சங்கத்தமிழ் நாள்காட்டி :சங்க இலக்கியப் பாடல்கள்-விளக்கங்கள் ஓவியங்களுடன்

185 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 31, 2025, 11:18:07 PM5/31/25
to மின்தமிழ்

Screenshot 2025-06-01.jpg
யான் உற்ற நோயே

அழுதல் ஆற்றிசின் - ஆயிழை! ஒலி குரல்
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன்
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்
சிறுபுறம் கவையினனாக, அதன்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு
இஃது ஆகின்று யான் உற்ற நோயே! (நற். 128: 6-11)
      நற்சேந்தனார்

பொருள்:
தோழியே, அழாதே! நான் உற்ற நோய் பற்றிச் சொல்கிறேன்.
தினைக் கதிர்க் காவலின் போது ஒருவன்,
கண்ணியும் மாலையும் அணிந்தவனாய் வீரக் கழலுடன் வந்தான்.
அவன் எனக்குப் பின்னால் வந்து என்னை முதுகுடன்
சேர்த்து அணைத்துக்கொண்டான். அப்போதிருந்து
அந்த நிகழ்ச்சியை நினைத்து,
நினைத்து இப்படி ஆகிவிட்டது.

My malady is because my heart keeps thinking about him
And I am like this ever since the man whose head and chest
Adorned with wreaths, his feet decked with heroic anklets,
Clasped me from back and caused me feel a thrill
When I was guarding the millet crops!

தேமொழி

unread,
Jun 1, 2025, 9:48:09 PM6/1/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-02.jpg
பொன்றும் நாள் இதுதானோ?

பயில்படை நிவந்த பல்பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை
'காப்புடை வாயில் போற்று ஓ' என்னும்
யாமம் கொள்பவர் நெடுநா ஒண்மணி
ஒன்றுஎறி பாணியின் இரட்டும்
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே? (நற். 132:6-11)
      பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
பல பூக்கள் பரப்பிய உயர்ந்த படுக்கையும் சிறந்த
காவலையும் உடையதாய் வீடு உள்ளது. அங்குக்
'காக்க வேண்டிய உங்கள் வீட்டுக் கதவுகளைப்
பாதுகாப்பாகப் பூட்டிக் கொள்வீர்களாக' என்று
இரவுக் காவலர் நீண்ட குரல் எழுப்புவர். அது பெரிய நாவின் மணியோசையைப்
போல் கேட்கும். நள்ளிரவிலும் உறங்காமல் வீட்டுக்
காவலில் இருக்கும் நான், சாகும் நாள் இன்றுதான் போலும்!

The well-furnished bed, strewn with flowers, in our house,
Is well-guarded with gates.
The night guards shout and ring their long tongued bells
To warn the townfolk to keep watch over their doors;
With such guarding, O' my friend, it seems that today is the day,
My poor life is destined to be doomed!

தேமொழி

unread,
Jun 2, 2025, 8:27:23 PM6/2/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-03.jpg

ஆட்டினம் காக்கும் இடையர்

பாணிகொண்ட பல்கால் மெல்உறி,
ஞெலிகோல், கலப்பை அதளொடு சுருக்கி,
பறிப்புறத்து இட்ட பால்நொடை இடையன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்ப,
தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே! (நற். 142:2-8)
      இடைக்காடனார்  

பொருள்:
பல பிரிகயிறு கொண்ட மெல்லிய உறியையும்,
தீக்கடை கோல் முதலான கருவிகளை வைத்திருக்கும் தோல் பையையும், பனைஓலையால் செய்த பாயையும்
ஒன்றாகச் சேர்த்து முதுகில் கட்டியபடி இடையன், பால் விற்றுச் செல்வான்.
நுண்ணிய பல மழைத்துளிகள் அவன் உடலின் ஒரு பக்கத்தை நனைக்கும்.
கையில் வைத்திருக்கும் தண்டை ஊன்றி அதன் மேல் ஒரு கால் வைத்து ஒடுங்கிய
நிலையிலிருந்து வாயை மடித்து சீழ்க்கை எழுப்புவான். அந்த ஒலியால்
சிறிய தலையையுடைய ஆட்டு மந்தை, வேறுபக்கம் போகாமல் மயங்கி,
இருந்த புலத்திலேயே தங்கும்.

A shepherd, who sells milk, holds in his hand a soft rope hoop.
On his back, he carries a leather bag containing kindling tools,
Along with a palm frond mat. He then stands,
Dampened by the raindrops, his legs resting on his staff,
And makes a whistling sound, hearing which,
The sheep remain in the fold, not straying anywhere.

