இந்தத் தொடர் ஏற்கெனவே இரண்டு வருடங்கள் முன்னர் என் வலைப்பக்கத்தில் வந்தது தான். அங்கே படித்த அன்பர்கள் மீண்டும் இங்கேயும் படிக்க நேரிடுவதற்கு முதலில் மன்னிப்பைக் கோருகிறேன். சுபாஷிணி அவர்கள் இந்தத் தொடரைப் படித்துவிட்டு மின் தமிழிலும் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார். ஆகவே இங்கேயும் மீண்டும் போடுகிறேன். மீண்டும் புதிதாகச் சிதம்பரம் குறித்த மேல் அதிகத் தகவல்கள் மீண்டும் கிடைத்தாலும் அவ்வப்போது இணைக்க எண்ணம். முதலில் தொடர் எழுதப்பெருமளவு உதவியவர்களுக்கு நன்றி.
***************************************************************************************************************************
இந்தத்
தொடரை எழுத எனக்குப் பெருமளவு துணையாக இருந்து அவ்வப்போது வேண்டிய தகவல்களையும், சிதம்பரம்
பற்றிய நினைவுகளையும், கோயில் பற்றிய தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட என் கணவருக்குத்
தான் இது சொந்தம். மற்றும் எனக்கு வேண்டிய தகவல்களை நான் தேடி எடுத்துக் கொள்ள முக்கிய
காரணமாய் இருந்த எங்கள் குருவும் சிதம்பரம் கோயிலின் தீட்சிதரும் ஆன திரு ராமலிங்க
தீட்சிதர் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்துக் கொண்டு இந்த எழுத்தை
அவருக்கே காணிக்கை ஆக்குகின்றேன்.
துணைப் புத்தகங்கள்: A Study of Chidambaram and its Shrine, by T.Ramalinga
Dikshithar M.A.Litt.,
Swamy Sivananda's Website: www.sivananda.org
Yoga details taken from : B.K.S. Iyengar's Books and சுந்தர
யோக சிகிச்சை, யோசார்யா சுந்தரம், பெங்களூர்.
சிதம்பர வைபவச் சுருக்கம்: நடராஜ ரத்ன தீட்சிதர், ஸோமஸேது தீட்சிதர், T.ராமலிங்க தீட்சிதர்.(புத்தகம்
வெளிவந்த வருஷம் தெரியலை, மிகப் பழைய புத்தகம்,)
வைதிக சம்வர்த்தனி: ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மாவால் போடப் பட்டது. அதிலே உள்ள சிதம்பர புராணம்
ஸோமஸேது தீட்சிதரால் எழுதப் பட்டது.
தில்லைக் கோயில் வரலாறு: கலைமாமணி, பேராசிரியர் அமரர் திரு க.வெள்ளைவாரணனார், தில்லைத்
தமிழ் மன்றம் வெளியீடு.
தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலின் பழமையும் திருச்சித்திரகூட அமைப்பும்: ஆக்கியோர்
தமிழ்ப்பெரும்புலவர், சித்தாந்தப் பேராசிரியர் திருவாளர் சபா. சிவப்ரகாசம் பிள்ளை அவர்கள்,
தில்லை. வெளியிட்டோர் தில்லைத் திருமுறைக் கழத்தோர்.
திருச்சிற்றம்பலமும், திருச்சித்ரகூடமும்: டாக்டர் ந. ராமசுப்ரமணியன், சட்ட நிர்வாக
ஆலோசகர், பிருந்தாவன் அவென்யு, சென்னை -45.
இவற்றைத் தவிர, திரு சிவசிவா என்னும் திரு வி.சுப்ரமணியன் அவர்கள் பலவிதத் தகவல்களையும்,
முக்கியமாய் பேராசிரியரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான திரு நாகசாமியின் சில குறிப்புகளைக்
கொடுத்து உதவினார்கள். திரு ஆகிராவும் ஒரு சில சுட்டிகள் கொடுத்து உதவினார். திரு திவா
தி.வாசுதேவன் அவர்கள் சிதம்பரம் பற்றிய இரு புத்தகங்கள் கொடுத்து உதவினார். சரித்திரத்
தகவல்களும் அவ்வப்போது நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து பார்க்கப் பட்டது.
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ராமலிங்க தீட்சிதரின் மகன் தங்க தீட்சிதர், தெற்குத்
தெரு நடராஜ தீட்சிதர் ஆகியோரை நேரில் சந்தித்தும் , நெய்வேலி நடராஜ ஸ்வாமி தீட்சிதர்,
தொலைபேசி உரையாடல் மூலமும், ராஜா தீட்சிதர் அவர்கள் எழுதிய திருவாதிரை பற்றிய குறிப்புகள்
அனைத்தின் உதவியாலுமே இதை எழுத முடிந்தது. அனைவருக்கும் நன்றி சொல்லி வணங்குகின்றேன்.
****************************************************************************************************************************
சிதம்பர ரகசியம் -முன்னுரை
ரொம்ப நாளாச் சிதம்பரம் பத்தி எழுதணும்னு ஆசை. நீண்ட தொடராகவே எழுத முடியும் ஆகவே இதிலேயே தொடர்ந்து எழுதணும்னு இருக்கேன். அநுபவம் இல்லாத என் எழுத்தில் குறைகள் நிறைய இருக்கும். குறைகள் கண்ட இடத்தில் சுட்டிக்காட்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். பொதுவாகச் சைவர்களுக்குக் "கோயில்" என்றாலே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும். சிதம்பரம் கோயில் காலத்தால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத அளவுக்குப் பழமை வாய்ந்த ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்போது இங்கே நடராஜரே பிரதானம். ஆனால் இங்கே நடராஜர் வருவதற்கு முன்னாலே சிவலிங்க ஸ்வரூபம் தான் இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் தான் நடராஜ ஸ்வரூபம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தில்லை வாழ் அந்தணர்களும் நடராஜரை வழிபடுவதற்காகவே அவரோடு வந்தார்கள். முதன் முதல் இந்த ஸ்தலம் தில்லை வனமாக இருந்தது. ஆகவே இன்றும் இதற்குத் தில்லை என்ற பெயரும் உண்டு. மருத்துவ குணம் நிரம்பிய தில்லை மரத்திற்குப் பல அபூர்வமான விசேஷங்கள் உண்டு. அவை எல்லாவற்றையும் ஓரளவு தருவதற்கும், தில்லை பற்றிய முக்கியமான விவரங்கள் தருவதற்கும் இந்தப் பதிவு. முக்கியமாகத் தில்லை நடராஜரின் தாண்டவக் கோல அர்த்தங்கள், கோயிலின் வழிபாட்டு முறை, தில்லை வாழ் அந்தணர்களின் வரலாறு, நடராஜர் முகமதியர் படையெடுப்பின் போது கேரளாவில் போய் இருந்த வரலாறு என்று பல புதிய தகவல்கள் இடம் பெறும். கொஞ்சம் ஹோம் வொர்க் செய்ய கொண்டே எழுதி உள்ளேன். தவறுகளை மன்னித்துப் பொறுத்து இருந்து படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
******************************************************************************************************************************************************
சிதம்பர ரகசியம் -தல புராணம்
சிதம்பரத்துக்குப்
பலமுறைகள் போயிருக்கிறேன். "சிதம்பர ரகசியம்" என்று சொல்லப்படும் தரிசனமும்
பலமுறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா?
அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று
பின்னிப் பிணைந்தது இரண்டும்.
இந்தியக் கோயில்களைப் பற்றிப் பார்த்தோமானால் நம்ம பண்பாட்டோடு, கலாசாரமும் கோவில்களைச்
சுற்றியே வளர்ந்திருப்பதைக் காணலாம். புராணக் கதைகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள்
வாயிலாகவும் அறிகிறோம். அப்படிச் சிதம்பரம்
கோயிலைப் பற்றி அறிய வேண்டுமானால் வேத காலத்தில் உபநிஷதங்கள் மூலம் அறிய முடியும்.
அவை யாவன: "சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால தரிசனம், வராஹ
இன்னும் சிலவற்றின் மூலம் அறிய முடிகிறது.
புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம்
மூலமும் உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும்
ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம்,
வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.
தற்காலங்களில் நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம்,
மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும்
அறியலாம். இவ்வளவு தொன்மையான ஒரு ஊரைப் பற்றியும் அதன் கோயிலின் மகத்துவத்தைப் பற்றியும்
ஓரளவுக்குத் தான் என்னால் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். மேற்கண்ட புராணங்களையோ, உபநிஷத்துக்களையோ
நான் அதிகமாய்ப் படித்து அறிந்து கொள்ளவில்லை. என்னோட அறிவுக்கு அவ்வளவு சீக்கிரமா
எல்லாம் முடியாது. மற்றபடி ஓரளவுக்கு நான் படித்தும், கேட்டும், சொல்லியும் அறிந்த
தகவல்கள் இடம்பெறும்.
முதன்முதல் சிதம்பரம் பற்றியக் குறிப்புக்கள் இடம் பெற்றது "சிதம்பர மகாத்மியம்"
என்னும் புத்தகத்தில். கையெழுத்துப் பிரதியாக இருந்த இந்தப் புத்தகத்தில் தான் முதலில்
சிதம்பரம் பற்றியும், அதன் கோவில் பற்றியும் குறிப்புக்கள் காணப் படுகின்றன. வேத வியாசரால்
எழுதப் பட்ட "ஸ்கந்த மஹாபுராணத்தில்" உள்ள "சனத்குமார சம்ஹிதை"
யை ஒட்டி எழுதப் பட்ட இந்தப் புத்தகம் 26 அத்தியாயங்களைக் கொண்டது. மூத்த தலபுராணம்
என்று குறிக்கப் படும் இதன் கையெழுத்துப் பிரதியையும் அதன் குறிப்புக்களையும் பற்றி
Mackenzie Collections-A study of Chidambaram சொல்லுவது என்னவென்றால்:
இது வியாக்ரபாதர் ஆசிரமமாக இருந்தது. ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரின் யோகாசிரமமாகவும்,
அவர் கற்பித்துக் கொண்டிருந்த இடமாயும் இருந்தது. மற்றும் மாணிக்கவாசகர் முக்தி பெற்ற
ஸ்தலம் என்னும் குறிப்பும் உள்ளது."மற்ற தலபுராணங்களில் எழுதியுள்ளவை அடுத்து வரும்
புண்டரீகபுர
மஹாத்மியம்:
தில்லையைப்பற்றிப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் சொல்லுவது:
12 அத்தியாயங்கள் உள்ள இது இரு பாகங்களைக் கொண்டது. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம்.
பூர்வ பாகம் 9 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முழுதும் கிரந்த எழுத்துக்களால் ஆன பதிப்பு.
3 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பாகம் "ரகஸ்ய அத்தியாயம்" என்றும்,
"பாரத்வாஜ சம்ஹிதை" என்றும் சொல்லப் படுகிறது. இது கையால் எழுதப் பட்டுள்ளது.
இதன் முக்கியமான பகுதிகளில், "யந்திர லட்சணம்" "சபா லட்சணம்",
"மந்திரபுர சாரம்" பற்றிய வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளது. "சிவ மஹா புராண"த்தில்
உள்ள "ஏகாதச ருத்ர சம்ஹிதை"யை ஒட்டி உள்ள இந்தப் புண்டரீகபுர மஹாத்மியத்தில்
உள்ள ஒரு அத்தியாயம் முழுதும் இந்த க்ஷேத்திரத்தில் உள்ளப் பத்து முக்கிய தீர்த்தங்களைப்
பற்றியது.
திலவன மஹாத்மியம்:
ஸ்கந்த புராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்ட இது 8 அத்தியாயங்களைக்
கொண்டது. இதில் பெரும்பாலும் "சிதம்பர ரகஸ்யம்" பற்றியும், அதன் குறிப்புக்கள்
பற்றியும், சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள் பற்றியும் கூறுகிறது.
வ்யாக்ரபுர மகாத்மியம்:
இதுவும் ஸ்கந்த புராணத்தில் இருந்து வந்தது. ஆனால் சூத சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்டது.
19 அத்தியாயங்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் எல்லாம் வல்ல அந்த ஆடவல்லானுக்கும்,
அவனுடைய தேவி காளியாய் வந்து போட்டிக்கு அழைத்ததையும், காளியை அவன் வென்றதையும் குறிப்பிடுவதோடு
அல்லாமல், ஆடவல்லானின் முக்கியமான ஒன்பது வித ஆடல் தோற்றங்களைப் பற்றியும் விவரிக்கிறது
இன்னும்
நிறையப் புத்தகங்கள் இருக்கு சிதம்பரத்தைப் பத்தி. அவை யாவன:ஹேம சபாநாத மஹாத்மியம்:
இதிலே தான் முதன் முதல் "நந்தனாரை" பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. திருநீலகண்டரைப்
பத்தியும் இதிலே தான் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆகையால் இது பின்னாளில் வந்தது எனக்
கொள்ளலாம். "நடேச விஜயம்" வெங்கடேஸ்வர தீட்சிதரால் எழுதப் பட்டது. இவர் மராட்டிய
அரசரான ஷாஜி-2 ஆட்சியின் போது அவரால் ஆதரிக்கப் பட்டவர். இவரைத் தவிர ராமபத்ர தீட்சிதரால்
எழுதப் பட்ட பதஞ்சலி சரித்திரமும் ஷாஜி-2 ஆட்சியின் போது எழுதப்பட்டது. வ்யாசகாலர்
என்பவர் எழுதிய "சங்கரவிஜயம்" என்னும் நூலும், ஆதிசங்கரரும் அவருடைய முதன்மைச்
சீடரான பத்மபாதரும் சிதம்பரம் வந்தது பற்றியும், நடராஜத் திருமேனியின் ரகசியம் பற்றித்
தெரிந்து கொண்டது பற்றியும் எழுதி இருக்கிறார். இன்னும் நீலகண்ட தீட்சிதர் எழுதிய சிவலீலார்ணவத்திலும்
, அனந்தாச்சாரியா எழுதிய "ப்ரபன்ன மந்திரத்திலும்" சிதம்பரம் பற்றிக் குறிப்புக்கள்
இருக்கின்றன. பிரபன்ன மந்திரத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் நடராஜர் சன்னதிக்கு அருகேயே
இருக்கும் கோவிந்த ராஜரைப் பற்றியும் அவர் எவ்வாறு அங்கே வந்தார் என்பது பற்றியும்
இருக்கின்றன.
கங்கா தேவி எழுதிய "மதுரை விஜயத்தில்" சிதம்பரம் கோவில் மாலிக்காஃபூர் படை
எடுப்பின் போது சேதமடைந்ததையும், நடராஜர் காப்பாற்றி வைக்கப் பட்டது பற்றியும் குறிப்புக்கள்
கிடைக்கின்றன. இதைத் தவிர கிருஷ்ணதேவராயர் காலத்தில் சிதம்பரம் கோவில் செப்பனிடப் பட்டது
பற்றியும் அறிய முடிகிறது. இது போல் இன்னும் நிறையக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. கோவிலுக்கு
உள்ளேயே சில கல்வெட்டுக்களும் கிடைக்கின்றன. தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி
சிவாச்சாரியார் என்பவர் தில்லை வாழ் மூவாயிரவர் பற்றியும் கோவில் நடைமுறைகள், வழிபாடு
முறைகள் பற்றியும் எழுதி உள்ளார்.
நடேஸ ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது அந்தத் தில்லை வாழ் நடேசனும், சிவகாமசுந்தரியும்
பேசிக்கொள்ளுவது போல் அமைந்தது. இது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளான சிவபெருமான் மஹாவிஷ்ணுவுக்குச்
சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகளையும், பழக்கங்களையும் கூறியது போல் அமைந்தது. இதைத்
தவிர,"பூஜா பதஞ்சலம்" என்னும் நூலில் பதஞ்சலி முனிவர் பற்றியும் சிதம்பரம்
தீட்சிதர்கள் பற்றியும் ஆதாரபூர்வமான குறிப்புக்கள் இருக்கின்றன. சாதாரணமாக சிவன் கோவில்களில்
வழிபாட்டு முறைகள் சைவ ஆகமத்தை ஒட்டியே பின்பற்றப் படும். ஆனால் சிதம்பரம் கோவில் வழிபாட்டு
முறைகள் "வைதீக" முறையைச் சேர்ந்தது. அது தில்லை வாழ் அந்தணர் மட்டுமே அறிந்த
ஒன்று எனவும் அவர்களுக்கு சிவனே நேரிடையாக அந்த உரிமையைக் கொடுத்திருப்பது பற்றியும்
பின் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இனி, கோவிலைப் பற்றியும், அதன் அமைப்பைப்
பற்றியும், பரிவார தேவதைகள் பற்றியும் சிறுகுறிப்புக்கள் தரப் போகிறேன். "ரகசியம்"
கேட்பவர்கள் சற்றே பொறுக்கவும்.
Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தென்னாற்காடு மாவட்டத்தில், கடலூருக்குத் தென்மேற்கே உள்ள சிதம்பரத்தின் எல்லைகளாய் வடக்கே வெள்ளாறும், கிழக்கே வங்கக் கடலும், தெற்கே கொள்ளிடமும், மேற்கே வீராணம் ஏரியும் அமைந்துள்ளது. -ஆன்மீகத் தத்துவங்களின் படிச் சிதம்பரம் பற்றிக் குறித்திருப்பது என்னவென்றால்:
"இந்த பூமியும், மனித உடலும் சமமாக ரிஷி முனிவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மனித உடம்பில் உள்ள "இட" நாடியைப் போன்றது இந்தப் பூவுலகில் உள்ள ஸ்ரீலங்காப்
பிரதேசம். "பிங்கள" நாடி என்று இமயமலைப் பிராந்தியத்தைச் சொல்வதுண்டு. மனித
உடலில் "இட" நாடிக்கும் "பிங்கள" நாடிக்கும் நடுவில் "சுக்ஷ்ம"
நாடி உள்ளதைப் போல் இந்தப் பூவுலகிற்குச் சிதம்பரம் அமைந்துள்ளது." இது ஆன்மீகப்
பெரியார் வாக்கு.
சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ளது நடராஜர் கோயில். இந்தக் கோவிலின் பூர்வீகம் எவ்வளவு
பழமை வாய்ந்தது என்று சொல்ல முடியாது. உபநிஷதங்களிலேயும், புராணங்களிலேயும் ஸ்தல மஹாத்மியங்களிலும்
குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் கோவில் தோன்றியது எப்படின்னே சொல்ல முடியாது. இதுவும்
தவிர, மற்றச் சிவன் கோவில்களில் பூஜை வழிபாட்டு முறைகள் "சைவ ஆகமம்" முறைப்படித்
தான் நடக்கும். ஆனால் சிதம்பரம் கோவிலில் தினசரி வழிபாடு வைதீக முறைப்படி சிதம்பரம்
கோவிலுக்கு உரிமையாளர்களான தீட்சிதர்களால் நடை பெறுகிறது. இதுவும் எப்போது ஆரம்பித்தது
எனச் சொல்லமுடியாது.
"ஆகம வழிபாடு" என்பது பின்னாட்களில் வந்தது. கி.பி.யில் வந்தது என்று சொல்கிறார்கள்.
ஆனால் இந்த வைதீக வழிபாடு அதற்கும் முன்னேயே தோன்றியது. சிதம்பரம் தீட்சிதர்கள் ஸ்ரீநடராஜராலேயே
நேரடியாக அவருடைய வழிபாட்டிற்காகக் கொண்டு வரப் பட்டவர்கள் என்றும், கோவில் வழிபாட்டு
முறைப் "பதஞ்சலி முனிவர்" ஏற்படுத்திக் கொடுத்த முறைப்படி நடக்கிறது என்றும்
சொல்கிறார்கள். Tamilian Antiquary, Vol.1 and "The Cholas" Prof.
K.A.Nilakanda Sastri, இருவரும் எழுதியுள்ள சரித்திர ஆதாரங்களின் படியும், கோவிலின்
உள்ளே கிடைத்துள்ள சில கல்வெட்டுக்களில் இருந்தும், கோவிலின் பழமையில் இருந்தும் இது
எந்தக் காலத்தில் ஏற்பட்டது எனச் சொல்ல முடியவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
பலரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இப்போ பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சேஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் "பதஞ்சலி" என்று ஆனதாய் ஒரு கூற்று. இவரின் அவதார காரணம் குறித்துச் சொல்லப் படுவது யாதெனில்: பாற்கடலில் ஆதிசேஷனின் மேல் சயனித்துக்கொண்டிருந்த விஷ்ணுவின் திடீர் கனம் தாங்க முடியாமல் தவித்தான் ஆதிசேஷன். ஆனால் விஷ்ணுவோ புன்னகை புரிந்து கொண்டிருந்தார். தன் மனதுள்ளே தன் மூச்சுக்காற்று உள்ளே செல்கையிலும், வெளியே வருகையிலும் நடைபெற்ற சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று.
குண்டலினி
யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது ஆதிசேஷன் எனச் சொன்னாலும் உண்மையில் அதுவே குண்டலினி என்பாரும் உண்டு. மூன்றரைச் சுற்று இருக்கும் அது. நம் உடலில் உள்ள குண்டலினியும் அப்படித் தான் கணக்கு. அந்தக்குண்டலினியை அடக்கியே மஹாவிஷ்ணு அதன் மேல் யோக நித்திரை கொண்டிருக்கிறார் என்பார்கள். இது சின்ன வயசில் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தது. பெரிய விஷயம். ஆகவே நாம் இப்போது மேற்கொண்டு பார்ப்போம். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும்
மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில்
சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும்
மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில்
ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். சஹஸ்ராரத்தை அடைந்தார். அவர்
வேண்டியது கிடைத்ததும் பிறந்தது "போகர் 7,000". அதில் பதஞ்சலி பற்றிக் குறிப்புக்கள்
கிடைக்கின்றன.
நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பாஷ்யம்
எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள்
இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பிறக்கையிலேயே தன் ஆதிசேஷன் உரு மறவாமல்
இருக்கவோ என்னவோ, பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப்
பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான
வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம்
தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக்
கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது
எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.
மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது
ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே
செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின்
மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி
அவன் மூலம் வந்தது தான் அவருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும்
சொல்கிறார்கள். என்றாலும் வியாக்கிரபாதர் ஆசிரமமே
காலத்தால் மூத்தது என்று சிலர் கூற்று.
--
தில்லை மரங்கள் mangroove எனப்படும் சதுப்பு நிலக் காடுகள் வகையை சேர்ந்த மரம்.தாவர இயல் பெயர் excoecaria agallocha .தற்போது சிதம்பரத்தின் கிழக்கே பிச்சாவரத்தில் உள்ள சதுப்பு நிலக்காடுகளில் இந்த மரம் அதிக அளவில் காணப்படுகிறது.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலானது தற்போதைய அண்ணாமலை நகர் வரை பரவி இருந்ததற்கான புவியியல் ஆதாரங்கள் உள்ளன.அப்போது சிதம்பரம் பகுதியில் தில்லை மரக் காடுகள் மிக அதிக அளவில் இருந்து அதனாலேயே இப்பகுதி "தில்லை" என பெயர் வந்திருக்க வேண்டும்.
> --
sitrambalam- original name. sithambaram - maruvppeyar. perambalam and
sitrambalam are there at thillai.

--
வணக்கம் அம்மாகீழ்க் கண்ட தளத்தில் உள்ள செய்தியைப் பாருங்கள். நான் தில்லைக்குச் சென்று தீட்சிதர்களை விசாரித்த போது அவர்கள் சொன்ன விஷயம் தான் "ஊர்த்வ தாண்டவத்தால் காளியை வென்றார் என்ற செய்தி" தீர விசாரிக்க வேண்டியவைகளை இணையத்தில் நேரடியாகப் போடக் கூடாது என்ற எண்ணம் கொண்டதனால் தான் தங்களுக்குத் தனி மடலில் வரைந்தேன்,ஆலங்காட்டு காளிகாளிக்குரிய ஆலங்காட்டில் தாரகன் என்னும் அசுரனை வென்ற ஆணவத்தில் இருந்த காளியை அடக்குவதற்காக இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். போட்டியில் தோல்வி அடைந்த காளியின் முகம் வெட்கத்தால் சிவந்தது. நடராஜர் அருகில் இருந்து பார்த்தால் வெட்கத்துடன்கூடிய புன்முறுவலும், மற்றொரு பக்கம் இருந்து பார்த்தால் கோபமும் தொpயும் விதத்தில் மிகமிக அற்புதமாக செதுக்கப்பட்ட சிலை. சிறப்பு ஆடை, மேகலை, முத்துமாலை, கச்சு ஆகியவையும் தத்ரூபமாகவுள்ளன. கைகளில் கேடயம், கிளி, திரிசூலம் முதலியவை உள்ளன. பின்புறத்தில் கலைமகளும், திருமகளும் இசைக்கருவிகளுடன் காட்டப்பட்டுள்ளனர்
மேலும்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=1091
`கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்``8
என்பதனால், காளியோடு ஆடி, `அவளை வென்ற அந்த நடனமே தில்லையில் செய்யப்படுகின்றது` என ஆளுடைய அடிகள் அருளிச் செய்தவாறே இவரும் பொன்மன்றுட் கூத்தினைச் ``சேவகக்கூத்து`` என்றார். சேவகம் - வீரம், வெற்றி. கோயிற் புராணமும் இவ்வாறே கூறுதல் காண்க..
என்னுடைய முதல் மின்னஞ்சலில் நான் கார்ல் சாகன் கூற்றையும் குறிப்பிட்டுள்ளேன்.
நான் சரித்திரம் முதுகலை படிக்கும் போது அவ்வப்பொழுது புராணங்களை எடுத்துக் காட்டுவேன், புராணங்களை ஏன் குறிப்பிடுகிறாய் என்று கேட்ட என் பேராசியருக்கு என் கருத்தாக நம்ப முடியாத உண்மைகளையும் உள்ளர்த்தங்களையும் கொண்டது புராணங்கள் நம்பக் கூடாத பொய்களை உடையது சரித்திரங்கள் என்று கூறியவள், (சரித்திரங்களில் அவைகளை எழுதியவர்களின் கருத்தூட்டம் செறிந்திருக்கும். அவ்வாறில்லாமல் சரித்திரங்களை எழுதியவர்கள் மிகச் சிலரே,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
Cc: தமிழ் சிறகுகள் <tamizhs...@googlegroups.com>
Sent: Saturday, June 16, 2012 8:20 PM
Subject: Re: சிதம்பர ரகசியம்
வெடிபடு
மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியிலிரத்தக் களியொடு பூதம் பாடப்- பாட்டின
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடடக்-களித்
தாடுங்காளீ! சாமுண்டீகங்காளீ!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை!"
"மூலப் பரம்பொருளின் நாட்டம் இந்த
மூன்று புவியும் தன் ஆட்டம்:
காலப் பெருங்களத்தின் மீதே-எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்."
இரண்டு பேரும் ஆடுகிறார்கள். ஆடட்டும் பார்ப்போம் ஆட்டத்தின் முடிவை. இப்போது ஒரு விஷயம்.
ஆதியில் தில்லையில் இந்த முனிவர்கள் பூஜித்த மூலநாத லிங்கத் திருமேனிக்கான கோயிலும்,
காளி குடி கொண்டிருந்த கோயிலும் தான் நடராஜர் வரும் முன் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது.
இந்தக் காளி இருந்த இடம் தான் தற்சமயம் "நிருத்த சபை" என அழைக்கப் படுகிறது.
ஒரு காலத்தில் காளிக்குச் சொந்தமாய் இருந்த இந்த இடம் தற்சமயம் கோவிலினுள் உள்ளது.
அதற்க்குப் பின்னால் வருவோம்.
ஆட்டம் ஆரம்பிச்சாச்சு. ஆடப் போவது யாரு? இந்த அகில உலகங்களையும் படைக்கும், காக்கும், அழித்துத் திரும்பப் படைக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனும், நாயகியும். இவங்க ஆடினதைப் பார்க்கப் போவது நாம் எல்லாருமே! ரெண்டு பேருக்கும் போட்டி வேறே யார் பெரியவங்க யார் சின்னவங்கன்னு! ஒண்ணிலே ஒண்ணாக இருக்கும் இவங்களிலே யாரைப் பெரியவங்க யாரைச் சின்னவங்கனு சொல்றது? அதுவும் புரியலை. நடுவர்களோ என்றால் சிவனை மட்டுமல்லாது அன்னையையும் போற்றித் துதிக்கும ரிஷி முனிவர்கள். சிவனின் தாண்டவத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பவர்கள். ம்ம்ம்ம், செருமிக் கொண்டு வருகிறாள் காளி யன்னை. இவள் எப்படிப் பட்டவள்? இதோ பாரதி சொல்கிறார்:
"காலமாம் வனத்திலண்டக் கோல மாமரத்தின் மீது
காளி சக்தி என்ற பெயர் கொண்டு-ரீங்
காரமிட்டு உலவு மொரு வண்டு-தழல்
காலும் வழி நீலவன்ன மூல அத்து வாக்கனெனனும்
கால்களாறுடையதெனக் கண்டு- மறை
காணு முனிவோருரைத்தார் பண்டு."
ஆட்டம் ஆரமபி்க்கிறது. திக்குகள் எட்டும் அதிருகின்றது. தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
தித்தோம்! இறைவன் பதில் கொடுக்கிறார். "தாம் தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்!"
அகில உலகும் குலுங்குகிறது. அண்டமே குலுங்க ஆடிய இந்த ஆட்டத்தில் யார் ஜெயிக்கப் போகிறார்.
காளியவளோ கலங்காமல் ஆடுகிறாள். இறைவனின் ஒவ்வொரு அபிநயத்துக்கும், பாவங்களுக்கும் சரியான
பதில் கொடுக்கிறாள். ஆட்டத்துக்கு ஒரு முடிவே இல்லையோ என அனைவரும் எண்ணும் வேளையில்
இறைவன் செய்த ஒரு காரியத்தில் காளியன்னை வெட்கித் தலை குனிகிறாள். அவளால் அவ்வாறு செய்ய
முடியவில்லை. அப்படி என்ன செய்தார் ஈசன், சர்வேசன்? ஆட்ட வேகத்தில் அவர் காதுக் குழை
கழன்று கீழே விழ அதை அந்த ஆடும் வேகத்திலும் கவனித்த இறைவன் தன் இடது காலால் அந்த வலதுக்
குழையை எடுத்துக் கொண்டு அந்தக் காலை அப்படியே மேலே தூக்கிக் காது வரை கொண்டு போய்க்
குழையை மாட்டிக் கொள்கிறார் வலது காதில். ஆட்டத்தில் தேர்ச்சி இருந்தாலும் பெண்ணால்
இவ்வாறு செய்ய முடியாது அல்லவா? பெண்கள் போன, போகும், போகப் போகிற தூரம் இவ்வளவு என்று
வரையறுக்கப் பட்டிருக்கிறதல்லவா? அனைவரையும் படைத்த அன்னையானாலும் அவளும் ஒரு பெண்ணல்லவா?
அவள் பெண்மை அவளைத் தடுத்தது. இந்தக் காட்சியைக் கண்ட முனிவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
இறைவனைப் பார்க்கிறார்கள். (அப்போது இறைவன் அவர்களைத் திருவள்ளுவரிடம் போய்க் கேட்கச்
சொன்னதாயும் அவர்கள் வள்ளுவரிடம் போய் இறைவன் ஏன் அவ்வாறு பாதி நாட்டியத்தில் செய்தார்
எனக் கேட்க அவர் உடனேயே காதுக் குழையைப் போட்டுக் கொண்டாரே அதையா கேட்கிறீர்கள்?எனக்
கேட்டதாயும் வள்ளுவரின் பக்தியையும் அவர் இருந்த இடத்திலேயே இறை தரிசனம் கிடைக்கப்
பெற்றதில் இருந்து அவருடைய தனித் தன்மை வெளிப்பட்டதாயும் அவர் ஒரு சித்தர் என்றும்
செவி வழிச் செய்திகள்.)
காளி தோற்றுப் போனாள். தன்னுடைய இடத்தை கொடுத்து விட்டுப் போகிறாள். உடலில் ஒரு பாகம்
ஆனவள் இந்த இடத்துக்குச் சண்டை போடுவாளா? எல்லாம் ஒரு நாடகம். நமக்காக. நாம் நம் எல்லையைப்
புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் இறைவன் அவ்வாறு விட்டு விடுவாரா? நீ இந்த
ஊர் எல்லையில் காவல் காத்து வா என்று ஆணை இடுகிறார். அவ்வாறே காளி ஊர் எல்லைக்குச்
செல்கிறாள். நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். பதஞ்சலியும், வியாக்ரபாதரும் ஆவலுடன்
பார்த்து ரசிக்கிறார்கள். இறைவனை அங்கேயே கோயில் கொள்ள வேண்டுகின்றனர். இறைவனும் இசைகிறான்.
அவனுக்குத் தெரியாதா?
"ஆதியாஞ்சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்கு முளவாகும்- ஒன்றே
யாகினாலுகனைத்தும் சாகும்வை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -இந்த
அறிவுதான் பரமஞானமாகும்."
இவ்வாறு இறைவனுக்குத் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்து விட்டுக் காளி போனதும் இறைவன் அங்கே குடி கொள்கிறான். தேவ சிற்பியான விஸ்வகர்மா வந்து நடன அரங்கம் எழுப்பித் தருகிறார் இறைவன் ஆட. அதற்கு முதலில் இந்த ஆட்டத்தின் ரகசியம் புரியவேண்டும் அல்லவா? அதன் படி தானே நடன அரங்கம் எழும்ப முடியும்? முனிவர்கள் விஸ்வகர்மாவுக்குப் போதிக்க அதைக் கருத்தில் கொண்டு எழுப்புகிறார் "சித் சபை". ஆனால் நாம் முதலில் பார்க்கப் போவது "மூலநாதரை"த் தான். ஆதியில் குடி கொண்ட அவரை விட்டு விட்டு முன்னே போகக் கூடாது அல்லவா?
--




அதுக்கென்ன. எல்லாம் நன்மைக்கே.நான் அர்த்தநாரீசுவரர் கட்சியாள். என் உடலும் அப்படியே, தலை முதல் கால் வரை -- வலது பக்கம் உயர்வு; இடது பக்கம் குறைவு! வலது காலுக்கு அணியும் செருப்பும் இடது காலுக்கு அணியும் செருப்பும் வேறு வேறு அளவுகள்! காலணிகள் வாங்க ரொம்பச் செலவும்.அதனால் ... நானே அந்த அர்த்தநாரீசுவரர்! என்னை வணங்கும் அணுக்கத்தொண்டர் தேவை!!! :-) :-) :-)
வணக்கம்என்னுடைய முக்கியமான கேள்வியே ஆகாய லிங்கமாக எழுந்தருளி இருக்கும் இடத்தில் தான் இம்மாதிரியான போட்டி நடந்திருக்கிறது. வாயு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் காளஹஸ்தியிலோ, அக்னி லிங்கமாக இருக்கும் திருவண்ணாமலையிலோ அப்பு லிங்கமாக இருக்கும் திருவானைக் காவிலோ அல்லது ம்ருத்யு லிங்கமாக அருள்பாலிக்கும் ராமேஸ்வரத்திலோ நடக்க வில்லையே?
