பாரதியின் இறுதி யானை மிதித்ததால் நிகழ்ந்ததல்ல - திருமதி பாரதி! உண்மை.........?

1,351 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2014, 3:17:00 AM12/28/14
to mintamil, தமிழ் மன்றம், vallamai

அம்பத்தூர் கம்பன் கழக 71 வது மாத கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களின் மகிழ்வுரையில் இருந்து.....

அன்றைய பத்த்ரிக்கை ஆசிரியர்களுக்கு கட்டுரைகள் எழுதவும் தமிழில் சிறுகதைகள் எழுதவும் வழிகாட்டியாக இருந்தவர் நமது பாரதி.....!

எதற்க்கும் யாருக்கும் பயப்படாத வாழ்க்கையை பெருமையுடன் துணிவுடன் இந்த மண்ணுலகில் 38 வருடங்கள் வாழ்ந்து மறைந்தார் பாரதி.....!

அறம் நம் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக சிதையும் போது நம்முன்னே தோன்றும் வரிகள்தான்.... "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்"..... !

இப்போதுள்ள "முண்டாசு கட்டிய பாரதி"யின் போட்டோ, யானை மிதித்து அடிபட்டு சீரான பின்பு பாரதிதாசனின் பார்வைக்காக சென்னை பாரிமுனையில்இருந்த ரத்தினா ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு பாரதியாரால் பாரதிதாசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பாரதியின் மரணம் யானை மிதித்து நிகழ்ந்ததல்ல . யானையிடம்
மிதிபட்டு சீரான பின் ஈரோட்டில் கருங்கல்பாளையத்தில் ஒருகூட்டத்தில் பேசுவத்ற் க்காக சென்ற போது வாயிற்று போக்கினால் உண்டான தாக்கத்தில் சாதாரண் பச்சை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டிய மருந்தை சூடான பார்லி கஞ்சியில் கலந்து கொடுத்ததால்... உணடானதே... ரெம்ப ஆச்சரய்மான விஷயம் என்னவென்றால் பாரதி கடைசியாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சின் தலைப்பு "மனிதனுக்கு மரணமில்லை" ....

கம்பன் கழகம் அம்பத்தூர்'s photo.
கம்பன் கழகம் அம்பத்தூர்'s photo.
கம்பன் கழகம் அம்பத்தூர்'s photo.

முகநூல் பதிவில் திருமதி பாரதி பாஸ்கர் கூறியதாக எழுதியுள்ளார்கள். வியப்பிற்குரிய செய்தி! யானை மிதித்த நிகழ்ச்சிக்குப்பின்னர் பயணம்செய்யும் அளவிற்கு பாரதி உடல் நலம் தேறினார?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Gopalan Venkataraman

unread,
Dec 28, 2014, 9:50:11 AM12/28/14
to mint...@googlegroups.com
மேலே சொல்லப்பட்டிருக்கிற செய்தி முழுவதும் சரியே. யானை தள்ளியதால் ஏற்பட்ட சுகவீனம் சரியாகி அலுவலகம் செல்லத் தொடங்கிய பின்னர், ஈரோடு கருங்கல்பாளையத்தில் வக்கீல் ஒருவர் தனது நூலக விழாவுக்கு பாரதியை அழைத்திருந்தார். பாரதியும் அங்கு ரயிலில் சென்றார். பாரதியை ரயில் நிலையத்தில் வரவேற்று அழைத்துவர அந்த வக்கீல் ச.து.சு.யோகியை (இளைஞராக இருந்தபோது) அனுப்பியிருந்தார். அவர் ரயில் நிலையத்தில் தலையில் தலைப்பாகை அணிந்த, மீசைவைத்த பாரதியாரை எதிர்பார்த்து, அப்படியொருவர் வரவில்லை என்று அந்த வக்கீலிடம் போய் சொன்னபோது, அவர் தன் எதிரில் உட்கார்ந்திருந்தவரைக் காண்பித்து இவர் யார் தெரிகிறதா என்றார். அவர்தான் பாரதியார். ச.து.சு.யோகி எதிர்பார்த்த தோற்றத்தில் அவர் வரவில்லை. அன்று மாலை நூல்நிலைய விழா தொடங்கியது. பாரதியார் சிலைபோல அசையாமல் மேடையில் உட்கார்ந்திருந்தார். தன் முறை வந்ததும் எழுந்து விரைப்பாக நின்றுகொண்டு அவர் பேசிய கருத்து "நான் சாகாதிருப்பேன்" என்பது. இதனை ச.து.சு.யோகியே எழுதியிருக்கிறார்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
VGopalan

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2014, 10:46:25 AM12/28/14
to vallamai, tamilmanram kuzhu, mintamil, thiru thoazhamai
தகவ்லுக்கு நன்றி ஐயா.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-12-28 18:59 GMT+05:30 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
இது குறித்து 20 ஆண்டுகளுக்கு முன்பே விரிவான கட்டுரையைப்படித்துள்ளேன்.  ஆனாலும் விவரம் நினைவில்லை. தினமணியிலும் வந்ததாக நினைவு. 
பாரதியாரின் மரணச் சான்றிதழ் தெரிவிக்கும் நாளும் யானை மோதிய நாளும் வெவ்வேறு நாள் என்பதே யானை மோதி உடன் இறக்கவில்லை என்பதை மெய்ப்பிக்கும்
பொதுவாக யானை மோதியதால்  உடன் இறக்கவில்லை என்றாலும் அதன்  தொடர் விளைவுதான் மரணம். யானை மோதியதன் தொடர்ச்சியாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அதுவே மரணத்திற்கு வழி வகுத்துள்ளது.  


சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2014, 10:55:54 AM12/28/14
to mintamil
தகவலுக்கு நன்றி ஐயா.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Jeyaraman Sundararajan

unread,
Dec 28, 2014, 11:08:03 AM12/28/14
to min tamil
பாரதியின் இறுதிப் பேருரை

த. ஸ்டாலின் குணசேகரன்
தினமணி, செப். 11, 2009

தேசியக் கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், தேசபக்தர், அமைப்பாளர், ஆய்வாளர், செயல்வீரர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராளுமை கொண்ட சுப்பிரமணிய பாரதியார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்துள்ளார்.

1921-ம் ஆண்டின் மத்தியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்த பழக்கப்பட்ட யானைக்குத் திடீரென மதம் பிடித்து, வழக்கம்போல் பழங்கள் கொடுக்க வந்த பாரதியை எதிர்பாராத விதத்தில் தனது துதிக்கையால் பிடித்து இழுத்து, கீழே கிடத்திவிட்டது. யானைக்கடியில் கிடந்த பாரதியை அங்கிருந்தோர் பாய்ந்து சென்று இழுத்து வந்து காப்பாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் உருவான அதிர்ச்சியும், ஏற்பட்ட காயங்களால் விளைந்த சுகவீனமும் தொடர் சிகிச்சையால் விடுபட்டது.

குணமடைந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்திலிருந்த பாரதியின் அன்பரும், தேசபக்தருமான வழக்குரைஞர் தங்கப்பெருமாள் பிள்ளையின் அழைப்பின்பேரில், அவர் நடத்திய வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதற்காக ஈரோடு சென்றார் பாரதி.

சுதேசமித்திரன் இதழில் "என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் தனிக்கட்டுரை வெளியிட்டார் பாரதி.

""இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்'' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி.

தனது ஈரோடு சொற்பொழிவையே சுதேசமித்திரனின் இன்னொரு இதழில் கட்டுரை வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார் பாரதி.

""மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தர்க்கம் செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையைத் தக்க ஆதாரங்களுடன் ருஜுப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்'' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி.

ஹிரணியன், தன் மகன் பிரகலாதனிடத்தில் ""சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே'' என்று கேட்டதையும், அதற்குப் பிரகலாதன் ""நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான்'' என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டுவிட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பாரதி.

""வல்ல பெருங்கடவுளில்லா அணுவொன்றில்லை. மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம். வித்தகனாம் குரு சிவமென்று உரைத்தார் மேலோர்...'' என்று அடுக்கடுக்காக ஆதாரக் கருத்துகளை எடுத்துரைத்து ""அத்வைத நிலைகண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன் காண்பீர்'' என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் பாரதி.

"நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார். இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டுத் தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர். எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன'' என்று சாவிற்கான இன்னொரு காரணத்தை விளக்குகிறார் பாரதி.

""அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான். பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ?'' என்று போரில்லா உலகம் பற்றி அக்கூட்டத்தில் போதித்தார் பாரதி.

""நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்? என்று விஞ்ஞானியாகிய ஜகதீச சந்திர வசு கூறுகின்றான். ஞானானுபவத்தினாலும் இதுதான் முடிவு. கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்: கொடுங்கோபம் பேரதிர்ச்சி; அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும். எனவே கோபத்தை வென்றிடவே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்'' என்று ஒரு ஞானிக்குரிய இலக்கணத்துடன் இக்கூட்டத்தில் எடுத்தியம்பினார் இந்த சுப்பிரமணியக் கவிராயர்.

""மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ? பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை... வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாடோறும் முயன்று நலிந்து சாவான்'' என்று பெண்ணடிமை புரிவோருக்கு எதிராகப் பிரகடனம் செய்கிறார் பாரதி.

""எல்லா மதங்களின் சாரமும் இதுதான். பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி; யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே. ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்'' என்று மானுட ஒற்றுமையை வலியுறுத்தி "அன்பே அடிநாதம்' என்ற பொருள்பட தனது அன்றைய உரையை அமைத்துக் கொண்டார் மகாகவி.

ஈரோடு நகரில் அன்று நிகழ்த்தப்பட்ட "மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பிலான இந்த உரை அன்று கூடியிருந்தோரை உரக்கச் சிந்திக்க வைத்ததாக அவ்வுரை கேட்டோர் எடுத்தியம்பியுள்ளனர்.

தமிழகத்தின் கீர்த்தி மிக்க தேசபக்தக் கவிஞர்களில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த ச.து. சுப்பிரமணிய யோகியும் ஒருவர். பாரதியின் ஈரோடு உரையைக் கேட்டவர் அவர்.

பாரதியின் இவ்வுரை குறித்துக் கூறும் யோகியார், ""நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்போது உலகமே "கிடுகிடு' என்று நடுங்குவதுபோல் தோன்றும். மகா காளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்'' என்று சொல்லிக் கொண்டே வந்து "மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைப்புகள், குறுகிய நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார். சள்ளெனக் கடிப்பார். சினத்தோடு சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்'' என்று அணுஅணுவாக அனுபவித்து வர்ணிக்கிறார்.

