அணங்கன் > அனங்கன்

694 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 22, 2012, 2:19:26 PM12/22/12
to vall...@googlegroups.com, mintamil

On Dec 21, 6:35 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

> அணங்கன் என்பது அணங்கை உடையவன் என்ற பொருளில் பயில்வது.

> அணங்கன் எம்பிரான்  = அணங்கினை ஒருபாகம் உடைய இறைவன்http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idFiel...

இவ்வுரை அணங்கு என்றால் இருபாலுக்கும் பொருந்தும் தெய்வசக்தி என்பதும்
ஆண்பாலுக்கும் தமிழில் வரும் என்பதைத் தெரிவிப்பதில்லை.

அணங்கு என்றே வருணன் (சங்க இலக்கியம்), சிவன் (தேவாரம்), காமன்
(குமரகுருபர சுவாமிகள், வள்ளற்பெருமான்) தமிழில் அழைக்கப்பட்டுள்ளனர்.
முருகு முருகன் என்றாதல் போல். அணங்கு அணங்கன் என்றாதலும் உண்டு.
திருவாசகத்தில் மனங்கனிந்து மொழிபெயர்த்து சமண நீதி நூல்கள் நாலும்,
இரண்டும் முழுதும் ஆங்கிலத்தில் தந்த நீங்கள், பசுபதி போன்ற கவிஞர்கள்
வசிக்கும் கனாடாவில் பிறந்த தமிழ்மேதை ஜி. யு. போப். அவர் தான் முதலில்
அணங்க என்னும் தமிழ்/த்ராவிடச் சொல் வடக்கே அனங்க என்றாகியிருக்கலாம்
என்று அறிவித்தவர்.
அப்போது சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்காத காலம். அது ரிக்வேதத்தில்
ஏராளமாகக் காணும் குதிரை இல்லாத நாகரிகம் என்று சம்ஸ்கிருத அறிஞர்கள்
தெளிவிக்காத காலகட்டம். அப்போதே, அனங்கன் < அணங்கன் என்று அறிவித்த
போப் அவர்களின் ஆய்வுத் திறன் போற்றற்குரியது. முணகு:முனகு,
சிணுங்கு:சினுங்கு, அணுங்கு:அனுங்கு (கம்பன் ஆள்கிறான்), வண்ணம்:வன்னம்,
குணுங்கு:குனுகு, தொணதொண:தொனதொன, தொண்ணை:தொன்னை,
தொண்ணூறு > தொன்னூறு, தொண்பது:தொன்பது > ஒன்பது (தொம்மிதி
தெலுங்கில்).... மணை என்பதை இன்று பலர் பத்ரிகைகளில் மனை என்றே
எழுதுவதும் நோக்குக. அணங்கில் ணகரம் வளைநா ஒலியை (retroflex)
வடக்கே இழப்பதால் ஏற்பட்ட பெயர் அனங்க.

ஆண் தெய்வங்களுக்கு அணங்கு என்னும் பெயர் உண்டு (Cf. முருகு - திருமுருகு
ஆற்றுப்படை. அம்மா(தாய்) போன்ற சக்தியை அம்மன் என்கிறோம்). காமவேளை
இந்திய சித்திரம்/சிற்பம் பெண்கள் புடைசூழக் காட்டும்.
யானை, குதிரை வடிவம் பெண்களால் ஏற்பட்டு அதன் மீதூரும் கடவுளாகக் காமன்
காட்டப்படுவன். எனவே, அணங்கனார் = அணங்கு அனார் = கண்டார் உள்ளத்தில் காம
விச்சையைத் தோற்றுவித்து வருத்தும் காமவேள் (=அணங்கு) பரிவாரம் ஆகிய
மகளிர்.
அணங்கனார் = அணங்கன் (மதவேள், மாரன் “the one who "kills"") - செயலால்
அணங்கனைப் போல் வருத்தம் விளைக்கும் அழகுடைய மாதர்.

சிந்துசமவெளியில் கொற்றவை-விடங்கர் (முதலை) தம்பதியர்
- பாரதத்தில் ஹிந்து மதத்தின் தோற்றம் பற்றி பேரா. வ. ஐ. சுப்பிரமணியனார்
(நிறுவனர், தமிழ்ப் பல்கலை) அஞ்சலிமலரில் ஆய்வுக்கட்டுரை எழுதியபோது
குறிப்பிட்டுள்ளேன்:
”In the classical Tamil literature, Varuṇa of Neytal tiṇai was known
as aṇaṅku “the sacred power to cause affliction and suffering” (Akam
207:1, 240:8-9) and several centuries later, god Śiva in Tevaram hymns
is also called as aṇaṅku. It has been first suggested by Rev. G. U.
Pope, then followed by Indologists, that the epithet, anaṅga, for
Manmatha is rooted in the old Tamil concept of aṇaṅku. Significantly
in old Tamil literature, only these three male gods mentioned are
called by the name, aṇaṅku. Like Varuṇa, Manmatha is dark colored.”
முழுக்கட்டுரை உள்ள இடம்:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9
இதனால், வருணனுக்கும், மாரன் ஆகிய காமனுக்கும் ஏன் மகரம் வாகனம் என்றும்
விளங்குகிறது.

நா. கணேசன்

சிதம்பரச் செய்யுட்கோவை பயில, உவேசா அவர்களின் பதிப்பு:
http://www.tamilvu.org/library/l5F10/html/l5F10ind.htm


> அம்மொழி கேட்ட போதே  அணங்கனார் சுற்றத் தாரும்  = அத்தகைய சொற்களைக்
> கேட்டவுடனேயே அம்மையாருடைய சுற்றத்தார்களும்; (12-ஆம் திருமுறை;
> காரைக்காலம்மையார்)

> ...அனந்த்

> 2012/12/21 devraj <rde...@gmail.com>
> 'அணங்கன்' மன்மதனைக் குறிக்கும் சொல்லா ?
> தொல் இலக்கியம் அநங்கனை அணங்கன்
> என்று கூறுகிறதா?

> அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை
> வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.
>                  [அப்பர் தேவாரம்]

> வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
> அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
>                   [அப்பர் தேவாரம்]

> அம்மொழி கேட்ட போதே
>    அணங்கனார் சுற்றத் தாரும்
> தம்முறு கிளைஞர்ப் போக்கி
>    அவன்நிலை தாமும் கேட்டு...
>             [சேக்கிழார்]

> அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
> அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
> பழுக்கும் மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
> பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
>                      [வள்ளலார்]

> அணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்
> கணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் டாங்கொலோ அறியேன்
> கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே
> உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே !
>                                                                   [வள்ளலார்]

> வளங்கு லாவரும் அணங்க னார்விழி
>              மயக்கி லேமுலை மயக்கி லேவிழு மாந்தர்கள்!
> களங்கு லாமுட லிறந்து போயிடு
>             காடு சேர்முனம் வீடு சேர்வகை கேண்மினோ!
>      ...

read more »

N. Ganesan

unread,
Dec 23, 2012, 12:28:19 PM12/23/12
to வல்லமை, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, yavaru...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mintamil, Deiva Sundaram, Theodore Baskaran, Santhavasantham, pira...@googlegroups.com
அணங்கன் என்னும் த்ராவிடச்சொல் வடக்கே அனங்கன் என்று திரிபு ஆகியது
என தமிழ், வடமொழிப் புலத்துறை முற்றிய முனைவர்கள் ஆராய்ந்து கூறியுளர்
எனப் பார்த்தோம். அத் தமிழ், வடமொழிப் பேராசிரியர்களின் கூற்றை ஆராய
காமவேளின் பெயர்களாகிய

(1) மாரன் (< ம்ருத்யு என்னும் வடசொல். காதலர்
பிரிந்துழிக் “கொல்பவன்” எனப் பொருள். இதனால் புத்த சரிதத்தில்
ஒரு புராணம் எழுந்தது. அதைக் காப்பியடித்து சைவத்தில் காமனைத் தகனம்
செய்த சிவபிரான் எனவும் ஓர் புராணம் பிறந்தது அனைவரும் அறிந்ததே.)
மாரன் - அணங்குதலைச் செய்யும் அணங்கன்/அனங்கன் என்னும் தமிழ்ச் சொல்லின்
loan translation. Planet என்பதற்கு கிரகம் (cf. to grab (in English)
என்னும் வடசொல்
தமிழின் ”கோள்” என்பது வடமொழிக்கு அளிக்கும் கொடை ஆகும்.

(2) அனங்கன் என்னும் பொருள் விளக்கத்தில் முழு உடலும் வருவதில்லை.
அங்கம் என்றால் உடலின் பாகங்கள் ஆகிய உறுப்புகள். உருவிலி ஆகிய
காமவேளுக்கு அ-தேஹி என்பது போல அல்லவா? பெயர் அமைந்திருக்கணும்
என்பர் வடமொழிப் பேராசிரியர்கள். அனங்கன் < அணங்கன் என்னும்
தேற்றத்துக்கு முக்கியமான சான்றாதாரம் இது.

(3) மன்மதன் -மதனம்/மத்து என்ற சொல்லோடு தொடர்புடையது.
மதில், மதிரை/மத்திரை (மதுரைக்கு சங்ககாலப் பெயர்), மத்திகை, மத்து, ...
இத் தமிழ்ச் சொல் ஏன் அணங்கனுக்கு வருகிறது என ஆராய்வோம்.

(4) காமனும் காமமும் - கமகம எனல் என்னும் ஒலிக்குறிப்ப்போடும்,
’கமம் சூழ்ந்து இயலும்’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தினோடும்
எவ்வாறு தொடர்புடைத்து? என்றும் பார்ப்போம்.

செந்தமிழ் (CTamil) பாரிஸ் பல்கலைக் குழுவில் இதுபற்றி
ராதகிருஷ்ண வாரியர் என்னும் வடமொழி, மலையாள அறிஞர்
மடலுக்கு இட்ட மறுமொழி இணைக்கிறேன்.

நா. கணேசன்

On Sat, Dec 22, 2012 at 7:16 AM, Radhakrishna Warrier
<radha_...@yahoo.com> wrote:
>
> "This mastu 'sour cream, buttermilk' seems to be Dravidian. The source
> seems to be mattu "churning rod" with a something
> like a half-sphere with grooves made. "
>
> In Malayalam, this mattu is called kaTakOl, meaning the kOl (stick)
> employed to 'kaTa' (churn) curd. Is this word 'kaTakOl' found in ancient
> Tamil? What about the verb root 'kaTa' for churning? Has it been used in
> ancient Tamil? (Incidentally, I still remember how good the butter that my
> mother freshly churned out of curd tasted in my boyhood. I never had a
> chance to eat such freshly churned butter later in my life as removing
> butter by hand churning of curd seems to have totally gone out of fashion in
> Kerala.)
>
> Has kaṭa been used in the sense of 'sculpting' in ancient Tamil? It is
> used so in Malayalam as in kaṭaññeṭutta uṭal (meaning sculptured body and
> implying a well-proportioned or beautiful body) and this reminds me of (yet
> another ) old movie song from an old Malayalam movie in which Mohini

> (Vishnu) sings "pālāẓi kaṭaññeṭuttōrāẓakāṇu ñāṉ ..." (I am the beauty
> churned out of the milky ocean...):
> http://www.youtube.com/watch?v=TbTW2uBhAPU.
>

kaTaital - turning "as making a shaft of wood or iron in a lathe".
churning, circling.
This is used also when in the mathanam act of the hero and heroine in
classical
Tamil epics. Matirai "walled city - the name of Madurai in Sangam Age
as seen
in numerous inscriptions", matil/maduru "encircling wall", mattu
"turning/circling rod"
have the root in Dravidian & not Indo-Iranian. See also mattikai in
Sangam Tamil,
and its meaning.

mathana as in Manmatha's name in Sanskrit has this Tamil root, mat- as
well.
BTW, kaama is also a Tamil word, and its root, kama is explained in
Tolkaappiyam,
it comes from from an ideophone, "kamakama enal" [1]. G. U. Pope, long
ago, has pointed
to ananga "god of love" coming from Dravidian word, aNanga (aNaGku the
afflicting
power of gods in Sangam texts, both female and male. VaruNa, Siva,
Kaama are called
as aNaGku in Tamil texts starting from Sangam. aNanga:ananga where the
second
consonant losing retroflex N to n is common even within Tamil
(kuNungu:kunungu,
aNungu:anungu, muNaku:munaku, vaNNam:vannam, ciNungu:cinungu, ...).
There is a chapter in Deciphering the Indus script book, about Kaama
god
in India having Dravidian origin, and the names, kaama, mathana,
ananga attest
to this theory.

> Mattu could also have come from Sanskrit/Prakrit matha meaning to churn,
> to agitate. I think it is an ancient word in Sanskrit. Isn't the mathanaṃ
> (or manthanaṃ ) of the milky sea an important part of the epics? I don't
> know if there are cognates of this word in other Indo European languages
> outside India.
>

mattu, matanam is not coming from Iran, but from Dravidian.

kaTai-tal, as done by mattu, occurs in Tamil classics. Look at the
hero-heroine's love affair in bed, explained by a Jaina monk,
TiruttakkatEvar,
(9th century): "kaamak kaTalaik kaTaiyal uRRaan2",
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=52&auth_pub_id=56&pno=1144

See another verse from this epic comparing elephants in battle with
the heroine in bed (1998 mail):
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9811&L=INDOLOGY&P=R19101&I=-3

This Jaina epic served as a model for Kamban's ramayanam in 12th
century
who lived during Kulottunga III's rule.


> The Hindi equivalent of kaTakOl is 'math' which is obviously cognate with
> Sanskrit 'matha'.
>

Sanskrit matha 'chrun-rod' has to do with Tamil, mattu from the root,
mat-
which also gives birth to words like matil, matan2 (kaaman), matirai,
mattikai,
etc.,


"mástu 9931 mástu n. ʻ sour cream ʼ TS., ʻ whey ʼ Suśr. [Poss. < *mad
-- s
-- tu -- (cf. *māda -- 2) EWA ii 607. -- √mad2]
N. mattimlo ʻ residue when making a partic. sweetmeat ʼ; -- B. māṭhā ʻ
buttermilk ʼ, M. maṭhā m. ʻ thick milk ʼ LM 381. -- Both very
doubtful."

This mastu for buttermilk like dairy products also from Drav. mattu
"churnning/circling rod', I think

N. Ganesan
PS:
[1] kaama 'god of love' coming from an ideophone, "kama kama enal"
that has to do with the sense
of smell. wrote this when I read JLC's 2 papers on ideophones in
Tamil,
https://groups.google.com/group/vallamai/msg/2e77da4391edb499
In Dravidian, many words come from sensory ideophones: For example,
(a) kama-kama enal. It is coming from the sense of smell, for example,
when
nice saambar gravy smells, we say: "kama-kama-Gkutu". This smell-
sensory ideophone
gives rise to Tolkaappiyar's suutra: "kamam niRaintu iyalum", as
kamam fills
up the room. and kama-enal smell ideophone got deified as the god of
Love, "kaama".
Yesterday, I tried to show the words for chicken from the sound they
make,
kuk-kuk enal. Hence, Sanskrit sources 2500 years note this word
as kukkubha/kuukura/kukkuTa & so on. Another important ideophone is
"am enal"
(= humming). Often in Tamil literature, "am ciRai" comes for beetles
(tumpi)
or birds. Long ago, I mentioned about the ideophone connection,
which Tamil
scholars of 20th century simply said "amciRai" means 'beautiful
feathers",
but does not make sense at all. ammu-tal or am enal is "humming".
kur-kur enal - this sound ideophone has given the dog names in India:
kurkura and kukkal (Tamil) etc.,


> Thanks and regards,
> Radhakrishna Warrier
>
> ________________________________
> From: N. Ganesan <naa.g...@gmail.com>
> To: cta...@services.cnrs.fr
> Sent: Friday, December 21, 2012 8:13:17 PM
>
> Subject: Re: [ctamil] kaaLai, kaLiRu, kaNavan - connection with rut/musth
> season in mammals
>
> On Fri, Dec 21, 2012 at 1:23 PM, Radhakrishna Warrier
> <radha_...@yahoo.com> wrote:
> >
> > According to the Online Etymology Dictionary
> > (http://www.etymonline.com/index.php?term=mastodon) the 'mast' in mastodon
> > is from Greek 'mastos' meaning 'breast'.
> >
>
> Obviously, Greek mastos 'breast' is different than Sanskrit word, mastaka
> 'head'.
>
> There is a famous TirukkuRaL which compares elephants mastaka with woman's
> breasts.
> "kaTAak kaLiRRin2mER kaTpaTaam mAtar
> paTAa mulaimEl tukil"
>
> >
> > Are Sanskrit 'mada/matta' and Hindi/Persian 'mast' related? 'Mast'
> > definitely connotes intoxication as in the line 'Mastī hai jis mēṃ pyār kī
> > tum vōh śarāb hō', (you are the wine that has in it the intoxication of
> > love) in the famous old Hindi movie song caudahvīṃ kā cānd hō .. .
> >
>
> Perhaps this masta are Indo-Iranian.
>
> CDIAL entry, for buttermilk and sour cream is different, I think.
> "mástu 9931 mástu n. ʻ sour cream ʼ TS., ʻ whey ʼ Suśr. [Poss. < *mad -- s
> -- tu -- (cf. *māda -- 2) EWA ii 607. -- √mad2]
> N. mattimlo ʻ residue when making a partic. sweetmeat ʼ; -- B. māṭhā ʻ
> buttermilk ʼ, M. maṭhā m. ʻ thick milk ʼ LM 381. -- Both very doubtful."
>
> This mastu 'sour cream, buttermilk' seems to be Dravidian. The source
> seems to be mattu "churning rod" with a something
> like a half-sphere with grooves made. Possible because of the rounded
> shape this is mattu. Compare with "mattikai"
> in Sangam poetry (pattuppaaTTu) that was once explained here to Dr. Tieken
> here. Also, matil "(round) wall",
> the initial name of the city in Tamil Brahmi inscriptions is Matirai &
> Iravatham Mahadevan derives it as
> "walled city" from matil in Tamil & maduru in Telugu (DEDR 4692) & he
> suggests even northern Mathura's
> original name is this Matiray "walled city". This mattu 'churning stick'
> that turns round has the root mat-,
> just like matil/maduru 'wall' (Cf. matirai in Brahmi insctions = modern
> Madurai). Also, compare with
> the word for brick, "iTTi" in Sangam poetry obviously from the verb "iTu"
> (to place while building a wall
> of a house). This has become iSTi in Sanskrit (like viTTu/viNTu/viNNu
> becomes viSNu), and this iSTi 'brick', probably
> borrowed from Indus culture becomes isti outside India losing the
> retroflexion.
>
> Also, Tamil maTuttal (& Kannada maDu-) - to eat food or drink. maThaa
> (Marathi) - thick milk (cf. mATu "(female) cow").
>

அணங்கு ஆகிய வருணனுக்கும் காமனுக்கும் ஏன் மகர வாகனம்?
https://groups.google.com/group/vallamai/msg/350f1e67710dc103

பேரா. நாகராசன் தொடங்கி நடாத்தும் இழையில் வினைதீர்த்தான்
ஐயாவுக்கு ஒரு பதில்.