அன்புடன்நந்திதா
Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
சிதம்பரம்
கோவில் எப்போது கட்டப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற முடியாதெனினும், காலப் போக்கில்
பல மன்னர்கள் இந்தக் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளுக்கு மானியங்கள் விடுத்திருக்கிறார்கள்.
இந்தக் கோயில் இருந்த சமயம் தெரியாவிட்டாலும் முதலில் மூலநாதர் என்ற சிவலிங்கம் வழிபாட்டில்
இருந்ததாய்த் தெரிய வருகிறது. சிவலிங்க வழிபாடு தான் சிவனை வழிபடுவோரின் முக்கிய வழிபாட்டுத்
தெய்வமாகவும் இருந்து வந்தது. இந்த லிங்கத்தைத் தான் முதலில் வியாக்ரபாதர், பதஞ்சலி,
உபமன்யு போன்றோரும் பின்னர் இந்தக் கோயிலுக்கு முதன் முதல் விஜயம் செய்த சூரிய வம்சத்தைச்
சேர்ந்த வங்க நாட்டு கெளட அரசன் ஹிரண்யவர்மனும் வழி பட்டு வந்திருக்கிறார்கள். இந்த
மன்னனின் திருப்பணிகள் பற்றிச் "சிதம்பர மஹாத்மியம்" புத்தகத்தில் காண முடிகிறது.
இந்த மூலநாதர் கோயில் தற்போதைய சிதம்பரம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. கிழக்கே
பார்த்து இருக்கும் மூலநாதரின் திருமேனி சுயம்புத் திருமேனி என்று சொல்லப் படுகிறது.
பக்கத்திலேயே உமை அன்னையின் கோயிலும் தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. சிதம்பரத்தில்
உள்ள மற்றக் கோயில்களில் உள்ள லிங்கத் திருமேனிகளை விட இந்த லிங்கத் திருமேனி மிகப்
பழமை வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இவ்வளவு பழமை வாய்ந்த மூலநாதரையும், உமை அன்னையையும்
தரிசித்த பின் நாம் எங்கே செல்கிறோம் தெரியுமா? நேரே சித்சபைக்குத் தான். இங்கே கொஞ்சம்
அதிக நேரம் செலவிடுவோம். தயாராய் இருக்கணும்.
இந்திரன் கேட்டுக் கொண்டதின் பேரில் விஸ்வகர்மா என்ற தேவசிற்பியால் எல்லாம் வல்ல அந்தப்
பரம்பொருளின் "ஆனந்தத் தாண்டவம்" ஆடக் கட்டப் பட்டது இந்த சித்சபை என்னும்
மூலஸ்தானம். சிதம்பரம் கோயிலின் நடுவில் உள்ளது இந்தச் சித்சபை. இதை ஹேம சபை, தாப்ர
சபை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். பக்தி இலக்கியத்தை வளர்த்த நம் நாயன்மார்களால்
"பொன்னம்பலம்" என்று உருகி உருகிப் பாடப் பட்டது இது. முதலாம் பராந்தக சோழனால்
பொற்கூரை வேயப் பட்டது. இந்தச் சித்சபை வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாய்க் கையால்
எழுதப் பட்ட சில குறிப்புக்களில் இருந்து தெரிய வருகிறது. தெற்கே பார்த்து இருக்கும்
இந்தச் சித்சபையில் தான் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் கோயில் கொண்டிருக்கிறார்.
"சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால்
"ஆகாசம்" என்றும் பொருள். அந்தச் சிதம்பரத்தின் "சித்சபை" பற்றிய
வர்ணனையைச் சற்றுப் பார்ப்போமா?
சிதம்பரத்திலேயே நடராஜர் தரிசனம் தான் முக்கியமானது. அந்த நடராஜர், சிவகாம சுந்தரியுடன்
் கோயில் கொண்டிருக்கும் சித்சபையை என்னால் முடிந்த வரை சொல்கிறேன்.இந்தச் சபைக்குச்
செல்ல ஐந்து வெள்ளியில் ஆன படிகள் இருக்கின்றன. இவை "நம சிவாய" என்னும் பஞ்சாட்சரத்தைக்
குறிக்கும். சிவனின் ஐந்து விதத் தோற்றங்களைக் குறிக்கும் என்றும் சொல்கின்றனர். சிவனின்
ஐந்து விதத் தோற்றங்கள். பிரம்ம பீடம், வி்ஷ்ணு பீடம், ருத்ர பீடம், மஹேஸ்வர பீடம்,
சதாசிவ பீடம். இந்த ஐந்து பீடங்களும் உள்ள இடங்கள் இனி வரிசையாய் வரும். படிக்கிற வசதிக்கும்
புரிந்து கொள்ள வசதிக்கும் ஏற்றவாறு எழுதி வருகிறேன். புரியாத இடத்தில் சந்தேகத்தைக்
கேட்டுத் தெரிந்து கொள்ளவும். இப்போ முதலில் பிரம்ம பீடம் என்று சொல்லப் படும் பகுதிக்குப்
போகலாம்.
பிரம்ம பீடம்:இங்கே 28 மரத் தூண்கள் இருக்கின்றன. இவை 28 விதமான ஆகமங்களைக் குறிக்கிறது.
விஷ்ணு பீடம்: இங்கே உள்ள ஐந்து தூண்களும் ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும்
பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.
ருத்ரபீடம்: இங்கே உள்ள 6 தூண்களும் ஆறுவிதமான சாஸ்திரங்களைக் குறிக்கும். தர்க்கம்,
வ்யாகரணம், வேதாந்தம், மீமாம்சம், ஜோதிடம், வைத்தியம் போன்றவை அவை.
மஹேஸ்வர பீடம்: கிழக்கே உள்ள இந்தப் பீடத்தில் சந்தங்கள், கல்பங்கள், ஜோதிஷம், நிருத்தம்,
வ்யாகர்ணம், சிக்ஷை, போன்ற ஆறும் ஸ்தம்பங்களாயும், வைசேசிகா, பூர்வ மீமாம்சை, உத்தர
மீமாம்சை, சாங்கியம், கெளடம் போன்ற தத்துவங்கள் தூண்களாயும் இருக்கின்றன. இதற்கு மேல்
உள்ள பிரணவ பீடத்தில்தான் நடராஜர், சிவகாமியுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.
சதாசிவ பீடம்: 4 வேதங்களும் 4 பொன்னாலாகிய தூண்களாய் உள்ளன இங்கு. இங்கே தான்
"சிதம்பர ரகசியம்" தரிசனம் கிடைக்கும்.
மேலே உள்ளவை எல்லாம் தத்துவங்கள். சில பாடங்கள் பெயர் நாம் கேட்டிருப்போம். மற்றவை
எல்லாம் தத்துவம் படிப்பவர்களுக்குப் புரியும். ஆகமங்கள் 28-ம் பெயர் வேணாம்னு தான்
எழுதலை. இம்மாதிரியான மொத்தம் 96 தத்துவங்களை உள்ளடக்கியது சித்சபை.
சித்சபையின் மேற்கூரையைப் பார்ப்போமா? சற்றே வெளியே வந்து சித்சபையின் மேல் கோபுரத்தைப்
பார்த்தால் அங்கே ஒன்பது கலசங்கள் பார்க்கலாம். நவசக்தியும் ஒன்பது கலசங்களாய்ப் பிரதி்ஷ்டை
செய்யப் பட்டிருக்கிறது. அவை வாம சக்தி, ஜ்யேஷ்ட சக்தி, ரெளத்ரி சக்தி, காளி, காலிவிகாரினி,
பலி, பாலவிகரணி, பலப்ரமதனி, மனோன்மணி.
64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று
சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும்.
21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும்.
72,000 ஆணிகள் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும்
குறிக்கும் அவை.
நாளை நடராஜர் ஆடும்போது பார்க்கலாமா?
இந்த மூலநாதர் கோயில் தற்போதைய சிதம்பரம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. கிழக்கே பார்த்து இருக்கும் மூலநாதரின் திருமேனி சுயம்புத் திருமேனி என்று சொல்லப் படுகிறது. பக்கத்திலேயே உமை அன்னையின் கோயிலும் தெற்குப் பார்த்து அமைந்துள்ளது.
நாளை நடராஜர் ஆடும்போது பார்க்கலாமா?
நடராஜா!

நடராஜர் உருவத்தைச் சிலையாகவோ படமாகவோ நாம் அனைவருமே பார்த்திருக்கோம். ஆனால் சிதம்பரம்
நடராஜர் மட்டும் தனிச் சிறப்பு வாய்ந்தவர். அவரை நடராஜராஜர், சபாபதி, சபாநாயகர் என்றெல்லாம்
அழைப்பது உண்டு. ஏனெனில் எல்லாக் கோயில் நடராஜர்களை விடச் சிதம்பரம் நடராஜர் தனிச்சிறப்பு
வாய்ந்தவர். ஆடவல்லான் தனக்கெனக் கோயில் கட்டிக் கொண்டு வசிக்க ஆரம்பித்தது நம்மை எல்லாம்
ஆட்கொள்ளத் தானே! இப்போது நடராஜரின் உருவ அமைப்பைப் பார்ப்போம். ஆடும் கோலத்தில் இடது
பதத்தை மேலே தூக்கிக் கொண்டு ஆடும் இந்த நடராஜரை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும்
முடிந்த வரை சொல்கிறேன். நாட்டியத்தின் ஆதிகுருவான சிவன் ஆடும் இந்த ஆனந்தத் தாண்டவம்
விவரிக்க முடியாத அழகுடனும், அதே சமயம் ஒரு விதமான திகிலுடனும் கூடியதாய்த் தோன்றுகிறதா?
எனக்கும் அப்படித்தான். இறைவனின் இந்தப் புனிதமான அசைவுகளில் நம் உள் மனதின் பாவங்கள்
பொசுங்கிப் போகும். அவன் அபிநயத்திலோ எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்ததாய் உள்ளது?
ஆறு பாவங்களைக் காட்டுகிறது இந்த நாட்டியக் கோலம்.
அவை சிருஷ்டி, ஸம்ஹாரம், வித்யா, அவித்யா, கதி, அகதி போன்றவையாகும். அவன் ஆடவில்லையென்றால்
நாம் இயங்குவது எப்படி? உலக நன்மைக்காகவே இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் அவன் ஆடுவது
எந்தப் பாடலுக்கு? "ஆகாத பூம்" என்ற தொனிக்கு இடைவிடாது ஆடுகிறான். இப்போ
அவன் கோலத்தைப் பார்ப்போம்., வலது மேல் கையில் டமரூ என்று சொல்லப் படும் ஓசை எழுப்பும்
கருவி, வலது கீழ்க்கையோ அபயம் காட்டுகிறது. இடது மேல் கையில் நெருப்பும், இடது கீழ்க்கை
அவருடைய திருப்பாதத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அவருடைய வலது கால் பாதம் முயலகனை அழுத்திக்
கொண்டிருக்க, இடது காலைத் தூக்கி ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். நாகங்களை ஆபரணமாக அணிந்து
கொண்டு, மண்டை ஓட்டு மாலை தரித்திருக்கிறார்.
நடராஜ ஸ்வரூபங்கள் அநேகம் இருந்தாலும் இந்த ஆனந்தத் தாண்டவ ஸ்வரூபத்தின் விசேஷம் தனி.
இது நமக்கு சிருஷ்டியின் தத்துவத்தை உணர்த்துகிறது. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம்,
அனுக்ரஹம் போன்ற ஐந்து தொழில்களையும் குறிக்கும். நடராஜர் தெற்கே பார்த்துக் கொண்டும்
இருப்பார். இவரின் வடிவே "ஓம்" என்னும் ஓங்கார வடிவானது. ஓங்கார வடிவினுள்
உள்ள பஞ்சாட்சர மூர்த்தியான இவரின் இந்தத் தரிசனம் நமக்கு என்ன உணர்த்துகிறது என்றால்
முயலகன் போன்ற அசுர மனம் நமக்கு. அது பாம்புகள் போல் சீறிக் கொண்டு மேலெழும்பும். அந்த
மனத்தை அடக்க வேண்டும். தியானம் என்ற நெருப்பில் சுட்டுப் பொசுக்கிக் கடைசியில் இறைவனை
அடைய வேண்டும்.
இவருடைய நாட்டியம் இவ்வுலகையே ஆட்டுவிக்கிறது. எப்படி என்றால் நம்முடைய மனம் எவ்வளவு
வேகமாய்ச் சிந்திக்கிறது? வாயுவேக மனோவேகம் எல்லாம் போதாது அல்லவா மனோவேகத்துக்கு.
அந்த மனோவேகத்திலும், உடல் உணர்வுகளிலும், சிரிப்பிலும், அழுகையிலும், பசியிலும், உணவு
உண்ட திருப்தியிலும், ஆடலிலும், பாடலிலும், மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நடராஜர்
இருக்கின்றார். இன்னும் கடல் அலைகள் சீறுவதிலும், சூரிய சந்திரர்கள் தோன்றுவதிலும்,
கிரஹங்களின் சுழற்சியிலும், பூமியின் இடைவிடாத சுற்றுக்களிலும், மஹா ப்ரளயத்திலும்,
கொடிய தொற்று நோய்கள் தோன்றும்போதும், பூகம்பத்திலும், எரிமலைகளிலும், சுனாமி போன்ற
ஆழிப்பேரலைகளிலும், புயல் காற்றிலும், அண்ட பகிரண்டமெல்லாம் நடுங்கும்படி இடிக்கும்
இடிகளிலும், கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளியிலும், பெருமழையிலும், சூறைக் காற்றிலும்,
பட்சிகளின் கிளுகிளுப்பிலும், விலங்குகளின் சப்தங்களிலும், பூக்கள் பூப்பதிலும், காய்,
கனிகளிலும், இன்னும் நம் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அனைத்திலும் நிறைந்திருப்பது
அவரே!

இந்த
அருமையான சிற்பங்களை இப்போது நாம் ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு பார்வையிலும் பார்த்தோமானால்,
இந்த சிவ வடிவம் ஒரு அழகான பிறைச் சந்திரனை ஒத்திருக்கிறது. என்ன ஒரு பெரும்பேறு? எவ்வளவு
பெருமைப்படத் தக்க வடிவான உடலமைப்பு! இன்று இந்த மறக்கமுடியா அழகுடன் கூடிய இந்த வடிவத்தை
உலோகச் சிலையாகப் பார்க்கிறோம். கருமேகத்தில் பளீரென ஒளிவிடும் அழகிய மின்னல் போன்ற
ஒளியைக் கொண்டிருக்கிறது. பார்த்தால் சிலைதான், அசைவில்லைதான், ஆனால் ஒளியால் குளிப்பாட்டப்
பட்ட அந்தச் சிற்பம், எந்த நேரம் உயிர் பெற்று அசைந்து ஆடத் தொடங்குமோ என எண்ண வைக்கிறது!
இதோ இந்த ஒளி சற்று நகர்ந்தாலும் போதும், அசைந்து அசைந்து ஆடத் தொடங்கிவிடுமோ?? நம்மை
ஆட்டுவிக்கும் அந்த ஆட்டம் இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறதோ.!
வெகுநாட்களாக, ஏன் பல்லாண்டுகளாக இருந்த இருட்டில் இருந்து விலகி,அந்த இருள் என்ற மந்திரச்
சொல்லின் வசியம் நீங்கிப் போய், இன்று ஒளியில் குளிப்பாட்டப் பட்டு, அவ்வாறு ஒளி வரும்போது
இந்த அற்புத சிற்பத்தின் மேல் தென்படும் நிழல் அந்த சிவநடராஜாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாய்
ஆடைபோல் போர்த்திப் போர்த்தி விலகுகிறது. நாம் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளி வருவதைப்
போல! எங்கும் நீக்கமற நிறைந்த இந்த ஒழுங்கான வடிவின் அற்புதம்! மூடுபனி போன்ற மெல்லிய
திரை போன்ற உடலமைப்பு! மற்றத் தெய்வங்களான பிரமன், மன்மதன், எமன், சந்திரன் போன்றவர்கள்
அடையாளங்கள் மாறாமல் சிரம் அறுத்து, எரித்து, உதைத்து, தேய்ந்து போகவைத்து எனப் பல்வகைப்
பட்டவாறு இருந்த போதிலும், இந்த சிவநடராஜ வடிவோ, எது எது எப்படி இருக்கவேண்டுமோ அப்படி
வடிவமைக்கப் பட்டுள்ளது.
பெரிய மூங்கிலைப்போன்ற தோள்கள் ஆடும்போது எவ்வாறு வேகமாய்ச் சுழலுகிறது, அந்த வேகத்தையும்
அதன் காரண, காரியங்களையும் மட்டும் நாம் புரிந்துகொண்டோமானால்,ஆஹா, நமக்குப் பரம்பொருளின்
தத்துவமே பூரணமாய்ப் புரிந்துவிடுமல்லவோ? கைகளின் வளைவு, தோள்களின் வளைவு, புஜங்கள்
ஏற்படுத்தும் அற்புதமானதொரு எழுச்சி, யானையின் துதிக்கையை நினைவூட்டும் வண்ணம் உருண்டு
திரண்ட அந்தத் தோள்கள், அவை சூரியகிரஹணத்தின்போது சூரியனைச் சுற்றி ஏற்படும் மறைந்திருக்கும்
சந்திரனின் சிவந்த ஒளிவட்டம்போன்ற காட்சி, நம்மைப் போன்ற சாதாரண மனிதருக்குக் காட்சி
தருவது போல் தெரியும் விலா எலும்புகள், அவை சேர்ந்திருக்கும் விதம், தோள்களை அவை தாங்கிப்
பிடிக்கும் அமைப்பு, இவற்றை உற்றுக் கவனித்தால், இது சிலையல்ல, எந்நேரம் வேண்டுமானாலும்
ஆடத் தயாராய் இருக்கும் மனிதனோ என்னும் தோற்றத்தைத் தருகிறது.
உடுக்கை போன்ற சிறிய இடையோ உறுதியும் பலமும் கொண்டு விளங்குகிறது. தோள்களுக்கு அருகே
விசாலமாய் இருக்கும் உடலானது போகப்போகக் குறுகி, இடைக்கு அருகே மிகக் குறுகி, மீண்டும்
அகன்று பலம் பொருந்தியும், உறுதியாகவும் காட்சி அளித்து இரு தொடைகளாகக் கீழே இறங்குகிறது.
கணக்குடன் செதுக்கப் பட்ட சிலை என்ற உணர்வே தோன்றுவதில்லை. இடுப்புப் பகுதி அந்தப்
பருத்த தொடைகளைத் தாங்கும் வல்லமையுடன் அகன்று காணப்பட்டாலும், அவை காட்டும் அற்புதக்
கோணங்கள்! ஆஹா, என்ன அற்புதமான, பரிபூரணமான கோணம்! அந்தக் கால்கள் எவ்வளவு மென்மையாகத்
தன் பாதங்களைப் பூமியில் பதிக்கும்போது மாறுகின்றன! ஆச்சரியமாய் உள்ளது. அந்த மென்மையாகப்
பதிக்கப்படும் பாதங்களிலிருந்தா இத்தனை வேகமான ஆட்டம் ஆடப்படுகிறது? நினைக்க நினைக்க
ஆச்சரியமாக இல்லை??
நடராஜரின் சிற்பப் பகுதியின் தலை பாகத்தை ஒரு பக்கமாய்ப் பார்த்தால்,
ஆட்டத்தின்
வேகத்தில் அந்த விரிந்த குழல்கற்றைகள் அலைவதைப் பாருங்கள். அந்த இரு கைகளும், மார்புப்
பகுதிக்கும், வயிற்றுக்கும் உள்ள இடைவெளியைப் பிரித்திருப்பதைக் கண்டால், Venus
de’ Medici, சிற்பம் நினைவில் மோதுகிறது. ஏனெனில் தன்னில் ஒரு பாதியாக உமையைக் கொண்டவர்
அன்றோ? ஆகவே தன் பெண்மையின் அழகை அவ்விதம் மறைத்துக்கொள்கிறாரோ? அந்தக் கிரேக்கத்தின்
காதல் தேவதை தன் எழிலை எவ்வாறு தன்னிரு கரங்களால், ஒரு நளினத்தோடு மறைப்பாளோ அதோடு
போட்டி போடும் வண்ணம் இந்த சிவநடராஜா தன்னையும் மறைத்துக்கொள்கின்றாரோ? ஒரு நீண்ட நெடிய
நிழல் இந்தச் சிற்பத்தின் உடல்பகுதியை இரண்டாகப் பிரித்தவண்ணம் தொடைகள் வரை செல்கிறதே!
உடலின் ஒரு பகுதியை நிழல் மறைக்கிறது, மறுபகுதியில் அரை வெளிச்சம்! அந்த இருட்டே அதை
ஆடையாய்ப் போர்த்தியது போல் காண்கின்றோம். மொத்தத்தில் இது புனிதத் தன்மையின் ஆழத்தைக்
காட்டுகிறது, ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், இயங்காமையிலும், இன்னும் இடைவிடாத, நிற்கவே
நிற்காத பரம்பொருளின் இந்த ஆட்டத்தைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்தால் அவை வெறும் அலங்காரச்
சொற்களாகவே போய்விடும். அந்த நீண்ட, மெல்லிய கால்கள் வேகத்தைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவையோ?
ஒரு விதத்தில் இது புனிதத்தின் ஆழம், அண்டப் பேரொளியின் காட்சி, சிவனோடு இணைந்த சக்தியின்
தரிசனம், ஆனாலும் இவற்றை எல்லாம் சொல்லுவது, இந்த ஆட்டத்தின் வேகத்தையும், லயத்தையும்,
தாளம் தப்பாமல் ஆடுவதையும் அதனால் உலகமே இயங்கும் இயக்கதையும் நோக்கும்போது வெறும்
வார்த்தைகளாகிவிடுகின்றன. அந்த இரு நீண்ட, மெல்லிய, அதே சமயம் உறுதியான கால்களைப் பார்க்கும்
போதே அவை ஆடும் ஆட்டத்தின் வேகம் நமக்குப் புரியவருகிறது.
நேருக்கு நேராகக் காணும்போதோ?? ஒரு கை தேர்ந்த சிற்பி வடித்த சிற்பம் என்று மட்டுமே
தோன்றும். ஒவ்வொரு விதமான பார்வைகளிலும் மேலே, கீழே, பக்கவாட்டுப்பார்வை என எப்படிப்
பார்த்தாலும், அதில் உள்ள இயற்கையான, இயல்பான தனித் தன்மையின் அமைப்பும் தெரிகிறது.
என்றாலும் எல்லாவற்றுக்கும் மேல், அனைவராலும் கவனிக்கப் படாத ஒன்றும் உள்ளது. வாழ்க்கையின்
மையம் என்ற நம் போன்ற சாதாரண மனிதர்களின் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஆழமான புள்ளி தெரிகிறது.
மிக மிக எழிலும், நளினமும் கலந்த படைப்பு, அதைவிட அதன் நேர்த்தி கண்ணைக் கவருகிறது.
இன்னும் சொல்லலாம். இதை நாம் பரிசுத்தம், புனிதம் என்னலாமா?? மிகவும் சக்தி வாய்ந்ததொரு
புனிதம் எனலாமா?? வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று.. ஆஹா, அந்த நிழல்கள் ஒரு மாலைபோல்
தோள்களிலிருந்து இடுப்பு வரை வழிகின்றது, இந்த வலப்பக்கக் கோணத்தில் பார்த்தால், அது
மிகவும் அருமையாய்ப் புரிய வருகிறது.
மற்றொரு பக்கவாட்டுக் கோணத்தில் பார்த்தோமானால்,
இரண்டு கால்களிலும் விழும் வித்தியாசமான ஒளிக்கோணத்தில், இந்த ஒரு தொடையின் நீண்ட நிழல்
மற்றொரு காலின் மீது விழுந்திருக்கும் கோணத்தைப் பார்த்தால்?? அடடா!!!!!! உள்ளார்ந்ததொரு
நேர்த்தி இல்லையெனில் இந்த முழுமையும், வளைந்து கொடுக்கிற மிருதுத் தன்மையும் வந்திருக்க
முடியாது. இல்லையெனில் அந்த நீண்ட நிழல் கூர்மையாக, நேராகச் சென்றிருக்கும். இந்தக்
கால் இங்கே இத்தனை மென்மையுடனும், அழகான வளைவு, நெளிவுகளோடும் காணப்படுவதற்குக் காரணம்
இந்த நடராஜா அன்னையைத் தன் உடலின் சரிபாதியாக ஏற்றதாலோ?? இடக்கால் அன்னையினுடையதாயிற்றே??
சிவநடராஜாவின் இந்தச் சிற்பத்தை ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப்போல் பார்க்கக்
கூடாது. அதன் உள்ளார்ந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதன் தாத்பரியம் என்ன என்ற
எண்ணத்தோடு ஆய்ந்து நோக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி இருக்கும் மனிதனுக்கு என்ன புரியும்??
எதுவுமில்லை. வெறும் சிலை என்ற உணர்வோடு ஒரு அழகான சிற்பக்கலையை ரசிப்பதிலிருந்து அவன்
விலகிவிடுகிறான். நடராஜ தத்துவத்தை ஒருவன் பரிபூரணமாக அறிந்திருப்பதோடு, பூரணமாய் உணர்ந்திருக்கவும்
வேண்டும். இந்த நடராஜாவின் அழகைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமும் இல்லை. விரிந்த
செஞ்சடை, ஆடும் ஆட்டத்தில் அதுவும் சேர்ந்து சுற்றுகிறது. சடை சுற்றும் வேகத்தில் அங்கே
குடிகொண்டிருக்கும் கங்கையும் இங்கேயும், அங்கேயுமாய் அலைகிறாள். நீர்த்திவலைகள் தலை
வழியே வழிந்து நேரே இடக்கையின் மூலம் பாதத்தை அடைவது கங்கை சிவனை நமஸ்கரிப்பதை ஒத்திருக்கிறது.
சிவனின் இந்தத் தலைப்பாகத்தை ஒரு நீண்ட சிந்தனையுடன் கூடிய கண்ணோட்டத்தில் பார்த்தோமானால்,
அந்த உப்பிய சற்றே வீங்கினாற்போன்ற தோற்றம் கொடுக்கும் அழகிய வாய் எவ்வளவு அற்புதமாகப்
புலன்களைத் தாக்கும் உணர்வுகளைக் காட்டுகின்றது என்பது புரியவரும். அந்த அழகான வாயின்
அமைப்பும், கண்களும் ஓர் ஒத்திசைவோடு கூடிய இந்திரிய சம்பந்தமான உணர்வுகளை ஒரே சமயத்தில்
பிரதிபலிக்கின்றன. அந்த உதடுகளோ எனில் மெய் சிலிர்க்க வைக்கும் நாசித் துவாரங்களை விளிம்பாய்க்
கொண்டு அசத்துகின்றன.
அமுதம் உண்டானோ என்னும்படிக்கு வாயினில் உள்ள ஈரம் அலைபோல் அடிக்கின்றது. ஏனெனில் தலையிலே
அந்த விரிந்த செஞ்சடையிலே குடி கொண்டிருக்கும் கங்கையானவள் அங்குமிங்கும் அலைந்து தண்ணீரை
அப்படி வர்ஷிப்பதால் அந்த வாயும், அதன் நாவும் எந்நேரமும் நீர் நிரம்பி அமுதம் உண்டவனைப்
போல் காண்கின்றது. அதுமட்டுமா?? அந்த நாவிலிருந்து கிளம்பும் ஜதிக்கட்டுகளின் வேகத்தால்
பாம்பு வேகமாகப் படமெடுத்து ஆடுகிறாற்போல் அசைகின்றது. கண்ணின் இரு கருவிழிகளுமோ எனில்
மூடியுள்ள அந்த இமைகளுக்கிடையிலே இவ்வுலகத்தை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
என்பதை நிச்சயம் செய்வது போல சூரிய, சந்திரர் போல் பிரகாசிக்கின்றன. கண்களின் ஒளியோ
மனதை மயக்கும் ஒளியாக இல்லாமல் மனதை அமைதிப்படுத்தி சாந்தத்தை ஏற்படுத்தும் ஒளியாக
உள்ளது. நம்மை இழந்து, நம்மை மறந்து அந்தக் கண்ணொளியில் நாம் ஆழ்ந்துவிடுகிறோம். கண்
இமைகள் ஒரு மென்மையான பட்டு ஆடை போல் அந்தக் கண்களை மூடியுள்ளன. தீர்க்கமான நாசி, அளவெடுத்தாற்போல்
செதுக்கப் பட்டுள்ளது. தானே தனது ஆட்டத்தில் மயங்கிவிட்டானோ என்னும்படியான பார்வை!
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்” என அப்பர் பெருமான் சொன்னாற்போல
ஒரு குமிண் சிரிப்பு அந்த உதடுகளில் நெளிகின்றது. உதடுகளின் வளைவுகளும், கன்னக் கதுப்புகளும்,
முகமும், ஏன் மொத்த உடலுமே அந்தப் புன்னகையால் பூத்திருக்கிறது என்றால் மிகையில்லை.
இவ்வுலகத்து மர்மங்களை எல்லாம் நான் அறிவேன் என்னும் சிரிப்போ அது?? ஆடற்கலையின் அற்புதத்தைத்
தன் கண்ணசைவால், தன் குமிண் சிரிப்பால், தன் கையசைவால் காட்டும் இந்த அதி அற்புத உந்நத
வடிவம் , செழுமையான கன்னங்கள், சிரிப்பினால் கன்னத்தில் விளைந்த குழிவு, இடக்கையால்
தன் பாதத்தைச் சுட்டும் அமைப்பு, தலையின் கங்கை சிந்த அந்த ஒவ்வொரு நீர்த்துளியிலும்
தெரியும் ஆநந்த நடனம்! இந்த ஆநந்தம் எதற்காக? உலகு உய்யவன்றோ! விஷம் உண்டதால் நீலமான
மேனி, திருமாலே கண்டத்தில் மாலையாக அமர்ந்தாற்போன்ற தோற்றத்தைத் தருகின்றது. ஆடும்
வேகத்தில் அரையில் கட்டிய புலித்தோலின் அசைவு ஒரு புலியே வேகமாய் ஓடி வருவதைப் போன்ற
தோற்றமளிக்கின்றது. நீண்ட மெல்லிய கால்கள், வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி இருப்பது,
வலக்கால் அண்டத்தின் மையப்புள்ளியில் பதிந்திருப்பதையும், இடக்காலின் சுழற்சியால் அண்டபகிரண்டங்களும்
இயங்குவதையும், அந்த இயக்கத்தின் வேகத்தையும் சுட்டுகிறது அல்லவோ?
>>அமுதம் உண்டானோ என்னும்படிக்கு வாயினில் உள்ள ஈரம் அலைபோல் அடிக்கின்றது. ஏனெனில் தலையிலே அந்த விரிந்த செஞ்சடையிலே குடி கொண்டிருக்கும் கங்கையானவள் அங்குமிங்கும் அலைந்து தண்ணீரை அப்படி வர்ஷிப்பதால் அந்த வாயும், அதன் நாவும் எந்நேரமும் நீர் நிரம்பி அமுதம் உண்டவனைப் போல் காண்கின்றது.>>
பெரிய புராணம் முதல் பாடலான ‘உலகெலாம்’ பாடலில் ‘நீர் மலி வேணியன்’ எனும்
வார்த்தை வரும். மேலே இதன் பொருளே கொடுத்து விட்டீர்கள்.
நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். இருந்தும் மீண்டும் படிக்கத் தூண்டும்
ஆர்வம் வருகிற்து.
மிகச் சிறந்த பதிவுகளில் ஒன்று!!
அன்புடன்
திவாகர்
2012/6/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அதனால் ... நானே அந்த அர்த்தநாரீசுவரர்! என்னை வணங்கும் அணுக்கத்தொண்டர் தேவை!!! :-) :-) :-) //
நான் இருக்கேன் அம்மா. <35B.gif><35B.gif><35B.gif><35B.gif>
2012/6/17 rajam <ra...@earthlink.net>அதுக்கென்ன. எல்லாம் நன்மைக்கே.நான் அர்த்தநாரீசுவரர் கட்சியாள். என் உடலும் அப்படியே, தலை முதல் கால் வரை -- வலது பக்கம் உயர்வு; இடது பக்கம் குறைவு! வலது காலுக்கு அணியும் செருப்பும் இடது காலுக்கு அணியும் செருப்பும் வேறு வேறு அளவுகள்! காலணிகள் வாங்க ரொம்பச் செலவும்.அதனால் ... நானே அந்த அர்த்தநாரீசுவரர்! என்னை வணங்கும் அணுக்கத்தொண்டர் தேவை!!! :-) :-) :-)"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
படைத்துக்
,காத்து, அழித்து, மறைத்து, அருளும் நடராஜரின் திரு உருவில் உள்ள அர்த்தங்கள் தான்
எத்தனை? இப்போது இந்தக் கட்டுரையை எழுதும்படி என்னைத் தூண்டியதும் அவர்தான், அதைப்
படிக்கும்படியான உணர்வை உங்களுக்குத் தூண்டுவதும் அவர்தான். இப்படி எல்லாமாக நிறைந்திருக்கும்
நடராஜரின் திரு உருவமே "ஓம்" என்னும் எழுத்தைப் போல் இருக்கிறது என்று ஏற்கெனவே
சொன்னேன். உலக மக்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து முக்தி கொடுக்கவும் தான் அவர்
ஆடுகிறார். அவர் கையில் இருக்கும் "டமரூ"வின் சப்தத்தில் மக்களை அழைக்கிறார்
எனக் கொள்ளலாம். இதைத் தவிர டமரூவின் சப்தத்தில் தான் சிருஷ்டியே நடக்கிறது. தன் கைகளால்
பாதுகாப்பும் அளிக்கிறார் உலக மக்களுக்கு அபய ஹஸ்தத்தின் மூலம். இந்த அபய ஹஸ்தம் தான்
ஸ்திதியையும் காட்டுகிறது. நெருப்பை ஏந்தி இருக்கும் கையானது அவர் நமக்கு அளிக்கும்
சத்தியப் பிரமாணத்தைக் காட்டுகிறது. "என் காலடியில் நீ வந்தாய் உனக்கு என்னுடைய
பாதுகாப்பு உண்டு" என்று காட்டுகிறார். அதைத் தான் தன்னுடைய நடனமாடும் இடது காலை
இடக்கையால் சுட்டியும் காட்டுகிறார். முயலகனை அழுத்தும் வலக்கால் நாம் இவ்வாறு நம்
மனத்தைக் கட்டுப் படுத்த வேண்டும் எனக் காட்டுகிறது. தூக்கி நிற்கும் இடக்காலோ சொல்லாத
வி்ஷயங்களே இல்லை. அதைத் தான் "குஞ்சிதபாதம்" எனச் சொல்கிறார்கள். இந்தக்
குஞ்சித பாதத்தைப் பணிந்தால் நமக்கு இவ்வுலக பந்தங்களில் இருந்து விடுபட்டுப் பேரானந்த
நிலையை அடையலாம் என்று சொல்கிறார். இது மட்டுமா?
மருவும்
துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே. (திருமூலர் திருமந்திரம்)
"நமசிவாயா" என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும்
கூட. அக்னியை ஏந்தும் கையானது "ந" என்னும் எழுத்தையும், கால்கள் "ம"
என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை "சி" என்னும் எழுத்தையும்,
டமரூ வைத்திருக்கும் கை "வ" என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் "யா"
என்னும் எழுத்தையும் குறிக்கிறது.
