சுத்தானந்தம் - 2 -ஸாகித்யகர்த்தா, அருட்கவி சுத்தானந்தர்

396 views
Skip to first unread message

Chandra sekaran

unread,
Apr 17, 2009, 2:44:33 PM4/17/09
to minT...@googlegroups.com
கவியோகியார் எழுதிய பாடல்கள் அனைத்துமே அருட்கவிகள். வார்த்தைப்ரயோகமாகட்டும், நடையாகட்டும், சாமானியன் பேனா எடுத்து தீட்டும் வரிகள் அல்ல அவை. அருள் சித்தம் ஒளிர, வார்த்தைகள் வந்து விழ, அவை பாடலாய், அவர் வாயாலேயே கணீர் குரலில் கேட்பது ஒரு ஆனந்தம். நான் கண்ட பல பெரியோர்கள், அவர் பாடலை அப்படியே மேடைகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ உடனுக்குடன் வடித்து, பாடி குடுத்த கதைகள் பல கூறக் கேட்டுள்ளேன்.
கீர்த்தனாஞ்சலி அவர் பாடல்களைத் தொகுத்து எழுதப்பட்டது. ராகம், தாளம் போன்றவை பாடலின் முகப்பில் போட்டு எழுதியுள்ளார். அவற்றுள் பல பாடல்கள் பலரால் பாடப்பெற்று பாட்டால் பாடகரும், அந்தப் பாடகரால் பாட்டும் உயர்வுற்றன.

சில பாடல்களை இந்த URLல் இட்டுள்ளார்கள்:

http://www.karnatik.com/co1046.shtml

பாடல்களை முடிந்த வரையில் இந்த இழையிலே தொடர்ச்சியாய் தர முயற்சிக்கிறேன்.

சந்திரசேகரன்

N. Ganesan

unread,
Apr 17, 2009, 6:22:40 PM4/17/09
to மின்தமிழ்

நல்லது.

பல திரைப்படங்களில் கவியோகியார் பாடல்கள் இடம்பெற்றன.
அவற்றின் ஆடியோ தொடுப்பு இருந்தாலும் கொடுங்கள்.

பாடல்களைத் தமிழில் கேட்டு எழுதுவோருக்கு யோகியின் ஆசிகள் கிட்டும்.

நன்றி!
நா. கணேசன்

> சந்திரசேகரன்

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 17, 2009, 10:43:26 PM4/17/09
to மின்தமிழ்
எப்படிப் பாடினரோ என்று அருளாளர் திறம் வியந்து கவியோகியார் பாடிய
இன்னொரு பாடல் இங்கே.


பல்லவி
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அனுபல்லவி
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

சரணம்
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)

படிக்கிறவர்களுக்கும், பாடுகிறவர்களுக்கும் கவியோகியின் ஆசி துணை
இருக்கட்டும்!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 1:41:03 AM4/18/09
to minT...@googlegroups.com
சிறு வயதில் நானும் என் சகோதரியும் சேர்ந்து
 அடிக்கடி பாடும் பாடல்கள்
 
1.சகலகலா வாணியே சரணம் தாயே
சங்கீத வீணா பாணியே
 
2.அருள் புரிவாய் கருணைக் கடலே
 
3. ஜங்கார ஸ்ருதி  செய்குவாய்-ஜீவ வீணையில்
 
4.காரணம் கேட்டு வாடீ
 
5.கண்ணெடுத் தாகிலும் காணீரோ
 
ஆனால் அப்போது அந்தப் பாடல்கள் கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய பாடல்கள் என்று தெரியாது
 
 
சகல கலா வாணியே   : ராகம்:  கேதாரம்---  : ஆதிதாளம்
 
 
பல்லவி:
 
சகல கலா வாணியே- சரணம் தாயே
சங்கீத வீணா பாணியே ---சகலகலாவாணியே
 
அனுபல்லவி:
 
இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே
                                                           --சகல கலாவாணியே
 
சரணம்:
 
 
அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்  
                                                                     ---சகல கலாவாணியே
முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
முப்பெரும்  அறிவுடன் இப்பொது விளங்கிடும்
புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
                                                                                   --சகலகலாவாணியே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Chandra sekaran

unread,
Apr 18, 2009, 2:20:41 AM4/18/09
to minT...@googlegroups.com

 
1.சகலகலா வாணியே சரணம் தாயே
சங்கீத வீணா பாணியே
2.அருள் புரிவாய் கருணைக் கடலே
3. ஜங்கார ஸ்ருதி  செய்குவாய்-ஜீவ வீணையில்
4.காரணம் கேட்டு வாடீ
5.கண்ணெடுத் தாகிலும் காணீரோ
 
------------
தேனீயாரும், கிருஷ்ணமூர்த்தி ஐயாவும் என் பணியை சுலபமாக்கிவிட்டன்ர். ஏனைய பாடல்களையும் தட்டச்சு வடிவில் எதிர் பார்க்கலாமா ;)
ஒலி வடிவில் திரைப்படத்தில் வந்த சுத்தானந்தர் பாடல்கள் சிலவற்றை சீக்கிரம் இங்கு கொண்டு வருகிறேன்,

சந்திரா

karth...@gmail.com

unread,
Apr 18, 2009, 2:31:38 AM4/18/09
to மின்தமிழ்
இந்தப் பாடல் பற்றி ஒரு சர்ச்சை உண்டு; உங்களுக்கு ஏற்கனவே
தெரிந்திருக்கலாM.

குருமணி சங்கரர் கனித்தமிழ்ச் சொல்லினால் பாடியது இல்லையே!
அதுவே சர்ச்சை.

ரெ.கா.

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 2:35:20 AM4/18/09
to minT...@googlegroups.com
  சிதம்பர கீதம் 
 
பாடல் ஒன்று
  
 
 
 
     "கருணை செய்வாய்"


ராகம்:  ஹம்ஸத்வனி---  : ஆதிதாளம்
 
 
பல்லவி:
 
கருணை செய்வாய் -கஜவதனா
கானரசம் பொங்கும் ஞான வரம் தந்தே
                                   ---கருணை செய்வாய்

அனுபல்லவி :

அருளோங்கும் சுத்த சக்தி சிவகாமி
அம்பிகை சுதனே நம்பினேன் உனையே
                                    ---கருணை செய்வாய்

சரணம்:

தீங்கனி பாகு தேன்சே ரமுதம்
திருமுன் படைத்து சரணம் புகுந்தேன்
ஓங்கார விநாயக விக்ன ராஜா.....
உயர்வான வெற்றி அருளும் கணேசா!
                                      ---கருணை செய்வாய்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 18, 2009, 2:53:20 AM4/18/09
to மின்தமிழ்

On Apr 18, 11:31 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:


> இந்தப் பாடல் பற்றி ஒரு சர்ச்சை உண்டு; உங்களுக்கு ஏற்கனவே
> தெரிந்திருக்கலாM.
>
> குருமணி சங்கரர் கனித்தமிழ்ச் சொல்லினால் பாடியது இல்லையே!
> அதுவே சர்ச்சை.
>
> ரெ.கா.

சர்ச்சை செய்து கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவு இருக்காது, இல்லையா:-)

குருமணி சங்கரர் தனித் தமிழில் படவில்லை என்பது உண்மைதான். எனக்குத்
தெரிந்தவரை, அவர் தன் தாய் மொழி மலையாளத்திலும் கூடப் பாடவில்லை, ஆனால்,
தனித்தமிழ்க் கடவுள் திருச்செந்தூர் முருகன் மேல் சுப்பிரமணிய புஜங்கம்
பாடியிருக்கிறார், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மீனாக்ஷி மீது பஞ்சரத்னம்
பாடியிருக்கிறார். இப்படித் தமிழ்த் தெய்வங்களைப் பாடியதே, தனித்தமிழில்
பாடியதற்கு ஈடு தான் என்று கவியோகி கருதினாரோ என்னவோ!

அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

http://consenttobenothing.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 5:49:41 AM4/18/09
to minT...@googlegroups.com
சிதம்பர கீதம் பாடல்  2
 
 
 
 
 
சகல கலா வாணியே   : ராகம்:  கேதாரம்---  : ஆதிதாளம்
 
 
பல்லவி:
 
சகல கலா வாணியே- சரணம் தாயே
சங்கீத வீணா பாணியே ---சகலகலாவாணியே
 
அனுபல்லவி:
 
இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே
                                                           --சகல கலாவாணியே
 
சரணம்:
 
 
அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்  
                                                                     ---சகல கலாவாணியே
முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
முப்பெரும்  அறிவுடன் இப்பொது விளங்கிடும்
புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
                                                                                   --சகலகலாவாணியே

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 5:56:14 AM4/18/09
to minT...@googlegroups.com
சுத்தானந்தர் கீர்த்தனைகள்
 
சிதம்பர கீதம் பாடல்-3
 
ராகம்:   ஹம்ஸத்வனி          தாளம்:    ஆதி
 
அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே
                                                                         -----அருள் புரிவாய்
 
பரிபூர்ண ஸதானந்த வாரியே
பக்த ரக்ஷகனே பரமாத்மனே
                                                                           -----அருள் புரிவாய்
அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும்
அறிவுண்மை யின்பும் திருவுந் தருவாய்
தருமப் பயிர் வாழுந் தருணமா மழையே
தங்குல கெங்கிலும் மங்களம் பொங்கவே
 
                                                                                 -----அருள் புரிவாய்
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

annamalai sugumaran

unread,
Apr 18, 2009, 6:00:00 AM4/18/09
to minT...@googlegroups.com
என்ன தமிழ் தேனே அவர்களே !
அருட்கவி சுத்தானந்தர்- பல கீர்த்தனைளை
இட்டு அசத்தி வருகிறீர்களே !
நேற்று சந்திர புதுசேரி வந்தார்
அவரே சொல்லட்டும் என காத்திருக்கிறேன் .
பாத்தால் முதலில் உங்களை அல்லவே
பார்த்திருக்க வேண்டும் போல் இருக்கிறது
வாழ்க உங்கள் தொண்டு ! ஆர்வம் !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்


2009/4/18 Tthamizth Tthenee rkc...@gmail.com


--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 6:24:31 AM4/18/09
to minT...@googlegroups.com
திரு அண்ணாமலை சுகுமாரன் அவர்களே
ஏதோ நம்மாலான ஒரு சிறு தொண்டு
செய்வோமே என்றுதான் அவர்றைப் பதிந்து வருகிறேன்
 
சுத்தானந்த பாரதியாரின்  சிதம்பர கீதம்
 
பாடல் 4.
 