DEV RAJ

unread,
Dec 24, 2012, 10:00:42 AM12/24/12
to mint...@googlegroups.com
On Sunday, 23 December 2012 22:58:19 UTC+5:30, N. Ganesan wrote:
>>>> (2) அனங்கன் என்னும் பொருள் விளக்கத்தில் முழு உடலும் வருவதில்லை.
அங்கம் என்றால் உடலின் பாகங்கள் ஆகிய உறுப்புகள். உருவிலி ஆகிய
காமவேளுக்கு அ-தேஹி என்பது போல அல்லவா? பெயர் அமைந்திருக்கணும்
என்பர் வடமொழிப் பேராசிரியர்கள். அனங்கன் < அணங்கன் என்னும்
தேற்றத்துக்கு முக்கியமான சான்றாதாரம் இது. <<<



அணங்கன் திராவிடச் சொல்லானால் தமிழில் மன்மதனைக் குறிப்பதற்கு
இது ஏன் பயனாகவில்லை ?

அங்கம் எதிர்ப்பதம் அநங்கம்;
அத்யயநம் அநத்யயநம்  ஆவதுபோல.
அங்கம் மேனியைக் குறிப்பதற்கு எல்லா இடங்களிலும்
பயனாகியுள்ளது, வடமொழியில். மெலிந்த உடல்
க்ருசாங்கம் எனப்படுகிறது. க்ருஷாங்கினி எனும்
கவிஞர்கூட இப்போது இருக்கிறார். சைதந்ய
மஹாப்ரபுவின் திருமேனியின் நிறத்தை ஒட்டி அவரை
கௌராங்கர் என்று அடியார் அழைத்தனர். சுந்தராங்கி,
மோஹனாங்கி எனும் பெயர்களையும் கேள்விப்
பட்டுள்ளோம்.

ஹேமாங்க: , வராங்க: , சந்தநாங்கதீ - மாலவனது பெயர்கள்.

உடற்குறைபாடு உடையவர்கள் ’விகலாங்க’ என அழைக்கப்படுகின்றனர்.
Viklang [handicapped] என்று தேடினால் 2,77,000 தேடல்
முடிவுகள் பெறலாம் -

http://www.google.co.in/webhp?hl=en&tab=gw#hl=en&tbo=d&spell=1&q=viklang&sa=X&ei=6zbYUOjhH478rAfeyoGAAw&ved=0CC4QvwUoAA&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&fp=348c8fa2c8de4d8a&bpcl=40096503&biw=1870&bih=978

'விகலாங்கர் பல்கலைக்கழகம்’ லக்னௌவிலும், சித்ரகூடத்திலும்
உள்ளது. சித்ரகூடத்தில் விகலாங்க யுனிவெர்சிடி
நடத்தும் ஸ்வாமி ராமபத்ராசார்யர் சிறுவயதில் கண்பார்வை
இழந்தவர்.

http://www.youtube.com/watch?v=6PzyoaEDhbE


‘அங்கம்’ மேனியைக் குறிப்பதாக எண்ணற்ற இடங்களில் உள்ளது;
சில உதாரணங்கள் -


*அங்கம் ஹரே: புலகபூஷணம் ஆச்ரயந்தி [ கநகதாரா ஸ்தவம்]

பசுபதே: *அங்கஸ்ய கூர்ச்சாயதே  [சிவாநந்த லஹரி]

லக்ஷ்மச்ரியே ம்ருதுபதே பசுப *அங்கஜாய [பாகவதம்]

*அங்க லாவண்யம் - மேனி எழில்
அங்கஸங்கம்  - உடற்சேர்க்கை

அங்கஸங்கம் -
अङ्गसङ्ग  -     bodily contact 
http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=angasanga&trans=Translate&direction=AU


அங்கஜ  -
अङ्गज - produced from or on the body
http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=+angaja&trans=Translate&direction=AU



’அனங்கன் என்னும் பொருள் விளக்கத்தில் முழு உடலும் வருவதில்லை’
என்பது நகைப்புக்குரியது; ‘ண’ ‘ன’ ஆனதைத்தவிர எந்த ஒரு
சான்றாதாரமும் காணப்படவில்லை.


'மாஷா' சங்கதத்திலும் உள்ளது;
அராபிய மொழியிலும் உள்ளது    




தேவ்

seshadri sridharan

unread,
Dec 24, 2012, 10:14:16 PM12/24/12
to mint...@googlegroups.com

 //அங்கம் எதிர்ப்பதம் அநங்கம்//

அங்கன் என்றபெயர் அங்கப்பன், அங்கய்யன்,அங்குசாமி என்றெல்லாம ஆடவர்பெயரில் இந்தும் வழுங்குகின்றது. அங்கன்,அனங்கன் ஆகிய பெயர்கள் சிந்து முத்திரைகளில் பதிவாகியுள்ளன. இதை  மன்மதன் பெயரோடு ஒப்பிட நான் விரும்பவில்லை.

சேசாத்திரி    

Hari Krishnan

unread,
Dec 24, 2012, 10:20:58 PM12/24/12
to mintamil


2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

இதை  மன்மதன் பெயரோடு ஒப்பிட நான் விரும்பவில்லை.

உண்மைக்கு உங்களுடைய அப்ரூவல் தேவையில்லை.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

DEV RAJ

unread,
Dec 24, 2012, 11:26:29 PM12/24/12
to mint...@googlegroups.com

அங்கம் உடல் உறுப்பையும் குறிக்கும்;
உடல் முழுவதையும் குறிக்கும். ஒன்றை மட்டும் ஏற்பேன்
மற்றதைப் புறக்கணிப்பேன்  என்பது பிடிவாதம்.


‘நாள்’ பகலிரவு அடங்கிய 60 நாழிகையையும்
குறிக்கும்; குறிப்பாகப் பகற்பொழுதை மட்டுமே
குறிப்பதாகவும் அமையும். அந்தியில் நடைபெற்ற அங்காடியை
"அல்லங்காடி" என்றும், பகலில் நடைபெற்ற அங்காடியை
"நாளங்காடி" என்றும் அழைத்தனர்.


‘பிறந்த நாள்’ என்பது இந்திய வழக்கப்படி பிறந்த நக்ஷத்ரத்தைக் குறிப்பது;
பிறந்த தேதியையன்று. திருவிதாங்கூர் மன்னர்கள் மூலந்திருநாள்,
ஸ்வாதித் திருநாள் என்று அழைக்கப்பட்டனர்.


கன்று, குட்டி, குஞ்சு என்று இளம்பருவம்
சுட்டப்படினும் நாம் இடம் பார்த்தே அவற்றைப்
பயன்படுத்தி வருகிறோம்.
 [எ கா]
ஆட்டுக்குட்டி, புலிக்குட்டி, ஆன்கன்று,
வாழைக்கன்று, கோழிக்குஞ்சு


ஒருபொருட் பன்மொழி - தேஹம், சரீரம், அங்கம்.
இடத்திற்கேற்பப் பயன்பாடும் அமையும்.
மாபெரும் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு
அடிப்படை வகுப்பு  [contextual usage of words]
நடத்தும் தௌர்பாக்யம் நேர்ந்தது வருத்தமளிக்கிறது



தேவ்


On Sunday, 23 December 2012 22:58:19 UTC+5:30, N. Ganesan wrote:

seshadri sridharan

unread,
Dec 24, 2012, 11:50:42 PM12/24/12
to mint...@googlegroups.com


2012/12/25 Hari Krishnan <hari.har...@gmail.com>

//உண்மைக்கு உங்களுடைய அப்ரூவல் தேவையில்லை.//ஹரிகி.

நான் ஒப்பீடு என்று தான் சொல்லியுள்ளேன் ஒப்புதல் என்று சொல்லவில்லையே பின் ஏன் இந்த ஒப்புதல் (approval) குழப்பம் உமக்கு.

Hari Krishnan

unread,
Dec 24, 2012, 11:55:20 PM12/24/12
to mintamil


2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

நான் ஒப்பீடு என்று தான் சொல்லியுள்ளேன் ஒப்புதல் என்று சொல்லவில்லையே பின் ஏன் இந்த ஒப்புதல் (approval) குழப்பம் உமக்கு.

நீங்கள் எழுதியதைப் படித்துப் பாருங்கள்:

2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>
இதை  மன்மதன் பெயரோடு ஒப்பிட நான் விரும்பவில்லை.

விரும்பவில்லை என்பது எதைக் குறிக்கிறது?  குழப்பம் யாருக்கு? 

N. Ganesan

unread,
Dec 24, 2012, 7:22:43 PM12/24/12
to vall...@googlegroups.com, Santhavasantham, mintamil
அணங்கு என்றால் ஆண், பெண் - இரு பால் தெய்வத்துக்கும் வருவது.
தமிழ் இலக்கியங்களிலே வருணன், சிவன், அணங்கவேள் (வடமொழியில் 
அணங்கன் > அனங்கன் என்று  திரிபு ஆனது எனக் கண்டோம், பல 
பேராசிரியன்மார் எழுதிய செய்திதான் இது.) மூன்று முக்கியமான ஆண் 

தெய்வங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். 
அணங்கு - male divine power ஆக ஹிந்து சமயக் கடவுளர்க்கு
பழைய தமிழில் உள்ளது இந்தியச் சமயங்களின் தோற்றம் பற்றி
அறிய இன்றியமையாதது. இம் மூவருடன் - வருணன், சிவன், 

அணங்கவேள் (காமன்) - சிந்து சமவெளி சமயத்தின்
முதலை வழிபாடு நெருங்கிய தொடர்புடையது. துவாரகையில்
இருந்து வேளிர் தமிழகம் வந்தபோது கொண்டுவந்த சிந்து
எழுத்துக்களில் விடங்கர்முதலை பல இடங்களில் கிடைக்கிறது.
உ-ம்: சாணூர், செம்பியன் கண்டியூர். இவையெல்லாம் இரும்புக்
காலம் - அதாவது, கி.பி. 1100க்குப் பின்னர். ஆதிச்சநல்லூரில்
அழகான சிற்பங்கள் பானைஓட்டில் 2006-ல் கிடைத்தன.
நெல்லம்பயிரும், அது நெல் எனக் காட்ட கொக்கும் இருக்கிறது.
(அண்மையில் நெல்லை சென்ற பவளசங்கரி கூட வயல்களில்
மேயும் கொக்குகளை ஒளிப்படம் எடுத்ததாய் எழுதியிருந்தார்).
கொற்றவையுடன் விடங்கரும் காட்டப்பட்டுள்ளது சிந்துவெளி
நாகரிகத் தொடர்ச்சி தமிழகத்தில் இருப்பதைக் காட்டிநிற்கிறது.

அங்கம் - என்றால் உடலின் பாகம். முற்காலத்தில் அங்கம்
எனில் முழு உடலும் என்ற பொருளில்லை.
பழைய இலக்கியங்களில் அங்கம் என்றால் முழு உடலும் என்றிருக்காது.
உ-ம்: (1)வேதாங்கம் ஆறு என்றால் வேதத்தின் உறுப்புகள் 6 எனப் பொருள். (2) பதஞ்சலி அஷ்டாங்க யோகம் எழுதினார்.
இங்கும் அங்கம் என்றால் யாகத்தின் பகுதி/பாகம் என்றே பொருள்.
(3) அங்க ஹீனம் என்றால் உடலின் ஒரு பாகம் ஈனமடைந்துள்ளது
எனப் பொருள்....

அணங்கன் என்ற தமிழ்ச்சொல் அனங்கன்
என்றானபின் அதற்கு அன்+அங்கம் என்ற ஒரு புராணக்கதை
கட்டப்பட்டது. முதலில் அனங்கன் என்ற சொல் அணங்கனில்
இருந்து பிறக்குமிடம் மகாராட்டிரம், குஜராத் போன்ற
பஞ்ச திராவிட தேசங்களாம். அன்+ அங்கம் என்று பிரித்து
அங்கம் = உடல் பாகம் என்பதை, முழு உடல் என்ற ஒரு
புதிய பொருள் அதன் பின்னரே ஊட்டப்பெற்றது. அங்கம்
என்றால் முழு-உடம்பும் என்று ஈரான் மொழி, வேதம்
இவற்றில் எல்லாம் பார்த்தால் எங்கும் இல்லை.

இதனை வால்மீகி ராமாயணத்தின் மூலம் உணரலாகும்.
கிழக்கிந்தியாவில் அங்கம், வங்கம் என்ற நாடுகள் உள்ளன.
இந்த “அங்கம்” நாட்டுக்கு பொருள் விளக்கம் அணங்கன் > அனங்கன்
புராணக் கதையிலிருந்து கட்டப்படுவதைக் காணலாம்.

பண்டை இந்தியாவின் 16 மகாசனபதங்களுள் ஒன்றான அங்கம்:

வடமொழி ராமாயணத்தில் உள்ள ஒரு சுலோகம்
(இடைச்செருகல்?) சிவன் அணங்கவேள் உடலை (மூர்த்தி)
எரித்துச் சாம்பல் ஆக்க அணங்கனின் உறுப்புகள் (அங்கங்கள்)
விழுந்த இடம் அங்கம் எனப் பெயர் பெற்றது என்கிறது.

அங்கம் என்னும் நாட்டின் பெயருக்கும் உடலுறுப்புக்கும்
தொடர்பில்லை.அணங்கு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து
மஹாராஷ்ட்ரா, குஜராத் போன்ற ஊர்களில் அனங்கன்
என்ற சொல் பிறந்தபின்னர் அதில் இருந்து அங்கம்
என்ற சொல்லை எடுத்து உடல் என்ற பொருள் கொடுக்கப்பட்ட
புராணங்கள் ஆய்வுக்குரியன. இவை மிகப் பிற்காலம்.
வேதத்திலோ, அத்தோடு உறவுடைய ஈரான் நாட்டிலோ
அங்கம் = உடம்பு என்று இல்லை. அங்கம், இதன் அடிப்படைப்
பொருள் உறுப்பு என்பதே. அங்கத்தினர் = உறுப்பினர், ...
என்று தமிழில் ஏன் சொல்கிறோம் என்று பார்த்தால்
அங்கம் என்பதன் மூலப்பொருள் விளங்கிவிடும்.

நா. கணேசன்

DEV RAJ

unread,
Dec 25, 2012, 2:13:04 AM12/25/12
to mint...@googlegroups.com
On Tuesday, 25 December 2012 05:52:43 UTC+5:30, N. Ganesan wrote:
>> அன்+அங்கம் என்ற ஒரு புராணக்கதை கட்டப்பட்டது. <<


அனபாயன் என்ற ஒரு தமிழ் மன்னன் இருந்துள்ளான்.

அன்+ அபாயன் என்று புனையப்பட்ட கதை; அப்பெயரில்
ஒரு மன்னன் இருந்ததில்லை என்பார் போலும் !


அக்நி - அநக்நி
அக்ஷ - அநக்ஷ
அக - அநக
அங்குச - அநங்குச
அஞ்ஜந - அநஞ்ஜந
அதி - அநதி
அதிக - அநதிக
அதீந - அநதீந
அத்யக்ஷ - அநத்யக்ஷ
அத்யயந - அநத்யயந
அந்த - அநந்த
அந்தர - அநந்தர
அந்ய - அநந்ய
அபகார - அநபகார
அபத்ய - அநபத்ய
அபாய - அநபாய
அபேக்ஷ - அநபேக்ஷ
அபிஜ்ஞ - அநபிஜ்ஞ
அப்ர - அநப்ர
அர்த்த  - அநர்த்த
அல - அநல
அலஸ - அநலஸ

உயிர் எழுத்து மொழிமுதலாகும்போது
‘அ’ [நஞ்] முன் நிற்குமானால் நகாரம்
தோன்றுவது சங்கத இலக்கண பாலபாடம்.
எல்லாம் புராணக்கதை என்கிறார் இந்த
இண்டாலஜிஸ்ட்.

இதுபோல் சொற்களை நிலை நிறுத்துவதற்காகப்
புனையப்பட்ட கதைகள் வேறு என்ன உள்ளன ?

’அணங்க அணங்காள் அகலாள்’ [ குலோ. சோ. உலா]
பெரும்பாலும் பெண்பாலை ஒட்டியதாகவே இலக்கிய
ஆளுமை. சைவ சமய பக்தி இலக்கியத்தில் மட்டும்
அரனாரைச் சுட்டுவதாக அமைகிறது.


>>> அணங்கவேள் <<<

இதுதான் புனைகதை; அணங்கவேள் இலக்கிய
ஆட்சியற்ற சொல். அடிப்படையற்ற ஓர் ஆராய்ச்சிக்கு
வலுச்சேர்ப்பதற்காக 21ம் நூற்றாண்டில் புத்துருவாக்கம்
பெற்ற சொல்



தேவ்

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 2:21:19 AM12/25/12
to mintamil


2012/12/25 DEV RAJ <rde...@gmail.com>

>>> அணங்கவேள் <<<

இதுதான் புனைகதை; அணங்கவேள் இலக்கிய
ஆட்சியற்ற சொல். அடிப்படையற்ற ஓர் ஆராய்ச்சிக்கு
வலுச்சேர்ப்பதற்காக 21ம் நூற்றாண்டில் புத்துருவாக்கம்
பெற்ற சொல்

மாரவேள் உண்டு.

பேதைமார் முதல் கடைப் பேரிளம்பெண்கள் தாம் 
ஏதியார் மாரவேள் ஏவ வந்து எய்தினார், 
ஆதி வானவர் பிரான் அணுகலால் அணி கொள் கார் 
ஓதியார், வீதி வாய் உற்ற ஆறு உரை செய்வாம். 
--கம்பராமாயணம், பால காண்டம், எதிர்கொள் படலம்.

அணங்கவேள் எங்க இருக்கார்னு வாயேஜர் கண்டுபிடிச்சி சொல்லிரும்.  