தேமொழி

unread,
Jun 3, 2025, 7:38:46 PM6/3/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-04.jpg

நானே உன் நெஞ்சுக்குரியவள்

அணில்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே! (குறுந். 49)
      அம்மூவனார்

பொருள்:
அணிலின் பல்லைப் போன்ற முள்ளையும்
நீல மணி போன்ற நிறம்கொண்ட பூக்களையும்
கொண்ட முண்டகச் செடிகள் நிறைந்த கடற்கரையையும் பெரிய கடலையும் 
உடைய தலைவனே! இப்பிறப்பு நீங்கி, மறு பிறப்பு வாய்த்தாலும்,
நீயே என்னுடைய கணவன் ஆகுக. அப்போதும்
நானே உன்னுடைய நெஞ்சம் விரும்பும் காதலி ஆகுக.

O' lord of the shores,
Where the ocean is sapphire colored,
And mundakam bushes have thorns like teeth of squirrels!
Even if this life ends and we are born again,
You shall be my husband
And I shall be the one who has your heart!

தேமொழி

unread,
Jun 4, 2025, 9:13:30 PM6/4/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-05.jpg

உறுதிமொழியை மறந்துவிடாதே!

எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,
நேர் இறை முன்கை பற்றி,
சூரரமகளிரோடு உற்ற சூளே! (குறுந். 53:5-7)
      கோப்பெருஞ்சோழன்

பொருள்:
மணல் மேடுகள் நிறைந்த எம் ஊர் நீர்த்துறையில்,
தெய்வ மகளிர் சாட்சியாக 'உன்னை மணப்பேன்'
எனத் தலைவிக்கு நீ செய்து கொடுத்த சத்தியத்தை மறந்துவிடாதே.

In the presence of the Goddess at the waterfront
Of our town surrounded by sand dunes,
You held her (Heroine's) slender forearms
And promised to marry her.

தேமொழி

unread,
Jun 5, 2025, 9:23:01 PM6/5/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-06.jpg

பிரிவில்லாத காதல் வாய்க்கட்டும்

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு ... (குறுந். 57:1-3)
      சிறைக்குடி ஆந்தையார்

பொருள்:
மகன்றில் பறவை, தன் இணையுடன் நீந்தும் வேளையில்
ஒரு பூ இடையில் விழுந்தாலும் அதைப் பல
ஆண்டுகள் பிரிந்ததாகக் கருதி வருந்தும்.
அந்த மகன்றிலைப் போல்
சிறு பிரிவும் இல்லாமல் இருப்பதே நான் கொண்ட காதலுக்குச் சிறப்பு.

Like water birds that suffer as if they've been years apart
If even a flower interrupts their embrace,
Inseparable were we with undying passion.

தேமொழி

unread,
Jun 6, 2025, 9:29:21 PM6/6/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-07.jpg

காதல் நோயைப் பொறுத்துக்கொள்வது கடினம்

கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே! (குறுந். 58: 4-6)
      வெள்ளி வீதியார்

பொருள்:
சூரியன் சுட்டெரிக்கும் பாறையில் வைக்கப்பெற்ற
வெண்ணெய், உருகி அந்தப் பாறையில் பரந்து போவதைக்
கையில்லாத - வாய் பேசமுடியாத ஒருவன் தன் பார்வையாலேயே தடுக்க இயலாது.
அதைப் போல் இந்தக் காதல் நோய் என் உடல் முழுவதும் பரவி,
தாங்கமுடியாத துன்பத்தைத் தருவதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

Like butter melting on a hot rock under the scorching sun,
Which an armless mute tried to guard with his sight
Spreads this malady;
It's hard to bear and uproot!

தேமொழி

unread,
Jun 7, 2025, 10:53:45 PM6/7/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-08.jpg

கவரிமாவும் ஆய்க்குடியும்

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,
குவளைப் பைஞ்சுனை பருகி, அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்,
வடதிசை அதுவே வான்தோய் இமையம்!
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ இம்மலர்தலை உலகம்! (புறம். 132:4-9)
      உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

பொருள்:
வடக்கே வானளாவிய இமயமலையில்,
நரந்தம் என்னும் நறுமணப் புல்லை மேய்ந்த கவரிமா,
குவளை மலர்களையுடைய சுனையில் நீரைக் குடித்துவிட்டு,
அருகிலுள்ள தகரம் என்னும் மணமிக்க மரத்தடியில்
தன் இணையுடன் தங்கும். அந்த இமயச் சாரலுக்கு இணையாகத்
தெற்கே சிறந்த குடியாக ஆய்குடியைக் கொண்ட பொதிகை மலை திகழ்கிறது.
இவ்விரண்டும் இல்லையென்றால் இந்தப் பரந்த உலகம் உயர்வு,
தாழ்வு என்னும் பேதத்தில் நிலைதடுமாறிவிடும்.

In the North, where yaks graze on aromatic grass
And drink fresh mountain spring water, is the Himalayas;
To the South lies the famed clan of Aai;
If not for these two, this world would have gone upside down.

