--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
rnkantan
Ps: vaisampayana was the legendary disciple of vyasa who heard/listened to jaya 8800 verses and expanded it to 24000 stanzas of (mahaabharat) . people who recite vishnu sahashranaam and do yajur ved rites would hv come across vaisampaayana..
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன்.//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன.புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது.முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன்.நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை.வாசிப்பு தொடர்கின்றது...சுபா
இந்த அத்தியாயம் நாயக்கர் காலத்தில் பொருளாதார நிலை, நில உரிமை, வேளாண்மை நிலை, வரவு பங்கீடு முறை என்பன பற்றிய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றது. நாயக்கர் கால ஆட்சியில் பொருளாதாரம் தொடர்பான மிக விரிவான ஆய்வாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.
நில உரிமை எனும் போது அதில் அரசன், பாளையக்காரன், மானியதாரர்கள், பின் உழவர்கள் என இவர்களுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு பற்றிய சான்றுகள் சார்ந்த ஆய்வாக அமைந்திருக்கின்றது.
பண்ணை முறை எனும் பகுதி, ஒரு பண்ணையில் தொடர்புடையோராக உள்ளவர்களைப் பட்டியலிட்டு பின் அதில் அவர்களுக்குரிய செயல்பாடுகளையும் உரிமைகளையும் நன்கு விவரிக்கும் பகுதியாகவும் இருக்கின்றது. நில உரிமையாளன், பண்ணை விசாரிப்பான், கணக்குப்பிள்ளை, உழவர்கள் என்ற நான்கு பிரிவுகளுக்குமான செயலாடுகள் இதில் சொல்லப்படுகின்றன.
நிலத்தில் செய்யப்படும் விவசாயத்திலிருந்து வரும் வருவாய் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அளவு பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. பண்ணையாரைச் சார்ந்த உழவர்கள் பற்றிய விவரணை உள்ள பகுதியில் கொத்தடிமை முறை பற்றியும் சில குறிப்புக்கள் வருகின்றன. இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் வருமானம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றன.
வயலில் விவசாயம் செய்யப்படும் முறை பற்றி விளக்கும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் படிப்படியாக நிலம் தயார் செய்யப்படும் விதம், அவற்றை விவரிக்கும் சொற்கள் பற்றிய குறிப்புக்கள், கருவிகள் என்பன படிப்படியாக விளக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வருகின்ற நீர்ப்பாசனம் அதன் உரிமை ஆகிய விளக்கங்களும் அரசின் கட்டுப்பாட்டில் நீர்ப்பாசன மேலாண்மை இருந்தது என்பதை விளக்குகின்றது.
பள்ளு இலக்கியங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இப்பகுதி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.
வாசிப்பு தொடரும்..
2016-06-05 12:36 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன்.//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன.புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது.முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன்.நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை.வாசிப்பு தொடர்கின்றது...சுபா
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டாம் அத்தியாயம் இன்று மாலை வாசித்தேன்.
இந்த அத்தியாயம் நாயக்கர் காலத்தில் பொருளாதார நிலை, நில உரிமை, வேளாண்மை நிலை, வரவு பங்கீடு முறை என்பன பற்றிய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றது. நாயக்கர் கால ஆட்சியில் பொருளாதாரம் தொடர்பான மிக விரிவான ஆய்வாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.
நில உரிமை எனும் போது அதில் அரசன், பாளையக்காரன், மானியதாரர்கள், பின் உழவர்கள் என இவர்களுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு பற்றிய சான்றுகள் சார்ந்த ஆய்வாக அமைந்திருக்கின்றது.
பண்ணை முறை எனும் பகுதி, ஒரு பண்ணையில் தொடர்புடையோராக உள்ளவர்களைப் பட்டியலிட்டு பின் அதில் அவர்களுக்குரிய செயல்பாடுகளையும் உரிமைகளையும் நன்கு விவரிக்கும் பகுதியாகவும் இருக்கின்றது. நில உரிமையாளன், பண்ணை விசாரிப்பான், கணக்குப்பிள்ளை, உழவர்கள் என்ற நான்கு பிரிவுகளுக்குமான செயலாடுகள் இதில் சொல்லப்படுகின்றன.
நிலத்தில் செய்யப்படும் விவசாயத்திலிருந்து வரும் வருவாய் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அளவு பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. பண்ணையாரைச் சார்ந்த உழவர்கள் பற்றிய விவரணை உள்ள பகுதியில் கொத்தடிமை முறை பற்றியும் சில குறிப்புக்கள் வருகின்றன. இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் வருமானம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றன.
வயலில் விவசாயம் செய்யப்படும் முறை பற்றி விளக்கும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் படிப்படியாக நிலம் தயார் செய்யப்படும் விதம், அவற்றை விவரிக்கும் சொற்கள் பற்றிய குறிப்புக்கள், கருவிகள் என்பன படிப்படியாக விளக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வருகின்ற நீர்ப்பாசனம் அதன் உரிமை ஆகிய விளக்கங்களும் அரசின் கட்டுப்பாட்டில் நீர்ப்பாசன மேலாண்மை இருந்தது என்பதை விளக்குகின்றது.
பள்ளு இலக்கியங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இப்பகுதி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.
வாசிப்பு தொடரும்..
சுபா
சுபா,சு.கி.ஜெயகரன் அவர்களின் குமரி நில நீட்சி நூல் குறித்த தங்கள் பார்வை என்ன?
பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். இந்த பின்புலத்தில்தான் நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அவர்களின் 'குமரி நிலநீட்சி' எனும் நூலை காண வேண்டும். அவர் இக்கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனவும் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாகத் தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.
--
குமரிக் கண்டம் ஓர் புவியியல் பார்வை ; எனும் தலைப்பில் தொடர் எழுத விருப்பம். குமரிக்கண்ட ஆதரவாளர்கள் எனக்கு மறுமொழி கொடுத்து ஒரு பட்டிமன்றம் அமைத்தால் நன்றாக இருக்கும். பல உண்மைகள் வே ளிச்சத்திற்கு வரும். ஆனால் சில் இடங்களில் கூறியது கூறல் ஆகி விடும்.
சுமதி, ஜெயகரன் ஆகியோரின் நூல்களை நான் படித்தேனில்லை. என் நோக்கம் துறை சாரா பெருமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் எழுத வேண்டும் என்பதே. குறை காணின் குறிப்பிடுக. .
2016-06-14 12:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.