DEV RAJ

unread,
Dec 25, 2012, 6:17:18 AM12/25/12
to mint...@googlegroups.com
On Tuesday, 25 December 2012 05:52:43 UTC+5:30, N. Ganesan wrote:
>>>> அணங்கு - male divine power ஆக ஹிந்து சமயக் கடவுளர்க்கு
பழைய தமிழில் உள்ளது <<<<


எங்கே உள்ளது எனும் வினாவுக்கு விடை இல்லை.

இலக்கியத்தில் அணங்கவேளைக் காணவில்லை;
அநங்கவேள் இருக்கிறார்.

”அணங்கு நோய் எவர்க்கும் செய்யும் அநங்கனால் அலைப்புண்டு
ஆவி உணங்கினார்....” என்று கூறும் திருவிளையாடற் புராணத்தில்கூட
’அணங்கவேள்’ என்று அடித்துக்கூறும் கற்பனை இல்லை.



Search results: அநங்க occurs in 69 location(s)
Etexts from Project Madurai are linked to the PM website in appreciation of the volunteers.
==========================================================================


சீவகசிந்தாமணி: x1291x3 ஆக்கினாள் அநங்கன் அப்புத் தூணிழை அமருள் ஆனா
சீவகசிந்தாமணி: x1291x4 தோக்கிழ முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள்


சீவகசிந்தாமணி: x1358x3 வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை இவர்கண் ஆளும்
சீவகசிந்தாமணி: x1358x4 ஆய்ந்து அடி பரவ வைகும் அரிவையர்க்கு அநங்கன் அன்னான்


சீவகசிந்தாமணி: x1488x1 திருவிற்கும் கற்பகத் தெரியல் மலையார்
சீவகசிந்தாமணி: x1488x2 உருவிற்கு ஓர் விளக்கம் அம் ஒண் பொன் பூம் கொடி
சீவகசிந்தாமணி: x1488x3 முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய்சடை
சீவகசிந்தாமணி: x1488x4 ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே


சீவகசிந்தாமணி: x1572x2 குறு நெறி பயின்ற கூந்தல் குறும்பல் கால் ஆவிக் கொள்ளாச்
சீவகசிந்தாமணி: x1572x3 சிறு நுதல் புருவம் ஏற்றாச் சேர் துகில் தானை சோர
சீவகசிந்தாமணி: x1572x4 அறியு நர் ஆவி போழும் அநங்கனை ஐங்கனையும் எய்தாள்


சீவகசிந்தாமணி: x1668x1 அணுகி முன் நின்ற அநங்க விலாசினி அம் கை கூப்பிப்
சீவகசிந்தாமணி: x1668x2 பிணையல் நீட்டப் பெரும் தகை அஃதே ஏலான் முக நோக்கலும்
சீவகசிந்தாமணி: x1668x3 துணையில் தோகை என் அம் கைக்குத் தொங்கல் தொடுப்பாயும் நீ

சீவகசிந்தாமணி: x2001x2 வேம் எனக்கு உடம்பு எனும் வேய் கொள் தோளியை
சீவகசிந்தாமணி: x2001x3 ஏமுறுத்து அவள் நலம் நுகரின் எந்தையை
சீவகசிந்தாமணி: x2001x4 யாம் எலாம் அநங்க மா திலகன் என்றுமே

சீவகசிந்தாமணி: x2052x3 ஆடகச் செம் பொன் பாவை அந்தணள் புகழ்ந்து செம் பொன்
சீவகசிந்தாமணி: x2052x4 மாடம் புக்கு அநங்கன் பேணி வரம் கொள்வன் நாளை என்றாள்

சீவகசிந்தாமணி: x2062x3 நாறிரும் குழலினாளை நாகு அணை விடையின் புல்லிக்
சீவகசிந்தாமணி: x2062x4 கோல் தொடுத்து அநங்கன் எய்யக் குழைந்து தார் திவண்டது அன்றே


சீவகசிந்தாமணி: x2358x3 செறிந்த கழுநீர்ப் பூப் பிடித்துச் சேக்கை மரீய சிங்கம் போல்
சீவகசிந்தாமணி: x2358x4 அறிந்தார் தமக்கும் அநங்கனாய் அண்ணல் செம்மாந்து இருந்தான் ஏ

சீவகசிந்தாமணி: x2425x2 எரியும் வார் குழை சுடர இந்திர
சீவகசிந்தாமணி: x2425x3 திருவில் அன்ன தார் திளைப்பத் தேம் குழல்
சீவகசிந்தாமணி: x2425x4 அரி பெய் கண்ணியர்க்கு அநங்கன் ஆயின் ஆன்


சீவகசிந்தாமணி: x2548x1 முந்து சூர் தடிந்த முருக நம்பி என்பார்
சீவகசிந்தாமணி: x2548x2 ஐந்துருவ அம்பின் அநங்கன் என்று அயர் வார்


சீவகசிந்தாமணி: x2661x2 ஓக்கினார் கண்ணி சுண்ணம் உடற்றினார் உருவச் சாந்தில்
சீவகசிந்தாமணி: x2661x3 பூக் கமழ் துகிலும் தோடும் மாலையும் சொரியப் போர்த் தோர்
சீவகசிந்தாமணி: x2661x4 தாக்கிய அநங்கன் சேனை ஆறல் ஆயிற்று அன்றே


சீவகசிந்தாமணி: x2857x2 கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்து அவை கனற்ற நாளும்
சீவகசிந்தாமணி: x2857x3 வளை மயங்கு உருவ மென் தோள் வாய் நலம் பருகி மைந்தன்
சீவகசிந்தாமணி: x2857x4 விளை மதுத் தேறல் மாந்தி வெற்றிப் போர் அநங்கன் அனான்


==========================================================================

பதினோராம் திருமுறை: 201 பண்டங்கன் வந்து பலிதாஎன்றான்பக லோற் கிடென்றேன்
பதினோராம் திருமுறை: அண்டங் கடந்தவன் அன்னம்என்றான்அயன் ஊர்தியென்றேன்
பதினோராம் திருமுறை: கொண்டிங் குன்ஐயம்பெய் என்றான் கொடித்தேர் அநங்கன்என்றேன்


பதினோராம் திருமுறை: கருப்புச் சிலைஅநங்கன் கட்டழகு சுட்ட
பதினோராம் திருமுறை: நெருப்புத் திருநெற்றி நாட்டம் - திருச்சடையில்
பதினோராம் திருமுறை: திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி

பதினோராம் திருமுறை: பலிக்கு மனைப்புகுந்து பாவாய் - பலிக்குநீ
பதினோராம் திருமுறை: ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல்
பதினோராம் திருமுறை: ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.


பதினோராம் திருமுறை: 634 நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
பதினோராம் திருமுறை: நயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள்
பதினோராம் திருமுறை: அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள்
பதினோராம் திருமுறை: அம்பகலம் பாயும் அலர்ந்து. 63


==========================================================================

பதினோராம் திருமுறை: 903 பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்
பதினோராம் திருமுறை: அறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்த
பதினோராம் திருமுறை: பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்
பதினோராம் திருமுறை: மருதவட்டந் தன்னுளே வந்து. 8

பதினோராம் திருமுறை: 906 உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம்
பதினோராம் திருமுறை: படமொடுங்கப் பையவே சென்றங் -கிடைமருதர்
பதினோராம் திருமுறை: ஐயம் புகுவ தணியிழையார் மேல்அநங்கன்
பதினோராம் திருமுறை: கையம் புகவேண்டிக் காண். 11

பதினோராம் திருமுறை: துளைகள் நிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்
பதினோராம் திருமுறை: தளைகள் நிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரன்என்றேன்
பதினோராம் திருமுறை: வளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே. 43


==========================================================================

கம்பராமாயணம்: 3x5x13x1=2841 'கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால்
கம்பராமாயணம்: 3x5x13x2=2841 இற்றவன், அன்றுதொட்டு இன்றுகாறும் தான்
கம்பராமாயணம்: 3x5x13x3=2841 நல் தவம் இயற்றி, அவ் அநங்கன், நல் உருப்
கம்பராமாயணம்: 3x5x13x4=2841 பெற்றனன் ஆம்' எனப் பெயர்த்தும் எண்ணுவாள்.



கம்பராமாயணம்: 3x5x68x1=2896 பொற்பு உடை அரக்கி, 'பூவில், புனலினில், பொருப்பில், வாழும்
கம்பராமாயணம்: 3x5x68x2=2896 அற்பு உடை உள்ளத்தாரும் அநங்கனும், அமரர் மற்றும்
கம்பராமாயணம்: 3x5x68x3=2896 எற்பெறத் தவம் செய்கின்றார்; என்னை நீ இகழ்வது என்னே?
கம்பராமாயணம்: 3x5x68x4=2896 நல் பொறை நெஞ்சின் இல்லாக் கள்வியை நச்சி' என்றாள்.

கம்பராமாயணம்: 3x5x79x1=2907 அளிக்கும் மெய், உயிர், காந்து அழல் அஞ்சினள்,
கம்பராமாயணம்: 3x5x79x2=2907 குளிக்கும் நீரும் கொதித்து எழக் கூசுமால்;
கம்பராமாயணம்: 3x5x79x3=2907 விளிக்கும் வேலையை, வெங்கண் அநங்கனை,
கம்பராமாயணம்: 3x5x79x4=2907 ஒளிக்கல் ஆம் இடம் யாது? என, உன்னுமால்.


கம்பராமாயணம்: 3x7x71x2=3234 வாசம் நாறு ஓதியாளைக் கண்டனன், வவ்வல் ஆற்றான்,
கம்பராமாயணம்: 3x7x71x3=3234 பேசலாம் தகைமைத் தல்லாப் பெரும்பிணி பிணிப்ப, நீண்ட
கம்பராமாயணம்: 3x7x71x4=3234 ஆசையால், அழிந்து தேய்ந்தான் அநங்கன் அவ் உருவம் அம்மா!"


கம்பராமாயணம்: 3x7x93x1=3256 பரம் கிடந்த மாதிரம் பரித்த பாழி யானையின்
கம்பராமாயணம்: 3x7x93x2=3256 கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன்,
கம்பராமாயணம்: 3x7x93x3=3256 மரம் குடைந்த தும்பிபோல் அநங்கன் வாளி வந்து வந்து
கம்பராமாயணம்: 3x7x93x4=3256 உரம் குடைந்து நொந்து நொந்து உளைந்து உளைந்து ஒடுங்கினான்.


கம்பராமாயணம்: 3x7x99x1=3262 பருவத்தால் வாடைவந்த பசும்பனி, அநங்கன் வாளி
கம்பராமாயணம்: 3x7x99x2=3262 உருவிப் புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும், உளைந்து விம்மி,
கம்பராமாயணம்: 3x7x99x3=3262 "இருதுத்தான் யாது அடா?" என்று இயம்பினன்; இயம்பலோடும்,

கம்பராமாயணம்: 4x12x55x2=4607 கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒப்பக் கூறிற்று ஆமோ?
கம்பராமாயணம்: 4x12x55x3=4607 வாள் ஒக்கும் வடி கணாள் தன் புருவத்துக்கு உவமை வைக்கின்,
கம்பராமாயணம்: 4x12x55x4=4607 தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை, அநங்க சாபம்.


கம்பராமாயணம்: 5x3x11x1=5186=340 ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்,
கம்பராமாயணம்: 5x3x11x2=5186=340 தூவி அன்னம் மென் புனல் இடை தோய்கிலா மெய்யாள்,
கம்பராமாயணம்: 5x3x11x3=5186=340 தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு அநங்கவேள் செய்த
கம்பராமாயணம்: 5x3x11x4=5186=340 ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்.


கம்பராமாயணம்: 6x16x9x1=7770 'என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது? இந்து என்பான்
கம்பராமாயணம்: 6x16x9x2=7770 என்றுதான், இரவியோடும் வேற்றுமை தெரிவது என்பால்?
கம்பராமாயணம்: 6x16x9x3=7770 என்றுதான், அநங்க வாளிக்கு இலக்கு அலாது இருக்கல் ஆவது?
கம்பராமாயணம்: 6x16x9x4=7770 என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டான்.


கம்பராமாயணம்: 6x24x10x1=8961 பாணியின் தள்ளி; கால மாத்திரைப் படாது பட்ட
கம்பராமாயணம்: 6x24x10x2=8961 நாணியின் முறையிற் கூடாது, ஒருவழி நடையின் செல்லும்
கம்பராமாயணம்: 6x24x10x3=8961 ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அநங்க வேள்தன்
கம்பராமாயணம்: 6x24x10x4=8961 தூணியின் அடைத்த அம்பின் கொடுந்தொழில் துறந்த கண்ணார்.


==========================================================================

கந்தபுராணம்: 119x1 30. கால் உற நிமிர்ந்திடும் காமர் கோலையும்
கந்தபுராணம்: 119x2 நீலமும் கமலமும் நிறைந்த பொய்கையும்
கந்தபுராணம்: 119x3 ஆலை அம் கழனியும் அநங்கற்கு ஆயுத
கந்தபுராணம்: 119x4 காலைகள் இவை எனச் சாற்ற நின்றவே


கந்தபுராணம்: 333x2 வட புவி தாழ்ந்து தென்பால் உயர்தலும் மலயம் தன்னில்
கந்தபுராணம்: 333x3 கடமுனி தன்னை யேவிக் கவுரியை மணந்து பின்னர்
கந்தபுராணம்: 333x4 அடல் மத வேளை நல்கி அநங்கனே ஆகச் செய்தான்


கந்தபுராணம்: 1936x1 15. ஆறறி முனிவரன் அநங்க நூல் முறை
கந்தபுராணம்: 1936x2 வீறொடு புணர்தலும் வெய்ய மாயவள்
கந்தபுராணம்: 1936x3 கீறினாள் நகத்தினால் கீண்ட பால் தொறும்

கந்தபுராணம்: 4018x2 பந்து மாலையும் சிவிறி நீரொடு பரத்தையர்கள்
கந்தபுராணம்: 4018x3 மைந்தரோடு எறிந்து ஆடல் யார் உளத்தையும் மயக்கும்
கந்தபுராணம்: 4018x4 இந்த வீதி கொல் உருவு கொண்டு அநங்கன் வீற்றிருத்தல்


கந்தபுராணம்: 7981x1 89. ஒப்பு இலா ஒரு வேல் காளை ஒன் எயிற்று ஊறு தாங்கித்
கந்தபுராணம்: 7981x2 துப்புறு பவளச் செவ்வாய் திறக்கலள் சொல்லும் ஆடாள்
கந்தபுராணம்: 7981x3 அப்படி ஒருத்தி செல்ல அநங்க வேள் அமுதம் வைத்த
கந்தபுராணம்: 7981x4 செப்பினில் குறி உண்டாம் கொல் திறக்கலீர் சிறிதும் என்றான்


கந்தபுராணம்: 8836x1 39. விடுத்தலும் முராரி ஏகி வேள்வியும் தவமும் தாமே
கந்தபுராணம்: 8836x2 கொடுத்திடும் முத்தி என்னும் கொள்கை சேர் முனிவர் யாரும்
கந்தபுராணம்: 8836x3 அடுத்திடும் அவைக் கண் எய்தி அளவையில் அநங்கர் வல்லே
கந்தபுராணம்: 8836x4 தொடுத்திடும் சரங்களே போல் துணைவிழி பரப்பி நின்றான்


==============================================================

பெரியபுராணம்: 282x1 136. பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதைமைப் பருவம் நீங்கி
பெரியபுராணம்: 282x2 அள்ளுதற்கு அமைந்த பொற் பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம்
பெரியபுராணம்: 282x3 கெள்ள மிக்கு உயர்வ போன்ற கொங்கை கோங் கரும்பை வீழ்ப்ப
பெரியபுராணம்: 282x4 உள்ள மெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார்


பெரியபுராணம்: 292x1 146. பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம்
பெரியபுராணம்: 292x2 தாம் கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும்
பெரியபுராணம்: 292x3 தேம் கோதை மலர்க் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்பப்

===============================================================


தேவாரம்: 1x88x3 முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன்
தேவாரம்: 1x88x3 பெரிதும் முனிந்து உகந்தான் பெருமான் பெருங்காட்டின்
தேவாரம்: 1x88x3 அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானைப்

தேவாரம்: 1x118x4 எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம்
தேவாரம்: 1x118x4 ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த
தேவாரம்: 1x118x4 பைங்கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே.
தேவாரம்: 1x118x5 துறை பல சுனை மூழ்கி தூ மலர் சுமந்து ஓடி

தேவாரம்: 2x7x6 மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.
தேவாரம்: 2x7x7 விண்ணில் ஆன பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே;
தேவாரம்: 2x7x7 கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்;


தேவாரம்: 2x98x7 அணிப்படும் தனிப் பிறைப் பனிக் கதிர்க்கு அவாவும் நல்
தேவாரம்: 2x98x7 மணிப் படும் பைநாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே
தேவாரம்: 2x98x8 சுடப் பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன்
தேவாரம்: 2x98x8 இடர்ப்படக் கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய்

தேவாரம்: 3x91x8 பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி
தேவாரம்: 3x91x8 பெருந் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
தேவாரம்: 3x91x8 வருந் திறல் காவிரி வடகரை அடை குரங்காடு துறை
தேவாரம்: 3x91x8 அருந்திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே


தேவாரம்: 3x103x2 தேய்த்து அன்று அநங்கனைத் தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த
தேவாரம்: 3x103x2 காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம்போலும்
தேவாரம்: 3x103x2 வாய்த்த முத்தீத் தொழில் நால் மறையோர் வலம்புர நன்நகரே.


தேவாரம்: 4x80x8 செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான் தில்லை அம்பலவன்
தேவாரம்: 4x80x8 நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே
தேவாரம்: 4x80x9 சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்


தேவாரம்: 4x96x2 காய்ந்தாய் அநங்கன் உடலம் பொடிபட; காலனை முன்
தேவாரம்: 4x96x2 பாய்ந்தாய் உயிர் செக; பாதம் பணிவார்தம் பல்பிறவி
தேவாரம்: 4x96x2 ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை


தேவாரம்: 5x16x9 நீர் உலாம் நிமிர்புன்சடையா எனா
தேவாரம்: 5x16x9 ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய



தேவாரம்: 6x49x9 வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண்; வீரன் காண்; வீரட்டம் மேவினான் காண்;
தேவாரம்: 6x49x9 பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண்; பூதன் காண்; பூதப் படையினான் காண்;


தேவாரம்: 6x84x2 அம் கனகத்திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை; அநங்கன் உடல் பொடி ஆய் வீழ்ந்து
தேவாரம்: 6x84x2 மங்க நகத் தான் வல்ல மருந்து தன்னை; வண் கயிலை மாமலைமேல் மன்னி நின்ற


தேவாரம்: 6x85x9 அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம்; அரும்பொருள் ஆய் நின்றவன் காண்; அநங்கன் ஆகம்
தேவாரம்: 6x85x9 மறுத்தவன் காண்; மலை தன்னை மதியாது ஓடி மலைமகள் தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச


தேவாரம்: 6x99x5 பார் ஏறு படுதலையில் பலி கொள்வானே பண்டு அநங்கற் காய்ந்தானே பாவநாசா
தேவாரம்: 6x99x5 கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கருங்கைக் களிற்று உரிவை கதறப் போர்த்த

===========================================================
திருப்புகழ்: அநங்கன் மைத்துன வேளே கலாபியின்
திருப்புகழ்: விளங்கு செய்ப்பதி வேலா யுதாவிய
திருப்புகழ்: னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.