பாரதி பேசத் தொடங்கும் முன் நிலவிய சூழல் குறித்தும், பேச அழைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்தவை குறித்தும் தனது கட்டுரையில் ஓவியமாகத் தீட்டியுள்ளார் யோகியார்.

""மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சுமுட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை- அசையவில்லை. சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூடச் சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது; மீசைமுறுக்கும் போதன்று வேறு யாதொரு சலனமும் கிடையாது. ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்... எழுந்தார் என்பது தவறு... குதித்தார். நாற்காலி பின்னே உருண்டது. பேச்சோ? அதில் வாசகசாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை. எடுத்த எடுப்பிலேயே "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்' என்றார். அவ்வளவுதான். பாடலானார். அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், "ஓ ஹோ ஹோ' வென்றலையும் ஊழிக்காற்றின் உக்ர கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக்குரல்"" என்று வியந்து வியந்து கண்ட காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் யோகியார்.

1921-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட சான்றோர்கள் தாம் கூறிய கருத்துகள் குறித்து விவாதித்து ஏகோபித்து அங்கீகரித்ததாகவும், பாரதியாரே பிறகு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட பெரிய வித்துவான்கள், பண்டிதர்கள், தேச பக்தர்கள் யாவரும் அதே ஈரோடு நகரில் உள்ள வாய்க்கால் கரையில் அடுத்தநாள் இன்னொரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகவும், அதிலும் பாரதியார் வந்து உரையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் அதற்குச் சம்மதித்து அக்கூட்டத்தில் "இந்தியாவின் எதிர்கால நிலை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

ஈரோடு நகரில் நடைபெற்ற இந்த இரண்டு உரைகளுக்குப் பின்னர் சென்னை சென்ற பாரதியார் வயிற்றுக் கடுப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் துன்புற்றார். மேலும் மேலும் நலிவடைந்து செப்டம்பர் 11-ம் தேதி பின்னிரவு 1 மணியளவில் பாரதியின் உயிர் பிரிந்தது.

ஈரோடு நகரில் ஆற்றிய உரைதான் பாரதியின் இறுதிப் பேருரை! இந்தியாவின் எதிர்கால நிலையைப் பற்றியே எண்ணி எண்ணி வாழ்ந்த இம்மாபெரும் மனிதனுக்கு மரணமென்பதே இல்லை!


சுந்தரராஜன் ஜெயராமன்
கோயம்புத்தூர்

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2014, 11:08:57 AM12/28/14
to mintamil, தமிழ் மன்றம், vallamai
இணையத்தில் தேடினேன். போதைப்பழக்கம் அவரைத்தின்றது என ஒரு கட்டுரை கண்டேன். எது கொன்றிருந்தாலும் இறந்து 93 ஆண்டுகள் கடந்தும் வாழ்கிற மகாகவி பாரதி சாகாவரம் பெற்றவன் என்பது அனைவரும் அறிந்ததே.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


பாரதி' யார்? - வேடிக்கை மனிதனா நீ

'நல்லதோர் வீணை செய்தே' என்ற வரிகளை கேட்டதும் எப்படி இருக்கும் என எழுத்தில் வைக்க முடிவதில்லை. ஆம், இந்த வரிகளுக்கு சொந்தகாரர் மகாகவி பாரதியார் தான். மகாகவியின் கவிதைகள் மட்டுமே தெரிந்த நமக்கு அவரின் வாழ்க்கை பற்றி தெரிவதில்லை, தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

பொது நலத்திற்காக தன்னை அர்பணித்து கொள்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பது என்னவோ உண்மை. மகாகவி பாரதியாரின் வாழ்க்கை குறித்து பலருக்குத் தெரிந்து இருக்காது.

''பாரதி கஞ்சா அடிப்பார்'' என்று சொன்ன நண்பனை நான் கோபத்துடன் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் வரிகளில் நான் வாழ்ந்து வந்து இருக்கிறேன். ''சென்றதினி மீளாது மூடரே'' என்பது எனக்கு அத்தனை பிரியம். பாரதியின் கவிதை வரிகளை ரசித்து ரசித்து பழகிய நான் பாரதியை ஒருபோதும் தவறாக நினைத்தது இல்லை, நினைக்கப்போவதும் இல்லை.

காதல் வரிகளில் கூட பாரதியை போல எந்த ஒரு கவிஞனும் எழுத முடிவதில்லை. ''காற்று வெளியிடை கண்ணம்மா'' என்பதை விட எனக்கு ''நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'' கொள்ளைப்பிரியம். எத்தனை கவிதைகள். அதுவும் ''காக்கைச் சிறகினிலே நந்தலாலா'' பாடிக்கொண்டே இருக்கலாம்.

இந்த பாரதி கஞ்சா அடிப்பார் என்று கேள்விப்பட்ட தினம் முதல் எனக்கு அதுகுறித்து அக்கறை இருந்தது இல்லை. ஆனால் பாரதி குறித்து தேடி தேடி படித்த விசயங்கள் பல உண்டு. பாரதியார் குறித்து படம் வந்தபோது பாரதியாரின் பெருமை சிதைந்து போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

எனக்கு பாரதியாரின் வாழ்க்கையை குறித்து எவரிடமும் பேசப் பிடிப்பது இல்லை. அவரது கவிதைகள் எனக்கு போதுமானதாக இருந்தது.

''அக்கினி குஞ்சொன்று'' பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். பாரதியாருடன் நண்பராக வாழ்ந்து இருக்கலாமோ என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருப்பது உண்டு. ''வேடிக்கை மனிதன் என'' எத்தனை பேர் இதனை பாடி இருப்பார்கள்.

-------

பாரதி குறித்து ஓ சோமசுந்தரம் இப்படி எழுதுகிறார். ''படைப்பாளிகள் சில பொருட்களை உபயோகிப்பார்கள், அதில் பாரதியை பற்றி இங்கே எடுத்துக்கொள்கிறேன்''. கவிஞர்கள் , படைப்பாளிகள் அவர்களது படைப்புகளால் இறவா தன்மை அடைகிறார்கள். அதில் பலர் ஆல்ஹகால் போன்ற போதைப் பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். அறிவார்ந்த தன்மைக்கும், இப்படி பொருட்கள் எடுத்துக் கொள்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணி பாரதியாரின் வாழ்க்கையை இங்கே பார்க்க இருக்கிறோம். பாரதியாரின் கவிதையில் என்னதான் இல்லை? பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர் எட்டயபுர அவையில் முக்கிய நபராக இருந்தார். பாரதி எனும் பட்டம் கவிதைகளால் தமிழ்ப்புலமையால் கிடைத்தது.

பாரதியின் தந்தை இறந்த பின்னர் அரசவை ராஜாவுக்கு பாரதியின் மீது பற்று உண்டாகியது. இந்த ராஜா தான் பாரதிக்கு போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணியவர். அவர் கொடுத்த பூரநதி லேகியம் கஞ்சா போன்ற பொருட்களை கொண்டது. இதை நீ அருந்தினால் உனக்கு நல்ல பலம் வரும். ஆனால் இதை நம்பி பாரதி தொடர்ந்தாரா என தெரியாது. ஆனால் இதுதான் பாரதிக்கு முதன் முதலில் கொடுக்கப்பட்ட போதைப் பொருள்.

அரசவை ராஜா பாரதியை வாரணாசிக்கு அனுப்பி சமஸ்கிருதம், ஆங்கிலம் என புலமை பெற உதவி செய்தார். அரசவையில் இருந்து விலகி மதுரையில் ஆசிரியராக பணியாற்றி சென்னை சென்று சுதேசமித்திரன் நாளிதழ் சேர்ந்து  பின்னர் இந்தியா பத்திரிகை என ஆரம்பித்து அதில் தனது கவிதைகள் வெளியிட்டார். பாரதியின் வ உ சி உடன் பழக்கமும் வ உ சியின் சுதேசி இயக்கம் அதனால் வ உ சி அடைந்த துயரம் பாரதியை வெகுவாக பாதித்தது.

பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றி அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் (1908-1918) பாரதியார் பாண்டிசேரியில் இருந்தார். பெரும்பாலான கவிதைகள் பாஞ்சாலி சபதம் முதற்கொண்டு பக்தி பாடல்கள் கிருஷ்ணர் முருகர் சக்தி பாடல்கள் எல்லாம் அங்கே இயற்றப்பட்டன.

பாரதியாரின் பாண்டிசேரியில் உள்ள ஒரு சாமியாருடன் ஏற்பட்ட பழக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பாரதியாரின் விடுதலை போராட்ட வேட்கையும் தமிழ் இலக்கியமும் மற்றும் இந்த சாமியார் பழக்கம் பாரதியாரை இந்த போதை உலகத்தில் மீண்டும் தள்ளி இருக்கலாம். அவரது இந்த சாமியாருடன் பழக்கமே பல பக்தி பாடல்கள் எழுத காரணமானது. அந்த சாமியாரும், பாரதியாரும் போதை பொருட்களை உபயோகப்படுத்தினர். சில வருடங்கள் போதை பொருட்கள் உபயோகத்தை நிறுத்தி இருந்த பாரதியார் 1911 ம் ஆண்டு போதை பொருட்களை மீண்டும் பாரதியார் உபயோகித்ததை பாண்டிசேரியில் கண்டு வ. ராமசாமி மிகவும் வருத்தம் கொண்டார். நடுஇரவு மருந்து, சாமக்கிரிகை,  என பாரதியார் அங்கே உள்ள வேலையாளை வாங்கி வர சொல்வார். ஆனால் பாரதியார் மீதான மரியாதையில் எதுவும் சொல்லவில்லை. இந்த சாமியார் தெருவில் படுத்து கிடப்பது, நாய்களுடன் சண்டை போடுவது போதை பொருட்கள் உட்கொள்வது  என்றே அவரது வாழ்வு இருந்து இருக்கிறது.

கடைசி மூன்று வருடங்கள் 1918-1921 பாரதியார் சென்னையில் தனது வாழ்நாளை செலவழித்தார். மகாத்மாவின் அகிம்சை செய்கை மகாகவியை புண்படுத்தியது. வ உ சி மகாத்மாவின் வழி பின்பற்ற பாரதி விடுதலை போராட்டத்தை ஒரு கட்டத்தில் கைவிடும் நிலைக்குப் போனார். பாரதியார் நிறைய போதை பொருட்கள் உபயோகித்த கால கட்டம் இதுதான். குள்ளசாமி சாமியாருடன் பாரதியை சென்னையில் கண்ட வ உ சி தன்னால் நம்ப இயலவில்லை. இது பாரதி தானா என்றே சந்தேகம் எழுந்தது. பொலிவிழந்து பாரதியார் காணப்பட்டார்.

