தமிழ்மணி - தமிழ் சோறு போடுமா...?

15 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
May 26, 2012, 8:39:49 PM5/26/12
to Min Thamizh

தமிழை வளர்க்கிறோம், தமிழால் வளர்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களும், தமிழின் பெயரால் விழா எடுப்பவர்களும், தமிழின் பெயரால் விருது பெறுபவர்களும், தாங்கள் உண்மையில் தமிழுக்குச் சேவை செய்கிறோமா என்பதற்குத் தங்கள் மனசாட்சியை ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது.

முன்பெல்லாம் நண்பர் ஒருவர், "தமிழ் சோறு போடுமா?'' என்று கேள்வி கேட்டு வந்தார். இப்போது "போடாது'' என்று தீர்ப்பே சொல்கிறார். நிலைமைகள் அந்த அளவுக்கு அவரை மாற்றி இருக்கின்றன...!

இந்த விஷயத்தில், ஈழத் தமிழர்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ்ச் சங்கத்தோடு நிற்க மாட்டார்கள். அதையும் கடந்து தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ் வானொலி என்று மேலே மேலே போய்க்கொண்டே இருப்பார்கள். பொருளாதாரக் காரணங்களால் தோன்றிய சில அமைப்புகள் மறைவதும் உண்டு. ஆனால், வானொலிகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கின்றன.

கனடாவில் சுமார் 5, பிரிட்டனில் 2, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் தலா 3 என்று
லாபமோ, நஷ்டமோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பெயர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அடைய வைக்கும்.

இலங்கை வானொலி "மரண அறிவித்தல்" என்று கூறுவதை, அவர்கள் "துயர் பகிர்வோம்" என்பார்கள். வெவ்வேறு துறைகளை ஆய்வு செய்த ஒரு நிகழ்ச்சிக்கு அங்கு வைத்த பெயர் "துறைகள் துளாவுவோம்". ஆனால், இங்கு ஒரு தமிழ்த் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்கு வைத்த பெயர் "மேஜிக் வித் அவுட் லாஜிக்"!

ஈழத் தமிழர்கள், நல்ல தமிழ்ச் சொற்களைத் தேடித்தேடிப் பிடித்து பெயர் வைப்பார்கள். "அத்லெட்" என்பதை "மெய் வல்லுநர்கள்" என்பார்கள். "சாம்பியன்" என்பதை "வாகைசூடி" என்றழைப்பார்கள். இப்படி எத்தனை எத்தனையோ...!

தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள்தான் தாங்களும் தடுமாறி, தமிழையும் ததிங்கிணத்தோம் போடவைக்கிறார்கள்!

துபையிலிருந்து ஒலிபரப்பாகும் மலையாள வானொலியான "ஏஷியா நெட்டில்" தினசரி ஒரு மணிநேர தமிழ் நிகழ்ச்சியை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்துகிறார். கடந்த 4 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைத்தான் பயன்படுத்தியுள்ளார் என்று அவரோடு பணிபுரிபவர்கள் கூறுகின்றனர்.

நல்ல தமிழில் பேசுவது என்று இவரும், துபையிலுள்ள அவருடைய நண்பர்களும் ஓர் இயக்கமே நடத்தி வருகிறார்கள்!

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழில் பேசுவதை, படிப்பதை அவமானமாகக் கருதுகிறார்கள் என்பதுதான் வேதனை.

"ஆனால்..." என்று நீட்டி முழுக்குவதைவிட "பட்" என்பதைச் சட்டென்று சொல்லிவிட முடிகிறதாம். "ஆகையால்" என்பதைவிட "ஸோ" என்று சொல்வது சுலபமாக இருக்கிறதாம். இதற்கு உண்மையான காரணம், இவர்களது வாய் அவசியப்படும் அளவுக்கு இவர்களது மூளையால் சொற்களை விநியோகிக்க முடியவில்லை என்பதுதான்!