"ஜங்கார ஸ்ருதி செய்குவாய்"
 
ராகம் :பூர்வகல்யாணி
தாளம் ஆதி
 
பல்லவி
 
 
ஜங்கார ஸ்ருதி செய்குவாய் -ஜீவ வீணையில்
சங்கீதா மிருதம் பெய்குவாய்- ஜகதீஸ்வரனே
                                                                              ---ஜங்கார ஸ்ருதி செய்குவாய்
 
அனுபல்லவி
 
சங்கர சாம்ப சதாசிவ ஓம்ஹர
சம்புவெனச் சொல்லியென் ஜென்மங் கடைத்தேற
 
                                                                               ---ஜங்கார ஸ்ருதி செய்குவாய்
சரணம்
 
 
பலபல வெனுங் காலை பாடும் புள்ளோசை போலும்
பாறகடல்  உளம் விம்மி ஆர்க்கும் கர்ஜனை போலும்
மலர்களைக் கொஞ்சி வரும்  மந்தமாருதம் போலும்
மதுவுண்ட வண்டினம்  வளர்க்கும் ரீங்காரம் போலும்
                                                                                      ---ஜங்கார ஸ்ருதி செய்குவாய்
 
தடதட வெனப்பொழி சப்த மேகங்கள் போலும்
மடமட வெனவரும் மலையருவியைப் போலும்
கடகட வெனச் செல்லும் ககன லோகங்கள் போலும்
நடமிடும் சிலம்புடன் நர்த்தனம் செய்ய நானும்
                                                                                        ---ஜங்கார ஸ்ருதி செய்குவாய்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 6:41:22 AM4/18/09
to minT...@googlegroups.com
சுத்தானந்த பாரதியாரின்  சிதம்பர கீதம்
 
பாடல் 5.
 
"அருவியைப் போலும்"
 
ராகம் :    அசாவேரி     தாளம்  : சாபு
 
பல்லவி.
 
அருவியைப் போலும் காலைக் குருவியைப் போலும்
அருளை நான் பாடுகின்றேன்
                                                                      ---அருவியைப் போலும்
 
அனுபல்லவி
 
தெருவில் இருந்து ஜெய பேரிகை முழங்கவில்லை
திசையெல்லாம் புகழ்பெறும் நசையும் எனக்கில்லை
                                                                          ---அருவியைப் போலும்
 
சரணம்
 
காற்றிலும்  கதிரிலும்  கடலிலும் உன்கலைக்
காட்சிகள் காட்டுகின்றாய்
ஊற்றியென் உள்ளத்தில் உன்னிசை யமுதினை
உயிரின்பம் ஊட்டுகின்றாய்
 
போற்றினும் உலககென்னைத் தூற்றினும் உன்புகழ்
போற்றா திருக்க வியலேன்
ஆற்றுவ தெல்லாமுன் ஆராதனையின்றி
ஆடம்பரமும் அறியேன்
                                                                          ---அருவியைப் போலும்
 
அன்பு மலர்களளெல்லாம் உன் பாதம் வைத்திட்டேன்
அரனே - என் குரு
பரனே- உனது சரண்
                                                                              ---அருவியைப் போலும்
 
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுத்தானந்த பாரதியாரின்  சிதம்பர கீதம்
 
பாடல் 6.
 
ராகம் :    கோபிகாதிலகம்/கேதார கௌளம்     தாளம் :  சாய்ப்பு 
 
 
 
'ஆசை கொண்டேன் "
 
 
பல்லவி.'
 
ஆசை கொண்டேன்  வண்டே-உன்னுடனே நான்
ஈசன் புகழ் பாடவே
                                                                               ----ஆசை கொண்டேன் 
அனுபல்லவி
 
வாச மலரடித் தேன் வாரி வாரி யுண்டு
வலம் வந்து வலம் வந்து
நலம் பெறவே தினம்-
                                                                               ---ஆசை கொண்டேன் 
 
சரணம்
 
வானச் சுடர் மணியே ஞானக் கண்மணியே
வசந்த மலரழகே வன்னக் குயிலிசையே
மோன மலையருவி கானம் செய்யும் வேதமே
முத்தொழில் புரிந்திடும் சித்தனே யென்றோத
                                                                                      ----ஆசை கொண்டேன் 
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

Subashini Tremmel

unread,
Apr 18, 2009, 8:09:21 AM4/18/09
to minT...@googlegroups.com
நன்றி .  பாடல்களை இந்த இழையிலேயே தொடர்ந்து எழுதுங்கள். அனைத்தையும் தொகுத்து நமது வலையகத்தில் இணைத்து வைக்கிறேன். 
 
அன்புடன்
சுபா

2009/4/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 10:13:30 AM4/18/09
to minT...@googlegroups.com
அன்புள்ள மின் தமிழ் நண்பர்களே   
 
 
 சற்று நேரம் கிடைத்தவுடன்  முடிந்த அளவு சுத்தானந்த பாரதியாரின் பாடல்களை தட்டச்சு செய்தேன்
 
நேரத்தை மிச்சப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தவுடன்  உயர் திரு திருமூர்த்திவாசுதேவன் நினைவுக்கு வந்தார்
 
அவரையே குருவாக மனதில் நினைத்துக்கொண்டு
அவருக்கு மானசீகமாக ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு
 
நண்பர் சந்திர சேகரன் அவர்களால்
எனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட
 
திரு சுத்தானந்த பாரதியாரின் பாடல்கள்
நிறைந்த புத்தகத்தை எடுத்து அந்தப் புத்தகத்தை மின் பதிப்பாக்கம் செய்து என்னால் முடிந்த வரை வெட்டி
ஒளியூட்டி,  நன்றாகப் படிக்கும் அளவுக்கு  செய்து எப்டீபீ செர்வரில்  சௌபாக்கியவதி சுபாஷிணிட்ரெம்மல் அவர்களுக்கு அனுப்பி விட்டேன்
 
திரு சந்திர சேகரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு  மின்பதிப்பாக்கத்துக்கு அவரிடம் அனுமதியும் பெற்றுக்கொண்டு,
மின் பதிப்பாக்கம் செய்தேன்
கூடிய விரைவில் வலைக்குரு அவற்றை வெளியிடுவார்  என்று எதிர்பார்க்கிறேன்
 
இது எனது கன்னி முயற்சி
 
அனேகமாக கன்னியை யாரும் கடிந்து கொள்வதில்லை  என்னும் தைரியத்தில்
செய்திருக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
2009/4/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 18, 2009, 10:32:35 AM4/18/09
to minT...@googlegroups.com
நன்றி.
 
Page 1 & Page 10  தான் வந்திருக்கின்றன. மற்றவற்றையும் அனுப்பிவைக்க முடியுமா?

Subashini Tremmel

unread,
Apr 18, 2009, 10:35:48 AM4/18/09
to minT...@googlegroups.com
இது ஒரு அருமையான முயற்சி தமிழ்த்தேனீயாரே.
 
நூல் நமது மின் நூல்கள் பகுதியில் வெளிவந்ததும் ஆர்வமுள்ள மற்றவர்களும்  தட்டச்சு செய்து இந்த மின்பதிப்பாக்க வேலையைப் முழுமை செய்யலாம்.
 
-சுபா

2009/4/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
அன்புள்ள மின் தமிழ் நண்பர்களே   

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 10:40:55 AM4/18/09
to minT...@googlegroups.com
முழுமையாக  தரவிறக்கம் செய்யவில்லை என நினைக்கிறேன்
மீண்டும்  அனுப்பிக்கொண்டிருகிறேன்
விரைவில் வந்துவிடும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

2009/4/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Apr 18, 2009, 12:19:08 PM4/18/09
to minT...@googlegroups.com
நாராயணா!
பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க!

கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

தி.வா

2009/4/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அவரையே குருவாக மனதில் நினைத்துக்கொண்டு
அவருக்கு மானசீகமாக ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு
 



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 12:58:10 PM4/18/09
to minT...@googlegroups.com
நாராயணா என்பதை விடப் பெரிய வார்த்தை யாரால் சொல்ல முடியும்
 
உண்மையாய் மனதில் தோன்றியதை அப்படியே   எழுதினேன்
அவ்வளவே
ஒவ்வொரு நேரத்தில் நல்லதை செய்ய ஒவ்வொருவர் அறிவு கொடுப்பார்
அவர்தானே  குரு ...?   
இங்கு வயது வித்யாசம் கிடையாது,ஸ்தானமே முக்கியம்
 
 
கற்றுக்கொள்ள விழைபவனுக்கு உலகில் அத்தனைபேருமே குருதான்
ஆகவே அந்த நேரத்தில் ஒரு கணம் உங்கள் நினைவு வந்தது உண்மை
இதை  மறைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை
ஆகவே எப்போதுமே மனதில் பட்ட உண்மைகளை மறைக்காமல் சொல்வோம் என்றுதானே என்னுடைய தமிழ்த்தேனீ தளத்திலும் நான் சொல்லியிருக்கிறேன்
அதை அப்படியே கடைப்பிடிக்கிறேன் அவ்வளவே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2009, 1:00:33 PM4/18/09
to minT...@googlegroups.com
வலைக்குரு சுபா அவர்களே
எப்டீபீ செர்வரில் முழுமையாக  தரவிறக்கம் செய்து விட்டேன்
 
பார்த்துவிட்டு சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

Chandra sekaran

unread,
Apr 18, 2009, 1:08:43 PM4/18/09
to minT...@googlegroups.com

சுபா,
பக்கங்களை வெட்டி ஒட்டி, pdf கோப்பு செய்யவேண்டுமா? சொல்லுங்கள்.

சந்திரா

Chandra sekaran

unread,
Apr 18, 2009, 2:23:23 PM4/18/09
to minT...@googlegroups.com
songs are ver clear and the brief given about swamiji is also very crisp.

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 18, 2009, 10:52:53 PM4/18/09
to மின்தமிழ்
இந்த வலைப் பக்கத்தில், தெளிவாகக் கேட்க முடிகிறது.

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

On Apr 18, 11:23 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com>
wrote:

Tirumurti Vasudevan

unread,
Apr 19, 2009, 1:59:36 AM4/19/09
to minT...@googlegroups.com
இல்லை ஐயா! அவர் வழி காட்டி அல்லது ஆசிரியர்.
ஆன்மீகத்தில் இறை தரிசனத்தை காட்டிக்கொடுப்பவரே குரு!

நீங்கள் உண்மையா என்னை நினைத்தது புரிகிறது. நன்றி!

தி.வா

2009/4/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஒவ்வொரு நேரத்தில் நல்லதை செய்ய ஒவ்வொருவர் அறிவு கொடுப்பார்
அவர்தானே  குரு ...?   

Tthamizth Tthenee

unread,
Apr 19, 2009, 2:15:57 AM4/19/09
to minT...@googlegroups.com
வழி காட்டி அல்லது ஆசிரியர்.
 
இவர்களையும்   குரு என்றுதான்
மதிப்பர்
 
த்ரோணர் வில் வித்தையை கற்றுக் கொடுத்தார்  அவரும் குரு
 
விச்வாமித்ரர் ராமனுக்கு வழி காட்டினார்
அவரும் குரு
 
இறை தரிசனத்தின் அனுபவத்தை  நரேந்திரனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர்  காட்டினார்    அவரும் குருவே
 
இறை தரிசனத்தையே  காட்டுபவர் அவர்   ஆசாரியனல்லவோ
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2009/4/19 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

வழி காட்டி அல்லது ஆசிரியர்.

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

shivan .

unread,
Apr 19, 2009, 4:15:09 AM4/19/09
to minT...@googlegroups.com
இந்தப் பாடல் பற்றி ஒரு சர்ச்சை உண்டு; உங்களுக்கு ஏற்கனவே
தெரிந்திருக்கலாM.