வ உ சி , பாரதியாரும் அந்த குள்ளசாமி சாமியாரும் ஒரு பானத்தை அருந்திய பின்னர் அவர்களின் பேச்சு சத்தமாகவும் சுறுசுறுப்பாக உண்டுபண்ணியது கண்டார். வ உ சி என்ன என கேட்டார். அது என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்து என்றே பாரதியார் பதில் அளித்தார். அடுத்த நாள் பாரதியார் அதை அருந்த, வ உ சி புரிந்து கொண்டார். மண்டயம் நண்பர் பாரதியாரின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கண்டார். இந்த மூன்று வருடங்களில் பாரதியாரின் உடல்நிலை பெரிதும் மோசமாகியது. 

கடைசி காலத்தில்  பண கஷ்டம் வந்தபோது எட்டயபுரம் ராஜாவிடம் கேட்க அவர் உதவ மறுத்துவிட்டார். ஜூலை 1921ல் யானை அவரை தூக்கி வீசியது. அங்கே இருந்த ஒருவர் அவரை காப்பாற்றினார். எந்த ஒரு மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் செப்டெம்பர் மாதம் பாரதியார் மரணம் அடைந்தார்.

ஓபியம், கஞ்சா பெருமளவில் அப்போது உபயோகிக்கப்பட்டது. பெதடின், ஹெராயின், மார்பின் கொடீன் போன்ற பொருட்கள் பின்னர் இவை இடங்களை பிடித்துக் கொண்டன. பாரதியாரின் மரணம் அவரது போதை பழக்கத்தால் ஏற்பட்டது என்பதை பலரால் ஏற்றுக்கொள்ள இயலாது. கண்ணதாசனுக்கு பெதடின் பழக்கம் இருந்தது என்பது பலருக்கு தெரியும். அவரது மரணம் கூட இந்த பெதடின் ஏற்படுத்தியதுதான். பல படைப்பாளிகள் குடிகார சிகாமணிகள்தான்.

பாரதியின் ''மோகத்தை கொன்று விடு'' என்பது  தன்னால் போதை பொருளை விட முடியாத நிலையில் கதறி அழுத  கவிதையாக கூட இருக்கலாம். பாரதிக்கு நல்ல நண்பர்கள்  வாய்க்காமல் போனார்கள். போதைப் பொருளுக்கு போதை மனதுக்கு அடிமையாகிவிட்டால் நல்ல நண்பர்கள் விலகிப் போவார்கள்.

பாரதி நீ மகாகவி
அப்படியே உன்னை
இவ்வுலகம் போற்றி மகிழட்டும்.  

போதை பொருட்கள் என்ன செய்யும் என்பதை படிக்க இங்கு பாருங்கள்.  


சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2014, 11:22:45 AM12/28/14
to mintamil, vallamai, தமிழ் மன்றம்
மிகச்சிறப்பான பதிவைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
பாரதியின் மெய்ப்பாடுகளை படித்து சிலிர்த்துப்போனேன். 
அத்துவைத நிலையையும், சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி என்பதனையும் அருமையாக எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவின் எதிர்கால நிலை என்ற இறுதிப்பேச்சின் சாராம்சம் கிடைத்தாலும் நண்பர்களிடம் பகிரவேண்டுகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

N. Ganesan

unread,
Dec 28, 2014, 11:26:59 AM12/28/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com, tamil...@googlegroups.com


On Sunday, December 28, 2014 10:08:55 AM UTC-6, சொ.வினைதீர்த்தான் wrote:
இணையத்தில் தேடினேன். போதைப்பழக்கம் அவரைத்தின்றது என ஒரு கட்டுரை கண்டேன். எது கொன்றிருந்தாலும் இறந்து 93 ஆண்டுகள் கடந்தும் வாழ்கிற மகாகவி பாரதி சாகாவரம் பெற்றவன் என்பது அனைவரும் அறிந்ததே.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


பாரதி' யார்? - வேடிக்கை மனிதனா நீ


 இது உங்கள் ஜிமெயில் கணக்கு. இவ்வாறு பால்ரும் வலைத்தொடுப்பு கொடுத்தலுண்டு. ஆனால் பிறர் படிக்க இயலாது.

எல்லோரும் படிக்க வேண்டுமாயின் தளம் இது:

N. Ganesan

Oru Arizonan

unread,
Dec 28, 2014, 11:30:02 AM12/28/14
to mintamil
சுந்தரராமன் ஜெயராமன் அவர்களே,

தங்கள் பதிவுக்கு நன்றி.

அமரகவி (மரனத்தைத் தன்கவிதையால் வென்ற கவிஞன்) பாரதியாரின் கடைசிச் சொற்பொழிவு மரணத்தைவெல்வதைப்பற்றிய ஒன்றாக அமைந்தது, மேற்குநாட்டார் குறிக்கும் அன்னப்பாடலாக (Swan Song) அமைந்ததும் இறைவன் திருவருளோ!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Dec 28, 2014, 11:33:33 AM12/28/14
to mint...@googlegroups.com, vallamai


On Sunday, December 28, 2014 10:08:03 AM UTC-6, Jeyaraman Sundararajan wrote:
பாரதியின் இறுதிப் பேருரை

த. ஸ்டாலின் குணசேகரன்
தினமணி, செப். 11, 2009


நன்றி.

ஸ்டாலின் குணசேகரன் ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி ஆரம்பித்து கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு தமிழ் புஸ்தகங்கள் விற்பனையாவதை செயல்படுத்தியவர். 

பெ. தூரன் தாத்தா, விழுப்புரம் ர. அ. பத்மநாபன் போலவே பாரதியின் மறைந்து நிற்கும் எழுத்துக்களைக் கண்டறிதலை வாழ்வுப் பணியாகத் தலைமேற் கொண்ட ‘எதிரொலி’ விசுவநாதனை வாழ்த்தி மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன், பொள்ளாச்சி நா. மகாலிங்கம் போன்றோர் பொன்னாடை அணிவிக்கும் சீர் (பாரதியார் சங்க 61-ஆம் ஆண்டுநாள், ராணி சீதை அரங்கம், சென்னை, செப். 11, 2009). ஈரோட்டில் பாரதியாரின் கடைசிப் பிரசங்கம் நிகழ்ந்தது. அதுபற்றி ஸ்டாலின் குணசேகரன் அவர்களிடம் ச. து. சு. யோகியார் அச் சொற்பொழிவைக் கேட்டபின் எழுதிய கட்டுரையை முழுக்க வாங்கி வெளியிட ஆசை. 


நா. கணேசன்

Jeyaraman Sundararajan

unread,
Dec 29, 2014, 9:09:40 AM12/29/14
to min tamil, vallamai
வஉசி பாரதி கடைசி சந்திப்பு - ஏற்கனவே மின்தமிழில் வந்தது என்று நினைக்கிறேன்.
இவ்விவாதத்திற்காக ஒரு மீள்பதிவு

64 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வ.உ.சி. பாரதியை விடப் பத்து வயது பெரியவர். இருவரின் தந்தையாரும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் அத்யந்த நண்பர்கள்.

 

தமிழகமெங்கும் பாரதியின் மேதைமை உணரப்பட்டிருந்தாலும், ஒரே பகுதியில் வாழ்ந்தும், தன் 34 வயதில்தான் (1906ல்) பாரதியை முதன்முதலாய்ச் சந்திக்கிறார் என்னும் செய்தி ஆச்சர்யப்பட வைக்கிறது. அப்போது வ.உ.சியின் வயது 34. பாரதி 24 வயது இளைஞர்.

 

இந்தியாபத்திரிகைக்கு ஆசிரியராக இருக்குபோதுதான் சென்னையில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. அச் சந்திப்பில் துவங்கிய இருவரது நட்பும் நெருக்கமாக பாரதியின் மரணம் வரை தொடர்ந்தது. பாரதியை வ.உ.சி. மாமாஎன்றும், பாரதி வ.உ.சி.யை பிள்ளைவாள்என்றும் அழைக்கும் அளவுக்கு நெருக்கம்.

 

கிட்டத்தட்ட 15 வருடங்கள் நகமும், சதையுமாக இருவரின் நட்பும் தொடர்ந்தது. பாரதியின் மறைவு ஏற்பட்ட 1921 செப்டெம்பருக்குச் சற்று முந்தைய காலத்தில் வ.உ.சிக்கும், பாரதிக்குமான இறுதி சந்திப்பு நிகழ்ந்ததை வ.உ.சி. கண்ட பாரதிஎனும் சரிதையில் பதிவு செய்திருக்கிறார். 

 

பாரதியின் வாழ்க்கையை வேறு யாரும் வாழ்ந்திருக்க முடியாது என்பது மறுபடியும் ஊர்ஜிதமாகிறது.

 

இன்றையப் பதிவில் அந்தச் சந்திப்பை வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே தருகிறேன்.

 

#######   

கடைசியாகக் கண்டது:

 

பின்னர் பல வருஷங்களுக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில் நான் வசித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் நான் திருவல்லிக்கேணி முதலான இடங்களுக்குப் போய் விட்டு இரவு சுமார் பத்து மணிக்கு என் வீடு வந்து சேர்ந்தேன். என் வீட்டுத் தார்சா (வராந்தா) வில் இருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். வந்தவுடன் நான் கை, கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் சென்றேன். சாப்பாடு போடும் படி என் மனைவி மீனாக்ஷியிடம் கூறினேன். அவள் இலை போட்டுப் பறிமாறியதும் நான் சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பொழுது தார்சாவில் தூங்குபவர்கள் யார்? என விசாரித்தேன்.

 

உங்கள் மாமனார் பாரதியாரும், அவருடன் வந்துள்ள யாரோ ஒரு சாமியாரும்என்றனள் என் மனையாள்.

 

எப்போது வந்தார்கள்?” என்றேன்.

 

இரவு எட்டு மணிக்கு வந்தார்கள். வரும்பொழுதே மாமா உங்களைத் தேடிக்கொண்டு வந்தார்என்றாள்.

 

இருவரும் சாப்பிட்டார்களா? விசாரித்தாயா?” என்று வினவினேன்.

 

வந்ததும் உங்களை எங்கேயென்றும், எப்பொழுது வருவீர்கள் என்றும் கேட்டார்கள். பட்டினம் போயிருக்கிறார்கள் என்றேன். நான் சொல்வதற்குள்ளாக எப்பொழுது சிதம்பரம் பிள்ளை வருவார் மீனாக்ஷி?’ என்று மீண்டும் கேட்டார். ’10 மணிக்கு வருவார்கள்என்றேன். எங்களுக்குப் பசிக்கிறது; முதலில் சோறு போடுஎன்றார்கள். போட்டேன். இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்தவுடன், அவர்களை எழுப்பும்படி சொல்லிவிட்டு, நீங்கள் வந்தவுடன் அவர்களை எழுப்பும்படிச் சொல்லிவிட்டுப் பாயும் தலையணையும் கேட்டார்கள். படுக்கையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கி கொண்டு தார்சாவிற்குச் சென்று விட்டார்கள்என்றாள்.