மாயைதனை உதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து -- நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான். (உண்மை
விளக்கம்; திருவதிகை மனவாசகங்கடந்தார்)
அரன்துடி
தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே. ""
(திருமந்திரம், திருமூலர்)
டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிருஷ்டி
ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச்
செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும்
வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும்,
அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து
இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன்
ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை
எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு
அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால்
தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று
சொல்கிறது.
எல்லைகளைக் கடந்த இந்த நாட்டியம் ஆனது முடிவற்றது. இடைவிடாது ஆடப்படுவது. இந்த ஓங்கார
ஸ்வரூபம் இல்லையென்றால் எதுவும் இல்லை. இதற்குக் காலமோ, நேரமோ, இடமோ குறிப்பிட்டுச்
சொல்ல முடியாதபடிக்குக் கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்தது. இந்தப் பிரபஞ்சமே அவன்
ஆடலரங்கம். அவன் ஆடலரசன். ஆடுவதும் அவனே! ஆட்டுவிப்பதும் அவனே!
"வேதங்களாட மிகு ஆகமமாடக்
கீதங்களாடக் கிளர் அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆலப் புவனம் முழுதாட
நாதங்கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே!" திருமந்திரம்-திருமூலர்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் "சிதம்பர ரகசியம்" அடுத்து நாம் படிக்க
இருப்பது.
பிரபஞ்சமாகிய
இந்த ஆடலரங்கத்தில் இடை விடாது ஆடும் இந்த ஆடலரசன் ஆடவில்லை எனில் நாம் வாழ்வது எங்கே?
இந்த ஆடலின் மகத்துவத்தைச் சொல்லி முடியாது. அவன் ஆடுவது ஆனந்த தாண்டவம். இந்தத் தாண்டவம்
பலவகைப் படுகிறது. அது பற்றிப் பின்னால் பார்ப்போம். இப்போது சிதம்பரம் கோவில் மூலஸ்தானத்தில்
உள்ள நடராஜர் சிலை பக்கம் சிற்பத்தின் வலது பக்கமாய் பார்த்தோமானால் ஒரு திரை தொங்க
விடப் பட்டிருக்கும்.அந்தத் திரையை எல்லா நேரமும் திறந்து வைத்துத் தரிசனம் செய்து
வைக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்குள்ளே தான் "சிதம்பர ரகசியம்" உள்ளது. இது
தான் இந்தக் கோயிலின் முக்கியத்துவமும் புனிதமும் கூட. இறைவனின் உருவ தத்துவமான சிவலிங்க
தத்துவத்தை மட்டுமல்லாது உருவமற்ற அந்தப் பரம்பொருளின் அரூப தத்துவத்தையும் உணர்த்துவது.
எல்லையற்றப் பரம்பொருள் எங்கும் விரிந்து பரந்து இருப்பதைக் குறிக்கும்.
ஆகாயம் எவ்வாறு உருவமில்லாமல் உருவம் இருப்பதைப் போல் இருக்கிறதோ அது போல் இந்தப் பரம்பொருளும்
உருவமற்றது. உருவம் இருப்பது போல் உள்ளது. எல்லையற்று விரிந்து பரந்து காணப்படுவது.
ஆதியில் இறைவனை உருவ வழிபாடு செய்து வழிபட்டதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்கு இறைவன்
என்ற ஒரு உருவம் தேவைப் பட அவனுடைய செள்கரியத்துக்காக ஏற்பட்டது தான் உருவ வழிபாடு.
காலப் போக்கில் வழிபாட்டில் இரு முறைகள் ஏற்பட்டன. ஒன்று உருவ வழிபாடு. மற்றது அருவ
வழிபாடு. அருவ வழிபாடு நிர்குண உபாசனை எனப்படும். இது எல்லாராலும் முடியாதது. சாதாரண
மனிதனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. கடுமையாக ஒரு மனதோடு யோகப்பயிற்சி
செய்பவர்களாலேயே நினைத்துப் பார்க்க முடிந்த ஒன்று. அனைத்தையும் கடந்தவர்களாலேயே புரிந்து கொள்ளவும்
முடியும்.
கடவுளைத் தன் மனத்தினுள்ளே நிறுத்தி அவனின் பரிபூரணப் பேரானந்தத்தைப் பெற எல்லாராலும்
முடியாது. யோகிகளும், ஞானிகளும் அதற்கெனப் பயிற்சிகள் பல செய்து, தங்கள் தவத்தாலும்,
தியான வழிபாடுகளாலும் அடைந்த ஒன்றைச் சாதாரண மனிதன் அடைய முடியுமா? வழிபாடுகளிலேயே
மிகச் சிறந்த ஒன்றான இறைவனைத் தன்னுள்ளே காணுதல் எல்லாராலும் முடியாத ஒன்று அல்லவா?
ஆனால் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைப் புரிந்து கொள்ளும் ஒரு வழிமுறை தான்
இந்தச் சிதம்பர ரகசியத்தில் உள்ளது. அதை நமக்குக் காட்டி சொல்லாமல் சொல்வது தான் சிதம்பர
ரகசியம். யோகிகளும் ஞானிகளும், தங்கள் மனதையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு அங்கே
மானசீகமாகக் கவிழ்ந்த மொட்டுப் போன்ற தாமரைப்
பூவில் இறைவனை ஆவிர்ப்பவித்து வழிபட்டு அப்போது ஊற்றெடுக்கும் சச்சிதானந்தப் பேரானந்தத்தைத்,
தன்னுள்ளே உள்ள பரிபூர்ண இறை சக்தியைக் கொண்டு பேரானந்த நிலை எட்டுவது தான். இதற்கு
மிகுந்த பயிற்சி வேண்டும். இது யோக சாஸ்திரமும் சம்மந்தப் பட்டது. நம்முடைய உடலின்
மூலநாடிகளைக் கிளப்பி, மனமாகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் இறை சக்தியைத் தலை
உச்சிக்குக் கொண்டு போய்ப் பேரானந்த நிலையை எட்டுவதே ஆகும்.
(விளக்கம் தொடரும்.) முடிந்தவரை இன்னும் எளிமையாகத் தர முயற்சி செய்கிறேன்.
யோகம்
அறிந்தவர்களும், அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்த முயன்றவர்களுமே அறிந்த உண்மை இது.
நாம் இப்போ தினமும் செய்யற ஆசனங்கள் எல்லாம் யோகம் ஆகி விடாது. உண்மையாக யோகக் கலையைக்
கற்றவர் இன்று மிகச் சிலரே இருக்கின்றனர். இந்த யோகக் கலையின் மூலம் மூச்சைக் கட்டுப்
படுத்தி வேண்டியபோது விடுவதற்கும், இழுப்பதற்கும் தெரிந்தவரே யோகி ஆவார். இது சித்தர்களால்
மட்டுமே முடியும் என நினைக்கிறேன். பதஞ்சலி முனிவரும், வியாகரம பாதரும் சித்தர்களில்
சேர்ந்தவர்கள். அவர்களால் முடிந்தது. இவர்கள் இருவரும் முக்தி அடைந்ததும் ராமேஸ்வரத்தில்
என்று சொல்லுவார்கள். தென்னாட்டைச் சேர்ந்த இவ்விரு சித்தர்களும் சேர்ந்து இறைவனுக்கு
எழுப்பிய கோயில் தான் இந்கச் சிதம்பரம் கோயில். நம் உடலின் அமைப்புத் தான் பொதுவாகக்
கோயில் அமைப்பும். இதில் சிதம்பரம் கோயில் ஞான ஆகாசம் எனப்படும். "சித்"
என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசத்தையும்"
குறிக்கும்.
சித்தர்கள் மூச்சுக்கலையை விஞ்ஞானத்தின் உதவியின்றியே பயின்றவர்கள். மூச்சைக் கட்டுப்
படுத்தத் தெரிந்தவர்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தரம் மூச்சு விடுகிறான் என்பதைக்
கண்டறிந்து அதைக் கட்டுப் படுத்தி ஞானம் அடைந்து சகல சித்தியும் கைவரப் பெற்றவர்கள்.
ஒரு சாதாரண மனிதன் 4 வினாடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான். ஒரு
நிமிஷத்திற்குப் பதினைந்து முறையும், ஒரு மணி நேரத்திற்கு, 900 முறையும், ஒரு நாளுக்கு
21,600 முறையும் மூச்சு விட்டு இழுக்கிறான். இதைக் குறைக்கத் தான் யோகக் கலை பயன்படுகிறது.
அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி 21/2(இரண்டரை) மணி நேரத்துக்கு ஒரு முறை மூச்சை
இழுத்து வெளியிட்டால், பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரைப் போலவும், மார்க்கண்டேயரைப்
போலவும் இருக்க முடியும், வாழ முடியும். உண்மை, பொய்யில்லை.
ஒரு பிறந்த குழந்தையைப் பாருங்கள். அது மூச்சு விடுவதை! முதலில் பிறந்து கொஞ்ச நாட்களுக்கு
மிகச் சரியாக மூச்சை விட்டு இழுக்கும். குழந்தையின் மூக்கு நுனியில் இருந்து அதன் உச்சிக்
குழி இருக்கும் உச்சந்தலைக்கு உத்தேசமாக
12 அங்குலம் நீளம் இருக்கும். குழந்தையின் உச்சந்தலை "படபட"வென அடித்துக்
கொண்டே இருப்பதைக் கண்டிருக்கலாம். குழந்தையின் உள்நாக்குக்கும், இந்த உச்சந்தலைக்கும்
ரகசிய வழி இருப்பதாயும், அதுதான் இறைவன் இருப்பிடம் எனவும் சொல்லப் படுகிறது. அதனால்
தான் குழந்தை பிறந்ததும் தானே சிரிப்பதற்கும், அழுவதற்கும் இறைவன் விளையாட்டுக் காட்டுகிறார்
என்று சொல்கிறோம். 6 மாதத்துக்கு மேல் ஆகிக் குழந்தையின் உச்சிக் குழி மூடியதும் இதில்
4 அங்குலம் குறைகிறது. குழந்தையும் நம்மைப் போல் மூச்சு விட ஆரம்பிக்கிறது. 21,600
ஒரு நாளைக்கு என்ற கணக்குப்படி நம் வாழ்நாள் பூராவுக்கும் வேண்டிய மூச்சை நாம் அதிகமாய்ச்
செல்வழிக்கிறோம். நடக்கும்போதும், நிற்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும்,
தூங்கும்போதும் என்று செலவு செய்வதால் குறைந்து வருகிறது. இந்த ரகசிய வழியானது முறையான
யோகப் பயிற்சியில் மீண்டும் திறந்து கொள்ளும். இதுவே மூன்றாவது கண் எனப்படும் ஞானக்
கண்ணாகும். நம் உள்மனதில் உள்ள மூன்றாவது கண்
எனச் சொல்லப் படும் ஞானக் கண் திறந்து கொள்ளும். உள்ளொளி பிறக்கும். ஞானம் சித்தியடையும்.
டிஸ்கி: அடுத்து இந்த ஞானக் கண் திறக்கும் முறையான "குண்டலினி யோகம்" பற்றி
விவரம் கொடுக்கப் போகிறேன். யாரும் தவறிக் கூட முயற்சி செய்து பார்க்கவேண்டாம். விளைவுகள்
மோசமாக இருக்கும். முறையான குருவிடம் முறையான பயிற்சி இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளில்
மரணம் கூட சம்பவிக்கலாம். திரு ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய "பாபா" திரைப்படத்தில்
காட்டிய யோக முத்திரை தவறு எனவும் அதனால் தான் படம் தோல்வி அடைந்ததோடு அல்லாமல் வேறு
மோசமான விளைவுகளைச் சந்தித்தார் எனவும் சொல்லப் பட்டது. ஆகவே படிக்கிறதோடு நிறுத்திக்
கொள்வோம்.
இந்தப் பதிவு எழுதிய சமயம் படித்துக் கொண்டிருந்த நண்பர்கள் கேட்டதால் குண்டலினி யோகம் குறித்த சில விளக்கங்கள் தர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தொடரோடும் சம்பந்தப் பட்டது என்றாலும் இதில் ஆர்வமில்லாதவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். தவறாக ஏதேனும் எழுதி இருந்தாலும் மன்னித்துத் திருத்த வேண்டுகிறேன்.
ஆனால் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைப் புரிந்து கொள்ளும் ஒரு வழிமுறை தான் இந்தச் சிதம்பர ரகசியத்தில் உள்ளது. அதை நமக்குக் காட்டி சொல்லாமல் சொல்வது தான் சிதம்பர ரகசியம்.
நான் இரண்டு முறை சிதம்பரம் சென்றபோது திரையை விலக்கி எங்க்குக் காட்டியது ஒரு தங்கத்தாலான வில்வ மாலை. ஒன்றுமில்லாத வெற்றிடமே இறைவன் எனவும் அந்த இறைவன் அணிந்துள்ளதே அந்த வில்வமாலை எனவும் சொன்னார் எங்களுடன் வந்த தீக்ஷிதர்.சிதம்பர ரகசியம் என்ன என்பதை இன்னம் கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன்.--
நடராஜன் கல்பட்டுஎல்லோரும் இன்புற்று இருப்பதன்றிவேறொன் றறியேன் பராபரமே
யோகப்
பயிற்சியில் "பிராணாயாமம்" என்ற ஒரு பயிற்சி சொல்லிக் கொடுப்பார்கள். அது
சாதாரணமான மூச்சுப் பயிற்சி. ஆஸ்த்மா வியாதியஸ்தர்களுக்கும், இன்னும் சிலருக்கு மூச்சு
ஒழுங்கு செய்யவும் பயன்படும் இது. இதற்கும் குண்டலினி யோகம்" என்பதற்கும் ரொம்பவே
வேறுபாடு உண்டு. மூச்சுப் பயிற்சியே ஆசான் இல்லாமலோ, சரியாகச் செய்யாவிட்டாலோ மோசமான
விளைவுகள் ஏற்படும். மூச்சைச் சரியாக உள்ளடக்காவிட்டாலோ, வெளிவிடும்போது தவறாய் விட்டாலோ
வயிற்றில் அல்சர் உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. மற்றவருக்கும் பக்க
விளைவுகள் ஏற்படும். இது அனுபவபூர்வமான உண்மை. ஆகையால் குண்டலினி யோகம் என்பது நம்
உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது கண் என்று சொல்லப் படும் ஞானக் கண்ணைத் திறந்து
அதன் மூலம் இறைவனும், அவன் சக்தியும் நம்முள்ளேயே உறைவதைக் காண்பது. இதைத் தான் சமாதி
நிலை என்றும் சொல்லுகிறார்கள். இனி குண்டலினி யோகத்தைப் பற்றி. இதைப் பற்றி இங்கே எழுதுவது
தேவையா எனவும் நினைத்தேன். சிதம்பர ரகசியத்தின் உள் அர்த்தம் புரியத் தேவை எனத் தோன்றியது.
நம் உடலில் முதுகெலும்பின் கீழ்ப்பாகத்தில் மூன்று நாடிகள் ஒன்று சேர்கின்றன. தலை உச்சியில்
இருந்து கீழ் இறங்கி இருக்கும் சூஷ்மன நாடியானது, இட, பிங்கள நாடியுடன் அங்கே தான்
ஒன்று சேர்கிறது. அது ஒரு பாம்பு போல் சுருட்டிக் கொண்டிருக்கும் எனச் சொல்கிறார்கள்.
இங்கே இருக்கும் உள்சக்தியை எழுப்பிக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து தலை உச்சிக்
கொண்டு வந்து சேர்ப்பது தான் குண்டலினி யோகம். இந்தப் பிரபஞ்சமானது எவ்வாறு பஞ்ச பூதங்களின்
சேர்க்கையால் ஆனதோ அவ்வாறே மனித சரீரமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. ஒவ்வொரு
இடத்துக்கும் ஒவ்வொரு சக்தி, அதாவது ஒவ்வொரு பஞ்சபூதங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன.
நம் நாட்டுக் கோயில்களும், முக்கியமாய்த் தமிழ் நாட்டுக் கோயில்களும் நம் மனித உடல்
அமைப்பைக் கொண்டது. இதை மனதில் இருத்திக் கொண்டு சிதம்பரம் கோயிலின் ரகசியத்தைப் பார்க்கவேண்டும்.
மூன்று நாடிகள் ஒன்று சேரும் இடம் "மூலாதாரம்" எனப்படுகிறது.இது நம் உடலில்
முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே அமைந்துள்ளது. 4 இதழ் கொண்ட அமைப்புடன்
கூடிய இதைப் பூமிக்குச் சமமாகச் சொல்கிறார்கள். மஞ்சள் நிறம் கொண்ட 4 இதழ் தாமரைப்
பூவுக்குச் சொந்தமானது. இதற்கெனத் தனியான குணங்களும் உண்டு. அவை பின்னால்.
ஸ்வாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.
மீண்டும்
முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். யாரும் தனியாக முயல வேண்டாம்.
மூலாதாரம்: 4 இதழ் கொண்ட தாமரைப்பூவின் வடிவில் இருக்கும் இங்கே தான் குண்டலினி சக்தியானது
ஒரு பாம்பைப் போல் உறங்குகிறது. மலத்துவாரத்திற்கு மேல் இருக்கும் இது பூமியின் சக்தியைக்
கொண்டது. மஞ்சள் நிறமானது. எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் உள்ள நெகட்டிவ் போலைப் போல் வேலை
செய்யும் இது குண்டலினி சக்தி எழும்புவதற்குக் காத்திருக்கிறது. இட, பிங்கள, சூஷ்மன
நாடிகள் மூன்றும் இங்கே தான் ஒன்று சேர்ந்து உள்ளது. அதற்கு இது தான் ஆதாரமாயும் உள்ளது.
இதன் அதி தேவதை: விநாயகர், இந்திரன், பிரம்மா, தாகினி.
இது நம் உடலில் மலத்துவாரம், மூக்குத் துவாரம், பாதங்கள், ஆடுசதை, தொடையின் மறுபக்கம்
காலை நம் இஷ்டத்துக்கு வளையவும், நடக்கவும் வைக்கும் நரம்பு மண்டலம்.
உணர்வுகள்; மலத்தை வெளியேற்றுதல், பலவிதமான அனாவசிய பயங்கள், குற்ற உணர்ச்சி.
ஸ்வாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது.
6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.
உணர்வுகள்: மயக்கநிலை, தன்னை மறந்த நிலை என்றும் சொல்லலாம். பாலுணர்வுத் தூண்டுதல்
ஏற்படும். இங்கே இருந்து குண்டலினையை மேலே எழுப்ப மிகப் பிரயத்தனப் பட வேண்டும். பாலுணர்வை
முற்றிலும் வெல்ல வேண்டும்.
இதன் அதி தேவதை: வருணன், விஷ்ணு, ராகினி
நம் உடலில் உள்ள சிருஷ்டிக்குக் காரணமான டெஸ்டெஸ் மற்றும் ஓவரிஸ் இதனோடு சம்மந்தப்
பட்டது. செக்ஸுவல் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.
மணிப்பூரம்: தொப்புள் இதன் இருப்பிடம். 10 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட
இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.
உணர்வுகள்: தாகம், பசி, பொறாமை, ஏமாற்றுதல், வெட்கம், பயம், அசட்டுத் தனம், துக்கம்
போன்ற உணர்வுகளைத் தூண்டும். மன உறுதியுடன் சம்மந்தப் பட்ட இது நல்ல ஜீரண சக்தியைக்
கொடுக்கும் உறுப்புக்களையும் தூண்டும்.
அதி தேவதை: வாஹினி, ருத்ரன், லாகினி
உடல் பாகங்கள்: ஜீரண உறுப்புக்கள், கண்கள், பாதங்கள், கணையத்துடன் சம்மந்தப் பட்டு
ஜீரண நீர் உற்பத்தி அடையச் செய்கிறது.
கீதா, குண்டலினியைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். ஆனால், சுலபமாக புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதுதல் குறைவு. அத்துடன், கோயில் அம்சங்களையும், சனாதன தர்மத்தின் பல்வேறு கூறுகளையும் இணைத்து எழுதுதல் இன்னும் அரிது. நீங்கள் விரிவாக இது பற்றி எழுத வேண்டுகிறேன்.நன்றிஸ்வர்ணா
--
மிக அருமையான, எளிமையான விளக்கம்! மரமண்டை எனக்குக் கூடச் சில விஷயங்கள் புரிகிற மாதிரி இருக்கு. மிக்க நன்றி, கீதா!
சித்சபையின் உள்ளே
இந்த யோகத்தை பின் பற்றித் தான் "சிதம்பரம்" கோயில் கட்டப் பட்டுள்ளது. அநேகமாய்த் தென்னாட்டில் குறிப்பாய்த் தமிழ்நாட்டுக் கோயில் அமைப்புக்களும் சரி, கோயில் கோபுரங்களும் சரி, இம்மாதிரியான யோகக் கலையைப் பின்பற்றித் தான் கட்டப் பட்டது. கட்டியவர்களும் இதன் அர்த்தத்தை முழுதும் உள்வாங்கிக் கொண்டு தான் கட்டினார்கள். காலத்தைக் கடந்து நம் கோயில்கள் நிலைத்து இருப்பதே இதனால்தான். அதுவும் மூலஸ்தானக் கோபுரங்கள் அநேகமாய் ஸஹஸ்ரார முறையில் தான் கட்டப் பட்டது. இனி சிதம்பரம் மறுபடியும் போவோம்.
சித்சபையின் உள்ளே இருக்கும் நடராஜத் திருமேனியையும், சிதம்பர ரகசியம்னு சொல்றது என்னன்னும்
பார்த்தாகி விட்டது. இந்தச் சிதம்பர ரகசியம் இருக்கும் பகுதி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கும்.
திரையை விலக்கித் தீப ஆராதனை காட்டுவார்கள்.பொன்னாலாகிய ஒரு வில்வமாலை தொங்கிக் கொண்டிருக்கும்.
மற்றபடி வேறு உருவம் ஒன்றும் தெரியாது. பரம்பொருளின் உருவமற்ற தன்மையைப் பிரகடனப் படுத்திக்
கொண்டிருக்கும். நடராஜரின் ஆன்மா அங்கே உறைந்துள்ளதாயும் கருதப் படுகிறது. ஆத்மஸ்வரூபமாக
இறைவன் அங்கே இருக்கிறார் என்றும் இறைவனின் ஆன்மஒளி உறைந்திருக்கும் இதயம் அது என்றும்
சொல்லப் படுகிறது.
நம்முள்ளேயும் அந்த ஒளி ஊடுருவி நம்முள்ளேயும் இறைவன் உறைகிறார் என்பதைச் சொல்லாமல்
சொல்லிக் கொண்டிருக்கும். அருவமாக நடராஜரும், சிவகாமசுந்தரியும் உறைந்திருக்கும் இடமாய்க்
கருதப் படுகிறது. நடராஜர் "சொரூபம்" என்றால் சிதம்பர ரகசியம் "அரூபம்"
ஆகும். இதைத் தவிர அங்கே ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் ஸ்படிகலிங்கமோ "ரூபரூபம்"
அதாவது, அருவுருவம், உருவமானதும், உருவம் அற்றதும் ஆகும். இப்போ சித்சபையின் உள்ளே
இருக்கும் மற்றக் கடவுளரைப் பார்ப்போம்.
நடராஜரையும் சிவகாம சுந்தரியையும் தவிர அங்கே "சந்திர மெளீஸ்வரர்" என்னும்
ஸ்படிக லிங்கமும் உள்ளது. இந்த லிங்க ஸ்வரூபமும் தீட்சிதர்களால் தினப்படி பூஜிக்கப்
படுகிறது. எப்போதில் இருந்து என்று வரையறுக்கப் படமுடியாத காலத்தில் இருந்தே பூஜிக்கப்
பட்டு வருகிறது. இந்த லிங்க ஸ்வரூபத்தின் காலமும் வரையறுக்கப் படவில்லை. இது நடராஜராலேயே
உருவாக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. தன் தலையில் தான் சூடிக் கொண்டிருக்கும் இளம்பிறையின்
குளிர்ந்த மதுரமான கிரணங்களால் நடராஜர் இதைச் செய்தார் எனச் சொல்லப் படுகிறது. தன்னுடைய
பிரதிநிதிகளாக தீட்சிதர்களை நியமித்துத் தினசரி பூஜை செய்யும்படி பணித்தார் எனச் சொல்கிறார்கள்.
சிதம்பரம் கோவிலில் வைதீக முறைப்படி வழிபாடு செய்யப் படுகிறது. மற்றக் கோவில்களின்
வழிபாட்டு முறைகளோடு ஒப்பிட்டால் , மற்றச் சிவன் கோவில்களில் சைவ ஆகம வழிபாடு தான்
செய்யப் படுகிறது. ஆனால் இங்கோ வைதீக முறைப்படி வழிபாடு. இதுபற்றி முன்னொருமுறை ஒரு
நண்பர் சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இன்று வரை எனக்கு அதற்கான ஆதாரம் கிட்ட வில்லை.
இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி 6 முறைகள் தீட்சிதர்களால். அபிஷேஹம், ஆராதனை செய்யப்
படுகிறது, வெள்ளை வெளேரென இருக்கும் ஸ்படிக லிங்கத்தைத் தவிர இன்னொரு நடராஜரின் பிரதியும்
இங்கே உள்ளது. அது தான் "ரத்ன சபாபதி"!
கிட்டத் தட்ட நடராஜரின் பிரதியான இந்த நடராஜர் மரகதக் கல்லால் ஆனவர். இவரை தினமும்
செய்யும் 6 கால வைதீக வழிபாட்டில் 2-ம் கால வழிபாட்டின்போது பூஜிக்கிறார்கள். சாதாரணமாய்ப்
பார்க்கையில் கறுப்பாய்த் தான் இருப்பார் இவர். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து கற்பூர தீப
ஆராதனை இவரின் எதிரே காட்டப் படும்போது உதயக் கால சூரியனைப் போல் செக்கச் சிவந்த நிறத்துடன்
ஒளிவிட்டுப் பிரகாசிப்பார். இவரைத் தரிசிக்காமல் சிதம்பரம் நடராஜரையும், சிதம்பர ரகசிய
தரிசனத்தையும் பார்த்த பேறு கிட்டாது எனவும் சொல்லப் படுகிறது. இவர் வந்த வரலாறு? சிதம்பர
புராணம் என்ன சொல்கிறது? நாளை பார்ப்போம்.
இந்த
ரத்னசபாபதியைப் பற்றியும் அவர் எவ்வாறு சிதம்பரம் வந்தார் என்பதும் கீழ்க்காணும் சிதம்பர
மகாத்மியம் தல புராணத் தகவல் தெரிவிக்கிறது.
"ஒரு முறை பிரம்மா கங்கைக் கரையில், காசி நகரில் "அந்தர்வேதி" என்னும்
இடத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்தார். அப்போது அவருக்கு வேதங்களை முற்றும் கற்று
உணர்ந்த அந்தணர்கள் தேவைப் படவே ஈசனை நாட அவர் தம் பூத கணங்களை வைத்துச் செய்யச் சொல்லப்
பூதகணங்கள் பிராமணர்களாய் மாறி அங்கு வந்தனர். இந்தப்பூத கணங்கள் ஏற்கெனவே ஈசன் தன் நடனத்திற்குத்
தில்லையைத் தேர்ந்தெடுக்க அவரோடு இருக்க வேண்டி அங்கே சென்றுவிட்டனர். அவர்களே பின்னர்
சிதம்பரம் தீக்ஷிதர்கள் எனப்பட்டனர். இந்தச் சிதம்பரம் தீட்சிதர்களையே மீண்டும் தன்
யாகத்துக்காக பிரம்மா நாடினார். அவர்களை வரவழைத்தார்.
அவர்களும் அவர்களின் குருவான வியாக்ரபாதரின் உத்தரவின் பேரில் காசியை வந்து அடைந்தனர்.
யாகமும் இனிதே முடிந்தது. நடு மதிய நேரம் ஆகவே பின் ஒரு பெரிய சமாராதனை செய்து தீட்சிதர்களை
உபசரித்து "வைஸ்வதேவம்" என்னும் விருந்து உபசாரம் செய்ய முடிவு செய்தார்
பிரம்மா. ஒவ்வொரு பெரிய யாகத்துக்குப் பின்னும் யாகம் செய்ய உதவும் அந்தணர்களை உபசரிக்கும்
முறை அது.
ஆனால் தீட்சிதர்களோ எனில் தினமும் சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்து விட்டே பின்
தங்கள் உணவை ஏற்கும் பழக்கம் உள்ளவர்கள். காசியிலோ நடராஜர் இல்லை. நடராஜ தரிசனம் கிடைக்காமல்
தாங்கள் வரமுடியாது என அவர்கள் தெரிவிக்க செய்வதறியாத பிரம்மா சிவபெருமானின் உதவியை
நாடினார். சிதம்பரம் தீட்சிதர்களோ என்றால் நாங்கள் திரும்பச் சிதம்பரத்துகே போகிறோம்.
என்று கூறுகிறார்கள். யாகத்தின் பலனே இல்லாமல் போய்விடுமே என்று கலங்கிய பிரம்மாவின்
உதவிக்கு அந்தப் பரம்பொருள் செவி சாய்க்காமல் இருப்பாரா? திடீரென ஒரு ஒளி வெள்ளம்.
யாகத் தீ குபுகுபுவென எரிந்து கொண்டிருந்தது. அதில் இருந்து அந்த ஆதிசிவனே நடராஜ ஸ்வரூபத்தில்
தோன்றினார் . திகைத்துப் போன தீட்சிதர்களும், மற்றவர்களும் அந்த நடராஜரைத் துதி செய்து
சந்தனம், தேன், பால் போன்றவற்றால் அபிஷேஹ ஆராதனைகள் செய்து அந்த நடராஜரை வழிபட்டனர். காசியிலே தீக்ஷிதர்கள் வழிபட வேண்டி நடராஜராய்த்
தோன்றிய அந்த அர்ச்சாவதார மூர்த்தியே பின்னர்
அவர்கள் வழிபட்டதற்குப் பின்னர் அப்படியே ரத்தின
சபாபதியாக மாறினார். தீட்சிதர்களுக்கே அந்த நடராஜ ஸ்வரூபத்தை அளித்தார் பிரம்மா. தீட்சிதர்கள்
திரும்பிச் சிதம்பரம் வரும்போது அந்த நடராஜரையும் தங்களுடன் எடுத்து வந்தனர். அன்று
முதல் ரத்தின சபாபதிக்கு தினமும் 2-ம் காலப் பூஜை (காலை 10 மணி அளவில்) செய்யப் படுகிறது.
நடராஜர் "மாணிக்ய மூர்த்தி" என்ற பெயரையும் பெற்றார்.
சித்சபையின் உள்ளே (தொடர்ச்சி)
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்:
சித் சபையின் உள்ளே சிவகாம சுந்தரிக்கு இடப்பக்கமாய் மேற்கே பார்த்துக்
கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார். எல்லாச் சிவன் கோவில்களிலும் பைரவருக்குத்
தனிச் சன்னிதி உண்டு. ஆனால் இங்கேயோ நடராஜரின் பக்கத்திலேயே இருக்கிறார். இவருடைய வாகனம்
ஆன நாய் ஆனது சிவனிற்குக் குடை பிடிக்கும் கணங்களில் ஒருவரான குண்டோதரனின் மறு பிறவி
எனச் சொல்லப் படுகிறது. நடராஜருக்குப் பூஜை நடக்கும் கால பூஜையில் ஒருமுறை இவருக்கும்
அபிஷேகம், ஆராதனை செய்யப் படுகிறது. நடராஜ தரிசனத்துக்கும், சிதம்பர ரகசிய தரிசனத்துக்கும்
கொடுக்கும் முக்கியத்துவம் இவருடைய தரிசனத்துக்கும் கொடுக்கப் படுகிறது.
எல்லாச் சிவன் கோவில்களிலும் காலபைரவர் தான் காவல் தெய்வம். சிவனால் நியமிக்கப் பட்ட இவர் சிவனின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப் படுகிறார்.
முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியைக் கால பைரவர் சன்னிதியில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள்
எனச் சொல்லப் படுகிறது. சிதம்பரம் கோவிலிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தினசரி பூஜை
முடிந்ததும், இரவில் கால பைரவர் சந்நிதியில் அன்றைய பூஜை செய்யும் தீட்சிதர் ஒரு தாமிரத்
தட்டை வைத்து விட்டு வருவார் எனவும், காலையில் அது தங்கமாய் மாறி இருக்கும் எனவும்
நம்பப் படுகிறது. அந்தத் தங்கத் தட்டை வைத்துக் கொண்டுதான் தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள்
செலவிற்கு வழி பார்த்துக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த செவிவழிச் செய்திகளால்தான்
இந்த பைரவருக்கு "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்" என்ற பெயரும் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள்.
எப்போது நின்றது என்று நிச்சயமாய்க் கூற முடியாத கால கட்டத்திலேயே இந்தப் பழக்கம் நின்று
விட்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த பைரவர் "க்ஷேத்திர பாலகர்" எனவும் சொல்லப்
படுகிறார்.
சந்திரசேகரர்:
இவரும் சித்சபையின் உள்ளேயே பைரவருக்கு அடுத்து அதே மேற்குத் திசையைப்
பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவரை "நித்யோத்சவ மூர்த்தி" என்று கூறுகிறார்கள்.
ஏனெனில் நடராஜர் தினமும் அல்லது அடிக்கடி வீதி உலாவோ, அல்லது கோவிலின் உள்ளே வரும்
உலாவோ மேற்கொள்ளுவது இல்லை. ஆண்டுக்கு இருமுறைதான் நடராஜர் கோவிலை விட்டு வெளியே வருவார்.
மற்றச் சமயங்களில் நடராஜருக்குப் பதில் இந்த மூர்த்தியின் திரு உருவம்தான் பிரகாரங்களில்
உலா வர எடுத்துச் செல்லப் படும். தீர்த்தவாரி, பிரதோஷம், சோமவாரம் போன்ற சமயங்களில்
இவர்தான் கோவில் பிரகாரங்களை வலம் வருவார்.
இந்த சந்திரசேகரர் இங்கே சித்சபையின் உள்ளே சிறிய வடிவில் இருக்கிறார். இன்னொரு சந்திரசேகரர்
பெரிய மூர்த்தம் அவரும் சோமாஸ்கந்த மூர்த்தியும் தேவசபையில் குடி கொண்டுள்ளார்கள்.
இவர்களில் பெரிய சந்திரசேகரர் முக்கியமான தீர்த்தவாரி உற்சவங்களிலும், சோமாஸ்கந்த மூர்த்தி
ப்ரம்மோற்சவங்களிலும் சிதம்பரத்தின் நான்கு ரதவீதிகளையும் வலம் வருவார்கள். இந்த சோமாஸ்கந்த
மூர்த்தி பஞ்சமூர்த்திகளில் ஒருவராய்ச் சொல்லப் படுகிறார். இவர்களைத் தவிர நடராஜரின்
பிரதிநிதிகளாய் இன்னும் இருவர் இந்த சித்சபையின் உள்ளே இருக்கிறார்கள். ஒருத்தர்
"பலிநாதர்". இவர் ப்ரம்மோத்சவங்களில் நடராஜரின் பிரதிநிதியாக ரதவீதிகளை வலம்
வருவதோடு அல்லாமல் (அஷ்டத் திக்பாலகர்கள்) எட்டுத்திக்குப் பாலகர்களுக்கும் "பலி"
விநியோகம் செய்யும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இவரை ஹஸ்தராஜா என்றும் அழைக்கிறார்கள்.