குருமணி சங்கரர் கனித்தமிழ்ச் சொல்லினால் பாடியது இல்லையே!
அதுவே சர்ச்சை.<<<<<<


ஐயா, அந்த பாடல் வரிகளில் கவியோகி மஹராஜ் சொல்ல வந்தது இரண்டு விஷயங்கள்.

1. அந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் பெரியவர்கள் போல் உண்மையை உணர்ந்து அதில் மூழ்கி அவர்களைப் போலவே பாட வேண்டும்.

2. அதை தமிழ் மொழியில் பாட வேண்டும்.

அங்கே சங்கரர் என்று அவர் சொன்னதற்கு காரணம் சங்கரர் எப்படி அடைய வேண்டியதை அடைந்து உணர்ந்து பாடினாரோ அப்படி தானும் பாட வேண்டும் என்ற எண்ணமே. அங்கே சங்கரர் தமிழில் பாடினார் என்பது கவியோகியாரின் எண்ணமல்ல.
சங்கரர் நிலையடைந்து பின் சிவன் மீதினில் தமிழில் பாட வேண்டும் என்பதே அன்னாரின் வேண்டுதல் அங்கே.

வெறும் மொழி திறமையாலான பாடலாய் அவருடையது இல்லாமல், நேரடி அநுபவத்தை பெற்று பாடலை பாடுபவராய் தான் இருக்க வேண்டும் என்பதே கவியோகியாரின் எண்ணம் ஆங்கே.

எனவே அவரின் பாடலில் பிழை ஏதுமில்லை என்பது அடியேனின் பணிவான கருத்து.



Chandra sekaran

unread,
Apr 19, 2009, 5:16:45 AM4/19/09
to minT...@googlegroups.com
>  ஐயா, அந்த பாடல் வரிகளில் கவியோகி மஹராஜ் சொல்ல வந்தது இரண்டு விஷயங்கள்.

1. அந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் பெரியவர்கள் போல் உண்மையை உணர்ந்து அதில் மூழ்கி அவர்களைப் போலவே பாட வேண்டும்.

2. அதை தமிழ் மொழியில் பாட வேண்டும்.

அங்கே சங்கரர் என்று அவர் சொன்னதற்கு காரணம் சங்கரர் எப்படி அடைய வேண்டியதை அடைந்து உணர்ந்து பாடினாரோ அப்படி தானும் பாட வேண்டும் என்ற எண்ணமே. அங்கே சங்கரர் தமிழில் பாடினார் என்பது கவியோகியாரின் எண்ணமல்ல.
சங்கரர் நிலையடைந்து பின் சிவன் மீதினில் தமிழில் பாட வேண்டும் என்பதே அன்னாரின் வேண்டுதல் அங்கே.

வெறும் மொழி திறமையாலான பாடலாய் அவருடையது இல்லாமல், நேரடி அநுபவத்தை பெற்று பாடலை பாடுபவராய் தான் இருக்க வேண்டும் என்பதே கவியோகியாரின் எண்ணம் ஆங்கே.

எனவே அவரின் பாடலில் பிழை ஏதுமில்லை என்பது அடியேனின் பணிவான கருத்து. 
----------------------------------------------------------------
சரியான கருத்து. 
----------------------------------------------------------------

(19-ஏப்ரல்-2009) அந்தப் பாடல்களோடு, இதனைப் பாருங்கள். சற்றே கீரிருக்கும் நிலையில், அந்தப் பாடல்கள் வருகிறது. எதுவும் வேண்டாம், நின் திருவருள் போதும், அருள் ஒன்றே போதும், பொருள் வேண்டாம் என்ற நிலையில், வெளிவருகிறது இந்தப் பாடல்:

ராகம்: சிம்மேந்திரமத்யமம்                                தாளம்: ஆதி

பல்லவி: கண்ணெடுத்தாகிலும் காணீரோ- என்
                காவிய மாலையைப் பூணீரோ?                                   (கண்)

அ.பல்லவி:
பண்ணும் பவுவலும் பரதமும் விரதமும்
பக்தியும் கொண்டிங்கே
நித்தியம் தொழும் என்னைக்                                                     (கண்)

சரணம்:

பட்டம் பதவி பெற பாடவில்லை - தங்கப்
பதக்கங்களை என்றும் நாடவில்லை-ஐயா
எட்டெட்டு திக்கிலும் ஓடவில்லை -உம்மை
இதய் மோனத்தி லன்றித் தேடவில்லை ஐயா                       (கண்)

பேருக்கும் புகழுக்கும் பேராசை படவில்லை
பெரியபேர் வாலையும் பிடித்துக் கும்பிடவில்லை;
ஆருயிர்க் குயிராக அறிந்தும்மை நேசித்தேன்;
ஆர்வ மலர்களை அள்ளி,அள்ளிப் பூசித்தேன்!                   (கண்)

============================

ஒரு பாட்டை எழுதிவிட்டு, அவரவர் படுத்தும் பாடு என்ன, ஒரு குறுந்தகடு வெளிவந்ததும் அவரவர் செய்யும் படோடாபங்கள் என்ன என்பதை ஒரு டிசம்பர் சீசனின் உச்சத்தில் கண்கூடாக காணும் நாம், ‘எப்படிப் பாடினரோ, அப்படி பாட ஆசை கொண்டேன்', என்றும், ‘பட்டம் பதவி பெற பாடவில்லை, பதக்கங்களை என்றும் நாடவில்லை' என்றும் பாடும் சுத்தானந்தர் பித்தர்தாம்! ஆம், சித்தர் இந்த பித்தர்.!

தியாகையரும், ஷ்யாமா சாஸ்திரிகளும், முத்துஸ்வாமி தீக்ஷிதரும், பாபநாசம் சிவனும், அன்னமாச்சாரியும், சுத்தானந்தரும் பாடல்களுக்கு காப்புரிமையும், கணக்கில் வெட்டும் கேட்டிருந்தால், இம்மாதிரியான அருட்பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்காது. அத்தனை ஆயிரம் ஆயிரம் professional பாடகர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்க முடியாது.

சுத்தானந்தம் இன்னும் கிட்டும்....
சந்திரா

Chandra sekaran

unread,
Apr 19, 2009, 6:02:31 AM4/19/09
to minT...@googlegroups.com
சிறிய திருத்தம்:
 

(19-ஏப்ரல்-2009) அந்தப் பாடல்களோடு, இதனைப் பாருங்கள். சற்றே லெளகீக உலகத்தில் கீழிறங்கியிருக்கும் சுத்தச் சித்தன், விழித்திருக்கும் நிலையில், இந்த பாடல்கள் வருகிறது. எதுவும் வேண்டாம், நின் திருவருள் போதும், அருள் ஒன்றே போதும், பொருள் வேண்டாம் என்ற நிலையில், வெளிவருகிறது இந்தப் பாடல்:


ராகம்: சிம்மேந்திரமத்யமம்                                தாளம்: ஆதி

பல்லவி: கண்ணெடுத்தாகிலும் காணீரோ- என்
                காவிய மாலையைப் பூணீரோ?                                   (கண்)

அ.பல்லவி:
பண்ணும் பவுவலும் பரதமும் விரதமும்
பக்தியும் கொண்டிங்கே
நித்தியம் தொழும் என்னைக்                                                     (கண்)

சரணம்:

பட்டம் பதவி பெற பாடவில்லை - தங்கப்
பதக்கங்களை என்றும் நாடவில்லை-ஐயா
எட்டெட்டு திக்கிலும் ஓடவில்லை -உம்மை
இதய் மோனத்தி லன்றித் தேடவில்லை ஐயா                       (கண்)

பேருக்கும் புகழுக்கும் பேராசை படவில்லை
பெரியபேர் வாலையும் பிடித்துக் கும்பிடவில்லை;
ஆருயிர்க் குயிராக அறிந்தும்மை நேசித்தேன்;
ஆர்வ மலர்களை அள்ளி,அள்ளிப் பூசித்தேன்!                   (கண்)

============================

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 19, 2009, 8:38:39 AM4/19/09
to மின்தமிழ்
உங்களுடைய இந்த ஆதங்கம், வருத்தம் தான் என்னையும் பாடாய்ப்
படுத்துகிறது.

ஒரு இடத்தில் படித்தேன், டி கே பட்டம்மாள் பாடித் தான் சுத்தானந்த பாரதி
பாடல்கள் பிராபல்யம் அடைந்தன என்று. எழுதியவருக்கு டி கே பட்டம்மாளை
உயர்த்திப் பேச ஆசை இருந்திருக்கலாம், அதற்காக, நாரினால் தான் பூவுக்கு
வாசனை வந்தது என்று சொல்வதைப் போல எழுதுவது, இந்தநாளைய இலக்கியத் தரம்
என்றாகி விட்டதே!

போகட்டும்,இந்த மாதிரி ஆசாமிகளாவது இத்தோடு விட்டார்கள். இன்னும் வேறு
சில ரகங்கள் இருக்கிறதே, ஒரு சாம்பிளுக்கு,
"ஜெர்மன்- பிரிட்டிஷ் மோதலை இந்திய தீவிரவாதிகள் பெரிதும் வரவேற்று
கொண்டாடினார்கள்! ஜெர்மன் நாட்டிலிருந்து ஆயுத உதவிகள் கிடைக்கும். அதைக்
கொண்டு ஆங்கிலேயர்களின் கொட்டத்தை அடக்கலாம் என்று
சந்தோஷப்பட்டார்கள்.ஜெர்மனும் ஆயுதங்கள் வருகின்றன என இரகசிய கடிதங்களை
அனுப்பி வைத்து உற்சாகப்படுத்தியது!

சென்னையில் எம்டன் குண்டு போட்டதைப் பற்றி சிலர் வேடிக்கையான
பாடல்களையும் தட்டிவிட்டனர்.

"எம்டன் விட்ட குண்டு...!
எரிந்த டாங்கி ரெண்டு...
விழுந்த பொணம் மூணு...!
அழுத பெண்கள் நாலு...!"

எம்டன் கப்பல் பாண்டிச்சேரி துறைமுகத்துக்கு சுமார் 3 மணிக்கு வந்து
சேர்ந்தது.

எம்டன் புதுவைக்கு முன்கூட்டியே வர இருப்பதை இரகசியமாக அறிந்திருந்த
வ.வே.சு அய்யர் பாரீஸ் நகரிலிருந்த மாறு வேடத்தில் அவசரமாக புதுவைக்குத்
திரும்பினார்.

புதுவையில் இருந்த சுத்தானந்த பாரதி வ.வே.சு அய்யரிடம் ரகசிய ஒற்றராக
இருந்தார்.தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,இந்தி,வங்கம்,பிரெஞ்சு,சப்பான் ஆகிய
பல மொழிகளை நன்கு அறிந்தவர்.இதனால் வ.வே.சு அய்யர் இவரை புரட்சியின்
தூதுவராக நாடெங்கும் அனுப்பி வைப்பார்.