 

நான் அவசர அவசரமாக எனது சாப்பாட்டை முடித்துக் கொண்டு தார்சாவுக்கு வந்து மாமா, மாமாஎன உரக்க எழுப்பினேன். இருவரும் எழுந்துவிட்டனர்.

 

க்ஷேமம் விசாரித்தேன். க்ஷேமத்தையும், தாம் வந்த வரலாறு பற்றியும் கூறினார் மாமா. புதுச்சேரியில் வசித்து வந்த பல இந்திய நண்பர்களின் க்ஷேமத்தையும் விசாரித்தேன். மாமா பதில் அளித்துக் கொண்டே வந்தார்.

 

சுவாமிகள் யாரோ?” என்றேன்.

 

ஒரு பெரியவர்என்றார் மாமா. அதற்கு மேல் துளாவித் துளாவிக் கேட்க நான் விரும்பவில்லை; பேசாதிருந்துவிட்டேன். ஆனாலும் என் மனச்சாட்சி அந்த மனிதனைப் பற்றி என் மனதில் ஏதோ ஒரு பீதியை எழுப்பியது. இதற்கு ஆதாரமும் இல்லாமல் இல்லை. மாமா முகத்தில் ஏதோ மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. பழைய உத்ஸாகத்தையும், முக மலர்ச்சியையும், கண்களின் வீரப்பொலிவையும் கண்டிலேன். பேச்சும் ஒருபுது மாதிரியாக இருந்தது. சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவர் பேசுவதாகவும் எனக்குப் பட்டது. ஆனால் காரணம் தெரிந்திலேன். பொது விஷயங்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின் துயின்றோம்.

 

மாமாவின் மாற்றம்; சாமியாரின் தோற்றம்

 

மறுநாட் காலையில் நாங்கள் எழுந்ததும், மாமா தம்முடன் வந்திருந்த சாமியாருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்து வேறு வேஷ்டி கொடுக்க வேண்டுமென எனக்குக் கட்டளையிட்டார். அந்தச் சாமியாரின் கீல் எண்ணெய் மேனியில் கால் அங்குலக் கனம் அழுக்குப் படிந்திருப்பதைக் கண்டேன். சாமியாரைக் குளிக்கக் கூப்பிட்டேன். சாப்பாடான பிறகு குளிக்கலாம் என்றார். மாமாவும் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்.

 

காலைக் காப்பி, சாப்பாடு முடிந்ததும் சாமியார் குளிப்பதற்காக வானவெளிக்குச் சென்றார். பக்கத்தில் ஒரு செப்புப் பானையில் வெந்நீர் இருந்தது. இரு வேலைக்காரர்களும் சாமியாரைக் குளிப்பாட்டுவதற்குத் தயாராயிருந்தனர். நான் மேல் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.

 

சாமியார் அழுக்கேறிய தனது வேஷ்டியைக் களைந்து வைத்தார். அவரது அரைஞாணில் பலப்பல துணி முடிச்சுக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ரூபாய் இருந்தது.

 

அவற்றை அவிழ்த்துவிடும்படி நான் வேலைக்காரர்களிடம் கூறிய போது, சாமியார் ஏனோ மறுத்தார். பயப்பட வேண்டாம் என்றும், அவர் பணத்தை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், அவர் முன்னயே வைத்திருந்து, குளித்துவிட்டு வந்ததும் அவரிடம் நானே கொடுத்து விடுவதாகவும் நான் கோபத்துடன் கூறவே சாமியார் அடங்கிவிட்டார்.

 

பின்னர் வேலையாட்கள் அவருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்தனர். கடையிலிருந்து ஏற்கனவே வாங்கிவந்து வைத்திருந்த ஒரு ஜோடிப் புது வேஷ்டிகளையும், சாமியாரது பண முடிச்சுகளையும் நான் அவரிடம் கொடுத்ததும் சாமியாருக்குப் பரமானந்தம்!

 

மூவரும் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்து உறங்கினோம்.

 

மாலை சுமார் 3 மணிக்கு அவர்களிருவரும் பேயிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பததைக் கேட்டு நான் விழித்துகொண்டேன். ஒரு சிறு அமிருதாஞ்சன்டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக் கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று.

 

அது என்ன மாமா?” எனக் கேட்டேன்.

 

அதுவா, மோக்ஷலோகத்திற்குக் கொண்டு போகும் ஜீவாம்ருதம்என்றார் மாமா. எனக்கு விஷயம் விளங்கி விட்டது.

 

அடப் பாவிகளா! எலுமிச்சங்காய் அளவா? நீங்கள் நாசமா...

 

எல்லாம் உனக்குப் பயந்துதான் இந்தச் சிறிய அளவு. இல்லாவிட்டால்... என்று சாமியார் முதுகில் ஒரு அடி கொடுத்துக் கொண்டே மாமா வெறிபிடித்தவர் மாதிரிச் சிரித்தார்.

 

மாமாவின் மாற்றத்திற்கு இம்மருந்துதான் காரணம் என்று நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. இருந்தும் பலவாறு பேசியும், பாடியும் அன்று மாலையையும் என் வீட்டில் பொழுது போக்கிக் கழித்தோம்.

 

சாமியார் சரீர கனத்திலும், லேகியம் தின்பதிலும் தவிர மற்றபடிப் பேச்சு முதலியவற்றில் மக்காகவே இருந்தார். அறிவின் சிகரமான மாமாவுக்கு, இந்த மக்கினிடத்தில் எவ்வாறு பற்று உண்டாயிற்று? என்று அதிசயித்தேன்.

 

மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு பாரதியாரின் அத்தியந்த நண்பரும், என் நண்பருமான ஜார்ஜ் டவுன் வக்கீல் எஸ். துரைசாமி ஐயர் வீட்டிற்குச் சென்றோம். ஐயர் வீட்டில் இல்லை. எனவே நாங்கள் மூவரும் ஐயர் வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த கட்டில்களில் படுத்துக் கொண்டு கண்துயின்றோம்.

 

மாலை சுமார் மூன்று மணி சுமாருக்கு முதல் நாளைப் போலவே சாமியாரும், மாமாவும் உல்லாசமாகச் சப்தமிடுவதைக் கேட்டு நான் விழித்தேன். முந்திய தினத்தைப் போலவே தகர டப்பாவிலிருந்த லேகியம் அவ்விருவரது வயிற்றிலுமாகச் சமாப்தியாகியது. தலையில் அடித்துக் கொண்டு பேசாதிருந்துவிட்டேன்.

 

இதற்குள்ளாக வக்கீல் ஐயரும் வந்து சேர்ந்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, நான் அம்மூவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு பெரம்பூரில் உள்ள என் வீடு போய்ச் சேர்ந்தேன்.

 

பின்னர் அவ்வப்போது சென்னையில் நான் சுதேசமித்திரன்பத்திரிகை ஆபிசுக்குப் போயிருந்த சமயங்களிலெல்லாம், அங்கு உதவி ஆசிரியராக இருந்த மாமாவைக் கண்டு பேசியிருக்கிறேன். அருமை மாமாவின் எழுத்துக்கள் மித்திரன்வாயிலாக எனக்கு ஆனந்தம் ஊட்டி வந்தன.

 

மாமா மறைந்தார்; மாண்பு மணத்தது!

 

கொஞ்ச நாளில் மாமா காலஞ் சென்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன். துக்கக்கடலில் ஆழ்ந்து தத்தளித்தேன். நல்லார்க்கு அதிக காலம் இல்லை போலும்என நினைத்தேன்.

 

மாமா இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டாலும் அவரது தேசீய கீதங்களும், மற்றையப் பாடல்களும், கதை-கட்டுரைகளும் இவ்வுலகம் உள்ளளவும் நிலைத்துப் புகழ் வீசும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரிதத்தில் மட்டுமல்லாமல், கவிதா மேதைகளின் சரிதத்திலும் வைரம் என ஒளிவிடும்.

 

அவருடைய பாடல்களின் அருமை பெருமையையும் சிறிது இயம்ப வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனக்கு ஆற்றலின்மையாலும், அவகாசமின்மையாலும் அவ்வேலையில் புகாது நின்று, கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களையே நம் தேசத்து மக்கள் என்றென்றும் படித்து வர வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

 

வந்தே மாதரம்! வாழ்க பாரதி!

 

 

( இந்தப் பதிவு, மிகவும் நெருங்கிப் பழகிய வ.உ.சி. போன்ற மேதாவிகளுக்கே பிடிபடாத வாழ்க்கையாக, ஒரு புதிர் முடிச்சாக மஹாகவி பாரதியின் வாழ்க்கை இருந்திருக்கிறதே என்ற த்வனியைப் பகிர்ந்து கொள்வதற்கே அன்றி அவரின் மூலம் குறித்து ஆராய அல்ல. )


Nagarajan Vadivel

unread,
Dec 29, 2014, 10:10:33 AM12/29/14
to மின்தமிழ்
கருத்துக்கள் முடிவைச் சுருக்கமாகக் குழப்பமில்லாமல் விளக்குவதாக இருக்க வேண்டும்.  ஒரு தனி மனித வாழ்வின் சில நிகழ்வுகள் அவர்தம் பொதுவாழ்வைக் களங்கப்படுத்தும் விதமாக அமையக் கூடாது.
அவரைப்பற்றி அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த பலரால் இந்தத் தனி வாழ்க்கை அதிகம் சுட்டிக் காட்டப்படவில்லை
பாரதியிலாளர்களும் பாரதி ஆய்வாளர்களும் பாரதியின் உடல்நலம் பற்றிக் கிடைக்கும் தகவல்களை எனோ தொகுக்க முன்வரவில்லை.  அவர் உடல்நலம் குன்றியவராக இருந்தார் என்பது இலைமறை காயாய இருந்தாலும் அவர் குடும்ப உறுப்பினர்கள் அவரது பாண்டிச்சேரி தொடர்புகள் சென்னை சி.ஐ.டிக்கள் உடல்நலக் கேட்டைப் பற்றி ஏதாவது குறிப்பிட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை

பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்ட பாரதியார் உடனே ராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  அவருடைய மருத்துவ ஆவணங்கள் அரசினர் ஆவணக் காப்பகத்தில் உள்ளனவா என்பது தெரிந்தால் அவரது இறுதி மரணம் பற்றிய மர்ம முடிச்சு அவிழலாம்
ரு.பூனை

N. Ganesan

unread,
Dec 31, 2014, 11:41:50 AM12/31/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com


On Sunday, December 28, 2014 2:16:57 AM UTC-6, சொ.வினைதீர்த்தான் wrote:

அம்பத்தூர் கம்பன் கழக 71 வது மாத கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களின் மகிழ்வுரையில் இருந்து.....