==========================================================


திருப்புகழ்: அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத்
திருப்புகழ்: தரம்பை மார்க்கடைக் ...... கலமாகிக்


========================================================

திருவிளையாடற்புராணம்: 11x24x3x945x3 வம் பஞ்சு முலை யினாரும் மைந்தரும் மாறி ஆட
திருவிளையாடற்புராணம்: 11x24x4x945x4 அம் பஞ்சு மாறி மாறி அநங்கனும் ஆடல் செய்தான்


திருவிளையாடற்புராணம்: 26x25x1x1558x1 அணங்கு நோய் எவர்க்கும் செய்யும் அநங்கனால் அலைப்பு உண்டு ஆவி
திருவிளையாடற்புராணம்: 26x25x2x1558x2 உணங்கினார் உள்ளம் செல்லும் இடன் அறிந்து ஓடிச் செல்லா

திருவிளையாடற்புராணம்: 27x8x3x1582x3 தன் நிலைக் காப்புச் செய்தாள் தனி மனக் காவல் பூண்டாள்
திருவிளையாடற்புராணம்: 27x8x4x1582x4 அந்நிலை பிழைத்த தியோன் அநங்கத் தீ வெதுப்பப் போனான்



திருவிளையாடற்புராணம்: 52x65x3x2497x3 ஏய் இரண்டு அன்ன கண்களால் அநங்கனை ஏவல் கொள்ளும்
திருவிளையாடற்புராணம்: 52x65x4x2497x4 பூவிரி பொலம் கொம்பு அன்னார் புது மது நுகரப் புக்கார்

திருவிளையாடற்புராணம்: 53x18x1x2557x1 திரிபுரம் பொரிய நக்க செவகம் போற்றி மூவர்க்கு
திருவிளையாடற்புராணம்: 53x18x2x2557x2 அருளிய தலைமை போற்றி அநங்கனை ஆகம் திய


==========================================================================


வில்லிபாரதம்: 2x18x1 வந்த காலையில் மனம் கலந்து, அநங்க நூல் மரபின் மெய் உறத் தோய்ந்து,
வில்லிபாரதம்: 2x18x2 சந்தனாகருப் பரிமளத் தன தடம் தயங்கு மாரிபினில் மூழ்க,
வில்லிபாரதம்: 2x18x3 இந்திராதிபர் போகம் உற்று இசைதலும், இன்பம் முற்றிய பின்னர்,

வில்லிபாரதம்: 2x96x2 நெஞ்சினை நலிய, மேன்மேல் நேயம் உற்று உருகி, ஆங்கண்,
வில்லிபாரதம்: 2x96x3 'எஞ்சிய காலம் எல்லாம் என்செய்தேம்!' என்று என்று எண்ணி,
வில்லிபாரதம்: 2x96x4 வெஞ்சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே.


வில்லிபாரதம்: 3x94x1 பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு
வில்லிபாரதம்: 3x94x2 ஆதிபன் ஆகி, அநங்கனை வென்றோன்,
வில்லிபாரதம்: 3x94x3 'நீதியினாலும் நிறைந்தனன், நுண் நூல்
வில்லிபாரதம்: 3x94x4 ஓதிய கேள்வி உதிட்டிரன்' என்னா,





தேவ்

On Tuesday, 25 December 2012 05:52:43 UTC+5:30, N. Ganesan wrote:

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 9:30:19 AM12/25/12
to vallamai, Santhavasantham, தமிழாயம்”, mintamil, tamil_ulagam


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>
அங்கம் என்றால் உறுப்பு என்பதே பொருள். உ-ம்: அஷ்டாங்க யோகம்.
அணங்க என்ற தமிழ்ச்சொல் அனங்க என்று திரிபானது என வடமொழி
முனைவர்கள் காட்டியுள்ளனர் என்பதறிந்தோம். அங்கம் = limb (உறுப்பு).
அங்கம் எனும் சொல் தென்கிழக்காசிய மொழிகளான முண்டா மொழிகள்
சம்ஸ்கிருதத்துக்குக் கொடுத்த சொல். இன்றும் அங்கம் = உறுப்பு என்று
பழைய நூல்களில் (வடமொழி, தமிழ், ...) காணலாகும்.

இதை மறுக்கவே இல்லை.  அங்கம் என்பது மொத்த உடலையும் குறிக்கவும் பயன்பட்டிருக்கிறது என்பதற்குப் போதுமான எடுத்துக் காட்டுகளைத் தந்தாகிவிட்டது.  

இப்போது என்ன காரணத்துக்காக, அங்கம் என்றால் உறுப்பை மட்டும்தான் குறிக்கும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று விளங்கவில்லை.   தாயுமானவருக்கும் பாரதிக்கும் தெரியாத தமிழ் நமக்குத்தானே தெரியும், இல்ல?

N. Ganesan

unread,
Dec 25, 2012, 9:15:32 AM12/25/12
to வல்லமை, Santhavasantham, thami...@googlegroups.com, mintamil, tamil_...@googlegroups.com
அங்கம் என்றால் உறுப்பு என்பதே பொருள். உ-ம்: அஷ்டாங்க யோகம்.
அணங்க என்ற தமிழ்ச்சொல் அனங்க என்று திரிபானது என வடமொழி
முனைவர்கள் காட்டியுள்ளனர் என்பதறிந்தோம். அங்கம் = limb (உறுப்பு).
அங்கம் எனும் சொல் தென்கிழக்காசிய மொழிகளான முண்டா மொழிகள்
சம்ஸ்கிருதத்துக்குக் கொடுத்த சொல். இன்றும் அங்கம் = உறுப்பு என்று
பழைய நூல்களில் (வடமொழி, தமிழ், ...) காணலாகும். விகலாங்கர் =
அங்கஹீனர் = உறுப்பின் குறையுடையோர், physically challenged .
கௌராங்கர் = white-limbed மனிதன். வேதாங்கம் = வேதத்தின்
உறுப்புகள், ...

வேத காலத்தில் அசுரன் என்றால் Supreme Spirit of the Heaven எனப் பொருள்.
வருணன், இந்திரன்,
ருத்திரன், அக்னி, ... போன்ற பெருந்தெய்வங்களுக்கு வேதத்தில் அசுரன் எனப்
பெயர்.
http://books.google.com/books?id=0U2QRpDv2KMC&pg=PA749&lpg=PA749&dq=sura+asura+etymology&source=bl&ots=k0NkFu3QBZ&sig=bbCFlbJJqc7EEkiemL9VNC9MF20&hl=en&sa=X&ei=kJ_ZUN7cB-Ge2QWe74H4CA&ved=0CDsQ6AEwAg#v=onepage&q&f=false
வேத காலத்தின் பின்னர்  அசுரன் X சுரன் என்ற  எதிர்ப்பதங்கள்
அமைக்கப்பட்டன.
சுரன் என்ற புதுச்சொல் உருவாக்கப்பட்டது. புராணக் கட்டுக்கதைகள் அமைக்க
வடமொழியில் இம்முறை வெகுவாகப் பயன்பட்ட ஒன்றாகும்.
செந்தமிழ் இலக்கியத்தில் அணங்கு - வருணன், சிவன், காமன் என்னும் ஆண்


தெய்வங்களுக்கு

வரும் பெயர். அணங்கு இருபாலுக்கும் பொது, எனவே male divine power என்றும்
சொல்லலாம்.
முருகு என்பதும் அணங்கு போலத்தான். பிற்காலத்தில் ஆணாக உருவகம்
செய்யப்படும் தெய்வம்.
அணங்கவேள் அனங்க என்றானபோது அங்கம் = உறுப்பு பொருள் விரிக்கப்பட்டு
அனங்கன் X அங்கன்.
அனங்கன் = உடல் அற்றவன் என்ற கதை கட்டப்பட்டது. சங்கத் தமிழை
ஆராய்கிறபோது
வடமொழி அறிஞர்கள் அணங்கு எனச் செந்தமிழ் இலக்கியங்களால் என்றழைக்கப்படும்
அணங்கன் அனங்கன் ஆகியமையும், அங்கம் என்றால் உறுப்பு எப்படி முழு தேஹம்
அற்றவன் என்றாகும்? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர். தென்னமெரிக்கா
போன்ற நாடுகள் தம் மொழி இழந்ததுபோல், அணங்கவேள் தன் பொருள்
இழந்து வடமொழியில் அனங்கன் ஆகியிருக்கிறான்.

அணங்கவேள் பற்றிய ஆராய்ச்சியைச் சீவகசிந்தாமணியில் இருந்து தொடங்கி
வைத்தவர்
ஜி.யு.போப் அவர்கள். பின்னர் முன்னெடுத்தவர் திராவிட மொழிகளின் ஒப்பகராதி
செய்த வடமொழிப் பேரா. பர்ரோ அவர்கள். கனடா நாட்டில் பிறந்த பாதிரியார்
போப்பையர் தமிழ்த்தாத்தா உவேசா கொங்குவேள் பாடிய பெருங்கதையை
நூல் முழுதும் கிட்டாவிட்டாலும் அச்சிட்ட காலத்தில் மறைந்துவிட்டார்.
ஜி.யு. போப்புக்கு கொங்குவேளின் நூல் கிட்டியிருந்தால் இன்னும் விளக்கமாக
எழுதியிருப்பார். அவ்வாய்ப்பு அவருக்கு அமையாது போயிற்று.

இன்று கிறித்து பிறந்த நாள்! கிறித்துமசு உலகம் முழுதும்
கொண்டாடப்படுகிறது.
அச்சுத் தொழிநுட்பை இந்திய மொழிகளிலேயே முதல்முறையாகத் தமிழுக்குக்
கொண்டு வந்த ஐரோப்பிய பாதிரிகளால் சாதிசமத்துவம் தமிழ்நாட்டிலும்,
இந்தியாவிலும் பரவலாயிற்று. விஞ்ஞான ஆய்வுமுறைகள் பெருகி வருகின்றன.
சிந்துசமவெளி நாகரிகம் அகழாய்வுகளால் கண்டுபிரிக்கப்பட்டுள்ளது.
உலக ஆர்கியாலஜியில் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய
நாகரீகம் சிந்து சமவெளிதான். அத் தொன்மையில் சில ஒளிகள் கிடைத்துள்ளன.
ஹெராஸ் பாதிரியார் சிந்தெழுத்தில் உள்ள மீன் சின்னம் தமிழ்த்தொடர்பு என
அறிவித்தார்.  மீன் சின்னம் கூட மெகாலித்திக் காலத்தில் காணவில்லை.
மீன் போன்றே சிந்தில் முக்கியமானது மகர விடங்கர் (முதலை) cult.
ஆனால், தென்னக, தமிழ்நாட்டில் கிடைக்கும் மெகாலித்திக் கால
சிந்துசமவெளியின் தொடர்ச்சியாகக் கிடைக்கும் எழுத்துக்களில் மகரம்
சிந்துசமவெளிபோலவே எண்ணற்ற இடங்களில் கண்டறியப்படுகிறது.
இது மகரம் (முதலை) என்று தெரியாமல் ஐராவதம் மகாதேவனார் பேய்/பிரேதம்/
அணங்கு
முருகன் என்று எழுதியுள்ளார்கள். சிந்துசமவெளியின் சமயத் தொடர்ச்சிக்கு
தமிழகத்தில் மிக முக்கியமானது இந்த மகர விடங்கரைக் குறிக்கும்
எழுத்தாகும்.
சாணூரிலும், ஆதிச்சநல்லூரிலும் கிடைத்துள்ள மகரம், விடங்கர்-கொற்றி
தம்பதி, ...
பற்றி எழுத நிறைய உள்ளது. அணங்கவேள்கள் வருணன், சிவன், காமன் சிந்தில்
மகரமாய்க் காட்டப்படுகின்றனர்.

கிறித்துமஸ் நன்னாளில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து
இந்திய செம்மொழிகளை - தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் - விஞ்ஞானவழியில்
ஆராய்ந்து இந்தியர்களுக்கு தமிழின் தொன்மை, சிந்தில் அதன் இடம், ...
பற்றி அறிவிக்க உள்ள 21-ஆம் நூற்றாண்டு பாதிரியார்களையும்,
பேராசான்மாரையும்
வாழ்த்தி வரவேற்போம்.

ஜி. யு. போப் வழி வாழையடிவாழையாய்த் தொடர்கிற தமிழ்-சம்ஸ்க்ருத ஆய்வுகள்
வாழ்க!
http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f2/Statue_of_G_U_Pope.jpg

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 9:44:31 AM12/25/12
to vallamai, mintamil, Santhavasantham


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>
what you have given are modern examples. My research is about ancient
Hindu religion,

தாயுமானவர் உங்கள் கருத்துப்படி நவீன யுகமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.  அந்த மனுஷன் தேவ் இத்தனை சிரத்தையாக இவ்வளவு பழைய சான்றுகளைத் தருகிறாரே, குறைந்தபட்சம் அதைப் படித்தாவது படித்துப் பார்த்ததுண்டா?

பலருக்கு ஒத்தி ஒட்டுவதைப் படிப்பதற்கே நேரமிருப்பதில்லை.  அதுதான் உலகப் பிரசித்தமாயிற்றே. 

Mohanarangan V Srirangam

unread,
Dec 25, 2012, 10:34:50 AM12/25/12
to vall...@googlegroups.com, mintamil, Santhavasantham
வாதம் சரியில்லை திரு கணேசன்.

அங்கம் என்றால் உடலுறுப்பு, உடல் என்ற பொருட்களில் ஆளப்பட்டிருப்பது பழைய நூல்களிலும் உண்டே. நவீன ஆசிரியர்கள்தான் ஆண்டுள்ளார்கள் என்பது சரியில்லை.

முதலாழ்வார்கள் ‘அங்கத்தால் திரிவரேலும்’ (பொய்கையாழ்வார் 98) என்று உடம்பைக் குறிக்கின்றார்கள்.

திருநாவுக்கரசர் (8 80 8) ‘அயன் மாலும் திரிந்து எய்த்தும் காண்கிலா அணங்கன்’

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=50800&padhi=080&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

என்று கூறும் இடத்தில் அணங்கன் - வடிவுடையவன் என்றே பொருள் வருகிறது.

பிங்கலந்தை நிகண்டு அங்கம் என்றால் சயனம் கட்டில் என்றும் கூறுகிறது. (10.9).

‘அமர் செய் அங்க மலைக்கு முன் நின்றருள் வேங்கடத்து அற்புதனே’ என்று அட்டப்பிரபந்தம் கூறுகிறது. இங்கு அங்கமலை என்பது யானையைக் குறித்தது.

ஆத்மஜன் என்றால் புதல்வன். ஆத்ம என்பது இங்கு உடலைக் குறித்து நின்றது. இதற்கு நேராக அங்கன் என்றால் புதல்வன் என்று பேயாழ்வாரின் (65) பாட்டு கூறுகிறது.
’அங்கற்கு இடர் இன்றி’-

அங்கனை என்றால் புதல்வி என்று கருவூர்த் தேவரின் திருவிசைப்பா (6 8) சொல்கிறது. ’தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை’.--

அணங்க என்றால் வருந்த என்னும் பொருளில் ‘அணங்க அரும் பெரும் சாத்து அவிய நூறி’ (55 47) என்று பயன்படுத்திக் காட்டும் பெருங்கதையேதான் அனங்கன் என்றால் மன்மதன் என்றும் பிரித்துக் காட்டுகிறது. ‘அனங்கத்தானம் புகுந்து அவற் கண்டு’ (பெருங் கதை 95 75)

வில்லிபாரதம் (44 12) ‘அங்க சாரியினால் நன்னூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து’ என்று உடம்பின் வலசாரி இடசாரியைக் குறிக்க ‘அங்க’ என்னும் பயன்பாடு செய்கிறது.

எனவே அங்கம் என்றால் உறுப்பை மட்டுமே குறித்தது என்பதும், அணங்கிலிருந்து அனங்கன் வந்தது என்பதும் வீண் பிடிவாதம்.

மீண்டும் சான்று நூல்களைச் சாவதானமாக நோக்குக.

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*




2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>


On Dec 25, 8:30 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/12/25 N. Ganesan <naa.gane...@gmail.com>

>
> > அங்கம் என்றால் உறுப்பு என்பதே பொருள். உ-ம்: அஷ்டாங்க யோகம்.
> > அணங்க என்ற தமிழ்ச்சொல் அனங்க என்று திரிபானது என வடமொழி
> > முனைவர்கள் காட்டியுள்ளனர் என்பதறிந்தோம். அங்கம் = limb (உறுப்பு).
> > அங்கம் எனும் சொல் தென்கிழக்காசிய மொழிகளான முண்டா மொழிகள்
> > சம்ஸ்கிருதத்துக்குக் கொடுத்த சொல். இன்றும் அங்கம் = உறுப்பு என்று
> > பழைய நூல்களில் (வடமொழி, தமிழ், ...) காணலாகும்.
>
> இதை மறுக்கவே இல்லை.

Sanskrit professors have shown this already.


>அங்கம் என்பது மொத்த உடலையும் குறிக்கவும்
> பயன்பட்டிருக்கிறது என்பதற்குப் போதுமான எடுத்துக் காட்டுகளைத்
> தந்தாகிவிட்டது.
>

what you have given are modern examples. My research is about ancient
Hindu religion,
and how Makara Vidangar cult of Indus valley culture spreads to
Tamilnadu
in megalithic period. The male sacred power, aNangu, plays a lead role
in this -
Kaaman, a Dravidian word just like aNangan, changes to ananga in
Sanskrit.