வார்த்தைக்கு வார்த்தை "வந்து" என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மூச்சுக்கு முன்னூறு முறை "இப்பப் பாத்தீங்கண்ணா", "ஏன்னு கேட்டீங்கண்ணா" என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கும் இந்த மூளைக் குறைபாடே காரணம்! வல்லுநர்கள் சொல்கிறார்கள்!

"தமிழ் வாழ்க!" என்று இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய ஆசை. ஆனால், "தமிழ் மெல்ல இனி சாகாதிருக்கட்டும்" என்றே நிறைவு செய்யத் தோன்றுகிறது. மீண்டும் முதல் பத்தியை நினைவுகூர்வோம்!

நன்றி:- தினமணி

Geetha Sambasivam

unread,
May 26, 2012, 9:49:58 PM5/26/12
to mint...@googlegroups.com
வார்த்தைக்கு வார்த்தை உண்மை.

2012/5/27 Kannan Natarajan <thar...@gmail.com>


"தமிழ் வாழ்க!" என்று இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய ஆசை. ஆனால், "தமிழ் மெல்ல இனி சாகாதிருக்கட்டும்" என்றே நிறைவு செய்யத் தோன்றுகிறது. மீண்டும் முதல் பத்தியை நினைவுகூர்வோம்!

நன்றி:- தினமணி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
May 26, 2012, 10:52:10 PM5/26/12
to mint...@googlegroups.com, Kannan Natarajan
"தமிழ் சோறு போடுமா?" என்ற கேள்விக்கு ... தமிழ் ஆராய்ச்சியில் ஊறிக் கிடக்கும் என் பதில் ... "போடாது" என்பதுவே!

பண்டைக் காலத்திலும் தமிழ்ப் புலவர்கள் புரவலர்களின் புரப்பு இல்லாமல் வாழ்ந்ததில்லை. எல்லாப் புலவர்களும் மதிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" என்று புரவலனை விட்டு நீங்கிய புலவரைப் பற்றியும் நமக்குத் தெரியும்.

இந்தக் காலத்திலும் "புரவலர்" என்று பீற்றிக்கொள்பவர்கள் "புலவர்"களைத் தமக்குப் பல நூறாயிரம் அடிகள் கீழே வைத்துத்தான் பார்க்கிறார்கள். தமிழுக்காக அவர் செய்யும் தொண்டு என்பது இல்லை; "தான்" என்ற தன்மையை நிலைப்படுத்திக்கொள்ளவே அவர்கள் அப்படிச் செய்கின்றனர். அதைப் புரிந்துகொண்டே அந்த மாதிரி ஆட்களிடமிருந்து நான் விலகியிருக்கிறேன். 
எது எப்படி ஆயினும் ... இந்தக் காலத்திலும் ... தமிழ் மட்டும் சோறு போடாது. இதை ஆயிரம் முறை சொல்வேன். யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லத் தயார்! :-) 
பிற பின்னர்,
ராஜம் 


Tthamizth Tthenee

unread,
May 27, 2012, 12:45:53 AM5/27/12
to mint...@googlegroups.com, Kannan Natarajan
அமெரிக்கா போன்ற வெளி   நாடுகளில்  ஒரு மணி நேரத்துக்கு  ஒரு பெரும் தொகையை வாங்கிக் கொண்டு குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தருகிறார்கள்
தமிழ்ப்பாடல்கள் கற்றுத் தருகிறார்கள், 
 
சகோதரி  ராஜம் அவர்கள் கூறியபடி தமிழ் மட்டும் சோறு போடாது! என்பது உண்மை
 
அதே போலத்தான்  ஆங்கிலமும் , மற்ற மொழிகளும் தனித்து நின்று  சோறு போடாது
 
அது மொழியாயினும், மற்ற வழியாயினும்  அவற்றை நாம்  எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தே  அது நமக்கு சோறு போடும்  என்பது தெள்ளத் தெளிவு.
 
  பணம் ,பொருள் ஈட்டும் வழிகளில்  மனிதர்களின் சாதுர்யம், திறமை இவைகளைப் பொறுத்தே   அது தமிழாயினும்  வேறு எதுவாயினும்  சோறு போடுகிறது.
 