தேமொழி

unread,
Jun 8, 2025, 9:23:10 PM6/8/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-09.jpg
வையாவிக் கோப்பெரும் பேகன்

களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்,
நயம்புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,
அறம் செய்தீமோ, அருள் வெய்யோய் என
இஃது யாம் இரந்த பரிசில், அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி அரும்படர் களைமே! (புறம். 145:5-10)
      பரணர்

பொருள்:
களாப் பழம் போன்ற கரிய தண்டினைக் கொண்ட சிறியயாழினை இசைத்து,
கேட்போரைத் தலையசைக்கச் செய்வோம்.
நாங்கள் உன்னிடம் எதுவும் எதிர்பார்த்து வரவில்லை:
ஆனால் ஒரு பரிசில் வேண்டுகிறோம்.
அருளை விரும்புபவனே! நீ அறத்தின்படி செயல்படுவாயாக!
வீட்டில் உன்னைப் பிரிந்த கவலையுடன் இருக்கும்
உன் தலைவியின் துன்பத்தைப் போக்குவதற்காக,
மணிகட்டப்பட்ட தேரில் ஏறி விரைந்து செல்வாயாக!
இதுதான் நீ எங்களுக்குத் தரும் பரிசில் ஆகும்.

O' Pekan, we play the dark stemmed lyre
To everyone's delight.
We ask you this favour;
Get on your majestic chariot,
Go to your wife who is pining for you.
And rid her of her separation pangs.

தேமொழி

unread,
Jun 9, 2025, 9:33:13 PM6/9/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-10.jpg
கண்டீரக் கோப்பெரு நள்ளி

எந்நாடோ? என நாடும் சொல்லான்,
யாரீரோ? எனப் பேரும் சொல்லான்,
பிறர்பிறர் கூற வழிக்கேட்டிசினே
இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி,
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத்து அன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே! (புறம். 150:22-28)
      வன்பரணர்

பொருள்:
உன்னுடைய நாடு எது என்று கேட்டோம். அவன் சொல்லவில்லை.
நீ யார் என்று கேட்டோம். அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை.
அவனது நாட்டையும் பெயரையும்
பிறர் கூறக் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.
பெரும்புகழ் கொண்ட தோட்டி மலைக்கும் அம்மலையில்
பளிங்குபோல் பாயும் அருவிக்கும் உரியவனான
நள்ளிதான் அவன் என்று அறிந்துகொண்டோம்.

He neither told which was his town nor his name:
I found from others that he was Nalli,
The ruler of the famed Thotti hills
Where clear water flows.

தேமொழி

unread,
Jun 10, 2025, 8:49:31 PM6/10/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-11.jpg

வல்வில் ஓரி

நாட்டிடன் நாட்டிடன் வருதும்: ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர் என,
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி,
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்,
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்ம்! (புறம். 152:23-29)

      வன்பரணர்

பொருள்:
'நாங்கள் சுற்றிவந்த பல்வேறு நாடுகளில் உன்னைப் போல்
வேட்டையாடுவதில் சிறந்தோர் ஒருவரையும் காணமுடியவில்லை' என்று
நாங்கள் சொல்வதற்கு விடாமல்,
அவன் வேட்டையாடிய மானின் கொழுத்த தசையுடன்,
பசு நெய்யை உருக்கியதைப் போன்ற மதுவைத் தந்தான்.
தம் மலையில் பிறந்த தூய்மையான தங்கத்தையும்
பல மணிகளையும் சேர்த்து, 'இவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்'
என்று கூறி எங்களுக்குத் தந்தான்.

'In all the countries we have seen
There's no better hunter than you',
Thus we praised him; without waiting for us to ask
He offered us deer meat, clear wine, gold and gems.

தேமொழி

unread,
Jun 11, 2025, 11:46:42 PM6/11/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-12.jpg

குமணன்

சிறுபொன் நன்கலம் சுற்ற இரீஇ,
கேடுஇன்றாகப் பாடுநர் கடும்புஎன,
அரிதுபெறு பொலம்கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
மட்டார் மறுகின் முதிரத்தோனே!
செல்குவை ஆயின், நல்குவன் பெரிதுஎனப்
பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந்து
உள்ளம் துரப்ப வந்தனென்! (புறம். 160:9-16)
      பெருஞ்சித்திரனார்

பொருள்:
'தங்கத்தாலான சிறிய வட்டில்களைச் சுற்றிலும் வைத்து, உண்ணச் செய்பவனும்,
'நம்மைப் பாடுகின்ற பாணர் சுற்றம் கேடின்றி வாழ்க!' என்று
பொன்னால் ஆன அணிகலன்களைத் தருபவனும், மிகுந்த
நட்புக் கொள்பவனுமான குமணன்,
தேன் நிறைந்த முதிர மலையில் உள்ளான்.
நீ அவனிடம் சென்றால் உனக்கு அவன் மிகுதியான செல்வத்தை அளிப்பான்' என்று,
உன்னுடைய புகழைச் சொல்லக் கேட்டு உன்னிடம் விரைவாக வந்தேன்.

