சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்?

629 views
Skip to first unread message

வி. சு.

unread,
Mar 5, 2010, 2:22:38 AM3/5/10
to மின்தமிழ்
On Feb 23, 10:09 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
...
> சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்?
...

இது நக்கீரனார் சொல்வது என்று நினைக்கிறேன். இவர் ஏன் இவ்வாறு
சொல்கிறார் ? சங்கரனுக்கு குலம் கிடையாதா ?

சிவ கோத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

N. Kannan

unread,
Mar 5, 2010, 3:02:42 AM3/5/10
to mint...@googlegroups.com
இறைவனுக்கு ஒருமுறை வருத்தம் வந்துவிட்டதாம், தனக்கொரு தாய் இல்லையே
என்று. அதனால் யசோதை/தேவகி வயிற்றில் பிறந்தானாம். ;-)

இறைவன் அநாதி இல்லையா? தோற்றம் அங்கிருந்துதான் தோன்றுகிறது. அதற்கு முன்
ஏதும் கிடையாது.

இதுவொரு புரிதல். இன்னும் சுவாரசியமாகச் சொல்லும் திறம் இம்மன்றத்திற்குண்டு!!

க.>

2010/3/5 வி. சு. <vijayakuma...@gmail.com>:

Ramesh

unread,
Mar 5, 2010, 3:20:08 AM3/5/10
to mint...@googlegroups.com
2010/3/5 வி. சு. <vijayakuma...@gmail.com>
On Feb 23, 10:09 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

...
> சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்?
...

இது நக்கீரனார் சொல்வது என்று நினைக்கிறேன். இவர் ஏன் இவ்வாறு
சொல்கிறார் ? சங்கரனுக்கு குலம் கிடையாதா ?

அது நக்கீரர் சொன்னதான்னு தெரியாது. ஆனா அது கண்டிப்பா அமரர். ஏ.பி.நாகராஜன் சொன்னது (வசனம்).


சிவ கோத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்

கோத்திரம் தெரியாதவர்களையும் சிவ கோத்திரம் என்று வகைப்படுத்துவதுண்டு, குறைந்தபட்சம் சில கோவில்களில்.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

வி. சு.

unread,
Mar 5, 2010, 4:14:50 AM3/5/10
to மின்தமிழ்

On Mar 5, 1:02 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/3/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>:

> >>சங்கரனுக்கு குலம் கிடையாதா ?
> இறைவனுக்கு ஒருமுறை வருத்தம் வந்துவிட்டதாம், தனக்கொரு தாய் இல்லையே
> என்று. அதனால் யசோதை/தேவகி வயிற்றில் பிறந்தானாம். ;-)
>
> இறைவன் அநாதி இல்லையா? தோற்றம் அங்கிருந்துதான் தோன்றுகிறது. அதற்கு முன்
> ஏதும் கிடையாது.
...

"சங்கரனார்க்கு ஏது குலம்" என்று நக்கீரனார் சொல்வதைக் கேட்டு இறைவன் ஏன்
கோபப்படவேண்டும் ?! இது ஒரு வகையான புகழ்ச்சி இல்லையா ?

Geetha Sambasivam

unread,
Mar 5, 2010, 4:24:54 AM3/5/10
to mint...@googlegroups.com
சிவ கோத்திரம் என்றொரு கோத்திரமே இல்லை. பொதுவாக ஈசன் அநாதியானவன் என்றும் எந்தக்குலத்தையோ அல்லது  கோத்திரத்தையுமே சாராதவன் என்ற பொருளிலும் கோத்திரமற்றவர்களை சிவ கோத்திரம் என்று சொல்லுவார்கள். மேலதிக விளக்கம் வேறு யாரேனும் தந்தாலும் நன்று.