அன்றைய பத்த்ரிக்கை ஆசிரியர்களுக்கு கட்டுரைகள் எழுதவும் தமிழில் சிறுகதைகள் எழுதவும் வழிகாட்டியாக இருந்தவர் நமது பாரதி.....!

எதற்க்கும் யாருக்கும் பயப்படாத வாழ்க்கையை பெருமையுடன் துணிவுடன் இந்த மண்ணுலகில் 38 வருடங்கள் வாழ்ந்து மறைந்தார் பாரதி.....!

அறம் நம் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக சிதையும் போது நம்முன்னே தோன்றும் வரிகள்தான்.... "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்"..... !

இப்போதுள்ள "முண்டாசு கட்டிய பாரதி"யின் போட்டோ, யானை மிதித்து அடிபட்டு சீரான பின்பு பாரதிதாசனின் பார்வைக்காக சென்னை பாரிமுனையில்இருந்த ரத்தினா ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு பாரதியாரால் பாரதிதாசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பாரதியின் மரணம் யானை மிதித்து நிகழ்ந்ததல்ல . யானையிடம்
மிதிபட்டு சீரான பின் ஈரோட்டில் கருங்கல்பாளையத்தில் ஒருகூட்டத்தில் பேசுவத்ற் க்காக சென்ற போது வாயிற்று போக்கினால் உண்டான தாக்கத்தில் சாதாரண் பச்சை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டிய மருந்தை சூடான பார்லி கஞ்சியில் கலந்து கொடுத்ததால்... உணடானதே... ரெம்ப ஆச்சரய்மான விஷயம் என்னவென்றால் பாரதி கடைசியாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சின் தலைப்பு "மனிதனுக்கு மரணமில்லை" ....


முகநூல் பதிவில் திருமதி பாரதி பாஸ்கர் கூறியதாக எழுதியுள்ளார்கள். வியப்பிற்குரிய செய்தி! யானை மிதித்த நிகழ்ச்சிக்குப்பின்னர் பயணம்செய்யும் அளவிற்கு பாரதி உடல் நலம் தேறினார?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
 

மகாகவியின் கடைசிப் பயணம்!

கோ. ஆலாசியம்



மகாகவி பாரதி பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு (vikatan)

 விகடன் கட்டுரையில் சில பிழைகள் உள. உ-ம்: ”திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க… அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் ‘கோயில் யானை’ என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

‘ஆப்கன் மன்னன் அமானுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20-க்கும் குறைவானவர்களே.”

கோயில்யானை என்பது கட்டுரை அன்று. அது பாரதியார் எழுதிய ஒரு கதை. அவர் எழுதிய கடைசிக் கதை. கலைமகளில் மறுஅச்சு ஆகியிருந்ததைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டவர் பேரா. ய. மணிகண்டன். ஈரோடு தமிழன்பன் மாணவர். தமிழ் இலக்கணம், சுவடிகளைப் படித்தல் இவற்றில் வித்தகர். சந்தவசந்தம் போன்ற குழுக்களில் கோயில்யானை கதையை பகிர்ந்திருந்தேன் முன்னர்.

நா. கணேசன்

http://news.vikatan.com/article.php?module=news&aid=22177


N. Ganesan

unread,
Dec 31, 2014, 12:05:04 PM12/31/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

On Sunday, December 28, 2014 2:16:57 AM UTC-6, சொ.வினைதீர்த்தான் wrote:

அம்பத்தூர் கம்பன் கழக 71 வது மாத கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களின் மகிழ்வுரையில் இருந்து.....

அன்றைய பத்த்ரிக்கை ஆசிரியர்களுக்கு கட்டுரைகள் எழுதவும் தமிழில் சிறுகதைகள் எழுதவும் வழிகாட்டியாக இருந்தவர் நமது பாரதி.....!

எதற்க்கும் யாருக்கும் பயப்படாத வாழ்க்கையை பெருமையுடன் துணிவுடன் இந்த மண்ணுலகில் 38 வருடங்கள் வாழ்ந்து மறைந்தார் பாரதி.....!

அறம் நம் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக சிதையும் போது நம்முன்னே தோன்றும் வரிகள்தான்.... "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்"..... !

இப்போதுள்ள "முண்டாசு கட்டிய பாரதி"யின் போட்டோ, யானை மிதித்து அடிபட்டு சீரான பின்பு பாரதிதாசனின் பார்வைக்காக சென்னை பாரிமுனையில்இருந்த ரத்தினா ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு பாரதியாரால் பாரதிதாசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பாரதியின் மரணம் யானை மிதித்து நிகழ்ந்ததல்ல . யானையிடம்
மிதிபட்டு சீரான பின் ஈரோட்டில் கருங்கல்பாளையத்தில் ஒருகூட்டத்தில் பேசுவத்ற் க்காக சென்ற போது வாயிற்று போக்கினால் உண்டான தாக்கத்தில் சாதாரண் பச்சை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டிய மருந்தை சூடான பார்லி கஞ்சியில் கலந்து கொடுத்ததால்... உணடானதே... ரெம்ப ஆச்சரய்மான விஷயம் என்னவென்றால் பாரதி கடைசியாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சின் தலைப்பு "மனிதனுக்கு மரணமில்லை" ....


முகநூல் பதிவில் திருமதி பாரதி பாஸ்கர் கூறியதாக எழுதியுள்ளார்கள். வியப்பிற்குரிய செய்தி! யானை மிதித்த நிகழ்ச்சிக்குப்பின்னர் பயணம்செய்யும் அளவிற்கு பாரதி உடல் நலம் தேறினார?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


பாரதியார் மரணத்தை தீர ஆய்ந்து எழுதியோர் பலர். பேரா. ய. மணிகண்டனும் முக்கியமானவர். அவரது கட்டுரை;


மகாகவி பாரதியின் “கோவில்யானை”சில குறிப்புகள்

நாடகம்
கோவில்யானை
ஸி. சுப்பிரமண்யபாரதியார்


’இதே நிகழ்ச்சியை நான்  எழுதியுள்ள பாரதி வாழ்க்கைவரலாற்று நூலில் இப்படி எழுதியிருக்கிறேன்.

பாரதி கையில் சில வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றார்                     

பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பாரதி அடிக்கடி போவது வழக்கம். வாசல் மண்டபத்தில் கட்டப்பட்டிருக்கும் யானையிடம் சென்று அதற்குப் பழம் கொடுத்து அதனுடன் சிறிது நேரம் சல்லாபம் செய்துவிட்டு வருவார்.  அந்த யானையின் பெயர் அர்ச்சுனன். பாரதி தன்னையே அர்ச்சுனனாகப் பாவித்துக்கொண்டவர். எனவே  அந்த இருவருக்குள்ளும் ஒரு இணக்கம் இருந்தது. பாரதியைக் கண்டால் அதற்கு ஒரு தனி மகிழ்ச்சி வந்துவிடும். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிய பாரதி  ஐந்தறிவுடைய பிராணிகளை அதிகம் நேசித்தார் என்றே சொல்லவேண்டும். 

ஒரு நாள் யானைக்கு மதம் பிடித்துவிட்டது.. இரண்டு மூன்று நாட்களாகக் கோவிலுக்குப் போகாததால் யானையின் நிலைமையைப் பற்றிப் பாரதி அறிந்திருக்க வில்லை

வழக்கம் போல அதற்குப் பழம் கொடுக்கப்போனார். பழத்தை வாங்குவதற்குப் பதிலாக அந்த யானை அவரையே தூக்கிவிட்டது.  தூக்கிய யானைக்கு அவரைக் கிழே தள்ளி மிதிக்க ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. ஆனால் அது அப்படிச் செய்யவில்லை. கீழே போட்டது. யானையின் நான்கு கால்களுக்கும் இடையே பாரதி விழுந்துவிட்டார். கீழே கல்பாவிய தரை . தூக்கிப் போட்ட வேகத்தில் தலையில் காயம் பட்டு இரத்தம் கொட்டியது. இதைப்  பார்த்த சிலர் கத்திக் குரல் கொடுக்க ஆபத் பாந்தவனான குவளைக் கண்ணன் ஓடி வந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டு கையாலாகாத்தனமாகக் கத்திக்கொண்டிருந்த கூட்டத்தை விலக்கி உள்ளே பாய்ந்து சென்று பாரதியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். கோயில் வாசல் மண்டபத்தில் படுக்க வைத்தார். மண்டபத்துக்கு எதிர்வீட்டிலிருந்த ஸ்ரீனிவாசாச்சசரியார் இதை அறிந்தார். உடனே ஒரு வண்டிக்கு ஏற்பாடு செய்து இராயப்பேட்டை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.  மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கக் கூடிய அளவுக்கு அபாயகரமாக இல்லாததால் அவரை அங்கிருந்து திருவல்லிக்கேணி வீட்டிற்குக் கொண்டுவந்தனர். ஏற்கனவே பூஞ்சை உடம்பு.  கல்தரையில் கீழே விழுந்ததால் உடம்பெல்லாம் வலி அதிகமிருந்தது. உடல் வலியைவிட அன்பு காட்டிய தன்னை அந்த யானை துக்கிப்போட்டு விட்டதே என்ற எண்ணம் அவரை வாட்டியது. ஆனால் உடனே சமாதானப்படுத்திக்கொண்டார். அந்த யானைக்கு மதம் பிடித்திருந்ததால் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையென்றும்., தன்னை மிக அருகிலே பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டு கீழே போட்டு அசையாமல் நின்றது என்றும் சொன்னார். அந்த நிகழ்ச்சியையே சிறிது கற்பனை கலந்து காளி கோயில் யானை என்ற ஒரு கட்டுரையெழுதி சுதேசமித்திரனில் வெளியிட்டார்.

 உடல் நிலை சற்றுத் தேறிச்.சுதேசமித்திரன் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தார்.  அத்தோடு அடிக்கடி கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.  வெளியூர்களுக்கும் சென்று வந்தார்.” - கவிமாமணி இலந்தை ராமசாமி


-------------------------

தெரிவு;

நா. கணேசன்


N. Ganesan

unread,
Dec 31, 2014, 2:12:52 PM12/31/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham, Sethupathi Sethukapilan, மு இளங்கோவன்
On Monday, December 29, 2014 8:09:40 AM UTC-6, Jeyaraman Sundararajan wrote:
வஉசி பாரதி கடைசி சந்திப்பு - ஏற்கனவே மின்தமிழில் வந்தது என்று நினைக்கிறேன்.
இவ்விவாதத்திற்காக ஒரு மீள்பதிவு

64 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வ.உ.சி. பாரதியை விடப் பத்து வயது பெரியவர். இருவரின் தந்தையாரும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் அத்யந்த நண்பர்கள்.

