கல்திட்டைகளின் வடிவங்கள் குறிப்பிட்ட வகையில் அமைக்கப்படிருக்கும். இரண்டு நிற்கும் தூண்கள். அதற்கு மேலே படுக்க வைத்தார்போன்ற அமைப்பில் கூரை போல ஒரு கல்திட்டை வைக்கப்பட்டிருக்கும். முன் பகுதியில் வாசல் போன்ற அமைப்புடன் இது காட்சியளிக்கும். இறந்தவரின் உடல் இதன் கீழ் புதைக்கப்பட்டு வைக்கப்படும். சமாதி போன்ற ஒரு அமைப்புத்தான் இது!இவ்வகையான சமாதிகளில் இறந்தவர் உடலை வைத்துப் புதைக்கும் போது அங்கே அவருக்குப் பிடித்த, அவர் பயன்படுத்திய, அவர் சென்றிருக்கும் புதிய உலகத்தில் அவர் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வைக்கப்படும் பொருட்கள் என அனைத்தும் சேர்த்து வைத்துப் புதைக்கப்படுவது இதன் அடிப்படை அம்சம். இதே ஈமச்சடங்கு கூறுகள் எகிப்து, சூடான், ஆப்பிரிக்கா, இந்தியா, ஐரோப்பா, என நமக்குக் கிடைக்கின்ற இவ்வகை ஈமச்சடங்கு சின்னங்களின் எச்சங்களின் வழி அறிய முடிகின்றது. ஏறக்குறைய எல்லா இனங்களிலுமே இவ்வகையான சமாதிகளுக்கு வந்து இறந்தோரை நினைத்து வழிபடுவது என்பதும் வழக்கத்தில் இருக்கின்றது என்பதும் வியப்பளிக்கும் செய்தியே.போல்னப்ரோன் கல்திட்டையை அயர்லாந்து அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச்சின்னமாக அறிவித்து இப்பகுதியை முழுமையாகப் பாதுக்காத்துள்ளது. இப்பகுதியில் கல்திட்டைகள் என்றால் என்ன, இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வு நிலை, நியோலித்திக் கால சூழல், இங்கு வந்து குடியேறிய மக்கள், ஈமச்சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் ஆகிய தகவல்கள் காட்சிபடுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.இது சுற்றுப்பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக இருப்பதால் இங்கே சில கடைகளும் இருக்கின்றன. அங்கே இரும்பு, வெள்ளி ஆகிய உலோகங்களில் காதணிகள், அலங்காரப்பொருட்கள் ஆகியன செய்யும் ஒரு பகுதிக்குசென்றேன். அங்கே கெல்ட் குறியீடு ஒன்றினை தேர்ந்தெடுத்து, அதில் இரும்பில் ஒரு காதணி செய்ய வைத்து வாங்கிக் கொண்டேன். ஏறக்குரைய 15 நிமிடத்தில் நான் தேர்ந்தெடுத்த வடிவத்தில் ஒரு ஜோடி அழகான காதணி ஒன்றை அந்த வியாபாரி எனக்கு செய்து கொடுத்தார்.இங்கு நான் கண்ட கல்திட்டைகள் போன்ற கற்காலச் சின்னங்களை நான் 2012ம் ஆண்டு தமிழகத்தின் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள மல்லச்சத்திரம் பகுதிக்குச் சென்றிருந்தபோது பார்த்தேன். அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்தில் நான் பார்த்த கல்திட்டை வடிவத்தை ஒத்த வகையிலேயே இங்கே மல்லச்சத்திரத்திலும் சிறு வேறுபாட்டுடன், ஆனால் அதே வடிவில் என, பல கல்திட்டைகள் இங்கே இருக்கின்றன. முன்பு 200க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் இங்கே மல்லச்சத்திரத்திரத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் தற்சமயம் ஏறக்குறைய 20 கல்திட்டைகளைத்தான் காணமுடிகின்றது. ஆயினும் கூட இப்பகுதி இன்னமும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அடையாளம் காணப்படவில்லை என்பதும், இங்கு வந்து போகும் பொதுமக்கள் இக்கல்திட்டைகளைச் சேதப்படுத்தியும் அவற்றின் கூரைகளைப் பெயர்த்துக் கொண்டுபோய தங்கள் வீடுகளில் ஏதாவது ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவது என்பது நிகழ்வது வேதனைக்குறியது.
இந்த செய்தி பார்க்கவும் சுபா...மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான கற்காலக் கல்வட்டங்கள் கண்டெடுப்புமேலும்
good narration Ms Suba
அன்புடன்சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.







