கங்கை என்னும் விண்ணீர் வியனுலகு

319 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 24, 2017, 8:05:03 PM1/24/17
to mintamil, thiruppuvanam, Kalai Email

வணக்கம்.

கங்கை ஒரு நீர்த்தாரையாக விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிய புராணம்.

தீபாவளித் திருநாட்களில் எண்ணைய் தேய்த்துக் குளிக்கும் போதெல்லாம் “கங்கை“ நினைவிற்கு வந்துவிடும்.
கோயில் குடமுழுக்கு நாட்களில் “கங்கை“ தீர்த்தத்தால் குடமுழுக்கு நடைபெறும் போதெல்லாம் “கங்கை “ நினைவிற்கு வந்து விடும்.
ஆண்டாண்டு காலமாகப், பண்னெடுங்காலமாகப் பாரத தேசத்தினர் கங்கைக்குச் சென்று நீராடுவதை ஒரு தலையாய கர்மமமாகக் கொண்டிருக்கின்றனர்.  இராமேச்சுரம் அக்னி தீர்த்தத்தில் (கடலில்) நீராடி அங்கிருந்து மண் எடுத்துக் கொண்டு காசிக்குச் செல்வோரைக் காணும் போதேல்லாம் “கங்கை“ நினைவிற்கு வந்துவிடும்.

பாரததேசத்தில் எத்தனையோ நதிகள் உள்ளன !
அப்படியிருந்தும் பாரதமக்கள் அனைவரும் கங்கைக்கு ஏன் இத்தகைய சிறப்பு கொடுக்கின்றனர்? என்று அறிந்து கொள்ள விரும்புவேன்.

ஏழு ஆண்டுகளுக்கு முன், உயர்திரு இன்னம்பூரான் என்ற சௌந்தரராஜன் (இருப்பு – சென்னை) அவர்களைச் சந்தித்தபோது, அவர் என்னை ஆசிர்வதித்துச் சில புத்தகங்களையும், ஒரு கல்மரம் (fossil tree) ஒன்றையும் நினைவுப் பரிசாகக் கொடுத்தார்.  அவர் அளித்த  புத்தகங்களில் ஒன்றான “தசா புத்திகளும் ஸ்ரீமத் ராமாயண பாராயணமும், 1 சூரிய தசை” என்ற புத்தகத்தில் கங்கையின் வரலாறு உள்ளது.

இதில் “கங்கையின் தோற்றம்“ பற்றிய மிகப்பெரிய புராணக் கதையை மிகமிகச் சுருக்கி எழுதியுள்ளனர்.  அதை அப்படியே தட்டச்சு செய்து கீழே இணைத்துள்ளேன்.

கங்கை : பகுதி 1

கங்கை பூமிக்கு வரக் காரணம்

சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன், அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்.  தன் தேசம் சிறியதாய் இருப்பதல் தன் பிள்ளைகளுக்காகத் தன் தேசத்தை விரிவு படுத்த எண்ணினான்.  அதனால் அவன் அசுவமேத யாகம் செய்தான்.  அசுவமேத யாகம் நடைபெற்றால் தனது பதவி பறிபோய்விடும் என இந்திரன் பயந்து, அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாரிஷி ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் கடுந்தவத்தில் இருந்த கபில ரிஷியைத்  துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்கள் அனைவரையும் மற்றும் அவர்களுடன் வந்த சேனைகளையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார்.  தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டுக் கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகா ரிசிகள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள். 

கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை. ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான்.  
அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால் கடும் வேகத்துடன் கங்கை பூமியில் இறங்கும் போது, அதன் வேகத்தைப் பூமியால் தாங்க முடியாது.  பூமி அழிந்துவிடாமல், பூமியில் கங்கையை இறக்கிடச் சிவபெருமானை வேண்டிக் கொள்ளுமாறும் ரிஷிகள் மன்னனுக்கு அறிவுரை கூறினர்.

ஸ்ரீ ராமசந்த்ராய நம :
பாலகாண்டம் – 43ஆவது ஸர்க்கம்.

கங்கை எவ்வாறு வந்தது?

தேவதேவே கதே தஸ்மின் ஸோங்குஷ்டாக்ர நிபீடிதாம்
க்ருத்வா வஸுமதீம் ராம ஸம்வத்ஸர முபாஸத :

பிறகு பகீரதன் கால் கட்டை விரலைப் பூமியில் ஊன்றி, கைகளை உயரத் தூக்கிக் கொண்டு யாதொரு பற்றுமின்றி, வாயுவே ஆகாரமாய், கட்டையைப் போல் அசையாமல் இரவும் பகலும் பரமசிவனைக் குறித்துத் தவம் செய்தார்.   பிறகு மஹாதேவன் பார்வதியுடன் அவருக்குப் பிரஸன்னமாய், “ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன்“ என்றார்.  அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  
“என் வேகத்தைத் தாங்கக் கூடியவர்களுமுண்டோ, இந்த சங்கரனையும் அடித்துக் கொண்டு பாதாளத்திற்குப் போவேன்“ என்றாள்.  அவளுடைய கர்வத்தை அறிந்து ருத்ரன் கோபங்கொண்டு அவளை மறைக்க நினைத்தார்.  அவருடைய புண்ணியமான சிரஸில் விழுந்தவுடன் ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள்.  “பரமசிவனுடைய தலையில் கங்கை விழுவதைப் பார்த்தேன்.  உடனே பூமிக்கு வரவேண்டியதல்லவா?   இவ்வளவு காலமாகியும் ஏன் இன்னும் வெளிப்படவில்லை? ஸர்வேச்வரனான சங்கரனைச் சரணமடைய வேண்டும்“ என்று மறுபடியும் அவரைக் குறித்துத் தவம் செய்தார்.  அதனால் பகவான் ஸந்தோஷித்து பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார்.  அவள் அப்போது ஏழு ப்ரவாகங்களாய்ப் பூமியில் விழுந்தாள்.  அவைகளில் ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும் ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின.   ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது.  அந்த ராஜ ச்ரேஷ்டர் திவ்யமான ரதத்தில் ஏறிக் கொண்டு முன்னே போனார்.  கங்கைக்கு த்ரிபதகா என்ற பெயர் வந்த விதத்தைச் சொன்னேன்.  அவளுடைய அற்புதமான செய்கைகளைச் சொல்லுகிறேன்.

ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரஸிலும் அங்கிருந்து பூமியிலும் விழுந்ததால் அந்த ஜலம் பயங்கரமான சப்தத்துடன் வந்தது.  மீன் ஆமை சிம்சுமாரம் முதலை முதலிய ஜல கூந்துக்கள்  அதில் துள்ளி விழுந்து கொண்டிருந்தபடியால் பூமி நன்றாக விளங்கிற்று.  ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் ஆச்சரியத்தைப் பார்க்கத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள் நகரங்களைப் போன்ற விமானங்களிலும்  குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்தார்கள்.  அவர்களின் தேஹ காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தாலும் எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ஜ்வலித்தது.  கங்கையில் மீன், சிம்சுமாரம் முதலிய ஜல ஜந்துக்கள் அங்குமிங்கும் துள்ளுவதால் மின்னல்கள் பாய்வது போலிருந்தது.  நான்கு புறங்களிலும் பலவிதமாய் வாரியிறைக்கப்பட்ட நுரைகளாலும் நீர்த் திவலைகளாலும் ஹம்ஸக் கூட்டங்களுடன் கூடிய வெண்மையான சரத்கால மேகங்களால் ஆகாசம் நிறைந்தது போலிருந்தது.  அந்த நதியின் ஜலம் சில இடங்களில் அதி வேகமாயும், சில இடங்களில் கோணலாயும், சில இடங்களில் நேராகவும், பள்ளங்களிலும் கீழாகவும், கல் முதலியவைகளால் தடுக்கப்பட்டபொழுது மேல் முகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும்,  சில இடங்களில் அலைகளின் வேகத்தால் ஜலத்துடன் ஜலம் மோதிக்கொண்டு அடிக்கடி எதிர்த்துக் கொண்டும் பூமியில் விழுந்தது.  

பரமசிவனுடைய தலையில் விழுந்து அங்கிருந்து பூமியில் வந்ததால் நீர்மலாய்ப் பாபங்களைப் போக்கும் புண்ணிய தீர்த்தமாயிற்று.  
தேவர்களும், ரிஷிகளும், கந்தவர்வர்களும், பூமியிலுள்ளவர்களும் “பரமசிவனே இதைத் தலையால் தாங்கினதால் இது மஹா பரிசுத்தமான தீர்த்தம்.  அவருடைய தேஹத்தில் பட்டுப் பூமியில் விழுந்ததால் இதற்கு விசேஷ சுத்தியுண்டாயிற்று“ என்று அதில் ஸ்தானம் செய்தார்கள்.  சாபத்தால் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களும் அதில் ஸ்நானஞ் செய்து பாபங்கள் நீங்கிப் புண்ணிய  லேகங்களுக்குப் போனார்கள்.  பூமியிலுள்ளவர்கள் அதில் ஸ்தானம் செய்து பாபங்கள் விலகிப் பரமானந்தம் அடைந்தார்கள்.

ராஜரிஷியான பகீரதர் திவ்ய ரதத்தில் ஏறிக் கொண்டு முன்னே சென்றார்.  கங்கை அவரைப் பின்தொடர்ந்தாள்.  தேவ, ரிஷி, தைத்ய, தானவ, ராக்ஷஸ, கந்தவர்வ, யக்ஷ, கின்னர, உரக, அப்ஸரஸ் கணங்களும் ஜல ஜந்துக்களும் பகீரதரைப் பின்தொடரும் கங்கையைப் பின் தொடர்ந்தார்கள்.  அவர் போகும் வழியெல்லாம் கங்கையும் போய் ஸமஸ்த பாபங்களையும் நாசஞ் செய்தது.  வழியில் ‘ஜன்ஹுரிஷி‘ யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில் பரவி யாகபதார்த்தங்களை அடித்துக் கொண்டு போயிற்று.  அவளுடைய கர்வத்தால் அந்த ரிஷி கோபங்கொண்டு அந்த ஜலம் முழுவதையும் குடித்துவிட்டார்.  அந்த ஆச்சர்யத்தால் தேவ, ரிஷி கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவைப் பலவிதமாய்ப் பிரார்த்தித்து, “ஸ்வாமி, கங்கையின் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்.  தங்களுடைய தேஹத்திலிருநது வெளிப்படுவதால் அவள் தங்களுக்குப் பெண்ணாகட்டும்“ என்றார்கள்.  அதனால் அவர் ஸந்தோஷித்து கங்கா ப்ரவாஹத்தைத் தன் காதின் வழியாய் வெளியில் விட்டார்.  

அன்று முதல் அவளுக்கு ஜான்ஹவி (ஜன்ஹுவின் புத்ரி) என்று பெயராயிற்று.  பிறகு அவள் பகீரதரைப் பின் தொடர்ந்து, ஸமுத்திரத்திற்கு வந்து, அங்கிருந்து பாதாளத்திற்குப் போனாள். தன் முன்னோர்கள் எரிந்து கிடக்கும் இடத்திற்கு அவர் அவளை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் சாம்பலாயிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார்.  அந்தப் புண்ணிய ஜலம் சாம்பல் மேடை நனைத்தவுடன் ஸகர புத்திரர்கள் பாபம் ஒழிந்து உத்தமலோகங்களை அடைந்தார்கள். 

அத தத்பஸ்மனாம் ராசிம் கங்கா ஸலில முத்தமம்
ப்லாவயத் தூதபாப்மான: ஸ்வர்க்கம் ப்ராப்தா ரகூத்தம (43)

கங்கை பகுதி 2:

கங்கை பூமியில் இறங்கிய இடம் ... தொடரும்...

“கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.“  
என்று புராணம் குறிப்பிடுகிறது.  
கங்கை என்ற நீர்த்தாரை யானது, பகீரதனின் முயற்சியால் இமயமலைக்கு வடக்கே தரையிறங்கி இருக்க வாய்ப்புகள் உள்ளன. 

கங்கை தரையிறங்கிய இடம் இப்போது டக்ளிமேகன்  பாலைவனம் -Taklamakan Desert என்று அழைக்கப்படுகிறது.
இடத்தின் மையப்புள்ளியானது தோராயமாக 39.144364, 82.833242


கங்கை பூமியில் இறங்கும்போது சாய்கோணத்தில் இறங்கிய காரணத்தினால்
பூமியைத் துளைத்துக் கொண்டு சென்ற இடம் நீள்வட்டமாக உள்ளது.


இதன் நீளம் சுமார் 900 கி.மீ.,  


அகலம் சுமார் 300 கி.மீ.


கங்கை பூமியில் இறங்கும்போது அதன் அகலம் சுமார் 300 கி.மீ. என்பதையும்,
அது சாய்மான கோணத்தில் சுமார் 900 கி.மீ. இருந்துள்ள காரணத்தையும் கருத்தில் கொண்டு அதன் கொள்ளவு என்னவாக இருந்திருக்கும் எனத் தோராயமாகக் கணக்கிடலாம்.

கங்கையின் கன அளவு (Volume) என்ன?
தொடரும்....

அன்பன்
கி.காளைராசன்

Singanenjam Sambandam

unread,
Jan 25, 2017, 2:01:22 AM1/25/17
to mint...@googlegroups.com
நல்ல கற்பனை......நல்ல கதை......பதிவிற்கு நன்றி. 

கங்கை ஒரு நதி ........அவ்வளவே. நதிகள் மாசுபடக்கூடாது என அறிந்திருந்த நம் முன்னோர் அதற்கு ஒரு “புனிதத்தன்மை”யை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் தற்போது கங்கை அந்த மதத்தாலேயே மாசு பட்டு கிடக்கிறது.

ஏரி குளம்  இவற்றிற்கு கன  அளவு சொல்லலாம்.....எப்போதும் பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கைக்கு எப்படி கனஅளவு சொல்வது. 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 25, 2017, 8:52:15 AM1/25/17
to mintamil, thiruppuvanam, Kalai Email

வணக்கம் ஐயா.

முன்பு வேறொரு இழையில் நண்பர் திரு. பானுகுமார் அவர்கள், "காளைராஜன் ஐயா, ஏதோ தனக்கு தோன்றியதை எழுதுகிறார். அதனால் மறுமொழி யளிக்கவில்லை. ஏனெனில் என்ன சொன்னாலும், அவர்
“மயக்கத்தில்” இருந்து வெளிவரமாட்டார். திரு.சிங்கநெஞ்சன் ஐயா, இவரிடம் பட்டபாடு நமக்கெல்லாம் தெரியும்தானே."
என்று எழுதியிருந்தார்.

நான் யாரையும் படுத்தி எடுக்கும் இயல்பினன் அல்லன். எனவே இது எனக்கு சற்று வருத்தமாக இருந்தது,
நான் நேரில் கண்டனவற்றையும், புராணங்களில் படித்தனவற்றையும் நான் உணர்ந்துகொண்ட வழியில் எழுதிப் பதிவு செய்கிறேன்.
அது தாங்கள் கற்ற கல்வியுடன் தொடர்புடையது என்பதால் தங்களிடம் விளக்கம் கேட்டு அறிந்துகொள்ள முயன்றுள்ளேன்.
மற்றபடி நண்பர் பானுகுமார் கூறியபடி யாரையும் "படுத்தி எடுப்பது " எனது நிலைப்பாடல்ல.

இந்த இழையும் புவியியல் தொடர்பாகப் புராணம் கூறும் கருத்தே ஆகும்.  இதிலும் எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன !

எனவே தாங்கள் அன்புள்ளம் கொண்டு, என்மீது மாறா அன்புபாராட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

On 25-Jan-2017 12:31 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>
> நல்ல கற்பனை......
அல்ல. புராணம்.

நல்ல கதை......
அல்ல.
டக்ளிமேகன்  பாலைவனம் -Taklamakan Desert  எவ்வாறு உண்டானது என விளக்கும் புராணம்.


>
> கங்கை ஒரு நதி ........அவ்வளவே.

இங்கு கங்கை என்று புராணம் குறிப்பிடுவது நதியை அல்ல, விண்ணில் இருந்து பூமிக்கு வந்த ஒரு நீர்த்தாரை ஆகும்.

>> இதன் நீளம் சுமார் 900 கி.மீ.,  
>>
>> ​

>> அகலம் சுமார் 300 கி.மீ.
>>
>> ​

>> கங்கை பூமியில் இறங்கும்போது அதன் அகலம் சுமார் 300 கி.மீ. என்பதையும்,
>> அது சாய்மான கோணத்தில் சுமார் 900 கி.மீ. இருந்துள்ள காரணத்தையும் கருத்தில் கொண்டு அதன் கொள்ளவு என்னவாக இருந்திருக்கும் எனத் தோராயமாகக் கணக்கிடலாம்.
>>
>> கங்கையின் கன அளவு (Volume) என்ன?
>> தொடரும்....
>>
>> அன்பன்
>> கி.காளைராசன்
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2017, 9:43:58 AM1/25/17
to mintamil, vallamai, tamilmantram, Kalairajan Krishnan, thiruppuvanam, Kalai Email
நண்பர் காளைராசன்,

///இங்கு கங்கை என்று புராணம் குறிப்பிடுவது நதியை அல்ல, விண்ணில் இருந்து பூமிக்கு வந்த ஒரு நீர்த்தாரை ஆகும்./////


இமயமலையில் தானாக இறங்கி ஓடிய கங்கை நதி, சென்ற இழையில் பனிநீர்க் கோளாக [Icy Water Planet] மாற்றப்பட்டு, இப்போது [நீர்த்தாரகை] நீர்த்தாரை [Water Star] என்று புதிய இழையில் ஒளி விண்மீனாக உருமாறி விட்டது பெரு விந்தையாக உள்ளது.

சி. ஜெயபாரதன்



>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 25, 2017, 10:36:04 AM1/25/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, January 25, 2017 at 6:43:58 AM UTC-8, jayabarathans wrote:
நண்பர் காளைராசன்,

///இங்கு கங்கை என்று புராணம் குறிப்பிடுவது நதியை அல்ல, விண்ணில் இருந்து பூமிக்கு வந்த ஒரு நீர்த்தாரை ஆகும்./////


இமயமலையில் தானாக இறங்கி ஓடிய கங்கை நதி, சென்ற இழையில் பனிநீர்க் கோளாக [Icy Water Planet] மாற்றப்பட்டு, இப்போது [நீர்த்தாரகை] நீர்த்தாரை [Water Star] என்று புதிய இழையில் ஒளி விண்மீனாக உருமாறி விட்டது பெரு விந்தையாக உள்ளது.

சி. ஜெயபாரதன்


ஆமாம். 

நா. கணேசன்
 


>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 25, 2017, 12:52:16 PM1/25/17
to mintamil, thiruppuvanam, Kalai Email

> இதன் நீளம் சுமார் 900 கி.மீ.,  
>
> ​

> அகலம் சுமார் 300 கி.மீ.
>
> ​

> கங்கை பூமியில் இறங்கும்போது அதன் அகலம் சுமார் 300 கி.மீ. என்பதையும்,
> அது சாய்மான கோணத்தில் சுமார் 900 கி.மீ. இருந்துள்ள காரணத்தையும் கருத்தில் கொண்டு அதன் கொள்ளவு என்னவாக இருந்திருக்கும் எனத் தோராயமாகக் கணக்கிடலாம்.
>

>
(குறிப்பு : படங்களையும், கணக்கீடுகளையும் என்னால் இங்கே முறையாக இணைக்க இயலவில்லை,  எனவே இதன் முழு வடிவத்தைத் தனியே இணைத்துள்ளேன். அன்பர்கள் இணைப்பில் உள்ள படத்துடன் கூடிய கட்டுரையைப் படித்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் )

கங்கையின் கொள்ளவு காணுதல் :

“கங்கை விண்ணிலிருந்து சிவனுடைய ஜடாமுடியிலும், அங்கிருந்து பூமியிலும் விழுந்தது.  அப்போது அது எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசதம் மேகங்கள் இல்லாமல் ஜொலித்தன.  அது மின்னல் பாய்வது போலிந்தது.“ என்கிறது புராணம்.  கங்கை எவ்வாறு இறங்கியது என்ற மேற்கண்ட புராண வர்ணிப்பு கீழ்க்காணும் ‘நாசா‘வின் படத்துக்கு இயைபு உடையதாக உள்ளது.

மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று, கங்கையும் விண்விண்ணிலிருந்து பூமியில் இறங்கும் போது அதன் வால்பகுதி நீண்டிருக்க வேண்டும் என யூகிக்க வேண்டியுள்ளது.
கங்கையின் விட்டம் : பூமியில் மிகவும் வேகமாக இறங்கிய காரணத்தினால், அது பூமியில் இறங்கிய இடத்தில் அதனளவிற்கு ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி யிருக்க வேண்டும்.  ஒரு தடையை வேகமாகத் துளைத்துச் செல்லும் துப்பாக்கிக் குண்டு அதனுடைய விட்டத்தின் அளவிற்குத் துவாரத்தை ஏற்படுத்தி விடும்.  அது போல் கங்கை பூமியில் இறங்கிய இடத்திலும் கங்கையின் அகலத்திற்குச் சம்மான விட்டத்தை உடைய பள்ளதை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  கங்கை பூமியில் இறங்கிய இடமாக நான் கருதும் டக்ளிமேகன் பாலைவனத்தில் (Taklamakan Desert) விட்டமானது  சற்றொப்ப 366 கி.மீ. முதல் 400 கி.மீ.க்குள் உள்ளது.  இதனால் கங்கையின் பூமியில் சுமார் 366 கி.மீ. முதல் 400 கி.மீ. விட்டமும் ஒரு நீண்ட வாலையும் உடைய நீர்க்கோளாக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.
கங்கையின் உயரம் : கங்கையின் விட்டத்தை டக்ளிமேகன் பாலைவனத்தின் அகலத்தைக் கொண்டு கணக்கிடுவது போல, டக்ளிமேகன் பாலைவனத்தின் நீளம் சுமார் 900 கி.மீ. முதல் 1000 கி.மீ. உரை உள்ளது.  எனவே கங்கையின் விட்டமும் அதன் உயரமும் சற்றொப்ப 3 அல்லது 4 விகிதத்தில் இருந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.
இதனடிப்படையில் கங்கையின் கொள்ளவு என்னவாக இருக்கலாம் என உத்தேசமான கணக்கைக் கீழே இணைத்துள்ளேன்.
கங்கையின் குறைந்தபட்ச பருமனைக் கணக்கிடுதல் : டக்ளிமேகன் பாலைவனத்தின் குறைந்த பட்ச அகலம் சுமார் 360 கி.மீ. என்றும் அதன் நீளம் 900 கி.மீ. என்றும் உள்ளது. எனவே, கங்கையின் குறைந்தபட்ச அகலம் சுமார் 360 கி.மீ. என்றும் அதன் உயரம் (அகலத்தைப் போன்று மூன்று மடங்கு) எனக் கொண்டால், கங்கையின் குறைந்தபட்ச பருமன் சுமார் 90,660,751 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும்.
கங்கையின் உயர்ந்த பட்ச பருமனைக் கணக்கிடுதல் : டக்ளிமேகன் பாலைவனத்தின் குறைந்த பட்ச அகலம் சுமார் 420 கி.மீ. என்றும் அதன் அதிகபட்ச நீளம் 1680 கி.மீ. என்றும் (அகலத்தைப் போன்று நான்கு மடங்கு) எனக் கொண்டால், கங்கையின் அதிகபட்ச பருமன் சுமார் 90,660,751க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும்.

calculation of volume of Ganga

dia km
height/dia ratio
height  k.m.
semi sphere  volume = sphere V./2 =( (1/6)*(3.17)*((d)*(d)*(d)))/2
Parabolic cone shape  volume =  semi sphere V + cone V = (((2)*(3.17)*(d)*(h))/15)
elliptical cone shape volume = semi sphere V + elliptical V = (((3.17)*(d)*(d)*(h))/6)

 
 
 
 
 
 

300
1
300
7,132,500
18,544,500
21,397,500

300
2
600
7,132,500
29,956,500
35,662,500

300
3
900
7,132,500
41,368,500
49,927,500

300
4
1,200
7,132,500
52,780,500
64,192,500

300
5
1,500
7,132,500
64,192,500
78,457,500

 
 
 
0
0
0

366
1
366
12,951,536
33,673,993
38,854,608

366
2
732
12,951,536
54,396,451
64,757,679

366
3
1,098
12,951,536
75,118,908
90,660,751

366
4
1,464
12,951,536
95,841,365
116,563,823

366
5
1,830
12,951,536
116,563,823
142,466,894

 
 
 
0
0
0

420
1
420
19,571,580
50,886,108
58,714,740

420
2
840
19,571,580
82,200,636
97,857,900

420
3
1,260
19,571,580
113,515,164
137,001,060

420
4
1,680
19,571,580
144,829,692
176,144,220

420
5
2,100
19,571,580
176,144,220
215,287,380

கங்கையின் உத்தேசமான கனஅளவு : மேற்கண்ட உத்தேசமான கணக்கீட்டின் அடிப்படையில் கங்கையானது பூமியில் இறங்கிய காரணத்தினால் குறைந்தது 90,660,751 க.ச.கி.மீ. அளவோ அல்லது அதிகபட்சமாக 176,144,220 க.ச.கி.மீ. அளவிலான நீரும் சேறும் சகதியும் பூமியில் கூடுதலாகச் சேர்ந்து இருக்க வேண்டும். (This is a calculation of a layman; scientists can derive the exact dia and height and calculate the volume very accurately)

கங்கையின் கொள்ளவு volume.pdf
கங்கையின் கொள்ளவு volume.docx

தேமொழி

unread,
Jan 25, 2017, 1:43:22 PM1/25/17
to மின்தமிழ்


On Wednesday, January 25, 2017 at 9:52:16 AM UTC-8, kalai wrote:


கங்கையின் கொள்ளவு காணுதல் :

“கங்கை விண்ணிலிருந்து சிவனுடைய ஜடாமுடியிலும், அங்கிருந்து பூமியிலும் விழுந்தது.  அப்போது அது எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசதம் மேகங்கள் இல்லாமல் ஜொலித்தன.  அது மின்னல் பாய்வது போலிந்தது.“ என்கிறது புராணம்.  கங்கை எவ்வாறு இறங்கியது என்ற மேற்கண்ட புராண வர்ணிப்பு கீழ்க்காணும் ‘நாசா‘வின் படத்துக்கு இயைபு உடையதாக உள்ளது.

மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று, கங்கையும் விண்விண்ணிலிருந்து பூமியில் இறங்கும் போது அதன் வால்பகுதி நீண்டிருக்க வேண்டும் என யூகிக்க வேண்டியுள்ளது.


விண்ணிலிருந்து >>>  முதலில் சிவனுடைய ஜடாமுடிக்கு  >>>  பிறகு மண்ணிற்கு கங்கை நீர்க்கோளாக வந்தது  என்று சொல்கிறீர்கள் எனப் புரிகிறது.

விண் = Outer space எனப் புரிகிறது 
சிவனுடைய ஜடாமுடி = இது  விண்ணிலிருந்து கங்கை மண்ணிற்கு  வரும் வழியில் இடையில்  எங்கிருக்கிறது என்று சொல்லவில்லையே 

 

கங்கையின் விட்டம் : பூமியில் மிகவும் வேகமாக இறங்கிய காரணத்தினால், அது பூமியில் இறங்கிய இடத்தில் அதனளவிற்கு ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். 


சென்றமுறை விமானம் போல மெதுவாக தரையில் இறக்கப்பட்டதாக  எழுதியிருந்தீர்கள் 
ஆக, நீருடன் சேறும், சகதியும் கொண்ட,
உத்தேசமாக  400 கி.மீ. விட்டமும்  அதைப் போன்று நான்குமடங்கு அளவிற்கு  நீண்டிருந்த  வால்பகுதியும் கொண்ட ஒரு நீர்க்கோளாகக் ஆகாய கங்கையைக் காண்கிறீர்கள் என்றும் புரிகிறது. 
இந்த சேறும் சகதியும் பாலைவனமாக மாறியது என்றால்   டக்ளிமேகன் பாலைவன மணலை Outer space இல் இருந்து கிடைத்தது என்ற முறையில்  நாம் தீவிர  ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியத்  தேவை இருக்கிறது. 

..... தேமொழி 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 25, 2017, 2:53:21 PM1/25/17
to vallamai, tamilmantram, மின்தமிழ், vannan vannan, Oru Arizonan

நண்பர் காளைராசன்,


////“கங்கை விண்ணிலிருந்து சிவனுடைய ஜடாமுடியிலும், அங்கிருந்து பூமியிலும் விழுந்தது.  அப்போது அது எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசதம் மேகங்கள் இல்லாமல் ஜொலித்தன.  அது மின்னல் பாய்வது போலிந்தது.“ என்கிறது புராணம்.  கங்கை எவ்வாறு இறங்கியது என்ற மேற்கண்ட புராண வர்ணிப்பு கீழ்க்காணும் ‘நாசா‘வின் படத்துக்கு இயைபு உடையதாக உள்ளது.

மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று, கங்கையும் விண்விண்ணிலிருந்து பூமியில் இறங்கும் போது அதன் வால்பகுதி நீண்டிருக்க வேண்டும் என யூகிக்க வேண்டியுள்ளது. ////


[வெள்ளி] சுக்கிரன் கோள் [Venus], பூத வாயுக் கோள் வியாழன் [Jupiter] சூரிய ஒளிபட்டு வானில் மின்னுகின்றன.  ஆனால் அவற்றுக்குச் சுயவொளி இல்லை.  மின்னுவதெல்லாம் பொன்னல்ல.  மின்னுவதெல்லாம் விண்மீன்கள் அல்ல.  கங்கை என்னும் நீர்த்தாரையை விண்மீன் என்று எப்படி விளக்கமுடியும் ?

வால்பகுதி நீள்வது வால்மீன் ஒன்றுக்கு மட்டுமே நேர்வது, அதுவும் சூரியனை நெருங்கும் போது.  கங்கை என்னும் நீர்த்தாரைக்கு எப்படி வால்நீளும் பூமியை நெருங்கும் போது ?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 26, 2017, 12:42:43 PM1/26/17
to mintamil
வணக்கம்.

2017-01-26 0:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, January 25, 2017 at 9:52:16 AM UTC-8, kalai wrote:


கங்கையின் கொள்ளவு காணுதல் :

“கங்கை விண்ணிலிருந்து சிவனுடைய ஜடாமுடியிலும், அங்கிருந்து பூமியிலும் விழுந்தது.  அப்போது அது எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசதம் மேகங்கள் இல்லாமல் ஜொலித்தன.  அது மின்னல் பாய்வது போலிந்தது.“ என்கிறது புராணம்.  கங்கை எவ்வாறு இறங்கியது என்ற மேற்கண்ட புராண வர்ணிப்பு கீழ்க்காணும் ‘நாசா‘வின் படத்துக்கு இயைபு உடையதாக உள்ளது.

மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று, கங்கையும் விண்விண்ணிலிருந்து பூமியில் இறங்கும் போது அதன் வால்பகுதி நீண்டிருக்க வேண்டும் என யூகிக்க வேண்டியுள்ளது.


விண்ணிலிருந்து >>>  முதலில் சிவனுடைய ஜடாமுடிக்கு  >>>  பிறகு மண்ணிற்கு கங்கை நீர்க்கோளாக வந்தது  என்று சொல்கிறீர்கள் எனப் புரிகிறது.

விண் = Outer space எனப் புரிகிறது 
சிவனுடைய ஜடாமுடி = இது  விண்ணிலிருந்து கங்கை மண்ணிற்கு  வரும் வழியில் இடையில்  எங்கிருக்கிறது என்று சொல்லவில்லையே .
சிவனுடைய ஜடாமுடி சிவனது தலையில் உள்ளது.
சிவன் எங்கே நின்றிருந்தார்? 
பகீரதனின் வேண்டுகோளை ஏற்றுச் சிவபெருமான் வருகிறார். கங்கை பூமியில் இறங்குவதை வேடிக்கை பார்க்க தேவ, ரிஷி, தைத்ய, தானவ, ராக்ஷஸ, கந்தவர்வ, யக்ஷ, கின்னர, உரக, அப்ஸரஸ் கணங்கள்  எல்லாம் வருகின்றனர்.  இவர்கள் எல்லாம் நின்றிருந்தனர்? என்ற குறிப்பு நான் படித்த புராணக்கதையில் இல்லை. 

ஆனால் திருக்கைலாயத்தைச் சிவபெருமானாக வழிபடுகின்ற காரணத்தினால், இயமயத்தில் சிவனின் இருப்பிடமாகத் திருக்கைலாயம் இருக்கும் இடத்தைக் கருதலாம் என்பது எனது கருத்து.

கங்கையின் விட்டம் : பூமியில் மிகவும் வேகமாக இறங்கிய காரணத்தினால், அது பூமியில் இறங்கிய இடத்தில் அதனளவிற்கு ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். 


சென்றமுறை விமானம் போல மெதுவாக தரையில் இறக்கப்பட்டதாக  எழுதியிருந்தீர்கள் 
ஆமாம்.
Angle தரையிறங்கு கோணம்
கங்கையானது ஒரு விமானம் தரையிறங்குவதைப் போல, ஒரு சாய்மான கோணத்தில் slanting angle பூமியில் இறக்கப்பட்டுள்ளது.

Speed வேகம்
விண்ணிலிருந்து மிதமிஞ்சிய வேகத்துடன் வந்த கங்கையாது ஜடாமுடியில் இறங்கியதால் வேகம் குறைந்து, அதன்பின்னர் பூமியில் இறங்கியுள்ளது. அதாவது பூமியே உடைந்து சிதறும் அளவிற்கான கங்கையின் மிதமிஞ்சிய வேகம் ஜடாமுடியில் தணிந்து, பூமியில் துளையிடும் அளவிற்குக் குறைந்து விட்டது.
 
 

ஒரு தடையை வேகமாகத் துளைத்துச் செல்லும் துப்பாக்கிக் குண்டு அதனுடைய விட்டத்தின் அளவிற்குத் துவாரத்தை ஏற்படுத்தி விடும்.  அது போல் கங்கை பூமியில் இறங்கிய இடத்திலும் கங்கையின் அகலத்திற்குச் சம்மான விட்டத்தை உடைய பள்ளதை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  கங்கை பூமியில் இறங்கிய இடமாக நான் கருதும் டக்ளிமேகன் பாலைவனத்தில் (Taklamakan Desert) விட்டமானது  சற்றொப்ப 366 கி.மீ. முதல் 400 கி.மீ.க்குள் உள்ளது.  இதனால் கங்கையின் பூமியில் சுமார் 366 கி.மீ. முதல் 400 கி.மீ. விட்டமும் ஒரு நீண்ட வாலையும் உடைய நீர்க்கோளாக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.
கங்கையின் உயரம் : கங்கையின் விட்டத்தை டக்ளிமேகன் பாலைவனத்தின் அகலத்தைக் கொண்டு கணக்கிடுவது போல, டக்ளிமேகன் பாலைவனத்தின் நீளம் சுமார் 900 கி.மீ. முதல் 1000 கி.மீ. உரை உள்ளது.  எனவே கங்கையின் விட்டமும் அதன் உயரமும் சற்றொப்ப 3 அல்லது 4 விகிதத்தில் இருந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.
இதனடிப்படையில் கங்கையின் கொள்ளவு என்னவாக இருக்கலாம் என உத்தேசமான கணக்கைக் கீழே இணைத்துள்ளேன்.
கங்கையின் குறைந்தபட்ச பருமனைக் கணக்கிடுதல் : டக்ளிமேகன் பாலைவனத்தின் குறைந்த பட்ச அகலம் சுமார் 360 கி.மீ. என்றும் அதன் நீளம் 900 கி.மீ. என்றும் உள்ளது. எனவே, கங்கையின் குறைந்தபட்ச அகலம் சுமார் 360 கி.மீ. என்றும் அதன் உயரம் (அகலத்தைப் போன்று மூன்று மடங்கு) எனக் கொண்டால், கங்கையின் குறைந்தபட்ச பருமன் சுமார் 90,660,751 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும்.
கங்கையின் உயர்ந்த பட்ச பருமனைக் கணக்கிடுதல் : டக்ளிமேகன் பாலைவனத்தின் குறைந்த பட்ச அகலம் சுமார் 420 கி.மீ. என்றும் அதன் அதிகபட்ச நீளம் 1680 கி.மீ. என்றும் (அகலத்தைப் போன்று நான்கு மடங்கு) எனக் கொண்டால், கங்கையின் அதிகபட்ச பருமன் சுமார் 90,660,751க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும்.

கங்கையின் உத்தேசமான கனஅளவு : மேற்கண்ட உத்தேசமான கணக்கீட்டின் அடிப்படையில் கங்கையானது பூமியில் இறங்கிய காரணத்தினால் குறைந்தது 90,660,751 க.ச.கி.மீ. அளவோ அல்லது அதிகபட்சமாக 176,144,220 க.ச.கி.மீ. அளவிலான நீரும் சேறும் சகதியும் பூமியில் கூடுதலாகச் சேர்ந்து இருக்க வேண்டும். (This is a calculation of a layman; scientists can derive the exact dia and height and calculate the volume very accurately) 


ஆக, நீருடன் சேறும், சகதியும் கொண்ட,
உத்தேசமாக  400 கி.மீ. விட்டமும்  அதைப் போன்று நான்குமடங்கு அளவிற்கு  நீண்டிருந்த  வால்பகுதியும் கொண்ட ஒரு நீர்க்கோளாகக் ஆகாய கங்கையைக் காண்கிறீர்கள் என்றும் புரிகிறது. 
இந்த சேறும் சகதியும் பாலைவனமாக மாறியது என்றால்   டக்ளிமேகன் பாலைவன மணலை Outer space இல் இருந்து கிடைத்தது என்ற முறையில்  நாம் தீவிர  ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியத்  தேவை இருக்கிறது. 

ஆமாம்.
குறிப்பாக இமயத்தின் மீது பனி படிந்துள்ள இடங்களில் உள்ள  மணல்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 

தற்போது பாலைவனம் உள்ள அந்த இடத்தில் கங்கை இறங்குவதற்கு முன் இருந்த மணலும் சேர்ந்திருக்கும்.  
எனவே எல்லா மணல்களும் வேற்றுகிரக மணல்களாக இருக்க வாய்ப்பில்லை.  வேற்றுகிரக (கங்கை) மணலும் பூமியில் முன்பே இருந்த மணலும் சேர்ந்து கலவையாக இருக்கலாம் என நம்புகிறேன். 
குறிப்பாகப் பாலைவனத்தின் அருகில் உள்ள குன்றுகளின் பாறை இடுக்குகளில் உள்ள மணல்களைத் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  அவைகளில் வேற்றுகிரக (கங்கை) எச்சங்கள் படிந்திருக்க மிகுந்த வாய்ப்புகள் உண்டு.

பாலைவனத்தில் மணல்கள் எவ்வளவு ஆழம்வரை உள்ளன? அந்த இடத்தில் ஆழம் எவ்வளவு? மிகப்பெரிய துளையை மண் மூடியுள்ளதா? எனவும் ஆராயப்பட வேண்டும்.

அன்பன்
கி. காளைராசன்


நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 26, 2017, 1:01:21 PM1/26/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, Kalai Email, thiruppuvanam, Au1 Udayaganesan
வணக்கம் ஐயா.


2017-01-26 1:22 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

நண்பர் காளைராசன்,


////“கங்கை விண்ணிலிருந்து சிவனுடைய ஜடாமுடியிலும், அங்கிருந்து பூமியிலும் விழுந்தது.  அப்போது அது எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசதம் மேகங்கள் இல்லாமல் ஜொலித்தன.  அது மின்னல் பாய்வது போலிந்தது.“ என்கிறது புராணம்.  கங்கை எவ்வாறு இறங்கியது என்ற மேற்கண்ட புராண வர்ணிப்பு கீழ்க்காணும் ‘நாசா‘வின் படத்துக்கு இயைபு உடையதாக உள்ளது.

மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று, கங்கையும் விண்விண்ணிலிருந்து பூமியில் இறங்கும் போது அதன் வால்பகுதி நீண்டிருக்க வேண்டும் என யூகிக்க வேண்டியுள்ளது. ////


[வெள்ளி] சுக்கிரன் கோள் [Venus], பூத வாயுக் கோள் வியாழன் [Jupiter] சூரிய ஒளிபட்டு வானில் மின்னுகின்றன.  ஆனால் அவற்றுக்குச் சுயவொளி இல்லை.  மின்னுவதெல்லாம் பொன்னல்ல.  மின்னுவதெல்லாம் விண்மீன்கள் அல்ல.  கங்கை என்னும் நீர்த்தாரையை விண்மீன் என்று எப்படி விளக்கமுடியும் ?

விண்ணிலிருந்து இறங்கிய காரணத்தினால் அதை விண்மீன் என்று நினைக்கிறேன் ஐயா. 
மேலும், “ எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ஜ்வலித்தது.“ என்று கூறப்பட்டுள்ளதால்,  கங்கை பூமியின் வாயுமண்டத்தினுள் நுழையும் போது ஜ்வாலைகள் தோன்றியுள்ளன எனவும் கருவேண்டியுள்ளது.
புராணங்கள் விவரித்துள்ள படி கங்கைக்கான technical name எனக்குத் தெரியவில்லை. எனவே எனக்குத் தெரிந்த சொற்களால் எடுத்துக் கூறி வருகிறேன் ஐயா.

வால்பகுதி நீள்வது வால்மீன் ஒன்றுக்கு மட்டுமே நேர்வது, அதுவும் சூரியனை நெருங்கும் போது.  கங்கை என்னும் நீர்த்தாரைக்கு எப்படி வால்நீளும் பூமியை நெருங்கும் போது ?