 

பாரதியாரைப் பற்றிப் பல கதைகள் சேர்ந்துவிட்டன. யாரோ தவறாக எழுதிக்கொடுத்ததை பிரதமர் ராஜீவ்காந்தி ’பாரதியார் கோயில் யானை கொம்பால் குத்தியதால் மறைந்தார்’ என்று பேசினார். பாரதியார் பூணூல் அணிவித்த ர. கனகலிங்கம் கோயில்யானை என்னும் கட்டுரையை எழுதினார் என்று எழுதினார். ஆனால் அது நாடக வைடிவில் பாரதி எழுதிய கதை. நல்ல நாடகக் குழு நாடகமாகவும், நாட்டியமாகவும் அரங்கேற்ற வேண்டும். சக்திதாசன் சுப்பிரமணியம் பாரதி வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். அவர் பாரதியின் கடைய வாழ்க்கை, பட்ட கஷ்டங்கள், மனோநிலை, ... எல்லாமும் எழுதியிருக்கிறார். பாரதியின் அரிய வெண்பாவும் கொடுத்துள்ளார். பாரதி நூர்றாண்டில் விரிவு செய்தும்
பதிப்பித்தார். பாரதி நண்பர்களை 50 ஆண்டுகளாய் கண்டு செய்தி சேகரித்த பத்திரிகையாளர். இப்போது கிடைத்துள்ள தகவல்களால் பாரதி
சந்தித்தது காந்தியின் 1920-ஆண்டு சென்னை விஜயம் எனத் தெரிகிறது. 1919-ல் பாரதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நிறைய.

பாரதி எப்படி புதுவை வந்தடைந்தார்? - என்பதற்கான விடையை ஆதாரபூர்வமாக பேரா. கிருங்கை சேதுபதி கண்டு அறிந்து எழுதியுள்ளார்.
அவருக்கும் மடல் இடுகிறேன். அவர் கட்டுரையை தட்டெழுதியும் தருகிறேன்.

நா. கணேசன்

On Tuesday, April 15, 2014 7:04:44 PM UTC-7, Ram wrote:
காளிகோயில் யானை பாரதி எழுதியிருக்கிறார் என்பது தெரியும். அதை ஒரு கட்டுரை என்று நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் நாடகம் என்பதறிந்தேன். அதை இங்கே இட்டதற்கு நன்றி.

இலந்தை


கட்டுரை என்று குறிப்பிட்டவர் கனகலிங்கம். ஆனால் அது பிழை என்று ய. மணிகண்டன் விளக்கியுள்ளார். சிலபல ஆண்டுகள் கழித்து
எழுதும்போது இவ்வாறு பிழைகள் சேர்வது இயற்கை. பாரதியாரின் வரலாறு கூறும் பல நூல்கள் மார்ச் 17, 1919 வாக்கில் பாரதியின்
விக்டோரியா ஹால் சொற்பொழிவு நடந்தததாக எழுதிச் செல்லும். ஆனால், பிப்ரவரி 1919-ல் கடைசியில் சென்னை வந்த பாரதி
விக்டோரியா ஹால் சொற்பொழிவு அறிக்கை மார்ச் 4, 1919-ல் தி ஹிந்துவில் வெளியாகிவிட்டது. போலீஸ் சென்சார்ஷிப் அப்போது இருந்தது.
எனவே, ஒருவார்த்தை தாகூர், காந்தி அடுத்தடுத்து வருவதைச் சொல்லவில்லை. எல்லாம் தத்துவ விசாரணை. 
ஊருக்கும் தாகூர், காந்தி வருகையின் போது திருப்பி அரசால் அனுப்பப்பட்டிருக்கலாம். 

வ.ரா., அவரைத் தொடர்ந்து அமிர்தா எழுதிய ராஜாஜி இல்லத்தில் சந்திப்பு நடந்திருக்கலாம். அமிர்தா 2 நிமிஷம் சந்திப்பு எனக் குறிப்ப்ட்டுள்ளார். ராஜாஜி இல்லம் 1919-ல் காந்தி போகவில்லை. 1919 வருகையின்போது தான் முதன்முதல் ராஜாஜி காந்தியையே பார்க்கிறார். அவர் தங்கியது கஸ்தூரிரங்கர் இல்லம் அப்போது. எனவே தான் ஜெனரல் அம்னெஸ்ட்டி வந்தபின், அதாவது 1920-ல் காந்தியை பாரதி 2 நிமிஷம் பார்த்திருக்கலாம். இது நிகழ்ந்தது ராஜாஜி இல்லம் என வ.ரா., அமிர்தா குறிப்புகளால் தெரிகிறது. விக்டோரியா ஹால் பேச்சு, சென்னையில் அரசியல்கூட்டங்களில் பங்குபெறாமை போன்ற கொடுத்த வாக்குறுதிக்கான நன்னடத்தை காரணமாக காலனிய அரசு சென்சார்ஷிப்பை மே 1919-ல் தளர்த்தியிருக்கிறது. அதனைப் பாரதியே ஜூன் 1919-ல் தன் தம்பி விசுவநாதனுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளார். பின்னர் வந்த காந்தியைப் பார்ப்பதில் எந்த சிக்கலும் பாரதிக்கு இருக்கவில்லை. இருந்தாலும், அவருக்கு ஒத்துழையாமை இயக்கம் விடுதலை பெறுமா? - என்ற ஐயப்பாடு இருந்தே வந்துள்ளது. இதனை நவம்பர் 1920-ல் வெளியிட்டுள்ள சுதேசமித்திரன் கட்டுரை காட்டுகிறது என அவர் பேர்த்தி விஜயாபாரதி எழுதி உள்ளார். எனவே தான் மகாத்மாகாந்தி பஞ்சகம் போன்றவை 1921-ல் பாரதி மறைந்த ஆண்டில் எழுதியது என்கிறார் விஜயாபாரதி. பாரதமாதா நவரத்ன மாலை, மகாத்மாகாந்தி பஞ்சகம் இரண்டும் வெளியான மாதங்கள், ஆண்டு சீனி. விசுவநாதன் அல்லது வேறு யாரும் எழுதியுள்ளனரா?

நா. கணேசன்

சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி ஐயங்காருக்கு 
நன்றிக் கடிதம், 1918

ஓம் சக்தி

கடையம்,
டிசம்பர் 17

ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்காருக்கு நமஸ்காரம். ஞாயிற்றுக் கிழமை (15ந் தேதி) இரவு நான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன். என் விடுதலையின் பொருட்டாகத் தாங்களும் மற்ற நண்பர்களும் மிகவும் சிரத்தையுடன் பாடுபட்டதற்கு என் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கிறேன்.

ஸ்ரீமதி அனி பெஸண்ட், ஸ்ரீ மணி அய்யர், ஸ்ரீ சி.பி.ராமசாமி அயயர் முதலாக என் விடுதலை விஷயத்தில் சிரத்தையெடுத்துக் கொண்ட தங்களுடைய மித்திரர்களுக்கெல்லாம் எனது நன்றி தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

தங்களன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி


 தம்பி சி.விசுவநாதனுக்குக் கடிதம், 1918
ஓம் சக்தி

C.Subramania Bharati

Pondicherry
3rd August 1918

ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷமடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செய்வதற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் அதனால் உன் போன்றோருக்குக் கடமைகள் செய்யும் திறமும் நிச்சயமாக வரும். உன் கடிதத்தில் கண்டபடி நீ இங்கே என்னைப் பார்க்க வரும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் வா. தங்கை ஸ்ரீ லக்ஷ்மி சில வருஷங்களுக்கு முன் எட்டயபுரத்துக்கு வந்திருந்த காலத்தில் என்னைக் கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தாள். அப்போது என் கையில் பணம் இல்லாதபடியால் அனுப்பவில்லை. அது முதல் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு வார்த்தைகூட எழுதாமலிருக்கிறாள். என்னை மன்னிக்கும்படிக்கும் எனக்கு அடிக்கடி காயிதங்களெழுதும்படிக்கும் நீ அவளை அழுத்தமான பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன். தம்பியுள்ளோன் படைக்கஞ்சான் என்ற வாக்கியத்தின் உண்மையை உன் விஷயத்தில் நம்பியிருக்கலாமென்றே நம்புகிறேன்.

எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸம்ஸ்கிர்தத்திலே காயிதம் எழுது. திருப்பயணம் வி.ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் 'விநாயகர் ஸ்தோத்திரம்' (தமிழ் நூல்) அச்சிட வாங்கிக்கொண்டு போனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை. மேலும் அவர் 'பாஞ்சாலி சபதம்' அச்சிடும் சம்பந்தமாகப் பணம் சேகரித்துப் பட்டணத்துக் கனுப்புவதாகச் சொன்னார். அங்ஙனம் அனுப்ப முடியுமானால் உடனே புதுச்சேரியில் எனது விலாசத்துக்கனுப்பும்படி ஏற்பாடு செய்.

அது மாத்திரமேயன்றி, 'விநாயர் ஸ்தோத்திரம்' வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்களனுப்பும்படி சொல்லு. உடம்பையெண்ணிப் பயப்படாதே. அடிக்கடி பால் குடி. ஜலத்தை எப்போதும் காய்ச்சிக் குடி. வேறு எந்த விஷயத்துக்கும் கவலைப்படாதே. பொறுமையாலும் பயமின்மையாலும் இவ்வுலகத்தில் மனிதன் தேவத்தன்மை அடைகிறான். அந்நிலைமை உனக்கு மஹாசக்தி அருள் செய்க.

உனதன்புள்ள ஸஹோதரன்,
சி.சுப்பிரமணிய பாரதி


 

2014-04-15 19:54 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


மகாகவி பாரதியின் “கோவில்யானை”சில குறிப்புகள்

நாடகம்
கோவில்யானை
ஸி. சுப்பிரமண்யபாரதியார்



 

தமிழகமெங்கும் பாரதியின் மேதைமை உணரப்பட்டிருந்தாலும், ஒரே பகுதியில் வாழ்ந்தும், தன் 34 வயதில்தான் (1906ல்) பாரதியை முதன்முதலாய்ச் சந்திக்கிறார் என்னும் செய்தி ஆச்சர்யப்பட வைக்கிறது. அப்போது வ.உ.சியின் வயது 34. பாரதி 24 வயது இளைஞர்.