2010/3/5 வி. சு. <vijayakuma...@gmail.com>

raman ramanujan

unread,
Mar 5, 2010, 4:30:28 AM3/5/10
to mint...@googlegroups.com
ரிஷிகளின் வழியாக கோத்திரம் சொல்வது வழக்கம்.அவ்வாறு கோத்திரம் தெரியாதவர்களை   சிவா கோத்திரம் என்று சொல்லுவார்கள்
 


2010/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

K R A Narasiah

unread,
Mar 5, 2010, 10:43:31 AM3/5/10
to mint...@googlegroups.com
ஆந்திராவில் கோத்திரம் தெரியாதவர்கள், சிவ, விஷ்ணு என்ற் இரண்டி கோத்திரங்களில் தங்களைக் கூறிக்கொள்வார்கள்


2010/3/5 raman ramanujan <ramanra...@yahoo.co.uk>

வினோத் ராஜன்

unread,
Mar 5, 2010, 10:51:13 AM3/5/10
to மின்தமிழ்
என் சித்தப்பாவுக்கு அப்பப்ப அவருடைய கோத்திரம் மறந்துவிடும்,
கோவில்களில் கோத்திரம் கேட்கும்போது சும்மா “விஷ்ணுகோத்திரம்” என்று
சொல்லுவார்.

கேட்டால், நாம் விஷ்ணுவை வணங்குபவர்கள் அப்ப விஷ்ணு கோத்திரம் தானே என்று
சொல்லுவார்.

இப்படியும் கூட சொல்லுவார்கள் என்று இப்போது தான் தெரிகிறது :-)

V

On Mar 5, 8:43 pm, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> ஆந்திராவில் கோத்திரம் தெரியாதவர்கள், சிவ, விஷ்ணு என்ற் இரண்டி கோத்திரங்களில்
> தங்களைக் கூறிக்கொள்வார்கள்
> ந
>

> 2010/3/5 raman ramanujan <ramanramanu...@yahoo.co.uk>


>
>
>
> > ரிஷிகளின் வழியாக கோத்திரம் சொல்வது வழக்கம்.அவ்வாறு கோத்திரம்
> > தெரியாதவர்களை   சிவா கோத்திரம் என்று சொல்லுவார்கள்
>

> > 2010/3/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
> > சிவ கோத்திரம் என்றொரு கோத்திரமே இல்லை. பொதுவாக ஈசன் அநாதியானவன் என்றும்
> >> எந்தக்குலத்தையோ அல்லது  கோத்திரத்தையுமே சாராதவன் என்ற பொருளிலும்
> >> கோத்திரமற்றவர்களை சிவ கோத்திரம் என்று சொல்லுவார்கள். மேலதிக விளக்கம் வேறு
> >> யாரேனும் தந்தாலும் நன்று.
>

> >> 2010/3/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>


>
> >>> On Feb 23, 10:09 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> >>> ...
> >>> > சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்?
> >>> ...
>
> >>> இது நக்கீரனார் சொல்வது என்று நினைக்கிறேன். இவர் ஏன் இவ்வாறு
> >>> சொல்கிறார் ? சங்கரனுக்கு குலம் கிடையாதா ?
>
> >>> சிவ கோத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> >  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

srirangammohanarangan v

unread,
Mar 5, 2010, 11:30:23 AM3/5/10
to mint...@googlegroups.com
கோத்ரம்   என்றால்   என்ன?  பிரவரம்   என்றால்  என்ன?  

 

OAGAI NATARAJAN

unread,
Mar 5, 2010, 12:51:08 PM3/5/10
to mint...@googlegroups.com


2010/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

சிவ கோத்திரம் என்றொரு கோத்திரமே இல்லை. பொதுவாக ஈசன் அநாதியானவன் என்றும் எந்தக்குலத்தையோ அல்லது  கோத்திரத்தையுமே சாராதவன் என்ற பொருளிலும் கோத்திரமற்றவர்களை சிவ கோத்திரம் என்று சொல்லுவார்கள். மேலதிக விளக்கம் வேறு யாரேனும் தந்தாலும் நன்று.

 
மேலதிக விளக்கம் என்னிடம் இல்லை. ஆனால் மேலதிகமாக ஒரு கதை விட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
 
ழான், பேச்சுத் தமிழைக் கொஞ்சம் சுவைத்துப் பாருங்கள்.
 
ஓகை நடராஜன்.
 
********************

படைப்பின் இலவசம்

சென்னை நகரில் ஒரு சின்ன வீட்டுக்குள்ளே நடந்த ஓர் உரையாடல்.

