செட்டிநாட்டு உணவு வகைகள் பெயர்க்காரணம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>
காய்கறிகளை அவித்துச் சேர்ப்பதால் - அவியல்
பருப்புடன் காய்கறிகளைக் கூட்டி (கலந்து / சேர்மானம்) வைப்பதால் - கூட்டு
காய்களைத் துவட்டி வைப்பதால் (துவளச் செய்தல் ) {நன்றாக வேக வைக்காமல் துவட்டுவது} - துவட்டல்
காய்கள் தெரியாமல் தொக்கி நிற்பதால் - தொக்கு
காரம் கூட்டிக் குழைவாகக் காய்கறிகளைச் செய்வதால் - பச்சடி (பச்சன் என்பது வெள்ளாளனைக் குறிக்கும் சொல்; வெள்ளாளர் அடி ஒற்றி செய்யும் சமையல் { நகரத்தார் வெள்ளாளர்களை மணந்து வம்ச விருத்தி செய்தவர்கள் என்பதை நினைவு கூர்தலுக்காக என்பதாலும்} பச்சடி என்று வந்தது என்று கூறுவாரும் உளர்)
வாணலியில் இட்டு காய்களைப் புரட்டி வைப்பதால் - பிரட்டல்
எண்ணெயில் இட்டு பொரித்து வைப்பதால் - பொரியல்
காய்களை மண்டச் (மிகுத்தலால்) செய்வதால் - மண்டி
இலையை துவைத்து (இடித்து) வைப்பதால் - துவையல்
காய்களை உப்புப் போட்டு வறத்த (வெய்யிலில காயப்போட்டு சுருங்கச் செய்வது) வைப்பதால் வறத்தல்; வத்தல் என்று ஆனது
எண்ணெயில் இட்டு வறுத்து வைப்பதால் அது வறுத்தல்
எண்ணெயில் இட்டு வதக்கினால் வதக்கல்
சட்டியில் இட்டு காய்கறியை உருட்டிச் சேர்ப்பதால் திரட்டுவதால் திரட்டு அல்லது தெரட்டு
சிறு துண்டுகளாக நறுக்கி தெறக்கி செய்வதால் தெறக்கல். தெரக்கல். {தெரக்கல் என்றால் எண்ணெயில் வதக்குதல் என்று பொருள்}
வெஞ்ச அனம் அதாவது சூடான காய்கறி பதார்த்தம் என்பதால் வெஞ்சனம்
உப்பு காரம் போட்டு குழைத்து கஞ்சி போல் செய்வதால் குழம்பு
மசித்தலால் (நசிந்து குழைத்து விடுவதால்) மசிதல் அல்லது மசியல்
- முகநூல் பதிவு.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்