N. Ganesan

unread,
Dec 31, 2014, 2:41:22 PM12/31/14
to மின்தமிழ், Santhavasantham

---------- Forwarded message ----------
From: Sethupathi Sethukapilan
Date: 2014-12-31 13:21 GMT-06:00
Subject: Re: [MinTamil] பாரதியின் இறுதி யானை மிதித்ததால் நிகழ்ந்ததல்ல - திருமதி பாரதி! உண்மை.........?
To: "N. Ganesan" <naa.g...@gmail.com>


பாரதி குறித்த செய்தியுடன் இந்த ஆண்டு தொடங்குவது மகிழ்ச்சி தருகிறது.

ஈரோட்டில் பாரதி குறித்த ச.து.சு. யோகியார் உரை விரைவில் அனுப்புகிறேன்.

நன்றி
தங்கள் முயற்சிக்கும். பாரதி அன்பர்களுக்கும்
சேதுபதி


K R A Narasiah

unread,
Jan 1, 2015, 1:36:56 AM1/1/15
to mintamil
ரா. அ. பத்மநாபனை நான் கடைசியாக்ச் சந்தித்தது 6-10-12 அன்று. அப்போது கூட அவருடன் பேசிகொண்டிருந்தேன். ஆனால் அப்போது அவரால் சுத்தமாக்க் காது கேட்காத நிலை. ஆகிஅயால் அவரது திருமதியார் தான் விளக்கிக் கொண்டிருந்தார்.
அவரது குறிப்பின் படி, பாரதி (சித்திரபாரதி) 1921 ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு தேதிகளில் ஈரோட்டுக்குப் போய் அங்கே கருங்கல் பாளையத்திலிருந்த ஒரு வாசக சாலையின் ஆண்டு விழாவில், ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற பொருளில் பிரசங்கம் செய்தார். மறுநாள் ஈரோட்டின் வாய்க்கால் கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்பது ப்ற்றிப் பேசினார். ‘எனது ஈரோட்டு யாத்திரை’ என்றொரு கட்டுரையும் எழுதினார். இது மித்திரனில் ஆகஸ்டு 4 அன்று வெளியானது
குவளைக் கண்ணன் தான் யானைக் காலடியில் கிடந்த பாரதியைத் தூக்கிக் கொண்டு வந்தார். பின்னர் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரும் மற்ற சிலரும் அவரை ஒரு ஜட்கா வண்டியில் எடுத்துச் சென்றனர்.
இந்த விவரத்தை சகுந்தலா பாரத் எனது தந்தை என்ற நூலில் சொல்கிறார். (இந்நூலின் பழைய பிரதி என்னிடம் இருந்தது. இப்போது கிடைக்கவில்லை. தேடிப் பார்க்க வேண்டும். சிட்டி கொடுத்தது) 
ஸ்ரீனிவாசாச்சாரியார் பெண் ரங்கா (ரங்கநாயகி அம்மாள்) பாரதி வீட்டிற்கு ஓடினாள். எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாமல் ஜெனரல் ஆஸ்பத்திரி போய் திரும்பதற்குள் பாரதியை வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
சம்பவம் நடந்தது ஜூன் மாத்த்தில் பின்னர் பாரதி ஜூலை ஆகஸ்டு மாதங்களில் மித்திரனில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் தேசிய வீதி பஜனை கூட செய்துள்ளார்.
ஆகஸ்டு மாதம் வெளியூர் பயணமும் மேற்கொண்டுள்ளார்.
ரா. அ. ப சொல்கிறார்: “ யானை மூலம் உயிரைக் கவராத யமன் இரண்டு மாதம் காத்திருந்து வேறொரு எளிய வழியில் பாரதியை நெருங்கினான்”
வயிற்றுப் போகு; தாங்க முடியாத பூஞ்சை உடல்; இரத்த்க் கடுப்பாக மாறிவிட்டது. 
பாரதியின் உடல் நிலை சரிந்து கொண்டு வந்தது. வ. வே. சு. அய்யர் தாம் எழுதாத ஒரு கட்டுரைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். ஆகையால் அவர் போலீஸ் காவலுடன் தான் பாரதியை வந்து காண முடிந்தது. 
பின்னர் அவருடன் இருந்தவர்கள்; பரலி சு. நெல்லையப்பர், நிலகண்ட பிரம்மச்சாரி (இவரை நான் பல ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துப் பேசியுமுள்ளேன்) லக்ஷ்மண அய்யர் (உறவினர்) அங்கிருந்தனர். ஆந்திர கேசரி டி. பிரகாசத்தின் தம்பி டி, ஜானகிராம் என்ற ஹோமியோபதி டாக்டர் அழைத்து வரப் பட்டார். ஆனால் கோபத்தில் “எனக்கு உடம்பிற்கு ஒன்றுமில்லை” எனக்கூறி பார்தி அனுப்பிவிட்டார்.
சகுந்தலா சொன்னது: “ ‘அன்று அப்பாவுக்கு மருந்து நீ கொடுத்தால் ஒருவேளை கோபிக்காமல் சாப்பிடுவார்’ என்று தாயார் கூற  மருந்து என்று நினைத்து பார்லி வாட்டரை அவருக்குக் கொடுத்தேன். அதை ஒரு வாய் குடித்தார். ‘நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா கஞ்சி’ என்று சொல்லிக் கண்ணை மூடிவிட்டார். . . . தூங்கிவிட்டேன் போலும்” 
நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்: ”அமானுல்லவைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸுக்குக் கொண்டு போகவேண்டும்”  இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்.

காலமானது இரவு 1:30 1921 செப்டம்பர் 1921.
This is confirmed by both Harihara Sarma and Nilakanta Brahmachari. 

மயானதுக்குச் சென்றவர்கள் துரைசாமி அய்யர், ஹரிஹர சர்மா, (பாரதி உறவினர்) சக்கரைச் செட்டியார் (கிறிஸ்தவராக் மாறிவிட்டவர்) யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா (கிறிஸ்துவப் பாதிரியார்) மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், எஸ் திருமலாச்சாரியார்., குவளைக் கிருஷ்ணமாச்சார்யார், - துரைசாமி அய்யர் செலவில் தான் கர்மங்கள் நடந்தன. 

மயானத்தில் கொள்ளியிடுவது யார் என்ற பிரச்சினை!
நீலகண்ட பிரம்மசாரிக் கொள்ளியிட மறுத்துவிட்ட நிலையில் ஹரிஹர் சர்மாதான் கொள்ளியிட்டார். 
பாரதி காலமானபோது அவர் வயது சரியாக 38 வருடஙகள் 9 மாதங்கள்! 
மேலே குறிப்பிட்டவை தான் சரியான விவரங்கள்.
 lot of incorrect news have been posted and repeated Ad Nauseam  without checking!
Narasiah



On Thu, Jan 1, 2015 at 1:10 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info


தங்கள் முயற்சிக்கும். பாரதி அன்பர்களுக்கும்
சேதுபதி


சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 1, 2015, 1:57:15 AM1/1/15
to mintamil
தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Suba.T.

unread,
Jan 1, 2015, 5:43:17 AM1/1/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-01-01 7:36 GMT+01:00 K R A Narasiah <naras...@gmail.com>:
ரா. அ. பத்மநாபனை நான் கடைசியாக்ச் சந்தித்தது 6-10-12 அன்று. அப்போது கூட அவருடன் பேசிகொண்டிருந்தேன். ஆனால் அப்போது அவரால் சுத்தமாக்க் காது கேட்காத நிலை. ஆகிஅயால் அவரது திருமதியார் தான் விளக்கிக் கொண்டிருந்தார்.
அவரது குறிப்பின் படி, பாரதி (சித்திரபாரதி) 1921 ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு தேதிகளில் ஈரோட்டுக்குப் போய் அங்கே கருங்கல் பாளையத்திலிருந்த ஒரு வாசக சாலையின் ஆண்டு விழாவில், ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற பொருளில் பிரசங்கம் செய்தார். மறுநாள் ஈரோட்டின் வாய்க்கால் கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்பது ப்ற்றிப் பேசினார். ‘எனது ஈரோட்டு யாத்திரை’ என்றொரு கட்டுரையும் எழுதினார். இது மித்திரனில் ஆகஸ்டு 4 அன்று வெளியானது
குவளைக் கண்ணன் தான் யானைக் காலடியில் கிடந்த பாரதியைத் தூக்கிக் கொண்டு வந்தார். பின்னர் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரும் மற்ற சிலரும் அவரை ஒரு ஜட்கா வண்டியில் எடுத்துச் சென்றனர்.
இந்த விவரத்தை சகுந்தலா பாரத் எனது தந்தை என்ற நூலில் சொல்கிறார். (இந்நூலின் பழைய பிரதி என்னிடம் இருந்தது. இப்போது கிடைக்கவில்லை. தேடிப் பார்க்க வேண்டும். சிட்டி கொடுத்தது) 
ஸ்ரீனிவாசாச்சாரியார் பெண் ரங்கா (ரங்கநாயகி அம்மாள்) பாரதி வீட்டிற்கு ஓடினாள். எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாமல் ஜெனரல் ஆஸ்பத்திரி போய் திரும்பதற்குள் பாரதியை வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
சம்பவம் நடந்தது ஜூன் மாத்த்தில் பின்னர் பாரதி ஜூலை ஆகஸ்டு மாதங்களில் மித்திரனில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் தேசிய வீதி பஜனை கூட செய்துள்ளார்.
ஆகஸ்டு மாதம் வெளியூர் பயணமும் மேற்கொண்டுள்ளார்.
ரா. அ. ப சொல்கிறார்: “ யானை மூலம் உயிரைக் கவராத யமன் இரண்டு மாதம் காத்திருந்து வேறொரு எளிய வழியில் பாரதியை நெருங்கினான்”
வயிற்றுப் போகு; தாங்க முடியாத பூஞ்சை உடல்; இரத்த்க் கடுப்பாக மாறிவிட்டது. 
பாரதியின் உடல் நிலை சரிந்து கொண்டு வந்தது. வ. வே. சு. அய்யர் தாம் எழுதாத ஒரு கட்டுரைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். ஆகையால் அவர் போலீஸ் காவலுடன் தான் பாரதியை வந்து காண முடிந்தது. 
பின்னர் அவருடன் இருந்தவர்கள்; பரலி சு. நெல்லையப்பர், நிலகண்ட பிரம்மச்சாரி (இவரை நான் பல ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துப் பேசியுமுள்ளேன்) லக்ஷ்மண அய்யர் (உறவினர்) அங்கிருந்தனர். ஆந்திர கேசரி டி. பிரகாசத்தின் தம்பி டி, ஜானகிராம் என்ற ஹோமியோபதி டாக்டர் அழைத்து வரப் பட்டார். ஆனால் கோபத்தில் “எனக்கு உடம்பிற்கு ஒன்றுமில்லை” எனக்கூறி பார்தி அனுப்பிவிட்டார்.
சகுந்தலா சொன்னது: “ ‘அன்று அப்பாவுக்கு மருந்து நீ கொடுத்தால் ஒருவேளை கோபிக்காமல் சாப்பிடுவார்’ என்று தாயார் கூற  மருந்து என்று நினைத்து பார்லி வாட்டரை அவருக்குக் கொடுத்தேன். அதை ஒரு வாய் குடித்தார். ‘நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா கஞ்சி’ என்று சொல்லிக் கண்ணை மூடிவிட்டார். . . . தூங்கிவிட்டேன் போலும்” 
நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்: ”அமானுல்லவைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸுக்குக் கொண்டு போகவேண்டும்”  இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்.