"மச்சான், மச்சான், கபாலி மச்சான்"

"இன்னாமே கப்பு, இன்னா கூவுற, ரோசனய கலைக்காதமே"

"இன்னா ரோசன மச்சான், அப்புடியே முங்கிகின. என்னாண்ட சொல்லு "

"பிர்ச்சனயே உன்னாலதாமே! நீ யாரு எத்த கேட்டாலும் குடுத்துகினே கீறியே, அதான் பிர்ச்சனையே!!"

"கேட்டா குடுத்துடு மச்சான்"

"இன்னா பேச்சு பேசுற நீ, பாத்தரம் பாத்து பிச்ச போட தாவலயா?"

"பிச்சைய பத்தி நீ பேசாத மச்சான், நீயே பிச்ச எட்த்து துன்ற ஆளுதான"

"இன்னா குத்திக் காமிக்கிறியா?"

"ஆமா, பத்து ஊட்டு சோறு துன்றதுக்கோசரம் பிச்ச எடுக்கிற நீ. அத்த வுடு, யாரு உன்னாண்ட இன்னா கேட்டாங்க?"

"அல்லாருக்கும் வவுறு நெறைய சோறு வோணுமாம், அல்லாருக்கும் கரீட்டா படி அளக்குனுமாம். அல்லாரையும் அப்பிடியே எரிச்சி பஸ்பமாக்குலாமான்னு தோனுது"

"நீ பொண்டாட்டின்னு கூட பாக்காம என்னையே உயிரோட எரிச்ச ஆளாச்சே, நீ செய்வய்யா, கவாலி!"

"அதான் பொழச்சி முழுசா வந்துட்டியே கப்பு! இன்னா கப்பு ஒன்னு சொல்லகுடாதுன்ற. இந்த கபாலிய காவாலின்னு கபால்னு சொல்றியே!!"

"இதுக்கெல்லாம் ஒன்னியும் கொர்ச்சல் இல்ல!"

"கப்பு உனுக்கு காண்டு ஆவாதேடி, - கற்பகமே,
தப்பு ஏது செஞ்சேன், கப்பு உனுக்கு.........."

"ஐயே, இன்னாதுய்யா அரத பழசு பாட்டு?"

"புச்சு வோணுமா? இந்தா கேளு,

'சிர்ச்சி சிர்ச்சி வந்த சின்ன கப்பு நீ
பிர்ச்சி பிர்ச்சி வச்ச பிச்சுப் பூவும் நீ.'..."

"டேய் கபாலி...."

"இன்னாடி புர்சனயே டேய்ன்ற?"

"இன்னாய்யா துப்புகெட்ட பாட்டு இது? யாரோ இன்னாவோ கேட்டாங்களே அத்த கவனிய்யா"

"என்னால எதையும் இலவசமா குடுக்க முடியாது"

"இன்னாது இலவசமா? எதுய்யா இலவசம்? நாம வழிய மட்டும் காமிச்சா போதும். சோறு கெடச்சிடும். அவுங்க கையில கீறத அவுங்கலாண்ட கொடுத்தா அது இலவசமா? சொல்ல போனா நீயே ஒரு இலவசம்".

"இன்னாது, இன்னாது, நான் இலவசமா?"

"நானும் தான் இலவசம். அந்த பெர்சு ஒரு கேள்வி கேட்டுச்சே இன்னிக்கி வரைக்கும் பதில் சொன்னியா அதுக்கு?"

"இன்னா பெர்சு, இன்னா கேள்வி."

"உன்ன எதுத்து கேள்வி கேட்டுச்சுன்னு உயிரோட எரிச்ச தமிழ் பெருசு, நக்கீரன்."

"கேள்வி இன்னா?"

"சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்? - எனாக்கவது ஒரு சாதி கீது உனக்கு இன்னாய்யா சாதின்னு கேட்டுகினார் பாரு"

"ஆமா நமக்கு சாதி இல்ல. அது சரி, நாம இலவசமா?"

"மனுசன் மனுசனுக்காக குடுத்துகிட்ட இலவசம் தான் நாம. இன்னா பிரியுதா?"