As people told me "Kumanan of Mudiram hills
Values us bards, and gifts away
Rare jewels to those who sing his praise;
If you go and meet him, he will give you much more"
I came swiftly, driven by my heart's desire.


தேமொழி

unread,
Jun 12, 2025, 8:56:31 PM6/12/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-13.jpg
எல்லோருக்கும் கொடு

இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி, மனை கிழவோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே! (புறம். 163:5-9)

      பெருஞ்சித்திரனார்

பொருள்:
மனைக்குரியவளே!
பலாப்பழம் பழுத்துத் தொங்கும் முதிரமலைக்குத் தலைவனாகிய
நேரான வேலையுடைய குமணன் நமக்குக் கொடுத்த செல்வத்தை,
இவருக்குத்தான் தரவேண்டும் என்று இல்லாமலும்,
இன்னவர்க்கு இதனைத் தரலாமா என என்னிடம் கேட்காமலும்,
இதை வைத்துக்கொண்டு நன்றாக நாமே வாழலாம் என்று எண்ணாமலும்
எல்லோருக்கும் வழங்குவாயாக!

O' my wife! Be generous with this wealth
Without discrimination and don't hoard it for ourselves;
This wealth has been granted to us by Kumanan,
The Lord of Mudiram Hills that is abundant with Jack fruits.

--------

தேமொழி

unread,
Jun 13, 2025, 9:10:24 PM6/13/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-14.jpg

குறவர் உணவு

மரைஆன் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி,
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்! (புறம். 168:8-13)
      கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்

பொருள்:
மான் தசை பொரித்த வட்ட வடிவமான இரும்புப் பாத்திரத்தில்
காட்டுப் பசுவிடம் கறந்த பாலை ஊற்றி,
சந்தனக் கட்டையால் அடுப்பெரித்து,
குறவர்கள் ஊன்சோற்றைச் சமைப்பர்.
அவ்வாறு சமைத்த உணவை காட்டு மல்லிகை மலர்ந்த முற்றத்தில்
பெரிய வாழை இலையை விரித்துப் போட்டு எல்லோரும் பகுத்து உண்பர்.

In their front yard with jasmine blooms
The Kuravas eat together with others in a broad plantain leaf
Rice cooked in fresh milk drawn from wild cows
Made using sandalwood pieces set in fire.

தேமொழி

unread,
Jun 14, 2025, 9:10:46 PM6/14/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-15.jpg

கடையெழு வள்ளல்கள்

... என ஆங்கு,
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம்! (சிறுபாண்: 111-113)
      இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

பொருள்:
பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி என்னும்  ஏழு வள்ளல்களும்,
தங்கள் தோள் வலிமையால் பல போர்களில் வெற்றி கொண்டனர்.
தங்கள் வள்ளல் தன்மையால் பெரும்புகழைச் சுமந்தனர்.

In days of yore, the Seven Great Patrons
Won all battles that they faced
By the strength of their mighty shoulders
And carried the burden of generosity.
(The Seven Great Patrons: Began, Paari, Kaari, Aai, Athiyamaan, Nalli, Ori)

தேமொழி

unread,
Jun 15, 2025, 9:05:11 PM6/15/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-16.jpg

கள் அருந்தும் வேட்டுவர்

காந்தளங் கண்ணி, கொலைவில் வேட்டுவர்
செங்கோட்டு ஆமா ஊனொடு காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு,
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்,
குன்றுதலை மணந்த புன்புல வைப்பு! (பதிற்று. 30: 9-13)
      பாலைக் கௌதமனார்

பொருள்:
வளம் நிறைந்த கடைத்தெரு, குன்றுகள் நெருங்கியுள்ள
வறண்ட பகுதியில் அமைந்திருக்கும்.
காந்தள் பூ மாலையையும் வேட்டைக்கான வில்லையும் உடைய வேடர்,
செந்நிறக் கொம்பையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியையும்,
வலிமையான யானையின் தந்தத்தையும்
அந்தக் கடைத்தெருவுக்குக் கொண்டுவந்து கொடுத்து,
அதற்கு ஈடாக, வடித்த கள்ளைப் பெறுவர்.

Hunters adorned with red flowers and carrying bows
Bring red-horned wild cow meat and elephant tusks
To exchange it for toddy in prosperous markets
In towns that are surrounded by hillocks.