இவரைப்போலவே ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளையும் மாறு வேடங்களைப் பூண்டு
ஆங்கிலேயரின் திட்டங்களை அறிவதில் திறமைசாலி! ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்
என்பரைக் கொன்ற கொலை வழக்கில் தலை மறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளி!
இவரும் வ.வே.சு அய்யரின் எண்ணங்களோடு இணைந்து செயல்பட்ட வீரர்.

சுத்தானந்த பாரதியும்,மாடசாமியும் அந்த இருட்டில் எம்டன் வருகைக்காக
காத்திருந்தார்கள்.வந்து சேர்ந்ததும் நூலேணியின் உதவியால் கப்பலின் மேல்
தளத்தை அடைந்தனர்.அங்கு இவர்களின் வருகைக்காகக் காத்திருந்த அந்த உருவம்
இவர்களைக் கட்டித் தழுவி அன்புடன் வரவேற்றது!

அந்த உருவம் வேறு யாரும் அல்ல?

"நம் செண்பகராமன் தான்!"

இப்படிச் சொல்கிறது, செண்பகராமன் கதையின் ஆறாம் பகுதியைத் தாங்கி வரும்

http://beyouths.blogspot.com/2008_09_01_archive.html இந்தப் பக்கம் வலை
ஏறுவதற்குள், வீட்டில் மாவிளக்கு ஏற்றி திருவேங்கடமுடையான் மலையேறியும்
சென்று விடுவார்!

இதை மறுபடி சொல்வதற்குக் காரணம், தவறான தகவல்கள் இணையத்தில் நிலை
பெறுவதற்கு முன், கவியோகியாரது வாழ்க்கையும், கவிதைகளும், ஆத்மா
சாதனையும் இணையத்தில் முறையாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே.

அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

http://consenttobenothing.blogspot.com

On Apr 19, 3:02 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com> wrote:
//பட்டம் பதவி பெற பாடவில்லை - தங்கப்


பதக்கங்களை என்றும் நாடவில்லை-ஐயா
எட்டெட்டு திக்கிலும் ஓடவில்லை -உம்மை
இதய் மோனத்தி லன்றித் தேடவில்லை ஐயா (கண்)

பேருக்கும் புகழுக்கும் பேராசை படவில்லை
பெரியபேர் வாலையும் பிடித்துக் கும்பிடவில்லை;
ஆருயிர்க் குயிராக அறிந்தும்மை நேசித்தேன்;

ஆர்வ மலர்களை அள்ளி,அள்ளிப் பூசித்தேன்! (கண்) //

viji rama

unread,
Apr 19, 2009, 12:28:18 PM4/19/09
to minT...@googlegroups.com
கவி சித்தர் சுத்தானந்த பாரதியின் பாடல்கள் அறிய வந்ததற்கு மகிழ்ச்சி . அவைகளை அறிய வைத்தவர்க்கு மிக்க நன்றி. சங்கரர் போன்ற குருமார்கள் வழி ஒன்றி இறைவன் பால் மாறா பக்தி கொண்டு கனித்தமிழ் சொல்லில் இனிமையாகப் பாடவேண்டும் என்பதே சுத்தானந்தரின் எப்படி பாடினரோ பாடல் உணர்த்துகின்றது என்ற கருத்தை நான் வரவேற்கின்றேன்.
விஜி

2009/4/19 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 21, 2009, 2:36:42 PM4/21/09
to minT...@googlegroups.com
சந்திரா,
நூலை திவா அவர்கள் இப்போது சரி பார்ப்பதாக தேனீயார் தனி மடலில் குறிப்பிட்டிருந்தார். முழுமை அடைந்ததும் நான் மின் நூலாக்கிவிடுகிறேன். இந்த நூலை நமது வலைப்பக்கத்தில் வெளியிடுவதற்கு ஏதேனும் காப்புரிமை பிரச்சனை இருக்குமா என நீங்கள் அறிந்து தெரியப்படுத்துங்கள்.
 
அன்புடன்
சுபா

2009/4/18 Chandra sekaran <plastic...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 21, 2009, 2:43:57 PM4/21/09
to minT...@googlegroups.com
நண்பர்களே
 
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பாடல்கள் பதிவு செய்யப்பட்டு தற்காலிகமாக கீழ்க்காணும் முகவரியில் நமது வலைப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. http://www.tamilheritage.org/kidangku/kaviyogi/songs/
 
1.ஜங்காரஸ்ருதி - M.S.S
2. நித்திரையில் வந்து - N.C. வசந்த கோகிலம்
3.பிள்ளை பிராயத்திலே - N.C. வசந்த கோகிலம்
4.அந்த நாள் -N.C. வசந்த கோகிலம்
5.குழலோசை - N.C. வசந்த கோகிலம்
6. ஆசைக்கொண்டேன் - N.C. வசந்த கோகிலம்
7.யாரோ வந்தென்னை - N.C. வசந்த கோகிலம்
8.தித்திக்கும் செந்தமிழ் - N.C. வசந்த கோகிலம்
9.ஆர்வத் தீயால் - N.C. வசந்த கோகிலம்
10.தேடி வந்து என்னுடன் - ஷோபா சந்திரசேகர்
அன்புடன்
சுபா
 

 
2009/4/18 Chandra sekaran <plastic...@gmail.com>

Chandra sekaran

unread,
Apr 22, 2009, 3:37:27 AM4/22/09
to minT...@googlegroups.com
வேலைப்பளு நடுவே தொகுத்தளித்த சுபா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
சந்திரா

Chandra sekaran

unread,
Apr 22, 2009, 3:40:49 AM4/22/09
to minT...@googlegroups.com
> நூலை திவா அவர்கள் இப்போது சரி பார்ப்பதாக தேனீயார் தனி மடலில் குறிப்பிட்டிருந்தார். முழுமை அடைந்ததும் நான் மின் நூலாக்கிவிடுகிறேன். இந்த நூலை நமது வலைப்பக்கத்தில் வெளியிடுவதற்கு ஏதேனும் காப்புரிமை பிரச்சனை இருக்குமா என நீங்கள் அறிந்து தெரியப்படுத்துங்கள்.
 

தேனீ என்னிடமும் இந்த வேலையை ச்சொன்னரே? நானும் இரவு முழுவதும் பக்கங்களை ஒருமை, பன்மை, வெட்டு வேலை செய்து, சீராக்கி pdf செய்து வைத்துள்ளேன். குருஜி அனுப்புகிறார் என்றால், நான் அனுப்பத்தேவை இல்லை. பாடல்கள் பரவ வேண்டும் என்பதுதானே குறிக்கோள்? யார் பாடினாலும், கேட்டாலும், பதிவுகளை மிந்தமிழுக்கு அனுப்பினால் நல்லதே. அப்படி எதேனும் ப்ரச்னை இருந்தால், எனக்கு தெரியப்படுத்தவும்.


அன்புடன்
சந்திரா

Tthamizth Tthenee

unread,
Apr 22, 2009, 4:27:37 AM4/22/09
to minT...@googlegroups.com
அன்பு சந்திரா உங்களிடமும் திருமூர்த்தி வாசுதேவனிடமும் இதைப்பற்றி பேசினேன்
 
 
திருமூர்த்தி வாசுதேவனிடம் தொடர்பு கொண்டு பேசினேன்
அவர் செய்து அனுப்பிவிட்டார்  நீங்கள் அனுப்பவேண்டாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

Subashini Tremmel

unread,
Apr 22, 2009, 11:46:32 AM4/22/09
to minT...@googlegroups.com
மின் தமிழ் நண்பர்களே,
 
சுத்தானந்தர் கீர்த்தனைகள் எனும் இந்நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு நமது மின்னூல்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
நூலின் பெயர்: சுத்தானந்தர் கீர்த்தனைகள்
நூலாசிரியர்: கவியோகி சுத்தானந்த பாரதியார்
வெளியீடு : சுத்தானந்த யோக சமாஜம்.
(நூல் எண்: 64)
 
இந்த நூலை மின்பதிப்பாக்கம் செய்ய உதவிய தமிழ்த்தேனியார்டாக்டர்.திவாதிரு.சந்திரசேகரன் ஆகியோருக்கு தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது.
 

Subashini Tremmel

unread,
Apr 22, 2009, 11:50:23 AM4/22/09
to minT...@googlegroups.com
மின் தமிழ் நண்பர்களே,
 
உங்களில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த இழையில் தொடர்ந்து இன்னமும் தட்டச்சு செய்யப்படாத ஏனைய பாடல்களையும் இந்த நூலிலிருந்து தட்டச்சு செய்து  சரி பார்த்து இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். பின்னர் இப்பாடல்களை  நமது வலைப்பக்கத்தில் ஒலிகோப்புக்களோடு தனித்தனியாக இணைக்க நினைத்திருக்கிறேன். அதற்கு இது பெரிதும் உதவும்.
 
அன்புடன்
சுபா

2009/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Chandra sekaran

unread,
Apr 22, 2009, 12:47:11 PM4/22/09
to minT...@googlegroups.com
முக்கியமான பக்கங்களை தேனீ தவிர்த்துவிட்டார்.(2,3).
பாதுகாப்பிற்கு இது தேவை. இந்நூல், மறுபிரசுரமோ, வியாபார நோக்குக்காகவோ, யாரும், இந்த உரலியிலிருந்து தரவிறக்கம் செய்து, அச்சிடக்கூடாது. சுய உதவிக்கோ, தனி நபர் உபயோகத்திற்கோ தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இவை சில முக்கிய பாடல்களின் தொகுப்பே! அவரது கீர்த்தனாஞ்சலி, 1008 பாடல்கள் கொண்டது.எனவே, அட்டை உட்பட எல்லா பக்கங்களையும் pdf கோப்பு செய்து, சுபாவிற்கு அனுப்பிவிட்டேன். வேண்டுமனில், அதை அவர் வெளியிடலாம்.
the file with cover back to back has been added in the ftp server for Ms. Subha's perusal

Tthamizth Tthenee

unread,
Apr 22, 2009, 12:57:58 PM4/22/09
to minT...@googlegroups.com
அன்புள்ள சந்திர சேகர் அவர்களுக்கு
 
பொது மடலில் ஒரு செய்தியைப் போடும் முன்னர் அதில் சம்பந்தப்பட்டவரை ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு பிறகு மடலிடுதல் மிக அவசியமான செயல் என்று அடியேன் நினைக்கிறேன்
 
நான் உங்களிடம் அடிக்கடி தொலை பேசியில் என்னுடைய பணத்தை செலவு செய்து பேசி உங்கள் அனுமதியை வாங்கிக் கொண்டுதானே மின் பதிப்பாக்கம் செய்தேன்,
 
அதே போல பொது மடலில் ஒரு மடல் போடுவதற்கு முன்னால்  முக்கியமான பக்கங்களை தவிர்த்துவிட்டீகளே என்று ஒரு ரூபாய் செலவு செய்து கேட்டிருக்கலாமே
 
சரி பரவாயில்லை 
 
முக்கியமான பக்கங்களையும்  நான் மின் பதிப்பாக்கி வலைக்குரு  சுபா அவர்களுக்கு அனுப்பி இருக்கிறேன்
 
நீங்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்த புத்தகத்தில் ஒரு பக்கத்தையும் நான் தவிர்க்கவில்லை
 
முதல் பக்கத்திலிருந்து கடைசீ பக்கம் வரையில் மின் பதிப்பாக்கி அனுப்பின் இருக்கிறேன்
 
உங்கள் அன்புக்கு நன்றி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
On 4/22/09, Chandra sekaran <plastic...@gmail.com> wrote:

Chandra sekaran

unread,
Apr 22, 2009, 1:07:44 PM4/22/09
to minT...@googlegroups.com
தேனீ அவர்களே தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 2,3 வது பக்கங்கள் தவறுதலாக விடுபட்டிருக்கலாம். அதே போல் எனக்கும் சொல்லி, தி.வா அவர்களையும் வேலை வாங்கியிருக்க வேண்டாம். உங்கள் சேவை நாட்டிற்குத்தேவை.
நான் தி.வா அவர்களுக்கே, விடுபட்ட பக்கங்களை அனுப்பி,கோப்பில் சேர்த்து, பின்னர், சுபாவிற்கு அனுப்பக் கோருகிறேன்,
நன்றி.

Subashini Tremmel

unread,
Apr 22, 2009, 3:04:02 PM4/22/09
to minT...@googlegroups.com
சந்திரா,
 
நீங்கள் விடுபட்டதாக குறிப்பிட்டு எனக்கு நான்கு பக்கங்களை அனுப்பியிருக்கின்றீர்கள் (திவாவுக்கு அனுப்பிய மடல்). அதில்:
 
0 - வர்ணத்தில் உள்ள நூலின் அட்டைப் படம்.  (இது தேனீயார் அனுப்பிய இன்று வெளியிடப்பட்ட மின் நூலில் இருக்கின்றது)
 
2 - காப்புரிமைச் செய்தி  (இதுவும்  தேனீயார் அனுப்பிய வெளியிடப்பட்ட இன்று மின் நூலில் இருக்கின்றது)
 
3 - கவியோகி படம் (இது இல்லை)
 
4 - back cover -  PURITY - UNITY - DIVINITY - DUTY என்ற செய்தி அடங்கிய ஒரு மஞ்சள் நிற பக்கம். (இதுவும் தேனீயார் அனுப்பிய இன்று வெளியிடப்பட்ட மின் நூலில் இருக்கின்றது)
 
ஆக இந்த '3' எண் கொண்ட அந்த பக்கத்தை மட்டும்  jpg  வடிவத்தில் எனக்கு அனுப்பி வைத்தால் போதும். வேறு ஏதேனும் பக்கங்கள் விடுபட்டுள்ளன என்றால் அவற்றையும் jpg வடிவில் அனுப்பி வைத்தால் இந்த நூலில்  இணைத்து விடலாம்.
 
மிக முக்கியமாக சுத்தானந்த சமாஜத்தோடு உங்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதால் த.ம.அ வலைப்பக்கத்தில் இந்த இலவச நூலை இணைப்பதில் சுத்தானந்த சமாஜத்திற்கு சம்மதமா என கேட்டு அதனை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். அது மிக உதவியாக இருக்கும்.
 
இந்த மின் நூலை நீங்கள் பார்த்தால் அதில் முதல்பக்கமும் கடைசி பக்கமும் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி அடங்கியிருக்கும். நமது அனைத்து வெளியீடுகளும் இவ்வகையிலேயே இனி செய்ய திட்டமிடப்பட்டிருக்கின்றது. ஆக நீங்கள் சொந்தமாக ஏதாகினும் ஒரு நூலை முழுமையாக மின்பதிப்பாக்க நினைத்தால் இந்த இரண்டு பக்கங்களையும் உங்கள் கணினிக்கு இறக்கி சேமித்து வைத்துக் கொண்டு pdf  தயாரிக்கும் போது eBook_1stPage.jpg என்ற பக்கத்தை நூலின் முதல் பக்கமாகவும்,  eBook_last_page.jpg என்ற பக்கத்தை நூலின் இறுதிப்  பக்கமாகவும் வைத்து pdf செய்து எனக்கு அனுப்பி வைக்கலாம். இந்த இரண்டு கோப்புக்களும் ftp சர்வரில், Chennai_THF_Workgroup என்ற இடத்தில், ebook cover உள்ளே இருக்கின்றன. 
 
குறிப்பு: முழுமையாக மின் நூலை செய்து அனுப்ப விரும்புவோர் இவற்றை பயன்படுத்தி நூலை முடித்து எனக்கு அனுப்பி வைத்தால் நூல் நமது வலைப்பக்கத்தில் பதிப்பிக்கப்படும்.  இந்த தலைப்புப் பக்க்ங்கள் இல்லாத  pdf  மின் நூல்களை பதிப்பிக்க இயலாது.
 
அன்புடன்
சுபா
 

2009/4/22 Chandra sekaran <plastic...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 22, 2009, 3:06:46 PM4/22/09
to minT...@googlegroups.com
சந்திரா,
 
எனக்கு ஒரு மடலில் 4 தனி பக்கங்கள் தான் மின்னஜ்சலில் வந்தன. நூலை ftp செய்தீர்களா? எங்கே (எந்த folderல்) அனுப்பினீர்கள்.
 
அன்புடன்
சுபா

2009/4/22 Chandra sekaran <plastic...@gmail.com>

Kumaran Malli

unread,
Apr 22, 2009, 9:47:18 PM4/22/09
to minT...@googlegroups.com
அனைவருக்கும் அடியேனின் நன்றிகள்.

Tirumurti Vasudevan

unread,
Apr 22, 2009, 10:36:56 PM4/22/09
to minT...@googlegroups.com
 சுபா எதற்கும் இருக்கட்டும் என்று சந்திரா அனுப்பிய படங்களை மறு அளவாக்கி தேனீயின் அடைவில் (kaviYogiNew) இல் missing என்ற ஒரு புதிய அடைவில் போட்டுவிட்டேன்.
தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள்.
தி.வா

2009/4/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>

ஆக இந்த '3' எண் கொண்ட அந்த பக்கத்தை மட்டும்  jpg  வடிவத்தில் எனக்கு அனுப்பி வைத்தால் போதும். வேறு ஏதேனும் பக்கங்கள் விடுபட்டுள்ளன என்றால் அவற்றையும் jpg வடிவில் அனுப்பி வைத்தால் இந்த நூலில்  இணைத்து விடலாம்.

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 22, 2009, 11:13:22 PM4/22/09
to மின்தமிழ்
கவியோகியாரது படைப்புக்கள் மீண்டும் உலா வரத் தொடங்கி விட்டன என்று
சந்தோஷப்பட்டது, கண்ணெச்சில் பட்டதாகி விட்டதோ?

ஒரு செயலைத் தொடங்கும் போது, சில அபசுரங்களாக எழும் கருத்து
வேறுபாடுகளைக் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளலாமே திரு. சந்திரா! ஊர் கூடித்
தேர் இழுத்தால், ஊருக்கும் பெருமை, தேரும் நிலை வந்து சேரும் என்பது,
உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!

உங்களுடைய சட்டபூர்வமான அறிவிப்புக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் இது
தான்:
ஏற்கெனெவே வேறொரு இழையில் பேசியிருக்கிறோம், இருந்தாலும் இப்போது நினைவு
படுத்திக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

//பதிப்புரிமை பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்த ஒரு
வார்த்தையின் கீழ், குன்றின் மேல் இட்ட விளக்காகப் பிரகாசிக்க
வேண்டியவரை, குடத்திற்குள் இட்ட விளக்காகக் குறுக்கி விடுகிறோம் இல்லையா?
ஸ்ரீ ரமண ஆசிரமம் கூட, பதிப்புரிமை பெற்ற தங்களுடைய வெளியீடுகளை,
இணையத்தில் வேண்டுவோர்க்கு pdf கோப்புக்களாக, இலவசமாக தரவிறக்கம்
செய்துகொள்ளும் வசதியைத் தந்திருக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள் தானே?

அது தவிர, நீங்கள் அறிந்த செய்திகளை, கேள்விப்பட்ட அனுபவங்களை
வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ள என்ன தடை? "
http://consenttobenothing.blogspot.com/2009/03/blog-post_25.html

ஒரு நல்ல விஷயம் தொடங்கியிருக்கிறது என்ற சந்தோஷத்தில், மின்தமிழில்
நீங்கள் வெளியிட்ட ஒரு பகுதியை என்னுடைய வலைப் பக்கங்களில் வேறு
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்,
http://consenttobenothing.blogspot.com/2009/04/blog-post_21.html
உங்களுடைய அறிவிப்பின்படி, உரையை மறு பிரசுரம் செய்யக் கூடாது என்பதில்,
உங்களுடைய நிலையைத் தெளிவு படுத்தும் வரை, இந்தப் பதிவு இருக்கும்.
ஆட்சேபணை வந்தால், உடனடியாக, இந்தப் பதிவையும், முந்தைய பதிவுகளையும்
நீக்கி விட நான் தயாராக இருக்கிறேன்.

ஒரு மாபெரும் தவப் புதல்வரைக் குடத்தில் இட்ட விளக்காகக் குறுக்கி
வைப்பதோ, குன்றில் இட்ட விளக்காகப் பலரும் தரிசிக்க வழி செய்வதோ,
எதுவானாலும், அது பதிப்புரிமையை வைத்திருக்கிற, உங்கள் குடுமத்தினரின்
பொறுப்பு!

இறைவனது சித்தம் எதுவோ, அதன்படியே நடந்தேறட்டும்!

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Apr 22, 2009, 11:33:36 PM4/22/09
to minT...@googlegroups.com


திரு  சந்திரா அவர்களே உங்களிடம் இப்புத்தகத்தை மின் பதிப்பாக்கலாமா என்று கேட்டுவிட்டு நீங்கள் ஆக்கலாம்   சமாஜத்தில் நான் சொல்லிக்கொள்கிறேன் என்று நீங்கள் கூறியதை நம்பித்தான் நான் மின்பதிப்பாக்கம் செய்தேன்
 
நீங்கள் கூறியது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினனைக்கிறேன்

 

நீங்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்த புத்தகத்தில் ஒரு பக்கத்தையும் நான் தவிர்க்கவில்லை

 
முதல் பக்கத்திலிருந்து கடைசீ பக்கம் வரையில் மின் பதிப்பாக்கி அனுப்பி இருக்கிறேன்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
 

 
On Apr 22, 9:47 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com> wrote:
> முக்கியமான பக்கங்களை தேனீ தவிர்த்துவிட்டார்.(2,3).
> பாதுகாப்பிற்கு இது தேவை. இந்நூல், மறுபிரசுரமோ, வியாபார நோக்குக்காகவோ,
> யாரும், இந்த உரலியிலிருந்து தரவிறக்கம் செய்து, அச்சிடக்கூடாது. சுய உதவிக்கோ,
> தனி நபர் உபயோகத்திற்கோ தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
>
> இவை சில முக்கிய பாடல்களின் தொகுப்பே! அவரது கீர்த்தனாஞ்சலி, 1008 பாடல்கள்
> கொண்டது.எனவே, அட்டை உட்பட எல்லா பக்கங்களையும் pdf கோப்பு செய்து, சுபாவிற்கு
> அனுப்பிவிட்டேன். வேண்டுமனில், அதை அவர் வெளியிடலாம்.
> the file with cover back to back has been added in the ftp server for Ms.
> Subha's perusal
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 23, 2009, 10:38:28 PM4/23/09
to மின்தமிழ்
//உங்களுடைய அறிவிப்பின்படி, உரையை மறு பிரசுரம் செய்யக் கூடாது

என்பதில்,
உங்களுடைய நிலையைத் தெளிவு படுத்தும் வரை, இந்தப் பதிவு இருக்கும்.
ஆட்சேபணை வந்தால், உடனடியாக, இந்தப் பதிவையும், முந்தைய பதிவுகளையும்
நீக்கி விட நான் தயாராக இருக்கிறேன்.//

http://consenttobenothing.blogspot.com/2009/04/blog-post_21.html
எங்கும் நிறைவான பரம்பொருளே என்று தொடங்கும் கவியோகி சுத்தானந்த
பாரதியாருடைய உரை, இந்தக் குழுமத்தின் இழைகளில் இருந்து மீள்பதிப்புச்
செய்யப் பட்ட பகுதி, திரு சந்திரசேகரன் அவர்களது உணர்வுகள்,
காப்புரிமைக்கு மதிப்பளித்து, இன்று காலை 7.55 மணிக்கு நீக்கப் பட்டது.


அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

Chandra sekaran

unread,
Apr 23, 2009, 11:57:39 PM4/23/09
to minT...@googlegroups.com
> பாதுகாப்பிற்கு இது தேவை. இந்நூல், மறுபிரசுரமோ, வியாபார நோக்குக்காகவோ, யாரும், இந்த உரலியிலிருந்து தரவிறக்கம் செய்து, வியாரார நோக்கில் அச்சிடக்கூடாது. சுய உதவிக்கோ, தனி நபர் உபயோகத்திற்கோ தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேற்கூறியவாறு விளக்கம் ஏற்கனவே கொடுத்தாய்விட்டது. உள்ளே வைக்கவோ, குடத்துள் அடக்கவோ அவர் விளக்கல்ல;
சூரியன்!

சந்திரா.

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 24, 2009, 9:08:52 AM4/24/09
to மின்தமிழ்

On Apr 24, 8:57 am, Chandra sekaran <plasticschan...@gmail.com> wrote:
//விளக்கம் ஏற்கனவே கொடுத்தாய்விட்டது. உள்ளே வைக்கவோ, குடத்துள்
அடக்கவோ அவர் விளக்கல்ல; சூரியன்! //


நல்லது, திரு சந்திரா அவர்களே!
உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டேன்.
சூரியனது ஒளிக்கு தனியுரிமை, காப்புரிமை, பாதுகாப்பு இப்படி எதுவும்
தேவைப் படுவதில்லை!

Subashini Tremmel

unread,
Apr 25, 2009, 3:45:57 AM4/25/09
to minT...@googlegroups.com
அன்புள்ள நண்பர்களே,
 
சுத்தானந்தர் கீர்த்தனைகள் எனும் இன்னூல் இன்று மீண்டும் விடுபட்ட சுத்தானந்தரின் படத்தையும் சேர்த்து மீண்டும் வெளியிடப்படுகின்றது. பக்கத்தை அனுப்பி உதவிய சந்திராவிற்கு நன்றி. 

 
நூலின் பெயர்: சுத்தானந்தர் கீர்த்தனைகள்
நூலாசிரியர்: கவியோகி சுத்தானந்த பாரதியார்
வெளியீடு : சுத்தானந்த யோக சமாஜம்.
(நூல் எண்: 64)
 
இந்த நூலை மின்பதிப்பாக்கம் செய்ய உதவிய தமிழ்த்தேனியார், டாக்டர்.திவா, திரு.சந்திரசேகரன் ஆகியோருக்கு தமிழ் மரபு அறக்கட்டளை மீண்டும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது.
 
குறிப்பு: இந்த நூல் தொடர்பாக இங்கு எழுந்த பிரச்சனைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த நூலைப் பற்றிய பதிப்புரிமை விளக்கம் சந்திரா குறிப்பிட்டிருப்பது போல நூலின் ஆரம்பத்திலேயே உள்ளது. மிகவும் தெய்வீகமான் நோக்கத்துடன் பலரும் பயன்பட வேண்டும் என்று எண்ணத்தோடு தொடங்கப்பட்ட ஒரு முயற்சி இந்த முயற்சி தடைபடாது தொடர வேண்டும். கவியோகியாரது பல பரிணாமங்கள் மின் தமிழில் பல புதிய தலைப்புக்களில் வழங்கப்படுவது தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Chandra sekaran

unread,
Jun 8, 2009, 10:43:48 AM6/8/09
to minT...@googlegroups.com
மீனாட்சியம்மன் பாடல்கள் வேண்டும் என்று திரு.கிருஷ்ணமூர்த்தி முன்பே கேட்டிருந்தார். சிறிய புத்தகத்தை சீரிய முறையில் தேனீயார், திரு. தி.வா அவர்களுடன் சேர்ந்து இங்கு பதித்திருந்தார். அதில் உள்ள முக்கியமான பாடல், திரு.சீர்காழி கோவிந்தராஜன் பாடியதில், மிகவும் பிரபலனான ஒரு பாடல், எத்தனை பேர் கவனித்திருப்பார்கள், தெரியவில்லை. அதேபோன், இணாஇயத்திலும், அந்த ஒலிக் கோப்பு கிடைக்கவில்லை, அதை இங்கு மறு தட்டச்சு செய்கிறேன்:

ராகம்: தன்யாசி                                                                                 தாளம்: ஆதி


பல்லவி: எனக்கென்ன மனக் கவலை? - எந்தாய்க் கன்றோ
தினம்தின மென் கவலை                                      (எனக்கென)

அனுபல்லவி: மனத்திலும் செயலிலும் வாக்கிலும் நோக்கிலும்
அனைத்துமாய் நின்றென்னை ஆண்டவ ளிருக்கையில்  (எனக்கென்ன)

சரணம்:     அல்லலை ஓட்டுவாள், வல்லமை நாட்டுவாள் ;
அம்புலி காட்டியும் அமுதினை ஊட்டுவாள்;
தொல்புவி யெனக்கொரு திட்டிலாய் ஆட்டுவாள்;
சுத்தமுக்த ஸ்மத்வச் சுடரெணுல் ஏற்றுவாள்              (எனக்கென்ன)

கண்மலர் கருணையால் புண்களைத் துடைப்பாள்;
கைம்மலர் ஆசியால் உய்கதி கொடுப்பாள்;
தன்னருட் புன்னகையால் சக்திக் கனல் பெருக்கித்
தாங்கிடும் ஜகக்மோக னாங்கித் துணையிருக்க            (எனக்கென்ன)


சுத்தானந்தம் தொடரும்...

சந்திரா

Chandra sekaran

unread,
Jun 15, 2009, 9:03:08 PM6/15/09
to minT...@googlegroups.com
மின் தமிழில் வழங்கிய சுத்தானந்தர் கீர்த்தனைகள் மின் வருடிய புத்தகத்தில் 'எனக்கென மனக்கவலை' என்ற மீனாட்சி அம்மையின் பாடல் உள்ளது. என்னுடைய சந்தேகம் ருசு ஆகிறது. எத்தனை பேர் மின்வருடிய புத்தகத்தைப் படிப்பார்கள் என்று! இன்று மதுரை திரு. கிருஷ்ணமூர்த்தி மதுரை கோவில் கும்பாபிஷேகம் முடிந்து தாமதமாக பாட்டைத் தந்துள்ளீர்களே என்று மின்னஞ்சல் மூலம் வினவியிருந்தார். மின் வருடிய புத்தகத்தினை முழுதுமாகப் பார்த்தால் அதில் இந்தப் பாடல் இருப்பது புலப்படும். நிற்க, தட்டச்சுசெய்வதே மேல் என்று நினைத்து மேலும் சில சக்தியின் மீது சுத்தானந்த பாரதியார் பாடிய பாடல்களை தருகிறேன். சீர்காழி கோவிந்தராஜன் பாடி பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று:

ராகம்:  ராகமாலிகை                                     தாளம்: ரூபகம்

(1) மத்யமாவதி
பல்லவி: நீயின்றி யார் என் துணை ?
      நிகி லாண்ட சக்தி !                                (நீ)

அனுபல்லவி:  தாயிழந்த சேயைப் போலே தவித்திடும் எனக் கிரங்கி,
வாயினால் இனிது சொல்லி மனக் கவலை தீர்த்தருள          (நீ)

(2) கல்யாணி
கல்யாணீ,கருணாமிபிகே, காத்யாயினி, மகாதேவி
எல்லாமும் வல்ல தாயே, ஏழைபங் காளி, காளீ!                             (நீ)

(3) கானடா
கானடர்ந்த காரிருளில் கடும்புலி பிடுங்குகின்ற
மானென இம்மாயக் கூட்டில் மயங்கி இயங்கு மதலை வாழ    (நீ)

(4) தோடி
பயந்தோடிப் பரிவு தேடிப்
பாதமலரைப் பற்றிக் கொண்டேன்!
நயந்தோரிடர் நலியக் காண்பாய்,
நாராயணி அபயம் அபயம்!                          (நீ)

(5) ஆரபி
ஆரபி மானமும் வேண்டேன்,
அம்மாவுன தன்பே போதும் !
பாரபி மானமும் வைத்ததுன்
பதத்திலேயபி மானம் வைத்தேன்!            (நீ)

(6) எதுகுலகாம்போதி
எதுகுலங் கோத்திரமென் றில்லை;
ஏக போக வெள்ள மாகப்
பொதுநிலையிலெப் போதும் அருளும்
புவனேஸ்வரி நவசெளந்தரி                       (நீ)

          (7) மோகனம்
மோகனாங்கி, முத்து குமாரி,
மூல வன்னி பாலாம்பிகே,
யோகபோகஸெள பாக்ய லக்ஷ்மி,
ஓம் பராசக்தி, ஓம் பராசக்தி
தஜ்ஜம் தகஜம் தளாங்கு தரிகிட
திமிகிட தக்கத்தா ...
தத்தரிகிட தகஜணு தகஜணு
தளாங்கு தரிகிட தா
தகிட தகதீம் தின்ன
தோம் தோம் தோம் தோம்                 (நீ)



சுத்தானந்தம் தொடரும்...
சந்திரா
--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

VADAKKU VAASAL

unread,
Jun 15, 2009, 9:41:01 PM6/15/09
to minT...@googlegroups.com
அன்புள்ள சந்திரசேகரன்
 
சுத்தானந்த பாரதியார் பாடலை வழஙகியமைக்கு நன்றி.
 
எனக்கேன்ன மனக்கவலை பாடலையும் சீர்காழி படுபிரமாதமாகப் பாடி இருப்பார்.  கேட்கும்போதே மனது ஒருமாதிரி கரைந்து போகும்.  சமீபத்தில் இருமாதங்களுக்கு முன்பு டெல்லியில் ஒசை நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு் கலைஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களுடைய குழுவில இந்தப் பாடலைப் பாடினார்கள்.  ரொம்பவும் நெகிழ்ச்சியாக இருந்தது,
 
இசையில் ஆர்வம் உள்ள நண்பர்களுக்குப் பாடலை அனுப்பி வைக்கிறேன்.
 