சூரியனது ஈர்ப்பு விசையால் விண்மீனின் வால் நீண்டு விடுவது போன்று,
பூமியால் ஈர்க்கப்பட்ட கங்கையின் வாலும் நீண்டு இருக்க வேண்டும்.  மேலும் கங்கையானது ஒரு கடினமான பாறையாக இல்லாமல் நீர்சேர்ந்ததாக இருக்கின்ற காரணத்தினால், கங்கையின் வால்பகுதியானது பூமியின் ஈர்ப்பு விசையில் நீண்டு இருக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கருதுகிறேன் ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 26, 2017, 1:05:59 PM1/26/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Au1 Udayaganesan
2017-01-25 6:34 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  
“என் வேகத்தைத் தாங்கக் கூடியவர்களுமுண்டோ, இந்த சங்கரனையும் அடித்துக் கொண்டு பாதாளத்திற்குப் போவேன்“ என்றாள்.  அவளுடைய கர்வத்தை அறிந்து ருத்ரன் கோபங்கொண்டு அவளை மறைக்க நினைத்தார்.  அவருடைய புண்ணியமான சிரஸில் விழுந்தவுடன் ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள். 

கங்கை பாதாள உலகத்திற்கு எவ்வாறு சென்றாள்?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 27, 2017, 9:03:31 AM1/27/17
to mintamil

வணக்கம்.

Advertisement

Become a member

Renew my subscription 

Sign up for newsletters

AuthorsMembersLibrariansAdvertisers

HomeRecent VideosLatest PodcastsPhoto GalleriesDance Your Ph.D. ContestData Stories ContestNewsLatest NewsScienceInsiderScienceShotsSifterFrom the MagazineAbout NewsQuizzesJournalsScienceScience AdvancesScience ImmunologyScience RoboticsScience SignalingScience Translational MedicineTopicsAll TopicsSpecial IssuesCustom PublishingCareersArticlesFind JobsCareer ResourcesForumFor EmployersEmployer ProfilesGraduate ProgramsBookletsCareers FeaturesAbout Careers

Share on facebook Share on twitter Share on reddit Share on linkedin 

Runoff from irrigated fields and river beds in China’s Taklamakan desert has pumped nearly 20 billion tons of carbon into underground aquifers there.

Yan Li

Carbon tomb buried deep under Chinese desert

By Catherine MatacicAug. 5, 2015 , 4:00 PM

China’s Taklamakan desert—a windswept landscape of sand dunes and dried-out riverbeds—has been called the place where “you can go in, but you can’t come out.” That saying might apply to more than just people. Carbon—as much as 20 billion tons—has found its final resting place in aquifers hundreds of meters beneath the shifting sands there, according to a new study. The findings may extend to other deserts around the world, shedding light on a long-standing mystery about where the ....

http://www.sciencemag.org/news/2015/08/carbon-tomb-buried-deep-under-chinese-desert

அன்பன்
கி. காளைராசன்

> --

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 17, 2017, 6:47:01 AM2/17/17
to mintamil, thiruppuvanam, Kalai Email
வணக்கம்.
2017-01-27 19:33 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

Runoff from irrigated fields and river beds in China’s Taklamakan desert has pumped nearly 20 billion tons of carbon into underground aquifers there.

Yan Li

டக்ளிமேகன் பாலைவனத்தின் அடியில் 28 பில்லியன் அளவுள்ள கரி படிந்துள்ளதான செய்தி இது.
இது இந்தப் பாலைவன இடத்தில்தால் விண்ணிலிருந்து கங்கை என்ற விண்ணீர் வியனுலகு இறங்கியுள்ளது என்ற கருத்திற்கு இயைபு உடையதாக இருக்கிறது.

அன்பன்
கி.காளைராசன்

By Catherine MatacicAug. 5, 2015 , 4:00 PM

China’s Taklamakan desert—a windswept landscape of sand dunes and dried-out riverbeds—has been called the place where “you can go in, but you can’t come out.” That saying might apply to more than just people. Carbon—as much as 20 billion tons—has found its final resting place in aquifers hundreds of meters beneath the shifting sands there, according to a new study. The findings may extend to other deserts around the world, shedding light on a long-standing mystery about where the ....

http://www.sciencemag.org/news/2015/08/carbon-tomb-buried-deep-under-chinese-desert

அன்பன்
கி. காளைராசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 17, 2017, 8:25:25 AM2/17/17
to mintamil

On Fri, Feb 17, 2017 at 5:16 PM, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
டக்ளிமேகன் பாலைவனத்தின் அடியில் 28 பில்லியன் அளவுள்ள கரி படிந்துள்ளதான செய்தி இது.
இது இந்தப் பாலைவன இடத்தில்தால் விண்ணிலிருந்து கங்கை என்ற விண்ணீர் வியனுலகு இறங்கியுள்ளது என்ற கருத்திற்கு இயைபு உடையதாக இருக்கிறது.

பாலைவனத்தின் கீழ் கரி படிந்திருப்பதற்கும் கங்கையின் நீருக்கும் என்ன தொடர்பு?

கங்கை ஆறுதான் கரியாக மாறியிருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா.?

ஒன்னுமே புரியல உலகத்துலே. 🙄


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Singanenjam Sambandam

unread,
Feb 17, 2017, 11:30:25 AM2/17/17
to mint...@googlegroups.com
அன்பின் காளை அய்யா ............என்ன கருத்து  வேண்டுமானாலும் எழுதுங்கள் . காரண காரியம் இருந்தால் நன்றாக இருக்கும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 18, 2017, 11:14:28 AM2/18/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Au1 Udayaganesan, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram

வணக்கம்.
இந்தக் கட்டுரையில் கங்கை என்று நான் குறிப்பிடுவது கங்கை நதியை அல்ல.
பகீரதன் விண்ணிலிருந்து பூமிக்கு இறங்கிய கங்கையைக் குறிப்பிடுகிறேன்.
கங்கை விண்ணிலிருந்து பூமியில் இறங்கிய இடம்தான் இமயமலைக்கு வடக்கே தற்போது “டக்ளிமேகன்“ பாலைவனமாக உள்ளது என்று கருதுகிறேன்.
அந்தப் பாலைவனத்தின் ஒருகாலத்தில் ஆறுஓடியது என்றும், இங்கே பூமிக்குக் கீழே பாதாளத்தில் சுமார் 20பில்லியன் டன் அளவிலான கார்பன் படிந்துள்ளது எனக் கணக்கிட்டுள்ளனர்.http://www.sciencemag.org/news/2015/08/carbon-tomb-buried-deep-under-chinese-desert

இங்கே ஓடிய ஆற்று நீர் வற்றி இந்த இடம் பாலைவனமாக எவ்வாறு மாறியது?
இங்கே பூமிக்கு அடியில் இவ்வளவு அதிகமான carbon எவ்வாறு வந்தது?
என்பதற்கான கேள்விகளுக்குச் சரியான விடை இன்னும் கண்டறியப்பட வில்லை.

ஆனால், டக்ளிமேகன் பாலைவனம் தொடர்பான மேற்கண்ட இந்த அறிவியல் கருத்துக்களை, விண்ணிலிருந்து கங்கை பூமிக்கு இறங்கிய புராணக் கதையுடன் இணைத்து நோக்கினால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இயைபு உடையனவாக உள்ளன.

பாலைவனத்தில் ஆறாக ஓடியது விண்ணிலிருந்து இறங்கிய கங்கை நீர்தான் எனவும்,
பாலைவனத்தின் அடியில் படிந்துள்ள கரி (carbon) விண்ணிலிருந்து கங்கை பூமிக்கு இறங்கும்போது உண்டான வெப்பத்தினால் எரிந்த பொருட்களின் எச்சம் என்றும் நான் கருதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 18, 2017, 12:23:28 PM2/18/17
to mintamil, tamilmantram, vallamai, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Au1 Udayaganesan, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram
நண்பர் காளைராசன்,

///பாலைவனத்தில் ஆறாக ஓடியது விண்ணிலிருந்து இறங்கிய கங்கை நீர்தான் எனவும்,
பாலைவனத்தின் அடியில் படிந்துள்ள கரி (carbon) விண்ணிலிருந்து கங்கை பூமிக்கு இறங்கும்போது உண்டான வெப்பத்தினால் எரிந்த பொருட்களின் எச்சம் என்றும் நான் கருதுகிறேன்.////


விண்ணிலிருந்து கங்கை இறங்கினால் பூமியில் வெப்பம் எழாது. அப்படியானால் குற்றாலக் குன்றின் கீழ் பேரளவு மின்சக்தி உண்டாக்கலாம்.  மோதினால்தான் வெப்பம் எழும்.  28 பில்லியன் டன் அளவுள்ள கரி உண்டாகப் பிரளய வெடி ஏற்பட்டிருக்க வேண்டும; அங்கே அப்போது வெறும் சஹாராப் பாலைவனக் குழி உருவாகாது. பூமியே பிளந்து விடும்.  

உங்கள் அனுமானம் விஞ்ஞான நிகழ்ச்சியுமில்லை !  புராணச் சிந்தனையுமில்லை.

சி. ஜெயாரதன்


தேமொழி

unread,
Feb 18, 2017, 6:45:03 PM2/18/17
to மின்தமிழ்

On Saturday, February 18, 2017 at 8:14:28 AM UTC-8, kalai wrote:

பாலைவனத்தின் அடியில் படிந்துள்ள கரி (carbon) விண்ணிலிருந்து கங்கை பூமிக்கு இறங்கும்போது உண்டான வெப்பத்தினால் எரிந்த பொருட்களின் எச்சம் என்றும் நான் கருதுகிறேன்.


வெந்நீர் மழையா? அதனால் பாலைவனம் உருவானதா?

https://youtu.be/gty0Fp0XZdY?t=2h6m30s


..... தேமொழி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 19, 2017, 10:46:07 PM2/19/17
to mintamil

வணக்கம்.


On 19-Feb-2017 5:15 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> On Saturday, February 18, 2017 at 8:14:28 AM UTC-8, kalai wrote:
>
> பாலைவனத்தின் அடியில் படிந்துள்ள கரி (carbon) விண்ணிலிருந்து கங்கை பூமிக்கு இறங்கும்போது உண்டான வெப்பத்தினால் எரிந்த பொருட்களின் எச்சம் என்றும் நான் கருதுகிறேன்.
>
>
> வெந்நீர் மழையா? அதனால் பாலைவனம் உருவானதா?
>
> https://youtu.be/gty0Fp0XZdY?t=2h6m30s
>
>
> ..... தேமொழி

ஆகா, ஆகா.
370 டிகிரில் வேக வைத்தால் சாப்பிடுவதற்கு ஆள் இருக்கே. :) :)

>>> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>> > For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> > ---
>>> > You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>> > For more options, visit https://groups.google.com/d/optout.
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


> For more options, visit https://groups.google.com/d/optout.

My

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 19, 2017, 10:46:08 PM2/19/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Au1 Udayaganesan

வணக்கம் ஐயா.
விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது அதீதமான வெப்பம் உண்டாகி தீப்பற்றி எரிகின்றன.  அதுபோன்று கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தினால் அந்த நீர்க்கோளிலில் இருந்த எரியக்கூடிய மூலக்கூறுகள் எல்லாம் எரிந்து கரி carbon உண்டாகியிருக்கலாம் என்றும், இந்தக் கரியே 28 பில்லியன் டன் அளவில் டக்ளிமேகன் பாலைவனத்தின் அடியில் படிந்துள்ளது என்றும் கருதுகிறேன். பாலைவனத்தின் அடியில் இவ்வளவு கரி படிந்துள்ளதற்கான சரியான காரணத்தையும் அதன் வேதியல் தன்மையையும்  அறிவியல் அடிப்படையில் கண்டறியப்படும் வரை எனது இந்த யூகத்தை (Hypothesis-1) சரியென்றோ தவறு என்றோ எப்படிக் கொள்வது?
மேலும்,
டக்ளிமேகன் பாலைவனத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஏதும் இணையத்தில் நான் தேடிய அளவில் எனக்குக் கிடைக்க வில்லை!
கங்கை என்ற விண்ணீர்க்கோள் சாய்கோணத்தில் பூமியில் இறங்கியது என்ற கணிப்பின் அடிப்படையில் டக்ளிமேகன் பாலைவனத்தின் அடிப்பாகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யூகமாக (Hypothesis-2) வரைந்த படத்தை இணைத்துள்ளேன். டக்ளிமேகன் பாலைவனத்தின் குறுக்கு வெட்டுப்படம் அறிவியல் அடிப்படையில் கிடைக்கும் வரையில் எனது யூகத்தின் அடிப்படையில் வரையப்பட்டு இணைக்கப்பட்டுள்ள இந்தப் படம் சரியென்றோ தவறு என்றோ கூறவும் வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன் ஐயா.

டக்ளிமேகன் குறுக்குவெட்டுgif.GIF

சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2017, 12:12:09 AM2/20/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Au1 Udayaganesan
///கங்கை என்ற விண்ணீர்க்கோள் சாய்கோணத்தில் பூமியில் இறங்கியது////  

விண்ணீர்ப் பனிக்கோள் பூமியின் ஈர்ப்பு விசையில் இறங்குவது செங்குத்தாதாகத்தான் இருக்க முடியும்.  மோதினால் சாய்வாகத் தாக்கம் ஏற்படலாம்.

///விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது அதீதமான வெப்பம் உண்டாகி தீப்பற்றி எரிகின்றன.  அதுபோன்று கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தினால் அந்த நீர்க்கோளிலில் இருந்த எரியக்கூடிய மூலக்கூறுகள் எல்லாம் எரிந்து கரி carbon உண்டாகியிருக்கலாம் என்றும், இந்தக் கரியே 28 பில்லியன் டன் அளவில் டக்ளிமேகன் பாலைவனத்தின் அடியில் படிந்துள்ளது////

விண்கற்கள் தீப்பற்றித் தெறிக்கும் கனல் பொறிகளில் கல்யாணத்திற்கு அப்பளம் சுடலாம்.   28 பில்லியன் டன் கரி சமைக்க முடியாது.

சி. ஜெயபாரதன்   

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 22, 2017, 3:40:37 AM2/22/17
to mintamil
வணக்கம்.

https://www.youtube.com/watch?v=fsLGt1GjYys

இது உண்மையான படமா?

அன்பன்
கி.காளைராசன்

Singanenjam Sambandam

unread,
Feb 22, 2017, 5:15:49 AM2/22/17
to mint...@googlegroups.com
பெரும்பாலான கோணங்களில் பார்க்கும்  போது ஆர்டீசியன்  நீர் ஊற்று போல் தெரிகிறது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 22, 2017, 5:35:20 AM2/22/17
to mintamil
வணக்கம் ஐயா.

2017-02-22 15:45 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
பெரும்பாலான கோணங்களில் பார்க்கும்  போது ஆர்டீசியன்  நீர் ஊற்று போல் தெரிகிறது.
ஆமாம்.  
ஆர்டீசியன் ஊற்றை மனதிற் கொண்டு இதைப் பார்த்தால்அப்படித்தான் தெரிகிறது.  அருகில் நிற்பவர்கள் தலைக்கவசம் அணிந்திருப்பதும் இதை உறுதி செய்கிறது.
இது மிகப்பெரிய ஒரு தண்ணீர்க்குழாய் உடைப்பாகவோ அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேறும் ஆர்டீசியன் நீர் ஊற்றாகவோ இருக்க வேண்டும்.
விளக்கத்திற்கு நன்றி ஐயா.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2017, 11:43:29 AM2/22/17
to mintamil, Kalairajan Krishnan
இது மெய்யான படமாகத் தெரியவில்லை.  வானிலிருந்து கார்மேகம் நீர் மழையைக் கொட்டும். நீர்வீழ்ச்சியைக் கொட்டாது.  மிக்க உயரத்திலிருந்து பூமியில் விழும்போது ஏன் நீர்த்துளிகள் சிதறவில்லை ?  கீழுள்ள பள்ளம் ஏன் நிரம்பி வழியவில்லை ? பூமிக்கடியில் நீரோட்டம் எங்கே போகிறது ?

இது கம்பியூட்டர் வீடியோ மாஜிக்.

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Feb 25, 2017, 5:20:55 AM2/25/17
to மின்தமிழ், kalair...@gmail.com
பொய்...பித்தலாட்டம்
என விவரிக்கிறது இந்தப் பதிவு >>> http://www.snopes.com/togo-rain-mystery-video/

'Rain Falling in One Spot'
A video purportedly showing "mysterious rain" all falling in "one spot" doesn't show rain at all.

sources of water , water sources of well digging 
என்ற தலைப்பின் கீழ் உள்ள காணொளியை வைத்து ஏமாற்றும் முயற்சி

..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Feb 25, 2017, 9:55:52 AM2/25/17
to mintamil, vallamai, tamilmantram, Kalairajan Krishnan
இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு கல்லுப் பிள்ளையார் பால் குடித்ததாகப் படம் போட்டுக் காண்பித்து மக்களை ஏமாற்றினார்.

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 28, 2017, 12:09:50 PM2/28/17
to mintamil, Kalairajan Krishnan, துரை.ந.உ, vannan vannan, Oru Arizonan
நண்பர் துரை, 

கீழ்வரும் தவறான நீர்வீழ்ச்சி எத்தனை "வெட்டு, இணைப்பு" முறைகளால் பிறரை ஏமாற்றத் தயாரிக்கப்பட்டது என்று காட்டுங்கள்.


சி. ஜெயபாரதன்

​++++++++++++++​

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 20, 2017, 2:47:45 AM8/20/17
to Jay Jayabarathan, mintamil

வணக்கம் ஐயா.

On Tuesday, February 28, 2017, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:

>
> நண்பர் துரை, 
>
> கீழ்வரும் தவறான நீர்வீழ்ச்சி எத்தனை "வெட்டு, இணைப்பு" முறைகளால் பிறரை ஏமாற்றத் தயாரிக்கப்பட்டது என்று காட்டுங்கள்.
>
> https://www.youtube.com/watch?v=fsLGt1GjYys
>
> சி. ஜெயபாரதன்


அது பூமிக்கு அடியில் உள்ள தண்ணீர்க் குழாய் உடைப்பு எடுத்த காரணத்தால் உண்டானது.  மேலே உள்ள மேகத்துடன் இணைத்துப்படம் 2D எடுக்கப்பட்டுள்ளதால், மேகத்திலிருந்து தண்ணீர் கொட்டுவது போன்று காட்சி அளிக்கிறது. அவ்வளவே.

விண்ணிலிருத்து கங்கை இறங்கும் காட்சி ஒன்றை உருவாக்கும் போது இந்தப்படம் தேவைப்படலாம் எனக் கருதி இந்த இழையில் பதிவு செய்து வைத்துள்ளேன்.  மற்றபடி இதில் சிறப்பு ஏதும் இல்லை ஐயா.
 


>
>
> ​++++++++++++++​
>
>

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 20, 2017, 2:56:15 AM8/20/17
to mintamil, Jay Jayabarathan

.... முன்பு நீங்கள் இதுபோல் பூமியில் உப்புக்கடல் எப்படி உண்டானது என்பதற்கு கங்கை வெள்ளம் திபெத் பாலைவனப் பகுதில் கொட்டி கடல் வெள்ளம் நிரம்பியது என்று ஒரு புராணக் கதை சொன்னது நினைவில் உள்ளது ! ....


>
> சி. ஜெயபாரதன்

ஆமாம் ஐயா.
நான் கங்கை பற்றிச் சொல்ல வருவன.
 கங்கை என்று பெயர் உள்ளன இரண்டு. இவை வேறுவேறானவை.

1) கங்கை என்பது ஒரு ஆறு. இது வேறு.
2) கங்கை என்பது ஒரு பனிஉப்புநீர்க்கோள்.  இதுவேறு.  சேறும் சகதியும் நிறைந்தது. இதில் ஆமை முதலை சிம்சுமாரம் முதலானவை இருந்துள்ளன.
விண்ணில் ஓடிக் கொண்டிருந்த இதைப் பூமியில் இறக்கியுள்ளனர்.
இந்த கங்கை என்ற 
பனிஉப்புநீர்க்கோள் பூமியில் இறங்கிய இடம்  டக்கிளிமக்கான் பாலைவனமாக உள்ளது. இதில் இருந்த உப்பு நீரால் பூமியில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது.  கடல் உப்பாக மாறியுள்ளது.

அன்பன்
கி. காளைராசன்.

On 25-Jan-2017 6:34 AM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:

வணக்கம்.

கங்கை ஒரு நீர்த்தாரையாக விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிய புராணம்.


இதன் நீளம் சுமார் 900 கி.மீ.,  


அகலம் சுமார் 300 கி.மீ.


கங்கை பூமியில் இறங்கும்போது அதன் அகலம் சுமார் 300 கி.மீ. என்பதையும்,
அது சாய்மான கோணத்தில் சுமார் 900 கி.மீ. இருந்துள்ள காரணத்தையும் கருத்தில் கொண்டு அதன் கொள்ளவு என்னவாக இருந்திருக்கும் எனத் தோராயமாகக் கணக்கிடலாம்.

கங்கையின் கன அளவு (Volume) என்ன?
தொடரும்....

N D Logasundaram

unread,
Aug 20, 2017, 6:27:49 AM8/20/17
to mintamil
 சாதாரண சாலைகளுக்கு பூங்காக்களில் நடுவில்  வைக்கும் நீரூற்று  விழுந்த நீரே மீண்டும் மீண்டும் ஓடும் இல்லையெனில் அவ்வளவு நீரும் புறத்தே ஓடினால்  வெள்ளம் ஓ டாதா? 