தேமொழி

unread,
Jun 16, 2025, 7:54:23 PM6/16/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-17.jpg

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

இறும்பூதால், பெரிதே கொடித் தேர் அண்ணல்
வடிமணி அணைத்த பணை மருள் நோன்தாள்
கடிமரத்தான் களிறு அணைத்து
நெடுநீர துறை கலங்க
மூழ்த்து இறுத்த வியன்தானை! (பதிற்று, 33:1-5)
      காப்பியாற்றுக் காப்பியனார்

பொருள்:
கொடி கட்டப்பட்ட தேர்களையுடைய மன்னனே!
உனது ஆற்றல் வியப்பிற்கு உரியது.
கழுத்தில் மணியும் முழவைப் போன்ற பெரிய கால்களும் உடைய
யானைகளைப் பகைவர் நாட்டுக் காவல் மரத்தில் கட்டியுள்ளாய். அகழியில் உள்ள நீர் கலங்கும்படி
முன்னேறித் தாக்கும் இயல்புடைய பெரிய தூசிப்
படையோடு அந்த யானைகள் முன்னேறித் தாக்கும்.

O' Ruler with majestic chariots! I'm amazed!
Using strong legged elephants adorned with bells.
You destroyed the protective forests of your enemies;
Your massive army overran their waterfronts.

தேமொழி

unread,
Jun 17, 2025, 10:28:35 PM6/17/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-18.jpg

கழனி ஊரன் மகள்

நெறி மருப்பு எருமை நீல இரும்போத்து
வெறிமலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள் இவள்,
பழன வெதிரின் கொடிப் பிணையலளே! (ஐங். 91)
      ஓரம்போகியார்

பொருள்:
வளைந்த கொம்புகளையுடைய எருமைக் கடா,
மணக்கும் பூக்கள் நிறைந்த பொய்கையில் உள்ள ஆம்பலைச் சிதைக்கும்.
அப்படிப்பட்ட வளமான வயல்களைக் கொண்ட ஊரனுக்கு மகளான தலைவி,
வயல்களில் உள்ள கரும்பின் பூவினால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையைச் சூடியுள்ளாள்.

(O' hero,)
This girl, wearing a long garland woven with flowers
From the sugarcanes in the fields
Is the daughter of the chief of the region
Where the bluish black male buffalo of curved horns ruins
The water lily in the lake.

தேமொழி

unread,
Jun 18, 2025, 9:14:04 PM6/18/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-19.jpg

நானே வருவேன்

புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே,
அகன் பெரும் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன் நகை பயிற்றி,
சிறுதேர் உருட்டும் தளர் நடை கண்டே! (ஐங். 403)

        பேயனார்

பொருள்:
தலைவியையும் மகனையும் காணும் ஆர்வம் பெரிதாகும்.
சிறப்பு மிக்க தன் தந்தையின் பெயரைத் தாங்குவதற்காக
மகன் பிறந்துள்ளான். அவன் சிரித்தபடி சிறிய தேரை
உருட்டிக்கொண்டு தளர் நடைபோடுவதைக் காணும் இன்பம்
அதனினும் பெரிது.

His heart swells up with pleasure
As he watches his son,
Borne by his loving wife,
The son named after his esteemed father,
Laugh merrily and push the wooden walker with unsteady steps.

தேமொழி

unread,
Jun 19, 2025, 9:02:05 PM6/19/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-20.jpg

மணியோசை கேட்கும்போதெல்லாம் கலங்குவாள்

மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு,
உடன்நிலை வேட்கையின் மடநாகு தழீஇ
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்!
ஆபூண் தெண்மணி ஐது இயம்பு இன்னிசை
புலம்புகொள் மாலை கேட்டொறும்
கலங்கினள்! (அகம். 64:11-17)
      ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்

பொருள்:
புற்றின் மேல் பகுதியில் தனது கொம்பினால் குத்திய எருது
அந்த மண் கொண்ட கொம்புடன், பசுவைத் தழுவியபடி
ஊருக்குள் வரும். அந்த மாலை வேளையில்
தொழுவத்தில் நிற்கும் கன்றுகளை நினைத்த அந்தப் பசுக்கள் ஒலி எழுப்பியபடி வரும்.
அப்பசுக்கள் கன்றுக்குப் பாலூட்டும்போது அவற்றின் கழுத்துமணி எழுப்பும் ஓசையைக்
கேட்ட தலைவி, தலைவனை நினைத்து வருந்துவாள்.

Cows move, all the while calling their young.
The bulls with muddy horns return to embrace their mates.
My lady, staying indoors, grieves sorely thinking of him
At the tinkling of the pleasing bells that adorn the cattle.

தேமொழி

unread,
Jun 20, 2025, 9:19:39 PM6/20/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-21.jpg

பிள்ளைகளைப் பெற்ற செம்மலோர்

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி! (அகம். 66:1-6)
      செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

பொருள்:
தோழியே, பகைவரும் விரும்பும் குற்றம் இல்லாத
அழகையுடைய குழந்தைகளைப் பெற்ற சிறந்தோர்,
இவ்வுலகத்தில் புகழோடு விளங்கி
மறுமை உலகத்திலும் நிறைவான வாழ்வை அடைவர் என்று
பலரும் கூறியுள்ளனர். இவையெல்லாம்
உண்மை என்பதை நாமே கண்கூடாகப் பார்த்துவிட்டோம்.