அடுத்த முக்கியமான பிரதிநிதி நடராஜரின் தங்கப் பாதுகைகள் இரண்டு. நடராஜரின் அருகேயே
சித்சபையின் உள்ளேயே இவை இடம் பெற்றிருக்கும். நவரத்தினங்கள் பதித்த ஒரு தட்டில் வைக்கப்ப்பட்டிருக்கும்
இவை ஒவ்வொருநாள் இரவும் நடராஜரின் பிரதிநிதியாகக் கடைசி கால பூஜைக்குப் பின்னர்
"பள்ளி அறைக்கு" எடுத்துச் செல்லப் படுகிறார். இவர் கால்களில் சூட்டப் படும்
பூமாலைக்குக் "குஞ்சிதபாதம்" என்னும் பெயரில் சொல்லப்படுகிறது.
சித் சபையில் மேற்குறிப்பிட்ட இறை ரூபங்கள் தவிர "முக லிங்கம்" என்றொரு லிங்கமும் "சிதம்பர ரகசியம்" அருகே உள்ளது. எப்போது என்று சொல்ல முடியாத காலத்தால் முந்தைய இந்த லிங்கம் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தின் பிரதிநிதியாகவும் சொல்லப் படுகிறது. பிரம்மாவின் கர்வத்தை அடக்க சிவன் அவருடைய ஐந்தாவது முகத்தைக் கிள்ளி எடுத்து இங்கே லிங்க ஸ்வரூபத்தில் வைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. (இந்த லிங்கம் நான் இன்னும் பார்த்ததில்லை.)மதுரையம்பதி "பலிநாதர்" பற்றி எழுப்பிய சந்தேகத்துக்கு நான் சொன்ன விடை தவறு என்றும் என் கணவர் கூறுகிறார். பலிநாதர் சூல வடிவத்தில் இருப்பதாயும் கூருகிறார். பிரகாரங்கள் சுற்றி வரும்போது பார்த்திருக்கிறேன் என்றாலும் என்ன ஸ்வரூபம் என்று சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதையும் எங்கள் குருவான ராமலிங்க தீட்சிதரிடம் கேட்டுவிட்டே உறுதி செய்கிறேன்.
சித்சபைக்கு வெளியே சில முக்கியமான நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் அபிஷேகம், ஆராதனை,
அர்ச்சனை, சிறப்பு வழிபாடு செய்பவர்கள் நிற்கும் சிறிய மேடை உள்ளது. இங்கே வைத்துத்
தான் "ஸ்வர்ணாகர்ஷண பைரவர்" அபிஷேகம் செய்யப் படுவார். இங்கே நடராஜர் சன்னிதிக்கு
நேரேயே நந்தியெம்பெருமான் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். சிவனின் அந்தரங்கக் காரியதரிசியாகச்
சொல்லப் படும் இவர் கைலை மலையிலும் முக்கியமாகக் காணப்படுகிறார், ஒரு மலை உருவத்திலேயே.
நடராஜரின் ஆட்டத்துக்கு நந்தி தான் தாளங்கள் போட்டு மேளம் வாசிப்பார் என்று ஐதீகம்.
ஆகவே நடராஜரின் ஆட்டம் நந்தியின் பக்கவாத்தியம் இல்லாமல் நிறைபெறாது. அதிலும் பிரதோஷ
காலங்களில் இவருக்கு எல்லாச் சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இவரைத் தவிர நர்த்தன விநாயகர், இங்கே நடனம் ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அடுத்து
லிங்கோத்பவ மூர்த்தி, சிவனின் வழிபாட்டில் லிங்கோத்பவர் வழிபாடும் ஒன்று. இவரைப் பற்றிய
புராணக் கதை அருணாசலம் மலையுடன் தொடர்பு கொண்டது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததே! ஒரு
சமயம் விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற கேள்வி
எழுந்தது. இருவரும் தாங்களே பெரியவர் எனச் சொல்லிக் கொண்டிருக்க, இறைவன் அவர்கள் முன்னால்
நெருப்பால் எழுப்பப் பட்ட ஒரு லிங்கச் சுவர் போல் எழுந்தருளினார். சூடு தாங்கவில்லை
இருவருக்கும், என்ன செய்ய முடியும்? ஊழித்தீயோ எனப் பயந்தனர்.அப்போது அங்கே எழுந்தது
அசரீரியாக இறைவன் குரல். "என்னுடைய முடியையும், அடியையும் உங்கள் இருவரில் யார்
கண்டுபிடிக்கிறீர்களோ அவர்களே பெரியவர்." இதுதான் இறைவன் சொன்னது. இருவரும் இது
என்ன பிரமாதம் என ஒத்துக் கொண்டனர்.
முதலில் விஷ்ணு போய்ப் பார்த்துவிட்டு வர, என்னால் முடியவில்லை எனத் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். பின்னர் ஒரு அன்ன ரூபத்தில் கிளம்பும் பிரம்மாவும் தேடுகிறார், தேடுகிறார். அவராலும் முடியவில்லை. அப்போது இறைவனுக்கு அர்ச்சிக்கப் பட்ட ஒரு மலரின் இதழ், தாழம்பூ எனச் சொல்வதுண்டு, கீழே வருகிறது. பிரம்மா அந்தப் பூவை எடுத்துக் கொண்டுபோய் சாட்சியாக வைத்துத் தான் "கண்டுகொண்டேன், கண்டு கொண்டேன்", எனச் சொல்ல இறைவன் கோபம் அடைகிறார். "அனைவருக்கும் முதல்வன் நீ, உன்னால் தான் சிருஷ்டியே, நீ இப்படிப் பொய் சொல்லலாமா" எனக்கேட்டு "இன்று முதல் உனக்குத் தனியாகக் கோயில்களோ, ஆராதனையோ கிடையாது, பொய்சாட்சி சொன்ன இந்த மலரும் இனிமேல் என்னுடைய வழிபாட்டுக்கு உதவாது!" எனச் சொல்லுகிறார். இந்த ஸ்வரூபம் தான் லிங்கோத்பவர் எனச் சொல்லப் படுகிறது. அவர் மேல் பிரணவம் எழுதப் பட்டிருப்பதைப் பார்த்த விஷ்ணுவும், பிரம்மாவும் இவரே ஆதியாம் முதல்வன், அனைத்துக்கும் காரணன் எனவும் ஒத்துக்கொண்டனர்.
லிங்கோத்பவர் பத்தின புராணக் கதையைப் பார்த்தோம். இவரைத் தவிர வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்ய ஸ்வாமி சன்னதியும் உள்ளது. ஆறுமுகங்களோடு காட்சி அளிக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்குத் தினமும் கால தீபாராதனை நடராஜருக்குக் காட்டும்போது காலையிலும், மாலையிலும் இந்த இறை ஸ்வரூபங்களுக்கும் காட்டி வழிபாடு நடத்தப்படுகிறது.
ஜைமினி:ஜைமினி
ரிஷியும் சிதம்பரத்துடன் நேரடியாகச் சம்மந்தப் பட்டவர். பதஞ்சலியையும், வியாக்ரமபாதரையும்போல
அவரும் நடராஜரின் "ஆனந்தத் தாண்டவம்" தரிசனத்தைச் சிதம்பரத்தில் கண்டவர்.
ஆனந்த நடேசனின் தாண்டவம் பற்றி அவர் எழுதிய துதி "வேதபாத ஸ்தவம்" எனப்படும்.
பிக்ஷாடான மூர்த்தி: சிவனின் ஒரு ஸ்வரூபமான இவரும் இங்கே கோயில் கொண்டிருக்கிறார்.
ரிஷி, முனிவர்களின் பல்வேறுவிதமான கோரிக்கைகளுக்காகவும், செயல்களுக்ககவும் பல்வேறு
ரூபங்களில் அவ்வப் போது சிவன் எடுத்த ஸ்வரூபங்களில் ஒன்று தாருகா வனத்து ரிஷிகளுக்கக
அவர் எடுத்த பிக்ஷாடன ஸ்வரூபம். தாருகாவனத்து ரிஷிகளுக்காக சிவன் பிக்ஷாடனக் கோலத்திலும்,
விஷ்ணு மோகினிக் கோலத்திலும் நடனம் ஆடி ரிஷிகளின் அகம்பாவத்தைத் தகர்த்தனர். முதன்முதல்
சிவன் பிக்ஷாடனக் கோலத்தில் தான் நடனம் ஆடியதாயும் அதுவும் தாருகாவன ரிஷிகளுக்கு முக்தி
கொடுப்பதற்காகவும், அதன் பின்னரே சிதம்பரம் சித்சபையில் பதஞ்சலி முனிவர், வ்யாக்ரபாதர்
போன்றவருக்காக ஆடியதாயும் சொல்லப் படுகிறது. தெற்கே பார்த்து பிக்ஷாடனர் கோயில் கொண்டிருக்கிறார்.
கால பைரவர்: எல்லாச் சிவன் கோவிலிலும் வெளிப்பிரகாரத்தில் இருப்பார், காவல் தெய்வம்.
கோவிலையும், கோவிலின் சொத்துக்களும் இவர் பொறுப்பு என்று சொல்லும் வண்ணம் முன்னாட்களில்
கோவிலைப் பூட்டிச் சாவியை இவர் சன்னதியில் வைத்துவிட்டுப் போகும் வழக்கம் உண்டு. இவர்
சன்னதியில் இருக்கும் சாவியை யாரும் எடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. இவர்
கூட இருக்கும் இவரின் வாகனம் ஆன நாயை இவர் ஏவி விட்டு அது வந்து பழிவாங்கும் என்றும்
சொல்லப் படுவது உண்டு. காலப் போக்கில் இது மறைந்தாலும் இவரை வணங்குபவர்களுக்கு இவர்
எல்லாவிதமான கஷ்டங்களையும் போக்குவார் என்றும், அஷ்டமி நாட்களில் இவரை வணங்குவது விசேஷமாகச்
சொல்லப் படுவதும் உண்டு. அதுவும் பெளர்ணமிக்குப் பின்னர் வரும் அஷ்டமி நாளைத் திருமணம்
ஆகாத வாலிபர்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்யப் படுகிறது. மேற்கே பார்த்து இவர் இருக்கிறார்.
சூரிய சந்திரர்: நவக்ரஹங்களுக்கு எனத் தனி சன்னதி இருந்தாலும், சூரிய, சந்திரர்க்கு
மட்டும் கால பைரவருக்கு அடுத்தாற்போல் உள்
பிரகாரத்தில் தனித் தனி சன்னதிகள் இருக்கின்றன.
இவர்களுக்கு அடுத்தாற்போல் வடக்கே பார்த்து தேவார மூவரின் சன்னதி இருக்கின்றது. முறையே
அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் கோயில் கொண்டிருக்கிறார்கள்.
*சிதம்பரம்
கோவிலில் பத்து புனித தீர்த்தங்கள் இருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். அதிலே கனகசபைக்குக்
கிழக்கே சன்னதியின் மத்தியில் அமைந்துள்ள கிணறு ஒன்றைப் "பிரம்மானந்த கூபம்"
என்று சொல்கின்றனர். (நான் வெறும் கிணறு என்ற வடிவிலே மட்டும் பார்த்துள்ளேன். அப்புறம்தான்
அது ஒரு தீர்த்தக் கிணறு எனத் தெரிய வந்தது.) சிவசக்தி ஸ்வரூபமாகக் கருதப் படும் இது
மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தம் எனச் சொல்லப் படுகிறது. துலா மாதம் (ஐப்பசி) பஞ்சமி
திதியில் கங்கை இந்தக் கிணற்றில் பொங்கிவருவதாயும் ஐதீகம். கங்கை மட்டுமில்லாமல் மற்றப்
புண்ணிய நதிகளும் இங்கே வந்து சேர்வதாயும் ஐதீகம். தை அமாவாசையில் வரும் தீர்த்தவாரித்
திருவிழாவின் போது நடராஜருக்கு இந்தப் பத்து தீர்த்தங்களில் இருந்தும் புனிதநீர் எடுத்து
அபிஷேகம் செய்யப் படுகிறது. இது சிவனின் விருப்பத்தின் பேரில் கங்கை இங்கே ஆவிர்ப்பவித்தாள்
எனவும் சொல்லப் படுகிறது.
இவற்றைத் தவிர "சண்டேஸ்வர" மூர்த்தியின் சன்னதியும் உள்ளது. 63 நாயன்மார்களில்
ஒருவரான சண்டேசரைத் தரிசனம் செய்தால்தான் சிவ தரிசனம் பூர்த்தி அடையும் என்று சொல்லப்
படுவதுண்டு. கடவுளுக்கும், பக்தனுக்கும் நடுவே ஒரு தபால்காரர் போல் இவர் செயல்பட்டு
நம் கோரிக்கைகளையும், விண்ணப்பங்களையும் கடவுளிடம் சேர்பிக்கிறார் என்றும் சொல்வார்கள்.
கனகசபைக்குக் கிழக்கே பிரம்மானந்த கூபத்துக்கு அருகே இரு சண்டேஸ்வர மூர்த்திகளைப் பார்க்கலாம்.
ஒருவருக்கு ஒரு முகமும், மற்றவருக்கு 4 முகமும் உள்ளது. சதுர்முகச் சண்டேசர் பிரம்மா
சண்டேசர் எனச் சொல்லப் படுகிறார். பிரம்மாவே சண்டேசராக அனுக்கிரகம் பெற்று இங்கே
"சண்டேஸ்வர அனுக்ரக மூர்த்தி"யாகத் தரிசனம் கொடுக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.
பொதுவாய்ச் சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து திரும்பும் சமயம் சண்டேஸ்வரர் சன்னதிக்குப்
போய் இரு கைகளையும் தட்டிக் காட்டி நான் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை எனக் கூறிவிட்டுப்
போவது வழக்கம். ஆனால் இந்தக் கோவிலில் சிவன் கோவிலாக இருந்தாலும் பிரசாதங்கள் எடுத்துச்
செல்லலாம் எனச் சொல்லப் படுகிறது. கோவில் வழிபாடு வைதீக முறையில் நடைபெறுவதாலும் இங்கே
பிரம்மாவே சண்டேசர் பதவி பெற்று அமர்ந்திருப்பதாலும் இவ்வாறு செய்யலாம் எனவும் சொல்கிறார்கள்.
அடுத்து இங்கே பெருமாளும் கோயில் கொண்டிருக்கிறார், அல்லவா? அவர் எவ்வாறு வந்தார் எனப்
பார்ப்போம்!
கனகசபைக்குக்
கீழே பக்தர்கள் தரிசனம் செய்யும் இடத்தில் இருந்து சற்று மேலே கனகசபைக்குச் சமமாக ஒரு
பெரிய மண்டபம் ஊள்ளது. அதில் சற்றுப் படி ஏறிப் போய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று
கொண்டு பார்த்தோமானால் ஒரே நேரத்தில் நடராஜர் தரிசனமும், கோவிந்த ராஜர் தரிசனமும் கிடைக்கும்.
இந்தக் கோவிந்தராஜரும் உள் பிரகாரத்திலேயேதான் கிழக்குப் பார்த்துக் கோயில் கொண்டிருக்கிறார்.
இதை விஷ்ணு பக்தர்கள் "திருச்சித்திரக் கூடம்" என்று அன்புடன் அழைக்கிறார்கள்.
மூலஸ்தானத்தில் யோகநித்திரையில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் ஸ்ரீதேவி,
பூதேவி சகிதம், பிரம்மாவும் நாபிக்கமலத்தில் இருந்து எழுந்த நிலையில் காணப் படுகிறார்.
எல்லையற்ற அந்தப் பரம்பொருளின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டுகளிக்கத் தான் அவரும் இங்கே
கோயில் கொண்டிருப்பதாய் ஐதீகம். வேறு எந்தச் சிவன் கோயில்களிலும் காணக் கிடைக்காத இந்தக்
காட்சி இங்கே மட்டும் தான் கிடைக்கும். இதை முன் வைத்தே தற்காலத்தில் பலகோயில்கள் சிவ-விஷ்ணு
கோயிலாகக் கட்டப் படுகிறது. இந்த கோவிந்தராஜரை முதலில் தீட்சிதர்கள் தான் வழிபாடு செய்து
வந்திருக்கிறார்கள். காலப் போக்கில் மாறி இருக்கிறது. அது பின்னால்.
மூலஸ்தான விமானம் "சாத்வீக விமானம்" என்று அழைக்கப் படுகிறது. பலி பீடம்,
த்வஜஸ்தம்பம் போன்றவை தனியாக உள்ளன. தாயாருக்குத் தனி சன்னதி உள்ளது. தாயாரின் திருநாமம்
புண்டரீகவல்லித் தாயார். உற்சவர்"பார்த்தசாரதி" என அழைக்கப் படுகிறார். இந்தக்
கோயிலின் உள்பிரகாரத்தில் நரசிம்ம மூர்த்தி, வேணுகோபாலர், விஸ்வக்சேனர், பதஞ்சலி, கண்வர்,
ஆஞ்சனேய மூர்த்தி ஆகியோருக்குத் தனி சன்னதிகள் காணப் படுகிறது. "சேஷ சயனம்"
"ராம பாதம்" காணப் படுகிறது. சிவகங்கைத் தீர்த்தம் விஷ்ணு பக்தர்களால்
"புண்டரீக சரஸ்" என அழைக்கப் படுகிறது. முதன்முதல் வியாக்ரமபாதரும், பதஞ்சலியும்
நடராஜ தரிசனமும், ஆனந்தத் தாண்டவமும் காணச் சிதம்பரம் வந்த போதில் இருந்தே கோவிந்தராஜரும்
கோயில் கொண்டதாகவும், அவரை முதன் முதல் கண்வ மகரிஷி வழிபாடு செய்து வந்ததாகவும், பிரத்யட்ச
தெய்வமாக இந்தக் கோவிந்தராஜர் அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.
பொதுவாக எல்லா விஷ்ணு கோவில்களிலும் காணப்படுவது போல் இங்கேயும் பிரசாதமாகத் துளசி
தீர்த்தம், சடாரி சாதிக்கப் படுகிறது. இறைவனின் பாதங்கள் பதிப்பிக்கப் பட்ட அந்தச்
சடாரியைத் தன் தலையில் வைத்துக் கொள்வதின் மூலம் இறைவனே தங்களை நேரில் வந்து ஆசீர்வதித்ததாக
இன்புறுகின்றனர். ஸ்ரீராமனின் பாதுகையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு சென்ற இளவல்
பரதாழ்வார், ஆழ்வார்களில் முதல்வன்? அவன் அவ்வாறு செய்து தன் பக்தியை வெளிக்காட்டிக்
கொண்டதில் இருந்து இவ்வழக்கம் ஆரம்பித்ததோ என்னமோ! இதை ஸ்ரீராமன் பாதுகை என்றே சொல்கிறார்கள்.
சிவனும், விஷ்ணுவும் வேறு வேறு இல்லை, அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு
என்பதை நிரூபிப்பதற்காகவும், பக்தர்களுக்கிடையே உள்ள இந்த வேறுபாடுகளைக் களையவுமே இவ்வாறு
கோயில் கொள்ள இறை அருள் பொங்கியதோ என்று தோற்றும் வண்ணம் இந்தக் கோயிலிலே கோவிந்தராஜனும்
மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.
இந்திரன்
ஒருமுறை மிகவும் கொடுமை நிறைந்த ஒரு ராட்சசனை வதம் செய்ய முடியாமல் மகாவிஷ்ணுவின் உதவியை
நாடினார். மகாவிஷ்ணு அவனைச் சிதம்பரம் கோயிலுக்குப் போய் அங்கே ஆனந்த தாண்டவத்தில்
திளைத்துக் கொண்டிருக்கும் நடராஜரை ஆராதனை செய்துவிட்டு அவர் உதவியை நாடும்படி சொல்ல,
அவன் தான் தனியாகப் போகாமல் மகாவிஷ்ணுவையும் கூட வரும்படி வேண்டினான். அவ்வாறே சிதம்பரம்
வந்த விஷ்ணு, அவனுடைய ஆராதனைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு அல்லாமல், சிவனிடமும்
இந்திரனுக்கு உதவும்படிக் கேட்டுக் கொள்ள அவரும் இந்திரனின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்து
அவனுக்கு அந்த ராட்சசனைக் கொல்ல சக்தி கொடுத்து அருளுகிறார். அப்போதில் இருந்தே மகாவிஷ்ணு
சிதம்பரத்தில் தங்கிவிட்டதாய் ஒரு புராணம் சொல்லுகிறது. இதற்கு உதாரணமாகத் தற்சமயம்
கீழரதவீதியில், கிழக்குச் சன்னதிக்கு எதிரில் இருக்கும் "இந்திர புவனேஸ்வரர்"
என்னும் லிங்கம் இருப்பதாயும் இந்த லிங்கத்தை இந்திரன் வழிபாட்டை ஆரம்பிக்கும்போது
ஸ்தாபிக்கப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். (இந்த லிங்கம் நான் இன்னும் பார்க்கவில்லை!)
மற்றொரு கதை: ஒரு சமயம் மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டு யோகநித்திரையில் ஆழ்ந்திருந்த
சமயம் திடீரென அவரின் உடல் எடை அதிகம் ஆகி ஆதிசேஷன் திணற ஆரம்பித்தான். ஸ்ரீ எனப்படும்
மகாலட்சுமியும், விஷ்ணுவின் வாகனம் ஆன கருடனும் இந்த எடை அதிகரிப்பை உணர்ந்தனர். மகாவிஷ்ணுவின்
உடலில் வியர்வையும் அதிகம் ஆனது. வியந்த அவர்கள் பகவானிடம் காரணம் கேட்க, அவர் சொல்கிறார்,
தாருகாவனத்தில் ரிஷிகளின் கர்வத்தை அடக்கத் தான் மோகினி அவதாரம் எடுத்ததையும் சிவன்
பிட்சாடனராக மாறியதையும், இருவரும் ஆடிய நடனத்தையும் தான் நினைவு கூர்ந்ததாய்ச் சொல்கிறார்.
தன்னுள்ளே ஈசன் நடனமாடுவதைக்கண்டு களித்ததையும் சொல்கிறார். இம்மாதிரி மனதுக்குள்ளே விஷ்ணு ஈசனையும், அவர் நடனமாடியதையும் கண்ட காட்சியை அஜபா நடனம் என்று சொல்கின்றனர். இது குறித்த விளக்கம் பின்னர் வரும். உடனேயே மகாலட்சுமியும், கருடனும் தாங்களும் அந்த
அற்புத நடனத்தைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லவே விஷ்ணு தன் பரிவாரங்களுடன் வியாக்ரபுரம்
என அழைக்கப் பட்ட சிதம்பரம் வந்தடைகிறார்.
அங்கே அவர் சிவனிடம் தன் வேண்டுகோளை வைக்க சிவன் அவரை முதலில் காஞ்சி சென்று அங்கே
ஏகாம்பரநாதர் கோவிலில் ஒரு லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து பூஜித்துவிட்டு வரும்படி சொல்கிறார்.
அவ்விதமே விஷ்ணுவும் காஞ்சி சென்று ஏகாம்பரநாதர் கோவிலின் வெளிப் பிரகாரத்தில்?(சரியாத்
தெரியாது. சமீபத்தில் காஞ்சி போனபோது ஏகாம்பரநாதர் கோவில் போகமுடியலை.) ஸ்தாபிதம் செய்துவிட்டுத்
திரும்புகிறார். சிவனுடன் தன்னுடைய ஆட்டத்தை ஆடி விட்டு இங்கேயே கோயில் கொள்ளுகிறார்.
விஷ்ணு இங்கே கோயில் கொண்டதின் நோக்கம் சிவனின் தாண்டவத்தை எந்நாளும் தரிசிப்பதோடு
அல்லாமல் சபாநாயகன் ஆன அவனுக்குத் துணையாக இருக்கவும், காவலுக்கும்தான் என்றும் தோன்றுகிறது.
எவ்வாறிருப்பினும் பல்லவர்கள் காலத்தில் இருந்து இந்த கோவிந்தராஜர் தில்லையில் கோயில்
கொண்டதற்குச் சரித்திரச் சான்றுகள் இருப்பதாய்க் கூறுகின்றனர். அதுபற்றிப் பாப்போம்.
சரித்திரபூர்வமாக
இந்தக் கோவில் 2-ம் நந்திவர்மன் காலத்தில் புதுப்பிக்கப் பட்டதாய்த் தெரிகிறது. திருச்சித்திரக்
கூடம் என வைஷ்ணவர்களால் அழைக்கப் படும் இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப்
பட்டு வந்துள்ளது. திருமங்கை ஆழ்வாராலும், குலசேகர ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்
பட்ட இந்தக் கோயில், அவர்களால் பாடப் பட்ட திருமொழியிலும் தீட்சிதர்கள் வழிபாடு செய்தது
பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. குலசேகர ஆழ்வார் ராமபக்தியில் சிறந்தவர், ராமரைத்
தொழுது வருவதே பிறவிப் பெரும்பயன் என நினைத்தவர், இந்தக் கோயில் கோவிந்தராஜப் பெருமாள்
ராமர்தான் என மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்திருக்கிறார். அந்த ஸ்ரீராமன் தான்
கோவிந்தராஜராக வந்திருப்பதாய் மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்துள்ளார்.
என்றாலும் சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரை நடராஜருக்குத் தான் முக்கியத்துவம்
கொடுத்துப் பெருமாளை அவரின் பரிவார தேவதைகளில் ஒருவராகவே நினைத்து ஆராதித்து வந்திருக்கிறார்கள்.
காஞ்சியில் உள்ள சிவ- ஏகாம்பரநாதருக்கு விஷ்ணு பரிவார தேவதை என அங்கே உள்ள ஆதிசைவ குருக்கள்
வைத்து வழிபாடு செய்வதைப் போல (இது பற்றிய உண்மையான தகவல் எனக்கு இன்னும் தெரியாது,
கேட்டுத் தான் சொல்லவேண்டும்) சிதம்பரத்திலும், நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண
வந்த பரிவார தேவதைகளில் ஒருவராகவே விஷ்ணுவை வழிபாடு செய்தனர். கிட்டத் தட்ட 10-ம் நூற்றாண்டு
வரை இது தொடர்ந்தது.
கோவிலின் நிர்வாகஸ்தர்களுக்குள் சிவன் கோவிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், விஷ்ணு
கோவிலைப் புறக்கணிப்பதாயும், வழிபாடு சரிவர நடைபெறவில்லை எனவும் குற்றச் சாட்டுக்கள்
எழுந்தன. விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்ட காலத்தில் அச்சுத ராயன் என்பவன் காலத்தில் விஷ்ணு
கோவில் புதுப்பிக்கப் பட்டதோடு அதன் நிர்வாகம் வைஷ்ணவர்களின் ஆதிக்கத்தில் ஒப்படைக்கப்
பட்டது. அத்தோடு நில்லாமல் "வைகானச சூத்ரம்" முறையில் வழிபாடுகள் நடத்தவும்
ஆணை இட்டதாய்த் தெரிகிறது. இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்களாய்த் த்வஜஸ்தம்ப மண்டபத்தின்
கிழக்கே இருப்பதாயும் சொல்கிறார்கள்.
இது இவ்வாறிருக்க நாயன்மார்களில் முக்கியமான நால்வர்களின், அப்பர், சுந்தரர், சம்பந்தர்,
மாணிக்கவாசகர் ஆகியவர்களில் முதல் மூவரின் பாடல்களில் சிதம்பரம் விஷ்ணு கோவிலைப் பற்றிய
குறிப்புக்கள் காணப் படவில்லை எனவும், மாணிக்கவாசகரின் பாடல்களிலேயே விஷ்ணு கோவிலைப்
பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாயும் சொல்கின்றனர். மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக்கோவையில்
அதற்கான ஆதாரங்கள் இருப்பதாயும் சொல்கின்றனர். இங்கே எனக்கு திருக்கோவையார் கிடைக்கவில்லை.
கூகிளில் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் போடுகிறேன்.
மதுரையம்பதி
கேட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் முயற்சி செய்து வருகிறேன். என்றாலும்
எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீ ராமானுஜர் தான் ஸ்ரீரங்கம் கோவிலில் "பாஞ்சராத்திர"
முறைப்படி வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்தவர் என்றவரையில் தெரியும். அவருக்குப்
பின்னர் வந்த ஸ்ரீமத்வேதாந்த தேசிகர் காலத்திலே தான் பிரிவினை அல்லது வேறுபாடு ஏற்பட்டதுன்னு
நினைக்கிறேன். இந்த தேசிகர்தான் "மணிப்ரவாளம்" என்னும் வடமொழியும், தமிழும்
கலந்த எழுத்து நடையை ஏற்படுத்தினார்னும் நினைக்கிறேன். இது கிட்டத் தட்ட பிரபந்தங்களையே
வேதமாக ஏற்கும் ராமனுஜரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும், பிரபந்தங்கள் மட்டும் போதாது
என்று சொல்லும் நிகமாந்த தேசிகரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும் இடையே உள்ள கருத்து
வேறுபாடாகக் கூட இருக்கலாம். இது பற்றி ஒரு பெரியவரிடம் சந்தேகம் கேட்டுள்ளேன். இருந்தாலும்
எனக்குத் தெரிந்தவரையில்"
வைணவத்தில் ஸ்ரீ ராமானுஜர் கூறி இருப்பதாவது:" "ஸ்ரீ" என்னும் மகாலட்சுமியானவள்
அந்தப் பரம்பொருளான "நாராயணனி"டமிருந்து பிரிக்க முடியாதவள். அவனுடன் நித்திய
வாசம் செய்பவள். ஆகவே "ஸ்ரீ"யும் ஒரு பரம்பொருளே ஆவாள்." என்பதாகும்.
ஆனால் மற்றொரு பிரிவினர் கூறுவது: "ஸ்ரீ"யும் நம்மைப் போல் ஒரு ஜீவன். அவள்
பரம்பொருளும் இல்லை, பரம்பொருளுக்கு நிகரானவளும் இல்லை, வேண்டுமானால் நமக்காக அந்தப்
பரம்பொருளிடம் இவள் சிபாரிசு செய்து நம்மைக் கவனித்துக் கொள்ளச் சொல்கிறாள் என்று வேண்டுமானால்
வைத்துக் கொள்ளலாம்." இது மற்றொரு சாரார் கூற்று. இவர்கள்தான் வடகலை, தென்கலை
எனப் பிரிந்து இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். இறைவனை அடைய முயற்சி செய்யவேண்டும்,
என்று ஒருசாராரும், அவன் பாதாரவிந்தங்களைச் சரணடந்து விட்டால் அப்புறம் அவன் நம்மைக்
கவனிக்காமல் போய்விடுவானோ என்று மற்றொரு சாராரும் சொல்வதாக வைத்துக் கொள்ளலாமோ? இது
பற்றிப் பலரிடம் சந்தேகம் கேட்டாச்சு. இப்போக் கடைசியா ஒருத்தரிடம் கேட்டுள்ளேன். கோவில்
வழிபாடுமுறை பற்றிப் பலருக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. சிதம்பரம் கோவில் வைகானச முறைதான்
என்றும், ஸ்ரீரங்கம் கோவில் பாஞ்சராத்திர முறைதான் என்ற அளவிலும் மட்டுமே தெரிகிறது.
இதில் காஞ்சிபுரம் கோவில்காரர்கள் வடகலை என்றும் தெரிய வந்தது. பதிலுக்குக் காத்திருக்கிறேன்.
வைகானசம் என்பது என்னவெனில் வேதங்களை அசுரன் தூக்கிச் சென்ற காலத்தில் அவனை அழிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவை நாடினார்கள். மஹாவிஷ்ணுவைத் துதிக்க வேண்டிச் சொல்ல வேண்டிய தோத்திரங்கள் அனைத்துமே வேதங்களோடு சேர்ந்து அசுரன் கையில்போய்விட்டது. மஹாவிஷ்ணுவை எவ்வாறு வழிபடுவது எனத் தெரியாமல் திகைப்புடன் இருந்த அவர்கள் முன்னர் ஒருவர் தோன்றினார். அவரும் மஹாவிஷ்ணுவைப்போலவே இருந்தார். அப்போது அவர்கள் எதிரே மஹாவிஷ்ணு தோன்றி, இவன் வேறு யாரும் இல்லை; என் அம்சமே தான். என்னுடைய நிழல் இவன். இவனை நான் உயிர்ப்பித்திருக்கிறேன். வைகானசன் என்ற பெயரோடு இவன் என் வழிபாட்டு முறையைக் கற்பிப்பான். ரிஷிகளும், முனிவர்களும் இவனுக்குச் சீடனாக இருந்து வைகானச முறையைக் கற்றுக்கொண்டு பரப்பட்டும் என்று கூறினார்.
வைகானசன் தோன்றுவதற்கு முன்பு பிரம்மாவிடம் சென்ற தேவர்களுக்கு வேதங்கள் இல்லாமல் மஹாவிஷ்ணுவை வழிபட என்ன செய்வதெனத் திகைப்பு ஏற்பட்டு அவர்கள் பிரம்மாவை நாட, அவர் வாயினால் மந்திரங்களைச் சொல்லாமல் தன் கைகளாலேயே சைகைகள் காட்டித் தாந்த்ரீக முறையில் வழிபாட்டைச் சொல்லிக் கொடுத்தார். இது ஐந்து இரவுகள் நடைபெற்றது. இதைப் பாஞ்சராத்ரம் என்கின்றனர். இது எங்கள் ஊர்க் கோயில் பட்டாசாரியார் கூறியது. மாறுபட்ட விரிவான விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
அச்சுத
ராயன் ஏற்படுத்திய "வைகானச"வழிபாட்டு முறை பற்றி நன்கு விரிவாகவே பார்த்தோம்.