> இப்போது என்ன காரணத்துக்காக, அங்கம் என்றால் உறுப்பை மட்டும்தான் குறிக்கும்
> என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று விளங்கவில்லை.
> தாயுமானவருக்கும் பாரதிக்கும் தெரியாத தமிழ் நமக்குத்தானே தெரியும், இல்ல?
>

Pretty modern poets. And Bharati is a journalist and not a researcher
of ancient Tamil - Sanskrit
relations.

Regards,
N. Ganesan
Like the dharmic Wheel (அறவாழி) of Mahavira and Buddha,  the wheel of
Philology always turns slowly.
              ~ கடுமிமான் கொங்குகிழான்
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
> நட்பும் சுற்றமும் நலமே என்பதை
> மட்டும் கேட்க வாணி அருள்கவே.
> God bless all of us.  May we hear from everyone in our life that they are
> good and prosperous.

--



DEV RAJ

unread,
Dec 25, 2012, 10:46:20 AM12/25/12
to mint...@googlegroups.com
On Tuesday, 25 December 2012 19:45:32 UTC+5:30, N. Ganesan wrote:
>>>> வடமொழி அறிஞர்கள் அணங்கு எனச் செந்தமிழ் இலக்கியங்களால் என்றழைக்கப்படும்
அணங்கன் அனங்கன் ஆகியமையும், அங்கம் என்றால் உறுப்பு எப்படி முழு தேஹம்
அற்றவன் என்றாகும்? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர். <<<<


अंग (a.nga) = body, organ

http://sanskritdocuments.org/dict/dictall_unic.html

செல்வன்

unread,
Dec 25, 2012, 2:37:33 PM12/25/12
to vall...@googlegroups.com, mintamil
http://vedabase.net/sb/1/16/34/


yo vai mamātibharam āsura-vaḿśa-rājñām

akṣauhiṇī-śatam apānudad ātma-tantraḥ

tvāḿ duḥstham ūna-padam ātmani pauruṣeṇa

sampādayan yaduṣu ramyam abibhrad ańgam

SYNONYMS

yaḥ — He who; vai — certainly; mama — mine; ati-bharam — too burdensome; āsura-vaḿśa — unbelievers; rājñām — of the kings; akṣauhiṇī — one military division; śatam — hundreds of such divisions; apānudat — extirpated; ātma-tantraḥ — self-sufficient; tvām — unto you; duḥstham — put into difficulty; ūna-padam — devoid of strength to stand; ātmani — internal; pauruṣeṇa — by dint of energy; sampādayan — for executing; yaduṣu — in the Yadu dynasty; ramyam — transcendentally beautiful; abibhrat — accepted; ańgam — body.
--
செல்வன்

செல்வன்

unread,
Dec 25, 2012, 2:41:13 PM12/25/12
to vall...@googlegroups.com, mintamil
angatha son of vali name meaning

http://www.behindthename.com/submit/name/angad

NGAD

Gender: Masculine

Usage: Hinduism

Frequency: Top 1000

Pronounced: U NG U DH

Contributed by Rishi on 11/30/2006

Last edited by Mike C on 6/20/2011

The word angad, comes from Sanskrit and means - "Of my own body". It could be used to describe a bracelet, armlet, or any other ornament.

Also:

N. Ganesan

unread,
Dec 25, 2012, 10:02:22 AM12/25/12
to மின்தமிழ்

அம் என்னும் தமிழ்ச்சொல். அங்காளம்மன் போன்றவை தரும் பெயர்
அங்கமுத்து, அங்கப்பன், அங்குச்சாமி, ...
செட்டிநாட்டில் வைரவர் வழிபாடு மிகுதி. வைரவமுத்து - கவிஞர்
வைரமுத்து பெயர் தந்தது. அதுபோல, அங்கம்மா < அங்காளம்மா

சென்னை பேரகராதி:
அங்கம்மா aṅkammā
, n. [T. aṅkamma.] Name of a form of Kālī. See அங்காளம்மை.

அங்கம்² aṅkam
, n. < aṅka. 1. Mark, sign; அடையாளம். 2. [T. aṅgu.] Symmetry, beauty,
as of the body; அழகு. ஆள் அங்கமாயுள்ள வன். Loc. 3. Place; இடம்.
வானங்கக்கவர்க்கு (தேவா. 818, 1). 4. Act of a drama; நாடகநூலி னுறுப்பு.
5. Drama which has only virtue for its theme; அறமாத்திரம் பொருளாக
வரும் நாடகம். (சிலப். 3, 31, உரை.) 6. Species of drama with
commonplace characters, the pathetic being the prevailing sentiment,
one of ten rūpakam, q.v.; ரூபகவகை. (சிலப். பக். 84.)

angam & ankam are two different words.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 25, 2012, 9:47:01 AM12/25/12
to மின்தமிழ்

On Dec 25, 8:44 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/12/25 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > what you have given are modern examples. My research is about ancient
> > Hindu religion,
>
> தாயுமானவர் உங்கள் கருத்துப்படி நவீன யுகமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
>  அந்த மனுஷன் தேவ் இத்தனை சிரத்தையாக இவ்வளவு பழைய சான்றுகளைத் தருகிறாரே,
> குறைந்தபட்சம் அதைப் படித்தாவது படித்துப் பார்த்ததுண்டா?
>

Dev is a major researcher, I agree.

N. Ganesan

unread,
Dec 25, 2012, 9:41:47 AM12/25/12
to வல்லமை, mintamil, Santhavasantham

On Dec 25, 8:30 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/12/25 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > அங்கம் என்றால் உறுப்பு என்பதே பொருள். உ-ம்: அஷ்டாங்க யோகம்.
> > அணங்க என்ற தமிழ்ச்சொல் அனங்க என்று திரிபானது என வடமொழி
> > முனைவர்கள் காட்டியுள்ளனர் என்பதறிந்தோம். அங்கம் = limb (உறுப்பு).
> > அங்கம் எனும் சொல் தென்கிழக்காசிய மொழிகளான முண்டா மொழிகள்
> > சம்ஸ்கிருதத்துக்குக் கொடுத்த சொல். இன்றும் அங்கம் = உறுப்பு என்று
> > பழைய நூல்களில் (வடமொழி, தமிழ், ...) காணலாகும்.
>
> இதை மறுக்கவே இல்லை.

Sanskrit professors have shown this already.

>அங்கம் என்பது மொத்த உடலையும் குறிக்கவும்


> பயன்பட்டிருக்கிறது என்பதற்குப் போதுமான எடுத்துக் காட்டுகளைத்
> தந்தாகிவிட்டது.
>

what you have given are modern examples. My research is about ancient
Hindu religion,


and how Makara Vidangar cult of Indus valley culture spreads to
Tamilnadu
in megalithic period. The male sacred power, aNangu, plays a lead role
in this -
Kaaman, a Dravidian word just like aNangan, changes to ananga in
Sanskrit.

> இப்போது என்ன காரணத்துக்காக, அங்கம் என்றால் உறுப்பை மட்டும்தான் குறிக்கும்


> என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று விளங்கவில்லை.
> தாயுமானவருக்கும் பாரதிக்கும் தெரியாத தமிழ் நமக்குத்தானே தெரியும், இல்ல?
>

Pretty modern poets. And Bharati is a journalist and not a researcher


of ancient Tamil - Sanskrit
relations.

Regards,
N. Ganesan
Like the dharmic Wheel (அறவாழி) of Mahavira and Buddha, the wheel of
Philology always turns slowly.
~ கடுமிமான் கொங்குகிழான்

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 8:54:38 PM12/25/12
to mintamil


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>

அம் என்னும் தமிழ்ச்சொல். அங்காளம்மன் போன்றவை தரும் பெயர்
அங்கமுத்து, அங்கப்பன், அங்குச்சாமி, ...
செட்டிநாட்டில் வைரவர் வழிபாடு மிகுதி. வைரவமுத்து - கவிஞர்
வைரமுத்து பெயர் தந்தது. அதுபோல, அங்கம்மா < அங்காளம்மா

தமிழ்நாட்டில் வழங்கப்படும் பெயர்கள் எல்லாமே தமிழ்ப் பெயர்கள்தாமா?  கணேசர் என்கிற தங்களுடைய திருநாமம் எந்தத் தமிழ் வேரிலிருந்து கிளைத்தது?

தேமொழி

unread,
Dec 26, 2012, 1:51:01 AM12/26/12
to mint...@googlegroups.com

அம்மாடியோவ்!!!!!! ....

என்ன ஒரு ஆராய்ச்சி???? ...

எனக்கு எப்படி இதைப் பாராட்டுவது என்று கூடத் தெரியவில்லை :((( 

...தேமொழி

N. Kannan

unread,
Dec 26, 2012, 4:18:05 AM12/26/12
to mint...@googlegroups.com
2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>:

> Dev is a major researcher, I agree.
>

சான்றிதழ்கள் வழங்கவா இம்மன்றம் செயல்படுகிறது?

தேவ் ஐயாவின் வடமொழி அறிவு நாம் அறிந்து பாராட்டுவதே. அதே நேரத்தில்
ஹரிகி ஐயாவின் வடமொழி அறிவும் மெச்சத்தகுந்ததே. அவரைப்போல் இதிகாசங்களின்
மூலபாடத்தில் ஈடுபட நம்மால் முடிகிறதா? ஸ்ரீரங்கம் மோகன ரங்கனும் எதிலும்
சளைத்தவரல்ல. ஒவ்வொருவரின் ஆளுமையும் ஒவ்வொரு வகை. இவர்கள் எல்லோருக்கும்
வடமொழி மூல் பாடப் பரிட்சயம் உள்ளது. ஆனால் கணேசனாரின் வடமொழி பாடாந்தரம்
என்பது யாரோ வெளிநாட்டில் படித்து, இங்கு வந்து சிலரிடம் பாடம் கேட்டு
ஆய்வேடுகளில் வெளியிட்ட கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நல்ல
ஆய்வாளன் என்ற வகையில் கணேசனார் மூலபாடத்தை அறிந்தோரை மதிக்கவும்,
அவர்தம் வாய்மொழியை சிந்திக்கவும் பழக வேண்டும். இதுவரை கணேசனார்
வடமொழியில் தேர்ச்சியுற்ற மண்ணின் மைந்தர்கள் சொல்வதை ஒரு
பொருட்டாகக்கொண்டதில்லை. இது வருத்தமளிக்கும் விஷயம். உங்கள்
மேதாவித்தனத்தைக் காட்ட மேல்நாட்டு மேற்கோள்தான் வேண்டுமென்பதில்லை.
இராமாயணத்தைப் புரிந்து கொள்ள இந்தியனாக இருந்தாலோ போதும்.

தாங்கள் ஏனோ உங்கள் நேரத்தை இப்படி வெட்டி, ஒட்டி விதண்டாவாதம்
செய்வதிலேயே கழிக்கிறீர்கள். அமெரிக்காவிலேயே அதிக அளவு தமிழ் நூல்கள்
கொண்ட நூகலம் ஒன்றிற்கு உரிமையாளர் நீங்கள். உங்களிடமுள்ள நூல்களை
வாரமொன்று என்று அறிமுகப்படுத்தி எழுதியிருந்தாலும் இந்நேரம் எவ்வளவோ
பெரிய வளம் தமிழுக்கு, குறிப்பாக இணைய(மின்)தமிழுக்குக்
கிடைத்திருக்கும்! ஆனால் இது குறித்து நான் திரும்பத்திரும்பச்
சொல்லியும் தாங்கள் உங்கள் வழியிலேயே செல்கிறீர்கள்.

ஒரு ஆய்வாளனின் குறி எப்போதும் உண்மையை நோக்கியதாக இருக்க வேண்டும். சில
நேரங்களில் வாய்மையைச் சூது கௌவும். அந்த மதிமயக்கத்தில் வாய்மையைத்
தவறாகக் காணும் வாய்ப்பு வரும். ஆனால் மாயை மறைந்த பின் வாய்மை
தன்னொளியில் பிரகாசிக்கும் போது கண்டு ஆனந்திக்கலாம். ஒரு ஆய்வாளனின்
இன்பம் என்பது வாய்மையின் தரிசனமே. இந்த குணம் உங்களுக்கு வாய்த்தால்
நீங்கள் தவறான புரிதல் கொள்ளும் போது திருத்திக்கொண்டு வாய்மையை நோக்கி
மீள்பயணம் கொள்வீர். தவறை உணர்ந்தல், திருந்துதல் உயரிய ஆய்வியல்
பண்புகள். ஆய்வில் ஈகோவிற்கு இடமில்லை.

உங்கள் பாணி மாற வேண்டிய காலம் வந்து போய்க்கொண்டு இருக்கிறது. சீக்கிரம்
கண்டு கொண்டு மாறினால், நீங்கள் மிகக்கஷ்டப்பட்டு, ‘தமிழறிஞன்’ என
நிருவமுயலும் முயற்சி அணுகூலமாகலாம்.

வாழ்த்துக்கள்.

நா.கண்ணன்

Mohanarangan V Srirangam

unread,
Dec 26, 2012, 7:49:02 AM12/26/12
to mint...@googlegroups.com
>>தாங்கள் ஏனோ உங்கள் நேரத்தை இப்படி வெட்டி, ஒட்டி விதண்டாவாதம்
செய்வதிலேயே கழிக்கிறீர்கள். <<<


அது மட்டுமின்றி பயன்பாடுகளுக்கான ஆதாரங்களை விளக்கமாக எடுத்துக் காட்டினாலும் அவற்றையெல்லாம் சிறிதும் கவனம் கொள்ளாமல் ‘உங்கள் ஆராய்ச்சிதான் தெரியுமே!’ - ‘பக்தி அனிமேஷன்’ - ‘நீங்கள் யாரையோ பாராட்டினீர்களே அதிலேயே உங்களைப் பற்றிப் புரிந்தது’ -- இவ்வாறு சொல்லால் வெறுமனே கல்லெறிவதில் இவர் காட்டும் மும்முரம் வெகு அநாகரிகமானதாக உள்ளது. இந்த மாதிரியான தான் பதில் சொல்ல முடியாத கட்டங்கள் வரும் போது பிறரைக் கேவலப்படுத்த முயல்வது என்பதைத் திரு கணேசனிடம் வர வர அதிகமாகக் காண நேருவதில் மிகவும் வருத்தமுறுகிறேன்.

ஒருவேளை குழுமங்களின் மட்டுறுத்துநர்கள் சுதந்திரமான விவாதத்திற்குத் தாங்கள் குறுக்கிட்டுத் தடையாகிவிடக் கூடாது என்று காட்டும் பெருந்தன்மையைத் தனக்குத் தரப்படும் மறைமுக ஊக்கமாகத் தவறாக நினைத்துவிட்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இதையெல்லாம் விட நாணத்தக்க விதத்தில் இந்த இழைத் தலைப்பிலேயே வல்லமைக் குழுமத்தில் திரு தேவ் கேட்ட கேள்வி ஒன்றுக்குத் தக்க பதில் கூறுவதைத் தட்டிக் கழிக்க திரு கணேசன் கையாண்டுள்ள அணுகுமுறையை நீங்களே கீழ்க்காணும் இரண்டு சுட்டிகளில் காணலாம்.

தேவ் அவர்களின் கேள்வி --

http://groups.google.com/group/vallamai/msg/a6bc79645140f857

திரு கணேசன் அவர்களின் பதில் --

http://groups.google.com/group/vallamai/msg/599b32bd847b604b

இதில் ஏன் டாக்டர் ப்ரியதர்சியை இழுக்க வேண்டும்? விட்சலுடன் ப்ரியதர்சியை ஒருவர் ஒப்பிட்டு விட்டால் உடனே அப்படி ஒப்பிட்டு விட்டவர் கூனிக் குறுக வேண்டிய தவற்றைச் செய்துவிட்டவர் ஆகிவிடுகிறாரா? என்ன தொனி இது?

இது முதன்முறை அன்று. பலமுறைகள் பலருக்கும் இந்த கதிதான் நேரிடுகிறது. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் உணர்ச்சியில் தம் நிலையிழந்து ஏதாவது தடிப்பாக எழுதிவிட்டால் அது மட்டும்தான் பொது மன்றங்களில் மிகவும் அநாகரிகச் செயலாகக் காணப்படுகிறது.

அதற்கு அடிப்படையாகச் செயல்படும் இந்த மாதிரியான அமைதியான அநாகரிகச் சீண்டல்கள் எந்த விதத்தில் குறைந்தது, பொது மன்றத்தின் பண்பாட்டை ஈனப் படுத்துவதில்?

திரு கணேசனிடம் நான் மிகவும் மதிப்பதே அவர் யாரையும் புண்படப் பேசாதவர். அவரைத் திட்டியவர்களைக் கூட அமைதியாக இருந்து சமாளிப்பவர் -- என்றபடியான இந்தத் தன்மைக்காகத்தான். ஆனால் அவரிடம் இப்படிப்பட்ட அநாகரிகமான அணுகுமுறைகள் அதிகமாகி வருவதைப் பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

எந்தப் பக்கச் சாய்வும் இன்றி நடுநிலையாளர்களாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் இந்த வருத்தம் அடைவார்கள் என்று நினைக்கிறேன்.

உங்கள் போக்கிற்கு வருந்துகிறேன் திரு கணேசன்.

***






2012/12/26 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

DEV RAJ

unread,
Dec 26, 2012, 8:42:03 AM12/26/12
to mint...@googlegroups.com
On Tuesday, 25 December 2012 20:11:47 UTC+5:30, N. Ganesan wrote:
> > அங்கம் எனும் சொல் தென்கிழக்காசிய மொழிகளான முண்டா மொழிகள்
> > சம்ஸ்கிருதத்துக்குக் கொடுத்த சொல். <<<


அங்கம் சங்கதம் இல்லையெனில்
கணேசர் சொல்லும் யுனிவெர்ஸிடி
லெவெல்  ஆராய்ச்சியின் அடிப்படையில்
அங்கத்தினர் எனும் சொல்லையே
அனைவரும் கையாளலாம்.

’உறுப்பினர்’ என்பதைக் கைவிடலாம்


தேவ்

DEV RAJ

unread,
Dec 26, 2012, 8:55:37 AM12/26/12
to mint...@googlegroups.com
On Wednesday, 26 December 2012 18:19:02 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
>>> விட்சலுடன் ப்ரியதர்சியை ஒருவர் ஒப்பிட்டு விட்டால் உடனே அப்படி ஒப்பிட்டு விட்டவர்
கூனிக் குறுக வேண்டிய தவற்றைச் செய்துவிட்டவர் ஆகிவிடுகிறாரா?  <<<


பங்குகொண்டதற்கு நன்றி, ஐயா.