"மனுசனுங்களே தயார் பண்ணி மனுசங்களுக்கு குடுத்துகிற அரசாங்கங்கள் மாதிரி"

"அக்காங்! வைரமுத்து ஒரு கவிதையில ஏதிகினார் பார் -
'மனுசா நீ படா ஆளுப்பா. இறைவனையே படைச்சுகினியே'..."

ஒரு அசரீரி கேட்கிறது.

"ஐயனே, குலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட உன்னை ஏது குலம் என்று கேட்டேனே, என்னை மன்னிப்பாயா? - சொர்கத்திலிருந்து நக்கீரன்."

"சரி நக்கீரா, இந்தா இலவசமா ஒரு மன்னாப்பு!"

*********************
ஓகை நடராஜன் - 15-11-2006

*************************************************

மீண்டும் முதலிலிருந்து படித்தால் கதையில் கூடுதல் தெளிவு ஏற்படலாம்.

இப்பதிவின் சுட்டி: http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_15.html

 

 

Chandra sekaran

unread,
Mar 5, 2010, 8:34:11 PM3/5/10
to mint...@googlegroups.com

நடராஜனின் படைப்பு அருமை!

சந்திரா 

ananda rasa thiruma

unread,
Mar 5, 2010, 7:53:48 AM3/5/10
to mint...@googlegroups.com
சிவபெருமானுக்குச் சங்கரர் என்னும் பெயரும் உண்டு. சிவன் பிறவா யாக்கைப் பெரியோன் எனப் போற்றப்படுபவன். ஏனைய கடவுளர் எல்லாம் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களாகப் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் சிவனுக்கு அந்நிலை இல்லை. பிறப்புடையோர்க்கே குலம் உண்டு. அவன் பிறவா யாக்கைப் பெரியோன் ஆதலின் குலம் இல்லை.
‘சங்கறுப்ப தெங்கள் குலஞ்சங் கரர்க்கங் கேதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோ மினி‘
என்பது நக்கீரர் பாடியதாகச் சொல்லப்படும் பாடல்.
சிவன் சுடலைப் பொடி பூசிப் பிச்சாஞ்தேகியாகிக் கபாலத்தில் பிச்சை எடுத்து உண்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. எனவே நக்கீரர் பின்னிரண்டு அடிகளில் சிவனின் இரந்துண்டு வாழும் செயலைக் குறிப்பிட்டு நாங்கள் சங்கை அரிந்துண்டு வாழ்வோமே அன்றி உம்மைப் போல் இரந்துண்டு வாழ மாட்டோம் எனப் பாடியதாக இப்பாடல் அமைந்துள்ளது.
சிவன் நக்கீரரைச் சங்கை அரிந்துண்டு வாழும் நக்கீரன் எனப் பழித்ததால் இவ்வாறு அவர் கூறும்படியாயிற்று என இப்பாடல் தொடர்பு காட்டுகிறது.

ஆராதி

2010/3/5 raman ramanujan <ramanra...@yahoo.co.uk>

Subashini Tremmel

unread,
Mar 8, 2010, 3:41:21 PM3/8/10
to mint...@googlegroups.com
ரசித்து படித்தேன். இந்தச் சென்னை தமிழ் அலாதியான அழகுதான்.  ..:-)
-சுபா

2010/3/5 OAGAI NATARAJAN <enge...@gmail.com>
--

magesh nethu

unread,
Mar 9, 2010, 10:49:30 AM3/9/10
to mint...@googlegroups.com
.when ur come to chennai mam this is magesh .becos chenai is good
country in india mam

On 3/9/10, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
> ரசித்து படித்தேன். இந்தச் சென்னை தமிழ் அலாதியான அழகுதான். ..:-)
> -சுபா
>
> 2010/3/5 OAGAI NATARAJAN <enge...@gmail.com>
>
>>
>>
>> 2010/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>
>>> சிவ கோத்திரம் என்றொரு கோத்திரமே இல்லை. பொதுவாக ஈசன் அநாதியானவன் என்றும்
>>> எந்தக்குலத்தையோ அல்லது கோத்திரத்தையுமே சாராதவன் என்ற பொருளிலும்
>>> கோத்திரமற்றவர்களை சிவ கோத்திரம் என்று சொல்லுவார்கள். மேலதிக விளக்கம் வேறு
>>> யாரேனும் தந்தாலும் நன்று.
>>>
>>>
>> மேலதிக விளக்கம் என்னிடம் இல்லை. ஆனால் மேலதிகமாக ஒரு கதை விட்டிருக்கிறேன்.
>> படித்துப் பாருங்கள்.
>>
>> ழான், பேச்சுத் தமிழைக் கொஞ்சம் சுவைத்துப் பாருங்கள்.
>>
>> ஓகை நடராஜன்.
>>
>> ********************