இதில் முக்கியமான விஷயம் விட்டுப் போய் விட்டது. அதாவது, நந்தி வர்ம பல்லவனால் புதுப்பிக்கப்
பட்டுக் கட்டுவிக்கப் பட்ட விஷ்ணுவின் கோவில், அவனுக்குப் பின் 3 அல்லது 4 நூற்றாண்டுகளுக்குப்
பின்னர் வந்த சோழகுல அரசன் 2-ம் குலோத்துங்கனால் நீக்கப் பட்டு, விஷ்ணு அவரின் இருப்பிடம்
ஆன கடலுக்கு அனுப்பப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். இப்படியே பலவருடங்கள் இந்தக் கோவிலில்
விஷ்ணு தன் இருப்பிடத்தில் இல்லாமலே இருந்திருக்கிறது.குலோத்துங்கனுக்குப் பின்னர்
வந்த பிற்காலப் பாண்டியர் காலத்தில், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய அரசனின்
காலத்திலும், கிட்டத் தட்ட 15-ம் நூற்றாண்டு வரையிலும் விஷ்ணு கோவில் முக்கியத்துவம்
பெறவில்லை எனத் தெரிகிறது. அரசர்களின் மான்யங்கள் அனைத்தும் நடராஜருக்கே அளிக்கப் பட்டு
வந்திருக்கிறது. சிவ-விஷ்ணு பேதம் பார்க்காத பாண்டியர் காலத்தில் மட்டுமில்லாமல், பின்னர்
வந்த கிருஷ்ணதேவ ராயரும் நடராஜருக்கே மானியங்கள் அளித்து வந்திருக்கிறார். அச்சுதராயர்
காலத்திலேதான் கடலில் இருந்த விஷ்ணுவைக் கண்டு பிடித்து மறுபடியும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
ஒரு சிலர் இந்த விஷ்ணுவின் அர்ச்சாவதார மூர்த்தம்
தற்சமயம் திருப்பதியில் இருப்பதாகவும் கூறுகின்றனர். அவ்வாறு பிரதிஷ்டை செய்யும்போது தற்சமயம் இருக்கும்
கோலத்தில், விஷ்ணுவின் சிரம் தெற்கேயும், பாதங்கள் வடக்கேயும் வைத்துப் பிரதிஷ்டை செய்ததாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷ்ணு சந்நிதிக்கு எதிரே ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது.
அது தான், கமலமத்யம் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் நின்று கொண்டு பார்த்தால்
ஒரே சமயத்தில் நடராஜர் தரிசனமும், மகாவிஷ்ணுவின் தரிசனமும் கிடைக்கும். இவ்வாறு தரிசனம்
செய்வது மிகவும் விசேஷமாய்க் குறிப்பிடுகின்றனர். இதை சிவ வழிபாட்டின் மூன்று முக்கியமான
பகுதிகளாய்க் குறிப்பிடுகின்றனர். அவை யாவன:
அத்யாத்மிகி: இம்முறையான வழிபாட்டில் நாம் கடவுளை நம் உள்ளமாகிய தாமரையில் வைத்து வணங்குகிறோம்.
நம் உள்ளமே ஆகாயம், அங்கே வழிபடும் "ஒளிச்சுடரே" இறைவன் என்று அறிகிறோம்.
ஆதிதெய்வீகி: இம்முறையில் ஒருவன் "நாராயணனே" அனைத்தும் என்று அறிந்து நாராயணனை
வழிபடும் அதே நேரத்தில், அந்த நாராயணன் தன் இருதயத்தில் வைத்துப் பூசிக்கும் சிவனும்
வழிபாட்டுக்கு உரியவர் என்று உணர்கிறான். இம்முறையில் அவன் "அரியும் சிவனும் ஒண்ணு,
அறியாதவர் வாயிலே மண்ணு" என்ற பழமொழியின் உண்மையையும் உணரத் தொடங்குகிறான்.
ஆதிபெளதீகி: இம்முறையில் இந்தப் பிரபஞ்சமே அந்த நடராஜரின் ஆளுமைக்கு மட்டுமில்லால்
அவனால் ஆட்டுவிக்கவும் படுகிறது என்றும், சகலமும் அவனே, அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
இந்த ஆகாயமும் சரி, சூரிய, சந்திரர்களும் சரி, நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து, மலைகள்,
மேடுகள், நதிகள், காட்டாறுகள், வெள்ளங்கள், எரிமலைகள், வெயில், வறட்சி, சுபிட்சம்,
அனைத்துக்கும் காரணன் அவனே என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த விஷயம் பெரும் ஞானிகள்
மட்டுமே அறிய முயற்சித்த ஒன்று. நம் போன்ற சாமானியர்களுக்கும் புரிய வேண்டுமென்று சற்று
எளிமையாகவே கொடுக்கிறேன்.
மேற்சொன்ன மூன்று முறைகளையும் பின்பற்றித் தான் சித்சபையில் "சகலஸ்வரூபராக நடராஜரும்",
"நிஷ்கலஸ்வரூபமாக சிதம்பர ரகசியமும்", "சகல-நிஷ்கலஸ்வரூபமாக ஸ்படிக
லிங்கமும்" வழிபாடு செய்யப் படுகின்றன.
இந்தக் கமலமத்யமத்துக்குச் சற்றுத்தள்ளி மண்டபத்தின் நடுவில் துவஜஸ்தம்பம் உள்ளது.
பக்கத்திலேயே பலிபீடமும் உள்ளது. இந்த துவஜஸ்தம்பத்தில் தான், ஆனித் திருமஞ்சனம், மார்கழித்
திருவாதிரை, பிரம்மோற்சவம் போன்ற திருவிழா சமயங்களில் கொடி ஏற்றுவார்கள். இனி அடுத்து
நிருத்த சபைக்குப் போகலாம்.
>
> ஆதிதெய்வீகி: இம்முறையில் ஒருவன் "நாராயணனே" அனைத்தும் என்று அறிந்து நாராயணனை
> வழிபடும் அதே நேரத்தில், அந்த நாராயணன் தன் இருதயத்தில் வைத்துப் பூசிக்கும்
> சிவனும் வழிபாட்டுக்கு உரியவர் என்று உணர்கிறான். இம்முறையில் அவன் "அரியும்
> சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு" என்ற பழமொழியின் உண்மையையும் உணரத்
> தொடங்குகிறான்.
>
> ஆதிபெளதீகி: இம்முறையில் இந்தப் பிரபஞ்சமே அந்த நடராஜரின் ஆளுமைக்கு
> மட்டுமில்லால் அவனால் ஆட்டுவிக்கவும் படுகிறது என்றும், சகலமும் அவனே, அவனின்றி
> ஓர் அணுவும் அசையாது! இந்த ஆகாயமும் சரி, சூரிய, சந்திரர்களும் சரி,
> நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து, மலைகள், மேடுகள், நதிகள், காட்டாறுகள்,
> வெள்ளங்கள், எரிமலைகள், வெயில், வறட்சி, சுபிட்சம், அனைத்துக்கும் காரணன் அவனே
> என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த விஷயம் பெரும் ஞானிகள் மட்டுமே அறிய
> முயற்சித்த ஒன்று. நம் போன்ற சாமானியர்களுக்கும் புரிய வேண்டுமென்று சற்று
> எளிமையாகவே கொடுக்கிறேன்.
>
மிகவும் ரசித்தேன் கீதா:
இதுதான் பிராமணர்களுக்கான, ரிஷிகளுக்கான பாடமாக இருந்திருக்க வேண்டும்.
(ஆதிதெய்வீகி)
சமீபத்தில் வெளியிடப்பட்ட கல்கி புராணமும் இப்படித்தான் சொல்கிறது.
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html (எண்: 292).
//
வத்ஸ! வேதமென்பது மஹா விஷ்ணுவின் வாக்கு. வேதமாதா ஸாவித்ரீ
எனப்படுவாள்......பத்துவகை ஸம்ஸ்காரமுள்ள பிராம்மணர் வேத மோதி
ப்ரும்மக்ஞானிகளாவர். (பக்கம் 16)
தந்தையே! பிராம்மணர்கள் எதனால் விஷ்ணுவை விதிப்படி அர்ச்சிக்கின்றனர்?....
நியமத்துடன் ஸத்யம் தவறாமல் தர்மாநுஷ்டாநம் செய்கிறவன் விஷ்ணுவை
ஆராதிப்பதாகும் (பக். 17)
//
ஆதிபெளதீகி எனும் கருத்துப்படி சிவ ஸ்மரணை 'கல்கி புராணத்தில்’ செய்யப்படுகிறது.
வைகாநச விதிப்படிதானே பத்மநாபன் கோயில்? அனந்தசயனனின் கையில் சிவலிங்கம்
இருக்கும். அது இல்லாத ஒரு பெருமாளை சிவனின் மாமனாரான தக்ஷண் பிரதிஷ்டை
செய்ய பழிக்குள்ளாகிறான் என்று சொல்கிறது ‘Devon Ke Dev... Mahadev’
எனும் சீரியல். அதன் படி தக்ஷண்
பரம வைஷ்ணவன்.
இந்த வழிமுறை எப்போது யாரால் தென் தமிழகத்தில் மாற்றமைக்கப்பட்டது?
என்பது ஆய்விற்குரியது.
பரம வைஷ்ணவரும், ஸ்மார்த்தருமான கிருஷ்ணப்பிரேமி மகராஜ் பேரம்பலம் என்பது
கோவிந்தன் சந்நிதி என்றும் சிற்றம்பலம் என்பது சிவன் சந்நிதி என்றும்
சொல்வார். ஸ்மார்த்தர்கள் தங்கள் ஆதாரமான அடையாளத்தை மறந்துவிட்டனர் போல்
படுகிறது.
நா.கண்ணன்
சென்ற பதிவில் குறிப்பிட்ட மேற்கண்ட அடையாளங்களுக்கான தமிழ்ச் சொற்களை
திரு திவாகர் தந்து உதவி உள்ளார்.
தமிழில் உரு : ஆடல்வல்லான், அருவுரு: திருமூலத்தான், அரு: ஆகாயம் அல்லது விண்//
இனி இன்றைய பதிவைப் படிக்கலாம்.
நிருத்த சபை என்பது வெளிப் பிரகாரம். இங்கே நாம் இப்போது தரிசிக்கப்
போவது பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப் பட்ட சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும்.
இந்த சோமாஸ்கந்தர் இங்கே வந்ததுக்கும் ஒரு கதை இருக்கிறது.
வனவாசம் செய்து வந்த பஞ்ச பாண்டவர்கள் தருமபுத்திரரின் பிறப்புக்குக்
காரணம் ஆன தர்மராஜனின் உபதேசத்தின் பேரில் சிவனைத் துதிக்க நல்ல இடம்
தேடினார்கள். அதற்கு அவர்கள் தென்பகுதி தான் உகந்தது என முடிவெடுத்து
வந்தபோது சிதம்பரம் பற்றிக் கேள்விப் பட்டு சிதம்பரம் வர "கால முனிவரின்"
உபதேசத்தின் பேரில் தாங்கள் இழந்த ராஜ்யத்தைப் பெறுவதற்கும், வாழ்வின்
மேன்மைக்கும் சிவபூஜை செய்ய, சிவன் சோமாஸ்கந்தரின் வடிவில் நடனக்
கோலத்துடன் அவர்கள் எதிரே தோன்றி அனுக்கிரகம் செய்ததோடு அல்லாமல்,
ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜ ரூபத்தையும் காட்டி அருளினார். அப்போது
முதல் இந்த மூர்த்தம் "பஞ்ச பாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தி" என்ற பெயருடன்
விளங்குகிறார். இவர் நிருத்த சபையின் வடபாகத்தில் இவரும் வடக்கே
பார்த்துக் கொண்டே காட்சி அளிக்கிறார்.
காலசம்ஹார மூர்த்தி: இவர் பஞ்சபாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்திக்கு அருகேயே
மேற்கே பார்த்துக் கொண்டு காணப் படுகிறார். பொதுவாக காலசம்ஹார மூர்த்தி,
மார்கண்டேயருடனும், திருக்கடையூருடனுமே தொடர்பு கொண்டிருந்தாலும்
இங்கேயும் காணப் படுகிறார்.
அடுத்தது ரொம்ப முக்கியமானவர். சரபர்: இவருக்கு இங்கே தனிச் சன்னிதியே
உள்ளது. தனியான பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேஹங்கள் எல்லாம் உண்டு. இவரும்
அந்த சிவபெருமானின் ஒரு ஸ்வரூபம் தான் என்றாலும் இவரின் தோற்றம்
விசித்திரமாய் இருக்கும். இவர் மனித ரூபத்திலும், பறவைகள் போல்
இறக்கைகளுடனும், மிருகங்கள் போன்ற உடல் அமைப்பிலும் காணப் படுவார்.
இவரின் தோற்றம் பற்றிப் பல புராணங்கள், உபநிஷதங்கள், ஆகமங்கள்
பலவிதமாய்க் கூறினாலும் காளிகாபுராணம் கூறுவது என்னவென்றால்: ஹிரண்யனை
வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த
பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில்
வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க
முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில்.
செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான்
ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில்
உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுவதாய்ச் சொல்கின்றனர். இந்த சரபரின்
தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த
கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2
இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும்,
மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில்
சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த
அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச்
சொல்வார்கள். தோற்றத்தின் காரணம் தெரிந்து விட்டது. இனி உடலின் ஒவ்வொரு
பாகமும் எந்த அமைப்பில் ஏற்பட்டது எனப் பார்ப்போம்.
சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான
நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத்
தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த
சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற
திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள்
ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின்
நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான்
நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.
காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை
அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு
வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக
வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி
நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும்
இவ்விதமே குறிப்பிடுகிறது.
எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால்
ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல்
இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால்
எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள்.
இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக
மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர்
மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும்
சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம்
போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது.
இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம்
கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான். ஞாயிற்றுக் கிழமைகளில்
ராகு காலத்தில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப் படுகிறது.
நிருத்த சபைக்கு வந்த நாம் இப்போது அதன் முக்கியமான தரிசனத்துக்குத்
தயாராகிறோம். உண்மையில் இந்த நிருத்த சபைதான் மிகப் பழமை வாய்ந்தது எனச்
சொல்லப் படுகிறது. ஆதியில் காளியின் வசம் இந்தக் கோயிலில் இருந்தபோது
காளி இங்கே தான் வாசம் செய்தாள் என்றும் கூறப் படுகிறது. கனகசபைக்கும்,
த்வஜஸ்தம்பத்திற்கும் தெற்கே இருக்கும் இந்தச் சபையில் தான் சிவன்
காளியுடன் போட்டி போட்டு ஆடித் தன்னுடைய ஆட்டத்திறமையைக் காட்டி
ஜெயித்தார். இந்தத் தாண்டவக் கோலம் "ஊர்த்துவத் தாண்டவம்" என்று சொல்லப்
படுகிறது. இந்த மூர்த்தி ரூபத்துக்கும் "ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி" என்றே
பெயர். அருகாமையில் நாணத்துடன் நிற்கும் காளியின் அழகு கொள்ளையோ கொள்ளை!
காணக் கண் கோடி வேண்டும்! சரபருக்கு அருகேயே கோவில் கொண்டிருக்கும் இந்த
தாண்டவ மூர்த்தியும், காளியும் கிழக்கே பார்த்துக் கொண்டு
இருக்கிறார்கள்.
இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த வெளிப்பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்ம
மூர்த்தி, மகாலட்சுமி சன்னதிக்கும், நிருத்த சபைக்கும் நடுவில்
காணப்படுகிறார், வடக்கு முகமாய். அடுத்து வருவது மகா லட்சுமியின் சன்னதி.
தனியாகக் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தாயாரின் மூல விக்ரஹம்
"புண்டரீகவல்லித் தாயார்" என்று அழைக்கப் படுகிறது. உற்சவ விக்ரஹமும்,
கூடவே இந்தக் கோயிலில் காணப் படுகிறது. நவராத்திரிகளில் விசேஷ
அலங்காரங்கள் செய்யப் படுவதாய்க் கூறுகிறார்கள்.
அடுத்துக் காணப் படும் பாலதண்டாயுத மூர்த்தியின் சிற்பம் ஒரு தூணில்
காணப் படுகிறது. பழனிக்குப் போக விரும்பிய மக்கள் கொள்ளிடத்தின் வெள்ளப்
பெருக்கால் போக முடியாமல் தவித்தபோது அந்தப் பழனி ஆணடவர் இந்தச்
சிற்பத்தில் ஆவிர்ப்பவித்துத் தன்னை வணங்குமாறு சொன்னதாய்ச்
சொல்கின்றனர். அடுத்து வருபவர் நம் நண்பர் விநாயகர் ஒரு அருமையான வேலை
செய்தவர்! என்ன தெரியுமா? மறைந்து இருந்த ஒரு பொருளைக் காட்டிக்
கொடுத்தவர். அதுவும் யாருக்கு? சோழ மன்னனுக்கு! என்ன பொருள்? எந்த
மன்னன்? யோசியுங்கள், நாளைக்கு வந்து சொல்றேன்.
இதே பிரகாரத்திலேயே தேவார நால்வர் ஆன அப்பர்,சு ந்தரர், சம்பந்தர்,
மாணிக்கவாசகர் ஆகியோருக்காக ஒரு கோவில் கிழக்கே பார்த்துக்
காணப்படுகிறது. தினமும் தீவிர சைவர்களும், ஓதுவார்களும் இந்தச்
சன்னதியில் அமர்ந்து தேவாரம் ஓதுவது வழக்கம். கோவிலுக்கென்று அமைந்த
ஓதுவார்கள் இங்கே ஓதுவதோடு மட்டுமின்றி கனகசபையில் அவர்களுக்கென்று
நியமித்த நேரத்தில் கால வழிபாட்டின் போதும், மற்றச் சமயங்களிலும் தேவாரம்
ஓதுவது உண்டு. தினந்தோறும் தீட்சிதர்களில் யாராவது ஒருவரால் தேவார
நால்வருக்கும் அந்த, அந்தக் கால பூஜைகளும் நடைபெறுகிறது.
அடுத்து வருபவர் ஞானகுருவான தட்சிணாமூர்த்தி. பெயருக்கேற்பத் தென் திசை
நோக்கி இருக்கும் இவரின் தோற்றமும், சின்முத்திரை காட்டும் அழகும்
எல்லார் மனதையும் கவர வல்லது. சிவனின் பல்வேறுவிதமான லீலா விநோதங்களில்
அவர் பல ரூபங்கள் எடுத்தார். அப்படி எடுத்த இந்த ஞான ஸ்வரூபம் மெளனத்தின்
மூலமே நமக்கு உண்மையை உணர்த்துகிறது. சனத்குமாரர், சனகர், சனந்தனர்,
சனாதனர் நால்வருக்கும் மெய்ப்பொருளை அறியும் ஆவல் ஏற்பட்டது, அதற்காக
அவர்கள் தகுந்த குருவைத் தேடி அலைந்தபோது ஒரு கல் ஆல மரத்தின் அடியே
அவர்கள் ஞான ஸ்வரூபம் ஆன ஒரு இளைஞன் சின்முத்திரை காட்டிக் கொண்டு
உட்கார்ந்திருப்பதைக் கண்டனர்.
அவர்களை அறியாத உணர்வால் தூண்டப் பட்ட நால்வரும் அங்கே அமர்ந்து குரு
உபதேசம் பெற முயற்சிக்க, உபதேசம் பெறாமலேயே அந்த ஞானகுருவின் மெளனத்தின்
மூலமும், அவர் காட்டிய சின் முத்திரையின் மூலமுமே அவர்கள் மெய்ப்பொருளைக்
கண்டறிந்தனர். அன்று முதல் எல்லாச் சிவன் கோவிலிலும் தட்சிணா மூர்த்தி
ஸ்வரூபம் ஞானகுருவாக, வழிகாட்டியாக வணங்கப் படுகிறது. குருவாரம், அல்லது
வியாழக்கிழமை என்று சொல்லப் படும் கிழமையில் வெள்ளைக் கொண்டைக்கடலையை
ஊறவைத்து மாலை கட்டி இந்த தட்சிணாமூர்த்திக்குச் சாற்றி, வழிபட்டால்
எல்லா ஞானங்களும் பெறலாம் என்பதோடு அல்லாமல் அஞ்ஞானமும் அகலும் என்று
மக்கள் நம்பிக்கை. ஆனால் தக்ஷிணாமூர்த்திக்கு இதைச் செய்வது தவறு என்றும்
ஆன்றோர் கூறுகின்றனர். முக்கியமாய்ப் படிப்பு நன்கு வராத மாணவ, மாணவிகள்
இவரை வழிபட்டால் நன்கு பலன் பெறலாம். நம்பிக்கைதான் முக்கியம்.
சிதம்பர ரகசியம் - லிங்கத் திருமேனியை ஒரு தரிசனம்!
தட்சிணா மூர்த்திக்கு அடுத்துப் "பல்லிஸ்வரர்" என்பவரின் சன்னதி உள்ளது.
பல்லியின் சொல்லுக்குப் பலன்கள் உண்டு என்றும், பல்லி உடலின் எந்தப்
பாகத்தில் விழுகிறது என்பதற்குத் தகுந்தாற்போல் பலன் உண்டு என்பதும்
மக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் கெடுபலன்கள் இந்த ஈஸ்வரரின்
தரிசனத்தால் விலகும் என்றும் க்ஷேத்ரபாலகர்களில் இவரும் ஒருவர் என்றும்
சொல்கின்றனர். அடுத்து வருவது வல்லப கணபதி. சுப்ரமணியர் தாரகன்
வதத்துக்குப் போகும்போது இவரை வணங்கி அருள் பெற்றுச் சென்றதாய் ஐதீகம்.
இந்த சன்னதிக்குப் பின் வருகிறது ஒரு சிறிய கோயில். நடராஜர் கோவில்
கொள்ளும் முன்பு, இது தான் மூலஸ்தானமாய் இருந்தது எனச் சொல்லப் படுகிறது.
லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் ஈசனை, மூலநாதர் எனச்
சொல்கின்றனர். பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் இந்த மூலநாதரைத் தான்
முதலில் வழிபட்டு வந்ததாயும், பின்னர் தான் நடராஜ தரிசனம் கிடைக்கப்
பெற்று ஆனந்தத் தாண்டவக் கோலத்தைத் தாங்கள் எந்நாளும் கண்டு கொண்டு
இருக்க வேண்டும் என்பதால் நடராஜரை இங்கே கோயில் கொள்ள வேண்டினார்கள்
என்றும் சொல்கின்றனர். மேலும் இந்த மூலநாதர் ஜைமினி ரிஷியாலும்,
உபமன்யுவாலும், ராஜா ஹிரண்ய வர்மனாலும் வணங்கப் பெற்றிருக்கிறது. அம்மன்
பெயர் உமாம்பிகை. அம்மன் சன்னதியும் பக்கத்திலேயே உள்ளது. இந்த
மூலநாதருக்கும் அம்பிகைக்கும் அந்த, அந்தக் கால பூஜைகள், வழிபாடுகள்
தீட்சிதர்களாலே செய்யப் படுகிறது.
மூலநாதர் கோவிலைச் சுற்றிக் காணப் படுகின்ற இறை ரூபங்களில் குணேச கணபதி,
காசி விஸ்வநாதர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், கல்பக விருஷம், வைதீஸ்வரன்
கோவில் வைத்தியநாத ஸ்வாமியும், தையல்நாயகியும், 63 நாயன்மார்கள்,
அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றவர்கள் ஆவார்கள். இதை
அடுத்துக் காணப்படுவது, மத்யார்ஜுன க்ஷேத்ரம் என்று சொல்லப் படும்
திருவிடைமருதுரின் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமியின் லிங்கத் திருமேனியும்,
ப்ருகத்-குஜாம்பிகையும். இந்த மத்யார்ஜுன க்ஷேத்திரத்தில் அம்பாள்,
சிவனைத் தன் இருதயத்தில் வைத்து, "அதி தெய்வீகி" முறையில் வழிபட்டதால்
இந்த லிங்கத் திருமேனியை மகாலிங்கம் எனக்குறிப்பிடுகின்றனர். அடுத்து
அருணாசலேஸ்வரரும், தர்ம சாஸ்தாவுக்கும் என ஒரு தனி சன்னதியும் உள்ளது.
இதை அடுத்துக் காணப்படும் கல்யாண மண்டபம், யாகாசாலையை அடுத்து நாம்
கோவிலின் வெளியே வந்து கோபுரங்கள் இருக்கும் திருச்சுற்று வழியாகப் போய்
சிவகங்கைக் குளத்தையும் அதன் அருகே இருக்கும் அன்னை சிவகாமியையும்
தரிசனம் செய்வோமா?
சிதம்பரம் கோவிலில் 5 பிரகாரங்கள் உள்ளன. இதில் 2வது பிரகாரத்தில்
கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த 2-வது பிரகாரத்தைப் "பிராணமயகோசம்" எனவும்
சொல்லுகிறார்கள். நம் உடலில் பிராணன் எவ்வளவு முக்கியமோ அவ்வலவு
முக்கியத்துவம் கோபுரங்களுக்கும் உண்டு. "கோபுர தரிசனம் பாப விமோசனம்"
என்பது ஆன்றோர் வாக்கு! கோவில் நடை கூடக் குறிப்பிட்ட காலம் வரைதான்
திறந்து இருக்கும். இறையைத் தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட காலங்கள்
உண்டு. ஆனால் இந்தக் கோபுரங்கள் நம்மால் இறை தரிசனம் செய்ய
முடியாவிட்டாலும் கோவில் மூடிய பின்பு கூட இவற்றின் தரிசனத்தால் நமக்கு
இறை தரிசனம் கிடைத்த மாதிரி மனம் நிம்மதி அடைகிறது. இந்தக் கோபுரங்கள்
அவ்வப் பொழுது வந்த அரசர்களால் பராமரிப்பும், திருப்பணியும் செய்யப்
பட்டிருக்கிறது. இதில் முக்கியமான மன்னர்கள் எனச் சரித்திரம்
குறிப்பிடுபவை பல்லவர்களின் நந்திவர்மன், ஹிரண்யவர்மன், சோழ அரசர்களில்
தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்த முதலாம் பராந்தகன்,
பாண்டியர்களில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், விஜய நகர அரசர்கள்
குறிப்பிடத் தக்கவர்கள்.
தெற்குக் கோபுரம் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ அரசனால் திருப்பணி
செய்யப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. இதை ஒட்டி ஒரு சுப்ரமணியர் கோவில்
வடக்கே பார்த்து உள்ளது. தவிரவும் சதாசிவ மூர்த்தி என்ற சிவனின் ஒரு
ரூபத்திற்கு எனத் தனி சன்னதியும் தெற்கு கோபுரத்துக்கு எதிரே உள்ளாது.
இதை அடுத்து நாம் காண்பது 8 அடிக்கு உயரமான மிகப் பெரிய "முக்குறுணி
விநாயகர்". இவர் தான் தென் இந்தியாவிலேயே மிகவும் பெரிய விநாயக ரூபமாகக்
கூறப்படுகிறது. இவருக்குப் பெரிய படி அளவு 6 படிக்கு அரிசியில் செய்யப்
பட்ட கொழுக்கட்டையை ஒரே கொழுக்கட்டையாகச் செய்து நைவேத்தியம் செய்யப்
படுகிறது. இங்கே தவிர, மதுரையில் மீனாட்சி சன்னதியில் இருந்து ஸ்வாமி
சன்னதிக்குப் போகும் வழியில் தெற்கு கோபுரத்தைப் பார்த்துக் கொண்டு
"முக்குறுணி விநாயகர்" அமர்ந்திருப்பார். அவருக்கும் இதே மாதிரி
முக்குறுணி அரிசியால் செய்யப் பட்ட கொழுக்கட்டை நைவேத்தியம் பிள்ளையார்
சதுர்த்தி அன்று செய்யப் படும்.
இப்போ முக்குறுணி விநாயகருக்கு அடுத்து நாம் காணப் போவது பாண்டியன்
"ஜடாவர்மன் சுந்தரனால்" திருப்பணி செய்யப் பட்ட மேலக் கோபுரம். இங்கே
நாம் காண்பது கற்ப க விநாயகர் நடனமாடும் திருக்கோலத்தில். இவரை க்ஷேத்திர
பால விநாயகர் எனவும் சொல்கின்றனர். இவர் இங்கே வந்ததுக்குச் சொல்லப்
படும் காரணம் அல்லது புராணக் கதை என்னவென்றால்:
தில்லை நகருக்கு "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்னும்
காரணப் பெயர் உண்டு. எப்போது வந்தாலும் அன்னபூரணியின் அருள் நிறைந்து
உணவு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அந்தப் பழமொழியைச் சோதனை
செய்யவோ என்னமோ, ஒருமுறை துர்வாச முனிவர் நடு இரவில், தன் சிஷ்யர்களுடன்
தில்லைச் சிற்றம்பலம் வந்தடைகிறார். வரும்போதே நல்ல பசி முனிவருக்கு.
கோவிலின் அர்த்தஜாம பூஜையும் அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. ஆகவே
துர்வாசரின் பசியைப் போக்க யாருமே முன்வராததால் கோபம் அடைகிறார் முனிவர்.
அப்போது அன்னை தானே முன் வந்து அவர் பசிப்பிணி தீர்க்க வரவும், துர்வாசர்
நடராஜரின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக் கண்ணும் ஆசையைத் தெரிவிக்கிறார்.
ஆனால் தந்தைக்குப் பதில் அங்கே தனயன் தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு
ஆனந்தத் தாண்டவம் ஆடவே தன்னை மறந்து கோபமும், பசியும் தீர்ந்து சமாதானம்
அடைகின்றார் துர்வாசர்."
உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப் பட்ட "கற்பக கணேச பஞ்சரத்ன ஸ்தவம்"
என்னும் ஸ்லோகத்தில் இதைப் பற்றியக் குறிப்பு இருப்பதாய்க்
கூறுகிறார்கள். இந்தக் கோவிலில் இந்த மூர்த்தங்களைத் தவிர ஒரு
நந்தியெம்பருமானும், வில்வ மரமும், மிகப் புராதனமானது என்று சொல்லப்
படுகிறது உள்ளன. இந்திரன் வல்காலி என்னும் அசுர வதம் செய்யும் முன்னர்
நந்தி ரூபத்தில் இந்த விநாயகரை வழிபாட்டுச் சென்றதாயும், இங்கே உள்ள
வில்வ மரம் சிவனின் ரூபம் என்றும் சொல்கின்றனர்.
அடுத்துக் காண இருப்பது குமரகோட்டம் அல்லது பாலசுப்ரமணிய சன்னதி ஆகும்.
நவ வீரர்களுடனும் இங்கே சூர சம்ஹாரத்துக்கு முன் சுப்ரமணியர்
இருந்ததாய்க் கூறுகின்றனர். மேலக் கோபுரச் சுவர்களுக்கு உள்பக்கமாய்
கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த ஆறுமுகன், தன் ஆறுமுகங்களோடும்
காணப் படுவதோடு அல்லாமல், தன் இரு மனைவியருடனும் இருக்கிறான்.
சிங்கத்தின் மேலே அண்ணனான விநாயகர் காவல் செய்ய, அருணகிரிநாதர் தொழ
அற்புதக் காட்சி அளிக்கிறான். கந்த சஷ்டியில் "சூர சம்ஹார"ப் பெருவிழா
விமரிசையாக இங்கே நடக்கும். அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும்,
காணப் படுகிறது. மாணிக்க வாசகர் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அன்னையை
மணந்த திருக்கோலத்திலே இங்கே சொக்கநாதர் வந்ததாய்ச் சொல்லப் படுகிறது.
அடுத்தது நாம் மேலே காணும் சிவகங்கைக் குளம். சிதம்பரத்தில் பத்து
முக்கிய தீர்த்தங்கள் உள்ளன. அவை
1. சிவகங்கை மூன்றாவது வெளிப்பிரகாரத்தில் அன்னை சிவகாமி சன்னதிக்கு நேரேயும்,
2.பரமானந்த கூபம் ஏற்கெனவே நாம் பார்த்தோம், சித்சபைக்கு வெளியே கிழக்கே
ஒரு கிணறாகவும் ,
3. குய்ய தீர்த்தம் என்று சிதம்பரம் நகருக்கு வட கிழக்கே கிள்ளை என்னும்
இடத்துக்கு அருகே உள்ள "பாசமறுத்தான் துறை"யிலும்,
4.சிதம்பரத்துக்குத் தெற்கே புலிமடு என்னும் தீர்த்தமும்,
5. வியாக்ரபாத தீர்த்தம், மேற்கேயும்,
6. அனந்த தீர்த்தமும் மேற்கே அனந்தீஸ்வரர் கோவில் அருகேயும்,
7.நாகசேரி என்னும் தீர்த்தம் அனந்த தீர்த்தத்துக்கு மேற்கேயும்,
8. பிரம்ம தீர்த்தம் சிதம்பரத்துக்கு வடமேற்கே திருக்களஞ்சேரியிலும்,
9.சிவப்பிரியை, சிதம்பரத்துக்கு வடக்கே தில்லைக் காளி கோவில் அருகேயும்,
10.சிவப்பிரியைக்குத் தென் கிழக்கே "திருப்பாற்கடல்" என்னும் தீர்த்தமும்
இருந்தன. தற்சமயம் சில குறிப்பிட்ட தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில்
சிவகங்கை முக்கியமானது.
"ஹேம புஷ்கரணி", "அம்ருதவாபி", "சந்திர புஷ்கரணி" என்றெல்லாம் தல
புராணங்களில் வர்ணிக்கப் படும் இந்தக் குளம் பண்டைக் காலந்தொட்டே இருந்து
வந்ததாய்க் கூறுகிறார்கள். நமக்கு நன்கு தெரிவது ராஜா ஹிரண்யவர்மனின்
காலத்தில் இருந்து தான். சோழத் தளபதியான காளிங்கராயனால் குளத்துக்குள்
இறங்கும் 9 படிக்கட்டுக்கள் கட்டுவிக்கப் பட்டதாய்த் தெரிகிறது. பல
ரூபங்களில் உள்ள சிவலிங்கங்களும், விநாயக மூர்த்திகளும் இந்தக் குளத்தைச்
சுற்றிலும் பிரதிஷ்டை பண்ணப் பட்டிருக்கிறது. தென்பகுதியில்
தண்ணீருக்குள் "ஜம்புகேஸ்வரர்" லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்யப்
பட்டிருப்பதாயும், தினசரி தீட்சிதர்களால் வழிபாடு செய்யப் படுவதாயும்
சொல்கிறார்கள். (நாங்க இன்னும் பார்க்கவில்லை, இந்த வழிபாட்டை.). பல்லவ
ராஜா சிம்மவர்மன் உடல்நலம் குன்றி இருந்த சமயத்தில் மகரிஷி
வியாகிரபாதரின் ஆலோசனையின் பேரில் அவன் இந்தக் குளத்தில் புனித நீராடி,
நடராஜரை ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசனம் கேட்டுப் பெற்று
வழிபட்டதாயும், அதன் பின்னர் அவன் உடல் நலம் அடையவே, தான் பெற்ற பயன்
அனைத்து மக்களும் பெறவேண்டி அவன் குளத்தை ஆழப்படுத்தியும், அகலப்
படுத்தியும் பராமரிப்புப் பணிகள் செய்ததாயும் கூறுகின்றனர். இதன் பின்னரே
அவன் பெயர் ஹிரண்ய வர்மன் என அழைக்கப் பட்டதாயும் கூறுகின்றனர். இந்தக்
குளம் "ரஜ சபை" என அழைக்கப் படும், ஆயிரக்கால் மண்டபத்துக்கும், சிவகாம
சுந்தரி சன்னதிக்கும் நடுவே அமைந்துள்ளது. குளத்தின் நடுவில் இருந்து
நேரே அன்னை சிவகாமி குளத்தைத் தன் அருட்கண்களால் பார்த்தவண்ணம் அருள்
பாலிக்கிறாள்.
. முஸ்லீம் மன்னர்கள் (திப்பு சுல்தான்?) படை எடுப்பின் போது நடராஜரைத்
தூக்கிக் கொண்டுத் திருவாரூரில் சில காலமும், திருச்சூரில்/ஆலப்புழாவில்?