பென்னேஸ்வரன்

2009/6/16 Chandra sekaran <plastic...@gmail.com>

Chandra sekaran

unread,
Jun 16, 2009, 6:43:29 AM6/16/09
to minT...@googlegroups.com
பென்னேஸ்வரன்,
சீர்காழி பாடியது கிடைக்கவில்லை. அவரது மகன் சிவசிதம்பரம் எங்கள் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயத்தில் பாடியது கிட்டியது.விரைவில் இன்ன பிற பாடல்களோடு, சுபாவிற்கு அனுப்பி வைக்கிறேன். அவர் மின் தமிழில் இணைத்துவிடுவார்.
சந்திரா

Srirangam V Mohanarangan

unread,
Jun 16, 2009, 10:58:14 AM6/16/09
to மின்தமிழ்
க்ரூப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஒதுங்கி விடலாம் என்று
பார்த்தால் அப்பொழுதுதான் நல்ல நல்ல இழைகளாக ஆரம்பித்துத்
தொலைக்கிறீர்கள். என்ன செய்வது? சுத்தாநந்த பாரதியைப் பற்றி ஓர்
இழை ஓடுகிறது என்றால் எப்படி சும்மா இருப்பது? ஏனென்றால் 'சும்மா'
என்று ஆரம்பித்து அற்புதமான பிரார்த்தனைப் பாட்டைத் தந்திருப்பவர்
அல்லவா சுத்தாநந்தம்.

'அம்மா பரதேவி தயாபரியே
சும்மா உலகில் சுமையாக இரேன்
எம்மாத்திரம் உன் பணி இங்கு உளதோ
அம்மாத்திரம் வைத்து அடி சேர்த்தருள்வாய்'

ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றிய அவரது நூல்!...... நூலா அது?
விக்டர் ஹ்யூகோவின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளான 'இளிச்ச வாயன்'
அந்த உர்ஸுஸ்ஸின் உறுமல் இன்றும் கேட்குமே!, ஏழை படும் பாடு --
கேட்கவே வேண்டாம். மொழிபெயர்ப்பில் மூலத்தின் கதகதப்பை
இறக்குவதில் மகாநிபுணன் கவியோகி.

சந்திரசேகரன் நல்ல வேலை செய்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் வஞ்சகப்
பேர்வழி. நான் பாட்டுக்கு ஒதுங்கி இருந்த என்னை இப்படியா கொக்கி
போட்டு இழுப்பது?

Subashini Tremmel

unread,
Jun 16, 2009, 12:32:28 PM6/16/09
to minT...@googlegroups.com
இப்படி நீங்கள் புலம்பினாலும் மீண்டும் இங்கு பார்ப்பதில் எனக்கு நிறையவே சந்தோஷம். ஒதுங்கியெல்லாம் இருந்தது போது நண்பரே. மீண்டும் உங்கள் எழுத்துப் பணியை தொடருங்கள்..:-)
 
அன்புடன்
சுபா

2009/6/16 Srirangam V Mohanarangan <ranga...@gmail.com>

Chandra sekaran

unread,
Jun 16, 2009, 12:34:26 PM6/16/09
to minT...@googlegroups.com, ranga...@gmail.com
மோகனரங்கன் அண்ணா பின்னூட்டமும் அளித்து விட்டு, உடனுக்குடன் தொலைபேசியில் அழைத்தும் ‘விட்'டார்! என்னப்பா, குழுமம் வேணான்மா, இப்படி சுத்தானந்தத்தை எழுதி உள்ள இழுத்துட்டயே! என்று.

நானா இழுத்தேன்? சுத்தானந்தம் எல்லாருடையதும் தானே? அதனை முன்பு நிரம்ப படித்தவர் ரங்கன் அண்ணா என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிந்தது. ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடதானே...?
சித்தன் போக்கு, சுத்தன் போக்கு, சிவன் போக்கு :)

meena muthu

unread,
Jun 16, 2009, 2:07:33 PM6/16/09
to minT...@googlegroups.com
சுத்த ஆனந்தமல்லவா..  :))

  \\ இப்படியா  கொக்கி போட்டு  இழுப்பது?\\

2009/6/16 Srirangam V Mohanarangan <ranga...@gmail.com>
க்ரூப்பும்  வேண்டாம்  ஒன்றும்  வேண்டாம் என்று  ஒதுங்கி  விடலாம் என்று

devoo

unread,
Jun 16, 2009, 2:10:31 PM6/16/09
to மின்தமிழ்
Jun 16, 7:58 pm, Srirangam V Mohanarangan
// நான்  பாட்டுக்கு  ஒதுங்கி  இருந்த என்னை  இப்படியா  கொக்கி
போட்டு  இழுப்பது?//

உங்களை இங்கு பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி்; இணைய மௌனத்தை
இறையருள் கலைத்து விட்டது.

தேவ்

Shylaja Narayan

unread,
Jun 16, 2009, 10:19:59 PM6/16/09
to minT...@googlegroups.com
அந்த’ரங்க’ மோனம் கலைந்து
வந்ததறிய மகிழ்ச்சி, நலம்தானே?!

 

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2009, 11:25:42 PM6/16/09
to minT...@googlegroups.com
அறிஞர்கள் வெகுநாட்கள் தனித்திருக்க மாட்டார்கள்
 
அனால் விழித்திருப்பார்கள்
 
அரங்கனாருக்கு வணக்கம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/6/17 Shylaja Narayan <shyl...@gmail.com>
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

V, Dhivakar

unread,
Jun 17, 2009, 12:02:06 AM6/17/09
to minT...@googlegroups.com
அட! ரங்கனாரா.. வருக வருக..

தி

2009/6/16 Srirangam V Mohanarangan <ranga...@gmail.com>
க்ரூப்பும்  வேண்டாம்  ஒன்றும்  வேண்டாம் என்று  ஒதுங்கி  விடலாம் என்று

VADAKKU VAASAL

unread,
Jun 17, 2009, 12:20:57 AM6/17/09
to minT...@googlegroups.com
திஜர என்று அழைக்கப்பட்ட திஜ ரங்கநாதன் 1947ல் ‘புகழ்ச்செல்வர்’ என்ற நூலைத் தொகுத்திருக்கிறார்,.  1947ல் புதுக்கோட்டை எஸ்டேட் கார்த்திகேயனி பிரசுரத்தினால் வெளியிடப்பட்டது இந்த நூல்.   காந்தி தொடங்கி ருக்மணி தேவி முடிய பல அந்தக் காலத்துப் பிரபலங்களைப் பற்றிய குறிப்புக்கள் மற்றும் நேர்காணல்கள் கொண்ட தொகுப்பு அது. 
 
இந்த நூலில் சுத்தானந்த பாரதியை நேரில பேட்டி கண்டு எழுதியிருப்பார் திஜர.  இது மிகவும் அற்புதமான பதிவு.   
 
திஜரவின் புகழ்ச்செல்வர் நூலைப்பற்றி எதிர்பாராது கிட்டிய அரிய பொக்கிஷம்  என்று விரிவான ஒரு கட்டுரையை  என்னுடைய இணையதளத்தில்  எழுதியிருக்கிறேன். 
 
 
புகழ்ச்செல்வர் நூலை மறுபதிப்புசெய்யுமாறு தில்லித் தமிழ்ச் சங்கத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறேன்.  ஏற்றுக் கொண்டு செய்தால் தமிழுக்கு அவர்கள் செய்யும் மிக நல்ல தொண்டாகும்.  . கச்சேரிகள் மற்றும்  அரசியல் செய்வதோடு எப்போதாவது இதுபோன்ற பதிப்புக்களையும் அவர்கள் கொண்டுவரவேண்டும்.  
 
செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.  நல்ல புத்தியை இறைவன் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.  அந்த நூலை நூலகத்துக்குத் திருப்பி விட்டேன்.  மீண்டும் எடுத்து சுத்தானந்த பாரதி பற்றிய கட்டுரையை மட்டும் தட்டச்சு செய்து அனுப்புகிறேன் - இன்னும் ஓரிரு நாட்களில்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
2009/6/17 V, Dhivakar <venkdh...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Jun 17, 2009, 10:38:32 AM6/17/09
to minT...@googlegroups.com
அடடா!  எல்லோரும்   ஞாபகம்  வைத்திருக்கிறீர்களா?  பரவாயில்லையே.   எல்லோரும்  மறந்திருப்பார்கள்.  நாம்  பாட்டிற்கு ஏதாவது  வாய்க்கு  வந்ததை  உளறலாம் என்று  பார்த்தால்  முடியாதுபோல்  இருக்கிறது.  சுத்தாநந்தரின்   'பாரத  சக்தி  மகா காவியம்'  பற்றி ஏதாவது  உடான்ஸ்  உடலாமா என்று  பார்க்கிறேன். எனறோ  படித்தது.  சந்திரசேகர் ஏதாவது  நல்ல  பிரதி   அந்தக்  காவியத்துடையது  தந்தால்   பரவாயில்லை.  சந்திரன்  மனத்திற்கு  அதிபதி  ஆயிற்றே?  கனியுமா? 

2009/6/17 V, Dhivakar <venkdh...@gmail.com>

Chandra sekaran

unread,
Jun 17, 2009, 12:45:22 PM6/17/09
to minT...@googlegroups.com
பென்னேச்வரன், தி.ஜ.ர வின் கட்டுரையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அதை எனது மடலுக்கு முதலில் அனுப்புங்கள். நான் சரியான தலைப்பிட்டு மின் தமிழில் வெளியிடுகிறேன். அப்போது,பின்னர் பிரித்து வெளியிடுவதற்கு சுலபமாக இருக்கும்.

ரங்கன் அண்ணா, உங்களுக்கு இல்லாததா? பாரத சக்தி மகாகாவியம் புதிய பதிப்பு வெளிவந்துவிட்டது. கிடைக்குமிடம்: சுத்தானந்த நூலகம். தொலை பேசி: திரு. நாகராஜன்: 9283199890, திருவான்மியூர். சுத்தானந்த சமாஜம் சந்திரசேகரன் அனுப்பினார் என்று சொன்னால், 10% தள்ளுபடி தருவார்கள்.
நன்றி.
உங்கள் ‘பாரத சக்தி மஹாகாவியத்தினைப் பற்றிய கண்ணோட்டம் கருத்துக்களைப் பற்றிய பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன். தனி தலைப்பிட்டு: சுத்தானந்தம் - பாரத சக்தி மஹாகாவியம் என்று எழுத ஆரம்பிக்கலாம். பலர் இதனுள் ஈடுபடுவதை பார்த்து எனக்குள் நல்ல உத்வேகம் எழுகிறது. எல்லாருக்கும் நன்றி.