காலமானது இரவு 1:30 1921 செப்டம்பர் 1921.
This is confirmed by both Harihara Sarma and Nilakanta Brahmachari. 

மயானதுக்குச் சென்றவர்கள் துரைசாமி அய்யர், ஹரிஹர சர்மா, (பாரதி உறவினர்) சக்கரைச் செட்டியார் (கிறிஸ்தவராக் மாறிவிட்டவர்) யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா (கிறிஸ்துவப் பாதிரியார்) மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், எஸ் திருமலாச்சாரியார்., குவளைக் கிருஷ்ணமாச்சார்யார், - துரைசாமி அய்யர் செலவில் தான் கர்மங்கள் நடந்தன. 

மயானத்தில் கொள்ளியிடுவது யார் என்ற பிரச்சினை!
நீலகண்ட பிரம்மசாரிக் கொள்ளியிட மறுத்துவிட்ட நிலையில் ஹரிஹர் சர்மாதான் கொள்ளியிட்டார். 
பாரதி காலமானபோது அவர் வயது சரியாக 38 வருடஙகள் 9 மாதங்கள்! 
மேலே குறிப்பிட்டவை தான் சரியான விவரங்கள்.
 lot of incorrect news have been posted and repeated Ad Nauseam  without checking!
Narasiah


​இத்தகைய தெளிவான தகவல்களை உங்களைப் போன்ற நேரடி தகவல் அறிந்தவர்கள் வழங்க வேண்டும்.
பல வேளைகளில் ​
 
​தவறான செய்திகள் இணையத்தில் உலவ ஆரம்பித்து அதுவே உண்மை என்ற பார்வையை வாசிப்போருக்கு ஏற்படுத்தி விடுகின்றது.

சுபா​

N. Ganesan

unread,
Jan 1, 2015, 10:48:46 AM1/1/15
to mint...@googlegroups.com


On Thursday, January 1, 2015 4:43:17 AM UTC-6, Suba.T. wrote:


​இத்தகைய தெளிவான தகவல்களை உங்களைப் போன்ற நேரடி தகவல் அறிந்தவர்கள் வழங்க வேண்டும்.
பல வேளைகளில் ​
 
​தவறான செய்திகள் இணையத்தில் உலவ ஆரம்பித்து அதுவே உண்மை என்ற பார்வையை வாசிப்போருக்கு ஏற்படுத்தி விடுகின்றது.


நரசையாவும் படித்தும், கேட்டும் அறிந்து எழுதுபவர்தான். பாரதியார் வாழ்ந்த காலத்தில் நம் நரசையா பிறக்கவில்லையே.
ய. மணிகண்டன் மீள்பிரசுரம் செய்த கோயில்யானை நாடகம் - பாரதி எழுதியது - நரசையா படிக்க வேண்டுகோள்.

நா. கணேசன்
 
சுபா​

K R A Narasiah

unread,
Jan 1, 2015, 11:00:50 AM1/1/15
to mintamil, நா. கணேசன்
பாரதியார் காலத்தில் பிறந்திருந்தால் நானும் எங்கேயோ மேலுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்திருப்பேன். எனது பாக்கியம் நான் பாரதி பாசறை என்ற் அமைப்பில் vice president ஆக இருந்தது. அப்போதைய மீட்டிங்குகளில், நான் சந்தித்தவர்களில், ரா. அ. ப். நாகநந்தி பொன்றோர். தவிர நீலகண்ட பிரம்மச்சாரியைச் சந்தித்தது ஒரு பெரும் வாய்ப்பு. சிட்டி அஅம்மீள் பதிவை படிக்கவேண்டும்.
நரசய்யாவர்கள் பல பழைய புத்தகங்களைத் த்ந்திருக்கிறார். கணெசனார் சொவது போல 

On Thu, Jan 1, 2015 at 9:18 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info

On Thursday, January 1, 2015 4:43:17 AM UTC-6, Suba.T. wrote:


​இத்தகைய தெளிவான தகவல்களை உங்களைப் போன்ற நேரடி தகவல் அறிந்தவர்கள் வழங்க வேண்டும்.
பல வேளைகளில் ​
 
​தவறான செய்திகள் இணையத்தில் உலவ ஆரம்பித்து அதுவே உண்மை என்ற பார்வையை வாசிப்போருக்கு ஏற்படுத்தி விடுகின்றது.


நரசையாவும் படித்தும், கேட்டும் அறிந்து எழுதுபவர்தான். பாரதியார் வாழ்ந்த காலத்தில் நம் நரசையா பிறக்கவில்லையே.
ய. மணிகண்டன் மீள்பிரசுரம் செய்த கோயில்யானை நாடகம் - பாரதி எழுதியது - நரசையா படிக்க வேண்டுகோள்.

நா. கணேசன்
 
சுபா​

K R A Narasiah

unread,
Jan 1, 2015, 11:03:17 AM1/1/15
to mintamil, நா. கணேசன்
அ. ப். நாகநந்தி பொன்றோர். தவிர நீலகண்ட பிரம்மச்சாரியைச் சந்தித்தது ஒரு பெரும் வாய்ப்பு. சிட்டி அஅம்மீள் பதிவை படிக்கவேண்டும்.
நரசய்யாவர்கள் பல பழைய புத்தகங்களைத் த்ந்திருக்கிறார். கணெசனார் சொவது போல 
இப்படி படிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன்
அ. ப். நாகநந்தி பொன்றோர். தவிர நீலகண்ட பிரம்மச்சாரியைச் சந்தித்தது ஒரு பெரும் வாய்ப்பு.  
சிட்டி அவர்கள் பல பழைய புத்தகங்களைத் த்ந்திருக்கிறார். கணெசனார் சொவது போல அம்மீள் பதிவை படிக்கவேண்டும்.
நரசய்யா

N. Ganesan

unread,
Jan 1, 2015, 11:19:50 AM1/1/15
to mint...@googlegroups.com, naa.g...@gmail.com


On Thursday, January 1, 2015 10:03:17 AM UTC-6, naras...@gmail.com wrote:
அ. ப். நாகநந்தி பொன்றோர். தவிர நீலகண்ட பிரம்மச்சாரியைச் சந்தித்தது ஒரு பெரும் வாய்ப்பு. சிட்டி அஅம்மீள் பதிவை படிக்கவேண்டும்.
நரசய்யாவர்கள் பல பழைய புத்தகங்களைத் த்ந்திருக்கிறார். கணெசனார் சொவது போல 
இப்படி படிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன்
அ. ப். நாகநந்தி பொன்றோர். தவிர நீலகண்ட பிரம்மச்சாரியைச் சந்தித்தது ஒரு பெரும் வாய்ப்பு.  
சிட்டி அவர்கள் பல பழைய புத்தகங்களைத் த்ந்திருக்கிறார். கணெசனார் சொவது போல அம்மீள் பதிவை படிக்கவேண்டும்.
நரசய்யா

It seems Bharati Memorial Library, with 17000 books, is not preserved well. It contains treasures still to be unlocked by future researchers.
(like Ya. Manikandan, Kirungai Sethupathi, ...)



Happy New Year to you and family,
N. Ganesan

Jeyaraman Sundararajan

unread,
Jan 1, 2015, 11:47:28 AM1/1/15
to min tamil, naa.g...@gmail.com
பாரதியின் இறப்புச் சான்றிதழ்

சுந்தரராஜன் ஜெயராமன்
1921-09-11-Subramania_Bharathy.pdf

Nagarajan Vadivel

unread,
Jan 1, 2015, 11:58:39 AM1/1/15
to மின்தமிழ்
இந்த ஆவணம் அசலா அல்லது இணையதள அல்வாவா என்பதை முதலில் அறியவேண்டும்.  பதிவேட்டில் இறப்புக்கான காரணம் எழுதப்பட்டிருந்தும் காப்புரிமை காரணமாக வெளியிடவில்லை என்ற குறிப்புள்ளதே.  அந்த அடிப்படையில் தகவல் அறியும் உரிமையின்கீழ் இறப்புக்கான காரணம் என்ன எனபதை அறியலாமே

ரு.பூனை

N. Ganesan

unread,
Jan 1, 2015, 12:06:59 PM1/1/15
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, January 1, 2015 10:58:39 AM UTC-6, ருத்ராட்சப் பூனை wrote:
இந்த ஆவணம் அசலா அல்லது இணையதள அல்வாவா என்பதை முதலில் அறியவேண்டும்.  பதிவேட்டில் இறப்புக்கான காரணம் எழுதப்பட்டிருந்தும் காப்புரிமை காரணமாக வெளியிடவில்லை என்ற குறிப்புள்ளதே.  அந்த அடிப்படையில் தகவல் அறியும் உரிமையின்கீழ் இறப்புக்கான காரணம் என்ன எனபதை அறியலாமே

ரு.பூனை

The PDF looks it is remade.

The original was published by R. A. Padmanabhan in Chithira Bharathi. N. Mahaligam paid for the Bharati centenary edition by R. A. Padmanabhan.


Rathinam Chandramohan

unread,
Jan 1, 2015, 2:08:02 PM1/1/15
to mint...@googlegroups.com
Sabash. Arumaiyana pathivugal. Thodarattum...

Have a great Day. An Evening away from Greatness

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Jeyaraman Sundararajan

unread,
Jan 2, 2015, 8:11:07 AM1/2/15
to min tamil
விரிவான பதிவு.

சுந்தரராஜன் ஜெயராமன்

Innamburan S.Soundararajan

unread,
Jan 2, 2015, 9:34:41 AM1/2/15
to mintamil
என்னத்தை நிரூபீக்க முயல்கிறீர்கள்?   திரு.நரசய்யா கூறியதில் என்ன தவறு?
Reply all
Reply to author
Forward
0 new messages