சில காலமும் இருந்ததாய்த் தீட்சிதர் (எங்கள் குருவான ராமலிங்க தீட்சிதர்)
என்னிடம் நேரில் கூறினார். பல தீட்சிதர்கள் சித்சபையின் மேலே உள்ள
பொன்னால் வேய்ந்த கோபுரத்தின் மேல் ஏறி உயிரை விட்டதாயும் கூறுகின்றனர்.
வேறு சிலர் மூலவர் ஆன நடராஜரை எடுத்துக் கொண்டு கேரளாவில் (அதுதான்
தற்சமயம் அம்பலப்புழா என அழைக்கப்படுவதாய்க் கூறுகின்றனர்.) மறைந்து
இருந்ததாயும், அதன் பின்னர் தான் அங்கே உள்ள கோவில்கள் இவர்களின்
வழிகாட்டுதலின் பேரில் சிதம்பரம் கோவில் அமைப்பில் கட்டப் பட்டதாயும்
அவர் கூற்று. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை. தேடிக்
கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் விரிவான விளக்கம்.
சிவகங்கைக் குளத்துக்கு மேற்கே நாம் காணப் போவது "சிவகாம கோட்டம்" என்று
அழைக்கப் படும் சிவகாம சுந்தரியின் சன்னதி. இறைவனின் சக்தி மூன்றுவிதப்
படுகிறது. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்பவை. சக்தி எல்லாமே
ஒன்று என்றாலும் அந்த அந்த நேரத்துக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளணும்
இல்லையா? அதனால் நடராஜரை விட்டுப்பிரியாமல் அவருக்கு அருகேயே இருக்கும்
சிவகாமசுந்தரியானவளை "இச்சா சக்தி" எனவும், இங்கே தனிக் கோயில் கொண்டு
குடியிருப்பவளை "ஞான சக்தி" எனவும், இவளுக்கு அருகேயே துர்கையாக
இருப்பவளை, கிரியா சக்தி" எனவும் உள்ளூர் மக்கள் நம்புவதோடு அல்லாமல் சில
புராணங்களும் அவ்வாறு சொல்வதாய்க் கூறுகின்றனர். இந்த்க் கோயில் சோழர்
காலத்தில் இரண்டாம் குலோத்துங்கனால் திருப்பணி செய்யப் பட்டுள்ளது.
தசமகாவித்யை பற்றிச் சொல்லும் "ஸ்ரீவித்யா உபாசனா", இந்தக் கோயிலை
பூதேவியின் இருப்பிடம் எனக் கூறுவதாய்த் தெரிகிறது.
சிவகாம சுந்தரியின் அருளாலேயே பதஞ்சலி முனிவர் தன்னுடைய வியாகரணத்துக்கான
மகாபாஷ்யத்தை எழுதியதாய்ச் சொல்கின்றனர். ஹயக்ரீவர், அகஸ்த்யர்,
லோபாமுத்ரை, துர்வாசர், பரசுராமர், ஆதி சங்கரர் போன்றோர் இங்கே வழிபாடு
நடத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு வருஷமும் ஐப்பசி மாசத்தில்
பிரம்மோற்சவத்தின் போது, சிவகாமசுந்தரிக்குத் திருமண விழாவும் நடராஜருடன்
இங்கே நடை பெறுகிறது. வேறெங்கும் காணாத அதிசயமாய்ச் சித்திரகுப்தனுக்கு
இங்கே தனியாய் ஒரு சன்னதி உள்ளே நுழையும்போது இடது பக்கமாய்க் காணலாம்.
சித்திரகுப்தனுடன் கூடவே பிரம்மாவும் இருக்கிறார்.
சிவகாமசுந்தரியை அடுத்துச் சிறிய அகிலாண்டேஸ்வரி சன்னதி காணப் படுகிறது.
அதற்குப் பின்னர் துர்கை சன்னதி கிட்டத் தட்ட ஒரு தனிக் கோவில் போல்
முக்கியத்துவம் பெற்றுக் காணப் படுகிறது. பராசக்தியின் அவதாரங்களில்
ஒன்றான "மஹிஷாசுர மர்த்தினி"யாக வடக்கே பார்த்துக் கொண்டு இங்கே காணப்
படும் அம்மனின் காலடியில் மஹிஷன் காணப் படுகிறான். இந்தக் கோயில்
துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவளாயும் இருக்கிறாள். நவராத்திரிகளில்
இவளுக்குத் தனி அலங்காரம், பூஜைகள் முதலியன உண்டு.
பாண்டியநாயகன் கோவில்: இது ஒரு முக்கியமான கோவில். தென்னிந்தியக் கோவில்
கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் இது மாறவர்மன் சுந்தர
பாண்டியனால் கட்டப் பட்டிருக்கிறது. ஆறுமுகங்களோடும், அருகில் தன்னிரு
மனைவியரான வள்ளி, தேவானையோடும், மயில் வாகனனாய்க் காட்சி தருகிறான் அந்த
வேலவன் இங்கே! பாண்டியனின் குலத்தைக் காக்க வந்த கடவுளான கந்தனுக்குப்
பாண்டியன் இங்கே தனியே கோயில் எடுத்துச் சிறப்புச் செய்தமையால் இந்தக்
கோயில் பாண்டிய நாயகன் கோயில் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர்.
இந்தக் கோயிலின் முன்பாகத்தில் ஷண்முகன் என்ற பெயருடனும் அருள்
பாலிக்கிறான் குமரக் கடவுள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அடுத்து நாம் காண இருப்பது "ரஜ சபை" என அழைக்கப் படும் ஆயிரக்கால்
மண்டபம். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பட்டதாய்ச்
சொல்லப்படுவதற்கான சரித்திரக் குறிப்புக்கள் இருந்தாலும், இந்த ரஜ சபை
மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த ஆயிரக் கால்
மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு தான், ஆதி சேஷனின் அவதாரம் ஆன பதஞ்சலி
முனிவர், தன்னுடைய சிஷ்யர்களுக்குப் பாடம் கற்பித்தார் எனவும், இங்கே
தான் மகாபாஷ்யம் எழுதினார் எனவும் சொல்லப் படுகிறது. இதைத் தவிர, கம்பர்
தன்னுடைய ராமாயாணத்தை அரங்கேற்றியதும், தில்லை தீட்சிதர்களுக்கு
முன்னிலையில் இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் தான். சேக்கிழார் பெரிய
புராணம் அரங்கேற்றம் நடத்தியதும் இங்கே தான். மேலும் மாணிக்க வாசகர்,
பெளத்தர்களை வாதில் வென்றதும் நடராஜர் அருள் பெற்றதும் இங்கே தான் எனக்
கூறப் படுகிறது.
கம்ப ராமாயணம் அரங்கேறியது பற்றிய சந்தேகம் சிலர் எழுப்பி
இருக்கிறார்கள். நானும் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியதாய்த் தான்
படித்திருக்கிறேன். என்றாலும் என்னிடம் உள்ள குறிப்புக்களில் இங்கே
சிதம்பரம் தீட்சிதர்களிடம் அங்கீகாரம் பெறவும் கம்பர் இங்கே தன்னுடைய
ராமாயணத்தைப் பாடியதாயும் கூறுகிறது. ஆகவே தான் அதை எழுதினேன். அடுத்து
கோபுரங்களுக்குச் செய்த பணிகளைப் பற்றியும், தீட்சிதர்கள் பற்றியும்
தெரிந்து கொள்ளும் முன்னர், சிதம்பரம் நகரின் முக்கியத்துவம் பற்றி ஒரு
விளக்கம்.
வைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றால் அது ஸ்ரீரங்கத்தையே குறிக்கும். அங்கே
ரங்கராஜனாக அருள் பாலிக்கிறார் விஷ்ணு. சைவர்களுக்கோ கோயில் என்றால் அது
சிதம்பரம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்தின் ஐந்து ஆதார சக்திகளில் "ஆகாயம்"
சிதம்பரம் தான். இந்தப் பிரபஞ்சமே "விராட புருஷன்" எனக் கூறப்படும் அந்த
மகா சக்தியிடம் அடக்கம் என்றால் அந்த விராட புருஷனின் இருதயத்தின்
மத்தியப் பகுதி சிதம்பரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. குன்டலினி யோக
சாஸ்திர ஆதாரங்களில் இது "அனஹதா" எனக் கூறப்படுகிறது. சிவன் கோவில்களின்
தலைமைப் பீடமாகக் கருதப் படுகிறது. மற்றச் சிவன் கோவில்களில் சிவனின்
மற்ற சக்திகள் வியாபித்திருப்பதாயும், இங்கே தான் ஆத்ம சக்தி
இருப்பதாயும், தினம் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும், எல்லா சக்திகளும்
இங்கே வந்து ஒடுங்குவதாயும் கூறுகிறார்கள்.
ஐந்து சபைகளில் இது "கனக சபை" . மற்றதில் திருவாலங்காட்டில் "ரத்ன சபை"
மதுரையில் "வெள்ளி சபை", திருநெல்வேலியில் "தாமிர சபை",
திருக்குற்றாலத்தில் "சித்திர சபை". இந்தத் திருக்குற்றாலத்தில் சித்திர
சபை பரமரிப்புக் குறைவால் சித்திரங்கள் அழியும் நிலையில் உள்ளது.
நடராஜரும் அங்கங்கே கொஞ்சம் தழும்புகளோடவே காணப் படுகிறார். சிவனின் முழு
சக்தியும், நடராஜ ஸ்வரூபத்தில் இங்கே பக்தர்களுக்கு அருள் பாலித்து
வருகிறது.
மனித உடலில் இதயம் எவ்வளவு முக்கியமோ அப்படி சிதம்பரம் கோவில்
முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் நடராஜர் முழு உருவத்துடன் இங்கே
ஜீவனுடன் விளங்கிக் கொண்டிருப்பதாயும், இந்த ஸ்வரூபத்தை "அம்சி" எனச்
சொல்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களின் லிங்க ஸ்வரூபம், அவ்வாறு இல்லை
எனவும் அவை "அம்சரூபா" எனவும் அழைக்கப் படுவதாயும் சொல்கின்றனர்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, அருணாசலம் நினைத்தால் முக்தி, காசியில்
இறந்தால் முக்தி எனச் சொல்லப்படும் வரிசையில் சிதம்பரம் நடராஜ தரிசனமே
முக்தி எனச் சொல்லப் படுகிறது.
"சித்சபை"யின் தோற்றமும், அங்கே உள்ள மூர்த்திகள் பற்றியும் விரிவாக
ஏற்கெனவே பார்த்தோம். அந்த சித்சபையில் நடராஜரின் வலது பக்கமாய் ஒரு
நீலத் திரை தொங்க விடப் பட்டிருக்கும். அதற்குத் தரிசனம் செய்யவும்
தனியான சாளரம் போன்ற அமைப்பு உண்டு. அதன் வழியாகத் தான் தரிசனம் செய்ய
முடியும். அந்தத் திரையைத் திறந்து கற்பூர ஆரத்தி காட்டும்போது
தங்கத்தால் ஆன வில்வ மாலை மட்டும் எந்த உருவத்தின் மேலும் சாத்தப் படாமல்
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.
அருவமான இறைவன் எங்கும் நிறைந்து உள்ளான். எல்லா உயிர்களிடமும், காணப்
படுகிறான். அனைத்தும் அவனே! என்றாலும் பாமர மக்களுக்குச்
செளகரியத்திற்காக அவன் உருவம் எடுத்து வருவதே நடராஜர். உருவமாக "ரூப"
தத்துவத்தை நிரூபிக்கிறார் இவர். இங்கே உள்ள ஸ்படிக லிங்கமோ
"அருவுரு"வாகக் காட்சி அளிக்கிறது. இது படிப் படியாக இறைவனின்
வழிபாட்டுக்கு உதவி செய்கிறது. முதலில் உருவத்தை வழிபடும் மனிதன்,
பின்னர் தெளிந்து அருவுருவத்தை வழிபட ஆரம்பித்து மெய்ஞானம் பிறக்க,
இறைவன் எங்கும் நிறைந்தவன் என உணருகிறான். இந்த அரிய தத்துவம் தான்
சிதம்பர ரகசியம் எனச் சொல்லப் படுகிறது. தங்கள் ஞானக் கண்ணால் அனைவராலும்
நம்முள்ளே உறையும் இறைவனைக் காண முடியாது என்பதற்காகவும், இறைவனின்
மனோசக்தி இந்த இடத்தில் உறைந்திருப்பதாலும் தான் இங்கே அவனுக்கு உகந்த
வில்வ தளங்களால் மாலையிட்டு அந்த உருவம் அற்றப் பரம்பொருளை வணங்கச்
செய்கின்றனர்.
சிவனும், சக்தியும் ஐக்கியம் ஆகிய மந்திர சொரூபமான திருவம்பலம் எனவும்
இதைச் சொல்லலாம். ஆனால் நாம் காண்பது என்னமோ ஒரு வில்வ மாலை தான்.
குறிப்பால் தான் உணர்த்துவார்கள். இந்த உலகை அதைப் படைத்த இறைவனாக,
அதாவது விராட புருஷனாக வைத்துக் கொண்டால் அதன் நடுப்பாகம் ஆன இதயம் தான்
இந்தச் சன்னதி. எல்லாக் கோவில்களையும் போல் இங்கே இறைவனின் மூலஸ்தானம் ஆன
நடராஜர் சன்னதி நடுவிலும் இருக்காது. சற்றே இடப் புறம் ஒதுங்கியே
இருக்கும். நம் இதயம் எவ்வாறு இடப்புறம் ஒதுங்கி இருக்கிறதோ அப்படி
இருக்கிறது. நம் இதயத்தை ஒரு தாமரை மலராக உருவகப் படுத்தினால் அதனுள்
உறையும் ஜோதி தான் இறைவன். இங்கே தான் இதயத்தின் உள்ளே உள்ள தாமரை மலரில்
ஜோதி ரூபமாக இறைவன் உறைகிறார் என்பது ஐதீகம். நம்முள்ளே உள்ள இறைவனை நாம்
கண்டு உணர்ந்து ஞானம் அடைய வேண்டியே இத்தனை ரகசியமாக இதைப்
பாதுகாக்கிறார்கள்.
நம் உடலையே ஒரு கோயிலாக எடுத்துக் கொண்டால், நம் உடலின் பஞ்ச பூதங்கள்
ஆட்சி செய்யும் இடம் ஆன ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு தேவதைக்கு உரியது.
அப்படிப் பார்த்தால் ஆகாயத்துக்கு உரியது இதயம். இதயம் துடிக்கவில்லை
என்றால் நாம் இல்லை. அந்த இதயம் துடிப்பதை இந்த இறைவனால் தான். ஆகவே தான்
"சிந்தையில் சிவனை நிறுத்திக் கொள்ள"ச் சொன்னார்கள் நம் பெரியோர்கள்.
நிறுத்தி அவனுக்குக் கோயிலும் கட்டினார். பூசலார் நாயனார். யோகக் கலை
வல்லுனர்கள் தங்கள் இதயத்தில் இறையை நிறுத்தி தியான முறையில் வழிபடும்
திறமை பெற்றவர்கள். அந்த யோக முறைப் படியும் இது "அனாஹதம்" எனப்
படுகிறது.அனாஹதம் தான் சரியான வார்த்தை. ஒரு முறைக்குப் பலமுறையாகச் சரி
பார்த்து விட்டேன். சாதாரண மனிதர்களால் முடியாத ஒன்றை மறைமுகவாகவேனும்
அவனுக்கு உணர்த்தும் வண்ணம் ஏற்பட்டது தான் இந்தச் சிதம்பர ரகசியம்.
இன்னும் எளிமையாகச் சொன்னால் "ஜீவாத்மா"வும் "பரமாத்மா"வும் ஐக்கியம்
ஆகும் இடம் எனவும் சொல்லலாம். ஆகாயத்தின் தன்மை இருப்பதால்,இந்த இடத்தில்
உருவம் ஏதும் இல்லாமல் நிர்மலமாக இருப்பதால் தான் சிதம்பரம் நகரை பஞ்ச
பூதத் தலங்களில் "ஆகாயத் தலம்" என்றும் சொல்லுவார்கள். எல்லாரும்
மீண்டும் மீண்டும் சிதம்பர ரகசியம் குறித்துக் கேட்டதால் மறுபடி விளக்கம்
கொடுக்க வேண்டியதாயிற்று.

இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே
காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், புல், பூண்டு, செடி, கொடிகள்,
மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள்,
பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள், வண்ணச்
சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த
வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி? பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது?
அனைத்துக்கும் காரணம் இந்த இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த
நடராஜன், ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில், வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது,
பூக்கள் மலர்கின்றன, வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன, மனதில்
மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற்போல்
புயல் அடிக்கிறது, பெருமழை பொழிகிறது, இடி இடிக்கின்றது, மின்னல் கண்ணைப் பறிக்கிறது,
கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால்
நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும், இந்த நிகழ்வுகள் ஏற்படக் காரணம் என்ன?
எல்லை அற்றப் பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை"சதாதாண்டவம்" என்று சொல்கின்றனர்.
அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் "சபாபதி" "சபாநாயகன்" "நடராஜராஜா"
என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இதை "நடாந்த தாண்டவம்" எனவும் சொல்கின்றனர்.
முடிவில்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக்
கோலங்கள் பலவகைப் பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாகவும், சிதம்பரத்தில்
மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.
பரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான
பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்லது. அவை :
1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் , பொன்னம்பலம்
2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்
3.உமா தாண்டவம் -
4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,
5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு
6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்
7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி,
தாராமங்கலம்.
இது தவிர, பிரளய காலத்தில் ஆடப் படும் சம்ஹார தாண்டவமும் சொல்லப் படுகிறது.
திருக்குற்றாலத்தில் "சித்திரசபை"யில் காணப்படும் இந்தத் தாண்டவம்
"திரிபுரத் தாண்டவம்" என்று அழைக்கப் படுகிறது. திரிபுரர்களைச் சம்ஹாரம்
செய்யப் புறப்பட்ட ஐயன், தன் சிரிப்பாலேயே அவர்களை எரித்ததாய்க்
கூறப்படும் வேளையில் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தை பிரம்மா தானே படமாய்
வரைந்ததாய்ச் சொல்லப் படுகிறது. மிக அரிய வகையான சித்திரங்களையும்
இறைவனின் 64 திருவிளையாடல்களைப் பற்றிய அரிய சித்திரங்களையும் இங்கே
காணலாம். இங்கே ஒரு தாமிரத்தினால் ஆன சிறிய நடராஜர் திரு உருவம்
இருந்திருக்கிறது. நாங்கள் போன போது பார்க்க முடியவில்லை. :( எந்த
நேரத்திலும் அழியக் கூடிய கோலத்தில் பாதி நிறம் மங்கியும், சில இடங்களில்
நிறம் மங்காமலும் நடராஜர் மிகப் பரிதாபமாய்க் காட்சி அளிக்கிறார். வருகை
தரும் மக்கள் தங்களாலான சித்திரங்களை அந்த உயரிய சித்திரங்கள் மீது
வரைந்திருப்பதையும் காண முடிகிறது. அரிய பொக்கிஷம் என உணர இன்னும் எத்தனை
நாள் ஆகுமோ தெரியவில்லை! :((((((
வெள்ளியம்பலக் கூத்தன்: மதுரையில் ஆடியது வேறு காரணத்துக்கு எனச் சொல்லப்
படுகிறது. மதுரை மீனாட்சியின் திருமணத்துக்கு வந்திருந்த பதஞ்சலி,
வியாக்ரபாதர் போன்ற ரிஷி, முனிவர்கள், தாங்கள் தினசரி தரிசிக்கும்
நடராஜத் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் உணவு உண்ண முடியாது எனச் சொல்லவே
அவர்களுக்காக ஆடப்பட்டது வெள்ளியம்பலக் கூத்து. இது உன்மத்தத் தாண்டவம்,
சொக்கத் தாண்டவம், ஞானசுந்தரத் தாண்டவம் எனவும் அழைக்கப் படும். இவ்வாறு
இடக்காலைத் தூக்கி இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் கால்
வலிக்குமே என வருந்தினான் மன்னன் ராஜசேகர பாண்டியன். அவன் மனம் மகிழ
ஆடியது தான் "கால் மாறி ஆடிய படலம்". வலக்காலைத் தூக்கி ஆடும் இந்தக்
கோலம் மதுரையில் மட்டுமே காணக் கிடைக்கும். யு.எஸ்.ஸில். ஹூஸ்டன் நகரின்
மீனாட்சி கோவிலிலும் நடராஜர் வலக்காலைத் தூக்கி ஆடிய வண்ணமே அருள்
பாலிக்கிறார்.
இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்துத் திரு உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர்
திரு உருவம் எங்கும் காணக் கிடைக்காத ஒன்று. இந்த மரகதநடராஜரைச் சுய
உருவில் காணவேண்டுமானால், மார்கழித் திருவாதிரை அன்று மட்டுமே காண
முடியும். மற்ற நாட்களில் அவர் மேல் சந்தனக் காப்பு சாத்தப் பட்டே காண
முடியும். இவரை அன்னையின் வேண்டுகோளுக்கிணங்கி அறைக்குள் அன்னை மட்டுமே
காணுமாறு ஆடியதாய்க் கூறுகின்றனர். "அறைக்குள்" ஆடியது திரு
உத்தரகோசமங்கையிலும், "அம்பலத்தில்" சிதம்பரத்திலும் ஆடியதாய்க்
கூறப்படுகிறது. இவற்றைத் தவிர எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ
மூர்த்தம் இருந்து வந்தாலும், இந்திரனிடம் இருந்து முசுகுந்தச்
சக்கரவர்த்தியினால் பெறப்பட்ட 7 விதமான நாட்டிய பாவங்களைக் காட்டும்
"விடங்க மூர்த்தி"களும் உள்ளனர். நாளை பார்ப்போமா?
சிறந்த சிவபக்தன் ஆன "முசுகுந்தச் சக்கரவர்த்தி" தேவேந்திரனுக்குத்
தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தான். அதன் பலனாக அவனுக்குக் கிடைத்தவையே
ஏழு விதமான நடராஜத் திருக்கோலங்கள். இவையே வேறுவிதமாயும் சொல்லப்
படுகிறது. முசுகுந்தன் பூஜித்து வந்த நடராஜ மூர்த்தத்தைத் தேவேந்திரன்
கவர்ந்து கொண்டு செல்ல, முசுகுந்தன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான்.
அவனின் நடராஜ மூர்த்தம் போலவே மற்றும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்து,
முசுகுந்தனிடம் காட்டுகிறான் தேவேந்திரன். உன்னுடையது இவற்றில் எதுவோ
நீயே பார்த்து எடுத்துச் செல் எனக் கூறுகிறான். இறை அருளால் சரியான
மூர்த்தத்தைக் கண்டறிகிறான் முசுகுந்தன். அதுவே திருவாரூர் தியாகராஜா
எனவும், மற்ற மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே தேவேந்திரன் அளித்தான்
எனவும் அவை முறையே
திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம்
வேதாரண்யம் - புவனி விடங்கர் -ஹம்சபாதா நடனம்
நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - விசி நடனம்
திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்
திருக்காரயல் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்
திருக்குவளை - அவனி விடங்கர் - ப்ருங்க நடனம்
திருவாய்மூர் - நிலா விடங்கர் - கமலா நடனம்
என்று சொல்லப் படுகிறது. பொதுவாக ஈசனின் திருநடனம் 9 வகை எனவும் சொல்லப்
படுகிறது. அவை ஆனந்தத் தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம்,
கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம்,
திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம். இதைத் தவிரத் தஞ்சை
மாவட்டத்தின் திருவெண்காட்டிலும், திருச்செங்காட்டாங்குடியிலும் ஈசனின்
நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில்
ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து வகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை சிவானந்தக்
கூத்து, அறிவையும், சுந்தரக் கூத்து, ஆற்றலையும், பொற்பதிக் கூத்து,
அன்பையும், பொற்றில்லைக் கூத்து, ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து,
அறிவு கூடுதலையும் குறிப்பதாய்ச் சொல்லுகிறார்.
சிவானந்தக் கூத்து: திருமந்திரப் பாடல்
"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்
தேனுந்தும் ஆனந்தமாநடங்கண்டீர்:
ஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கானது."
சுந்தரக் கூத்து:
"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டங்கரியான் கருணை திருவுருக்
கொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே!"
பொற்பதிக் கூத்து:
தெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்
அற்புதமானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே!"
பொற்றில்லைக் கூத்து:
"அண்டங்கள் ஓரேழும் அப்பொற்பதியாகப்
பண்டையாகாசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே!"
அற்புதக் கூத்து:
"இருவருங்காண எழில் அம்பலத்தே
உருவோடருவோடு அருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தனாந்தன்
அருளுருவாக நின்றாடலுற்றானே!"
மஹாவிஷ்ணு ஒரு சமயம் தனக்குப் பிள்ளை வரம் வேண்டிப் பிரார்த்தித்தார், இறைவனையும்,
அன்னையையும். அவருக்கு வரம் அளிக்க இறைவன், அன்னையுடன் நேரிலே வந்தார். இறைவனும் விஷ்ணுவுக்கு
வரம் அளித்தார். அப்போது அவர் அன்னையுடனும், ஸ்கந்தனுடனும், சோமாஸ்கந்தனாக வந்திருந்த
கோலம் விஷ்ணுவின் மனதை மிகவும் கவர்ந்தது. இந்தக் கோலத்திலேயே தான் பூஜிக்க ஒரு சிற்பம்
வேண்ட இறைவனும் அருளினார். அந்த மூர்த்தம் தான் இந்தத் தியாகராஜா இவர் தான் சப்த விடங்கர்களில்
முதல்வர். முதல் முதல் விஷ்ணுவிடம் இருந்தவர். இவரின் இந்தக் கோலத்தை மனதிலேயே நினைத்து,
நினைத்து, விஷ்ணு, அந்தக் கோலத்துக்கு ஏற்றத் தாளத்தை மனதிலேயே கொண்டு வந்து திரும்பத்
திரும்ப நினைக்க இறைவனின் நாட்டியக் கோலம் தென்பட்டது, அவருக்கு. மனதிலே தாளத்தைச்
சொல்லிக் கொண்டதாலும் இறைவனின் அந்தத் தோற்றம் தவளையை நினைவுறுத்துவதாயும் இருந்தமையால்
இந்தத் தாளத்துடன் கூடிய வடிவுக்கு "அஜபா நடனம்" என்ற பெயர் ஏற்பட்டதாய்த்
திருவாரூர்த் தல புராணம் சொல்லுகிறது. சமீபத்தில்
திரு தி.வா. அவர்கள் அஜபா மந்திரம் என்பதற்கு வேறு வகையில் விளக்கம் அளித்தார். அதாவது மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே வர வர, நாளாவட்டத்தில்
அது மனதுக்குள் ஓட ஆரம்பிக்கும். அப்போது வெளிநாட்டத்தை
நிறுத்தி நாம் உள்ளே பார்க்க மந்திரம் ஓடுவது தெரியவரும். இது தான் அஜபா ஜபம் என்பது அவர் கொடுத்த விளக்கம்.
பின்னர் அந்த விக்ரஹம் ராஜா முசுகுந்தனுக்கு விஷ்ணு அளித்ததாகவும், அதை இந்திரன் கவர்ந்து
கொண்டு சென்றதாயும் இந்திர லோகம் சென்று முசுகுந்தன் விக்ரஹத்தைத் திரும்பக் கேட்கும்போது,
ஒரே மாதிரியான 7 வடிவங்களை இந்திரன் காட்டி இவற்றில் உன்னுடையது எதுவெனத் தெரிந்து
நீயே எடுத்துக் கொள் என்றதாயும், இறை அருளால் உண்மையான சிலா வடிவை முசுகுந்தன் கண்டறிந்ததாயும்
கூறுகின்றனர். அவனுடைய இறை பக்தியை மெச்சியே இந்திரன் 7 விடங்கர்களையும் அளித்ததாயும்
அவையே முன் பதிவுகளில் வந்த கோவில்களில் நிறுவப் பட்டதாயும் கூறுகின்றனர். இதை இங்கேயே
நிறுத்திக் கொள்கிறேன்.
சிதம்பரத்தில் நடராஜா விழித்துக் கொண்டு இடைவிடாது ஆடிக் கொண்டே இருக்கிறார். ஸ்ரீரங்கத்திலோ
மாறாக ரங்கராஜா நீள நெடுகப் படுத்துக் கொண்டு
தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்றாலும் இருவரின் தொழிலும் நடைபெற்று வருகிறது. சிதம்பரம்
கோயிலைப் பல சிவனடியார்களும், வைணவ அடியார்களும் வணங்கி வந்தாலும் குறிப்பிடத் தக்கவர்களில்
வியாக்ரபாதர், பதஞ்சலி, வியாக்ரபாதரின் மகன் உபமன்யு, ஜைமினி ரிஷி, பிருங்கி ரிஷி,
இந்திரன், வருணன், போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். சரித்திர பூர்வமாய்ப் பார்த்தோமானால்,
மன்னன் ஹிரண்ய வர்மன் காலத்தில் இருந்து திருநீல கண்டர், திருமூலர், மாணிக்க வாசகர்,
திருஞான சம்மந்தர், அப்பர், சுந்தரர், நந்தனார், போன்ற நாயன்மார்களும், பின்னர் வந்த
நாட்களில் உமாபதி சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர், ராமலிங்க ஸ்வாமிகள், போன்ற சிவனடியார்களும்
குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.
"ஊர்த்துவத் தாண்டவம்" திருவாலங்காட்டில் காணக் கிடைப்பது. இந்தத் திருவாலங்காடு, சென்னையிலிருந்து அரக்கோணம் போகும் வழியில், சென்னைக்கு மேற்கே 37 அல்லது 40 மைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தலம் தான் "ரத்னசபை" ஆகும். இன்னொரு திருவாலங்காடு, ஆடுதுறைக்கு அருகே உள்ளது. அந்தத் தலம் "ரத்னசபை" அல்ல. இன்று அபி அப்பாவுடன் சில சந்தேகங்கள் கேட்கும்போது அவர் ஆடுதுறை அருகே உள்ள தலம் தான் ரத்னசபை என நினைத்துக் கொண்டிருந்தார். இன்னும் சிலருக்கும் சந்தேகங்கள் ஏற்படலாம். அதற்காகவே மீண்டும் நினைவு படுத்தி உள்ளேன். இங்கே மட்டும் இடக்காலைத் தூக்கி ஆடியபடி நடராஜர் இருப்பார். மற்ற இடங்களில் உள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி வலக்காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்தக் கோலத்தைத் தான் நாட்டிய சாஸ்திரத்தில் "லலாட திலகம்" எனச் சொல்லப் படுகிறது. ஆனால் பேச்சு வழக்கில் இறைவன் தன் காதுக் குழையை மாட்டிக் கொள்ளக் காலைத் தூக்கியதாகச் சொல்லப் படுகிறது. அதுவும் சரி அல்ல. வலக்காலைத் தூக்கி அதன் உதவியால் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் அபிநயம் அது. இப்போது இந்தக் குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
சிதம்பரத்தில் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டு இறைவன் குடியேறியதும் சிவகணங்கள் கைலையில்
இறைவன் இல்லாமல் அவனைத் தேடிக் கொண்டு காசி நகருக்கு வந்து, அங்கிருந்து இறைவன் சிதம்பரத்தில்
இருப்பதைத் தெரிந்து கொண்டு, அந்தணர்களாக மாறி, அந்தணர்கள் உருவில் சிதம்பரத்தை அடைந்ததாகவும்,
அவர்கள் அனைவரும் இறைவனைப் பிரிய மனம் இன்றி அங்கேயே தாங்களும் குடி கொள்ள விரும்பியதாகவும்,
இறைவனும் அவ்வாறே அருளியதாகவும் கூறுகின்றனர். அந்தச் சிவ கணங்களே "தில்லை வாழ்
அந்தணர்கள்" என்று கருதப் படுகிறது. இறைவனுக்கு அருகே இருந்து தொண்டு செய்யும்
பாக்கியம் பெற்ற அவர்கள் தங்கள் தொண்டைக் கைவிட மனமில்லாமல் சிதம்பரத்திற்கும் வந்து
இங்கேயும் அவர்களே தொண்டு செய்யும் உரிமையைப் பெற்றதாயும் சொல்கின்றனர்.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
(தி. 7 ப.39 பா.1)
திருச்சிற்றம்பலம்.
என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கூறுகின்றார். திருஞானசம்மந்தரும்
தில்லைவாழ் அந்தணர்களைத் தாம் சிவகணங்களாகவே கண்டதாய்க் கூறுகிறார். நடராஜரையும், சிவகாமசுந்தரி
அம்மையையும் தங்களில் ஒருவராகவே காணும் அவர்கள் இன்றுவரை தில்லைச் சிதம்பரம் கோயிலில்
நடராஜருக்குப் பூஜை செய்யும் உரிமையையும், கோவிலின் நிர்வாக உரிமையையும் தாங்களே வைத்துக்
கொண்டு பணி செய்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய சில குறிப்புக்களையும், அவர்களின்
பணி எத்தகையது என்பதையும் சிறிது பார்க்கலாம்.
இந்தச் சிதம்பர ரகசியம் தொடர் எழுதுவதிலே என் பங்கு என்பது ஒண்ணுமே இல்லை, பல குறிப்புக்களைக் கொடுத்து உதவிய எங்கள் கட்டளை தீட்சிதர் ராமலிங்க தீட்சிதர் அவர்களுக்கும், நண்பர் ஆகிரா அவர்களும், நண்பர் சிவசிவா அவர்களும், ஸ்வாமி சிவானந்தர் எழுதிய நடராஜர் பற்றிய தகவலகளும், சிவன் பற்றிய தகவல்களும்,பதஞ்சலி யோக சாஸ்திரம் பற்றிய வலைத் தளம், ஸ்ரீவித்யை பற்றிய வலைத்தளம், temple.net மற்றும் tamil.net போன்ற வலைத்தளங்களும், theevaaram.org, saivam.org, wikipedia.org, தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் வலைத்தளம், தல புராணங்கள் என உள்ளனவும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றிய வலைத்தளங்கள், இன்னும் கூகிள் தேடலில் கிடைத்த சில அரிய வலைத்தளங்களுமே இதற்குக் காரணகர்த்தாக்கள். அவற்றை நான் உபயோகம் செய்து கொண்டதைத் தவிர என் பங்கு ஏதுமே இல்லை. ஆகவே காரணம் ஏதும் இல்லாமல் என்னைப் புகழ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது கூட மாலிக்காஃபூர் பற்றித் தகவல் தேடுகிறேன். "திண்ணை"யில் அரவிந்தன் நீலகண்டன் எழுதினது தவிர, கண்ணபிரான் கே.ஆர்.எஸ். கூகிளில் books.google.com -ல் உள்ள ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சுட்டி கொடுத்திருந்தார். என்றாலும் அதில் வரும் பிரமஹஸ்தபுரம் ஒருவேளை சிதம்பரத்தைக் குறிக்கலாம் என்ற அனுமானத்தைத் தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. books.google.com -ல் புத்தகங்கள் என்ன விலைக்கு விற்பார்களோ, நம்மால் முடியாது என்று நான் மேலே போய் முயற்சி செய்தும் பார்க்கவில்லை! :(( இனி நம்முடைய அடுத்த பதிவுகளுக்கு வருவோமா?