O' my friend! There was for me an opportunity
To realize the truth, often cited by the wise, which says:
Fortunate are those who beget sons of flawless wisdom;
These live a life of renown in this birth
And will attain the next world without any blemish.

தேமொழி

unread,
Jun 21, 2025, 11:51:56 PM6/21/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-22.jpg

நடுகற்கள் நிறைந்த வழி

... அதர்தொறும்
பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
உவல்இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே! (அகம். 67:9-14,18)
      நோய் பாடியார்

பொருள்:
இறந்து நடுகல்லாகிப் போன வீரர்களுக்கு,
மயில்இறகு மாலை அணிவித்து, அவரவர் பயன்படுத்திய
வேல்கள் நடப்பட்டு, கேடயங்கள் சார்த்தப்பெற்றிருக்கும். இந்த
நடுகற்கள் காலட்படை வீரர்கள் அணிவகுத்து நிற்பதுபோல் தோற்றம் அளிக்கும்.
வேற்றுமொழி பேசும் நாட்டோரைப் பிடிப்பதற்காகப்
பள்ளம் தோண்டி, அதை மூடி வைத்திருப்பர்.
அங்கே வரும் பகைவர், அந்தப் பள்ளத்தில் விழுந்து மாட்டிக் கொள்வர்.
அப்படிப்பட்ட குழிகள், கம்பத்தில் காயப்போடப்பட்ட தோலைப் போல் வரிசையாகக் காணப்படும்.
இப்படிப்பட்ட கொடுமையான வழியில், நம் தலைவர் நம்மைப் பிரிந்து சென்றுள்ளார்.

What am I to do my friend?
It is said that our lover crossed a wilderness
Where lies the gravestones of the dead
And their planted spears, their crests decked, with their shields.

தேமொழி

unread,
Jun 22, 2025, 8:35:26 PM6/22/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-23.jpg

தனியனாகச் செல்கிறேன்

தோள்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
கனைபொறி பிறப்ப நூறி, வினைப்படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல்உவர்ப் படுவில்,
பார்உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்புலம் துமியப் போகி, கொங்கர்
படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்
அகல்இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்! (அகம். 79:1-8)
      குடவாயில் கீரத்தனார்

பொருள்:
தோளில் கட்டுச் சோற்றைத் தொங்கவிட்டிருக்கும் ஆடவர்,
கிணறு வெட்டும் தொழிலில் புகுந்து மிக்க தீப்பொறி பறக்கப்
பாறைகளை வெட்டித் தோண்டுவர். மிக்க உவர்ப்புத்
தன்மையுடைய அக்கிணற்றில் ஊறிய நீரைக் குடிப்பதற்காக
ஆயரின் பசுக்கள், வலிய நிலங்கள் துகளாகும்படி தலையை உயர்த்திப் போகும்.
அதனால் எழுப்பப்பெற்ற செம்மண் புழுதியானது,
சிவந்த வானத்தைப் போல் தோன்றும். அத்தகைய
காட்டின்கண் தனியனாகச் செல்கிறேன்.

O' my heart, you passed through the wilderness
Where the men, digging a well, break rocks causing sparks;
And kine, to drink the water oozing from the well, proceed
Making the fine dusticles of the red soil float
That look like the red-hued crepuscular sky.

தேமொழி

unread,
Jun 23, 2025, 11:03:09 PM6/23/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-24.jpg

யானைக் கன்றைப் பிரிக்கும் வேடர்

கறைஅடி மடப்பிடி கானத்து அலற,
களிற்றுக்கன்று ஒழித்த உவகையர், கலிசிறந்து,
கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து,
பெரும்பொளி வெண்நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவுநொடை நல்இல் புதவுமுதற் பிணிக்கும்! (அகம். 83:3-8)
      கல்லாடனார்

பொருள்:
உரல்போன்ற அடியையுடைய இளம் பெண் யானை காட்டில் அலறுமாறு
அதன் ஆண் கன்றைப் பிடித்த வேடர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.
வெண்கடம்ப மரத்தின் பெரிய கிளையை இரண்டாகப் பிளந்து
அந்தக் கன்றை நிறுத்தி மரப்பட்டையில் உரித்த கயிற்றால் அழுந்தக் கட்டினர்.
பெரிய கொடிகள் அசையும் கடைத்தெருக்களையுடைய ஊரில்
கள் விற்கும் வீட்டின் வாயிலில் அந்தக் கன்றைக் கட்டுகின்றனர்.

The men capture the tender calf of a young she-elephant
And tether its legs with the fibrous cord.
The calf is tied in front of the goodly house in the bazaar of a hoary town
Where banners flutter atop and toddy is bartered.