பல ஆண்டுகளுக்கு குன் சென்னை தியாகராசா நகர் பேருந்து நிலையம் அருகு காவித்துணியினரின் பித்தலாட்ட சாகசங்களில் இப்படித்ன் தெரு ஓரத்தில் வைத்த பிள்ளையார் பால் குடிக்கின்றார் என புரளி கிளப்பி மக்களை ஏமற்ற நினைத்தது நினைவிற்கு வருகின்றது 

உஞ்சேனை மாகாளம் (UJJAIN ) அதனிலும் இதுபோல் ஏமாற்று வேலை இன்னமும் தினமும் காலை மா லை நடக்கின்றது  விக்கிரமாதித்தன் வணங்கிய காளி கோயில் எனக்கூறி அந்த காளிக்கு  சாராயம் படைக்கின்றனர் 
பக்தர்கள் வாங்கி வரும் (பூசாரிகளின் ஆட்களேதான் அதையும் விற்கமுடியும் என்பது ன்வேறு வாணிக கைபோக்கிரித்தனம்)  சாராயபட்டில்களி லிருந்து நாக்கு  வெளி நீட்டிய காளி  உ ருவ பொம்மைக்கு வாயில் சாராயத்தை ஊறினால் எ ப்படிக்  குடித்து விடுகின்றது எனக்கூறி பக்தர்கள் கண்முன்னேயே பின்பக்கம் வைத்துள்ள ஓர் கலையத்தில் இருந்து மீட்டு மீண்டும் வெளியே விற்பனைக்குச் செல்கின்றதும் தினமு ம்மக்களே காணும் படி நடக்கின்றதும் அறியாமையால்  மக்களை அடக்கி வைத்து தன ஊன் தன நிறுவனம் வளர்க்கும் கடைநிலை
மாஆஆஆ ஆ க்கள் வாழும் நாடு இநித்திய தேசீஇஇஇஇஇ யம் பேசும் இந்தியாவுக்குள்தான் இருக்கின்றது 

நூ த லோ சு
மயிலை
ஊ 

rnk

unread,
Aug 20, 2017, 11:56:31 AM8/20/17
to மின்தமிழ்
ujjain kalbhairav drinking (sucking) alcohol: https://www.youtube.com/watch?v=5ZbhOejhd-Y
rnk

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 20, 2017, 12:44:22 PM8/20/17
to mintamil, thiruppuvanam, Kalai Email
வணக்கம்.
கங்கை என்ற "விண்நீர் வியன் உலகை " நினைவு கூறும் பொதெல்லாம் உப்புஐஸ் பெட்டியில் வைத்து மீன் நண்டு இவைகளை  கொண்டு வந்து விற்கும் காட்சிகள் நினைவிற்கு வருகின்றன.


On Wednesday, January 25, 2017, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:

வணக்கம்.

கங்கை ஒரு நீர்த்தாரையாக விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிய புராணம்.

அன்பன்
கி.காளைராசன்

N D Logasundaram

unread,
Aug 20, 2017, 2:05:25 PM8/20/17
to mintamil
நீலகண்டன் நீங்ககட்டியபின்தான் அது பைரவன் கோயில் எனத் து தெரிந்தது நா ன் நேரில் 12 ஜோதி லிங்கத்தை
தலங்களிலும் வழிபாடு செய்தவன்  எங்களை  அழைத்துச் சென்ற சுற்றுலா நடத்துனர் நன்றாக நினைவில் உள்ளது விக்கிரமத்திதான் வணங்கிய காளி என்றுதான் காட்டினான் இது ஊரின் உள்ளே  இல்லை சற்று தள்ளி தூரத்தில் இருந்தது வஃனில்(**) தான் சென்றேன் நானோ என்னுடன் வந்த தமிழ் நாட்டினரோ சாராயத்தை வாங்கவில்லை என்ன அநியாயம் எனத்தான்  பேசிக்கொண்டார்கள் பழங்காலத்து  பச்சை நிற RECTANGULAR அவுன்சு கோடிட்ட CHEMIST கலந்து தரும் மருந்து பாட்டில்களில்தான் இந்த சாராயம் விற்றனர் நம் நாட்டில் அர்ச்சனைக்கு என விற்கும் தட்டில் அங்குள்ள மரபுப்படிபூசைக்கு  பயன்கொண்ட பொருட்களுடன் இந்த சாராய புட்டியும் ஆண்கள் பெண்கள் எடுத்துச் செல்லும் தட்டில் இருந்தன 




வேறு 
(**) வஃனில் // இது தவறாக தட்டிய பிழையுடையது இல்லை 
  வஃன் = van(இதன் விளக்கம் வேறு இடத்தில் தருவதுதா ன சரியானது)



நூ த லோ சு
மயிலை
ஊ 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 25, 2017, 2:43:47 AM8/25/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Au1 Udayaganesan

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 25, 2017, 3:16:52 AM8/25/17
to mint...@googlegroups.com, tamilmantram, vallamai, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Au1 Udayaganesan, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram, Jay Jayabarathan
நண்பர் காளைராசன் 
 நீங்கள் இதுபோல் பூமியில் உப்புக்கடல் எப்படி உண்டானது என்பதற்கு கங்கை வெள்ளம் திபெத் பாலைவனப் பகுதில் கொட்டி கடல் வெள்ளம் நிரம்பியது என்று ஒரு புராணக் கதை சொன்னது நினைவில் உள்ளது !

சி. ஜெயபாரதன்

வணக்கம் ஐயா.
கங்கை பற்றிய புராணக் கருத்துகளும் அறிவியலாளர்கள் கருத்தும் ஒன்றாய் உள்ளன.
ஆனால் பாலைவனத்தை ஆராய்ந்த அறிவியலாளர் கள் கங்கா புராணம் படிக்க வேண்டும்.  டக்ளிமெகான் பாலைவனம் குறித்த அறிவியல் புதிர்கள் அத்தனைக்கும் புராணத்தில் விடைகள் உள்ளன.

கங்கா புராணம் ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஆகும்.
தேசப்பற்று மிகுந்த சிறந்த பிரபஞ்சக்கட்டுரைகள் பல எழுதியுள்ள 
விஞ்ஞானியான தாங்களும்,
ஐயா சிங்கநெஞ்சம் முதற்றான புவியியல் வல்லுநர்களும் 
புராணத்தையும் பாலைவனத்தையும் 
ஆய்ந்தறிய வேண்டுகிறேன்.

அன்பன்
கி. காளைராசன்

MessageToEagle.com – Chinese scientists have accidentally discovered a huge hidden ocean underneath the Taklamakan Desert in northwest China.

The Taklamakan Desert and the Tarim basin – located in northwestern Xinjiang, China – is considered one of the driest places in the world.
The vast amount of salt water concealed underneath could equal 10 times the water found in all five of the Great Lakes in the US, researchers say.

Taklamakan desert in Xinjiang Uyghur Autonomous Region.
Taklamakan desert in Xinjiang Uyghur Autonomous Region.

“This is a terrifying amount of water,” said professor Li Yan, who led the study at the Chinese Academy of Sciences’ Xinjiang Institute of Ecology and Geography in Urumqi, the Xinjiang capital.

Takla makan desert
Taklamakan desert

“Never before have people dared to imagine so much water under the sand. Our definition of desert may have to change,” he told the South China Morning Post.

Takla Makan desert
It has long been suspected there’s a vast abundance of melt water from nearby, but the exact amount of it remained unknown.




S. Jayabarathan

unread,
Aug 25, 2017, 9:04:00 AM8/25/17
to Kalairajan Krishnan, mint...@googlegroups.com, tamilmantram, vallamai, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Au1 Udayaganesan, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram
நண்பர் காளைராசன்,


////கங்கை பற்றிய புராணக் கருத்துகளும் அறிவியலாளர்கள் கருத்தும் ஒன்றாய் உள்ளன.///

நிச்சயம் இல்லை

////ஆனால் பாலைவனத்தை ஆராய்ந்த அறிவியலாளர்கள் கங்கா புராணம் படிக்க வேண்டும்.  டக்ளிமெகான் பாலைவனம் குறித்த அறிவியல் புதிர்கள் அத்தனைக்கும் புராணத்தில் விடைகள் உள்ளன.

கங்கா புராணம் ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஆகும்.////

நிச்சயம் இல்லை

////தேசப்பற்று மிகுந்த சிறந்த பிரபஞ்சக்கட்டுரைகள் பல எழுதியுள்ள 
விஞ்ஞானியான தாங்களும்,
ஐயா சிங்கநெஞ்சம் முதற்றான புவியியல் வல்லுநர்களும் 
புராணத்தையும் பாலைவனத்தையும் 
ஆய்ந்தறிய வேண்டுகிறேன். ////

நான் விஞ்ஞானத் தேடலுக்குப் புதிய முறையில் முன்னோக்கிச் செல்ல விரும்புகிறேன். புராணத்தைப் படிக்கப் பின்னோக்கிச் செல்ல நேரமும் இல்லை;  விருப்பமும் இல்லை.

சி. ஜெயபாரதன்

Jaisankar Jaganathan

unread,
Aug 25, 2017, 9:12:56 AM8/25/17
to Vallamai, Kalairajan Krishnan, mint...@googlegroups.com, tamilmantram, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Au1 Udayaganesan, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram
கங்கை இமயமலையில் இருந்து வரும் பாதையை வெட்டியவர் பகீரதனாக இருக்கலாம் அல்லவா? காளைராசன் அவர்களே இப்படியும் சிந்திக்கலாம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 25, 2017, 10:14:51 AM8/25/17
to mintamil, Vallamai, tamilmantram, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Au1 Udayaganesan, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram
வணக்கம்.


On Friday, August 25, 2017, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
கங்கை இமயமலையில் இருந்து வரும் பாதையை வெட்டியவர் பகீரதனாக இருக்கலாம் அல்லவா? காளைராசன் அவர்களே இப்படியும் சிந்திக்கலாம்.

நான் கங்கை பற்றிச் சொல்ல வருவன.
 கங்கை என்று பெயர் உள்ளன இரண்டு. இவை வேறுவேறானவை.


1) கங்கை என்பது ஒரு ஆறு. இது வேறு.


2) கங்கை என்பது ஒரு பனிஉப்புநீர்க்கோள்.  இதுவேறு.  சேறும் சகதியும் நிறைந்தது. இதில் ஆமை முதலை சிம்சுமாரம் முதலானவை இருந்துள்ளன.

விண்ணில் ஓடிக் கொண்டிருந்த இதைப் பூமியில் இறக்கியுள்ளனர்.
இந்த கங்கை என்ற 

பனிஉப்புநீர்க்கோள் பூமியில் இறங்கிய இடம்  டக்ளிம்மேகன் பாலைவனமாக உள்ளது. இதில் இருந்த உப்பு நீரால் பூமியில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது.  கடல் உப்பாக மாறியுள்ளது.

நான் இந்த இழையில் கங்கை எனக் குறிப்படுவது கங்கை நதியை அல்ல.

அன்பன்

கி. காளைராசன்



 


--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 25, 2017, 10:19:04 AM8/25/17
to mintamil, tamilmantram, vallamai, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Au1 Udayaganesan, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram, Jay Jayabarathan
வணக்கம் ஐயா.

On Friday, August 25, 2017, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
நண்பர் காளைராசன்,

////தேசப்பற்று மிகுந்த சிறந்த பிரபஞ்சக்கட்டுரைகள் பல எழுதியுள்ள 
விஞ்ஞானியான தாங்களும்,
ஐயா சிங்கநெஞ்சம் முதற்றான புவியியல் வல்லுநர்களும் 
புராணத்தையும் பாலைவனத்தையும் 
ஆய்ந்தறிய வேண்டுகிறேன். ////

நான் விஞ்ஞானத் தேடலுக்குப் புதிய முறையில் முன்னோக்கிச் செல்ல விரும்புகிறேன். புராணத்தைப் படிக்கப் பின்னோக்கிச் செல்ல நேரமும் இல்லை;  விருப்பமும் இல்லை.

சி. ஜெயபாரதன்

நன்றி ஐயா.

S. Jayabarathan

unread,
Aug 25, 2017, 10:50:00 AM8/25/17
to mintamil, Vallamai, tamilmantram, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Au1 Udayaganesan, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram
நண்பர் காளைராசன்,

கங்கை என்னும் பெயரிலோ, அன்றி வேறு பெயரிலோ உப்புநீர்ப் பனிக்கோள் ஒன்று, விண்ணிலிருந்து புவியில் வீழ்ந்ததாக இதுவரை வானியல் விஞ்ஞானத்தில் நான் படித்ததில்லை. 

சுவைநீர் கொண்ட வால்மீன்கள் வீழ்ந்துள்ளன.  ஆனால் திபெத் பாலைவனம் மீதல்ல. 

சி. ஜெயபாரதன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 25, 2017, 12:40:18 PM8/25/17
to mintamil, vallamai, tamilmanram, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Au1 Udayaganesan, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram

வணக்கம்.

கங்கை ஒரு நீர்த்தாரையாக விண்ணிலிருந்து மண்ணிற்குஇறங்கிய புராணம்.

"ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரஸிலும் அங்கிருந்து பூமியிலும் விழுந்ததால் அந்த ஜலம் பயங்கரமான சப்தத்துடன் வந்தது.  மீன் ஆமை சிம்சுமாரம் முதலை முதலிய ஜல கூந்துக்கள்  அதில் துள்ளி விழுந்து கொண்டிருந்தபடியால் பூமி நன்றாக விளங்கிற்று. ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் ஆச்சரியத்தைப் பார்க்கத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள்நகரங்களைப் போன்ற விமானங்களிலும்  குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்தார்கள்.  அவர்களின் தேஹ காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தாலும் எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ""ஜ்வாலித்தது."". என்கிறது புராணம்.

கங்கை என்னும் பனிநீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தால் அதில் இருந்த எரியக்கூடிய வஸ்துகள்  ஜ்வாலித்து (எரிந்து) பூமியின் மேலே விழுந்தன.  இந்த ஜுவாலைகள் விழுந்த இடங்களில் இருந்த தாவரம் முதலான எரியக்கூடிய வஸ்துகள் எல்லாம் அதீத வெப்பத்தால் எரிந்து போயின. 
இதனால் கங்கை பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய இடத்திலிருந்து, அது பூமியில் விழுந்த டக்ளிமேகன் பாலைவனம் முடிய உள்ள இடம் எல்லாம்
ஜுவாலைகள் விழுந்த காரணத்தினால் பாலைவனமாக மாறியுள்ளன - என்பது எனது கருத்து.

கங்கை என்ற விண்ணீர் வியனுலகு பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய பாதையையும், அதனால் உண்டான
ஜுவாலைகள் விழுந்து பாலைவனமான பூமிப் பகுதியைக் காட்டும் படத்தை இணைத்துள்ளேன்.

அன்பன்
கி. காளைராசன்



1503290648696.png

N D Logasundaram

unread,
Aug 26, 2017, 4:03:32 PM8/26/17
to mintamil
உங்களுக்கு புராணங்களில் வரும் நிகழ்ச்சிகளை எல்லாம் புது விதமாக பார்க்கும் பார்வை உள்ளது இது ஓர் வகையில் அறிவுடைமையே நியூட்டன் மரத்திலிருந்து 
ஆப்பிள் விழு வதை பார்த்ததுபோல்.  ஆனால் நேரடி புலன் வழி உள்ளீடானது வரும் செய்திகளுக்கு தொடர்பு காரணம் பழுதில்லாமல் ஐயமில்லாமல் மனித மூளை வழி அல்லாமல் கருவி மூலமாக கிட்டுவதாக இருக்க வேண்டும்  
அப்போதுதான் முன்னறிவின் வழு அதாவது புத்தி வழி செல்லாமல் உள்ளதை உள்ளவரே காணமுடியும் 

நீங்கள் காணும் காட்சி படிக்கும் எழுத்தொலித்து காணும் படத்திலிடுந்து எழுந்தது . இவை  நேரடிபுலேன் வழி வந்தது அல்ல = நீங்களே உங்களின் இரு கண்ணால் கண்டது அல்ல படித்த வரிகளுக்கு பல பொருளகள் காட்சியாக முடியும் எனவே 
அவற்றை எல்லாம் நோன்றான் பின் ஒன்றாக ஆய்ந்து பார்த்துதான் இது மட்டுமல்ல எந்த கருத்தும் ஏர்க்கவேண்டும் இந்த வழியில் தன கருத்தினை  சரிபார்கும் செயகைதான் இந்த இடுகை என காட்டுவதாக நினைக்கின்றேன் 
அதேநேரம் தன கருத்தினை ஒதுக்கி வைத்து விட்டு மற்றவர்களின் கருத்தினையும் நடுவு நிலைமையில் நிறு ஆய்வு செய்ய வேண்டும் 

இந்த கங்கை எனும் ஓர் பொருள் ஆகாயத்திலித்து வந் ததற்குஇணையானது எதாவது உணடா வெறும் கற்பனை வழி ஏழு ந்த புராணங்களும் கூடாது ஏனெனிலவையும் ஒரு பொருளை எப்படி செய் திகள் மற்றவர்களை போய்ச்சேரும் என்பதுடன் பொய்யும் கலந்திருக்கும் 

நான் .......................>>>>>>>
மற்றதற்கு வ வைத்தவிடைபோல் இதனுக்கும் போனில் பேசலாம் 
உங்கள் என்ன என்ன 
என் எண் 9445140292





நூ த லோ சு
மயிலை
ஊ 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 27, 2017, 7:43:19 AM8/27/17
to mint...@googlegroups.com, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

On Sunday, August 27, 2017, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
உங்களுக்கு புராணங்களில் வரும் நிகழ்ச்சிகளை எல்லாம் புது விதமாக பார்க்கும் பார்வை உள்ளது 

நன்றி ஐயா.

நான் கண்ட காட்சிகளைப் படம் எடுத்து,  படக்காட்சியாகக்  (bioscope) காட்டிப் புராணப் பாடல் வரிகளைப் பாடி வருகிறேன்.
 

இது ஓர் வகையில் அறிவுடைமையே நியூட்டன் மரத்திலிருந்து 
ஆப்பிள் விழு வதை பார்த்ததுபோல்.  ஆனால் நேரடி புலன் வழி உள்ளீடானது வரும் செய்திகளுக்கு தொடர்பு காரணம் பழுதில்லாமல் ஐயமில்லாமல் மனித மூளை வழி அல்லாமல் கருவி மூலமாக கிட்டுவதாக இருக்க வேண்டும்  
மிகவும் சரி.
ஆனால் டக்ளிமேகன் பாலைவனத்தினை அறிவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
1) இந்தப் பாலைவனம் மற்றவை போலானது அல்ல.
2)ஆழமானது.
3) அதனுள்ளே அதிகமான கரி படிந்துள்ளது.
4) அதனுள்ளே உப்புநீர் உள்ளது.
5) அதனுள்ளே கடல் போன்ற அளவு நீர் தேங்கியுள்ளது.
எனக் கண்டறிந்துள்ளனர்.

இவை எப்படி நிகழ்ந்தன ?
என அவர்களிடம் விளக்கம் இல்லை !
Theory of the Earth புத்தகத்திலும் இல்லை !
ஆனால், விளக்கம் புராணத்தில் உள்ளது.

அப்போதுதான் முன்னறிவின் வழு அதாவது புத்தி வழி செல்லாமல் உள்ளதை உள்ளவரே காணமுடியும் 

நீங்கள் காணும் காட்சி படிக்கும் எழுத்தொலித்து காணும் படத்திலிடுந்து எழுந்தது . இவை  நேரடிபுலேன் வழி வந்தது அல்ல = நீங்களே உங்களின் இரு கண்ணால் கண்டது அல்ல படித்த வரிகளுக்கு பல பொருளகள் காட்சியாக முடியும் எனவே 
அவற்றை எல்லாம் நோன்றான் பின் ஒன்றாக ஆய்ந்து பார்த்துதான் இது மட்டுமல்ல எந்த கருத்தும் ஏர்க்கவேண்டும் இந்த வழியில் தன கருத்தினை  சரிபார்கும் செயகைதான் இந்த இடுகை என காட்டுவதாக நினைக்கின்றேன் 


ஐயா,
நான் புராணக் கட்டுரைகளை இணையத்தில் ஏற்ற வேண்டும் என வேண்டி நின்ற போது என் அன்னை மின்னாள் மின்தமிழைக் காட்டினாள்.  தாய் சொல்லைத் தட்டாமல் எனக்கு விளங்கிய வகையில் எழுதி வருகிறேன்.  

எனது பல்கலைக்கழகப் பணியில் இத்துறை சார்ந்த பன்னாட்டு அறிஞர்களை அறிவேன்.
சீனாவிலும் சப்பானில் பணியாற்றுவோரை அறிவேன்.
எனது கருத்துக்களை 400 பக்க அளவில் எழுதி, டக்ளிமேகன் பாலைவனத்தை ஆய்வு செய்த, செய்து வரும் அறிவியலாளர்களுக்கு அனுப்பி வைப்பேன்.


புராண வழியிலான எனது கருத்துகளை ஏற்பதும் ஏற்காததும் அவரவர்களுக்கானது என்று விட்டுவிடுவேன். 


அதேநேரம் தன கருத்தினை ஒதுக்கி வைத்து விட்டு மற்றவர்களின் கருத்தினையும் நடுவு நிலைமையில் நிறு ஆய்வு செய்ய வேண்டும் 

இந்த கங்கை எனும் ஓர் பொருள் ஆகாயத்திலித்து வந் ததற்குஇணையானது எதாவது உணடா வெறும் கற்பனை வழி ஏழு ந்த புராணங்களும் கூடாது ஏனெனிலவையும் ஒரு பொருளை எப்படி செய் திகள் மற்றவர்களை போய்ச்சேரும் என்பதுடன் பொய்யும் கலந்திருக்கும் 

நான் .......................>>>>>>>
மற்றதற்கு வ வைத்தவிடைபோல் இதனுக்கும் போனில் பேசலாம் 
உங்கள் என்ன என்ன 
என் எண் 9445140292
தங்களது அன்பிற்கு நன்றி ஐயா.
எனது எண் 9443501912.
தொடர்ந்து பயடங்களில் இருப்பதால் பேச இயலாமல் போனது.
இன்று ஞாயிறு இரவு தங்களுடன் தொடர்பு கொள்கிறேன் ஐயா.

தேமொழி

unread,
Aug 28, 2017, 8:31:27 PM8/28/17
to மின்தமிழ்


On Sunday, August 27, 2017 at 4:43:19 AM UTC-7, kalai wrote:
வணக்கம் ஐயா.

On Sunday, August 27, 2017, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
உங்களுக்கு புராணங்களில் வரும் நிகழ்ச்சிகளை எல்லாம் புது விதமாக பார்க்கும் பார்வை உள்ளது 

நன்றி ஐயா.

நான் கண்ட காட்சிகளைப் படம் எடுத்து,  படக்காட்சியாகக்  (bioscope) காட்டிப் புராணப் பாடல் வரிகளைப் பாடி வருகிறேன்.
 

இது ஓர் வகையில் அறிவுடைமையே நியூட்டன் மரத்திலிருந்து 
ஆப்பிள் விழு வதை பார்த்ததுபோல்.  ஆனால் நேரடி புலன் வழி உள்ளீடானது வரும் செய்திகளுக்கு தொடர்பு காரணம் பழுதில்லாமல் ஐயமில்லாமல் மனித மூளை வழி அல்லாமல் கருவி மூலமாக கிட்டுவதாக இருக்க வேண்டும்  
மிகவும் சரி.
ஆனால் டக்ளிமேகன் பாலைவனத்தினை அறிவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
1) இந்தப் பாலைவனம் மற்றவை போலானது அல்ல.
2)ஆழமானது.
3) அதனுள்ளே அதிகமான கரி படிந்துள்ளது.
4) அதனுள்ளே உப்புநீர் உள்ளது.
5) அதனுள்ளே கடல் போன்ற அளவு நீர் தேங்கியுள்ளது.
எனக் கண்டறிந்துள்ளனர்.

இவை எப்படி நிகழ்ந்தன ?


புவித்தட்டுகள் ஒன்றை ஒன்று நோக்கி நகரும் பொழுது, கடல் நீர் இவ்வாறு தட்டுகளுக்கு இடையில் சிறைபட வாய்ப்பு உள்ளதல்லவா?

இவ்வாறு  ஏற்பட்ட நிகழ்வினால்தான்  மத்திய ஆசியாவில் அரபு நாடுகளில் எண்ணெய் கிடைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது - https://en.wikipedia.org/wiki/Persian_Gulf_Basin

யூரேசியா தட்டுடன் இந்தியா தட்டு வந்து மோதும்  நேபாளம்,  திபெத் போன்ற பகுதிகளில்தான் தொடர்ந்து நிலநடுக்கங்களும் பதிவாகி வந்துள்ளன, இப்பகுதிக்கு அருகில்தான்   டக்ளமேகன் பாலைவனமும்  உள்ளது.



The science behind Nepal earthquakes

By EarthSky Voices in EARTH | SCIENCE WIRE | May 12, 2015

Nepal sits on the boundary of the two massive tectonic plates that collided to build the Himalayas. Their ongoing convergence also means earthquakes.

 



நான் கூறியதில் 'என்னுடைய புரிதல் பிழை' இருந்தால் திரு. சிங்கநெஞ்சம் திருத்துவார் என நம்புகிறேன்.

.... தேமொழி 




 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 4, 2017, 12:33:38 AM9/4/17
to mint...@googlegroups.com, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.


On Tuesday, August 29, 2017, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Sunday, August 27, 2017 at 4:43:19 AM UTC-7, kalai wrote:
வணக்கம் ஐயா.

On Sunday, August 27, 2017, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
உங்களுக்கு புராணங்களில் வரும் நிகழ்ச்சிகளை எல்லாம் புது விதமாக பார்க்கும் பார்வை உள்ளது 

நன்றி ஐயா.

நான் கண்ட காட்சிகளைப் படம் எடுத்து,  படக்காட்சியாகக்  (bioscope) காட்டிப் புராணப் பாடல் வரிகளைப் பாடி வருகிறேன்.
 

இது ஓர் வகையில் அறிவுடைமையே நியூட்டன் மரத்திலிருந்து 
ஆப்பிள் விழு வதை பார்த்ததுபோல்.  ஆனால் நேரடி புலன் வழி உள்ளீடானது வரும் செய்திகளுக்கு தொடர்பு காரணம் பழுதில்லாமல் ஐயமில்லாமல் மனித மூளை வழி அல்லாமல் கருவி மூலமாக கிட்டுவதாக இருக்க வேண்டும்  
மிகவும் சரி.
ஆனால் டக்ளிமேகன் பாலைவனத்தினை அறிவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
1) இந்தப் பாலைவனம் மற்றவை போலானது அல்ல.
2)ஆழமானது.
3) அதனுள்ளே அதிகமான கரி படிந்துள்ளது.
4) அதனுள்ளே உப்புநீர் உள்ளது.
5) அதனுள்ளே கடல் போன்ற அளவு நீர் தேங்கியுள்ளது.
எனக் கண்டறிந்துள்ளனர்.

இவை எப்படி நிகழ்ந்தன ?


புவித்தட்டுகள் ஒன்றை ஒன்று நோக்கி நகரும் பொழுது, கடல் நீர் இவ்வாறு தட்டுகளுக்கு இடையில் சிறைபட வாய்ப்பு உள்ளதல்லவா?
ஆமாம், இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
காரணம்  இது அறிவியல் கருத்தல்ல, புவி அறிவியலாளர்களின் யூகம்தான். 
தக்களமேகன் பாலைவனத்தின் அடியில் பெருமளவில் கரி படிந்து இருப்பதற்கும், பெருமளவில் உப்புநீர் இருப்பதற்கும் புராணம் கூறும் கங்கை என்று விண்ணீர் வியனுலகு இறக்கப்பட்டதே காரணமாக இருக்கலாம் !
 

இவ்வாறு  ஏற்பட்ட நிகழ்வினால்தான்  மத்திய ஆசியாவில் அரபு நாடுகளில் எண்ணெய் கிடைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது - https://en.wikipedia.org/wiki/Persian_Gulf_Basin
இது சரி யென்றால், தக்களமேகன் பாலைவனத்தின் அடியிலும் எண்ணெய் கிடைத்திருக்க வேண்டும். 

யூரேசியா தட்டுடன் இந்தியா தட்டு வந்து மோதும்  நேபாளம்,  திபெத் போன்ற பகுதிகளில்தான் தொடர்ந்து நிலநடுக்கங்களும் பதிவாகி வந்துள்ளன, இப்பகுதிக்கு அருகில்தான்   டக்ளமேகன் பாலைவனமும்  உள்ளது.
பல்லாயிரக்கணக்கான கி.மீ. நீளம் கொண்ட நிலத்தட்டுகள் மோதினால், ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவிற்காவது ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட வேண்டும் அல்லவா ?
ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நில நடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.  
இப்பகுதியில் இத்தனை ஆண்டுகளில் நிலநடுக்கங்கள்
எவ்வாறு ஏற்பட்டு வருகின்றன்றன என்பதற்கான அசைபடங்களை புவி அறிவியலாளர் செய்து காட்டவில்லை, அல்லது இவ்வாறான அசைபடம் ஒன்றை  அறிஞர்களால் உருவாக்க
முடியாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 4, 2017, 11:32:55 AM9/4/17
to mintamil, thiruppuvanam, Mdu poovalingam sundaram, Kalai Email, tamilmanram, vallamai, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan
sketch-1504538975043.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 4, 2017, 12:09:51 PM9/4/17
to mintamil, thiruppuvanam, Mdu poovalingam sundaram, vallamai, tamilmanram, Kalai Email, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan

கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோள் பூமியில் இறங்கிய இடம் தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.  அதில் இருந்த உப்புப் பனிநீரால் அடித்துச் செல்லப்பட்ட சவடுமண்
(colluvium  & alluvium) படிந்து தாய்லாந்து, இந்தோனேசியா,  சப்பான் நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன.
இவ்வாறு சவடுமண்ணால்
( colluvium  & alluvium இவற்றால்)
உருவான நிலத்திட்டுகள் புரளும் போது நிலநடுக்கங்கள் உண்டாகின்றன என்பது எனது கருத்து.

வரைபடத்தை இணைத்துள்ளேன்.

sketch-1504540894475.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 6, 2017, 1:14:51 PM9/6/17
to mintamil, thiruppuvanam, Mdu poovalingam sundaram, vallamai, tamilmanram, Kalai Email, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan
sketch-1504538769220.png
sketch-1504541127782.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 6, 2017, 1:35:53 PM9/6/17
to mintamil, thiruppuvanam, Mdu poovalingam sundaram, vallamai, Kalai Email, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan
வணக்கம்.
இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிம்சுமாரத்தின் படிமம் என்றும், கங்கை என்ற உப்பநீர்பனிக்கோள் பூமியில் இறங்கியபோது அதில் இருந்த சிம்சுமாரம் இமயமலை அடிவாரத்தில் சிக்கிப் புதைந்து படிமம் ஆகியுள்ளது எனக் கருதுகிறேன்.


 A FOSSILISED jawbone of the world's oldest whale has been discovered in the foothills of the Himalayas - a part of the world that was once a sea separating two ancient continents.

The find sheds new light on the evolution of one of the most successful groups of sea mammals, which became adapted to a semi-aquatic life in river estuaries and shallow seas before becoming fully marine.

Scientists have dated the fossil to about 53.5 million years old, making it 3.5 million years older than the previous oldest known member of the whale family.

The ancient whale, called Himalayacetus subathuensis, probably only spent some of its time in water, returning to dry land to rest and breed.

Its jawbone contains teeth that are clearly adapted to eating fish, according to Philip Gingerich, of the University of Michigan, and Sunil Bajpai, of the University of Roorkee, in northern India.
In a paper published in the Proceedings of the National Academy of Sciences, the scientists say the fossil is a significant find because of both its extreme age and because it was found in a layer of sediments clearly associated with marine animals rather than freshwater species.


அன்பன்
கி. காளைராசன்

தேமொழி

unread,
Sep 6, 2017, 2:04:36 PM9/6/17
to மின்தமிழ்
NEWS:  Scientists have dated the fossil to about 53.5 million years old

Question:  How old is Mankind?

Answer:  While our ancestors have been around for about 6 million years, the modern form of humans only evolved about 200,000 years ago. Civilization as we know it is only about 6,000 years old, and industrialization started in the earnest only in the 1800s

Who were the first people on earth?
Scientists agree that our early ancestors, Homo erectus, first appeared in Africa 1–2 million years ago. They spread throughout the world and evolved into ancient humans. Most believe that modern humans evolved in Africa, and gradually replaced all the other ancient humans (the 'Out-of-Africa' theory).

6 million  & 200,000 years  <  53.5 million

சிம்சுமாரம் என்பது தட்டையாக, மெல்லிய, நீண்ட rostrum / அலகு போன்ற  வாய்ப்ப்பகுதி கொண்ட விலங்குக்கு  நாகரீக (?)  மனிதன் இட்ட பெயர்.
தான் பார்த்திராத ஒரு விலங்குக்கு அல்ல. 

மேலும் திமிங்கிலத்தின் வாய்க்கும் தலைக்கும், மெல்லிய நீண்ட அலகு போன்ற உள்ள விலங்குக்கும் எந்த ஒரு உருவ ஒற்றுமையும் கிடையாது. 


______________________


முக்கியமான  குறிப்பு: இமயத்தின் அடிவாரத்தில் கிடைக்கும் கடல் திமிங்கிலத்தின் படிமம்  நீங்கள் சொல்லும் உப்பு நீர்க் கோள் கோட்பாட்டை உறுதிப்படுத்தவில்லை.

மாறாக... புவிதட்டுகள் நகர்ந்து இந்தியத் தட்டு யூரேசியன் தட்டுடன் மோதிய பொழுது கடல் நீருக்கும் அதில் வாழ்ந்த விலங்குகளுக்கும் ஏற்பட்ட நிலையைத்தான் உறுதிப்படுத்துகிறது.


செய்தி சொல்வது:   
A FOSSILISED jawbone of the world's oldest whale has been discovered in the foothills of the Himalayas - a part of the world that was once a sea separating two ancient continents.


மீண்டும் கீழுள்ள (முன்னர் கொடுத்தவைதான்) சுட்டிகளை மீள்பார்வை செய்யவும்....

The science behind Nepal earthquakes

By EarthSky Voices in EARTH | SCIENCE WIRE | May 12, 2015

Nepal sits on the boundary of the two massive tectonic plates that collided to build the Himalayas. Their ongoing convergence also means earthquakes.

 



     whale-mouth




..... தேமொழி

_______________________________

S. Jayabarathan

unread,
Sep 6, 2017, 2:35:35 PM9/6/17
to vallamai, mintamil, thiruppuvanam, Mdu poovalingam sundaram, tamilmanram, Kalai Email, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan
நண்பர் காளைராசன்,

விஞ்ஞானம், வரலாறு ஆதாரமின்றி இப்படித் தொடர்ந்து எழுதி வரும் உங்கள் கங்கை விண்மீன், சுனாமி விளைவு புராணக் கதை யூகிப்புகள், படங்கள் கல்விப் பாட நூல்களில் இடம் பெற முடியாதவை. பொது வலைகளில் போடாது,  உங்கள் தனிப்பட்ட வலையில் இட்டுக் கொள்ளுங்கள்.  அது உங்கள் உரிமை.

நன்றி,
சி. ஜெயபாரதன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 6, 2017, 9:37:17 PM9/6/17
to mintamil, thiruppuvanam, Mdu poovalingam sundaram, Kalai Email, vallamai, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan

வணக்கம் ஐயா.


On 07-Sep-2017 12:05 AM, "S. Jayabarathan" <jayaba...@gmail.com> wrote:
>
> நண்பர் காளைராசன்,
>
> விஞ்ஞானம், வரலாறு ஆதாரமின்றி இப்படித் தொடர்ந்து எழுதி வரும் உங்கள் கங்கை விண்மீன், சுனாமி விளைவு புராணக் கதை யூகிப்புகள், படங்கள் கல்விப் பாட நூல்களில் இடம் பெற முடியாதவை. பொது வலைகளில் போடாது,  உங்கள் தனிப்பட்ட வலையில் இட்டுக் கொள்ளுங்கள்.  அது உங்கள் உரிமை.
>
> நன்றி,
> சி. ஜெயபாரதன்
>

சமூக வலைத்தளங்கள் தகவல் பகிர்வு இடங்கள். புல்லட்டின் போர்ட், திண்ணைப் பேச்சு, ஆலமரத்து அடியில் கூடும் கூட்டம் போல.  

அதில் ஆயிரம் விவாதிக்கப்படும்.  உண்மையும் இருக்கும், பிறர் பொய் எனக் கருதுவனவும் இருக்கும், இரண்டும் கலந்து குழப்பும் செய்திகளும் இருக்கும். இது போன்ற இடத்தில் ஒத்த கருத்துடையனவாக நான் கருதும் புராணச் செய்திகளையும் கூகுள் புவிப் படங்களையும் ஒருங்கிணைந்து எழுதிவருகிறேன்.
எல்லோரும் செய்வதுபோன்றே பொதுவலைத் தளத்தில்
எனது கருத்துகளையும் யூகங்களையும், " இவை புராண அடிப்படையிலான  எனது கருத்துகள்,  யூகங்கள்" என்று சொல்லித்தான் பதிவு செய்து வருகிறேன் ஐயா.

அன்பன்
கி. காளைராசன்

> 2017-09-04 12:09 GMT-04:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோள் பூமியில் இறங்கிய இடம் தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.  அதில் இருந்த உப்புப் பனிநீரால் அடித்துச் செல்லப்பட்ட சவடுமண்
>> (colluvium  & alluvium) படிந்து தாய்லாந்து, இந்தோனேசியா,  சப்பான் நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன.
>> இவ்வாறு சவடுமண்ணால்
>> ( colluvium  & alluvium இவற்றால்)
>> உருவான நிலத்திட்டுகள் புரளும் போது நிலநடுக்கங்கள் உண்டாகின்றன என்பது எனது கருத்து.
>>
>> வரைபடத்தை இணைத்துள்ளேன்.
>>
>> அன்பன்
>> கி. காளைராசன்
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


>>
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---

> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 6, 2017, 9:53:39 PM9/6/17
to mintamil, vallamai, Kalai Email, naga rethinam, thiruppuvanam, Pirama Dr Palanichamy FFE, Mdu poovalingam sundaram, Au1 Udayaganesan


On 07-Sep-2017 7:07 AM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம் ஐயா.
>
> On 07-Sep-2017 12:05 AM, "S. Jayabarathan" <jayaba...@gmail.com> wrote:
> >
> > நண்பர் காளைராசன்,
> >
> > விஞ்ஞானம், வரலாறு ஆதாரமின்றி இப்படித் தொடர்ந்து எழுதி வரும் உங்கள் கங்கை விண்மீன், சுனாமி விளைவு புராணக் கதை யூகிப்புகள், படங்கள் கல்விப் பாட நூல்களில் இடம் பெற முடியாதவை. பொது வலைகளில் போடாது,  உங்கள் தனிப்பட்ட வலையில் இட்டுக் கொள்ளுங்கள்.  அது உங்கள் உரிமை.
> >
> > நன்றி,
> > சி. ஜெயபாரதன்

வேறொரு இழையில் நணபர்
jsthe...@gmail.com அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று,

தேமொழி

unread,
Sep 6, 2017, 10:47:07 PM9/6/17
to மின்தமிழ்


On Wednesday, September 6, 2017 at 6:53:39 PM UTC-7, கி. காளைராசன் wrote:



வேறொரு இழையில் நணபர்
jsthe...@gmail.com அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று,
சமூக வலைத்தளங்கள் தகவல் பகிர்வு இடங்கள். புல்லட்டின் போர்ட், திண்ணைப் பேச்சு, ஆலமரத்து அடியில் கூடும் கூட்டம் போல.  


what goes around comes around 


..... themozhi 


 

>
> அதில் ஆயிரம் விவாதிக்கப்படும்.  உண்மையும் இருக்கும், பிறர் பொய் எனக் கருதுவனவும் இருக்கும், இரண்டும் கலந்து குழப்பும் செய்திகளும் இருக்கும்.
இது போன்ற இடத்தில் ஒத்த கருத்துடையனவாக நான் கருதும் புராணச் செய்திகளையும் கூகுள் புவிப் படங்களையும் ஒருங்கிணைந்து எழுதிவருகிறேன்.
> எல்லோரும் செய்வதுபோன்றே பொதுவலைத் தளத்தில்
> எனது கருத்துகளையும் யூகங்களையும், " இவை புராண அடிப்படையிலான  எனது கருத்துகள்,  யூகங்கள்" என்று சொல்லித்தான் பதிவு செய்து வருகிறேன் ஐயா.
>
> அன்பன்
> கி. காளைராசன்
>
> > 2017-09-04 12:09 GMT-04:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> >>
> >> கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோள் பூமியில் இறங்கிய இடம் தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.  அதில் இருந்த உப்புப் பனிநீரால் அடித்துச் செல்லப்பட்ட சவடுமண்
> >> (colluvium  & alluvium) படிந்து தாய்லாந்து, இந்தோனேசியா,  சப்பான் நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன.
> >> இவ்வாறு சவடுமண்ணால்
> >> ( colluvium  & alluvium இவற்றால்)
> >> உருவான நிலத்திட்டுகள் புரளும் போது நிலநடுக்கங்கள் உண்டாகின்றன என்பது எனது கருத்து.
> >>
> >> வரைபடத்தை இணைத்துள்ளேன்.
> >>
> >> அன்பன்
> >> கி. காளைராசன்
> >>
> >> --
> >> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.

> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.


> >>
> >> For more options, visit https://groups.google.com/d/optout.
> >
> >
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> > To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> > For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> > ---
> > You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 7, 2017, 12:39:41 PM9/7/17
to mint...@googlegroups.com

வணக்கம்.

On Thursday, September 7, 2017, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, September 6, 2017 at 6:53:39 PM UTC-7, கி. காளைராசன் wrote:



வேறொரு இழையில் நணபர்
jsthe...@gmail.com அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று,
சமூக வலைத்தளங்கள் தகவல் பகிர்வு இடங்கள். புல்லட்டின் போர்ட், திண்ணைப் பேச்சு, ஆலமரத்து அடியில் கூடும் கூட்டம் போல.  


what goes around comes around 


..... themozhi 


நன்றி. 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 7, 2017, 1:15:50 PM9/7/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம்.

இரண்டு 

1) கங்கை பகீரதன் சிவபெருமான் முதலானோர்.

2) கங்கை பூமியில் இறங்கியது.

இதில் நான் (2)ஆவதைப் பற்றி எழுதி வருகிறேன். 

ஆனால் கங்கை பகீரதன் சிவபெருமான் இவர்களை மனிதகுலம் என்று தாங்கள் கருதி, ஞமனிதகுலம் தோன்றிய காலத்தைக்  கங்கை பூமியில் இறங்கிய காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பொருந்தவில்லை என்கின்றீர்கள் என நான் நினைக்கிறேன்.

ஆம் என்றால் எனது விளக்கம்.

கங்கை - என்பது மனிதகுலப் பெண் அல்ல.  அது ஒரு உப்புநீர்ப்பனிக்கோள்.  புராணத்தில் பெண்ணாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

சிவபெருமான் - கங்கையைத் தன் சடைமுடியில் தாங்கிப் பூமியில் இறக்கிவிட்டவர்.  புராணத்தில் கடவுளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது இமயமலையாக இருக்கலாம், கலாம், லாம், ம்.

பகீரதன் - கங்கையைப் பூமியில் இறக்கியவர் எனப் புராணம் குறிப்பிடுகிறது.  

புராணம் கூறும் கங்கையும் சிவபெருமானும் மனிதர்கள் அல்ல என்ற காரணத்தினால், புராணம் குறிப்பிடும் பகீரதன் ஒரு மனிதன் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. !

மனிதனாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், கலாம், லாம், ம்.

எனவே மனிதன் தோன்றிய காலத்தையும் கங்கை தோன்றி காலத்தையும் ஒப்பீடு செய்ய முடியாது, கூடாது.

OK.

அடுத்து ...

" ஜன்ஹுரிஷி‘ என்ற ரிஷி கோபங்கொண்டு கங்கா ஜலம் முழுவதையும் குடித்துவிட்டார்.  அந்த ஆச்சர்யத்தால் தேவ, ரிஷி கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவைப் பலவிதமாய்ப் பிரார்த்தித்து, “ஸ்வாமி, கங்கையின் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்.  தங்களுடைய தேஹத்திலிருநது வெளிப்படுவதால் அவள் தங்களுக்குப் பெண்ணாகட்டும்“ என்றார்கள்.  அதனால் அவர் ஸந்தோஷித்து கங்கா ப்ரவாஹத்தைத் தன் காதின் வழியாய் வெளியில் விட்டார். "

யார் அந்த ஜன்ஹுரிஷி ?நாளை காண்போம் !

அன்பன்

கி. காளைராசன்


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 8, 2017, 6:33:55 AM9/8/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

விண்ணிலிருந்து மண்ணிற்கு கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோள் இறங்கியது என்ற புராணக் கருத்து உண்மையா?

கங்கா புராணத்தின் கதைச் சுருக்கத்தின் ஒரு பகுதியும், கூகுள் புவிப்படத்தின் ஒரு பகுதியும் இயைபு உடையனவாக உள்ளன.

கங்கா புராணம் :
விண்ணில் இருந்து இறங்கிய கங்கையானது,
‘ஜன்ஹுரிஷி‘ யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில் பரவி யாகபதார்த்தங்களை அடித்துக் கொண்டு போயிற்று.  அவளுடைய கர்வத்தால் அந்த ரிஷி கோபங்கொண்டு அந்த ஜலம் முழுவதையும் குடித்துவிட்டார்.  அந்த ஆச்சர்யத்தால் தேவ, ரிஷி கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவைப் பலவிதமாய்ப் பிரார்த்தித்து, “ஸ்வாமி, கங்கையின் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்.  தங்களுடைய தேஹத்திலிருநது வெளிப்படுவதால் அவள் தங்களுக்குப் பெண்ணாகட்டும்“ என்றார்கள்.  அதனால் 


அவர் ஸந்தோஷித்து கங்கா ப்ரவாஹத்தைத் தன் காதின் வழியாய் வெளியில் விட்டார்.

அன்று முதல் அவளுக்கு ஜான்ஹவி (ஜன்ஹுவின் புத்ரி) என்று பெயராயிற்று.  பிறகு அவள் பகீரதரைப் பின் தொடர்ந்து, ஸமுத்திரத்திற்கு வந்து, அங்கிருந்து பாதாளத்திற்குப் போனாள். என்கிறது கங்கா புராணம்.

கேள்வி :
விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிய கங்கையை ஜன்ஹுரிஷி குடித்து, காது வழியாக வெளியே விட்டாரா ?!?!?

விளக்கம் :
1) கங்கை பூமியில்  இறங்கித் துளைத்துச் சென்ற தக்களமேகன் (taklamakan desert) பாலைவனம்.  இந்த இடம் ஜன்ஹுரிஷி யின் வாய் எனப் புராணம் உருவகம் செய்துள்ளது.
2) கங்கை பூமியில்  இறங்கித் துளைத்துச் சென்று  ஜன்ஹுரிஷி யின் காது வழியாக வெளிவந்து, பாதாளம் சென்றது.

Challenger Deep என்ற இடத்தை ஜன்ஹுரிஷி யின் காது என்றும்,
Mariana Trench இடத்தைப்
பாதாளம் என்றும் புராணம் உருவகம் செய்துள்ளது.

புராண அடிப்படையிலான புவியியல் :
விண்ணில் இருந்து இறங்கிய கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோளின் தண்ணீர் பூமியைத் துளைத்துச் சென்ற இடம்
தக்களமேகன் (taklamakan desert) பாலைவனம்.

விண்ணில் இருந்து இறங்கிய கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோளின் தண்ணீர் பூமியைத் துளைத்துச் சென்று, பூமிக்குள் இருந்து வெளிவந்த இடம் Challenger Deep in the Mariana Trench.

Ganga Purana Theory :
1) 'Taklamakan desert' is very deep, because Ganga (the celestial salt water ice planet)
fall on this place and its water perforated this place.
2) 'Challenger Deep' in the 'Mariana Trench' is the deepest place in the ocean, because the Ganga water came out underneath from this place.

sketch-1504866082498.png
sketch-1504866094614.png

Jaisankar Jaganathan

unread,
Sep 8, 2017, 6:45:45 AM9/8/17
to mintamil
எனக்கு ஒரு சந்தேகம் காளைராசர் அவர்களே

கங்கை என்னும் நீர்க்கோள் பூமியில் விழுந்ததை யார் பார்த்தார்கள். என்ன ஆதாரம். 

புராணங்கள் எழுதப்பட்டதே ஐயாயிரம் ஆண்டுகளாகத்தானே

S. Jayabarathan

unread,
Sep 8, 2017, 9:44:08 AM9/8/17
to mintamil, vallamai, tamilmantram, Kalairajan Krishnan, Kalai Email, thiruppuvanam, vannan vannan, Oru Arizonan
நண்பர் காளைராசன்,

நீங்கள் விரும்பியபடி யூகித்து எழுதிக் கொண்ட புராணப் புனைவுகள், புளுகுகள் ஏட்டுச் சுரக்காய் கூட அல்ல.  

இந்திய விஞ்ஞான அறிஞர் எத்தனை பேர் இவற்றை ஏற்றுக் கொள்வார் ?

சி. ஜெ.

+++++++++++

--

N. Ganesan

unread,
Sep 8, 2017, 9:47:30 AM9/8/17
to மின்தமிழ்
தமிழில் புராணங்கள் சில நூற்றாண்டுகளாகத் தான்.
அவர்கள் marine diatom அறியாதார்,

நா. கணேசன் 

Suba

unread,
Sep 8, 2017, 10:09:23 AM9/8/17
to மின்தமிழ்


2017-09-08 12:45 GMT+02:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
​..
 

புராணங்கள் எழுதப்பட்டதே ஐயாயிரம் ஆண்டுகளாகத்தானே
பெரும்பாலான ​புராணங்கள் கடந்த சில நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவையே.  
இவை செய்து வைத்திருக்கும் குழப்பத்தை எண்ணும் போதெல்லாம் மனம் பதைக்கின்றது. இந்தப் புராணங்களை நம்பி நம்பி ஏமாந்து சிந்தனையை அதில் செலுத்தும் அப்பாவி  உள்ளங்களை நினைத்து உண்மையில் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

சுபா

Jaisankar Jaganathan

unread,
Sep 8, 2017, 12:02:53 PM9/8/17
to mintamil
அநேகமாக பகீரதன் கங்கை என்னும் நதியை கால்வாய் வெட்டி அந்தக்காலத்திலேயே நதிநீர் இணைப்பு செய்தவராக இருக்கலாம். 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 8, 2017, 2:51:39 PM9/8/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம்.


On 08-Sep-2017 4:15 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> எனக்கு ஒரு சந்தேகம் காளைராசர் அவர்களே
>
> கங்கை என்னும் நீர்க்கோள் பூமியில் விழுந்ததை யார் பார்த்தார்கள்.

அதாவது, கண்ணால் பார்த்த சாட்சி யார் என்று கேட்கின்றீர்களா ?

ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வந்த ஆச்சரியத்தைத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள்நகரங்களைப் போன்ற விமானங்களிலும்  குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்து பார்த்தார்கள்  என்கிறது புராணம்.

என்ன ஆதாரம். 
>

புராணமும்,
புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி புவியமைப்பு இருப்பதும்தான் ஆதாரங்கள்.

அறிவியல் ஆதாரம் அவசியம் வேண்டும் என்றால்,
தக்களமேகன் ( taklamakan desert) பாலைவனத்தில் உள்ளே ரேடியோ ஒலி அலைகளை
அனுப்பி அது Mariana trench ஆழமான பகுதியில் கேட்கிறதா? எனச் சோதனை செய்து பார்க்கலாம் !

> புராணங்கள் எழுதப்பட்டதே ஐயாயிரம் ஆண்டுகளாகத்தானே
>

ஆமாம்,
இராமரது ஆட்சியிலும் பின்னர் சந்திரகுப்தர் காலத்திலும் புராணங்கள் தொகுத்து எழுதப்பட்டுள்ளன என்கின்றனர்.
ஆனால் அதற்கு முன் நெடுங்காலமாக வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்துள்ளது.

அன்பன்
கி. காளைராசன்

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 8, 2017, 3:01:54 PM9/8/17
to mintamil, Kalai Email, vallamai, Oru Arizonan, tamilmanram, thiruppuvanam, Jay Jayabarathan

வணக்கம் ஐயா.


On 08-Sep-2017 7:14 PM, "S. Jayabarathan" <jayaba...@gmail.com> wrote:
>
> நண்பர் காளைராசன்,
>
> நீங்கள் விரும்பியபடி யூகித்து எழுதிக் கொண்ட புராணப் புனைவுகள், புளுகுகள் ஏட்டுச் சுரக்காய் கூட அல்ல.  
>

ஆமாம் ஐயா.
எனது கருத்துகள் ஒரு  theory. ஆய்வுகளால் நிறுவப்பட வேண்டும்.

> இந்திய விஞ்ஞான அறிஞர் எத்தனை பேர் இவற்றை ஏற்றுக் கொள்வார் ?
>
> சி. ஜெ.
>

ஐயா, புவி அறிஞர்களை நான் தேசத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவில்லை.
ஆனால் தக்களமேகன் பாலைவனத்தையும், ஆழ்கடல் அகழியையும் ஆராய்ந்து வரும் அறிஞர்கள் இந்த theory ஐ ஏற்றுக் கொள்வர் என நம்புகிறேன் ஐயா.

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 8, 2017, 3:07:32 PM9/8/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம் ஐயா.

marine diatom ஆய்வுகளுக்குச் சில மண்மாதிரிகளை அனுப்பியுள்ளேன் ஐயா.
ஆய்வு முடிவுகள் தெரிந்தவுடன் பதிவு செய்கிறேன் ஐயா.
ஆனால் இந்த ஆய்வு முடிவு மதுரைக்குச் சுனாமி வந்ததை மட்டுமே உறுதி செய்யும்.
கங்கை இறங்கியதை உறுதி செய்ய ரேடியோ ஒலிச் சோதனை செய்ய வேண்டியிருக்கும்.

அன்பன்
கி. காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 8, 2017, 3:09:08 PM9/8/17
to mintamil

வணக்கம்.


On 08-Sep-2017 9:32 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> அநேகமாக பகீரதன் கங்கை என்னும் நதியை கால்வாய் வெட்டி அந்தக்காலத்திலேயே நதிநீர் இணைப்பு செய்தவராக இருக்கலாம். 
>

நதிகளைப் பகீரதன் இணைத்ததாகப் புராணம் கூறவில்லை.

அன்பன்
கி. காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 15, 2017, 1:08:13 PM9/15/17
to mintamil, thiruppuvanam, Mdu poovalingam sundaram, Kalai Email, tamilmanram, vallamai, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan

கங்கை ஒரு நீர்த்தாரையாக விண்ணிலிருந்து மண்ணிற்குஇறங்கிய புராணம்.
"ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரஸிலும் அங்கிருந்து பூமியிலும் விழுந்ததால் அந்த ஜலம் பயங்கரமான சப்தத்துடன் வந்தது.  மீன் ஆமை சிம்சுமாரம் முதலை முதலிய ஜல கூந்துக்கள்  அதில் துள்ளி விழுந்து கொண்டிருந்தபடியால் பூமி நன்றாக விளங்கிற்று. ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் ஆச்சரியத்தைப் பார்க்கத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள்நகரங்களைப் போன்ற விமானங்களிலும்  குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்தார்கள்.  அவர்களின் தேஹ காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தாலும் எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ""ஜ்வாலித்தது."". என்கிறது புராணம்.

கங்கை என்னும் பனிநீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தால் அதில் இருந்த எரியக்கூடிய வஸ்துகள்  ஜ்வாலித்து (எரிந்து) பூமியின் மேலே விழுந்தன.  இந்த ஜுவாலைகள் விழுந்த இடங்களில் இருந்த தாவரம் முதலான எரியக்கூடிய வஸ்துகள் எல்லாம் அதீத வெப்பத்தால் எரிந்து போயின. 
இதனால் கங்கை பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய இடத்திலிருந்து, அது பூமியில் விழுந்த டக்ளிமேகன் பாலைவனம் முடிய உள்ள இடம் எல்லாம்
ஜுவாலைகள் விழுந்த காரணத்தினால் பாலைவனமாக மாறியுள்ளன - என்பது எனது கருத்து.
கங்கை என்ற விண்ணீர் வியனுலகு பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய பாதையையும், அதனால் உண்டான

ஜுவாலைகள் விழுந்து பாலைவனமான பூமிப் பகுதியைக் காட்டும் படத்தை இணைத்துள்ளேன்.

sketch-1505310289202.png

தேமொழி

unread,
Sep 15, 2017, 3:45:12 PM9/15/17
to மின்தமிழ்
அரிசி மரத்தில் காய்க்கும் என யாராவது இணையத்தில் பதிவு செய்து வைத்தால் போதும், அதைப் படித்து விட்டு, ஆமாம் ஆமாம் அரிசி மரத்தில்தான் காய்க்கும், அதுதான் சரி எனப் பேசும் காலத்தில் இருக்கிறோம்  .... என்று நீங்கள் குறிப்பிட்டது  நினைவு வந்து  என்னை கவலை கொள்ள வைக்கிறது. 


 ..... தேமொழி

Jaisankar Jaganathan

unread,
Sep 15, 2017, 11:14:31 PM9/15/17
to mintamil
///கங்கை என்னும் பனிநீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தால் அதில் இருந்த எரியக்கூடிய வஸ்துகள்  ஜ்வாலித்து (எரிந்து) பூமியின் மேலே விழுந்தன.  இந்த ஜுவாலைகள் விழுந்த இடங்களில் இருந்த தாவரம் முதலான எரியக்கூடிய வஸ்துகள் எல்லாம் அதீத வெப்பத்தால் எரிந்து போயின.  /

எல்லாம் எரியக்கூடிய அதீத வெப்பத்தில் தண்ணீர் மட்டும் ஏன் ஆவியாகவில்லை? 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 16, 2017, 12:10:06 PM9/16/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம்.


On 16-Sep-2017 8:44 AM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> ///கங்கை என்னும் பனிநீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தால் அதில் இருந்த எரியக்கூடிய வஸ்துகள்  ஜ்வாலித்து (எரிந்து) பூமியின் மேலே விழுந்தன.  இந்த ஜுவாலைகள் விழுந்த இடங்களில் இருந்த தாவரம் முதலான எரியக்கூடிய வஸ்துகள் எல்லாம் அதீத வெப்பத்தால் எரிந்து போயின.  /
>
> எல்லாம் எரியக்கூடிய அதீத வெப்பத்தில் தண்ணீர் மட்டும் ஏன் ஆவியாகவில்லை? 
>

அதீத வெப்பத்தில் கங்கையின் தண்ணீர்  ஆவியானதா? என்ற விளக்கம் ஏதும் நான் வாசிந்த புராணத்தின் தமிழ்ச்சுருக்கத்தில் இல்லை.  ஒருவேளை மூலப்பாடல்களில் இருக்கலாம். 

பச்சைக் களிமண் சட்டியில் உப்புநீர் பனிக்கட்டியை நிரப்பியது போன்றது கங்கை.  இதன் குளிர்ச்சி அதீதம். 
இது அதிகமான வேகத்துடன் பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிப் பயணித்த நேரம் சில நிமிட நேரங்களிலே பூமியின் தரையை அடைந்து துளையிட்டுச் சென்றுள்ளது.
அதனால் இதன் வெளிப் பகுதி முற்றிலுமாகச் சூடேறி எரிந்து விழுவதற்கு முன்பே, அதாவது பாதி எரிந்து விழுந்தும், மீதி எரிந்து கரியான நிரையிலேயே அது பூமியின் தரையை அடைந்து விட்டது. இதனால்தான் தக்களமேகன் பாலைவனத்தின் அடியில் 20 பில்லியன் கரி படிந்து கிடக்கிறது என்பதும்,
கங்கையின் மிகச் சிறிதளவு நீரே ஆவி யாகிப் பின்னர் மழையாகப் பெய்திருக்கும் என்பதும் எனது யூகம்.

அன்பன்
கி. காளைராசன்

N. Ganesan

unread,
Sep 16, 2017, 12:18:19 PM9/16/17
to மின்தமிழ்


On Friday, September 15, 2017 at 8:14:31 PM UTC-7, Jaisankar Jaganathan wrote:
///கங்கை என்னும் பனிநீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தால் அதில் இருந்த எரியக்கூடிய வஸ்துகள்  ஜ்வாலித்து (எரிந்து) பூமியின் மேலே விழுந்தன.  இந்த ஜுவாலைகள் விழுந்த இடங்களில் இருந்த தாவரம் முதலான எரியக்கூடிய வஸ்துகள் எல்லாம் அதீத வெப்பத்தால் எரிந்து போயின.  /

எல்லாம் எரியக்கூடிய அதீத வெப்பத்தில் தண்ணீர் மட்டும் ஏன் ஆவியாகவில்லை? 

காளைராசன் தரும் டிஸ்க்லெய்மர்: (மதுரைக்கு வந்த சுனாமி) போன்ற இழைகளில்) காண்க:

<<<
அன்பன் 
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
(kalair...@gmail.com ஆவணி 14 (30.08.2017) புதன்கிழமை.)
(குறிப்பு - இந்தக் கருத்து அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட வேண்டிய ஒன்று)  
>>>

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 16, 2017, 1:29:26 PM9/16/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம்.


On 16-Sep-2017 1:15 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Friday, September 15, 2017 at 10:08:13 AM UTC-7, கி. காளைராசன் wrote:
>>
>> கங்கை ஒரு நீர்த்தாரையாக விண்ணிலிருந்து மண்ணிற்குஇறங்கிய புராணம்.
>> "ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரஸிலும் அங்கிருந்து பூமியிலும் விழுந்ததால் அந்த ஜலம் பயங்கரமான சப்தத்துடன் வந்தது.  மீன் ஆமை சிம்சுமாரம் முதலை முதலிய ஜல கூந்துக்கள்  அதில் துள்ளி விழுந்து கொண்டிருந்தபடியால் பூமி நன்றாக விளங்கிற்று. ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் ஆச்சரியத்தைப் பார்க்கத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள்நகரங்களைப் போன்ற விமானங்களிலும்  குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்தார்கள்.  அவர்களின் தேஹ காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தாலும் எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ""ஜ்வாலித்தது."". என்கிறது புராணம்.
>>

>> கங்கை என்னும் பனிநீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தால் அதில் இருந்த எரியக்கூடிய வஸ்துகள்  ஜ்வாலித்து (எரிந்து) பூமியின் மேலே விழுந்தன.  இந்த ஜுவாலைகள் விழுந்த இடங்களில் இருந்த தாவரம் முதலான எரியக்கூடிய வஸ்துகள் எல்லாம் அதீத வெப்பத்தால் எரிந்து போயின. 

>> இதனால் கங்கை பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய இடத்திலிருந்து, அது பூமியில் விழுந்த டக்ளிமேகன் பாலைவனம் முடிய உள்ள இடம் எல்லாம்
>> ஜுவாலைகள் விழுந்த காரணத்தினால் பாலைவனமாக மாறியுள்ளன - என்பது எனது கருத்து.
>> கங்கை என்ற விண்ணீர் வியனுலகு பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய பாதையையும், அதனால் உண்டான
>> ஜுவாலைகள் விழுந்து பாலைவனமான பூமிப் பகுதியைக் காட்டும் படத்தை இணைத்துள்ளேன்.
>
>
>
> அரிசி மரத்தில் காய்க்கும் என யாராவது இணையத்தில் பதிவு செய்து வைத்தால் போதும், அதைப் படித்து விட்டு, ஆமாம் ஆமாம் அரிசி மரத்தில்தான் காய்க்கும், அதுதான் சரி எனப் பேசும் காலத்தில் இருக்கிறோம்  .... என்று நீங்கள் குறிப்பிட்டது  நினைவு வந்து  என்னை கவலை கொள்ள வைக்கிறது. 
>
>
>  ..... தேமொழி

what goes around comes around 

:)

அறிவியல் முடிவுகள் உண்மையானவை.
ஆனால், அறிவியலாளர்களின் கருத்துகள் யூகமானவை.

சகாரா பாலைவனம், அரேபியப் பாலைவனம், தக்களமேகன் பாலைவனம், கோபி பாலைவனம் எல்லாம் கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கியதால் எரிந்துபோன நிலப்பகுதிகள் என்றும்,

கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கிய இடமே தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது என்றும்,

இதனால் தான் இந்தப் பாலைவனத்தின் அடிப் பகுதியானது சாய்ந்த கூம்பு வடிவத்தில் உள்ளது என்பதும்,

இந்தப் பாலைவனத்தின் அடிப்பகுதி ஆழமான கடல்பகுதியுடன் இணைந்துள்ளது என்பதும்,

இதனால்தான் இந்தப் பாலைவனத்தின் அடியில் கடலளவு உப்புநீர் உள்ளது என்றும்,

கங்கையிலிருந்த sedimentary பாதி எரிந்து கரியாகிய நிலையில் பாலைவனத்தின் அடியில் தங்கியுள்ளது என்பதும்,

இமயமலையில் உள்ள கடல்வாழ் உயிரினத்தின் படிமமானது, கங்கையிலிருந்து இறங்கிய சிம்சுமாரத்தின் படிபம் என்பதும்,

கங்கையிலிருந்த தண்ணீரே
பாலைவனத்தில் ஆறு போன்று ஓடியுள்ளது என்பதும்,

கங்கையிலிருந்த தண்ணீரால்தான் பூமியின் கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்பதும்,

கங்கையிலிருந்த உப்புத தண்ணீரால்தான் பூமியின் கடல் உப்பு ஆகி உள்ளது என்பதும்,

கங்கையிலிருத்த தண்ணீர் வழிந்து ஓடும் போது உண்டான சவடுமண்
(colluvium  & alluvium) படிந்து தாய்லாந்து, இந்தோனேசியா,  சப்பான் நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன என்பதும்,

சவடுமண் (colluvium  & alluvium) படிமம் இறுகிப் பாறையாகி, அவை பிரண்டு விழும்போது, நிலநடுக்கம் ஏற்பட்டுச் சுனாமி (tsunami) உருவாகிறது என்பதும்,

கங்காபுராணத்தின் அடிப்படையிலான எனது யூககங்கள், அல்லது Ganga Purana Theory ஆகும்.

அன்பன்
கி. காளைராசன்.


>> அன்பன்


>> கி. காளைராசன்
>

> --

Jaisankar Jaganathan

unread,
Sep 17, 2017, 2:31:19 AM9/17/17
to mintamil
காளைராசன் அவர்களே

கங்கைக்கே இந்த கதை என்றால் அமேசான், நைல் நதிக்கு என்ன கதை வரும்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 17, 2017, 5:51:46 AM9/17/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம்.


On 17-Sep-2017 12:01 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> காளைராசன் அவர்களே
>
> கங்கைக்கே இந்த கதை என்றால் அமேசான், நைல் நதிக்கு என்ன கதை வரும்
>

நான் எழுதியுள்ளதற்குத் தாங்கள் ஏதேனும் விமர்சனங்கள் கூறினால் விரும்பி வரவேற்பேன்.

மாறாக, நான் எழுதாத
கங்கை என்ற நதியைப்பற்றியும், அமேசான், நைல் நதிகளைப் பற்றியும் என்னிடம் கேட்டால் நான் என்னத்தைச் சொல்வது !
இந்த நதிகள் பற்றிக் கருத்து ஏதும் என்னிடம் கிடையாது.

அன்பன்
கி. காளைராசன்

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Jaisankar Jaganathan

unread,
Sep 17, 2017, 5:55:12 AM9/17/17
to mintamil
அப்படி இல்லை காளை ராசன் அவர்களே

புராணக்கதைகள் என்பது சில தத்துவங்களின் அர்த்தமாக இருக்கலாம். அதை அப்படியே எடுத்துக்கொள்வது சரியல்ல

2017-09-17 15:21 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.
On 17-Sep-2017 12:01 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> காளைராசன் அவர்களே
>
> கங்கைக்கே இந்த கதை என்றால் அமேசான், நைல் நதிக்கு என்ன கதை வரும்
>

நான் எழுதியுள்ளதற்குத் தாங்கள் ஏதேனும் விமர்சனங்கள் கூறினால் விரும்பி வரவேற்பேன்.

மாறாக, நான் எழுதாத
கங்கை என்ற நதியைப்பற்றியும், அமேசான், நைல் நதிகளைப் பற்றியும் என்னிடம் கேட்டால் நான் என்னத்தைச் சொல்வது !
இந்த நதிகள் பற்றிக் கருத்து ஏதும் என்னிடம் கிடையாது.

அன்பன்
கி. காளைராசன்

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


> For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
regards,
jaisankar jaganathan

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 17, 2017, 6:07:38 AM9/17/17
to mintamil

வணக்கம்.


On 17-Sep-2017 3:25 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> அப்படி இல்லை காளை ராசன் அவர்களே
>
> புராணக்கதைகள் என்பது சில தத்துவங்களின் அர்த்தமாக இருக்கலாம். அதை அப்படியே எடுத்துக்கொள்வது சரியல்ல
>

ஆமாம்,

புராணக் கதைகளை  அப்படியே எடுத்துக்கொள்வது சரியல்ல,  அவை கூறும் புவியியல் கருத்துகளைப் புறம் தள்ளுவதும் சரியல்ல.

"புராணக்கதைகள் என்பன சில புவியியல் தத்துவங்களின் அர்த்தமாக இருக்கிறன" என்றுதான் கூறுகிறேன்.

புராணம் கூறும் உவமான உவமேயங்களை எடுத்துக் கொள்ளாமல், புராணம் கூறும் நிகழ்வுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.

அன்பன்
கி. காளைராசன்

> 2017-09-17 15:21 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்.
>> On 17-Sep-2017 12:01 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>> >
>> > காளைராசன் அவர்களே
>> >
>> > கங்கைக்கே இந்த கதை என்றால் அமேசான், நைல் நதிக்கு என்ன கதை வரும்
>> >
>>
>> நான் எழுதியுள்ளதற்குத் தாங்கள் ஏதேனும் விமர்சனங்கள் கூறினால் விரும்பி வரவேற்பேன்.
>>
>> மாறாக, நான் எழுதாத
>> கங்கை என்ற நதியைப்பற்றியும், அமேசான், நைல் நதிகளைப் பற்றியும் என்னிடம் கேட்டால் நான் என்னத்தைச் சொல்வது !
>> இந்த நதிகள் பற்றிக் கருத்து ஏதும் என்னிடம் கிடையாது.
>>
>> அன்பன்
>> கி. காளைராசன்
>>
>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> > For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> > ---
>> > You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> > For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
>
> --
> regards,
> jaisankar jaganathan
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 17, 2017, 11:58:57 AM9/17/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

sketch-1505663460812.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 18, 2017, 5:39:02 AM9/18/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam


> அறிவியல் முடிவுகள் உண்மையானவை.
> ஆனால், அறிவியலாளர்களின் கருத்துகள் யூகமானவை.
>
> சகாரா பாலைவனம், அரேபியப் பாலைவனம், தக்களமேகன் பாலைவனம், கோபி பாலைவனம் எல்லாம் கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கியதால் எரிந்துபோன நிலப்பகுதிகள் என்றும்,
>
> கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கிய இடமே தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது என்றும்,
>
> இதனால் தான் இந்தப் பாலைவனத்தின் அடிப் பகுதியானது சாய்ந்த கூம்பு வடிவத்தில் உள்ளது என்பதும்,
>
> இந்தப் பாலைவனத்தின் அடிப்பகுதி ஆழமான கடல்பகுதியுடன் இணைந்துள்ளது என்பதும்,
>

படம் இணைத்துள்ளேன்.

sketch-1505710110813.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 18, 2017, 8:25:17 AM9/18/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam
sketch-1505736346982.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 21, 2017, 6:08:12 AM9/21/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam

வணக்கம்.

அறிவியல் முடிவுகள் உண்மையானவை, மாறாதவை.

>
> சகாரா பாலைவனம், அரேபியப் பாலைவனம், தக்களமேகன் பாலைவனம், கோபி பாலைவனம் எல்லாம் கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கியதால் எரிந்துபோன நிலப்பகுதிகள் என்றும்,
>
> கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கிய இடமே தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது என்றும்,
>
> இதனால் தான் இந்தப் பாலைவனத்தின் அடிப் பகுதியானது சாய்ந்த கூம்பு வடிவத்தில் உள்ளது என்பதும்,
>
> இந்தப் பாலைவனத்தின் அடிப்பகுதி ஆழமான கடல்பகுதியுடன் இணைந்துள்ளது என்பதும்,
>
> இதனால்தான் இந்தப் பாலைவனத்தின் அடியில் கடலளவு உப்புநீர் உள்ளது என்றும்,
>
> கங்கையிலிருந்த sedimentary பாதி எரிந்து கரியாகிய நிலையில் பாலைவனத்தின் அடியில் தங்கியுள்ளது என்பதும்,
>
> இமயமலையில் உள்ள கடல்வாழ் உயிரினத்தின் படிமமானது, கங்கையிலிருந்து இறங்கிய சிம்சுமாரத்தின் படிபம் என்பதும்,
>
> கங்கையிலிருந்த தண்ணீரே
> பாலைவனத்தில் ஆறு போன்று ஓடியுள்ளது என்பதும்,
>
> கங்கையிலிருந்த தண்ணீரால்தான் பூமியின் கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்பதும்,
>
> கங்கையிலிருந்த உப்புத தண்ணீரால்தான் பூமியின் கடல் உப்பு ஆகி உள்ளது என்பதும்,
>
> கங்கையிலிருத்த தண்ணீர் வழிந்து ஓடும் போது உண்டான சவடுமண்
> (colluvium  & alluvium) படிந்து தாய்லாந்து, இந்தோனேசியா,  சப்பான் நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன என்பதும்,
>
> சவடுமண் (colluvium  & alluvium) படிமம் இறுகிப் பாறையாகி, அவை பிரண்டு விழும்போது, நிலநடுக்கம் ஏற்பட்டுச் சுனாமி (tsunami) உருவாகிறது என்பதும்,
>
> கங்காபுராணத்தின் அடிப்படையிலான எனது யூககங்கள், அல்லது Ganga Purana Theory ஆகும்.
>

கங்கா புராணம் அறிவியல் அடிப்படையிலானது என்றால்,
மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம்  சம காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும்.

தக்களமேகன் உட்பட பாலைவனங்கள் தோன்றிய காலம்,  ஆழமான கடல்பகுதி உருவான காலம், இந்தோனேசியா சப்பான் நிலப்பரப்புகள் உண்டான காலம், சிம்சுமாரத்தின் படிமத்தின் வயது, உலகளவில் கடல்நீர்மட்டம் உயர்ந்த காலம் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 21, 2017, 12:29:55 PM9/21/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam


On 21-Sep-2017 3:38 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம்.
>
> அறிவியல் முடிவுகள் உண்மையானவை, மாறாதவை.
>
> >
> > சகாரா பாலைவனம், அரேபியப் பாலைவனம், தக்களமேகன் பாலைவனம், கோபி பாலைவனம் எல்லாம் கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கியதால் எரிந்துபோன நிலப்பகுதிகள் என்றும்,
> >
> > கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கிய இடமே தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது என்றும்,
> >
> > இதனால் தான் இந்தப் பாலைவனத்தின் அடிப் பகுதியானது சாய்ந்த கூம்பு வடிவத்தில் உள்ளது என்பதும்,
> >
> > இந்தப் பாலைவனத்தின் அடிப்பகுதி ஆழமான கடல்பகுதியுடன் இணைந்துள்ளது என்பதும்,
> >
> > இதனால்தான் இந்தப் பாலைவனத்தின் அடியில் கடலளவு உப்புநீர் உள்ளது என்றும்,
> >
> > கங்கையிலிருந்த sedimentary பாதி எரிந்து கரியாகிய நிலையில் பாலைவனத்தின் அடியில் தங்கியுள்ளது என்பதும்,
> >
> > இமயமலையில் உள்ள கடல்வாழ் உயிரினத்தின் படிமமானது, கங்கையிலிருந்து இறங்கிய சிம்சுமாரத்தின் படிபம் என்பதும்,
> >
> > கங்கையிலிருந்த தண்ணீரே
> > பாலைவனத்தில் ஆறு போன்று ஓடியுள்ளது என்பதும்,
> >
> > கங்கையிலிருந்த தண்ணீரால்தான் பூமியின் கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்பதும்,
> >
> > கங்கையிலிருந்த உப்புத தண்ணீரால்தான் பூமியின் கடல் உப்பு ஆகி உள்ளது என்பதும்,
> >
> > கங்கையிலிருத்த தண்ணீர் வழிந்து ஓடும் போது உண்டான சவடுமண்
> > (colluvium  & alluvium) படிந்து தாய்லாந்து, இந்தோனேசியா,  சப்பான் நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன என்பதும்,
> >
> > சவடுமண் (colluvium  & alluvium) படிமம் இறுகிப் பாறையாகி, அவை பிரண்டு விழும்போது, நிலநடுக்கம் ஏற்பட்டுச் சுனாமி (tsunami) உருவாகிறது என்பதும்,
> >

படத்தை இணைத்துள்ளேன்.

sketch-1506010652522.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 23, 2017, 1:00:09 AM9/23/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam
அறிவியல் முடிவுகள் உண்மையானவை.
ஆனால், அறிவியலாளர்களின் கருத்துகள் யூகமானவை.

சகாரா பாலைவனம், அரேபியப் பாலைவனம், தக்களமேகன் பாலைவனம், கோபி பாலைவனம் எல்லாம் கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கியதால் எரிந்துபோன நிலப்பகுதிகள் என்றும்,

கங்கை என்ற  விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்கிய இடமே தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது என்றும்,

இதனால் தான் இந்தப் பாலைவனத்தின் அடிப் பகுதியானது சாய்ந்த கூம்பு வடிவத்தில் உள்ளது என்பதும்,

இந்தப் பாலைவனத்தின் அடிப்பகுதி ஆழமான கடல்பகுதியுடன் இணைந்துள்ளது என்பதும்,

இதனால்தான் இந்தப் பாலைவனத்தின் அடியில் கடலளவு உப்புநீர் உள்ளது என்றும்,

கங்கையிலிருந்த sedimentary பாதி எரிந்து கரியாகிய நிலையில் பாலைவனத்தின் அடியில் தங்கியுள்ளது என்பதும்,

இமயமலையில் உள்ள கடல்வாழ் உயிரினத்தின் படிமமானது, கங்கையிலிருந்து இறங்கிய சிம்சுமாரத்தின் படிபம் என்பதும்,

கங்கையிலிருந்த தண்ணீரே
பாலைவனத்தில் ஆறு போன்று ஓடியுள்ளது என்பதும்,

கங்கையிலிருந்த தண்ணீரால்தான் பூமியின் கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்பதும்,

கங்கையிலிருந்த உப்புத தண்ணீரால்தான் பூமியின் கடல் உப்பு ஆகி உள்ளது என்பதும்,

கங்கையிலிருத்த தண்ணீர் வழிந்து ஓடும் போது உண்டான சவடுமண்
(colluvium  & alluvium) படிந்து தாய்லாந்து, இந்தோனேசியா,  சப்பான் நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன என்பதும்,

கங்கையிலிருத்த தண்ணீர் வழிந்து ஓடும் போது உண்டான சவடுமண்
(colluvium  & alluvium) படிந்து தாய்லாந்து, இந்தோனேசியா,  சப்பான் நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன என்பதும்,
 
கங்கையிலிருத்த தண்ணீர் வழிந்து ஓடும் போது உண்டான சவடுமண்
(colluvium  & alluvium) படிந்து தசுகிசுத்தான் (Tajikistan), ஆப்கானிசுத்தான் (Afghanistan), துர்க்மெனிசுத்தான் (Turkmenistan), ஈரான் (iran), துருக்கி (Trukey), 
நிலப்பகுதிகளின் மேல்பரப்பு உண்டாகி உள்ளன என்பதும்,
இதனால்தான் இந்தப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் பூகம்பம் ஏற்படுகின்றன என்பதும்,





சவடுமண் (colluvium  & alluvium) படிமம் இறுகிப் பாறையாகி, அவை பிரண்டு விழும்போது, நிலநடுக்கம் ஏற்பட்டுச் சுனாமி (tsunami) உருவாகிறது என்பதும்,

கங்காபுராணத்தின் அடிப்படையிலான எனது யூககங்கள், அல்லது Ganga Purana Theory ஆகும்.

தேமொழி

unread,
Sep 23, 2017, 1:12:58 AM9/23/17
to மின்தமிழ்


On Friday, September 22, 2017 at 10:00:09 PM UTC-7, கி. காளைராசன் wrote:
அறிவியல் முடிவுகள் உண்மையானவை.
ஆனால், அறிவியலாளர்களின் கருத்துகள் யூகமானவை.


!!!!!!!!!
The fossil record supports and gives credence to the theories of continental drift and plate tectonics.
இவர்கள் சொல்வதெல்லாம் பொய்யா?  எல்லாமே நாடகமா? சொல்லுங்க கோபால் சொல்லுங்க  

..... தேமொழி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 23, 2017, 8:37:42 AM9/23/17
to mintamil, Kalai Email, naga rethinam

வணக்கம்.

2017-09-23 10:42 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, September 22, 2017 at 10:00:09 PM UTC-7, கி. காளைராசன் wrote:
அறிவியல் முடிவுகள் உண்மையானவை.
ஆனால், அறிவியலாளர்களின் கருத்துகள் யூகமானவை.


!!!!!!!!!
The fossil record supports and gives credence to the theories of continental drift and plate tectonics.

The fossil record supports and gives credence to the theories of Ganga Puranam   என்பதுதான் எனது நிலைப்பாடு.   
துருக்கியின் தரைப்பகுதி தோன்றிய காலம்,
சப்பான் இந்தோனேசியா இவற்றின் தரைப்பகுதி தோன்றிய காலம்,
இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள படிமத்தின் வயது,
இவை மூன்றும் ஒன்று என்றால், கங்கா புராணம் அறிவியல் அடிப்படையிலானது என்பது எனது கருத்து.  

 
இவர்கள் சொல்வதெல்லாம் பொய்யா?  எல்லாமே நாடகமா? சொல்லுங்க கோபால் சொல்லுங்க  

..... தேமொழி 
ஆகா,🐒
அறிவியலாளர் சொல்வதெல்லாம் பொய்யா?  எல்லாமே நாடகமா? சொல்லுங்க அறிவியலாளர்களே சொல்லுங்க ,
என அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.  

எனக்கு கண்டப்பெயர்ச்சி பற்றிய வாசிப்பு மிகவும் குறைவு.
நான் வாசித்துள்ள கங்காபுராணத்தில் அடிப்படையில் கண்டப்பெயர்ச்சி பற்றிய எனது கருத்துக்களைக் கீழே கொடுத்துள்ளேன்.


1) கங்கை என்ற விண்ணீர்வியனுலகு பூமியில் வீழ்வதற்கு முன்பே, அதைவிட மிகப்பெரிய விண்கோள் ஒன்று பூமியில் அதே இடத்தில் விழுந்துள்ளது. 
2) இந்த மிகப்பெரிய விண்கோள் விழுந்த காரணத்தினால்தான் இமயமலை தோன்றியுள்ளது.
3) இந்த விண்கோள் பூமியில் மோதியபோதுதான் கண்டங்கள் இடம் பெயர்ச்சி அடைந்துள்ளன.
4) இந்தியா அதே இடத்தில்தான் என்றும் உள்ளது,  மற்றைய கண்டங்கள்தான் இடப் பெயர்ச்சி அடைந்துள்ளன.

(குறிப்பு - முன்பு ஐயா ஜெயபாரதன் அவர்களும் இரண்டுவிண்கோள்கள் பூமியில் விழுந்தனவா? எனக் கேட்டிருந்தார்கள் என்று படித்த நினைவு.  ஐயா அவர்களது பதிவை என்னால் தேடிக்கண்டுபிடிக்க இயலவில்லை.) 

அன்பன்
கி.காளைராசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 23, 2017, 8:43:47 AM9/23/17
to mintamil
/எனக்கு கண்டப்பெயர்ச்சி பற்றிய வாசிப்பு மிகவும் குறைவு./

கண்டப்பெயர்ச்சி எல்லாம் அப்புறமா படிச்சிக்கலாம்.

மொதல்ல குருபெயர்ச்சி படிச்சீங்களா?

நல்லநேரமா கெட்டநேரமா னு தெரிஞ்சிக்கிறது முக்கியம். :)))

சும்மா டமாசுக்குத்தான் ஐயா.:)))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 23, 2017, 8:55:12 AM9/23/17
to mintamil
வணக்கம்.

2017-09-23 18:13 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
/எனக்கு கண்டப்பெயர்ச்சி பற்றிய வாசிப்பு மிகவும் குறைவு./

கண்டப்பெயர்ச்சி எல்லாம் அப்புறமா படிச்சிக்கலாம்.

மொதல்ல குருபெயர்ச்சி படிச்சீங்களா?

நல்லநேரமா கெட்டநேரமா னு தெரிஞ்சிக்கிறது முக்கியம். :)))

சும்மா டமாசுக்குத்தான் ஐயா.:)))
இயமலையின் ஒரு பிரிவு கங்கையின் நீரால் அடித்துச் செல்லப்பட்டு இந்தோனேசியா சப்பான் துருக்கி நிலப்பகுதிகள் உருவாகியுள்ளது.
இதுதான் மிகப் பெரிய பெயர்ச்சி.
மற்றபடி, பரதேசிக்குப் பரந்து திரியும் நாட்கள் எல்லாம் குருப்பெயர்ச்சி தான் 😁

Jaisankar Jaganathan

unread,
Sep 23, 2017, 9:16:37 AM9/23/17
to mintamil
//இயமலையின் ஒரு பிரிவு கங்கையின் நீரால் அடித்துச் செல்லப்பட்டு இந்தோனேசியா சப்பான் துருக்கி நிலப்பகுதிகள் உருவாகியுள்ளது.
இதுதான் மிகப் பெரிய பெயர்ச்சி.//


கண்டங்கள் இடப்பெயற்சி அடைவதால் வந்த மாற்றமே தவிர கங்கையால் வந்த மாற்றம் இல்லை ஐயா.\

இந்தியாவே ஆப்ரிக்காவில் இருந்து பிரிந்து வந்த துண்டு. நீங்கள் கொஞ்சம் இதையும் படிங்க

S. Jayabarathan

unread,
Sep 23, 2017, 9:19:37 AM9/23/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam
நண்பர் காளைராசன்,


வானியல் விஞ்ஞானம், புவித்தளவியல் விஞ்ஞானம், வரலாறு, பௌதிக / இரசாயன விஞ்ஞானம், புவிக் கண்டப் பெயர்ச்சி, காரண /விளைவு [Cause & Effect] நியதி, பிரபஞ்சத் தோற்றம், பெருவெடிப்பு நியதி போன்ற எந்த விதிக்குள்ளும் வராத உங்கள் கங்கா நதி யூகிப்புகள் யாவும் முரணான கருத்துக்கள்.  வாசகரை முட்டாள் ஆக்குபவை.  

இதுபோல் மீண்டும், மீண்டும் எழுதி வலை உலகு அறிவைப் புழுதி ஆக்காதீர்கள்.

நன்றி.

சி. ஜெயபாரதன்.

++++++++++++++

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 23, 2017, 11:14:10 AM9/23/17
to mintamil
வணக்கம்.

ஆப்பிரிக்கா இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற துண்டு என்பது எனது கருத்து.
கண்டப்பெயர்ச்சி படத்தில் இந்தியாவைச் சீனா மங்கோலியா முதலான ஆசியக்கண்டத்துடன் சேர்ந்து, இப்போது இருப்பதுபோன்றே வைத்துக் கொண்டு மற்ற கண்டங்கள் இடம் பெயர்ந்து செல்வதாகச் சொல்கிறேன் ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 23, 2017, 11:44:54 AM9/23/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam
வணக்கம் ஐயா.

ஒரு பெரிய விண்கோள் பூமியில் விழுந்துள்ளது.
இது விழுந்த இடத்தில் வட்டமான மிகப்பெரிய மலைத்தொடர் உருவாகிள்ளது.
இந்த வட்டமான மேட்டுப் பகுதியின் ஒரு பகுதியே இமயமலை.
இந்த விண்கோள் விழுந்த காரணத்தினால்தான் பூமியின் நிலப்பகுதி கண்டங்களாகப் பிளந்து பிரிந்துள்ளன.
மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் ஒரே காலத்தில் நடந்துள்ளன.
எனவே கண்டப்பெயர்ச்சி இமயமலை தோன்றிய காலமும், கண்டப் பெயர்ச்சி துவங்கிய காலமும் ஒன்று.

இதே இடத்தில் சற்று சிறிய அளவிலான கங்கை என்ற விண்ணீர்க் கோள் விழுந்துள்ளது.
இந்த விண்ணீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது ஏற்பட்ட ஜுவாலையால் எரிந்த ஆப்பிரிக்கா அரேபியா பாலைவனங்கள் உண்டாகியுள்ளன.
இந்த விண்ணீர்க்கோள் விழுந்த இடமே தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.
இந்த விண்ணீர்க்கோள் நிலப்பகுதியை ஊடுறுவி துளைத்துச் சென்று, கடலின் ஆழமான பகுதியாக உள்ள இடத்தின் வழியாக வெளிவந்தள்ளது.
இதனால்தான் தக்களமேகன் பாலைவனம் ஆழமாக உள்ளது.  
இதனால்தான் கடலின் ஆழமான பகுதி உருவாகியுள்ளது.
இந்த விண்ணீர்க்கோளில் இருந்த நீர் ஓடியபோது, இமயலைத்தொடரின் கிழக்கே இருந்த பகுதியை அரித்துச் சென்றுள்ளது.  அதனால் உண்டான நிலப்பகுதியே இந்தோனேசியா சப்பான் நிலப்பரப்புகள்.
இந்த விண்ணீர்க்கோளில் இருந்த நீர் ஓடியபோது, இமயலைத்தொடரின் மேற்கே இருந்த பகுதியை அரித்துச் சென்றுள்ளது.  அதனால் உண்டான நிலப்பகுதியே துருக்கி நிலப்பரப்புகள்.
இந்த விண்ணீர்கோளில் இருந்த நீரால்தான் உலகின் கடல் மட்டம் ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளது.
இந்த விண்ணீர்கோளில் இருந்த சிம்சுமாரம் (?) என்ற உயிரினத்தின் படிமம் இமயமலை அடிவாரத்தில் படிந்துள்ளது.
மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் ஒரே காலத்தில் நடந்துள்ளன.
எனவே பாலைவனங்கள், கடலின் ஆழமான பகுதி, இந்தோனேசியா சப்பான் துருக்கி நிலப்பரப்புகள் உண்டான காலம், கடலில்நீர் மட்டம் உயர்ந்த காலம், மற்றும் இமயமலை அடிவாரத்தில் கண்டறியப்பட்டுள்ள படிமத்தின் வயது எல்லாம் ஒன்றாகும்.

இந்தக் கருத்துகள் கங்காபுராணத்தின் அடிப்படையிலான எனது யூகமான கருத்துக்கள் (Theory)  ஆகும்.  மேற்கண்ட காலக்கணிப்புகள் விஞ்ஞான அடிப்படையில் கணக்கிடப்பட்டு கண்டறியப்பட்டிருந்தால், கங்காபுராணம் கூறுவது உண்மை என்றோ, அல்லது பொய் என்றோ கொள்ளலாம்.

Jaisankar Jaganathan

unread,
Sep 24, 2017, 8:04:40 AM9/24/17
to mintamil
//இந்த விண்ணீர்கோளில் இருந்த சிம்சுமாரம் (?) என்ற உயிரினத்தின் படிமம் இமயமலை அடிவாரத்தில் படிந்துள்ளது.
மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் ஒரே காலத்தில் நடந்துள்ளன.//


நண்பர் காளைராசன் அவர்களே

இப்போதைக்கு பூமியில் மட்டுமே உயிர்கள் உள்ளன.  வேறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இந்த கருத்து தவறானது

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 24, 2017, 12:11:53 PM9/24/17
to mintamil
வணக்கம்.
இந்த விண்ணீர்கோளில் இருந்த சிம்சுமாரம் (?) என்ற உயிரினத்தின் படிமம் இமயமலை அடிவாரத்தில் படிந்துள்ளது.
மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் ஒரே காலத்தில் நடந்துள்ளன.

இப்போதைக்கு பூமியில் மட்டுமே உயிர்கள் உள்ளன.  அண்டத்தில் வேறு எங்கும் உயிர்கள் எதுவும் உள்ளனவா எனக் கண்டறியும் முயற்சியில் அறிவியலாளர்கள் உள்ளனர்.  அதனால் இந்த கருத்து சரியானது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 2, 2017, 12:35:47 PM10/2/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

ஏழு நதிகள் தோன்றியது எப்படி?

கங்கா புராணக் கோட்பாடு -  

 “பரமசிவனுடைய தலையில் கங்கை விழுவதைப் பார்த்தேன்.  உடனே பூமிக்கு வரவேண்டியதல்லவா?   இவ்வளவு காலமாகியும் ஏன் இன்னும் வெளிப்படவில்லை? ஸர்வேச்வரனான சங்கரனைச் சரணமடைய வேண்டும்“ என்று மறுபடியும் அவரைக் குறித்துத் தவம் செய்தார். அதனால் பகவான் ஸந்தோஷித்து பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார்.  அவள்அப்போது ஏழு ப்ரவாகங்களாய்ப் பூமியில் விழுந்தாள்.  அவைகளில் 

1) ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும், 

2) ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின.   

3) ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது. 


1) ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும், 


2) ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின.   


Imagine it’s a long, long time ago. As the legend on the map says: “Beforethe upheaval of Central Asia. Before the subsidence of the Pacific Continent. Before the change in the position of the Polar regions. Before the Deluge.”

http://bigthink.com/strange-maps/583-east-is-eden-adam-and-eves-chinese-garden

3) ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது.  
​இதுதான் சர்வேசுவரனின் தலையிலிருந்து இழிந்து இந்தியாவில் ஓடுகின்ற புனித கங்காநதி.


(ஆனால் பிரமபுத்திரா பற்றிய குறிப்பு இல்லை.  இது இமயத்தில் உற்பத்தியாகிறது,)

தேமொழி

unread,
Oct 2, 2017, 2:23:04 PM10/2/17
to மின்தமிழ்
நீங்கள் எப்பொழுது புராணத்திற்குள்  போகிறீர்கள், எப்பொழுது அறிவியல் பக்கம் திரும்புகிறீர்கள் என்பது கண்கட்டு வித்தையை ஒத்திருப்பதாக எனக்குத் தெரிகிறது.

சரி, போகட்டும்.  இப்பொழுது புராணம் என்று உறுதியாக நினைக்கிறேன்.

ரிக் வேத கால சரஸ்வதி ஆறு எது? >>> https://en.wikipedia.org/wiki/Sarasvati_River

நீங்கள் குறிப்பிட்ட ஆறுகளில் அந்தப் பெயரைக் காணவில்லை.

ஆனால் இப்பொழுதெல்லாம்  அடாவடியாகச் சிந்து சமவெளி நாகரீகத்தைச் சரஸ்வதி சமவெளி நாகரிகம் என்கிறார்கள். 

போதாக்குறைக்கு இந்தச் சரஸ்வதி பூஜை நாளில், சரஸ்வதி இந்து சமயத்திற்குக் கடத்தப்பட  சமணக் கடவுள், ஸ்வேதாம்பர கொள்கையின்படி  வெள்ளாடை உடுத்தி கல்வி கற்பித்த பெண் என்றெல்லாம் வேறு படித்தேன்.

இந்தப் புராண ஆறுகளின் குறிப்பில் சரஸ்வதியைக் காணாதது எனக்குப் பல ஐயங்களை எழுப்புகிறது
அதில் முதன்மையாக  சரஸ்வதி சமவெளி நாகரிகம் எனப் பெயரிட முற்படுவதில் சூழ்ச்சி இருக்கிறது என்பதும் ஒன்று.

எங்கே சரஸ்வதி? பிரம்மபுத்திரா பற்றிய குறிப்பு இல்லாவிட்டாலும் பிரம்மபுத்திராவாவது இருக்கிறது.  சரஸ்வதிக்குச் சான்றும் இல்லை போலிருக்கிறது. 

..... தேமொழி 

செல்வன்

unread,
Oct 2, 2017, 3:00:20 PM10/2/17
to mintamil
இதுபோல கடத்தபட்ட தெய்வம்ன் என்கையில் வேடிக்கையாக உள்ளது

பெரியார், அண்னா படங்கள் பல கட்சிகளின் அலுவலகங்களில் காணடுகிறது. அவர்கள் கடத்தபட்டவர்களா?

ஆபிரகாம், மோஸஸ், ஏசு எல்லாரும் பல மதங்களில் காணபடுகிறார்கள். அவர்கள் கடத்தபட்டவர்களா?

பவுத்தத்தில் கணேசர் இருக்கிறார், ஆஞ்சநேயர் இருக்கிறார். அவர்கள் அவரை கடத்தினார்களா?

ஒரு தெய்வம், இறைஅடியார், நூல்கள் பல சமயங்களுக்கு ஆதர்சமாக இருக்கலாம் என்பதை உணராமல் நீங்கள் இருப்பது காளைராசன் ஐயாவின் பிழை அல்ல.

-- 

செல்வன்

தேமொழி

unread,
Oct 2, 2017, 4:49:34 PM10/2/17
to மின்தமிழ்


On Monday, October 2, 2017 at 12:00:20 PM UTC-7, செல்வன் wrote:
இதுபோல கடத்தபட்ட தெய்வம்ன் என்கையில் வேடிக்கையாக உள்ளது



கடத்தப்பட்ட XXX = ஒருவர் உடைமை  இன்னொருவரும் உரிமை கொண்டாடுவது.
Possession of stolen goods is a crime

உங்களுக்கு அந்த வார்த்தை பிடிக்கவில்லை என்றால் கடன் வாங்கியது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஆனால் கடனாக இருந்தால் அதைத் திருப்பித் தர வேண்டியிருக்கும் என நினைவில் கொள்க. 

நேற்றுதான் கணக்குப் போட்டு பார்த்தேன், என்னுடைய தாய்வழித் தாத்தா என்பவர்  15 பேருக்குத் தாத்தா.  அவரை நான் மட்டுமே என்னுடைய தாத்தா என்று உரிமை கொண்டாடிக் கொண்டு  அடுத்தவர் உரிமை கொண்டாடுவது தவறு என்று சொல்ல முடியாது.

நான்தான் ஒரிஜினல் மற்றவரெல்லாம் அக்மார்க் அல்ல என்று நான் சொல்ல விரும்பியதில்லை.

ஆகவே உங்கள் ஒப்புமையை இடத்திற்கு ஏற்றவாறு பொருத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே சரஸ்வதி  அவர் கணவர் பிரம்மா போன்றவர்கள் இந்துக் கோவில்களில் பிரபலமாக இல்லை என்பதும், பிரம்மபுத்திரா என்பதையும் திரு. காளைராசன் கொடுத்த பாடலில் காணவில்லை என்பதும் என் ஐயத்தைத் தூண்டிவிடுகிறது. 

செல்வன்

unread,
Oct 2, 2017, 6:28:03 PM10/2/17
to mint...@googlegroups.com
தேமொழி

உங்களுக்கு சமூகம், மதம் இயங்கும் விதம் தான் புரியவில்லை என நினைத்தேன். சட்ட்மும் புரியவில்லை என நிருபிக்கிறீர்கள் 😆

திருடப்பட தெய்வங்கள் பொருள் அல்ல. அவை கருத்துருவாக்கங்கள்.

இண்டெலெக்சுவல் பிராப்பர்ட்டி என வைத்துகொண்டாலும் அதன் காப்புரிமை 50 ஆண்டுகள் தான். கடன் என வைத்துகொண்டாலும் 3 ஆண்டுகளில் திரும்ப வாங்கவில்லையெனில் state of limitations அப்ளை ஆகும்.

சரஸ்வதி, பிரம்மா இந்து சமயத்தில் அதிகமாக வழிபடபடுவதில்லையா? -ஹா -ஹா. அவர் மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் வராத புராணம் இல்லை. 

சரி...சமணத்தில் இந்திரன் இருக்கிறார். அம்பிகை, இலக்குமி, இராமர், சீதை எல்லாம் இருக்குறார்கள். நவகிரகங்கள் உள்ளன. பவுத்தத்தில் யமன், ஆஞ்சநேயர், கணேசர் எல்லாரும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் யாரும் திரும்ப கேட்பதும் இல்லை, கேட்டால் கொடுக்க போவதும் இல்லை.

லிங்காயத்துகள் தனி மதமாக பிரியும் உரிமை கேட்டாலும் சிவனை வணங்காமல் இருக்க போவதில்லை. சீக்கியர்கள் கோவிந்த் சிங், ஹர்பஜன் சிங் என தூய வைணவ பெயர்களுடன் வலம் வருகிறார்கள். அவர்கள் மதம் திருமாலை போற்றுகிறது. ராஜபக்சே முதல் அனைத்து இலங்கை பவுத்தர்ஜளும் திருப்பதி வருவார்கள். ஏனெனில் இலங்கையின் காவல் தெய்வமாக மகாவம்சம் திருமாலை கொண்டாடுகிறது. அது கடனா, திருட்டா?






--

செல்வன்

தேமொழி

unread,
Oct 2, 2017, 6:38:15 PM10/2/17
to மின்தமிழ்


On Monday, October 2, 2017 at 3:28:03 PM UTC-7, செல்வன் wrote:
தேமொழி

உங்களுக்கு சமூகம், மதம் இயங்கும் விதம் தான் புரியவில்லை என நினைத்தேன். சட்ட்மும் புரியவில்லை என நிருபிக்கிறீர்கள் 😆

திருடப்பட தெய்வங்கள் பொருள் அல்ல. அவை கருத்துருவாக்கங்கள்.


அப்படியானால் அடுத்த நாட்டில் இருக்கும் கருத்துருவாக்கங்களைத்தான் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோமா?
 

இண்டெலெக்சுவல் பிராப்பர்ட்டி என வைத்துகொண்டாலும் அதன் காப்புரிமை 50 ஆண்டுகள் தான். கடன் என வைத்துகொண்டாலும் 3 ஆண்டுகளில் திரும்ப வாங்கவில்லையெனில் state of limitations அப்ளை ஆகும்.

சரஸ்வதி, பிரம்மா இந்து சமயத்தில் அதிகமாக வழிபடபடுவதில்லையா? -ஹா -ஹா. அவர் மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் வராத புராணம் இல்லை. 

சரி...சமணத்தில் இந்திரன் இருக்கிறார். அம்பிகை, இலக்குமி, இராமர், சீதை எல்லாம் இருக்குறார்கள். நவகிரகங்கள் உள்ளன. பவுத்தத்தில் யமன், ஆஞ்சநேயர், கணேசர் எல்லாரும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் யாரும் திரும்ப கேட்பதும் இல்லை, கேட்டால் கொடுக்க போவதும் இல்லை.

அவர்கள் கேட்காவிட்டால் மறுப்பு சொல்லாவிட்டால்   என்பதெல்லாம்  வேறு கதை, கேட்டால் கொடுக்கப் போவதில்லை என்ற  உங்கள் அறிவிப்பும் வியப்பில் ஆழ்த்தவில்லை 

செல்வன்

unread,
Oct 2, 2017, 6:44:59 PM10/2/17
to mint...@googlegroups.com
யார் கருத்துருவாக்கங்ஜளை திரும்ப கேட்கிறார்கள்????

லிங்காயத்துகள் மட்டுமல்ல, நீங்களே தனிமதம் ஆரம்பித்து சிவன். திருமால் என யாரை தெய்வமாக வணங்கினாலும் நான் மகிழ்ச்சியே அடைவேன். தாஅன் வணங்கும் கடவுளை இன்னொருவர் வணங்ககூடாது, அது என் பிராப்பர்ட்டி என பைத்தியகாரன் தான் சொல்வான் 😛

கடவுள் உலகம் முழுமைக்கும் பொதுவானவர்.
--

செல்வன்
It is loading more messages.
0 new messages