Out of india theory குறித்த ப்ரியதர்சி அவர்களின்
கருத்துகள் மட்டுமே அரங்கில் விவாதிக்கப்பட்டன.
அதில் எழுந்த ஐயங்களுக்கு அவர் விடை
கூறினார். அவரை யாருடனும் ஒப்பிடவில்லை.
அவரை யாராவது போட்டியாளராகக் கருதினால்
அதற்கு அவர்  பொறுப்பேற்க முடியாது.


அவர் இதுகாறும் எழுதியுள்ள தனி மடல்கள்
நளினமும், நாகரிகமும் பொருந்தியவை.
பல தகவல்களையும் அறிந்துகொள்வதில்
ஆர்வம் மிக்கவராகவே அவர் காணப்படுகிறார்
 


தேவ்

N. Ganesan

unread,
Dec 26, 2012, 7:16:48 AM12/26/12
to மின்தமிழ்
On Dec 26, 3:18 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> ஒரு ஆய்வாளனின் குறி எப்போதும் உண்மையை நோக்கியதாக இருக்க வேண்டும். சில
> நேரங்களில் வாய்மையைச் சூது கௌவும். அந்த மதிமயக்கத்தில் வாய்மையைத்
> தவறாகக் காணும் வாய்ப்பு வரும். ஆனால் மாயை மறைந்த பின் வாய்மை
> தன்னொளியில் பிரகாசிக்கும் போது கண்டு ஆனந்திக்கலாம். ஒரு ஆய்வாளனின்
> இன்பம் என்பது வாய்மையின் தரிசனமே. இந்த குணம் உங்களுக்கு வாய்த்தால்
> நீங்கள் தவறான புரிதல் கொள்ளும் போது திருத்திக்கொண்டு வாய்மையை நோக்கி
> மீள்பயணம் கொள்வீர். தவறை உணர்ந்தல், திருந்துதல் உயரிய ஆய்வியல்
> பண்புகள். ஆய்வில் ஈகோவிற்கு இடமில்லை.
>

உண்மைதான். சம்ஸ்க்ருத அறிஞர்கள் பலரின் ஆய்வும் அம்முறையில்
உலகம் முழுதும் சென்றுகொள்ளதைப் பார்க்கிறேன்.


> உங்கள் பாணி மாற வேண்டிய காலம் வந்து போய்க்கொண்டு இருக்கிறது. சீக்கிரம்
> கண்டு கொண்டு மாறினால், நீங்கள் மிகக்கஷ்டப்பட்டு, ‘தமிழறிஞன்’ என
> நிருவமுயலும் முயற்சி அணுகூலமாகலாம்.
>

உங்கள் தமிழ் அருமை. அணுகூலம் ஆகட்டும்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 26, 2012, 7:56:03 AM12/26/12
to மின்தமிழ்
On Dec 26, 12:51 am, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> அம்மாடியோவ்!!!!!! ....
>
> என்ன ஒரு ஆராய்ச்சி???? ...
>
> எனக்கு எப்படி இதைப் பாராட்டுவது என்று கூடத் தெரியவில்லை :(((
> ...தேமொழி
>

ஒரு வார்த்தையைக் கொடுத்தால் தமிழ் இலக்கியங்கள் (டைப் ஆனவை)
எடுத்துத் தரும் வலைத்தளங்கள் பல உள்ளன. அவற்றை நீங்களும்
உபயோகிக்கலாம்.

N. Ganesan

unread,
Dec 26, 2012, 8:55:43 AM12/26/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mintamil, thami...@googlegroups.com
On Dec 25, 12:47 pm, Swaminathan Sankaran <swaminathan...@gmail.com>
wrote:

> இந்து சமவெளி நாகரீகமும் திராவிட நாகரீகமும் ஒன்று என்பது இன்று வரை ஒரு
> hypothesis மட்டுமே. இந்திய நாட்டில் திராவிட நாகரீகம், ஆரிய நாகரீகம் என்ற
> இரண்டு மட்டும் இல்லை. பழங்குடி மக்கள் (திராவிடரும், ஆரியரும் அல்லாதவர்)
>  நாகரீகம் என்றும் ஒன்று இருக்கலாம் /உண்டு அல்லவா? மேலும் இன்றையத்
> தமிழர்களின் கலப்படமில்லாத மூதாதையர்கள் தான் இந்து சமவெளியில் இருந்தவர்கள்
> என்பதற்கும் போதிய ஆதார பூர்வமான சான்றுகள் இல்லை. From Heras down, there are
> hypotheses but not sufficient prooof acceptable to the majority
> of researchers in the field. The Indus valley civilization is still mostly
> a dark area.
>
> சங்கரன்
>

Dear Sankaran,

Good points. I don't know whether you attended the World Classical
Tamil conference in Coimbatore (2010).
There were many interesting papers, esp. by Iravatham Mhadevan, Asko
Parpola, R. Balakrishnan IAS & others.
I presented a theory on crocodile cult in Indus religion. After all,
like fish, crocodiles are also
aquatic life. We see a shaman and crocodile (makara) all the time in
Indus amulets, signs etc.,

அணங்கு எனச் செந்தமிழ் இலக்கியங்கள் போற்றும் 3 ஹிந்து ஆண்தெய்வங்கள்
உள்ளன:
வருணன், சிவன், காமன். இந்த மூன்று அணங்கன்மாருக்கும் மகரம் (விடங்கர்)
தொடர்புகள்
உள்ளன.

தமிழகத்தின் இரும்பூழிக் கால மெகாலித்திக் புதைப்புகளில் அதிகம்
காணப்படுவது
மகர விடங்கர் பற்றிய எழுத்து என நேற்று திரு. ஐராவதம் மகாதேவனுக்கு
எழுதினேன்.
அம்மடலை இணைக்கிறேன். போப் வாழ்ந்த நாட்களில் சிந்து சமவெளி நாகரிகம்
தொல்லியலாளரால் கண்டறியப்படவில்லை. கிறித்துமஸ் விழாநாளில் ஜி. யு. போப்
போன்றோர்
தமிழின் ஆழம் இந்திய சரிதத்தில் காட்ட முயன்றது எவ்வாறு சிந்து
எழுத்துக்களுடன்
பொருந்தும்? என்பது பற்றியதான ஒரு குறிப்பிது.

ஐராவத்துக்கு எழுதிய கடிதம் உங்கள் ஆய்வுகளுக்கு உதவக்கூடும்.

அன்புடன்,
நா. கணேசன்

Subject: Megalithic symbol (Sanur, Adichanallur etc.,) & Rev. G. U.
Pope's theory

On this Christmas day, we have to thank the numerous Christian
missionaries coming from the West to spread the Bible (the first
Indian translation of the bible is in Tamil, thereby starting the
printing revolution for the Tamil language texts). One such person
is Rev. G. U. Pope whom Tamils affectionately call as pOppaiyar
and there is a statue erected to honor him in the Marina beach,
Madras.

Upon reading UVS' edition of Ciivaka CintaamaNi, G. U. Pope
in his translation of Nalatiyar, the 400 quatrains composed
by Jain, has suggested the origin of the Sanskrit puranic word,
ananga
(a name for Kaama-deva) coming from Tamil aNaGku due to the loss
of retroflex N. This must have happened during the Maharashtrian
Prakrit
times when the Haala's anthology in Prakrit was written. Th. Burrow,
an author
of DEDR, mentioned about Pope's theory of the origin of the name,
ananga in his
review of Hart's book.

I'm reading the recent paper of M. Witzel (which he kindly sent to me)
and the definition of southern shamanism and origins of yoga
which seem to have a hoary past in Gondwana shamanism
and Aryan speakers picked up these old traditions slowly when they
reached India. While Rgveda mentions horses in abundance which didn't
exist among Harappans, there is no Yoga in Rgveda, but we see
proto-yogic poses even in Indus art (The Indus Valley Origin of a Yoga
Practice,
Yan Y. Dhyansky, Artibus Asiae, Vol. 48, No. 1/2 (1987), pp. 89-108).
Like the tip of an iceberg, written texts in India like those by
Patanjali
and also Siddhar paaDalkaL in Tamil tell about some aspects of
this shamanism which, acc. to MW, is much older than even the
well known Siberian shamanism.

The shaman (a jar sign) and the viDangar (crocodile god) is one of
the
most frequent pairs in Indus signs list. During the megalithic period
finds from South India
(e.g., Saanur in Tamil Nadu, Adichanallur pottery, or in
Sembian Kandiyur cert imported from the Deccan, c. 1100 BC),
the jar sign (representing the shaman) and the crocodile sign (makara)
is found always together. All these are analyzed in Iravatham
Mahadevan's
"Murukan in Indus script" paper in the Jl. of the Inst. of Asian
studies, 1999.
A prelim version of it was presented in 1998, when Dr. John Samuel
conducted the Murukan seminar at Inst. of Asian Studies,
http://murugan.org/research/mahadevan.htm
No pictures in the net tho'. Here the figures are the most important
and one
should look at the original paper. In 2008, Iravatham Mahadevan has
updated the paper
with minor changes for his festschrift volume.
What Iravatham analyses as pEy/preta/aNanGku which he identifies
as "Murukan" is actually the crocodile sign (See Parpola, 2011, Univ.
of Tokyo, Japan),
While even the important fish sign, which the Jesuit father, H. Heras
used to identify Harappans as Dravidians, is missing in megalithic
"script" signs and art, the makara-viDangar crocodile sign is present
in very many places. The crocodile sign is amply documented in
Iravatham's
paper along with the shaman (jar sign, some times with horn head,
sometimes
with kaavaDi that we see in places like Palani or in Malaysia even
now.)

On this Christmas day, thinking of Rev. of G. U. Pope and
his important theory of aNaGku (Tamil) > ananga (Sanskrit).
Interestingly in classical Tamil literature, Kaama is called as aNaGku
in addition to VaruNa and Siva. (G. U. Pope quoted aNangu = Kaama from
CiivakacintaamaNi.
Unfortunately he passed way and did not have a chance to read
KonguvEL's
PeruGkatai when an incomplete edition was published by UVS.)
Tevaram has an2angu (< aNangu) for Kaama as well. This N > n
alternation
has given birth to big purana myth on how Siva burnt Kaama in later
puranas.
It is highly significant that the crocodile-shaman pair occurring in
bronze
age Indus valley, and subsequently in megalithic burials of south
India
excavated by archaeologists will throw a lot of fresh light
on aNaGku "male sacred power" as used for VaruNa, Siva, Kaama
in classical Tamil literature. and these three male sacred powers'
link with the ancient crocodile (e.g., in their banners) cult.

Here is Bharati menioning the contributions of G. U. Pope,
http://groups.google.com/group/santhavasantham/msg/25fc95a58e1cb4f4

TirumaNam celvakkEcavaraya mutaliyar, who wrote the important grammar
on how to
compose viruttam-s in Tamil, collected funds on behalf of Tamils for
this tomb stone.
Pope's tomb stone inscription reads:
"George Uglow Pope D.D. of South India sometime lecturer in Tamil and
Telugu in the University and chaplain of Balliol College, Oxford, born
24th April 1820. Died 11th February 1908. This stone has been placed
here by his family and by his Tamil friends in South India in loving
admiration of his life long labours in the cause of oriental
literature and philosophy"

Happy 2013 for all!
N. Ganesan

Here is the first effort by a Tamil, the writer Mii. Pa. Somu, a
disciple of Rasikamani TKC, to locate Rev. Pope's
cemetery. After 5 decades of Pope's death, M. P. Somu located this
Tamil savant's grave & wrote in his book 'akkaraic cImaiyil" (1961) as
follows:

From Tamil, Nathan (Editor, Dinathanthi) translated Somu's essay.
"My several inquiries regarding the exact location of Pope's tombstone
in Oxford from several of my friends in London came out blank. During
my search in a book on Englishmen of great achievements, I learnt that
Pope was buried in the Saint Sepulcher Cemetery on an old street
called Walton in Oxford. I chose the holiday a Sunday to visit the
site. Young M. Gopalakrishnan accompanied me. We reached Oxford around
12.00 noon. Finally we reached the Saint Sepulcher Cemetery, from
direction given on our request, only to find the two gates were
locked. It was a great disappointment. We approached a cigarette
vendor across the street for information. An old lady was taking care
of business. She sensed our sadness from our demeanor, told us with
great affection, "Friends! I sympathize with you. They have closed the
cemetery now. There are 4000 tombstones here and interment of 12,000
bodies. They have closed this place for lack of any more burial
grounds."

Just imagine my disappointment at such news. "Friends", the gentle
lady advised. I can understand from your sadness, one of your
forefathers is buried here. Do one thing; the Cemetery caretaker lives
at the entrance to the cemetery. Tell him that you have come to pay
respects to one of your forefathers and see what happens."

We got permission from the caretaker to enter the cemetery, having
spoken thus, "The one sleeping under is not only my forefather; but
also forefather to every Tamil and every South Indian."

It was not an easy matter to identify Pope's tomb from among 4000 of
them. Since the cemetery was not in use, there was neither a Register
nor a list of the tombs. M. Gopalakrishnan and I went in two
directions looking for Pope's name. The caretaker joined us in the
search.The learned Pope's soul must have taken sympathy with our
quandary.

Because, from a bush in some remote corner of the cemetery the
caretaker shouted "Pope." We ran to the spot in the front entrance to
the right, below a yew tree, covered with dense vegetation was a large
brush. Under which a marble slab, once the bush was cleared, showed
very faint inscription. We dipped our handkerchief in the water
Gopalakrishnan fetched in a vessel, and started rubbing the slab. The
following inscription showed very clearly:

"George Uglow Pope D.D. of South India sometime lecturer in Tamil and
Telugu in the University and chaplain of Balliol College, Oxford, born
24th April 1820. Died 11th February 1908. This stone has been placed
here by his family and by his Tamil friends in South India in loving
admiration of his life long labours in the cause of oriental
literature and philosophy"

I was excited reading these words! It was not Pope's family alone that
erected this tombstone. I read that written portion that said his
friends from South India over and over again. The mere mention that he
was a South Indian and Tamil donations were also involved in erecting
the tombstones are words that should be engraved gems in Tamil
history, don't you agree? It is on those very words; jungle bush is
spreading now!His wife is buried next to him.

Goplakrishnan and I, on behalf of Tamils, paid our homage to both
while circling the tombs in our typical Tamil fashion. The caretaker
watching us developed a renewed devotion. He also paid his respects in
the Christian tradition.

"My friend! Please do not let the bush spread on this tomb. This is
the tomb of one of our forefathers. There are thousands of us, his
progenies, living in South India. Future visitors to this site should
not go through the same ordeal we have gone through. From time to time
smear with oil and keep these letters shining. You will be blessed for
your good deed. My fellow countrymen will be grateful." With these
words, we also showed him our appreciation."

Hari Krishnan

unread,
Dec 26, 2012, 9:24:32 AM12/26/12
to mintamil


2012/12/26 DEV RAJ <rde...@gmail.com>

அங்கம் சங்கதம் இல்லையெனில்
கணேசர் சொல்லும் யுனிவெர்ஸிடி
லெவெல்  ஆராய்ச்சியின் அடிப்படையில்
அங்கத்தினர் எனும் சொல்லையே
அனைவரும் கையாளலாம்.

’உறுப்பினர்’ என்பதைக் கைவிடலாம்

அதுக்கு மேல இன்னொண்ணும் சொல்றார்: 

புராண விளக்கம் இது. ஆனால், தற்காலப் பல்கலைக்கழகங்களில்
இவ்வாறு தான் காமன் என ஏற்பதில்லை.

புராணங்கள் இல்லாமல், தற்காலப் பல்கலைக் கழகங்கள் வேற எந்த பொதைகுழியில இருந்து இந்த அர்த்தத்த தோண்டி எடுத்தாங்க?  அடிப்படைன்னு ஒண்ணு இருக்கணுமில்ல?  வேணாம்.  புராணத்த விட்டுரலாம்.  வேற எந்த அடிப்படைல இதை அவங்க ஏத்துக்க மாட்டேங்கிறாங்க?  சுத்தற வேகத்துல தல கால் புரியல சாமி.

N. Ganesan

unread,
Dec 26, 2012, 2:54:10 PM12/26/12
to சந்தவசந்தம், thami...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil

தேவு ஐயா:
>கணேசர் வருணனின் நிறம் கருப்பு என்கிறார்.

வருணனின் நிறம் கறுப்பு என்பது பழைய
இந்திய வேத, சிற்ப சாத்திரங்களின் கொள்கை.

இதனை சிந்து சமவெளியில் கொற்றவை - விடங்கர்
(மகரம்) வழிபாட்டுச் சமயம் (சிவபிரான் ஹிந்துயிஸத்தில்
தோற்றம்) பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
வருணன் அசுரர்களில் தலையாயவன் என்கிறது
இருக்கு வேதம். கருமையான கடலுக்கும், மழைக்கும்,
கருங்கொண்டலுக்கும் இருண்ட வானுக்கும் அதிபதி.
விஷ்ணு (விண்ணு/விட்டு/விண்டு) போல பண்டைக்
காலத்தில் வருணன் என்னும் அசுரனின் நிறமும் கறுப்புதான்.
வேதத்தில் மித்ர-வருண என்ற இரட்டையர் உண்டு.
மித்திரன் வெள்ளையன், வருணன் - கருப்பராயன் என்பது
பழைய இலக்கியக் கோட்பாடு.

அவனது முந்தைய வடிவம் சிந்து சமவெளியில் காணலாம்.
பின்னர் வர்ணன் ஆகி, சிவன் அக்கி இருக்கிறான்.
வருணனின் நிறம் பற்றியும், அவனுக்கும் கொற்றவைக்கும்
உள்ள தொடர்பு என்ன என்பதையும் ஆதி சிற்ப
நூலாக விளங்கும் விஷ்ணுதர்மோத்தரம் குறிப்பிடுவதை
பேரா. வ. ஐ. சுப்பிரமணியனார் மலரில் எழுதியுள்ளேன்.
அதன் தொடுப்பும் பிடிஎஃப்பும் கொடுத்துள்ளேன்.
அங்கே விரிவாகக் காணலாம். அந்த பேப்பர்,
"A Dravidian etymology for Makara - crocodile"லிருந்து:

”Tolkappiyam grammar does not allot any poetic landscape (ti.ai) to
god Œiva, but assigns Neytal ti.ai to Varu.a. The gods assigned for
the other four landscapes are Murukan, Krishna-Vishnu, Indra and
Durga. This choice is made by the ancient Tamil grammarian because
Varu.a originally played the role later taken over by Œiva. For
example, Vishnudharmottaram, III, 52 identifies Manmatha and Rati with
Varu.a and Gauri. The association of Durga-Gauri with Varu.a can be
traced back to Indus civilization (seal H-180). Mughal Indian
paintings and modern calendar prints show Œiva as blue-hued which also
seems to be a remnant of the Varu.a connection with Œiva: "Varu.a, the
lord of waters should be made on a chariot with seven swans, in colour
resembling the glossy lapis-lazuli and wearing a white cloth [...]
Towards the left, one should place the emblem of makara, and over the
head (should be spread) a very white umbrella. Oh king, on the left
lap should be shown the two-handed Gauri his wife, beautiful in all
the limbs. On her left hand is the blue lotus and her right one rests
on the back of the god" (Vishnudharmottaram, pt. III, ch. 52,
translation by S. Kramrisch, 1928, [9]).”