தேமொழி

unread,
Jun 24, 2025, 8:22:30 PM6/24/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-25.jpg

குழந்தையைக் கொஞ்சும் சிறிய தாயர்

நினக்கு யாம் யாரேம் ஆகுதும்? என்று,
வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,
ஆங்கே, அரிமதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி! என்றாள்
அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புலத்தகைப் புத்தேள் இல் புக்கான், அலைக்கு 'ஒரு
கோல் தா!' நினக்கு அவள் யார் ஆகும்? (கலி. 82:18-25)
      மதுரை மருதன் இளநாகனார்

பொருள்:
விளையாடச் சென்ற மகனை வழியில், இவன் தந்தையின் முதல் பரத்தை கண்டாள்.
'உன்னுடைய முகத்தை நான் முத்தமிடுவதற்குக் காட்டு' என்றாள்.
அவன் தாங்கும் அளவிற்கு அணிகலன்களை அணிவித்தாள். பின்பு
வேறொருத்தி வந்தாள். அவனைத் தழுவி முத்தம் தந்தாள்.
'நாங்கள் உனக்குத் தாயாகும் முறைமை' என்று கூறினாள்.
'நீ உன் தந்தையைப் போல் இருக்காதே' என்று கூறி விடுத்தாள்!
என்று தோழி கூறினாள். அதைக் கேட்ட தலைவி சினந்து,
'இவனை அடிப்பதற்கு ஒரு கொம்பைக் கொண்டு வா' என்று
சொல்லியபடி, மகனைப் பார்த்து,
'உனக்கு அவள் யார் என்று தெரியுமா?' என்று கேட்டாள்.

(The confidante says to the heroine)
Your son went to the quarters of the woman,
The one his father fell for, and extended pleasantries!
(The heroine says to her son) She snatches your father like an eagle;
Scars she'd stamp on his chest, with her bracelets and nails;
What's such a one, to you? Let me have a stick to beat you!

** ஆங்கில விளக்கம் தரும் பாடல் வரிகள் படத்திற்குக் கொடுக்கப்பட்ட பாடல் வரிகளில் இல்லை, 
அது அப்பாடலில் தொடர்ந்து வரும் வரிகளுக்கும் பொருள் தருவதாக அமைந்துள்ளது. 

தேமொழி

unread,
Jun 25, 2025, 8:00:02 PM6/25/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-26.jpg

மனப் புண்ணில் வேல் எறிந்தவன் உன் தந்தை

எள்ளலான், அம்மென் பணைத்தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு
எம் இல் வருதியோ? எல்லா! நீ தன் மெய்க்கண்
அம்தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,
முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை
வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு
தந்தையும் வந்து நிலை! (கலி. 83: 26-31)

      மதுரை மருதன் இளநாகனார்

பொருள்:
மகனிடம், 'ஏடா! அழகுடைய மெத்தென்ற மூங்கில் போன்ற பிற தாயர் சூட்டிய மாலையுடன்
நம் இல்லத்திற்கு நீ வருவாயோ?' என்று தலைவி சொன்னாள்.
அப்போது அங்கே தலைவன் வந்தான்.  'நான் வருந்தும்படி, விருப்பத்திற்கு
உரிய மகளிர் அணிந்த மாலை மற்றும் அணிகலன்களின் வடுக்களோடு வந்து,
வெந்த புண்ணில் வேல் எறிந்தது போன்று நிற்கும் உன்
தந்தையின் செயல் இதைப் போல்தான் உள்ளது' என்றாள்.

Should you come to me with the wreaths
Those mothers with soft bamboo-like shoulders put!
Above this grief there's the father now,
Showing the scars of the bruise on his body
Those honey-tongued women inflicted.

தேமொழி

unread,
Jun 26, 2025, 10:18:50 PM6/26/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-27.jpg

தெய்வங்களை வணங்கி ஏறுதழுவும் பொதுவர்

அவ்வழி முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ, நல்லவர் அணி நிற்ப,
துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர் தொழூஉ! (கலி. 101:10-14)
      சோழன் நல்லுருத்திரனார்

பொருள்:
ஏறு தழுவும் களத்தில் நறுமணப் புகையோடு, காளைகளின்
குளம்படி பட்டு எழுந்த புழுதிப் புகையும் சூழ்ந்தன.
மழை பெய்யும் ஒலி போலவும் இடி முழக்கம் போலவும் ஏறுகள் ஒவ்வொன்றும்
மாறுபட்ட முறையில் நுழைந்தன. அந்தந்தக் காளைகளுக்குரிய
பெண்கள் வரிசையாய் நின்றனர். ஏறுதழுவும் பொதுவர்கள்
நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும் மராமரத்தின் கீழும் வீற்றிருக்கும் தெய்வங்களை
முறைப்படி வணங்கி, ஏறு தழுவும் தொழுவுக்குள் புகுந்தனர்.

The field roars with sounds like that of rain and thunder.
Fragrances spread and dust rises up with the bulls' ingress.
Lovely damsels assemble in array,
Brave men purposive and tenacious
Offer worship and jump right into the arena.