தங்களில் ஒருவராய்
நடராஜரைக் கருதும் இவர்களுக்குத் தான் இந்தக் கோயிலில் பூஜை செய்யும் முழு உரிமையும்
இன்று வரை உள்ளது. சிதம்பர மகாத்மியம் நூலில் இறைவனே இவ்வாறு நந்தியிடம் கூறுவதாயும்
சொல்லுகின்றனர். ஒரு தீட்சிதர் மட்டுமில்லாமல் தில்லையில் கோவிலைச் சுற்றி இருக்கும்
தீட்சிதர்களின் மொத்தக் குடும்பமே இந்த இறை பணியில் தங்கள் வீட்டுப் பணி போல் நினைத்து
ஈடு பட்டுள்ளது. தங்களின் குடும்பச் சொத்தாக ஒவ்வொரு தீட்சிதர் குடும்பமும் நினைக்கும்
இந்தக் கோயிலின் நிர்வாகமும் அவர்களிடம் தான் உள்ளது. கோவிலின் வருமானத்தில் இருந்தே
அன்றாட பூஜைகளையும், தங்களின் குடும்பத்தையும் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கும் வருமானம்
என்பது பக்தர்களின் கட்டளைகளில் இருந்து தான். அது போல இறைவனை வழிபடுவதிலும் அவர்கள்
தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போலவே பாவிக்கின்றனர். மற்றச்
சிவன் கோவில்களில் நடக்கும் "சைவ ஆகம முறை" யில் வழிபாடு இங்கே நடப்பதில்லை.
முழுக்க முழுக்க வைதீக முறைப்படி வழிபாடு நடக்கும் ஒரே சிவன் கோயில் இது தான். இங்கே
ஒரு விஷயம் சொல்லணும், இந்த சைவ ஆகமத்துக்கும், வைதீகத்துக்கும் வேறுபாடுகள் தேடிக்
கொண்டே இருக்கேன், சிலரிடம் கேட்கவும் கேட்டிருக்கிறேன், இன்னும் பதில் வரலை. :(
பலவிதமான யாகங்கள், யக்ஞங்கள் செய்ததாயும், இன்றும் செய்வதாயும் சொல்லப் படும் இவர்களை
இறைவனுக்குச் சமமாகவும், எப்போது என்று சொல்ல முடியாத காலத்தில் இருந்தே நடராஜருக்கு
வழிபாடுகள் இவர்கள் செய்து வந்ததாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாக இவர்கள் அனைவரும்
யஜுர்வேதிகளாய் இருந்தாலும் வெகு சிலர் ரிக்வேதிகளாயும் இருக்கின்றனர். மற்றச் சிவன்
கோவில்களில் சேவை செய்யும் சிவாச்சாரியார்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். தமிழ்நாட்டைச்
சேர்ந்த மற்ற அந்தணர்களோடு திருமணம் போன்ற எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
தில்லைச் சிதம்பரத்தானைத் தவிர, இங்கே அவனின் நாட்டியத்தைப் பார்க்கக் கோயில் கொண்டிருக்கும்
கோவிந்த ராஜரையும் இவர்களே முதலில் பூஜித்து வந்திருக்கின்றனர். இது திருமங்கை ஆழ்வாரின்
பாசுரம் ஒன்றில் இருந்து தெரிய வருகின்றது.
"மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையாய் வணங்க அணங்காய் சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக் கூடசென்று சேர்மின்களே!" என்று
திருமங்கை ஆழ்வார் அவர்களும்,
"செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள்
அந்தணர்களொரு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான் தானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் பாடியுள்ளார்.
தீட்சிதர்கள்
எப்போது இந்தக்கோவிலில் வழிபாடு செய்ய வந்தார்கள் என்று சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும்,
சரித்திரச் சான்றுகளின் படி ராஜா ஹிரண்யவர்மன் காலத்தில் இருந்து இக்கோவிலில் நடராஜருக்கு
வழிபாடுகள் செய்து வருவதாய்த் தெரிய வருகிறது சோழ அரசர்களுக்குப் பட்டாபிஷேஹம் செய்யும்
உரிமையும் இவர்களுக்கு இருந்திருப்பதாய்த் தெரிய வருகிறது. ஆழ்வார்களின் பாசுரங்களில்
இருந்தும், திருநீலகண்டரின் கதை பற்றிய "சிவ பக்த விலாசம்' என்ற புத்தகத்தில்
இருந்தும், தில்லை தீட்சிதர்கள் கோவிலில் முக்கிய அங்கம் வகித்து வந்தது தெரிய வருகிறது.
ஆரம்பத்தில் 3,000/- பேர் இருந்ததாய்ச் சொல்லப் பட்டாலும், தற்சமயம் 200 அல்லது
300 பேர் தான் இருக்கின்றனர். அதுவும் பிறப்பு, இறப்பு விகிதத்தை ஒட்டி ஏறி இறங்குவது
உண்டு.
கிருத யுகத்தில் 3,000 பேரும், திரேதா யுகத்தில் 2,000 பேரும், துவாபர யுகத்தில்
1,000 பேரும், தற்சமயம் கலியுகத்தில் 200 பேரும் இருப்பார்கள் எனச் சிதம்பர ரகசியத்தில்
சொல்லப் பட்டிருக்கிறதாயும் கூறுகின்றனர். கோவிலின் அனைத்து உரிமைகளும் தீட்சிதர்களையே
சார்ந்துள்ளது. கோவிலின் பரம்பரை அறங்காவலர்களும் இவர்களே. இது தகப்பன் வழிச் சொத்து
பிள்ளைக்கு என்ற முறைப்படி இல்லாமல் தீட்சிதர்கள் குடும்பங்களில் பிறக்கும் அனைத்து
நபர்களுமே உரிமை பெற்று விடுகிறார்கள். தகப்பனும், பிள்ளையும் சம உரிமை அனுபவிக்கும்
இந்தக் கோயிலுக்கு எனச் சொத்து எதுவும் தனியாகக் கிடையாது. பல அரசர்கள் இந்தக் கோயிலுக்குத்
திருப்பணிகள் செய்து வந்திருந்தாலும் சில,பல சொத்துக்கள் அவர்கள் அளித்திருந்தாலும்
தற்சமயம் கோவிலுக்கு என எந்தவிதமான சொத்தும் கிடையாது. கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள்
அளிக்கும் சிறு, சிறு மான்யத் தொகைகளில் இருந்து, பெரும் மான்யத் தொகைகள் வரை சேர்ந்து
ஒரு வைப்பு நிதியாக மாறி, அதில் வரும் பணத்தில் இருந்து தினசரி வழிபாடுகள் செய்யப்
படுகின்றன. இது தவிர சில "கட்டளை தாரர்"களும் இருக்கின்றனர். அவர்கள் கொடுக்கும்
பெரும் தொகைகளும் கோவிலின் வழிபாட்டுக்கும், உற்சவங்களுக்கும் பயன்படுகின்றது. பச்சையப்ப
முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை, வி.எஸ்.எஸ்டேட், ராஜா தொண்டைமான், புதுக்கோட்டை
அவர்களின் அறக்கட்டளை, தருமபுரம் ஆதீனம், முகையூர் சுப்ரமணியபிள்ளை அவர்களின் அறக்கட்டளை,
ராஜா சர். முத்தையாச் செட்டியார் அவர்களின் அறக்கட்டளை போன்றவை கோவிலுக்கு நிரந்தரமாக
ஒரு தொகை கிடைக்க வழி செய்துள்ளது.
அவற்றின் கணக்கு, வழக்குகள் அந்த, அந்தக் கட்டளை தாரர்கள் நியமிக்கும் நிர்வாகியைச்
சேர்ந்தது. அவர்கள் கோவிலுக்குப் பணமாகவோ, பூஜையின்போது தேவைப் படும் பொருளாகவோ கொடுத்துத்
தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். தீட்சிதர்கள் இந்தக் கணக்கு, வழக்கு பற்றிக் கட்டளை
தாரர்களிடம் கேட்டுக் கொள்ளுவது இல்லை. பிரம்மோற்சவங்களுக்கான செலவுகள், ஊரில் உள்ள
அனைத்து ஜாதியினராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. இது போல மற்ற உற்சவங்களும், சில
தனிப்பட்ட உபயதாரர்களாலும், பொதுவாக வசூல் செய்யப் பட்ட பணத்தாலுமே கொண்டாடப் படுகின்றது.
இது தவிர சில பக்தர்கள் தங்கள் பெயரிலோ, குடும்பத்தின் பெயரிலோ,குறிப்பிட்ட நாளில்,
நட்சத்திரத்தில் அபிஷேஹம், அர்ச்சனை செய்ய என வருஷத்துக்கு ஒரு முறை கொடுக்கும் பணமும்
வழிபாடுகளுக்கு உதவுகின்றது. இந்தக் கோயிலில் எங்கேயும் உண்டியலும் கிடையாது. கடந்த மூன்று வருடங்கள் முன்னர் தமிழக
அரசால் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. L எல்லாச் செலவுகளும்
போக மிகுந்திருக்கும் வருமானம் எல்லாத் தீட்சிதர்களுக்கும் பிரித்து அளிக்கப் படுகிறது.பொதுவாக
யாரும் சிவன் கோவிலின்
வருமானத்தையோ, சொத்தையோ வைத்துச் சாப்பிடுவது இல்லை. சிவன் சொத்து
குலநாசம் எனச் சொல்லப் படுவதுண்டு. ஆனால் இந்தக் கோயிலில் சிவனே தீட்சிதர்களில் ஒருத்தன்
எனச் சொல்லப் படுவதாலும், கோயிலை தீட்சிதர்கள் தங்கள் குடும்பத்தின் முக்கிய இருப்பிடமாய்க்
கருதுவதாலும், இறைவனின் நித்திய வழிபாடுகளை, வீட்டில் செய்யும் பூஜை போல ஈடுபாட்டுடனும்,
வைதீக முறையிலும் செய்வதாலும் இறைவனே தங்களில் ஒருவன் என்பதாலும் அவனுடன் இருந்து உண்ணுவது
தங்கள் உரிமை என்ற நினைப்பும் இவர்களுக்கு உண்டு.
தில்லை வாழ் அந்தணர்கள் - 4
இந்தக்
கோயிலின் சகல நிர்வாகங்களும் தீட்சிதர்களையே சார்ந்தது. தீட்சிதர்கள் தவிர, மற்றப்
பணியாளர்களும் உண்டு. ஓதுவார்கள், மடப்பள்ளிச் சமையல்காரர்கள், சுத்தம் செய்பவர்கள்,
மற்றப் பணியாளர்கள் என இருக்கின்றனர். முன் காலங்களில் அனைவருக்கும் கோயிலில் இருந்து
உணவு கொடுத்து வந்த பழக்கம்போல தற்சமயமும் கொடுத்து வந்தாலும், தற்காலத் தேவையை அனுசரித்து
அவர்களுக்குச் சிறிய அளவில் சம்பளமும் கொடுக்கப் படுகிறது. அவர்களுக்கு உள்ளேயே ஏற்படும்
வழக்குகளைக் கோவிலில் கூட்டம் கூட்டி விவாதித்து அவர்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்கின்றனர்.
ஒரு பொது மனிதன் அனைத்துத் தீட்சிதர்கள் வீட்டுக்கும் சென்று கூட்டம் ஏற்பாடு செய்யப்
பட்டிருப்பதைத் தெரிவிக்கிறார். கூட்டம் "தேவசபை" அல்லது "கல்யாண மண்டபத்"தில்
ஏற்பாடு செய்யப் படும். கட்டாயமாய் தீட்சிதர் குடும்பத்து அனைத்து ஆண்களும் கூட்டத்துக்கு
வர வேண்டும் என்பதை ஒரு நியதியாகவே கடைப்பிடிக்கிறார்கள். "கனகசபை"யிலிருந்து
ஒரு விளக்கு மிகப் புனிதமாய்க் கருதப் பட்டு எடுத்து வரப் படுகிறது. அந்த விளக்கு வந்தாலே
"நடராஜரே" நேரில் வந்ததாய்க் கருதப்படுகிறது.
அவர்களுக்குள் உள்ள தனிப்பட்ட மனமாற்சரியங்களைக் களைந்து விட்டுக் கோயிலின் பொதுவான
நிர்வாகச் சீர்திருத்தத்தில் மாற்றங்களோ, முடிவுகளோ ஏகமனதாய்க் கொண்டு வரப் படுகிறது.
ஒரு தனி தீட்சிதர் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் அதை ஏற்கவோ, மறுக்கவோ செய்யலாம்
எனினும் பொதுவாக அனைத்தும் ஏற்கப் படுகிறது. அவை தனியான ஒரு புத்தகத்தில் பதிவும் செய்யப்
படுகிறது. கோவிலின் தினசரி நிர்வாகம் மட்டுமில்லாமல் உற்சவ காலங்களில் கடைப்பிடிக்க
வேண்டிய வேலைகள்,கோவிலின் தினசரிப் பாதுகாப்பு, இரவுப் பாதுகாப்பு என அனைத்துமே விவாதிக்கப்
பட்டு முடிவு எடுக்கப் பட்டு அவைகள் பதிவு செய்யப்படுகின்றன.
கோவிலின் மொத்த வழிபாடும் ஐந்து வகையாகப் பிரிக்கப் படுகிறது. 1.நடராஜர் கோவில்,
2. அம்மன் கோவில், 3. மூலஸ்தானக் கோவில், 4. தேவசபை, 5. பாண்டியநாயகர் கோவில் என ஐந்து
வகையாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு குறிப்பிடப் பட்ட தீட்சிதர் குழு
எனவும் பிரித்துக் கொண்டு செயல்படுகின்றனர். இம்முறையில் அனைத்து தீட்சிதர்களும் அனைத்து
இடங்களிலும் பாகுபாடு இன்றிப் பணிபுரிய முடியும். ஒரு முறை என்பது 20 நாட்களைக் குறிக்கும்.
அந்த நாட்களில் கோவிலின் சாவிகள், நகைப்பெட்டிகளின் சாவிகள் என அனைத்துமே மாறி மாறி
ஒவ்வொருத்தர் பாதுகாப்பிலும் 20 நாட்கள் இருக்கும். பொது தீட்சிதர்கள் 9 பேர் கொண்ட
நிர்வாகக்குழுவையும் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் ஒருத்தர் காரியதரிசியாக அந்த
வருடம் நியமனம் பெறுவார். துணைக்காரியதரிசியை காரியதரிசி நியமிப்பார். கோவிலின் நந்தவனம்
உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பும் தீட்சிதர்களையே சாரும். இம்முறையில் இவர்கள் சுழற்சி
முறையில் எந்தவிதமான வருத்தமோ, தடங்கலோ இல்லாமல் அனைத்து தீட்சிதர்களுமே கோவிலின் நிர்வாகத்திலும்,
பூஜை முறைகளிலும் பங்கு பெறுகின்றனர்.
சிதம்பரம்
கோவிலின் பூஜை முறைகள் தீட்சிதர்களால் "வைதீக முறை"ப்படி செய்யப் படுவதாய்ச்
சொல்லப் படுகிறது. மற்றச் சிவன் கோயில்களில் சைவ ஆகம முறைப் படியான வழிபாடுகள் நடந்து
வருகின்றன என்றாலும் இன்றளவும் சிதம்பரம் கோயிலின் வழிபாட்டு முறைகள் மற்றச் சிவன்
கோயில்களில் இருந்து வேறுபட்டதாயும் சொல்லப் படுகிறது. கோயில்களுக்கெல்லாம் கோயில்
என்று சொல்லப் படும் இந்தச் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் "போதாயனர்"
என்னும் ரிஷியின் சூத்திரங்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாய்ச் சொல்லப் படுகிறது.
மேலும் பூஜாவிதிகள்"பதஞ்சலி" முனிவரால் நடராஜரின் ஆக்ஞைப் படி எழுதப் பட்டதாயும்
சொல்லப் படுகிறது. "பூஜா பதஞ்சலம்" என்னும் இந்தப் பூஜாவிதிகளே இன்றளவும்
பின்பற்றப் படுவதாயும் சொல்கின்றனர். ஸ்ரீ சிதம்பரேஸ்வர நித்ய பூஜா சூத்திரம் என்னும்
இந்த பதஞ்சலி பத்ததியே இன்றளவும் அனுசரிக்கப் படுகிறது. நடராஜரும் தங்களில் ஒருவர்
என்னும் இவர்கள் எண்ணமும் இன்றளவும் மாற்ற முடியாமல், யாராலும் அதை உடைக்க முடியாமலும்
உள்ளது. சரித்திர பூர்வமாய்ப் பார்த்தால் இந்தச் சிதம்பரம் கோயிலுக்குப் பல அரசர்கள்,
சக்கரவர்த்திகள் திருப்பணிகள் செய்து வந்திருக்கிறார்கள் என்றாலும், அந்நிய தேசப் படை
எடுப்புக்கும் இது ஆளாகி இருக்கின்றது. முஸ்லிம்களின் படை எடுப்பின்போது, மாலிக்காஃபூர்
வந்து சிதம்பரம் கோயிலை ஆக்கிரமித்த போது நடந்த ஒரு விஷயம் இதோ: திரு அரவிந்தன் நீலகண்டன்
அவர்களின் பார்வையில்:
"ஹிந்து சமுதாயத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தில்லை வாழ் அந்தணர்கள் ஆற்றியுள்ள
சேவை அளப்பரிய ஒன்றாகும். மாலிக் காஃபூரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் போது
தமது உயிரினை தியாகம் செய்து தமிழகத்தின் ஆன்மிக கலைப் பொக்கிஷங்களான தெய்வத் திருவுருவச்சிலைகளை
காத்தவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். அமீர் குஸ்ரு தாரிக்-இ-அலை எனும் நூலில் பின்வருமாறு
தில்லைவாழ் அந்தணர் அனுபவித்த கொடுமைகளை கூறுகிறான்: 'மாலிக் மிகுந்த கவனத்துடன் அஸ்திவாரங்களை
பெயர்த்தெடுத்தான். பிராம்மணர்கள், விக்கிர ஆராதனையாளர்கள் தலைகள் அவர்கள் கழுத்துக்களிலிருந்து
நடனமாடியபடி தரையில் அவர்கள் கால்களில் விழுந்தது. இரத்தம் ஆறாக ஓடிற்று. ' என்ற போதிலும்
அந்தணப்பெருமக்கள் தம் தலைகளை கொடுத்த போதிலும் தர்மத்தை விடவில்லை. தெய்வத் திருவுருவச்சிலைகளை
காப்பாற்றினர். இன்று உலகெங்கிலும் நடராஜ தாண்டவ சிற்பம் அடைந்துள்ள மேன்மையான வணக்கத்திற்கு
தெய்வத்திருவருளும் உங்கள் முன்னோர்களின் தியாகங்களுமே காரணம். "
அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்தக் கட்டுரை தீட்சிதர்களின்
நடராஜ பக்தியை வெளிக்காட்டுகிறது.
இது தவிரத் திப்பு சுல்தான் வந்தபோது நடராஜத் திருமேனியை தீட்சிதர்கள் எடுத்துக் கொண்டு
போய்த் திருச்சூரில் மறைத்து வைத்திருந்ததாயும், அம்பலப்புழை/ஆலப்புழையில் மறைத்து
வைத்திருந்ததாயும் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. 1781-ல் நடைபெற்ற 2வது மைசூர்
யுத்தத்தில் "கூட்" என்னும் தளபதி சிதம்பரம் கோயிலைத் தாக்கியதாகவும், பின்னர்
துரத்தி அடிக்கப் பட்டதாயும், கர்நாடக நவாபுகளைப் பற்றிய சரித்திரக் குறிப்புக்களில்
காணக் கிடைக்கிறது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடம் மேலக் கோபுரம் என்றும் அதன் அடையாளங்கள்
இன்னும் அந்தக் கோபுரத்தின் மாடங்களில் காண முடிகிறது எனவும் சொல்கின்றனர். இந்தச்
சமயத்தில் தீட்சிதர்கள் நடராஜத் திருமேனியை எடுத்துக் கொண்டு திருவாரூர் போய் அங்கே
சபாபதி மண்டபத்தில் மறைத்து வைத்திருந்ததாயும், தஞ்சையை அப்போது ஆண்டு வந்த மராட்டிய
அரச வம்சத்தினர் இதற்கு உதவியதாயும் கூறப் படுகிறது. இதற்குச் சான்றாக ஆயிரக்கால் மண்டபத்தில்
க்ரந்த எழுத்துக்களால் அமைந்த ஒரு ஸ்லோகத்தில் இந்த விஷயம் சொல்லப் பட்டு, நடராஜர்
சக வருஷம், 1695, கலியுகாதி, 4874 அதாவது கி.பி. 1773-ஆம் வருஷம் திருவாரூரில் இருந்து
"சித்சபை" வந்தடைந்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது.
2013/1/2 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:
கீதா சமையல் நிபுணி மட்டுமல்ல.ஆன்மீகம் அப்பழுக்கின்றி
எழுதும் வல்லவரும் ---------------
The
Agamas, though they constitute an equally large body of ancient Sanskrit source
material for a different concept of the same advaita philosophy of Vedanta,
have not been
studied by any Orientalist; indeed they have not been studied at all or studied
in depth
even by any Indian scholar except perhaps Dr. Surendranatha Das Gupta (October
1885 -
December 1952) of Calcutta, even under the great handicap of the grantha
script.
The agamas had existed mostly in South India, in the Tamilnad, in palm leaf
manuscript
book form in the homes of the Sivachariyas who had been entrusted with the duty
of
organizing and performing the consecration and the congregational worship
(parartha
puja) in the Siva temples for probably over two millennia and a half. These
Agamas are not
available in north India to the extent they are available in the south,
although they had
been responsible for the culture of the whole of India. Dr. Das Gupta has
stated that "No
Agama manuscript of any importance is found even in Banaras, the greatest
center of
Hindu religion, Sanskrit studies and culture."
Besides, all the Agamas manuscripts are available only in the grantha script,
one which had
been invented by the Tamil people for writing their Sanskrit scriptures more
than fifteen
hundred years ago. There is also a view that the grantha was the script used when
the
Vedas were reduced to writing and that the new nagari script came into vogue
when the
Vedic language gave place to classical Sanskrit (Samskrt well constructed); in
other words,
grantha script was much earlier than the nagari script. This grantha script was
not in use in
the north, and the devanagari script of the north was unknown in the south till
the
beginning of the twentieth century. It is too much to expect Western
Orientalists first of all
to known of the existence of two scripts for Sanskrit, and then to study two
scripts for one
language; their study was confined to the devanagari script which was in use
over a much
larger area of India and in the north.
It has been said that the Upanishads and the Agamas branched off from the same
stem,
namely the Vedas, and that the two dealt with the theory and the practice of
philosophic
thought respectively. The general assumption that the Agamas deal only with
temples and
temple worship is wrong. The Agamas consist of four parts of which Kriya
dealing with
temple construction and rituals is one, and jnana dealing with philosophy is
another. They
are as much philosophic treatises as any other treatises like the Upanishads.
The Agamas
are encyclopaedic in their treatment of all subjects pertaining to the religious
life of the
worshipper and to the temple.
The Saiva Agamas are some of the earliest books in the Sanskrit language on the
Saiva
religion and philosophy, written over a period of several centuries before the
Christian era.
They represent an independent class of writing by very early seers who had an
inward
experience and enlightenment from the Supreme Being, Siva, and who were also
perhaps
influenced by the Vedas in their original form. These seers have to be
considered as hailing
from the South and not from the North. But they were essentially
representatives of all
India and they reflected in their thoughts, modes of meditation and worship, in
their
writing, and in their very lives, the inherent theism of the South.
The theism of the south or rather, the Saivism of the Tamilians, was the growth
of an
unbroken tradition, probably from the pre-historic past, and this had three
elements fused
into it. These are 1)an external worship of images as the manifest abode of
God, both in
the shrines throught the land and in the devotees' own homes, 2)symbolism, and
3)the
inward meditation and realization.
The Agamas claim Vedic authority for their doctrines. The Agama doctrines are
indeed
theistic, and such theism is not foreign to the Upanishads. The following
Agamic passages
may be seem to affirm the derivation of the Agamas from the Vedas:
"The siddhanta consists of the essence of the Veda. "(Suprabhedagama)
"This tantra is of the essence of the Veda. This siddhanta knowledge which
is the
significance of Vedanta is supremely good." (Mukutagama)
The Agamas are deemed to have scriptural authority and are often callled the
Veda and the
Fifth Veda. As a matter of fact, the Sanskrit Nighantu (lexicon) names the Veda
as the
Nigama, and the Tantra as the Agama. The Veda and the Agama both seem to have
been
denoted by the common term sruti up to the 11th century, after which period the
above
distinction of Nigama and Agama seems to have been adopted. Swami
Prajnanananda,
quoted by Sir John Wooddroffe, has clearly established that the Agamic
(tantric) texts, as
we known them today, had for the most part preceded Buddhism, and only the
Agamic cult
had been able gradually to swallow up Buddhism on the Indian sub-continent, and
ultimately to banish it altogether from the Indian soil; it was not the
Upanishadic
philosophy but the Agamic cult that was responsible for the supplanting of
Buddhism and
for the fusion of its salient features into the core of the Hindu religion.
This is a very
important and pertinent observation deserving the careful attention of all
scholars.
The four parts of the Agamas are likened to the four parts of the Vedas, namely
the mantra
part or stotras comparable to charya of the Agamas, the brahmanas dealing with
rituals
comparable to kriya, the aranyaka part analogous to the yoga, and the Upanishad
or
philosophy part equivalent to the vidya or jnana pada of the Agamas. It should
be noted
that the Agamas have their own mantras for all their kriyas. They employ vedic
mantras
only for the stotra part. (It is in this sense that one can say Agamas have
alsmost
completely replaced the Vedas as the basis of current day Hinduism in India)
Exponents of the Agamas would go further and say that the Supreme of Saivism,
Siva, is
mentioned in the Vedic terms such as the following:
Isa vasyam idam sarvam.
Yah parah sa mahesvarah.
Sarve vai Rudrah.
Ambika pataye Umapataye.
Yo vai Rudras sa Bhagavan Bhurbhuvas suvah.
Tasmai namas tasmai tva jushtam
niyurajmi yasmai namas tat Sivah.
Haraya Rudraya Sarvaya Sivaya
Bhavaya Maha devaya Ugraya.
(All the names mentioned in the last lines are the specific mantra names of
Siva.)
Pasupataya Rudraya Sankaraya Isanaya Svaha.
Siva ido dhyeyah, Sivam daras sarvam anyat parityajya.
Yada charmavat akasam veshtayishyanti manavah
Tada Sivam avijnaya duhkasyanto bhavishyati.
The Bharga sabda in the Gayatri mantra (Bharhgo devasya dhimahi) is considered
to refer
to Siva. Besides, the introduction of Sri Uma in the Kenopanishad explicity
enunciates the
Saiva Siddhanta doctrine that ignonance can be dispelled only with the bestowal
of Siva's
Grace which is personified as Sakti or Uma.
Sa tasminneva akase striyam ajagama,
bahu sobhamanam Umah, Haimavatim.
The Kaivalyopanishad, one of the early Upanishads, claimed by many to be of the
Advaitic
or Vedanta school, has the following lines (sloka 7):
Tam Aadi madhyanta vihinam Ekam Vibhum
Chidanandam Arupam Adbhutam
Uma sahayam Paramesvaram Prabhum
Trilochanam Nilakantham Parsaantam.
The Narada Parivrajakopanishad is a large Upanishad having nine upadesas of
which the
eight deals with the Pranava. In the second sloka we find a phrase
'Sarvagamayas-Sivah'.
Though the Upanishad could not have been one of the early Upanishads, yet the
mention of
the Agama here as the form of Siva is significant. The terms agama, tantra,
siddhanta and
mantra are found used synonymously in many Agamic writtings.
The Saivagama is also a general term applied to four different schools; the
Saiva,
Pasupata, Soma and Lakula. Of these, the Saiva is said to have had three
branches : Vama,
Dakshina and Siddhanta. Kapala, Kalamukha, Agora are all contained in the Vama
branch.
The Dakshina branch includes Kashmir Saiva darshanas, Svachanda Bhairavam,
etc.,
making up a total of 18 Agamas. The Siddhanta branch has 28 Agamas, and this
article
concerns with these 28 only.
The definition of Siddhanta often quoted by writers may be given here :
"Siddhanta nama yah parikshakaih bahu vitam parikshya
hetubhih sadayitva stapyate nurnayah sa siddhantah"
That which stands many tests andis finally established is the Siddhanta.
Gautama nyaya sutram, 1.26
The 28 Saiva Agamas are said to have been revealed from all the five faces of
Siva. The
first four taught five Agamas each, while the last, Isana, gave rise to eight.
The Sadyojata face revealed the Kamika, Yogaja, Cintya, Karana and Ajita. These
were
taught to Kausika Rishi.
The Vamadeva face gave rise to Dipta, Sukshuma, Sahasra, Amsumat and
Suprabheda, and
taught them to Kasyapa Rishi.
The Aghora face revealed Vijaya, Nisvasa, Svayambhuva, Agneya (or Anala) and
Vira, and
gave them to sage Bharadvaja.
The Tatpurusha gave rise to Raurava, Mukata, Vimala, Chandrajnana and
Mukhabimba (or
Bimba), and taught them to Sage Gautama.
The Isana face revealed Prodgita, Lalita, siddha, Santana, Sarvokta,
Parameswara, Kirana
and Vatula to Sage Agastya.
(Footnote: Manikkavasagar accepts this tradition. He says that Siva revealed
the Agamas
from the Mahendra hill from his five faces: Tiruvasagam 2, lines 19, 20.)
(There is another tradition, probably local puranic, that Siva revealed the
agamas to
Parvati and Nandi. Parvati in turn revealed it to Lord Muruga. Nandi in turn
revealed it to
his 8 disciples; Tirumular, Patanjali, Vyaghrapada, Sanatkumar, Sivayogamuni,
Sanakar,
Sanadanar and Sanandanar. The reason I am mentioning this tradition is that it
is curious
that Rishi Nandi hailed from the Himalayas (north Indian?), whereas all his
disciples were
south Indians, and are vedic rishis themselves.
We are all familiar with the mantras and strotras corresponding with the 5
faces of Siva.
Most importantly, here we see with clarity that the tatpurusha mantras
(tatpurushaya
vidmahe...) refer to Siva, and again here we see that the original(tat or
'that') purusha is
Siva., tying Him straight to the Rig Veda, Purusha hymns and the Purusha Sukta.
No
ambiguity.
In the light of these findings, much of the obscurity of the vedas, vedic
mantras and vedic
gods becomes clear. Probably or this reason Tirumular said that the Vedas is
general while
the Agamas are specific.
Another equally revealing fact is that these rishis to whom Lord Siva revealed
the agamas
are the same vedic rishis too. In other words there is clear indication that
the agamas and
vedas have similar authors, and that they could not have been written far apart
in time.
Scholars should take note of this in dating texts and temple worship.
The French Institute of Indology, Pondichery, which has been able to gather in
whole or in
parts, 28 principle Agamas so far (according to its Editor, Sri N. R. Bhatt)
and 45 of the
Upagamas.
From the volumn of writing under each head; chariya, kriya, yoga and jnana, it
can be
clearly seen that the emphasis of the Agamas was equally on the jnana and the
kriya parts;
that is, both the philosophical and the ritualistic aspects. The Agamas accept
the Veda and
build upon it. The Vedanta may be termed the basis for the Agamic philosophy.
The kriya pada considers not the individual man alone but considers man in
society. It has
a concern and involvement in the community around. The temple is an outward
expression
of this concern. Congregational worship, besides festivals, is the one great
force that holds
together society without disintegrating and the kriya pada lays down an
elaborate code
therefore which is both emotional and artistic, and rational at the same time.
It is this activity that has held together the Hindu society through so may
centuries when
alien cultures and religions bombarded it through political and economic
impact. The kriya
pada is in essence considered to be parallel to if not identical with the
yajnas of the Vedas.
But there are several other equally important subjects which are also dealt
with
extensively. As an instance, we may mention temple architecture. The details of
temple
construction here given are beyond what an excellent modern architect can dream
of.
Other allied subjects dealt with here are sculpture, iconography, construction
of the temple
car, geology, horticulture, astronomy, town planning, home science, water
supply, health
and hygiene, food and many others. In short, we may say no area of human
activity of the
period about 2,000 years back has been left out.
The charya pada deals with the daily observance and the personal discipline of
the
worshippers. The purificatory ceremonies for the individual from the time of
his birth, the
dikshas (initiations), the ultimate funeral rites and similar other ceremonies
are described
here.
India, particularly Tamilnad in South India, has an unbroken tradition in
culture, civilization
and religion which has been continuing for several thousand years. India is
probably the
only country which has retained the pristine character of its ancient culture
and civilization
unbroken to this day. Even here, the North of India has fared badly under
successive
onslaughts of invasions and cultures, but it is agreed on all hands that the
South has
preserved its culture almost intact; onslaughts have been fewer, less
devastating, less
disintegrating and less powerful here. We would say that the Agamas, through
their
prescription of spiritual goals for man, have served as the sentinels of the
ancient culture.
The publication of 2 Agamas and 3 Upagamas: Raurava and Ajita Agama, and
Matanga,
Kalottara and Mrgendra Upagama in the nagari script in the recent years by the
French
Institute of Indology, Pondichery, under the able and dedicated guidance of the
late Dr..
Filliozat and Professor N. R. Bhat had brought the Agamas again into focus. The
rest of the
agamas and upagamas are unpublished and only available in the grantha script.
source:
'The Saivagamas' by M. Arunachalam,
Prof. Tamil University of Tanjavur
Associate, Dharmapuram Aadheenam
Associate, Kasi Mutt
Publisher:
Gandhi Vidyalayam
Tiruchitrambalam, Mayuram Taluk
609 204 India
Printer:
Kalakshetra Publications Press
Thiruvanmiyur, Chennai.
ஆங்கிலத்தில்
கொடுத்திருப்பதற்கு மன்னிக்கவும். முடிவைப் படிப்பவர்களே யோசித்துக் கொள்ளவும். திருமந்திரத்தில்
ஆகமங்கள் பற்றிய பாடல்களைத் தொகுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவற்றையும் வெளியிடுகிறேன்.
சிதம்பர ரகசியம் இன்னும் சில நாட்களில் முடியும்.
சிதம்பர ரகசியம் - ஆகமச் சிறப்பைப் பற்றித் திருமூலர்!
ஆகமங்களைப்
பற்றித் திருமூலர் கூறியவை தொகுத்துக் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
திருமூலரின் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே வேதத்தின் சிறப்பைப் பற்றி 6 பாடல்களும்,
அதற்குப் பின்னர் ஆகமச் சிறப்பு என்ற தலைப்பிலே 10 பாடல்களும் வருகின்றன.
1.அதில் ஆகமங்கள் மொத்தம் 28 எனவும் அவை யாவுமே சிவபெருமான் அருளிச் செய்தவை எனவும்
கூறுகின்றார். ஈசனின் ஈசான முகத்தில் இருந்து இவ்வாக்கியங்கள் வந்து ஆகமமாய் நிலை பெற்றது
எனவும் சொல்கின்றார். அதற்கான பாடல்:
//அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.//
2.இந்த ஆகமங்களை எண்ணினால் 28 என்றாலும் அவை இந்த அளவில் நில்லாமல் அளவின்றியும் உள்ளன.