சிற்ப இலக்கணப்படி வருணன் -
கரிய வண்ணத்தில் சிந்தின் பெருந்தெய்வம்
http://pemadjougne.com/images/VARUNAApartment/varuna.html

செந்தமிழ் இலக்கியம் கூறும் அணங்கள் - 3 ஆண் தெய்வம் -


வருணன், சிவன், காமன்.

நா. கணேசன்

N. Kannan

unread,
Dec 26, 2012, 3:57:18 PM12/26/12
to mint...@googlegroups.com
On 26 December 2012 14:55, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

> I presented a theory on crocodile cult in Indus religion. After all,
> like fish, crocodiles are also
> aquatic life. We see a shaman and crocodile (makara) all the time in
> Indus amulets, signs etc.,
>

with the same spirit you should appreciate Dr. Priyadarshi in bringing
evidences about the migration of house rat, field rat, & cow in the
'out of India' hypothesis. Unfortunately, I see only a self-promotion
in your mails rather than appreciating science!

Kannan

N. Kannan

unread,
Dec 26, 2012, 4:04:04 PM12/26/12
to mint...@googlegroups.com
2012/12/26 N. Ganesan <naa.g...@gmail.com>:

> On Dec 26, 3:18 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
>> ஒரு ஆய்வாளனின் குறி எப்போதும் உண்மையை நோக்கியதாக இருக்க வேண்டும். சில
>> நேரங்களில் வாய்மையைச் சூது கௌவும். அந்த மதிமயக்கத்தில் வாய்மையைத்
>> தவறாகக் காணும் வாய்ப்பு வரும். ஆனால் மாயை மறைந்த பின் வாய்மை
>> தன்னொளியில் பிரகாசிக்கும் போது கண்டு ஆனந்திக்கலாம். ஒரு ஆய்வாளனின்
>> இன்பம் என்பது வாய்மையின் தரிசனமே. இந்த குணம் உங்களுக்கு வாய்த்தால்
>> நீங்கள் தவறான புரிதல் கொள்ளும் போது திருத்திக்கொண்டு வாய்மையை நோக்கி
>> மீள்பயணம் கொள்வீர். தவறை உணர்ந்தல், திருந்துதல் உயரிய ஆய்வியல்
>> பண்புகள். ஆய்வில் ஈகோவிற்கு இடமில்லை.

> உண்மைதான். சம்ஸ்க்ருத அறிஞர்கள் பலரின் ஆய்வும் அம்முறையில்
> உலகம் முழுதும் சென்றுகொள்ளதைப் பார்க்கிறேன்.

இது நல்ல சொல்லா? நக்கலா?
நாம் ஏன் ஒப்புநோக்க வேண்டும்?
ஒரு உண்மை ஆய்வாளனின் நிலையில் தாங்கள் இருந்தால் மனம் மகிழ வேண்டியதுதான்.

>> உங்கள் பாணி மாற வேண்டிய காலம் வந்து போய்க்கொண்டு இருக்கிறது. சீக்கிரம்
>> கண்டு கொண்டு மாறினால், நீங்கள் மிகக்கஷ்டப்பட்டு, ‘தமிழறிஞன்’ என
>> நிருவமுயலும் முயற்சி அணுகூலமாகலாம்.
>>
>
> உங்கள் தமிழ் அருமை. அணுகூலம் ஆகட்டும்.
>

well..that was a typo. Is it important here? You keep missing the
important points. ஒரு உண்மை ஆய்வாளன் அசௌகர்யம் பார்க்கமாட்டான். உண்மை
சுடும் என்றறியாதவன் எப்படி ஆய்வு செய்யமுடியும்?

உற்றார் உறைக்கச் சொல்வர், ஊரார் சிரிக்கச்சொல்வர். Your integrity is at
stake! Beware!

நா.கண்ணன்

தேமொழி

unread,
Dec 26, 2012, 11:58:46 PM12/26/12
to mint...@googlegroups.com

தகவலுக்கு நன்றி  :)

...தேமொழி

செல்வன்

unread,
Dec 27, 2012, 12:13:06 AM12/27/12
to mint...@googlegroups.com
ஆய்வாளருக்கு இருக்க கூடாத விஷயம் பக்தி அல்ல. Bias

கணேசரிடம் முன்னது இல்லை. பின்னது உள்ளது:-). இந்த இழையில் பழைய கணேசரை காணாமல் டிஸப்பாயிண்ட் ஆனவர்களில் நானும் ஒருவன்

Nagarajan Vadivel

unread,
Dec 27, 2012, 12:36:45 AM12/27/12
to மின்தமிழ்
இது பக்தியுமல்ல bias சும் அல்ல
ஒரு முடிவை முன்னரே எடுத்துக்கொண்டு அதற்கான வழிகளைத் தேடுவது
ஆய்வில் இது ஒரு திருவிளையாடல்
பழைய செய்திகள் ஏராளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எதையாவது முன்னரே முடிவு செய்தாலும் ஆய்வாக எழுத இணையம் ஒரு மகத்தான கருவி
இது எழுத்துக் கடவுள் கணேசனாரிலிருந்து தொடங்கி வழி வழியாக எல்லாராலும் எப்போதாவது ஒரு சமயம் மேற்கொள்ளும் தீஈஈஈருவிளையாடல்
நாகராசன்


2012/12/27 செல்வன் <hol...@gmail.com>
--

DEV RAJ

unread,
Dec 27, 2012, 12:45:55 AM12/27/12
to mint...@googlegroups.com
ஒரு தகவல்

மூன்று குழுமங்களில் அணங்க வேள் உலா
வருகிறார். தொடர்ச்சி கிடைப்பதில்லை.
இந்த இழையில் தெளிவு தருமானால் இதை
ஏற்கலாம்; இல்லையெனில் ஒதுக்கி விடலாம்.

‘அங்க’ சங்கத வேர்த்தொகுப்புகளில்
‘அங்க்’ எனும் வேர் சார்ந்ததாக ப்வாதி [ பூ ஆதி]
கணத்  தொகுப்பில் அமைந்துள்ளது.
பாலி அகரமுதலி மறை சார்ந்ததாகவே
காட்டுகிறது. ‘அங்க’ மறைமுடிவில்
உள்ள சொல்தான். ஸம்ஹிதையிலும்
இருக்கக்கூடும். ஆதாரத்துடன் இதற்கான
மறுப்பு வெளியானால் மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொள்ளப்படும்



தேவ்

தேமொழி

unread,
Dec 27, 2012, 12:51:41 AM12/27/12
to mint...@googlegroups.com

>>மூன்று குழுமங்களில் அணங்க வேள் உலா
>>வருகிறார். தொடர்ச்சி கிடைப்பதில்லை.

எனக்கும் இது சிரமமாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வழி தெரிந்தவர்கள் தகவல் கொடுத்து உதவவும்.

நன்றி.

...தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Dec 27, 2012, 1:09:29 AM12/27/12
to மின்தமிழ்
எல்லாக் குழுமங்களிலும் எல்லாரும் உறுப்பினர் இல்லாத நிலையில் எங்கும் எல்லாமும் நிறைந்திருப்பவர் இடுகையிட்டால் எல்லாரையும் சென்றடையும்.  அதற்குப் பின்னூட்டம் இடுபவர் எந்தக் குழுவில் உறுப்பினராக உள்ளாரோ அந்தக்குழுவுக்கு மற்றும் பின்னூட்டம்  சென்றடையும்

இழைகள் தனித் தனியாக இல்லாமல் பரந்த வெளியில் கால்பரப்பி நிற்பதற்காக ஒரே நேரத்தில் பல குழுமங்களுக்கு இழையடுபவர்கள் இந்தத் தொடர்ச்சியின்மைக்கு வழி செய்கிறார்கள்

எனக்கு மூன்று குழுக்கள் மூன்று தத்துவங்கள் முடிவில்லாத சமர்

என் தலைக்குள் மூன்று திரைப்படத்தின் பாடல் கொலைவெறிடி மெதுவாகக் கேட்க ஆரம்பித்துவிட்டது

நாகராசன்


2012/12/27 DEV RAJ <rde...@gmail.com>

N. Kannan

unread,
Dec 27, 2012, 5:40:02 AM12/27/12
to mint...@googlegroups.com
2012/12/27 தேமொழி <them...@yahoo.com>:

>>>மூன்று குழுமங்களில் அணங்க வேள் உலா
>>>வருகிறார். தொடர்ச்சி கிடைப்பதில்லை.
>
> எனக்கும் இது சிரமமாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வழி தெரிந்தவர்கள் தகவல்
> கொடுத்து உதவவும்.
>

இது தவிர்க்கப்பட வேண்டியது. கணேசனார் வழக்கமாகச் செய்வது.
திடுதிப்பென்று வல்லமைகுழுவில் யாரோ கேட்ட கெள்விக்கு மின் தமிழில்
பதில்வரும். அதிலும் மிக விரமாக அங்கு, இங்கு வெட்டி, ஒட்டி, தொடுப்பு
(தன் கட்டுரைக்குத்தான்!) கொடுத்து வரும். துடுப்பு அறியாதோர் என்ன
நினைப்பர்? அடடா! ஒரு அறிஞர் எவ்வளவு மெனக்கெட்டு இவ்வளவு விவரங்களைத்
தருகிறார் என்று. That is exactly the impression he wants! This is
'attention trade!'. Silly, attention trade! இணையத்தில் இம்மாதிரி கவன
ஈர்ப்புப் போக்குவரத்துத்தான் அதிகம் நடக்கிறது. குழுமங்களை துஷ்பிரயோகம்
செய்வது. குழுமங்களில் வியாபாரம் நடத்துவது.

எவ்வளவு நேரமெடுத்து அக்கறையுடன் நாம் இங்கு செயல்படுகிறோம். இதில்
ஆக்கபூர்வமாகப் பங்கேற்றால் நாம் எல்லோரும் எவ்வளவு உயர்வோம்? கணேசனாரால்
தரக்கூடிய விஷயங்கள் நிரம்ப உண்டு. தன் சொந்தச் சரக்கை மட்டும் வைத்து
அவர் உயர்ந்தால் போதுமானது. இவர் எதற்கு சில நேரம் தரகு வியாபாரம்
செய்கிறார் என்று கோபம் வரும். இது தார்மீகக்கோபம்தான். தனிப்பட்ட
மனிதக்கோபமல்ல. அவர் நல்லவர்.

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Dec 27, 2012, 7:43:15 AM12/27/12
to மின்தமிழ்
On Dec 26, 11:45 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> ‘அங்க’ சங்கத வேர்த்தொகுப்புகளில்
> ‘அங்க்’ எனும் வேர் சார்ந்ததாக ப்வாதி [ பூ ஆதி]
> கணத்  தொகுப்பில் அமைந்துள்ளது.
> பாலி அகரமுதலி மறை சார்ந்ததாகவே
> காட்டுகிறது. ‘அங்க’ மறைமுடிவில்
> உள்ள சொல்தான். ஸம்ஹிதையிலும்
> இருக்கக்கூடும். ஆதாரத்துடன் இதற்கான
> மறுப்பு வெளியானால் மகிழ்ச்சியுடன்
> ஏற்றுக்கொள்ளப்படும்
>

வேதத்தில் அங்கம் என்றால் உறுப்பு என்றே கொடுத்துள்ளது.
பாலி அகராதியிலும் அவ்வாறே. அதனால்தான்,
செந்தமிழின் அணங்கனில் இருந்து அனங்கன் என்ற சொல் பிறக்கும்போது
அங்கம் = முழு உடல் என எடுப்பது புதிய பொருள்
என்று எழுதியுள்ளனர்.

எண்கணிதத்தில் அங்கம் என்றால் எண்களின் அங்கங்களாகிய 1, 2, 3, ... போன்ற
உறுப்புகள்.
பஞ்சாங்கம் - 5 உறுப்புகள்.

நா. கணேசன்

பாலி அகராதியில், அங்கம் = உறுப்பு.

anga

anga (nt.) [Vedic anga, anc cp. Lat. angulus = angle, corner etc.,
ungulus finger -- ring = Sk. angulīya. See also anka, anguṭṭha &
angula] (1) (lit.) a constituent part of the body, a limb, member;
also of objects: part, member (see cpd. ˚sambhāra); uttam˚anga the
reproductive organ J v.197; also as "head" at ThA 209. Usually in
cpds. (see below, esp. ˚paccanga), as sabbanga -- kalyāṇī perfect in
all limbs Pv iii.35 (= sobhaṇa -- sabbanga -- paccangī PvA 189) and in
redupln. anga -- m -- angāni limb by limb, with all limbs (see also
below anga + paccanga) Vin iii.119; Vv 382 (˚ehi naccamāna); Pv ii.
1210, 13, 18 (sunakho te khādati). -- (2) (fig.) a constituent part of
a whole or system or collection, e. g. uposath˚ the vows of the fast J
i.50; bhavanga the constituents or the condition of becoming (see
bhava & cp. Cpd. 265 sq.); bojjhanga (q. v.). Esp. with numerals:
cattāri angāni 4 constituents A ii.79 (viz. sīla, samādhi, paññā.
vimutti and rūpa, vedanā, saññā, bhava), aṭṭhangika (q. v.) magga the
Path with its eight constituents or the eightfold Path (KhA 85: aṭṭhɔ
angāni assā ti) navanga Buddha -- sāsana see nava. -- (3) a
constituent part as characteristic, prominent or distinguishing, a
mark, attribute, sign, quality D i.113 sq., 117 (iminā p˚ angena by
this quality, or: in this respect, cp. below 4; DA i.281 expls tena
kāra<-> ṇena). In a special sense striking (abnormal) sign or mark on
the body D i.9, from which a prophesy is made (: hattha -- pādādisu
yena kenaci evarūpena angena samannāgato dīghāyu . . hotī ti . .
angasatthan = chiromantics DA i.92). Thus in combn. with samannāgata &
sampanna always meaning endowed with "good", superior, remarkable
"qualities", e. g. J i.3 (sabbanga -- sampanna nagaraŋ a city
possessing all marks of perfection); ii.207. <-> In enumn. with var.
numerals: tīhi angehi s. A i.115; cattāri sotapannassa a -- D iii.227
= A iv.405 sq.; pañcanga -- vippahīno (i. e. giving up the 5
hindrances, see nīvaraṇa) and pañcanga -- samannāgato (i. e. endowed
with the 5 good qualities, viz. the sīla -- kkhandha, see kkhandha
ii.A d) S i.99 = A i.161; v.15, 29. Similarly the 5 attributes of a
brahmin (viz. sujāta of pure birth, ajjhāyaka a student of the Vedas,
abhirūpa handsome, sīlava of good conduct, paṇḍita clever) D i.119,
120. Eight qualities of a king D i.137. Ten qualities of an Arahant
(cp. dasa1 B 2) S iii.83; Kh iv.10 = KhA 88; cp. M i.446 (dasahɔ
angehi samannāgato rañño assājāniyo). -- (4) (modally) part, share,
interest, concern; ajjhattikaŋ angaŋ my own part or interest (opp.
bāhiraŋ the interest in the outside world). A i.16 sq. = S v.101 sq.;
It 9. rañño angaŋ an asset or profit for the king M i.446. Thus adv.
tadanga (see also ta˚ i.a) as a matter of fact, in this respect, for
sure, certainly and tadangena by these means, through this, therefore
M i.492; A iv.411; Sdhp 455, 456; iminā p˚ angena for that reason M ii.
168. -- In compn. with verbs angi˚ (angī˚): angigata having limbs or
ports, divided DA i.313; cp. samangi ( -- bhūta).
-- jāta "the distinguishing member", i. e. sign of male or female
(see above 3); membrum virile and muliebre Vin i.191 (of cows); iii.
20, 37, 205; J ii.359; Miln 124. -- paccanga one limb or the other,
limbs great and small M i.81; J vi -- 20, used (a) collectively: the
condition of perfect limbs, or adj. with perfect limbs, having all
limbs Pv ii.1212 (= paripuṇṇa -- sabbanga -- paccangavatī PvA 158);
SnA 383; DhA i.390; ThA 288; Sdhp 83 fig. rathassa angapaccangan M i.
395; sabbanga -- paccangāni all limbs Miln 148. -- (b) distributively
(cp. similar redupl. formations like chiddâvachidda, seṭṭhânu --
seṭṭhi, khaṇḍākhaṇḍa, cuṇṇavicuṇṇa) limb after limb, one limb after
the other (like angamangāni above 1), piecemeal M i.133 (˚e daseyya),
366; J i.20; iv.324 (chinditvā). -- paccangatā the condition or state
of perfect limbs, i. e. a perfect body VvA 134 (suvisuddh˚). --
paccangin having all limbs (perfect) D i.34 (sabbanga -- peccangī);
PvA 189. -- rāga painting or rouging the body Vin ii.107 (+ mukha˚).
-- laṭṭhi sprout, offshoot ThA 226. -- vāta gout Vin i.205. -- vijjā
the art of prognosticating from marks on the body, chiromantics,
palmistry etc. (cp. above 3) D i.9 (see expl. at DA i.93); J i.290
(˚āya cheka clever in fortune -- telling); ˚ânubhāva the power of
knowing the art of signs on the body J ii.200; v.284; ˚pāṭhaka one who
in versed in palmistry etc. J ii.21, 250; v.458. -- vekalla bodily
deformity DhA ii.26. -- sattha the science of prognosticating from
certain bodily marks DA i.92. -- sambhāra the combination of parts
Miln 28 = S i.135; Miln 41. -- hetuka a species of wild birds, living
in forests J vi.538.