நல்ல தமிழ் அறிந்தோர்   " கற்ற வித்தையைக் காசுக்கு விற்கக் கூடாது"   என்னும் நேர்மையில் வாழ்பவர்கள்    தாம் கற்றுத் தரும் தமிழ் யாரேனும் ஒருவராவது  முழுமையாகக் கற்றால்  மனம் மகிழ்வோரே அன்றி தமிழை வியாபாரப் பொருளாக்க  ஒரு நாளும் சம்மதியார்.
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


2012/5/27 rajam <ra...@earthlink.net>

Subashini Tremmel

unread,
May 27, 2012, 4:03:46 AM5/27/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்புள்ள தேனீயார்

2012/5/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அமெரிக்கா போன்ற வெளி   நாடுகளில்  ஒரு மணி நேரத்துக்கு  ஒரு பெரும் தொகையை வாங்கிக் கொண்டு குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தருகிறார்கள்
தமிழ்ப்பாடல்கள் கற்றுத் தருகிறார்கள், 
 
சகோதரி  ராஜம் அவர்கள் கூறியபடி தமிழ் மட்டும் சோறு போடாது! என்பது உண்மை
 
அதே போலத்தான்  ஆங்கிலமும் , மற்ற மொழிகளும் தனித்து நின்று  சோறு போடாது
ஐரோப்பாவில் மொழி ஆசிரியர்களுக்கு பல நல்ல வரவேற்பும் சம்பளமும் கிடைக்கின்றது. உதாரணமாக அயர்லாந்தில், ஜெர்மானிய மொழி ஆசிரியர்களும், ஷ்பேனீஷ் மொழி ஆசிரியர்களும் தேவை என்ற அறிவிப்பை ஒரு இல இடங்களில் நான் பார்த்தேன். இதற்குக் காரணம் அயர்லாந்தில் வேலியில்லா பற்றாக்குறை வரும் போது ஜெர்மன் மொழி அறிந்திருந்தால் ஜெர்ம்னி வந்து பணி புரிய வாப்பு கிடைக்கும் என்பதால். அதாவது மற்ற வகை தொழில் வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய மொழிகளுக்கு வருமானம் தரும் வாய்ப்புக்கள் உண்டு.
 
அது மொழியாயினும், மற்ற வழியாயினும்  அவற்றை நாம்  எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தே  அது நமக்கு சோறு போடும்  என்பது தெள்ளத் தெளிவு.
 
  பணம் ,பொருள் ஈட்டும் வழிகளில்  மனிதர்களின் சாதுர்யம், திறமை இவைகளைப் பொறுத்தே   அது தமிழாயினும்  வேறு எதுவாயினும்  சோறு போடுகிறது.
 
நல்ல தமிழ் அறிந்தோர்   " கற்ற வித்தையைக் காசுக்கு விற்கக் கூடாது"   என்னும் நேர்மையில் வாழ்பவர்கள்    தாம் கற்றுத் தரும் தமிழ் யாரேனும் ஒருவராவது  முழுமையாகக் கற்றால்  மனம் மகிழ்வோரே அன்றி தமிழை வியாபாரப் பொருளாக்க  ஒரு நாளும் சம்மதியார்.

தேனீயார் சொல்வது ஒரு விதத்தில் புனிதப்படுத்துவது போல அமைகின்றது என்றே எனக்குத் தோன்றுகிறது.
மாணவர்கள் நன்கு கற்றால் ஆசிரியர்களுக்கு மனம் நிறையும். ஆனால் அதற்காக ஆசிரியர் மொழியை அடிப்படையாக வைத்து வருமானம் ஈட்டக்கூடாது என்பது இக்கால நிலைக்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லையே. பொருளாதாரம் சற்று பலமாக இருக்கும் போது இன்னும் அதிகமாக மொழிக்கு தொண்டு செய்ய முடியும் என்பது நிதர்சனம் இல்லையா?