>> *படைப்பின் இலவசம்*


>>
>> சென்னை நகரில் ஒரு சின்ன வீட்டுக்குள்ளே நடந்த ஓர் உரையாடல்.
>>
>> "மச்சான், மச்சான், கபாலி மச்சான்"
>>
>> "இன்னாமே கப்பு, இன்னா கூவுற, ரோசனய கலைக்காதமே"
>>
>> "இன்னா ரோசன மச்சான், அப்புடியே முங்கிகின. என்னாண்ட சொல்லு "
>>
>> "பிர்ச்சனயே உன்னாலதாமே! நீ யாரு எத்த கேட்டாலும் குடுத்துகினே கீறியே, அதான்
>> பிர்ச்சனையே!!"
>>
>> "கேட்டா குடுத்துடு மச்சான்"
>>
>> "இன்னா பேச்சு பேசுற நீ, பாத்தரம் பாத்து பிச்ச போட தாவலயா?"
>>
>> "பிச்சைய பத்தி நீ பேசாத மச்சான், நீயே பிச்ச எட்த்து துன்ற ஆளுதான"
>>
>> "இன்னா குத்திக் காமிக்கிறியா?"
>>
>> "ஆமா, பத்து ஊட்டு சோறு துன்றதுக்கோசரம் பிச்ச எடுக்கிற நீ. அத்த வுடு, யாரு
>> உன்னாண்ட இன்னா கேட்டாங்க?"
>>
>> "அல்லாருக்கும் வவுறு நெறைய சோறு வோணுமாம், அல்லாருக்கும் கரீட்டா படி
>> அளக்குனுமாம். அல்லாரையும் அப்பிடியே எரிச்சி பஸ்பமாக்குலாமான்னு தோனுது"
>>
>> "நீ பொண்டாட்டின்னு கூட பாக்காம என்னையே உயிரோட எரிச்ச ஆளாச்சே, நீ
>> செய்வய்யா,
>> கவாலி!"
>>
>> "அதான் பொழச்சி முழுசா வந்துட்டியே கப்பு! இன்னா கப்பு ஒன்னு சொல்லகுடாதுன்ற.
>> இந்த கபாலிய காவாலின்னு கபால்னு சொல்றியே!!"
>>
>> "இதுக்கெல்லாம் ஒன்னியும் கொர்ச்சல் இல்ல!"
>>

>> *"கப்பு உனுக்கு காண்டு ஆவாதேடி, - கற்பகமே,


>> தப்பு ஏது செஞ்சேன், கப்பு உனுக்கு.........."

>> *


>> "ஐயே, இன்னாதுய்யா அரத பழசு பாட்டு?"
>>
>> "புச்சு வோணுமா? இந்தா கேளு,
>>

>> *'சிர்ச்சி சிர்ச்சி வந்த சின்ன கப்பு நீ


>> பிர்ச்சி பிர்ச்சி வச்ச பிச்சுப் பூவும் நீ.'..."

>> *

OAGAI NATARAJAN

unread,
Mar 9, 2010, 1:14:38 PM3/9/10
to mint...@googlegroups.com
நன்றி, சுபாஷினி டிரெம்மெல் அவர்களே!
 
ஒரு குறிப்பு: மயிலை கபாலீஸ்வரர் கோயில் இறைவியான ஸ்ரீகற்பகாம்பாளை பாமாரரின் பேச்சுத் தமிழில் கப்பு என்று அழைப்பார்கள். இதைப் பலர் அறிந்திருப்பதில்லை. 
 
-ஓகை நடராஜன்.
2010/3/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages