Re: [MinTamil] சங்கம் படிப்போமா?

104 views
Skip to first unread message

rajam

unread,
Oct 20, 2010, 12:50:47 AM10/20/10
to mint...@googlegroups.com
பகுதி 3 (ஒலிக்குறிப்புச் சொற்கள்)
------------------------------------------- 
இந்தப் பகுதி ஒரு சிறு பட்டியல் கொண்டது.
சரி. கணினிக்குள் நானே தட்டச்சு செய்த சங்க இலக்கியப் பாடல்களில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் மட்டும்)
"ஒலிக்குறிப்புச் சொற்கள்"  தேடினேன்.  
என் கோட்பாடு:
----------------- 
எந்தச் சொல்லையாவது (for example, word "A" ) "என" அல்லது "என்" அல்லது "என்ற" அல்லது "என்னும்" சொல் தொடர்ந்திருந்தால் அது (the word "A") "ஒலிக்குறிப்புச் சொல்" என்பது என் கோட்பாடு. 
எடுத்துக்காட்டாக, ... "இழும் என இழிதரும் அருவி" என்ற தொடரில் "இழும்" என்ற சொல்லைத் தொடர்ந்து "என" என்ற சொல்லைப் பார்க்கிறோம். "அருவி" என்ற பொருளின் ஒரு குறிப்பிட்ட செயலை விளக்க இங்கே "இழும்" என்ற சொல் பயன்படுகிறது.
அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நான் தேடிக் கண்டுள்ள ஒலிக்குறிப்புச் சொற்பட்டியல்:
+++++++++++++++++++++++++++
ஐயோ
தை
தௌ / தவ்
பை
இம்
ஒய்
ஒல்
கம்
கல்
கண்ண், டண் ண்
துண்
துட்க்_
தெற்ற்_
நள்
புல்
மெல்
மெத்
வல்
விம்
வெள்
இழும்
உரும்
கதும்
கிடின்
ஞெரேர்
+++++++++++++++++++++++++++
இவற்றுள் ஒவ்வொரு சொல்லும் எந்தச் சூழலில் என்ன பொருளை விளக்கப் பயன்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்வது நல்லது.
ஆனால், அதற்குக் காலமும் பொறுமையும் தேவை! தேவைப்பட்டால் மெல்ல மெல்ல, காலப்போக்கில், விளக்கம் தர இயலும்.
சுவைத்து மகிழ்க!
அன்புடன்,
ராஜம்

ஆராதி

unread,
Oct 20, 2010, 1:13:20 AM10/20/10
to mint...@googlegroups.com
திருமிகு ராஜம்
 
சங்க இலக்கியப் பரப்பில் ஒலிக்குறிப்புச் சொற்களைத் தேடிக் கண்டறிவதே பெரிய வேலை. உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். வேறுசில ஒலிக்குறிப்புச் சொற்களையும் இவற்றுடன் சேர்க்க முடியும் என நினைக்கிறேன். சரிபார்த்துக் கொண்டு தொடர்கிறேன்.
 
அன்புடன்
ஆராதி

2010/10/20 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Oct 20, 2010, 1:31:47 AM10/20/10
to mint...@googlegroups.com
திரு ஆராதி ஐயா,
இலக்கியங்களின் காலத்தையும் கருத்தில் கொள்வது நல்லது.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,
பதினெண்கீழ்க்கணக்கு,
சிலப்பதிகாரம்,
மணிமேகலை,
... .... ...
என இவ்வாறு. தனித்துப் பட்டியல் தயார் செய்வது நல்லது.
இல்லாவிட்டால் சொற்களுக்குப் பொருள் கண்டுகொள்வதில் குழப்பம் ஏற்படும்.
அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Oct 22, 2010, 12:36:47 AM10/22/10
to mint...@googlegroups.com
பகுதி 4 (ஒலி-வினைச் சொற்கள்)
-----------------------------------------
"ஒலி-வினைச் சொற்கள்" என்பது என் புதுக் காயினேஜ்!
அப்டின்னா என்ன-னு கேக்றிங்களா?
"ஒலி-வினைச்சொல்": அதாவது ஒரு பொருள் (உயிர் உடையதோ, உயிர் இல்லாததோ) தானாகவோ பிறவற்றாலோ
ஏதாவது ஒரு ஒலி/ஓசை வெளிப்படுத்தும்போது அதைச் சொல்லச் சங்கப்பாடல்களில் நாம் காணும் வினைச்சொல்.
இந்தச் சொல்லாக்கம் (coinage) + சொல்விளக்கம் (definition) உங்களுக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி,
எனக்கு, என் ஆய்வுக்கு, சங்கப்பாடல்களை நான் புரிந்துகொள்வதற்கு அது எனக்கு உதவுகிறது.
நிற்க. (திரு மணிவண்ணன் நடையைத் திருடியது! :-) )
இங்கே ஒரு பட்டியல். சங்கப்பாடல்களில் நான் கண்ட ஒலி-வினைச்சொற்களின் பட்டியல்.
இவ்வகைச் சொற்களின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை மட்டும் பட்டியலுக்காகப் பயன்படுத்தியிருக்கிறேன்.
அகராதிகளில் இம்மாதிரி வடிவத்தை entry form என்பார்கள். ஏதாவது ஒரு வடிவத்தை மாதிரிக்கு வைத்துக்கொள்ளவேண்டும், இல்லையா,
மேற்கொண்டு விளக்க?
*******************
அகவ...
(அரவ...)
அரற்ற...
அலற...
அதிர...
அழ...
ஆர்ப்ப...
இகுக்க...
இசைப்ப...
இடிக்க...
இமிர...
இமிழ...
இயம்ப...
இரங்க...
இரட்ட...
(இளி...)
(இனைய...)
உசாவ...
உஞற்ற...
உயிர்ப்ப...
உரற...
உரைப்ப...
(உழல...)
(ஊத...)
(எழ...; எழீஇ...)
எள்ள...
என்ன...
ஏங்க...
(ஏச...)
ஒலிப்ப...
ஓத...
கதற...
கரைய...
கலிப்ப...
கழற...
கறங்க...
கனைப்ப...
கிளப்ப...
குமுற...
(குரல்...)
குரைப்ப...
குழற...
கூப்பிட...
கூவ...
கூற...
சாற்ற...
சிலைப்ப...
சிலம்ப...
சிலைப்ப...
(சினவ...)
சீற...
சொல்ல...
ஞரல...
(தத்த...)
ததும்ப...
(தாரம்)
(தெவிட்ட...)
தெழிப்ப...
தேம்ப...
நரல...
நவில...
நுவல...
(நொடி...)
பகர...
பாட...
(பாராட்ட...)
பிளிற...
புகல...
புகழ...
(புடை...)
புலம்ப...
முரல...
முழங்க...
(விக்க...)
விம்ம...
விளிப்ப...
(வெடி...)
*****************************
இந்தப் பட்டியலில் உள்ள சொற்களில் பலவற்றைக் காலப்போக்கில் இழந்திருக்கிறோம்.
எடுத்துக்காட்டு: உரற, ஞரல, ததும்ப, தெழிப்ப.
(தொடரும்)
அன்புடன்,
ராஜம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

Innamburan Innamburan

unread,
Oct 22, 2010, 1:44:01 AM10/22/10
to mint...@googlegroups.com
ஆர்வத்துடன் படித்து வருகிறேன்.


2010/10/22 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Oct 27, 2010, 12:08:49 AM10/27/10
to மின்தமிழ்
பகுதி 4-க்குப் பின்னூட்டம் கொடுத்த அனைவர்க்கும் நன்றி!

பகுதி 5 - ( "ஆலல்")
------------------------- 
1. இந்தச் சொல்லின் வேர்ச்சொல் (root) "ஆல்" என்பதாகக் கொள்கிறேன். அது எனக்குச் சரிப்பட்டுவரும் கோட்பாடு.
2. "ஆல்" "ஆலும்" "ஆலின" என்ற பல வடிவங்களில் இந்தச் சொல்லைச் சங்கப் புலவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இங்கே சுருக்கத்திற்காக "ஆல..." என்ற வடிவத்தைப் பயன்படுத்துகிறேன்.
3. திரு ஹரிகி சொன்னதுபோல் "மயில், குயில் புரவி எல்லாமே ஆலும்."
4. சங்கப் பாடல்கள் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு), சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களை மட்டும் சீவிப்பார்த்தேன். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் துழாவியிருக்கலாம். ஆனால் இப்போதைக்கு இது போதும். 
5. கீழ்க்கண்ட "பொருள்களோடு" (entities என்ற ஆங்கிலச் சொல் இங்கே சரியாக உதவும்) இந்த "ஆல..." என்ற சொல் புழங்கப்பட்டுள்ளது. இவற்றின் வாயிலிருந்து ஒலி கிளம்பத் தேவையில்லை.
5-1. பறவைகள்: அன்னச்சேவல், கம்புள், குயில், மயில், சுரும்பு ("பறவை" தானே?) , பல புள் (பொதுவாகக் குறிக்கப்பெற்றது மணிமேகலையில்)
5-2. மரம்: ஆல மரம்
5-3. மழை: ஆலங்கட்டி
5-4. கடல்: பரவை
5-4. பெண்
5-6. ஆடவன்
5-7. விலங்கு: புரவி
5-8. ஆலை: கரும்பாலை
+++++++++++++++++++++++++++++++++++++++++
எந்தப் பொருளோடு இந்தச் சொல்லை ("ஆல...") புலவன் பயன்படுத்தியுள்ளான் என்பதோடு எந்தச் சூழலில் எந்த உணர்வை வெளிப்படுத்தப் பயன்படுத்தியுள்ளான் என்பதும் அறிந்துகொள்ளவேண்டியது. அதையெல்லாம் விளக்க நேரமாகும். படிப்போருக்கும் ஆர்வமில்லாமல் போகலாம்.
சுருக்கம் கருதி: உணர்வுகளையோ, செயல்பாடுகளையோ ... அடைத்துவைத்திருந்து, வாய்ப்புக்கிடைத்தவுடன், தடையில்லாமல் மட மட வென்று வெளிப்படுத்தும் ஒரு வகை நிலையை விளக்க இந்தச் சொல் பயன்பட்டிருக்கிறது. ஒரு வகையான மகிழ்ச்சிப் பரவல் நிலை ("excited spreading") என்று சொல்லத் தோன்றுகிறது. வாயிலிருந்து ஒலி கிளம்பத் தேவையில்லை.
கொசுறு: நெல்லை மாவட்டத்தில் "ஆலி பூதம்," "ஆலி பொம்மை" போன்ற வழக்காறு உண்டு. அந்த "ஆலி"யின் வடிவமும் ஆட்டமும் அறிந்தோர்க்கு இச்சொல்லின் பொருள் கூடுதலாக விளங்கும்.
தேவையானால் மேலும் பார்ப்போம்.

Tthamizth Tthenee

unread,
Oct 27, 2010, 12:22:59 AM10/27/10
to mint...@googlegroups.com
ஆலவட்டம் போடுது என்று ஒரு பாட்டிலே வரும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/27 rajam <ra...@earthlink.net>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Ravikumar

unread,
Oct 27, 2010, 3:04:31 AM10/27/10
to mint...@googlegroups.com
அருந்ததி ராயை ஆதரிப்போம் 

வணக்கம் 
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதற்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது தேசத்துரோக வழக்கு போடவும் அவரைக் கைது செய்யவும் மத்திய அரசு முயற்சிக்கிறது எனற செய்திகள் இரண்டு நாட்களாக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவர் நேற்று இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையை மொழிபெயர்த்து இத்துடன் தந்திருக்கிறேன். 
எழுத்தாளர்கள் தமது கருத்துகளை நேர்மையோடும் துணிவோடும் சொல்ல முடியாத சூழல் பாசிசச் சூழலே ஆகும். அதை நாம் அனுமதிப்பது ஜனநாயகத்துக்கு ஊறு செய்வதாகவே இருக்கும். தனது கருத்துகளைச் சொல்வதற்கு அருந்ததி ராய்க்கு இருக்கும் உரிமையை ஆதரித்துக் குரல் எழுப்பவேண்டியது படைப்பாளிகளின் தார்மீகக் கடமையாகும். இந்த அறிக்கையை இயன்ற அளவில் பரவலாக சுற்றுக்கு விடுங்கள் . அருந்ததி ராய் என்ற படைப்பாளியை சிந்தனையாளரை பாதுகாத்திட முன்வாருங்கள். 

தோழமையோடு, 
ரவிக்குமார் 
சட்டமன்ற உறுப்பினர் 
பொதுச் செயலாளர் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 

அருத்தி ராயின் அறிக்கை : 

நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும்  லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச்  சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால்  துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ' டீன் ஏஜ்'  இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.






Ravikumar

unread,
Oct 27, 2010, 3:54:15 AM10/27/10
to mint...@googlegroups.com
அன்பு மிக்க ரவிக்கு,
நான் ஹக்ஸர் தலைமையில் செயல்பட்ட ஒரு குழுவின் அங்கத்தினனாக 1989ல் ஸ்ரீநகர்(காஷ்மீர்) சென்றிருந்தேன்.மற்றொரு உறுப்பினராகிய பிரசித்திப் பெற்ற ஓவியர் குலாம் ஷேக்கும் நானும் காஷ்மீர் பிரச்னை குறித்து பொதுமக்கள் அபிப்பிராயம் அறிய கடைவீதி மக்களுடன் அளவளாவினோம் இந்திய ஃபெடரேஷ்னக்குள், காஷ்மீர் சுய நிர்ணய உரிமையுடன் இருக்க் வேண்டும் என்று ஷேக் அப்துல்லா கோரிய போது, நேரு அவரைக் கைது செய்யாமல், அந்த உரிமையை வழங்கியிருந்தால், இப்பொழுதைய நிலைமை உருவாக்கியிருக்காது என்பதுதான் பெரும்பான்மையான மக்களுடைய கருத்தாக இரூந்தது. காஷ்மீர் முஸ்லீம்களுக்கும் காஷ்மீர் பண்டிட்களுக்கும் சுதந்திரத்து முன்னால் என்றுமே பிரச்னை இருந்ததில்லை. காஷ்மீர் இந்தியாவுடன் ஐக்கியமான பிறகுதான், இந்திய ஹிந்து மதவாதக் கட்சிகளினால் பிரச்னை உருவாகியது என்றனர். என்னுடன் தில்லிப் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்த காஷ்மீர் பண்டிட் பேராசிரியர்களும் இவ்வாறுதான் சொல்வது வ்ழக்கம்.. ஜம்மு ஹிந்துக்களின் அபிப்பிராயம் வேறு.ஆனால் இவ்வளவு நடந்த பிறகு, காஷ்மீர் பிரச்னைக்கு ஒரே தீர்வு, முழு சுதந்திரந்தான். இப்பொழுதைய தங்களுடைய பொருளாதாரம், இந்திய ராணுவத்தை நம்பித்தான் இருக்கிறது என்றார்கள்.

அருந்ததி ராய் சொல்வதை இந்தப்[பின்ணணியில் தான் நான் பார்க்கிறேன்.
அன்புடன்,
இந்திரா பார்த்தசாரதி

2010/10/27 Ravikumar <adhe...@gmail.com>



--
"Knowing is enough to mislead us"-  Maurice Blanchot
visit my website:
www.writerravikumar.com
http://nirappirikai.blogspot.com

Subashini Tremmel

unread,
Oct 27, 2010, 4:02:05 PM10/27/10
to mint...@googlegroups.com
திரு.ரவிக்குமார்,
 
இந்த இழை சங்கத் தமிழ் பற்றியது. இதில் அருந்ததி ராய் பற்றிய செய்தியை இணைத்திருக்கின்றீர்கள். புதிய செய்திகளுக்குப் புதிய இழையை பயன்படுத்துங்கள். அது இழையின் நோக்கம் கெடாமல் இருக்க உதவும்.
 
அன்புடன்
சுபா

2010/10/27 Ravikumar <adhe...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Oct 27, 2010, 7:35:06 PM10/27/10
to mint...@googlegroups.com
Exactly

2010/10/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Hari Krishnan

unread,
Oct 27, 2010, 11:38:24 PM10/27/10
to mint...@googlegroups.com


2010/10/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Exactly

2010/10/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>:


It is My Legitimate Audacity.  
--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Oct 28, 2010, 12:15:26 AM10/28/10
to மின்தமிழ்

On Oct 27, 10:38 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/10/28 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
> > Exactly
>
> > 2010/10/28 Subashini Tremmel <ksubash...@gmail.com>:


>
> It is My Legitimate Audacity.
> --
> அன்புடன்,
> ஹரிகி.

சுபா கருத்தை ஆதரிக்கிறேன்.

ரவிக்குமார் எழுத்தாளர், எம் எல் ஏ ஆக இருக்கிறார்.
அவரது வலைப்பதிவு:
http://nirappirikai.blogspot.com/

தனி இழைகளில் தம் கருத்துக்கள், கட்டுரைகள்
தொடர்ந்து அளிப்பார் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

devoo

unread,
Oct 28, 2010, 12:34:37 AM10/28/10
to மின்தமிழ்
>>நெல்லை மாவட்டத்தில் "ஆலி பூதம்," "ஆலி பொம்மை" போன்ற
வழக்காறு உண்டு<<

ஆலி என்ற சொல்லை அகராதியில் தேடியதில் கண்டது -

ஆலி³ - n. prob. ஆலி-. Huge hollow figure, like a man or woman, worn
usually by dancers leading a procession in connection with temple
festivals; பூதம். *Tinn*.

இது திருநெல்வேலிப் பகுதியில் வழங்கும் ஒரு சொல் என்று அது சொல்கிறது.

வி. சுப்பிரமணியன் (சந்தவசந்தம்)

rajam

unread,
Oct 28, 2010, 1:58:14 AM10/28/10
to mint...@googlegroups.com
> ஆலி என்ற சொல்லை
> அகராதியில் தேடியதில்
> கண்டது -

நான் அந்த ஊர் ("நெல்லை
மாவட்டம்) பொண்ணுதானே!
மத்தவங்களுக்கும்
தெரியுமா-ன்னு
தெரிஞ்சிக்கத்தான்
கேட்டேன்.

இதுவரை வந்த பதிவுகளின்
மூலம் "ஆல..." என்ற சொல்லின்
அடிப்படைப்பொருள்
புலப்படத்
தொடங்கியிருக்கும் என்று
நம்புகிறேன்.



மேற்கொண்டு இந்த இழையைத்
தொடரவேண்டுமா என்று
தெரிவித்தால் நலம். நன்றி.

அன்புடன்,
ராஜம்

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Hari Krishnan

unread,
Oct 28, 2010, 2:16:36 AM10/28/10
to mint...@googlegroups.com


2010/10/28 devoo <rde...@gmail.com>

ஆலி என்ற சொல்லை அகராதியில் தேடியதில் கண்டது -

ஆலி³ - n. prob. ஆலி-. Huge hollow figure, like a man or woman, worn
usually by dancers leading a procession in connection with temple
festivals; பூதம். *Tinn*.

இது திருநெல்வேலிப் பகுதியில் வழங்கும் ஒரு சொல் என்று அது சொல்கிறது.

வி. சுப்பிரமணியன் (சந்தவசந்தம்)

:)

ஆலி அத்தோடு முடிந்துவிட்டதா?

இத்தகையள் ஆகி,உயிர் ஏமுற விளங்கும்,
முத்தநகை யாள்,விழியில் ஆலி முலைமுன்றில்
தத்திஉக, மென்குதலை தள்ள, 'உயிர்தந்தாய்!
உத்தம!' எனா, இனைய வாசகம் உரைத்தாள்:

விழியில் ஆலி,,,,, (ராமனைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்த அனுமனிடத்தில் சீதை சொன்னது. உருக்காட்டுப் படலம்)

வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி
வேலையை வென்று கும்ப கருணனை வீட்டினானை 
ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ அமரின் வெல்வார்?
சூலியைப் பொருப் பினோடும் தூக்கிய விசயத் தோளாய் 

ஆலியின் மொக்குள் அன்ன அரக்கர்.

ராவணனுக்கு மாலியவான் சொன்னது.  மாயா சீதைப் படலம்.

இந்த ரெண்டு ஆலியும் வேற.  இந்த ஆலியைப் பாருங்கள் 

துரகத் தார்ப் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்றென்ன 
அரவப் போர் மேகம் என்ன ஆலித்த

புரவி எல்லாம்...... ஆலித்த.

முடிசூட்டுப் படலம்.

இங்க ஆலி வேற.  

புட்டுப் புட்டு விளக்கலாம்.... புட்டுனால பாண்டியனுக்கே பிரம்படி கிடச்சதாம்.  அல்லாம் டீச்சர் கைல உட்டாச்.

rajam

unread,
Oct 28, 2010, 2:26:44 AM10/28/10
to mint...@googlegroups.com
புட்டுப் புட்டு விளக்கலாம்....

அதுக்குத்தானே இங்கே கூடியிருக்கோம்? ஆனா... இப்போதைக்கு நான் 10-ஆம் நூற்றாண்டுக்கு அப்புறம் வராப்லெ இல்லெ (என்னோடெ புத்தக வேலைக்காக). ஆனா அதுக்காக, அந்தச் சொல் எப்படிக் காலம் தோறும் விரிந்தும் சுருங்கியும் "ஆலித்தது" என்று தெரிந்துகொள்ள உங்களைப்போன்றவர்கள் உதவி வேண்டும் என்பதும் எனக்குத் தெரியாதது அல்ல ஐயா! அன்போடு உதவுங்கள். இது நம் தமிழுக்காக நாம் செய்யவேண்டியது.
அன்புடன்,
ராஜம்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

devoo

unread,
Oct 28, 2010, 3:25:19 AM10/28/10
to மின்தமிழ்
ஆலி


*ஆலி நாடன்*, அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்குமலர்க்
குழலியர்வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன் ...

ஆலி நாடு - இடுகுறிப் பெயரா ? காரணப் பெயரா ?

சிப்பி வகையை சேர்ந்த அரிய வகை கடல்வாழ் உயிரினம் பச்சை ஆலி.

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sunday%20Kondattam&artid=256273&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF


தேவ்

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  

rajam

unread,
Oct 28, 2010, 3:38:19 AM10/28/10
to mint...@googlegroups.com
ஆலி நாடு - இடுகுறிப் பெயரா ? காரணப் பெயரா ?

நல்ல கேள்வி!
சிப்பி வகையை சேர்ந்த அரிய வகை கடல்வாழ் உயிரினம் பச்சை ஆலி.
சிப்பி வகை உயிரினம் "ஒலி"யை எழுப்பாது, இல்லையா? 
எது எப்படி ஆயினும் அந்த "ஆல்..." என்ற வேர்ச்சொல்லின் அடிப்படைப் பொருளைப் புரிந்துகொள்வது நல்லது. அதில் உடன்பாடு வருமா என்று தெரியவில்லை.
அன்புடன்,
ராஜம் 


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

N. Ganesan

unread,
Oct 28, 2010, 3:44:53 AM10/28/10
to மின்தமிழ்

On Oct 28, 2:25 am, devoo <rde...@gmail.com> wrote:
>                                                ஆலி
>
> *ஆலி நாடன்*, அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்குமலர்க்
> குழலியர்வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன் ...
>
> ஆலி நாடு - இடுகுறிப் பெயரா ? காரணப் பெயரா ?
>

ஆலி - நதிக்குப் பழைய (தொல்தமிழ்?) பெயர்

பஞ்ச ஆப் = பஞ்ச ஆலி.
அந்நாட்டுப் பெண், பாஞ்சாலி.

வட கேரளத்தில் நம்பூதிரிகள்
ரிக்வேதத்தை காத்த ஊர்களில் ஒன்று:
பாஞ்சல். பாஞ்சால தேசத்தில்
இருந்து குடிபெயர்ந்த்ததால் இட்ட பெயர்
என்கிறார்கள்.

பைராட் ஞாபகார்த்தமாய் விராடபுரி
என்று தாராபுரம், .... ஒப்பிடலாம்.

நா. கணேசன்


> சிப்பி வகையை சேர்ந்த அரிய வகை கடல்வாழ் உயிரினம் பச்சை ஆலி.
>

> http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sunday%20Konda...

> > >www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,  


> > > send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to minTamil-
> > > unsub...@googlegroups.com
> > > For more options, visit this group athttp://groups.google.com/

> > > group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

rajam

unread,
Oct 28, 2010, 3:49:22 AM10/28/10
to mint...@googlegroups.com

On Oct 28, 2010, at 12:44 AM, N. Ganesan wrote:

>
>
> On Oct 28, 2:25 am, devoo <rde...@gmail.com> wrote:
>> ஆலி
>>
>> *ஆலி நாடன்*, அருள்மாரி,
>> அரட்டமுக்கி,
>> அடையார்சீயம்,
>> கொங்குமலர்க்
>> குழலியர்வேள், மங்கை
>> வேந்தன், கொற்றவேல்
>> பரகாலன் ...
>>
>> ஆலி நாடு - இடுகுறிப்
>> பெயரா ? காரணப் பெயரா ?
>>
>
> ஆலி - நதிக்குப் பழைய
> (தொல்தமிழ்?) பெயர்

இல்லை.

>
> பஞ்ச ஆப் = பஞ்ச ஆலி.
> அந்நாட்டுப் பெண்,
> பாஞ்சாலி.
>
> வட கேரளத்தில்
> நம்பூதிரிகள்
> ரிக்வேதத்தை காத்த
> ஊர்களில் ஒன்று:
> பாஞ்சல். பாஞ்சால
> தேசத்தில்
> இருந்து
> குடிபெயர்ந்த்ததால்
> இட்ட பெயர்
> என்கிறார்கள்.
>
> பைராட் ஞாபகார்த்தமாய்
> விராடபுரி
> என்று தாராபுரம், ....
> ஒப்பிடலாம்.
>
> நா. கணேசன்

அன்புகூர்ந்து
தமிழகத்துக்குள்ளேயே
இருப்போம். இல்லையேல்
எனக்கு இந்த உரையாடலில்
விருப்பம் இருக்காது.
நழுவிவிடுவேன்.

நன்றி!


அன்புடன்,
ராஜம்
>
>
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,

Hari Krishnan

unread,
Oct 28, 2010, 3:49:59 AM10/28/10
to mint...@googlegroups.com


2010/10/28 N. Ganesan <naa.g...@gmail.com>

ஆலி - நதிக்குப் பழைய (தொல்தமிழ்?) பெயர்


ஆமா.. ஆமா... ஆமாமா.... அப்படித்தான் ஆலி, அப்புறம் உட்டுட்டுப் போன இடம் ஆலிஉட் ஆகி, ******னர் சதியால் ஹாலிவுட்டாகிவிட்டது.  தமிழிலக்கணப்படி ஆலிஉட்டு என்று இருந்ததை, சதிகாரர்கள் ஹாலிவுட் ஆக்கியதும் இல்லாமல் கடைசி டு வையும் விட்டுவிட்டார்கள்.  தமிழன் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்கிறான்.  :D

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2010, 3:52:19 AM10/28/10
to mint...@googlegroups.com
அசட்டுப்பையா ஆலவாயா என்று என் தமக்கையார் கோவம் வந்தால் திட்டுவார்கள்

ஆமாம் ஆலவாயா என்றால் என்ன?

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

N. Ganesan

unread,
Oct 28, 2010, 3:58:57 AM10/28/10
to மின்தமிழ்

On Oct 26, 11:08 pm, rajam <ra...@earthlink.net> wrote:

யால் என்பது ஆல் மரத்தின் பழைய சொல்
போல தெரிகிறது.

நச்சினார்க்கினியர் யால் மர நிழலில் வீற்றிருக்கும்
சிவபிரானைப் பற்றிய பழைய பாட்டை மேற்கோள்
காட்டுகிறார்.

யாமை:ஆமை, யானை:ஆனை, ... போல,
யால்:ஆல் மரம்.

அன்புடன்,
நா. கணேசன்

devoo

unread,
Oct 28, 2010, 4:09:21 AM10/28/10
to மின்தமிழ்
கணேசர் ஐயா,

ராஜம் அம்மா ‘ஆலி’ என்பது நதிக்கான தொல்தமிழ்ப்பெயர் இல்லை என்று
கூறுகிறார்கள்; அது சரிதானே ? அதை ஒப்புக்கொள்ளுங்கள் முதலில்.

அதுக்குள்ள பஞ்ஜாபுக்குப் போயி, கேரளம் சுத்தி ஆலமரத்தாண்ட தாவி
வந்துட்டீங்களே !

என்னே ஆராய்ச்சியின் வேகம் !!??


தேவ்

N. Ganesan

unread,
Oct 28, 2010, 4:17:27 AM10/28/10
to மின்தமிழ்

On Oct 28, 3:09 am, devoo <rde...@gmail.com> wrote:
> கணேசர் ஐயா,
>
> ராஜம் அம்மா  ‘ஆலி’  என்பது நதிக்கான தொல்தமிழ்ப்பெயர் இல்லை என்று
> கூறுகிறார்கள்; அது சரிதானே ?  அதை ஒப்புக்கொள்ளுங்கள் முதலில்.
>
> அதுக்குள்ள  பஞ்ஜாபுக்குப் போயி, கேரளம் சுத்தி  ஆலமரத்தாண்ட தாவி
> வந்துட்டீங்களே !
>
> என்னே ஆராய்ச்சியின் வேகம் !!??
>

மௌனம் சர்வார்த்த சாதகம்.

> > > ராஜம்- Hide quoted text -

devoo

unread,
Oct 28, 2010, 7:36:59 AM10/28/10
to மின்தமிழ்
Madam is in sabbatical it seems

இடையில் தேனியாரும், கணேசனாரும் சில சொற்களைக் கூறிய ’தால்’ தெரிந்த
அளவு விளக்கம் கூறுகிறேன்.

பஞ்சாலி, பஞ்சாலிகா : பொம்மையைக் குறிக்கும் சொற்கள்.
‘அல்’ எனும் வேர் - தடை செய், அணி செய், தகுதியாகு என்னும் பொருளில்
விரியும். ஆலியோடு தொடர்பு படுத்தி ஹாலிவுட் ஆக்குவது அவரவர் திறமை.

ஆலவாய் – ஹாலாஸ்யம் (ஹால + ஆஸ்யம்) என்பதன் தமிழ் வடிவம்; மதுரை


ஆலவட்டம் – மூலம் ‘ஆலாவர்த்தம்’ (துணி விசிறி)

’ஆ’ உபஸர்கமாகவும், அவ்யயமாகவும் இருப்பது.
ஆதாரம், ஆநந்தம், ஆகமநம், ஆதேசம், ஆதர்சம், ஆதரம்,ஆதாஹநம் போன்ற ’ஆ’வில்
(முன்னொட்டு) தொடங்கும் சொற்கள் உள்ளன.

ஆலாதம், ஆலாநம், ஆலாநிகம், ஆலாபம், ஆலவாலம் (பாத்தி, பண்ணை),
ஆலாவர்த்தம் போன்றவற்றுக்கும் ‘ஆல்’ வேருக்கும் தொடர்பில்லை

தேவ்

N. Ganesan

unread,
Oct 28, 2010, 7:46:29 AM10/28/10
to மின்தமிழ்

On Oct 28, 6:36 am, devoo <rde...@gmail.com> wrote:
> ஆலவாய் – ஹாலாஸ்யம் (ஹால + ஆஸ்யம்) என்பதன் தமிழ் வடிவம்; மதுரை
>

ஆலவாய் - ஆல மரங்கள் மிக்க இடம் என்றும் கொள்ளலாம்.
கேரளாவில் ஆலவாய் உண்டு. ஆலவாய் அரண்மனை (கேரளம்):
http://www.tourtoindia.com/kerala/tourist-attractions/alwaye-palace.html

(சீர்) அலைவாய், நெல்வாய் இருக்கின்றன. -வாய் என்று முடியும்
ஊர்ப் பெயர்கள் தொகுக்கலாம். ரா.பி.சே ஊரும் பேரும் பார்க்கணும்.

நா. கணேசன்

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2010, 7:52:45 AM10/28/10
to mint...@googlegroups.com
ஆலாபனை என்றொரு சொல்

இசையில் உள்ளது

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/28 N. Ganesan <naa.g...@gmail.com>:

devoo

unread,
Oct 28, 2010, 7:57:28 AM10/28/10
to மின்தமிழ்
>>ஆலவாய் - ஆல மரங்கள் மிக்க இடம் என்றும் கொள்ளலாம்<<

தலபுராணப்படி மதுரையில் கடம்ப மரங்களே மிகுதி; இன்றும் ஸ்தல வ்ருக்ஷம்
கடம்ப மரம்தான். கடம்பவாய் என்று வேண்டுமானாலும் மாற்றுவோம் .

ஆலமரத்துக்கும் மதுரைக்கும் என்ன தொடர்பு ? எப்படியோ குழப்ப வேண்டும்
என்று முடிவு கட்டிவிட்டீர்

தேவ்

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2010, 8:03:02 AM10/28/10
to mint...@googlegroups.com
ஆலவாய் என்ற பழம் பெயரின் தலைப்பில் நரசய்யா மதுரை மாநகரத்தின் கதையைச்
சொல்கிறார். கதையைத் தொடங்கும் முதல் பக்கத்திலேயே, முதல் வரியிலேயே
“மதுரையும் தமிழும் ஒன்றாகவே பிறந்து வளர்ந்துள்ளன, இவற்றின் மூலத்தைத்
தெரிந்து கொள்வது கடினமாகும்” என்று மிகச் சரியாகவே சொல்லித் தான்
தொடங்குகிறார்

நன்றி வெங்கட் ஸ்வாமிநாதன் அவர்களுக்கு

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/28 devoo <rde...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2010, 8:06:50 AM10/28/10
to mint...@googlegroups.com
ஆலவாய் அண்ணல் (திருஆலவாய் - மதுரை)
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்.
முதல் சீர் 'மா'. இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும். 2௩௪
சீர்களுக்கிடையில் வெண்டளை பயின்று வரும்.
நேர் அசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்துகள். நிரை அசையில்
தொடங்கினால் அடிக்கு 12 எழுத்துகள்.)

நீறு பூசு நிமலன் விரிசடை
வீறு மேவிடு விண்ணதி யோடொரு
கீறு வெண்பிறைக் கீற்றனின் தாள்தொழப்
பேறு கூட்டும் பிரான் ஆல வாயனே!

எடுத்த பொற்பதம் ஏந்தெழில் ஆடலை
மடுத்த அன்பரும் வாழ்த்தி மகிழ்வுடன்
தொடுத்த பாமலர் சூடியே இன்னருள்
கொடுக்கும் ஆலவாய் மேவிய கூத்தனே!

என்று திருமதி தங்கமணி அம்மா எழுதியுள்ளார்கள்

நன்றி

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

kalairajan krishnan

unread,
Oct 28, 2010, 8:08:27 AM10/28/10
to mint...@googlegroups.com
ஐயா, வணக்கம்,

> ‘அல்’ எனும் வேர் - தடை செய், அணி செய், தகுதியாகு என்னும் பொருளில்
> விரியும். ஆலியோடு தொடர்பு படுத்தி ஹாலிவுட் ஆக்குவது அவரவர் திறமை.
>
> ஆலவாய் – ஹாலாஸ்யம் (ஹால + ஆஸ்யம்) என்பதன் தமிழ் வடிவம்; மதுரை

ஆலம் என்றால் விஷம் என்று ​பொருள், பாம்பு எல்லைகாட்டிய படலத்தில்
உள்ளது, ஆலம் உண்டவன் திருநீலகண்டன்,

விஷத்தையுடைய பாம்பானது மதுரையின் எல்லைகளை மன்னனுக்குக் காட்டியதால்
மதுரையானது ஆலவாய் என்ற ​பெயர் ​பெற்றது எனத் திருவிளையாடற்புராணம்
கூறுகிறது,

அன்பன்,
கி. காளைராசன்
--
அன்னதானம் ​செய்வோம், கண்தானம் ​செய்வோம். இவ்விருதானங்களையும்
சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

N. Ganesan

unread,
Oct 28, 2010, 8:10:49 AM10/28/10
to மின்தமிழ்

On Oct 28, 6:57 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>ஆலவாய் - ஆல மரங்கள் மிக்க இடம் என்றும் கொள்ளலாம்<<
>
> தலபுராணப்படி மதுரையில் கடம்ப மரங்களே மிகுதி;  இன்றும் ஸ்தல வ்ருக்ஷம்
> கடம்ப மரம்தான். கடம்பவாய்  என்று வேண்டுமானாலும் மாற்றுவோம் .
>
> ஆலமரத்துக்கும்  மதுரைக்கும்  என்ன தொடர்பு ? எப்படியோ குழப்ப வேண்டும்
> என்று முடிவு கட்டிவிட்டீர்
>

ஆலவாய் என்பது தமிழ்ச்சொல் என்று சொல்வதில் ஒரு குழப்பமும்
இல்லை, ஐயா.

அன்புடன்,
நா. கணேசன்

> தேவ்
>
> On Oct 28, 6:46 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Oct 28, 6:36 am, devoo <rde...@gmail.com> wrote:
>
> > > ஆலவாய் – ஹாலாஸ்யம் (ஹால + ஆஸ்யம்) என்பதன் தமிழ் வடிவம்; மதுரை
>
> > ஆலவாய் - ஆல மரங்கள் மிக்க இடம் என்றும் கொள்ளலாம்.
> > கேரளாவில் ஆலவாய் உண்டு. ஆலவாய் அரண்மனை (கேரளம்):http://www.tourtoindia.com/kerala/tourist-attractions/alwaye-palace.html
>
> > (சீர்) அலைவாய், நெல்வாய் இருக்கின்றன. -வாய் என்று முடியும்
> > ஊர்ப் பெயர்கள் தொகுக்கலாம். ரா.பி.சே ஊரும் பேரும் பார்க்கணும்.
>

> > நா. கணேசன்- Hide quoted text -

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2010, 8:17:04 AM10/28/10
to mint...@googlegroups.com
ஆலம்

என்றால் ஆலமரம் என்றும் பொருள் உண்டு

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/28 kalairajan krishnan <kalair...@gmail.com>:
> ஆலம்

devoo

unread,
Oct 28, 2010, 8:36:50 AM10/28/10
to மின்தமிழ்
>>ஆலவாய் என்பது தமிழ்ச்சொல் என்று சொல்வதில் ஒரு குழப்பமும்
இல்லை<<

மதுரை மாநகரைக் குறிக்கும் இத்தமிழ்ச்சொல் மதுரைக் காஞ்சியிலோ,
பரிபாடலிலோ இருக்கிறதா ? இருக்குமாயின் என்ன பொருளில் ?


தேவ்

rajam

unread,
Oct 28, 2010, 10:23:28 AM10/28/10
to mint...@googlegroups.com
> அசட்டுப்பையா ஆலவாயா
> என்று என் தமக்கையார்
> கோவம் வந்தால்
> திட்டுவார்கள்
>
> ஆமாம் ஆலவாயா என்றால்
> என்ன?

அக்காவைக் கேட்டீர்களா?

அன்புடன்,
ராஜம்


> unsub...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2010, 10:34:14 AM10/28/10
to mint...@googlegroups.com
கேட்கவேதானே இப்போ அக்கா வந்திருக்கீங்க

சொல்லுங்க அக்கா

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/28 rajam <ra...@earthlink.net>:

>>> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To


>>> post
>>> to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to
>>> minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>
>>
>>
>> --
>> மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>>
>> அன்புடன்
>> தமிழ்த்தேனீ
>> http://thamizthenee.blogspot.com
>> rkc...@gmail.com
>> http://www.peopleofindia.net
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:

>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send


>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post

rajam

unread,
Oct 28, 2010, 10:41:25 AM10/28/10
to mint...@googlegroups.com
தமக்கையார்போல் ஆகுமா?
அவர்கள்தானே சொன்னார்கள்!


'லொட லொட' என்று எதையாவது
'சுற்றிச் சுற்றி'ப் பேசி
'வளைய வளைய' வந்து அவர்களை
நச்சரித்திருப்பீர்கள்.


அதுதான் அப்படிச்
சொல்லியிருக்கிறார்.

அன்புடன்,
ராஜம் அக்கா!

> unsub...@googlegroups.com

Mohanarangan V Srirangam

unread,
Oct 28, 2010, 10:45:08 AM10/28/10
to mint...@googlegroups.com


2010/10/28 rajam <ra...@earthlink.net>

தமக்கையார்போல் ஆகுமா? அவர்கள்தானே சொன்னார்கள்!


'லொட லொட' என்று எதையாவது 'சுற்றிச் சுற்றி'ப் பேசி 'வளைய வளைய' வந்து அவர்களை நச்சரித்திருப்பீர்கள்.


அதுதான் அப்படிச் சொல்லியிருக்கிறார்.

அன்புடன்,
ராஜம் அக்கா!


தமிழ்த்தேனியாரே! ராஜம் அம்மா சொல்வது புரிகிறதா? 
:-))
 
 

to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

rajam

unread,
Oct 28, 2010, 10:50:45 AM10/28/10
to mint...@googlegroups.com
கா வா வா! ஸ்ரீரங்கரே, நீங்களும் பூடக மன்னராகிவிட்டீரோ?

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2010, 10:52:00 AM10/28/10
to mint...@googlegroups.com
கமகம்

rajam

unread,
Oct 28, 2010, 10:52:57 AM10/28/10
to mint...@googlegroups.com

மத்யமம்

அன்புடன்,
ராஜம்

> unsub...@googlegroups.com

rajam

unread,
Oct 28, 2010, 10:58:52 AM10/28/10
to mint...@googlegroups.com
மதுரை மாநகரைக் குறிக்கும் இத்தமிழ்ச்சொல் மதுரைக் காஞ்சியிலோ,
பரிபாடலிலோ  இருக்கிறதா ? இருக்குமாயின் என்ன பொருளில் ?
அருமையான கேள்வி!
அவசரமாக ஒரு குறிப்பு மட்டும் இப்பொ.
இங்கே இப்போது காலை. கை வேலகள் சில முடித்தபின்
வந்து மதுரைக்காஞ்சி பற்றிச் சொல்கிறேன். 

பரிபாடல் 4
(வரி எண்கள் பிறகு தருகிறேன்.)
அழல்-புரை குழை கொழு-நிழல் தரும் பல-சினை
ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்-வழக்கு-அறு-நிலை குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறு வேறு பெயரோய்!
என்ன அழகான பகுதி!
அன்புடன்,
ராஜம்

Mohanarangan V Srirangam

unread,
Oct 28, 2010, 11:19:54 AM10/28/10
to mint...@googlegroups.com


2010/10/28 rajam <ra...@earthlink.net>

கா வா வா! ஸ்ரீரங்கரே, நீங்களும் பூடக மன்னராகிவிட்டீரோ? 

ஒன்றும் இல்லை, தங்களின் ‘ஆலுதலை’ ரசித்தேன். 
அவர் ரசித்தாரா என்று கேட்டேன். 

N. Ganesan

unread,
Oct 28, 2010, 11:23:34 AM10/28/10
to மின்தமிழ்

On Oct 28, 9:45 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


>
> தமிழ்த்தேனியாரே! ராஜம் அம்மா சொல்வது புரிகிறதா?
> :-))
>
>

ஆலவட்டம் என்றால் என்ன?

கணேசன்

rajam

unread,
Oct 28, 2010, 11:29:41 AM10/28/10
to mint...@googlegroups.com
ஒரு ஊதுபத்தி கொளுத்தி
எடுத்துக்கொள்லுங்கள்.

தீயில்லாத
குச்சிப்பகுதியைப்
பிடித்துக்கொண்டு அந்த
ஊதுபத்தியை வட்டமாகச்
சுற்றுங்கள்.

அறுதலற்ற ஒளிவட்டம்
ஒன்று கிடைக்கும்.
அதுபோன்றது தான் ஆலவட்டம்
என்று நான்
புரிந்துகொள்வது.

மேலும் தகவல்
கிடைக்கும்போது தருகிறேன்.

அன்புடன்,
ராஜம்


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

rajam

unread,
Oct 28, 2010, 11:42:10 AM10/28/10
to mint...@googlegroups.com
"ஆலாய்ப் பறத்தல்" பற்றித் திரு பூ. ஆலாலசுந்தரனார் ஒரு அழகான கட்டுரை எழுதியிருந்தார் -- அது
"தமிழ் விருந்து" என்ற உரைநடை நூலில் இருந்தது. இளங்கலை வகுப்பில் எங்களுக்கு அது உரைநடை நூல் 
(1958-1961).
யாரிடமாவது அந்தப் பழைய நூல் இருந்தால் அந்தக் கட்டுரையைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மிக நல்ல கட்டுரை.
அன்புடன்,
ராஜம்


On Oct 28, 2010, at 8:29 AM, rajam wrote:

ஒரு ஊதுபத்தி கொளுத்தி எடுத்துக்கொள்லுங்கள்.

தீயில்லாத குச்சிப்பகுதியைப் பிடித்துக்கொண்டு அந்த ஊதுபத்தியை வட்டமாகச் சுற்றுங்கள்.

அறுதலற்ற ஒளிவட்டம் ஒன்று கிடைக்கும். அதுபோன்றது தான் ஆலவட்டம் என்று நான் புரிந்துகொள்வது.

மேலும் தகவல் கிடைக்கும்போது தருகிறேன்.

அன்புடன்,
ராஜம்


On Oct 28, 2010, at 8:23 AM, N. Ganesan wrote:



On Oct 28, 9:45 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:

தமிழ்த்தேனியாரே! ராஜம் அம்மா சொல்வது புரிகிறதா?
:-))



ஆலவட்டம் என்றால் என்ன?

கணேசன்

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Hari Krishnan

unread,
Oct 28, 2010, 11:44:52 AM10/28/10
to mint...@googlegroups.com


2010/10/28 N. Ganesan <naa.g...@gmail.com>

ஆலவட்டம் என்றால் என்ன?

கணேசன்

எனக்குத் தெரிந்த ஆலவட்டம் இது:

Sun and Arc 001a.jpg
Sun and Arc 001a.jpg

rajam

unread,
Oct 28, 2010, 11:51:28 AM10/28/10
to mint...@googlegroups.com
அருமை! அழகு! நன்றி!

On Oct 28, 2010, at 8:44 AM, Hari Krishnan wrote:



2010/10/28 N. Ganesan <naa.g...@gmail.com>
ஆலவட்டம் என்றால் என்ன?

கணேசன்

எனக்குத் தெரிந்த ஆலவட்டம் இது:

<Sun and Arc 001a.jpg>

--
அன்புடன்,
ஹரிகி.

Nagarajan Vadivel

unread,
Oct 28, 2010, 11:53:29 AM10/28/10
to mint...@googlegroups.com
ஆசட்டுப் பையா ஆலவாயா தேடலில் ஆலவாயா என்று ராவணனைக் குரிப்பிடுவதைக் கீழே உள்ள் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்
http://groups.google.ge/group/piravakam/browse_thread/thread/ba16940318860258

*இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே*

*இராவணன் மேலது நீறு* - இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன்
அங்கமெங்கும் அணிவது திருநீறு

*எண்ணத் தகுவது நீறு* - தியானிக்க ஏற்றது திருநீறு

*பராவணம் ஆவது நீறு* - பாராயணம் செய்யப்படுவது திருநீறு

*பாவம் அறுப்பது நீறு* - பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு

*தராவணம் ஆவது நீறு* - தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு

*தத்துவம் ஆவது நீறு* - எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது
திருநீறு.

*அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே* - அரவுகள் (பாம்புகள்) வணங்கும்
(நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே
ராவணன் ப்ற்றிய குறிப்புகள் சீதைக்கு ராமன் சித்தப்பா என்பதிலிருந்து மாறி சீதை ராவணின் மகள் என்று ஆல்வாய் ஹாலிவுட் ஆனதை விட மேலாகவே கூறியுள்ளார்கள்
அசட்டுப்பையாவில் அசடு என்று தேடத்தொடங்கினால் அது கலைஞரில் தொடங்குகிறது
நாகராசன்

2010/10/28 rajam <ra...@earthlink.net>
அசட்டுப்பையா  ஆலவாயா என்று என் தமக்கையார்  கோவம் வந்தால் திட்டுவார்கள்

ஆமாம் ஆலவாயா  என்றால் என்ன?

அக்காவைக் கேட்டீர்களா?

அன்புடன்,
ராஜம்


On Oct 28, 2010, at 12:52 AM, Tthamizth Tthenee wrote:

அசட்டுப்பையா  ஆலவாயா என்று என் தமக்கையார்  கோவம் வந்தால் திட்டுவார்கள்

ஆமாம் ஆலவாயா  என்றால் என்ன?


அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:


2010/10/28 N. Ganesan <naa.g...@gmail.com>

ஆலி - நதிக்குப் பழைய (தொல்தமிழ்?) பெயர்


ஆமா.. ஆமா... ஆமாமா.... அப்படித்தான் ஆலி, அப்புறம் உட்டுட்டுப் போன இடம்
ஆலிஉட் ஆகி, ******னர் சதியால் ஹாலிவுட்டாகிவிட்டது.  தமிழிலக்கணப்படி ஆலிஉட்டு
என்று இருந்ததை, சதிகாரர்கள் ஹாலிவுட் ஆக்கியதும் இல்லாமல் கடைசி டு வையும்
விட்டுவிட்டார்கள்.  தமிழன் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்கிறான்.  :D
--
அன்புடன்,
ஹரிகி.

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

devoo

unread,
Oct 28, 2010, 12:05:24 PM10/28/10
to மின்தமிழ்
> ஆலவட்டம் என்றால் என்ன?<

ஆனைமுகரின் அறிவினாவுக்கான விடை
இந்த வலைத்தளத்தில் நான்காம் புகைப்படத்தில் -

http://www.aralypillaiyar.com/other_pages/thiruvila.html


தேவ்

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2010, 12:01:21 PM10/28/10
to mint...@googlegroups.com
நான்  பிடித்த ஆலவட்டம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/28 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Sun and Arc 001a.jpg
ஆலவட்டம்.jpg

rajam

unread,
Oct 28, 2010, 12:12:47 PM10/28/10
to mint...@googlegroups.com
அழகு! அழகு! அருமை! நன்றி!


On Oct 28, 2010, at 9:01 AM, Tthamizth Tthenee wrote:

நான்  பிடித்த ஆலவட்டம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/28 Hari Krishnan <hari.har...@gmail.com>


2010/10/28 N. Ganesan <naa.g...@gmail.com>
ஆலவட்டம் என்றால் என்ன?

கணேசன்

எனக்குத் தெரிந்த ஆலவட்டம் இது:

<Sun and Arc 001a.jpg>

--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil<Sun and Arc 001a.jpg><ஆலவட்டம்.jpg>

rajam

unread,
Oct 28, 2010, 12:15:52 PM10/28/10
to mint...@googlegroups.com
இது extended Tamil போல extended பொருள்.


> http://www.aralypillaiyar.com/other_pages/thiruvila.html


இந்தப் படத்தில் எது
ஆலவட்டம்? கொடி
தெரிகிறது, குடை தெரிகிறது.

வட்டமாகச் சுழற்றி
"ஆரத்தி/ஆலத்தி" எடுப்பது
ஆலவட்டமா?
தயவுசெய்து
விளக்குங்களேன்.


"பருந்தின் ஆலவட்டம்"
நமக்குத் தெரியாத தொடர்
அன்று.



கண்ணனின் வலைப்பதிவுகள்
"ஆலவட்டத்தில்."

உள்ளீடற்றது வட்டம் -- என்
கருத்துக்கு அது
ஒத்துவருகிறது.

மற்றபடி இந்தத் தொடரைப்
புரிந்துகொள்வது அவரவர்
விருப்பம்!

அன்புடன்,
ராஜம்

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

N. Ganesan

unread,
Oct 28, 2010, 12:16:05 PM10/28/10
to மின்தமிழ்

On Oct 28, 10:42 am, rajam <ra...@earthlink.net> wrote:
> "ஆலாய்ப் பறத்தல்"  
> பற்றித் திரு பூ.  
> ஆலாலசுந்தரனார் ஒரு அழகான  
> கட்டுரை எழுதியிருந்தார்  
> -- அது
> "தமிழ் விருந்து" என்ற  
> உரைநடை நூலில் இருந்தது.  

செட்டியாரவர்களின் “கட்டுரை விருந்து” என நினைக்கிறேன்.

> >>www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to minTamil-

> >> unsub...@googlegroups.com


> >> For more options, visit this group athttp://groups.google.com/
> >> group/minTamil
>
> > --

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage  
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you  
> > may like to visit our Muthusom Blogs at: http://

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com


> > For more options, visit this group athttp://groups.google.com/

> > group/minTamil- Hide quoted text -

rajam

unread,
Oct 28, 2010, 12:19:41 PM10/28/10
to mint...@googlegroups.com

On Oct 28, 2010, at 9:16 AM, N. Ganesan wrote:

>
>
> On Oct 28, 10:42 am, rajam <ra...@earthlink.net> wrote:
>> "ஆலாய்ப் பறத்தல்"
>> பற்றித் திரு பூ.
>> ஆலாலசுந்தரனார் ஒரு அழகான
>> கட்டுரை எழுதியிருந்தார்
>> -- அது
>> "தமிழ் விருந்து" என்ற
>> உரைநடை நூலில் இருந்தது.
>
> செட்டியாரவர்களின்
> “கட்டுரை விருந்து” என
> நினைக்கிறேன்.

ஆமாம்! பெயர்
மறந்துபோயிருந்தது.
நினைவூட்டியதற்கு நன்றி.

சுவையான கட்டுரைகள் உள்ள
புத்தகம்!

> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,

Nagarajan Vadivel

unread,
Oct 28, 2010, 12:22:00 PM10/28/10
to mint...@googlegroups.com
நான் கேட்ட ஆலவட்டம் இங்கே கீழே சொடுக்க, கேட்க

http://www.youtube.com/watch?v=JG79EaiMVs4&feature=mfu_in_order&playnext=1&videos=Md9QXy9tEYk

நாகராசன்
2010/10/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv
Sun and Arc 001a.jpg

Innamburan Innamburan

unread,
Oct 28, 2010, 12:27:33 PM10/28/10
to mint...@googlegroups.com
அவர்கள் ஆலவட்டமாடட்டும். சிலர் ஆலாய் பறப்பார்களே. நானோ கமாஸ்.
இன்னம்பூரான்

2010/10/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
Sun and Arc 001a.jpg

devoo

unread,
Oct 28, 2010, 12:37:20 PM10/28/10
to மின்தமிழ்
> எது ஆலவட்டம்? கொடி
> தெரிகிறது, குடை தெரிகிறது.

இரண்டுக்கும் நடுவில் இருப்பது; வட்டமாகவோ,
இதய வடிவிலோ இருக்கும்.

சத்ரம், சாமரம், த்வஜம், ஆலாவர்த்தம், த(d)ர்பணம் போன்றவை ஷோடச( 16)
உபசாரங்களில் அடங்கும்


தேவ்

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  

rajam

unread,
Oct 28, 2010, 12:56:29 PM10/28/10
to mint...@googlegroups.com, DEV RAJ
பரிபாடல் 4
//(வரி எண்கள் பிறகு தருகிறேன்.) //
இதோ: 66-69
அழல்-புரை குழை கொழு-நிழல் தரும் பல-சினை
ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்-வழக்கு-அறு-நிலை குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறு வேறு பெயரோய்!
---------- 
மதுரைக்காஞ்சிப் பகுதி (125-130
"... ... ...
கால் என்ன-க் கடிது உராஅய்
நாடு கெட எரி பரப்பி
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து
அரசு-பட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடு-திறல் உயர்-புகழ் வேந்தே
... ... ..."
+++++++++++++++++++++++++++++++++
தேவ் கேட்ட கேள்விக்கு யானறிந்த விடை:
 "ஆலவாய்" என்ற தொடர் பரிபாடலிலும் இல்லை; மதுரைக்காஞ்சியிலும் இல்லை.

அன்புடன்,
ராஜம்

devoo

unread,
Oct 28, 2010, 1:03:46 PM10/28/10
to மின்தமிழ்
> > எது ஆலவட்டம்?<<

நம்பெருமாளும் தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி,
திருவெண்சாமரம், *திருவாலவட்டம்* , திருவெண்கொற்றக்குடை, வெண்முத்தின்
கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில்
அனுப்பிவைத்து .........

http://srirangapankajam.wordpress.com/2008/08/17/pesum-arangan-93/


தேவ்

> > >www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,  

rajam

unread,
Oct 28, 2010, 1:03:43 PM10/28/10
to mint...@googlegroups.com
ஓ! பார்த்த நினைவு வருகிறது.
கோயில் குளங்களுக்குப்
போய் ஆண்டுக்கணக்காகிறது!

அவ்வை வகுப்பிலிருந்து
பின்வரும் நினைவு:


//ஷோடச( 16)
> உபசார//ம்
ஒவ்வொன்றும் ஒரு
குறிப்பிட்ட செயலைக்
குறிக்கும்.


அந்த ஒவ்வொரு செயலுக்கும்
ஒரு குறிப்பிட்ட பொருள்
பயன்படும்.

அங்கேதான் "ஆலவட்டம்" (எந்த
வடிவில் இருந்தாலும் --
வட்டமாகவோ இதய வடிவிலோ)
பயன்படும்.


அதைச் "சுழற்றி"ச் செய்வது
ஒரு "உபசாரமாக" இருக்கலாம்.
அந்தச் செயலுக்குத்தான்
"ஆலவட்டம்" என்ற பெயராக
இருக்கும் என்று
தோன்றுகிறது.
பொருளுக்கு? "காரணப்
பெயராக" இருக்கலாம்
என்று தோன்றுகிறது.

அன்புடன்,
ராஜம்



> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,

devoo

unread,
Oct 28, 2010, 1:18:31 PM10/28/10
to மின்தமிழ்
>>அதைச் "சுழற்றி"ச் செய்வது ஒரு "உபசாரமாக" இருக்கலாம்<<

அதுதான் சரி.

திருக்கச்சி நம்பிகள் காஞ்சீபுரத்தில் ஆலவட்ட கைங்கர்யம் செய்தவர்.

குடை, சாமரம், ஆலவட்டம் போன்றவை தாமிரத்தில் கையால் எளிதாகச் சுழற்றும்
வண்ணம் சிறிய வடிவில் ஆலய வழிபாட்டில் இன்றும் இடம் பெறுகின்றன.
இணையத்தில் படம் கிடைக்கவில்லை.

தற்போது காக்காய் பிடிப்பது என்னும் பொருளில் ‘ஆலவட்டம் போடுதல்’ என்று
கூறுகின்றனர்


தேவ்

> >>>www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,

devoo

unread,
Oct 28, 2010, 1:22:03 PM10/28/10
to மின்தமிழ்
>>"ஆலவாய்" என்ற தொடர் பரிபாடலிலும் இல்லை;
மதுரைக்காஞ்சியிலும் இல்லை.<<

தொல் இலக்கியத்தில் இல்லாத இச்சொல் திருமுறையில் எப்படி இடம் பெற்றது ?

அதற்கு எப்படிப் பொருள் கொள்வது ?


தேவ்

> >>www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to minTamil-

> >> unsub...@googlegroups.com


> >> For more options, visit this group athttp://groups.google.com/
> >> group/minTamil
>
> > --

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage  
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you  
> > may like to visit our Muthusom Blogs at: http://

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com

rajam

unread,
Oct 28, 2010, 1:34:52 PM10/28/10
to mint...@googlegroups.com
தொல் இலக்கியத்தில் இல்லாத சொற்கள் காலப்போக்கில் வளர்ந்திராவிட்டால் மொழி என்றைக்கோ
அழிந்துபோயிருக்கும்.
ஆலவாய்க்கு என்ன பொருள் என்று எனக்குத் துணிவாகத் தெரியவில்லை.
ஆனால் பரிபாடலில் பாருங்கள்:
ஆலம் ("ஆலமரம்"), கடம்பு ("கடம்பு மரம்"), நல்யாற்று நடு ("அரங்கம்"), குன்று ("குன்றம்") -- இந்த இடங்களில் "மேவியவனுக்கு"  ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் என்று புலவர் வியந்திருக்கிறார்.
இவற்றுள் முதல் இரண்டும் இணைந்திருக்கலாம், இல்லையா?
அன்புடன்,
ராஜம் 


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

rajam

unread,
Oct 28, 2010, 1:39:05 PM10/28/10
to mint...@googlegroups.com
இன்னொன்று...
"ஆலமர் செல்வன்" சிவனைக் குறிப்பதாக நம்பிக்கை.
தேவையானால் இலக்கியப் பகுதிகள் பிறகு பார்ப்போம்.

rajam

unread,
Oct 28, 2010, 1:52:42 PM10/28/10
to mint...@googlegroups.com
மற்றுமொன்று:
நான் குறிப்பிட்ட பரிபாடல் 4 திருமாலைப் பற்றியது; 
வியப்பாக இருக்கிறதா?!!
(கொசுறு: பரிபாடல் மிக அழகிய இலக்கியம்.)
அன்புடன்,
ராஜம் 

rajam

unread,
Oct 28, 2010, 2:22:36 PM10/28/10
to mint...@googlegroups.com
> தொல் இலக்கியத்தில்
> இல்லாத இச்சொல்
> திருமுறையில் எப்படி
> இடம் பெற்றது ?
>
இதற்கு ஒரு மறுமொழியைக்
கொடுத்திருக்கிறேன். அது
போக ...

> அதற்கு எப்படிப் பொருள்
> கொள்வது ?

தேவ், இந்தக் கேள்வியை
எழுப்பியதற்குத் தனியாக
எடுத்து நன்றி சொல்கிறேன்!

இதற்கு மறுமொழி தரவும்
எனக்கு மிகவும் விருப்பம்.
ஆனால் அது "கொள் முறை" (methodology/
technique ... ) பற்றியது என்று
நான் நினைப்பதால்
சற்று "அவகாசம்" தேவை.
கட்டாயம் பார்ப்போம்.

அன்புடன்,
ராஜம்


> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,

devoo

unread,
Oct 28, 2010, 3:13:39 PM10/28/10
to மின்தமிழ்
>> நான் குறிப்பிட்ட பரிபாடல் 4 திருமாலைப் பற்றியது <<


”பிறவாப் பிறப்பிலை, பிறப்பித்தோர் இலையே !”

இவ்வரி ‘அஜாயமாநோ பஹுதா விஜாயதே’ என்னும் மறை மொழியை உணர்த்துவது.

”செங் கட் காரி, கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!”

இதை ‘திகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும்’ என்னும்
அருளிச் செயலோடு ஒப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

வைணவர் பரிபாடலுக்கு உரிய இடம் அளிக்காதது பற்றி இன்னம்பூர் ஐயா
குறைப்பட்டுக் கொள்வார். மிக நுட்பமான உண்மைகளைப் பரிபாடல் கூறும்

தேவ்

> >>>>>>www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> >>>>>> send email to minT...@googlegroups.com
> >>>>>> To unsubscribe from this group, send email to minTamil-
> >>>>>> unsub...@googlegroups.com
> >>>>>> For more options, visit this group athttp://groups.google.com/
> >>>>>> group/minTamil
>
> >>>>> --
> >>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>

> ...
>
> read more »

rajam

unread,
Oct 28, 2010, 3:28:40 PM10/28/10
to mint...@googlegroups.com
> வைணவர் பரிபாடலுக்கு
> உரிய இடம் அளிக்காதது
> பற்றி இன்னம்பூர் ஐயா
> குறைப்பட்டுக்
> கொள்வார். மிக நுட்பமான
> உண்மைகளைப் பரிபாடல்
> கூறும்


1980~1990+ ஆண்டுகளில் ...
பரிபாடலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து என்
மாணவர்களுக்குத்
தரவேண்டும் என்ற துடி
எனக்கு.


நான் அந்த முயற்சியில்
தனியாக
ஈடுபட்டிருந்தபோது
நண்பர் ஜார்ஜ் ஹார்ட்
எனக்கு அறிமுகமானார்.
அவரிடம் என்
கருத்துக்களையும்
தேட்டத்தையும் சொல்ல,
இருவருமாகச் சேர்ந்து
பரிபாடலை
மொழிபெயர்க்கலாம் என்ற
முடிவு. நான் முதலில் ஒரு
பாடலைச்
சொல்லுக்குச்சொல்லாக
ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து அவருக்கு
அனுப்புவேன். அவர் அதை
ஆங்கிலத்தில் "கவிதைப்
படுத்துவார்." இப்படி ஒரு
சில பாடல்கள் சென்றன (3~6?
நினைவில்லை; பல ஆண்டுகள்
கடந்துவிட்டதால்).
காலப்போக்கில் எனக்கு
அந்த "ஆங்கிலக்
கவிதைப்படுத்தல்"
ஒத்துவரவில்லை. மேலும்
கணினிச்சிக்கல்கள்; இன்ன
பிறவற்றால் என் பரிபாடல்
மொழிபெயர்ப்பு
தடைப்பட்டது.


என்றாவது என் "ஆசை"
நிறைவேறும்!

அன்புடன்,
ராஜம்


> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,

Innamburan Innamburan

unread,
Oct 28, 2010, 10:32:21 PM10/28/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
வந்தனன். வந்தனன். என் வருத்தத்தை ரொம்ப நாள் முன்னால் கோடி காட்டிருந்தேன். அதை ராஜம் பார்ந்திருப்பது ஒரு ஆறுதல். ரெ.கா. நான் அது பற்றி மேலும் எழுத வேண்டும் என்றார். என் ஆதங்கத்தை கூடிய சீக்ரம் இந்த இழையில் கொட்டிட்றேன்.
இன்னம்பூரான்

2010/10/29 rajam <ra...@earthlink.net>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

rajam

unread,
Oct 28, 2010, 11:37:07 PM10/28/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan, DEV RAJ
பரிபாடல் பற்றிய உங்கள் கருத்தை என் பார்வைக்குத் திருப்பிய தேவ் அவர்களுக்கு என் நன்றி! 
அன்புடன்,
ராஜம் 


kalairajan krishnan

unread,
Oct 29, 2010, 5:59:12 AM10/29/10
to mint...@googlegroups.com
ஐயா ​தேவ் அவர்களுக்கு வணக்கம்

திருவிளையாடற் பகுதியில் ஆலவாய் ​பெயர்க்காரணம் கூறப்பட்டுள்ளது,

அப்பகுதியை இத்துடன் இணைத்துள்ளேன்

பாம்பு எல்லையைக் காட்டுதல்
2344 கீட்டி சைத்தலைச் சென்றுதன் கேழ்கிளர் வாலை
நீட்டி மாநகர் வலம்பட நிலம்படிந் துடலைக்
கோட்டி வாலைவாய் வைத்துவேற் கொற்றவற்கு
எல்லை காட்டி மீண்டரன் கங்கண் மானது கரத்தில்

மதில் அமைத்தல்
2345 சித்தர் தஞ்சின கரத்தெழுந் தருளினார் செழியன்
பைத்த வாலவாய் கோலிய படிசுவர் எடுத்துச்
சுத்த நேமிமால் வரையினைத் தொட்டகழ்ந் தெடுத்து
வைத்த தாமென வகுத்தனன் மஞ்சுசூ ழிஞ்சி

2346 தென்றி சைப்பரங் குன்றமும் வடதிசை இடபக்
குன்ற முங்குடக்கு ஏடக நகரமுங் குணபாற்
பொன்ற லங்கிழித் தெழுபொழிற் பூவண நகரும்
என்ற நாற்பெரு வாயில்கட்கு எல்லையா வகுத்தான்

இப்பாடலிலே திருப்பூவணநகரம் மதுரையின் கிழக்கு எல்லை என்று
கூறப்படுகிறது. இக்காரணத்தினாலேயே திருஞானசம்பந்தர் மதுரை ​செல்லும்
முன் கிழக்கு வாயிலான திருப்பூவணம் வந்து வழிபட்டு மதுரை ​சென்றுள்ளார்,

2347 அனைய நீண்மதில் ஆலவாய் மதிலென அறைவர்
நனைய வார்பொழில் நகரமு மாலவாய் நாமம்

இப்பாடலிலே மதிலுக்கு ஆலவாய் மதில் என்றும், நகருக்கு ஆலவாய் என்றும்
பெயர் உண்டாது என்று குறிப்பிடப் ​பெற்றுள்ளது,
புனைய லாயதெப் போதுமப் பொன்னகர் தன்னைக்
கனைய வார்கழற் காலினான் பண்டுபோற் கண்டான்

2348 கொடிகள் நீண்மதின் மண்டபங் கோபுரம் வீதி
கடிகொள் பூம்பொழில் இன்னவும் புதியவாக் கண்டு
நெடிய கோளகை கிரீடம்வா ணிழன்மணி யாற்செய்
தடிகள் சாத்திய கலன்களும் வேறுவே றமைத்தான்

2349 பல்வ கைப்பெருங் குடிகளின் பரப்பெலா நிரப்பிச்
செல்வ வானவர் புரந்தரன் புரத்தினுஞ் சிறப்ப
மல்லல் மாநகர் பெருவளந் துளும்பிட வளர்த்தான்
தொல்லை நாட்குல சேகரன் போல்வரு தோன்றல்

திருவாலவாயான படலம் முற்றிற்று,

அன்பன்
கி. காளைராசன்

--
அன்னதானம் ​செய்வோம், கண்தானம் ​செய்வோம். இவ்விருதானங்களையும்
சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Hari Krishnan

unread,
Oct 29, 2010, 8:23:33 AM10/29/10
to mint...@googlegroups.com


2010/10/29 kalairajan krishnan <kalair...@gmail.com>

2347    அனைய  நீண்மதில்  ஆலவாய்  மதிலென  அறைவர்
       நனைய  வார்பொழில்  நகரமு  மாலவாய்  நாமம்

இப்பாடலிலே மதிலுக்கு ஆலவாய் மதில் என்றும், நகருக்கு ஆலவாய் என்றும்
பெயர் உண்டாது என்று குறிப்பிடப் பெற்றுள்ளது,
       புனைய  லாயதெப்  போதுமப்  பொன்னகர்  தன்னைக்
       கனைய  வார்கழற்  காலினான்  பண்டுபோற்  கண்டான்

இது பல்கலைக் கழகப் பேரகராதியின் விளக்கம்: 

திருவாலவாய் tiru-v-ālavāy : (page 1918)

சிவபெருமான்மீது பாடிய ஒரு பிரபந்தம்.

திருவாலவாய் tiru-v-ālavāy

n. < id. + ஆலவாய். Madura, as encircled by a serpent; [பாம்பினாற் குழப்பெற்றது] மதுரை. திருவாலவா யரனிற்கவே (தேவா. 858, 1).


லெக்சிகனில் அச்சுப்பிழை இருப்பதை ஓரிரு இடங்களில் குறித்து வைத்திருக்கிறேன்.  பாம்பினாற் சூழப்பெற்றது இன்னொரு எடுத்துக்காட்டு.  
Reply all
Reply to author
Forward
0 new messages