தேமொழி

unread,
Jun 28, 2025, 1:40:21 AM6/28/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-28.jpg

இளந்திரையன் பெயரைச் சொன்னால் கிடைக்கும் விருந்து

முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்,
வாடாத் தும்பை வயவர் பெருமகன்,
ஓடாத் தானை ஒண் தொழிற் கழல் கால்,
செவ் வரை நாடன் சென்னியம் எனினே!
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ, நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவீர்! (பெரும்பாண். 99-105)
      கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
பாணர்களே! வாடாத தும்பைப் பூவைச் சூடி வெற்றி பெற்றவனான
வீரக் கழல் அணிந்த இளந்திரையனைத் தேடி வரும் பாணர்கள்
நாங்கள் என்று சொல்லுங்கள். அப்படிச் சொன்னால் எயிற்றியர்,
கரடு முரடான வாயுடைய பானையில் தண்ணீர் ஊற்றிச்
சமைத்த உணவைக் உப்புக் கண்டத்துடன்
தெய்வத்திற்குப் படைப்பதுபோல் தேக்கு இலை நிறையும்படியாகத் தருவர். அதனை உங்கள் சுற்றத்துடன் உண்ணும் அளவிற்கு மிகுதியாகப் பெறுவீர்கள்.

The eyin women cook the rice grain with the brine.
You and your kin will get this food
With salted meat on teak leaves served,
When you claim to be a subject of the lord of hills,
Who owns a valiant army.

தேமொழி

unread,
Jun 28, 2025, 10:21:28 PM6/28/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-29.jpg
எயினர் குடியிருப்பில் பெறும் விருந்து

வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை,
கொடு நுகம் தழீஇய புதவின், செந்நிலை
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில்,
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்,
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன,
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின்
வறை கால் யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர்!
(பெரும்பாண். 126-133)

      கடியலூர் உருத்திரங் கண்ணனார்

பொருள்:
வளரும் முள் வேலி அமைக்கப்பட்டது எயினர் வீடுகள்.
அந்த வீடுகளின் வாயிலில் பாதுகாப்பிற்காக எழுமரம் தாழ்ப்பாள் போல் போடப்பட்டிருக்கும்.
வலிமையான கழுமரம் போல் கூர்மையான கம்புகள் வரிசையாக
நடப்பட்ட அரணையும் கொண்டது அக்குடியிருப்பு.
அங்கே நீங்கள் சென்றால் ஈந்தின் பெரிய விதை போன்ற செஞ்சோற்றுடன்
வேட்டை  நாய் பிடித்துக் கொண்டு வந்த கொழுத்த உடும்பின் கறியை வறுத்து,
சோறு மறையும் படியாக வழங்கும் உணவை எல்லா வீடுகளிலும் பெறுவீர்கள்!

There are ramparts thatched with grass;
Hung are quivers full of arrows;
Hounds are chained; the fences live of thorns.
In many homes thither, they'll serve you red rice
And the fried flesh of the iguana too.

Bhuvaneswari PM

unread,
Jun 28, 2025, 10:39:05 PM6/28/25
to mint...@googlegroups.com
MinTamil] Re: சங்கத்தமிழ் நாள்காட்டி :சங்க இலக்கியப் பாடல்கள்-விளக்கங்கள் ஓவியங்களுடன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/519c4d94-82ac-45d4-a595-fc4911001aban%40googlegroups.com.

தேமொழி

unread,
Jun 29, 2025, 9:50:08 PM6/29/25
to மின்தமிழ்
Screenshot 2025-06-30.jpg

ஆயர் ஊர்களில் பெறும் விருந்து

அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி,
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை, நல் ஆன், கரு நாகு பெறூஉம்
மடி வாய்க் கோவலர் குடி வயின் சேப்பின்,
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்! (பெரும்பாண். 163-168)

      கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
ஆயர் மகள் மோர் முதலானவை விற்று, தான் ஈட்டிய பொருளை உறவினருக்குக் கொடுத்து உண்டு வாழ்கிறாள்.
அவள் நெய் விற்கும்போது அதற்குப் பதிலாகப் பொன்னைக் கொடுத்தால் அதை வாங்காமல்
எருமையையும் பசுவையும் அவற்றின் கன்றுகளோடு பெற்று வருவாள்.
மடித்த வாயுடைய ஆயர் வாழும் இத்தகைய குடியிருப்பிற்குச் சென்றால்,
நண்டுக் குஞ்சு போன்ற சிறிய தினையரிசிச்
சோற்றில் பால் கலந்து தருவார்கள்.

The aye woman sells buttermilk and feeds her kin;
With the ghee that is sold, she buys milk-buffaloes and dark milk-kine.
If you wish to stay at herdsmen's homes,
You will receive good milk and tinai rice
That looks like a brood of crabs.


Reply all
Reply to author
Forward
0 new messages