VADAKKU VAASAL

unread,
Jun 17, 2009, 2:31:18 PM6/17/09
to minT...@googlegroups.com
நூலகத்தில் இருந்து மீண்டும் எடுத்து தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.  ஓரிரு நாட்களில் செய்து விடுகிறேன். ஞாயிற்றுக்கிழமை இந்த வேலைக்கு மிகவும் தோதான நாள்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/6/17 Chandra sekaran <plastic...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Jun 22, 2009, 12:31:45 AM6/22/09
to minT...@googlegroups.com
>பாரத சக்தி மகாகாவியம் புதிய பதிப்பு வெளிவந்துவிட்டது<
 
நமது  மொழியையே  புரிந்துகொள்ள  மாட்டேன் என்கிறீரே!   நல்ல  பிரதி என்றால்   புதிய   புத்தகம் என்று  பொருள்  அன்று  எங்கள்  பாஷையில்.    பழைய  காப்பி,  முடிந்தால்  முதல்  பதிப்பு   இவையிற்றைத்தான்   யாம்   நல்ல  பிரதி என்போம்.   பரவாயில்லை.  வாணி  கலைத்தெய்வம்  காதிலே எமது  வேண்டுகோள்  விழுந்துவிட்டது.   சுத்தாநந்த  பாரதியாரால்  11-5-69 என்று   தேதியிடப்பட்ட   புதுக்கிய  பதிப்பு,  இரண்டாம்  பதிப்பு   நண்பர்  ஒருவர்   தந்து  சென்றார்.   கவியோகி    'பாரதசக்தி  மகாகாவியம்' என்பதற்கு    ஆங்கிலத்திலே  'The  Epic  of  God-men"   என்று  மொழிபெயர்க்கிறார்.   அதையும்  விரிவு  படுத்தி   The  Epic  of  one  god,  One  world,   and  one  humanity என்று  அடைப்புக்குறியிடுகிறார்.
ஆனால்  தமிழில்   விளக்கம்  தரும்போது   இதையே   சமயோக  வேதம்  என்று  குறிப்பிடுகிறார். எதற்குச்  சொல்கிறேன் என்றால்    புதிய  பதிப்பில்  இந்த    வித்தியாசங்களையெல்லாம் எடுத்துவிட்டு   ஒரு  நூல் என்று  தந்துவிடுவார்கள்.   ஆனால்  கவியோகி   இருந்தபோது  தாமே  அதற்கு என்ன  பொருள்  கண்டார் என்பது   இந்த  தலைப்புகளிலிருந்தே   தெரியவருகிறது  அல்லவா? 
 
தெய்வ  மனிதர்களைப்  பற்றிய  காவியம் என்றும்,    ஒரே  கடவுள்,  ஒரே  உலகம்,   ஒரே   மானிடம்  என்பதைப்  பற்றிய  காவியம் என்றும்  ஆங்கிலத்தில்   பொருள்  கூறுபவர்,  தமிழில்    யோகங்களைச்  சமப்படுத்திய  வேதம் என்றும்,   சமத்துவ  நிலையை  யோகமாக்கிய  வேதம் என்றும்  பொருள்  படும்படி   விளக்குகிறார்  அல்லவா?   (முடிந்தால்  தொடர்கிறேன் )    

2009/6/17 Chandra sekaran plastic...@gmail.com

Chandra sekaran

unread,
Jun 22, 2009, 1:13:16 PM6/22/09
to minT...@googlegroups.com
அருமை, மேலும் படிக்க ஆவலாய் உள்ளோம்.
சந்திரா

2009/6/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>

N. Kannan

unread,
Jun 23, 2009, 12:17:49 AM6/23/09
to minT...@googlegroups.com
ரங்கன்:

அழகான கருத்தைச் சொன்னீர்கள். சாகித்யகர்த்தாவிற்கு பன்மொழி அறிவு
உண்டென்றால் அவரே தமது படைப்பை மொழிபெயர்த்தலே சாலச்சிறந்தது.
அப்போதுதான் உள்ளடக்கம் தெளிவாய் வெளிவரும்.

மகாகாவியம் பற்றி மகாகாவியம் செய்யும் ஒருவர் சொன்னால்தானே சிறப்பு.

எப்போது ஆரம்பம்?

க.>

2009/6/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>:


  கவியோகி
> 'பாரதசக்தி  மகாகாவியம்' என்பதற்கு    ஆங்கிலத்திலே  'The  Epic  of
> God-men"   என்று  மொழிபெயர்க்கிறார்.   அதையும்  விரிவு  படுத்தி   The  Epic
> of  one  god,  One  world,   and  one  humanity என்று
> அடைப்புக்குறியிடுகிறார்.
>

Tthamizth Tthenee

unread,
Jun 23, 2009, 12:21:46 AM6/23/09
to minT...@googlegroups.com
மகாகாவியம் பற்றி மகாகாவியம் செய்யும்
 
எந்தரோ மஹானுபாவுலு
அந்தரீகி  வந்தனமுலு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

N. Kannan

unread,
Jun 23, 2009, 12:17:49 AM6/23/09
to minT...@googlegroups.com
ரங்கன்:

அழகான கருத்தைச் சொன்னீர்கள். சாகித்யகர்த்தாவிற்கு பன்மொழி அறிவு
உண்டென்றால் அவரே தமது படைப்பை மொழிபெயர்த்தலே சாலச்சிறந்தது.
அப்போதுதான் உள்ளடக்கம் தெளிவாய் வெளிவரும்.

மகாகாவியம் பற்றி மகாகாவியம் செய்யும் ஒருவர் சொன்னால்தானே சிறப்பு.

எப்போது ஆரம்பம்?

க.>

2009/6/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>:


  கவியோகி
> 'பாரதசக்தி  மகாகாவியம்' என்பதற்கு    ஆங்கிலத்திலே  'The  Epic  of
> God-men"   என்று  மொழிபெயர்க்கிறார்.   அதையும்  விரிவு  படுத்தி   The  Epic
> of  one  god,  One  world,   and  one  humanity என்று
> அடைப்புக்குறியிடுகிறார்.
>

N. Kannan

unread,
Jun 23, 2009, 12:30:16 AM6/23/09
to minT...@googlegroups.com
ஆம்! நம் அரங்கனும் ஒரு அருட்கவிதான். ஒரு மாகாவியம்
உருவாகிக்கொண்டிருக்கிறது. அது பிரளய ஜலமென பிரவாகமெடுத்து ஓடுவதைக்
கேட்டு அசந்திருக்கிறேன். அது முழுமையுற்று புத்தக வடிவில் வரும் போது
சரித்திரம் படைக்கும்.

> எந்தரோ மஹானுபாவுலு
> அந்தரீகி  வந்தனமுலு


க.>

srirangammohanarangan v

unread,
Jun 23, 2009, 10:38:07 AM6/23/09
to minT...@googlegroups.com
ஹி  ஹி  நான்  ஒரு  சோம்பேறி. !  மெதுவாகத்தான்   வேலை  நடக்கிறது.

2009/6/23 N. Kannan <navan...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jun 23, 2009, 11:31:38 AM6/23/09
to minT...@googlegroups.com
அவ்விடத்தில் பாவாயில்லை மெதுவாகவேனும் வேலை நடக்கிறதே
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
2009/6/23 N. Kannan <navan...@gmail.com>


அன்புள்ள

தமிழ்த்தேனீ

Tthamizth Tthenee

unread,
Jun 23, 2009, 11:32:30 AM6/23/09
to minT...@googlegroups.com
மன்னிக்கவும் அவ்விடத்தில் பரவாயில்லை  மெதுவாகவேனும் வேலை நடக்கிறதே
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ

 
On 6/23/09, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
அவ்விடத்தில் பாவாயில்லை மெதுவாகவேனும் வேலை நடக்கிறதே
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 6/23/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
ஹி  ஹி  நான்  ஒரு  சோம்பேறி. !  மெதுவாகத்தான்   வேலை  நடக்கிறது.

2009/6/23 N. Kannan <navan...@gmail.com>

ஆம்! நம் அரங்கனும் ஒரு அருட்கவிதான். ஒரு மாகாவியம்
உருவாகிக்கொண்டிருக்கிறது. அது பிரளய ஜலமென பிரவாகமெடுத்து ஓடுவதைக்
கேட்டு அசந்திருக்கிறேன். அது முழுமையுற்று புத்தக வடிவில் வரும் போது
சரித்திரம் படைக்கும்.

> எந்தரோ மஹானுபாவுலு
> அந்தரீகி  வந்தனமுலு


 
க.>
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

Chandra sekaran

unread,
Jun 24, 2009, 1:05:28 AM6/24/09
to minT...@googlegroups.com
மோஹனரங்கன் சார், ஒரு சின்ன விண்ணப்பம். சுபா அவர்கள் இந்த சுத்தானந்தம் இழைகள் அனைத்தையும் தொகுத்து வருகிறார்கள் எனவே, பாரத சக்தி மஹாகாவ்யம் பற்றிய இச்செய்திகளை ‘சுத்தானந்தம் - பாரத சக்தி மஹாகாவ்யம் ” என்று தலைப்பிட்டு (subject line) வெளியிட்டால், நல்லது. மற்றவர்களும் அவ்விழைகளை தொடர்வார்கள்.தற்போது சாகித்யகர்த்தா எனும் இழையில் இது வருவது சற்று குழப்பமாக உள்ளது.

நன்றி.
சந்திரா

2009/6/23 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Jun 24, 2009, 10:50:18 AM6/24/09
to minT...@googlegroups.com
>தற்போது சாகித்யகர்த்தா எனும் இழையில் இது வருவது சற்று குழப்பமாக உள்ளது.

நன்றி.
சந்திரா<
 
ஆஹா!    தொந்தரவாயிருப்பதால்  நிறுத்திவிடுகிறேன்.  நன்றி


2009/6/24 Chandra sekaran plastic...@gmail.com

Chandra sekaran

unread,
Jun 24, 2009, 2:00:11 PM6/24/09
to minT...@googlegroups.com
ஐயா, தொந்தரவு என்று மறதியில் கூட சொல்லவில்லை. தனி இழை, பின்னர் எங்களுக்கு எல்லாவற்றையும் ஒரு சேர வெளியிடும்போது உதவியாயிருக்கும் என்றுதான் சொன்னேன். தயவு செய்து தொடருங்கள், படிக்க ஆவலாய் உள்ளோம்.
சந்திரா

Chandra sekaran

unread,
Aug 29, 2009, 1:54:46 PM8/29/09
to minT...@googlegroups.com
மீண்டும் சுத்தானந்தம் தர என் அறுபட்ட கை விரல்களை இயங்கச் செய்த சுத்தானந்தருக்கு நமஸ்காரங்கள். தமிழ் மரபுக் கட்டளையின் திருவிழா நாளுக்காக சுத்தானந்தரின் சமாதி கோயிலில் வருடா வருடம் நடக்கும் ஆராதனை விழா அன்று நடக்கும் கச்சேரியின் ஒரு பகுதியாக 2005 ஆம் ஆண்டு நடந்த சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் கச்சேரியை ftp சர்வரில் சேர்த்துள்ளேன். இதில் எல்லா பாடல்களுமே சுத்தானந்தர் பாடல்களே. முதல் பாட்டான 'சுத்தானந்தச் சுடரே', எனும் பாடல் அவர் மேல் அவரது சீடர் எழுதிய பாடல்.

வணக்கம்
சந்திரா
Reply all
Reply to author
Forward
0 new messages