இவற்றைப் பற்றிக் கூறிய 66 பேர்களைத் தவிர, யானும் இது பற்றிச் சிந்தித்துத் துதிக்க
ஆரம்பித்தேன்.
//அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.//
3.இறைவன் அருளால் அருளப் பட்ட இந்த ஆகமம் ஆனது வானோர்களாலும் அறியப் படாத ஒன்றாகும்.
இவை அனைத்தும் சொல்லப் பட்டால் பூவுலக மாந்தர்க்கு அறிய முடியாத ஒன்றாகும்.
//அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.//
4.சிவலோகத்தில் "சதாசிவ"மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலானோர்க்கு
உணர்த்திய ஈசன், அவற்றைப் பூலோக மாந்தர் அறியும்படி உரைத்த போது,"சீகண்ட பரமசிவன்"
ஆக இருந்து உணர்த்த, அதைக் கேட்ட நந்தி எம்பெருமான் மெய்யுணர்வோடு, அவற்றை உணர்ந்தவராய்
மெய்யுணர்வோடு விளங்கப் பெற்றார்.
//பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.//
5.இத்தனை ஆகமங்களில் சிறந்ததான ஒன்பது ஆகமங்கள் நாத தத்துவத்தில் நிலைத்த சிவத்திடம்
இருந்து வந்த காலத்தில், சிவமானது, விந்து தத்துவத்தில் நிலைத்த சத்தியினிடத்தில் இதை
உணர்த்த, சத்தியானது, தன்னில் இருந்து தோன்றிய சதாசிவருக்கும், சதாசிவர், சம்பு பட்ச
மகேசுவரருக்கும் அங்கிருந்து அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர், பின்னர் உருத்திரர்,
திருமால், பிரம்மா என அனைவருக்கும் சென்றடைந்த இந்த ஆகமங்களில் ஒன்பதை எங்கள் ஆசிரியர்
ஆன நந்தி எம்பெருமான் சீகண்ட பரமசிவனிடமிருந்து பெற்றார்.
//சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.//
6. அந்த ஆகமங்கள் முறையே 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம்,
6......7.....8.... சுப்பிரபேதம், 9. மகுடம் ஆகியவை ஆகும்.
//பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.//
7. இறை அருளால் சொல்லப் பட்ட இந்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றின் உட்பொருளை,
இப்பூவுலக மக்கள் அறியவில்லை எனில் அது அவர்களுக்குச் சரிவரப் பயன்படாது.
// அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.//
8.மக்கள் அனைத்து மெய்யுணர்வையும் உணராது, புலனுணர்வே மிகப் பெற்று வாழுங்காலத்து,
அதைப் போக்கும் வண்ணம் சிவபெருமான், உமாதேவியார்க்கு "ஆரியம், தமிழ்" என்னும்
இரு மொழிகளை உலகம் உய்யச் சொல்லித் திருவருள் செய்ய எண்ணங்கொண்டான்.
//மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.//
9.இறைவன் உயிர்களைப் பாசத் தளையினின்று விடுவிக்கின்ற முறையையும், பின் உயிர்கள் தன்னிடம்
செலுத்தும் அன்பால் அவற்றைத் தன்னிலேயே நிலை நிறுத்தும் முறையையும், அவ்வாறு நிலை நிறுத்தும்போது,
உயிரானது பண்டைய நினைவுகளால் மோதி அலைப்புண்டு, பாசத்திலே பொருந்தி நிற்பதையும்,
"தமிழ் மொழி, வடமொழி" இவ்விரு மொழிகளுமே ஒரே மாதிரியாக உணர்த்தும். அவற்றைச்
சரியானபடி உணராதவருக்குச் சிவஞானம் கை கூடுவது அரிதே யாகும்.
// அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.//
10.மொழிகள் பதினெட்டு உள்ளன, அனைத்து மொழிகளுமே, சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும்,
சிறப்பாகவும் அனைவரும் உணர அமைத்த வாயிலே. அதை உணராத கற்றோர், எத்தனை தான் கற்றிருந்தாலும்
"கல்லாதவர்" என்றே உணரப் படுவார்கள்.
//பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.//
ஆகமங்கள்ஆறு, ஏழு, எட்டு பற்றி நண்பர் திரு சிவசிவா அவர்களின் விளக்கம்
தென்னிந்திய
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக உரையில் 6-வியாமளம், 7-காலோத்தரம், 8-சுப்பிரம்...
என்று கூறியிருக்கிறார்கள். (பொதுவாக இந்த உரைநூல் மீது எனக்கு நம்பிக்கை குறைவு)
ஆனால், தருமை ஆதீன உரையில், "இத்திருமந்திரத்தின் மூன்றாம் அடி, 'நாயனார் திருமொழியன்று'
என்பது தெளிவாய்த் தெரிகின்றது....." என்கிறார்கள். (தருமை ஆதீன உரை - quite
reliable)
திருவெங்கட்ராம்
திவாகர் "மகுடாகமம்" பற்றிக் கேட்டிருந்தார். நான் தேடியவரை எனக்கு அது பற்றிச்
சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வரலாறு.காம். இல் இருந்து கிடைத்தவரை எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.
திரு வெங்கட்ராம் திவாகருக்கு இந்தத் தகவல்கள் ஏற்கெனவே தெரிந்திருக்கும்.
'காமிகாகமத்தைப் போலவே மகுடாகமம் சிவபெருமான் நடனப் பிரதான விசேடமுள்ள சிதம்பரம், திருவாரூர்
முதலான சிவாலயங்களில் கிரியாப் பிரமாணமாக அநுசரிக்கப்பட்டு வருவதாக'ப் பதிப்பாசிரியர்
குறிப்பிட்டுள்ளார். இதன் வழி இப்போது கிடைத்துள்ள மகுடாகமத்திற்கும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின்
கட்டமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வெள்ளிடை மலையாகிவிட்டது.
'இராஜராஜீசுவரம் கருவறையில் உள்ள ஆவுடையாருடனான லிங்கத்திருமேனி கருவறையின் வாயிலைவிட
அளவில் மிகப் பெரியதாகும். இத்திருமேனியை கருவறை கட்டிய பிறகு உளளே இருத்தியிருக்க
முடியாது. அதனால், மூல மூர்த்தமான இத்திருமேனியை முதலில் பிரதிஷ்டை செய்து, பிறகே அதைச்
சுற்றி விமானம் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது மகுடாகம மரபாகும்' எனும் பொருள்பட,
'தட்சிண கயிலாய' உரை நிகழ்வு அமைந்துள்ளது. மகுடாகம மரபு ஒருபுறம் இருக்கட்டும்; கருவறையிலுள்ள
இலிங்கத்திருமேனி இப்போதுள்ள கருவறை நுழைவாயில் வழி உள்ளே சென்றிருக்க முடியுமா, முடியாதா
என்பதைப் பார்ப்போம்.
இனி, 'பரசிவமும் மகுடாகமும்'. தம்முடைய 'தஞ்சைப் பெரிய கோயில்' என்னும் நூலின் 23ம்
பக்கத்தில் திரு. பாலசுப்ரமணியன், மகுடாகமம் சிவலிங்க வழிபாட்டைக் கூறும்போது நவதத்துவம்
எனறுரைக்கிறது. “சிவலிங்கத் திருமேனியின் நடுவே தூணாகத் திகழும் பாணமானது மூன்று வகை
அமைப்புகளுடன் திகழும். இது அடியில் நான்கு பட்டையாகவும், இடையில் எட்டுப் பட்டையாகவும்,
மேலாக வட்டமாகவும் இருக்கும். சதுரத் தூண் வடிவை பிரம்மனாகவும் எட்டுப்பட்டை வடிவை
விஷ்ணுவாகவும் வடடத்தூணை ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி
எனப் பிரித்து உச்சிக்கு வரும்போது பரசிவம் எனப் பகுப்பர். பரசிவம் எனும்போது உருவமாகத்
திகழும் இலிங்கம் மறைந்து பரவெளியான பிரபஞ்சமே சிவமாகத் திகழும். பிரமனில் வழிபாட்டைத்
துவக்கி, 'பரசிவ' வணக்கம் கூறி பரவெளியான மலரஞ்சலியை முடிப்பர். இந்த நவதத்துவ வடிவமாகத்
திகழும் சிவபெருமானை மணிவாசகர், 'நவந்தரு வேதமாகி வேதநாயகன்' என்று கூறுகிறார்' என்று
முடிக்கிறார். மகுடாகமச் செய்தித் தொடர்பான மேற்கோள் குறிகள், 'சிவலிங்க' எனும் இடத்தில்
தொடங்குகின்றன. ஆனால் முடியுமிடம் நூலில் சுட்டப்படவில்லை. அதனால், 'சிவலிங்க' எனத்
தொடங்கும் மகுடாகமச் செய்தி இப்பத்தியில் எங்கு முடிகிறது என்பதை அறியக்கூடவில்லை.
இநதச் செய்திக்கு அடிக்குறிபபும் இல்லை என்பதால், இது மகுடாகமத்தின் எந்தப் பிரிவில்
எந்தப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்பதையும் அறிய வாய்ப்பில்லை.
நன்றி: வரலாறு.காம்
தில்லைக் கூத்தன் ஆனந்த நடனம் ஆடிய இடம் தில்லையம்பதி என்று நம் அனைவருக்கும் தெரியும்.
ஆகாசத்திலே பரந்து விரிந்த வெளியிலே, அவன் நடனம் தான் நித்தம், நித்தம் நடைபெற்று வருகிறது.
இத்தகைய நடனத்தைத் தில்லையிலே ஆடும்போது இறைவன் அப்படியே தன் அம்சத்தோடும், தன் இறைசக்தியோடும்
உறைந்த இடம் தான் தில்லைச் சிற்றம்பலம். தானே, அங்கு தன் முழு சக்தியோடு உறைந்த இடத்திலே
கோயில் கொள்ள நினைத்த இறைவன், தனக்குத் தானே அங்கே கோயில் கட்டிக் கொண்டதாயும் சொல்லுவார்கள்.
இப்படி முதலில் இறை சக்தி இருந்து, பின்னர் மூலஸ்தான விமானம் கட்டிப் பின்னர் பிராகாரங்கள்,
பரிவார தேவதை சன்னதிகள், வெளிப்பிரகாரம், சுற்று மண்டபங்கள், ராஜ கோபுரம் என்று கோயில்
கட்டுவது ஒரு மரபு. இம்முறையில் அமைக்கப் பட்ட கோயில்கள் "மகுடாகமம்" என்னும்
முறையில் வந்ததாய்ச் சொல்கின்றனர்.
முதலில் கோயிலுக்குத் தேவையான அனைத்து அமைப்புக்களையும், கட்டுமானங்களையும் கட்டி முடித்துவிட்டுப்
பின்னர் விக்ரஹப் பிரதிஷ்டை செய்து, அதில் இறை சக்தியை ஆவாஹனம் செய்து வழிபடுவது இன்னொரு
மரபு. இவை பின்னர் வந்த கோயில்கள் என்று சொல்லப் படுகிறது. முதலில் சொன்ன முறைப்படியான
கோயில்கள் மிகவும் குறைவு. இவற்றில் முதலில் சொல்லப் பட்ட இறைவன் தானாகவே உறைந்து சக்தியுடன்
இருக்கும் இடங்கள் மிக, மிகச் சக்தி வாய்ந்த ஸ்தலங்களாய்ச் சொல்லப்படுகிறது. சிதம்பரம்
அத்தகைய ஸ்தலங்களில் முதன்மையானது. இறை சக்தியின் அற்புதம், பூரண வீரியத்துடன் வெளிப்படும்
இடம் அது. ஆகவே இம்முறையில் குடி கொண்ட கோயில்களில் வழிபடும் முறையை "மகுடாகமம்"
என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கு வழிபடும் முறையும் மகுடாகம முறை என்று சொல்லி
வந்திருக்கலாம். அப்போது தில்லையம்பதியிலே வழிபட்டு வந்த இறையாளர்கள் மேற்கொண்ட வழிமுறையைப்
பின்னால் வந்த "தில்லை வாழ் அந்தணர்கள்" பின்பற்றவில்லை என்றும் சொல்லப்
படுகிறது.
திருக்கைலையிலே இறைவனைக் காணாமல் அவரைத் தேடிவந்த அவர்தம் சிவகணங்கள், காசியிலேயும்
இறைவன் இல்லாமல், அவர்தம் ஆனந்தத் தாண்டவத்தையும் காண முடியாமல் பரிதவித்த வேளையிலே
இறைவனே, அவர்களைத் தில்லைச் சிற்றம்பலம் நாடி வரச் சொன்னதாயும், இந்தச் சிவகணங்கள்
வந்ததும், பூஜை, வழிபாட்டு உரிமைகளை இவர்களிடமே இறைவன் ஒப்படைத்ததாயும், அது முதல்
தில்லை வாழ் அந்தணர்களே, வைதீக முறைப்படி பூஜை, வழிபாடுகளைப் பதஞ்சலி தொகுத்துக் கொடுத்த
"பதஞ்சலி பத்ததி"யில் மாற்றியதாயும் ஒரு கூற்று இருக்கிறது. முன்னர் செய்து
வந்த மகுடாகமமுறை வழிபாடு தமிழா, வடமொழியா என்பது குறித்து, எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.
இருப்பவர்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன். இனி இந்த ஆகமம் பற்றிய கட்டுரைகளை இத்தோடு
முடித்துக் கொண்டு, சிதம்பரம் கோயிலுக்குத் திரும்பவும் செல்லலாம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
சிலைகளைக் கூண்டுக்குள் வைக்கும் அளவிற்கு இருக்கிறது இக்கால கலை ஆர்வம்...ஹூம்ம்ம்ம்ம் ..... :(
பேரூர் பட்டீசுவரம் ஆலயத்தின்
>>> திருவாலங்காடு, திருப்பனந்தாள், திருச்செங்காட்டாங்குடி,
தென்காசி, தாரமங்கலம் போன்ற ஊர்களிலும் ஊர்த்துவ
தாண்டவ நடராஜரைக் காணலாம்.<<<
ஊர்த்வ தாண்டவச் சிற்பம் ;
வீரபத்ரருக்கு இடப்புறம் இருப்பது -
http://www.destinationinfinity.org/wp-content/uploads/2010/11/Sculputures-carved-out-of-single-stone.jpg
தேவ்
To post to this group, send email to minT...@googlegroups.com ToTamil in Digital Media" group is an activity of Tamil Heritage
Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
may
like to
visit our Muthusom Blogs at:
http://www.tamilheritage.org/how2contribute.html
minTamil-u...@googlegroups.com
unsubscribe from this group, send email to
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
சிலைகளைக் கூண்டுக்குள் வைக்கும் அளவிற்கு இருக்கிறது இக்கால கலை ஆர்வம்...ஹூம்ம்ம்ம்ம் ..... :(
கோயில் கட்டுவதில் இப்படிப்பட்ட முறைகளா? இன்றுதான் தெரிகிறது, நன்றி கீதா.
இது போன்ற பழந்தமிழ்க் கட்டிடக் கலை, கட்டுமானக் கலை பற்றி தெரிந்தவர்கல் அவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
படிக்க நானிருக்கிறேன் :D
அன்புடன்
..... தேமொழி
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
வாழ்த்துக்கள் கீதா. விழுந்து, விழுந்து படித்தேன். செகரத்திலும் வைத்துக்கொண்டேன்.தேமொழி! நல்ல வேளை. கூண்டில் வைத்தார்கள். இல்லையெனில் நம்மாட்கள் தோண்டி எடுப்பார்கள்.இன்னம்பூரான்




2013/1/16 தேமொழி <them...@yahoo.com>சிலைகளைக் கூண்டுக்குள் வைக்கும் அளவிற்கு இருக்கிறது இக்கால கலை ஆர்வம்...ஹூம்ம்ம்ம்ம் ..... :(கூண்டுக்குள் வைத்தால் தான் இச்சிற்பங்களைப் பாதுகாக்கலாம் என்ற நிலை அமைந்து விட்டது. சிற்பங்கள் பாதுகாக்கபப்டுகின்றன என்றாலும் அதன் கலை அழகை முழுமையாக ரசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் மனதில் இப்படிப்பட்ட கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் சிற்பங்களை பார்க்கும் போது தோன்றாமல் இருப்பதில்லை.சுபா
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
தில்லையில் நடராஜர் எப்படி முக்கியத்துவமோ, மூலவரோ அப்படியே திருவாரூரில் தியாகராஜர்
முக்கியத்துவம் வாய்ந்தவரும் மூலவரும் ஆவார். தில்லை நடராஜ சபை, பொன்னம்பலம் என்றால்
திருவாரூர் தியாகராஜ சபையைப் பூ அம்பலம் என்று குறிப்பிடுவார்கள். இங்கே தான் சுந்தரரைத்
தியாகராஜர், "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று துவங்கச்
செய்யும் முதலடியை வைத்துத் திருத்தொண்டத் தொகையை எழுதச் செய்து அருளினார். பஞ்சபூதத்
தலங்களில் உலகைக் குறிப்பிடும் திருவாரூரை மனதில் இருத்தியே, சேக்கிழார் எழுதிய பெரிய
புராணத்தை ஆரம்பிக்கும்போது நடராஜர், "உலகெலாம்" என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடும் அம்பலவாணன் முதலில் ஆடியது என்னமோ அறைக்குள்ளே
தான். உமையவள் மட்டுமே காணுமாறு அறைக்குள் அவன் ஆடிய ஆட்டம் திரு உத்தரகோச மங்கை என்னும்
ஊரில் என்று சொல்லுவார்கள். அன்னையானவள் பரத குலத்தில் பிறந்து ஐயனை மணந்து பின்னர்
இங்கே ஐயன் அன்னைக்கு வேதப் பொருளை உபதேசித்து, பின்னர் தன் நாட்டியத்தையும் காட்டி
அருளியதாய்ச் சொல்லுவார்கள். தேவிக்கு உபதேசத்தை ரகசியமாய்க் கொடுத்து அருளியதால் உத்தர
கோச மங்கை எனப் பெயர் பெற்றதாயும் சொல்லுவார்கள். உத்தரம்=உபதேசம், கோசம்=ரகசியம்,
மங்கை=இங்கே பார்வதியைக் குறிக்கும். இந்த நாட்டிய நடராஜரை ஆதி சிதம்பரேசர் என அழைக்கப்
படுவதோடு, இங்கே உள்ள மரகத நடராஜர் இருக்கும் இடத்தை ரத்தின சபை என்றும் அழைக்கப் படுகிறது.
அக்கினியின் மத்தியில் அன்னை காண மகேசன் இங்கே அறையில் ஆடிய ஆட்டமே, சிதம்பரத்தில்
பொன்னம்பலத்தில் ஆடப் பட்டதாயும் சொல்லப் படுகிறது. இதைத் தான் "அறையில் இருந்தாலும்
அம்பலத்துக்கு வரத்தானே வேண்டும்" என்ற சொல் வழக்கும் சொல்லுவதாய்க் கூறுவார்கள்.
ஐந்தரை அடி உயர நடராஜரை உள்ளே வைத்தே சன்னதி எழுப்பப் பட்டிருப்பதாய்ச் சொல்லுகிறார்கள்.
இந்த ஆதி சிதம்பரம் என அழைக்கப் படும் சன்னதி தனிக்கோயிலாக கோயிலுக்கு உள்ளேயே குளத்துக்கு
எதிரில் இருப்பதாயும் சொல்கின்றனர். இவர் வெளியே வருவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை இவரின்
சந்தனக் காப்பு களையப் பட்டு அபிஷேகங்கள் நடந்து திரும்பச் சந்தனக் காப்புக்குள் நுழைந்து
விடுவார். அந்த நாள் மார்கழித் திருவாதிரை நன்னாள்.
ஆனால் திருவாரூரிலோ என்றால் அவன் ஆடிய ஆட்டத்தை "அஜபா நடனம்" என்று சொல்கிறார்கள்.
வாயால் சொல்லாமல் சூட்சுமமாய் ஒலிப்பதால் இதற்கு அஜபா=ஜபிக்கப் படாதது என்று பொருள்.
இதை விளக்குவதே தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். இவர் திருமேனியே இங்கே திருவாரூர்
ரகசியம். இதைச் சோமகுல ரகசியம் என்று சொல்வார்கள். இவர் திருமேனியில் ஸ்ரீசக்ரம் அலங்கரிப்பதால்
திருமேனி காணக் கிடைக்காத ஒன்று. தியாகராஜரும் உற்சவ காலங்களில் வெளியே வந்து தன் நடனத்தை
ஆடுகிறார். அது போல் நடராஜரும் உற்சவ காலங்களில் மட்டுமே வெளியே வருவார். ஒரு வருஷத்தில்
ஆறுமுறைகளில் மகா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகிறது. அவை நம் மானிடக் கணக்கில் கொள்ளாமல்
தேவர்களின் கணக்கிலே கணக்கிடப் படுகிறது. தேவர்களின் காலம் நமக்கு மார்கழி மாதம் அவர்களுக்கு
உஷத் காலம் என்று கணக்கிடப் படுவதால் மார்கழித் திருவாதிரையின் அபிஷேகம் உஷத் காலப்
பூஜையாகக் கணக்கிடப் படுகிறது. மாசி-பங்குனியில் செய்யப் படுவது காலசந்தி, அல்லது பகலின்
ஆரம்பம் எனக் கொண்டால், சித்திரையில் செய்யப் படுவது, உச்சிக்காலம் அல்லது நடுப்பகல்
என்றும், ஆனி மாதம் நடப்பது பிரதோஷ காலம் அல்லது மாலைப் பூஜை எனவும், ஆவணி மாதம் நடப்பது
இரண்டாம் காலம் அல்லது முன் இரவு பூஜையாகவும், புரட்டாசி மாதம் நடப்பது அர்த்தஜாமம்
அல்லது நடு இரவு எனவும் அழைக்கப் படுகிறது.
சிதம்பர ரகசியம் - சித்தம் போக்கு, சிவன் போக்கு!
திரு கைலாஷி அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல் திருவாரூரில் "திருச்சிற்றம்பலம்"
என்று சொல்லுவது இல்லை. அதற்குப் பதிலாக "ஆரூரா, தியாகராஜா" என்றே சொல்லப்
படுகிறது. மேலும் வன்மீகம் என்னும் புற்றில் இருந்து ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியமையால்,
இது ப்ருத்வித் தலம் என அழைக்கப் படுவதாயும் அறிகிறோம். திருமாலால் பாற்கடலில் வழிபடப்
பட்டு, பின்னர் அவரிடமிருந்து இந்திரன் பெற்று, இந்திரனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியை
வந்து அடைந்து ஆரூரில் கோயில் கொண்ட தியாகராஜருக்கே இங்கே முதல் மரியாதை! தில்லையில்
ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜரின் அழகை இப்போது சற்று பார்ப்போம்.
"குனித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே!" என்றார் நாவுக்கு அரசர். இறைவனின்
திரு அழகில் மயங்கிய அவர் இம்மாதிரி வர்ணிப்பது மிகை அன்று என்றாலும், அவர் தம் வர்ணனையில்
மறைந்திருக்கும் பொருள் என்ன வென்றால்,
குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை
வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம்
அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து, தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக்
களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும்,
கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்= தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என
வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும்,
பனித்த சடையும்= சிவநெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச்
சடை
பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்= நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன், தன்னிடம்
நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ,
அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களைத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான்
என்னும் விதமாய்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்=இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும்
பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால், இப்பிறவியின் அனைத்துக்
கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு
என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.
இறையவன் ஆடல் தெற்கு நோக்கியே இருக்கிறது. தென் திசை யமதர்மனின் திசை என்பர். அந்த
யமபயத்தை நீக்கி நம்மைப் பேரருட்கடலில் ஆழ்த்தி நம்மை உய்விக்கவும், தெற்கே இருந்து
வீசும் தென்றல் காற்று சுமந்து வரும் தென் தமிழின் மகத்துவத்துக்கும், மணத்துக்காகவும்
கூட இருக்கலாம். "சித்தம் போக்கு சிவன் போக்கு" என்பர். இவன் போக்கை யாரோ
கண்டார்?
தன் கையில் உள்ள உடுக்கையைக் கொட்டிக் கொண்டு இவ்வுலக ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான்.
ஏந்திய நெருப்பால் கன்ம மலத்தைச் சுட்டுப் பொசுக்குகிறான். ஊன்றிய திருவடியால் ஆணவத்தை
அகற்றுகிறான். தூக்கிய திருவடியால் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கிறான். அபய
ஹஸ்தம் காட்டி உயிர்களுக்கு "அஞ்சேல்" என அபயம் அளிக்கின்றான். தண்ணொளி வீசும்
திருமுகத்தினால் அனைவருக்கும், அனைத்துக்கும் "நானே தலைவன்" எனத் தெரியப்
படுத்துகிறான். திருமுடியில் சுமந்திருக்கும் கங்கையின் மூலம் அவன் பேராற்றலையும் உயிர்களைத்
தடுத்தாட்கொள்ளும் வேகத்தையும் வெளிக்காட்டுகின்றான். பித்தனாகிய அவன் பிறையைத் தன்
தலையில் சூடியதின் மூலம், தன்னைச் சரண் என வந்தடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பான் எனவும்
தெரிவிக்கின்றான். ஆடலரசனே சரணம், அவன் திருவடிகளே போற்றி, போற்றி!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே, இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு"
என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு
உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்"
என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும், சோதிடத்திலும் பேசப்
படும் 6-வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை "ஓரியன் குழு"வில்
சொல்லப் படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப்
படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும்.
வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே
காணப்படும்.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும், மார்கழியில்
வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆடவல்லான், தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க்
கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான
திருவிழா, மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு
உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச்
சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப் பட்டதைப்
பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
ஆதிரை நன்னாள் மட்டுமின்றி "அம்பா ஆடல்" என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக்
கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர், சிவகாமி, பிள்ளையார், சுப்ரமணியர்,
சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த
ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே ஈசன், அம்பிகை, கணபதி, சுப்ரமணியர், சண்டேசஸ்வரர்
என்றே சொல்லப் படுகின்றது. மிக்க ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை
"ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள்
நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்றுகாலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப்
பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து
அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும்
காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப் படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில்
ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப்
படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள்
வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று
சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது.
அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள்
ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர்.
இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும்,சேந்தனார் அளித்த களிக்காகவே அன்று களி நைவேத்தியம் செய்யப்
படுவது பற்றியும் அடுத்துப் பார்ப்போம். மேலே காணப்படும் "ககன கந்தர்வ கனக விமானம்"
படம் கொடுத்து உதவிய திரு கைலாஷி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும்,
இது உலகளவிலும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் இங்கே காணலாம்.
தேவாரம் சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் தமிழில் கோயிலின் குறிப்பிட்ட ஓதுவார்களால் பாடப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் தீட்சிதர்களே, நன்கு தேவாரப் பாடல்களை இசையுடன் பாடுவார்கள். பிரச்னை என்னவென்றால் நடராஜரின் பொன்னம்பலத்துக்கு அருகே உள்ள மேடை போன்ற "கனகசபை"யில் போய்ப் பாடவேண்டும் என்பதே திரு ஆறுமுகம் அவர்களின் கோரிக்கை. ஆனால் அந்த இடத்திலும் வழிபாடுகள் நடைபெறுவதாலும், குஞ்சிதபாதம் அபிஷேகங்கள் அங்கே தான் நடக்கும், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம், வழிபாடு நடக்கும், என்பதால் ஓதுவார்கள் கூடக் கீழே நின்றுதான் பாடுவார்கள், ஆகவே நீங்களும், அங்கேயே நின்று பாடுங்கள் என்பது தான் தீட்சிதர்கள் தரப்பில் சொல்லப் படுகிறது, திரும்பத் திரும்ப. ஆனால் தமிழில் பாடுவதையே தீட்சிதர்கள் அனுமதிக்காதது போல் ஒரு தோற்றம் மீண்டும், மீண்டும் உருவாக்கப் படுவது வருத்தத்துக்கு உரியது. பல வருடங்கள் சிதம்பரம் கோயில் சென்று வருகிற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அங்கு தேவாரம் பாட எந்தத் தடையும் இல்லை என்று.
காமேஷின் கேள்வி.
ஆனா எல்லா பிரஸ்ஸும் ஏன் ஒரே மாதிரி தகவலைப்
பரப்ப வேண்டும்.. ?
ஏதாவது ஒரு தினசரி உண்மையை சொல்லாமே.. ?
காமேஷ், எனக்குத் தெரிந்து எல்லாத் தினசரிகளிலும் ஆறுமுகம் அவர்கள் "கனகசபை"யில்
தேவாரம் ஓதினார், தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி என்றே சொல்லி இருக்கிறது. ஆனால்
அதே தீனசரிகளில் அதே ஆறுமுகம் அவர்கள், தான் தேவாரம் ஓதவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்.
ஆகவே உண்மை என்ன என்று யாருக்குத் தெரியும்? தற்சமயம் எந்தப் பத்திரிகை உண்மை சொல்லுகிறது?
எல்லாருக்குமே பரபரப்புச் செய்திகளினால் தங்கள் பத்திரிகை விற்கவேண்டும் என்ற வியாபார
நோக்கே உள்ளது.
ஆசீப் மீரான் சொல்லுவது:
//கீதாம்மா ரொம்ப நல்லவங்கன்னு மட்டும் தெரியுது
கீதாம்மா சொல்வது மட்டும் உண்மையென்றால் 'சோ'வென்று
கொட்டித் தீர்த்திருப்பார்கள் பத்திரிகையாளர்கள்
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம்
பிரச்னையில் தீவிரம் எதுவும் இல்லை என்பத//
ஆசீப், உண்மை எது, பொய் எது, நடப்பது எதுவெனத் தெரியாமல் பிறர் சொல்லுவதை நம்பும் அளவுக்கு
நான் நல்லவளே இல்லை என்பது தான் நிஜம், தவிர, என் கணவர் பள்ளிப்படிப்பே சிதம்பரம் நாவலர்
பள்ளியில் தான். பல வருஷங்களாய்ச் சிதம்பரத்துடனும் கோயிலுடனும் தொடர்புகள் உண்டு.
எனக்கும் கல்யாணம் ஆனதில் இருந்து அந்தக் கோயிலின் வழிபாட்டு முறைகள் பழக்கமே.
நீங்கள் சொல்லும் "சோ"வென்று கொட்டித் தீர்ப்பவர்களுக்கு அந்தக் கோயிலின்
வழிபாட்டு முறைகள் தெரியாமல் இருந்திருக்கலாம், அதனாலேயே தலையிட்டிருக்காமல் இருக்கலாம்
இல்லையா? இனி மேலதிகத் தகவல் வேண்டுவோர் அணுகவேண்டிய முகவரி,
T.Ramalinga Diksthithar, M.A.Litt.,
Research Schollar, "PRATHIBA"
136/55, East Car Street,
Chidambaram-608001.
Tamilnadu. India.
Phone 04144-223507
prathib...@yahoo.co.in
இனி நண்பர் ஒருவர் எழுதிய குறிப்புக்களையும் கீழே காணலாம்.
//சிதம்பரம்
கோயிலில் ஆறு கால (வேளை) பூஜைகள் நடக்கும். அதில் மாலை ஆறு மணிவாக்கில் ஆதிசங்கரர்
தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் நடக்கும் பூஜையை பல முறை
நான் கண்டிருக்கிறேன். அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூஜை நடக்கும்.. மைல் கணக்கில்
கேட்கும் பெரிய இரு காண்டா மணிகள் 'டாண் டாண்' என்று விடாமல் ஒலிக்க, வரிசையாக கட்டப்பட்டிருக்கும்
பத்துக்கும் மேற்பட்ட சிறு மணிகள் 'கிலுகிலு' என்று விடாது சப்தமெழுப்ப, இந்த சத்தத்தில்
சித்சபையில் நம் காதில் கூட விழாத வேத முழக்கத்தின் இடையில் பூஜை நடக்கும்... திடீரென
அனைத்து மணிகளும் வேதங்களும் நின்றுவிடும்... அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓதுவார்
என்பவர் கணீரென்ற குரலில் தமிழ் பதிகங்கள் பாடுவார்... பிறகு மீண்டும் மணிச்சத்தம்
பலமாக ஒலிக்க பூஜை நடக்கும். பிறகு மீண்டும் அனைத்தும் நின்று அமைதியை கிழித்துக்கொண்டு
கணீரென தமிழ் பதிகங்கள்... இந்த பதிகங்கள் சத்தியமாக தமிழ்தான்... தேவாரமோ, திருவாசகமோ,
சிவபுராணமோ தெரியாது... ஆனால் தமிழ்... ஒரு தேர்ந்த ஆர்க்கெஸ்ட்ராவின் இசையில் முகிழ்ந்தால்
கிடைக்கும் பரவசம் கிடைக்கும் அந்த அனுபவத்திற்காகவே நாத்திகனாக அலைந்த காலங்களிலும்
இந்த பூஜைக்கு செல்வேன் (அப்படியே பெருமாள் மடப்பள்ளி புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கும்)...
ஆகவே தமிழ் பதிகங்களை பாட முற்படுவதா
மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கியிருந்துதான் திருவாசகத்தை எழுதினார். மேலும் நடராஜர்
கேட்டுக்கொண்டபடி திருக்கோவையார் பதிகங்களையும் இயற்றினார். நடராஜரே இந்த பதிகங்களை
எழுதி அதை கோயில் குளத்தில் வைத்துவிட்டார் என்பது புராணம். குளத்தில் பதிகங்களை கண்ட
கூட்டம், மாணிக்கவாசகரை அணுகி அதன் அர்த்தம் என்னவென கேட்க அவர் கூட்டத்தை கோவிலுக்கு
அழைத்து சென்று நடராஜரைக் காண்பித்து அந்த பதிகங்களுக்கு அர்த்தம் சிவபெருமானே என்று
சொல்லி கோவில் குளத்தில் நடந்து சென்று மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள். மாணிக்கவாசகருக்கும்
தில்லைக்கும் உள்ள நெருக்கம் காரணமாக தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும்
மாணிக்கவாசகர் சிலை கனகசபையில் முன்பு கொண்டுவரப்பட்டு அனைத்து பக்தர்களும் ஓதுவாருடன்
சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்... திருவெம்பாவை தமிழ்தான்...
தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு
முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்... இது சிதம்பர ரகசியம் அல்ல...
வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு... தேர் தரிசன கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட எல்லாருக்கும்
இது தெரியும்... ஆகவே கேட்டதை வைத்து விரும்பிய மாதிரி உருவகித்து நடராஜர் தமிழை மிதிக்கிறார்
என்று படம் போடும் நாத்திகர்களின் நோக்கம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை...//
மேற்கண்டவை "முகமூடி" என்பவர் சில வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவில் இருந்து
எடுக்கப் பட்டது. திரு வெங்கட்ராம் திவாகரும் தேவாரங்கள் பாடப்படுவதாயே கூறி இருக்கிறார்.
அவரின் அனுமதி கிடைத்தால் அவர் பதிவும் இங்கே போடுவேன். விவாதத்துக்கு அல்ல.