சுபா



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Tthamizth Tthenee

unread,
May 27, 2012, 4:21:43 AM5/27/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நன்றி  சுபாஷினிட்ரெம்மல் அவர்களே
 
"ஆசிரியர் மொழியை அடிப்படையாக வைத்து வருமானம் ஈட்டக்கூடாது என்பது இக்கால நிலைக்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லையே. பொருளாதாரம் சற்று பலமாக இருக்கும் போது இன்னும் அதிகமாக மொழிக்கு தொண்டு செய்ய முடியும் என்பது நிதர்சனம் இல்லையா?
"
 
ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானதாக இருந்தது  நாங்கள் படிக்கும் காலத்தில்,
 
 
அப்போதும் பள்ளியில் ஆசிரியராக செயல்பட்டோர் தங்கள்  வாழ்வாதாரத்தைக்  கருத்தில்  கொண்டு  ஊதியம் வாங்கிக் கொண்டே கற்பித்தனர்.
 ஊதியம் வாங்காமல்  கற்றுத் தரவில்லை.
 
ஆனால்  அந்தத் தொழிலின் மேன்மையைக்  கருத்தில் கொண்டு அவர்கள் கற்பிக்கும் முறைக்கு மரியாதை செலுத்தி   உளபூர்வமாக  கற்றுத் தந்தனர்.
 
இப்போது ஆசிரியர் தொழில்  வெறும் பணம் ஈட்டும் தொழிலாகத்தான் இருக்கிறதே தவிர  மொழி வளர்ச்சியைப் பற்றியோ, மாணவர்களின்  அறிவுத்திறன் வளர்ச்சியைப் பற்றியோ கவலைப்படுவதில்லை என்பதே எம்போன்றோரின் வருத்தம்.
 
இன்னமும்  நான்  படித்த  அமலக்‌ஷண்ட் ஜெயின் பள்ளியில் எங்களுக்கு இருந்த தமிழ்  ஆசான் அவர்கள்  பாடம் நடத்திய முறை நினைவிருக்கிறது.
 
ஒரு முறை கரும்பலகையில் பாடலை எழுதிப் போட்டுவிட்டு   பல முறை  தெளிவான உச்சரிப்பில் உரக்கப் படிப்பார். அவர் படிக்கும்போதே   எங்களுக்கு பாடல் மனப்பாடமாகிவிடும்.
 
மேலும் அவர் விளக்கம் சொல்லும்போது கேட்ட மாணவர்கள் மீண்டும் ஒரு முறை  படிக்க வேண்டிய  அசியமே இல்லாமல் எப்போது கேட்டாலும் சொல்லக் கூடிய அளவிலே  மனதிலே பதிந்துவிடும்.
 
அப்போதைய  ஆசிரியர்களை  குருவாக நாங்களும் மதித்தே செயல்பட்டோம்
அவர்களும்    எங்களை  தங்கள் பிள்ளைகள் போல் பாசம் காட்டி கற்பித்தனர்.
 
இப்போது இவை இரண்டுமே இல்லை.
 
தமிழை நாம் உச்சரிக்கும்போது  நாம் உச்சரிக்கும் சொற்களின் கடைசீ எழுத்துவரை  அதற்குரிய உச்சரிப்பின் ஒலியோடு  கேட்பவர் காதைச் சென்றடைய வேண்டும் என்பார் எங்கள் ஆசிரியர்.
 
அவர் அளித்த பயிற்சிதான் இன்றளவும்  நான்   மேடையில் பேசுதற்கும் , நடிப்பதற்கும்   உரமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
 
அதெல்லாம் ஒரு பொற்காலங்கள்!
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 

 
 


2012/5/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Anbu Jaya

unread,
May 27, 2012, 5:43:54 AM5/27/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
தமிழ் சோறு போடுமா? போடாதா? என்பது பற்றி விடை கூற என்னால் முடியாது. ஆனால், புலம் பெயர்ந்து வாழும் சிறார்களுக்கு தன்னார்வலனாகத் தமிழ் கற்பிப்பதில் எனக்கு கிடைக்கின்ற மனநிறைவு வெள்ளிகளைச் சம்பாதிக்கும்போது கிடைத்ததில்லை. 
 
சுபா அவர்கள் சொல்வதையும்  நான் ஒத்துக்கொள்கிறேன்.  தொண்டு செய்வதற்கு நம் பொருளாதாரமும் நன்றாக இருக்கவேண்டும். அது எந்த அளவு வேண்டும் என்று நம் மனதைச் கட்டுப்படுத்துவதில்தான் (contentment) பலர் திண்டாடுகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது.
 
அன்பு ஜெயா

 
2012/5/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 27, 2012, 6:23:18 AM5/27/12
to mint...@googlegroups.com
வினாவே எனக்கு விசித்திரமாக படுகிறது. எந்த தொழில் சோறு போடும். 'சோறு' என்பதில் என்ன என்ன அடக்கம்? 'தமிழுக்கும்' 'சோறு போடும்' திறனுக்கும் சம்பந்தம் என்ன என்று சிந்தித்து வினவினால் தான் இந்த வியப்பு புரியும். தமிழ் ஒரு மொழி. அதை பணங்காய்ச்சி மரமாகவோ அல்லது முட்புதராகவோ கருதுவது இழக்கு. இது எல்லா கல்வி பிரிவுகளுக்கும் உரித்தது. 
'வெட்டியான் வேலை சோறு பொடவில்லையா?'
இன்னம்பூரான்

2012/5/27 Anbu Jaya <anbuja...@gmail.com>

rajam

unread,
May 27, 2012, 7:01:29 PM5/27/12
to mint...@googlegroups.com
On May 27, 2012, at 3:23 AM, Innamburan Innamburan wrote:

வினாவே எனக்கு விசித்திரமாக படுகிறது. எந்த தொழில் சோறு போடும். 'சோறு' என்பதில் என்ன என்ன அடக்கம்? 'தமிழுக்கும்' 'சோறு போடும்' திறனுக்கும் சம்பந்தம் என்ன என்று சிந்தித்து வினவினால் தான் இந்த வியப்பு புரியும். தமிழ் ஒரு மொழி. அதை பணங்காய்ச்சி மரமாகவோ அல்லது முட்புதராகவோ கருதுவது இழக்கு. இது எல்லா கல்வி பிரிவுகளுக்கும் உரித்தது. 
'வெட்டியான் வேலை சோறு பொடவில்லையா?'
இன்னம்பூரான்
அருமையான கேள்வி ... 'வெட்டியான் வேலை சோறு போடவில்லையா?"
உண்மை ... எந்த வேலையும் ஏதாவது ஒருவகையில் சோறு போடுகிறது. ஆனால், அது என்ன வகைச் சோறு? 
 

மொழி, படிப்பு, சாதி, இன்ன பிற என்று வரும்போது ... "சோறு போடுதலும்" சமூகத்தில் அந்த ஆட்கள் மற்ற பிறரோடு பாடுபட வேண்டியிருக்கும்போதும் வரும் சிக்கல் பல.

எடுத்துக்காட்டாக ... ஒரு காய்கறிச் சந்தையில் தக்காளி, மிளகாய், ... போன்ற காய்கறிகளை விற்பவர்கள் எல்லாருக்கும் ஒரே விலையில் விற்கிறார்களா? அதை எல்லாரும் ஒரே விலையில் வாங்க முடியுமா?
இங்கே ஆனானப்பட்ட அமேரிக்காவிலும் ... வணிகச் சந்தையில் போனால் தெரியும் ... எப்படி இன ஆதிக்கம் இருக்கிறது என்பது. நான் சீன மொழி பேசினாலோ, இந்தி  மொழி பேசினாலோ, ஸ்பானிய மொழி பேசினாலோ ...  காய்/பழங்களின் விலை எனக்காகக் கணிசமாகக் குறையும்!  இதை என்ன என்று சொல்லுகிறீர்கள்?
Reply all
Reply to author
Forward
0 new messages