N. Ganesan

unread,
Dec 27, 2012, 9:58:48 AM12/27/12
to மின்தமிழ்
அங்கம் என்றால் உறுப்பு.
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
உறுப்பு
உறுப்பு என்ற சொல்லே தனித்தமிழ். அங்கம் என்ற சொல்லின் மூலம்
வடமொழியாகும்.
உறுப்பு-అవయవము
பகுதி-భాగము
போர்

-------------------

சில உதாரணங்கள் பார்ப்போம்:

(1) சாஷ்டாங்கம் : எட்டு உடல் பாகங்களும் பூமியில் பட வணங்குதல்
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%22

தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு
அங்கங்களும் அதாவது தலை, இரு தோள்கள், மார்பு உட்பட வயிற்றுப்பகுதி, இரு
கால்கள் , இரு பாதங்கள் ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும்
முறை

(2) சென்னைப் பேரகராதி:
அங்கசேஷ்டை aṅka-cēṣṭȧi , n. < aṅga +. 1. Doing mischief with the
limbs; கால் கை களாற் குறும்பியற்றல். Colloq. 2. Antic gestures; கை
கால்களை வறிதே யாட்டுகை. அங்கசேஷ்டை புரி யாமல் (திருவேங். சத. 63).

(3) அங்க-மர்தகன்: உடலின் கை, கால், மார்பு, வயிறு, முதுகு, ... போன்ற
அங்கங்களை (உறுப்புகளை) நீவிவிடும் பணியாளன்.

(4) தமிழ் ஒரு இடம்பிரி (left-branching) மொழி. வலமிருந்து இடமாக
மாற்றும்.
சாஷ்டாங்கம் - சர்வ அஷ்ட அங்கம், உடலின் எட்டு உறுப்புகள்.
ஸர்வாங்கம் (= எல்லா உறுப்புகளும்) என்பதைத் தமிழ் தன் இயல்புக்கு
ஏற்ப “அங்கம் எல்லாம்” என்று மாறுகிறது. ஒருவனின் அல்லது ஒருத்தியின்
“உறுப்புகள் எல்லாமும்” என்பது பொருள்.

அதனால் தான், அனங்கன் என்னும் சொல்லின் வேர்மூலம் அணங்கன்
என்னும் தமிழ்ச் சொல் என்பர் வடமொழி முனைவரும், பேராசிரியன்மாரும்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Dec 27, 2012, 1:28:28 PM12/27/12
to மின்தமிழ்
சொல்வளம் நிறைந்த மொழிகளில் பல சொற்கள் ஒரு பொருளையும் ஒரு சொல் பல பொருட்களையுக் குறிப்பிடும்.பாங்குண்டு 

சரியான பொருள் அறிய அது பயன்படும் பின்புலம் அறிதல் வேண்டும்

தனிப்பாடலில் ஒரு புனைவில் அரசவைக்குப் புலவர் கட்டைவிரலில் காயம் காரணமாகக் கட்டுப்போட்டுக்கொன்டு வருகிறார்

அரசர் புலவரே என்ன இது கட்டைவிரலில் என்று வினவ

கட்டை விரலில் போட்டுக்கொண்டேன் என்று ஒரு வரியில் சொல்லி

ஒலைச் சுவடிக் கட்டை விரலில் போட்டுக் கொண்டேன்
அதுவும் கட்டை விரலில் போட்டுக்கொண்டேன்
அதனால் கட்டை விரலில் போட்டுக் கொண்டேன்

என்று கட்டை விரலுக்கு பின்புல அடிப்படையை வைத்து மூன்று பொருள் விளங்க வைத்தார்

தனிப்பாடல் தொகுப்பு இந்த சொற்சிலம்பங்களையும் வார்த்தைச் சித்துகளையும் காட்டுவதாக உள்ளது
நாகராசன்


2012/12/27 N. Ganesan <naa.g...@gmail.com>

DEV RAJ

unread,
Dec 27, 2012, 3:03:51 PM12/27/12
to mint...@googlegroups.com
On Thursday, 27 December 2012 20:28:48 UTC+5:30, N. Ganesan wrote:
>>>> அங்க-மர்தகன்: உடலின் கை, கால், மார்பு, வயிறு, முதுகு, ... போன்ற
அங்கங்களை (உறுப்புகளை) நீவிவிடும் பணியாளன்.<<<<


शिवार्धाङ्गी शिवार्धाङ्गो भैरवी कालभैरवः।
शक्ति त्रितय रूपाढ्या मूर्तित्रितय रूपवान्॥ 

ஶிவார்தா⁴ங்கீ³ ஶிவார்தா⁴ங்கோ³ பை⁴ரவீ காலபை⁴ரவ​:| 
ஶக்தி த்ரிதய ரூபாட்⁴யா மூர்த்தித்ரிதய ரூபவாந்|| 

இது உமா மஹேசுவரர்களைத் துதிக்கும் சிறந்த சுலோகம்.
’சிவா அர்த அங்க: ‘ என்று ஆண் பாலிலும்
சொல்லப்பட்டுள்ளது. தமிழில் அம்மையப்பன் என்பதற்கு
இணையாக முதலில் அம்மையே துதிக்கப்படுகிறாள்.


கணேசர் வழியில் பரசிவத்தின் உறுப்புகளில் செம்பாதியாக வலக்கையில் பாதி,
இடக்கையில் பாதி, வலக்காதில் பாதி, இடக்காதில் பாதி,
பத்து விரல்களிலும் பாதி பாதி, வலக்காலில் பாதி, இடக்காலில் பாதி,
கால் விரல்களில் பாதி என்று பரசிவை பங்கு போட்டுக்கொண்டாள் என்று பொருள்
கொள்ள வேண்டுமா தெரியவில்லை.


மொத்தத்தில் அரனாரின் மேனியில் அம்பிகை இடப்பகுதியாகவும்,
அம்பிகையின் மேனியில் அரனார் வலப்பகுதியாகவும் விளங்குவதாகப்
பொருள் கூறப்படுகிறது. திருச்செங்கோடு ஆலயத்திலும் இறைத் திருமேனி
அவ்விதமே விளங்குகிறது; கொங்கு கிழாருக்குத் தெரியாத திருச்செங்கோடா ?


கணேசரின் வாதங்களை மேலும் அலச முடியும்.
இருவருமாகச் சேர்ந்து மாறி மாறி  அங்கத்தினர்களை
அங்க மர்தநம் செய்தால் அவர்கள் தாங்குவார்களா,
யோசிக்க வேண்டும்



தேவ்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 27, 2012, 11:42:46 PM12/27/12
to mint...@googlegroups.com
இன்னொரு பொருளும் உள்ளதே ஐயா

கட்டு+ஐ+விரலில் = ஐந்து விரல்களிலுள்ள கட்டு.

2012/12/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Hari Krishnan

unread,
Dec 27, 2012, 11:49:28 PM12/27/12
to mintamil


2012/12/28 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

இன்னொரு பொருளும் உள்ளதே ஐயா

கட்டு+ஐ+விரலில் = ஐந்து விரல்களிலுள்ள கட்டு.

இன்னொரு பொருளும் உள்ளதே அய்யய்யா.

கட்டு=கண்+து=கண்ணை உடையது.

ஃ கட்டைவிரல்= கண்ணை உடைய விரல்.

மார்பகம் கண்ணா மாறும்போது, கட்டைவிரல் கண்ணா மாறினா என்னங்கறேன். :)


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 27, 2012, 11:53:45 PM12/27/12
to mint...@googlegroups.com
ஹரியண்ணா

எப்படீங்கண்ணா இது.:)))

இதெல்லாம் உங்களாலே மட்டுமே முடியுங்ணா. :))

கலக்கிட்டீங்க போங்க. :))

அன்புடன்,

தி.பொ.ச..



2012/12/28 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Nagarajan Vadivel

unread,
Dec 28, 2012, 12:22:43 AM12/28/12
to மின்தமிழ்
கலக்கீட்டாங்க மட்டுமா அப்புடியே என்னைக் குழப்பீட்டாங்க
அதனால கட்டை என் தலையில் போட்டுக் கொண்டேன்
தலையில் கட்டைப் போட்டுக்கொன்டே இப்ப நடமாடறேன்
நாகராசன்

Hari Krishnan

unread,
Dec 28, 2012, 12:28:11 AM12/28/12
to mintamil


2012/12/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கலக்கீட்டாங்க மட்டுமா அப்புடியே என்னைக் குழப்பீட்டாங்க
அதனால கட்டை என் தலையில் போட்டுக் கொண்டேன்
தலையில் கட்டைப் போட்டுக்கொன்டே இப்ப நடமாடறேன்
நாகராசன்

கட்டை=கள்+தை.

மாண்புமிகு ஐயா அவர்கள் போட்டுக்கொண்டது மேற்படி கட்டைதானா?  :D

Nagarajan Vadivel

unread,
Dec 28, 2012, 12:47:33 AM12/28/12
to மின்தமிழ்

http://www.youtube.com/watch?v=Qo7WuThCx14

அடடா விட்டாப் பின்னிப் பூவச்சு ரிப்பனும் சுத்தீருவீங்களே

கட்டைவிரல் எவ்வளவு சின்னச் சமாசாரம் அதை இப்படிப் பெரிசாக்குவாய்ங்களா

தாங்கமுடியலெடா சாமி

நாகராசன்


2012/12/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 28, 2012, 12:51:16 AM12/28/12
to mint...@googlegroups.com
நாகராஜன் ஐயா

யாரோ உங்க தலயில கட்டை போட்டதனால்

நீங்க உங்க தலையில கட்டை போட்டுட்டீங்க.

குழப்பாம சரியா சொல்லியிருக்கேனா.:))

அன்புடன்,

தி.பொ.ச.

2012/12/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 28, 2012, 12:53:19 AM12/28/12
to mintamil


2012/12/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கட்டைவிரல் எவ்வளவு சின்னச் சமாசாரம் அதை இப்படிப் பெரிசாக்குவாய்ங்களா

தாங்கமுடியலெடா சாமி

பரவால்ல.  ‘கட்டைவெரல் வெல்லக்கட்டி...உன் கன்னம் ரெண்டும் தங்கக்கட்டி’  பழையபாடல் நினைவிருக்கா?  ஒருமுறை கேட்டுக்கங்க.  சரியாப் போயிரும். :)

Nagarajan Vadivel

unread,
Dec 28, 2012, 12:58:17 AM12/28/12
to மின்தமிழ்

//கட்டைவெரல் வெல்லக்கட்டி//


இதுதான் சர்க்கரைக்குச் சர்க்கரை சொல்லும் சேதியா?

நாகராசன்




2012/12/28 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

Nagarajan Vadivel

unread,
Dec 28, 2012, 1:01:35 AM12/28/12
to மின்தமிழ்
நான் என் தலையில் கட்டைப் போட்டுக்கொண்டதால்

யாரோ என் தலையில் கட்டைப் போட்டுட்டாய்ங்க

நான் சொன்னது சரீங்களா

நான் என் தலையில் கட்டைப் போட்டுக்கலாம்

ஆனா என் தலையில் நானாக் கட்டுப் போட்டுக்க முடியுமா?

குழப்பீட்டனோ

நாகராசன்

Hari Krishnan

unread,
Dec 28, 2012, 1:02:15 AM12/28/12
to mintamil


2012/12/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இதுதான் சர்க்கரைக்குச் சர்க்கரை சொல்லும் சேதியா?

நாகராசன்

சொற்பொழிவுக்காக கோவைக்குப் போன போது, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணாவின் வீட்டில்தான் தங்கியிருந்தேன்.  இரவு உணவுக்கு வகைவகையான இனிப்புப் பண்டங்கள்.  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் வீட்லனா கேக்கவா வேணும்.  நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.  That's so nice to see.  God has permitted me to enjoy the visual beauty and the nice smell of these sweets, and no further.  

சாப்பிடதானே கூடாது? கண்ணால பாக்கவும் மூக்கால முகரவும் ஆண்டவன் அனுமதிச்சிருக்கான் இல்ல?  கேக்கற மேட்டர்தானே?  கேட்டுட்டுப் போங்க.  

Nagarajan Vadivel

unread,
Dec 28, 2012, 1:09:16 AM12/28/12
to மின்தமிழ்
குற்றம் செய்யத் தூண்டுபவர்களுக்குக் குற்றம் செய்தவரைவிடக் கொஞ்டம் அதிகப்படியான தண்டணைன்னு குற்றவியல் சட்டம் சொல்லுதாமே
நெசமாங்களா ஐயா

நாகராசன்


2012/12/28 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

Hari Krishnan

unread,
Dec 28, 2012, 1:36:43 AM12/28/12
to mintamil


2012/12/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

குற்றம் செய்யத் தூண்டுபவர்களுக்குக் குற்றம் செய்தவரைவிடக் கொஞ்டம் அதிகப்படியான தண்டணைன்னு குற்றவியல் சட்டம் சொல்லுதாமே
நெசமாங்களா ஐயா

நாகராசன்


காதலித்தல் பாவமென்றால்
கண்களும் பாவமன்றோ
கண்களே  பாவமென்றால்,
பெண்மையும் பாவமன்றோ?

பெண்மையே பாவமென்றால்--
மன்னவனின் தாய் யாரோ....

Nagarajan Vadivel

unread,
Dec 28, 2012, 1:51:22 AM12/28/12
to மின்தமிழ்
இதுக்கெல்லாம் காரணமா இருக்குறவனைப் பிடிச்சுத் தண்டிச்சுட்டாப் போச்சுன்னு உங்கள மாதிரிக் கவிஞர் இங்கே சொல்லிட்டாரு

http://www.youtube.com/watch?v=FlkDNOi21i8

மரண தண்டனைன்னு கவிஞர் எழுத பாடுறவர் என் வாயால் சாகனும்னு பாடமாட்டேன்னுட்டாராம்

T.M.S, கண்ணதாசனின் ஒரு சொல்லைக்கண்டு அதிர்ந்தார். அவன் (கடவுள்) காதலித்து வேதனையில் சாகவேண்டும் என்பது கவிஞர் வரி. பாட மறுத்தார் T.M.S. உடனடியாக கவிஞர் அழைக்கப்பட்டார். எவ்வளவு எடுத்துக் கூறியும் T.M.S, கடவுளை சாகவேண்டும் என பாடமாட்டேன் என்றார். அதன்பிறகு  "வாடவேண்டும்" என மாற்றிக் கொடுத்தார் கவிஞர்

நாகராசன்



2012/12/28 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

shylaja

unread,
Dec 28, 2012, 2:13:05 AM12/28/12
to mint...@googlegroups.com


2012/12/28 Hari Krishnan <hari.har...@gmail.com>



2012/12/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
குற்றம் செய்யத் தூண்டுபவர்களுக்குக் குற்றம் செய்தவரைவிடக் கொஞ்டம் அதிகப்படியான தண்டணைன்னு குற்றவியல் சட்டம் சொல்லுதாமே
நெசமாங்களா ஐயா

நாகராசன்


காதலித்தல் பாவமென்றால்
கண்களும் பாவமன்றோ
கண்களே  பாவமென்றால்,
பெண்மையும் பாவமன்றோ?

பெண்மையே பாவமென்றால்--
மன்னவனின் தாய் யாரோ....>>>
 
ஆஹா நல்ல பாட்டு...முதல்வரி என்னனு மறந்துபோச்சே! 
 
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
SHYLAJA
 

shylaja

unread,
Dec 28, 2012, 2:14:00 AM12/28/12
to mint...@googlegroups.com
ஏன் க.தாசன்  அப்போ ஆத்திகரா இல்லையா என்ன?

2012/12/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
SHYLAJA
 

கி.காளைராசன்

unread,
Dec 28, 2012, 2:54:42 AM12/28/12
to mint...@googlegroups.com
கட்டு=கண்+து=கண்ணை உடையது.

ஃ கட்டைவிரல்= கண்ணை உடைய விரல்.
கட்டை=கள்+தை.

மாண்புமிகு ஐயா அவர்கள் போட்டுக்கொண்டது மேற்படி கட்டைதானா?  :D


அன்பன்
கி.காளைராசன்
B9E.gif

DEV RAJ

unread,
Dec 28, 2012, 3:13:31 AM12/28/12
to mint...@googlegroups.com
On Friday, 28 December 2012 12:43:05 UTC+5:30, Shylaja N wrote:

காதலித்தல் பாவமென்றால்
கண்களும் பாவமன்றோ
கண்களே  பாவமென்றால்,
பெண்மையும் பாவமன்றோ?

பெண்மையே பாவமென்றால்--
மன்னவனின் தாய் யாரோ....>>>

நல்ல பாட்டு...முதல்வரி என்னனு மறந்துபோச்சே! <<<


உன்னைத்தான் நானறிவேன், மன்னவனை யாரறிவார் ?
படம் :  வாழ்க்கைப் படகு

யூ ட்யூப் கிட்டுன்னதில்ல



தேவ்

shylaja

unread,
Dec 28, 2012, 3:35:24 AM12/28/12
to mint...@googlegroups.com


2012/12/28 DEV RAJ <rde...@gmail.com>
On Friday, 28 December 2012 12:43:05 UTC+5:30, Shylaja N wrote:

காதலித்தல் பாவமென்றால்
கண்களும் பாவமன்றோ
கண்களே  பாவமென்றால்,
பெண்மையும் பாவமன்றோ?

பெண்மையே பாவமென்றால்--
மன்னவனின் தாய் யாரோ....>>>

நல்ல பாட்டு...முதல்வரி என்னனு மறந்துபோச்சே! <<<


உன்னைத்தான் நானறிவேன், மன்னவனை யாரறிவார் ?
படம் :  வாழ்க்கைப் படகு

யூ ட்யூப் கிட்டுன்னதில்ல



தேவ்
 <<<<:)_ :பஹூத் தன்யவாத் தேவ் ஜீ!



--
SHYLAJA
 

Nagarajan Vadivel

unread,
Dec 28, 2012, 4:41:16 AM12/28/12
to மின்தமிழ்
//யூ ட்யூப் கிட்டுன்னதில்ல//

http://www.youtube.com/watch?v=3jJLAMEGNfc

கிட்டாமல் போயிவிடுமா

நாகராசன்


2012/12/28 shylaja <shyl...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 28, 2012, 5:31:41 AM12/28/12
to mintamil


2012/12/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
கிட்டாமல் போயிவிடுமா

நாகராசன்

மிக்க நன்றி.  கஸல் இலக்கணத்துக்கு கச்சிதமாகப் பொருந்திவரும்--அல்லது நெருங்கிவரும்--பாடல்..  ஒருமுறை கேட்டால் உணர்ச்சி வசப்படாமல் இருக்கமுடியவில்லை. இசையோடு அவ்வளவு கனமான சொற்கள் இயைந்து போவதே ஒரு கிறக்கம்தான்.

சரி.  அனங்கனுக்குத் திரும்பலாம்.  இப்ப, அணங்கன்>அனங்கன் அப்படின்னா, அனங்கன்>அனத்தல் எப்படி?  ஒரே அனத்தலா இல்ல?  :D
Reply all
Reply to author
Forward
0 new messages